Archive for the ‘பர்தா மத-அடையாளமா?’ category

பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!

மே 15, 2022

பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!

கடவுளின் தேசமான கேரளாவில் மாணவி மேடைக்கு வந்தது சர்ச்சையானது: “கடவுளின் தேசம்” என்று பறைச்சாற்றிக் கொள்ளும் கேரளாவில், சிறுமியை இஸ்லாமிய உலேமா உதாசீனப் படுத்தியுள்ளது திகைப்பாக உள்ளது. அதிக படிப்பறிவு உள்ள மாநிலமும் கேரளா தான். பிறகு, ஏன், எதற்கு இந்த முரண்பாடு? கேரளாவில் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து விருது வழங்கியதற்காக விழா அமைப்பாளர்களை முஸ்லிம் மத குரு ஒருவர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மத குருவின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது[1]. சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு) என்பது கேரள சன்னி மத குரு சங்கமாகும். இந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து சான்றிதழை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது[2]. கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது[3]. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார்[4].

முசலியார் மேடையில் இருக்கும் போது பெண்கள் வரக்கூடாதாம்கோபித்துக் கொண்டு திட்டிய உலேமா: வழக்கம் போல முதலமைசர் மற்றும் ஆளும் கட்சியினர் அமைதியோடு இருந்தனர். “குர் ஆன் கட்டளைகளை மீறி முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இச்சம்பவம் இன்னொரு உதாரணம்,” என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு தெரிவித்துள்ளார்[5]. கேரள சமூகவலைதளங்களில் வைரலான ஒரு காணொளியே ஆளுநரையும் சங்கடப்படுத்தியுள்ளது[6]. கேரளத்தின் மளப்புரத்தில் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மதரஸா பள்ளியில் (அரபு பாடம்) பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மதரஸா நிர்வாகி அந்த மாணவியின் பெயரைச் சொல்லி விருது வாங்க வர மேடைக்கு அழைத்தார். மாணவியும் மேடைக்கு வந்தார். இதைப் பார்த்ததும் சமஸ்தா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.டி.அப்துல்லா முசலியார், பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண்ணை எப்படி பொதுமேடைக்கு அழைக்கலாம். என்னைப் போன்ற மதக்குருக்களை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிச் செய்யலாமா? என சிறுமியை மேடைக்கு அழைத்தவரை கடுமையாகத் திட்டினார்.

உங்களுக்கு மத விதிகள் தெரியாதா எனவும் எச்சரித்தார்: இந்த சிறுமியை அழைத்ததற்குப் பதில் அவரது பெற்றோரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் எனவும் அப்துல்லா முசலியார் திட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சிறுமி கீழே அனுப்பப்பட்டு, அவரது பெற்றோர் மேடைக்கு வந்தனர். இது சிறுமியை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, “படித்தவர்கள் அதிகம் நிறைந்த, பெண்கள் அதிகம் வாழும் கேரளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சமூகத்தை பல தலைமுறைகளுக்கு கீழ் நோக்கி இழுப்பவர்களிடம் இருந்து மக்கள் விழிப்படைய வேண்டும்,” என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிராகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் இவ்விவகாரத்தை அமுக்கி வாசித்தனர்.

பெண்கள் தனிமைப் படுத்தப் படவேண்டும் என்பது விதியல்ல: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் ட்விட்டர் பக்கத்தில்[7], “திருக்குரானின் கட்டளைகளையும் மீறி, முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததால் தகுதியான விருதைப் பெறும்போது மேடையில் அவமானப்படுத்தப்பட்டதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. மதகுருமார்கள் குரானின் கட்டளையை மீறியும், அரசியலமைப்பு சட்டத்தை மீறியும் முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவது, அவர்களின் ஆளுமையை நசுக்குவது ஆகியவற்றுக்கு இதுவும் ஒரு உதாரணம்,” என வேதனையோடு கூறியுள்ளார்[8]. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்[9]. இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் தரப்பையும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்[10]. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்[11], “இந்த விவகாரத்தில் கேரளா ஆளும் தரப்பினர் மௌனம் குறித்து வருத்தம் அளிக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி அனைவருமே இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றனர். நமது வீட்டுப் பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியம் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் இது குறித்துப் பேச வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களை விட (கேரள அரசு) நான் அதிகம் பேசி உள்ளேன்,” என்றார்[12].

அடிப்படைவாத இஸ்லாமில் பெண்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர்: முஸ்லிம் பெண்கள் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு சமமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடக் கூடாது, காஜி, மௌலானா, உலேமா முன்பாக முகத்தைக் காட்டிக் கொண்டு வரக் கூடாது, பர்தா / ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும், முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம், தலிபன் போன்ற அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் ஆணையிடுவதை செய்திகளாகப் படிக்கலாம். விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற நான்கு நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது[13]. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கணவன்-மனைவி உள்பட எத்தகைய உறவாக இருந்தாலும் கூட ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும்[14]. இதுபற்றி ஆப்கனின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛உணவகங்களில் ஆண்கள், பெண்களை பிரித்து உணவு சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] டாப்.தமிழ்.நியூஸ், கேரளாவில் பள்ளி மாணவியை மேடைக்கு அழைத்த விழா அமைப்பாளர்களை கண்டித்த முஸ்லிம் மத குரு.., By KRISHNA G Wed, 11 May 20225:48:27 AM

[2] https://www.toptamilnews.com/india/Samastha-Kerala-Jem-iyyathul-Ulama-leader-MT-Abdulla/cid7371111.htm

[3] விகடன், `பெண்களை பரிசு பெற மேடைக்கு அழைக்கக்கூடாது!’ – கேரள இஸ்லாமிய தலைவரின் செயலால் கொதித்த கவர்னர், சிந்து ஆர், Published:12 May 2022 6 PMUpdated:12 May 2022 6 PM.

[4] https://www.vikatan.com/news/india/kerala-muslim-body-leader-scolds-members-for-inviting-girl-student-on-stage-draws-flak

[5] காமதேனு, முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவதா?’- மதக்குருக்களை எச்சரிக்கும் கேரள ஆளுநர்,என்.சுவாமிநாதன், Updated on : 12 May, 2022, 3:37 pm.

[6] https://kamadenu.hindutamil.in/national/religious-people-who-isolate-muslim-women-kerala-governor-warns

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெண்கள் மேடைக்கு வரக்கூடாது..!! இந்த காலத்தில் இப்படி ஒரு இசுலாமிய அமைப்பா.? கொந்தளிக்கும் ஆளுநர், Ezhilarasan Babu, Chennai, First Published May 13, 2022, 1:44 PM IST; Last Updated May 13, 2022, 1:44 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/women-should-not-come-on-stage-is-there-such-an-islamic-organization-in-this-period-governor-condemned–rbtavy

[9] தினமணி, மலப்புரத்தில் சிறுமி அவமதிப்பு விவகாரம்: அரசியல் தலைவா்களின் மெளனம் ஏமாற்றமளிக்கிறது, By DIN  |   Published On : 13th May 2022 03:01 AM  |   Last Updated : 13th May 2022

[10]https://www.dinamani.com/india/2022/may/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3843656.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, அவர்களின் மவுனம் ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது!” கேரள அரசை சாடும் ஆளுநர் ஆரிப் கான்எதற்கு தெரியுமா, By Vigneshkumar Updated: Friday, May 13, 2022, 0:18 [IST].

[12] https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-governor-questions-silence-of-leadership-on-girl-humiliated-on-stage-issue-458104.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, ஓட்டலில் ஆண்பெண் சேர்ந்து சாப்பிட தடை! ஆப்கனில் அமலான புதிய கட்டுப்பாடுகள்! தாலிபான் ஆட்டம், By Nantha Kumar R Updated: Saturday, May 14, 2022, 12:36 [IST]

[14] https://tamil.oneindia.com/news/international/in-afghan-taliban-bans-men-and-women-dining-together-458287.html

பர்கா இல்லாமல் வந்த கல்லுரி பெண் ஆசிரியருக்குத் தடை: கல்கத்தாவில் அமூல்!

ஜூலை 30, 2010

பர்கா போராட்டத்தில் வென்ற பெண்மணி

பர்கா இல்லாமல் பாடம் சொல்லித்தர வரக்கூடாது என்று தடை செய்யப்பட்ட ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர் கடைசியில் தனது போராட்டத்தில் வென்று விட்டார்[1]. அக்கல்லூரி யூனியன் பெண் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பர்கா அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆணையிடப்பட்டது. இதனால் எட்டு பெண்கள் சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால், ஷிரின் வெளிப்படையாக, தான் அவ்வாறு பர்கா அணிய முடியாது, ஏனெனில் அத்தகைய உடைக்கட்டுப்பாடு ஊனிவர்ஸிடி டிராண்ட் கமிஷன் சரத்துகளில் இல்லை என வாதிடினார்.

Burqa-teacher-wins-her-stand

Burqa-teacher-wins-her-stand

சையத் சம்ஸுல் ஆலம், அலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் சொல்லிப்பார்த்தார். ஆனால், அடிப்படைவாதம் கொண்ட யூனியன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், நிலைமையை மேற்கு வங்காள சொறுபான்மை நல அமைச்சர் அப்துர் சட்டார் என்பவருக்குத் தெரியப்படுத்தினர். உடனே, அவர் ஷிரீனை வகுப்புகளை எடுக்குமாறு பணிக்கப்பட்டார்[2]. இருப்பினும், என்றைக்கு இருந்து என்று இன்னும் சொல்லப்படவில்லை! யூனியனில் காரியதரிசி ஹசனூர் ஜமான் (Hasanur Zaman) என்பவர், தேவையில்லாமல், ஊடகங்களுக்கு இப்பிரட்சினையை எடுத்துச் சென்று ஏதோ ஒரு பிரச்சினை போன்று உருவாக்கிவிட்டார்[3] என்று மறுபடியும் அந்த பெண்ணையே குற்றஞ்சாட்டினார்!

ஏசியா-நெட்டில்-இருந்த-படம்-2010

ஏசியா-நெட்டில்-இருந்த-படம்-2010


[1] http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Teacher-Wins-Fight-Against-Burqa-Code/articleshow/6290021.cms

[2] Read more at: http://www.ndtv.com/article/cities/teacher-wins-fight-against-burqa-diktat-43435?cp

[3] http://www.indianexpress.com/news/nazis-in-a-different-garb./658211/

பர்கா இல்லாமல் வந்த கல்லுரி பெண் ஆசிரியருக்குத் தடை: கல்கத்தாவில் அமூல்!

ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர். கடந்த மூன்று மாதங்களாக கல்லூரியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாடம் எடுக்க முடியாமல் இருக்கிறார். காரணம். அலியா பல்கலைக்கழகம் சொல்லாவிட்டாலும், அக்கல்லூரி யூனியன் சொல்வதால், பர்கா இல்லாமல் அவர் வகுப்பிற்குச் செல்லமுடியாது, பாடம் சொல்லித்தரமுடியாது.

அவர் சொல்வதாவது, “யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன், உடைபற்றிய கட்டுப்படு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மேலும் இது பர்காவைப் பற்றியப் பிரச்சினை இல்லை. என்னுடைய சுய-விருப்பத்தைப் பொறுத்த விஷயமாகிறது”.

பாகிஸ்தானில் ஃபேஸன் ஷோ 2010 ஆரம்பம்!

மே 17, 2010

பாகிஸ்தானில் ஃபாஸன் ஷோ 2010 ஆரம்பம்!

Fashion-Gala-enthrals-audience-Pakistan-2010

Fashion-Gala-enthrals-audience-Pakistan-2010

இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் பர்தாவில் / பர்காவில் / ஹிஜாபில் இருக்கவேண்டும், ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யக் கூடாது,…………………………இப்படி ஏகப்பட்ட சரத்துகள், கட்டுப்பாடுகள்!

Fashion style from Pakistan

Fashion style from Pakistan

ஆனால், பாகிஸ்தானிய பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?

Fashion design product Pakistan

Fashion design product Pakistan

ஃபேஷன் ஷோவிலே கலந்து கொள்வார்களா?

Pakistan_women

Pakistan_women

அட இவர்கள் பாகிஸ்தானியர்களா?

sara-deshi-jewelry

sara-deshi-jewelry

ஓஹோ நகைகளும் அணிவார்களா? இப்படி முதுகையும் காண்பிர்ப்பார்களா?

Paki-diamond-models

Paki-diamond-models

இது ஹராமா, ஹலாலா?

Paki-model-posing-for-diamonds

Paki-model-posing-for-diamonds

நாகரிகத்துடந்தான் இருக்கிறார்கள் போலும், பாகிஸ்தானிய நாரீமணிகளும்!

முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்!

மே 16, 2010

முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்!

Maulanareleasedstory216.jpg

தாடி வைத்த ஆணும், அரபு நாட்டிலிருந்து வந்த பெண்ணும்: நூருல் ஹூடா என்ற தியோபந்த் இஸ்லாமிய பண்டிதர் இங்கிலாந்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள விமானத்தில் உட்கார்ந்து கொண்டராம். செல்-தொலைப்பேசியில் யாருடனோ பேசினாராம். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தவருக்கு, இத்தனைக்கும் அவர் எமிரைட்டிலிருந்து வந்துள்ள ஒரு பயணி,  அதுவும் பெண், அவர் பேசியதிலிருந்து சில வார்த்தைகளும் [ஜிஹாத், முஜாஹித்தீன், மதரஸா…………], அவரது உருவத்தையும் கண்டு பயந்து போய், விமானத்தில் உள்ளவர்களிடம் ரகசியமாக விஷயத்தைச் சொல்ல, அவர்கள் போலீஸாரிடம் புகார் செய்து விட்டாராம்.

மௌலானா பெண்ணின் பக்கத்தில் உட்காரலாமா? பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்றுதானே இந்த மௌலானாக்கள் ஃபத்வா விடுகிறார்கள்? பிறகு, எப்படி பெண்கள் பக்கத்தில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டார்? அத்தகைய ஆசாரம் கடைபிடிக்கும் போது, வேறு இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கலாமே? உட்கார்ந்துவிட்டு, ஏன் ஜிஹாதைப் பற்றியெல்லாம் செல் போனில் (suspicious cell phone call) பேச வேண்டும்? அதுவும் அந்த அமீரகப் பெண்ணிற்கே சந்தேகம் வரும் வகையில், அதுவும், இந்த ஆள் நிச்சயமாக ஒரு தீவிரவாதியாக இருக்கக் கூடிய நிலையில் உள்ளார் (potential terrorist) என்ற அளவில், ஏன் நினைக்க வைக்க வேண்டும்?

A fellow passenger on the flight felt Huda, who is bearded and was wearing a skull cap was a potential terrorist after he made, what she felt was a suspicious cell phone call.

போலீஸாரிடம் சரியாக சொல்லியிருக்க வேண்டியதுதானே? போலீஸார் விசாரித்த போதும் அவர் அவ்வாறே ஏதோ கூறியதால், சந்தேகப் பட்டு, விசாரித்து, வழக்குப் போட்டு திஹார் ஜெயிலில் அடைத்து விட்டார்களாம். ஜாமீனில் வெளியில் விட முடியாதபடி வழக்கு பதிவும் செய்து விட்டார்களாம்.

Maulana-creates-potential-terrorist
Maulana-creates-potential-terrorist

இது ஏதோ செக்யுலார் பிரச்சினை என்று நினைத்தால், இப்பொழுது இதை மதரீதியிலான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிடிபட்ட மௌலானாவே சொல்வது,

தாடி வைத்துக் கொண்டு, முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டாலே சந்தேகம் படுகிறார்கள். நான் மதரஸாவில் பணி புரிகிறேன், மதரஸா வைத்துள்ளேன்……………..என்றால் போச்சு……………….உடனே தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி விடுகிறார்கள்“!

உடனே ஊடகக்காரர்கள் சொல்லிவைத்தால் போல, ஒரு ஓய்வு பெற்ற ஒரு துணைவேந்தரைப் பிடித்துக் கொண்டு வந்து, அவரது கருத்தைக் கேட்கிறர்கள். ரூப்ரேகா வர்மா என்றவர் சொல்கிறார். ஏன் ஸபானா ஆஸ்மியிடமோ, அந்த செதல்வாதிடமோ கேட்வில்லை என்று தெரியவில்லை:

மத-உணர்வுகள் மற்றும் “இப்படித்தான் இருப்பார்கள்” (stereotypes) என்ற எண்ணமும் மனங்களில் பதிந்திருக்கும்போது, அத்தகைய சின்னங்களுடன் வரும் நபரைப் பார்த்தால், அவ்வாறே எண்ணத் தோன்றுவது (தோன்றாதது) அந்த நபருடைய எதிர்கால அதிருஷ்டத்தைப் பொறுத்துதான் உள்ளது. ஒருவேளை நீங்கள் கைது செய்யப் படலாம், அவ்வாறே நடத்தப் படலாம்” என்றெல்லாம் விளக்கமும் அளித்தார்!

கம்யூனிஸ்ட்காரர்களும் சேர்ந்து வக்காலத்து வாங்க வந்து விட்டார்கள். “இந்த கைதானது சட்டங்களை அமூல் படுத்தும் அதிகார வர்க்கத்தினரிடம், சிறுபான்மையினற்கு மீதான தப்பெண்ணம் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது“, இன்று விளக்கம் அளித்துள்ளனர்!

குல்லா போட்டவர்களை எல்லாம் சந்தேகப் பட்டதில்லையே? சரிதான், ஆனால், ஏன் அந்த ‘அல்லா-குல்லா” போட்டவர்களையெல்லாம், தீவிரவாதி என்று கருத வேண்டும்? இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், அத்தகைய குல்லா போட்டுக் கொண்டு தான் கஞ்சி குடித்து வருகின்றனர். அப்பொழுது எந்த பெண்ணும் சந்தேகப் பட்டதாகத் தெரியவில்லையே?ஏன் அவர்களது மனைவிமார்களே வேறுவிதமாக நினைத்ததில்லையே? இந்த தடவை அன்பழனுக்காக, அந்த கிருத்துவ பாதிரி, விஷேஷமாக ஒரு குல்லா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாரே, அதைத்தானே “இனமான பேராசிசியர்” போட்டுக் கொண்டு கஞ்சி குடித்து, ஆனால் போட்டொ எடுக்கும் போது எடுத்துவிட்டார் [அப்பொழுது பயந்து விட்டார் போலும்]

குல்லா போட்ட கருணாநிதியின் படங்கள் மறையும் ரகசியம் இதுதானோ: சாதாரணமாக, குல்லா போட்ட அரசியல்வாதிகளின் படங்கள், இணைதளங்களினின்று எடுத்துவிடலாம், ஆனால், கருணாநிதி குல்லா போட்ட படங்கள் எல்லாம் மறைந்து விட்டன? இதன் ரகசியம் என்ன என்று புரியவில்லை! உண்மையில் கருணநிதியின் “குல்லா போட்ட” படங்கள்தான் நிறைய இருந்தன. ஆனால் இன்று ஒன்றுகூட கிடைப்பதில்லை.

குல்லா போட்டு கஞ்சி குடித்தால் பிரச்சினை இல்லை, ஜிஹாத் பேசினால் தான் பிரச்சினை:  ஏனெனில், குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்து மதத்தைப் பற்றி அவதூறு பேசி சென்று விடுவதால், முஸ்லீம்களுக்கு பிரச்சினையே இல்லை போலும், ஊடகக் காரர்களுக்கும் செமத்தியான விருந்துதான், ஆகையால், அவர்களும் இதுவரைக் கண்டு கொள்ளவில்லை போலும். அப்பொழுது அந்த “ஸ்ட்ரியோ-டைப்” வசனங்கள் எல்லாம் வரவில்லை, எந்த துணைவேந்தரும் வந்து இத்தகைய விளக்கம் கொடுக்கவில்லை!  ஆகவே, இங்கே அந்த மௌலானா, ஜிஹாத் பேசியதால் தான் அந்த பிரச்சினையே வந்தது. அந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.

எல்லோரும் சிதம்பரங்கள் அல்ல, ஜிஹாதிற்கு விளங்கங்கள் பெற்று கருத்தை மாற்றிக் கொள்ள: முன்பு முஸ்லீம்கள் மிரட்டியவுடன், உள்துறை அமைச்சு-சிதம்பரம் பயந்து போய், ஓஹோ அப்படியா, ஜிஹாதிற்கு, அப்படியொரு விளாக்கம் உள்ளதா, எனக்க்குத் தெரியவில்லையே, அதையும் தெரிந்து கொள்கிறேன் என்றது, இங்கு நினைவு படுத்துப் பார்க்க வேண்டும். அரபு நாட்டிலிருந்து வரும் பெண்ணிற்கு ஜிஹாத் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது, ஆனால் சிதம்பரத்திற்குத் தெரியவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸம், இங்குதான் அந்த ஜிஹாதி-தீவிரவாதம் வளர்க்கப் படுகிறது.

முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யலாமா – 2

மே 14, 2010

முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யலாமா – 2

ஒருநிலையில், முஸ்லீம்கள் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள், குறிப்பாக அடிப்படைவாத கோஷ்டிகள், தாலிபான் வகையறாக்கள் என்ன சொல்வது, எப்படி இதனை அணுகுவது என்று திகைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Fatwa-no.fatwa-pardha-burqa-games

Fatwa-no.fatwa-pardha-burqa-games

Urdu press tears into latest fatwa

Mohammed Wajihuddin, TNN, May 14, 2010, 03.19am IST

http://timesofindia.indiatimes.com/India/Urdu-press-tears-into-latest-fatwa/articleshow/5928678.cms

MUMBAI: The Urdu press has slammed the Darul Uloom of Deoband’s fatwa which decreed earning of Muslim women was haraam (prohibited) and asked them not to work with men in public/private organisations. Though the fatwa was just an opinion and not binding on Muslims, it could derail the community’s efforts to empower their women, observed Urdu dailies.

In its stinging editorial titled, “Kya Deoband sun raha hai? (Is Deoband listening?)”, The Sahafat (May 13) attacked the Islamic seminary’s lack of understanding about contemporary world. “Which world do these people who issue such fatwas inhabit? If they think they spoke for today’s world, they have missed the train,” commented the editorial.

Citing examples of exemplary achievements of women in Muslim countries like Saudi Arabia, Sudan, Malaysia and Kuwait, the newspaper said the ulema should have been more careful while issuing fatwas. “Many Muslim women work because they are the sole breadwinners in their families or they supplement the families’ income earned by the male members,” said the paper. “Darul ifta (the fatwa wing of the Deoband madrassa) should recall the great role women played in Muslim society during the Prophet’s lifetime.”

The Inquilab, Mumbai’s leading Urdu daily, wondered how the Muslim women who were part of the workforce globally could be advised not to work. The paper argued that Islam never stopped women from working, provided they were dressed properly. Referring to the Prophet’s first wife, Khadeeja, who was a successful businesswoman, the paper stressed the need to propel Muslim women into mainstream, not to pull them back.

Urdu columnists and opinion makers are outraged and shocked beyond belief at the Deoband fatwa.

ஆனால், உருது பத்திரிக்கைகள், “கிழி-கிழியென்று| கிழித்துவிட்டனவாம். “என்ன தியோவந்த, நாங்கள் சொல்வது காதில் விழுகிறதா? கேட்கிறாயா?” என்ற தலைப்புகளில் தலையங்கங்கள் எழுதியுள்ளனர்.

முஸ்லீம் பெண்களை இப்படி அடிமைப் படுத்திதான் வைத்திருந்தீர்கள். ஆனால் இன்று அவர்கள் பல நிலைகளில் உயர்ந்து விட்டார்காள்.

சவுதி அரேபியா, சூடான், மலேசியா, குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகளிலேயே, பெண்கள் உயர்ந்து, பல வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள், முன்னேறியுள்ளார்கள். அவர்கள் இப்பொழுது வேலை செய்து, சம்பாதித்துத் தங்கள் குடும்பங்களையே பாதுகாக்கக்கூடிய பொறுப்பான நிலையில் உள்ளார்கள். அதுமட்டுமல்லாது,  கணவனுக்கு உதவியாக அவ்வாறு உழைத்து சம்பாதித்து பணத்தைக் கொடுப்பதால், குடும்பநிலையும் உயர்கிறது. காலம் மாறிவிட்டது, இப்படியே பேசிக் கொண்டிருந்தால், முஸ்லீம்கள் பின்தங்கிவிடவேண்டியதுதான்.

தாருல் இஃதா, என் ற ஃபத்வா கொடுக்கும் தியோபந்தின் பிரிவு, எப்படி முஹம்மது நபி காலத்தில் பல பெண்கள் சமூகத்தில் பெரிய சாதனைகள் புரிந்தார்கள் என்று நினைவு கொள்ள வேண்டும், என்றும் எடுத்துக் காட்டப் பட்டது [“Darul ifta (the fatwa wing of the Deoband madrassa) should recall the great role women played in Muslim society during the Prophet’s lifetime.”].

முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யலாமா?

மே 12, 2010

முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யலாமா?

முஸ்லீம் பெண்கள் அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களில் பர்கா / ஹிஜாப் வகையறா அணியாமல் ஆண்களுடன் சேர்ந்து பேசுவது, வேலை செய்வது சரீயத் சட்டத்திற்கு விரோதமானது, பெண் அவ்வஆறு வேலைசெய்து சம்பாதித்து அந்த சம்பளத்தில் வாழ்வதும் ஷிர்க் / ஹரம் என்றெல்லாம் தாருல் உலூம் தியோபந்த் (Darul Uloom Deoband) என்ற முஸ்லீம் அமைப்பு ஃபத்வா கொடுத்துள்ளதாம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் ஒருபுறம் கேட்டுவரும் நிலையில், இவ்வாறு ஃபத்வா / தடை போடுவது பிற்போக்கானது, என்று முஸ்லீம் பெண்களே கூறியுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிலேயே, இத்தகையக் கட்டுப்பாடு இல்லை என்கின்றனர்.

“ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டின் விமானப் பணிப்பெண்ணை ஹிஜாப் / பர்தாவோடு இருப்பதைக் காட்டுங்கள் பார்ப்போம். எனக்குத் தெரிந்தவரையில் சவுதி ஏர்லைன்ஸ் ஏர் ஹோஸ்டஸ்கள் கூட அத்தகைய உடை இல்லாமல்தான் பணியாற்றுகிறார்கள்”, என்கிறார், லக்னௌவில் கணினிதுறையில் வேலைப் பார்க்கும் ஷபீனா பர்வீன்.

இப்படி செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேலையில், திடீரென்று, தியோபந்த், “நாங்கள் ஃபத்வா எதுவும் புதியதாகக் கொடுக்கவில்லை. விளக்கம்தான் கொடுத்திருக்கிறோம்”, என்கிறார்களாம்!

No ‘fatwa’ against working women, says Deoband
12 May 2010, 1855 hrs IST,IANShttp://economictimes.indiatimes.com/news/politics/nation/No-fatwa-against-working-women-says-Deoband/articleshow/5922300.cms

NEW DELHI: Darul Uloom Deoband, India’s foremost Islamic seminary, Wednesday denied asking Muslim women not to work along with men and said it only suggested that working women should dress “properly”.  “We had only given an opinion based on Sharia that women need to be properly covered in government and private offices,” said Maulana Adnan Munshi, spokesman for the seminary in Saharanpur in Uttar Pradesh.

He denied a media report that the seminary was opposed to men and women working together.  “No new fatwa was issued,” Maulana Munshi told IANS on telephone, adding that even the opinion on dress code was given when a Muslim woman desired to know if women could go to work without a ‘purdah’ or veil. “That too is one-and-a-half months old,” he said.  But the media report claiming that the Deoband seminary had issued a “fatwa” against working women has led to sharp reactions from leaders and scholars from the Muslim community.

அதாவது ஃபத்வா ஏற்கெனெவே உள்ளது போலும்!

அப்படியென்றல், அந்த ஃபத்வாவை மீறித்தான் –

  1. இத்தனை முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் பேசுகிறார்களா,
  2. பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறர்களா?
  3. கல்லூரிகளுக்குப் படிக்கச் செல்கின்றனரா?
  4. “கோ-எஜுகேஷன்” படிப்பகங்கள், பயிற்ச்சிக் கூடங்கள்………………….முதலியவற்றிற்குச் செல்கிறார்களா?
  5. மருத்துவர்களிடம் என்ன செய்வார்கள், உடம்பைக் கட்டாமலே மருந்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார்களா?
  6. காரில் சென்று வேலைசெய்கிறார்களா,
  7. விமானங்களில் ஆண்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பறக்கிறர்களா
  8. வேலை விசயமாக அவ்வாறு ஆண்களுடன் சென்று வருகிறாற்களா?
  9. சினிமாக்களில் நடித்து வருகிறார்களா?
  10. பாடுகிறார்கள்……………………………….
  11. ஆடுகிறர்கள்,…………………………
  12. விளையாடுகிறார்கள்………..

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த விளக்கமுன் தொலைபேசியில் அளித்துள்ளார்களாம்!

  • நாயை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா, வேண்டாமா
  • “டை” அடிக்கலாமா, கூடாதா
  • “லிப்-ஸ்டிக்” உபயோகிக்கலாமா, கூடாதா
  • பூ வைத்துக் கொள்ளாலாமா, கூடாதா
  • புடவைக் கட்டலாமா, கூடாதா
  • பட்டுப்புடவைக் கட்டலாமா, கூடாதா
  • தாலி கட்டலாமா., கூடாதா
  • இந்துக்களின் திருமணங்களுக்கு செல்லலாமா, கூடாதா
  • அவர்கள் ஏதாவது தின்கக் கொடுத்தால், எடுத்துக் கொள்ளலாமா, கூடாதா
  • பிறகு அதனை சாப்பிடலாமா, கூடாதா
  • வெத்தலை, பாக்கு கொடுத்தால்……………..
  • குங்குமம் கொடுத்தால்………………
  • அமங்களமா,  மங்களமா……….
  • தீட்டா……………இல்லையா………….
  • ……………………
  • …………
  • ……..
  • ….
  • ..

இப்படி பிரச்சினைகள் ஆயிரக்கணக்கணக்காக நீட்டிக் கொண்டே போகிறார்கள் முஸ்லீம் நண்பர்கள். பல வெளிப்படையாக வொவாதிக்கின்றனர், பல ஜமாத் கூட்டங்களில், நான்கு சுவர்களில் மறைக்கப் பட்டு விடுகின்றன.

இந்துக்கள் ஏன் இதைப் பற்றிக் கவலைப்படவேண்டும், அவை எப்படி இந்துக்களைப் பாதிக்கிறது? ஆமாம், இவர்கள் இருப்பது, இந்துக்களின் நடுவில். இவையெல்லாமே, இந்துக்களின் பாதிப்பினால்தான் என்று இஸ்லாமிய வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள், பெரும்பாலான முஸ்லீம்களே இந்துக்கள்தாம் என்று மறந்து விடுகின்றனர். ஆகவே, தங்கள் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டு, தாக்கும் போது இந்துக்களை, இந்து சின்னங்களைத்தான் முஸ்லீம்கள் தாக்குகின்றனர்.

பர்கா பயணியால் பீதி: கொல்கத்தா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

மே 5, 2010
இத்தாலியில் பர்கா அணிந்து தெருவில் வந்ததால் அபராதம் விதிக்கப் பட்டது.
02-05-2010 (வெள்ளி): டுனிஸியாவைச் சேர்ந்த அமெல் சலஹ் (Amel Salah)  தன்னுடைய கணவன் பென் சலஹ் ( Ben Salah)வோடு நடநு சென்றாபோது, போலீஸார், அவளது அடையாளத்தை / முகத்தைப் பார்க்க வேண்டும் என்றானர். மறுத்ததால், அபராதம் விதிக்கப் பட்டது. ஏனெனில், இத்தாலியில் அப்பகுதியில் முகத்தை மறைத்துக் கொண்டு அடையாளம் தெரியாமல் ஆடை அணியக்கூடாது என்ற விதியுள்ளது.

பர்கா அணிந்து காரை ஓட்டியதால் ஃபிரான்ஸில் ஒரு பெண்மீது அபராதம் விதிக்கப் பட்டது:  நான்டிஸ் ( Nantes, France), என்ற இடத்தில் சென்ற மாதம் (24-04-2010) 31 வயது பெண்மணி, பர்கா அணிந்து கொண்டு காரை ஓட்டியதால், வொபத்து ஏற்படலாம் என்றதாலும், மற்றும் அத்தகைய முறை அங்கு அனுமதிக்கப் படாதலாலும், £18 அபராதம் விதிக்கப்பட்டது.

கடத்தல் மிரட்டல் ? கோல்கட்டா ஏர்போர்ட்டில் பரபரப்பு
மே 05,2010,15:51  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7433

Front page news and headlines today

கோல்கட்டா : டில்லியில் இருந்து வங்கதேச தலைநகர் தாக்காவுக்கு கோல்கட்டா வழியாக சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தை கடத்த சதி நடப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து விமானம் அவசரமாக கோல்கட்டாவில் தரையிறக்கப்பட்டது. இன்று காலையில் டில்லியில் இருந்து புறப்பட்ட விமானம் சரியாக 11.50 மணியளவில் கோல்கட்டா என்.எஸ்.சி., போஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஹைஜேக் வார்த்தையால் பீதி : விமானத்தில் தாக்காவுக்கு பயணம் செய்து கொண்டிருந்த 2 பேரின் நடமாட்டம் சந்தேகப்படும் படி இருந்துள்ளது. அவர்களை கூர்ந்து கவனித்த விமான சிப்பந்தி அவர்களில் ஒரு பெண் ஹைஜேக் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்தியதை கவனித்தார். இதனால் சந்தேகம் வலுக்கவே, இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் கோல்கட்டா ஏர் டிராபிக் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து அனுமதி பெற்று விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் ஹைஜேக் என பேசிய 2 பேரையும் விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள்  தனியிடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்களிடம் விமான பயணத்துக்கான ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது. விசாரணை முடிந்ததும் அவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என ஏர்போர்ட் வட்டாரம் தெரிவிக்கிறது.

பர்கா பயணியால் பீதி: கொல்கத்தா விமானம் அவசரமாக தரையிறக்கம்
கொல்கத்தா, புதன், 5 மே 2010( 18:04 IST )

http://tamil.webdunia.com/newsworld/news/national/1005/05/1100505062_1.htm

கொல்கத்தா வந்துகொண்டிருந்த “ஸ்பைஸ் ஜெட்” விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புனேவிலிருந்து இன்று டெல்லி வழியாக கொல்கத்தா சென்று கொண்டிருந்த “ஸ்பைஸ் ஜெட்” விமானத்தில் இருந்த இரண்டு ரஷ்ய பயணிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. அதில் ஒரு பெண் பர்கா அணிந்திருந்தார்.இதனால் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. அந்த பெண்ணை முகத்தை மூடியிருக்கும் பர்காவை அகற்ற சொன்னபோது அவர் மறுத்துவிட்டார்.

இதனால் சந்தேகம் மேலும் வலுத்ததால், விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க கொல்கத்தா விமான நிலையத்தில் அனுமதி கோரினார். இதையடுத்து உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு அந்த விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அதிகாரிகள், விமானத்தில் ஏறி பயணிகளை கீழே இறக்கி, விமானம் முழுவதும் சோதனை நடத்தினர். அத்துடன் சந்தேகத்துக்கு இடமான 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் சந்தேகப்படும்படியான பொருள் எதுவும் அவர்களிடம் இல்லை என்பது தெரிய வந்தது. அத்துடன் பர்கா அணிந்திருந்த பெண் ஓங்குதாங்காக நல்ல உயரமான உடல்வாகுடன் இருந்ததால், அது ஆணாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழ வாய்ப்பாக அமைந்து விட்டதாகவும் அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.

பர்கா / நிகாப் பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது!

மே 1, 2010

பர்கா / நிகாப் பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது!

பெல்ஜியம் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் தங்களது அணியும் அடையாளத்தை மறைக்கும் வகையில் உள்ள பர்கா / நிகாப் போன்ற ஆடைக்கு தடை விதித்துள்ளது. இதனை அடுத்து பிரான்ஸ் நாடும் அத்தக்கையச் சட்டத்தை எடுத்துவரும் என்று தெரிகிறது.

Burqa-Niqab-Hijab-chador

Burqa-Niqab-Hijab-chador

இச்சட்டம் அமூலாக்கப் பட்டால், அந்த உடையை அணிந்து பொது இடங்களில் வருபவர்களுக்கு 15 முதல் 25 ஈரோக்கள் (20-34 dollars) அபராதம் அல்லது / மற்றும் ஒருவார சிறைத் தண்டன விதிக்கப் படுமாம்.

முஸ்லீம் பெண்கள் பர்கா, நிகாப், ஹிஜாப் மற்றும் சாதர் என்ற வகையான உடலை மறைக்கும் உடையை, ஏற்கெனெவே உள்ளே அணிந்துள்ள உடைக்கு மேலே போட்டு மறைத்துக் கொள்கிறார்கள்.

பர்கா என்பது முழுமையாக மறைக்கும் ஆடை, அதாவது எதையும் பார்க்க முடியாது. பெண்ணின் அடையாளமே தெரியாது.

நிகாப் என்றதும், அது போலத்தான்.ஆனால் பெண்ணின் கண்கள் தெரியும். பெண்ணின் அடையாளமே தெரியாது.

ஹிஜாப் அணிந்தால், முகம் தெரியும். பெண்ணின் அடையாளம் தெரியும்.

சாதர் அதேபோலத்தான். பெண்ணின் அடையாளம் தெரியும்.

முகத்தை பார்த்து விடக்கூடாது என்ற மதநம்பிக்கையிருந்தால் வாக்களிக்கவே தேவையில்லை!

ஜனவரி 23, 2010

முகத்தை பார்த்து விடக்கூடாது என்ற மதநம்பிக்கையிருந்தால் வாக்களிக்கவே தேவையில்லை!

பர்தா அணிந்து ஒளிப்படம் வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் இருப்பது மத சம்பிரதாயத்துக்கு எதிரானதாக கருதும் முஸ்லிம் பெண்கள், ஓட்டு போடாமலே கூட விட்டுவிடலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.  அதில், ‘முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயம். பர்தா, ஹிஜாப் அணியாத பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பது ஐதீகம். ஆனால், ஹிஜாப் அணியாமல் முஸ்லிம் பெண்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக எடுத்த புகைப்படங்களை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டு ஊர் முழுவதும் காட்டுகிறது.  இந்திய பிரஜைகளுக்கு விருப்பமான மத வழிபாட்டு முறைகளை சுதந்திரமாக பின்பற்ற வழி செய்யும், அரசியல் சட்டப்பிரிவு 25ன் படி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தவறானது.  எனவே முஸ்லிம் பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும். முஸ்லிம் பெண் வாக்காளர்களை முகத்தை மூடியபடி புகைப்படம் எடுக்கவேண்டும் அல்லது ஹிஜாப் இல்லாமல் எடுக்கும் படத்தை பொது பார்வைக்கு வைக்கக் கூடாது’ என குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி தீபக்வர்மா ஆகியார் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘வாக்காளர் அட்டைக்கே இவ்வாறு வருத்தப்படுகிறீர்களே, தேர்தலில் போட்டியிட்டால் என்னவாகும் என புரியவில்லை?   தேர்தலில் தொகுதி முழுக்க வேட்பாளர்களின் புகைப்படத்தை வீதி வீதியாக ஒட்டுவார்கள். அப்போது என்ன செய்வீர்கள்?  வாக்காளர் பட்டியலிலோ, அடையாள அட்டையிலோ தங்கள் புகைப்படம் இருப்பது மத சம்பிரதாயத்தை மீறயது என அந்த பெண்கள் கருதினால், ஓட்டு போடலாமா வேண்டாமா என்பது குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.  அந்தளவுக்கு அவர்கள் மத உணர்வோடு இருக்கிற பட்சத்தில், ஓட்டு போட வேண்டாம்’ என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

முன்னதாக மனுதாரருக்கு எதிராக தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான பாலாஜி ஸ்ரீநிவாசன், ‘மனுதாரர் அடிப்படையையே குழப்பப் பார்க்கிறார். புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா என எல்லா மாநிலத்திலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அனைத்து மாநிலத்திலும் இதேபோலத் தான் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.  ஆனால் எங்கேயும் இதுபோன்ற ஒரு பிரச்னையை யாரும் எழுப்பவில்லை. முஸ்லிம் பெண்கள் பாஸ்போர்ட் எடுக்கும் போது புகைப்படம் எடுப்பது மத உணர்வை புண்படுத்துவதாக இல்லையா’ என வாதிட்டார்.  ஏற்கனவே 2006ம் ஆண்டில் அஜ்மல்கான் இதே விவகாரத்துடன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி, ஜன. 23_2010- பர்தா அணிந்து புகை/ஒளிப்படம் எடுக்கும் பெண்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இசுலாமிய மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட பெண்கள் தங்கள் முகத்தை வெளியில் காட்டக் கூடாது என்பதற்காக பர்தா அணிகின்றனர். இதேபோல் வாக்காளர் அட்டைக்கு ஒளிப்படம் எடுக்கும் போதும் தங்கள் பர்தாவினை அகற்ற முடியாது என்றும், இது மத உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்று என்பதால் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அஜாம் கான் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி தீபக் வர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-

தங்கள் முகத்தை வெளி நபர்கள் யாரும் பார்த்து விடக் கூடாது என்ற மத நம்பிக்கையில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தால் அவர்கள் வாக்-களிக்கவே தேவை இல்லை. வாக்களிக்கச் செல்லும் போது பர்தா அணிந்து செல்லக் கூடாது. அவ்வாறு பெண்கள் பர்தா அணிந்து சென்றால் அவர்களை அடையாளம் காண்பது வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரிளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். வாக்காளர்களை அடை-யாளம் காண்பதற்காகத்தான் ஒளிப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இப்படி பர்தா அணிந்து வந்தால் அவர்களை எப்படி அடையாளம் காணமுடியும்? தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது வாக்களிக்கும் உரிமையின் ஒரு நீட்டிப்பே. தன்னு-டைய முகத்தை ஒளிப்படத்தில் காட்டாம-லேயே தேர்தலில் போட்டியிட முடியும் என்று யாரும் கூறமுடியுமா? பர்தா அணிந்து எடுக்கப்பட்ட ஒளிப்படத்துடன் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்று நீதிபதிகள் விசாரணையின் போது தெரிவித்தனர். இம்மனு மீதான இறுதித் தீர்ப்பு மற்-றொரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

File photo of Muslim women flashing their their voter ID cards before casting votes for the 14th Lok Sabha Election in Kolkata. Photo: Sushanta Patronobish

File photo of Muslim women flashing their their voter ID cards before casting votes for the 14th Lok Sabha Election in Kolkata. Photo: Sushanta Patronobish {Photo courtesy: The Hindu}

பல முஸ்லிம் அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. “சுப்ரீம் கோர்டுடைய திர்ப்பிற்கு நான் முழுவதுமாக திருப்தியடைந்துள்ளேன். ஹஜ் செல்லும்போது பாஸ்போர்ட்டுகளில் ப்டம் இருப்பதை எதிர்க்காமல் இருக்கும்போது, இதை ஏன் எதிர்க்கவேண்டும். இதை ஒரு உணர்ச்சிப்பூர்வமன பிரச்சினையாக்கக்கூடாது“,  அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட ஆணையத்தின் அங்கத்தினர் மற்றும் தில்லியின் சிறுபான்மையினர் கமிஷனின் தலைவருமான கமல் ஃப்ரூக்கி கூறியுள்ளார்.

வாக்காளர் அட்டைக்கு ஒளிப்படம் எடுக்-கும்போது பெண்கள் பர்தா அணியக் கூடாது என்று தேர்தல் ஆணை-யம் வலியுறுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. ஆனால் மத சம்பிரதாயங்களை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இதுதொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிரான்சு நாட்டில் பர்தா அணிவது தடை செய்யப்பட்டு உள்ளது. பொது இடத்தில் பர்தா அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதற்கு உலக அளவில் இசுலாமிய மதத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்-நிலையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாத்தில் நாத்திகம் உண்டா? உண்டு என்று விடுதலை ஒரு பெண் நாத்திகவாதியை அறிமுகப் படுத்துகிறது!

ஜனவரி 3, 2010

நான் எப்படி தினமும் “விடுதலை” படிக்கிறேனோ, அதேபோல, “அவாளும்” என்னுடைய எழுத்துகளைப் படிக்கிறார்கள் என்று முன்னமே குறிப்பிட்டுள்ளேன்.

நேற்று,

http://dravidianatheism2.wordpress.com/2010/01/02/பிள்ளையார்-ஜெயகாந்தன்- ந/

என்ற பதிவில், கீழ் கண்டவாறு கேவிகளை எழுப்பியிருந்தேன்.

—————————————————————————————————————-

பிள்ளையாரை ஜெயகாந்தனுக்குப் பிடிக்கும் அது அவருடைய நம்பிக்கை. திக, திமுக முதலிய போலி, நகலான, நாத்திகர்களுக்கு கடவுளின் பிள்ளையான ஏசுவைப் பிடிக்கிறது,  அல்லாவைப் பிடிக்கிறது. அப்பொழுது எந்த ம்ஆனம், ரோஷம், சூடு, சொரணையுள்ளத் தமிழனும் அதைக் கேட்பதில்லையே? எந்த மயிலாடன், மானாடன், நாயாடன், நரியாடன், பன்னியாடன்,………………..என்று பெயர்வைத்துக் கொண்டு அந்த ஏசுப்பிள்ளைகளையும், அல்லாப்பிச்சைகளையும் பற்றி இவ்வாறு எழுதவில்லையே?

* இப்படி எந்த நாத்திகம் தமிழகத்தில் வேலை செய்கிறது என்று தெரியவில்லை!

* தமிழனுக்கு அந்த அளவிற்கு என்னவாகி விட்டது?

* கிருத்துவத்தில், இஸ்லாத்தில் ஏனிப்படியான பகுத்தறிவுகள் இல்லை என்று ஏன் ஆரய்ச்சி செய்யவில்லை?

* அங்கு பகுத்தறிவுடன் ஏன் நாத்திகம் வேலை செய்வதில்லை?

* இந்த நாத்திகம், பெரியார் நாத்திகம், வீரமணி நாத்திகம் ஏன் மற்ற பிள்ளைகள், பிள்ளைமார்கள், மாப்பிள்ளைகள், மப்பிள்ளைகள், முதலியவர் எப்படி பிறந்தன என்று கேட்பதில்லை!

—————————————————————————————————

உடனே ரோஷம் வந்துவிட்டது போலும்! கீழ் கண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள்!

இஸ்லாத்தில் நாத்திகம் உண்டா? உண்டு என்று விடுதலை ஒரு பெண் நாத்திகவாதியை அறிமுகப் படுத்துகிறது!

கதம்பம்
மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!-1

சு. அறிவுக்கரசு

http://viduthalai.periyar.org.in/20100103/news09.html

எனக்கு பதில்: நம் நாட்டில் 6 மதங்கள் இருக்-கின்றன என்றாலும் இந்து மதத்தில் உள்ள பகுத்தறிவாளர்களும் நாத்தி-கர்களும் தங்கள் கருத்தை வெளி-யிடுவதைப் போல, பிற மதத்தவர்கள் வெளியிடுவதில்லை. அப்படிப்பட்ட கருத்தை மறை பொருளாக ஒரு சிலர் வெளியிட்டபோது ஊர்க்கட்டுப்பாடு போட்டு மடக்கி, முடக்கிட முயல் கிறார்கள். இம்மாதிரி நிலை வேறு சில மத அடிப்படைவாதம் நிலவும் நாடு களிலும் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சோமாலியா. வாழ்வதற்கு வழியில்லாமல், பட்டினியால் நாள் தோறும் நூற்றுக்கணக்கில் செத்து விழுந்தவர்களின் தொகை பல பத்து லட்சங்களைத் தொடும் நிலையில், அவர்களுக்கு ஏதும் செய்யாத மதம், தொழுகைக் கட்டுப்பாடுகளை இறுக்கி அவர்கள்மீது இரக்கம் காட்டாத நிலை தான் இன்றும்.

அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் எழுதியவற்றின் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

சோமாலியாவில் ஒரு இஸ்லாமிய பெண்: நான் குழந்தையாக இருந்தபோதே, தொழுகையின் போது நான் ஏன் என் தம்பிக்குப் பின்னால் நிற்கவேண்டும் என நான் கோபப்பட்டது உண்டு. ஆனாலும் நான் என் பெற்றோருக்கு, என் இனமக்களுக்கு, என்மத குருக்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தேன்; கேள்விகள் கேட்டால் அவர்களை மதிக்காமல் நடக்கிறேன் என்று ஆகிவிடுமோ? என்கிற தயக்கம்தான். இளமைப் பருவத்தில் இசுலாத்திற்கு எதிரான என் கருத்து கூடுதலானது. ஆனால், நான் யார் அல்லாவுக்கு எதிராகப் பேச? குடும்ப கவுரவத்தைப் பெரிதாக நினைக்கும் என் குடும்பம், என் இனம் முக்கியமாகப்பட்டது. மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்த நூல்களைப் படித்தபோது, பெண்-களுக்கு சுதந்தரம் அளித்திடும் மற்றொரு உலகம் இருக்கிறது என்பதை நான் அறிந்தேன்.

குரானின் நரகத்தைக் கண்டு பயந்த அந்த இஸ்லாமியப் பெண்மணி: ஆனாலும் நான் கருப்பு புர்க்கா அணிந்து தலை முதல் கட்டை விரல் வரை மறைத்துக் கொண்டும் அய்ந்து வேளை தொழுதுகொண்டும் குரானும் மத நூலான ஹிடித்தும் விதித்துள்ள எல்லா கட்டுப் பாட்டுக்குள்ளும் இருந்து வந்தேன். காரணம் நரகம் பற்றிய பயம். நரகத்தைப் பற்றிய வருணனைகளைக் குரான் விஸ்தாரமாகவே செய்கிறது; வலி ஏற்படுத்தும் புண்கள், கொதிக்கும் நீர், தோலை உரித்தல், தசையைச் சுடுதல், குடலை உருவுதல் போன்ற கொடுமைகள். மதப் பிரச்சாரம் செய்பவர்கள் எல்லாருமே நரக வேதனைகளை வருணித்ததைக் கேட்டு நான் குலை நடுக்கம் எடுத்துப் பயந்து கொண்டிருந்தேன்.

திருமணம் என்றதும் பயந்தோடியது!: எனக்குத் திருமணம் செய்து வைக்க இருப்பதாக என் தந்தை தெரிவித்தபோதுதான் என் எதிர்காலம் முழுவதுமே, முன்பின் அறிந்திராத ஒருவனுடன் வாழ வேண்டும் என்கிற அச்சம் ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறினேன். ஹாலந்து நாட்-டிற்குத் தப்பிச் சென்றேன். அங்குள்ள நல்ல மனது உள்ளவர்களின் உதவியால் படித்தேன். அரசியல் அறிவியல் படிக்கும் போதுதான் முசுலிம் சமுதாயம்- அல்லாவின் இனம்- ஏழையாக, முரடர்களாக இருப்ப-தற்கான காரணம் தெரிந்தது; நாத்-திகர்கள் என்று முசுலிம்களால் கூறப் படும் நாட்டினர் வசதியாகவும் அமைதி-யாகவும் வாழ்கின்றனர் என்பதும் விளங்கியது. ஆனாலும் நான் முசுலி-மா-கவே, அல்லாவின் விருப்பத்தைக் குறை கூற முடியாமலேயே இருந்தேன்.

படுக்கும்போது மனப்போராட்டம்: பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதுதான் நான் நம்பிக்-கையை இழந்தேன். அங்கே நான் கற்றறிந்த உண்மைகள் வலுவானவை என்றாலும் அது வரை நான் சொல்லி வளர்க்கப்பட்ட கருத்துகளோடு அவை மோதின. ஸ்பினோஸா, ஃபிராய்டு, டார்வின், லாக்கி மற்றும் மில் ஆகியோரின் கருத்துகள் உண்மை; குரானில் சொல்லப்பட்டிருப்பவையும் உண்மைதானே! இருப்பினும் இவை இரண்டுக்குமான வேறுபாடுகளைப் பற்றி ஒரு நாள் சிந்தித்து முடிவுக்கு வரலாம் என முடிவு செய்து அவர்களின் கருத்துகளைத் தொடர்ந்து படித்து வந்தேன். இது சரியா என்பது ஒருபுறம் இருக்க, அறிவு வளர்ச்சிக்கு அல்லா தடையல்லவே என எனக்குள் எண்ணி நான் சமாதானம் அடைந்தேன்.

பர்தாவிலிருந்து விடுதலை, ஜீன்ஸுக்கு மாறினார்: ஆலந்து நாட்டுக்கு வந்தவுடன் என் முசுலிம் உடைகளை விட்டு ஜீன்ஸ் அணியத் தொடங்கினேன். சோமாலியக்காரர்களுடன் பழகுவதைத் தவிர்த்தேன். பிறகு முசுலிம்களுடன் பேசுவதை நிறுத்தினேன். பிறகு ஒரு நாள், என் சிநேகிதனுடன் முதன் முதலாக ஒயினை ருசித்தேன்.

நான் முசுலிமா?: அமெரிக்காவின் இரட்டைக் கட்டடங்கள் ஒசாமா பின் லேடனின் ஆள்களால் தகர்க்கப்பட்ட போது அதனை நியாயப்படுத்திய ஒசாமாவின் செயல் சரிதானா? அவருடைய கருத்தை ஒப்புக்கொள்வதா? இது கடவுளின் கட்டளை என ஏற்க முடியுமா? இவற்றைச் செய்ய இயலாது என்றால் – நான் முசுலிமா?

“நானும் நாத்திகவாதிதான்” என்று கத்தியது: அந்த நேரத்தில் ஹெர்மன் ஃபிலிப்சே எழுதிய நாத்திகப் பிரகடனம் (Atheist Manifesto) நூலைப்படித்தேன். அந்த நூலில் 4 பக்கங்களைப் படித்த உடனே, அல்லாவைப் பல ஆண்டுகளுக்கு முன்பே கைகழுவி விட்டதாக உணர்ந்தேன். நானும் ஒரு நாத்திக-வாதிதான். மதத்தைக் கைகழுவி விட்ட-வள்தான். நம்பிக்கையற்றவள்தான். இது எனக்குப் புரிந்தது. உடனே முகம் பார்க்கும் கண்ணாடி முன்னால் நின்று என்னையே பார்த்து நான் கடவுளை நம்பவில்லை என்று சோமாலிய மொழியில் உரக்கக் கூவினேன்.

நரக பயம் மறைந்தது: அதன் பின் மனதுக்கு இதமாக இருந்தது. வலி ஏதும் இல்லை; தெளிவு பிறந்தது. நான் கொண்டிருந்த நம்பிக்கை களில் இருந்த முரண்பாடு-கள் சுக்கு நூறாக உடைந்து போயின. நரகத் தீயைப் பற்றி நெடு நாள்களாகப் பதிந்திருந்த பயம் நீங்கியது. கடவுள், சைத்தான், தேவதைகள் போன்ற மனிதனின் கற்பனைகள் மறைந்து இவையெல்லாம் எளியோர் மீது தம் கருத்தைத் திணிக்கும் வலியோரின் கற்பனைகள் எனத் தெளிவு பிறந்தது. இதற்குப் பின் உலகில் சுயமரியாதை, காரண காரியம் ஆகியவற்றின் அடிப்-படையில் நான் பயணம் தொடர்வேன் எனும் நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு வழிகாட்டி, எனக்குள் இருக்கிறது; புனித நூல்களில் இல்லை என்பதும் புரிந்தது.

இறந்த பிறகு எலும்புக் கூடாவோம்!: அடுத்தடுத்த மாதங்களில் நான் மியூசியங்களுக்குப் போய், பதப்படுத்-தப்-பட்ட மம்மி உடல்கள், இறந்து சிதைந்து—-போன உடல்கள், எலும்புக் குவியல்கள் ஆகியவற்றைப் பார்த்த-போது நாமும் இறந்தபிறகு இப்-படித் தான் எலும்புக் கூடாக இருப்-போம் என நினைப்பு வந்தது.

இசுலாத்தில் நீங்கள் அல்லாவின் அடிமைகள்: கடவுள் பற்றிய நம்பிக்கை இல்லா-மலேயே வாழ முடியும் என உறுதியா-னது. இசுலாத்தில் நீங்கள் அல்லாவின் அடிமைகள், சுயமாக எதையும் செய்-யக் கூடாதவர்கள்; நீங்கள் சுதந்தர-மா-ன–வர் அல்ல; நரகம் பற்றிய அச்சம் ஊட்டப்பட்டிருப்பதால் நீங்கள் நல்ல-வராக நடிக்கிறீர்கள்; உங்களுக்கென்று நல்ல கோட்பாடுகளே கிடையாது.

நாமே நமக்கு வழிகாட்டி: மனிதர்களாகிய நாம் நமக்கு நாமே வழி காட்டிகள்; நல்லவை, கெட்டவை அறியக்கூடியவர்கள்; நம் ஒழுக்கத்-திற்கு நாமே பொறுப்பானவர்கள் என்-கிற முடி-வுக்கு வந்தேன். மதங்களின் நோக்கம் எனச் சொல்லப்படுபவற்றை, எவ்விதமான கட்டுப்-பாடுகளுக்கும் விதிமுறை களுக்கும் பயந்து தலை வணங்கி ஏற்றுக் கொள்ளாமல் – நம் விருப்பத்தை நசுக்காமல் – நாமும் நல்ல-வர்-களாக வாழ்ந்து பிறர்க்கும் நல்ல-வர்-களாக இருக்கலாமே என்கிற முடிவுக்கு வந்தேன். ஏற்கெனவே என் வாழ்வில் பல பொய்-களைச் சொல்லியிருக்கிறேன்; போதுமான அளவுக்குச் சொல்லி-விட்-டேன்; அவை போதும் என என் மன-துக்குள் உறுதி செய்து கொண்டேன்.

நரகம் – இஸ்லாத்திலும், கிருட்துவத்திலும்: இன்ஃபிடல் (Infidel) (நம்பிக்கை அற்றவர்) எனும் நூலை 2007 இல் எழுதி வெளியிட்ட பிறகு அமெரிக்கா போனேன். ஏசு கிறிஸ்துவின் போதனை-களின்பால் ஈர்ப்பு உண்டா என என்னி-டம் கேட்கப்-பட்டது. மத நம்பிக்கை-யற்றவளாக இருப்-பதை விட இசுலாத்தை விட மனிதாபி-மானம் உள்ள கிறித்துவத்-தில் நம்பிக்கை வைக்கலாமே எனக்-கேட்டனர் போலும்! பேசும் பாம்புகள், சொர்க்கலோகத் தோட்டங்கள் பற்றிப் பேசும் மதம்தானே அது? முசுலிம்களை விட நாடகபாணியில் நரக வேதனை-யைக் கிறித்துவம் கூறுகிறது என்றாலும் அந்தக் கதைகள் எல்லாம் என் பாட்டி எனக்குச் சொன்ன தேவதை-கள், ஜின்-கள் பற்றியவை போன்றே எனக்–குத் தோன்றின.

தெளிவானது நாத்திகம் தான்: எதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஒலி! நாத்திகமே! அது ஒரு மதக் கோட்பாடல்ல. இறப்பு நிச்சயம். சொர்க்கம் பற்றிய ஆசையோ நரகம் பற்றிய அச்சமோ இல்லாத நிலை. எல்லாவிதமான ரகசியங்கள், துன்பங்கள், அழகு, வலிகள் போன்றவற்றுடன் கூடிய இவ்வுலக வாழ்வில் நாம் தடுமாறு-கிறோம், சமாளித்து எழுகிறோம், துக்கப்படுகிறோம், பாது-காப்பின்மையை உணர்-கிறோம், நம்பிக்கை-யுடன் இருக்கிறோம், தனிமையை உணர்கி-றோம், மகிழ்ச்சி-யு-டன் இருக்கிறோம், அன்பு செலுத்துகி-றோம். இதற்கு மேல் ஒன்றும் இல்லை; இதற்கு மேல் எதுவும் எனக்குத் தேவை-யில்லை.

மாஜி முஸ்லிமின் கட்டுரை இது என்று முடிக்கிறார்கள்: சோமாலிய (மாஜி) முசுலிம் பெண் அயான் ஹர்சி அலி எழுதிய Infidel எனும் நூலின் ஒரு கட்டுரை இது. The Portable Atheists (எடுத்துச் செல்லக்-கூடிய நாத்திகர்கள்) எனும் தலைப்பில் கிறிஸ்டோ-பர் ஹிட்சின்ஸ் தொகுப்பா-சிரி-யராக இருந்து தந்துள்ள 47 கட்டுரை-களில் கடைசிக் கட்டுரை இது).

———————————————————————————————————–

முதல் பத்தியில் நேரிடையாக எனக்கு பதில் அளித்துள்ளார்கள்.

இருப்பினும், இது இஸ்லாம் விஷயமாதலால், அவர்கள் என்ன சொல்வார்கள் என்றுதான் பார்க்கவேண்டும்.

எனது கேள்வி, இஸ்லாத்தில் நாத்திகம் இருக்கமுடியுமா?

நாத்திகவாதிகள் இருக்கமுடியுமா?

மாஜி முஸ்லிம் என்று இருக்கமுடியுமா?