Archive for the ‘பெண்மை’ category

பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!

மே 15, 2022

பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!

கடவுளின் தேசமான கேரளாவில் மாணவி மேடைக்கு வந்தது சர்ச்சையானது: “கடவுளின் தேசம்” என்று பறைச்சாற்றிக் கொள்ளும் கேரளாவில், சிறுமியை இஸ்லாமிய உலேமா உதாசீனப் படுத்தியுள்ளது திகைப்பாக உள்ளது. அதிக படிப்பறிவு உள்ள மாநிலமும் கேரளா தான். பிறகு, ஏன், எதற்கு இந்த முரண்பாடு? கேரளாவில் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து விருது வழங்கியதற்காக விழா அமைப்பாளர்களை முஸ்லிம் மத குரு ஒருவர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மத குருவின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது[1]. சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு) என்பது கேரள சன்னி மத குரு சங்கமாகும். இந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து சான்றிதழை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது[2]. கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது[3]. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார்[4].

முசலியார் மேடையில் இருக்கும் போது பெண்கள் வரக்கூடாதாம்கோபித்துக் கொண்டு திட்டிய உலேமா: வழக்கம் போல முதலமைசர் மற்றும் ஆளும் கட்சியினர் அமைதியோடு இருந்தனர். “குர் ஆன் கட்டளைகளை மீறி முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இச்சம்பவம் இன்னொரு உதாரணம்,” என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு தெரிவித்துள்ளார்[5]. கேரள சமூகவலைதளங்களில் வைரலான ஒரு காணொளியே ஆளுநரையும் சங்கடப்படுத்தியுள்ளது[6]. கேரளத்தின் மளப்புரத்தில் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மதரஸா பள்ளியில் (அரபு பாடம்) பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மதரஸா நிர்வாகி அந்த மாணவியின் பெயரைச் சொல்லி விருது வாங்க வர மேடைக்கு அழைத்தார். மாணவியும் மேடைக்கு வந்தார். இதைப் பார்த்ததும் சமஸ்தா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.டி.அப்துல்லா முசலியார், பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண்ணை எப்படி பொதுமேடைக்கு அழைக்கலாம். என்னைப் போன்ற மதக்குருக்களை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிச் செய்யலாமா? என சிறுமியை மேடைக்கு அழைத்தவரை கடுமையாகத் திட்டினார்.

உங்களுக்கு மத விதிகள் தெரியாதா எனவும் எச்சரித்தார்: இந்த சிறுமியை அழைத்ததற்குப் பதில் அவரது பெற்றோரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் எனவும் அப்துல்லா முசலியார் திட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சிறுமி கீழே அனுப்பப்பட்டு, அவரது பெற்றோர் மேடைக்கு வந்தனர். இது சிறுமியை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, “படித்தவர்கள் அதிகம் நிறைந்த, பெண்கள் அதிகம் வாழும் கேரளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சமூகத்தை பல தலைமுறைகளுக்கு கீழ் நோக்கி இழுப்பவர்களிடம் இருந்து மக்கள் விழிப்படைய வேண்டும்,” என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிராகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் இவ்விவகாரத்தை அமுக்கி வாசித்தனர்.

பெண்கள் தனிமைப் படுத்தப் படவேண்டும் என்பது விதியல்ல: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் ட்விட்டர் பக்கத்தில்[7], “திருக்குரானின் கட்டளைகளையும் மீறி, முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததால் தகுதியான விருதைப் பெறும்போது மேடையில் அவமானப்படுத்தப்பட்டதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. மதகுருமார்கள் குரானின் கட்டளையை மீறியும், அரசியலமைப்பு சட்டத்தை மீறியும் முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவது, அவர்களின் ஆளுமையை நசுக்குவது ஆகியவற்றுக்கு இதுவும் ஒரு உதாரணம்,” என வேதனையோடு கூறியுள்ளார்[8]. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்[9]. இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் தரப்பையும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்[10]. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்[11], “இந்த விவகாரத்தில் கேரளா ஆளும் தரப்பினர் மௌனம் குறித்து வருத்தம் அளிக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி அனைவருமே இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றனர். நமது வீட்டுப் பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியம் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் இது குறித்துப் பேச வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களை விட (கேரள அரசு) நான் அதிகம் பேசி உள்ளேன்,” என்றார்[12].

அடிப்படைவாத இஸ்லாமில் பெண்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர்: முஸ்லிம் பெண்கள் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு சமமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடக் கூடாது, காஜி, மௌலானா, உலேமா முன்பாக முகத்தைக் காட்டிக் கொண்டு வரக் கூடாது, பர்தா / ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும், முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம், தலிபன் போன்ற அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் ஆணையிடுவதை செய்திகளாகப் படிக்கலாம். விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற நான்கு நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது[13]. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கணவன்-மனைவி உள்பட எத்தகைய உறவாக இருந்தாலும் கூட ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும்[14]. இதுபற்றி ஆப்கனின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛உணவகங்களில் ஆண்கள், பெண்களை பிரித்து உணவு சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] டாப்.தமிழ்.நியூஸ், கேரளாவில் பள்ளி மாணவியை மேடைக்கு அழைத்த விழா அமைப்பாளர்களை கண்டித்த முஸ்லிம் மத குரு.., By KRISHNA G Wed, 11 May 20225:48:27 AM

[2] https://www.toptamilnews.com/india/Samastha-Kerala-Jem-iyyathul-Ulama-leader-MT-Abdulla/cid7371111.htm

[3] விகடன், `பெண்களை பரிசு பெற மேடைக்கு அழைக்கக்கூடாது!’ – கேரள இஸ்லாமிய தலைவரின் செயலால் கொதித்த கவர்னர், சிந்து ஆர், Published:12 May 2022 6 PMUpdated:12 May 2022 6 PM.

[4] https://www.vikatan.com/news/india/kerala-muslim-body-leader-scolds-members-for-inviting-girl-student-on-stage-draws-flak

[5] காமதேனு, முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவதா?’- மதக்குருக்களை எச்சரிக்கும் கேரள ஆளுநர்,என்.சுவாமிநாதன், Updated on : 12 May, 2022, 3:37 pm.

[6] https://kamadenu.hindutamil.in/national/religious-people-who-isolate-muslim-women-kerala-governor-warns

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெண்கள் மேடைக்கு வரக்கூடாது..!! இந்த காலத்தில் இப்படி ஒரு இசுலாமிய அமைப்பா.? கொந்தளிக்கும் ஆளுநர், Ezhilarasan Babu, Chennai, First Published May 13, 2022, 1:44 PM IST; Last Updated May 13, 2022, 1:44 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/women-should-not-come-on-stage-is-there-such-an-islamic-organization-in-this-period-governor-condemned–rbtavy

[9] தினமணி, மலப்புரத்தில் சிறுமி அவமதிப்பு விவகாரம்: அரசியல் தலைவா்களின் மெளனம் ஏமாற்றமளிக்கிறது, By DIN  |   Published On : 13th May 2022 03:01 AM  |   Last Updated : 13th May 2022

[10]https://www.dinamani.com/india/2022/may/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3843656.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, அவர்களின் மவுனம் ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது!” கேரள அரசை சாடும் ஆளுநர் ஆரிப் கான்எதற்கு தெரியுமா, By Vigneshkumar Updated: Friday, May 13, 2022, 0:18 [IST].

[12] https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-governor-questions-silence-of-leadership-on-girl-humiliated-on-stage-issue-458104.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, ஓட்டலில் ஆண்பெண் சேர்ந்து சாப்பிட தடை! ஆப்கனில் அமலான புதிய கட்டுப்பாடுகள்! தாலிபான் ஆட்டம், By Nantha Kumar R Updated: Saturday, May 14, 2022, 12:36 [IST]

[14] https://tamil.oneindia.com/news/international/in-afghan-taliban-bans-men-and-women-dining-together-458287.html

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன [1]

ஜூலை 13, 2018

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன [1]

FMG - India demonstrates

இஸ்லாமிய பெண்கள் ஏன் தங்கள் உரிமைகளுக்காக வழக்குகள் போடுகிறார்கள்?: இஸ்லாமிய நடவடிக்கைகளான முத்தலாக், ஹலாலா, பலதாரமணம் ஆகியவை குறித்து உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், இப்போது, பெண்குழந்தைகளின் பெண்உறுப்பு அறுவைச் சிகிச்சையும் [Female Genital Mutilatatiom – FGM] விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது[1]. இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் சொன்னால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் தலாக் சொல்ல வேண்டும் என்று உள்ள விதியை மாற்றி, ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து கொடுக்கும் வழக்கம் இருப்பதாகவும் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்வதற்கு உரிய நிக்காஹ் ஹலாலா என்ற நடைமுறையையும், பாலிகாமி என்ற பலதார மண நடைமுறையையும் வினா எழுப்பி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

FMG - India demonstrates-2

முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, பிஜேபி இஸ்லாத்தை எதிர்க்கிறது: உண்மையில் இஸ்லாம் பெண்கள் தான், இவ்வழக்குகளை போட்டது. இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத / தடை செய்யப்பட்ட வழக்கங்கள் இந்தியாவில் தொடவது, முஸ்லிம் பெண்களை அடக்கி ஆள்வதற்குத் தான் என்பதால், இப்பொழுது, அப்பெண்கள் வெளியில் வந்து வழக்கு தொடர்ந்துள்ளார்கள். மேலும் இக்காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் பெண்கள் நிலை எவ்வாறுள்ளது என்பதை அவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் மார்க்கத்தில் இஸ்லாமியர்கள் காலங்காலமாக அனுபவித்து வந்த நடைமுறை பழக்க வழக்கங்களில் மனித உரிமை, பெண்ணுரிமை என்ற பேரில் பாஜக அரசு பலமுனைத் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இப்போது புதிதாக ஒரு பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது, என்று “நக்கீரன்” கூறுகிறது[2].

FMG - India demonstrates-3

கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன: ஆணின் உறுப்பின் நுனிப்பகுதியின் சதையை வெட்டியெடுப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய சடங்காகும். அதேபோல பெண்களின் உறுப்பின் பகுதியை அறுத்தெடுக்கும் முறைக்கு கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) எனப்பல பெயர்களில் அந்த அறுவைச்சிகிச்சை முறைப்படி அழைக்கப்படுகிறது. சுருக்கமாக இது “பெண்-சுன்னத்” எனப்படுகிறது. இதில் மூன்று முறைகள் உள்ளன. சரித்திர ரீதியாக இது எகிப்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது. இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில்  குறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சமீப காலத்தில் இது செய்தால் பெண்களை அதிக நேரத்திற்கு அனுபவிக்கலாம் என்ற எண்ணத்திலும் வலுக்கட்டாயமாக செய்யப்படுகிறது.

FMG - India demonstrates-4

கட்னா, காஃப்த் முதலிய பழக்கங்கள்:  இஸ்லாம் மார்க்கத்தில் ஆண் குழந்தைக்கு சுன்னத் எனும் சிறு ஆபரேசன் செய்யப்படுவது வழக்கம். ஆணுறுப்பின் முன்தோலை வெட்டி நீக்குவதைத்தான் இப்படி சொல்வார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கிருமித் தொற்று தவிர்க்கப்படும் என்றும், எய்ட்ஸ் தடுக்கப்படும் என்றும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால், பெண் குழந்தைகளுக்கும் இதேபோன்று பெண்ணுறுப்பில் கிளிட்டோரியஸ் எனப்படும் பகுதியை வெட்டி எடுக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு கட்னா, காஃப்த் என்று பெயர். இதுவும்கூட பெண்ணுறுப்பு சுத்தத்திற்காகவே செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், பெண்குழந்தைகளின் பெண்உறுப்புகளை சிதைப்பதை எதிர்த்து சுனிதா திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் இந்திரா ஜெய்சிங்கும், மனுவை எதிர்த்து மத சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் சார்பில் அபிசேக் சிங்வியும் வாதாடினார்கள்.

FMG - India demonstrates-5
காங்கிரஸ் வழக்கறிஞர் சிக்வியின் வாதம்: சிங்வி தனது வாதத்தில், இஸ்லாமிய பெண்குழந்தைகளின் பெண் உறுப்பில் உள்ள மிகச்சிறிய பகுதியை வெட்டி எடுக்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது. இதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது என்றார்[3]. “கட்னா” போன்ற சடங்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது என்றும் வாதிட்டார்[4]. உண்மையில் அது ஆண்களுக்கு செய்யப்படுவது. இருப்பினும் இப்படி வாதிட்டு, வழக்கை தள்ளி வைக்கும் படி கேட்டுக் கொண்டார்[5]. இந்த குழுமத்திற்காக, இப்படி சொன்னேன், இவர்களுக்கு இப்படி சொன்னேன் என்பதை விட, அல்லது சிங்வி ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்றெல்லாம் வாதிடுவதை விட, பொது மக்களுக்கு காங்கிரஸ் தன்னுடைய நிலைமை என்ன என்று எடுத்துக் கூறலாம்[6]. மனுவை எதிர்த்து வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஆண்குழந்தைகளுக்கு செய்யப்படும் சுன்னத் எனப்படும் அறுவைச் சிகிச்சை எய்ட்ஸ் கிருமி தாக்குதலில் இருந்த பாதுகாப்பு அளிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பெண்குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவைச் சிகிச்சை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவேதான், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஆப்பிரிக்காவில் உள்ள 27 நாடுகளில் இந்தப் பழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையிலான சுதந்திரமும் உரிமையும்கூட பொது சுகாதாரம், தார்மீக ஒழுக்கம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டதுதான் என்றார்.

FMG - India demonstrates-6

இந்தியாவில் இதைப்பற்றிய நிலைமை: இந்தியாவில், இது பின்பற்றப்பட்டு வந்தாலும், இதுவரை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், பெண்ணுறுப்புச் சிதைப்பிற்கு முழுமையான தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால், ஊடகங்களில் செய்திகல் அவர ஆரம்பித்துள்ளன. அதன்படி 2012-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட போக்ஸோ எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் (Prevention of children from sexual offences act 2012) மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என மனுதாரரின் சார்பில் குறிப்பிடப்பட்டது[7]. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஐ.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான  தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ‘பெண்ணுறுப்பு சிதைப்பு’ அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

13-07-2018

FMG - India demonstrates-7

[1] நக்கீரன், பெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது ஏன்?, ஆதனூர் சோழன், Published on 10/07/2018 (18:34) | Edited on 10/07/2018 (18:42)

[2] https://nakkheeran.in/special-articles/special-article/why-does-religion-allows-touch-female-genital-organ-sunnath-islam

[3] Senior advocate A.M. Singhvi, appearing for a Muslim group, said the matter be referred to a constitution bench as it pertained to the issue of essential practice of the religion which needed to be examined.

[4] The Week, Genital mutilation violates bodily ‘integrity’ of girl child: SC, PTI | New Delhi July 09, 2018 22:16 IST

[5] Singhvi, on the other hand, referred to the practice of male circumcision (khatna) in Islam and said that it has been allowed in all countries and this is the accepted religious practice and sought adjournment of the hearing.

https://www.theweek.in/news/india/2018/07/09/genital-mutilation-violates-bodily-integrity-of-girl-child-sc.html

[6] India Today, Viral Test: Does Congress support female genital mutilation, Anand PatelNikhil Dawar , New Delhi, July 12, 2018; UPDATED: July 13, 2018 14:07 IST

https://www.indiatoday.in/fact-check/story/viral-test-congress-singhvi-female-genital-mutilation-1284346-2018-07-12

[7] நியூஸ்18.ட்தமிழ், பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா? உச்ச நீதிமன்றம் கேள்வி, news18 , Updated: July 10, 2018, 3:07 PM IST.

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது அல்லது, ஷரீயத்தில் தப்பி விடுமா? ஜமாத்தில் சமாதி கட்டப்படும் சட்டமீறல்கள் [2]

மே 29, 2018

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது அல்லது, ஷரீயத்தில் தப்பி விடுமா? ஜமாத்தில் சமாதி கட்டப்படும் சட்டமீறல்கள் [2]

p. Jainul Abeedeen involved in sexploitation-The Hindu, Tamil-2

ஜைனுல் ஆபிதீனுக்குப் பிறகு பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்கரீம்: 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய சமூகத்தில் பல்வேறு முற்போக்குக் கருத்துகளை எடுத்துவைத்து தனி செல்வாக்குடன் வலம் வந்தவர் பி.ஜெ. ‘‘தவ்ஹித் ஜமாத்துக்கு என்று தனி பள்ளிவாசல், தனி நிர்வாகம் என சகலமும் இருக்கின்றன. தவ்ஹித் ஜமாத்தின் மீடியா நிர்வாகம் முழுவதும் பி.ஜெ கட்டுப்பாட்டிலேயே இருந்துவருகிறது. ஏற்கெனவே பி.ஜெவுடன் முரண்பட்ட பலர் இதேபோல குற்றச்சாட்டை சந்தித்து வெளியேற்றப்பட்டனர்’’ என்கிறார்கள்.  இந்த விவகாரம் குறித்து பி.ஜெ-வின் கருத்துக் கேட்க முயன்றோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை[1]. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம்[2]. “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெவை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம். முதலில் வெளியான ஆடியோ குறித்து எங்களிடம் யாரும் புகார் தரவில்லை. எனவே அதனை நாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கையை ரமலான் மாதத்துக்குப் பிறகு பொதுக்குழுவில் பேசி முடிவெடுக்க உள்ளோம். பி.ஜெ இல்லையென்றாலும் எங்களது சமூக, மார்க்கப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும். இந்த அமைப்பை நிறுவிய தலைவர்மீதே நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதிலிருந்தே, எங்கள் அமைப்பின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்’’ என்றார் சிம்பிளாக.- அ.சையது அபுதாஹிர்.

Jainul Andeen -Vedaprakash-FB-3

பாக்கர்ஆபிதீன் லடாயும், இரண்டாகப் பிரிந்த டி.என்.டிஜேயும்: 2009ல் எஸ்.எம்.பாக்கர் மற்றும் ஜெயினுல் ஆபிதீனுக்கு இடையில் வேறுபாடு உண்டாகி, ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்‘அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ என்ற புது இயக்கம் உருவானது. பிற்றகு,  அதுவும் உடைந்து ‘இந்திய தவ்ஹீத் ஜமாத்‘என்றொரு புது அமைப்பு உதயமாகியிருக்கிறது. ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்‘அமைப்பில் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம்.பாக்கர் மீது செக்ஸ் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லி அவரையும் வேறு சிலரையும் அமைப்பின் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். நீக்கப்பட்ட பாக்கர், ‘இந்திய தவ்ஹீத் ஜமாத்‘தைத் தொடங்கினார். தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனத் தலைவர் பி.ஜெயினுல் ஆபிதீனிடம் பேசினோம் [ஜூனியர் விகடன்]. ”பாக்கர் மீது புகார்கள் வரத் தொடங்கியதுமே அவரை ஒதுங்கி யிருக்கச் சொன்னோம். அவரோ,மேலும் பண மோசடிகளில் இறங்கினார். விண் டி.வி. முதலீட்டில் இரண்டே கால் கோடி ரூபாய் உட்பட பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கிறார். நிலங்களை விற்றதிலும் அவர் மீது புகார்கள் வந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் ஒருவரிடம் இரண்டு கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். இதையெல்லாம் ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்தோம். அவர் நடத்திய ஹஜ் சர்வீஸிலும் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை. இத்தகைய காரணங்களால்தான் அவரை நீக்கி னோம்.”

Jainul Andeen -Vedaprakash-FB-2

பரஸ்பர குற்றச்சாட்டுகளா, திட்டம் போட்டு, தப்பித்துக் கொள்ள கடைபிடிக்கும் யுக்தியா?:  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒன்றாக, இரண்டாக பிரிந்தால், இழைத்த குற்றங்கள் போய் விடுமா? கற்பழிக்கப் பட்ட பெண்கள் க்ற்பைத் திரும்பப் பெற்று விடுவார்களா? ஆனால், இங்கும், சட்டப் படி என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியாது. இருவர் மீதும் ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகள் – பாலியல் புகார், பெண்களுடன் தொடர்பு, பண மோசடி…..பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்காமல், கட்சிகள் போல உடைவதால், குற்றங்கள் மறைக்கப் படுகின்றன என்றாகிறது. இது பரஸ்பர குற்றச்சாட்டுகள் என்பதை விட, ஏதோ, ஒரு திட்டம் போட்டு, தப்பித்துக் கொள்ள கடைபிடிக்கும் யுக்தி என்றே தெரிகிறது. போலீஸைப் பொறுத்த வரையில், புகார் கொடுக்காமல், அவர்கள் வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள். ஆகவே, இந்தியாவிற்குள் வாழ்ந்து, இந்தி சட்டங்களில் சிக்காமல் வாழும், இந்த இந்திய குடிமகன்களை நினைத்தால் தமாஷாகத் தான் உள்ளது.

Jainul Andeen -Vedaprakash-FB-1

கற்பழிப்பு சாமியார்களுக்கு எல்லாம் சட்டத்தின் படி நட்டவடிக்கை எடுக்க வேண்டும்: ஜைனுல் ஆபிதீன் ராம் ரஹீமை விட எப்படி வேறுபட்ட சாமியாராக இருக்க முடியும்? இல்லை நித்தியானத்தாவை விட மாறுபட்ட வழக்காக, இவரது நிலை உள்ளதா? சட்டத்திற்கு முன்பாக எல்லோரும் சமம் என்றால், இவர் மீதும், அதே முறையில் போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வருடமாக அவர்களே, தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு, முதலில் மறுத்து, பிறகு ஒப்புக் கொண்டு, மே 2018 வரை இழுத்துள்ளனர். இதில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. போலீஸுக்கு செல்ல்லாமல், ஜமாத்தில் முடிவெடுப்போம் என்றால், அது இந்திய சட்டங்களையே அவமதிப்பதாகும். இத்தகைய முறை எவ்வாறு செயல்படுகிறது, அரசாங்கத்திற்கு தெரியுமா-தெரியாதா, தெரிந்தால் ஏன் அமைதியாக இருக்கிறது போன்ற கேள்விகளும் எழுகின்றன. தீவிரவாதிகள் விசயங்களிலும், இவர்கள் இவ்வாறு இருப்பதினால், பலர் தீவிரவாதத்தில் இருப்பதே தெரியாமல் போகிறது. பிறகு மாட்டிக் கொள்ளும் போது தெரிகிறது. பிஜே விசயமும், இப்பொழுது அப்படியாகி விட்டது. “சுயோ மோடோ” முறையில், “தேசிய மகளிர் ஆனையம்”  சட்டமீறல்களை எடுத்துக் கொண்டு, விசாரிக்க ஆணையிடுகிறதே, இவ்விசயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?

PJ Baker fight-1

நிச்சயமாக செக்யூலரிஸவாதிகளின் போலித்தனம் வெளிப்படுகிறது:  இந்தியாவில் “செக்யூலரிஸம்” என்றால், துலுக்கர், கிருத்துவர் இந்திய சட்டங்களில் வரமாட்டார் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். சட்டம், நீதிமன்றம், போலீஸார் என்று எல்லோருமே, அவர்களைக் கண்டு கொள்வதில்லை. பெர்ரிதாக பிரச்சினை வரும் போது தான், நடவடிக்கை எடுக்கின்றனர். ஊடகங்களும் அவ்வாறே இருக்கின்றன. சட்டமீறல்களை, ஒரே மாதிரியாக அவை அணுகுவதில்லை.

  1. பிஜே, ஜைனுல்ஆபிதீன்பாலியல்விவகாரம், மற்றஅதிரடிசெய்திகளால்மறைக்கப்பட்டுவிட்டன, டிவிசெனல்களும்கண்டுகொள்ளவில்லைபோலும்.
  2. இந்தியாவில்பாலியல்-செக்ஸ்விவகாரங்கள்கூடசாமியார்கள்விசயங்களில் “செக்யூலரிஸ” மயமாக்கப்பட்டுள்ளதுபோலும்!
  3. துலுக்கர்-கிருத்துவர்களுக்குஎல்லாம்நீதிமன்றம்முதலியவைதேவையில்லை, அவர்களேபேசித்தீர்த்துக்கொள்வர், அல்லதுநீக்கிவைப்பர்போலும்.
  4. ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார்.
  5. இதேபோல் 13 பெண்களிடம்பி.ஜெஆபாசமாகப்பேசியுள்ளதோடு, அவர்களுடன்தொடர்பில்இருந்ததற்கானஆதாரங்களும்எங்களிடம்உள்ளன – இப்ராஹிம்.
  6. சன்-டிவிஏன்இந்தஆடியோ-வீடியோக்களைவெளியிடவில்லை? நித்தியானந்தாபுகழ் – லெனின்குருப்புக்குதெரியவில்லையா?
  7. 13 பெண்களின்கதி, அவர்களின்குடும்பங்கள்கதிஎன்ன?, பெண்ணியவீராங்கனைகள்ஏன், எப்படி, எவ்வாறுபொத்திக்கொண்டுஇருக்கிறார்கள்?
  8. கற்பழிப்பாளிகளுக்கு, இவ்வாறுவெவ்வேறுமுறைகளில்தண்டனைகொடுக்கலாம், கூடாதுஎன்றெல்லாம், செக்யூலரிஸஇந்தியாவில்இருக்கமுடியுமா?
  9. இனி “யூனிபார்ம்கிரிமினல்கோட்” [Uniform Criminal Code] எடுத்துவரவேண்டும்என்றுஇந்துத்துவவாதிகள்கேட்பார்களா?
  10. ஹரியோ, வர்த்தினியோ, பாண்டேயோ, புதியதலைமுறைஇத்யாதிகள், இதைப்பற்றிஒன்றும்கண்டுகொள்ளவில்லையோ?

 

© வேதபிரகாஷ்

29-05-2018

PJ Baker fight-2

[1] தி.இந்து, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை ஏன்?: தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கம்உயர் நீதிமன்றத்தில் வழக்கு; டிஜிபியிடம் புகார், Published : 16 May 2018 09:02 IST; Updated : 16 May 2018 09:04 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23899778.ece

 

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

மே 29, 2018

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

p. Jainul Abeedeen involved in sexploitation-The Hindu, Tamil

ஒரு துலுக்க சாமியார், பெண்ணுடன் உடலுறவு கொண்டு, அதனை வர்ணித்துப் பேசலாமா?: சென்ற வருடம், 2017ல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெய்னுல் ஆபிதீன், ஒரு பெண்ணுடன், இருவரும் எவ்வாறு இன்பம் துய்த்தனர் என்பதான உரையாடல் கொண்ட ஆடியோ புழக்கத்தில் இருந்தது. “துலுக்கர் விவகாரம், நமக்கேன்” என்று யாருக் கண்டுகொள்ளவில்லை. நித்தியானந்தா விசயத்தில் சன்-டிவியும், லெனின் குருப்பும், ஹன்ஸ்ராஜும், நக்கீரனும் குதித்தது போல, குதிக்கவில்லை. ஏதோ இணைதள தமாஷாக்களில் அதுவும் ஒன்று என்பது போல கேட்டு, மகிழ்ந்து மறந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், மே 12ம் தேதி 2018, அன்று இவ்வியக்கத்தினர், கூடினர், பிஜே தான் அந்த ஆடியோவில் பேசியது, இது தவிர, “இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன,” என்று இப்ராஹிம் சொன்னதாக, இப்பொழுது செய்திகள் வெளிவந்துள்ளது, திகைப்பாக இருக்கிறது. ஒரு மதகுரு, சாமியார், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார், அதனை வர்ணித்து மகிழ்கிறார் என்றால், ஏதோ சாதாரண விவகாரமாகக் கொள்வது மேலும் வியப்பாக இருக்கிறது. ஆசிபா விசயத்தில் எகிறி குதித்த “செக்யூலரிஸ்டுகளில்” ஒருவன் அல்லது ஒருத்தி கூட வாயைத் திறக்கவில்லை. ஒருவேளை, இதெல்லாம் “ஒப்புக் கொள்ளப்பட்ட உடலுறவு” என்ரு உச்சநீதி மண்ர தீர்ப்பு என்ரு சொல்லி, கோக்கோகக் கதையாக முடித்து விடுவார்களா?

p. Jainul Abeedeen involved in sexploitation

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் எடுத்த முடிவு[1]:. இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. ஜேபி பாலியல் புகார் தொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் 2017ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த மே 12-ம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது: “பி.ஜெய்னுல் ஆபிதீன் மீது கூறப்பட்ட புகார் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விசாரிக்கப்பட்டது. இதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார். இனிவரும் காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர முடியாதபடி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்துக்கு பிறகு நடக்கவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முழு விளக்கம் அளிக்கப்படும்”, இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[2]. இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் கூறும்போது[3], “ஜமாஅத் என்பது கட்டுப்பாடுமிக்க ஒரு அமைப்பு. எந்த ஒரு தவறுக்கும் இதில் இடம் இல்லை. அதனால்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 21 பேர் கடந்த 12-ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில் 21 பேரும் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றனர்[4].

TNTK letter dated 12-05-2018
விகடன்என்ன நடந்தது என விசாரித்தோம்:  ‘தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் என்கிற பி.ஜெ கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்பட்டுவிட்டார்[5]. அவர்மீது எழுந்த புகார் நிரூபணமானதால், கட்சியின் உயர்மட்டக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது’ என்று அந்த அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது[6]. இந்த அமைப்பின் ஆணிவேராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த அமைப்பையே அசைத்துள்ளது.  “கடந்த ஆண்டு பி.ஜெ ஒரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அமைப்பு அதுகுறித்து விசாரித்தது. ஆனால், அந்த ஆடியோவில் பி.ஜெ-தான் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லாததால், அவர் தலை தப்பியது. ஆனால், இதே பெண் விவகாரத்தில் அப்போலோ ஹனிபா என்பவர் பி.ஜெ-வுடன் செட்டில்மென்ட் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அடுத்த ஆடியோ ஒன்று வெளியாக… மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால், ‘ஆடியோவில் இருப்பது பி.ஜெ குரலே இல்லை. அது மிமிக்ரி செய்யப்பட்டது’ என்று விளக்கம் சொன்னார்கள். கூடவே, மிமிக்ரி செய்யப்பட்ட சாம்பிள் ஆடியோ ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டது.

p. Jainul Abeedeen involved in sexploitation.Vikatan 19-05-2018
அல்தாஃபிக்கு அடுத்து, ஜைனுல் ஆபிதீனின் மீது பாலியல் புகார்: தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பை கட்டமைத்ததே பி.ஜெ-தான். இஸ்லாமிய மக்களிடையே அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. கடந்த ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக இருந்த அல்தாஃபிமீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு கிளம்பவே, அவரை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் பி.ஜெ-வை தலைவராக நியமித்தார்கள். இந்நிலையில், சில நாள்களுக்குமுன் பி.ஜே மற்றொரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ டீஸர் ஒன்றைச் சிலர் வெளியிட்டு கிலி ஏற்படுத்தினார்கள். அடுத்த சில தினங்களில் டீஸரின் தொடர்ச்சியாக… 10 நிமிடங்கள் ஓடக்கூடிய முழு ஆடியோ ஒன்று வெளியானது. இதனால் பிரச்னை பூதாகரமானது. ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார் அவர். அதன்பிறகே அவரை அமைப்பிலிருந்து நீக்கியுள்ளார்கள்” என்கிறார்கள்.

Jainul Andeen removed-VP
தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வேலூர் இப்ராஹிம் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வந்தது: “சிறையில் இருந்து வெளிவந்துள்ள பாசித் என்பவர்தான் இந்த ஆடியோவை முதலில் வெளியிட்டுள்ளார்,” என்று செய்தி குறிப்பிட்டாலும், ஏன் சிறைக்கு சென்றார், செய்த குற்றம் என்ன, எப்படி வெளிவந்தார், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு இலங்கையில் உள்ள அமீர் சயீத் என்பவர் மூலம் இந்த ஆடியோ வெளியாகிவருகிறது. அதாவது, இந்திய சைபர் சட்டத்ட்தில் அகப்படாமல் இருக்க அவ்வாறு செய்தனர் போலும். ‘‘பி.ஜெ-வுக்கு நெருக்கமான ஒருவர் மூலமே இந்த ஆடியோக்கள் மொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன’’ என்று ‘ஷாக்’ கொடுக்கிறார்கள் சிலர். இவ்விஷயத்தில், முதல் ஆடியோ வெளியானது முதல் தொடர்ந்து பி.ஜெ-மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருபவர் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம். இவர் ஏற்கெனவே தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம்: இப்ராஹிம் நம்மிடம் “பி.ஜெ தனது நா வன்மையால் இத்தனை ஆண்டுகள் அந்த அமைப்பில் இருந்தவர்களை முட்டாளாக்கி வந்துள்ளார். இப்போது வெளியான ஆடியோ மட்டுமல்லஇதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம். இதற்குமுன் வெளியான ஆடியோவில் பேசியதும் இவர்தான் என்று நான் தொடர்ந்து சொல்லிவந்தேன். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் இதை அமுக்கிவிட்டார்கள். அதன்பிறகுதான் இந்தப் புதிய ஆடியோ வெளியாகியுள்ளது. குடும்பப் பிரச்னை என்று வரும் பெண்கள், மார்க்கக் கூட்டத்துக்கு வரும் பெண்கள் என பலரிடமும் பி.ஜெ தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். அது அங்கிருக்கும் பலருக்கும் தெரியும். இப்போது பி.ஜெ நீக்கப்பட்டதும்கூட ஒரு கண்துடைப்புதான். அவருடைய ஆளுமை இன்னும் அந்த அமைப்பில் உள்ளது. பல கோடி ரூபாய்ப் பணத்தை வெளிநாட்டிலிருந்து பெற்று அதை சில தவறான காரியங்களுக்கு பி.ஜெ பயன்படுத்தி வருகிறார். அந்த உண்மையை தக்க ஆதாரங்களோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அல்தாஃபி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதைத் தனக்குச் சாதகமாக்கி தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றியவர், அதே பாலியல் குற்றச்சாட்டால் இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறார். அவரைக் காவல்துறை கைதுசெய்து முறையாக விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

© வேதபிரகாஷ்

29-05-2018

JP playing dual role - Maulvi and politician

[1] தி.இந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, Published : 15 May 2018 09:57 IST; Updated : 15 May 2018 09:57 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23889521.ece

[3] மின்முரசு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, May 15, 2018.

[4]http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/279179/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/

[5] விகடன், ஆபாச ஆடியோசிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்! , அ.சையது அபுதாஹிர், Posted Date : 06:00 (19/05/2018).

[6] https://www.vikatan.com/juniorvikatan/2018-may-23/exposure/141064-jainulabdeen-sex-audio-issue.html

 

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

ஓகஸ்ட் 26, 2016

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

Khader Basha arrested for sham marriages and fraud
போலித்திருமணங்கள் ஏன், எப்படி, எவ்வாறு செய்யப்பட்டன?
: ஒரு முஸ்லிம் எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? ஒரு நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் உள்ளது. பிறகு, காதர் பாட்சா எப்படி எட்டு திருமணங்களை செய்து கொண்டான். அப்படியென்றால், திருமணம் நடந்தெல்லாம் போலி ஆவணங்கள் மூலம் நடந்ததா? அதே இமாம் அல்லது வேறு இமாமால் கொடுக்கப்பட்டதா? இங்குதான், போலி நிக்காஹ் நாமாக்கள் எப்படி ம்கொடுக்கப்பட்டன, இத்திருமணங்களை போலியாக செய்ய வேண்டிய அவசியம் என்ன, இவையெல்லாம், நகை-பணம் சுருட்ட செய்யப்பட்டத் திருமணங்களா அல்லது வேறு உள்நோக்கம் உள்ளதா? அப்பெண்கள் வாழ்க்கை சீரழிந்தது மற்றும் அக்குழந்தைகளின் எதிர்காலமும் பிரச்சினையாகிறது என்பதை கவனிக்க வேண்டும். நாளைக்கு பள்ளிகளில் சேர்க்கும் போது, தந்தையைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அப்பொழுது, தாய்-குழந்தை இருவருக்குமே சொல்லொணா துயர் ஏற்படும். அத்தகைய கஷ்டங்களை மீள சுமார் 15 வருடங்கள் ஆகும். ஆகையால், இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

Madrassa where Salamiya met Taslim-fake nikhanama

மதரஸாக்களில் திருமண தரகும், போலி நிக்காநாமா வழங்கிய இமாமும்: சலாமியா பானுவின் புகாரில் பல விசயங்கள் வெளிவருகின்றன:

  1. ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவிதஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. [தஸ்லிமா இத்தகைய பெண்களை குறிவைத்து வேலை செய்கிறாளா?]
  2. கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன் [மதரஸாவில் பேசுவதை விட, வீட்டில் கூப்பிட்டு பேசியிருக்கலாமே? மதரஸாக்களில் திருமண தரகு வேலை கூட நடக்கிறாதா என்பது தெரியவில்லை].
  3. அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[1] [வரன் பார்ப்பதற்கு ஒரு லட்சம் கொடுப்பார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. இல்லை திருமணம் செய்து கொண்டால், மதன் மூலம் பணம் கிடைக்கும் என்பது போல உள்ளதா?].
  4. கீழமாத்தூர் ஜமாத்தை சேர்ந்த இமாம் ஜாகிர் உசேன் என்பவர் எனது திருமணத்தை பதிவு செய்த நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது [இஸ்லாத்தில் இப்படி போலி நிக்காஹ் நாமா கொடுக்கிறார்கள் என்பதும் திகைப்பாக இருக்கிறது. முதலில் இமாம் ஒருவர் இப்படியெல்லாம் போலி திருமணப்பத்திரம் தயாரித்துக் கொடுக்கலாமா?].
  5. நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது, அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது என்றால், ஒன்றிற்கும் மேலான அத்தகைய பதிவு புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்றாகிறது [இதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. இப்படி மதரஸா, மசூதிக்களில் கொடுக்கப்படும் சான்றிதழ்களின் ஆதாரத்துவத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடிய்ம் என்ற கேளிவியும் எழுகின்றது].
  6. ஆக, நிக்காஹ் பதிவு புத்தகம் மற்றும் நிக்கஹ் நாமா எப்படி போலியாக இருக்க முடியும்? [இல்லை மறுபடியும் அரசு திருமணப்பதிவு செய்து கொண்டு, சான்றிதழ் பெறவேண்டும் என்று சட்டத்தை உண்டாக்க வேண்டும்]Khader Basha marrying Salamiya Banu - fake nikkah nama
  7. இத்திருமணங்கள் உண்மையான திருமணங்கள் இல்லை, போலியானவை என்றால், அத்தகைய திருமணங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? [அங்குதான் லவ்-ஜிஹாத் போன்ற மோசடிகள் உள்ளனவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது]
  8. இச்செய்தி வந்த பிறகும், கீழமாத்தூர் ஜமாத், கட்டுப்பாட்டில் உள்ள மசூதி மற்ற முஸ்லிம்கள் எப்படி மௌனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை [அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்தே நடந்து வருகின்றனவா?].
  9. எனது கணவர் காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கயூம் மற்றும் இமாம் ஜாகிர்உசேன் ஆகியோர் திட்டமிட்டு என்னை கூட்டாக சேர்ந்து ஏமாற்றி உள்ளனர் [போலி நிக்காக் நாமா என்றால், போலி திருமணம் என்றாகிறது].
  10. தஸ்லிமாவுக்கும் காதர்பாட்சாவுக்கும் தொடர்பு இருக்கிறது[2] [இருவரும் சேர்ந்து இத்தகைய கல்யாண மோசடிகளை செய்து வருகின்றனரா?].
  11. இந்து பெண்களும் சம்பந்தப் பட்டிருப்பதால், அவர்களும் மதம் மாற்றப்பட்டார்களா இல்லையா?
  12. மதம் மாற்றப்பட்டால் தான் நிக்காஹ் நடக்கும் என்றால், மதம் மாற்றப்பட்ட சான்றிதழ் யார் கொடுத்தது? அது உண்மையா அல்லது போலியா?
  13. இந்துபெண்களை அப்படி ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டது, “லவ்-ஜிஹாத்” போன்ற வகையில் வருமா?
  14. காதர் பாட்சாவுக்கு சிலை கடத்திலிலும் தொடர்பு இருக்கிறது என்று பானு ஊடகக்காரர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[3].

என்று பற்பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு பதிலளித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தெரிகிறது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- உண்மை என்ன

பெண்கள்-குழந்தைகள் இத்தகைய மிருகங்களிடமிருந்த காப்பாற்றப் பட வேண்டும்: திருமணங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது, ஏனெனில், பெண்கள் நலன், குழந்தை நலன், குடும்ப நலன், அவர்களின் எதிர்காலம் முதலியவை அதில் அடங்கியுள்ளன. பெண்கள் கற்பு துச்சமாகும் போது, தாம்பத்திய மதிப்பு, மரியாதை மற்றும் போற்றும் தன்மை குறைகிறது. தாம்பத்திய குறைந்தால், அசிங்கமானால், கணவன்-மனைவி உறவுகள் பாதிக்கும், விவாக ரத்தில் முடியும். விவாகரத்து “கணவன்-மனைவி”யை மட்டும் பிரிக்கவில்லை, குடும்பத்தை, குடும்பங்களைப் பிரிக்கின்றன. அதிகமாக பாதிக்கப்படுவது மகன்-மகள் தான், அவர்களின் குழந்தைகள். குழந்தைப் பருவத்தில் கணவன்-மனைவி கத்தல்கள், சச்சரவுகள் சண்டைகள், அடித்து கொள்ளுதல் முதலியன மனத்தில் படிந்து, பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படும். இவ்விதத்திலும் கட்டுப்பாடு முக்கியமாகிறது.

Madrassa where Salamiya met Taslim

மதம் என்ற ரீதியில் கூட இத்தகைய சமூக சீரழிவுகளை நியாயப்படுத்தக் கூடாது: முன்னரே குறிப்பிட்டது போல, இதனை, இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும். இல்லையெனில், காதர் பாட்சா போன்றோர் வந்து கொண்டே இருப்பார்கள். சில ஆண்டுகள் சிறையில் இருந்து, வெளியே வந்து மறுபடியும் அதே குற்றங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனவே “லவ்-ஜிஹாத்” பிரச்சினை இப்பொழுது கேரளாவில் நிதர்சனமாகி பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இனி, “திருமண-ஜிஹாத்” என்பதும் உருவாகி விட்டது போலும்! அதாவது, திருமணம் மதம் மாற்றுவது, செய்து கொள்வது, குழந்தைகளைப் பெற்றெடுப்பது, நகை-பணம் எடுத்துக் கொண்டு / மிரட்டி வாங்கிக் கொண்டு ஓடிவிடுவது என்ற முறையில் செயல்படுவதைத் தடுக்க வேண்டும். பெண்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[2] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[3]  http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

திசெம்பர் 20, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

Faizul complaintant getting undue publicity.2இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[1]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[2]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[3]

Faizul complaintant getting undue publicityநடிகை  ரா தா  திடீர்  பல்டி:   தொழிலதிபர் மீதான  வழக்கு வாபஸ்: எல்லா தமிழ் நாளிதழ்களும், மிகச்சிறிய மாற்றத்துடன், இந்த செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளன. 18-12-2-13 அன்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார் என்று தினமலர் கூறுகிறது[4]. கையோடு கொண்டு வந்திருந்த மனுவை அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்தார் என்று மாலைமலர் கூறுகிறது.  தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்[5]. எனினும் அவர் வந்துள்ளது உண்மைதான் என்று தெரிகிறது, மனு கொடுக்கப்பட்டதும் நிஜமே.  மற்ற விசயங்களில் ஊடகங்களில் சட்டமேதைகள் போன்று விவாதிப்பார்கள். ஆனால், இப்பொழுது, அதை போலீசாரிடமே விட்டு விட்டார்கள் போலிருக்கிறது!

Faizul complaint by drug trafficking arrested affectedவடபழனி போலீசார் நிலை: இதே ராதா வடபழனி இன்ஸ்பெக்டர் பைசூலுக்கு ஆதரவாக வேலை செய்வதால், வழக்கை வேறு அதிகாரிக்கு / போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்ற வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அப்பொழுது போலீசார் மிகவும் கடுப்பாகி விட்டனர். அதனால் இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும்[6], இதை கோர்ட்டில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்[7]. அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்[8]. நடிகை ராதாவின் இந்த திடீர் முடிவு போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், ஊடகக்காரர்களுக்கு வேடிக்கையாக இருந்தது போலும்! மற்ற நெரங்களில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், காத்து நிற்பதைப் போல 18-12-2013 அன்று ஊடகக்காரர்கள் நிற்கவில்லை போலும்!!

போலீசார்  விசாரணையைத்  தொடருவார்களா  அல்லது  விட்டு  விடுவார்களா?: தொழிலதிபர் பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா இதுபோல் திடீரென்று புகாரை வாபஸ் வாங்கி பல்டி அடித்து இருப்பது ஏன்? அதில் உள்ள மர்மம் என்ன? ராதாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்தும், இதன் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்[9].   இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்[10].  இருப்பினும், புகார் கொடுத்தவரே, வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளதில் சட்டநிலைனை என்ன என்ற கேளிவியும் எழுகின்றது. போதை மருந்து கடத்தல், வேலை வாங்கித் தருவதாக ஆட்களை ஏமாற்றுதல், பெண்ணின் மீதே பலருடன் வாழ்ந்தவள், ஆதாரங்களை வெளியிடுவேன் என்றெல்லாம் பேட்டிக் கொடுத்துள்ள நிலை, ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக ஊடகங்களில் அளவிற்கு அதிகமாகவே வந்துவிட்ட நிலையில் போலீசார் சும்மா இருக்க முடியுமா?

பர்வீன்பைசூல்  அல்லது   ராதாஷ்யாம்  சமரசம்  செய்து  கொண்டனரா?: ராதா வழக்கை வாபஸ் பெற்றார்[11] என்பதை தவிர, பர்வீன்-பைசூல் அல்லது ராதா-ஷ்யாம் சமரசம் செய்து கொண்டதைப் போல, ஆங்கிலத்தில் சில இணைதளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Actress Radha Got Compromised[12]
Radha accused Faizul of blackmailing her to reveal their intimate photos and videos. She also made statements like the Police is not helping her and acting against her to help Faizul. Now the scene has completely changed. As a development, she reportedly has withdrawn the complaint and got compromised with Faizul.
நடிகைராதாசமரசம் நடிகை ராதா பைசூல் மீது, தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தார். போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாக பைசூலுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தார்.

ஆனால், காட்சி இப்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. இப்பொழுது பைசூல் மீது கொடுக்கப்பட்ட புகார் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், இதனால் பைசூலிடம் சமாசம் செஹ்ய்து கொண்டதாகவும் தெரிகிறது[13]. இதே மாதிரி மரியம் பீவி கொடுத்த புகார்[14], அக்ரம் கான் ஆட்கள் மிரட்டுகிறார்கள் என்றது[15] மற்றும் அக்பர் பாஷா கொடுத்த புகாரும் வாபஸ் பெற்றால், போதை மருந்து கடத்தல் முதலிய விவகாரங்களும் மறைக்கப்படுமா?

பைசூல்  எனது  கணவர்  தானே  என்றால்,   திருமணம்  இல்லாமலேயே  அந்த   அந்தஸ்து  எப்படி  கிடைக்கிறது?: ராதாவின் திடீர் பல்டி மற்றும் புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து கருத்து கேட்பதற்காக நடிகை ராதாவிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர்[16]. அப்போது நடிகை ராதா, “ எது எப்படியோ  பைசூல் எனது கணவர்தானே, ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன். ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் இல்லை[17]. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்”, என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்[18]. சரி, பிறகு வீட்டிற்கு நேராகச் சென்று பேட்டிக் கண்டு, விவரங்களை வெளியிட்டிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை.

பைசூல்எனதுகணவர்தானேஎன்றால், திருமணம்எப்பொழுதுநடந்தது?: அந்தர் பல்டி, வழக்கு வாபஸ் என்று தான், நமது சூரப்புலி ஊடகவீரர்கள் எழுதுகிறார்களே தவிர, திடீரென்று பைசூலுக்கு பர்வீன் எப்படி மனைவி ஆனாள் என்பது குறித்து ஒன்றும் யோசிக்கவில்லை போலிருக்கிறது. நித்தியானந்தா விசயத்தில் அப்படி குதித்த ஊடகக்காரடர்கள் இதை அப்படியே அமுக்கப் பார்க்கிறார்களா? லெனின் போன்ற வீராதி வீரர்கள் படுக்கை அறைக் காட்சிகளை வீடியோ பிடிப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே? பிறகெப்படி அமைதி காக்கிறார்கள். ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக செய்திகளை வெளியிட்ட போது, எந்த பெண்ணிய வீராங்கனைகளும் இதைப் பற்றி கேட்கவில்லையே? ஆணுக்கும்-பெண்ணுக்கும் சண்டை வரலாம், ஆனால், அந்தரங்க படுக்கை விசயங்களை ஒரு ஆண் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறான் என்றால், அது எந்தவிதமான கலாச்சாரம், நாகரிகம் என்று எந்த தமிழ்-தெலிங்கு உணர்வுள்ள, இனமான ரோஷமுள்ள எவனும் கேட்கவில்லையே? ஏனிந்த மௌனம் அல்லது பாரபட்சம் அல்லது மறைப்பு?

பர்வீன்பைசூல்  அல்லது  ராதாஷ்யாம்  விவகாரங்களில்  பல  உண்மைகள்   மறைக்கப்படுகின்றன: கீழ் குறிப்பிட்டுள்ள விசயங்களில் பல கேள்விகள் எழும்புகின்றன:

  1. ஒரு பெண் இன்னொரு ஆணுடன் திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்டுறஆறுவருடம் வாழ்ந்தது.
  2. கருவுற்றபோது, அபார்ஷண் செய்து கொண்டது, அதற்கான சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டது.
  3. ஆண் அவ்வாறான படுக்கைக் காட்சிகளை, பெண்ணுக்குத் தெரியாமல் போட்டோ-வீடியோ எடுத்து வைத்துக் கொண்டது.
  4. ஒரு நாள் அப்பெண் இதனை அறிந்து ஏன் எடுத்தீர்கள், என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் அதனைப் பார்த்து ரசிப்பதற்கு என்றது.
  5. பெண் ஆணை தன்னை ஏமாற்றி விட்டான் என்று புகார் கொடுத்தது.
  6. தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தது.
  7. ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டார் என்றும் பெண் புகார் கொடுத்தது.
  8. ஆண் பல பெண்களுடன் / நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு கொண்டுள்ளார் என்றது.
  9. ஆண் பதிலுக்கு பெண்ணின் அந்தரங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியது.
  10. பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது என்று அந்த ஆண் பேசியது.
  11. ஆணின் தங்கை, அப்பெண் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்தது.
  12. அப்பெண் போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாராணுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தது.
  13. இன்னொரு ஆள், அந்த ஆண் தன்னை போதை மருந்து கடத்தலில் மாட்டி விட்டார் என்று புகார் கொடுத்தது.
  14. மூன்று முறை முன் ஜாமீன் பெற மனு போட்டது.
  15. மூன்று முறையும்முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
  16. அந்த ஆணை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றது.
  17. ஆனால், இப்பொழுது, பெண் மட்டும் புகாரை வாபஸ் பெற்றுள்ளது.
  18. குறிப்பாக, இப்புகாரணனைத்துப் பெண் பொலீஸ் நிலையத்தில் கொடுக்கப் பட்டுள்ளதால், புகாரை முடித்துவிட முடியுமா?
  19. ஏற்கெனவே கோர்ட்டில் சென்றுள்ள வழக்குகள் என்னவாகும்?
  20. மேலாக, இதனை எந்த பெண் இயக்கமும், மனித உரிமைகள் என்றெல்லாம் பேசும் இயக்கங்களும் ஏன் கண்டுகொள்ளவில்லை.

வேதபிரகாஷ்

© 20-12-2013


[4] தினமலர், சென்னை பதிப்பு,

[5] மாலைமலர், நடிகைராதாதிடீர்பல்டி: தொழிலதிபர்மீதானவழக்கைவாபஸ்பெற்றார், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2:57 AM IST; மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 3:25 AM IST

[11] Actress Radha has suddenly withdrawn the case against entrepreneur Faizul. Police are conducting a new investigation on what is the mystery in her sudden decision. She who starred in “Sundara Travels” film lodged a complaint at Commissioner Office stating, Faizul of Triplicane had lived with her for 6 years as husband, cheated her Rs.50 lakh of money and also threatened her that he would make her private videos public. Vadapalani all-women police registered a complaint and began investigation.  In order to refrain arrest Faizul filed anticipatory bail petition 3 times which was dismissed by the court. In this situation, actress Radha challenged that she would see Faizul jailed. Meanwhile, actress Radha came to Vadapalani all-women police station yesterday and said she would withdraw the case against Faizul. While speaking to the reporter over phone she said, she was not willing to make her husband run around. However, police are investigating on the reason for her sudden change. http://indiaeng.tamil4.com/view.php?view=9000

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

PAK-election women - 42 percentபலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?

PAK-election women canvass2பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

PAK-election women canvassing

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

PAK-election women voters

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].

PPP celebrate 2008 elections danceபாகிஸ்தானில்தேர்தல்திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

PPP celebrate 2008 elections

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

Ghous Ali Sha - cartoon Pak-ele-2013

© வேதபிரகாஷ்

11-05-2013


[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.