457வது ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா கந்தூரி விழாவில் சந்தனகூடு தீப்பற்றி எரிந்து – அபசகனம் என்று முஸ்லிம்கள் தவிப்பு!

சந்தனகூடு தீவிபத்து 2014
சந்தனகூடு தீப்பற்றி எரிந்தது[1]: நாகைமாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா உலகபிரசித்தி பெற்றது, ஏனெனில், இங்கு ஆண்டுதோறும் சந்னக்கூடு விழா நடைபெறும்[2]. அதாவது தேரோட்டம் போன்று முகமதியர் “சந்தனக்கூடு” என்ற வடிவத்தைத் தயாரித்து அதனை ரதம் போன்று விளக்கு சகிதம் அலங்காரங்களுடன் தெருக்களில் எடுத்துச் சென்று, தர்காவிற்குள் கொண்டு வைப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாளிலிருந்து பௌர்ணமி வரை 14-நாட்கள் விழாவில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொள்வார்கள். உண்மையில் அக்காலத்தில் புத்தாண்டு வருவதையொட்டி கொண்டாடப்பட்டு வந்தவிழாவை அப்பகுதியில் முஸ்லிம்கள் தமதாக்கிக் கொண்டார்கள் போலும். முன்னும், பின்னும் தெலுங்கு மற்றும் தமிழ் புத்தாண்டுகள் வருவதையும் காணலாம். வேண்டிக் கொண்டு, திருப்பதி-திருமலை-பழனிப் போன்று இங்கு வந்து மொட்டையும் அடித்துக்கொள்கிறார்கள். இதில் பெரிய-பெரிய அதிகாரிகள், மந்திரிகள் முதலியோர் அடங்குவர். இந்நிலையில் 04-04-2014 அன்று சந்தனக்கூடு கட்டும்போது, எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது கோவில்-குளம் அமைப்பு கொண்ட நாகூர் தர்கா
முஸ்லிம் சமாதியின் கதை: ஹஜரத் சையது ஷாஹுல் ஹமீது காதிர் வாலி [Hazrath Syed Shahul Hameed Quadir Wali] என்பருடைய சமாதி நாகூரில் உள்ளது[3]. இவர் முகமது நபியின் வழி 23வது சந்ததியர் என்று கூறப்படுகிறது. அந்த வாலி இறந்த தினத்தை முஸ்லிம்கள் இங்கு 14-நாள் விழாவாகக் கொண்டாடுகின்றனர்[4]. “ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம்” தர்கா 453ம் ஆண்டு கந்தூரி விழா, 01-04-2014 இரவு கொடியேற்றத்துடன்துவங்கும்.நாகை மீராபள்ளிவாசலில், தர்காவின் ஐந்துமினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் வைக்கப்பட்டு ‘துவா’ ஓதப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரியரதம், சின்ன ரதம் மற்றும் செட்டிப் பல்லக்கு, கப்பல்கள் போன்று வடிவமைக்கப்பட்ட இரண்டு வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு, ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு நாகூர் தர்கா வந்தடையும். இவ்விதமாக 14 நாட்கள் அமர்க்களமாக விழா கொண்டாடப்படும்[5]. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று விழா கொண்டாடுவது சகஜமாகிவிட்டது. ஆஜ்மீர் போன்ற தர்காக்களிலும் இவையெல்லாம் நடக்கின்றன[6].

Inside Nagore Dargha pillars like Hindu temple
கோவிலா, தர்காவா, கப்பல் விழாவா?: இந்த தர்காவின் உட்புறம் ஒரு இந்துகோவிலைப் போன்றே உள்ளது. உட்பகுதியும், உள்ள தூண்களும், தெப்பக்குளமும் கோவில் என்று காட்டுகிறது. உயர்வாக உள்ள கட்டிடங்கள் / மினராக்கள் கலங்கரை விளக்கங்களாக உபயோகப்படுத்தப்பட்டன. இதைப் போன்ற அமைப்பு சனீஸ்வரன் கோவிலின் வாசலிலும் இருப்பதை காணலாம். தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றி இப்பொழுது கந்தூரிவிழா கொண்டாடப்படுகிறது. இப்பொழுது “பாத்திமா” என்ற யானையையும் வைத்திருக்கிறார்கள்[7]. அமாவாசைக்கு அடுத்தநாளில் கொடியேற்றம் நிகழ்ச்சிலிருந்து பௌர்ணமி வரை 14-நாட்கள்விழாவில்கொண்டாடப்படுகிறது. இதன்படி, இம்மாதத்தில், வருகிற 9–ந்தேதி (புதன்கிழமை) பீர் வைக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 10–ந்தேதி (வியாழக்கிழமை) மாலை தொடங்கி 11–ந்தேதி காலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். இதை தொடர்ந்து 12–ந்தேதி (சனிக்கிழமை) பீர் ஏகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14–ந்தேதி கொடியிறக்கம் நடக்கிறது[8].

Hindu temple like dargha Nagore
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்தவரைக்கும் ஆண்டவன் இறுதிதீர்ப்புநாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கிவிடுமே, என்றாலும், உயிர்த்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். இறந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லா மதஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன் படியே, அவரவர் புனிதநூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Inside dargah Hindu temple like structure
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற, அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்றுகாட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்சிகள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனிதஇடங்கள் (கட் / காட்) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளாக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் நாகூர், ஆஜ்மீர் போன்ற இடங்களுக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்ய வில்லையே?

Sufi dance dailyfresher.com
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்துகொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலியகாட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்து போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன. நாகூரிலும் “நாச்” என்ற பெண்களை வைத்துக்கொண்டு நடனம் முதலியவை நடந்து வருகின்றன.

Jawahirullah getting blessing from Aadheenam, Mayildauthurai
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக்கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக்கூடாது. எப்படி உருவவழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான்எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால்தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம்அரசியல்வாதிகள்இந்துகடவுளர்கள்இல்லைஎன்றுவாதிட்டாலும், தேர்தல் மற்றும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Ajmer Sharif Mannat
தர்கா வழிபாடும், ஆசார இஸ்லாமும், திராவிடமும்: அடிப்படைவாத முஸ்லிம்கள் இது இஸ்லாத்திற்கு விரோதமானது என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். தர்கா வேறு, மசூதி வேறு என்பதனை எடுத்துக் காட்டும் விதமாக, மேலே எடுத்துக் காட்டியுள்ளபடி சில இடங்களில் குறுக்கே சுவர்களை எழுப்பி பிரித்துக் காட்டுகின்றனர். தர்கா இருக்கும் இடங்களில் மசூதிகளைக் கட்டிப் பிரித்தும் காட்டுகின்றனர். திராவிட அரசியல்வாதிகள் கடவுள் இல்லை என்றெல்லாம் கூப்பாடு போட்டு வந்தாலும், காயதே மில்லத் இறந்தநாளை தவறாமல் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு சமாதிக்கு மலர்வளையம் / பச்சை துணி வைத்து மரியாதை செய்து கும்பிட்டுவிட்டு செல்கின்றனர். இதில் கருணாநிதி, ஜெயலலிதா போன்றொருக்கும் போட்டித் தான். முஸ்லிம்களும் ஒரு பக்கம் இதெல்லாம் இஸ்லாத்திற்கு விரோதமானது என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், அத்தகைய கூத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன[9].

Qawwali dance ajmeeri dargah
2014ல் சந்தன கூடு எரிவது: நாகூர் தர்காவில் நடைபெறும் கந்தூரி விழாவுக்காக தயார் செய்யப்பட்ட சந்தனக்கூடு வெள்ளிக்கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[10]. இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் சோகமும், பதட்டமும் ஏற்பட்டது[11]. நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி நாகப்பட்டினம் நகரில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கூட்டில் வைத்து சந்தனம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் படுவது வழக்கம். சந்தனம் எடுத்துச் செல்லும் கூடு நாகப்பட்டினம் ஜமாத்தினரால் செய்யப்படும். மூங்கில்களால் கூடு செய்து அதற்கு வண்ணம் தீட்டி, அதனை வண்ணகாகிதங்கள், பூக்களைக் கொண்டு அலங்கரித்து அதில் சந்தனத்தை வைத்து எடுத்துச் செல்வார்கள்[12]. கூடு செய்யும் வேலை கடந்த சில நாட்களாக நாகப்பட்டினம் அபிராமி அம்மன் கோயில் திடல் அருகே ஒரு கட்டிடத்தில் நடைபெற்று வந்தது. ஐம்பது சதவீத பணிகள் முடிவடைந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை (04-04-2014) அதிகாலையில் அக்கூட்டின் ஒருபகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதனைக் கண்ட கூடுதயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாபுஜி (எ) காதர் நாகப்பட்டினம் தீயணைப்புத் துறைஅலுவலகத்துக்கும் நாகப்பட்டினம் ஜமாத் தலைவரான லாசா மரைக்காயருக்கும் தகவல் தெரிவித்தார்[13]. தீயணைப்பு அலுவலர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் கூட்டின் ஒருபக்கம் பெருமளவு எரிந்துவிட்டது.

Khushi dance at Ajmir Sharif Urs
“இந்திய தவ்ஹீத் ஜமாஅத்”தின் மீது பொய் வழக்கு போடப் பட்டுள்ளது[14]: பொய் வழக்கு போட்ட காவல்துறையைக் கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நாகூருக்கு எடுத்துச் செல்வதற்காக நாகப்பட்டினத்தில் வைக்கப் பட்டிருந்த சந்தனக்கூடு கடந்த 4.4.2014 தேதி இரவு சமூகவிரோதிகள் சிலரால் தீவைத்து கொளுத்தப் பட்டிருக்கிறது. இதனையடுத்து சந்தனக்கூடு வைத்த தரப்பினரால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் எவருடைய, எந்த இயக்கத்தின் பெயரையும் குறிப்பிடப்படாமல் இருந்த நிலையிலும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் மீது எந்த அடிப்படையும் இல்லாமல் பொய்வழக்கு போட்டுள்ளது காவல்துறை. சமூகவிரோதசெயலில் யார் ஈடுபட்டாலும் அது கண்டிக்கத் தக்கது என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் எந்தவித முகாந்திரமும் இல்லாமல், புகார் அளித்தவர்கள் சந்தேகப்படும் நபர்களின் பெயரையோ எந்த அடையாளத்தையோ புகாரில் குறிப்பிடாத நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மீது காவல் துறை பொய்வழக்கு போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
“நாகை பகுதிகளில் சமூக சீர்திருத்தப் பணிகளையும், மனிதநேயப் பணிகளையும் முன்னெடுத்து வருவதோடு முஸ்லிம்களுக்கு மத்தியில் புரையோடிப்போயிருக்கும் இஸ்லாத்திற்கு முரணான செயல்களையும் கண்டித்து விழிப்புணர்வு பிரசாரங்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்தப்பணிகளை முடக்க நினைக்கும் சக்திகளின் தூண்டுதல் காரணமாகவே இந்த பொய்வழக்கை போட்டிருக்கிறது காவல்துறை.
“இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஜனநாயகதின் மீதும் அறவழி போராட்டங்களின் மீதும் நம்பிக்கை கொண்ட அமைப்பு. இந்த அமைப்பின் தொண்டர்கள் பொது அமைதிக்கு பங்கம் நேரும் எந்த செயலிலும் ஈடுபடமாட்டார்கள் என்பது தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் நன்கு தெரியும். அப்படியிருந்தும் நாகை காவல்துறை உள்நோக்கம் கொண்டயாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் இந்த பொய் வழக்கை போட்டிருக்கிறது.
“எனவே, உண்மை குற்றவாளிகளை காவல்துறை அடையாளம் காணவேண்டும். அதோடு, சம்பவத்திற்கு சற்றும் தொடர்பில்லாத இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை உடனடியாக திரும்ப பெறவேண்டும் நாகை மாவட்ட காவல் துறையின் நியாயமற்ற இந்தசெயலை கண்டித்து (இறைவன் நாடினால்) எதிர்வரும் 10.4.14 அன்றுமாலை 4 மணியளவில் நாகூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானித்திருக்கிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது[15].

பாய்மரம் கட்டுவது முதலிய பழைய விழாவைக் காட்டுகிறது
சந்தனக்கூடு வைத்த தரப்பினரால் காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டுள்ளது: நாகை ஜமாஅத் தலைவர் லாசா மரைக்காயர் கொடுத்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் நகரகாவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து நாசவேலையா, மின்கசிவா விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தீவிபத்து நடந்த இடத்தை நாகூர் தர்கா டிரஸ்ட் ஷேக் ஹசன் சாஹிப், நாகூர் டவுன் ஆலோசனை குழுதலைவர் சையது முகமது கலிபா சாஹிப் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர். பின்னர் சையது முகமது கலிபா சஹிப், “நாகூர் ஆண்டவர் தர்கா பெரிய கந்தூரி விழாவிற்கு கடந்த ஆண்டைவிட அதிக அளவில் இஸ்லாமியர்களும், சுற்றுலா பயணிகளும் வரவிருப்பதால், அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப் பட்டுள்ளன. இதைப் பொறுக்காத சில மர்ம நபர்கள் இந்த நாசவேலையைச் செய்துள்ளனர்[16]. இதை நாங்கள் வன்மையானக் கண்டிக்கிறோம். தன் கைகளால் தனது கண்ணை மறைக்க முடியுமே தவிர, சூரியனை மறைக்க முடியாது. அது போல யார் என்ன முயற்சி செய்தாலும் நாகூர் ஆண்டவரின் தொடர்ந்த படிதான் இருக்கும்”, என்று உறுதியாகக் கூறினார்[17].

Inside Nagore Dargha pillars, lamps etc
புகார் கொடுத்ததும், சந்தேகங்களும்: சந்தனக்கூடு திடீரென்று எரிந்ததால், இது குறித்து லாசா மரைக்காயர் கொடுத்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் நகரகாவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து நாசவேலையா, மின்கசிவா என்று அறிய விசாரணை நடத்தி வருகின்றனர்[18]. “நாகூர் தர்கா விழாவில் மர்மமான தீ” என்று ஒரு ஆங்கில இணைதளம் விவரிக்கின்றது[19]. இதனால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது[20]. அதாவது முஸ்லிம்களே முஸ்லிம்களின் மீது புகார் கொடுத்துள்ளனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கம் வேண்டுமென்றே தமது நிர்வாகிகள் மீது காவல்துறை பொய்வழக்கு போட்டிருக்கிறது என்று மேற்கூறியப்படி கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களோ இதனை கெட்டசகுனமாக கருதி கவலையுடன் இருக்கின்றார்கள். இதற்கு பரிகாரம் எதாவது செய்ய வேண்டும் என்றும் தீவிரவாதமாக யோசித்து வருகின்றனர்.
© வேதபிரகாஷ்
06-04-2014
[1]திஇந்து, சந்தனகூடுதீப்பற்றிஎரிந்தது, சென்னை, 06-04-2014
[2]தினகரன், நாகூரில்கந்தூரிவிழாசந்தனக்கூடுதீபிடித்துநாசம், சென்னை, 06-04-2014
[3] http://www.business-standard.com/article/pti-stories/holy-car-partially-burnt-in-mysterious-fire-114040400583_1.html
[4]Tension prevailed for almost whole day today at the famous Dargah at Nagore near here, after a mystery fire accident which partially burnt the Sandanakoodu (holy car decorated with sandal paste).According to official sources the Sandanakoodu made out of bamboo sticks with sandal paste on it and is taken out in a procession is as part of the 14-day annual Kandoori festival, incidentally which is under way currently. The Dargah of Saint Hazrath Syed Shahul Hameed Quadir Wali at Nagore is more than 500 years old. It has a golden dome, flanked by five minarets. Saint Hazrath Syed Shahul Hameed is known to be the 23rd descendant of Prophet Muhammad (Sal).The death anniversary of this Saint is celebrated as ‘Kandoori Festival’ every year for 14 days. The 457th annual festival commenced with hoisting of the holy flag on Tuesday last 01-04-2014.
[5]https://islamindia.wordpress.com/2010/05/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/
[6] https://islamindia.wordpress.com/2013/03/10/how-music-dance-entertained-inside-before-mosques-dargahs/
[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nagore-dargah-elephant-joins-camp/article5485906.ece
[8] http://www.dailythanthi.com/2014-03-30-khanduri-festival-minarakkal-mounted-on-the-mast-nagai-news
[9] https://islamindia.wordpress.com/2010/06/06/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/
[10] http://timesofindia.indiatimes.com/city/trichy/Fire-damages-festival-chariot-under-construction/articleshow/33252952.cms
[11] http://muthupetnews.com/irrespective-b-c-khanduri-ready-to-function-cantanakkutu-burnt-sensation/
[12] http://www.maalaimalar.com/2014/04/04121947/Nagore-Dargah-fire-accident.html
[13]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article5875440.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication
[14] http://www.inneram.com/news/tamilnadu/5735-intj-protest-announcement.html
[15] http://www.inneram.com/news/tamilnadu/5735-intj-protest-announcement.html
[16] இந்நிலையில்நேற்றுஇரவுமர்மநபர்கள்சந்தனக்கூட்டிற்குதீவைத்தனர். இதனால்சந்தனக்கூடுசேதமடைந்துள்ளது. இச்சம்பவம்நாகையில்பதற்றத்தைஏற்படுத்திஉள்ளது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=119324
[17] http://muthupetnews.com/irrespective-b-c-khanduri-ready-to-function-cantanakkutu-burnt-sensation/
[18] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=86352
[19] webindia123, Mysterious fire at dargah during ‘Kandoori festival’ at Nagore, 04-04-2014.
[20] http://news.webindia123.com/news/Articles/India/20140405/2370117.html
அண்மைய பின்னூட்டங்கள்