Archive for the ‘நன்னடத்தை நிபந்தனை’ category

மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி

ஜனவரி 13, 2011

மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி

ஊடகங்கள் இவ்விவகாரத்தில், மிகவும் அமுக்கி வாசித்தது தெரிகிறது. சன்டிவி தொலைக்காட்சி தான் 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது. பிறகு கலைஞர் டிவியும் அதே செய்தியை வெளியிட ஆரம்பித்தது. இதில் முன்னுக்குமுரணான விஷயங்கள் உள்ளன என்று நேற்றே எடுத்துக் காட்டப்பட்டது[1].

  1. 11-01-2011 அன்று காலை மகள்கள் 2 பேரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது[2] திடீர் என்று மாயமானார்கள் என்று சொல்லப்படுகிறது.
  1. வீட்டின் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
  1. குழந்தைகளின் வீட்டிற்கும், இறந்து கிடந்த கிணற்றிற்கும் சுமார் 2 கி.மீட்டர் தூரம் ஆகும்[3]. எனவே அப்பகுதியில் வசிக்கும் யாராவது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
  1. போலீஸாரின் நாய் பிணங்கள் கிடந்த இடத்திலிருந்து கிளம்பி பிறகு அவர்களது வீட்டிற்கே வந்து சேர்ந்ததாகவும், அங்கேயே சுற்றி-சுற்றி வந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
  1. காரில் குழந்தைகளின் தந்தையாரின் கைரேகை இருப்பதனால், அவரே இந்த கொலையை செய்தாரா என்று சந்தேகம் இருப்பதாக போலீஸார் கூறுவதாக சன்டிவி தொலைக்காட்சி 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது.
  1. குழந்தைகளின் வயதும் 2 / 3 என்றும், 2½ / 3½  மாறி-மாறி கூறுகின்றனர்.

வேலூர் அருகே இரண்டு மகள்களை கொன்ற தந்தை கைது[4] – என்று இப்பொழுது செய்தி வருகின்றது.

மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி: இரண்டு மகள்களை கிணற்றில் போட்டு கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே உள்ள மேல்விகாரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அலி. இவர் சென்னையில் பணியாற்றினார். இதற்கிடையில் இவரது மனைவி மும்தாஜூக்கும் கொழுந்தன் பாபுஅகம்மதுவுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மும்தாஜூக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் கள்ளத்தொடர்பு மூலம் பிறந்தததாக முகம்மது அலிக்கு சந்தேகம் வந்தது. அதைத் தவிர, கள்ளத்தொடர்பும் ஊர் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இதனால் 2 குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்டான். இதனையடுத்து குழந்தைகள் 2 பேரையும் கிணற்றில் போட்டு கொன்றான். முதலில் குழந்தையை யாரோ கடத்தி கொன்று விட்டதாக போலீசார் விசாரித்தனர். ஆனால் முகம்மது அலியிடம் விசாரித்தபோது அவனே கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் முகம்மது அலியை கைது செய்தனர்.

ஆண் குழந்தை பிறந்ததும் இரண்டு பெண் குழந்தைகளைக் கொன்ற தந்தை: இதே செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ், இவ்வாறு வெளியிட்டுள்ளது[5]. போலீஸார் குழந்தைகள் காணாத போது, விசாரிக்கத் தொடங்கினர். இப்பொழுது, முகம்மது அலியே தன் வீட்டிற்கு எதிரே கட்டுமான வேலை செய்யும் குமரி என்ற பெண்ணை போலீஸாரிடம் அழைத்துச் சென்றான். அவள் “யாரோ ஒரு மர்மமான பெண் மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை அழைந்துச் சென்றதை” தான் கண்டதாகக் கூறினாள். பிறகு, போலீஸார், அவள் கூறியதை விசாரித்த போது, “நான்கு பேர் அந்த கதையை ஒப்புக் கொண்டார்களாம்”. உறவினர்களிடம் விசாரித்தபோது, வேறுவிதமாக கூறியுள்ளதை போலீஸார் கண்டு பிடித்தனர். சமீபத்தில், தான் வேலை இழந்ததினால், எப்படி குழந்தைகளை வளர்ப்பது என்று பயந்து கொன்றதாகவும் கூறியிருக்கிறான். உண்மையில், அவனை போலீஸ் நிலையத்திற்கு விசாரிக்க அழைத்துச் சென்றபோது, அந்த இடத்தில் உள்ள முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கைது செய்தபோது, விஷாரம் பகுதியில் பெரும் பரபாப்பு ஏற்பட்டது.

குழந்தைகள் உரிமைகள் காக்கப் படவேண்டும்: சமீபத்தில் குழந்தைகள் காணாமல் போவது என்பது பல நிலைகளில், கோணங்களில் யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இது சமூதாயத்தை பெருமாவில் பாதிக்கக் கூடிய விஷயமாகிறது. மேலும் அப்படி காணாமல் போகும் குழந்தைகள் கொலை செய்யப்படும்போது, காமத்திற்கு உட்படுத்தும்போது, கொடுமைப் படுத்தும் போது அது எல்லோரையுஇம் பாதிக்கக் கூடிய விஷயமாகிறது. கோயம்புத்தூரில் இரு இளம் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொன்றுள்ளனர். இன்னொரு விஷயத்தில், குழந்தையை பலியிட்டுள்ளானர்[6]. இன்னும் ஒரு நிகழ்ச்சியில், குழந்தையை அறுத்து, வறுத்து …………தாக[7] வேறு கொடூரம் நடந்துள்ளது[8]. இப்படி குழந்தைகள் காணாமல் போவதில் செக்ஸ்-டூரிஸம் போன்ற கொடுமைகளிலும் ஈடுபடுத்துவது தெரியவதுள்ளது[9]. நாகரிகம் அடைந்துள்ள சமூகம் என்று ஒருபக்கத்தில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் வேலையில், இப்படி கொடூர நிகழ்சிகள் நடகும் போது, சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள் அமைதியாக இருக்க முடியாது. உச்சநீதிமன்றம் சமீபத்தில்[10], “நாடு உலகமயமாக்கம் மற்றும் தாராளமயமாக்கம் சகாப்தத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் செக்ஸ் நோக்கங்களுக்கு சிறிய குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது சரியல்ல. இந்த அபாயகரமான பிரச்னையை தீர்ப்பதில், அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்”. அதுமாதிரியே, பேற்றோர் அல்லது மற்றோர் குழந்தைகளை தமது விருப்பு-விருப்புகளுக்குட்படுத்தி துன்புறுத்தக் கூடாது.

வேதபிரகாஷ்

13-01-2011


[1] வேதபிரகாஷ், மேல்சீவாரத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மர்மமான நிலையில் இறப்பு: கொலையா என்ற சந்தேகம், https://islamindia.wordpress.com/2011/01/12/two-kids-killed-under-mysterious-conditio/#comment-879

[2] தினமலர், வேலூரில் மர்மமுறையில் பெண் குழந்தைகள் மரணம், ஜனவரி 11,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=164239

[4] தினமலர், வேலூர் அருகே இரண்டு மகள்களை கொன்ற தந்தை கைது,
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2011,09:26 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=165403


இஸ்லாம், சூதாட்டம், கிரிக்கெட்: எப்படி நம்பிக்கையாளர்கள் ஈடுபடுகின்றனர்?

திசெம்பர் 1, 2010

இஸ்லாம், சூதாட்டம், கிரிக்கெட்: எப்படி நம்பிக்கையாளர்கள் ஈடுபடுகின்றனர்?

பொதுவாக முஸ்லீம்கள் ஒழுங்கு, ஒழுக்கம், நன்னடத்தை, நன்னெறி என்றெல்லாம் வரும்போது, இந்த உலகத்தில் அவர்கள்தாம் ஒட்டு மொத்தமாக அத்தகைய குணங்களை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளவர்கள் போல வியாக்யானம் அளிப்பர், பேசுவர், எழுதுவர். ஆனால், ஏதாவது ஒழுங்கீனம், ஒழுக்கமின்மை, கெட்ட நடத்தை, தீயநெறி என்றெல்லாம் என்று வரும்போது, அத்தகைய காரியங்களில் முஸ்லீம்கள் ஈடுபடும்போது, அமைதியாக இருப்பார்கள், சப்பைக் கட்டுவார்கள் அல்லது முஸ்லீம்கள் என்பதால்தான், அத்தகைய செய்திகள் வருகின்றன என்றெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். இந்திய கிரிக்கெட் வீரர் அஸாருத்தீன் வசமாக மாட்டிக் கொண்டபோது[1], தான் முஸ்லீம் என்பதால்தான், இப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றார். அப்பொழுதுதான், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு, ஒருவர் தம்மைக் காத்துக் கொள்ள அத்தகைய வாதத்தை வைக்கிறார் என்று வெளிப்படையாக தெரிந்து கொண்டனர். ஏனெனில், இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று என்று ரசிகர்கள் வேறுபடுத்திப் பார்த்தது கிடையாது. ஜடேஜா, மோங்கியா கூட அதே குற்றத்தில் மாட்டிக் கொண்டனர், அப்பொழுது அவர்கள் தங்களது மதத்தைக் குறிப்பிட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கவில்லை, அல்லது, அவர்கள்மீது மட்டும் வேறுவிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு சி.பி.ஐ.யிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டார்[2].

எழுகின்ற பல கேள்விகள்: இந்நிலையில் தொடர்ந்து பாகிஸ்தானியர் அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு வருவது பல கேள்விகளை எழுப்புகின்றன. இஸ்லாம் சூதாட்டம், பணம் வாங்கிக் கொண்டு தோல்வி அடைவது அல்லது வெற்றிப் பெறுவது, அதற்கான முறையில் ஒழுங்காக ஆடாமல் போலியாக ஆடுவது, பந்துகளை வீசுவது, கேட்சுகளை விடுவது, சரியாக ஃபீல்டிங் செய்யாமல் இருப்பது………..முதலிய வேலைகளை எப்படி, ஏன், எதற்காக செய்கிறார்கள்? பணத்திற்காக என்றால், அவர்கள் ஆடுவது கிரிக்கெட் அல்ல, சூதாட்டம் தான். மேலும், ஹோட்டல்களில் நடிகைகளுடன் சேர்ந்து குடிப்பது, ஆடுவது, இருப்பது முதலியனவும் எம்மதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாத காரியங்கள். பிறகு எப்படி அவை நடக்கின்றன?

மஷார் மஜீத் போட்ட குண்டு: இப்பொழுது (நவம்பர் 30, 2010), மஷார் மஜீத் என்ற கிரிக்கெட் சூதாடி வஹாப் ரியாஸ், கம்ரன் அக்மல். உமர் அக்மல் மற்றும் இம்ரான் ஃபர்ஹத் முதலியோரும் “போலிப் போட்டி”யில் (match fixing) ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளான்[3]. செப்டம்பரில் 2010 இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் தவறுதலான பந்து வீச்சுகளுக்கு (no-balls) பணம் கொடுக்கப் பட்டதாக செய்திக வெளிவந்தன.  மொஹம்மது ஆசிஃப் மற்றும் மொஹம்மது அமீர் வேண்டுமென்றே, அத்தகைய தப்பான பந்து வீச்சில் ஈடுபட்டதாக தெரியவந்தது[4]. அதற்காக மஷார் மஜீத் என்பவனை பொலீஸார் கைது செய்தனர். மஷார் மஜீத் ஒரு ஹோட்டல் ரூமில் உட்கார்ந்து கொண்டு ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கிறான். அவன் தான் குறைந்த பட்சம் ஏழு பாகிஸ்தான் வீரர்களுக்கு பணம் கொடுத்துள்ளாதாக கூறுகின்றான். செப்டம்பரில் 2010 – மூன்று வீரர்கள் – சல்மான் பட், மொஹம்மது ஆஸிஃப், விலக்கி வைக்கப்பட்டனர்[5].

பாகிஸ்தானிய கிரிக்கெட் – சூதாட்டமும், வன்முறையும்: வரவர சூதாட்டமும் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்களும் ஒன்றாகிவிட்டது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது கடத்தல், மிரட்டுதல் முதலிய வன்முறை செயல்களும் சாதாரணமாகவே இருக்கின்றன. ஜியோஃப் லாவ்சன் என்ற பயிற்சியாளர் 2007 முதல் 2008 வரை 15 மாதங்கள் பாகிஸ்தானியர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். அப்பொழுது, கேப்டன் தன்னை தனியாக அழைத்து, “குறிப்பிட்ட விடுக்கப்பட்ட வீரரை மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், நாளைக்கு என்னுடைய மகளை கடத்திக் கொண்டு சென்றுவிடுவோம், பிறகு அவளைப் பார்க்கவே முடியாது என்று என்னை மிரட்டுகிறார்கள் என்று அழாதகுறையாக கூறிக்கொண்டார்[6], என்ற விஷயத்தை வெளியிட்டார். 1998 மற்றும் 2000 வருடங்களில் “போலியான போட்டிகள் என்ற வழக்கில் மாலிக் மொஹம்மது கய்யூம் என்ற நீதிபதி விசாரித்துவந்தார். அவர் ராஜா மற்றும் ஜோஜோ என்ற இரண்டு சூதாடிகளைப் பற்றிய விவரங்களை கேட்டார். அவர்கள் வாஸிம் அக்ரம் தந்தையை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். அபொழுது,  வாஸிம் அக்ரம் தனது மைத்துனிகளையும் சூதாட்டக்கூட்டம் மிரட்டியது என்று கூறினார். அதாவது, அவர்கள் சூதாடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள் என்பது தெரிந்தது.

தாவூத் இப்ராஹிம் கிரிக்கெட், சினிமா, ஜிஹாத்: தாவூத் இப்ராஹிம், 1993ல் மும்பை வெடிகுண்டு வழக்கில் சிக்கும் வரையில், ஷர்ஜாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தவறாது வருவது வழக்கம். அவற்றிற்காக தாராளமாக ஸ்பான்ஸர் செய்வதும் வழக்கம். கிரிக்கெட் மற்றும் சினிமாகாரர்கள் தாவூத் இப்ராஹிமின் விருந்தினர்களகவே துபாய் மற்ற வளைகுடா நாடுகளில் தங்கியிருப்பது வழக்கம். கிரிக்கெட், சினிமாக்காரிகளுடன் ஜல்ஸா முதலியவை சேர்ந்துதான் நடக்கும். மும்பை திரை உலகை இன்றும் தாவூத் இப்ராஹிம் ஆட்டிப் படைப்பது தெரிந்த விஷயமே. பிறகு தனது மகளையே, ஜாவத் மியான்டட் என்ற கிரிக்கெட் வீரருக்கு 2005ல் திருமணம் செய்து கொடுத்தான். சொஹைப் அக்தர் சிறையில் இருக்கும்போது, தனது குழுவைப்பற்றி கூறியுள்ளார்.

பாகிஸ்தான்

கிரிக்கெட்காரர்களின் இஸ்லாம் பின்பற்றப்படும் முறை: பாகிஸ்தானில் நாத்திகர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை, ஆனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட நம்பிக்கையாளர்கள் நிறையவே இருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரகள் எல்லோருமே, கிரிக்கெட்டை விட இஸ்லாத்தை அதிகமாக நேசிக்கிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள், தப்லீக் ஜமாத்துடன் இணைந்து வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. கிரிக்கெட் பிச்சிலேலேயே, விழுந்து வணங்குவது, தொழுகை புரிவது, மண்ணை முத்தமிடுவது, மெக்கா திசையை நோக்கி வணங்குவது, தாடியை நன்றாக வளர்த்துக் கொள்ளுதல், ஆகாசத்தைப் பார்த்தல், கைகளை உயர்த்துதல், முதலில் இடது பக்கம் பார்ப்பது, பிறகு மெதுவாக அப்படியே, வலது பக்கம் திரும்பிப் பார்ப்பது முதலிய செய்கைகளை தாராளமாகப் பார்க்கலாம். கிரிக்கெட் ஆடும் போது கூட அத்தகைய செய்கைகளை செய்வதுண்டு. ரம்ஜான் மாதத்தில் பட்டினிகூட இருப்பார்கள்.

பாப் உல்மர் பாகிஸ்தான் வீரர்களைக் கண்டித்தற்காக கொலை செய்யப்பட்டாரர? 2007ல் பாப் உல்மர் மர்மமான முறையில் ஹோட்டல் ரூமில் செத்துக் கிடந்தார். பாகிஸ்தான் உலகபோட்டியில் தோல்வியெடைந்ததற்காகத் தான், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று முதலில் கூறினர். ஆனால், பிறகு அவரது சாவைப்பற்றி பல காரணங்கள் முன் வைக்கப்பட்டன. அவர் தமது முஸ்லீம் கிரிக்கெட் மாணவர்களின் அளவிற்கு அதிகமான  மதக்கிரியைகளைத் தட்டிக் கேட்டதற்காகத்தான் இறந்து பட்டாரா என்பது பல காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது[7]. ஹோட்டல் பாத்ரூமில் நிர்வாணமாக அவர் பிணம் கிடந்தது[8]. ஜமைக்கா போலீஸார் பாப் உல்மர்  கழுத்து நெரிக்கப்பட்டுத்தான் கொலைசெய்யப்பட்டார் என்று உறுதி படுத்தினர்[9].

பாகிஸ்தானியனரின் சுய விமர்சனம்: நஸீம் ஆஸ்ரஃப் என்ற பாகிஸ்தானிய கிரிக்கெட் போர்டின் தலைவர் இஸ்லாத்திற்கும், கிரிக்கெட்டிற்கும் நடுவில் மத்தியஸ்தம் செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறியுனார்[10]. 2005லிருந்து பாகிஸ்தானியர் பொது இடங்களில் தொழிகை செய்வதையும், தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல்களில் இஸ்லத்தைப் பற்றி கூட்டம் போட்டு பேசுவதையும் செது வருகிறார்கள். பாகிஸ்தானிய கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் கிரிக்கெட்டைவிட, மதத்தில் தான் அதிகமாக விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய பயிற்சியாளர்கள் பலமுறை குற்றம் சாட்டியுள்ளனர். 2007ல் உலகக் கோப்பை போடியில் தோல்வியடைந்ததற்கு, பீ.ஜே.மீர் இன்ஸிமாமுல் ஹக்கை அவ்வாறு வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். 1999களில் காலித் ஹஸ்ஸன், அமீர் மீர் போன்ற கிரிக்கெட் எழுத்தாளர்களும் இதைப்பற்றி எழுத ஆரம்பித்தனர்.  வாசிம் அக்ரம் பிறகு வக்கார் யூனிஸ் கேப்டனாக வந்தவுடன், ஆட்டக்காரர்கள் கிரிக்கெட்டை விட, இஸ்லாத்தைப் பற்றி அதிகமாக  விவாதிக்க ஆரம்பித்து விட்டனர் என்று எடுத்துக் காட்டினர்.

இஸ்லாம் இத்தகைய காரியங்களை அனுமதிக்காது என்றால், அவர்கள் / முஸ்லீம்கள் அவற்றை செய்திருக்கக் கூடாது, தொடர்ந்து செய்யக்கூடாது. இல்லை, முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது. ஆனல், கடந்த ஆண்டுகளில் அவ்வாறு நடப்பது வாடிக்கையாகி விட்டது. இதில், தீவிரவாத கூட்டங்களுக்கும் தொடர்பு உள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது. தீவிரவாதிகள், இலங்கை வீரர்களை குறிவைத்தபோது, அத்தகைய நிலையும் வெளிப்பட்டது. இன்றைய நிலையில், கிரிக்கெட் போட்டிகளுக்கு, அளவுக்கு அதிகமாக பாதுகாப்பு கொடுத்து, நடத்துகிறார்கள். ஆனால் கோடிகளில் இதிலும் ஊழல் நடக்கிறது. மக்களின் பணம் விரயமாகிறது.

வேதபிரகாஷ்

© 01-12-2010


[2] Indian Express, Wednesday, November 1, 2000, http://www.expressindia.com/ie/daily/20001101/isp01034.html

குண்டு வெடிப்பு கைதி மீண்டும் கைது : மாநில உள்துறை உத்தரவு எதிரொலி!

ஜூலை 20, 2010

குண்டு வெடிப்பு கைதி மீண்டும் கைது : மாநில உள்துறை உத்தரவு எதிரொலி,

ஜூலை 19,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=42967

குண்டு வெடிப்பு கைதி மீண்டும் கைது : மாநில உள்துறை உத்தரவு எதிரொலி: கோவை : நன்னடத்தை உத்தரவாதத்தை மீறி குற்றத்தில் ஈடுபட்ட குண்டு வெடிப்பு வழக்கின் முன்னாள் கைதி, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, மாநில உள்துறை செயலகம் பிறப்பித்திருந்தது.

கோவை நகரில் உள்ள கரும்புக்கடை, சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப்(40). கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டில், அண்ணாதுரை பிறந்த நாளில் தண்டனை குறைப்புக்கான தமிழக அரசின் சிறப்பு உத்தரவு மூலம் விடுதலை பெற்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என்ற நன்னடத்தை நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர், திருட்டு “சிடி’ பதுக்கிய வழக்கில் கடந்த 5ம் தேதி மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 10ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகும் போது அளித்த உத்தரவாதத்தை இவர் மீறிவிட்டதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும், தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., அலுவலகம், மாநில உள்துறைக்கு பரிந்துரைத்தது. உள்துறை பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட கோவை சி.பி.சி.ஐ.டி., (எஸ்.ஐ.டி.,) போலீசார், அஷ்ரப்பை மீண்டும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நன்னடத்தை நிபந்தனையை மீறி குற்றத்தில் ஈடுபட்டு மீண்டும் கைதாகியுள்ள நபர், குண்டு வெடிப்பு வழக்கில் முன்னர் விதிக்கப்பட்ட தண்டனை காலம் முடியும் வரை சிறையில் இருப்பார். இவருக்கு மீண்டும் தண்டனை குறைப்பு வழங்கப்பட மாட்டாது’ என்றார்.