Archive for the ‘பங்களூரு வெடிகுண்டு’ category

சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு – அல்குவைதா அமைப்பில் இணைய இருந்தது – மொஹம்மது ஆரிபின் கதை!

பிப்ரவரி 12, 2023

சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு – அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது – மொஹம்மது ஆரிபின் கதை!

துருக்கிசிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டாலும் சிரியாவுக்குச் செல்ல ஆசைப்படும் பெங்களூரு சாப்ட்வேர் ஆரிப்: துருக்கி-சிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டு விட்டனர், இடிபாடுகளில் இன்னும் மக்கள் சிக்கியுள்ளர், லட்சக்கணக்கில் மக்கள் அவதிபடுகின்றனர் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், ஐசிஸ், அல்-குவைதா போன்ற இஸ்லாமிக் தீவிரவாதிகள் தங்களது நாசகார வேலைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் அவ்வாறான இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, வேலைக்கு ஆள் சேர்த்து, துருக்கி வழியாக சிரியாவுக்குச் செல்வது என்பது சகஜமாகி விட்டது. சாப்ட்வேர், மெகானிகல் இஞ்சினியரிங் போன்றவர்களுக்கு அங்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது.  இஸ்லாமிக் தீவிரவாத அமைப்புகள் தீவிரவாத போரில் பங்கேற்க மாத சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால், நிறைய இளைஞர்கள் அதற்கு தயாராகி செல்கின்றனர். செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.

சாப்ட்வேர் இன்ஜினியர்சொந்தமாக, .டி., நிறுவனம்பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: உத்தர பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்தவர் முகமது ஆரிப், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக 2021-2023 பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, தனிசந்திரா மஞ்சுநாத் நகரில், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்[1]. இங்கு, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஆண்டு 2022ல் பணியில் இருந்து விலகினார்[2]. பின், சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் ஒன்றை துவக்கி, வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார். அதாவது அந்த அளவுக்கு அறிவை வளர்த்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியர் என்ற பெயரில் வலம் வந்த இவர், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி மறைமுகமாக செயல்பட்டு வந்தார். இதுதான் புதிராக உள்ளது. நன்றாக படித்து, புத்திக்கூர்மையுடன் சம்பாதித்து வரும் பொழுது, ஒழுங்காக மனைவி-மக்கள் என்று சந்தோசத்துடன் வாழ்க்கை வாழ்வதை விட்டு, ஏன் தீவிரவாத சம்பந்தங்கள்  ஐத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.

பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக, அல் குவைதா, ஐ.எஸ்., அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளிடம், ‘டெலிகிராம், டார்க்வெப்’ போன்ற சமூக வலைதள குழுக்களில் இணைந்து, அவற்றின் வாயிலாக பேசி வந்தார். இவரது நடவடிக்கைகள் பற்றி, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள்[3]. இந்திய பொருளாதாரத்தை சீர்ழிக்க வேண்டும் என்றால், பலர் இவ்வாறு இறங்கி வேலை செய்வதை கவனிக்க வேண்டும். பெங்களூருவுக்கு பயங்கரவாதிகளால் மிரட்டல்களும் வருகின்றன. அதன்படி, பெங்களூருவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பெங்களூருவில் எப்போதும் போலீசார் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.

என்..., அதிகாரிகள் கண்காணிப்பு: கடந்த சில மாதங்களாக முகமது ஆரிபின் நடவடிக்கைகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்[4]. நிச்சயமாக, இப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்கள், லட்சக்கணக்கில் சித்தாந்த தாக்குதல்களை ஊடகங்கள், சித்தாந்திகள், செக்யூலரிஸம், சமதர்மம், சமத்துவம், திராவிட மாடல், கம்யூனிஸம் என்றெல்லாம் பலவித கொள்கைகளில் வெளிப்படையாக இந்தியாவை, இந்தியநாட்டிற்கு பாதகமாக விமர்சனம் செய்து, செய்திகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் நடந்து வரும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் மேற்காசிய நாடான சிரியா சென்று, அங்கு அல்- குவைதா பயங்கரவாத அமைப்பில் இணைய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்[5]. இது பற்றிய தகவல் அறிந்ததும், 11-02-2023 அன்று அதிகாலை 4:00 மணியளவில் அவரது வீட்டில், உள்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்[6].

அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது: அவர் சர்வதேச பயங்கரவாத அமைப்பினருடன் பேசி, அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது, அவரது வீட்டில் கிடைத்த ஆதாரங்களில் இருந்து உறுதியானது[7]. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்[8]. அதாவது கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு போலீசாரும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் (என்.ஐ.ஏ.) இணைந்து அவரை கைது செய்திருந்தார்கள்[9]. வீட்டில் இருந்து லேப்டாப், இரண்டு ‘ஹார்டு டிஸ்க்’குகள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. தற்போது முகமது ஆரிப் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதே நேரத்தில் அடுத்த மாதம் (மார்ச்) பெங்களூருவில் இருந்து ஈரானுக்கு சென்று, அங்கிருந்து சிரியாவுக்கு செல்லவும் ஆரிப் திட்டமிட்டு இருந்தார்[11]. இதற்கான விமான டிக்கெட்டுகளையும் அவர் முன்பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[12]. இதற்கு முன்பு ஒரு முறையும் ஈரானில் இருந்து சிரியாவுக்கு செல்ல ஆரிப் முயற்சி செய்திருந்தார்[13]. அந்த சந்தர்ப்பத்தில் அவரால் சிரியாவுக்கு செல்ல முடியாமல் போனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது[14].

பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது: அவர் சிரியா செல்ல இருந்ததால், மனைவி, குழந்தைகளை உத்தர பிரதேசத்தில் விட்டு செல்லவும், பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி உரிமையாளரிடம் பேசியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன[15]. அதே நேரத்தில் ஆரிப்பின் மனைவியிடமும் 12-02-2023 அன்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்[16]. அதாவது ஆரிப் எங்கெல்லாம் சென்று வந்தார்?. அவரை சந்திக்க யாரெல்லாம் வருவார்கள்? பயங்கரவாத அமைப்புடன் இருந்த தொடர்பு? உள்ளிட்டவை குறித்து ஆரிப்பின் மனைவியிடமும் போலீசார் விசாரித்து சில தகவல்களை பெற்றுக் கொண்டனர். மேலும் தற்போது அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்யவும் முடிவு செய்திருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர். மனைவி, பெற்றோர், உற்ரோர் முதலியோரும், இவருக்கு அறிவுரைக் கூறியதாகத் தெரியவில்லை. பெங்களூரில் நல்லவேலை, சம்பளம் இருக்கும் பொழுது, ஏன் இவன் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும், அதிலும் சிரியாவுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கவில்லை.

பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது

முகமது ஆரிப் கைது பற்றி கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதாவது: “உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், பெங்களூரில் தங்கி சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார். புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். நம் நாட்டில் மத உணர்வுகளை துாண்டி விட்டு, அமைதியை சீர்குலைக்க திட்டமிடும் சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்த நபரும் ஒடுக்கப்படுவர்,” இவ்வாறு அவர் கூறினார். உடனே, இவர் பிஜேபிகாரர், இப்படித்தான் பேசுவார், “இஸ்லாமிக்போபியா,” என்றெல்லாம் கூட விளக்கம் கொடுப்பார்கள். அத்தகைய வாத-விவாதங்களும் ஊடகங்களில் நடந்து கொன்டுதான் இருக்கின்றன. ஆனால், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மக்களில் ஏன் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று யாரும் பதில் சொல்வதாக இல்லை.

© வேதபிரகாஷ்

12-02-2023.


[1] தினமலர், பெங்களூருவில் அல் குவைதா பயங்கரவாதி கைது!, Updated : பிப் 12, 2023  03:58 |  Added : பிப் 12, 2023  03:56.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3240036

[3] தினத்தந்தி, பெங்களூருவில் பயங்கரவாதி கைது, பிப்ரவரி 12, 2:50 am.

[4] https://www.dailythanthi.com/News/India/nia-arrests-suspected-al-qaeda-terrorist-in-bengaluru-897842

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Al Qaeda: பெங்களூரில் சாப்ட்வேர் எஞ்சினியர் கைதுஅல்கொய்தாவுடன் தொடர்பு?, SG Balan, First Published Feb 11, 2023, 10:58 AM IST, Last Updated Feb 11, 2023, 12:19 PM IST.

[6] https://tamil.asianetnews.com/india/suspected-terrorist-alleged-to-be-linked-with-al-qaeda-has-been-arrested-in-bengaluru-rpwhvd

[7] தினமணி, பெங்களூருவில் அல்கொய்தா பயங்கரவாதி கைது: என்ஐஏ அதிரடி!, By DIN  |   Published On : 11th February 2023 04:20 PM  |   Last Updated : 11th February 2023 06:10 PM

[8] https://www.dinamani.com/india/2023/feb/11/nia-conducts-searches-in-mumbai-bengaluru-against-suspects-linked-to-isis-al-qaeda-3999212.html

[9] தினசரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு மென்பொறியாளர் கைது, Sakthi K. Paramasivam, February 11, 2023: 2.41 PM.

[10] https://dhinasari.com/india-news/277683-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, பெங்களூர் ஐடி ஊழியர் பேருக்குதான்.. பின்னணியில் தீவிரவாதி! பொறி வைத்து பிடித்த என்ஐஏ, By Vigneshkumar Updated: Saturday, February 11, 2023, 16:21 [IST]

[12] https://tamil.oneindia.com/news/bangalore/bangalore-techie-turned-terrorist-arrested-by-nia-officals-498246.html

[13] குளோபல்.தமிழ்.நியூஸ், அல்கய்தாவுடன் தொடர்பு? கர்நாடகாவில் IT ஊழியர் கைது!, February 11, 2023.

[14] https://globaltamilnews.net/2023/187397/

[15] நியூஸ்.4.தமிழ், தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ!, By Amutha, Published 20.00 hours February 11, 2023

[16] https://www.news4tamil.com/al-qaeda-terrorist-who-was-ready-to-network-in-the-isi-was-arrested-in-bangalore-nia-took-action/

பெங்களூரு குண்டுவெடிப்பு – 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

ஒக்ரோபர் 20, 2013

பெங்களூரு குண்டுவெடிப்பு – 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

Malleswaram blast 04-2013

ஏப்ரல் 17, 2013 அன்று பிஜேபி அலுவலகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பில் 18 பேர் காயமடைந்தனர்; 23 வாகனங்கள் நாசமடைந்தன; 56 கட்டிடங்கள் சேதமடைந்தன. அதில் கீழ்கண்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது[1].

poi valakku copy

எண் பெயர் பெயர் / வயது இடம் / ஊர்
1 ஜே. பாஷிர் என்ற பஷீர் J Baasir alias Basheer, 30; (from Tirunelveli);
2 எம். கிச்சன் புஹாரி என்கின்ற புகாரி M Kichan Buhari alias Bugari, 38; (from Tirunelveli);
3 எம். முஹம்மது சலீம் M Mohammed Salin, 30; (from Tirunelveli);
4 பன்னா இஸ்மாயில் என்ற முஹம்மது இஸ்மாயில் Panna Ismail alias Mohammed Ismail, 30;  (from Tirunelveli);
5 பறவை பாஷா Paravai Basha, 32, (from Tirunelveli);
6 ஆலி கான் குட்டி Ali Khan Kutti (from Tirunelveli);
7 செயிட் அஸ்கர் அலி என்ற செயிட் Sait Asgar Ali alias Sait, 29;  (from Coimbatore)
8 எஸ். ரஹமத்துல்லா S Rahmatulla, 32; (from Coimbatore)
9 வலயில் ஹக்கீம் என்ற ஹக்கீம் Valayil Hakeem alias Hakeem, 32;  (from Coimbatore)
10 சையது சுலைமான் என்ற தென்காசி சுலைமான் Syed Suleiman alias Tenkasi Suleiman, 24;  (from Coimbatore)
11 மன் பாய் என்ற சுலைமான் என்ற ஓலங்கோ Man Bhai alias Suleiman alias Olango, 31;  (from Coimbatore)
12 ஜுல்பிகர் அலி Zulfikar Ali, 24 (from Coimbatore)
13 பிலால் மாலிக் Bilal Malik alias Bilal, 28 (from Madurai)
14 பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன் Fakruddin alias Police Fakruddin, 30 (from Madurai).

Tamil Jihadis used woman-children as shield

7,445 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிக்கையில், 200 ஆவணங்கள் மற்றும் 260 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சிலர் அல்-உம்மா போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்வியக்கம் 1998ம் ஆண்டில் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நடத்தியது. அதுவும் அத்வானியைக் குறிவைத்ததாகும். அக்டோபர் 2, 2013 அன்று ஆந்திரபிரதேசத்திலிருந்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் பக்ருத்தீன் பிடிபட்டனர். பறவை பாஷா மற்றும் அலி கான் குட்டி இருவரும் இதுவரை பிடிபடவில்லை[2].

Malleswaram blast 04-2013.2

இந்தியகுற்றவியல்சட்டம், வெடிப்பொருட்கள்சட்டம், 1908, பொதுஇடங்களுக்குசேதம்ஏற்படுத்துதல்தடுப்புசட்டம் 1984 மற்றும்சட்டவிரோதமானகூடுதல்தடுப்புசட்டம் 1967 இவற்றின் கீழ் வழக்கு போட்டுள்ளது போதுமா?: 20-10-2013 சனிக்கிழமை நகர முதன்மை கூடுதல் மாஜிஸ்ட்ரேட் முன்னர், ஓம்காரைய்யா, ஜே.சி.நகர் ACP மற்றும் புலன் விசாரிக்கும் அதிகாரி மூலம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது. வையாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப் பட்ட இந்த வழக்கில், இந்திய குற்றவியல் சட்டம், வெடிப்பொருட்கள் சட்டம், 1908, பொது இடங்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் தடுப்பு சட்டம் 1984 மற்றும் சட்டவிரோதமான கூடுதல் தடுப்பு சட்டம் 1967 [IPC sections 120 (B), 121, 121 (A), 123, 332, 307, 435 and 201 and under Section 3, 4, 5 and 6 of The Explosive Substances Act, 1908 and under Section 4 of Prevention of Damage to Public Property Act 1984 and under Section 10, 13, 15, 16, 17, 18, 19 and 20 of Unlawful Activities (Prevention) Act, 1967] முதலியவற்றின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது[3]. குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்றெல்லாம் இருக்கும் போது, இப்படி வழக்கு போட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில், ஏற்கெனவே, ஆதாரங்கள் இல்லை, என்று இத்தகைய ஜிஹாதிகள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் அல்லது ஐந்தாண்டுகள் சிறை தண்டனை பெற்று, பிறகு வெளியே வந்தவுடன், மறுபடியும் அதே குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்று ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு?

Malleswaram blast 04-2013.3

கைது செய்யப் பட்ட நிலையிலேயே “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்ட முறை: இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்யப் பட்டபோதே, குற்றஞ்சாட்டப் பட்டவர்கள், “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் என்று பலவித முறைகளை, அவர்களின் மனைவிகள் மூலம் செய்விக்கப் பட்டன. ஏதோ தங்கள் கணவன்மார்களை அநியாயமாக கைது செய்யப் பட்டுள்ளனர், அவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என்றெல்லாம் வாதிடப் பட்டன. “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் தாராளமாக இவர்களுக்கு விளம்பரத்துடன் புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டது. ஆனால், படுகாயம் அடைந்தவர்கள் பற்றி கவலைப் படவில்லை. ஷகீல் அஹமது, திவிஜய் சிங் போன்ற காங்கிரஸ்காரர்கள் மற்றும் இதர உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்தது, இதனால் பிஜேபிக்கு தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் என்றெல்லாம் வாய்கூசாமல், மனசாட்சி இல்லாமல் பேசினர், எழுதினர். பிரச்சாரம் செய்ய வந்த சோனியாவும் இதைப் பற்றிக் கண்டிக்கவில்லை. மாறாக, ஊழலைப் பற்றி பேசி, வெற்றியும் பெற்றனர். அதர்கு உள்ளூர் அறிவு-ஜீவிகள் தீவிரவாதத்தையும் மறந்து காங்கிரஸுக்குத் துணை போயினர். மோசமாக விமர்சனம் செயத காங்கிரஸ் தலைவர்களைக் கண்டிக்கவில்லை. அதாவது, சாமர்த்தியமாக குண்டுவெடிப்பை ஆதரித்தனர் என்றேயாகியது. அதனால் தான், குண்டு வைத்தவர்கள், இத்தகைய முரண்பாட்டை, சித்தாந்த குழப்பங்களை, இந்துக்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

Auditor Ramesh murder - moaned by wife etc

தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களின் நிலையை மறப்பது, மறைப்பது, மறுப்பது: சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்கக் கூடாது, செய்யப் படக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், குண்டுவெடிப்பில் அநியாயமாகக் கொல்லப் பட்டவர்கள், படுகாயம் அடைந்தவர்கள், அவர்களின் மனைவி-மக்கள் முதலோரின் கதி என்ன என்பதை, இவர்கள் யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. அப்படி மனிதநேயம், ஈரம், உணர்வு, மனசாட்சி முதலியவை உள்ளன, இருந்திருந்தன என்றால், அவர்கள் தங்களது கணவன்மார்களுக்கு, இத்தகைய குரூரக் குற்றங்களை செய்யாதே, குண்டுகளை வைக்காதே, அப்பாவி மக்களைக் கொல்லாதே என்றெல்லாம் அறிவுரை கூறியிருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும். அப்பொழுதெ இவையெல்லாமே தவிர்க்கப் பாட்டிருக்கக் கூடும். தொடர்ந்து, இவ்வாறு ஜிஹாத் என்ற மதவெறியோடு இந்துக்களைக் கொல்வோம் என்று வெளிப்படையாக குரூரக்குற்றங்கள், கொலைகள் முதலியவற்றை செய்து கொண்டிருந்தால், மக்களுக்கு அவர்கள் எதை உணர்த்த செய்கிறார்கள் என்பதை அவர்கள் தாம் புரிந்து கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

20-10-2013


மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

ஜூலை 17, 2011

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

 

குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.

 

வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].

 

உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது.  ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].

 

சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.

 

செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

 

தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.

 

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

 

தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.

 

26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.


[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

வங்கதேச முஸ்லீம்கள் ஊடுருவல்: காங்கிரஸ்-மார்க்ஸீயக் கூட்டு சதி!

ஜனவரி 11, 2011

வங்கதேச முஸ்லீம்கள் ஊடுருவல்: காங்கிரஸ்-மார்க்ஸீயக் கூட்டு சதி!

முஸ்லீம்கள் இந்தியாவில் நுழைவது – அரசியக் கட்சிகள் உதவி செய்வது: சமீபகாலத்தில் மேற்கு வங்காளத்தில் மார்க்ஸீய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் (சோனியா), திரணமூல் காங்கிரஸ் முதலியவை முஸ்லீம்கள் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு அதிகமாகவே செல்லம் கொடுத்து ஆதரித்து வருகிறார்கள். அந்த கட்சிகள் ஒருவரையொருவர் மீது சொல்லிக்கொள்ளும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் மூலமே அத்தகைய சதி வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அவை அவ்வாறு இல்லை என்று மறுக்கவில்லை. மாறாக மற்றவர் மீது குற்றாஞ்ச்சாட்டுகிறது, ஏனெனில், தேர்தல் வருவதால், யார் அளவிற்கு அதிகமாக அவர்களுக்கு ஆதரவாக உள்ளார்கள் என்று காண்பிக்த்துக் கொள்ள போட்டிப்போட்டுக் கொண்டு உழைக்கின்றனர், தங்களது விசிவாசத்தைக் காண்பித்துக் கொள்கின்றனர். மேலும் பாகிஸ்தானில் அச்சிடப்படும் போலி இந்திய பணத்தை / கள்ள நோட்டுகளை இந்தியாவில் பரப்பும் வேலையினையும் இவர்கள் செய்து வருகின்றனர். சென்ற வருடத்தில் பெங்களூரில் அத்தகையோர் பலர் பிடிபட்டுள்ளனர்[1].

உள்ளே நுழையும் முஸ்லீம்களுக்கு அடையாள அட்டைக் கொடுத்து ஓட்டுவங்கியை உண்டாக்கிப் பலப்படுத்துவது: தினமும் பங்களாதேசத்திலிருந்து, இந்தியாவிற்கு வந்து வேலைசெய்துவிட்டுச் செல்ல பாஸ் அளிக்கப் படுகிறது. ஆனால், பெரும்பாலான உள்ளே நுழையும் முஸ்லீம்கள் அப்படியே தங்கிவிடுகின்றனர். பிறகு அவர்களுக்கு ரேஷன்கார்ட், தேர்தல் அடையாள அட்டை முதலியவைக் கொடுக்கப்பட்டு, சட்டரீதியில் உள்ளே நுழைந்தவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத வகையில் பாதுகாக்கப் படுகின்றனர். பதிலுக்கு எல்லா மாநில அரசு, போலீஸ், செக்போஸ்ட் அதிகாரிகள் என எல்லோருமே நன்றாக கவனிக்கப் படுகின்றனர். அரசியல்வாதிகளுக்கு மொத்தமாக ஓட்டுக் கிடைக்கிறது[2]. இதே மாதிரித்தான் இப்பொழுது தென்னிந்தியாவிலும் நுழைய ஆரம்பித்துள்ளது தெரிகின்றது.  கடந்த 30 ஆண்டுகளில் எல்லைப்புற மாகாணங்களில் முஸ்லீம்களின் ஜனத்தொகை கனிசமாக உயர்ந்துள்ளதையும் கவனிக்கலாம்[3]. இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது[4]. முன்பு தீவிரவாதி உருவன் பங்களாதேச எல்லையில் அகப்பட்டதும் நினைவுகூரத்தக்கது[5].

முஸ்லீம் ஓட்டுவங்கி வளரும் விதம் (ஆகஸ்ட் 2008)[6]:  பிறகு, உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ரேஷன்கார்ட் முதல் வாக்காளர் அட்டைவரை வங்கிவிடுகின்றனர். அதாவது, இந்திய பிரஜைகளாகிவிடுகின்றனர். புகாரின் அடிப்படையில், கேந்திரபாரவில், துணை கலெக்டர் முரளிதர மாலிக் என்பவர் ஆணையில் கடந்த சென்ஸஸ் போது, சோதனையிட்டபோது, 30,000 பங்களாதேச மக்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டு, அவை நீக்கப்பட்டதாக அறிவித்தார்.

ஜகசிங்கபூர் கடற்கரைப்பகுதிகளில் பங்களாதேஷ வாக்காளர்எண்ணிக்கை உயருகிறது (மார்ச் 2009)[7]: 2004ல் இந்தியக் கொடியை எரித்த முஸ்லீம்களை எப்படி அரசியல்வாதிகள் ரேஷன்கார்ட், வாக்காளர் அடையாள அட்டைக் ஒடுத்து வளர்க்கிறார்கள் என்று பார்த்தால், மேற்கு வங்காளத்தில் எப்படி கம்யூனிஸ்ட்டுகள் வளர்த்தனரோ, அதே மாதிரியான வழியை ஒரிஸாவிலும் பின்பற்றியூள்ளனர் என்று தெரிகிறது. ஒரிஸாவில் அளவிற்கு அதிகமாக போய்விட்டதால், அது வெளிப்பட்டுவிட்டது. தலைக்கு ஆயிரம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டு, இரண்டு இடங்களில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்தபோது, உள்ளூர் மக்களே புகார் கொடுத்ததால், வசமாக மாட்டிக் கொண்டனர். உண்மை வெளிவந்து விட்டது.

பெங்களூரில் எட்டு பங்களாதேச முஸ்லீம்கள் கைது (ஜனவரி 2011): பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த ரபிமுல்லா, மொய்னா என்ற இருவரை, பெங்களூரு தேவர்ஜீவனஹள்ளியில் போலீசார் கைது செய்தனர்[8]. இவர்களுடன் மேலும் எட்டு பேர் அத்துமீறி இந்தியாவிற்குள் வந்துள்ளனர் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் எதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளனர்; அவர்களின் திட்டம் என்ன என்பது குறித்து போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வேதபிரகாஷ்

11-01-2011


[1] Two Bangla nationals arrested with fake currencies in Bangalore, Published: Saturday, Jan 30, 2010, 

http://www.dnaindia.com/india/report_two-bangla-nationals-arrested-with-fake-currencies-in-bangalore_1341100 Those arrested have been identified as Maifuddin (49) and Billus (32), they said.

http://findarticles.com/p/news-articles/dna-daily-news-analysis-mumbai/mi_8111/is_20100701/6-bangla-nationals-arrested/ai_n54317764/

[6] Anurjay Dhal,  ABVP ask Naveen to deport Bangladeshi infiltrators as early as possible,  Thursday, August 07, 2008;http://www.orissadiary.com/Shownews.asp?id=7740

[7] Rise of Bangladeshi voters in costal villages of Orissa’s Jagsinghpur district , Tuesday, March 17, 2009;http://www.orissadiary.com/CurrentNews.asp?id=11429

[8] தினமலர், பாஸ்போர்ட் இல்லாத வங்கதேசத்தினர் கைது, ஜனவரி 10, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=163297

உமர் ஃபரூக் மற்றும் இப்ராஹிம் மௌல்வி என்ற இருவர் பங்களூரு வெடிகுண்டு வழக்கில் கைது!

ஒக்ரோபர் 17, 2010
உமர் ஃபரூக் மற்றும் இப்ராஹிம் மௌல்வி என்ற இருவர் பங்களூரு வெடிகுண்டு வழக்கில் கைது!
Rajasthan police and Karnataka anti-terrorist squad (ATS) on Friday arrested two alleged LeT members from Kasargod (Kerala) and Ajmer for their role in the 2008 blasts in Bangalore in which one person was killed and over a dozen people were injured. The suspects were identified as Umar Farooq and Ibrahim Moulvi. “Umar was held in Ajmer and Ibrahim in Kasargod in Kerala,” said Bangalore police commissioner Shankar Bidari. Both were arrested on Friday, he said.

Read more: 2 held in Kasargod, Ajmer for ’08 Bangalore blast – The Times of India http://timesofindia.indiatimes.com/india/2-held-in-Kasargod-Ajmer-for-08-Bangalore-blast/articleshow/6761644.cms#ixzz12ZWiguEI