ஒக்ரோபர் 15, 2013
அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் தான் பயன் படுத்த வேண்டும் – மலேசிய நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு – அதாவது காபிர்கள் உபயோகப் படுத்தக் கூடாது!

2009 முதல் 2013 முதல் கடவுளுக்கு எந்த சொல்லை உபயோகிப்பது?: 2009ம் ஆண்டு மலேசியாவில் உள்ள கத்தோலிக்கக் கிறிஸ்துவ பத்திரிகை “ஹெரால்ட்” அல்லா என்ற வார்த்தையை கிருத்துவக் கடவுளுக்காக உபயோகப்படுத்தி இருந்தது[1]. குறிப்பாக மலாய் மொழி பைபிளில் கடவுளுக்குப் பதிலாக “அல்லா” என்ற வார்த்தை உபயோகப் படுத்தப் பட்டது[2]. அதை எதிர்த்து முஸ்லிம் இயக்கத்தினர் வழக்குத் தொடர்ந்தன. அதனால், “ஹெரால்ட்” பத்திரிக்கைக்காரர்கள் அதனை உபயோகிக்கக் கூடாது என்று கோர்ட் தடை விதித்தது[3]. இதற்கு எதிராக கிருத்துவ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இடைக்கால தடையை அது ரத்து செய்தது. இதில் உள்துறை அமைச்சகம் தலையீடு இருந்தது. இதனால், 2010ல் முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள், குறிப்பாக, சர்ச்சுகள் தாக்கப்பட்டன. பெட்ரோல் குண்டு, கற்கள், பெயிண்ட் முதலியை அத்தாக்குதல்களில் உபயோகப் படுத்தப் பட்டன[4]. அரசு மேல்முறையீடு செய்தது.

மலேசிய அரசியல்வாதிகளும், இந்திய அரசியல்வாதிகளைப் போலத்தான் செயல்படுகின்றனர்: 2009ல் நஜீப் ரஸாக் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பொழுது, மலாய் முஸ்லிம் மற்றும் முஸ்லிம்-அல்லாத சிறுபான்மையினருடன் குறிப்பாக சீன மற்றும் இந்திய வம்சாவளி மக்களுடன் தாஜா செய்து கொண்டிருந்தார்[5]. பிறகு முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்று முஸ்லிம் இயக்கங்களுடன் சேர்ந்து செயல்படுகிறார். மலேசியாவின் மக்கட்தொகையில் 60% முஸ்லிம்கள், 9% கிருத்துவர்கள். இப்ராஹிம் அன்வர் கடந்த மலேசிய மேமாத தேர்தல், ஒரு பெரிய பிராடு / மோசடி என்று வர்ணித்தார்[6]. எது எப்படியாகிலும், முஸ்லிம்-அல்லாதோர் மலேசியாவில் அவஸ்தைப் படவேண்டியதுதான். நஜீப் ரஸாக், இப்ராஹிம் அன்வர் முதலியொர் பேசுவது, நடந்து கொள்வது, சோனியா, திக்விஜய் சிங், முல்லாயம் சிங் யாதவ், கருணாநிதி போன்றே உள்ளது. ஆகவே, அடிப்படைவாதிகளுக்குக் கொண்டாட்டம் தான்!

அல்லா முஸ்லிம்களுக்குத் தான் சொந்தமானவர்: “அல்லா” என்ற சொல்லை கடவுளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது[7]. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. திங்கள்கிழமை 14-10-2013 அன்று மலேசிய நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள், கடந்த 2009ல் கீழ் நீதிமன்றம் ஹெரால்ட் என்ற பத்திரிகைக்கு அல்லா என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்து, இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிறிஸ்துவ மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக இந்த அல்லா என்ற வார்த்தை கட்டாயம் இல்லை என்பதாலும், கடவுளைக் குறிக்க அல்லா என்ற வார்த்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்பதால், மற்றவர்கள் குறிப்பிடுவதில் குழப்பம் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அல்லா என்ற வார்த்தை இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னமே உபயோகத்தில் இருந்தது, கடவுள் என்பதை குறிக்கும் இந்த சொல்லை அனைவரும் பயன்படுத்த உரிமை உண்டு. என்றெல்லாம் வாதிடப்பட்டது[8]. மூன்று நீதிபதிகள் கொண்ட இத்தீர்ப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது.

“அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும்: இதே கருத்தைத்தான் மலேசிய அரசும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வாதிட்டது. மேலும், 2008ல் பொதுமக்களின் மன நிலைக்கு ஏற்ப, பத்திரிகையில் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதித்த உள்துறை அமைச்சகத்தின் முடிவை தடை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியது. மலேசியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தின் செய்தித்தாள்கள் சார்பில் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், மலேசியாவிலும், மலேசியாவை அடுத்த புருனே தீவிலும் நூற்றாண்டுகளாக மலாய் பேசும் கிறிஸ்துவர்கள் அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்கள். இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவின் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று கூறியுள்ளனர். “அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும் என்று சபா பிராந்திய, எஸ்டர் மோய்ஜி என்பவர் பிபிசியிடம் முறையிட்டுள்ளார்[9].

கிருத்துவ-முகமதிய இறையியல் மோதல்கள்: “ஹெரால்ட்” செய்தித்தாளின் ஆசிரியர் லாரன்ஸ் ஆன்ட்ரூ [ Lawrence Andrew, editor of the Catholic newspaper, The Herald] மேல்முறையீடு செய்ய தீர்மானிக்த்துள்ளார்[10]. 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டின் தலைமையிடமான புத்ராஜெயாவுக்கு வெளியே கூடியிருந்து இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டன. ஜெப்ரிஜால் அஹமது ஜாபர் என்பவர், “ஒரு முஸ்லிமாக நான் அல்லா என்ற வார்த்தையை ஜிஹாத் போல கருதுகிறேன். அதனை நான் ஆதரிக்கிறேன்”, என்று கூறுகிறார்[11]. இந்தோனியா, போனியோ மற்றும் அரபு நாடுகள், முதலியற்றில் உள்ள கிருத்துவர்கள் அவ்வார்த்தையைத் தொடர்ந்து உபயோகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளனர்[12].

© வேதபிரகாஷ்
14-10-2013
[5] Prime Minister Najib Razak, who took office in 2009, has walked a tight-rope between pleasing his ethnic Malay Muslim base while not alienating the country’s non-Muslim ethnic Chinese and Indian minorities.
பிரிவுகள்: அருவம், அல், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாஹ், அழிப்பு, இடிப்பு, இறைவன், இலா, இலாஹி, இல், உடைப்பு, உருவம், எலோஹிம், எல், ஒழிப்பு, கடவுள், கல், குதா, குரான், சிலை, தெய்வம், நாசம், பைபிள், விக்கிரகம், வெறி
Tags: அருவம், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாஹ், அழிப்பு, இடிப்பு, இறைவன், இலா, இலாஹி, இல், உடைப்பு, உருவம், எலா, எலோஹிம், எல், கடவுள், குதா, சிலை, துலுக்கர், தெய்வம், நாசம், மதவெறி, மீன், முகமதியர், முஸ்லிம், விக்கிரகம், வெறி
Comments: Be the first to comment
மார்ச் 10, 2013
தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.
உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!
பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!
இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

வேதபிரகாஷ்
10-03-2013
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், அழுகிய நிலையில், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, ஆப்கானிஸ்தான், ஆமென், ஆலிஃப்-லம்-மிம், ஆவி, இச்சை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இமாம், இமாம்கள், இருக்கின்ற நிலை, இருக்கும் தெய்வங்கள், இலக்கியம், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உலமாக்கள், உல்லாசம், ஏர்வாடி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரம், கலிமா, கல்வத், கல்வெட்டு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், காந்தஹார், காந்தாரம், காபத்துல்லாஹ், காபா, காரைக்கால், குரான், குர்பானி, குஷித் ஆலம் கான், கௌதாரி, சன்னி, சரீயத், சல், சின்னம், சியாசத், சிற்பம், சிலை வழிபாடு, சுத்தம், சுன்னத், சுன்னி, சுன்னி-ஷியா, சூஃபி, சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, ஜிஹாதித்துவம், ஜிஹாத், தர்கா, தர்மம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, தொழுகை, நரகம், நாகூர் தர்கா, பள்ளி வாசல், பள்ளிவாசல், புதைத்தல், புத்தகம், புனிதப் போர், பேசுவது, பைபிள், பொய்மை, மக்கா, மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரத் தொழிலில், முப்தி, முஸ்லீம் சட்டம், மெக்கா, மௌலானா புகாரி, யாத்திரிகர்கள், யாத்திரை, யுனானி, ரத்தத்தினால் ஹோலி, ரத்தம், ரத்தம் குடித்தல், ரப், ரப்பானி, லாஹூர், வாணியம்பாடி, வாரணசி குண்டுவெடிப்பு, ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா-சுன்னி, ஸல், ஹஜரத் இமாம் அலி, ஹஜ், ஹதீஸ், ஹுஸைன்
Tags: ஃபத்வா, அலி, அவமதிக்கும் இஸ்லாம், அவுலியா, ஆவி, இந்துக்கள், ஒளிவட்டம், கல்லறை, காஷ்மீரம், குரான், குர்பானி, குறை, கோவில் சிலை உடைப்பு, சமாதி, சல், சிறுபான்மையினர், சூஃபி, சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், ஜீவசமாதி, ஜீவமுக்தி, தாலிபான், தாளம், நடனம், நாட்டியம், நோன்பு, பக்தி, பரவசம், பாகிஸ்தான், பாட்டு, பிசாசு, புனிதப்போர், பேசுவது, பேய், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், மூச்சு விடுவது, மேளம், ரப், ரப்பானி, ரவுல், வரம், வேண்டுதல்
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 9, 2013
பாகிஸ்தானில் கிருத்துவர்கள் மீது, தொடர்ந்து தூஷண வழக்குகள் போடப்படுவது ஏன்?
பாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாதவர்களின் நிலை: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. மதத்தின் அடிப்படையில் தான் அது உருவாக்கpபட்டுள்ளது. ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டம் தான் அங்கு அமூலில் உள்ளது. இதன்படி, முஸ்லீம்கள் அல்லாதவர்கள் காஃபிர்கள் எனப்படுவர். இஸ்லாமிய சட்டத்தில் அவர்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. முஸ்லீம் யாராவது புகார் கொடுத்துவிட்டால், அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லீம் முஸ்லீமுக்குத்தான் சாட்சி சொல்ல முடியும், ஆனால், காபிருக்கு சாதகமாகச் சொல்ல முடியாது. ஆனால், பாதகமாக வேண்டுமானல் சொல்லலாம், அது இஸ்லாமியச் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும், அதன்படியே தண்டனையும் கொடுக்கப்படும்[1].

கடந்த வருடங்களில் நடந்த வழக்குகள்: கடந்த மே மாதத்தில் அப்படி பொய் வழக்குப் போட்டதாக, இரு கிருத்துவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கர்மா பத்ராஸ் என்ற பாஸ்டரும் கைது (அக்டோபர் 2012) செய்யப்பட்டு, பைளில் / ஜாமீனில் (பிப்ரவரி 2013) விடுவிக்கப்பட்டுள்ளார்[2]. ரிம்ஸா மஷிஹ் (Rimsha Masih) என்ற 14 வயது பெண்ணும், இதே போல கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டாள்[3]. அவள் குரானின் சில பக்கங்களை எரித்ததாக குறாஞ்சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டாள். ஆனால், யாருமே அவள் அவ்வாறு செய்ததை கண்ணால் பார்க்கவில்லை அதாவது பார்த்ததாக சாட்சி சொல்லவில்லை என்பதனால் விடுதலை செய்யப்பட்டாள்[4]. 1990லிருந்து இதுவரை 250ற்கும் மேற்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர், 52 பேர் கொல்லப்பட்டூள்ளனர் / தூக்கிலிடப்பட்டுள்ளனர்[5].

3000 கிருத்துவர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன: லாஹூரில் மொஹம்மது நபியை(pbuh)ப் பற்றி சவன் அல்லது பப்பி (Savan, alias Bubby) என்ற கிருத்துவன் விமர்சித்துள்ளதாக தெரிகிறது. இதைக் கேள்வி பட்ட சபிக் அஹமது (Shafiq Ahmed) கத்தியுடன் சவன் வீட்டிற்குச் சென்றுள்ளான். ஆனால், அவன் அங்குக் காணப்படவில்லை. இதனால் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சபிக் அஹமது வெள்ளிக்ழமை அன்று (08-03-2013) சுமார் 3000 பேர்களுடன் நூர் சாலையில் இருக்கும் ஜோஸப் காலனியில் உள்ள கிருத்துவர்கள் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்[6]. சவனுடைய அப்பா சனமன் மஸ்ஹி (Chaman Masih, 65) இருந்துள்ளார், அவரை நன்றாக அடித்து உதைத்துள்ளனர்[7]. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமாயின[8], கிருத்துவர்கள் உயிருக்குப் பயந்து கொண்டு ஓடிவிட்டனர்[9]. சவன் கைது செய்யப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளான்[10].

பாஸ்டர் மீது அவதூறு வழக்கு: இதேபோல, கடந்த மாதமும் அஸ்கர் நிஜாம் ராஞ்சா என்ற பாஸ்டர் உயிருக்கு பயந்து ஓடியிருக்கிறார். அவரும் இஸ்லாமிற்கு விரோதமாக ஏதோ பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தான் அவ்வாறு பேசவில்லை என்றும், தனக்கு வேண்டாதவர்கள் அவ்வாறு திரித்துக் கூறியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் ஏற்கெனவே மன்னிப்புக் கேட்டிருந்தாலும், அவர் மீது தூஷணத்திற்கான பிரிவு 295-Aவில் வழக்குப் போடப் பட்டதால், தான் தாக்கப்படலாம் என்று ஓடிவிட்டார்[11].
கிருத்துவ பெண் மீது வழக்கு: இதே போல, மார்த்தா என்ற கிருத்துவப் பெண்மணியும் அவதூறு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாள். அவள் ஷெர்-இ-ரப்பானி என்ற மசூதி அருகில் மொஹம்மது நபியை(pbuh)ப் பற்றி அவதூறாகப் பேசியதாக புகார் கொடுக்கப்பட்டது[12]. தூஷணத்திற்கான பிரிவு 295-Aவில் வழக்குப் போடப் பட்டதால், மரணதண்டனை அளிக்கப்படும்.
கிருத்துவர்கள் பேசுவது எப்படி தூஷணமாகின்றன?: கிருத்துவர்கள் அப்படி என்ன பேசியிருக்கிறார்கள், அவை ஏன் இஸ்லாமிற்கு எதிராக உள்ளன. பைபிளில் உள்ளவற்றை பேசினால், இஸ்லாமிற்கு தூஷணமாகுமா? ஏசுகிருஸ்துவைப் பற்றி பேசினால், குரானில் சொல்லப்பட்டதற்கு விரோதமாக போகுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், செய்திகளில் விவரங்கள் சொல்லப்படவில்லை.
வேதபிரகாஷ்
09-03-2013
[1] முகலாயர்கள் / முகமதியர்கள் இந்தியாவை ஆண்டபோது, அப்படித்தான் இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் இந்தியர்களை நடத்தினர், ஆட்சி செய்தனர். அதனால் தான் கோவில் உடைக்கப்பட்டன, ஜெசியா வர் விதிக்கப்பட்டது என்றெல்லாம் சரித்திரத்தில் உள்ளது.
[2] Karma Patras, a 55-year-old pastor of Bado Malhi, Sangla Hill, had been languishing in Sheikhupura District Jail since October after preaching on Christ’s sacrifice at a funeral attended mainly by Christians. Some Muslims present thought he was speaking against the Islamic animal slaughter ritual observed at the time, and Patras was confused when police showed up at his home later that day (Oct. 13, 2012) and arrested him on charges of defaming Islam .
http://morningstarnews.org/2013/02/pastor-in-pakistan-released-on-bail-after-mistaken-blasphemy-accusation/
[4] Rimsha Masih, believed to be no older than 14, was charged with burning pages of the Koran in August but was granted bail in September after a cleric was detained on suspicion of planting evidence to stir up resentment against Christians. Masih’s lawyer, Tahir Naveed, said the Islamabad High Court’s decision to throw out the case was based on the fact that no one had seen her burning pages of the Koran.The case provoked international concern and she could, in theory, have faced execution under Pakistan’s blasphemy law despite her age and reported mental problems.
http://www.reuters.com/article/2012/11/20/us-pakistan-blasphemy-idUSBRE8AJ0B420121120
[5] The number of blasphemy cases brought under the law is rising. Since 1987, there have been almost 250 cases, according to the Center for Research and Security Studies think-tank.Convictions are common, although the death sentence has never been carried out. Most convictions are thrown out on appeal but mobs often take the law into their own hands.The think-tank said 52 people had been killed after being accused of blasphemy since 1990. http://www.reuters.com/article/2012/11/20/us-pakistan-blasphemy-idUSBRE8AJ0B420121120
பிரிவுகள்: ஃபத்வா, அடி உதை, அடித்து சித்ரவதை, அடிமை, அடையாளம், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, கத்தி, கலவரங்கள், கலவரம், கலிமா, காஃபிர், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், கிரிஸ்தவர், கிருத்துவர், கிருஸ்துவர், குரான், குரான் எரிப்பு, சரீயத், சுன்னத், சுன்னி, ஜமாத், ஜெயில், தூஷணம், பைபிள், லாஹூர், ஷரீயத், ஹதீஸ்
Tags: ஃபத்வா, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஏசு, கிருஸ்து, குரான், சிறுபான்மையினர், சிலுவை, செக்யூலரிஸம், தூஷணம், பலி, பாஸ்டர், பைபிள், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், வழக்கு, ஹதீஸ்
Comments: 1 பின்னூட்டம்
அண்மைய பின்னூட்டங்கள்