Archive for the ‘பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு’ category

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் !

ஓகஸ்ட் 23, 2010

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிட்டு மதானையைப் பிடித்துக் கொண்டன தமுமுக: தமுமுகவினர் முன்பு காஷ்மீர் பிரச்சினைக்கு, சென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர். இப்பொழுதுகூட, தீவிரவாதி-ஜிஹாதிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு அப்பாவி பெண்மணிகளை – தாய்-மகள் என்றுகூட பார்க்காமல் (ஜரினா மற்றும் ஷகிலா) சுட்டுக் கொன்றுள்ளனர்[1]. முன்பு கல்லெடித்து கலாட்டா செய்தனர் அந்த தீவிரவாதிகள், இப்பொழுது கடைக்காரர்களே கல்லடித்து அவர்களை விரட்டுகின்றனர்[2]. எனெனில், அவர்களுக்கு அந்த அளவிற்கு வெறுப்பு வந்து விட்டது[3] போலும்! ஆக அந்த பிரச்சினை சரி வராது என்று நினைத்து, கோயம்புத்தூருக்குச் சென்று, தமுமுக ஆர்பாட்டம் செய்துள்ளனர் போலும்.

கேரள போலீஸார் எப்பொழுதும் தீவிரவாதிகளுக்கே உதவிக் கொண்டிருக்கவேண்டுமா? கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானியை பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடகப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகத்தினர் இன்று கோவையில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்[4]. தமுமுகவின் கோவை மாவட்டத் தலைவர் பர்கத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். கர்நாடக போலீஸாருக்குத் துணைபோன கேரள போலீஸாரை அவர்கள் கடுமையாக விமர்சித்தினர்[5]. மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர். ஏற்கெனெவே, கேரள போலீஸார், அவ்வாறு உதவி செய்துததன், ரொம்ப நல்லபேரை வாங்கிக்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் சாதிக்[6], மாநில துணைச் செயலர் செய்யது பேசியதாவது[7]: “கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா? மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்?கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும்”.

முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டால்தான் முஸ்லீம்களுக்கு உரிமைகள் கிடைக்கும்: “தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது[8]. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்”, இவ்வாறு செய்யது பேசினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்

கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[9]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா உளவுப் படைகளைவிட தமுமுகவிற்கு உண்மை தெரியும் போல இருக்கிறது: பெங்களூர் குண்டுவெடிப்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நசீர் என்பவர் அளித்த தகவலின் பேரில் மதானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அத்தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை என்றும், வேறு பலமான ஆதாரங்கள் இல்லாததாலும் மதானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதாவது, போலீஸார் ஒன்றுமே இல்லாமல் கைது செய்துள்ளனராம்! அப்பொழுது, நஸீரையும் விட்டு விடாலாமே? மற்ற கைது செய்யப்பட்டுள்ள, எல்லா தீவிரவாதிகளையும் விட்டுவிடலாமே?

தாவூத் ஜிலானி சொல்வர்டு பொய்யா, நஸீர் சொல்வர்து பொய்யா? தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[10].  நஸீர் சொல்லியுள்ள இடங்களுக்குத்தான், இப்பொழுது மௌலானா மைதானியை அழைத்துச் சென்றுள்ளனர்[11]. இதையும் மறுக்க முடியுமா?


[1] http://www.ndtv.com/article/india/zareena-19-and-mother-killed-by-militants-in-kashmir-46663

[2] http://timesofindia.indiatimes.com/india/Protestors-in-Kashmir-face-stones-their-own-bitter-pill/articleshow/6420878.cms

[3] http://www.dnaindia.com/india/report_kashmir-stone-pelters-get-a-taste-of-their-own-medicine_1427515

[4] தினமணி, மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்; First Published : 23 Aug 2010 04:26:06 PM IST; Last Updated : 23 Aug 2010 04:28:31 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=…………….SectionName=Latest

[5] Demonstration in Tamil Nadu condemning Kerala and Karnataka govts on Madani’s arrest; Published: Monday, Aug 23, 2010, 15:30 IST; Agency: PTI
http://www.dnaindia.com/india/report_demonstration-in-tamil-nadu-condemning-kerala-and-karnataka-govts-on-madani-s-arrest_1427524

[6] http://www.indiatalkies.com/2010/08/activists-muslim-voluntary-forum-protest-madanis-arrest-karnataka-police.html

[7] தினமலர், இந்தியாவை நாம் ஆளும் போது தான் நமக்குரிய உரிமைகள் கிடைக்கும்: .மு.மு.., மாநில துணை செயலர், ஆகஸ்ட் 23, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68650

[8] ஜிஹாதி மொழி பேசப்படிகிறது இங்கு, அதாவது, காஃபிர்கள் ஆளும் நாட்டில் மோமின்களுக்கு உரிமைகள் கிடைக்காது, அதனால், இந்தியாவை முஸ்லீம்கள் ஆளவேண்டும், என்ற கருத்து வைக்கப்படுகிறது. முஸ்லீம்கள் எப்படி, எவ்வாறு மறுபடியும் ஆளமுடியும், ஆள்வார்கள் என்று மற்றவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.

[9] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,

http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html

[10] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html

[11] Dajjiworld, Madani in Madikeri, IB team Coming,  Sunday, August 22, 2010 11:16:15 AM (IST) ,

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=83862&n_tit=Madani+in+Madikeri%2C+IB+team+Coming+

கேரளாவில் ஜிஹாதி பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?

ஜூலை 13, 2010

கேரளாவில் ஜிஹாதி பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38159

தினமலர்: பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010: ஆலப்புழா :

கேரளாவில் பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பு: கேரளாவில் பெருகி வரும் பயங்கரவாத செயல்களை தடுக்க, பயங்கரவாத தடுப்பு சிறப்பு பிரிவு அமைக்கப்படுகிறது. இதுகுறித்து இரு மாதங்களுக்கு முன் (மே 2010), மாநில டி.ஜி.பி., அனுப்பிய அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது. கேரளாவில், பயங்கரவாத செயல்கள் பெருகி வருகின்றன. இதில் குறிப்பாக,

கோழிக்கோட்டில் வெடிகுண்டு சம்பவம்,

தமிழக விரைவு போக்குவரத்துக் கழக பஸ்,எர்ணாகுளத்தில் எரிப்பு என,

தற்போது கல்லூரி ஆசிரியரின் கையை வெட்டி வீசும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன், கேரளாவில் உள்ள இரு வேறு இடங்களில், பஸ், ரயிலில் வெடிகுண்டு பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், போலீசாரிடம் தெரிவித்தனர். அவற்றை அங்கு வைத்தவர் யார் என்பது குறித்து, போலீசாருக்கு எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

பயங்கரவாத செயல்களை  தேசிய விசாரணை ஆணையம் (என்.ஐ.ஏ.,): பயங்கரவாத செயல்கள் மாநிலத்தில் அதிகரிக்கும் நிலையில், இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணை விசாரணை குழு  மற்றும் மாநிலத்தில் பயங்கரவாத செயல்களை  தேசிய விசாரணை ஆணையம் (என்.ஐ.ஏ.,) விசாரிக்க வேண்டிய நிலையை கருத்தில் கொண்டு, புதிய சிறப்பு பிரிவு அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.புதிய சிறப்பு பிரிவு அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, மாநில போலீஸ் டி.ஜி.பி.,ஜேக்கப் புன்னூஸ், மூன்று மாதங்களுக்கு முன், அரசுக்கு ஆலோசனை அறிக்கை அளித்தார். பரிசீலித்த மாநில உள்ளாட்சித் துறை, அவரது அறிக்கையை ஏற்க முடிவு செய்துள்ளது.இதுகுறித்து உள்ளாட்சித்துறை, மாநில நிதித் துறையிடம் அனுமதி கோரி உள்ளது. இச்சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டால், அதன் வசம் விசாரணை, புலனாய்வு மற்றும் நடவடிக்கையை (ஆபரேஷன்) ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பிரிவில், கமாண்டோ படையினர் தவிர தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையினரையும் உட்படுத்த, மாநில போலீஸ் டி.ஜி.பி., அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்.இச்சிறப்பு பிரிவுக்காக அலுவலகம் துவங்கவும், வாகனங்கள், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்கவும், அரசுக்கு அவர் பரிந்துரைத்தார்.  இவ்விஷயத்தில் அரசு காலதாமதப்படுத்தி விட்டதாக, புகார் எழுந்துள்ளது.

பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு செயல்படாமல் முடங்கி கிடப்பது ஏன்? கேரளாவில் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து விசாரிக்க, மாநில அரசு நியமித்த இணை விசாரணை குழு செயல்படாமல் முடங்கி கிடப்பதாகவும், இதையடுத்து தான் தற்போது புதிய சிறப்பு பிரிவு துவங்க டி.ஜி.பி., சிபாரிசு செய்துள்ளதாகவும் கருத்து நிலவி வருகிறது. இணை விசாரணை குழுவில் செயல்பட்ட சிறப்பான அதிகாரிகளை என்.ஐ.ஏ., வசம் சென்று விட்டது. மேலும், இக்குழுவின் ஐ.ஜி.,யாக செயல்பட்ட வினோத்குமார், பதவி உயர்வு பெற்று, ஐதராபாத் போலீஸ் அகடமிக்குச் சென்று விட்டார். இதையடுத்து தான், மாநில இணை விசாரணைக் குழு (ஜெ.ஐ.டி.,) முடங்கிப் போனதாகவும் கருத்து நிலவுகிறது. மேலும், கேரளாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்களை தடுக்க, போதுமான பயிற்சி பெற்ற போலீசார் களத்தில் இல்லை.

அரசுதுறைகள் வேலைசெய்யாமல் இருப்பது ஏன்? கல்லூரி ஆசிரியர் ஜோசப் கை வெட்டப்பட்ட சம்பவத்தில், அவர் பிரச்னைக்குரிய வினாத்தாள் தயாரித்தபோதே, போலீசார் எச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. தற்போது இப்பிரச்னையில், போலி சிம் கார்டுகள் தயாரித்து வழங்கிய வழக்கும் சேர்ந்து கொண்டுள்ளது.”தற்போது புதியதாக உருவாக்கப்படும், பயங்கரவாத சிறப்பு பிரிவு குறித்து, இரண்டொரு நாளில் முடிவெடுக்கப்படும்’ என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் கோடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். போலீஸ் துறையில் சிறப்பாக செயல்படும் அதிகாரி தான் நியமிக்கப்படுவர். எந்த ரேங்கில் உள்ள அதிகாரி என்பது குறித்து, இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இதுகுறித்து, திருவனந்தபுரத்தில் முதல்வர் தலைமையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடக்கும்.அதில், பயங்கரவாத சிறப்பு பிரிவு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். இக்கூட்டத்தில் மாநில போலீஸ் டி.ஜி.பி., உட்பட பலர் கலந்து கொள்வர் என, அமைச்சர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ரெய்டில் சிக்கியது என்ன? கல்லூரி ஆசிரியரின் கையை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், போலீசாருக்கும், மாநில அரசுக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள், ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதில் முக்கியமாக, ஆசிரியரை தாக்கியதாக சமீபத்தில் பிரபலமாகி வரும் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என போலீசார் கருதுகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த பலரது வீடுகளில் போலீசார், “ரெய்டு’ நடத்தினர். நூறுக்கும் மேற்பட்ட வீடுகள், அலுவலகங்களில் நடந்த, “ரெய்டில்’  பல்வேறு ரகசிய தகவல்களை உள்ளடக்கிய ஆவணங்கள், டைரி, “சிடி’க்கள் சிக்கின.அதில், இவ்வமைப்புக்கு ஆட்களை திரட்ட தலா 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தது முதல், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என, பல்வேறு தகவல்களும், அதுகுறித ஆவணங்களும் இடம் பெற்றிருந்தன.

ராணுவத்துறை சம்பந்தமாக, பல்வேறு ரகசிய தகவல்களும், “சிடி’க்களில் இருந்தன: நாட்டின் ராணுவத்துறை சம்பந்தமாக, பல்வேறு ரகசிய தகவல்களும், “சிடி’க்களில் இருந்ததை பார்த்து, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றில் இந்திய ராணுவத்தினரின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்தும், ஆலோசனைகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இவ்வமைப்பு செயல்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் லட்கணக்கான ரூபாய் குறித்தும், பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இவ்வழக்கில், புது முன்னணி அமைப்பைச்  சேர்ந்த 17 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இதில், கல்லூரி ஆசிரியரின் கையை வெட்டிய கும்பலைச் சேர்ந்தவர்களும் அடக்கம். மேலும், போலி முகவரி கொடுத்து, போலி சிம் கார்டுகள் தயாரித்த மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலி முகவரியில் சிம்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன: போதுமான ஆதாரங்களை பெறாமல், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு, போலி முகவரியில் சிம்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது முஸ்லீம்களே அத்தகைய கடைகளை வைத்துக் கொண்டு உதவியுள்ளார்கள். இதில், கோதமங்கலம் தனியார் மொபைல் கடை உரிமையாளர் அஜாஸ் (27), ரகசிய மொபைல் கம்பெனி பிரதிநிதிகள் சிஜூ (23) மற்றும் ராஜன் கே.ஜோளி ((25) ஆகியோர், கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு, தலைமறைவாகியுள்ள கொல்லம் அடுத்த வர்கலாவில் பதுங்கியிருந்த, மூவாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்த சூல்பிகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தான் மேற்கண்ட மூவரும், போலி சிம் கார்டுகள் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வழக்கு தொடர்பாக பலரை போலீசார் தேடி வரும் நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், பல தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம், இடுக்கி மாவட்டம் அடிமாலி கிராமத்திலும்,  தமிழக – கேரள எல்லையை ஒட்டி குமிளி பகுதியில் சிலரது வீடுகளிலும், “ரெய்டு’ நடத்தினர்.அதில், பல முக்கிய ஆவணங்களும், தகவல்களும் கிடைத்துள்ளதாக பத்தனம்திட்டாவில், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்தார். இக்குற்றச் செயல் யாரால், எதற்காக செய்யப்பட்டது என்பது குறித்து, தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாகவும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்டது எந்த அமைப்பு, அதன் பெயர் போன்ற விவரங்களை தெரிவிப்பது சரியல்ல என, அவர் மறுத்து விட்டார்.

ராணுவ புலனாய்வுப் பிரிவு விசாரணை : தொடுபுழா நியுமேன் கல்லூரி ஆசிரியர் டி.ஜெ.ஜோசப் என்பவரை தாக்கி, அவரது வலதுகையை வெட்டி எறிந்த சம்பவம் குறித்து விசாரித்த மாநில போலீசாருக்கு, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதில், முக்கியமாக ராணுவத்தினரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது  நடவடிக்கைகளை தடுப்பது குறித்தான, “சிடி’க்கள், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களது வீடுகளில், “ரெய்டின்’ போது சிக்கியது.”இக்குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்து ராணுவ புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்’ என, போலீஸ் டி.ஜி.பி., கோரினார். இதையடுத்து நேற்று, கொச்சி வந்த ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள், கொச்சி நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபரகாமை சந்தித்தனர்.மாநில போலீசார் நடத்திய, “ரெய்டு’ மற்றும்  கைப்பற்றிய சில குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்தும் விசாரித்தனர். அதில், குறிப்பாக ராணுவத்தினர் குறித்தும், தலிபான் அமைப்பினர் வழங்கும் தண்டனைகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் ஆகியவை அடங்கிய, “சிடி’க்களை ஆய்வு செய்து விசாரித்து அறிந்தனர்.

வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், பற்ற வைக்கும் திரிகள் முதலியவைக் கண்டெடுக்கப்பட்டன: 13-07-2010 (செவ்வாய்) அன்று 20க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இன்டியா  மற்றும் சோசியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இன்டியா அலுவலகங்கள், அந்த இயக்கங்களின் அங்கத்தினர்களின் வீடுகள் மற்ற ரகசிய இடங்கள் போலீஸார் சோதனையிட்டபோது, நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்கள், மற்றும் குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள் முதலியவைக் கண்டெடுக்கப்பட்டன[1]. இதைத்தவிர, மற்றொரு இடத்தில் 178 டிடோனேட்டர்கள் (வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் கருவிகள்), ஏழு மீட்டர் ஃபியூஸ் வயர் (வெடிக்குண்டுகளைப் பற்ற வைக்கும் திரிகள்) முதலியவை நென்மன்டா என்ற இடத்திலிருந்து போலீஸார் கைப்பற்றினர்[2]. முந்தைய இடம் கன்னனூர் மாவட்டத்தில் எடக்காடு என்ற இடத்தில் மானக்குப்புரம் என்ற மசூதியின் காலியிடத்தில் அவை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் கூறியுள்ளனர்[3]. அதாவது மசூதி அத்தகைய குண்டு தயாரிக்கும் வேலைக்கு உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாத பயிற்சிப் புத்தகங்கள், பிரசுரங்கள்: கேரள மாநிலம், தொடுபுழா நியுமேன் கல்லூரி பேராசிரியர் ஜோசப் என்பவரது வலதுகையை வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் முக்கிய அமைப்பைச் சேர்ந்த[4] சிலர் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அவ்வமைப்பைச் சேர்ந்த ரனீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், சர்ப்ராஸ் நவாஸ் என்பவர் எழுதிய ஜிகாத் என்ற புத்தகம் சிக்கியது. இதில் காஃபிர்களுக்கு எதிராக எப்படி போர் தொடுப்பது, கொல்வது, அவ்வாறு கொல்வது முஸ்லீமின் புனித காரியமாகும் என்றெல்லாம் விளக்கப்பட்டிருந்தன. மேலும், இது தொடர்பான துண்டு பிரசுரங்களும் மற்ற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன[5]. தொடர்ந்து அவர் மீதும், நவுஷாத் என்பவர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் தனிச்சுற்றுக்கு ரகசியமாக கொடுக்கப்படும் பிரசுரங்கள் ஆகும்.

தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[6]: கோழிக்கோடு மற்றும் பெங்களூரில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்புடைய சர்ப்ராஸ் நவாஸ் தான் இப்புத்தகத்தை எழுதியவராகவும் இருக்குமோ என போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி ஆசிரியரின் கையை வெட்டிய சம்பவத்தில், ஆலுவா பகுதியைச் சேர்ந்த குஞ்சுமோன் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநில போலீசார் தயாரித்த விரிவான அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. அறிக்கை குறித்து உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அரசியல் காரணங்களுக்காக, குறிப்பாக முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதனால், மெதுவாகவே அரசு இயந்திரங்கள் இயங்கி வருகின்றன.

சி.டி.க்களில் பயங்கர காட்சிகள்: மனிதர்கள்மிருகங்களை கொன்று தீவிரவாத பயிற்சி; கேரளாவில் அல்கொய்தா ஆதரவாளர்கள் 2 பேர் கைது[7]: பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகள் வீடுகள் பறிமுதல் செய்யப்பட்ட வி.டி.க்கள் மற்றும் முக்கயி வாகனங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைப் பற்றப்பட்ட சி.டி.க்களில் மனிதர்களை கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சிகள் மற்றும் மிருகங்களை கொன்று தீவிரவாத பயிற்சி அளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க பெண் ஒருவரின் உடல் உறுப்புகளை வெட்டி ஏறிந்த பின்பு அவரை இரும்பு படுக்கையில் படுக்க வைத்து உயிரோடு எரிப்பதும் சி.டி.யில் இடம் பெற்றுள்ளது. ரத்தத்தை உறைய வைக்கும் பயங்கர காட்சிகள் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இவையெல்லாம் தாலிபன்களின் சிடிக்கள் என்று கருதப்படுகின்றன[8]. இத்தகைய காட்சிகளை மறுபடி மறுபடி பார்க்கும்போது, ஜிஹாதிகளுக்கு மனம் கல்லாகி, மக்களை கொல்லும் அளவிற்குத் தயார்படுத்திக் கொள்ள ஏதுவாகிறது என்று தாலிபன்கள் குஊறியுள்ளது இங்கு நோக்கத்தக்கது. இரானிலும் இத்தகைய வீடியோக்கள் மூளைசலவைக்கு உபயோகப்படுத்தப்பட்டன.

கைது-செய்யப்பட்ட-கமர்ருதீன்-சஜீவ்

கைது-செய்யப்பட்ட-கமர்ருதீன்-சஜீவ்

தலிபான்களிடம் தீவிரவாதபயிற்சி பெற்ற தீவிரவாதிகள்: இதையடுத்து நேற்று இரவு முதல் விடிய விடிய போலீசார் கேரளாவில் பல இடங்களில் அல்கொய்தா மற்றும் தலிபான் ஆதரவாளர்கள் வீடுகளில் புகுந்து சோதனை நடத்தினர். ஆலப்புலா, மூவாற்று பிழை, ஆலுவா, எர்ணாகுளம் உள்பட முக்கிய பல இடங்களில் நடத்திய சோதனையில் அல்கொய்தா ஆதரவாளர்கள் மற்றும் பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகள் வீடுகளில் இருந்தும் ஏராளமான சி.டி.க்கள் தீவிரவாத செயல்கள் அடங்கிய புஸ்தகங்கள் கைப்பற்றப்பட்டன[9]. இது தொடர்பாக ஆழப் புலாவை சேர்ந்த கமர்ருதீன், சஜீவ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தலிபான்களிடம் தீவிரவாதபயிற்சி பெற்ற உண்மையை கக்கினர். தொடர்ந்து அவர்களிடம் தீவிரவிசாரணை நடத்தி வருகிறது.

Yunus-arrested-Kerala

Yunus-arrested-Kerala

அல்கொய்தாதாலிபான் தீவிரவாத இயக்குகளுடன் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்குள்ள தொடர்பு: மேலும் பேராசிரியர் ஜோசப்பின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குஞ்சுமோன், அலி, யுனூஸ், தாகிர் ஆகிய 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. அல்கொய்தா-தாலிபான் தீவிரவாத இயக்குகளுடன் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்குள்ள தொடர்பு அம்பலமானது கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yunus-arrested-coming-from-Nagore

Yunus-arrested-coming-from-Nagore

கேரளாவில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சிறையில் அடைப்பு[10]: கோழிக்கோடு, ஜுலை. 24, கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோழிக்கோடு பகுதியில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கோழிக் கோடை சேர்ந்த அப்துல் ஹலீம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தனக்கு தொடர்பு இருப்பதாக அவன் ஒத்துக் கொண்டான். மேலும் அவன் தென் மாநிலங்களில் இருந்து இளைஞர்களை தேர்ந்தெடுத்து பாகிஸ்தானுக்கு தீவிரவாத பயிற்சிக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தான். சமீபத்தில் காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளும் கேரளாவில் இருந்து இவன் மூலமே பாகிஸ்தான் புறப்பட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அப்துல் ஹலீம் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

காஷ்மீர தீவிரவாதிகளுக்கு கேரளத்தில் பயிற்சி:


[1] The Hindu, More bombs and weapons seized, for details, see here: http://www.hindu.com/2010/07/14/stories/2010071457930100.htm

The police seized country-made bombs, weapons and incriminating material in raids at the offices of the Popular Front of India (PFI) and its political arm, the Social Democratic Party of India (SDPI), houses of their activists and suspected locations in different parts of the State on Tuesday –  13-07-2010.

[2] In a development not connected with the PFI, the police recovered 178 detonators and seven metres of fuse wire from the house of a quarry worker at Nenmanda in the Balussery police station limits. A case under various sections of the Explosives Substances Act was registered against him.

[3] Times of India, Explosives, weapons seized near Kerala mosque, TNN, Jul 13, 2010, 04.13am IST,

http://timesofindia.indiatimes.com/India/Explosives-weapons-seized-near-Kerala-mosque/articleshow/6160395.cms

In continuing crackdown on Muslim fanatic groups following the recent barbaric attack by alleged Popular Front of India activists on a Kerala lecturer, police on Monday recovered a sizeable quantity of explosives and other crude weapons from a vacant building in the premises of Manappuram mosque at Edakkad in Kannur district.

[4] Popular Front of India (பாப்புலர் பிரண்ட் ஆஃப் இன்டியா), கடந்த ஆண்டுகளில் அதிகமாக செலவு செய்து, சுதந்திர தினத்தன்று ஏதோ ராணுவ அணிவகுப்பு மாதிரி, ஊர்வலம் நடத்தி வர ஆரம்பித்தினர். ஆனால், அவர்களது பேச்சு, எழுத்து, துண்டு பிரசுரங்கள் முதலியன, தீவிரவாதத்தைத்தூண்டும் வகையில் இருந்தன. இதனால், அரசு அதனைக் கண்கானிக்க ஆரம்பித்தது.

[5] http://news.outlookindia.com/item.aspx?687069

[6] தினமலர், பேராசிரியரின் கையை வெட்டிய இருவர் மீது தேச துரோக வழக்கு, ஜூலை 20,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=43670

[7] மாலைமலர், சி.டி.க்களில் பயங்கர காட்சிகள்: மனிதர்கள்மிருகங்களை கொன்று தீவிரவாத பயிற்சி; கேரளாவில் அல்கொய்தா ஆதரவாளர்கள் 2 பேர் கைது, http://www.maalaimalar.com/2010/07/10173317/two-alquita-arrest.html

[8] தலிபான்களின் சி.டி.சிக்கியது சனிக்கிழமை, 10 ஜூலை 2010 14:00, http://www.earangam.com/ta/latest-news/986-taliban-cd

[9] http://thecanaratimes.com/epaper/index.php/archives/5383

[10] மக்கள் முரசு, கேரளாவில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சிறையில் அடைப்பு, http://www.makkalmurasu.com/index.php?mod=article&cat=india&article=11723

காஷ்மீரில் அமைதி குலைத்து ஜிஹாதி பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்?

ஜூலை 12, 2010

காஷ்மீரில் அமைதி குலைத்து ஜிஹாதி பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=36728

என்ன தான் நடக்கிறது காஷ்மீரில்? அமைதிக்கு வேட்டு வைப்பது யார்? மீண்டும் ஒரு முறை கலவர பூமியாக மாறி இருக்கிறது காஷ்மீர்.  கலவரத்தை கட்டுப்படுத்த, பத்தாண்டுகளுக்கு பின், முதல் முறையாக ராணுவம் வரவழைக்கப்படும் அளவுக்கு தற்போது நிலைமை மோசமாக மாறிப் போயிருக்கிறது. போராட்டம், கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு, உயிர் பலி என, காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் கலவரக் காடாக காட்சி அளிக்கின்றன. இந்த கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக மத்திய அரசே வெளிப்படையாக தெரிவித்துள்ளது. காஷ்மீரில் அப்படி என்னதான் நடக்கிறது.

பிரிவினையில் துவங்கிய விபரீதம் : நாட்டு பிரிவினையின் போது துவங்கிய பிரச்னை, காஷ்மீரில் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பகுதி இந்தியாவில் உள்ளது. இந்த எஞ்சிய பகுதியையும் தன் பக்கம் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக, தங்களது நாட்டில் பயங்கரவாத முகாம்களை உருவாக்கி, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை காஷ்மீருக்குள் ஊடுருவ வைத்து, வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள். சில நேரங்களில் காஷ்மீரைத் தாண்டியும் டில்லி, மும்பை என, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளின் கரங்கள் நீண்டு விடுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீர் பிரச்னை இருந்து வந்தாலும், கடந்த 1987ல்  இருந்து தான், வன்முறை அதிகம் பரவியது. அன்று துவங்கி கடந்தாண்டு ஜூன் வரை காஷ்மீர் கலவரத்தில் 47 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உயிர்ப்பலி அதிகரித்தாலும், கலவரம் நின்றபாடு இல்லை.

பிரிவினைவாதிகளின் கைவரிசை : இந்தியா-பாக்., நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை காரணமாக சில காலமாக அடங்கிப் போயிருந்த வன்முறை, தற்போது மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது. காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலை திரும்பாமல் பார்த்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், இங்கு செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பினர் தான். இவற்றிலேயே மிதவாத அமைப்பு, தீவிர அமைப்பு என இரு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களில் ஒரு தரப்பினர், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர், இந்தியாவிலேயே தொடர்ந்து தன்னாட்சி பெற்ற மாகாணமாக காஷ்மீர் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தை கூறி, அவ்வப் போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பதே இவர்களின் பிரதான வேலை.

தற்போதைய கலவரத்துக்கு காரணம் என்ன?கடந்த 20 நாட்களுக்கு முன், காஷ்மீரின் சோபூரில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு இளைஞர் பலியானார். இந்த பிரச்னை தான், தற்போது காஷ்மீர் கலவரக் காடாக மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை கலவரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஸ்ரீநகர், குப்வாரா, புலவாமா, பாரமுல்லா, புட்கம் ஆகிய மாவட்டங்கள், 20 நாட்களுக்கும் மேலாக முடங்கி கிடக்கின்றன. அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதுவரை 15 பேர் பலி : ஊரடங்கு உத்தரவை மீறி, ஏராளமான இளைஞர்கள் வீதிக்கு வந்து, பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். போராட்டம் என்றால், சாதாரண போராட்டம் அல்ல. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் மீது, சரமாரியாக கற்களை வீசி தாக்குவது, சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது போன்ற போராட்டங்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த கல் வீச்சில் காயமடைந்த பாதுகாப்பு படையினர், திருப்பி தாக்கத் துவங்கி விடுகின்றனர். தடியடி, கண்ணீர் புகை ஆகியவற்றை தாண்டி, சில நேரங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். சில நேரங்களில், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, வீட்டிற்குள் இருந்து, ஜன்னல் வழியாக கலவரத்தை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி பெண் ஒருவர் மீதும் பாதுகாப்பு படையினரின் குண்டுகள் பாய்ந்தது தான் பரிதாபம்.

குடிசைத் தொழிலான கல்வீச்சு : பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவதை, ஸ்ரீநகர் இளைஞர்கள் தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆக்கி விட்டனர். கல்வீச்சில் பங்கேற்காத இளைஞர்களே இல்லை என்ற அளவுக்கு, இது ஒரு குடிசைத் தொழில் போலவே இது மாறி விட்டது. ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் வீதிகளுக்கு வந்து, பாதுகாப்பு படையினர் மீது ஆவேசத்துடன் கற்களை வீசுகின்றனர். சில நேரங்களில் தனியாக சிக்கிக் கொள்ளும் பாதுகாப்பு படையினரை, துவைத்து எடுக்கின்றனர். பாதுகாப்பு படையினரின் வாகனங்களையும் அடித்து சேதப்படுத்துகின்றனர். ஆறு வயது சிறுவர்களில் துவங்கி, 30 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவது என்பது ஒரு சாகச செயலாகவே மாறி விட்டது. இந்த விபரீதம் தான், உயிர் பலி வரை கொண்டு போய் விட்டு விட்டது. அப்பாவி இளைஞர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடச் சொல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத சதி : வன்முறையும், உயிர்ப்பலியும் அதிகரித்துக் கொண்டே போனதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்ட குழு கூடி, இந்த பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தியது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினார். காஷ்மீரில் சமீபகாலமாக நடந்த வரும் வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்து மத்திய அரசு தெளிவாகவே அறிவித்தது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:காஷமீரில் தற்போது நடந்து வரும் கலவரத்தின் பின்னணியில் தேச விரோத சக்திகளின் சதி உள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கும், இந்த கலவரத்துக்கும் தொடர்பு உள்ளது. இருந்தாலும்,  அமைதியான சூழ்நிலையை உருவாக்க, காஷ்மீர் மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

ராணுவம் விரைந்தது : இதையடுத்து தான், தற்போது காஷ்மீருக்கு ராணுவம் விரைந்துள்ளது. 1,700 ராணுவ வீரர்கள் தற்போது ஸ்ரீநகர் உள்ளிட்ட கலவர பகுதியில் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், “காஷ்மீருக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டாலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்பட மாட்டர். கூட்டத்தை கலைப்பது போன்ற பணிகளில் மட்டுமே ஈடுபடுவர்’ என, தெரிவித்துள்ளது.

இதிலும் அரசியல்:காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ள சூழ்நிலையிலும், அரசியல் கட்சிகள் இதிலும் அரசியல் நடத்த துவங்கி விட்டன. குறிப்பாக, ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சிக்கும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையே, இந்த விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில்,”இந்த கலவரத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு உள்ளது. எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாய கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரின் மகன்கள் நேரடியாக இதில் சம்பந்தப் பட்டுள்ளனர்’ என்றார்.

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில்,”முக்கிய அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல், தற்போதை பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், முக்கியமான அமைப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 20 நாட்களாக மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒமர் அப்துல்லா சில மணி நேரங்களை வீதியில் கழித்து பார்க்கட்டும். அப்போது தான் தற்போதைய பிரச்னையில் தீவிரம் அவருக்கு தெரியும்’என்றார்.

மத்திய அரசு முடிவு என்ன?தற்போது ராணுவத்தை அனுப்பி, பிரச்னையை ஓரளவுக்கு மத்திய அரசு சரி செய்தாலும், அடுத்த சில நாட்களில் மீண்டும் இதுபோன்ற கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.  அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்புடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உறுதியான நடவடிக்கையாக இருப்பதோடு, இறுதியான நடவடிக்கையாகவும் இருக்க வேண்டும். காலம், காலமாக தொடர்ந்து வரும் பிரச்னையை ஒரே நாள் இரவில் தீர்த்து விட முடியாது. பிரிவினைவாத அமைப்பில் உள்ள மிதவாதிகளையும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வைக்கலாம். குறிப்பாக, அப்பாவி இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் அவசியம். அதேபோல், காஷ்மீரில் கலவரம் ஏற்படுவதற்கு பாகிஸ்தானும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் மறுக்க முடியாது. பாகிஸ்தான் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது, இந்த விஷயத்தை கண்டிப்புடன் மத்திய அரசின் பிரதிநிதிகள் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடுவதற்கான அவசியத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது. மொத்தத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற விஷயம் தான் இது. மத்திய அரசு சாதுர்யமாக செயல்பட வேண்டிய நேரம் இது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் : மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் தொடர்ந்து செயல்படுகின்றன. அவற்றில் சில அமைப்புகளின் பெயர்கள்:
1. அல் முஜாகிதீன் போர்ஸ்
2. அல் உமர் முஜாகிதீன்
3. ஹர்கத்-உல்-அன்சார்
4. ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி
5. ஹிஸ்புல் முஜாகிதீன்
6. இக்வான் -உல்-முசல்மின்
7. ஜெய்ஸ்-இ-முகமது
8. லஷ்கர்-இ-தொய்பா
9. லஷ்கர்-இ-முகமதி
10. ஜமாத்-உல்-முஜாகிதீன்

காஷ்மீர் கலவரம் ஒரு புள்ளி விவரம் :காஷ்மீரில் கடந்த 1988ல் இருந்து நடந்து வரும் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்த ஒரு புள்ளி விவரத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
*பயங்கரவாத சம்பவங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை, 65 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை.
*வன்முறை மற்றும் கலவரம் காரணமாக இதுவரை 3,429 இளைஞர்கள் மாயமாகியுள்ளனர்.
*பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும் 49 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*பாகிஸ்தானில் 37 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*இந்திய சிறைகளில் 125 காஷ்மீர் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
*பயங்கரவாத சம்பவங்களால் 75 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்கள், அங்கிருந்து நாட்டின் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
*பயங்கரவாதிகளிடம் இருந்து 60 டன் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன (2009 வரை).

சுற்றுலாவை  சீர்குலைக்க சதி?காஷ்மீர், சுற்றுலாவுக்கு பிரபலமான இடம். கோடை காலத்தில் இங்குள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தால் சில ஆண்டுகள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நிலைமை சற்று சீரடைந்ததை தொடர்ந்து, கடந்த ஐந்தாண்டுகளாக இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரத் துவங்கினர். இதை சீர்குலைக்கும் வகையில் தான், தற்போது திட்டமிட்டு இங்கு கலவரம் நடப்பதாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் தொடர்ந்து இங்கு கலவரம் நடப்பதை இதற்கு உதாரணமாக அவர்கள் கூறுகின்றனர்.கடந்த 2008 கோடை காலத்தில்,  அமர்நாத் குகை கோவில் வாரியத்துக்கு, நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவது தொடர்பான பிரச்னையில் கலவரம் வெடித்தது. இதனால், சுற்றுலாத் துறை அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு, இரண்டு இளம் பெண்கள் பாதுகாப்பு படையினரால் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறி, பெரிய அளவில் கலவரம் வெடித்தது. இதனால் கடந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு வீழ்ச்சி அடைந்தது. இதுபோலவே, இந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் கலவரம் வெடித்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கான சதியா? கடந்த இரண்டு ஆண்டாக சர்வதேச அளவில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. மிகப் பெரிய வல்லரசு நாடுகள் கூட, இந்த பொருளாதார மந்த நிலைக்கு தப்பவில்லை. பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியா, இந்த பொருளாதார மந்த நிலையிலும் வெற்றிகரமாக தாக்கு பிடித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தாலும், பெரிய அளவிலான நிதி பிரச்னை ஏற்படவில்லை. ஆசிய பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய வல்லரசு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியா வல்லரசாக உருவாகி விடுமோ என்ற அச்சம், மற்ற வல்லரசு நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை, பாகிஸ்தான் மூலமாக அந்த நாடுகள் ஏற்படுத்தி வருகின்றனவோ என்ற சந்தேகத்தை பொருளாதார நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். காஷ்மீரில் தற்போது ஏற்பட்டு வரும் கலவரம் இதன் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதும் அந்த நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

– நமது சிறப்பு நிருபர் -நன்றி-தினமலர்.