Archive for the ‘தொகை’ category

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (3)

மே 31, 2015

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (3)

Burmese army arrested three Rohingya with Bangladeshi mobiles

Burmese army arrested three Rohingya with Bangladeshi mobiles

கள்ளக் குடியேறிகளின் மீது மலேசியா எடுக்கும் நடவடிக்கை: மலேசியாவில் சட்ட அமலாக்க அதிகாரிகள் நாடு முழுவதும் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கள்ளக் குடியேறி கள் 2,170 பேர் கைது செய்யப்பட்டதுடன் முதலாளிகள் 25 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசிய உள்துறை துணை அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு மே மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை துணை அமைச்சர் வான் ஜூனைடி கூறினார். மலேசியாவுக்குள் நுழையும் “கள்ளக் குடியேறிகளின்” எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதற்காக மலேசிய அதிகாரிகள் அந்த சோதனையை மேற்கொண்டனர். குடியேறிகள் 7032 பேரை சோதனை செய்ததில் “கள்ளக் குடியேறிகள்” என்று தெரியவந்த 2,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக வான் ஜூனைடி கூறினார். கள்ளக் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அமைச்சு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது என்றும் சம்பந்தப்ட்ட நிறுவனங்களும் சமூகத்தினரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்[1].

rohingya-muslim-myanmar-begs-bangladesh-coast-guard-official-stay

rohingya-muslim-myanmar-begs-bangladesh-coast-guard-official-stay

தீவிரவாதிகள் / போராளிகள் இயக்கத்தில் சேர மாறு வேடம் தரித்த ஆட்கள்என்று குற்றஞ்சாட்டும் மலேசியா: தீவிரவாதிகள் / போராளிகள் இயக்கத்தில் சேர விரும்பும் மலேசியர்களில் சிலர், அரசாங்கம் சாரா அமைப்புகளைச் சேர்ந்த உதவிப் பணியாளர்கள் போல் மாறு வேடம் தரித்து போராளிகள் குழுக்களில் சேர்கின்றனர் என்று மலேசிய உள்துறை துணை அமைச்சர் வான் ஜூனைடி துங்கு ஜஃபார் கூறியுள்ளார். அரசாங்கம் சாரா மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த உதவிப் பணியாளர்கள் போல் அவர்கள் மாறு வேடம் தரித்திருப்பதால் யார், யார் அத்தகைய போராளிகள் குழுக்களில் சேரவுள்ளனர் என்பதை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று வான் ஜூனைடி கூறினார்[2]. ஐசிஸ் ஆள்சேர்ப்பு நடவடிக்கையால், உலகம் முழுவதும் மூளைசலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்று போராட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால், எந்த நாடும் அத்தகைய போராளிகள் / தீவிரவாதிகள் தங்களது நாட்டிலிருந்து சென்றார்கள் என்று ஊடகங்கள் குறிப்பிடவோ, அதனால், அந்நாட்டவர் மற்றவர்களால் சந்தேகிக்கப் படவோ, எந்த நாடும் விரும்பவில்லை. இதனால் தான், முஸ்லிம்கள் என்றாலும், முஸ்லிம் நாடுகள் தயங்க்கின்றன.

Rohingya Muslims found on boat rescued by Myanmar navy

Rohingya Muslims found on boat rescued by Myanmar navy

ரோஹிங்கா முஸ்லிம்கள் மேற்கு வங்காளத்தில் ஊடுருவலும், இந்தியாவிற்கு எதிராக அவர்களது நடவடிக்கைகளும் (2014)[3]: இவர்களின் பிரச்சினை இந்தியாவிலும் உள்ளது. இத்தகைய தீவிரவாதத் தொடர்புகள் மேற்கு வங்காளத்திற்கு நல்லதல்ல, இருப்பினும் ஆளும் கட்சியின் தொடர்புகள், ஆதரவு, போலீஸ் மெத்தனமாக நடந்து கொள்வது முதலியன மற்ற தீவிரவாத ஆராய்வு குழுக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013ம் ஆண்டில் மட்டும் 127 ரோஹிங்கா முஸ்லிம்களை மாநில அரசு கைது செய்துள்ளது. தீவிரவாத தொடர்புகள் இல்லையென்றாலும், ஐ.பி, ஒவ்வொருவனின் பின்னணியையும் ஆராய்ந்து வருகிறது. சுமார் 10,000 பேர் எல்லைகளைக் கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளனர் என்று தெரிய வருகிறது. ஸ்வரூப்நகர், பரிர்ஹத் மற்றும் கைகதா என்ற பகுதிகள் வழியாக அவர்கள் ஊடுருவியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஊடகங்கள் இவர்களை “ரோஹிங்கர்”, “முஸ்லிம்கள்”, “இடம் பெயர்ந்தவர்கள்”, “அகதிகள்” என்று பலவாறாகக் குறிப்பிடுவதும் வியப்பாக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே மியன்மார் / பர்மா குடிமகன்கள். முசபர்நகர் கலவரங்களின் போது, ரோஹிங்க முஸ்லிம்கள் மயன்மாரில் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டனர் என்பது பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் புழக்கத்தில் விட்டதால் தான் கலவரங்கள் ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர். ஆக, ரோஹிங்க முஸ்லிம்களின் பிரச்சினை இந்தியாவையும் பாதித்துள்ளது.

Rohingya migrants bring back food supplies dropped by a Thai army helicopter after jumping to collect them at sea from a boat

Rohingya migrants bring back food supplies dropped by a Thai army helicopter after jumping to collect them at sea from a boat

பங்களாதேசத்தின் பங்குமுஸ்லீம்களைப் பெருக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது: பர்மாவின் மத்தியில் இருக்கும் மெய்க்திலா (central city of Meikhtila) என்ற நகரத்தில் தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. பங்களாதேசத்தில் அதிகமாக உள்ள முஸ்லீம்களை அடுத்த நாடுகளில் நுழைய வைப்பது, அவர்களது வேலையாக உள்ளது. ஒரு இடத்தில் முஸ்லீம்கள் இடத்திற்கு அதிகமாக பெருகிவிட்டால், அவர்கள் அப்படியே இடம் கொள்ளாமல் பொங்கி பக்கத்தில் விழுந்து விடுவார்களாம். அப்படி ஒரு சித்தாந்தமே பேசப்பட்டு வருகிறது. இதனால், இந்த ரோஹின்யா முஸ்லீம்கள் பங்களாதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்[4]. இவர்களுக்கு இடம் கொடுப்பது, சலுகைகள் வழங்குவது முதலியவற்றை பௌத்தர்கள் விரும்பவில்லை. இது முஸ்லீம்களுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன[5] என்று மனித உரிமைக் குழுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. முஸ்லீம்கள் வழக்கம் போல எண்ணிக்கையில் குறைவாக இருந்தால் ஒருமாதிரி இருப்பார்கள், எண்ணிக்கை அதிகமானால் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். இவ்வாறே புதன்கிழமை, ஒரு புத்த பிட்சு, ஒரு முஸ்லீம் கடையில் பொருள் வாங்கும்போது, வாதம் ஏற்பட்டது. அது விவகாரமாகி கலவரத்தில் முடிந்தது. ஆனால், முதலில் கொல்லப்பட்டது அந்த புத்த பிட்சு தான். இதுதான் கலவரத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது[6]. பர்மாவில் ஏற்பட்டுள்ள கலவரங்களுக்கு உலக அளவில் கவலை ஏற்பட்டுள்ளது[7].

Rohingya Muslims condition

Rohingya Muslims condition

ரோங்கிய பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி?: ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பணக்கார இஸ்லாமிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனேய் போன்றவை இம்முஸ்லிம்களை காக்கலாம் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்[8]. கடார் $ 5,00,00,000 கொடுப்பதாக அறிவித்துள்ளது[9]. உண்மையிலேயே 10 லட்சம் முஸ்லிம்களை பணக்கார முஸ்லிம் நாடுகள் தத்தெடித்துக் கொள்வது, அகதிகளாக ஏற்றுக் கொள்வது, போன்ற செயல்களை செய்வது மிகவும் சுலபமாகும். இருப்பினும், கருத்துகளைத் தெரிவிப்பதோடு நின்றுள்ளன. மியன்மாரும் தன்னுடைய எல்லைகளுக்குள் அவர்களுக்கு இடம் கொடுத்து பிரச்சினையை முடிக்கலாம்[10]. அதற்கு ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும். தங்களுடைய எல்லைக் கடந்த போக்குவரத்துகள், உறவுகள், சம்பந்தங்கள் முதலியவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்[11]. பௌத்தர்களிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும். தேசிய நீரோட்டத்தில் கலந்து தாங்களும் பர்மிய ச்நாட்டவர் என்ற உணர்வைக் கொள்ள வேண்டும். பௌத்தர்களும் அதேபோல, அவர்களை நடத்த வேண்டும், அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இருப்பினும், என்ன நடக்கும் என்பது தெளிவாக இல்லாத நிலையுள்ளது. ஏனெனில், இப்பிரச்சினை அந்த அளவிற்கு அரசியலாக்கப் பட்டுள்ளது.

PARIS, FRANCE - OCTOBER 27:  The Heir Apparent of Qatar HH Sheikh Tamim bin Hamad Al Thani  attends the Memorial Service For Christophe De Margerie, Total CEO, at Eglise Saint-Sulpice on October 27, 2014 in Paris, France.  (Photo by Pierre Suu/Getty Images)

PARIS, FRANCE – OCTOBER 27: The Heir Apparent of Qatar HH Sheikh Tamim bin Hamad Al Thani attends the Memorial Service For Christophe De Margerie, Total CEO, at Eglise Saint-Sulpice on October 27, 2014 in Paris, France. (Photo by Pierre Suu/Getty Images)

ஊடகங்களும் பாரபட்சத்துடன் செய்திகளை கொடுத்து வருகின்றன. மற்ற நாட்டில் உள்ள முஸ்லிம்கள் இதனை முஸ்லிம் பிரச்சினையாக மாற்றி ஆர்பாட்டங்கள் முதலியவற்றைச் செய்து வருவதும் வினோதமாக உள்ளது. ரோஹிங்க முஸ்லிம்களை ஏன் ஆயுத போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கவில்லை என்று தெரியவில்லை. கலவரங்களுக்கு காரணமான முஸ்லிம்களையும் கண்டிக்கவில்லை. அப்படியென்றால், முஸ்லிம்கள் அத்தகைய கலவரங்கள் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்களா?

© வேதபிரகாஷ்

30-05-2015

[1] http://www.tamilmurasu.com.sg/story/26037

[2] http://www.tamilmurasu.com.sg/story/43388

[3] https://buddhismstudies.wordpress.com/2013/03/23/why-buddhist-burma-could-not-get-peace-and-harmony/

[4] http://www.thehindu.com/news/international/south-asia/clashes-rock-myanmar-again/article4537607.ece

[5] Mark Farmaner of human rights group Burma Campaign UK said, “We’ve seen examples of anti-Muslim propaganda in Mon state, Shan state, Kachin state and Karen state, where people are distributing anti-Muslim leaflets,” he told the Guardian. “It may not be directly linked to violence in Rakhine state in an obvious way but … aan incident like this [an argument in a gold shop] wouldn’t normally lead to deaths and thousands of people trying to flee, if there weren’t already incredibly high tensions in the first place. That means it’s been organised and that no action has been taken to put a lid on it.” President Tun Khin of the UK-based Burmese Rohingya Organisation described the violence in Meikhtila as a state-sponsored attack, and said: “These are not communal clashes; this is not equal sides fighting. These are organised attacks to cleanse [Burma] of Muslims where the vast majority of those killed and displaced are Muslims … There should be laws on racism if the government wants to see durable peace in Burma.”

http://www.guardian.co.uk/world/2013/mar/22/burma-ethnic-violence-dead-meikhtila

[6] Troubles began on Wednesday after an argument broke out between a Muslim gold shop owner and his Buddhist customers. A Buddhist monk was among the first killed, inflaming tensions that led a Buddhist mob to rampage through a Muslim neighbourhood.

[7] http://online.wsj.com/article/SB10001424127887324103504578376403112277548.html

[8] Muslim countries within ASEAN – Indonesia, Malaysia and Brunei – have more than enough wealth to care for their Islamic neighbors

http://thediplomat.com/2015/05/aseans-refugee-embarassment/

[9] http://www.ibtimes.co.uk/qatar-pledges-33mn-indonesia-rescuing-muslim-rohingya-migrants-1503410

[10] http://thediplomat.com/2015/05/solving-the-rohingya-crisis/

[11] http://burmatimes.net/burmese-army-arrested-three-rohingya-with-bangladeshi-mobiles/