Archive for the ‘பாபர்’ category

திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)

திசெம்பர் 9, 2017

திருமா வளவனின் இந்துவிரோத பேச்சுதுலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)

Tiruma wanted Hindu temples demolished-DK, and anti-hindu groups

திருமாவிற்கு எதிராக எழுந்த கண்டனங்கள்: இதற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தப் பேச்சு வருத்தமளிக்கும் விதத்தில் இருப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாலர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்[1]. அந்த அறிக்கையில், கோவில்களை இடிக்க வேண்டும் திருமாவளவனின் பேச்சு மிகுந்த வருத்தமளிக்கிறது. புத்த மதத்தை சார்ந்தவர்களே இப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சாதியையும், மதத்தையும், வழிபாட்டையும் அரசியல் லாபத்திற்காக எந்தவொரு தலைவரும் கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். சிவனையும், பெருமாளையும் வழிபடுபவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இல்லாமல் இல்லை. வழிபாடு என்பது எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம். ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதை யாரும் விரும்பமாட்டார்கள். எந்தவொரு உணர்ச்சி வேகத்திலும் சாதி, மதம் பற்றியோ, கடவுள் வழிபாடுகளை பற்றியோ அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை இவ்வளவு விழிப்புணர்வு அடைந்தப் பின்னால் தமிழ்நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள்”.

Tiruma wanted all Hindu temples demolished-Polimer video

மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல: ஈஸ்வரன் தொடர்ந்தது: “ஒருவர் தன்னுடைய வழிபாட்டு முறைகளை பற்றி உயர்த்தி பேசுவதே மற்றவர்களை பாதிக்கும் என்ற நிலை இருக்கும் போது மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. வாதத்திற்காக கூட இதுபோன்று மக்கள் அமைதியை குலைக்கின்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதைபோன்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பேசுவதும், அதை எதிர்த்து வேறுசில தலைவர்கள் எதிர்கருத்து தெரிவிப்பதும் மக்களிடையே அமைதியின்மை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவது தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பயன் தராது. இன்றைய சூழ்நிலையில் அனைத்து துறைகளிலும் இறங்குமுகமாக இருக்கின்ற தமிழகத்தை முன்னேற்றுகின்ற முயற்சிகளில் அனைத்து தலைவர்களும் இறங்க வேண்டும். முன்னேற்றம் தடைப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் மக்களின் கவனத்தை மதம், சாதி போன்ற விஷயங்களில் திசை திருப்புவது நாம் அமர்ந்திருக்கின்ற மரத்தின் கிளையை நாமே வெட்டி சாய்ப்பதற்கு சமமாகி விடும்”.

 Thiruma, frwnzied speech

ஆக்ரோஷமாக துல்லுகர் முன்ம்பு பேசி, பிறகு அமைதியாக பேட்டி கொடுத்த நிலை: இந்து சமூகத்தினரின் மனதை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் பேசவில்லை. குறிப்பாக இந்துகோவில்களை இடிப்போம் என்கிற வார்த்தையை, அந்த சொல்லாடலை நான் பயன்படுத்தவில்லை. சமணர்களுக்கு, பௌத்தர்களுக்கும் எதிராக நடந்த யுத்தத்தில் சமணர்களின் கோவில்களும், பௌத்த விஹாரங்கள் இடிக்கப்பட்டன வரலாற்று உண்மை. அந்த வரலாற்று உண்மையை இதனுடன் பொருத்தி பேசினேன். ஆகவே பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்று நியாயப்படுத்துவது உங்கள் தர்க்கம் எனில் அதற்கு ஈடாக, பௌத்த விஹாரங்கள் இருந்த இடங்களில் மீண்டும் பௌத்த விஹாரங்கள் கட்டவேண்டும் என்று சொல்லுவதும் சரியாக இருக்கும், நியாயமாக இருக்கும் என்று பொருள்படும் படி நான் பேசினேன்,” என்று விளக்கம் கொடுத்து பேசியபோது, முகம் சாதாரணமாக இருந்தது. மைக்கின் முன்பாக, நிறுத்தி நிதானமாக, பேசியது நன்றாகவே தெரிகிறது. இதனால், நிச்சயமாக இந்துக்கள் ஏமாற மட்டார்கள். முதலில், 1980களில் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இவர், 2000களிலிருந்து முஸ்லிம்கள் சார்பாக மாறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. பாமகவுடன் இருந்த கூட்டு முறிந்த பிறகு, அரசியலில் இவர் மற்றும் இவரது கட்சி முக்கியத்துவத்தை இழந்தது. ஆகவே, எவ்வாறு வைகோ உளறிக் கொண்டிருக்கிறாரோ,, அதே பாணியில், இவரும் இறங்கி விட்டார் போலும்!

 Tiruma wanted all Hindu temples demolished-DK, and anti-hindu groups

திருமா ஏன் இவ்வாறு ஒன்றும் தெரியாத அப்பாவியாகி விட்டார்?: இவரது இந்து-விரோதம் பல கேள்விகளை எழுப்புகின்றன:

  1. இந்திய சரித்திரத்தின் அடிப்படை விவரங்கள் கூட தெரியாத நிலை – எல்லியட் அன்ட் டாவ்சன் புத்தகங்கள் படித்தாலே, துலுக்கர், தமது துலுக்கரைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளாத நிலை.
  2. துலுக்கரின் படையெடுப்பால் வடமேற்கு மற்றும் வடவிந்தியா பகுதிகளில் பௌத்தம் பாதிக்கப்பட்டது பற்றி தெரியாத நிலை. பௌத்தம் அங்குதான் கோலோச்சிக் கொண்டிருந்தது, ஆனால், துலுக்கட படையெடுப்பால், மொத்தமாக துடைத்தழிக்கப் பட்டது. சமீபத்தில் பாமியன் புத்தர் சிலை உடைக்கப்பட்டது உட்பட, தொடர்ந்து தலிபான் தாக்குதல், ஐசிஸ் தாக்குதல் முதலியவை.
  3. துலுக்கரால், தமிழகக் கோவில்கள் இடிக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்டது, மசூதிகளாக மாற்றப்பட்டது தெரியாதது போல நடிக்கும் நிலை. இப்பொழுது கூட திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்றமுடியாத நிலை.
  4. இன்றைக்கும் “பத்மாவதி” ஏன் எதிர்க்கப் படுகிறது என்ற நிலை.அதாவது இந்திய பெண்மை, துலுக்கரின் குரூரங்களால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கும் சதி.
  5. ஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்ட நிலையை அறியாதது போல நடிப்பது.
  6. ஆனானப் பட்ட பெரிய-பெரிய சரித்திராசிரியர்கள் எல்லாம் எப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று அவர்க்களை உச்சநீதி மன்ற கண்டித்த உண்மை.
  7. இவற்றையெல்லாம் மீறி, அயோத்திதாசர், மயிலை சீனி.வெங்கடசாமி…..போன்றோர் சொன்னார்கள் என்று பழைய கதை பாடும் போக்கு. அவர்கள் ஜனரஞ்சன ரீதியில் கதை போல, உணர்ச்சிப் பூர்வமாக எழுதியவை-அவற்றை சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
  8. இன்றைக்கு இந்தியாவிலேயே, ஜிஹாதி தீவிரவாதம் எந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பதனை மூடி மறைக்கும் போக்கு. ஐசிஸ் ஆட்கள், ஜிஹாதிகள், முதலியோர் தமிழகத்தில் கைதாகி இருப்பது பற்றி மூச்சு விடாமல், அமைதியாக இருப்பது.
  9. அளவுக்கு மீறி துலுக்கரை பாராட்டும், போற்றும் மற்றும் ஆதரிக்கும் போக்கு. பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
  10. சங்கப்பரிவாரை எதிர்க்கிறோம் என்ற போக்கில், இந்துக்களை, இந்து மதத்தை எதிர்க்கும், தாக்கும் மற்றும் தூஷணம் செய்யும் போக்கு வேண்டுமென்றே, விஷமத்தனமாக செய்வது போலிருக்கிறது.

 

© வேதபிரகாஷ்

09-12–2017

Tiruma accusing MODI

[1] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில்களை இடிக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசுவதா?- கொந்தளிக்கும் கொ..தே. ஈஸ்வரன், Posted By: Mohan Prabhaharan, Published: Friday, December 8, 2017, 18:47 [IST].

https://tamil.oneindia.com/news/tamilnadu/kmdk-leader-eswaran-says-vck-thirumavalan-speech-on-hindu-temples-304398.html

 

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்

நவம்பர் 7, 2009

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்தது என்ற வதந்தியைப் பரப்ப ஆரம்பித்தது இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் (Indian History Congress) என்ற மார்க்ஸிஸ்ட்-முஸ்லீம் கூட்டத்தின் திட்டமிட்ட செயல்[1] ஆகும். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் (Aligarh Muslim University) ஒரு முஸ்லீமை வைத்து அத்தகைய “ஆய்வு கட்டுரை” படிக்கப் பட்டது. ஆனால், எல்லோராலும் அக்கட்டுரை நிராகரிக்கப் பட்டதில்லாமல், கேலிக்குண்டானது.

முன்பு கல்கத்தாவில் நடந்த 51வது மாநாட்டில் 1990 சமரேந்திர நாராயண் ஆர்யா என்பவர் “அயோத்யாவின் சரித்திரத் தன்மை” என்ற கட்டுரை அயோத்யாவை உத்திரபிரதேசத்தில்தான் வைத்து ஆதாரங்களை எடுத்துக் கட்டினார்[2]. அப்பொது அமைதியாக அக்கட்டுரை ஏற்றுக் கொள்லப் பட்டது அல்லாமல், பதிப்பிக்கவும் பட்டது. ஆனால், எந்த ஊடகமும் அதைப் பற்றி சொல்லவில்லை!

“சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு: இதனால், 1997ல் ஸ்யாம் நாராயண் பாண்டே என்பவரை வைத்து 58வது கூட்டத்தில் “சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு (“Historical Rama distinguished from God Rama”) என்று எடுத்துக் காட்டி கட்டுரை வாசிக்க வைக்கப்பட்டது. சரித்திர ராமர் என்று பார்த்தால், இப்பொழுதுள்ள அயோத்தி 800 B.C. காலத்திற்கு முன்பு செல்லாது. ஆனால் சரித்திர ராமரின் அயோத்யா, ஆப்கானிஸ்தானிலுள்ள ஹீரத் என்ற நகரத்திற்கு அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில் இருந்தது. “ஹரி ருத்” என்பதுதான் ஹரயு > சரயு என்றாகியது. ராமர் இறந்தபிறகு அந்நகரம் அழிக்கப்பட்டது. பிறகு காஸி அல்லது குஸிலவஸ் இன மக்களால் குஸக் என்ற பெயரில் ஒரு நகரம் கட்டப்பட்டது. அதுதான் பிறகு குஸ என்று ராமரின் மகனின் பெயரில் விளங்கியது. அந்த காலங்களில் காஸி மற்றும் அயோத்யா என்பது ஒரே இடத்தைக் குறிக்கும்.

ஆகவே பாணினி மற்றும் ரிக்வேதம், மற்ற ஆசிரியர்களின் கருத்தின் [பி. சி. லா, ஏ. எஸ். அட்லேகர், ஏ. எல். பாஷம், கே. எஸ். குலிஸ் முதலியவர்கள்] படி சரித்திர ரீதியில் ராமர் என்பவர் ஆப்கானிஸ்தானத்தில் இருந்தார். ஆகவே சரித்திர ராமரைத் தேடவேண்டுமானால் இந்தியாவின் வடகிழக்கே அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவருடைய கருத்தை ஆமோதித்த ஆர். எஸ். சர்மா என்ற பிரபல சரித்திர ஆசிரியர், “ராமர் அயோத்யாவில் பிறக்கவில்லை என்று சொல்லமுடியாது”., என்றும் நக்கலாகச் சொன்னார்!

பாண்டே பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் நிருபரிடத்தில் பேசுகையில்[3], “மனத்தளவில் நினைக்கின்ற ராமர் காலத்தால் மிகவும் முந்தையவர். எப்படி புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்களோ, நாமும் அந்த உன்மைகளை கவனிக்கும்போது, ராமர் உத்திரபிரதேசத்தில் அயோத்யாவில்தான் பிறந்தார் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது”, என்றார்!

1999ல் ராஜேஸ் கொச்சார்[4] என்ற நட்சத்திர-பௌதிகவியல் விஞ்ஞானி (Astro-physicist), ஆனால் மார்க்ஸீய சித்தாந்தவாதியும், பாப்ரி முஸ்லீம்களை ஆதரிக்கும் கூட்டத்தில் இருப்பதால், மறைமுகமாக ரிக்வேதம் ஆப்கானிஸ்தானில்தான் இயற்றப்பட்டது. வேதகாலத்திற்கு முற்பட்ட மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, அது ஏன் அவ்வளவு தொலைவில் இருந்தது என்றும் கேட்கவில்லை? அதாவது அயோத்யா ஆப்கானிஸ்தானத்திலேயே இருந்திருந்தால், அவன் ஏன் அங்கிருந்தே அங்கு செல்லவேண்டும்?  ஆனால் கொச்சார் கேட்பது, வேறுவழியில் அதாவது வடமேற்கில் இருந்ததால், கங்கைக்கரையின்மீது தேடவேண்டியதில்லை[5]. மேலும் லாஹூர் என்ற லவ்-பூர், ராமனுடைய மகனைக் குறிக்கிறது[6]. அதுவும் வடமேற்கில்தான் உள்ளது!

இதிலிருந்து அறியப்படும் / பெறப்படும் விஷயங்கள்:

1. அயோத்யா ஆப்கானிஸ்தானத்தில் தான் இருந்தது என்றால் பிரச்சினையே இல்லையே. பிறகு எதற்கு “சர்ச்சையில் இருந்த கட்டிடம்” / “பாப்ரி மஸ்ஜித்” இடிக்கப்பட்டது என்றெல்லாம் கலாட்டா செய்யவேண்டும்.

2. இது கூடவா பாபருக்குத் தெரியவில்லை. தனது ஊருக்குப் பக்கத்தில் உள்ளதை விட்டு விட்டு பிறகு எதற்கு அவ்வளவு தூரம் வந்து உத்திரபிரதேசத்தில் உள்ள “அயோத்யாவிலுள்ள” ராமர் கோவிலை இடிக்கவேண்டும்? அதாவது மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, எப்படி அவன் அதிக தூரம் செல்லவேண்டியடில்லையோ, அதுபோல! ஆனால், பாபர் வந்தது இந்தியாவிற்குதான். கோவிலை இடித்தது உபியில் – அயோத்யாவில் இருந்த கோவிலைத்தான்!

3. மொஹ்ஹம்மது கஜ்னிவிற்கு அல்-லத் சோமநாதபுரத்தில்தான் உள்ளது என்றறிந்து, அங்கு வந்து அதை இடித்து, தானும் முந்தைய முஹ்ஹம்மதுவை (PBCH) போன்றவனே[7] என்று நிரூபித்தான்! அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா என்பவை (Al-Lat Al-Manat, and Al-Uzzaa) “அல்லாவின் மகள்கள்” என்று குரான் குறிப்பிடுகின்றது[8].

4. ஆகவே பாபரைவிட சிறந்த சாட்சி உலகத்தில் இருக்கமுடியாது! பாபர்நாமாவே அதனை ஒப்புக் கொள்கின்றது. அதனால்தான் முஸ்லீம்கள் குறிப்பாக அந்த பக்கங்கள் காணவில்லை என்கின்றனர் போலும்! ஆகவே கருணாநிதியோ, கமலஹாஸனோ பாபரை மிஞ்சமுடியாது!

5. பாப்ரி மஸ்ஜித் கமிட்டி உச்சநீதி மன்றத்திற்கு முன்பு கொடுத்த அத்தாட்சிகளிலோ, ஆவணங்களிலேயோ இந்த விவரத்தைச் சொல்லவில்லை. அதாவது, அவர்களுக்கு அப்படி அந்த உண்மை தெரிந்திருந்தால் சொல்லியிருப்பார்கள்.

6. ஆர். எஸ். சர்மா இங்கு 1997ல் அமோதிக்கிறார். ஆனால், மற்றொரு இடத்தில்[9] 2001ல் எழுதும்போது, “அகழ்வாய்வு ரீதியில் 500 BCE வரை அயோத்யாவில் எந்த அத்தாட்சியும் கிடைக்காததால், அதனை ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான் மற்றும் பலியா, முங்கர் முதலிய மாவட்டங்களில் இருக்கும் என்று தேடுகின்றனர்” ஆகவே, இவர்கள் எப்படியெல்லாம் மாற்றி-மாற்றி பேசுகிறார்கள் என்பதை பார்க்கவேண்டும், கவனிக்கவேண்டும்.

7. அதாவது சித்தாந்தரீதியில் இந்துக்களுக்கு எதிராக பேசினால் தங்களுக்கு “செக்யூலரிஸ”ப் பட்டம் கிடைக்கும் என்று இங்கு இப்படி பேசுவது, மேலைநாட்டு புத்தகத்தில் தமது கட்டுரை வரவேண்டும் என்றால், அகழ்வாய்வைப் பிடித்துக் கொள்வது. இதில் என்னவேடிக்கை என்றால், அதே புத்தகத்தில் பி.பி.லால் தனது கட்டுரையில் அயோத்யாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பற்றிக் குறிப்பிடுகிறார்[10]. ஆனால் அவரது கட்டுரை, இவர்களுக்கு சாதகமாக இல்லாததனால், அதைப் பற்றி சொல்வதில்லை. ASIயின் 2003 அறிக்கையின்படி அகழ்வாய்வு அத்தாட்சிகள் 1000 BCE வரை செல்கின்றன.

8. ஆகவே, முன்பு ஸ்யாம் நாராயண் பாண்டே, கொச்சார், முதலியோர் அயோத்யா அத்தாட்சிகள் 800 B.C. முன்பாகச் செல்லாது என்ற கருத்த மாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களும் தமது தவறை உணர்ந்து மௌனிகளாக இருக்கின்றனர். ஆனால், ஊடகங்கள் கிளப்பிய பொய் பிரச்சாரம், அரசியல்வாதிகள் உளறியது அப்படியே உள்ளன. ஆகையால்தான், கமலஹாஸன் இன்றும் உளறுகிறார், பிதற்றுகிறார் முகமதியர் முன்பு!

9. பிரபலமான கமலஹாஸன் அவ்வாறு உளருவதாலும், முதல்வர் கருணாநிதி பிதற்றுவதாலும் ஊதகங்கள் தாராளமாக அசற்றை பரப்புகின்றன. ஆனால், அவை தவறு என்று எடுத்துக் காட்டும்போது, அவ்வாறான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, மறுபடியும் கமலஹாஸன் சொன்னார், கருணாநிதி சொன்னார் என்று கிளம்பிவிடுவர்!

10.  “புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்கள்”, என்கிறாரே, இதை சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

11.  கௌசல்யாவைப் போல அவர்களது அம்மாக்களையும் அவ்வாறே அனுப்பிவைத்தார்களா, என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா?

சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்: முன்பு எம்ஜியாரை கூத்தாடி, கூத்தாடிக்காரன் என்றே கருணாநிது செல்லமாக சொல்லுவார். அதாவது சினிமாகாரர்களை அப்போது அவ்வாறு சொல்வது வழக்கம். ஆகையால், இப்போதும் அவ்வாறு சொல்வது பொருந்தும் போல இருக்கிறது. சினிமா / அரசியல் என்றால் அதோடு இருக்கவேண்டும், ஆனால், அதிகபிரசங்கித் தனமாக எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு, குறிப்பாக இந்துக்களை தாக்குவது, தூஷிப்பது என்றால் முன்னே வந்து செய்வது, அதுவும், முகமதியர் முன்பு செய்வது என்றெல்லாம் ஏதோ தமக்கே உரிய லட்சணங்கள் என்பது போல இவர்கள் செய்து வருகிறார்கள். ஆகவே, இந்த கூத்தாடிகள், இனிமேல், முழுவதுமாக படித்து விட்டு உளரவேண்டும் அல்லது யாராவது முழுவதும் தெரிந்தவர்களிடம் உரு வார்த்தைக் கேட்டுக் கொண்டு உளரவேண்டும். இல்லையென்றால், நிச்சயம், ஒரு நாள் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். பொய்-மேல்-பொய் சொல்லி ஆடுகின்ற ஆட்டமில்லை கோசலையைப் பற்றி அவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தால், எந்த ராஜலட்சுமியும், அஞ்சுகமும் பொறுக்கமாட்டார்கள்.


[1] 1987லிருந்து தொடர்ச்சியாக மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசிக்கும் ஆயுட்கால அங்கத்தினர்களிடமிருந்து சேகரித்த தகவல்கள் மற்றும் Proceedings of the Indian History Congress புத்தகங்களை பார்த்து தொகுத்த விவரங்கள்.2 Samarendra Narain Arya, Historicity of Ayodhya, Proceedings of the Indian History Congress, 51st session, Calcutta, 1990, pp. 44-49.

[3] http://www.indianexpress.com/ie/daily/19971120/32450403.html

[4] Rajesh Kochhar, The Vedic People, Their History and Geography, Orient Longman, Delhi 1999.

[5] Ibid, p.209.

[6] Ibid, p.210.

[7] அதாவது முஹ்ஹம்மத் காபாவைத் தவிர, சுற்றியிருந்த 360 விக்கிரங்களை இடித்து போட்டார். பிறகு அரேபியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காபா விக்கிரத்தை விட்டுவைத்தார்!

[8] Koran, Surah:53.19

[9] Robert Layton, Julian Thomas, Peter G. Stone (Eds.), Destruction and conservation of cultural property, Routleg Taylor & Francis group, 2001, USA, p.127.

இதில் மற்ற கட்டுரைகளும் இந்த பிரச்சினை பற்றி விவாதிக்கின்றன. எல்லோருமே அயோத்யாவை உபியில்தான் வைக்கின்றனர்.

[10] B. B. Lal, A note on the excavations at Ayodhya with reference to the Mandir-masjid issue, in Destruction and conservation of cultural property, as mentioned above, pp.117-120.