Archive for the ‘பாவத் தடுப்பு’ category

சானியா திருமணம் – படங்கள்!

ஏப்ரல் 13, 2010

சானியா திருமணம் – படங்கள்!

மணமகள் அழைத்துச் செல்லப் படுகிறாள்

மணமகள் அழைத்துச் செல்லப் படுகிறாள்

திருமணத்திற்காக மணமகள் அலங்கரிக்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுகிறாள்.

மாப்பிள்ளை சடங்கு

மாப்பிள்ளை சடங்கு

மாமனார் ஒப்புதல் அளிக்கிறார்.

மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!

மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!

சோயப் சானியாவிற்கு மோதிரம் அணிவித்தார். ஆமாம், அந்த கருமணி மாலையும் அவர்தான் அணிவித்தாரா?

பெண்ணை வாழ்த்துதல்

பெண்ணை வாழ்த்துதல்

மணமகள் ஆசிர்வதிக்கப் படுகிறாள்.

மணமகன் வாழ்த்தப்படுதல்

மணமகன் வாழ்த்தப்படுதல்

மணமகனும் வாழ்த்தப்படுகிறான்.

மகிழ்ச்சியான நேரம்

மகிழ்ச்சியான நேரம்

தோழி கிண்டல் செய்கிறாரா?

ஜோடியாக நிற்கிறார்கள்

ஜோடியாக நிற்கிறார்கள்

மணமகன், மணமகள் ஜோடியாக நிற்கிறார்கள்

குடும்பதுடன் ஃபோட்டோ

குடும்பதுடன் ஃபோட்டோ

குடும்பத்துடன் புகைப்படம்!

ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்

ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்

சானியா திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்து விட்டது!

பாவம் இந்தியர்கள்

பாவம் இந்தியர்கள்

பாவம் இந்தியர்கள் – எட்டித்தான் பார்க்கமுடியும் போல இருக்கிறது! பார்த்தாலும் என்னத் தெரியும்?

சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?

சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?

அதாவது, இங்கு சானியா என்ற தனிப்பட்ட நபரைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், அப்பெண்ணை வைதுக் கொண்டு பலவிதமாக ஊடகங்கள், மற்றவர்கள், ஏன் அந்நிய சக்திகளும் விளையோடும் போதுதான் இந்தியர்களுக்கும் கவையாக இருக்கிறது.

இதற்கு, பால் தாக்கரேயும், பிரமோத் முத்தாலிக்கும்…………………..யாரும் தேவையில்லை.

ஆமாம் நம் சன் – டிவிக்காரகள் ஏன் அமைதியாக இருந்துவிட்டார்கள்?

அவர்களது “நிஜம்”, “பூதக் கண்ணாடி” கூட்டங்கள் எல்லாம் தூங்கி விட்டனனா அல்லது சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டனவா? இல்லை, அவர்களுக்கும் ஃபத்வா கொடுத்துவிட்டார்களா?

நிக்காஹ் 15ம் தேதி வைத்திருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக முன் கூட்டியே நடத்தி விடுவது என்று ஞாயிற்றுக்கிழமை திர்மானிக்கப் பட்டது. அன்றுதான் சுன்னி உலேமா வாரியமும் ஃபத்வா கொடுத்தது. ஆகவே முன்னதாக நடத்தி விட்டால் எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது.

ஆகவே மெஹந்தி 14ம் தேதி, வரவேற்பு 15ம் தேதி என்று குறிப்பிட்டபடி நடக்கும். ஆகவே மற்ற சடங்குகளிக்கு முன்பாகவே நிக்காஹ் நடந்ததே பாரம்பரியத்திலிருந்து மிகவும் விலகியே நடந்ததுள்ளது கண்டு பெரியவர்கள் குறை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாது மெஹந்தி செய்வது இஸ்லாமிய வழக்கம் இல்லையென்றலும், முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படியே மெஹந்தி வைத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு முந்தைய நாளில் தான் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்லப் பட்டது.

நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்தவனுக்கு மரண தண்டனை!

மார்ச் 30, 2010

நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்தவனுக்கு மரண தண்டனை!

ஒரு சவுதி மந்திரவாதி!

பெண்களை மந்திரத்தாலே வசியப் படுத்துவதில் வல்லவனாம்!

அவ்வாறே அவன் வசியப் படுத்தி நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்து விட்டானம்!

ஒரு பத்திரிக்கை சொல்வதென்னவென்றால், “காதிஃப் மந்திரவாதி” (the “Qatif sorcerer”) முதலில் பத்தாண்டு சிறைவாசம் மற்றும் 1000 கசையடி என்று தண்டனை அளிக்கப் பட்டதாம். பிறகு அது மரண தண்டனையாக மாற்றப் பட்டதாம்!

அல்-ரியாத் நாளிதழ் சொல்வதவது, அந்த அடையாளம் தெரியாத மனிதன் காதிஃப் என்ற கிழக்கு நகரத்தில் இருந்து பெண்களை பல ஆண்டுகளாக மிரட்டி பயமுறுத்தி வந்தானாம்.

முதலில் எந்த பெண்ணவது “காதல் மந்திரத்தால் கட்டுப் பட்டிருந்தால்”, அக்கட்டை பிரித்துவிடுவேன் என்று ஆசைக்காட்டுவானாம். அப்படி அவர்கள் – காதல் கட்டுண்ட பெண்கள், தங்களது “காதல்-மந்திர-கட்டை” அவிழ்க்க வரும்போது, இவன் அவிழ்த்து லீலைகள் புரிவானாம். அதுமட்டும் அல்லாது நமது லெனின் குருப் / குருப் லெனின் மாதிரி திருட்டுத் தனமாக வீடியோவையும் எடுத்து விடுவானாம்!

பிறகு அதை தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்னிடம் காட்டி மிரட்டி தனக்கு தன்னுடைய “மந்திரத் தொழிலில்” உதவுமாறு வற்புறுத்துவானாம். அதாவது அப்படியே மற்ற பெண்களை அங்கு அழைத்து வருவது, இவன் கற்பழிப்பது என்று உதவி செய்யத் தூண்டி மிரட்டுவானாம், அவர்களும் பயந்து கொண்டு அவ்வாறே செய்து வந்தார்களாம், அதாவது பெண்களை அழைத்து வந்து, இந்த காமுகனிடம் மாட்டி வைத்து கற்பழிக்க தோதுவாக இருந்தார்களாம்.

அரபு நியூஸ் சொல்வதென்னவென்றால், அவன் பல கேமராக்களை அவ்வாறு மறைத்து வைத்துள்ளதாகவும், 200ற்கும் மேலாக அத்தகைய கலவி-சரச வீடியோ டேப்புகள், 180 கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்களின் விவரங்கள் முதலியவற்றை தன்னுடையா வீட்டில் வைத்திருந்தானாம். [நல்ல வேளை நம்மூர் ஆட்களாக இருந்தால் அதை ரூ. 500/- என்று போட்டு விற்றிருப்பார்கள், பாவம், நக்கீரன் ஜொல்லுவிடுவதும், சன் –  டிவி மூச்சு விடுவதும் தெரிகிறது / கேட்கிறது].

அல்-ரியாத் சொல்வதாவது, அவன் அவ்வாறு 350 மேலாக பல பெண்களை மயக்கியிருப்பான்

கடைசியாக அவன் ஒருவனிடத்தில் மாட்டிக் கொண்டானாம். அதாவது ஒரு பெண் அவனிடத்தில் அகப்பட்டு தப்பி வந்தபோது, அவள் சொன்ன விஷயம் வைத்துக் கொண்டு அவன் பிடிக்கப்பட்டானாம். இவ்வழக்கு சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷனிடத்தில் அனுப்பப் பட்டுள்ளதாம்.

சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் என்பது சவுதி மத-போலீஸார் ஆவார்கள்! அதாவது மததைக் காக்கு  போலீஸார்!

இந்தியாவிற்கும் இத்தகைய போலீஸார் இன்று தேவைப் படுகின்றனர்!