நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (1)
24-05-2023 இரவுமருத்துவமனையில்நடந்தது: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஜன்னத் (29). இவர், மே 24-ம் தேதி அன்று இரவு பணியில் இருந்தார்[1]. அப்போது, இரவு 11.30 மணியளவில் திருப்பூண்டியைச் சேர்ந்த பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம், தன் உறவினர் சுப்பிரமணியன் என்பவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார்[2]பாக, முதலில் சுப்பிரமணியனுக்கு என்ன பிரச்சினை, நடு இரவில் வந்த நோயாளிக்கு என்ன முதல் உதவி செய்ய வேண்டும், சிகிச்சை என்ன அளிக்கப் பட்டது பற்றி ஊடகங்கள் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. அப்போது, அங்கு மருத்துவர் ஜன்னத் ஹிஜாப் அணிந்திருந்ததைப் பார்த்த புவனேஸ்வர் ராம், அரசுப் பணியில் இருக்கும்போது எப்படி ஹிஜாப் அணியலாம்,” அரசுப்பணியின்போதுமருத்துவர்ஏன்ஹிஜாப்அணியவேண்டும்… மருத்துவருக்குஎன்றுசீருடைகிடையாதா… உண்மையிலேயேநீங்கள்மருத்துவர்தானா… எனக்குச்சந்தேகமாகஇருக்கிறது?” ”, எனக் கேள்வி எழுப்பியதுடன், மருத்துவர் ஜன்னத்தை செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால், உறவினரின் உடல்நிலையை விட, இது தான் பெரிய பிரச்சினையாக தெரிகிறதா? அவர் வீடியோ எடுப்பதை மருத்துவர் ஜன்னத்தும் தன் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்[3]. அந்தப் பெண் மருத்துவர், “பெண்கள்பணியில்இருக்கும்போதுஅசிங்கமாகப்பேசிக்கொண்டிருக்கிறார். ஒருபெண்மருத்துவரைஅவரின்அனுமதியில்லாமல்வீடியோஎடுத்துக் கொண்டிருக்கிறார்,” எனச் சொல்லி அவரும் வீடியோ எடுத்திருக்கிறார்[4]. இந்த 2 காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அப்படியென்றால், ஜன்னத்திற்கும், அதுாான் முக்கியமாகப் பட்டது போலும்..
ஹிஜாபை கழட்டச் சொன்ன பிஜேபி நிர்வாகி[5]: முதலில் சுப்ரமணியனின் உடல்நிலையை மறந்து, இவர் இப்படி, இவ்விசயத்தில் ஈடுபட்டாரா என்பது நோக்கத் தக்கது. மருத்துவமனைக்கு வருபவர், தங்களது உடல்நிலை, சிகிச்சை, எந்த டாக்டரைப் பார்ப்பது, எங்கு செல்வது என்று தான் கவனமாக இருப்பார்களே தவிர மற்றவர்களைக் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அது மாதிரி பிரச்சினை செய்யத்தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நோயாளியுடன் தான் வரவேண்டும் என்பதில்லை. நக்கீரன், “பெண்மருத்துவரிடம்ஹிஜாப்பைகழட்டச்சொல்லிவாக்குவாதம்; பாஜகபிரமுகர்கைது” என்றும், தினமணி, “ஹிஜாபைகழற்றச்சொல்லிபெண்மருத்துவரைமிரட்டியபாஜகநிர்வாகி” என்றும் தலைப்பிட்டு செய்திகள் போட்டுள்ளன. இரண்டையும் இடதுசாரி-வலதுசாரி, பார்ப்பன எதிர்ப்பு-ஆதரவு, திமுக-அதிமுக, இந்துவிரோதம்-ஆதரவு என்று எப்படியெல்லாம் வகைப் படுத்தினாலும், ஊடகக்காரர்கள் தாங்கள் இதைத்தான் சொல்லவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். அதாவது, பிஜேபி மத-அரசியல் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது, அதற்கான வேலைகளை செய்து வருகின்றது என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. பிஜேபிகாரர்களுக்கு அந்த அளவுக்கு நெளிவு-சுளிவு எல்லாம் தெரியாது, வெளிப்படையாக இந்துத்துவம், “பாரத் மாதா கி ஜே” என்று கிளம்பி விடுவார்கள். ஒரு சமய வேகும், இன்னொரு சமயத்தில் வேகாது.
25-05-2023 புவனேஸ்வர் ராம் கைது, ஆர்பாட்டம்முதலியன: மருத்துவர் நோயாளி பற்றியோ, சிகிச்சை பற்றியோ கவலைப் படாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சுவாகவாசமாக செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிகிறது. ஒரு மருத்துவர் போலவே அவர் நடந்து கொள்ளவில்லை. ஸ்டெதாஸ்கோப் கூட காணப்படவில்லை. அவருக்கு தான் ஒரு முஸ்லிம், ஹிஜாப் அணிந்து கொள்வேன் என்ற தோரணையில் பேசி, கத்தி, ஒருமையில் “போ” என்று கத்துவதும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் ராமை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து தலைமையில் 25-05-2023 அன்று முன்தினம் சாலை மறியல் நடந்தது. இந்நிலையில், மருத்துவர் ஜன்னத் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதம் தொடர்பான குற்றம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் புவனேஸ்வர் ராம் மீது கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்[6]. கம்யூனிஸ்டுகள் அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[7]. இந்நிலையில், புவனேஸ்வர் ராம் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 26-05-2023 அன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்[8]. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. புவனேஸ்வர் ராம் கைது செய்யப் பட்டார், படவில்லை என்று முரண்பட்ட செய்திகளும் வந்துள்ளன[9]. இந்நிலையில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வர்ராம் உறவினரான சுப்ரமணியன் நேற்று காலை உயிரிழந்தார்[10].
25-05-2023 அன்று மருத்துவமனையில் நோயாளி இறப்பு: நோயாளி சுப்ரமணியன் எப்படி, எவ்வாறு, ஏன் உயிரிழந்தார் என்பது பற்றி யாரும் கவலப் பட்டதாகத் தெரியவில்லை. நடு ராத்திரியில் வந்த போது, உரிய சிகிச்சை அளிக்கப் பட்டதா, இல்லையா, யார் சிகிச்சை அளித்தனர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இருவரும் வீடியோ எடுத்தனர், இணைதளத்தில் போட்டனர், பரவியது எனூதான் செய்திகள் போட்டுள்ளனர். இதனிடையே போலீஸாரால் புவனேஸ்வராம் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜகவினர் சடலத்தை சாலையில் வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்[11]. மேலும் அரசு மருத்துவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுவிக்க கோரியும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்[12]. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்[13].
[12] சமயம்.காம், நாகப்பட்டினம்திருப்பூண்டிஅரசுஆரம்பசுகாதாரநிலையம்; ஹிஜாப்விவகாரத்தில்பாஜகநிர்வாகிகைது!, Madhumitha M | Samayam Tamil | Updated: 27 May 2023, 11:30 am
கம்யூனிஸ்டு, காங்கிரஸ்உள்ளிட்டகட்சிகள்கடும்கண்டனம்எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
05-05-2023 – தமிழகநீதிமன்றத்தில்வழக்கு, தள்ளுபடி, திரைப்படம்வெளியீடு, ஆர்பாட்டம்: தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2]. இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3]. ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.
06-05-2023 – பாதுகாப்புகாரணங்களுக்காகதென்தமிழகத்தில்இந்தபடம்திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
07-05-2023 சென்னையில்சீமான்ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.
சீமான்எதிர்ப்பு– போலீஸார்கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12]. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.
தமிழகஅரசுதடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.
[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர்எதிர்ப்புகள்… தமிழ்நாடுமுழுவதும் ‘திகேரளாஸ்டோரி‘ படத்தின்காட்சிகள்ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)
பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!
கடவுளின் தேசமான கேரளாவில் மாணவி மேடைக்கு வந்தது சர்ச்சையானது: “கடவுளின் தேசம்” என்று பறைச்சாற்றிக் கொள்ளும் கேரளாவில், சிறுமியை இஸ்லாமிய உலேமா உதாசீனப் படுத்தியுள்ளது திகைப்பாக உள்ளது. அதிக படிப்பறிவு உள்ள மாநிலமும் கேரளா தான். பிறகு, ஏன், எதற்கு இந்த முரண்பாடு? கேரளாவில் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து விருது வழங்கியதற்காக விழா அமைப்பாளர்களை முஸ்லிம் மத குரு ஒருவர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மத குருவின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது[1]. சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு) என்பது கேரள சன்னி மத குரு சங்கமாகும். இந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து சான்றிதழை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது[2]. கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது[3]. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார்[4].
முசலியார்மேடையில்இருக்கும்போதுபெண்கள்வரக்கூடாதாம் – கோபித்துக்கொண்டுதிட்டியஉலேமா: வழக்கம் போல முதலமைசர் மற்றும் ஆளும் கட்சியினர் அமைதியோடு இருந்தனர். “குர்ஆன்கட்டளைகளைமீறிமுஸ்லிம்பெண்கள்தனிமையில்தள்ளப்படுவதற்குஇச்சம்பவம்இன்னொருஉதாரணம்,” என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு தெரிவித்துள்ளார்[5]. கேரள சமூகவலைதளங்களில் வைரலான ஒரு காணொளியே ஆளுநரையும் சங்கடப்படுத்தியுள்ளது[6]. கேரளத்தின் மளப்புரத்தில் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மதரஸா பள்ளியில் (அரபு பாடம்) பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மதரஸா நிர்வாகி அந்த மாணவியின் பெயரைச் சொல்லி விருது வாங்க வர மேடைக்கு அழைத்தார். மாணவியும் மேடைக்கு வந்தார். இதைப் பார்த்ததும் சமஸ்தா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.டி.அப்துல்லா முசலியார், பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண்ணை எப்படி பொதுமேடைக்கு அழைக்கலாம். என்னைப் போன்ற மதக்குருக்களை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிச் செய்யலாமா? என சிறுமியை மேடைக்கு அழைத்தவரை கடுமையாகத் திட்டினார்.
உங்களுக்குமதவிதிகள்தெரியாதாஎனவும்எச்சரித்தார்: இந்த சிறுமியை அழைத்ததற்குப் பதில் அவரது பெற்றோரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் எனவும் அப்துல்லா முசலியார் திட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சிறுமி கீழே அனுப்பப்பட்டு, அவரது பெற்றோர் மேடைக்கு வந்தனர். இது சிறுமியை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, “படித்தவர்கள்அதிகம்நிறைந்த, பெண்கள்அதிகம்வாழும்கேரளத்தில்இந்தசம்பவம்நடந்திருக்கிறது. சமூகத்தைபலதலைமுறைகளுக்குகீழ்நோக்கிஇழுப்பவர்களிடம்இருந்துமக்கள்விழிப்படையவேண்டும்,” என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிராகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் இவ்விவகாரத்தை அமுக்கி வாசித்தனர்.
பெண்கள்தனிமைப்படுத்தப்படவேண்டும்என்பதுவிதியல்ல: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் ட்விட்டர் பக்கத்தில்[7], “திருக்குரானின்கட்டளைகளையும்மீறி, முஸ்லிம்பெண்கள்தனிமையில்தள்ளப்படுவதற்குஇந்தசம்பவமும்ஒருஉதாரணம். முஸ்லிம்குடும்பத்தில்பிறந்ததால்தகுதியானவிருதைப்பெறும்போதுமேடையில்அவமானப்படுத்தப்பட்டதைப்பார்க்கும்போதுவருத்தமாகஉள்ளது. மதகுருமார்கள்குரானின்கட்டளையைமீறியும், அரசியலமைப்புசட்டத்தைமீறியும்முஸ்லிம்பெண்களைதனிமைப்படுத்துவது, அவர்களின்ஆளுமையைநசுக்குவதுஆகியவற்றுக்குஇதுவும்ஒருஉதாரணம்,” என வேதனையோடு கூறியுள்ளார்[8]. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்[9]. இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் தரப்பையும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்[10]. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்[11], “இந்தவிவகாரத்தில்கேரளாஆளும்தரப்பினர்மௌனம்குறித்துவருத்தம்அளிக்கிறது. அரசியல்வாதிகள்மட்டுமின்றிஅனைவருமேஇந்தவிவகாரத்தில்மௌனம்காக்கின்றனர். நமதுவீட்டுப்பெண்களின்மரியாதைமற்றும்கண்ணியம்பாதுகாக்கஅனைத்துக்கட்சிகளும்இதுகுறித்துப்பேசவேண்டும். இந்தவிவகாரத்தில்அவர்களைவிட (கேரளஅரசு) நான்அதிகம்பேசிஉள்ளேன்,” என்றார்[12].
அடிப்படைவாதஇஸ்லாமில்பெண்கள்தனிமைப்படுத்தப்படுகின்றனர்: முஸ்லிம் பெண்கள் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு சமமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடக் கூடாது, காஜி, மௌலானா, உலேமா முன்பாக முகத்தைக் காட்டிக் கொண்டு வரக் கூடாது, பர்தா / ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும், முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம், தலிபன் போன்ற அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் ஆணையிடுவதை செய்திகளாகப் படிக்கலாம். விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற நான்கு நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது[13]. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கணவன்-மனைவி உள்பட எத்தகைய உறவாக இருந்தாலும் கூட ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும்[14]. இதுபற்றி ஆப்கனின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛உணவகங்களில்ஆண்கள், பெண்களைபிரித்துஉணவுசாப்பிடஅறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்
[3] விகடன், `பெண்களைபரிசுபெறமேடைக்குஅழைக்கக்கூடாது!’ – கேரளஇஸ்லாமியதலைவரின்செயலால்கொதித்தகவர்னர், சிந்து ஆர், Published:12 May 2022 6 PMUpdated:12 May 2022 6 PM.
[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெண்கள்மேடைக்குவரக்கூடாது..!! இந்தகாலத்தில்இப்படிஒருஇசுலாமியஅமைப்பா.? கொந்தளிக்கும்ஆளுநர், Ezhilarasan Babu, Chennai, First Published May 13, 2022, 1:44 PM IST; Last Updated May 13, 2022, 1:44 PM IST
[9] தினமணி, மலப்புரத்தில்சிறுமிஅவமதிப்புவிவகாரம்: அரசியல்தலைவா்களின்மெளனம்ஏமாற்றமளிக்கிறது, By DIN | Published On : 13th May 2022 03:01 AM | Last Updated : 13th May 2022
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (10)
huji Bangaladesh
என்.ஐ.ஏ(NIA) மற்றும்ஆர்.ஏ.பி(RAB)சேர்ந்துவேலைசெய்யதிட்டம்: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகிற ஷேக் கவுசர், யூசுப் என்னும் இரண்டு பேர் உள்பட 12 பேர் தலைமறைவாக உள்ளனர். ஷேக் கவுசர், யூசுப் இவ்விருவரும் வங்காளதேச பிரஜைகள் என்பதால், என்.ஐஏ – தேசிய புலனாய்வு ஏஜென்சி படையினர் வங்காள தேசத்திற்கு சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படியே, தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் மேற்குவங்க போலீஸ் அதிகாரிகள் நவம்பர் 9 அல்லது 10-ம் தேதியில் வங்காளதேசம் செல்வதாக உள்ளது. இருநாடுகளின் புலனாய்வு குழுக்கள் [the National Investigation Agency (NIA) and Rapid Action Battalion (RAB)] இவ்விசயத்தில் ஒன்றாக வேலை செய்யவும், விவரங்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளன[1]. இந்த வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் தொடர்பாக துப்பு தருவோருக்கு ரூ.10 லட்சமும், மீதி 7 குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் கொடுப்போருக்கு ரூ.5 லட்சமும் ரொக்கப்பரிசு வழங்குவதாக என்.ஐஏ ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்குள் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன.
Burdwan blast -Subramanian swami photo
12-11-2014 (புதன்கிழமை) அசாமில்அன்றுஅசாமில்விசாரணை: அசாமில் உள்ள பார்பேடா என்ற இடம், ஜிஹாதிகளின் புகலிடமாக உள்ளது போலும். என்.ஐ.ஏ இங்கு கீழ்கண்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டது[2]:
கவான் புர்ஹா, கிராமத் தலைவர் [Gaon Burha (village headman)]
ரஷீத் அலி அஹமது [Rashid Ali Ahmed],
ஜஹிதுல் இஸ்லாம் [Jahidul Islam],
படாஸி பேகம் [Batasi Begum],
சைஃபுல் இஸ்லாம் [Saiful Islam] மற்றும்
சைபர் அலி [Saibar Ali],
சஹனூர் ஆலம் [Sahanur Alam] பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சந்தேகிக்கப் படும் குற்றவாளியின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மசூதியில் இவர்கள் இருந்ததனர்[3]. இவ்வாறு மசூதிகளில் தஞ்சம் அடைவது, ஒளிந்து கொண்டிருப்பது முதலியன புலன் விசாரணை செய்பவர்களுக்கு தர்ம சங்கடமாக, பிரச்சினையாக இருக்கிறது. சஹனூர் ஆலத்தின் மனைவி சுஜனா பேகம் [Sujana Begum] ஏற்கெனவே 07-11-2014 அன்று வெளியூர் பேருந்து நிலையத்தில் [interstate bus terminus -ISBT] கைது செய்யப் பட்டுள்ளாள்[4]. படாஸி பேகம் இவருக்கு நெருங்கிய நண்பராம். இப்பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது. ரஷீத் அலி அஹமது பல முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்த்துள்ளான். அவர்கள் எல்லோருமே “சதாலா” என்ற கிராமத்திலிருந்து மறைந்து விட்டதாக சொல்கிறார்கள். அதாவது, மாயமாகும் முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு ஜிஹாதிகளாக மாற்றப் படுகிறார்கள் போலும். சஹனூர் ஆலம் மறைந்திருந்தாலும், அவனது சகோதரன் ஜகாரியாவும் [Jakaria] ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளான்[5]. சஹனூர் ஆலம் வங்காளதேசத்திற்கு தப்பித்துச் சென்றுவிட்டதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவ்வாறு ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பாக மனைவியும் கணவனுடன் சேர்ந்து தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருவது இவ்வழக்கில் அதிகமாக தெரிய வருகிறது. அதாவது, ஜிஹாதி-குண்டு தயாரிப்பு-குண்டுவெடிப்பு முதலியன ஏதோ குடும்பத் தொழிலாகி விட்டது போலிருக்கிறது.
jmb – Bangala terror
அகிலஇந்தியஜனநாயகக்கூட்டணிக்கும்ஜிஹாதிகளுக்கும்தொடர்புள்ளதா?: அசாமில் அகில இந்திய ஜனநாயக் கூட்டணி கட்சி தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தி வருகிறது. பங்காளதேச எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. அசாம் சட்டசபையிலும் 26 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளதுமசாமில் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை இக்கட்சி கண்டுள்ளது. ஆனால், முஸ்லிம் கட்சிக்கும் [All India United Democratic Front (AIUDF)] இதற்கும் தொடர்புள்ளது என்று ஒரு டிவி-செனல் குறிப்பிட்டதால்[7], ஹைதர் ஹுஸைன் போரா [Haidar Hussain Bora] என்ற அக்கட்சியின் தலைவர், ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்[8]. “இந்தியா-டிவி” செனல் மீதும் வழக்குத் தொடரப் பட்டுள்ளது[9]. அச்செனல் “நியூஸ்-எக்ஸ்” என்று இன்னொரு தளத்தின் மூலம் தெரிய வருகின்றது[10]. அசாம் அனைத்து ஜனநாயக பேரவை மற்றும் ஜமைத் உலமா இ-இந்த் ஒரு இளைஞர் குழுவை சுக்சார், தூப்ரி மாவட்டம், அசாமிலிருந்து ஜிஹாதி பயிற்சி பெற பங்களாதேசத்தில் உள்ள ரங்கப்பூர் என்ற இடத்திற்கு, கடந்த ஜூன்-ஜூலை 2013 மாதங்களில் அனுப்பி வைத்ததாக “நியூஸ் எக்ஸ்” செனல் குறிப்பட்டது[11]. முதல் குழுவில் உள்ளவர்களை முன்னணி தலைவர்களே பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினர் என்றும், இரண்டாவது குழு நவம்பர் 2013ல் சென்றது என்றும் குறிப்பிட்டது[12]. இத்தகைய பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஜிஹாதி நிறுவனங்கள் ஹுஜி, சிமி, மூல்தா – [ intelligence reports named jihadi organisations like HuJI, SIMI, MULTA.] முதலியன. அசாம் முதலமைச்சர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் 04-11-2014 (செவ்வாய்கிழமை) இதே மாதிரித்தான் சொல்லியிருந்தார்[13], “ஜே.எம்.பிஇங்குமுஸ்லிம்பெண்களிடம்பர்கா / பர்தாதுணிகளைவிற்கும்போர்வையில்ஒருபெண்கள்பிரிவைஏற்படுத்தமுயன்றுள்ளார்கள். பார்பேடாமற்றும்நல்பாரிஊர்களில்உள்ளஇளைஞர்கள்வெளிநாடுகளுக்குச்சென்றுஜிஹாதிபயிற்சிபெற்றுள்ளனர்.” முன்பு (29-10-2014) பிஜேபி, பஜ்ரங் தள் முதலியவை மௌலானா பதாருத்தீன் அஜ்மல் [Maulana Badruddin Ajmal ] கைது செய்யப் படவேண்டும் என்று போராட்டம் நடத்தின[14]. ஆனால் அக்கட்சி தங்களுக்கும் பங்களாதேசத்து ஜிஹாதி குழுமங்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று அறிவித்துள்ளது[15].
வங்காளதேசத்தின் மெத்தனம்
ஜே.எம்.பியின்அம்ஜத்அலிசென்னைக்குத்தப்பிச்சென்றான்என்றதுஆனால்கைதுஎன்றது (10-11-2014): ஜே.எம்.பியின் அம்ஜத் அலி ஷேக்கிற்கு [Amjad Ali Sheikh] அடைக்கலம் கொடுத்து உதவியதற்காக, சஸ்ஹஸ்த்ரா சீமா பல் [Sashastra Seema Bal] என்ற மத்திய அரசு போலீஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரனிடம் 10-11-2014 அன்று விசாரணை நடத்தப் பட்டது[16]. இவன் உத்திரப் பிரதேசத்தில் உள்ள பஸ்தி வழியாக சென்னைக்குத் தப்பிச் செல்ல, அந்த வீரன் அம்ஜத் அலி ஷேக்கிற்கு உதவியுள்ளான்[17]. தில்லியில் அவனுக்கு இடம் கொடுத்துள்ளான், தில்லியிலிருந்து அவன் சென்னைக்குத் தப்பிச் சென்றுள்ளான்[18]. அதாவது, சென்னையில் இத்தகைய ஆட்களுக்கு தங்கிக் கொள்ள அல்லது மறைந்து வாழ இடம் கொடுக்கப் படுகிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே, சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. ஆகவே சென்னையில் “ஸ்லீப்பர் செல்கள்” உள்ளனவா அல்லது அறிந்தே ஜிஹாதிகளுக்கு, இங்குள்ள அடிப்படைவாதி முஸ்லிம்கள் உதவுகிறார்களா என்ற விசயம் நோக்கத்தக்கது. ஜே.எம்.பியின் அம்ஜத் அலி இப்பொழுது சென்னையிலுள்ளானா அல்லது வேறெங்காவது தப்பித்துச் சென்று விட்டானா எ இருக்கின்று தெரியவில்லை. அம்ஜத் அலி ஷேக் 10-11-2014 (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக “டெயிலி மெயில்” குறிப்பிடுகின்றது[19]. இவர்களுக்கு ஜார்கண்டிலும் தொடர்பு இருப்பதால், அங்கும் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.
அல்-உம்மா சிமி ஹிஹாதின் பல உருவங்கள்
சென்னையில்வாழும்குல்ஷன்பீபிஎன்ற “போதைமருந்துராணி”[20]: என்.ஐ.ஏ குல்ஷன் பீபி என்ற “போதைமருந்து ராணி”யைத் தீவிரமாகத் தேடி வருகிறாதாம். கொல்கொத்தாவிலிருந்து சென்னைக்கு ஓடிவந்துவிட்ட அந்த பெண்மணி இப்பொழுதும் தனது “ரிமோட் கன்ட்ரோல்” மூலம் “போதைமருந்து வியாபாரத்தை” செய்துவருவதாக, என்.ஐ.ஏ-துப்பறிவாளர்களுக்குத் தெரியவந்துள்ளது. ஆனால், சென்னை போலீஸாருக்கோ, போதைமருந்து தடுப்புத்துறையினருக்கோ, அப்பெண்மணியைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமல் இருக்கிறது. ஆனால், மே.1.2014 குண்டுவெடிப்புக்கு முன்னர், இரண்டு ஜே.எம்.பி தீவிரவாதிகள் தங்க சென்னையில் இடம் கொடுத்துள்ளார். அவள் கிழக்குக் கடற்கரையில் மஹாபலிபுரம் வரையில் உள்ள ரிசார்ட்டுகளில் போதைமருந்து ஜல்ஸா பார்ட்டிகளை நடத்தியிருப்பதாகவும் கூறுகிறார்கள். பி.பி.ஓக்கள் மற்றும் கே.பி.ஓக்களில் வேலை செய்யும் இளம் ஆண்கள்-பெண்கள் தவிர, திரைப்பட உலகில் உள்ளவர்களும், இவளது வாடிக்கையாளர்களாம். ஆகஸ்ட்.1,1993 அன்று உத்தம் மண்டல் என்ற சி.பி.எம் தோண்டர், இந்த பெண்மணி ஒரு உருது பள்ளிக்கு வந்திருந்த போது எதிர்ப்புத் தெரிவித்தால் குரூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். அப்பொழுது குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டாலும், பிறகு ஒரு சி.பி.எம் அமைச்சர் தயவால் தப்பி விட்டார். கொல்கொத்தாவில் தேசிய போதைமருந்து தடுப்புத்துறை மற்றும் போலீஸாரின் தொல்லை தாங்காமல், சென்னைக்கு தனது ஜாகையை மாற்ரிவிட்டதாக தெரிகிறது. எல்லொருக்கும் லஞ்சம் கொடுத்து கொல்கொத்தா-சென்னை ரயில்வழியில் தனது ஆட்சியை நடத்தி வருகிறாராம்[21]. இவ்வழக்கில் ஏற்கெனவே ஒரு குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டிருக்கிறாள், ஆனால், அவள் வேறு. பாகிஸ்தானில், இதே பெயரில் இன்னொரு போதை மருந்து ராணி இருக்கிறாள். அவளும் வேறு, ஆக இந்த சென்னையில் இருக்கும் ராணி யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
முந்தையசென்னையுடனானதொடர்புகள்: முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[22]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர சென்னை கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் இவர்களது சம்பந்தம் உள்ளதாக தெரிகிறது.
[3] A NIA team led by Superintendent of Police Debojit Hazarika during their search in the village yesterday had directed the five to present themselves at the NIA office in Guwahati as they had attended a prayer meeting in a house in the village which was close to the one of Sahanur Alam, one of the main accused in the Burdwan blast case, they said.
[4] Batasi Begum is a close friend of Sahanur’s arrested wife Sujana Begum, they said adding, Rashid Ali Ahmed was called as many youths were missing from his Chatala village.
[5] In continuation of their search operation at Chatala village, the NIA searched Sahanur’s house yesterday (11-11-2014) for the third time, quizzed his father and brother about the accused. Alam is absconding and the NIA has recently declared a reward of Rs five lakh for anyone giving information leading to his arrest. Alam’s wife Sujana Begam was arrested in Guwahati on November 7 from the ISBT. So far eight persons, including Sujana and Sahanur’s brother Jakaria have been arrested in this connection.
[7] The All India United Democratic Front (AIUDF) has slammed a criminal defamation case against a private news channel which had recently broadcast news about party’s alleged involvement with Jehadi elements.
[8] Meanwhile, the Badruddin Ajmal-led All India United Democratic Front (AIUDF) has filed a criminal case against a national TV channel on Monday. The party’s Dhubri district unit registered the case against the channel after accusing it of airing ‘defamatory’ content. Haidar Hussain Bora, an AIUDF leader, said, “A case has been registered. Seven officials of the TV channel have been accused of maligning the party’s image.”
[11] The New Delhi-based news channel, News X, claimed leaders of Assam’s All India United Democratic Front (AIUDF) and a leading Islamist organisation, Jamiat Ulama-e-Hind, had sent a group of youths from Sukchar area in the state’s Dhubri district for Jihadi training from terrorist organisations in Bangladesh’s Rangpur in June-July last year. http://bdnews24.com/bangladesh/2014/10/29/assam-youths-undergo-jihadi-training-in-bangladesh
[12] The channel, quoting intelligence reports, also said apart from the first batch of youths, the leaders of the AIUDF and the Jamiat Ulama-e-Hind personally handpicked the members of the second team that went to Bangladesh last November.
[18] After the blast in Burdwan on October 2, which was believed to be an accident, Sheikh reportedly fled to Delhi, where he was allegedly given shelter by the soldier. From Delhi, Sheikh reportedly escaped to Chennai through Basti in Uttar Pradesh. “The soldier helped Sheikh in this too,” sources said.
[21] NIA is looking for a “drug queen” from Kolkata, now reportedly based in Chennai. Gulshan Bibi, who fled to Chennai years ago, still runs, through remote control, the narcotics business and sleuths have found connections between her and Islamic terrorists, said NIA sources. However, the police in Chennai have no clue about the drug queen. But NIA sources in Kolkata said Gulshan provided shelter to two Jamaat-ul-Mujahideen (JUMB) terrorists, who visited Chennai before the May 1 blasts at the Central railway station. Sources said she conducted rave parties in resorts at Mahabalipuram on the East Coast Road. Besides young men and women working in various call centres, BPOs and KPOs, her clientele reportedly included members of the film industry. On August 12, 1993, Uttam Mondal, a CPM worker protested the presence of a narcotics den in an Urdu medium school in Dakshindari in eastern Kolkata. Mondal, who used to tutor poor students, was brutally killed for taking on the drug mafia. Gulshan was arrested but due to the intervention of a CPM minister, went scot free. With the NCB and the Kolkata police hot on her trail, she shifted to Chennai. With money power growing, she could reportedly bribe police not only in Tamil Nadu and West Bengal but also states along the Kolkata-Chennai train route.
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (9)
Mamta with Muslims encouraging terrorism
மம்தாவின்மறைப்புவேலைகள் (05-11-2014 அன்றையபேச்சு)[1]: இவ்வளவு நடந்தும், மம்தா இவ்விசயத்தை அரசிய ரீதியிலேயே திரித்து விளக்கம் கொடுத்துக் கொண்டுருக்கின்றார். 05-11-2014 (புதன்கிழமை) கட்சியின் தொண்டர்களுக்கு முன்பாக 24-பர்கானாவில் பேசும்போது, “துர்காபூஜைமற்றும்ஈத்பண்டிகைகளின்போதுகூடகுண்டுவெடித்தது, ஆனால்யாரும்பாதிக்கப்படவில்லை. தீவிரவாதிகள்ஒருதனிஇனத்தைச்சேர்ந்தவர்கள், அவர்களுக்குஎந்தமதமும்கிடையாது……… ஆனால், மேற்குவங்காளத்தில்மக்களைமதரீதியில்பிரிக்கும்வகையில்முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நான்பங்களாதேசத்தைவிரும்புகிறேன், ஆனால், எல்லைஊடுருவல்களைஎதிர்க்கிறேன்…………..ஆனால், ஊடுருவல்கள்நடக்கும்எல்லைகளுக்குயார்காவல்?”, என்று வினவினார். அதாவது, தேசிய எல்லை பாதுகாப்புப் படையினர் தாம் பொறுப்பு என்ற தோணியில் பேசினார். “எல்லாமுஸ்லிம்களும்ஜிஹாதிகள்போலகுறிப்பிடுகிறார்கள். ஆனால், எல்லைகளைத்தாண்டிஎனதுமாநிலத்தில்வந்துபிரச்சினையைக்கிளப்புகிறார்களே, ஏன்”, என்று கேட்டுவிட்டு, “நாங்கள்சுவாமிவிவேகானந்தரின்தத்துவத்தைநம்புகிறோம். விவேகானந்தர்ஒருமுஸ்லிம்வீட்டிற்குச்சென்றுஹுக்காபுகைத்தார், தனதுஜாதிபோய்விட்டதாஎன்றுஉறுதிசெய்தார். உங்கள்மதத்தைவிரும்புங்கள், அதேபோலமற்ரவர்களின்மதங்களையும்விரும்புங்கள்”, என்று உபன்யாசம் செய்தார். எல்லாம் சரிதான், ஆனால், முஸ்லிம்கள் அவ்வாறில்லையே? பிறகு அவர்களுக்குத்தானே இந்த அறிவுரைகளை சொல்ல வேண்டும்?
mamta’s secularism and swami vivekananda
ஷேக்அஸினாவுக்குமம்தாஎன்னபதில்சொல்வார்?: பங்களாதேச பிரதம மந்திரி இவ்விவகாரத்தில் கூறியிருப்பது நோக்கத்தக்கது[2], “பங்களாதேசத்துத்தீவிரவாதிகள்மேற்குவங்காளத்தில்தாராளமாகத்தங்கியிருப்பதும், அவர்கள்எங்களதுஅரசுக்குஎதிராகசெயல்படுவதும், மிக்கவருத்தத்தைஅளிக்கிறது”. முதலில் அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப் படவேண்டும் என்றார். “மேற்கு வங்காளத்தில் தாராளமாகத் தங்கியிருக்க” எப்படி மம்தா மற்றும் முந்தைய அரசியல்வாதிகள் உதவியிருக்க வேண்டும்? இதே நேரத்தில், ஜம்மு-காஷ்மீரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக “இடம் பெயந்த வேலையாட்கள்” என்ற ரீதியில் தங்கியிருக்கும் பங்காளதேசத்தவர்களும் பிடிபட்டுயுள்ளனர்[3]. இதில் பங்காளதேசத்து இரட்டை வேடங்களையும் கவனிக்க வேண்டும், ஏனெனில், அங்கு வேலையில்லை, இடமில்லை போன்ற காரணங்களை வைத்துக் கொண்டு, பங்களாதேசத்து ராணுவமே, மக்களை இந்தியாவிற்குள் விரட்டியடிக்கின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. முன்பு ஊடுருவல் ஏன் என்றதற்கு, தமது நாட்டில், மக்கள் பொங்கி வழிகின்றனர், அவ்வாறு வழியும் போது, சிதறி மக்கள் பக்கத்தில் உள்ள இந்திய பகுதிகளில் சிந்தத்தான் செய்வார்கள், என்று தத்துவ விளக்கம் அளிக்கப் பட்டது. ஆனால், அவர்கள் மக்களாக இல்லாமல், முஸ்லிம்களாக இருந்து, அவர்கள் அவ்வாறே அடிப்படைவாதத்துடன் இருந்து, ஜிஹாதிகளுடன் சேந்து, இந்தியவிரோத செயல்களில் ஈடுபடும் போது தான், அத்தகைய சிதறல்கள், இயற்கையானது அல்ல, திட்டமிட்டு செய்யப் படும் வேலை என்றாகிறது.
Burdwan blast timeline Telegraph
“பெங்காளி” எனப்படுகின்றஇந்தியமுஜாஹித்தின்திட்டமும், ஜே.எம்.பியின்ஜிஹாதி–வடிவமைப்பும்: மேற்கு வங்காளம், அசாம் மற்றும் பங்காளதேசம் இவற்றை இணைத்து ஒரு செயல்திட்டத்தை, பாகிஸ்தானை ஆதரமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய முஜாஹித்தீன் இணைதள பரிமற்றங்கள், இ-மெயில் உரையாடல்கள் மூலம் கடந்த ஜூலை 2013 காலத்திலேயே வெளிவந்தது. இவற்றில் பங்கு கொண்டவர்கள் – அஹமது சித்திபாபா அல்லது யாஸின் பட்கல், ஆபீப் ஜிலானி மோடா, மீட்ஜா ஷாதாப் பேக், அசதுல்லா அக்தர் முதலியோர். அது பி.என்.ஜி “bng” என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேற்கு வங்காளத்தைக் குறிக்கும் என்று, அந்த பெங்காளி -“Bengali”- திட்டத்தை ஆராய்ந்த என்.ஐ.ஏ குழுவினர் எடுத்துக் காட்டினர். ஜே.எம்.பியும் அதே முறையில் 2007லிருந்து செயல்பட்டு வந்துள்ளது. பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் ஷைகுல் இஸ்லாம் அல்லது அப்துல்லா அசாமில் கைது செய்யப் பட்டான். இவன் ஷகீல் அஹமது அல்லது ஷமீன் என்கின்ற ஜே.எம்.பியின் கூட்டாளி. இவர்கள் எல்லோருமே, ஒருவரையொருவர் அறிந்தவர்களே. யாஸின் பட்கல் கொல்கொத்தாவில் கைது செய்யப் பட்டு, விடுவிக்கப் பட்டதும், திட்டத்தின் அங்கமாக இருக்கலாம். சுமார் 50 மேற்கு வங்காள அரசில்வாதிகள் இவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனராம். ஆகவே, “பெங்காளி” எனப்படுகின்ற இந்திய முஜாஹித்தின் திட்டமும், இந்த ஜே.எம்.பியின் ஜிஹாதி-வடிவமைப்புடன் ஒத்துப் போகிறது.
Burdwan bomb making cartoon
40 அரசியல்வாதிகளின்தொடர்பு, 27 வழிதடங்கள், 57 தீவிரஅமைப்புகள்: பர்த்வான் குண்டுவெடிப்புத் தொழிற்சாலை விசயத்தில் சுமார் 40 அரசியல்வாதிகள் சம்பந்தப் பட்டிருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரி தெரிவித்துள்ளார்[4]. இதை மம்தா பேனர்ஜியை சந்தித்த போதும் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். பங்காளதேசத்திலிருந்து, உள்ளே நுழைந்து, வெளியே செல்ல 27 வழிதடங்களை உபயோகப்படுத்தியதையும் கண்டறிந்துள்ளார்கள். அவையாவன –
ஒரு மாவட்டத்திலிருந்து, இன்னொரு மாவட்டத்திற்குள் நுழைவது-வெளியே செல்வது.
ஒரு மாநிலத்திலிருந்து, இன்னொரு மாநிலத்திற்குள் நுழைவது-வெளியே செல்வது.
நேபாளம் மற்றும் பங்களாதேசம் நாடுகளின் எல்லைகளில் உள்ள பிரதேசங்களுக்குள் நுழைவது-வெளியே செல்வது.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 57 தீவிர அமைப்புகளை பர்த்வான், மூர்ஷிதாபாத், பிர்பும், ஜல்பைகுரி, கொச்-பிஹார், ஹௌரா, வடக்கு மற்ரும் தெற்கு 24-பர்கானா மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளார்கள். இவை உபி, பிஹார், ஜார்கெண்ட் மற்றும் சிக்கிம் மற்றும் நேபாளம் மற்றும் பங்களாதேசம் முதலிய இடங்களுக்குச் சென்று வர ஏதுவாக அமைத்திருக்கிறார்கள்[5]. 2007-14 வரை, இந்த அளவிற்கு அவர்களால் முடிந்துள்ளது என்றால், உள்ளூர்வாசிகள் எந்த அளவிற்கு ஒத்துழைத்துள்ளார்கள் என்பதும் தெரிகிறது. அதாவது முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்ற வகையில் தான் உதவி, செயபட்டிருக்கிறார்களே அன்றி, இந்தியர்களாக அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. முஸ்லிம்கள், முஸ்லிம் தீவிரவாதிகளை, தீவிரவாதிகளாகவே கருதவில்லை. ஜிஹாதிகளை ஷஹீதுகளாக/உயிர்த்தியாகிகளாகத்தான் பார்த்து வருகின்றனர் என்பது புரிகிறது.
Women involvement in bomb making etc
இளம்ஜோடிகள்ஜிஹாதியில்ஈடுபட்டுள்ளவிசயம்[6]: இவ்வழக்கில் பல இளம் ஜோடிகள் ஈடுப்பட்டுள்ளது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 12-ஜோடிகள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதுஇரான் மற்றும் இராக் நாடுகளில் ஈடுபடுத்தப் படும் பெண் ஜிஹாதிகள் மற்றும் ஐசிஸ் வேலைப்பாடு போன்று தோன்றுகிறது. இருப்பினும், முஸ்லிம்கள் பிரச்சினை போன்று செக்யூலரிஸ ஊடகங்கள், அறிவிஜீவிகள், சமூகவியல் பண்டிதர்கள் முதலியோர் மௌனம் காக்கின்றனர்.
பாத்திமா-ஸஜித்.
ஆயிஸா-யூசுப்.
மோனியா பேகம்- தல்ஹா ஷேக்
ரஸியா பீவி – ஷகில் அஹமது.
அலினா பீவி – ஹஸான் சாஹிப்
சமீனா-நஸிருல்லாஹ்
அலிமா-ஹலான்
கைஷா-நயீம்
செலினா பேகம்- கலாம்.
ரபியா-ஹபிபூர்
சய்மா-லத்தீப்
கதீஜா-ஷேய்க்கு
இப்படி 12 ஜோடிகள் வெடிகுண்டு ஜிஹாதியில் பயிற்சி பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால், இதில் ஆண்களில் பெரும்பாலோர் வங்காளதேசத்தினராக இருப்பதும், பெண்கள் இந்தியர்களாக இருப்பதும் வியப்பை அளிக்கிறது. மேலும் இந்திய பெண்களின் விவரங்கள் அறியப்படாமல் இருக்கின்றன. இவர்கள் எப்படி ஒட்டு மொத்தமாக ஜிஹாதி சித்தாந்தாத்தை ஏற்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள் என்பது புதிராக உள்ளது. என்.ஐ.ஏ, உள்துறை அமைச்சகத்திற்க்கு கொடுத்துள்ள ஆரம்ப கட்ட அறிக்கையில் ஜே.எம்.பி பற்றியோ, ஷேக் ஹஸீனா மற்றும் காலிதா ஜியா இவர்களை கொல்ல சதி போன்ற விவரங்களைக் குறிப்பிடவில்லையாம். ஆனால், வெடிகுண்டு தயாரிப்பு ஜிஹாதில் ஈடுபட்ட 14 பெண்களின் அடையாளத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம்! அசாம் முதலமைச்சர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் 04-11-2014 (செவ்வாய்கிழமை) சொன்னதாவது[7], “ஜே.எம்.பி இங்கு முஸ்லிம் பெண்களிடம் பர்கா / பர்தா துணிகளை விற்கும் போர்வையில் ஒரு பெண்கள் பிரிவை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். பார்பேடா மற்றும் நல்பாரி ஊர்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஜிஹாதி பயிற்சி பெற்றுள்ளனர்.” அதாவது, முஸ்லிம் பங்களாதேசத்து பெண்களும், இந்திய மாநிலங்களில் நுழைந்து ஜிஹாதிகளுக்கு உதவி வருகிறார்கள் என்று தெரிகிறது[8]. பெண்கள் ஜிஹாதிகளாக மாறுவது, ஜிஹாதிகளாக வேலை செய்வது, இப்படி ஜோடிகளாக இணைந்து வேலை செய்வது, ஒரு திட்டமிட்ட மனப்பாங்கை, தீர்மானமாக உள்ள போக்கைக் காட்டுகிறது.
பெண்ஜிஹாதிகள்உருவாகும், உருவாக்கும்முறை: மேற் குறிப்பிட்ட 12-ஜோடிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் அறியப் படுவதாவது[9]:
பெண்களை வைத்து பெண்களை இந்த வேலைக்கு அமர்த்துகிறார்கள். முஸ்லிம் பெண்கள் என்பதாலும், சட்டம்-காவல் துறையினர் உடனடியாக அவர்களிடம் விசாரணை, சோதனை முதலியவற்றை மேற்கொள்ள முடியாது. பர்கா அணிந்து கொண்டிருப்பதால், பலதுறைகளில் அவர்களது அடையாளம் மறைக்கப் படுகிறது.
முதலில் மதரீதியில் ஆரம்பித்து ஊக்குவிப்பது, அவர்களது மனங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்துவது, பிறகு ஜிஹாதிக்கு தயார் செய்வது.
முதலில் உடல் பயிற்சி, சித்தாந்த வகுப்புகள், சொற்பொழிவுகள், முதலியவற்றில் ஈடுபடுத்துதல்.
மதத்திற்காக எதையும் செய்வேன் என்ற நிலையை உருவாக்குவது – ஷயீத் தத்துவத்தை ஏற்க வைத்தல்.
பிறகு படிப்படியாக துப்பாக்கி சுடுதல், குண்டுகள் தயாரித்தல் முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்தி, ஜிஹாதியில் ஈடுபடுத்துதல்.
அதற்கான ரசாயனப் பொருட்கள் வாங்குவது, ஜாக்கிரதையாகக் கொண்டு வருவது, அதற்கு பர்கா உடையை பயன்படுத்துவது.
[2] Prime Minister Sheikh Hasina said it was painful to know that “Bangladesh’s terrorists are getting sanctuary in West Bengal and hatching a conspiracy against the government.”
[4] In their report to NIA DG Sharad Kumar, sleuths hinted at the involvement of at least 40 politicians helped these terrorists gain a foothold in Bengal.
[8] Assam Chief Minister Tarun Gogoi on Tuesday said that terror outfit Jamaat’ul Mujahideen of Bangladesh (JMB) was trying to establish a women’s wing in the state under the garb of selling burkhas to Muslim women. Assam districts of Barpeta and Nalbari. He said some youth from these two districts had also gone abroad for undergoing training in jihadi activities.
இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!
முஸ்லீம் என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம்: இப்படி சொன்னது ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி முஹம்மது கர்ஸாய்[1]. இந்தியாவின் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மை கூட காயவில்லை. ஆனால், “…..போர் / ஜிஹாத் அது அமெரிக்கா அல்லது இந்தியா என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தான் பக்கம் தான்[2]. ஏனெனில் அவர்கள் எங்களது சகோதரர்கள்”. இருப்பினும், இந்திய மரமண்டைகளுக்கு இது புரியவில்லை[3]. இதுபோலத்தான், இப்பொழுது மாண்புமிகு பிரதம மந்திரி, “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” என்கிறார். அதாவது அமெரிக்கா எத்தனை கோடி கொடுடுத்தாலும் கவலையில்லை, “முஸ்லீம்-முஸ்லீம் தான் பாய்-பாய், மற்றவர்கள் காபிர்-காபிர்” தான்!
முந்தைய சயீது கைது-விடுதலை நாடகம்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீதுவின் தலைக்கு ரூ. 50 கோடி (ஒரு கோடி / 10 மில்லியன் டாலர்கள்) பரிசுத்தொகையை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா நிறுவனரும், ஜமாத் உத் தவா தலைவருமான ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து, பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது. அப்பொழுது உலகரீதியில் ஏற்பட்ட கருத்து மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முதலியவற்றைக் கருத்திற்கொண்டு, நாடகம் போல கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீது பின்னர் விடுதலை செய்யப்பட்டான். அப்பொழுதுகூட, ஷா முஹமது குரேஷி என்ற பாகிஸ்தானிய வெளி உறவு அமைச்சர் மூல்தானில் நிருபர்களிடையே பேசும் போது, இந்தியா பிப்ரவரி 25, 2010 அன்று வெளியுறவு அதிகாரிகளிடம் நடந்த பேச்சுகளில் நிருபமா ராவ், சல்மான் பஷீரிடம் தீவிரவதி ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இல்லை[4]. அவன் இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறான்.
பெயர் மாற்றம் செய்தால் ஜிஹாதி தீவிரவாதம் மறைந்து விடாது: இதையும் இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஓபராய் ஓட்டலில் தங்கியிருந்த ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியாயினர். அதிரடிப் படை வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதில் உயிர் பிழைத்த அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் தற்போது சிறையில் உள்ளான். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த அமைப்பு தற்போது ஜமாத் உத் தாவா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முழுவடும் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இஸ்லாம் பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.
இஸ்லாமிய சாச்சா-பதீஜா உறவுமுறையில் காபிர் இந்தியா என்ன செய்யும்? பாய்-பாய் என்றாலும், சாச்சா-பதீஜா என்றாலும், காபிர் இந்தியா ஒன்றும் செய்யமுடியாது. பாகிஸ்தானில் இந்த அமைப்பு தங்குத் தடையின்றி செயல்பட்டு வருகிறது. இவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பல முறை கோரப்பட்டும், அவன் மீதான உறுதியான குற்றச்சாட்டு இல்லை எனக் கூறி, அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதற்கிடையே, மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் சயீது (61) தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க அரசு தெரிவித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சயீதின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கி பற்றிய தகவலை தெரிவிப்பவர்களுக்கும் இரண்டு மில்லியன் டாலர் அளவுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வென்டி ஷெர்மான், டில்லியில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை பலியிடும் சோனியா அரசு: ஆகமொத்தம், இந்தியர்களைக் கொல்லத்தான் அனைவரும் துடிக்கின்றனர். இதனை அறியாத இந்தியர்கள் சோனியா-காங்கிரஸை நம்பி வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்தியதாக்குதல்களுக்கு (இந்திய தூதரகத் தாக்குதல் உட்பட[5]) மக்கித்தான் பொறுப்பாளி, அவன் உமர் மற்றும் அல்-ஜவஹிரி கூடுதல்களில் பங்குக் கொண்டுள்ளான்[6]. தலிபானுக்கும், லஷ்கருக்கும் இடையில் தொடர்பாக இருந்து வேலைசெய்து வந்தான். 2005 மற்ரும் 2007ல் சதிக்கூட்டங்களில் பங்குகொண்டு லஷ்கர் பயிற்சி முகாம்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். 2007ல் மக்கி, திடீரென்று ஆப்கானிஸ்தானில் தலிபானின் குகையான அல்-ஜவஹரிக்கு சென்றுள்ளதில், ஒசாமா பின் லேடனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று அமெரிக்காவிற்கு இந்தியா தெரிவித்திருந்தது. அதற்கேற்றாற்போல, புரூஸ் ரெய்டல் என்ற அமெரிக்கப் பாதுகாப்பு வல்லுனரும் இந்த தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. மும்பை தாக்குதலில் சமீர் அலி என்பவனுடன் 2008ல் தொடர்பு கொண்டிருந்தான். இந்த அலி இந்தியாவின் “மிகவும் முக்கியமான தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளின்” பட்டியலில் உள்ளான். 2010லும், இந்தியாவிற்கு எதிரான காஷ்மீர் போராட்டங்கள், ஜெர்மன் பேக்கரி வழக்கு முதலியவற்றிலும் தொடர்புள்ளது.
ஹாவிஸ் சயீத் சொல்வதை கர்ஸாய் சொல்வது ஏன் காபிர்களுக்குப் புரியவில்லை? ஹாவிச் சயீதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அவன் பேசுவதே இப்படித்தான் இருக்கும்: “இன்ஸா அல்லா! இந்தியா காபிர்கள் நாடு, அமெரிக்கா, இஸ்ரேல் அடுத்து நமது இலக்கு இந்தியாதான்……………… ஜிஹாத் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே, அங்கு ஜிஹாத் தொடங்கிவிட்டது……………………….. நான்கு பக்கங்களிலிருந்தும் காபிர்கள் தாக்கப்படுகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அவர்கள் ஒழிந்து விடுவார்கள்…………………………… அல்லாவின் படைகளின் முன்பு அவர்கள் துச்சம். இந்தியா இஸ்லாம் ஒளியில் வந்துவிடும், இருள் மறைந்து விடும். நமக்கு அல்லா வழிகாட்டுவாராக”. கர்ஸாயும் இதே பாஷையைத் தான் பேசியுள்ளார்.
அமெரிக்கா அறிவித்தால், இந்தியா தாக்கப்படுவது குறைந்து விடுமா? அமெரிக்கா பில்லியன்களில் பாகிஸ்தானுக்குக் கொடுத்து, இப்பொழுது மில்லியன்களைக் கொடுத்து தீவிரவாதத்தைத் தடுக்கப் போகின்றதாம்! அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு சென்றால் கூட, பத்தாண்டுகளுக்கு நான்கு பில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று கர்ஸாய் கூறுகிறார்[8]. பிறகு, இந்தியாவிற்கு ஏன் பில்லியன்களில் கொடுக்கக் கூடாது? அமெரிக்க அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வரவேற்புக்கு உரியது என்றார். விவரமான கோப்பில், சயீதின் தீவிரவாதத்தில் உள்ள பங்கு, ஆதாரங்கள் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேல் உண்மையை மறுத்தால், சயீதை யாரும் மன்னிக்க முடியாது. அப்பாவத்தில் இருந்து தப்பவும் முடியாது[9]. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு லஷ்கர் இ தொய்பாவுக்கு ஒரு பலமான அபாய எச்சரிக்கை என்றும் அவர் கூறினார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சயீது இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். இதற்கு கிடுக்கிப்பிட போடும் வகையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
தேடப்பட்டு வரும் சயீது கொடுத்த பேட்டி: இதுகுறித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள ஓட்டலில் சயீது நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில், “ஒசாமா பின்லேடனை போல என்னையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. நான் மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளிய மாட்டேன். நான் தங்கியுள்ள இடத்தை அமெரிக்காவுக்கு நானே தெரிவிப்பேன். என்னை கொன்றால் ஒரு கோடி டொலர் கிடைக்கும் என்றால், அந்த தொகையை பலுசிஸ்தானின் மேம்பாட்டுக்கு செலவிடட்டும். இந்தியாவின் கருத்தை ஏற்று, தொலைக்காட்சிகளில் செய்யப்படும் பிரசாரத்தை கொண்டு அமெரிக்கா என்னுடைய தலைக்கு வெகுமதி அறிவித்துள்ளது”, என்று தெரிவித்தார். இந்நிலையில் அல்ஜெஸீரா டி.வி.க்கு ஹபீஸ்சையத் அளித்த பேட்டி வருமாறு: “எதையும் முடிவு எடுப்பதில் அமெரிக்காவிற்கு அறிவும், ஆர்வமும் சற்று குறைவு, அல்லது எங்கள் இயக்கத்தைப்பற்றி அமெரிக்காவிற்கு இந்தியா தவறான தகவலினை அளித்திருக்கலாம். பாகிஸ்தானில் நேட்டோப்படை, வான் தாக்குதல் மீண்டும் துவக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது..இதற்கு எங்களின் எதிர்ப்பினை முறியடிக்க திரணியில்லை. இதன் காரணமாகத்தான் என் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.ஆனாலும் நாங்கள் குகைக்குள் ஓடிச்சென்று ஒளிந்து கொள்ளமாட்டோம். நேட்டோ படைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்”, என்றார்.
தீவிரவாதியை ஆதரிக்கும் யூசுப் ராஷா ஜிலானி, மற்றும் மறுக்கும் உள்துறை ரஹ்மான் மாலிக்: பிரதம மந்திரி யூசும் ராஷா ஜிலானி, அது முழுக்கவும் அவர்களது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தவறான சமிஞையை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்[10]. அவர் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசும் போது “ஹாவிஸ் சயீது சாஹப்” என்று மிகவும் மரியாதையாக அழைக்கிறார். உலகத்திலேயே, இப்படி ஒரு தீவிரவாதியை, ஆதரிக்கும் பிரதம மந்திரி இவராகத்தான் இருக்க வேண்டும். இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக் கூறுகையில், “அமெரிக்க அறிவித்துள்ள பரிசுத்தொகை குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. எனினும் அவர் வீட்டுக்காவலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமினில் உள்ளார். இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. சயீதைக் காக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அவரைக் கைது செய்ய மாட்டோம்[11]. அவர் மீது எந்த ஆதாரங்களும் இல்லை”, என்றார்[12]. சர்தாரியிடம் மன்மோகன் ஆலோசிக்க வாய்ப்பு: வரும் 8-ம் தேதி இந்தியா வர உள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரி,பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. அப்போது ஹபீஸ் சையத் குறித்து இருவரும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்களை ஒன்றும் ஆட்டமுடியாது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆர்பாட்டம்: முசபராபாதில், இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூடி அமெரிக்கக் கொடியை எரித்துள்ளனர்[13]. “அல்-ஜிஹாத், அல்-ஜிஹாத்” என்று கத்திக்கொண்டே ஆர்பாட்டம் நடத்தினர்[14]. முசபராபாத், பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள காஷ்மீரின் தலைநகர் ஆகும். இங்கு, அமெரிக்காவை எதிர்த்து ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது மூலம், இந்தியாவால் ஒன்றும் செய்யமுடியாது என்று தீவிரவாதிகள் மெய்ப்பித்துள்ளார்கள். அதனை பாகிஸ்தான் ஆதரிப்பது தெரிந்த விஷயமே. இதே நேரத்தில் ஜிலானியை பேச்சுவார்த்தைகளுக்கு கர்ஸாய் அழைத்துள்ளதை கவனிக்கவேண்டும்[15].
[2] “If Pakistan is attacked, and if the people of Pakistan need help, Afghanistan will be there with you,” Mr. Karzai said. “Afghanistan is a brother.”
[3] Afghan Presdident Karzai’s remarks in an interview that his country would stand by Pakistan in case of a conflict with the United States or India have created a lot of stir though he had predicated them with the proviso: ‘if attacked’. Karzai was apparently trying to calm Pakistan’s concerns over the strategic agreement he signed with India that included provision for military training to Afghan troops much to Pakistan’s discomfort. He had also obliquely accused Pakistan of using Taleban as instrument of policy to attack Kabul from sanctuaries in the tribal areas. The statement of support to Pakistan in case of US or Indian aggression was taken lightly in Islamabad and did not evoke any comment. But the explanation coming from Presidency in Kabul is odd. It said the president only meant to provide shelter to refugees who may flee from tribal areas in case of attack thus reciprocating similar gesture by Pakistan after Soviet invasion.
[7] Indian agencies had warned their US counterparts about a surprise and sudden visit by al-Zawahiri to Islamabad in mid-2007, even suggesting that it could be linked to Osama bin Laden’s whereabouts, and it is Makki who is said to have facilitated this visit at the behest of Hafiz Saeed. US security expert Bruce Riedel, who is known to be close to the Obama administration, has said that Saeed was in touch with Osama himself through a courier right until his death last year.
[8] Karzai told a graduation ceremony at a military academy in Kabul (05-04-2012): “It’s set that post 2014, for the next 10 years until 2024 the international community, with the US in the lead and followed by Europe and other countries, will pay Afghanistan security forces $4.1 billion annually.”http://tribune.com.pk/story/353585/west-to-pay-afghan-military-4-bn-a-year-karzai/
[10] “This is purely an internal issue of Pakistan and the US has been asked to provide evidence [against Saeed], if they have any, to the Pakistani government… This was also conveyed to the US deputy secretary of state that when new rules of engagements are being defined, they should send a positive signal to Pakistan,” Gilani told the joint sitting of parliament.
[14] n Muzaffarabad, the capital of Pakistan-administered Kashmir, around 500 activists shouted “Al-Jihad, Al-Jihad (holy war)” as they marched on the city and set fire to a US flag in a main square
[15] Rezaul H Laskar, Karzai invites Gilani for talks on reconciliation process, Thu, 05 Apr 2012 05:15:21 GMT
p>Islamabad, Apr 4 (PTI) Afghan President Hamid Karzai today invited Pakistan Prime Minister Yousuf Raza Gilani to visit Kabul for talks on the reconciliation process in Afghanistan. Karzai extended the invitation when he telephoned Gilani to express his concern over the emergency landing made by the premier”s aircraft shortly after taking off from a military airbase in Rawalpindi yesterday. The Afghan President “extended an invitation to the Prime Minister to visit Kabul as the weather has become considerably pleasant”, said a statement from Gilani”s office. Gilani accepted the invitation and said he would soon visit Kabul. “We would also review the progress made toward political reconciliation in the context of the last bilateral meeting held in Islamabad,” the premier said. Pakistan is keen on playing a larger role in the endgame in Afghanistan. Acting on a request from Karzai, Gilani recently appealed to all militant factions in Afghanistan to join the peace process in the neighbouring country.http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=5992738
பெண்கள் உள்ளாடைகள் விற்கும் கடைகளில் இனிமேல் ஆண்கள் வேலை செய்யக் கூடாது – சவுதியில் ஆணை அமூலுக்கு வந்துள்ளது!
பெண்கள் உள்ளாடைகள் விற்கும் கடைகளில் இனிமேல் ஆண்கள் வேலை செய்யக் கூடாது: அரேபியாவில் உள்ள பெண்களுக்கான உள்ளாடைக் கடைகளில் இனி பெண்கள் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு
“I and many other women like me were always embarrassed to walk into lingerie shops because men were selling the goods,” said Saudi shopper Samar Mohammed. She said that in the past she often bought the wrong underwear “because I was sensitive about explaining what I wanted to a man”.
உத்தரவிட்டுள்ளது[1]. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பெண்கள் இனிமேல் வெட்கப்படாமல், கூச்சப்படாமல், தங்களுக்கு வேண்டிய உள்ளாடைகளை, தாங்கள் விரும்பிடயபடி, தேந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்[2]. “நான் பலமுறை தவறுதலான அளவுள்ள கீழுள்ளாடைகளை / ஜட்டிகளை வாங்கி வந்துள்ளேன். ஏனெனில், எனக்கு எந்த அளவில் வேண்டும் என்று ஆண்-விற்பனையாளரிடம் விவரிக்கக் கூச்சமாக இருந்தது”, என்று ஒரு பெண்மணி கூறினார். அப்பெண்மணி சொலவது மிகவும் நியாயமாகப் படுகிறது.
சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன: அங்குள்ள பெண்கள் பர்தா அணியாமல் வெளியே செல்ல முடியாது; ஆண்கள்: துணையுடன் தான் கடைக்குப் போக வேண்டும்; கார்களை ஓட்டக் கூடாது; சூப்பர் மார்க்கெட்டுகள் / மால்களில் கேஷியராக பணி செய்யக் கூடாது[3]. இப்படி பற்பல தடைகள் உள்ளன. (இத்தடைகள் / கட்டுப்பாடுகள் மற்ற முஸ்லீம் அல்லாத பெண்களுக்கும் உண்டு). இந்நிலையில் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனி பெண்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ஆண்கள் வேலை செய்ய முடியாது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
2006-2012: மத மற்றும் சட்டப் பிரச்சினைகள்: ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு இதுபோன்ற உத்தரவு பிறக்கப்பட்டும் அது அமலுக்கு வரவில்லை. ஏனெனில் அப்பொழுது பிரச்சினை, பெண்களை வேலைக்கு அனுப்பலாமா, கூடாதா
Saudi’s Arabia’s most senior cleric, Sheik Abdul-Aziz Al Sheikh, spoke out against the Labour Ministry’s decision in a recent sermon, saying it contradicts Islamic law. ‘The employment of women in stores that sell female apparel and a woman standing face to face with a man selling to him without modesty or shame can lead to wrongdoing, of which the burden of this will fall on the owners of the stores,’ he said. He also urged store owners to fear God and not compromise on taboo matters[4].
என்றிருந்தது. குறிப்பாக, மதத்தலைவர்கள், பெண்கள் இம்மாதிரியான கடைகளில் வேலை செய்யக் கூடாது என்று எச்சரித்ததுடன், பத்வாவும் கொடுத்திருந்தனர்[5]. அதுவும், இத்தகைய அலங்கார மற்றும் பெண்களின் உள்ளாடை கடைகளில், பெரிய மால்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பொருட்களை வாங்க வரும் போது, பெண்கள் அவ்வாறு கடைகளில் பொருட்களை, ஆண்களுக்கு முன்பாக விற்பது இஸ்லாமிற்கு எதிரானதாகக் கருதப் பட்டது. ஆனால் இந்த முறை அந்நாட்டு மன்னர் அப்துல்லா பிறப்பித்துள்ள உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது[6]. இதையடுத்து உள்ளாடைக் கடைகளில் பணிபுரிய சுமார் 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அந்நாட்டு தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இப்பொழுது பெண்கள் 30% தான் வெளியில் வந்து வேலை செய்கின்றனர். இனிமேல் அவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால், சவுதி பெண்கள் சிறிதளவு வெற்றிப் பெற்றுள்ளார்கள், அவர்கள் உரிமைகள் கேட்டு போராடும் நிலையில் வெற்றிப் பெற்றுள்ளார்கள்[7] என்றும் கருத்து உருவாகிறது[8].
விவேக் போன்றவர்கள் இனிமேல் சவுதியில் அனுமதிக்கப் படுவார்களா? விவேக் பெண்கள் உள்ளாடைகள் வைத்து ஜோக் அடிப்பது சகஜனமான “சப்ஜெக்டாக” உள்ளது. அதில் அவர் பி.எச்டியே செய்துள்ளார் எனலாம். அந்நிலையில், அத்தகைய நடிகர்கள் சவுதியில் அனுமதிக்கப் படுவார்களா? அங்கு அத்தகைய ஜோக்குகள் அனுமதிக்கப் படுமா? உள்ளாடை விளம்பரங்கள் செய்யப் படுமா? இந்தியாவில் மட்டும் எப்படி அத்தகைய அசிங்கமான, ஆபாசமான ஜோக்குகளை அனுமதிக்கிறார்கள்? வீட்டில் தொலைகாட்சியில், குடும்பத்துடன் பார்க்கும் போது, சங்கோஜம் இல்லாமல் ரசிக்கவா முடிகிறது?
சூபியா மதானி / சூஃபியா மௌதனி, அப்துல் நாசர் மதானியின் மனைவி. சலாவுத்தீன் மற்றும் உமர் என்ற இரண்டு பையன்களின் தாய். அழகான முகத்தில் தீவிரவாதத்தின் நிறம் தெரிவதில்லை, ஆனால், காஷ்மீரத்தில் அத்தகைய அழகிய ரோஜாக்களே வெடிகுண்டுகளாக செயல்பட்டது, ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் எப்படி இஸ்லாத்தில் தீவிரவாதிகளாக மாற்றப்படுகின்றனர் என்று தெரியவருகிறது. மூளைச்சலவை செய்ய-செய்ய யாராக இருந்தாலும், திவிரவாதியாக மாற்றலாம், என்று இஸ்லாத்தில் கண்டுபிடித்துள்ளனர். “குரான்” என்று சொல்லி, ஜிஹாத் போர் ஒரு முஸ்லீமின் கடமை, சொர்க்க வாசல் தயாராகத் திறந்திருக்கிறது…………….என்றெல்லாம் சொன்னால், ஜிஹாத்கிகள் கிளம்பி விடுகிறார்கள்.
Soofiya-maudhany
soofiya_madani_14.12.09
கணவனது தாக்கம்: ஆரம்பகாலத்தில், சூபியா தனது வாழ்க்கையை சந்தோஷமாகத்தான் கழித்திருப்பாள். ஆனால், பிறகு, அவனது கொள்கையை அறிந்திருப்பாள். நிச்சயமாக, தனது கணவினின் தாக்கம் இவளிடத்தில் இருந்திருக்க / ஏற்பட்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் மறுத்தாலும், பிறகு, கணவனுடன் ஒத்துப்போனாள் என்பது நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. குழந்தைகள் பிறந்தபிறகு, மனம் மாறியிருக்கலாம், ஆனால், மறுபடியும் தாக்கம் ஏற்பட்டுள்ளது, அவளுடைய வார்த்தைகள், நடத்தைகள் காட்டுகின்றன எனலாம்.
madani-and-soofiya
பஸ் எரிப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பது: கலமசேர் பஸ் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அந்த நிலையில் சூபியா மதானி போலீசில் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- “கோவைசிறையில்அடைக்கப்பட்டுஇருந்தஅப்துல்நசர்மதானியைபோலீசார்கடுமமையாகசித்ரவதைசெய்தனர். அங்குஅவர்பட்டகஷ்டமேஎன்னைகுற்றவாளிஆக்கியது”. அதாவது, உண்மையில் கஷ்டப்படுத்தப்பட்டானா அல்லது சர்க்கரை முதலிய வியாதிகளினால், சிகிச்சைப் பெற்றுவந்ததால், ஒன்பது ஆண்டுகளில் உடல் இளைத்தான என்றுதான் பார்க்கவேண்டும். ஆனால், சிறைவாசம், போலீஸ் கைது, என தனக்கும் வரும்போது, தன்னைகத் தற்காத்துக் கொள்ளவே வேண்டியுள்ளது.
Soofiya Maudhany
மதானியைப் பற்றிய சிடியில் சூபியா சொன்னது: மதானியின் மனைவி சூபியா அளித்துள்ள பேட்டியில், “ஒன்பதுஆண்டுகளுக்குமுன்விசாரணைக்காகஅழைத்துச்செல்லப்பட்டகணவர், கோவைசிறையில்உள்ளார். அவரைசந்திக்கும்போதெல்லாம், எனக்குதைரியமூட்டுவார்; அவரதுஉடல்நிலைமோசமாகஉள்ளது. சிறைக்குசென்றபோதுஅவரதுஎடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாககுறைந்துவிட்டது. முறையானசிகிச்சைஇல்லாததேஇதற்குகாரணம்,” என, குற்றம் சாட்டியுள்ளார். இறுதியில், “சட்டம், ஜனநாயகத்தின்மீதுநம்பிக்கைஉள்ளவர்கள், மதானியின்சிறைவாசத்தைநிச்சயம்கண்டிப்பார்கள்‘” என்ற வர்ணனையுடன் படம் முடிகிறது.
soofia-12-2009
soofiya-madani-dec.2009
21-06-2002 அன்று கோவை சிறையில் நடந்த நிகழ்ச்சி: சூபீயா தனது உதவியாளன் நௌஸத் மற்றும் இன்னொருவனுடன் தனது கணவனைப் பார்க்க வருகிறாள். பெண்போலீஸார்கள் சோதனையிட்டபோது, சூபியா செல்போன் மற்றும் சிம்கார்டுகளை உள்ளே எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்படுகிறது. உடனே, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூபியா, பெண்காவலர்களையும் மற்ற காவலர்களையும் மிரட்டுகிறாள். தான் நினைத்தால், அவர்களையெல்லாம் தொலைத்து விடுவேன் என்று மிரட்டுகிறாள். நௌஸத் பெண்காவலர்களை அவர்களுடைய சட்டைகளைப் பிடித்து இழுக்கிறான். இதனால், ஆண்-போலீஸார் வந்து அவர்களை, வலுக்கட்டாயமாக, சிறை வளாகத்திலிருந்து வெளியேற்றுகின்றனர். ஆனால், வெளியே வந்தபிறகும், போலீஸாரைத் திட்டி, மிரட்டிவிட்டுச் செல்கின்றனர்
soofiya madhani with children in kairali tv
ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்தல்: போலீஸார், இவ்வாறு அவமதிக்கப்பட்டதால், அவர்கள், சூபியா மற்றும் நௌஸத் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்கின்றனர். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, பெண்-போலீஸாரை பலாத்காரம் செய்தது, போலீஸாரை மிரட்டியது முதலியவற்றிற்காக இபிகோ ரசத்துகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அரசியல் செல்வாக்கினால், அவ்வழக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.
கோவை பணி செய்ய விடாமல் தடுத்து, சிறைவார்டன்களை மிரட்டிய மதானி மனைவி மீதான வழக்கில் இருதரப்பு வாதம் துவங்கியது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2002ல் மதானியை பார்க்க வந்த அவரது மனைவி சூபியாவுக்கும், சிறைக்காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிறைக்காவலர்களை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக சூபியா மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு ஜே.எம்.எண்: 3 கோர்ட்டில் நடக்கிறது.சாட்சி விசாரணை முடிந்த நிலையில், நேற்று இருதரப்பு வாதம் துவங்கியது. சூபியா சார்பில் வக்கீல் மோகன் ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து, அரசு தரப்பு வாதத்துக்காக வழக்கை மே 9ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் புளோரா ஒத்திவைத்தார்.
மதானி தம்பதியரின் அரசியல் செல்வாக்கு, பலம்: குற்றாஞ்சட்டப்பட்ட தீவிரவாதி-பயங்கரவாதி மதானி 1998-ஆம் அண்டு நடந்த கோவைத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அல்லது சிலர் சொல்லும்படியாக, விசாரணைக் கைதியாகக் கருதப்பட்டு சிறையில் தண்டனையை சகல வசதிகளுடன் அனுபவித்துக் கொண்டிருந்தான். எனவே, சூபியா குற்றஞ்சாட்டியபடி எப்படி எடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாககுறைந்துவிட்டது. என ஆச்சரியமாக உள்ளது. உடம்பு சரியாகவில்லை என்பதனால், சிகிச்சையளித்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உணவைக் குறைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை.
சூபியாவை பார்க்கும் முதலமைச்சர்: ஜூன் 2, 2005 அன்று அப்போதைய காங்கிரஸ் முதல் மந்திரி உம்மன் சாண்டி மதானியின் வீட்டிற்கே சென்று அவரது மனைவியையும் தந்தையையும் சந்தித்த போது, சூபியா சிறையில் நடந்த பிரச்சினைகளைப் பற்றி சொல்லி, ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டாள். அதன்படியே, “மனிதாபிமான” அடிப்படையில் அவள் கணவனுக்கு விடுதலை கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார். அதுமட்டுமல்லாது, மார்ச்சு 14, 2006 அன்று, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ கட்சியினரைக் கொண்ட கேரள சட்டசபை, மனிதாபிமான அடிப்படையில் மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானத்தையும் நிறைவேற்றியது வினோதமாக இருந்தது.
சிறைக்கு ஆட்களை அனுப்பி விசாரித்தது, கருணாநிதியிடம் பரிந்துரைத்தது: அதன் பிறகு கேரள முதல்வர் அச்சுதானந்தன் தன்னுடைய அமைச்சர்கள் சிலரை கோவை சிறையில் மதானியை சந்தித்து வேண்டியது செய்யப்படும் என்று சொல்லி அனுப்பினார். பிறகு, ஜூன் 10, 2006 அன்று கேரள முதல்வர் அச்சுதானந்தனே நேரிடையாகச் சென்னைக்கு வந்து, தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து, மதானியை “உடல்நல” காரணங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக முதல்வர் விடுதலை செய்ய மறுத்தாலும், சிறைச்சாலையிலேயே மதானியின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்.
தச்சாங்கரி மனைவி –சூபியா மதானி -நஸீர் தொடர்பு – வென்னலா வீடு[1]: புலானாய்வு குழுவினர் டோமின் ஜெ. தச்சங்கரி மற்றும் அப்துல் நாசர் மதானி இவர்களுக்குள்ள தொடர்பை கண்டறிந்துள்ளனர். வென்னலா என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டைப் பற்றி விசாரித்ததில் அந்த தொடர்பு வெளிப்படுகிறது. தச்சாங்கரியின் மனைவி மற்றும் மதானியின் மனைவி 2006 மற்றும் 2007 முறையே அந்த வீட்டை “ரியான் ஸ்டூடியோ” என்ற பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளனர் கருகபிள்ளி என்ற கொச்சியிலுள்ள வீட்டிற்கு இடம்பெயரும் முன்னர், இருவருமே இந்த விட்டில் நான்கு மாதங்கள் தங்கியுள்ளதாகத் தெரிகிறது. இன்னொரு சோதனையில் இதே வீடுதான் திருட்டு விசிடி தொழிற்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. அது மட்டுமல்லாது இந்த வோட்டில்தான், மதானி நஸீரை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. அக்டோபர் 15, 2007ல் மதனி இந்த வீட்டிற்கு குடிபெயந்தார். இந்தவீடு ஒரு NRI. பெண்மணிக்குச் சொந்தமானது என்றும் அவருடைய சகோதரர் வீட்டை நிர்வாகித்து வருகிறார் என்றும் தெரிகிறது.
மனைவிகள் பங்குதாரர்களாக இருக்கும் போது, ஒரு கணவன் அடுததவர் மனைவி மீது நடவடிக்கை எடுப்பாரா? தச்சாங்கரியின் மனைவி மற்றும் மதானியின் மனைவி 2006 மற்றும் 2007 முறையே அந்த வீட்டை “ரியான் ஸ்டூடியோ” என்ற பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த நிறுவனத்திற்கு பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். இத்தகைய உறவு இருக்கும்போது, எப்படி ஒரு கணவன் அடுததவர் மனைவி மீது நடவடிக்கை எடுப்பார்? கலமசேரி பஸ் வழக்கை விசாரிப்பதில், இந்த டோமின் ஜெ. தச்சங்கரி உள்ளார்[2], பிறகு, எப்படி அவரால் பாரபட்சமின்றி, அவ்வழக்கை விசாரிக்கமுடியும்? பி. எம். வர்கீஸை தனது ஆதிக்கத்தால் / தாக்கத்தால் பணியவைக்கமாட்டார் என்று என்ன நம்பிக்கையுள்ளது?
கேரளாவில் தமிழக பஸ் எரிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் மதானியின் மனைவி சூபியா மதானியிடம், கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்தது தொடர்பாக, தமிழக போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 2005ம் ஆண்டில் தமிழக பஸ் ஒன்று, கேரளாவில் உள்ள கலமசேரியில் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் மதானியின் மனைவி, சூபியா மதானிக்கு தொடர்பு இருப்பது, சமீபத்தில் கைதான லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி நசீரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து, பஸ் எரிப்பு வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சூபியா மதானி, கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் அலுவாலியா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான இரண்டு நபர் குழு, திரிக்கராவில் உள்ள போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில், சூபியா மதானியிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், “பஸ் எரிப்பு வழக்கை தவிர, கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்த வழக்கில், நசீர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். எனவே, இது தொடர்பாக ஏதேனும் முக்கிய தகவல்கள் கிடைக்குமா என்பதற்காகவே போலீசார், சூபியா மதானியிடம் விசாரணை நடத்தினர்’ என்றனர்.
மதானிக்குஆதரவாக “கைதியின்கதை‘ ஆவணப்படம் “சிடி‘யாகவெளியீடு: கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் மதானி, முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஆதரவாக, “கைதியின் கதை’என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு நெருங்கும் வேளையில், “சிடி’ வெளியிடப்பட்ட பின்னணி என்ன என்பது குறித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், கேரள மக்கள் ஜனநாயக கட்சியினர் நிறுவனர் அப்துல்நாசர் மதானி (41) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் 167 குற்றவாளிகள் மீதான விசாரணை தனி நீதிமன்றத்தில் முடிந்தது; தீர்ப்புக்காக வழக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், “கைதியின் கதை’ (மதானி மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த ஆவணப்படம்) என்ற தலைப்புடன், 45 நிமிட படம் “சிடி’யாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை, “மீடியா ஸ்டெப்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது; “ஆலூர் ஷானவாஸ்’ என்பவர் இதை தயாரித்துள்ளார். இப்படத்தில், மதானியின் பள்ளி பருவம், ஆவேசமான அரசியல் மேடைப்பேச்சு, மத ரீதியான போதனைகள் இடம்பெற்றுள்ளன. “சங்க் பரிவார்’ அமைப்புக்கு எதிராக 1991ல், “இஸ்லாமிக் சேவா சங்’ அமைப்பை துவக்கியது; வெடிகுண்டு தாக்குதலில் மதானியின் கால் ஊனமடைந்தது தொடர்பான, விளக்கங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
[1]Ajay Kanth, Kerala: Nexus between Thachankary, Madani?, First Published : 07 Jul 2010 01:58:28 AM IST; Last Updated : 07 Jul 2010 09:17:01 AM IST
[2] It is said that the Karnataka Police had already handed over such information to the police team hat had visited Bangalore earlier, which included Inspector General Tomin J Thachankery and Assistant Commissioner of Police PM Varghese, who was heading the probe the Kalamssery bus-burning case. http://www.dailypioneer.com/222931/Nazeer-planned-communal-riots.html
பர்கா இல்லாமல் பாடம் சொல்லித்தர வரக்கூடாது என்று தடை செய்யப்பட்ட ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர் கடைசியில் தனது போராட்டத்தில் வென்று விட்டார்[1]. அக்கல்லூரி யூனியன் பெண் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பர்கா அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆணையிடப்பட்டது. இதனால் எட்டு பெண்கள் சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால், ஷிரின் வெளிப்படையாக, தான் அவ்வாறு பர்கா அணிய முடியாது, ஏனெனில் அத்தகைய உடைக்கட்டுப்பாடு ஊனிவர்ஸிடி டிராண்ட் கமிஷன் சரத்துகளில் இல்லை என வாதிடினார்.
Burqa-teacher-wins-her-stand
சையத் சம்ஸுல் ஆலம், அலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் சொல்லிப்பார்த்தார். ஆனால், அடிப்படைவாதம் கொண்ட யூனியன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், நிலைமையை மேற்கு வங்காள சொறுபான்மை நல அமைச்சர் அப்துர் சட்டார் என்பவருக்குத் தெரியப்படுத்தினர். உடனே, அவர் ஷிரீனை வகுப்புகளை எடுக்குமாறு பணிக்கப்பட்டார்[2]. இருப்பினும், என்றைக்கு இருந்து என்று இன்னும் சொல்லப்படவில்லை! யூனியனில் காரியதரிசி ஹசனூர் ஜமான் (Hasanur Zaman) என்பவர், தேவையில்லாமல், ஊடகங்களுக்கு இப்பிரட்சினையை எடுத்துச் சென்று ஏதோ ஒரு பிரச்சினை போன்று உருவாக்கிவிட்டார்[3] என்று மறுபடியும் அந்த பெண்ணையே குற்றஞ்சாட்டினார்!
பர்கா இல்லாமல் வந்த கல்லுரி பெண் ஆசிரியருக்குத் தடை: கல்கத்தாவில் அமூல்!
ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர். கடந்த மூன்று மாதங்களாக கல்லூரியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாடம் எடுக்க முடியாமல் இருக்கிறார். காரணம். அலியா பல்கலைக்கழகம் சொல்லாவிட்டாலும், அக்கல்லூரி யூனியன் சொல்வதால், பர்கா இல்லாமல் அவர் வகுப்பிற்குச் செல்லமுடியாது, பாடம் சொல்லித்தரமுடியாது.
அவர் சொல்வதாவது, “யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன், உடைபற்றிய கட்டுப்படு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மேலும் இது பர்காவைப் பற்றியப் பிரச்சினை இல்லை. என்னுடைய சுய-விருப்பத்தைப் பொறுத்த விஷயமாகிறது”.
இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் பர்தாவில் / பர்காவில் / ஹிஜாபில் இருக்கவேண்டும், ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யக் கூடாது,…………………………இப்படி ஏகப்பட்ட சரத்துகள், கட்டுப்பாடுகள்!
Fashion style from Pakistan
ஆனால், பாகிஸ்தானிய பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?
Fashion design product Pakistan
ஃபேஷன் ஷோவிலே கலந்து கொள்வார்களா?
Pakistan_women
அட இவர்கள் பாகிஸ்தானியர்களா?
sara-deshi-jewelry
ஓஹோ நகைகளும் அணிவார்களா? இப்படி முதுகையும் காண்பிர்ப்பார்களா?
அண்மைய பின்னூட்டங்கள்