Archive for the ‘பாகிஸ்தானின் தாலிபான்’ category

செக்ஸ் படங்கள் வெளியிடும் பாகிஸ்தானிய தியேட்டர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல்!

பிப்ரவரி 13, 2014

செக்ஸ் படங்கள் வெளியிடும் பாகிஸ்தானிய தியேட்டர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல்!

 

பாகி சினிமா பேனர்கள்

பாகி சினிமா பேனர்கள்

அமைதியான இஸ்லாமிய பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இஸ்லாம் என்ற அமைதியான மதம் இருக்கிறது. அந்த அமைதிக்காகத்தான், ஜின்னா என்ற முஸ்லிம், பாரதத்தை உடைத்து இந்த அழகான நாட்டை உருவாக்கினார். ஆனால், ரத்தத்தில் உருவான, இந்நாட்டில் எப்பொழுதும் ரத்தம் சிந்திக் கொண்டுதான் வருகிறது. இஸ்லாம் இருந்தாலும், அமைதி இல்லை. கைபர் பக்துன்வா [Khyber Pakhtunkhwa] என்ற மாகாணத்தின் தலைநகராக இருக்கும் பெஷாவர், தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த நகரமாகும். பாகிஸ்தானில் திரையரங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (11-02-2014) நிகழ்ந்த குண்டு வீச்சு தாக்குதலில் 12 பேர் பலியானார்கள்[1]. 20 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் புகழ் பெற்ற பிலோர் குடும்பத்தினருக்குச் சொந்தமான “ஷமா’ என்ற தியேட்டரில் செவ்வாய்க்கிழமை சுமார் 80 ரசிகர்கள் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் 3 கையெறி குண்டுகளை அடுத்தடுத்து வீசியெறிந்ததில் 12 பேர் உடல் சிதறி பலியானார்கள்[2]. இக்குண்டுகள் சைனாவில் உற்பத்திச் செய்யப் பட்டவை என்று குறிப்பிடத் தக்கது[3]. தலிபான்களின் சைன தொடர்பும் இதில் வெளிப்படுகிறது. ஒரு குண்டு தியேட்டர் உள்ளே வெடித்தது, மற்றவை வெளியே வெடித்தன. ஏற்கனவே இப்பகுதியில் தீயேட்டர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது[4].

 

Bomb attack at Pakistan cinema kills 11

Bomb attack at Pakistan cinema kills 11

பாகிஸ்தான்  தியேட்டரில்  குண்டுவெடிப்பு: ‘பலானபடம்  பார்க்க  வந்த 10 பேர்பரிதாபப்பலி[5]: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் ஆபாச சினிமா காட்டப்படுவதாக தலிபான் ஆதரவு அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது. இது போன்ற படங்களை திரையிடும் தியேட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது[6]. பெஷாவரில் உள்ள பழமை வாய்ந்த ஷமா சினிமா தியேட்டரில் ஆபாச படங்கள் அடிக்கடி திரையிடப்பட்டு வந்துள்ளன[7]. காயமடைந்த 20 பேர் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த தியேட்டரில் ஆபாச திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. மேலும் இந்திய திரைப்படங்களும் அவ்வப்போது திரையிடப்பட்டு வந்தன.  தீவிரவாதிகளிடம் இருந்து தியேட்டர் உரிமையாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததாக பெஷாவர் போலீஸார் தெரிவித்தனர்.

 

Bomb attack at Pakistan cinema kills 1

Bomb attack at Pakistan cinema kills 1

இந்தி படங்கள் பெயரில் செக்ஸ் / புரோன் படங்கள் காண்பிக்கப்படுவது: பொதுவாக பாலிவுட், அதாவது இந்தி திரைப்படங்கள் பிரபலமாக இருந்து வருகின்றன.  லாஹூரில் கூட படங்கள் காட்டப்படுகின்றன. இதுதவிர, நடுவில் செக்ஸ் படங்களும் காட்டுவது வழக்கமாக இருக்கிறது[8]. “ட்ரைலர்” என்ற பெயரிலும் சில காட்சிகள் காட்டப்படுகின்றன. அவற்றில் பெண்கள் படுக்கைகளில் உருளுவது போலவும், பாப் பாடல்களுடம் அக்காட்சிகள் இருக்கின்றன[9]. இதற்கு பிறகு, படம் ஆரம்பிக்கிறது. அதிலும் செக்ஸ் காட்சிகள் இருக்கின்றன[10]. ஏற்கெனவே இந்தி படங்கள் காட்டக் கூடாது என்ற எதிர்ப்பிஉ இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தி படங்கள் பெயரில் புரோனோ / செக்ஸ் படங்கள் காண்பிக்கப் படுவது, இந்தியவிரோதத்தை வளர்ப்பதற்கு என்றே தெரிகிறது. மேலும், உண்மையான முஸ்லிம்கள் என்றால், அவர்கள் எப்படி அத்தகைய படங்களைக் காட்டுகிறார்கள், மக்களும் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

 

pakistan-shama-cinema-story-top

pakistan-shama-cinema-story-top

தலிபான் ஆதிக்கத்தில் உள்ள பாகிஸ்தான் பகுதிகள்: பெஷாவரில் தலிபான் மற்ற ஜிஹாதிகளின் தாக்குதல்கள் நடப்பது சகஜமாக உள்ளன. கடந்த வாரத்தில் ஒரு தற்கொலைப் படை ஜிஹாதியினால் ஒரு ஓட்டலில் குண்டுவெடிப்பு நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானவர்கள் படுகாயம் அடைந்தனர்[11]. பெஷாவர் நகரில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஒரு தியேட்டரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த  சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து பெஷாவரில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சினிமாவும், இசையும் இஸ்லாத்துக்கு எதிரானது என தலிபான் தீவிரவாதிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தேர்தல்களில் எப்படி பெண்கள், இசை முதலியவை உபயோகப்படுத்தப் பட்கின்றன என்பதை முந்தைய பதிவுகளில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

 

வேதபிரகாஷ்

© 13-02-2014


[2] தினமலர், பாகிஸ்தான்திரையரங்கில்குண்டுவீச்சு : 12 பேர்பலி, By Somasundaram Thirumalaikumarasamy, பெஷாவர், First Published : 12 February 2014 07:33 AM IST

[7] தினத்தந்தி, ஆபாசபடம்திரையிடும்சினிமாதியேட்டரில்குண்டுவெடித்ததில் 10 பேர்பலி, பதிவு செய்த நாள் : Feb 12 | 09:17 am

,

[10] It shows popular Bollywood hits made in Lahore, Pakistan’s film capital. One screen was reserved for pornographic films, or “sexy movies” as a moustached usher had told The Daily Telegraph during a recent visit to the cinema. A show began with trailers showing women rolling around on unmade beds to pop songs. Then came the main feature, drawing cheers from the audience. Titled Friendship, it described a family’s attempt to marry off a son despite an affair, told with frequent sexual scenes.

http://news.nationalpost.com/2014/02/12/terrorists-toss-hand-grenades-into-audience-at-last-porn-cinema-in-peshawar-killing-at-least-10-people/

[11] A week ago a suicide bomber blew himself up near a hotel restaurant in Peshawar, killing nine people and injuring more than 30 others, according to local officials.

http://edition.cnn.com/2014/02/11/world/asia/pakistan-cinema-blasts/

கான்பூரில் நடந்த சன்னி தாக்குதலில் 20 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானோர் காயம்!

ஜனவரி 16, 2012

கான்பூரில் நடந்த சன்னி தாக்குதலில் 20 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானோர் காயம்!

பாகிஸ்தானில், ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கான்பூரில், ஞாயிற்றுக் கிழமை (15-01-2012 அன்று) இமாம் ஹுஸைன், (மொஹம்மது நபியின் பேரன்) இறந்த 40 வது தினத்தை அனுஸ்டிக்க ஷியா முஸ்லீம்கள் ஊர்வலத்தை நடத்தினர்[1]. அப்பொழுது, தீவிரவாத சன்னி முஸ்லீம்களால் குண்டு வெடிக்கப் பட்டதில், 20 பேர் கொல்லப்பட்டனர்,  30ற்கும் மேலானோர் காயமடைந்தனர்[2]. 20% மக்கட்தொகையுள்ள, ஷியாக்களின் மீது தாக்குஇதல் நடத்துவது, குண்டு வைப்பது, கொல்வது முதலியன வழக்கமாக பாகிஸ்தானில் நடந்து வருகிறது. எல்லோரும் மூஸ்லீம்களஸென்று சொல்லிக் கொண்டாலும், இப்படி சன்னி முஸ்லீம்கள், ஷியா முஸ்லீம்களைக் கொன்று வருவது வினோதமே. ஒரே கடவுளை நம்பும் முஸ்லீம்கள் எப்படி, இப்படி அரடித்துக் கொல்கிறாற்கள் என்று தெரியவில்லை.

நாற்பது நாட்களுக்கு முன்னமும், பின்பும்: சரியாக நாற்பது நாட்களுக்கு முன்பு, 06-12-2011 அன்று இதே மாதிரி குண்டு வெடிக்க வைத்து முஸ்லீம்கள் கொலைசெய்யப்பட்டனர், 160ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[3]. கொடுத்துள்ள பட்டியலில், இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். சரி, எதற்கு இத்தனை கொலைவெறி? தாத்தா மற்றும் பேரன்களைப் பின்பற்றுவதிலும் கூட இப்படி மத-சண்டைகள், கொலைகள் இருக்குமா?

வேதபிரகாஷ்

16-01-2012


[1] The explosion hit the gathering in Rahim Yar Khan district where Shias were marking the 40th day of mourning of the death of the Prophet Mohammad’s grandson Imam Hussain, Al Jazeera’s Zein Basravi reported from Islamabad.

[3] வேதபிரகாஷ், , இமாம்ஹுஸைனின் 700வதுதியாகத்திருநாள்அன்றுகுண்டுவெடிப்பு: 54 ஷியாமுஸ்லீம்கள்சாவு, 160ற்கும்மேல்காயம்தாலிபன்களின்கொடூரம்!, https://islamindia.wordpress.com/2011/12/06/shias-killed-in-suicide-bomb-attack-in-afghanistan-2011/

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

ஜூலை 17, 2011

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

 

குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.

 

வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].

 

உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது.  ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].

 

சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.

 

செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

 

தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.

 

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

 

தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.

 

26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.


[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரி குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது!

பிப்ரவரி 11, 2011

பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரி குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது!

பெண்களின் கல்வியை மறுக்கும் இஸ்லாமிய கூட்டங்கள்: ஆப்கானிஸ்தானிலிருந்து, வடமேற்கு பகுதியில் பாகிச்தானில் தாலிபான்கள் மற்றும் அதன் பிரிவுக் குழுக்கள் நுழைந்துள்ளன. இஸ்லாம் குரான் என்றுதான் பேசிக்கொண்டு, பெண்களை முழுவதுமாக அடிமைப் படுத்த எல்லா வழிகளையும் பின்பற்றி வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக, சிறுமியர்-பெண்கள் பள்ளிகளை குண்டு போட்டும், தீயிட்டுக் கொளுத்தியும் அழித்து வருகின்றனர். இப்பொழுது, ஒரு பெண்கள் கல்லூரியைத் தாக்கியுள்ளனர். இதனனல், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில், மக்களுக்கு போதிய அமைதி, பாதுகாப்பு முதலியன குறைந்து வருகின்றன் என்று தெரிகிறது.

அரசு கல்லூரியை தீயிட்டும், குண்டு வைத்தும் தாக்கிய தாலிபான் சார்புடைய கூட்டம்: பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரிக்கு தாலிபன் பயங்கரவாதிகள் தீ வைத்தனர். வடமேற்கு பாகிஸ்தானின் ஓரக்சாய் மாகாணத்தில் [Government Degree College for Women at Alamkhan Kali in Orakzai Agency] இருக்கும் பெண்கள் கல்லூரிக்கு தாலிபன் ஆதரவு பயங்கரவாதிகள் தீ வைத்தனர். இப்பகுதியில் இயங்கி வந்த ஒரே பெண்கள் கல்லூரி இது என்பது குறிப்பிடத்தக்கது[1].

ஆள் இல்லாத நேரமானதால், உயிர்சேதல் இல்லை: வடமேற்கு பாகிஸ்தானின் ஓரக்ஸாய் பழங்குடியினர் பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியை தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் வெடிவைத்து தகர்த்தனர். வெடிபொருள் வெடித்ததால் கல்லூரியின் 6 அறைகளும், ஒரு கணிப்பொறி ஆய்வகமும் சேதமடைந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. இங்கு 150ற்கும் மேலான பெண்கள் படித்து வருகின்றனர். நல்லவேலையாக, அந்நேரத்தில் யாரும் இல்லாததால், தப்பித்தனர்.


மறுபடியும் 70 ஷியா முஸ்லீம்கள் கொலை, 150 படுகாயம், பாகிஸ்தானில் தொடரும் தற்கொலை ஜிஹாதி குண்டுவெடிப்புகள்!

செப்ரெம்பர் 4, 2010

மறுபடியும் 70 ஷியா முஸ்லீம்கள் கொலை, 150 படுகாயம், பாகிஸ்தானில் தொடரும் தற்கொலை ஜிஹாதி குண்டுவெடிப்புகள்!

தடை செய்யப் பட்ட தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (Tehrik-e-Taliban Pakistan) கடந்த லாஹூர் மற்றும் குவெட்டா குண்டுவெடிப்புக் கொலைகளுக்கு தனது பங்ஐ ஒப்புக்கொண்டுள்ளது.

ஷியாக்கள் கொல்லப்படுதல்: பலூச்சிஸ்தானின் தலைநகரான குவெட்டா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை அன்று 03-08-2010 தற்கொலை குண்டு வெடிப்பில், மறுபடியும் 60ற்கும் மேற்பட்ட ஷியாக்கள் கொல்லப்பட்டனர், 100ற்கும் மேலானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்[1]. இப்படி தொடர்ச்சியாக ஷியாக்கள் தாக்கப்படுவது, இஸ்லாத்தில் கூறப்படும் ஒருத்துவம், சகோதரத்துவம் முதலியவையெல்லாம் கேள்விக்குறிகளாகின்றன!

ஷியாக்களின் பாலஸ்தீன ஆதரவு: ஷியாக்கள் ரமதான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையன்று, அல்-குத்ஸ் எனப்படுகின்ற நாள் அன்று கூடி, பாலஸ்தீன விடுதலைக்காக, அம்மக்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பது வழக்கம். அதுபொலவே சுமார் 2000 ஷியாக்கள் மீஜான் சௌக் என்ற இடத்தில் ஷியா இமாமியா மாணவர்கள் இயக்கம் சார்பில் கூடியபோது 3.30 அளவில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வாரத்தில் நடக்கும் மூன்றாவது வெடிகுண்டு தாக்குதல் ஆகும்[2].

ஷியாக்களின் மீதான தொடரும் தாக்குதல்கள்: பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து பிரிந்தபோதே, லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்று குவித்துதான் சுதந்திரத்தை முஸ்லீம்கள் அடைந்தனர். அந்த ரத்தம் தோய்ந்த சுதந்திரம், ரத்ததத்தினாலேயே தொடர்வது போல உள்ளது. ஏனெனில், சுன்னி முஸ்லீம்கள், ஷியா முஸ்லீம்கள் மற்றும் இதர முஸ்லீம்களைக் கொல்லும் வழக்கம் அப்பொழுதே ஆரம்பித்து விட்டது.

முந்தைய ஆட்சியாளர்களின் ஆதரவு: பாகிஸ்தானிய அதிகாரிகள் சுன்னி கொரில்லாக்கள் இயக்கமான ஷிபாஹ்-இ-சஹபா (Sipah-e-Sahaba) என்பதை குறைகூறுகிறார்கள்[3]. ஷிபாஹ்-இ-சஹபா என்றால் முகமது நபியின் நண்பர்களின் ராணுவம் என்று பொருளாம். அப்படியென்றால், முகபது நபியின் மைத்துனரான இமாம் ஹஜரத் அலியை பின்பற்றும் ஷியா முஸ்லீம்களை, இந்த நண்பர்கள் எப்படி, இப்படி கொடூரமாகக் கொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. முந்தைய ராணுவ ஆட்சியாளர் முஹமது ஜியா உல் ஹக் இந்த பயங்கரவாத இயக்கம் வளர்வதற்கு உறுதுணையாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது[4].

Major attacks at mosques, religious events, and Islamic institutions in Pakistan since December 2007[5]:

Sept. 3, 2010: A suicide bomber attempted to storm a mosque in Mardan, but was stopped by security guards. One person was killed after he detonated his vest.

Sept. 1, 2010: Suicide bombers detonated during Shia religious processions in Lahore, killing 28 people.

Aug. 23, 2010: A suicide bomber detonated at a mosque in Wana, South Waziristan, killing 18 people.

July 1, 2010: Suicide bombers detonated at the Data Ganj Bakhsh shrine in Lahore, killing 41 people and wounding more than 170.

May 28, 2010: The Punjabi Taliban assaulted two Ahamadi mosques in Lahore, killing more than 70 people.

Dec. 18, 2009: A suicide bomber detonated inside a mosque frequented by policemen in Lower Dir, killing 12.

Dec. 4, 2009: A suicide assault team stormed a mosque in Rawalpindi that is frequented by Army officers, killing 40.

Oct. 20, 2009: A pair of suicide bombers detonated their vests at Islamabad’s International Islamic University, killing five.

June 12, 2009: A suicide bomber killed five Pakistanis, including anti-Taliban cleric Dr. Sarfraz Naeemi, in an attack on a mosque in Lahore during Friday prayers.

June 12, 2009: A suicide bomber killed six worshipers and wounded more than 90 in an attack inside a mosque in Nowshera. The attack collapsed the dome of the mosque.

June 5, 2009: A suicide bomber killed 49 worshipers in an attack on a mosque in a remote village in Dir.

April 5, 2009: A suicide bomber killed 24 worshipers and wounded more than 100 in an attack outside a Shia religious center in the Chakwal district in Punjab province.

March 27, 2009: A Taliban suicide bomber killed more than 70 worshipers and wounded more than 125 in an attack at a mosque in the Khyber tribal agency.

March 5, 2009: An attacker threw a hand grenade into the middle of a mosque in Dera Ismail Khan, wounding 25 worshipers.

March 2, 2009: A suicide bomber killed six people during an attack at a gathering in a mosque in the Pishin district in Baluchistan.

Feb. 20, 2008: A suicide bomber killed 32 Pakistanis and wounded more than 85 in an attack on a funeral procession for a Shia elder who was murdered in Dera Ismail Khan.

Feb. 5, 2009: A suicide attack outside a mosque killed more than 30 Shia worshipers and wounded more than 50.

Nov. 22, 2008: A bombing at a mosque in Hangu killed five civilians and wounded seven.

Nov. 21, 2008: A suicide attack on a funeral procession in Dera Ismail Khan killed 10 mourners and wounded more than 25.

Sept. 10, 2008: The Taliban attacked a mosque filled with Ramadan worshipers in the district of Dir in northwestern Pakistan. More than 25 worshipers were killed and more than 50 were wounded.

Aug. 19, 2008: A suicide bomber killed 29 Shia mourners and wounded 35 after detonating in the emergency ward of a hospital.

June 17, 2008: Four Pakistanis were killed and three wounded in a bombing at a Shia mosque in Dera Ismail Khan.

May 19, 2008: Four Pakistanis were killed in a bombing outside a mosque in Bajaur.

Jan. 17, 2008: A suicide bomber killed 10 and wounded 25 in an attack on a Shia mosque in Peshawar.

Dec. 28, 2007: A suicide bomber detonated in the middle of a mosque in Charsadda in an attempt to kill former Interior Minister Aftab Sherpao as he conducted Eid prayers. More than 50 were killed and more than 200 were wounded

Read more: http://www.longwarjournal.org/archives/2010/09/taliban_kill_48_in_a.php#ixzz0yWYNTMw4


[1] http://www.indianexpress.com/news/Shia-march-bombed-again–60-dead/677032

[2] http://www.businessweek.com/news/2010-09-03/third-pakistan-sectarian-attack-in-week-kills-35-injures-100.html

[3]Pakistani officials have blamed Sunni guerrillas of the Sipah-e-Sahaba movement and allied militant groups for an increase in sectarian killings this year.

http://www.businessweek.com/news/2010-09-03/third-pakistan-sectarian-attack-in-week-kills-35-injures-100.html

[4] Sunni militant attacks on other groups have risen steadily since the 1980s.In that decade, the military government of General Muhammad Zia ul-Haq secretly promoted the growth of Sipah-e-Sahaba, or Army of the Friends of the Prophet, and similar groups, according to Hassan Abbas, a Pakistani scholar at the New York- based Asia Society and author on Pakistani religious extremism.

[5] http://www.longwarjournal.org/archives/2010/09/taliban_kill_48_in_a.php