Archive for the ‘நிக்கா நாமா’ category

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

ஓகஸ்ட் 26, 2016

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

Khader Basha arrested for sham marriages and fraud
போலித்திருமணங்கள் ஏன், எப்படி, எவ்வாறு செய்யப்பட்டன?
: ஒரு முஸ்லிம் எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? ஒரு நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் உள்ளது. பிறகு, காதர் பாட்சா எப்படி எட்டு திருமணங்களை செய்து கொண்டான். அப்படியென்றால், திருமணம் நடந்தெல்லாம் போலி ஆவணங்கள் மூலம் நடந்ததா? அதே இமாம் அல்லது வேறு இமாமால் கொடுக்கப்பட்டதா? இங்குதான், போலி நிக்காஹ் நாமாக்கள் எப்படி ம்கொடுக்கப்பட்டன, இத்திருமணங்களை போலியாக செய்ய வேண்டிய அவசியம் என்ன, இவையெல்லாம், நகை-பணம் சுருட்ட செய்யப்பட்டத் திருமணங்களா அல்லது வேறு உள்நோக்கம் உள்ளதா? அப்பெண்கள் வாழ்க்கை சீரழிந்தது மற்றும் அக்குழந்தைகளின் எதிர்காலமும் பிரச்சினையாகிறது என்பதை கவனிக்க வேண்டும். நாளைக்கு பள்ளிகளில் சேர்க்கும் போது, தந்தையைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அப்பொழுது, தாய்-குழந்தை இருவருக்குமே சொல்லொணா துயர் ஏற்படும். அத்தகைய கஷ்டங்களை மீள சுமார் 15 வருடங்கள் ஆகும். ஆகையால், இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

Madrassa where Salamiya met Taslim-fake nikhanama

மதரஸாக்களில் திருமண தரகும், போலி நிக்காநாமா வழங்கிய இமாமும்: சலாமியா பானுவின் புகாரில் பல விசயங்கள் வெளிவருகின்றன:

  1. ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவிதஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. [தஸ்லிமா இத்தகைய பெண்களை குறிவைத்து வேலை செய்கிறாளா?]
  2. கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன் [மதரஸாவில் பேசுவதை விட, வீட்டில் கூப்பிட்டு பேசியிருக்கலாமே? மதரஸாக்களில் திருமண தரகு வேலை கூட நடக்கிறாதா என்பது தெரியவில்லை].
  3. அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[1] [வரன் பார்ப்பதற்கு ஒரு லட்சம் கொடுப்பார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. இல்லை திருமணம் செய்து கொண்டால், மதன் மூலம் பணம் கிடைக்கும் என்பது போல உள்ளதா?].
  4. கீழமாத்தூர் ஜமாத்தை சேர்ந்த இமாம் ஜாகிர் உசேன் என்பவர் எனது திருமணத்தை பதிவு செய்த நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது [இஸ்லாத்தில் இப்படி போலி நிக்காஹ் நாமா கொடுக்கிறார்கள் என்பதும் திகைப்பாக இருக்கிறது. முதலில் இமாம் ஒருவர் இப்படியெல்லாம் போலி திருமணப்பத்திரம் தயாரித்துக் கொடுக்கலாமா?].
  5. நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது, அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது என்றால், ஒன்றிற்கும் மேலான அத்தகைய பதிவு புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்றாகிறது [இதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. இப்படி மதரஸா, மசூதிக்களில் கொடுக்கப்படும் சான்றிதழ்களின் ஆதாரத்துவத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடிய்ம் என்ற கேளிவியும் எழுகின்றது].
  6. ஆக, நிக்காஹ் பதிவு புத்தகம் மற்றும் நிக்கஹ் நாமா எப்படி போலியாக இருக்க முடியும்? [இல்லை மறுபடியும் அரசு திருமணப்பதிவு செய்து கொண்டு, சான்றிதழ் பெறவேண்டும் என்று சட்டத்தை உண்டாக்க வேண்டும்]Khader Basha marrying Salamiya Banu - fake nikkah nama
  7. இத்திருமணங்கள் உண்மையான திருமணங்கள் இல்லை, போலியானவை என்றால், அத்தகைய திருமணங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? [அங்குதான் லவ்-ஜிஹாத் போன்ற மோசடிகள் உள்ளனவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது]
  8. இச்செய்தி வந்த பிறகும், கீழமாத்தூர் ஜமாத், கட்டுப்பாட்டில் உள்ள மசூதி மற்ற முஸ்லிம்கள் எப்படி மௌனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை [அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்தே நடந்து வருகின்றனவா?].
  9. எனது கணவர் காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கயூம் மற்றும் இமாம் ஜாகிர்உசேன் ஆகியோர் திட்டமிட்டு என்னை கூட்டாக சேர்ந்து ஏமாற்றி உள்ளனர் [போலி நிக்காக் நாமா என்றால், போலி திருமணம் என்றாகிறது].
  10. தஸ்லிமாவுக்கும் காதர்பாட்சாவுக்கும் தொடர்பு இருக்கிறது[2] [இருவரும் சேர்ந்து இத்தகைய கல்யாண மோசடிகளை செய்து வருகின்றனரா?].
  11. இந்து பெண்களும் சம்பந்தப் பட்டிருப்பதால், அவர்களும் மதம் மாற்றப்பட்டார்களா இல்லையா?
  12. மதம் மாற்றப்பட்டால் தான் நிக்காஹ் நடக்கும் என்றால், மதம் மாற்றப்பட்ட சான்றிதழ் யார் கொடுத்தது? அது உண்மையா அல்லது போலியா?
  13. இந்துபெண்களை அப்படி ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டது, “லவ்-ஜிஹாத்” போன்ற வகையில் வருமா?
  14. காதர் பாட்சாவுக்கு சிலை கடத்திலிலும் தொடர்பு இருக்கிறது என்று பானு ஊடகக்காரர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[3].

என்று பற்பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு பதிலளித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தெரிகிறது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- உண்மை என்ன

பெண்கள்-குழந்தைகள் இத்தகைய மிருகங்களிடமிருந்த காப்பாற்றப் பட வேண்டும்: திருமணங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது, ஏனெனில், பெண்கள் நலன், குழந்தை நலன், குடும்ப நலன், அவர்களின் எதிர்காலம் முதலியவை அதில் அடங்கியுள்ளன. பெண்கள் கற்பு துச்சமாகும் போது, தாம்பத்திய மதிப்பு, மரியாதை மற்றும் போற்றும் தன்மை குறைகிறது. தாம்பத்திய குறைந்தால், அசிங்கமானால், கணவன்-மனைவி உறவுகள் பாதிக்கும், விவாக ரத்தில் முடியும். விவாகரத்து “கணவன்-மனைவி”யை மட்டும் பிரிக்கவில்லை, குடும்பத்தை, குடும்பங்களைப் பிரிக்கின்றன. அதிகமாக பாதிக்கப்படுவது மகன்-மகள் தான், அவர்களின் குழந்தைகள். குழந்தைப் பருவத்தில் கணவன்-மனைவி கத்தல்கள், சச்சரவுகள் சண்டைகள், அடித்து கொள்ளுதல் முதலியன மனத்தில் படிந்து, பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படும். இவ்விதத்திலும் கட்டுப்பாடு முக்கியமாகிறது.

Madrassa where Salamiya met Taslim

மதம் என்ற ரீதியில் கூட இத்தகைய சமூக சீரழிவுகளை நியாயப்படுத்தக் கூடாது: முன்னரே குறிப்பிட்டது போல, இதனை, இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும். இல்லையெனில், காதர் பாட்சா போன்றோர் வந்து கொண்டே இருப்பார்கள். சில ஆண்டுகள் சிறையில் இருந்து, வெளியே வந்து மறுபடியும் அதே குற்றங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனவே “லவ்-ஜிஹாத்” பிரச்சினை இப்பொழுது கேரளாவில் நிதர்சனமாகி பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இனி, “திருமண-ஜிஹாத்” என்பதும் உருவாகி விட்டது போலும்! அதாவது, திருமணம் மதம் மாற்றுவது, செய்து கொள்வது, குழந்தைகளைப் பெற்றெடுப்பது, நகை-பணம் எடுத்துக் கொண்டு / மிரட்டி வாங்கிக் கொண்டு ஓடிவிடுவது என்ற முறையில் செயல்படுவதைத் தடுக்க வேண்டும். பெண்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[2] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[3]  http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

2016 ஜூலையில் கைது செய்யப்பட்ட காதர் பாட்சா மறுபடியும் ஆகஸ்டில் எப்படி கைது செய்யப்பட்டான்? போலித் திருமணங்கள் கூட மோசடி குற்றத்தில் வருமா?

ஓகஸ்ட் 26, 2016

2016 ஜூலையில் கைது செய்யப்பட்ட காதர் பாட்சா மறுபடியும் ஆகஸ்டில் எப்படி கைது செய்யப்பட்டான்? போலித் திருமணங்கள் கூட மோசடி குற்றத்தில் வருமா?

Lhader Basha marring eight women

எட்டு திருமணங்கள்போலி நிக்காநாமா: சலாமியா பானு தொடர்கிறார், “இந்த நிலையில் காதர் பாட்சாவை பற்றி விசாரித்தபோது[1], எனது கணவருக்கு ஏற்கனவே சென்னையை சேர்ந்த

  1. நிர்மலாவுடன் திருமணமாகி 3 குழந்தைகள்,
  2. திண்டுக்கல்லை சேர்ந்த ஜமுனாராணியை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர்.
  3. மேலும் வத்தலக்குண்டு மகாலட்சுமி
  4. பாத்திமா, சென்னை[2].
  5. .
  6. .
  7. .
  8. சலாமியா பானு (26-06-2016)

 

உட்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். கீழமாத்தூர் ஜமாத்தை சேர்ந்த இமாம் ஜாகிர்உசேன் என்பவர் எனது திருமணத்தை பதிவு செய்த நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது. எனது கணவர் காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கயூம் மற்றும் இமாம் ஜாகிர்உசேன் ஆகியோர் திட்டமிட்டு என்னை கூட்டாக சேர்ந்து ஏமாற்றி உள்ளனர். என்னிடம் நகை, பணம் மற்றும் சொத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சதி செய்து மோசடி செய்து விட்டார்கள். இதையறிந்து அதிர்ச்சியடைந்தேன்.  என்னை ஏமாற்றி மோசடி செய்த காதர் பாட்சா மற்றும் திருமணம் செய்து வைத்த தஸ்லிமா, அவரது கணவர் கயூம்,  அவரது நண்பர் ஜாகீர் உசேன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என கூறியிருந்தார்[3]. அதன்படி, காதர் பாட்சா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Khader Basha marrying Salamiya Banu - fake nikkah nama

தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சா 25-07-2016 அன்று கைது: இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் 25-07-2016 அன்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[4]. தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்[5]. ஜூலையில் கைதாக சிறையிடைக்கப் பட்ட பாட்சாவை போலீஸார் தேடி வருகின்றனர் என்று ஆகஸ்ட். 23,24,25.2016 தேதிகளில் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அப்படியென்றால், நடுவில், அவன் ஜாமீனில் வெளிவந்தானா என்று தெரியவில்லை.

Khader Basha arrested

போலீஸார் காதர் பாட்சா மீது மோசடி வழக்கு பதிவு: திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி அருகே வசிப்பவர் கார்த்திகாயினி (27). இவரது கணவர் மோகன்ராஜ் (30). இவர்கள் வீட்டருகே குடியிருப்பவர் மூலம் காதர்பாட்சா பழக்கமானார். அவர், கார்த்திகாயினிக்கு சிங்கப்பூரில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், பேசியபடி ஆசிரியை வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. தற்போது தலைமறைவாகி விட்டார். இது குறித்து கார்த்திகாயினி புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காவேரி வழக்குப்பதிவு செய்தார். தனிப்படை அமைத்து, காதர்பாட்சாவை தேடி வருகின்றனர் என்று மாலைமலர் செய்தி வெளியிட்டது[6].

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- எட்டாவது மனைவி புகார்

ஜூலையில் கைதான காதர் பாட்சா மறுபடியும் ஆகஸ்டில் கைதானது எப்படி?: காதர் பாட்சா கைது குறித்தான செய்திகளை தமிழ் ஊடகங்கள் முன்னுக்கு முரணாக வெளியிட்டுள்ளன. “7 பெண்களை ஏமாற்றித் திருமணம்: வங்கி ஊழியர் கைது,” என்று தினமணி ஜூலை.26. 2016ல் செய்தி வெளியிட்டது[7]. அதன் படி 25-007-2016 அன்று கைது செய்யப்பட்டான்[8]. எனவே, ஒன்று பாட்சா 8-திருமணம் அல்லது கார்த்திகாயினியை ஏமாற்றிய வழக்கிற்கும் தனியாக கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஜாமீனில் வெளிவந்தவன் மறுபடியும் கைது செய்யப் பட்டிருக்க வேண்டும்.  தினமலர், 25-08-2016 அன்று செய்தியை இவ்வாறு மாற்றிக் கொண்டது[9], “இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருக்கும் காதர்பாட்சாவை இந்த வழக்கில் கைது செய்து, நாளை (ஆக.26ல்) திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்”. அதாவது, பாட்சா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டுள்ளான் என்பதை கூறுகிறது[10]. துாத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர் பாட்சாவை, போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்[11], என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது[12].  நிருபர்கள் விவரங்களை சரி பார்த்து செய்திகளை வெளியிட வேண்டும்.

சலாமியா பானு பேட்டி

முந்தைய ஏழு திருமணங்கள் முறையாக நடந்தனவா?: எட்டு திருமணங்கள் காதர் பாட்சா திருமணம் செய்து கொண்டான் என்றால், ஒவ்வொரு முறையும் முறையாக விவாகரத்து செய்து, திருமணம் செய்து கொண்டானா என்ற கேள்வி எழுகின்றது. 26-06-2016 அன்று சலாமியா பானுவுடன் திருமணம் நடந்தது என்றால், 2000லிருந்தே, காதர் பாட்சா இத்தகைய மோசடியில் ஈடுபட்டு வந்திருக்க வேண்டும். அப்படியென்றால், அந்த ஏழு பெண்கள் ஏன் புகார் அளிக்கவில்லை என்று தெரியவில்லை. தன்மானம், குடும்ப மானம் போய் விடும் என்று பயந்து புகார் கொடுக்காமல் இருந்து விட்டார்கள் போலும். இருப்பினும் உரிய விவாகரத்து பெறாமல் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இல்லை, பாட்சா அவர்களிடமும் நகைகள், பணம் முதலியவற்றை அபகரித்துக் கொண்டு, தப்பியோடு வந்து, மறைந்து விட்டான் போலும். பிறகு, அடுத்த பெண்ணை ஏமாற்றப் புறப்பட்டான் போலும். இதில் இந்து பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்றாகிறது. அப்படியென்றால், பெற்றோர், உற்றோர், மற்றோர் எப்படி ஒப்புக் கொண்டனர் அல்லது தெரியாமல் திருமணம் செய்தனரா? திருமணங்கள் பதிவு செய்யப்பட்டனவா இல்லையா? இரண்டு குழந்தைகள் உள்ளன எனும்போது, இரண்டு-மூன்று ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளனர் என்றாகிறது. பிரசவம் பார்க்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, பிறப்பு சான்றிதழ் வாங்குவது போன்றவற்றில், நிச்சயமாக காதர் பாட்சா தான் தந்தை என்ற முறையில் பெயரைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஏனெனில், எந்த பெண்ணும், அவ்விவரங்கள் இல்லாமல், குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டாள்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] மாலைமலர், 8 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் மீது போலீசில் புகார், பதிவு: ஜூலை 21, 2016 16:27; மாற்றம்: ஜூலை 21, 2016 16:28.

[2] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[3] http://www.maalaimalar.com/News/State/2016/07/21162753/1027209/8-women-married-the-kalyana-mannan.vpf

[4] தினகரன், 7 பெண்களை மணமுடித்தகல்யாண மன்னன்கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை, Date: 2016-07-25@ 02:00:17.

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=233498

[6] http://www.maalaimalar.com/News/District/2016/08/23123754/1034185/man-cheating-8-women-married-in-dindigul.vpf

[7] தினமணி, 7 பெண்களை ஏமாற்றித் திருமணம்: வங்கி ஊழியர் கைது, By மதுரை, First Published : 26 July 2016 01:56 AM IST.

[8] போலீஸார், வங்கி ஊழியர் விளாத்திகுளத்தைச் சேர்ந்த காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கியூம், கீழமாத்தூர் ஜமாத் நிர்வாகி ஜாகிர்உசேன் ஆகிய 4 பேரிடமும் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். இந்நிலையில் காதர்பாட்சாவை திங்கள்கிழமை (25-07-2016) கைது செய்தனர்.

http://www.dinamani.com/tamilnadu/2016/07/26/7-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-/article3547133.ece

[9] தினமலர், 8 பெண்களை ஏமாற்றியவர் மோசடி வழக்கிலும் கைது : திண்டுக்கல் போலீஸ் நடவடிக்கை, ஆகஸ்ட்.25, 2016:00.20.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=159262

[11] தினமலர், 8 பெண்களை ஏமாற்றி மணம் முடித்தவர் கைது, ஆகஸ்ட்.24, 2016: 23.26.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1592429&Print=1

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா?

பிப்ரவரி 10, 2014

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா?

 

முதல் திருமணம் சுஜய சந்திரன் 2005

முதல் திருமணம் சுஜய சந்திரன் 2005

முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள சினிமாக்காரர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[1].

 

முதல் திருமணம் சுஜயா சந்திரன் 2005.

முதல் திருமணம் சுஜயா சந்திரன் 2005.

சாதீய திரிபுவாதம் கொடுக்கப்பட வேண்டிய அவசியம்: உண்மை அவ்வாறாக இருக்கும் போது, சில தமிழ் ஊடகங்கள், வேறுமுறையில் திரிபுவாதம் கொடுத்துள்ளது கவழத்தை ஈர்த்துள்ளது. வழக்கம் போல “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[2], யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது[3]. “இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா” எனும்போது, ரஹ்மான் கூட அவ்வ்வாறு இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் போது, அவரை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே, அது ஏன் என்று தெரியவில்லை. அதனால், இதன் நோக்கத்தையும், பின்னணியையும் ஆராய வேண்டியுள்ளது.

 

இரண்டாவது திருமணம் திருப்பதியில் 2011

இரண்டாவது திருமணம் திருப்பதியில் 2011

வந்துள்ள செய்தி, வதந்தி, விளக்கம்: இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக  தகவல்கள் வெளியாயின[4]. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்[5].. மேலும் மூன்றாவதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர். குடும்பத்தினர்  அனைவரும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்[6]. சினிமா இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார், என்று சுருக்கமாக செய்திகளைக் கொடுத்துள்ளனர்.

 

இரண்டாவது திருமணம் 2011

இரண்டாவது திருமணம் 2011

இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா: பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். குடும்பமே சேர்ந்து ஒரு தொழிலை செய்வது, வியாபாரம் செய்வது என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இளையராஜா ஆன்மீகம், பக்தி என்று ஊறித்திளைக்கும் நேரத்தில் தன் மகன் இப்படி மாறுகிறார் என்றால் அது ஆன்மீக தேடலும் இல்லை, பக்தியும் இல்லை ஆனால், அதற்கு மேலாக வேறொன்றுள்ளது என்று தெரிகிறது.

 

Yuvansankarraja converting to islam

Yuvansankarraja converting to islam

1–வதுதிருமணம் (2005): இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா சினிமா இசையமைப்பாளராகிப் பிரபலமானார். பல திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். பிரித்தானியாவில் வசித்த சுஜயா சந்திரன் என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணை 2002லிருந்து காதலித்து வந்தார். சி. ஆர். வேலாயுதம் மற்றும் சரோஜினி சந்திரன் மகளான இவரை லண்டனில் 2003ல் பதிவு திருமணம் செய்து கொண்டு, மார்ச்.21, 2005ல் பெற்றோர் சம்பதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால்,ஆகஸ்ட் 2007ல் விவாகரத்து மனு போட்டு பிப்ரவரி 2008ல் விவாகரத்து பெற்றனர்[7]. யுவன்சங்கர் ராஜா, சுஜயா மனுவில் கூறியிருந்த காரணம், “தீர்த்துக் கொள்ளமுடியாத வேறுபாடுகள்” [irreconcilable differences[8]] என்று குறிப்பிட்டிருந்தனர்! பிரிந்த பிறகு, சுஜயா, வெளிநாடு போய்விட்டார்[9]. ஆக முதல் திருமணம் தோல்வி என்றாகி விட்டது. என்னத்தான் இசை அமைத்தாலும், மனைவியுடன் இயைந்து வாழ்க்கை நடத்தமுடியவில்லை என்றாகிறது.

 

2–வதுதிருமணம் (2011): அதன்பிறகு யுவன்சங்கர் ராஜா ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் 01-09-2011 அன்று செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது. முதல் திருமணம் டைவர்ஸில் முடிந்ததால், இது ரகசியமாக நடத்தப் பட்டது[10]. குடும்பத்தினர் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் [மைத்துனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, மாமா கங்கை அமரன், விஷ்ணு வர்தன், அவரது மனைவி அனு, சுப்பு பஞ்சு, மிர்சி சிவா போன்றோர்] மட்டுமே கலந்து கொண்டனர்[11]. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இரண்டுபேரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஆக, இரண்டாவது திருமணத்தையும் திருப்திகரமாக இல்லை அல்லது இரண்டாவது மனைவியை திருப்திகரமாக வைத்துக்கொள்ள முடியவில்லை, தாம்பத்தியம் ஒழுங்காக நடத்தமுடியவில்லை என்றாகிறது.

 

முஸ்லிமாகமாறினார்[12] (2014): இந்தநிலையில், யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார். குரான் படிக்கிறார். தாடியும் வளர்த்துவருகிறார், என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘நான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டேன். ஆனால், மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், யுவன்சங்கர் ராஜா, மூன்றாவதாக முஸ்லிம் பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது இஸ்லாத்தையும், திருமணத்தையும் அவரே இணைத்துப் பேசுவதிலிருந்து அதற்கு சம்பந்தம் உள்ளது என்றாகிறது.

 

ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்: தன்னுடைய தாயார் 31-10-2011 இறந்ததிலிருந்து[13] அன்று அவர் தனிமையை உணருவதாகக் கூறப்படுகிறது. ஒரு ஆன்மீகக் குருவை சந்தித்து இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இஸ்லாமுக்கு சென்றது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்[14]. கடந்த ஒரு வருடமாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறார். ஸ்டூடியோவில் இருந்தாலும், வேலையில் இருந்தாலும் தவறாமல் ஐந்துமுறை தொழுகை செய்து வருகிறார். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ளவேண்டுமா என்பதைப் பற்றொ யோசித்து வருவதாகத் தெரிகிறது. இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதினால் அவரது குடும்பத்தினரும் தலையிடவில்லையாம்[15]. ஏ. ஆர். ரஹ்மான் போல முஸ்லிமாக மாறவில்லை என்றால், வேறு எவர் போல முஸ்லிமாக மாற துணிந்தார் என்று அவர்தான் விளக்க வேண்டும். இஸ்லாத்தை இவ்வாறு உபயோகப் படுத்துகிறார்கள், இஸ்லாம் அவ்வாறு உபயோகப்படுகிறது என்றால், இஸ்லாம் அதனை ஏன் ஊக்குவிக்கிறது, அனுமதிக்கிறது, பதிவு செய்கிறது? 1995ல் சரளா முதுகல் தீர்ப்பில் உச்சநீதி மன்ற, இஸ்லாத்துக்கு மாறினால் கூட இரண்டாவது திருமணம் செல்லாது என்று குறிப்பிட்டது[16].

 

வேதபிரகாஷ்

© 10-02-2014


[2] இனியொரு.டாட்.காம்,  http://inioru.com/?p=39133

[4] தினமணி, நான்இஸ்லாத்தைபின்பற்றுவதற்காகபெருமைப்படுகிறேன்: யுவன்சங்கர்ராஜா, பிப்ரவரி.10 2014. By Web Dinamani, சென்னை, First Published : 09 February 2014 02:58 PM IST

 

[10] Yuvan has kept the marriage as a closely guarded secret since it is his second marriage. However, the event was publicized and eventually everyone came to know about it before the Yuvan’s wedding. Remember, Yuvan’s first marriage with Sujaya ended in divorce in 2008 and the promising music director now found Shilpa as his life partnerhttp://www.teluguone.com/tmdb/news/Music-Director-Yuvan-Shankar-Raja-Marriage-en-6135c1.html

[12] தினத்தந்தி, சினிமாஇசையமைப்பாளர்யுவன்சங்கர்ராஜாமுஸ்லிம்மதத்துக்குமாறினார், பதிவு செய்த நாள் : Feb 10 | 02:15 am

[14] While we tried to reach Yuvan regarding this, a source close to the music director revealed, “Yuvan was very attached to his mother and soon after she passed away, he started missing her a lot. He also met a spiritual guru, but we cannot say what exactly made him follow Islam,” and maintained that, he was definitely not inspired by fellow composer AR Rahman (who had converted to Islam) in his decision.

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Yuvan-Shankar-Raja-embraces-Islam/articleshow/30113638.cms

[15] Yuvan, the source said, has been practicing Islam for almost a year now. “He has been doing namaz five times a day all these months. He is not missing his prayers even when he is at work and ensures that he allots time for it at his studio as well,” said the source. The source added that Yuvan is now in the process of converting to Islam. “Currently, he is planning to convert to Islam and is also thinking of going for a change of name. But, he is yet to decide on these. Since it is his personal decision, his family members respect it.”

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Yuvan-Shankar-Raja-embraces-Islam/articleshow/30113638.cms

[16] In 1995, the Supreme Court ruled in the Sarla Mudgal case that under the Hindu Marriage Act 1955, a Hindu husband cannot marry a second time simply by embracing Islam without lawfully dissolving the first marriage. He would be guilty of bigamy, the Court ruled.

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

ஓகஸ்ட் 15, 2012

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

 

பாகிஸ்தான் கிரெக்கெட் வீரர் மீது செக்ஸ் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே செக்ஸ்[1], போதை மருந்து, பெட்டிங் / சூதாட்டம்[2] என்றுதான் வழக்கமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது[3].  சோயப் மாலிக்கின் மீது புகார்கள் வந்தன, ஆனால் அவர் சானியாவுடன் திருமணம் செய்து கொண்டார்[4]. இப்பொழுது இன்னிமொரு பாலியல் புகார் வந்துள்ளது.  பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ராவுப். பழைய இலங்கை கிரிக்கெட் வீரரான இவர்[5], பல்வேறு சர்வதேச போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். இந்தியாவுக்கும் வந்துள்ளார்.  சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் போதும் இந்தியா வந்துள்ளார். 56 வயதாகும் ஆசாத் மீது மும்பையைச் சேர்ந்த 21 வயது முன்னணி மாடல் அழகி லீனா கபூர் மும்பை துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் திகவ்கரைச் சந்தித்து செக்ஸ் புகார் கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது[6]:-

56 வயதான ஆன் 21 வயது பெண் சந்தித்தால் எப்படி காதல் வரும் இல்லை செக்ஸ் வரும்?: பாகிஸ்தான் அம்பயர் ஆசாத் ராவுப்பை இலங்கையின் ஒசிவாராவில் 6 மாதங்களுக்கு முன் சந்தித்தேன். அவர் என்னிடம் நட்பு முறையில் பழகினார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். 3 நாட்கள் இலங்கைத் தீவில் தங்கி உல்லாசமாக இருந்தோம். அப்பொழுது இந்த மாடலுக்கு அறிவு எங்கே போயிற்று? ஒப்புக்கொண்டு படுத்தப் பிறகு கற்பு போயிற்று, என்னை ஏமாற்றி விட்டாள் என்றாள் என்று ஓலமிட்டால் என்ன பிரயோஜனம்?

தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம்: ஏற்கெனவே மணமாகி குழந்தைகள் இருக்கிறார்களே என்பதற்கு, தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்று விளக்கம் அளித்தார்[7]. அதற்கான சம்மதத்தையும் அவரது குடும்பத்தினிடமிருந்து பெறுவேன் என்று வாக்களித்தார்[8]. இப்படி சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறது என்று எப்படி மெய்பிக்க முடியும்? மதரீதியில் வாக்களித்தபோதே, அவள் உணர்ந்திருக்க வேண்டும், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்றபோது புரிந்து கொண்டிருக்கவேண்டும். முஸ்லீம் அல்லாது பெண்ணும் இதை நம்பக்கூடாது, ஒரு முஸ்லீமும் இப்படி சொல்லி ஏமாற்றக் கூடாது அல்லது தனது செக்ஸிற்காக பெண்களை ஏமாற்றக்கூடாது. “மூதா கல்யாணம்” என்றெல்லாம் பிறகு அவர்கள் சரீயத் சட்டப்படி சொல்லலாம்[9]. ஆனால், பெண்களின் கதி என்ன என்பதனை அவர்கள் உணர வேண்டும்.

உடல் நலம் இல்லாதபோது மும்பை வந்து சந்தித்தார்: அதன்பிறகு நான் உடல் நலமின்றி இருந்தபோது மும்பை வந்து என்னை சந்தித்தார்.  என் மீது அன்பு செலுத்தி கவனித்தார். இதனால் நெருக்கம் அதிகமானது. என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அவரது பேச்சை நம்பினேன்[10].  என்னை தனது உடல் இச்சைக்காக பயன்படுத்திக் கொண்டார்[11].  பல முறை (15 முறை[12]) உறவு கொண்டார்[13].  போனி கபூர் கூட இப்படித்தான், ஸ்ரீதேவியின் தாயார் உடல்நலக்குறைவோடு இருந்தபோது, உதவி செய்து நட்பு பெற்று, நெருக்கம் கொண்டு, பிறகு திருமணமும் செய்து கொண்டார். நல்லவேளை அப்பொழுது எந்த பிரச்சினையும் வரவில்லை! இதெல்லாம் ஆண்கள் செய்து வரும் கில்லாடி வேலைகள் தாம். இலவசமாக கிடைக்கிறது, அனுபவித்து போகலாம் என்ற எண்ணத்துடன் தான் ஆண்கள் இருப்பார்கள் அல்லது அவ்வாறான நிலையை பெண்களே உர்ய்வாக்குவார்கள்.

சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார்: மும்பையில் ஒரு பங்களா வாங்கித்தருவதாக கூறினார். ஆனால் சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார். போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்துக்காக அவரை நான் விரும்பவில்லை. மாடலிங் துறையில் போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதுமானதாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. ஆனால் ஆசாத் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இவ்வாறு லீனா கபூர் கூறினார்.  இந்தப்புகார் பற்றி பாகிஸ்தான் இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது[14]. ஆசாத்தும் பதில் அளித்துள்ளார். அதில் லீனா கபூர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். லீனா கபூர் சுய விளம்பரத்துக்காகவும், பணம் பறிக்கவும் திட்டமிட்டு என் பெயரை இணைத்து புகார் கூறியிருக்கிறார் என்று ஆசாத் தெரிவித்துள்ளார்[15]. இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் நெருக்கமாக சேர்ந்திருப்பது போல[16] புகைப்படங்களும் வெளியாகியுள்ளன[17]. அதிலிருந்து, நிச்சயமாக நெருப்பில்லாமல் புகையாது என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

15-08-2012


[6] மாலைமலர், திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்: பாகிஸ்தான் அம்பயர் மீது மும்பை மாடல் அழகி செக்ஸ் புகார், http://www.maalaimalar.com/2012/08/15113808/marriage-enjoy-pakistan-ampere.html

[7] The complainant alleged that Rauf told her he would marry her and would also get her an apartment. She said that he did disclose his marital status and the fact that he had children but added that religion allowed him to have more than one wife.

http://www.pakistantoday.com.pk/2012/08/15/news/national/indian-model-stumps-pakistani-umpire-with-sex-charges/

[9] இஸ்லாமியச் சட்டப்படி, மூதா கல்யாணம் என்பது ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலத்திற்கு மனைவியாக வைத்திற்பது. அதற்காக அவன் “மஹர்” கொடுக்க வேண்டும். http://www.duhaime.org/LegalDictionary/M/Muta.aspx

அந்த “குறிப்பிட்ட காலம்” என்பது ஒரு மணி நேரமாகக் கூட இருக்கலாம்!

சன்னி-ஷியா பிரிவுகளில் இதைப்பற்றி ஒருமித்தக்கருத்துகள் இல்லை:

Most Shia of today have a hard time self-justifying the concept of Mutah. In fact, it is a point which causes many of them to doubt their faith, and rightfully so. It is sad that the Shia elders use false rhetoric to demand that their followers reject logic and morality, to instead blindly accept the idea that prostitution is part of Islam. These Shia leaders will make emphatic arguments such as this:

“The Prophet (صلّى الله عليه وآله وسلّم) did Mutah, and he not only allowed it, but actively encouraged it! We must obey the Prophet (صلّى الله عليه وآله وسلّم) in all matters, and we cannot disagree with him based on our own opinions. If the Prophet (صلّى الله عليه وآله وسلّم) did it, then surely we should do it. Whoever says that Mutah is disgusting is saying that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) is disgusting.”

And some Shia will even go a step further and falsely claim:

“Mutah is even allowed in Sunni Hadith. The only reason Sunnis do not do Mutah is because the second Caliph, Umar, banned Mutah against the orders of the Prophet (صلّى الله عليه وآله وسلّم).” Then, the Shia will procure Sunni Hadith which say that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) allowed Mutah.”

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/articles/mutah/mutah-is-haram.html

சன்னிகள் இத்தகைய முறையை விபச்சாரம் என்றே சொல்கின்றனர்:  “Mutah” translates literally to “pleasure” in Arabic. In the Shia context, Mutah refers to a “temporary marriage.” In the Shia faith, Mutah is actively encouraged and is considered Mustahabb (highly recommended). In reality, Mutah is an abomination, and is nothing less than prostitution.

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/indexb5e7.html?cat=15

[10] The two kept meeting, often when Rauf — who is a member of ICC Elite Umpire Panel — would come over to India to officiate in tournaments including the IPL. “I asked him several times about the marriage and he would always tell me that it would happen soon,” Kapoor told MiD DAY.

[12] நம் தமிழ் இணைதளங்களின் ரசனையே அலாதிதான். இந்த விவகாரங்களையெல்லாம் துல்லியமாகத் தருகிறார்கள் போலும். லெனினையும் மிஞ்சிவிடுவார்கள் போலும்!

http://tamil.oneindia.in/news/2012/08/15/india-me-azad-rauf-had-physical-intimacy-for-15-times-159664.html