Archive for the ‘துப்பாக்கி’ category
ஒக்ரோபர் 13, 2016
ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

கோயம்புத்தூர் தமிழ்நாடு–கேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது: இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ தென்மாநில ஐ.ஜி அலோக், சூப்பிரண்டு விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த ஐந்து பேரை பிடித்தனர். 03-10-2016 அன்று கேரளாவைச் சேர்ந்த ஹாஜா மொஹித்தீன் திருநெல்வேலியில் பிடிபட்டான்[1]. இவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]. கோயம்புத்தூரில், குண்டுவெடிப்பு நடந்து, கலவரம் ஏற்பட்ட பிறகு கூட, அங்கு, இவ்வாறு தீவிரவாத செயல்களுக்கு உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பது, கவலையாகத்தான் உள்ளது. கோயம்புத்தூர் தமிழ்நாடு-கேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது என்பது போன்று தெரிகிறது.

சென்னை தொடர்புகள் திகைக்க வைக்கின்றன: கைது செய்யப்பட்ட 6 பேரில் அபு பஷீர் என்பவர் கோவையின் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கேரளா திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்கிற யூசுப் உட்பட மேலும் ஒருவர் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் சில நாட்கள் தங்கிவிட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் கோவை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வரும் நவாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து செல்போன், ‘லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைச் சேகரித்ததாகவும் தெரிகிறது. மேலும், தென்னிந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் முக்கியமான பிரபலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்மீது கொண்ட ஈர்ப்பால், அந்த அமைப்புக்காக வேலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது[3].

05-10-2016 அன்று கைது செய்யப்பட்ட சுபஹனி ஹாஜா மொஹிதீன்: இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து 3 பெண்கள் உட்பட 21 பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட 6 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுபஹானி [K. Subuhan Abdullah (35)] அவரது மாமனார் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்[4]. கடையநல்லூரில் அவரது வீட்டில் தங்கியிருந்த போது அதிகாலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். பின்னர் சுபஹனியை கொச்சிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. NIA குழு திருநெல்வேலியில் தங்கியிருந்த சுபாஹினியை கைது செய்து விசாரித்தனர். அவன் சிவகாசியில் வெடி தயாரிப்பாளர்களிடமிருந்து ரசாயனப் பொருட்களை வாங்கியுள்ளான்[5]. கைதான சுபஹானி ஐ.எஸ். ஆதரவாளரா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் 06-10-2016 அன்று ஆஜர்ப்படுத்தி, விசாரணை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்[6].

செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த ஐசிஸ் போராளி[7]: கடையநல்லூரில் வசித்து வந்த சுபஹனி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் அந்த அமைப்பில் சேர்ந்தார். பின்னர் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மெக்கா செல்வதாக கூறி விட்டு 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா விசாவில் சென்றார். அங்கிருந்து ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். போரின் தீவிரத்தை தாங்க முடியாமல் ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலக முயன்ற சுபஹானியை அந்த அமைப்பினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுபஹனியை ஐ.எஸ். அமைப்பு விடுதலை செய்தது. விடுதலையான அவர் இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து தான் இந்தியா செல்ல உதவி கேட்டான். அதன்படி இந்திய தூதரக உதவியுடன் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இந்தியாவிற்கு சுபஹனி திரும்பி வந்தான்[8].

கடையநல்லூரிலிருந்து ஐசிஸுடன் தொடர்பு வைத்திருந்த போராளி: சபஹனி ஹாஜா மொஹ்தீன் பின்னர் அவர் கடையநல்லூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்கு ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தான். ஆனால், சில நாட்களில், மறுபடியும், இணையத்தளம் வழியாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டான். அந்த அமைப்பின் கட்டளைபடி சிவகாசியில் இருந்து வெடிமருந்து வாங்கி இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு சப்ளை செய்துள்ளான். மேலும் ஹவாலா பணம் மூலமும், தங்க நகைகள் மூலமும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சபஹனி பண பரிமாற்றம் செய்துள்ளார். விசாரணையில் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து 05-10-2016 அன்று கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு தென்பிராந்திய ஐ.ஜி. அம்ரத் டங் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் சுபஹனியை நள்ளிரவில் நெல்லை மாவட்டம் குற்றாலம் அழைத்து வந்தனர். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சுபஹனியை பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.

கடையநல்லூரில் விசாரணை: அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. பிறகு, காலை 10 மணியளவில் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கடையநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சுபஹனியை ஆஜர்படுத்தி விசாரணையை தொடங்கினர். கடையநல்லூரில் யார்? யாருடன் அவருக்கு தொடர்பிருந்தது, ஹவாலா பணத்தை யார் மூலம் அவர் பெற்றார்? சிவகாசியில் யாரிடம் வெடி மருந்து வாங்கினார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுபஹனியின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சுபஹனி கடையநல்லூர் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அழைத்துவரப்படும் செய்தி அறிந்த கடையநல்லூர் நகைக்கடை வியபாரிகள் பலர் கடைகளை அடைத்திருந்தனர்.

வீடு, நகைக்கடை முதலிய இடங்களில் விசாரணை / சோதனை[9]: தொடர்ந்து அவரது வீட்டில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அங்கு பள்ளிவாசல் தெருவில் உள்ள சுபஹானி வசித்து வந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. சுபஹனி மனைவியின் தாய் வீடு கடையநல்லூர் புதுமனை தென்வடல் தெருவில் உள்ளது. அங்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், சுபஹனியின் மனைவியிடம் சுபஹனி வசித்து வந்த வீட்டின் சாவியை பெற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து ஒரு பழைய செல்போன் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்[10]. பின்னர் அவர் பணியாற்றிய நகைக் கடையிலும் விசாரணை மேற்கொண்டனர். கடையநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுபஹனி ஹாஜாமொய்தீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது. சோதனையின்போது செல்லிடப்பேசி, சிம்கார்டு, கணினி நினைவகம் போன்றவற்றை தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது[11]. 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நகைக்கடை பங்குதாரர் பேட்டி: இதற்கிடையே சுபஹனி ஹாஜாமொய்தீன் பணியாற்றிய நகைக் கடையின் பங்குதாரர் நயினாமுகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தால் கடந்த 27ஆம் தேதியே [27-09-2016] அவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர்தான் அவர் குறித்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. வேலையை விட்டு நீக்கிய பின்னர் மோசமான வார்த்தைகளால் கட்செவி அஞ்சல் மூலம் எங்களை அவர் திட்டினார். இது தொடர்பான தகவல்களையும் நாங்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்[12].
© வேதபிரகாஷ்
13-10-2016

[1] Indian Express, Tamil Nadu: One more person linked to ISIS arrested by NIA in Kerala, By: Express Web Desk | New Delhi | Updated: October 4, 2016 5:56 pm.
[2]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2575458.html?pm=home
[3] விகடன், தமிழகத்தை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்… கேரளாவில் 6 பேர் கைது, Posted Date : 18:10 (03/10/2016); Last updated : 18:10 (03/10/2016).
[4] The Hindu, NIA picks up IS suspect from Kadayanallur, Tirunelveli October.4, 2016; Updated: October 4, 2016 02:21 IST.
[5] News18, Suspected ISIS Operative Arrested in Tamil Nadu, Was Planning Attacks, Press Trust Of India, First published: October 6, 2016, 2:46 PM IST.
[6] http://www.vikatan.com/news/india/69109-isis-terrorists-targeted-tamil-nadu-6-arrested-in-kerala.art
[7] மாலைமலர், ஐ.எஸ். தீவிரவாதி சுபஹனியை கடையநல்லூர் அழைத்து வந்து விசாரணை, பதிவு: அக்டோபர் 07, 2016 14:09
[8] http://www.maalaimalar.com/News/State/2016/10/07140918/1043769/kadayanallur-IS-extremist-investigation.vpf
[9] தினமணி, ஐ.எஸ். பயங்கரவாதியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை, By கடையநல்லூர் Last Updated on : 08th October 2016 08:21 AM
[10] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/oct/08/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2578126.html?pm=478
[11] தினத்தந்தி, கேரளாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதி சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து விசாரணை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 12:45 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 4:15 AM IST
[12] http://www.dailythanthi.com/News/State/2016/10/08004534/And-brought-to-trial-cupahaniyai-Kadayanallur.vpf
பிரிவுகள்: செல்போன், ஜமாத், ஜாகிர் நாயக், ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ் ஜிஹாதி, தீவிரவாதம், தீவிரவாதி, துபாய், துப்பாக்கி, துருக்கி, Uncategorized
Tags: இணைதள ஜிஹாத், இஸ்தான்புல், இஸ்லாம் ஜிஹாதி, எர்ணாகுளம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐசில், ஐசிஸ், கடையநல்லூர், குண்டு, கோயம்புத்தூர், சிரியா, ஜிஹாதி, துருக்கி, பேஸ்புக், மொசூல், ரசாயனம், விசா
Comments: Be the first to comment
ஏப்ரல் 11, 2015
தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்படுவது எப்படி – தெலிங்கானா என்கவுன்டர்கள், முன்னர் நடந்த கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடிப்புகள் (1)

சிமி கொல்லப்பட்டவர்களுள் ஒருவன்
வாராங்கல் ஜெயிலிலிருந்து நீதிமன்றத்திற்கு செல்லும்போது, 5 சிமி தீவிரபவாதிகள் சுட்டுக்கொலை: தெலுங்கானா மாநிலம் வரங்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 சிமி தீவிரவாதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஐதராபாத் அழைத்துச் சென்றனர். அலெர்–ஜான்கான் ஆகிய இடங்களுக்கு இடையே போலீசாரை தாக்கி 5 பேரும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் சுட்டுக் கொன்றனர் . தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்தவர் விக்ருதீன் அகமது (30). தெரீக்-கல்பா-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கிய அவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இரண்டு போலீஸாரை சுட்டுக் கொன்றது, குஜராத் உள்துறை அமைச்சர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளன . பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் விக்ருதீன் அகமதுவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. தலைமறைவாக இருந்த அவர் கடந்த 2010-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் முகமது ஹனீப், சையது அகமது அலி, இஷார் கான், முகமது ஜாஹிர் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். இவர்கள் விசாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு வன்முறையில் ஈடுபட்ட தால் வாரங்கல் சிறைக்கு மாற்றப் பட்டனர். இந்நிலையில் விக்ருதீன் அகமது உள்ளிட்ட 5 பேரையும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் நேற்று அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பிக்க முயன்றபோது 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் .

சிமி கொல்லப்பட்டவர்களுள் இன்னொருவன்
என்கவுன்ட்டர் நடத்தியது / நடந்தது எப்படி?: இந்த என்கவுன்ட்டர் குறித்து தெலங்கானா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: வாரங்கல் சிறையில் இருந்து காலை 8.30 மணிக்கு விக்ருதீன் அகமது உள்ளிட்ட 5 பேரையும் வேனில் ஏற்றிக் கொண்டு போலீ ஸார் புறப்பட்டனர். அவர்களுடன் 17 போலீஸார் பாதுகாப்புக்கு சென்றனர். ஹைதராபாத்-வாரங்கல் நெடுஞ் சாலையில் கண்டிகாடா தண்டா என்ற இடத்தில் காலை 10.25 மணிக்கு வேன் வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வேனை நிறுத்துமாறு விக்ருதீன் அகமது கோரினார். அந்த இடத்தில் போலீஸார் வேனை நிறுத்தினர். ஐந்து பேரும் கீழே இறங்கியவுடன் அருகில் நின்ற போலீஸாரின் துப்பாக்கியை பறித்து சுட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட மற்ற போலீஸார் அவர் கள் ஐந்து பேரையும் சுட்டு வீழ்த்தினர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவ இடத்தில் வாரங்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஏ.கே.ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநில போலீஸ் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். ஐந்து தீவிரவாதிகளின் உடல்களும் ஜாங்கோன் நகர அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

சிமி கொல்லப்பட்டவர்களுள் இன்னுமொருவன்
2-வது என்கவுன்ட்டர் சம்பவம்: சில நாட்களுக்கு முன்பு நலகொண்டா மாவட்டம், சூர்யாபேட்டை பஸ் நிலையத்தில் நின்றிருந்த 2 போலீஸாரை சிமி தீவிரவாதிகள் இரண்டு பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட சூரியபேட் பஸ் நிலைய பகுதியில் கடந்த ஏப்ரல் 2–ந்தேதி அதிகாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பஸ்சில் இருந்த மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் இறக்கி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசார் மீது திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு, அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறித்து விட்டு தப்பி ஓடினர். இதில் ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர் . விசாரணையில் இவர்களுக்கும் மற்ற சிமி தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது . போலீஸார் நடத்திய தீவிர வேட்டையில் 2 தீவிரவாதிகளும் [Aslam Ayub and Mohammed Aijajuddeen] 04-04-2015 அன்று சனிக்கிழமை அன்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டர் நடைபெற்ற ஒரு வாரத்துக்குள் வாரங்கல் மாவட்டத்தில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தெலிங்கானாவில் இத்தகைய நிகழ்சிகள் நடப்பது கவலைக்குரியதாக உள்ளது. தெலிங்கானாவில் முஸ்லிம்களின் ஜனத்தொகை 12.4%மாக இருப்பதாலும், மஜ்லிஸ் கட்சி பொதுவாக அடிப்படைவாதத்தை ஆதரித்து வருவதாலும், இப்பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகமாகும் என்று தீவிரவாதம் பற்றி ஆயும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளார்கள்.

Vikruddhi father alleged that it was fake encounter, custodial death
பொய்யான என்கவுன்டர், உண்மையில் போலீஸ் பாதுகாப்பில் அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்: தில்லியிலிருந்து வந்த ஒருவன் இவர்களை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது . ஆனால், விக்ருத்தீனின் தந்தை மற்றவர்கள், இதெல்லாம், பொய்யான என்கவுன்டர், உண்மையில் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும்போதே அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினர் . அகில இந்திய மஜ்லீஸ்-இ-முஷாவரத் என்ற அந்த அமைப்பின் தலைவர் ஜாஃபருல் இஸ்லாம், 09-04-2015 வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “மோதல் நடைபெற்றபோது, உயிரிழந்தவர்களின் கைகள் விலங்கிடப்பட்டிருந்ததாக பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்தக் கருத்தை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மூத்த அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இது, கடந்த காலங்களில் நடைபெற்ற ஹாஷிம்புரா, பாட்லா ஹவுஸ் போன்ற போலி மோதல் சம்பவங்களைப் போன்றதாகும். இந்தச் சூழ்நிலை பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்”, என்றார் ஜாஃபருல் இஸ்லாம்.
பொறுப்புள்ள முஸ்லிம்கள் கேள்விகளைத் தவிர்ப்பது: குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது, கொள்ளைகள் நடந்தது, ஜெயிலிருந்து ஆயுதங்களுடன் தப்பியோடியது, போலீஸார் கொல்லப்பட்டது, சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது இவையெல்லாம் பொய்யா? இவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரது உரிமைகள் என்னாவது? ஐசிஸில் சேரத்துடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளார்களே? அதேபோலத் தானே, இந்திய முஜாஹித்தீன் வேலை செய்து கொண்டு வருகிறது. பிறகு ஏன், எப்படி இந்திய முஸ்லிம்கள் அதனை ஆதரித்து வருகிறார்கள்? உள்ளூர் தீவிரவாதம் அதிகமாகி, பெருகிவருவது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகள் இத்தகைய குண்டுவெடுப்புகளை ஆதரித்துக் கொண்டிருப்பர்? தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய காரியங்களை ஏன் அவர்களது பெற்றோர்ருறவினர், மற்றோர் தடுப்பதில்லை? இவற்றையெல்லாம் விடுத்து, “சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ” என்று வாதிடுவது, அத்தகையவரை ஊக்குவிப்பதாகத்தான் அமையுமே தவிர, அமைதியை உண்டாக்காது.
2013 சிறையிலிருந்து தப்பி வந்ததிலிருந்து கொள்ளைகள், குண்டுவெடிப்புகள்: அக்டோபர் 2013ல் கந்த்வா என்ற சிறையிலிருந்து ஐந்து சிமி பயங்கரவாதிகள் தப்பித்ததிலிருந்து, தொடர்ந்து நடந்து வரும் திருட்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை பொலீஸார் கவனித்து வருகின்றனர் . அக்டோபர் 7ம் தேதி காலை நேரத்தில் ஜெயில் பாதுகாவலர்களைத் தாக்கி துப்பாக்கிகள், வயலெஸ் செட் முதலியவற்றை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர் . இவர்கள் உபி, தெலிங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்குவங்காளம் என்று தொடர்ந்து தங்களது இடங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இதிலிருந்து அங்கங்குள்ள அவர்களது உறவினர்கள் மற்ற தொடர்பாளிகள் ஆதரித்து வருகின்றனர் என்றாகிறது. கர்நாடகாவில் ஹோஸ்பெட் என்ற இடத்தில் பார்த்தபோது, அடையாளம் காணப்பட்டனர். மெஹ்பூப் அப்பொழுது தனது தாய் நஜ்மாபீபியுடன் தங்கியிருந்தான்ளதாவது பெற்ற தாயே, மகனை தீவிரவாதத்தில் ஈடுபடாதே என்று கண்டிப்பதை விடுத்து, அவனுடனே பல இடங்களுக்குச் சென்று வருவது வியப்பாக இருக்கிறது. 2008ல் பாட்லா என்கவுன்டரில் முக்கியமான அதீப் அமீன் [Atif Ameen] என்பவனும் மற்றவர்களும் கொல்லப்பட்டவுடன் இந்திய முஜாஹித்தீனின் செயல்கள் கொஞ்சம் குறைந்திருந்தன. யாசின் பட்கல் [Yasin Bhatkal, ஆசதுல்லா அக்தர் [Asadullah Akhtar], தேஸின் அக்தர் [Tehsin Akhtar] மற்றும் ஹைதர் அலி [ Haider Ali] முதலியோர் இதற்குப் பிறகு கைதாக உதவியது.
வேதபிரகாஷ்
© 11-04-2015
பிரிவுகள்: குட்டு, கைது, சிமி, ஜெயில், தப்பித்தல், துப்பாக்கி, தெலிங்கானா, தெலுங்கானா, வாரங்கல்
Tags: ஆந்திரா, ஐதராபாத், குட்டு, கைது, சிமி, தெலிங்கானா, தெலுங்கானா, பிஜ்னோர், பூனா, வாராங்கல்
Comments: Be the first to comment
ஏப்ரல் 6, 2013
தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான், தாலிபான், துபாய் தொடர்புகள் என்ன – அவை எப்படி இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகின்றன
பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத – பயங்கரவாதங்கள்: இந்தியா பாகிஸ்தானிற்கு பல ஆவணங்களைக் கொடுத்து, எப்படி தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன என்று எடுத்துக் காட்டி வருகின்றது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் இயக்கங்களின் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு வருகின்றது. இருப்பினும் பாகிஸ்தான் அதனைப் பற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. மாறாக, அது பல வழிகளில் அவற்றை வளர்த்துக் கொண்டே வருகிறது. தாவூத் இப்ராஹிமின் விஷயத்திலேயோ அப்பட்டமான மறுக்கமுடியாத பங்கு வெளிப்பட்டுள்ளது. இப்பொழுதைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூட அது வெளிப்படையாக எடுத்துக் கட்டியுள்ளது. ஆனால், தாவூத் இப்ராஹிம் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது. மாறாக, குரூரங்களை மறைத்து, கொடுமைகளை மறைத்து, தன் “உடம்பில் முஸ்லீம் ரத்தம் ஓடுகிறது” என்று சொல்லிக் கொண்ட சஞ்சய் தத்திற்காக “கருணை” என்று திசைத்திருப்ப இந்திய ஊடகங்களே ஈனத்தனமாக செய்ல்பட்டு வருகின்றன.
தாவூத் இப்ராமின் பணம்: தாவூத்தின் பணம் புனிதமானது அல்ல, அது –
- ரத்தக்கறைப் பட்ட பணம்;
- போதை மருந்து வியாபாரத்தில் ஊர்ந்த பாவப் பணம்;
- பெண்மையைக் கெடுத்தப் பணம்
- பலருடைக் குடிகளைக் கெடுத்த பணம்
- மனிதத்தன்மையற்றப் பணம்.
- சுக்கமாக கேடு கெட்டப்பணம்.
ஆனால், அப்பணத்தைப் பற்றித்தான் இப்பொழுது, விவகாரங்கள் வெளிப்படுகின்றன. தாவூத் இப்ராஹிம் பணம் பரோடா வங்கி மூலம் பரிவர்த்தனைச் செய்யப்பட்டது என்று சில ஊடகங்களின் செய்தியை[1] அந்த வங்கி மறுத்துள்ளது[2]. மற்ற கணக்குகளைப் போன்றே, குறிப்பிட்ட கணக்கும் பஹாமாவில், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளையில் (Bank of Baroda, Nassau Branch, Bahamas) இருந்த கணக்கும் பல வருடங்களாக இருந்து வருகிறது. அதன் வழியாக, துபாய்க்கு பணமாற்றம் செய்யப்படுகிறது. இது அந்த நாடு மற்றும் துபாயின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்துள்ளது, என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தாவூதின் பணம் அல்ல என்று மறுக்கவில்லை. பரோடா வங்கியின் வாதம் முன்பு HSBC வங்கி எப்படி வாதிட்டதோ, அதுபோலத்தான் உள்ளது.
HSBC வங்கி – போதைமருந்து, தீவிரவாதம், இத்யாதி: முன்பு எச்.எஸ்.பி.சி. வங்கி செப்டம்பர் 2011 தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களோடு பணம் பரிவர்த்தனை செய்ததில் தொடர்புப் படுத்தப்பட்டது[3]. சுலைமான் பின் அப்துல் ஆசிஸ் அல்-ரஜியின் (Sulaiman bin Abdul Aziz al-Rajhi) பெயர் அல்-குவைதா பட்டியிலில் இருந்தது. அவருடைய அல்-ரஜி வங்கியுடன் HSBC வங்கி தொடர்பு கொண்டிருந்தது[4]. வங்காளதேசத்தின் கிளைக்கும் தொடர்பு இருந்தது[5]. 3000ற்கும் மேலான சந்தேகிக்கப்பட்ட கணக்குகள் அவ்வங்கி கிளைகளிடம் இருந்தன[6]. அவற்றில் தீவிரவாதிகளின் கையிருந்தது. இந்திய ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்தது எடுத்துக் காட்டப்பட்டது[7]. இங்கிலாந்திலும் இவ்வங்கி கோடிக்கணக்கில் போதை மருந்து வியாபாரிகளுடன் சமந்தப்பட்டு £640million அபராதத்திற்கு உட்பட்டது[8]. அப்பொழுதும் சவுதியின் தீவிரவாத தொடர்பு எடுத்துக் காட்டப்பட்டது. முஸ்லீம்களைத் தீவிவாதிகள் என்று சித்தரிக்கக் கூடாது என்கிறாற்கள். அப்படியென்றால், இவ்விஷயத்திலும் கூட, ஏன் முஸ்லீம்கள் ஈடுபடுகிறார்கள்? தீவிரவாதட் ஹ்திற்கு உபயோகப்படுகிறது எனும் போது, விலகிக் கொள்ளலாமே, புனிதர்களாக இருக்கலாமே?
தாவூ த்இப்ராஹிமின் நிழல் கம்பெனிகள் எவை: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களிடமிருந்து தாவூத் இப்ராஹிமுக்கு வரும் பணம் எப்படி செல்கிறது என்று ஆயும்போது, அது பஹாமாவில் இருக்கும், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளைக்குச் செல்கிறது. இப்பணம் கீழ்கண்ட நிதி பரிமாற்ற வங்கிகளினின்று, மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் அக்கிளையை அடைகிறது:
- அல்-ஜரௌனி பணபரிமாற்ற வங்கி (al-Zarouni Exchange)
- துபாய் பணபரிமாற்ற வங்கி (Dubai Exchange)
- அல்-திர்ஹம் பணபரிமாற்ற வங்கி (al-Dirham Exchange)
- அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (Almas Electronics),
- யூசுப் டிரேடிங் (Yusuf Trading),
- ரீம் யூசுப் டிரேடிங் (Reem Yusuf Trading),
- ஃப்லௌதி டிரேடிங் கம்பெனி (Falaudi Trading Company),
- கல்ப் கோஸ்ட் ரியல் எஸ்டேட்ஸ் (Gulf Coast Real Estates).
இதைத்தவிர வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி என்கின்ற ( United Arab Emirates-based tycoon Vardaraj Manjappa Shetty) அமீரக பணமுதலையின் மூன்று ஹோட்டல்களிலும் பங்குள்ளது என்று சொல்லப்படுகிறது[9]. வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி ஊடகங்களில் டி-கம்பெனியுடன் தொடர்புப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும்[10], ஷெட்டி அதனை மறுத்து வருகிறார்[11]. இவர் ராஜ் ஷெட்டி என்று பிரபலமாக அழைக்கப்ப்டுகிறார். ரமீ ஹோட்டல் குழுமங்களுக்கு இவர்தான் தலைவர். இவர் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்[12]. இருப்பினும் மற்ற நிறுவனங்கள் இப்ராஹிமிம் நிழல் கம்பெனிகள் தாம் என்று தெரிகிறது.
போதை மருந்து வியாபாரத்தை செய்யும் தாவூத் இப்ராஹிம்: போதை மருந்து கடத்தல் மற்றும் விநியோகதாரர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பதில் தாவூத் இப்ராஹிம் ஈடுபட்டுள்ளான். தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நடக்கும் $3.5 பில்லியன் வியாபாரத்திற்கு இவன் தான் காரணகர்த்தா. இதற்காக அந்தந்த நாடுகளில் பணத்தை பட்டுவாடா செய்ய மற்றும் வசூலிக்க நிறைய நிறுவனங்களை வைத்துள்ளான்[13]. அமீரகத்தில் மட்டும் அத்தகைய 11 கம்பெனிகள் உள்ளன. இந்தியா பாகிஸ்தானிற்கு அனுப்பியுள்ள தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களின் விவரங்களைக் கொண்ட புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன[14]. இப்பணம் எப்படி பாகிஸ்தானிற்கு உபயோகமாக இருக்கிறது என்றால், சலவை செய்யப்பட்ட அப்பணம் அங்கு முதலீடு செய்யப்பட்டதால் 2012ல் பாகிஸ்தானின் பங்கு வர்த்தகம் 49% உயர்ந்தது[15]. அமெரிக்கா இவனது பணப்போக்குவரத்தை முடக்கியதால், இப்படி தனது யுக்தியை மாற்றிக் கொண்டுள்ளான் என்று அனைத்துலக வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்[16]. ஆனால், அதே நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை சீரழிக்க எதிர்வேலைகளை செய்து வருகிறான்.
தாவூத் இப்ராஹிம் தீவிரவாதியும், இந்தியாவைத் தாக்கும் ஜிஹாதியும்: குலாம் ஹஸ்னைன் என்ற பத்திரிக்கையாளர் 2001ல் எழுதியது இன்று எப்படி மாறியிருக்கும் என்று தெரியவில்லை[17]: “தாவூத் இப்ராஹிம் ஒரு ராஜாவைப் போல வாழ்கிறான், அவனது இல்லம் 6,000 சதுர யார்டுகள் ஆகும், அதில் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், ஸ்நூக்கர் அறை, தனிப்பட்ட ஜிம், அவனுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட உடைகள், மெர்சிடெஸ் மற்றும் விலையுயர்ந்த கார்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பெடேக் பிலிப் கடிகாரம் முதலியவற்றைக் கொண்டவன். சினிமா நடிகைகள், விபச்சாரிகள் என்றால் சொல்லவே வேண்டாம், அப்படியே கரன்ஸி நோட்டுகளை அவர்கள் மீது வாரி இறைப்பான்”. அப்படி பட்டவன் தான், இப்படி இந்தியாவின் மீது ஜிஹாத் என்று குண்டுவெடிப்புகளில் இறங்கியுள்ளான்.
இஸ்லாமியர்கள் இத்தகைய செயல்களை செய்யலாமா: இப்படி எல்லாவிதங்களிலும், இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைக்க இந்த தீவிரவாத-பயங்கரவாத நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம், வெடிகுண்டு பயங்கரவாதம், இன்னொரு பக்கம் கள்ள நோட்டுப் புழக்கம், பங்கு வணிகத்தில் முதலீடு, தங்கத்தில் முதலீடு, இன்னொரு பக்கம் போதை மருந்து, சினிமா பெயரில் விபச்சாரம், கிரிக்கெட் பெயரில் எல்லாமே என்று கோடிகளில் முதலீடு செய்து பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறார்கள். என்னத்தான் இஸ்லாம், அமைதி, புனிதம் என்றெல்லாம் பேசிக்கொண்டாலும், அவர்கள் செய்து வரும் வேலை பயங்கரமாகத்தான் இருக்கிறது. ஹக்கானி நிதி பரிமாற்ற வலை[18] என்ற அறிக்கைப் புத்தகத்தில் இது எடுத்துக் காட்டப்படுகிறது. பஸிர் அலுவகலக கோப்பு (Pazeer Office File) என்ற இன்னொரு ஆவணம் எப்படி முஜாஹித்தீன்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்று விளக்குகிறது[19]. இவையெல்லாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆவணங்கள் தத்ரூபமாக அவர்களின் எண்ணங்களை, செயல்களை விளக்குகின்றன.
ஆனால், இந்திய முஸ்லீம்கள் இவற்றை –
- எதிர்ப்பதில்லை;
- கண்டிப்பதில்லை;
- கண்டுக்கொள்வதில்லை
- அமைதியாக இருக்கின்றனர்.
பிறகு இஸ்லாமிய தீவிரவாத-பயங்கரவாதம் என்றால் ஏன் எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை.
வேதபிரகாஷ்
06-04-2013
[1] The bank’s statement came a day after a CNN-IBN and FirstPost investigation found that Dawood’s cash was washing up in the offshore banking haven of Nassau in The Bahamas – a beach paradise also known for its zero-taxes and high-secrecy banking – in a Bank of Baroda branch.
[4] HSBC, the senate report says, did ill-monitored business with Saudi Arabia’s al-Rajhi bank – whose senior-most official, , appeared on an internal al-Qaeda list of financial benefactors discovered after 9/11. The al-Rajhi bank provided accounts to the al-Haramain Islamic Foundation, designated by the United States as linked to terrorism. Its owners, the Central Intelligence Agency asserted in 2003, “probably know that terrorists use their bank”. Lloyds, in a lawsuit, also alleged that al-Rajhi ran accounts used “to gather donations that fund terrorism and terrorist activities” – including suicide bombing. http://www.indianexpress.com/news/hsbc-india-staff-have-terror-link-/976133/2
[13] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel.
[14] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel.
[18] The CTC’s latest report leverages captured battlefield material and the insights of local community members in Afghanistan and Pakistan to outline the financial architecture that sustains the Haqqani faction of the Afghan insurgency. The Haqqani network is widely recognized as a semi-autonomous component of the Taliban and as the deadliest and most globally focused faction of that latter group. What receives far less attention is the fact that the Haqqani network also appears to be the most sophisticated and diversified from a financial standpoint. In addition to raising funds from ideologically like-minded donors, an activity the Haqqanis have engaged in since the 1980s, information collected for this report indicates that over the past three decades they have penetrated key business sectors, including import-export, transport, real estate and construction in Afghanistan, Pakistan, the Arab Gulf and beyond. The Haqqani network also appears to operate its own front companies, many of which seem to be directed at laundering illicit proceeds. By examining these issues this report demonstrates how the Haqqanis’ involvement in criminal and profit-making activities has diversified over time in pragmatic response to shifting funding conditions and economic opportunities, and how members of the group have a financial incentive to remain the dealmakers and the enforcers in their area of operations, a dynamic which is likely to complicate future U.S. and Afghan efforts to deal with the group.
http://www.ctc.usma.edu/wp-content/uploads/2012/07/CTC_Haqqani_Network_Financing-Report__Final.pdf
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அசிங்கப்படுத்திய முகமதியர், அச்சம், அடிப்படைவாதம், அபு சலீம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அமைதி என்றால் இஸ்லாமா, அமைத்-உல்-அன்ஸார், அலர்ஜி, அல் - உம்மா, அல் - காய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்-ஜரௌனி, அல்-திர்ஹம், அல்ஜமீன், அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ், அழுக்கு, அவமதிக்கும் இஸ்லாம், அஸ்ஸாம், ஆப்கானிஸ்தான், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இமாம், இமாம் அலி, இருட்டு, இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், ஔரங்கசீப், கசாப், கஞ்சி, கறை, கற்பழிக்கும் ஷேக், கற்பழிப்பு, கற்பு, காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, காதல் மந்திரக் கட்டு, காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல், சரீயத், சரீயத் சட்டம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலை, தாவூதின் காதலி, தாவூத் இப்ராஹிம், தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதிகளுக்கு பணம், துபாய், துப்பாக்கி, துருக்கர், துலுக்கன், பணப்பரிமாற்றம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாவப் பணம், பாவப்பணம், பாவம், மஞ்சப்ப ஷெட்டி, மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் கல்வி சங்கம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் சாதி, முஸ்லீம்கள், ரத்தப் பணம், வரதராஜ், வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி, ஷெட்டி
Tags: ஃபத்வா, அல்-ஜரௌனி, அல்-திர்ஹம், அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ், அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இந்திய-பாகிஸ்தான உறவு, இருட்டு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உச்சநீதி மன்றம், கறை, கறைப் பட்டப் பணம், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஷ்மீரம், காஷ்மீர், கிழக்கு பாகிஸ்தான், குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், டி-கம்பெனி, தாலிபன், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவூத் இப்ராகிம், தாவூத் இப்ராஹிம், தீ, தீமை, பங்கு, பணப்பரிமாற்றம், பணம், பாகிஸ்தானின் தாலிபான், பாகிஸ்தானியர், பாகிஸ்தான், பாவப் பணம், பாவம், புனிதப்போர், போதை, போதை மருந்து, மஞ்சப்ப ஷெட்டி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், வரதராஜ், வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி, ஷெட்டி
Comments: 1 பின்னூட்டம்
பிப்ரவரி 23, 2013
தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

ஷிண்டே ஏன் இப்படி இருக்கிறார்?: உள்துறை அமைச்சகம் கூறுவதிலிருந்து, உள்துறை அமைச்சர் பலமுறை முன்னுக்கு முரணாக பேசுவது, அவர் ஒன்று தமது துறையினைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அல்லது அவரை யாரோ சுயமாக இயங்குவதற்கு தடையாக உள்ளனர் அல்லது பொம்மை மாதிரி ஆட்டிவைக்கின்றனர். கற்பழிப்பு சட்ட மசோதா விஷயத்தில் முழுக்க-முழுக்க சிதம்பரமே செயல்பட்டு இவர் ஓரங்கட்டப்பட்டது, அந்த நீதிபதி சொன்னதிலிருந்தும், சோனியவே அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டதிலிருந்தும் தெள்ளத்தெளிவானது. ஆகவே, தனது அமைச்சகம் இந்திய முஜாஹித்தீனின் கைவேலைத் தெரிகிறது என்றாலும், இவர் ஏதோ பொதுவாகத்தான் பேசி வருகிறார். லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் அவர் வாசித்த அறிக்கை ஒரு சடங்கு போன்று இருந்தது. சம்பந்தப்பட்டத் துறைகள், பாதுகாப்பு நிறுவன கள் முதலியவற்றின் பெயர்களைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். வெடி குண்டு வெடித்ததும் ஏன் ஐதராபாத் செல்லவில்லை என்று கேட்டதிற்கு டிக்கெட் கிடைத்தல் செல்வேன், பாதுபகாப்பு விஷயமாக செல்லவில்லை என்றேல்லாம் உளறிக்கொட்டினார்[1]. வெளிப்படையாகத் தெரியும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கண்டிக்க, தடுக்க, அடைலளம் காட்டக் கூட்டத் தயங்குவது நன்றாகவே தெரிகின்றது.

குண்டு வெடித்த இடங்கள், நேரங்கள்
தடயங்கள் குறிப்பாகக் காட்டினாலும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்?: தடயத்துறை வல்லுனர்கள் பரிசோதித்து விட்டு, அம்மோனியம் நைட்ரேட், யூரியா, பெட்ரோல் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்[2]. அதுமட்டுமல்லாது, மூன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உத்திரபிரதேசம், பீஹார், ஜார்கெண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் போலீசார், தேசிய புலனாய்வுத்துறைக்கு உதவ தயாராகினர். ஐதராபாதிலேயே, ஒரு லாட்ஜில் தங்கி திட்டம் வகுத்ததையும் தெரிந்து கொண்டனர்[3].

ஐ.ஈ.டி. விவரங்கள்
கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டவன் எப்படி உலா வருகிறான்?: ரியாஸ் பட்டகல் என்பவன் பாகிஸ்தானிலிருந்து ஜிஹாதிகளை இந்தியாவில் இயக்கி வருகிறான் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன மற்றும் அதே அங்கத்தினர்கள் அவற்றில் உள்ளனர் என்றும் தெரிந்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. கள்ளநோட்டு விவகாரத்தில் வங்காளத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்ட யாஸின் பட்டகல் தான் இப்பொழுது இந்தியாவில் செயல்படுகிறான், அவனது உறவினன் ரியாஸ் பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறான். கல்காத்தாவில் கைது செய்யப்பட்டு, ஆலிப்பூர் ஜெயிலில் இருந்த இவன் வெளியே வந்து இப்பொழுது குண்டுகள் வைத்துக் கொலை செய்கிறான்[4]. ஆனால், இந்தியா ஒன்றும் செய்வதில்லை. அதாவது இப்பொழுதைய சோனியா ஆட்சியாளர்கள் “சட்டப்படி செய்கிறோம்” என்று பாட்டிப்பாடி காலந்தள்ளி வருகின்றனர்.

சைக்கிளில் வந்தவர்கள் – குண்டு வைத்தவர்களா?
கள்ளநோட்டு கும்பலும், ஜிஹாதிகளும், போலீசாரும்: ஜிஹாதி கள்ள நோட்டு கும்பல், இந்தியா முழுவதும் தாராளமாக செயல் பட்டு வருகிறது. பலமுறை இவர்கள் எல்லா மாநிலங்களிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அவர்களது பின்னணி, அவர்களது விவரங்கள் புகைப்படங்கள் முதலியன இந்தியா முழுவதுமாக காவல்துறை, பாதுபாப்புத் துறை முதலியோருக்குக் கிடைக்கும் வகையில் விநியோகப்படுவதில்லை. இதனால், ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு, மற்ர மாநிலங்க:உக்குச் சென்ரு விடுகின்றனர். அல்லது அண்டை நாடுகளான, நேபாளம், பங்களாதேசம், பாகிஸ்தான் என்று சுற்றி வருகின்றனர். துபாயில் ஜாலியாக அனுபவித்து விட்டு, இந்தியாவில் குரூரக் குற்றங்களை, கொலைகளை செய்து வருகின்றனர். இந்த கோணத்தில் தான் காஷ்மீர் விஷயமும் வருகின்றது. காஷ்மீரத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்த தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள் ஊடுறுவி வருகின்றன. அங்கு அவர்கள் “சுதந்திரப் போராளிகள்” என்று உலா வருகின்றனர்.

இஃதிய முஜாஹித்தீனின் ஈ-மெயில்
மாலைநேரத்தில், கோவிலுக்குப் பக்கத்தில் குண்டுகள் வெடிப்பது ஏன்?: பெர்ம்பாலான ஜிஹாதி வெடிகுண்டுகள் மாலை நேரத்தில் தான் கூட்டமுள்ல பொது இடங்களில் மற்றும் கோவிலுகுப் பக்கத்தில் வெடித்துள்ளன. குறிப்பாக தீபாவளி நேரத்தில். புமின இடமான வாரணாசி போன்ற இடத்டிலும் வெடித்துள்ளன. ஆகவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்திய முஜாஹித்தீனும் இதனை முன்னர் ஈ-மெயில்களில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளனர். ஹாவிஸ் சையதும் வெளிப்படையாகவே பேசிவருகிறான். பிறகு, ஏன் சோனியா அரசு மெத்தனம் காட்டுகிறது?

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், இந்தியா என்ன செடய்யும்?: நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்தாகி விட்டது[5]. இதை இந்தியா எதிர்த்தாலும், அமெரிக்கா கேட்பதாக இல்லை[6]. நேட்டோப் படை வெளியேற-வெளியேற[7] தாலிபான் மற்ற ஜிஹாதிகள் முழுவதுமாக சுதந்திரமாகி விடுவார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்[8]. குறிப்பாக இந்தியாவைத் தாக்குவோம் என்று அலையும் ஜிஹாதிகள் துணிச்சல் பெறுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலியவற்றை ஆட்டிப் படைப்பார்கள். பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவிற்குள் நுழையக் கூடும்[9]. ஆக வரும் ஆண்டுகளில் இத்தகைய குண்டு வெடிப்புகள் இன்னும் அதிகமாகும் என்று ராணுவ வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[10]. காஷ்மீரத்தில் இன்னும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் அதிகமாகும். அதனை ஊக்குவித்து, அந்த ஜிஹாதிகள் இந்தியாவிற்குள் வருவார்கள், குண்டுகளை வெடிப்பார்கள் அப்பொழுது அவர்களை எப்படி இந்தியா எதிர்கொள்ளும்? அவர்களை சமாளிக்க என்ன யுக்தியை, பலத்தை வைத்துக் கொண்டுள்ளது என்றெல்லாம் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இவர்களை பிடிக்க முடியாதா?
வேதபிரகாஷ்
23-02-2013
[1] Explaining why he didn’t reach Hyderabad soon after the blasts took place, Shinde said in the Rajya Sabha that it was for the security reasons that he decided not to leave immediately. “If VIPs go there (blast sites) then police have to concentrate on securing the VIPs which is not right. VIPs should not be visiting the spot of such incidents, police should be given freedom to carry out investigation and gather evidences,” he said.
[2] Initial forensic samples from blast sites indicate use of ammonium nitrate, urea and petrol. The investigators are probing three specific names as suspected by Hyderabad police. One suspect belongs to Uttar Pradesh, second from Bihar and third from Jharkhand. The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.
[3] The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.
[5] NATO’s plan is to shift full responsibility to Afghan forces for security across the country by the middle of next year and then withdraw most of the alliance’s 130,000 combat troops by the end of 2014, Rasmussen said.
[9] The security agencies fear that such forces may resurface and India may become one of their targets. Most of the forces operating from Nepal can go back to Afghanistan and unless the situation is kept under check with proper international and regional cooperation, the problem could become immense for India.
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அசாதுதீன், அசாதுதீன் ஒவைஸி, அபு சலீம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அமெரிக்க ஜிஹாத், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், ஆப்கானிஸ்தான், ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், ஆராய்ச்சி செய்யும் போலீஸார், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐதராபாத், ஒவைஸி, ஒஸாமா பின் லேடன், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கேரள ஜிஹாதிகள், கோவை, சிறுபான்மையினர், சிறையில் அடைப்பு, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டிடோனேடர், டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவுத் இப்ராஹிம், தாவூதின் காதலி, தாவூத் இப்ராஹிம், தில்ஷுக் நகர், தீவிரவாதிகளுக்கு பணம், துபாய், துப்பாக்கி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, தேசிய மனித உரிமைகள் ஆணையம், பட்கல், பட்டகல், பட்டக்கல், பலுச்சிஸ்தானம், பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, முஸ்லீம், மூளை சலவை, வங்காள தேசம், வயர் துண்டுகள், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஹர்கத்-உல்-முஜாஹித்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன், IED
Tags: அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோனியா, ஜிஹாதி, ஜிஹாத், தாலிபான், நேட்டோ, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
Comments: 8 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 22, 2013
ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!
நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன. இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.
உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.
இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார். அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.
ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!
மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.
ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.
இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.
http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இரட்டை வேடம், உருது மொழி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊரடங்கு உத்தரவு, ஐதராபாத், ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரஸ், குஜராத், குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கைது, கையெறி குண்டுகள், செக்யூலார் அரசாங்கம், ஜமாத்-உத்-தாவா, ஜஹல்லியா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டெட்டனேட்டர்கள், தக்காண முஜாஹித்தீன், தருமம், தர்மம், தில்ஷுக், தில்ஷுக் நகர், துப்பாக்கி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, நூருல் ஹூடா, பட்கல், பட்டகல், பட்டக்கல், பள்ளிவாசல், பழமைவாதம், பீரங்கி, புனிதப் போர், பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட், பேட்டரி கட்டைகள், மக்கா, மஜ்லிச்துல் முஸ்லிமீன், மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், யுத்ததருமம், யுத்ததர்மம், ரத்தம், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், வஞ்சகம், வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு
Tags: இந்திய முஜாஹித்தீன், இந்து, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், ஐதராபாத், ஒவைசி, ஒவைஸி, கத்தி, குண்டு, குண்டு வெடிப்பு, கேமரா, கொலை, கொலைவெறி, கோயில், கோவில், சய்பாபா, சாய், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், துப்பாக்கி, பட்கல், பட்டகல், பாபா, பீரங்கி, புனிதப்போர், மதம், மருந்து, முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம், ரத்தம், ரியாசுதீன், வெறி
Comments: 3 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 13, 2013
மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை
ஒமர் அப்துல்லாவின் அரசியல்: மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா எப்பொழுதும் அரசியல் செய்து, இந்தியாவை ஏமாற்றி பதவிக்கு வந்து, வாழ்க்கையை அனுபவித்து வரும் மறைமுக ஜிஹாதிகள். பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்[1]. உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு ஆகியவற்றின் உத்தரவின்படி நிறைவேற்றுப்பட்டுள்ள தண்டனைக்கு மாநில முதல்வர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதிலிருந்து, எப்படி இங்குள்ளவர்களும் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது. அதற்கேற்றாற்போல சென்னையிலேயே, தூக்கிலிட்டதை எதிர்த்து சுவரொட்டிகளும் காணப்படுகின்றன.

(இந்திய) விரோத மனப்பான்மை உருவாகும்: இது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: “நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், (இந்திய) விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களால் கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் சென்று விடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே நாம்தான் பாதிக்கப்படும் மக்கள் என்ற எண்ணமும், தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் காஷ்மீர் மக்களிடம் உருவாக அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இப்போது சில கருத்துகளைக் கூறுகிறேன்”, என்றார். இவர்கள் ஏதோ இந்தியாவிற்காக வேலை செய்வது போலவும், நல்லவர்கள் போலவும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

சாவிலும் பிழைப்பைத்தேடும் ஜிஹாதி மனப்பாங்குள்ளவர்கள்: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், “அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது’ என்றார். தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று உறுதிபடப் பேசிய ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். ஆனால், அரசாங்கத்தின் தரப்பில் உரிய முறைகளைப் பின்பற்றித்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற விஷயங்கள் தமிழக நாளிதழ்கள் வெளியிடவில்லை. ஜிஹாதிகளைப் பொறுத்த வரைக்கும் சாவு “ஷஹீதுத்துவம்” என்றுதான் ஏற்றுக் கொண்டு சாகின்றனர். மனிதகுண்டுகளே அவ்வாறுதான் உருவாகி வெடித்துக் கொண்டிருக்கின்றன.
“எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார் ஒமர்: ஜிஹாத் என்ற மதவெறியில் குண்டுகளை வெடித்து அப்பாவி மக்களை வயது கூட பார்க்காமல் குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று அனைவரையும் கை-கால்கள் சிதற, தலைகள் சிதற, ரத்தம் பீரீட்டு கொட்ட, சதைகள் சிதற குரூரக் கொலைப்பலிகள் செய்து வருவதை நினைந்து, உள்ளம் உருத்தத்தான் இப்படி கூறுகிறார் போலும் ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். அப்படியென்றால், யாருக்கு ரத்தவெறி இருக்கிறது?
காஷ்மீர் மக்களின் (முஸ்லீம்களின்) கருத்து: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலரில் அப்சல் குருவை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்து. இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது[2].
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்? இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் தனது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்து அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை விளக்குவது மிகவும் கடினம். ஒருமித்த அளவில் மக்களின் மனவோட்டத்தில் திருப்தி அடைவதன் மூலம் ஒருவரைத் தூக்கிலிட்டு விட முடியாது. சட்டப்படியும், நீதிப்படியும் அத்தண்டனை வழங்குவதற்கான காரணங்கள் அனைத்தும் வலுவாக இருக்க வேண்டும்.
நிறைவேற்றி இருக்கக் கூடாது: மரண தண்டனைக்காக காத்திருப்பவர்கள் குறித்தும், இதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் குறித்தும் வேறுவிதமான கேள்விகளை எழுப்ப நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் இருந்து மத்திய அரசு தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இது சட்டப்படியே எல்லாம் நடந்துள்ள என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் இருத்திருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கட்சியின் கருத்து என்றார். இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் விலகினால் அப்சல் குருவை மீண்டும் கொண்டு வர முடியும் என்றால் அரசில் இருந்து வெளியேறுவோம்’ என்று ஒமர் அப்துல்லா பதிலளித்தார். இவரும் இவரது உறவினரான மெஹ்பூபா முப்தியும் இப்படி மாறி-மாறி பேசியதும், எதிர்பார்த்தபடி, கலவரங்கள் ஆரம்பித்துள்ளன.
காஷ்மீரில் 2ஆவது நாளாக ஊரடங்கு: ஸ்ரீநகர், பிப். 10:÷நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு சனிக்கிழமை (09-02-2013) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீரில்[3] பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி காஷ்மீரில் பல இடங்களில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்தே அவர்களுக்கு முன்னமே விஷயம் தெரிந்துள்ளது என்றாகிறது. அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 36 போராட்டக்காரர்களுக்கும், 23 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புவதை கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து விட்டனர்.
மோதலில் ஒருவர் சாவு: 6 பேர் படுகாயம்: ஸ்ரீநகர், பிப். 10: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அதிகாரவட்டாரங்கள் தெரிவித்ததாவது: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் விரட்டியபோது தாரிக் அகமது பட் மற்றும் மேலும் 2 பேர் ஆற்றில் குதித்தனர். இதில் பட் உயிரிழந்தார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் இந்த தகவலை மறுத்தனர். படகில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் நீந்தி கரைசேர்ந்தார். மற்றொருவரை சிலர் காப்பாற்றினர். தாரிக் அகமது பட்டை காப்பாற்ற இயலவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அவரது சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை கலைந்துபோகச் செய்த பாதுகாப்புப் படையினருடன் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
வீட்டுக் காவலில் கிலானி?: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜாகீர் ஹுசேன் கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ்.ஏ.ஆர். கிலானியை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கிலானியை அதே ஆண்டு டிசம்பரில் தில்லி போலீஸார் கைது செய்தனர். எனினும், கிலானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்று 2003-ல் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் விசாரணைக்காக நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கிலானியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தில்லியில் வசித்து வரும் ஹுரியத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், பத்திரிகையாளர் இஃப்திகர் கிலானி ஆகியோரின் வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு[4]: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஒரு சில இடங்களில், நேற்று முன்தினம், வன்முறை ஏற்பட்டது. இதில், 23 போலீசார் உட்பட, 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில், நேற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது. பதற்றமான இடங்களில், போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். செய்தி சேனல்கள், மொபைல் போன், இணையதள சேவைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன; பத்திரிகைகளும், வெளிவரவில்லை. அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்[5].

இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி கைகோர்த்துக் கொண்டு போராட்டம்: இஸ்லாமாபாதில் இந்தியவிரோதி யாஸின் மாலிக் மற்றும் பயங்கரவாதி ஹாபிஸ் சையீது தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். மொஹம்மது அப்சலின் உடலை ஒப்புவிக்கும் படி ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி இருவரும் மேடையில் அருகருகில் உட்கார்ந்து கொண்டது, பேசிக்கொண்டது பற்றி செய்திகள் வந்துள்ளன[6]. இறுதிமரியாதை சடங்கும் நடத்தப் பட்டது. ஹாவித் சையதே செய்து வைப்பான் என்று அறிவிக்கப்பட்டாலும், ஜமத்-இ-இஸ்லாமி தலைவர் செய்து வைத்தார்[7].

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான். கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[8]. இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.
மனைவியுடன் இருக்க வருடா-வருடம் பாஸ்போர்ட் கொடுக்கும் சோனியா அரசு[9]: யாஸின் மாலிக்கின் மனைவி பாகிஸ்தானில் இருக்கிறாள். இவளுடன் சேர்ந்து இருக்க வருடா-வருடம் சோனியா அரசு பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுத்து வருகிறது. இவனோ மனைவியுடனும் இருந்து, ஜிஹாதிகளுடனும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அம்மா சொன்னால் அப்படியே தலையாட்டி வருகிறார்கள், காலில் விழவும் தயாராக இருக்கிறர்கள். அம்மையார் தலைவி என்றால்தான், அவர்களுக்கு பதவி, பட்டம், சொத்து, பணம் எல்லாம். ஆகவே, இத்தகைய அடிமை வாழ்வு தொடர்ந்தே வருகிறது. இடைக்காலத்தில் இதைப் போன்ற இந்திடயர்கள் முஸ்லீகம்களுடன் துணைபோனதால் தான் முஹம்மது கோரி, முஹம்மது கஜினி, மாலிக்காபூர், பாபர், ஹுமாயூன் முதலியோர் இந்துக்களைக் கொன்று, சூறையாடினார்கள். இப்பொழுது இப்படி கூட்டணியில் குண்டு போட்டு கொன்று வருகிறார்கள், ஊழலில் கோடிகளை கொள்ளையடித்து வருகிறார்கள் இதுதான் வித்தியாசம்!

ஊடகங்களின் விஷமத்தனம்: இந்திய அரசு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதைப் பொறுத்த வரைக்கும் உள்ள முறையை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டினாலும், ஏதோ அரசு அவசரப்பட்டுவிட்டது, குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப் படவில்லை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் கதைகளை அவிஅத்துவிட ஆரம்பித்துள்ளனர். ஜிஹாதி-பயங்கரவாதிகளால், ஜிஹாதி-தீவிரவாதிகளால் மக்கள் கொள்ளப்பட்டபோது, இவர்கள் இவ்வாறு பேசவில்லையே, ஏன்? அப்படியென்றால் அவர்களுக்கு குடும்பங்கள், உரிமைகள் இல்லையா? இல்லை, அவர்கள் இவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் அல்லது வேற்றுமையானவர்கள்? இப்படி கேள்விகள் கேட்டால், விடை என்னவென்று மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அகவே, ஊடகங்களின் விஷமத்தனம் நன்றாகவே தெரிகிறது. அதனால்தான், ஒரு ஊடகம் இப்படி – இந்தியர்களில் சிலர் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், சிலர் கொண்டாடுகிறார்கள் என்று போலித்தனமான-விஷமத்தனமான படத்தை வெளியிட்டுள்ளார்கள்[10]. சிறுவனை உயிர்தியாகியாக்கிய இந்திய ராணுவம் என்று பாகிஸ்தான் நாளிதழ்[11] கூறுகிறது!
பாகிஸ்தானின் விரோதத்தனம்: நட்பு என்று சொல்லிக் கொண்டு, தலைகளைத் துண்டாடி, துரோகச் செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய பாகிஸ்தான், கேடு கெட்ட செக்யூலார் இந்தியாவை இந்த சமயத்திலும் நன்றாகவே சாடியுள்ளது[12]. இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கிறது[13]. அதை வெட்கம்-மானம்-சூடு-சொரணை இல்லாத உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
வேதபிரகாஷ்
11-02-2013
[2] இதற்கேற்றார்போல, அருந்ததிராய் போன்ற கூட்டத்தார் பேசி வருகிறார்கள்.
Sujato Bhadra, a Kolkata-based member of the Association for Protection of Democratic Rights, said that the higher courts had not addressed Guru’s claims that his trial had been faulty. “The government carried out the execution without allowing him to exhaust a judicial recourse after the president rejected his mercy petition,” Bhadra said.”This is a blatant miscarriage of justice.”
[7] Though JuD activists had claimed that Mr. Saeed would lead the ‘ghayabana namaz-e-janaza’ (funeral prayers in absentia) for Afzal at the protest site, the prayers were led by a Jamat-e-Islami leader.
பிரிவுகள்: 786, ஃபத்வா, ஃபிதாயீன், அசிங்கப்படுத்திய முகமதியர், அபு சலீம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அப்துல் கனில் லோன், அப்துல் கய்யூம் சேய்க், அல்லா, அல்லா பெயர், அழுக்கு, அவமதிக்கும் இஸ்லாம், அஸ்ஸாம், ஆண்டவனின் எச்சரிக்கை, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இமாம்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊடக வித்தைகள், ஊரடங்கு உத்தரவு, எரிப்பு, எல்லை, ஔரங்கசீப், கட்டுக்கதை, கர்பலா, கற்களை வீசி தாக்குவது, கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வத், கல்வீச்சு, கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காந்தஹார், காந்தாரம், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கூட்டணி, சஜ்ஜத் லோன், சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமிலாபாத், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதிகளுக்கு பணம், துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தொழுகை, பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், மனித வெடிகுண்டு, முகமது அலி ஜின்னா, முகமது நபி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் லீக், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், முஹம்மது, மெஹ்பூபா முஃதி, மெஹ்பூபா முஃப்தி, லஸ்கர்-இ-தொய்பா, லாஹூர், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஹர்கத்-உல்-முஜாஹித்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன்
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்தியா, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், காஷ்மீர், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சையது, ஜிலானி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தியாகி, தீவிரவாதம், துரோகம், துரோகம் ஜின்னா, பயங்கரவாதம், பயங்கரவாதிகள், பாகிஸ்தான், மாலிக், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், லவ் ஜிஹாத், வஞ்சம், ஹாவிஸ், ஹாவிஸ் சையீத்
Comments: 9 பின்னூட்டங்கள்
நவம்பர் 24, 2012
கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள் – இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்
ஜிஹாத் தவறு என்றல் இனி ஜிஹாத நடத்துவது கூடாது: “அல்லாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன், என்னை மன்னியும். இனிமேல் இரண்டாவது தடவையாக இத்தகைய தவறு நடக்காது” (“Allah kasam, maaf kar do. Chhod do, aisi galti dobara nahin hogi.”) என்று முணுமுணுத்தாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[1]. அதாவது அல்லாவின் பெயரால் ஜிஹாத் என்று “புனிதப் போரை” நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் – பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று கொன்று குவித்துவிட்டு, “இனிமேல் இரண்டாவது தடவையாக இத்தகைய தவறு நடக்காது”, என்று பாவ மன்னிப்புப் போல கேட்டு முறையிட்டால் அல்லா மன்னிப்பாரா அல்லது இறந்த உயிர்கள் திரும்பக் கிடைக்குமா? அப்படியென்றால், இப்படிப்பட்ட தீவிரவாதச் செயல்கள் தவறு என்றாகிறது. எனவே பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள் மற்றவர்களுக்கு இந்த உண்மையைச் சொல்லி அவர்களைத் திருத்த வேண்டும். அல்லாவின் பெயரால் தவறுகள் – இத்தகைய குரூரக் கொலைகள் நடப்பது ஏன்? இனிமேலாவது, தாலிபான், ஹிஜ்பு முஜாஹித்தீன், அல்லா புலிகள், என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொண்டு, குண்டுகள் வெடித்து அப்பாவி மக்களைக் கொல்வதை நிருத்துவார்களா?
ஜிஹாத் பெயரில் முஸ்லீம்கள் தீவிரவாதச் செயல்களை நடத்துவதை நிறுத்தி விட வேண்டும்: ஜிஹாத் என்பது முஹம்மது நபி காலத்தில் நடத்தப் பட்டது. அப்பொழுது அவருக்கு எதிராக செயல்பட்டவட்கள் தாம் காபிர்கள். எனவே இப்பொழுது அவர் பெயரால் அல்லது இஸ்லாம் / அல்லா பெயரால் ஜிஹாத் என்ற பெயரில் தீவிரவாதத்தை நடத்துவது தவறு என்றாகிறது. உலகத்தில் முஸ்லீம் அல்லதவர்கள் எல்லோரும் அப்படி காபிர்கள் என்றாகி வுடமாட்டார்கள். அல்லா மன்னிக்கமாட்டார் என்றால், இனி இக்காலத்தில் ஜிஹாத் பெயரில் தீவிரவாதத்தை நடத்துவது நிறுத்தப்படவேண்டும். அப்பொழுது, உலகத்தில் உண்மையிலேயே அமைதி நிலவும். பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள், முல்லாக்கள், இஸ்லாமிய மதத்தலைவர்கள் அமைதியான இஸ்லாமை கடைபிடிக்க அறிவுரை சொல்லவேண்டும்.
கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள் – இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்: தீவிரவாதத்தை ஒடுக்குவோம் என்ற அமெரிக்கா, பாகிஸ்தான் ஒத்துழைப்புடன், பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்த ஒசாமா இன் லேடனை ரகசியமான முறையில், படை பலத்துடன் சென்று பிடித்தது, கொன்றது, ரகசியமாகவே எங்கோ அவனது உடலை புதைத்தது என்று தான் செய்திகள் வந்தன, வீடியோக்கள் காட்டப்பட்டன. ஆனால், இந்தியாவில், கசாப்பின் தூக்குத் தண்டனை, ஜனநாயக ரீதியில், வெளிப்படையாக நடத்தப் பட்டு, அவனுக்கு எல்லா வசதிகள் (கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு), உரிமைகள் முதலியவை கொடுக்கப்பட்டு (சட்டப்படி வக்கீல், மேல் முறையீடு முதலியவை), தூக்குத் தண்டனை வேண்டுமா-கூடாதா என்று ஊடகங்களில் விவாதம் செய்யப்பட்டு, ……………………கடைசியாக கொடுக்கப்பட்டது (இப்பொழ்ய்து கூட “தி ஹிந்து” வழக்கம் போல மாற்றுக் கருத்துக் கொண்ட கட்டுரை வெளியிட்டுள்ளது[2]). அதற்கு முன்னர் கூட, பாகிஸ்தானிற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், எங்கே உலகத்தில் எல்லா உண்மைகளும் தெரிந்து விடுமோ என்று அவனது உடலைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இவ்விஷயத்தில் நிச்சயமாக, அமைதியை, சாந்தத்தை விரும்ம்பும் இந்தியா தனித்து நிற்கிறது. இதனை பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வேதபிரகாஷ்
© 22-11-2012
[2] சயீது ஷா, ஜிஹாத் பூமியின் மத்தியில் ஒரு பெயரித் தேடி அலைந்தது, http://www.thehindu.com/opinion/op-ed/chasing-a-name-in-jihadi-heartland/article4120446.ece; அதாவது இத்தகைய கருத்து சுதந்திரம் இந்தியாவில் தான் கொடுக்கப் படும், வேறெந்த நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக முஸ்லீம் / இஸ்லாமிய நாட்டில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
N. Venkatesan, Keeping the nation in dark, http://www.thehindu.com/opinion/lead/keeping-the-nation-in-the-dark/article4120378.ece
Editorial, The hangman’s justice, http://www.thehindu.com/opinion/editorial/the-hangmans-justice/article4120370.ece
Amruta Bayntal and Soumojit Banerjee, Kasab hangs, justice for 26/11 still elusive, http://www.thehindu.com/news/states/other-states/kasab-hangs-justice-for-2611-still-elusive/article4118491.ece
பிரிவுகள்: அச்சம், அடிமை, அபு சலீம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அமெரிக்க ஜிஹாதி, அமைதி என்றால் இஸ்லாமா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்ஜமீன், அல்லா, அல்லா பெயர், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, கசாப், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காஷ்மீர், குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமிலாபாத், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவுத் இப்ராஹிம், தியாகப் பலி, துப்பாக்கி, தேச கொடி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தொழுகை, பள்ளி வாசல், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், vaginoplasty, X மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம்
Tags: ஃபத்வா, அஜ்மல், அமெரிக்கா, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஒசாமா, கசாப், கயிறு, காஷ்மீரம், குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தூக்கு, பாகிஸ்தான், புனிதப்போர், மன்னிப்பு, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், மொஹம்மது
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 15, 2012
இந்திய சுதந்திரப் போரில் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்தை சூரையாடிய
வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

முஸ்லீம் இளைஞர்கள் வெறியுடன் அமர்ஜோதி ஜவான் நினைவகத்தை சேதப்படுத்தியது: மும்பையில் நடந்த கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்கள் சிறிதும் உண்மையினை உணராமல், இந்நாட்டின் தியாகிகளின் மகத்துவத்தை நினையாமல், வெறியுடன், வெறுப்புடன், காழ்ப்புடன் அமர் ஜோதி ஜவான் நினைவகத்தை கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்து சேதப்படுத்தினர்[1]. உடையாத “பைபர் கிளாஸ்” கண்ணடி பெட்டியையும் உடைத்து சூரையாடியுள்ளனர்[2]. அது மட்டுமல்லாது, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைகவசம் மற்றும் துப்பாக்கி முதலியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்[3]. மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இன்றைக்குள் அதனை சீர் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள், ஆனால் முடியவில்லை[4].

அத்தகைய வெறிக்குக் காரணம் என்ன – யார் அப்படி அவர்களை வெறி கொள்ள செய்தனர்?: அடுல் காம்ப்ளே என்ற “மிட்-டே” என்ற நாளிதழைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் எடுத்த புகைப்படங்களில், அந்த வெறிகொண்ட முஸ்லீம் இளைஞர்கள் பதிவாகியுள்ளார்கள். அவர்கள் செயல்படும் விதத்திலிருந்தே, அவர்கள் எந்த அளவிற்கு வெறிகொண்டுள்ளார்கள் என்பதனையறியலாம். அஜ்மல் கசாப் போன்று ஆக்ரோஷமாக உள்ளான் என்று பார்த்தவர்களே கூறுகிறார்கள்[5]. அந்த அளவிற்கு முஸ்லீம் இளைஞர்களை வெறிகொள்ளச் செய்வது யார்? நாட்டின் மேன்மையை, வீரர்கள் சுதந்திரத்திற்காகத் தியாகம் புரிந்தத்தையும் அறியாமல் அப்படி கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்துள்ளார்கள் என்றால் அந்நிலை மாறவேண்டும். அவர்கள் திருந்த வேண்டும், தம்முடைய நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும்.

அமர்ஜோதி ஜவான் நினைவகம் உருவாகிய வரலாறு: அமர் ஜோதி ஜவான் மெமோரியல் – அமர் ஜோதி ஜவான் நினைவகம் ட்ரில் ஹவல்தார் சய்யது ஹுஸைன் (Drill Havaldar Sayyed Hussein) மற்றும் சிப்பாய் மங்கள் சாதியா (Sepoy Mangal Cadiya) என்ற இரு இந்திய வீரர்களின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்டதாகும். இவ்விரு வீரர்களும் ஆங்லிலேயரை எதிர்த்து போராடி, 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டவர்கள். 150 ஆண்டு நினைவு விழாவின் போது, 2009ல் ஆஜாத் மைதானத்தில் நிறுவப்பட்டது. அக்டோபர் 15, 1857 – தீபாவளி நாளன்று சார்லஸ் போர்ஜெட் (Charles Forjett, the then Superintendent of Police, Bombay Region) எனேஅ அப்பொழுதய கிழக்கிந்திய கம்பெனியின் போலீஸ் சூப்பிரென்டென்டின் உத்தரவு படி, கிரெக்கெட் கிளப் அருகில் உள்ள மைதானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனால்தான், அந்த இடம் “ஆஜாத் மைதான்” சுதந்திர மைதானம் என்று அழைக்கப்பட்டது. ரவீந்தர வைகர் (Ravindra Waikar) என்பவர்தாம், அந்த நினைவிடம் அமைக்கக் காரணமாக இருந்தவர். அப்பொழுதைய கமிட்டியின் தலைவராக இருந்து, நினைவகத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அந்நினைவிடம் சேதப்படுத்தப் பட்டதைக் குறித்து, அவர் மிகவும் வருத்தமடைந்தார். “அச்செயல் மிகவும் அசிங்கமானது, வெட்கப்படவேண்டியது, கண்டிக்க வேண்டியது”, என்று தனது கருத்தை வெளியிட்டார்.

சேதப் படுத்தியவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரம்:
Mumbai Crime Branch and local police are racing against each other to nab these hoodlums, knowing whoever makes these crucial arrests will reap rich professional rewards.“Of all the miscreants, these men are the most wanted. They have hurt the sentiments of the entire nation. They must be arrested on priority,” said a senior Crime Branch official, on condition of anonymity.
An officer from Azad Maidan police station said, “In such a scenario, it is better if these men surrender before the police reach them. By giving themselves up, they would be able to avoid the wrath of the police as well as the public.”
“These photographs have been circulated among our informers. We are in constant touch with them for leads. Every policeman is on the lookout for them at present. If we manage to arrest them before Independence Day, it will be our tribute to the freedom fighters,” he added.
The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.
Confirming the report, joint commissioner of police (crime) Himanshu Roy said, “This man (top-right) has insulted the national monument of India, and arresting him is our priority. Several Muslim leaders have also condemned the act.”
மும்பை கலவரக்காரர்களிலேயே, இவ்விருவரும் தான் இந்த நாட்டின் மதிப்பையே அவமதித்துள்ளார்கள்.அவர்களை கைது செய்ய வேண்டியதுதான் எங்களது தலையாயக் கடமையாக உள்ளது, என்று மும்பை போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு போலீஸாரிடமும் இப்படங்கள் உள்ளதால், அவர்கள் பிடிபட்டு விடுவார்கள் என்று நம்புகிறோம்.
மேலும் அவர்களாகவே வந்து சரண்டர் ஆகிவிட்டாலும் நல்லதுதான்.
சுதந்திரத்தினத்கிற்கு முன்பாகவாது, அவனைப் பிடித்துவிட வேண்டும். அப்படி செய்தால், அது அந்த தியாக-வீரர்களுக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாக இருக்கும்.
இப்படங்களைப் பார்த்தவர்களும் கொதித்துப் போயுள்ளார்கள். அக்மல் கசாப்புடன் ஒப்பிட்டி, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.


இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே போரிட்டது: இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே சத்தியாகிரகம், அஹிம்சை முறைகளில் போரிட்டார்கள். ஜின்னா போன்றவர்கள், பாகிஸ்தான் கேட்கும் வரை அவர்கள் ஒற்றுமையாகத்தான் செயல்பட்டார்கள். அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக நினைவு சின்னங்களை, இப்படி வன்முறை, வெறி, காழ்ப்பு போன்ற உணர்வுகளுடன் சூரையாடுவதே அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக – முறைகளை நிந்திப்பதாகும், அவமதிப்பதாகும், தேசவிரோதமாகும். ஆகவே, இக்கால இந்திய முஸ்லீம்கள் தங்களது பிள்ளைகளுக்கு உண்மையான சுதந்திர உணர்வுகளை ஊட்டி வளர்க்க வேண்டும். அதைவிடுத்து, “நாங்கள் முஸ்லீம்கள், நாங்கள் இந்தியர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், நாங்கள் பாகிஸ்தானிற்காகத்தான் ………………………………….., பாகிஸ்தான் கொடிகளை ஏந்திக் கொண்டு இந்தியாவிலேயே போராடுவோம்……………………………………………..”, என்று வளர்த்து வந்தால், இத்தகைய வெறிதான் வரும், வளரும், பாதிக்கும்.
வேதபிரகாஷ்
15-08-2012
பிரிவுகள்: அழுக்கு, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இஸ்லாம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, எரிப்பு, ஓட்டு, ஓட்டுவங்கி, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கார்டூன், காஷ்மீர், கிலாபத், குஜராத், சிறுபான்மையினர், சுன்னி-ஷியா, ஜமாத், ஜிஹாத், துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தேச கொடி, தேச விரோதம், தேசியக் கொடி, தேர்தல், நெருப்பு, மதகலவரம், மதவாதம், மதவெறி, மறைப்பு, மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம்கள், முஸ்லீம்தனம், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, ஷியா-சுன்னி
Tags: ஃபத்வா, அமர் ஜோதி, அமர் ஜோதி ஜவான், அவமதிக்கும் இஸ்லாம், ஆஜாத் மைதான், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், சிப்பாய் கலகம், சிறுபான்மையினர், சுதந்திரம், ஜவான், தியாகி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், மும்பை, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம்கள், வெறி
Comments: 3 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 12, 2012
மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

நேரு நகரிலிருந்து வந்த கும்பல்[1]: ஒரு குறிப்பிட்ட கூட்டம் நேர் நகரிலிருந்து[2] வந்தது. ஆனால் அது மைதானத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏனெனில், 15,000 பேர் தான் கலந்து கொள்வார்கள் என்று ராஸா அகடெமி சொல்லி அனுமதி வாங்கியிருந்தது. ஆனால், 40,000ற்கும் மேலாக கூட்டம் வந்துள்ளது. அதெப்படி என்று கேட்டால் எங்களுக்கே தெரியாது என்கிறார்கள். ஆகவே, அந்த நேரு நகர் கும்பல் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடிந்தது. அப்போழுது தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்று குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்ட பிறகு விவரங்களை வெளியிட்டனர். அந்த நேரு நகர் கும்பல் எப்படி, யாரால் ஏன் அழைத்துவரப் பட்டது?

அமைப்பாளர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்தது ஏன்?: ராஸா அகடெமி முஸ்லீம் கலாச்சாரம் முதலிவற்றை ஊக்குவிக்கிறது என்றுள்ளது. அந்நிலையில் ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால் மும்பையில் ஆஜாத் மைதானத்தில் ஆர்பாட்டத்தை ஏன் நடத்த முடிவு செய்தது என்று தெரியவில்லை. இப்படி ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்படுவர்[3] என்றிருந்தால், அமைதியாக நடத்தமுடியாது என்று தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் அல்லது அதிகக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டாம். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன. அவர்களைச் சேர்ந்தவர்களும் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

கலவரத்தைத் தூண்டிய காரணங்கள் என்ன?: மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்[4]. முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தவர்கள், பிறகு உணர்ச்சிப் போங்க, தூண்டும் விதத்தில் பேச ஆரம்பித்தனர். இந்தியாவில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அரசு அதார்குத் துணை போகிறது என்று ஆரம்பித்தனர்.
- காங்கிரஸுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் முஸ்லீம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.
- குறிப்பாக அசாம் மற்றும் பர்மா முஸ்லீம்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்தி முதலியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- பர்மாவிலிருந்து வந்த ஒரு தம்பதியர், தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
- அவர்கள் தமது கைகளில் பிடித்திருந்த பதாகைகளில் எங்களைக் கொல்லவேண்டாம் என்ற வாசகங்கள் இருந்தன.
- அதனை காட்டியபோது, கூச்சல் கோஷம் கிளம்பியது.

பிரார்த்தனையை முடித்துக் கொள்ளச் சொன்ன மர்மம் என்ன?: அதுமட்டுமல்லாது, மேடையில் பேச அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. சிலரை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இந்த பிரச்சினை என்ன, முஸ்லீம்களுக்குள் வெஏர்பாடு என்ன, ஏனிப்படி வெளிப்படையாக மோதிக் கொண்டஸ்ரீகள் என்ற விவரங்கள் தெரியவில்லை. மேடையிலேயே இத்தகைய ரகளை ஏற்பட்டு, கூச்சல்-குழப்பங்களில் நிலவரம் இருந்ததால், மௌலானா பொயின் அஸ்ரப் காதரி ஆரம்பித்த பிரார்த்தனையை முடித்துக் கொள்ள அமைப்பாளர்கள் சொல்லவேண்டியதாயிற்று[5]. உண்மையான முஸ்லீம்கள் இப்படி நடந்து கொள்வார்களா, பிரார்த்தனைக்குக் கூட இடைஞ்சல் செய்வார்களா அல்லது பாதியிலேயே முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அவர்களுக்கு கலவரம் நடக்கும் என்று தெரியும் போலிருக்கிறது!

சோனியா மெய்னோ எதிர்ப்பு ஏன்?: இந்தியாவில் சோனியா மெய்னோ அரசு முஸ்லீம்களுக்கு தாராளமாகவே சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது[6]. அசாமிலேயே கோடிகளைக் கொட்டியுள்ளது. அந்நிலையில் காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக ஏன் கோஷம் என்று தெரியவில்லை. ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர். அடிபட்ட-காயமடைந்த 54 பேர்களில் 45 பேர் போலீஸ்காரர்கள் எனும்போது, அவர்கள் குறிப்பாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதேபோல ஊடகக்காரர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் மற்றும் கேமராமேன் தாக்கப்பட்டு, அவர்களின் கேமரா-வீடியோக்கள் உடைக்கப் பட்டுள்ளன[7]. “தி ஹிந்து” பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படாத ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?: ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[8]. மூன்று மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[9]. மும்பை நகரத்தில் பிரதானமான ஒரு இடத்தில் இப்படி, திடீரென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளது, போலீஸாருக்கே பிரமிப்பாக இருக்கிறது.

போலீஸார் மீது தாக்குதல் ஏன்?: கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது முதலில் அதிகமாக வந்த கூட்டத்தை சமாதனப்படுத்திக் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பிறகு உள்ளே நுழைய முடியாமல் மற்றும் உள்ளேயிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்களை முறைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று கற்கள் அவர்கள் மீது வீசப்பட்டன. அதுமட்டுமல்லாது, சிலர் நேரிடையாகவே வந்து போலீஸார் மீது கற்களை சரமாரியாக வீசித் தாக்கினர். அதற்குள் தேவையில்லாமல், ஒரு வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்குப் பிறகே ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர்[10]. முதலில் (நேற்று சனிக்கிழமை 11-08-2012) அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்பட்டது. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[11]. அவர்கள் முஹம்மது உமர் (பந்த்ரா) மற்றும் அட்லப் சேக் (குர்லா) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். (Two persons, 22-year-old Mohammad Umar and 18-year-old Altaf Sheikh (one from Bandra and the other from Kurla), died ). 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[12]. இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[13]. அதாவது தங்கள் சமூகத்தினரையே கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது தெரிந்தோ தெரியாமலோ அத்தகைய கலவரம் ஏற்பட துணைபோயிருக்கிறார்கள்.

ஊடகக்காரர்கள் தாக்கப் பட்டதேன்?: பத்திரிக்கை-செய்தியாளர்கள் மற்றும் டிவி-செனல் ஊடகக்காரகள் நின்று கொண்டு செய்திகளை சேகரித்து மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர் அவர்களைப் பார்த்து கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். லண்டனுக்குச் சென்று ஒலிம்பிக்ஸ் செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், அமெரிக்காவிற்கு சென்று சீக்கியர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், என்று நக்கலாக பேசி, அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரி என்று கோஷமிட்டுள்ளனர். பெயர் சொல்ல மறுத்த எதிர்ப்பாளர் “நாங்கள் ஏதாவது (தமாஷா) செய்ய வந்து விட்டால் அதை (தமாஷாக) போடுவீர்கள் போல”, என்று நக்கலடித்தார்[14]. அதுமட்டுமல்லாமல், “அவர்களை வெளியே அனுப்பு” என்றும் கோஷமிட்டுள்ளனர். இதனால், ஊடகக்காரர்கள் வெளியேற ஆரம்பித்தனர்.

“தி ஹிந்து” கரிசனம் மிக்க செய்திகள்: “தி ஹிந்து” இதைப் பற்றி விசேஷமாக செய்திகளைக் கொடுத்துள்ளது[15]. அது ஏற்கெனெவே முஸ்லீம்களை (பங்களாதேச ஊடுவல்) ஆதரித்து பல செய்த்களை வெளியிட்டுள்ளது[16]. “தி ஹிந்து” கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், இந்திய சட்டங்களை திரித்து, வளைத்து, எப்படி “கருத்துவாக்கம்” என்ற பிரச்சார ரீதியில், பொய்களை உண்மையாக்கப் பார்க்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, பங்ளாதேச முஸ்லீம்களால் இந்தியர்கள் எப்படி எல்லாவிதங்களிலும் பாதிக்கப்படுகிறர்கள் என்பதை மறைத்து, அந்நியர்களுக்காக வக்காலத்து வாங்கும் முறையில் அவை இருக்கின்றன. மதவாதத்தை வளர்த்துவிட்டு, இப்பொழுது மனிதத்தன்மையுடன் இப்பிரச்சினையை அணுகவேண்டும் என்று ஒரு கட்டுரை[17]. மனிதத்தன்மையிருந்திருந்தால் முஸ்லீம்கள் அவ்வாறு ஊடுருவி வந்திருப்பார்களா? இந்தியர்களை பாதித்திருப்பார்களா? இந்துக்களைக் கொன்றிருப்பார்களா? அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்களா? போடோ இந்தியர்கள் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டால் போல ஒரு கட்டுரை[18]. போடோ கவுன்சிலை கலைத்துவிட வேண்டும் என்று சூசகமாகத் தெரிவிக்கும் ஒரு கட்டுரை[19]. மதரீதியில் முஸ்லீம்களை ஊடுருவ வைத்து விட்டு, மதரீதியில் பிரிக்க முடியாது என்று அரசே உச்சநீதி மன்றத்தில் தாக்குதல் செய்கிறது[20]. பாகிஸ்தான் ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன[21]. பிரஷாந்த் சவந்த் என்ற ஊடகக்காரரை மிரட்டியதுடன் அவருடைய கேமராவை உடைத்துள்ளனர். பிரஸ் கிளப் கட்டிடத்திற்குள் சென்று வெளிவந்தபோது, “அவனையும் சேர்ந்து எரிடா” என்று கும்பல் கூச்சலிட்டது[22].

முஸ்லீம்கள் கலவரங்களை ஒரு பேரத்திற்காக உபயோகப்படுத்துகிறார்களா?: முஸ்லீம் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் என்று பலர், முஸ்லீம்கள் ஏன் கலவரங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்து நிறையவே எழுதியுள்ளனர். ரபிக் ஜக்காரியா, அஸ்கர் அலி இஞ்சினியர், இம்தியாஸ் அஹமத், அப்த் அல்லா அஹம்த் நயீம்[23], இக்பால் அஹ்மத் என்று பலர் முஸ்லீம் மனங்களை ஆழ்ந்து நோக்கி, எப்படி “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது”, “முஸ்லீம்கள் ஆபத்தில் உள்ளனர்”, “அல்லாவின் பெயரால்……..” என்றெல்லாம் கூக்குரலிடும் போது, பொது கூட்டங்கள், ஊர்வலங்கள்-போராட்டங்கள் நடத்தும்போது, அமைதியான முஸ்லீம்கள் உந்துதல்களுக்குட்பட்டு, தூண்டப்பட்டு “அல்லாஹு அக்பர்” கோஷமிட்டு, கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றனர். இங்கும் அதேமாதிரியான முறை கையாளப்பட்டுள்ளது. ஒவைஸி அசாமிற்குச் சென்று, முஸ்லீம்களை மட்டும் கவனித்து, நிவாரணப்பணி என்ற போர்வையில் பொருட்களைக் கொடுத்து வருகிறார். பாராளுமன்றத்தில் 08-08-2012 அன்று ஆவேசமாகப் பேசுகிறார்[24].
ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[25], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்! |
உடனே கூட்டம் கூட்டப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு, 11-08-2012 கலவரம் நடக்கிறது. காங்கிரஸ் / காங்கிரஸ்காரர்கள் / சோனியா இந்த அளவிற்கு ஒத்துப் போகும்போதே, அவர்களை எதிர்த்து கோஷம் போடுகிறார்கள், கலவரம் நடத்துகிறார்கள் என்றால், இதற்கும் மேலாக, அவர்களுக்கு என்ன வேண்டும்?
[நேற்றையக் கட்டுரையின்[26] தொடர்ச்சி, விரிவாக்கம்]
© வேதபிரகாஷ்
12-08-2012
[2] Nehru Nagar, originally an area cordoned off for leprosy sufferers, is the only slum area in Vile Parle, Mumbai – a suburb near to the airport and train station. Now, eying on property appreciation, the builders have been constructing multi-storeyed flats offering to the slum dwellers. Thus, slum-dwellers becoming flat-owners, but creating new slums – a cycle that is perpetrated by the vested interested people. The builders, promoters and corporators have always been colluding with each other encouraging communal politics.
[4] At the protest meet, there was enough to raise passions. Many speakers spoke of teaching the Congress a lesson for not doing enough to save Muslims in Assam as others slammed prime minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi. A couple of men from Burmacarried small kids on their shoulders who held placards that said ‘Don’t kill us’.
[6] இதை பி.ஜே.பி போன்ற கட்சிகள் மட்டுமல்லாது, உள்ளூர் அசாம் கட்சிகளே எடுத்துக் காட்டியுள்ளன. உண்மையில், நிவாரண கூடாரங்களில் உள்ளவர்களை பாகுபடுத்திப் பார்த்து, உதவி செய்து வருவதே மதரீதியிலான சண்டை வர காரணமாகிறது. முஸ்லீம்கள் தெரிந்தும், போட்டிப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி வருகிறார்கள். போடோ இனத்த்வர் என்று பேசும்போது, அதில் கூட முஸ்லீம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரிந்து தனிக் கட்சி / இயக்கம் ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவ் வந்துள்ள முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு, அதேபோல தனி மாகாணத்தைக் கேட்டு வருகிறார்கள். இங்குதான், பிரிவினைப் பிரச்சினை முஸ்லீம் என்ற ரீதியில் வருகிறது. மேலும் இவர்களுக்குத்தான் பாகிஸ்தான் உதவி வருகிறது.
[14] “Only when we do some tamasha [spectacle] do the media land up to cover,” said a protester who refused to give his name.
[22] Prashant Sawant, photographer with the daily Sakaal Times was on the fateful assignment.
“I, along with fellow photographers, started to shoot when the rally started. But we sensed something was wrong when a couple of persons remarked that the press was not supporting them,” Mr. Sawant told The Hindu. “We left the rally and went to the terrace of the Mumbai Marathi Patrakar Sangh adjoining the Maidan. However, some saw us and started throwing stones. We then went to the Press Club and came out again when the arson started. It was then that the mob started to assault me. They showered me with blows. My camera was broken. They were shouting ‘Isko bhi jala dalo’ [Set him on fire too]. I sustained injuries on the head, neck and face. The doctors have told me to do an MRI scan,” he said. “Provocative speeches against the media started from the stage itself,” said Ameya Kherade, another photographer. “The crowd was shouting ‘Media ko bhaga do’ [Chase away the media],” he added.
http://www.thehindu.com/news/national/article3754980.ece
பிரிவுகள்: ஃபத்வா, அசாம், அச்சம், அடி உதை, அடிப்படைவாதம், அடையாளம், அத்வானி, அரசாங்கத்தை மிரட்டல், அரசியல் விபச்சாரம், அரசு நிதி, அலி, அல்லா, அழுக்கு, இட ஒதுக்கீடு, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்துக்கள், இமாம், இஸ்லாம், உருது மொழி, உள்ளே நுழைவது, ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கிழக்கு பாகிஸ்தான், குரூரம், குல்லா, கூட்டணி, சரீயத், சரீயத் சட்டம், சிட்டகாங், சுன்னி, சுன்னி சட்ட போர்ட், சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, செக்யூலார் அரசாங்கம், ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தடியடி, தடை, துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தூண்டு, தேச கொடி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், பிஜேபி, மதவாதம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் லீக், முஸ்லீம்தனம், முஹம்மது, வங்காள தேசம், வங்காள மொழி, ஷியா, SMS
Tags: ஃபத்வா, அசாம், அடிதடி, அவமதிக்கும் இஸ்லாம், ஆஜாத் மைதானம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலவரம், காஷ்மீரம், கௌஹாத்தி, சிறுபான்மையினர், சுன்னி, செக்யூலரிஸம், ஜிஹாத், தள்ளுமுள்ளு, பர்மா, பாகிஸ்தான், பிரார்த்தனை, போடோ, மியன்மார், மும்பை, முல்லா, முஸ்லீம்கள், மேடை, மௌலானால், Burma, fanaticism, foreign, fundamentalism, riot, SMs
Comments: 13 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 7, 2012
இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!
முஸ்லீம் என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம்: இப்படி சொன்னது ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி முஹம்மது கர்ஸாய்[1]. இந்தியாவின் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மை கூட காயவில்லை. ஆனால், “…..போர் / ஜிஹாத் அது அமெரிக்கா அல்லது இந்தியா என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தான் பக்கம் தான்[2]. ஏனெனில் அவர்கள் எங்களது சகோதரர்கள்”. இருப்பினும், இந்திய மரமண்டைகளுக்கு இது புரியவில்லை[3]. இதுபோலத்தான், இப்பொழுது மாண்புமிகு பிரதம மந்திரி, “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” என்கிறார். அதாவது அமெரிக்கா எத்தனை கோடி கொடுடுத்தாலும் கவலையில்லை, “முஸ்லீம்-முஸ்லீம் தான் பாய்-பாய், மற்றவர்கள் காபிர்-காபிர்” தான்!
முந்தைய சயீது கைது-விடுதலை நாடகம்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீதுவின் தலைக்கு ரூ. 50 கோடி (ஒரு கோடி / 10 மில்லியன் டாலர்கள்) பரிசுத்தொகையை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா நிறுவனரும், ஜமாத் உத் தவா தலைவருமான ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து, பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது. அப்பொழுது உலகரீதியில் ஏற்பட்ட கருத்து மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முதலியவற்றைக் கருத்திற்கொண்டு, நாடகம் போல கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீது பின்னர் விடுதலை செய்யப்பட்டான். அப்பொழுதுகூட, ஷா முஹமது குரேஷி என்ற பாகிஸ்தானிய வெளி உறவு அமைச்சர் மூல்தானில் நிருபர்களிடையே பேசும் போது, இந்தியா பிப்ரவரி 25, 2010 அன்று வெளியுறவு அதிகாரிகளிடம் நடந்த பேச்சுகளில் நிருபமா ராவ், சல்மான் பஷீரிடம் தீவிரவதி ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இல்லை[4]. அவன் இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறான்.
பெயர் மாற்றம் செய்தால் ஜிஹாதி தீவிரவாதம் மறைந்து விடாது: இதையும் இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஓபராய் ஓட்டலில் தங்கியிருந்த ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியாயினர். அதிரடிப் படை வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதில் உயிர் பிழைத்த அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் தற்போது சிறையில் உள்ளான். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த அமைப்பு தற்போது ஜமாத் உத் தாவா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முழுவடும் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இஸ்லாம் பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.
இஸ்லாமிய சாச்சா-பதீஜா உறவுமுறையில் காபிர் இந்தியா என்ன செய்யும்? பாய்-பாய் என்றாலும், சாச்சா-பதீஜா என்றாலும், காபிர் இந்தியா ஒன்றும் செய்யமுடியாது. பாகிஸ்தானில் இந்த அமைப்பு தங்குத் தடையின்றி செயல்பட்டு வருகிறது. இவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பல முறை கோரப்பட்டும், அவன் மீதான உறுதியான குற்றச்சாட்டு இல்லை எனக் கூறி, அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதற்கிடையே, மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் சயீது (61) தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க அரசு தெரிவித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சயீதின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கி பற்றிய தகவலை தெரிவிப்பவர்களுக்கும் இரண்டு மில்லியன் டாலர் அளவுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வென்டி ஷெர்மான், டில்லியில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை பலியிடும் சோனியா அரசு: ஆகமொத்தம், இந்தியர்களைக் கொல்லத்தான் அனைவரும் துடிக்கின்றனர். இதனை அறியாத இந்தியர்கள் சோனியா-காங்கிரஸை நம்பி வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்தியதாக்குதல்களுக்கு (இந்திய தூதரகத் தாக்குதல் உட்பட[5]) மக்கித்தான் பொறுப்பாளி, அவன் உமர் மற்றும் அல்-ஜவஹிரி கூடுதல்களில் பங்குக் கொண்டுள்ளான்[6]. தலிபானுக்கும், லஷ்கருக்கும் இடையில் தொடர்பாக இருந்து வேலைசெய்து வந்தான். 2005 மற்ரும் 2007ல் சதிக்கூட்டங்களில் பங்குகொண்டு லஷ்கர் பயிற்சி முகாம்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். 2007ல் மக்கி, திடீரென்று ஆப்கானிஸ்தானில் தலிபானின் குகையான அல்-ஜவஹரிக்கு சென்றுள்ளதில், ஒசாமா பின் லேடனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று அமெரிக்காவிற்கு இந்தியா தெரிவித்திருந்தது. அதற்கேற்றாற்போல, புரூஸ் ரெய்டல் என்ற அமெரிக்கப் பாதுகாப்பு வல்லுனரும் இந்த தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. மும்பை தாக்குதலில் சமீர் அலி என்பவனுடன் 2008ல் தொடர்பு கொண்டிருந்தான். இந்த அலி இந்தியாவின் “மிகவும் முக்கியமான தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளின்” பட்டியலில் உள்ளான். 2010லும், இந்தியாவிற்கு எதிரான காஷ்மீர் போராட்டங்கள், ஜெர்மன் பேக்கரி வழக்கு முதலியவற்றிலும் தொடர்புள்ளது.
ஹாவிஸ் சயீத் சொல்வதை கர்ஸாய் சொல்வது ஏன் காபிர்களுக்குப் புரியவில்லை? ஹாவிச் சயீதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அவன் பேசுவதே இப்படித்தான் இருக்கும்: “இன்ஸா அல்லா! இந்தியா காபிர்கள் நாடு, அமெரிக்கா, இஸ்ரேல் அடுத்து நமது இலக்கு இந்தியாதான்……………… ஜிஹாத் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே, அங்கு ஜிஹாத் தொடங்கிவிட்டது……………………….. நான்கு பக்கங்களிலிருந்தும் காபிர்கள் தாக்கப்படுகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அவர்கள் ஒழிந்து விடுவார்கள்…………………………… அல்லாவின் படைகளின் முன்பு அவர்கள் துச்சம். இந்தியா இஸ்லாம் ஒளியில் வந்துவிடும், இருள் மறைந்து விடும். நமக்கு அல்லா வழிகாட்டுவாராக”. கர்ஸாயும் இதே பாஷையைத் தான் பேசியுள்ளார்.
அமெரிக்கா அறிவித்தால், இந்தியா தாக்கப்படுவது குறைந்து விடுமா? அமெரிக்கா பில்லியன்களில் பாகிஸ்தானுக்குக் கொடுத்து, இப்பொழுது மில்லியன்களைக் கொடுத்து தீவிரவாதத்தைத் தடுக்கப் போகின்றதாம்! அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு சென்றால் கூட, பத்தாண்டுகளுக்கு நான்கு பில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று கர்ஸாய் கூறுகிறார்[8]. பிறகு, இந்தியாவிற்கு ஏன் பில்லியன்களில் கொடுக்கக் கூடாது? அமெரிக்க அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வரவேற்புக்கு உரியது என்றார். விவரமான கோப்பில், சயீதின் தீவிரவாதத்தில் உள்ள பங்கு, ஆதாரங்கள் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேல் உண்மையை மறுத்தால், சயீதை யாரும் மன்னிக்க முடியாது. அப்பாவத்தில் இருந்து தப்பவும் முடியாது[9]. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு லஷ்கர் இ தொய்பாவுக்கு ஒரு பலமான அபாய எச்சரிக்கை என்றும் அவர் கூறினார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சயீது இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். இதற்கு கிடுக்கிப்பிட போடும் வகையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
தேடப்பட்டு வரும் சயீது கொடுத்த பேட்டி: இதுகுறித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள ஓட்டலில் சயீது நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில், “ஒசாமா பின்லேடனை போல என்னையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. நான் மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளிய மாட்டேன். நான் தங்கியுள்ள இடத்தை அமெரிக்காவுக்கு நானே தெரிவிப்பேன். என்னை கொன்றால் ஒரு கோடி டொலர் கிடைக்கும் என்றால், அந்த தொகையை பலுசிஸ்தானின் மேம்பாட்டுக்கு செலவிடட்டும். இந்தியாவின் கருத்தை ஏற்று, தொலைக்காட்சிகளில் செய்யப்படும் பிரசாரத்தை கொண்டு அமெரிக்கா என்னுடைய தலைக்கு வெகுமதி அறிவித்துள்ளது”, என்று தெரிவித்தார். இந்நிலையில் அல்ஜெஸீரா டி.வி.க்கு ஹபீஸ்சையத் அளித்த பேட்டி வருமாறு: “எதையும் முடிவு எடுப்பதில் அமெரிக்காவிற்கு அறிவும், ஆர்வமும் சற்று குறைவு, அல்லது எங்கள் இயக்கத்தைப்பற்றி அமெரிக்காவிற்கு இந்தியா தவறான தகவலினை அளித்திருக்கலாம். பாகிஸ்தானில் நேட்டோப்படை, வான் தாக்குதல் மீண்டும் துவக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது..இதற்கு எங்களின் எதிர்ப்பினை முறியடிக்க திரணியில்லை. இதன் காரணமாகத்தான் என் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.ஆனாலும் நாங்கள் குகைக்குள் ஓடிச்சென்று ஒளிந்து கொள்ளமாட்டோம். நேட்டோ படைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்”, என்றார்.
தீவிரவாதியை ஆதரிக்கும் யூசுப் ராஷா ஜிலானி, மற்றும் மறுக்கும் உள்துறை ரஹ்மான் மாலிக்: பிரதம மந்திரி யூசும் ராஷா ஜிலானி, அது முழுக்கவும் அவர்களது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தவறான சமிஞையை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்[10]. அவர் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசும் போது “ஹாவிஸ் சயீது சாஹப்” என்று மிகவும் மரியாதையாக அழைக்கிறார். உலகத்திலேயே, இப்படி ஒரு தீவிரவாதியை, ஆதரிக்கும் பிரதம மந்திரி இவராகத்தான் இருக்க வேண்டும். இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக் கூறுகையில், “அமெரிக்க அறிவித்துள்ள பரிசுத்தொகை குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. எனினும் அவர் வீட்டுக்காவலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமினில் உள்ளார். இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. சயீதைக் காக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அவரைக் கைது செய்ய மாட்டோம்[11]. அவர் மீது எந்த ஆதாரங்களும் இல்லை”, என்றார்[12]. சர்தாரியிடம் மன்மோகன் ஆலோசிக்க வாய்ப்பு: வரும் 8-ம் தேதி இந்தியா வர உள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரி,பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. அப்போது ஹபீஸ் சையத் குறித்து இருவரும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்களை ஒன்றும் ஆட்டமுடியாது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆர்பாட்டம்: முசபராபாதில், இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூடி அமெரிக்கக் கொடியை எரித்துள்ளனர்[13]. “அல்-ஜிஹாத், அல்-ஜிஹாத்” என்று கத்திக்கொண்டே ஆர்பாட்டம் நடத்தினர்[14]. முசபராபாத், பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள காஷ்மீரின் தலைநகர் ஆகும். இங்கு, அமெரிக்காவை எதிர்த்து ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது மூலம், இந்தியாவால் ஒன்றும் செய்யமுடியாது என்று தீவிரவாதிகள் மெய்ப்பித்துள்ளார்கள். அதனை பாகிஸ்தான் ஆதரிப்பது தெரிந்த விஷயமே. இதே நேரத்தில் ஜிலானியை பேச்சுவார்த்தைகளுக்கு கர்ஸாய் அழைத்துள்ளதை கவனிக்கவேண்டும்[15].
வேதபிரகாஷ்
07-04-2012
[2] “If Pakistan is attacked, and if the people of Pakistan need help, Afghanistan will be there with you,” Mr. Karzai said. “Afghanistan is a brother.”
[3] Afghan Presdident Karzai’s remarks in an interview that his country would stand by Pakistan in case of a conflict with the United States or India have created a lot of stir though he had predicated them with the proviso: ‘if attacked’. Karzai was apparently trying to calm Pakistan’s concerns over the strategic agreement he signed with India that included provision for military training to Afghan troops much to Pakistan’s discomfort. He had also obliquely accused Pakistan of using Taleban as instrument of policy to attack Kabul from sanctuaries in the tribal areas. The statement of support to Pakistan in case of US or Indian aggression was taken lightly in Islamabad and did not evoke any comment. But the explanation coming from Presidency in Kabul is odd. It said the president only meant to provide shelter to refugees who may flee from tribal areas in case of attack thus reciprocating similar gesture by Pakistan after Soviet invasion.
[7] Indian agencies had warned their US counterparts about a surprise and sudden visit by al-Zawahiri to Islamabad in mid-2007, even suggesting that it could be linked to Osama bin Laden’s whereabouts, and it is Makki who is said to have facilitated this visit at the behest of Hafiz Saeed. US security expert Bruce Riedel, who is known to be close to the Obama administration, has said that Saeed was in touch with Osama himself through a courier right until his death last year.
[10] “This is purely an internal issue of Pakistan and the US has been asked to provide evidence [against Saeed], if they have any, to the Pakistani government… This was also conveyed to the US deputy secretary of state that when new rules of engagements are being defined, they should send a positive signal to Pakistan,” Gilani told the joint sitting of parliament.
http://paktribune.com/news/US-bounty-on-Saeed-a-wrong-signal-PM-Gilani-248887.html
[14] n Muzaffarabad, the capital of Pakistan-administered Kashmir, around 500 activists shouted “Al-Jihad, Al-Jihad (holy war)” as they marched on the city and set fire to a US flag in a main square
[15] Rezaul H Laskar, Karzai invites Gilani for talks on reconciliation process, Thu, 05 Apr 2012 05:15:21 GMT
p>Islamabad, Apr 4 (PTI) Afghan President Hamid Karzai today invited Pakistan Prime Minister Yousuf Raza Gilani to visit Kabul for talks on the reconciliation process in Afghanistan. Karzai extended the invitation when he telephoned Gilani to express his concern over the emergency landing made by the premier”s aircraft shortly after taking off from a military airbase in Rawalpindi yesterday. The Afghan President “extended an invitation to the Prime Minister to visit Kabul as the weather has become considerably pleasant”, said a statement from Gilani”s office. Gilani accepted the invitation and said he would soon visit Kabul. “We would also review the progress made toward political reconciliation in the context of the last bilateral meeting held in Islamabad,” the premier said. Pakistan is keen on playing a larger role in the endgame in Afghanistan. Acting on a request from Karzai, Gilani recently appealed to all militant factions in Afghanistan to join the peace process in the neighbouring country.http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=5992738
பிரிவுகள்: ஃபத்வா, அடி உதை, அடிப்படைவாதம், அடையாளம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்லா, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊடக வித்தைகள், எரிப்பு, எல்லை, ஔரங்கசீப், கராச்சி திட்டம், கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காந்தஹார், காந்தாரம், காயிதே மில்லத், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, கைது, கையெறி குண்டுகள், கொடி, கொடி எரிப்பு, கொடியேற்றம், கொலை, சமரசப்பேச்சு, சரீயத், சரீயத் சட்டம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜஹல்லியா, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தடை, தமுமுக, தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தீவிரவாதிகளுக்கு பணம், துபாய், துப்பாக்கி, தேசியக் கொடி, நிகாப், நிக்கா, பர்கா, பர்கா போராட்டம், பர்தா, பர்தா அணிவது, பலுச்சிஸ்தானம், பலுச்சிஸ்தான், பின்லேடனின் குடும்பம், பின்லேடனின் மனைவி, புத்தகம், புனிதப் போர், பைப் வெடிகுண்டு, போதை, போதை மருந்து, முஜாஹித்தீன், முஸ்லீம் சட்டம், வந்தே மாதரம், வன்முறை
Tags: அமெரிக்கா, ஆப்கன், இந்தியா, கசாப், கர்சாய், கர்ஷாய், கர்ஸாய், கஸப், காபிர், குரேஷி, கொலை, கொலைவெறி, சயீது, சயீத், சாச்சா, சைத், சையது, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தலிபான், தாலிபான், தாவூத் ஜிலானி, பதீஜா, பாய், மச்சான், மாமன், மாமா, முகமது குரேஷி, முஜாஹித்தீன், மும்பை, முஹமது குரேஷி, மைத்துனன், ஷா முஹமது குரேஷி, ஹாவிஸ், ஹாவிJ
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்