Archive for the ‘பாலியல் அடிமை’ category

குதுபுதீன் நஜீம்– பள்ளி தாளாளரின் பாலியல் பிரச்சினை, மாணவிகள் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தது, விவகாரம் வெளிப்பட்டு கைதானது!

பிப்ரவரி 6, 2023

குதுபுதீன் நஜீம் – பள்ளி தாளாளரின் பாலியல் பிரச்சினை, மாணவிகள் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தது, விவகாரம் வெளிப்பட்டு கைதானது!

செக்யூலரிஸ பாலியல் பிரச்சினை, மதசார்பற்ற விவகாரங்கள், அணுகும் முறை: பள்ளிகளில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக நடந்தேறி வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பொதுவாக சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி செய்திகள் வெளிவருவதில்லை. சென்ற வருடம், இத்தகைய இரச்சினை பற்றி தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. ஆனால், சிறுபான்மையினர் பள்ளிகளின் பாலியல் விவகாரங்கள் மறைக்கப் பட்டன. பிறகு, செக்யூலரிஸத் தனமாக, ஒன்று கிருத்துவப் பள்ளி, இன்னொன்று முஸ்லிம் பள்ளி என்று செய்தி வெளியிடப் பட்டு, பாலியல் குற்ற வழக்குகள் அமைதியாகி விட்டன. “சிவசங்கர் பாபா” போன்று துப்பறிய நக்கீரனும் குதிக்கவில்லை, துடிக்கவில்லை. இப்பொழுது, இன்னொரு வழக்கு செய்தியாக வருகிறது.

900 மாணவிகள் படித்துவரும் பள்ளியில் தாளாளரின் பாலியல் அத்துமீறல்: நெல்லையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பள்ளியின் தாளாளரே பாலியல் தொல்லை கொடுத்ததும் அதற்குத் துணையாக அவரின் மனைவியும் பள்ளித் தலைமை ஆசிரியையும் இருந்தது தெரியவந்திருக்கிறது. ஆக, திட்டமிட்டு, கூட்டாகத்தான் இந்த பாலியல் தொல்லை, செக்ஸ் குற்றம் அரங்கேற பெண்களே துணையாக இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. நெல்லை மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் செல்கிற சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டுவருகிறது[1]. 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள அந்தப் பள்ளியில் 900 மாணவிகள் படித்துவருகிறார்கள்[2]. பள்ளியின் தாளாளராக குதுபுதீன் நஜீம் (47) என்பவர் இருக்கிறார்[3]. பள்ளியில் தலைமை ஆசிரியையாக காதரம்மாள் பீவி (57) பணியாற்றி வருகிறார்[4]. இந்தப் பள்ளியின் தாளாளர் குதுபுதீன் நஜீம், தனது அறைக்கு மாணவிகளை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்திருக்கிறார்[5]. பிறகு, மாணவிகள் ஏன், எதற்கு சென்றனர் என்று ஊடகங்கள் விவரிக்கவில்லை.

04-02-2023 அன்று விவகாரம் வெளிவந்தது: இரு தினங்களுக்கு முன்பு 04-02-2023 அன்று வழக்கம்போல குதுபுதீன் நஜீம் தனது அறைக்கு மூன்று மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்[6]. அதனால் அச்சம் அடைந்த மாணவிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததுடன், நடந்த விவரங்களை சக மாணவிகளிடம் சொல்லி அழுதிருக்கின்றனர்[7]. “அச்சம்” அடையும் நிலைக்கு, உச்சத்திற்கு அப்படி செய்தார் என்று தெரியவில்லை. அதாவது, இப்பொழுது இவ்விவகாரம் வெளிப்பட்டு விட்டது என்றாகி விட்டது. அறையிலிருந்து தப்பி ஓடும் அளவுக்கு அந்த காமுகன் அறைக்குள் என்னமோ செய்திருக்கிறான். அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், பள்ளிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்[8]. மேலும், பாலியல் தொந்தரவு சம்பவம் மூன்று மாதங்களாக நடந்ததாகவும் தகவல்கள் கசிகின்றன, என்று விகடன் கூறுகின்றது. பிறகு, மூன்று மாதங்களாக, ஏன் அமைதி காக்க வேண்டும், விசயங்கள் வெளிவராமல் இருக்க வேண்டும் என்று புரியவில்லை.

இஸ்லாமிய அமைப்பினரும் மாணவிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது: தகவலறிந்து வந்த பெற்றோர், இஸ்லாமிய அமைப்பினரும் மாணவிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது[9]. “இஸ்லாமிய அமைப்பினரும் மாணவிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது,” என்று குறிப்பிடப் பட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது. அதாவது, சிறுபான்மையினர், மைனாரிட்டி, முஸ்லிம்கள் என்றால், “நமக்கு எதற்கு பிரச்சினை, வம்பு……,” அல்லது, தாக்கப் படலாம்………………………போன்ற அச்சமும் உருவாகும் தன்மை அறியப் படுகிறது. இதனால், போலீஸாரும் மற்றவர்களும் கூட கண்டுகொள்ளாமல் இருக்கும் போக்கு காணப் படுகிறது. இப்பொழுது, “வடக்கன், வடக்கத்தியர்……” என்றெல்லாம் பாகுபாடு பார்க்கப் படுகிறது, அவ்ர்களால் தான் பிரச்சினை, குற்றங்கள் என்ற நிலையில் விமர்சிக்கும் போக்கு, செய்தி வெளியிடல் போன்றவையும் சகஜமாகி விட்டது. ஆனால், பாலியல் குற்றங்கள் என்று வந்தால், “பத்மா சேஷாத்ரி” போன்ற வேகம், தீவிரம், துப்பறியும் தன்மை எல்லாம் வருவதில்லை, அப்படியே அடங்கி விடுகிறது. ஏதாவது, ஒரே ஒரு செய்தி இப்படி வெளிவந்து விட்டால், அதை மட்டும் பி.டி.ஐ பாணியில், அப்படியே போட்டு அடங்கி விடுவர். பிறகு, என்னவாயிற்று என்று கண்டுகொள்வதில்லை.

முதலில் பேச்சு வார்த்தை நடந்தது: சம்பவ இடம் வந்த மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் உள்ளிட்டோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[10]. அதனை ஏற்று பொதுமக்கள், முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். ஆக, அத்தனை அதிகாரிகள் வரவேண்டியுள்ளது போலும். உடனடியாக அங்கு சென்ற மேலப்பாளையம் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். கல்வித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து அமைதியை ஏற்படுத்தினர்.

பிறகு முறையாக போலீஸாரிடம் புகார் கொடுத்தது: இந்த நிலையில், பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் புகாரளித்தனர். அதாவது சட்டப் படி நடவரிக்கை எடுக்க வேண்டிய முறை ஆரம்பிக்கப் பட்டது என்று தெரிகிறது. எனெனில், எங்களூகு எந்த புகாரும் வரவில்லை என்று போலீஸார் சொல்லலாம். மூன்று மாதங்கள் அவ்வாறே காலம் கடந்திருக்கலாம். இப்பொழுது, புகார் கொடுத்த பட்சத்தில், அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, போலீஸார் மாணவிகளிடமும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதாவது, விசாரணையே இப்பொழுது தான் ஆரம்பிக்கப் படுகிறது. அதில் பள்ளித் தாளாளர் குதுபுதீன் நஜீம், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது, என்று ஒரே வரியில் செய்தி முடிகிறது, அல்லது முடிக்கப் படுகிறது. அந்த விவரங்களும் கொடுக்கப் படவில்லை. .

05-02-2023 அன்று கைது செய்யப் படுவது: இது தொடர்பாக மாணவிகள் சிலர் ஏற்கெனவே பள்ளித் தலைமையாசிரியை காதரம்மாள் பீவியிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. அவரும் தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா ஆகியோர், தாளாளர்மீது புகார் தெரிவித்த மாணவிகளை அழைத்து பாடங்களில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள்[11]. இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியிருக்கின்றனர்[12]. இதெல்லாம் மாணவிகளை எந்த அளவுக்கு, மனரீதியில் மிரட்டப் பட்டு, கட்டுப் படுத்தி வைக்கப் பட்டுள்ளனர் என்பதனை காட்டுகிறது. இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[13]. அதனால் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தாளாளர் உள்ளிட்ட மூவரையும் போக்சோ சட்டத்தில் 05-05-2023 அன்று கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர்[14]. எனவே, இனி மேல் என்ன நடக்கும் என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

05-02-2023.


[1] நக்கீரன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தாளாளர் உள்பட மூவர் கைது, ப.ராம்குமார், Published on 06/02/2023 (16:06) | Edited on 06/02/2023 (16:45)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/3-people-including-school-principal-nellai-were-arrested-by-pocso

[3] நக்கீரன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; மூவர் போக்சோவில் கைது , நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 06/02/2023 (13:11) | Edited on 06/02/2023 (13:29).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tirunelveli-melapalayam-government-aided-school-incident

[5] தமிழ்.இந்து,  திருநெல்வேலி | பாலியல் புகாரில் பள்ளி தாளாளர் கைது, செய்திப்பிரிவு, Published : 06 Feb 2023 06:35 AM; Last Updated : 06 Feb 2023 06:35 AM.

[6] https://www.hindutamil.in/news/crime/939639-school-principal-arrested.html

[7] சமயம், நெல்லையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; முதல்வர், தாளாளர் உட்பட 3 பேர் கைது..!, Authored by திவாகர் மேத்யூ | Samayam Tamil | Updated: 5 Feb 2023, 3:00 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/crime/3-persons-including-the-principal-were-arrested-in-the-case-of-sexual-harassment-of-schoolgirls-in-nellai/articleshow/97621351.cms

[9] மாலைமலர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் கைது, By Maalaimalar, 5 பிப்ரவரி 2023 11:04 AM

[10] https://www.maalaimalar.com/news/district/tamil-news-harassment-case-school-principal-arrested-568756

[11] தினமணி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:பள்ளித் தாளாளா் உள்பட மூவா் கைது, By DIN  |   Published On : 06th February 2023 07:12 AM  |   Last Updated : 06th February 2023 07:12 AM

[12] https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2023/feb/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3996171.html

[13] விகடன், நெல்லை: பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர்; உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைகைதான மூவர்!, பி.ஆண்டனிராஜ், Published: Today 06-02-2023 at 9 AM; Updated:Today at 9 AM.

[14] https://www.vikatan.com/news/crime/three-persons-arrested-including-a-school-correspondent-for-sexual-harassment

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது!

ஜூன் 23, 2021

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் கைது!

அரசு உதவிபெறும் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்[1]. இந்த நிலையில் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஹபீப் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது[2]. பள்ளியில் படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் பேசி புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார்[3]. ஒருவேளை அப்படி வர மறுத்தால், ’உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது[4]. இதுபோல பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்துள்ளதாகவும் அதுபோல் நீயும் வரவேண்டுமென்று ஒரு மாணவியுடன் ஆசிரியர் ஹபீப் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது[5].அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரிடம், அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசும் ஒலிப்பதிவு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது[6].

Modus operandi – குற்றம் செயல் படுத்தும் திட்டம்: ஹபீப் விவகாரத்தில், பாலியல் தொல்லை, செக்ஸ் சதாய்ப்பு, காம-வன்முறை என்றெல்லாம் இருக்கும் அதீத நிலைகள் நேரிடையாகவே வேலை செய்துள்ளன. மாணவிகளுக்கு, “புத்தகத்தை எடுத்துக் கொண்டு …… வீட்டிற்கு வா….உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்…..,” என்றதிலிருந்து, ஏற்கெனவே ஒரு மாணவி, அவ்வாறு பாதிக்கப் பட்டிருப்பது தெரிகிறது. அதை வைத்துத் தான்,  “உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்,” என்று மிரட்டியிருப்பது தெரிகிறது. செய்ஹியை வைத்து தான், அலச முடியும், ஆனால், அதிகாரிகள், “சிவ சங்கர் பாபா விவகாரம்,” போல, விமானங்களில் பறந்து, தேடி-தேடி விவகாரங்களை, “ஜேம்ஸ் பாண்ட்” கணக்கில் 24 x 7 விதத்தில் வேலைசெய்யலாம், உடனுக்கு உடன் மாலை முரசு, தினகரன் போன்ற நாளிதழ்களில் செய்திகள் வரலாம், “நக்கீரனை” சொல்ல வேண்டாம், இத்தகைய விவகாரங்கள் எல்லாம், அல்வா, பால்கோவா போல. வெளுத்து வாங்கி விடும். விசேஷ பதிப்பு போட்டு, காசை அள்ளும். தமிழக மக்களுக்கு, விவகாரங்களை படங்கள் போட்டு காட்ட வேண்டும்., அவ்வளவு தான்.

பாதிக்கப் பட்ட புகார் கொடுத்ததால் நடவடிக்கை: வாட்ஸ்-அப் பரவல், அடிப்படையில், மாவட்ட எஸ்பி கார்த்திக் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாணவியின் தரப்பிலும் முதுகுளத்தூர் போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து, கூடுதல் எஸ்பி லயோலா இக்னேஷியஸ் தலைமையில் விசாரணை நடந்தது. இதில், அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியரான முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஹபீப் முகம்மது (36) என்பவர் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியுள்ளார். அப்போது மாணவிகளின் மொபைல் எண்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார். அதில் தனது பள்ளி மாணவி ஒருவரிடம் அவர் ஆபாசமாக பேசி தொல்லை தந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், ஹபீப் முகம்மது மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்[7]. வேறு மாணவிகளிடமும் இவர் தவறாகப் பேசியுள்ளாரா, பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என விசாரிக்கின்றனர்[8]. தமிழ் இந்து, வழக்கம் போல, இத்துடன் நிறுத்திக் கொண்டது!

ஹபீப் கைது: பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரர் ரவி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் விசாரணையை அடுத்து ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார், என்று பிறகு செய்திகள் வந்தன. மாஜிஸ்ட்ர்ரெட்டிடம் கூட்டிச் சென்றனர், அவர் காவலில் வைக்க ஆணையிட்டார், அதன் ப்டி கைது செய்தனர், சிறயில் அடைத்தனர் போன்ற செய்திகள் இல்ல. ஒரே வரிதான், “கைது”! ஹபீப் யார், அவனது பின்னணி என்ன, இது மாதிரி எத்தனை மாணவிகளுக்கு, எவ்வளவு ஆண்டுகளாகபாலியல் தொல்லைக் கொடுத்துள்ளான், ப்புத்தகட்டை எடுத்து வீட்டு வா என்று கூப்பிட்டுள்ளான் போன்ற விவகாரங்களை வெளியிடவில்லை!

ஊடக விவகாரங்களின் வர்ணனைகளில் செக்யூலரிஸம்: தினமணியில் வந்த செய்தியை, மற்ற தளங்கள், வெவ்வேறு தலைப்புகளில், அப்படியே “பி.டி.ஐ-செய்தி”பாணியில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த தலைப்பிற்கும் உள்ளே உள்ள செய்திக்கும் ஏற்றபடி எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. PSBB, Sushihari Inrernational School போன்று விவரங்கள், வர்ணனைகள், ரன்னிங் கமின்ட்ரிகள் எல்லாம் இல்லை. தலைப்புகளுடன் சரி.படுக்கைக்கு கூப்பிட்ட ஆசிரியர்…. பாடம் புகட்டிய மாணவி…. பரபரப்பு…..!!!!,”- இப்படி ஒரு செய்தி![9] ஆனால், வெளியிட்டுள்ள்சது இவ்வளவு தான்[10], “தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது வீட்டிற்கு வந்து உடல் ரீதியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெற விடாமல் செய்துவிடுவேன் என்று ஆசிரியர் போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாணவி தந்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்”. வழக்கம் போல, தமிழ்.ஒன்.இந்தியா, “வீட்டுக்கு வாஇல்லாட்டி பெயில்தான்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது,” என்றுள்ளது[11]. உள்ளே விவரம் அதே தான்[12].

பள்ளிப் பாலியல் செக்யூலரிஸ கைதுகளா? அல்லது தொடர்ச்சியான நடவடிக்கைகளா?: கிறிஸ்தவ பள்ளியில் ஆரம்பித்து, இந்து பள்ளிகளில் அதிகமாக ஆரார்ச்சி செய்து, செய்திகளை தினம்-தினம் போட்டு, அதிரடிகள் செய்து, இப்பொழுது, செக்யூலரிஸமாக, முஸ்லிம் பள்ளியில் வந்து, இந்த பாலியல் விவகாரம் முடிந்துள்ளாதா, அல்லது தொடருமா என்று பார்க்க வேண்டும். இல்லை, தமிழ்நாடு அரசு பள்ளி என்பதால், மதுரை பள்ளி விவகாரம் போல, அமுக்கி வாசித்து, மறக்கப் படுமா என்றும் பார்க்க வேண்டும். பள்ளிப் பாலியல் செக்யூலரிஸ கைதுகளா? அல்லது தொடர்ச்சியான நடவடிக்கைகளா?, இவை தொடருமா, இல்லை ஒரு நிலையில் கிடப்பில் போடப் படுமா? என்றும் கவனிக்க வேண்டும். சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம் என்றால், செய்திகள்-ஆர்பாட்டங்களும், டிவி-விவாதங்கள்-அலசல்களும் அவ்வாறே இருக்க வேண்டும். இருக்குமா என்று பார்ப்போம்!

© வேதபிரகாஷ்

23-06-2021


[1] தினமணி, முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது, By DIN  |   Published on : 22nd June 2021 05:40 PM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2021/jun/22/sexual-harassment-of-school-girls-in-muthukulathur-teacher-arrested-3646531.html

[3] புதியதலைமுறை, வீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொல்லை: மாணவியுடன் பேசிய ஆடியோ வெளியாகி ஆசிரியர் கைது, Web Team Published :22,Jun 2021 07:11 PM.

[4] http://www.puthiyathalaimurai.com/newsview/107273/Continuous-declining-in-Tamil-Nadu-COVID19-Cases-and-6895-people-have-been-confirmed-for-infection-in-the-last-24-hour.html

[5] NEWS18 TAMIL, புக் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வா.. இல்லைன்னா மார்க் போட மாட்டேன்’- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், LAST UPDATED : JUNE 22, 2021, 18:57 IST.

[6] https://tamil.news18.com/news/tamil-nadu/ramanathapuram-district-school-teacher-misbehaving-with-student-audio-released-by-student-hrp-487251.html

[7] தமிழ்.இந்து, மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்ஸோவில் கைது, செய்திப்பிரிவு, Published : 23 Jun 2021 03:12 AM; Last Updated : 23 Jun 2021 03:12 AM.

[8] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/685230-.html

[9] செய்தி.சோலை, படுக்கைக்கு கூப்பிட்ட ஆசிரியர்…. பாடம் புகட்டிய மாணவி…. பரபரப்பு…..!!!!, Nanthini Nandi, June 22, 2021 .

[10]https://www.seithisolai.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A.php

[11] தமிழ்.ஒன்.இந்தியா, வீட்டுக்கு வாஇல்லாட்டி பெயில்தான்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது, By Jeyalakshmi C | Updated: Tuesday, June 22, 2021, 21:46 [IST].

[12] https://tamil.oneindia.com/news/ramanathapuram/private-school-teacher-held-under-pocso-act-in-ramanathapuram-424724.html

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்கு – இந்தியாவில் நிலைப்பாடு என்ன? [2]

ஜூலை 14, 2018

 

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்குஇந்தியாவில் நிலைப்பாடு என்ன? [2]

FMG - India demonstrates-13

செக்யூலரிஸ இந்தியாவில், பெண்கள் பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்றுவது: வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், பெண்ணின் உடலோடு ஒட்டிய பகுதியை மத நடவடிக்கை என்ற பேரில் ஏன் வெட்டி எடுக்க வேண்டும், இத்தகைய நடவடிக்கைகள் பெண்குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை தடுக்கும் போக்ஸா சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தது[1]. இருப்பினும் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. பெண் சுன்னத் நட்டந்து கொண்டுதான்ன் இருக்கிறது. மேலும் தாவூதி போராஹ் வகுப்பினர் மத்தியில் இருந்த இதுபோன்ற பழக்கம் ஏற்கெனவே குற்றம் என்று தடை செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், சுன்னிகள் இதை ஏற்றுக் கொள்ள வாட்டார்கள். இதையடுத்து ஒருவர் பெண்ணுறுப்பு சிதைப்பினை செய்துகொள்ள விரும்பவில்லை எனில், அதை செய்து கொள்ளும்படி யாரும் வற்புறுத்த முடியாது என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்[3]. அவரைத் தொடர்ந்து பேசிய நீதிபதி சந்திரசூட் ஒரு பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா?[4] எனவே, ஜூலை 16 ஆம் தேதிக்குள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, சுகாதாரத்துறை, சமூகநீதித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை ஆகிய நான்கு அமைச்சகங்களும், மஹாராஸ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய நான்கு மாநில அரசுகளும் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது[5].FMG - India demonstrates-12

பெண்ணுறுப்பு அறுப்புபெண்கள் உன்னத்[6]: “ஃபீமேல் ஜெனிட்டல் மியுட்டிலேசன்” [Female Genital Mutilation] என்ற கொடுமைக்கு எதிரான நாளாக பிப்ரவரி-6 -ம் தேதியை 2016, ஐ.நா அறிவித்துள்ளது. ஆனால், பெண்ணிய போராளிகள் எல்லாம் கண்டுகொள்ளவில்லை போலும். ஃபீமேல் ஜெனிட்டல் மியுட்டிலேசன் என்றால் புரியாதவர்களுக்கு தமிழில் விளக்கம் ‘பெண் உறுப்பு சிதைவு’.  படிக்கும் பொழுதே பதற்றத்தை ஏற்படுத்தும் இந்த கொடிய செயல், ஆப்ரிக்க நாடுகளில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இன்று வரை வலுக்கட்டாயமாக நடத்துப்பட்டுவரும் ஒரு புனித சடங்கு என்றால் நம்ப சங்கடமாகத்தான் இருக்கும்[7]. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து, இன்றும் மம்மி களாக பிரமிடுகளுக்குள் இருக்கும் பெண்களுக்கும் இந்த கொடுமை நடந்தேறியுள்ளது. ஆப்ரிக்கா நாடுகளான சோமாலியா, சூடான், எகிப்து, உகாண்டா, கானா, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் பெண்களில், எழுபது சதவீதத்திற்கும் மேல் இப்படி பெண் உறுப்பு சிதைவுக்கு உட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தகவல். அதன் எதிரொலியாகத்தான் ஐ.நா சபை, பெண் உறுப்பு சிதைவிற்கு எதிரான நாளாக பிப்ரவரி-6ம் தேதியை அறிவித்துள்ளதுணப்படியென்றால், 06-02-2016, 06-02-2017 மற்றும் 06-02-2018 நாட்கள் எல்லாம் அமோகமாக கொண்டாடப் பட்டிருக்க வேண்டுமே, ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லையே? கிறிஸ்துவ சமயத்தின் துவக்கத்திற்கு முன்பே, இஸ்லாமிய மதம் ஆப்ரிக்காவை அடைவதற்கு பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது, என்று சையது அபுதாஹிர் எடுத்துக் காட்டினார்.

FMG - India demonstrates-11
பெண் சுன்னத் ஏன் செய்யப்படுகிறது?: பெண் உறுப்பு சிதைவு என்று இன்றைய உலகம் இதற்கு பெயர் சூட்டி இருந்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் கட்டாயமாக்கப்பட்ட இந்த சடங்கிற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் பெண் சுன்னத். அதாவது இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு சுன்னத் என்பது கட்டாயம். அதேபோல் பெண்களின் பிறப்புறுப்பில் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்கு பெயர்தான் பெண் சுன்னத். இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் சுன்னத் உள்ளதென அதன் மதகுருமார்கள் அறிவித்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் அதிகமாக இந்த வழக்கத்தை பின்பற்றுவதும் அதே இஸ்லாமிய சமூகம்தான். “பெண்கள் சைத்தானின் வடிவங்கள் என்று புனித நுால்கள் சொல்லியுள்ளது. அவர்களுக்கு பாலுணர்வு மட்டுமே இருக்கும். அந்த பாலுணர்வை கட்டுப்படுத்தி அவர்களை ஒழுக்கமான பெண்ணாக இருக்கச் செய்யத்தான் இந்த செயல்” என்று அர்த்தமற்ற விளக்கத்தை அதற்கு காரணமாக அவர்கள் சொல்கிறார்கள்.

FMG - India demonstrates-10
எப்பொழுது செய்யப்படும்?: இந்த பெண் உறுப்பு சிதைவு என்பதை பெண்கள் பருவம் அடையும் முன்பே செய்துவிட வேண்டும் என்பது இதற்கு எழுதப்படாத விதி. அதாவது ஐந்து வயது முதல் ஏழுவயதிற்குள் இந்த சடங்கை முடித்துவிட வேண்டும். ஓடி விளையாடும் சிறுமியை பிடித்துவந்து வலுக்கட்டாயமாக இந்த செயலை அரகேற்றியபின் தான் அவள் துாய்மையடைந்துவிட்டாள் என்று அந்த சிறுமியின் தாய் பெருமை பேசுவார். பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் “க்ளிட்டோரியஸ்” என்ற பகுதிதான் பெண்ணிற்கான உணர்ச்சி கூறுகள். பெண்ணின் பாலுணர்வு ரீதியான உந்துதலுக்கு இதுதான் முதல் காரணமாக இருக்கின்றது. இதை அறுத்து விட்டால் அந்த பெண்ணிற்கு பாலுணர்வு குன்றிவிடும் என்ற கருத்துதான் இந்த வன்கொடுமைக்கு அடிப்படையாக இருந்துவருகிறது. ஆணுக்கு இப்படி, பெண்ணுக்கு அப்படி எப்படி என்பது எப்படி என்று தெரியவில்லை. இதெல்லாம் உண்மையா-பொய்யா ஏன்ற சோதித்துப் பார்த்தனரா?

FMG - India demonstrates-14
சடங்கு எப்படி செய்யப்படுகிறது?: அறுப்பது என்றால் முறையாக மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுத்து அல்ல; விளையாடி கொண்டிருக்கும் சிறுமியை சாப்பிட அழைப்பது போல் “இங்கே வா” என்று அழைத்து, நடக்கப் போகும் கொடுமையை அந்த சிறுமி பார்க்க கூடாது என்பதற்காக அந்த பெண்ணின் கண்ணை பொத்தி, அவளை இருட்டு உலகிற்கு கொண்டு சென்று, அதன் பின் சிறுமியின் கதறலோடு இந்த பாதக செயலை செய்கின்றனர். சாதாரணமாக சவரம் செய்யும் பிளேடுதான் இந்த ஆபரேசனுக்கு பயன்படுத்தப்படுகிறது. க்ளிட்டோரியஸ் என்ற மேல் தோலை, ஆட்டை அறுப்பது போல் அறுத்து வீசிவிடுவது இதன் முதல் படி. அதற்கு அடுத்தது “லேபியா பிளாஸ்டர்” என்று சொல்லப்படும் பெண்ணுறுப்பு உதட்டுப் பகுதியை அறுத்து எடுத்து, அதன் பின் “வெஜைனா பிளாஸ்டி” என்று சொல்லபடும் பெண்ணுறுப்பை சிறு துளை மட்டும் விட்டு, துணி தைக்கும் நூலால் தைப்பது என்ற மூன்று நிலைகளில் இது செய்யப்படுகிறது. அறுப்பது முதல் தைப்பது வரை இத்தனை விஷயங்களையும் அரங்கேற்றுவது ஒரு மருத்துவர் அல்ல; அந்த ஊரில் இதற்கென ‘வாழ்ந்துகொண்டிருக்கும்’ பெரிசுகள் அல்லது அந்த சிறுமியின் தாய். இந்த சடங்கை சங்கடம் இல்லாமல் செய்து முடிக்கின்றார்கள்.

FMG - India demonstrates-9
40 நாட்களுக்குப் பிறகு தூய்மை வரும்: அனைத்தும் முடிந்த பின், அந்த பெண்ணின் கால்களை அகட்ட முடியாத அளவிற்கு கட்டிப் படுக்க வைத்துவிடுவார்கள். நாற்பது நாட்கள் கழித்தால்தான் அந்த புண் ஆறும் என்பது அவர்கள் கணக்கு. புனித சடங்கு முடித்த உற்சாகத்தில், வழிந்தோடிய குருதி படிவை தண்ணீரால் கழுவி விட்டு, அந்த வீட்டில் சடங்கு விருந்து நடத்தும் நிகழ்வு இன்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் கிராமங்களில் நடந்து வருகின்றன. இந்த பாதக செயலை செய்தால்தான், அந்த பெண்ணின் உடலில் உள்ள துர்நாற்றம் போய் அவளுடைய மேனி அழகு பெற்று, திருமணம் செய்யும் பொழுது பாலுணர்வு அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். தைக்கப்பட்ட நுாலை அந்த பெண் திருமணம் செய்த பின் அவளின் கணவன் அறுத்தால்தான் அந்த பெண்ணின் கன்னித்தன்மைக்கு தரப்படும் சான்று. ஆனால் சில நாடுகளில் க்ளிட்டோரியஸை அறுப்பதோடு நிறுத்திவிடுகின்றனர்.

FMG - India demonstrates-8
செக்யூலரிஸ இந்தியாவில் இதை ஏன் மத சடங்காக கருத வேண்டும்?: மதச்சடங்கு என்ற பெயரில் காலங்காலங்கமாக இந்த கொடுமை நடந்தேறி வந்தாலும், இது குறித்து பெரிய அளவிலான எதிர்ப்புகள் உலக அளவில் ஏற்படாமல் இருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் எகி்ப்தில் இந்த கொடூர சடங்கிற்கு ஆளான பெண் மரணம் அடைந்து, அது மிகப்பெரிய போராட்டமாக வெடிக்க, அதன் பின் அந்த நாட்டில் இந்த சடங்கிற்கு தடை செய்யப்பட்டது. ஆப்ரிக்கா நாடான உகாண்டாவில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் “இது பெரிய விழாவாக கொண்டாடப்பட்டும். அந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேலான பெண்களுக்கு பெண் உறுப்பு சிதைவு நடந்தேறும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கும் இதற்கு தடை வந்து விட்டது.

FMG - India demonstrates-16
.நா ஒப்புக்கொண்ட உண்மை: ஐ.நா. சபை பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமையை முற்றிலும் தடைசெய்யும் நோக்கில், ஆப்ரிக்க நாடுகளுக்கு பல முறை அழுத்தம் கொடுத்துவிட்டன. சமூக மாற்றமும், பெண் கல்வியும் இந்த முறைக்கு எதிரான மனோபாவங்களை ஏற்படுத்தி இருந்தாலும், பழங்குடி மக்களிடையே இருக்கும் இந்த பழக்கத்தை இதுவரை முற்றிலும் தடைசெய்யமுடியவில்லை என்று ஐ.நா சபையே ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பெண் சிதைவுக்கு உட்பட்ட பெண்களை வைத்தே பல பிரச்சாரங்களை தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டுவருகின்றன. இந்த பெண்சிதைவுக்கு ஆளானவர்கள் சுமார் 20 கோடிக்கும் அதிகமாக இருப்பார்கள் என்கிறது ஐ.நா சபையின் கணக்கு. நாடாளும் சக்தியாக பெண்கள் உருவாகி வரும் இந்தநாளில், இன்றும் எங்கோ ஒரு சிறுமிக்கு பெண் உறுப்பு சிதைவு நடைபெற்றுவருவது வேதனைக்குரிய முரண். ஆனால், பெரியார் பிறந்த மண்ணிலேயே, பெரியாரிஸ்டுகள் கூட பொத்திக் கொண்டு இருந்தது முரணாக இல்லை போலும்!

© வேதபிரகாஷ்

13-07-2018

FMG - India demonstrates-15

[1] The Week, Female Circumcision: ‘Should religious purity involve cutting a body part?’, Mini P Thomas By Mini P Thomas July 13, 2018 17:16 IST

[2] https://www.theweek.in/leisure/society/2018/07/13/female-genital-mutilation-should-religious-purity-involve-cutting-a-body-part.html

[3] https://tamil.news18.com/news/national/why-should-the-bodily-integrity-of-a-woman-be-subject-to-some-external-authority-sc-33235.html

[4] தமிழ்.ஒன்.இந்தியா, பெண் உறுப்பு சிதைப்பு சடங்கிற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விவீடியோ, By : Oneindia Tamil Video Team Published : July 10, 2018, 11:39

[5] https://tamil.oneindia.com/videos/no-one-can-violate-the-integrity-and-the-bodily-privacy-of-a-woman-323004.html

[6] விகடன், உயிரைக்குடிக்கும் பெண் உறுப்பு சிதைவு சடங்குஇன்றும் தொடரும் கொடூர வழக்கம்!, – அ.சையது அபுதாஹிர்,  Posted Date : 13:59 (06/02/2016) Last updated : 15:14 (06/02/2016).

[7] https://www.vikatan.com/news/coverstory/58646-anti-female-genital-mutilation-day.html