Archive for the ‘பேட்டரி’ category

ஜமேஷா முபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது (2)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது (2)

23-10-2022 அன்று ஐஎஸ் பாணியில் தற்கொலை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது: முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது[1] என்று தமிழக ஊடகங்கள் விவரிக்க ஆரமித்து விட்டன. பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர்[2]. இந்த காட்சி கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திலும் வைக்கப் பட்டிருக்கும்[3], என்ற விளக்கத்தையும் சேர்க்கிறது இன்னொரு ஊடகம். தற்போது அதே நடைமுறையை ஜமேஷா முபின் பின்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது[4].  இவையெல்லாம், பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள ஐசிஸ், அல்-குவைதா, தாலிபான் போன்ற தற்கொலை மனித குண்டாக மாறும் ஜிஹாதிகள், கையாலும் முறைகள் ஆகும். ஷஹீத் / தியாகியாக மாறுவதற்கான செயல்முறைகள் என்று தீவிரவாதிகள் / ஜிஹாதிகள் நம்புகின்றனர்[5].  இந்த விவரங்களும் ஒரு வாரம் கழித்து தான் செய்திகளாக வெளிவருகின்றன.

ஐசிஸ், ஜிஹாத் முதலிய வாசகங்கள் கண்டுபிடிப்பு: ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து ‘சிலேட்’ ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்[6]. அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன[7], தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெலியிட ஆரம்பித்தன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன[8]. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன[9]. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்’ என்று கூறி இருந்தார். மேலும் மனித இனம் முஸ்லீம்கள் மற்றும் காபிர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளது. இது தீவிரமயமாக்களின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஒரு தாளில், ‘ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு’ என்று எழுதி இருந்தார். மேலும் ‘புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை’ என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது, என பிறகு தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன.

தன்னிச்சையாக நடத்தப் பட்ட தீவிரவாத செயலா, கூட்டு முயற்சியா போன்ற வாதவிவாதங்கள்செய்திகள்: பிற மதங்களைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள், குடியுரிமை திருத்தம் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை, முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றிய குறிப்புகள் கொண்ட விளக்கப்படம் – ஆகியவை கடந்த வாரம் கோவை கார் சிலிண்ட வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்ட குறைந்தது 4 டைரிகளில் தமிழில் கையால் எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்றாக உள்ளது. இவையெல்லாம், அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றை மனோதத்துவ ரீதியில் ஊக்குவிப்பதற்கு, அதிகமாக்குவதற்கு என்பதை அறிந்து கொள்ளலாம். இவை தானாக, தன்னிச்சையாக வந்து விடாது. இத்தனை வெடிமருந்து பொருட்கள் சேகரிக்க வேண்டும் என்பதிலிருந்தே நிச்சயமாக, ஒன்றிற்கும் மேற்பட்ட, பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுவரை ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஜிஹாதி புத்தகங்கள், இலக்கியம் முதலியவை கண்டெடுப்பு: இவை ஹதீஸ் (சொற்கள், செயல்கள் மற்றும் முஹம்மது நபியின் மௌன அங்கீகாரம் பற்றிய பதிவு) மற்றும் ஜிஹாத் (இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிரான போராட்டம்) பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தன[10]. மனிதர்கள் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது[11]. அதுமட்டுமின்றி, ஜிஹாத் கடமை யாருக்கு இருக்கிறது, யாருக்கு அந்த கடமை இல்லை என்ற குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர்[12]. இந்த பொருட்கள் தவிர, ஐஎஸ்ஐஎஸ் கொடியின் சின்னம் வரையப்பட்ட ஸ்லேட்டை போலீசார் மீட்டனர்[13]. ‘அல்லாஹ்வின் வீட்டின் மீது யார் கை வைத்தாலும் அவர்களை அழித்து விடுவோம்’ என்ற மற்றொரு ஸ்லேட்டும் கிடைத்தது[14]. இவை உருது மற்றும் தமிழில் எழுதப் பட்டிருந்தன[15]. ஆக இவையெல்லாம் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றின் உச்சமாகும். எனவே இவையெல்லாம் திட்டமிட்ட செயல்கள் என்பதைத் தான் காட்டுகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில், கோவையில் இது இரண்டாவது முறையாக இத்தகைய செயல் நிறைவேறியிருப்பதால், உன்னிப்பாக கவனிக்கப் பட்டு அலச வேண்டியுள்ளது.

முபீன் ஒரு சுயமான தீவிரவாதி, அவனுக்கு அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை: “அவருடைய உக்கடம் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வெடிகுண்டு தயாரித்தல், ஜிஹாத் மற்றும் பிற மதங்களைப் பற்றிய அவரது வெளிப்படையாகத் தெரிகிறது. நாங்கள் விசாரித்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் கருத்துப்படி, ஜமேஷா முபீன் இந்திய முஸ்லிம்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்துவார்,” என்று பாலகிருஷ்ணன் கூறினார். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது புரிகிறது. முபீன் ஒரு சுயமான தீவிரவாதி என்று இதுவரை தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது, என்று தமிழக ஊடகங்கள் முடிவுக்கு வருகின்றன. அவை பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. மேலும், அவருக்கு எந்த அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை.” என்று கூறினார். ஆனால், காஸ் சிலிண்டர் வெடிக்கும் அளவுக்கு, தொழிற்நுட்பம் தெரிந்து கொண்டது, அது வெடித்து, அவனே பலியானது நிதர்சனமாக உள்ளது.

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தினத்தந்தி, கோவையில் கார் வெடிப்பு: முபின் .எஸ். பயங்கரவாதி…! அதிர்ச்சி தரும் பின்னணி, நவம்பர் 4, 3:31 pm

[2] https://www.dailythanthi.com/News/State/car-blast-in-coimbatore-mubin-is-terrorist-stunning-background-829318?infinitescroll=1

[3] தமிழ்.ஒன்.இந்தியா, உடல் முழுக்கஷேவ்’! ’விஸ்வரூபம்பாணியில் தயாரான ஜமேஷா முபின்! கோவை கார் வெடிப்பில் வெளியானபகீர்,’ By Rajkumar R Published: Friday, November 4, 2022, 9:29 [IST].

[4] https://tamil.oneindia.com/news/coimbatore/new-information-has-come-out-from-nia-on-covai-car-blast-483633.html

[5] ஈரான், ஈராக் போன்ற நாடுகளில், மூளைசலைவை செய்ய, வீடியோக்கள் காண்பிக்கப் படுகின்றன. அவற்றைப் பார்க்கும் இளைஞர்கள் அதுபோலவே தயாராகின்றனர். உயிதியாகம் செய்து, ஷஹீதாக, சொர்க்கம் செல்வதற்கு தயாராகிறார்கள். அவ்வாறே, அவர்களுக்கு போதனையும் செய்யப் படுகிறது.

[6] மாலைமுரசு, ஜமேஷா முபீன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?!!, webteam, Nov 4, 2022 – 17:5

[7] https://malaimurasu.com/Key-documents-found-in-Jamesha-Mubeens-house-link-to-ISIS

[8] கோவை கார் வெடிப்பு சம்பவம்! கமல் பட பாணியில் தயாரான ஜமேஷா முபின்!

Sakthi by SAKTHI November 4, 2022

[9] https://www.news4tamil.com/new-information-has-come-out-from-nia-on-covai-car-blast/

[10] The News Minute, Coimbatore blast: Handwritten notes recovered from Jamesha Mubin’s house, THURSDAY, NOVEMBER 03, 2022 – 16:53

[11] https://www.thenewsminute.com/article/coimbatore-blast-handwritten-notes-recovered-jamesha-mubin-s-house-169553

[12] Times Now, Coimbatore car blast: Documents talking about jihad, kafirs and Muslims recovered from Jamesha Mubin’s house, Times Now Bureau, Updated Nov 3, 2022 | 02:01 PM IST

[13] https://www.timesnownews.com/india/coimbatore-car-blast-documents-talking-about-jihad-kafirs-and-muslims-recovered-from-jamesha-mubins-house-article-95273880

[14] Republic TV, In Coimbatore Blast Case, Docs On ‘Jihad’ & Radicalisation Found At Deceased Mubin’s House, Last Updated: 3rd November, 2022 16:31 IST

[15] https://www.republicworld.com/india-news/politics/in-coimbatore-blast-case-docs-on-jihad-and-radicalisation-found-at-deceased-mubins-house-articleshow.html

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

பிப்ரவரி 28, 2013

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

தொழிலதிபருக்கு மிரட்டல் கடிதம் ஏன்?: முன்னர், இந்திய முஜாஹித்தீன் இ-மெயில்கள் மூலம் டிவி-செனல்களுக்கு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்று அனுப்பி வைத்துள்ளது. இம்முறை கடிதம் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது. அப்படியென்றால், ரதன் டாடாவிற்கும் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இல்லை, மற்ற எல்லா தொழிலதிபர்களுக்கும் மிரட்டல்கள் வந்திருக்க வேண்டும். இப்பொழுதுதான், ஐரோப்பிய குழுமம், மோடி மீதான தடையை நீக்கிக் கொண்டு, வியாபார ரீதியாக பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஆகவே, இந்திய பொருளாதார முன்னேற்றத்தை அல்லது குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்க இம்மாதிரியான மிரட்டல் வந்திருக்க வேண்டும்.

 

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்[1].  ஒரு அடையாளம் தெரியாத மர்ம நபர் குரியர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அதாவது, செக்யூரிடியிடம் 24-02-2014 அன்று கொடுக்கப்பட்டது[2]. 26-02-2013 அன்று எஸ்.பி. நந்தா, ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துணைத் தலைவர், போலிஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து புகார் அளித்துள்ளார்[3]. அதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது[4]. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.

 

கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?: வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட அதில் –

  1. குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது முஸ்லீம்களை அவமதிப்பது போன்றது
  2. குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும்,
  3. அவரது 27 மாடி ஆன்டில்லா – வீட்டையும் தாக்குவோம் என்றும்,
  4. ஏனெனில் அது வக்ப் சொத்தை அபகரிக்கப் பட்டுக் கட்டப்பது என்பதால் (Accusing him of grabbing the Waqf Board property at Altamount Road to build his house)
  5. தங்களது கூட்டாளியான முஹம்மது டேனிஷ் அன்சாரி (Mohammed Danish Ansari) என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

டேனிஷ் என்பவன் யார்?: டேனிஷ் என்பவன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏனெனில், அதே பெயரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

  1. டேனிஷ் முஹம்மது அன்சாரி[5] தர்பங்கா, பீகாரைச் சேர்ந்தவன். பகல் பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், அவனிடத்தில் தங்கியிருந்தான்[6]. தீவிரவாதி யாஸின் பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜனவரியில் கைது செய்யப்பட்டான்.
  2. மற்றும் 2008 அகமதாபாத் வெடிகுண்டு[7] குற்றங்களுக்காக இன்னொரு டேனிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
  3. இன்னொருவன் டேனிஷ் ரியாஸ் அல்லது சையது அஃபாக் இக்பால் என்பதாகும்.

 

இக்கடிதம் போலியா, உண்மையா?: இக்கடிதம் போலியாக இருக்கும் என்றாலும்[8], மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இக்கடிதம் உண்மையென்றால், தனிப்பட்ட நபருக்கு, அனுப்பிய முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும், ஏனனில் இந்தியன் முஜாஹித்தீன் அவ்வாறு முன்னர் யாருக்கும் கடிதம் அனுப்பியது கிடையாது. இருப்பினும், தேசிய புலனாவுக் கழகமும் இதைப் பற்றி விசாரித்து வருகிறது[9]. தீவிரவாத எதிர்ப்புப் படையும் இதனை ஆய்ந்து வருகிறது, ஏனெனில் கடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் பொறுப்பேற்று ஐந்து முறை டிவி-செனல்களுக்கு இ-மெயில்கள் அனுப்பியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது[10].

 

© வேதபிரகாஷ்

28-02-2013


[3] On Tuesday, Reliance vice-president SP Nanda filed a police complaint after meeting with police commissioner Satyapal Singh.

[5] The letter also did not mention the full name of the IM operative in custody. Three people of the same name were arrested in various cases, but police believe the demand is for the release of Mohammed Danish Ansari who was arrested in January for giving shelter to the Bhatkal brothers.

[7] The police said the Danish, whose release is demanded in the letter, is Danish Riyaz alias Syed Afaque Iqbal, who was arrested for his role in the 2008 Ahmedabad blasts.

Read more at:http://indiatoday.intoday.in/story/indian-mujahideen-narendra-modi-mukesh-ambani/1/251980.html

[10] Anti-terrorism squad (ATS) sources said the IM has in the past sent at least five emails to news channels claiming responsibility for blasts.

http://timesofindia.indiatimes.com/india/Cops-tighten-Mukesh-Ambanis-security-after-threat/articleshow/18720646.cms

வெடிகுண்டுகளும் ஜிஹாதிகளின் தயாரிப்பும்: கத்திகளினின்று நவீனமாகியுள்ள யுத்தத் தந்திரங்கள்!

பிப்ரவரி 23, 2013

வெடிகுண்டுகளும் ஜிஹாதிகளின் தயாரிப்பும்: கத்திகளினின்று நவீனமாகியுள்ள யுத்தத் தந்திரங்கள்!

Hyderabad-blast-2013-IM

சரித்திரத்தை அறியாத இந்தியர்கள்: சரித்திரத்தை சரியாக இந்தியர்கள் அறிந்து கொள்ளாததாலும், தவறாக எழுதப்பட்டுள்ள சரித்திரத்தைப் படித்தே தமது அறிவை வளர்த்துள்ளதாலும், இந்தியர்களுக்கு உண்மைகள் நிறையவே தெரியாமல் உள்ளன[1]. இன்று தீவிரவாதத்தை-பயங்கரவாதத்தை யாதொரு மதத்துடனும் இணக்கலாகாது என்று ஆவேசமாகப் பேசி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர், வற்புறுத்துகின்றனர்[2]. அத்தகைய ஆர்பாட்டங்கள், போராட்டங்களே பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டுவதாக உள்ளது. அந்நிலையில் உண்மையைச் சொன்னால் கூட கோபித்துக் கொள்வார்களோ என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கியும் இருக்கின்றனர். இப்படி மூளைசலவை செய்யப்பட்டும், மூளை மழுங்கியும் இந்தியர்கள் மீதுதான் – ராணுவ வீரர்கள் முதல் பாமர மக்கள் வரை – இத்தகைய தாக்குதல்கள் நடைப் பெற்று வருகின்றன.

IM-IED-Jihad-terror

உண்மையை மறைப்பவர்கள், மறுப்பவர்கள்: ஓட்டு வங்கி அரசியலில் பிழைக்கும் அரசியல் கட்சிகள் தெரிந்தும் உண்மைகளைப் பற்றி பேசவே பயப்படுகின்றன. ஊடகங்களை உபயோகப்படுத்திக் கொண்டு முன்னுக்கு முரணான செய்திகளை தந்தும், தேவையில்லாத விவாதங்களை ஒலி-ஒளிபரப்பியும், சாதாரண மக்களை ஏமாற்றி வருகின்றனர். உயிர்களை இழந்தவரிகளின் உறவினர்கள் தவிக்கும் போது, டிவியில் தாம் தோன்றலாம் என்ற எண்ணத்துடன், விளம்பர மோகத்துடனும், மெழுகு வர்த்தி ஏற்றி வரும் கூட்டமும் பெருகி வருகிறது[3]. ஆனால், எப்படி தீவிரவாதத்தை-பயங்கரவாத ஜிஹாதிகள் கத்தியிலிருந்து, பீரங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என்று மாறி-மாறி தங்களது போர்களை நடத்தி வருகின்றனர் என்று அறியாமல் இந்தியர்கள் உள்ளதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

21 Indian Mujahideen men, accused in various serial bomb blast cases, being taken to the Maharashtra Control of Organised Crime Act court in Mumbai on 17-02-2009

ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பின்னணியில் உள்ளதா?: ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் [the United Jehad Council (UJC)] என்ற தீவிரவாத அமைப்புதான் ஐதராபாத் வெடிகுண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஜதமைத்-உல்-முஜாஹித்தீன், ஜைஸ்-உல்-மொஹம்மது, மற்றும் அல்- பதர் என்ற மூன்று பயங்கரவாத ஜிஹாதி குழுக்கள் பிப்ரவரி 13ம் தேதி கூடிப்பேசி, பழிவாங்கும் விதமாக இந்த குண்டுவெடிப்புகளைச் செய்துள்ளதாகத் தெரிகிறது[4].

bhatkal-brothers-riyaz-iqbal

ஐந்து மறைமுகத்தாக்குதல் குழுக்கள் இந்த தில்குஷ் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். ஐதராபாதிலிருந்தே அதற்கான வெடிப்பொருட்கள் தருவிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய புலனாய்வு ஏஜென்ஸி இதன் விஷயமாக பீஹாருக்குச் சென்று விசாரிப்பதாகத் தெரிகிறது[5].

Hyderabad-IM-Suspects

ஒரு கிலோ வெடிப்பொருள் உபயோகப்படுத்தியுள்ளனர். சிகப்பு மற்றும் பழுப்புந்நிற திரவங்களும் காணப்பட்டன. தாமதித்து வெடிக்கும் கடிகாரம் கொண்ட சாதனமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[6].

நவீன உள்ளே வெடித்து சிதறும் குண்டுகள் தயாரிக்கும் விதம்[7]: மூன்று விதமான வெடிகுண்டுகள்:

  1. சிறிய அளவில் பாக்கெட்டுகள் போன்ற உருவமுடையவை[8] (Package-Type Improvised Explosive Devices (IEDs).
  1. வண்டிகளில் எடுத்து வந்து மோதி வெடிக்கும் வகை[9] [Vehicle Borne IEDs (VBIEDs)].
  1. தற்கொலை / மனித வெடிகுண்டுகள்[10] [Suicide Bombs].

இத்தகைய குண்டுகளை ஜிஹாதிகள் தாராளமாக உபயோகித்து வருவது, நடந்துள்ள வெடிகுண்டு தீவிரவாத-பயங்கரவாத நிகழ்ச்சிகளினின்று தெரிந்து கொள்ளலாம். 150 மீட்டர் இடைவெளி வைத்து பைக்குகள் உள்ள இடத்தில் வைத்திருப்பதால், அவை வெடிக்கும் போது, அதன் விளைவால் பக்கத்தில் உள்ள பைக்குகளின் பெட்ரோல் டேங்குகள் வெடித்து, தீப்பிழம்பை உருவாக்கும். கூர்மையான பொருருட்கள் 30 அடி வரை இருக்கும் மக்களை தாக்கி பாதிக்கும்[11].

ied-cutout01

According to sources, terrorists used over one kg of ammonium nitrate — 400gm in one and 700gm in another — and packed them in aluminum containers with sharpnels. Sources, however, said not too many shrapnels were found from the spot. “Either few shrapnels were used or they were lost in the melee that followed the incident. A timer device, which could be a clock or a cellphone, is suspected to have been used in the circuit, while the charge to the detonator was given using a .3 volt or .9 volt battery. It’s a classic IED used by terror groups,” said an official from the National Bomb Data Centre[12]. ஒரு கிலோ அம்மோனியம் நைட்ரேட் – 400 கிராம் ஒன்றில், 700 கிராம் மற்றொன்றில் – பெட்ரோல் மற்றும் கூர்மையான ஆணிகள், பால்பேரிங்குகள் வைத்து, அலுமீனிய டப்பாக்களில் அடைத்து, அவை வெடிப்பதற்காக, செல்போன் அல்லது நேரத்திற்கு வெடிப்பதற்கான மின்னணு சாதனம் இணைக்கப்பட்டது. வெடிப்பதற்கான சாதனம் .3 volt or .9 volt பாட்டரியுடன் இணைக்கப்பட்டது. இத்தகைய தயாரிப்பு முந்தைய “இந்திய முஜாஹித்தீன்” தயாரிப்புக்களை ஒத்துள்ளது.

அம்மோனியம் நைட்ரேட் உரப்பொருளாக எளிதில் கடைகளில் விற்பக்கப்படுகின்றன. இதனை 94:6 என்ற விகிதத்தில் ஏதாவது ஒரு எளிதில் எரியும் தன்மைக் கொண்ட திரவத்துடன் கலந்தால், அது வெடிகுண்டு தயாரிக்கும் பொருளாகி விடும்[13]. அமெரிக்காவில் அம்மோனியம் நைட்ரேட் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி அவற்றைத் தயாரித்து, சைக்கிள்களில் வைத்து விட்டுச் சென்றால், யாருக்கும் சந்தேகமே வராது என்று திட்டமிட்டு, இந்த ஜிஹாதிகள் உபயோகப்படுத்தி வருகின்றனர்[14].

தப்பிப் பிழைத்தவன் சந்தேகத்தில் உள்ளான்: அப்துல் வாசிப் மிர்ஜா (Abdul Wasif Mirza of Kala Pathar) ஆடைகளை விற்றுவரும் நபர் மறுபடியும் வெடிகுண்டில் காயமடைந்துள்ளது சோகமான கதையென்றே சொல்லலாம், ஏனெனில், கடந்த 2007 குண்டு வெடிப்பில் தனது காலை இழந்தார்[15]. இரண்டு குண்டு வெடிப்பிலும் அந்த இடத்தில் இருந்துள்ளதாலும், தப்பித்துப் பிழைத்துள்ளதாலும், காலாபத்தர் என்ற ஏழு கி..மீ தூரத்திலிருந்து அங்கு டீ குடிக்க வந்தேன் என்று சொல்வதாலும் போலீசார் அவனை சந்தேகிப்பதாகத் தெரிகிறது[16].

 

வேதபிரகாஷ்

23-02-2013


 


[1] “வந்தார்கள் வென்றார்கள்” இப்பொழுது எழுதப்பட்டால், எப்படி எழுதப்படும் என்று யோசிக்கும் போதே உண்மை தெரிகிறது. நிச்சயமாக அந்த எழுத்தாளர் எழுத துணிவிருக்காது என்றே தெரிகிறது.

[2] விஜயும், கமல் ஹஸனும் சந்தோஷமாக இருப்பார்களா அல்லது மற்றொருத் திரைப்படம் எடுக்க துணிவைப் பெறுவார்களா என்றும் தெரியவில்லை.

[3] இதனை ஐதராபாத் விஷயத்தில் ஊடகங்களே ஒப்புக் கொண்டது வியப்பாக இருந்தது.

[4] Sources say that the United Jehad Council (UJC)could be behind the blast. UJC, comprising of militant outfits like Jamiat-ul-Mujahideen (JuM), Jaish-e-Mohammed (JeM) and Al Badr, met on February 13 to plan revenge on India following the execution of Parliament attack accused Afzal Guru.

http://zeenews.india.com/news/andhra-pradesh/live-hyderabad-blasts-united-jehad-council-maybe-behind-the-operation_830723.html

[5] Sources informed that 5 sleeper cells were involved in carrying out the twin blasts in Dilsukh Nagar. The explosive used in the blast was bought in Hyderabad itself and a team of NIA officials will soon head to Darbhanga (Bihar) in search of clues, sources added.

[6] Reports say over 1 kg explosive was used in each bomb in Hyderabad. Also, red and grey liquid was found after the blasts and timer was used to carry out the dastardly incident.

[13] It is easy to put together an explosive using ammonium nitrate, which is even available in the market as fertiliser. All that is needed is to mix it with fuel oil in the ratio 94:6.

http://www.indianexpress.com/news/need-for-checks-on-ammonium-nitrate/1078444/