Archive for the ‘பரங்கிப்பேட்டை’ category

ஐ.எஸ். உடன் தொடர்பு: காரைக்காலும், ராமநாதபுரமும்: விபச்சாரமும், டி-சர்டும் தானா, அல்லது அதற்கும் மேலாக உள்ளதா?

நவம்பர் 23, 2015

.எஸ். உடன் தொடர்பு: காரைக்காலும், ராமநாதபுரமும்: விபச்சாரமும், டி-சர்டும் தானா, அல்லது அதற்கும் மேலாக உள்ளதா?

காரைக்காலில் மத்திய உளவுப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்துல் சிராஜ் தவுலத்-இடமிருந்து 2-வது.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது (அக்டோபர்.2015): ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினருடன் தொடர்பில் இருந்த காரைக்கால் இளைஞர் கைது செய்யப்பட்டார். காரைக்கால் வள்ளலார் நகர் விரிவாக்கப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் (35) என்பவரை சந்தேகத்தின்பேரில் மத்திய உளவுத் துறையினர் செவ்வாய்க்கிழமை 27-10-2015 அன்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இவ்வழக்கு விவரம்: கடந்த 2000-ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற சிராஜ் தவ்லத் மரைக்காயர் பின்னர் ஊர் திரும்பினார். தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், தமிழகத்தில் ஏ.வி.எஸ். [Anti Vice Squad, AVS] என்கிற விபசார தடுப்புப் பிரிவினருக்கு, வழக்குத் தொடர்பாக செல்லிடப்பேசி உரையாடலை பதிவு செய்து தரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் பல்வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக நிறுவனம் இவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இதையடுத்து, விபசாரம் செய்து பணம் சம்பாதிப்பதில் ஈடுபடத் தொடங்கினார். இந்த அனுபவத்தைக் கொண்டு, பல முக்கியப் பிரமுகர்களின் தொலை பேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதும், பலரை வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிந் துள்ளது. மேலும், சென்னையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது[1].

அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் கைதுபுழல் சிறையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் ஏற்பட்ட தொடர்பு: பல்வேறு வழக்குகளில் தமிழக போலீஸார் இவரைக் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அங்கு சிலருடன் ஏற்பட்ட தொடர்பை வைத்துக்கொண்டு, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது[2].  மத்திய உளவுத் துறையினர் இஸ்மா சாதிக்கை தேடும் பணியில் ஈடுபட்டபோது, அவருடன் தவ்லத் மரைக்காயருக்கு இருந்த தொடர்பு தெரியவந்து காரைக்காலில் இவர் பிடிபட்டார்[3]. நெடுங்காடு காவல்நிலையத்தில் வைத்து விசாரித்த போது உளவுத் துறையினர், போலீஸாரிடம் இந்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.  இவரிடமிருந்து 3 செல்லிடப்பேசி, 7 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்கால் காவல்நிலைய போலீஸார், இவரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்பு புதன்கிழமை ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவரை போலீஸ் காவலில் எடுத்து, விசாரணையை தொடர போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்[4]. அதாவது, ஒரே ஆள் பலகுற்றங்களை செய்வது என்பது, இவர்களில் பொதுவான அம்சமாக இருக்கிறது. இந்த போக்கு அல்-உம்மாவிலிருந்தே காணப்படுகிறது.

ஐசிஸ் சர்ட் அணிந்த முச்லிம் வாலிபர்கள் - ராமநாதபுரம் மசூதிஐசிஸ் ட்சர்ட் புகைப்பட விவகாரம் (ஜூலைஆகஸ்ட்.2014): ஜுலை 29, 2014 தேதியன்று, தொண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 24 பேர் ஐசிஸ் அமைப்பின் முத்திரை பொறிக்கப்பட்ட கறுப்பு நிற டி ஷர்ட் அணிந்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்[5]. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, ஈராக்கில் பணியாற்றி வந்த இந்தியச் செவிலியர்கள் ஐசிஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தாமல் விடுவிக்கப்பட்டதை பாராட்டும் வகையில்தான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்[6]. ஆனால், ஆயிரக்கணக்கில் முஸ்லிம் பெண்களையே கற்பழிக்கின்றனர், முதலிய காரியங்களை அவர்கள் அறியாமல் போனது விந்தையே! இந்த நிலையில், ஆகஸ்ட்.4, 2015 அன்று மாலையில் அப்துல் ரஹ்மான் என்ற 24 வயது இளைஞரும் முகமது ரில்வான் என்ற இளைஞரும் ராமநாதபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்[7]. அப்துல் ரஹ்மான்தான் திருப்பூரில் இந்த டி ஷர்ட்களை வாங்கியவர் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால், அத்தகைய ட்-சர்ட்டுகளை அச்சடித்து தயாரித்தது, விற்றது யார் என்ற கேள்விகளும் எழுகின்றன. இதெல்லாம் தெரியாமல் செய்தது என்று சொல்ல முடியாது. திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மொத்தம் 100 டி சர்ட்களுக்கு ரில்வான் மூலம் அப்துல் ரஹ்மான்தான் ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளார்[8]. இந்த டி சர்ட்டை தலா ரூ. 250க்கு விற்றுள்ளனர். இந்தப் புகைப்படத்தில் உள்ள 26 பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்து விட்டனர். அதன் இறுதியில் 24 பேரை விடுவித்து விட்டு இந்த 2 பேர் மீது மட்டும் தற்போது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

J K youth showing off ISIS Flags during demonstration againat Indiaசிறையிலடைக்கப்பட்டது[9]: இந்தக் கைது குறித்து, ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனத்திடம் கேட்டபோது, ” ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லை என்றபோதிலும், இது பல்வேறு அரசுகளுக்கு எதிரான ஒரு போராட்டக் குழுவாக உள்ளது. எனவே இந்த அமைப்புக்கு இத்தகைய டி சர்ட்கள் மூலம் ஆதரவு திரட்ட இவர்கள் முயற்சித்துள்ளனர்[10]. இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர்களாகவும் உள்ளனர். வெளிநாட்டில் ஒரு அரசை எதிர்த்துப் போராடும் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் இங்கிருக்கும் இளைஞர்களைத் தூண்டியதற்காகவும் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக”த் தெரிவித்தார். இது தொடர்பில் பேசிய, தொண்டி ஜமாத்தின் செயலாளரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான சாதிக் பாட்சா, இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளைப் போலச் சித்தரிப்பது வருத்தம் தருவதாகத் கூறினார். இது குறித்துப் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா, இஸ்லாமிய இளைஞர்கள் இதுபோன்ற சமூக வலைதளங்கைப் பயன்படுத்தும்போது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார். ஆகஸ்ட்.4, 2014 அன்று மாலை கைதுசெய்யப்பட்ட அவர்கள், திருவாடனை மாஜிஸ்ட்ரேட் இளவரசி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர்[11].

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7821818.ece

[2] தினமணி, .எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது, By  காரைக்கால், First Published : 29 October 2015 12:31 AM IST

[3] தமிழ்.இந்து, .எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு?மத்திய உளவுப் பிரிவால் விசாரிக்கப்பட்ட காரைக்கால் இளைஞர் சிறையில் அடைப்பு, Published: October 30, 2015 09:10 ISTUpdated: October 30, 2015 09:10 IST.

[4]http://www.dinamani.com/tamilnadu/2015/10/29/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article3102332.ece

[5]  தமிழ்.வெப்துனியா, ஐஎஸ்ஐஎஸ் டிஷர்ட்: தமிழகத்தில் இரண்டு இளைஞர்கள் கைது, புதன், 6 ஆகஸ்ட் 2014 (11:17 IST).

[6] http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/ramanathapuram-iraq-isis-t-shirt-two-young-men-arrested-114080600007_1.html

[7] பிபிசி.தமிழ், ஐசிஸ் டிஷர்ட் : தமிழகத்தில் இரு இளைஞர்கள் கைது, ஆகஸ்ட்.5, 2015.

[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ்ஐஎஸ் டி சர்ட் விவகாரம்: போட்டோவுக்கு போஸ் கொடுத்த 2 பேர் கைது– 24 பேர் விடுவிப்பு, Posted by: Sutha, Published: Tuesday, August 5, 2014, 17:24 [IST].

[9] https://www.youtube.com/watch?v=k8PUdCqY-XE

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-arrested-tamil-nadu-over-group-photo-isis-t-shirts-207779.html

[11]  http://www.bbc.com/tamil/india/2014/08/140805_isis_tshirt_tnarrests

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்!

நவம்பர் 23, 2015

.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்!

Bangalore Biswas becomes ISIS agent, techie workerடுவிட்டர் மூலம் .எஸ்.க்கு ஆட்கள் வேலைசேர்ப்பு: கடந்த வருடம் 2014ல் பெங்களூரில் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவரை ஜாலஹள்ளி என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர்[1].  இவர் ஷாமி என்ற பெயரில் ஐ.எஸ் இயக்கத்திற்கான “@ShamiWitness” என்ற பிரசார டுவிட்டர் கணக்கை நடத்தி வந்தார்[2]. அவனது இருப்பிடத்தில் சோதனை செய்ததில், அவனது கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்கள் முதலியவற்றிலிருந்து பல விவரங்கள் தெரிய வந்தன. முன்னர் ஷாமி விட்னஸ் என்கிற பெயரிலான இந்த குறிப்பிட்ட டுவிட்டர் கணக்கை நடத்துபவர் யார் என்கிற அடையாளத்தை பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனலான சேனல் 4 தொலைக்காட்சி தனது புலனாய்வு மூலம் கண்டறிந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது[3]. அந்த நபரை மெஹ்தி என்கிற பெயரிட்டு அழைத்திருந்த அந்த சேனல்-4 தொலைக்காட்சி, அவரது முழுமையான அடையாளத்தை வெளியிட்டால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவரது முழுமையான அடையாளத்தை தாம் வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தது. இந்திய பெருவர்த்தக நிறுவனக் குழுமம் ஒன்றில் அவர் நிர்வாகியாக பணிபுரிவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெங்களுர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் - ShamiWitness - போட்டோநீண்ட நாள்களாக .எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்: இஸ்லாமிய அரசு அமைப்பு, வெளிநாடுகளிலிருந்து புதிதாக ஆள் சேர்க்கவும், மேலை நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்களை தாங்கள் சிரச்சேதம் செய்யும் காட்சிகளை வீடியோவாக வெளியிடவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவந்தது என்பது குறிப்பிடத்தக்கது[4]. மெஹ்தியிடம் நடத்திய விசாரணையில், நீண்ட நாள்களாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்டார் என்று, கர்நாடக டி.ஜி.பி லால்ரோக்குமா தெரிவித்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மட்டுமன்றி, சட்டவிரோத சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் மெஹ்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தன் மகனுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதை நம்ப முடியவில்லை என்று, மெஹ்தியின் தந்தை பிஸ்வாஸ் தெரிவித்தார். மகன் இவ்வளவு வேலைகளை செய்து வந்தபோது, இவர் தெரியாது என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. பட்கல் விசயத்தில் கூட பேற்றோர்கள் மட்டுமல்ல, அந்த ஊரில் உள்ளோர் அனைவரும், எங்கள் குழந்தைகள் அப்பாவிகள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, என்று தான் சொல்லி வந்தனர்!

மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் - இரு முகங்கள்மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது: முஸ்லிம் இளைஞர்களை வேலைக்கு எடுப்பது, இந்தியாவிற்கு வெளியே அனுப்பி வைப்பது என்று செய்து வந்தான். பொதுவாக வளைகுடா நாடுகளுக்கு அல்லது அந்நியநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதாக இருந்தால், அவர்கள் ஏஜென்டுக்கு அல்லது ஏஜென்சிக்கு பணம் கொடுக்க வேண்டும், இங்கோ வேலைக்கு விரும்பி வருபவர்களுக்கு அவர்களே பணத்தைக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இஸ்லாமிய அரசின் பிரசாரத்தை தொடர்ந்து, 150 இந்தியர்கள் (இதில் அதிகமான பேர் நாட்டின்  தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள்) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்து வந்து உள்ளனர் என உளவுத்துறை அறிந்து எச்சரித்துள்ளது. ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து செயல்படுபவர்களை தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வழிகாட்டுதலின்படி உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்[5]. இந்நிலையில் தான், பெங்களுர் வழியாக சிரியாவுக்குச் செல்ல முயன்ற இரு தமிழ்நாட்டு முஸ்லிம் வாலிபர்களின் கதை வருகிறது. பாவம், துருக்கி அவர்களை நாடு கடத்த, பெங்களுருக்கே வந்து சேர்ந்து விட்டனராம்!

New college students become ISIS warriorsபுரசவாக்கம் மசூதியில் ராயப்பேட்டை பாயும், கரூர் பாயும் சந்தித்தது எப்படி?: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கரூரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ராயப்பேட்டை ஐஸ் அவுஸ்சில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர்[6]. முன்னவர் பி.காம் பட்டதாரியாவார், தனது தந்தையின் துணிகடையில் வேலை பார்த்து வந்தார். பின்னவர் பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னைக்கு ஒரு கடையில் வேலைக்கு வந்திருந்தார்[7]. ஆக, ராயப்பேட்டை பாயும், கரூர் பாயும் எப்படி அறிமுகமானார்கள்? இருவருக்கும் ஜிஹாதில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது? இருவரும் புரசவாக்கத்தில் உள்ள ஒரு மசூதியில் சந்தித்துள்ளனர்[8] என்று செய்திகள் கூறுகின்றன. பிறகு, மசூதிகள் தாம் இவர்கள் சந்திந்துக் கொண்டு அறிம்கமாவதற்கு தகுந்த இடமாக இருக்கின்றனவா? இவர்கள் தாமாகவே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்களா அல்லது யாராவது இணைப்பாக செயல்பட்டாரா? ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முடிவு செய்ததால், அவர்கள் இணையதளம் மூலமாக சிரியா நாட்டிற்குச் செல்வது குறித்த தகவல்களை திரட்டியுள்ளனர்[9]. அப்போது பெயர் தெரியாத நபர் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்[10]என்று மேலும் செய்திகள் கூறுகின்றனர். ஒருவேளை, முழுவிவரங்கள் வெளியில் தெரியக்கூடாது என்று அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இணைத்தள உபயோகம் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. இவ்விசயங்கள் எல்லாம் ரகசியமாகத்தான் பார்க்க முடியும், கண்டவர்கள் எல்லோரும் பார்க்க முடியாது.  அந்த வசதிகளை இவர்களுக்கு அளித்தது யார்? இவ்விருவருல் ஒருவன் நியூ காலேஜில் படித்தான் என்றால், அந்த ஹாஜா பக்ருதீன் மற்றும் குல் மொஹம்மது ஜோடிக்கும், இவனுக்கும் தொடர்பு இருந்ததா?

Bangalore to turkey and back- ISIS agent, techie workerசென்னை, பெங்களுர், இஸ்தான்புல் சென்றது: அப்படியென்றால், அத்தகைய விவரங்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றாகிறது. அதன்படி, சென்னையிலிருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து, துபாய்க்கு சென்றுள்ளனர்[11].  அதாவது, இவர்களுக்கு விமான டிக்கெட், பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், தமது அடையாள விவரங்கள், விலாசம் முதலியவற்றைக் கொடுத்தான் அவை பெறப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவிலிருந்து துபாய் சென்ற இருவரும் பின்னர் அங்கிருந்து துருக்கி சென்றுள்ளனர்[12]. ஆக, இஸ்தான்புல் நகரத்தில் இறங்கியதும், இவர்களை வரவேற்று, ஓட்டலுக்குச் சென்று தங்க வைத்தது யார் என்று தெரியவில்லை. சிரியா எல்லை பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி எல்லை தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்திருக்கின்றனர்[13] என்றுதான் செய்திகள் கூறுகின்றன. ஆனால், அவ்வாறு செல்வதற்கு வேண்டிய அவசியம், தேவை என்னவென்று குறிப்பிடப்படவில்லை.  இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர் துருக்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்[14].  இருவரையும் பிடித்து விசாரித்த துருக்கி அதிகாரிகள் அவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக வந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.  இதையடுத்து இருவரும் துருக்கியிலிருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்[15]. பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்த அவர்களை பிடித்தனர். இத்தனைக்கும், பணம் தேவையாயிற்றே, யார், எவ்வாறு கொடுத்தனர்? பிறகு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய உளவு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

© வேதபிரகாஷ்

23-11-2015

 

[1] http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-190057.html

[2] It may be recalled that in December 2014, Bengaluru police had arrested Mehdi Masroor Biswas from the city for operating a pro-ISIS Twitter handle. Biswas owned @ShamiWitness, which had 17,700 followers.

http://timesofindia.indiatimes.com/india/Engineers-among-9-ISIS-bound-Indians-deported-by-Turkey/articleshow/46079886.cms

[3] http://www.bbc.com/tamil/india/2014/12/141212_isistwitter

[4] http://www.bbc.com/tamil/india/2014/12/141213_indiatwitter

[5] http://www.dailythanthi.com/News/State/2015/11/21125309/ISIS-The-extremist-movement-2-young-men-who-went-to.vpf

[6]  பாரத்.நியூச்.ஆன்லைன், .எஸ்..எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற 2 தமிழக வாலிபர்கள், 21 November, 2015.

[7] மாலைமலர், .எஸ். இயக்கத்தில் சேர்ந்த 2 தமிழக வாலிபர்கள்: உளவுத்துறை விசாரணை, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 21, 12:07 PM IST.

[8] http://indianexpress.com/article/india/india-news-india/two-chennai-men-deported-from-turkey-for-trying-to-join-is/

[9] http://bharathnewsonline.com/714/

[10] தமிழ்.வெப்துனியா, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழக இளைஞர்களை நாடு கடத்திய துருக்கி அரசு: பரபரப்பு தகவல்கள், சனி, 21 நவம்பர் 2015 (13:59 IST).

[11]  தினத்தந்தி, .எஸ்..எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற 2 தமிழக வாலிபர்கள் நாடு கடத்தல், மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 21,2015, 12:53 PM IST; பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 21,2015, 12:53 PM IST.

[12] நியூ.இந்தியா நியூஸ், துருக்கிசிரியா எல்லையில் சிக்கிய .எஸ். இயக்கத்தில் சேரச் சென்ற தமிழக இளைஞர்கள், சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 06:15.04 AM GMT +05:30.

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/turkey-deports-2-tamil-nadu-men-trying-contact-isis-240380.html

[14] http://www.newindianews.com/view.php?23DA2cUMU42M4302lA2dyO322A03e3Ag2bImN3

[15]  http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/turkey-deports-2-tamil-nadu-men-for-trying-to-contact-isis-115112100031_1.html