Archive for the ‘தானியல்’ category

யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (5)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (5)

 

 டிஎன்ஏ சோதனை: யாசின் பட்கலின் அடையாளத்தை உறுதி செய்ய உடனடியாக ஒரு சிறப்பு குழுவை அனுப்பிவைக்கும்படி கர்நாடக போலீசாரை பீகார் போலீசார் கேட்டுக் கொண்டனர். மேலும் யாசின் பட்கலுக்கு டிஎன்ஏ சோதனை செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கும் கர்நாடக போலீசாரிடம் உதவி கோரியுள்ளனர். இதில் பீகார் போலீசார் எந்த அளவிற்கு ஒத்துழைப்பார்கள் என்று பார்க்க வேண்டும். “நான் அவனில்லை” என்ற வாதங்கள் வருவதால், புலன்விசாரணைக் குழு இதனை உறுதி செய்ய தீர்மானித்துள்ளது. இதனை அறிந்து தான், ஒருவேளை தந்தை, மாமா மற்ற உறவினர்கள் வேறு மாதிரி நடந்து கொள்கிறார்கள் போலும்.

விசாரிக்க கர்நாடகம்,  குஜராத் போலீஸ் தீவிரம்[1]: கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் யாசின் பட்கலுக்கு தொடர்பு இருப்பதால், அவரை விசாரணைக்கு தங்களிடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் கோருவதற்கு இரு மாநில காவல் துறையும் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக கர்நாடக காவல் துறை இயக்குநர் லால் ரொகுமா பசாவ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: “பெங்களூரில் இந்தியன் முஜாஹிதீன் நடத்திய பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரிக்க நீதிமன்றம் மூலம் அனுமதி பெறப்படும்”, என்றார். குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரக் காவல்துறை இணை ஆணையர் ஏ.கே. சர்மா கூறியது: “யாசின் பட்கலை எங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்கும்படி நீதிமன்றத்தில் கோருவோம்”, என்றார்.

முல்லாயம் சிங் கட்சி முஸ்லிம் தலைவர் தீவிரவாதிகளுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவது,  பேசுவது ஏன்?: இந்திய ஊடகங்கள், அரசியல்வாதிகள், சட்டத்துறையினர், மனித உரிமைப் போராளிகள், செக்யூலரிஸ வித்வான்கள், சமத்துவ ஞானிகள், மனிதநேய விற்பன்னர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய தீவிராவாதிகள் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றே, சில முரண்பட்ட செய்திகளை போட்டு வைக்கிறார்கள். தீவிரவாதிகளின் பெயர்களைக் கூட வேண்டுமென்றே மாற்றி-மாற்றி குறிப்பிடுவார்கள். அவற்றை தீவிரவாதிகள் தரப்பில் ஆஜராகும் வக்கீல்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, யாசீன் போன்ற படித்த தீவிரவாதிகள் “நான் அவனில்லை” போன்ற வாதங்களை வைத்து, “அலிபி”, அதாவது “அந்நேரத்தில் நான் அங்கில்லை” என்றும் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

யாசின் பட்டகல் மற்றும் அவனது வக்கீல் எம். எஸ். கான் வாதிப்பது ஏன்?: யாசின் பட்டகல் சொல்கிறான், “இந்திய முஜாஹித்தீனை தோற்றுவித்தவர்களுள் ஒருவன் நான் என்பதனை நான் மறுக்கிறேன்”, என்கிறான். பிறகு, “தில்லி மற்றும் 7 தொடர்குண்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவனும் நானும் வேறு”, என்கிறான். ஆனால், யாசின் பட்டகல், அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா என்ற எல்லோரும் ஓரே நபர் தான் என்று என்.ஐ.ஏ எடுத்துக் காட்டியது[2]. இப்பொழுது கூட, எம். எஸ். கான் என்ற யாசினின் வக்கீல் அத்தகைய வாதங்களை வைத்துள்ளது கவனிக்கத்தக்கது[3].

ஊடகங்களின்  தேவையற்ற செய்திகள், பிரச்சாரங்கள்: யாசின் பட்டகல் பாகிஸ்தானில் இருந்தான், ஐ.எஸ்.ஐ.யினால் பயிற்சி கொடுக்கப்  பட்டான் என்ற உண்மை அவனை விசாரிக்கும் போது தெரிய வந்துள்ளது. இதுவரை அவன் லச்கர்-இ-தொய்பா தான் பயிற்சி கொடுத்தது என்று நம்பி வந்தார்களாம்[4]. இப்படிபட்ட செய்திகள் வெளியிடும் போக்கும் என்னவென்று தெரியவில்லை. இந்திய துப்பறிவாளர்கள் என்ற நினைத்தார்கள், நம்பிக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம், இந்தியர்களுக்கு வேண்டிய செய்திகளா? முன்பு கூட மும்பை வெடிகுண்டுவெடிப்பிற்கு பிறகு, யாசின் தில்லிக்குச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றதில் மும்பை மற்றும் தில்லி போலீஸார் பரஸ்பர குற்றச்சாட்டுகளை சொல்லி வருகின்றன[5]. யாசின் தப்பிச் செல்ல தில்லி போலீஸார் தான் காரணம் என்ரு மும்பை போலீஸார் கூறினர்[6]. வழக்கம் போல, சி.என்.எநை.பி.என், டைம்ஸ்-நௌ, என்.டி-டிவி, ஹெட்லைன்ஸ்-டுடே முதலியவை பாகிஸ்தான் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் முதலிவவர்களை வைத்துக் கொண்டு “பட்டி மன்றம்” நடத்தி, தாங்கள் ஏதோ மிகப்பெரிய உண்மைகளை தருவது போல “டமாரம்” அடித்துக் கொள்வார்கள். இதுதான் இந்தியாவின் லட்சணம் என்று விசயம் தெரிந்தவர்கள் பரிகாசம் செய்வார்கள். முதலில், இனிமேல் இந்தியாவில் இவர்களது கொட்டம் அடக்கப்படும், அவர்களது கூட்டாளிகளின் வால்கள் அறுக்கப்படும், இந்தியாவில் இருந்து கொண்டு ஆதரவு காட்டி வரும் சதிகாரர்கள் அடக்கப்படுவார்கள். அதனால், இனி குண்டுவெடிப்புகளே நிகழாது என்றுதானே தைரியமாக சொல்ல வேண்டும். மாறாக, இத்தகைய பிரச்சாரங்களால், சாதாரண மக்களுக்கு என்ன லாபம்.

© வேதபிரகாஷ்

01-09-2013


[2] However, District Judge I S Mehta, who remanded Bhatkal and his close associate and alleged top IM operative Asadullah Akhtar for custodial interrogation for 12 days, did not accept his claims saying NIA has said that he was the IM co-founder. ‘Both the accused have been produced before the court on the issuance of NBWs (non-bailable warrants) on July 18, 2013 wherein the accused Yasin Bhatkal and accused Asadullah Akhtar alias Haddi alias Danial. In the present application it is stated that Mohd. Ahmed Siddibappa is Yasin Bhatkal and he is the same person against whom the NBWs were issued.

http://www.business-standard.com/article/pti-stories/bhatkal-s-attempt-to-falsify-nia-s-claim-fails-113083000906_1.html

[3] Yasin Bhatkal today failed in his attempt in a Delhi court to falsify the claim of investigators that he was the same person whom the NIAhas dubbed as the co-founder of Indian Mujahideen (IM) involved in a string of terror strikes in the country in the last seven years. His lawyer M S Khan opposed National Investigation Agency (NIA’s) plea seeking 14-day custody saying ‘the accused person before the court is Mohmmad Ahmed and not Yasin Bhatkal.’

http://www.business-standard.com/article/pti-stories/bhatkal-s-attempt-to-falsify-nia-s-claim-fails-113083000906_1.html

[6] A series of reports on an alleged botched operation to catch Indian Mujahideen operative and purported 13/7 mastermind Yasin Bhatkal has left the Maharashtra Anti-Terrorism Squad and the State government fuming. A top official told The Hindu on Thursday that the government was upset with the leaks from the Delhi police and is sure to take up the matter with the Ministry of Home Affairs “at the right time.” The ATS, which is investigating the 13/7 blasts, has already flagged off its grievance to Delhi.

http://www.thehindu.com/news/national/other-states/maharashtra-flays-delhi-police-on-137-leaks/article2814646.ece?ref=relatedNews

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (3)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (3)

புத்தகயாவெடிகுண்டுவிசயத்தில்நிதிஷ்குமார்மெத்தனம்காட்டியது: புத்தகயா வெடிகுண்டு இந்திய-முஜாஹித்தினின் கைவரிசைதான், அவர்களுடையை கைவேலைத் திறன் அதில் காணப்படுக்கிறது என்றெல்லாம் பாட்டுப் பாடியவர்கள், திடீரென்று அடங்கிப் போனதை கவனித்திருக்கலாம். ஈ-மெயில் வந்தது, பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்டது, வெடிபொருட்கள் சப்ளை செய்தவன் பிடிபட்டான்[1] என்றெல்லாம் செய்திகள் வந்தன[2]. எப்படி மத்திய மற்றும் பிஹார் அரசுகள் இவ்விசயத்தில் தமது நிலையை மாற்றிக் கொண்டன என்பதனையும் காணலாம்[3]. வழக்கம் போல திவிஜய் சிங் சங்கப்பரிவார் தான் குண்டு வைத்தது என்று டுவிட்டரில் உளறினார் என்றும் செய்திகளை போட்டனர். சையது மக்பூல் என்பவன் ஏற்கெனவே புத்தகயா அவர்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளது என்று எச்சரித்தப் பிறகும் பீஹார் அரசு மெத்தனமாக இருந்தது நினைவிருக்கலாம்[4]. மேலும் தொடர்குண்டுகள் வெடித்தாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை, மற்றும் மிரட்டத்தான் அக்குண்டுகள் வைக்கப்பட்டன என்றும் சோதனையில் தெரியவந்தது. முதலில் புத்தபிட்சு தோற்றத்தில் படம் வெளியிடப்பட்டது. பிறகு வேறு விசயத்தில் கைது செய்யப் பட்ட ஒருவரை “இந்து பூஜாரி புத்த கயாவில் கைது” என்றும் செய்திகள் வெளிவந்தன[5]. பிறகு குண்டுவெடிப்பிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கம் அளித்தன.

இவன்இந்தியமுஜாஹித்தீனைசேர்ந்தவனா?: பிடிபட்டவன் யாராக இருந்தாலும் அந்தந்த சட்டமீறல்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய முஜாஹித்தீனின் கைவேலை தான் இது, என்று ஏற்கெனவே கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து செய்திகள் வந்துள்ளன[6]. அவர்களிடமிருந்து, மயன்மாரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு பழி வாங்கத்தான் இச்செயல் என்று தகவல் வந்ததாகவும் உள்ளது. ஜார்கண்டில் எவ்வாறு நக்சல்கள் மற்றும் இந்திய முஜாஹித்தீனின் ஜிஹாதிகள் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர் என்று புலன்விசாரணை செய்யும் அதிகாரிகளும் எடுத்துக் காட்டியுள்ளனர்[7]. கடந்த மாதம் ஜூலையிலேயே, அன்வர் முல்லிக் என்பவன் ராணிபந்த், சப்ரா கோட்டம், நாடி மாவட்டம், மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய முஜாஹித்தீனுக்கு வெடிமருந்துப் பொருட்கள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான்[8]. ஹைதராபாத்-புத்தகயா குண்டுவெடிப்பில் இருக்கும் ஒற்றுமை மற்றும் குண்டு தயாரிக்கப்படுள்ள முறை இந்திய முஜாஹித்தீனைக் காட்டுகிறது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது[9]. ஆனால், திசைத் திருப்ப “சுக்குமி, ளகுதி, ப்பிலி” போன்ற செய்திகளை ஏன் வெளியிட வேண்டும்? ஆகவே, இந்நிலையில் குழப்பத்தை உண்டாக்கவே, இத்தகைய செய்திகளை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

பீஹாருக்கும், இந்தியமுஜாஹித்தீனுக்கும்தொடர்புஉள்ளாதா?: அதாவது இந்திய-முஜாஹித்தின் என்றால், நாளைக்கு பீஹாரின் தொடர்பு வெளிவரும், அப்பொழுது பீஹாரில் யாரோ உதவியுள்ளனர் என்று தெரிந்து விடும் என்று யாரோ கவனமாக இருக்கின்றனர். அப்படியென்றால், இந்திய-முஜாஹித்தின் சௌகரியமாக பீஹாரில் வேலை செய்து வர யாரோ உதவி செய்து வருகிறார்கள். ஒருவேளை, நிதிஷ்குமாரை மிரட்டி பிஜேபி-கூட்டைக் கலைத்து, காங்கிரஸுடன் நெருங்கி வந்ததற்கு இதுதான் காரணாமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இப்பொழுது லல்லு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை! யாசினிடம் இது பற்றி கேட்டபோது, “நல்லது, எங்களைப் போலவே யாரோ அதேப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது” என்றானாம்[10]. அதாவது, இவனும் திக்விஜய சிங் போல, பரூக்கியைப் போல பேசுகிறான் என்பதை கவனிக்கலாம். இந்தியாவில் இப்படி, தீவிரவாதிகளை ஆதரித்துக் கொண்டிருக்கும் வரை, பிடிபட்ட தீவிரவாதிகள் கூட இப்படி பேசுவது, இந்தியா எத்தகைய துரோகிகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதாவது, இத்தகைய வெட்டிப்பேச்சுகளில், பொய் பிரச்சாரங்களில் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களைக் கூட மறக்கடித்து விடும் வகையில் இவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதனை அறியவேண்டும்.

பட்டகலில்அவனதுசொந்தக்காரர்கள், நண்பர்கள், மற்றவர்கள்அவனைஒதுக்குவதுஏன்?: இதே மாதிரி கர்நாடகா மாநிலத்தில், மங்களூரிலிருந்து 150 கி.மீ தூரத்தில் கடற்கரைப் பகுதியில் உள்ள பட்டகல் என்ற நகரத்தில், யாசீனைப் பற்றி விசாரித்தால், ஒருவனை வைத்துக் கொண்டு எங்களை எடை போடாதீர்கள் என்று பொரிந்து தள்ளுகிறார்களாம்[11]. இருப்பினும் முன்னர், அந்த ஊரினர் எப்படி பட்டகல் சகோதரர்களுக்கு உதவினர் என்று விவரங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. ஏனெனில், உள்ளூர் உதவிகள் இல்லாமல், பொருட்களை வாங்க முடியாது, எடுத்துச் செல்லமுடியாது, விநியோகிக்க முடியாது என்று என்ற நிலையில், பலர் உள்ளனர். அதுல் கரீம் துண்டா விசயத்தில், குடும்பத்தார் ஒட்டு மொத்தமாக அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இங்கோ எரிந்து விழுந்துள்ளதாக சொல்கிறார்கள். “சும்மா, கொஞ்சம் அசிங்கத்தை வைத்துக் கொண்டு, எங்களை இப்படி-அப்படி என்று தீர்மானிக்க வேண்டாம்”, என்கிறார்களாம். மேலும் ஊடகக்காரர்கள் என்றால் அடிக்கவும் வருகிறார்களாம்[12]. ஒரு பக்கத்தில் செய்திகள் இப்படி, மறுபக்கமோ கீழ்கண்டவாறு உள்ளது.

யாசின்பட்கல்உயிரோடு இருப்பதால் குடும்பத்தார்நிம்மதி: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனன் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டதால் அவனது குடும்பத்தார் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் தேசிய புலனாய்வு துறையினரால் இந்திய-நேபாள எல்லையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டான். இந்நிலையில் இது குறித்து அவனது தந்தை ஜரார் சித்திபாபா மற்றும் மாமா யாகூப் பட்கல் கூறுகையில், “அகமது சித்திபாபா (யாசின் பட்கல்) கைது செய்யப்படத்தில் எங்களுக்கு நிம்மதியாக உள்ளது. எங்கே அவனை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்தோம்[13]. அவன் இறந்துவிட்டான் என்றே இத்தனை நாட்கள் நினைத்தோம்[14]. என் மகன் அப்பாவி. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் போராடுவோம். அவன் மீது குற்றம் இருந்தால் தண்டிக்கட்டும். கடந்த 2005ம் ஆண்டு என் மகன் என்னுடன் துபாய் வந்து ஒரு கடை வைக்க உதவினான். அதன் பிறகு 2007ம் ஆண்டு காணாமல் போனான். இது குறித்து துபாய் போலீசாரிடம் புகார் தெரிவித்தோம். அவன் மீது செக் மோசடி வழக்கு இருப்பதால் ஓடிப் போயிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். யாசின் என்ற பெயரை போலீசாரும், ஊடகங்களும் அவனுக்கு வைத்துள்ளன என்றார். அகமதை பற்றி பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அகமது 1983ம் ஆண்டு பிறந்தான். அவன் 1ம் வகுப்பு முதல் பத்தாவது வரை பட்கலில் படித்தான். ஆனால் அவனால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் 2005ல் துபாய்க்குச் சென்றான். 2007லிருந்து அவனுடன் எந்த தொடர்பும் இல்லை”.

போலிஎன்கவுண்ட்டரில்சுட்டுக்கொன்றுவிடுவார்களோஎன்றுபயந்தோம்: எங்கே அவனை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்தோம் என்று கூறுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றால், தங்களது பிள்ளையை ஒழுங்காக வைத்திருக்கலாமே? “இது குறித்து துபாய் போலீசாரிடம் புகார் தெரிவித்தோம். அவன் மீது செக் மோசடி வழக்கு இருப்பதால் ஓடிப் போயிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்”, என்கின்றனர். பிறகு, உள்ளூர் போலீசில் ஏன் புகார் கொடுக்கவில்லை? மும்பை போலீஸார் விட்டிற்கு வந்தபோது, ஓடிவிட்டான் என்றுள்ளதே, அப்பொழுதே விழித்துக் கொண்டிருக்க வேண்டாமோ? அதாவது துபாயிலிருந்தே காணாமல் போய்விட்டான் என்று நிரூபிக்கப் பார்க்கிறார்கள் போலும்! அப்படியென்றால் தெரிந்தே அனுசரித்து கொண்டு இருந்தார்களா அல்லது பையன் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளான் அதனால் அவனுக்கு நிச்சயம் சொர்க்கம் தான் என்று பூரித்து போய் விட்டார்களா?

© வேதபிரகாஷ்

01-09-2013


 


[4] Indian Mujahideen terror suspect Syed Maqbool, who was freed from Charlapally jail in Hyderabad on remission (good conduct), had revealed during his arrest by Delhi Police in October 2012 that the IM was planning to carry out attacks in Bodhgaya. Maqbool told interrogators that the IM wants to take revenge against attacks on Muslims in Myanmar. He was also questioned during the recent twin blasts in Dilsukhnagar. Maqbool alias Zuber, a former convict, was picked up by the Delhi Police with the help of counter intelligence sleuths from Shaheennagar in October 2012. The key allegation against him was that he was planning a suicide bomb attack in Bodhgaya in Bihar to avenge attacks on Muslims in Myanmar, and also imparted training to those responsible for a couple of low-intensity bomb blasts in Pune in 2012. It is alleged that in July 2012, Maqbool aided other IM terror suspects to do a recce of Dilsukhnagar, Begum Bazaar and Abids in Hyderabad. He was said to be acting on the orders of the most wanted terror suspect, Riyaz Bhatkal.

http://www.deccanchronicle.com/130708/news-current-affairs/article/bodhgaya-blasts-indian-mujahideen-man-had-warned

[7] The angle is being looked into by the NIA even in the recent serial blasts in the Mahabodhi temple in Bodh Gaya, Bihar. Sources in NIA said the attack in Gaya seems to be the work of a new module of the IM. “It is clear that an organised group is behind it. Planting 13 bombs requires planning. It is suspected to be IM but a new module set up in the neighbouring state of Jharkhand could be responsible for the attack,” said an NIA officer. Sources in the NIA said Manzar attended a training camp in Kerala and was given the responsibility of recruiting youths from Jharkhand since he belonged to the state. He is alleged to be an important functionary of the banned Students Islamic Movement of India (SIMI) and later joined the IM. A fresh revelation that Amir Raza Khan, one of the founder members of IM, originally hails from Gaya has led the agencies to probe some of his old contacts. So far, it was believed that Khan was from Kolkata. Support from Pakistan-based terror outfits is also not ruled out. Sources said even in the past Pakistan’s Inter Services Intelligence (ISI) had made attempts to support the Naxalites in India. Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2369414/Terror-web-spreads-Jharkhand-State-revealed-prime-recruiting-ground-Indian-Mujahideen.html#ixzz2c2wX8Ibr; Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[8] A resident of Ranibandh in Chapra sub-division of Nadia district of West Bengal, Mullick was arrested with explosives and counterfeit Indian currency with face value of around Rs 1.90 lakh, according to reports.

http://www.indianexpress.com/news/bodhgaya-blasts-im-explosives-supplier-held-in-bengal/1142659/

[10] When he was questioned by top officers of the Bihar Police and the  National Investigating Agency. Sources say that he denied the Mujahideen’s involvement in a series of bomb blasts in the pilgrimage town of Bodh Gaya in July, but said of the attacks, “Good… it seems there are other people like us working for the same purpose.”

http://www.ndtv.com/article/india/bodhgaya-blasts-show-others-share-our-goal-yasin-bhatkal-allegedly-said-412152

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (1)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (1)

Yasin Bhatkal arrestedயாசின் பட்கல்லுக்கு பரிந்து பேசுவது ஏன்?: யாசின் பட்டகல் என்ற தேடப்பட்டு வரும் தீவிரவாதி, பீஹார்-நேபாள எல்லையில் உள்ள ரக்ஸால் என்ற சோதனைச் சாவடியில் 29-08-2013 (வியாழக்கிழமை) அன்று கைது செய்யப்பட்டான்[1]. அவனைப் பற்றி, சமஜ்வாதி கட்சியின் தலைவர் கமால் பரூக்கி என்பவர், “அவன் தீவிரவாதி என்றால் விடக்கூடாது. ஆனால், அவன் முஸ்லிம் என்றதால் மட்டும் கைது செய்யப்பட்டிருந்தால், பிறகு எச்சரிக்க வேண்டியுள்ளது ஏனெனில் அது முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு தவறான சமிஞையை அனுப்புகிறது. ஆகவே அவன் கைது செய்யப்பட்டது குற்றத்தின் அல்லது மதத்தின் அடிப்படையிலா என்பதை விளக்க வேண்டும்”, இப்படி பேசியதும்[2], அங்கு மடி-கணினி வாங்க வந்த மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லையாம். உடனே, கூட இருந்த ராம்கோபால் யாதவ், “பட்டகல் ஒரு தீவிரவாதி தான், ஆகவே அவன் அவ்வாறுதான் நடத்தப்படுவான்”, என்றார். பிடிபட்ட தீவிரவாதி முஸ்லிம் என்றதும், மற்றொரு முஸ்லிம், உடனே இஸ்லாத்தைத் தூக்கிப் பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. சாதாரண நேரத்தில், “தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்கள் என்று குறிப்பிடுவது தவறாகும்”, என்கின்றவர்கள் இப்பொழுது இப்படி பரிந்து கொண்டு பேசுவது அவன் முஸ்லிம் என்பதாலா அல்லது தீவிரவதியாக உள்ள முஸ்லிமுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தாலா?

Niaz Ahmad Farooqui, Kamal Faruqui and mahmood Madaniஇஸ்லாமியர்களை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகிறது: இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளதை உத்தரப்பிரதேச மாநில ஆளும் சமாஜ்வாடி கட்சி இவ்வாறு விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான கமால் ஃபரூக் –

  • யாசின் பட்கலை போலீசார் மதத்தின் அடிப்படையில் கைது செய்தனரா?
  • அல்லது குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் கைது செய்தனரா?

என்பது பற்றி விளக்கம் வேண்டும். அண்மைக்காலமாக இஸ்லாமியர்களை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்தான் யாசின் பட்கல் கைது நடவடிக்கையும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். பொறுப்பில்லாமல் இவர் இப்படி பேசியுள்ளது முஸ்லிமின் மனப்பாங்கு எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம் இப்படி முஸ்லிமாகவே செயல்படுவதைத்தான் அடிப்படைவாதம், வகுப்புவாதம், இந்தியவிரோதம் என்று எளிதில் அறியப்பட்டாலும், செக்யூலரிஸம் என்ற மாயாஜாலத்தில் மறைத்து விடுவர். சி.என்-ஐ.பி.என், டைம்ஸ்-நௌ, என்.டி-டிவி, ஹெட்லைன்ஸ்-டுடே முதலியவை இதை பெரிது படுத்தாது. கமால் பரூக்கியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும்[3] யாரும் அவரை எதிர்க்கப்போவதில்லை, கண்டிக்கப்போவதில்லை. நல்லவேளை, இவரே ஒப்புக் கொண்டு விட்டார், கைது செய்யப்பட்டது யாசின் பட்கல் தான் என்று. ஏனெனில், கைது செய்யப்பட்டது அவனில்லை என்று செய்திகளும் வந்துள்ளன, அவனுடைய வக்கீலும் அவ்வாறே கூறுகிறாராம்!

Kamaal farouqi - Muslim Students Organization - MSOசெக்யுலரிஸ முகமூடி அணிந்துள்ள நிதிஷ்குமார் முஸ்லிம் தீவிரவாதி பிடிபட்டதை அமுக்கி வாசிப்பது ஏன்?: ஜனதாதளம் (யுனைடெட்) யாசின் பட்கல் கைது செய்யப்பட்டதற்காகவும், அதற்காக பரிசு கொடுக்கப்பட்டதற்காகவும் எந்த கொண்டாட்டங்களும் கூடாது என்று தீர்மானித்து பின்வங்கியுள்ளதாம்[4]. அதாவது, அப்படி கொண்டாடினால், முஸ்லிம் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடுமாம்! உண்மையிலேயே சரத் யாதவ், நிதிஷ்குமார் மற்றும் அத்தகைய செக்யூலரிஸப் புலிகளின் தத்துவம் அறிந்து புல்லரிக்கிறது. மிக விலையுயர்ந்த மீனை பிடித்திருக்கிறோம் என்று போலீஸார் மகிழ்ந்து பூரித்திருக்கும் நிலையில், நிதிஷ்குமார் போலீஸாரைப் பாராட்டக் கூடவில்லை. காரணம் வடக்கு பீஹார் பகுதிகளில் உள்ள முஸ்லிம் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிறாராம். அதுமட்டுமல்லாது, முதலில் பிஹார் போலீஸார் அவனை கைது செய்யக் கூட மறுத்ததால், என்.ஐ.ஏ மற்றும் உள்துறை அமைச்சகம் தலையீட்டால், அமைதியாக கைது செய்யப்பட்டான். இப்படி பீஹார் அரசியல்வாதிகள் விளையாடுவது ஆபத்தை விளைவிப்பதாகும்.

Kamaal farouqi at MSO 2008ராஜிய முறையில் ஒத்துழைப்பு மறுத்த நிதிஷ்குமார் அரசு: முதலில் மறுத்த பிஹார் போலீஸார், பிறகு என்.ஐ.ஏவுடன் சேர்ந்த கூட்டு “ஆபரேஷன்” என்று யாசின் பட்கல் மற்றும் அஸதுல்லா அக்தர் ரக்சாலிலிருந்து பீஹார் ராணுவ கேம்பிற்கு [Bihar Military Police (BMP) camp] தகுந்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டனர்[5]. மோதிஹரி நீதிமன்றத்தில் மூன்று நாட்களுக்கு “பிரயாண கைது” என்ற ரீதியில் அனுமதி பெற்று வெள்ளிக் கிழமை – 30-08-2013 அன்று சிறப்பு விமானம் மூலம், பாட்னாவிலிருந்து, தில்லிக்குக் கொண்டு வருவதற்குள் ஏகப்பட்ட அரசியல் நாடகம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பீஹாரில் நடந்தது என்பதை ஊடகங்களும் அமுக்கி வாசித்தது, யாரும் மோதிஹர் நீதிமன்றம் வரை சென்று, யாரையிம் பேட்டி காணவில்லை. யாரோ அவர்களுக்கு இட்ட ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பதைப் போல இருந்தது. ஏனெனில் அதே நேரத்தில் ஆசாராம் பாபு கைது விசயத்தில் 24×7 என்ற முறையில் செய்திகளை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, ஒன்று நிதிஷ்குமாரே அதனை விரும்பவில்லை அல்லது அவ்வாறு விரும்பாதவர்கள் அவருக்கு ஆணையிட்டுள்ளனர்.

bhatkal-brothers-riyaz-iqbalமிகவும் விலயுயர்ந்த பிடிப்பான யாசின் பட்கல்லின் தீவிரவாத, குண்டுவெடிப்புகளின் விவரங்கள்: யாசின் பட்கலைப் பிடித்தது, மிக விலையுயர்ந்த கைது என்று பாதுபாப்பு, உளவுதுறை, போலீஸ் என்று எல்லோரும் நினைத்து, பாராட்டி வருகின்றனர். ஏனெனில் 2006லிருந்து 2011 வரை கீழ்கண்ட குண்டுவெடிப்புகளுக்குக் காரணமாக யாசின் உள்ளான் என்று கூறுகிறார்கள்:

PRIZED CATCH
India’s most-wanted terrorist Muhammad Ahmed Siddibappa Zarar, alias Yasin Bhatkal, had several identities: Shahrukh, Dr Imran, Sivanand, Asif, Yasin and Mohammed Ashraf.

  • Known for preparing bombs and exploding after planting those on bicycles and scooters, Yasin was the only top operative of the Indian Mujahideen (IM) to stay in India. Others took shelter in Pakistan and elsewhere after the crackdown by the Indian intelligence agencies.
  • The police from six states, including Karnataka and Delhi, are hoping to question Bhatkal in connection with the terror cases.
  • The Mumbai, Hyderabad and Gujarat police are also sending teams to Delhi to interrogate the 30-year-old. The Bangalore city police commissioner, Raghavendra Auradker, said the police would seek Yasin’s custody for questioning in terrorist activities in Bangalore and other places in Karnataka.

Yasin’s suspected involvement in blasts:

  • Ahmedabad, 2008
  • Surat, 2008
  • Jaipur, 2008
  • Delhi, 2008
  • Varanasi, 2010,
  • Chinnaswamy Stadium, Bangalore, 2010
  • German Bakery, 2011, Pune
  • Mumbai, 2011
  • Delhi High Court, 2011
  • Dilsukhnagar, 2013, Hyderabad
  • Bangalore, 2013

 

இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் மீதான வழக்குகள்2006 மார்ச் 7: வாராணசி குண்டு வெடிப்பு

2006 ஜூலை 11: மும்பை தொடர் குண்டு வெடிப்பு

2007 நவம்பர் 23: வாராணசி, ஃபைசாபாத், லக்னௌ நீதிமன்றங்களில்

நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்

2007 ஆகஸ்ட் 25: ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்கள்

2008 மே 13: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு

2008 ஜூலை 26: ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு

2010 பிப்ரவரி 13: புணே ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு தாக்குதல்

2010 ஏப்ரல் 17: பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்க வெடிகுண்டு

தாக்குதல்

2011 ஜூலை 13: மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்கள்

2011 செப்டம்பர் 7: தில்லி உயர் நீதிமன்ற வளாக வெடிகுண்டு தாக்குதல்

 

இருப்பினும், 2014-தேர்தல் என்ற நிலையில், பீஹார் அரசியல்வாதிகள் இதில் எதையோ மறைக்கப் பார்க்கின்றனர் என்று தெரிகிறது.

bhatkal_dubai-IM-operative-phonecallsவடக்கு பீஹாரில் சாதகமாக உள்ள இடங்கள் பறிபோய் விடும்: வடக்கு பீஹாரில், கணிசமான அளவில் முஸ்லிம்கள் ஓட்டு இருக்கிறது. ஆகவே, யாசின் பட்கல் கைது விவகாரத்தை பெரிது படுத்தினால் முஸ்லிம் ஓட்டு போய்விடும் என்று நிதிஷ்-அரசு பயப்படுகிறதாம். தர்பங்கா, மதுபனி, கதிஹர், பேடியா, புர்னியா, கிருஷ்ணகஞ் முதலிய லோக்சபை சீட்டுகள் பறிபோய்விடும் என்று விசுவாசிகள் எச்சரித்துள்ளார்களாம்[6]. சரி, இதில் யாதாவது உண்மையிருக்கிறாதா என்று பார்த்தால், பீஹாரில் இருக்கும் முஸ்லிம் மதகுருமார்கள் அதாவது, மௌல்வி, மௌலானா, ஹஜ் கமிட்டி தலைவர் போன்றவர்கள், “நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம். அது எந்த மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி. ஆனால், அதனை இஸ்லாத்துடன் இணைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால், அரசியல் ஆதாயத்திற்கு உபயோகப்படும் என்ற எண்ணத்தை விடவேண்டும்”, என்றும் கூறியுள்ளனர்[7]. அதே நேரத்தில், “இந்திய முஜாஹித்தீன் நடவடிக்கைகள் பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்”, என்றும் கூறியுள்ளனர்[8].

  • மௌலானா சையது நிஜாமுத்தீன் – Maulana Syed Nizamuddin, head of Imarat Shariah, one of the most respected seats of Islamic affairs in the country. Maulana Nizamuddin, Octogenarian cleric also the general secretary of the All India Muslim Personal Law Board,
  • மௌலானா சமீம் அஹமது முனாமி – Maulana Shamim Ahmad Munami, head of Khanqah Munamia.
  • மௌலானா அனிசூர் ரஹமான் கஸ்மி – Maulana Anisur Rahman Qasmi, Phulwarisharif-based Imarat Shariah general secretary,Qasmi, also the chairman of Bihar State Haj Committee
  • அப்துல்லாஹ் ஹை – Dr A A Hai, who also organizes religious events at Masjid Abdul Hai,

இப்படி மிகப்பெரிய மௌலானாக்கள், மற்ற பெயர் குறிப்பிட விரும்பாத மௌல்விகள், காஜிக்கள் “ஜிஹாத்” என்பதனை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்[9]. அதே மாதிரி “முஜாஹித்தீன்” என்பதற்கும் தவறான விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது இஸ்லாத்திற்கு விரோதமானது, என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார்கள்.

© வேதபிரகாஷ்

01-09-2013


[2] Responding to the arrest of the 30-year-old accused, who is wanted in several blast cases, Farooqui had yesterday said, “Is this arrest based on crime or religion?”. “If he is a terrorist, then he should not be spared but if he has been arrested just because he is a Muslim, then caution should be exercised as we don’t want to send a wrong message to the entire community that we are trying to malign the it’s image without a thorough investigation,” he had said.

http://www.business-standard.com/article/politics/sp-distances-itself-from-farooqui-remarks-on-bhatkal-arrest-113083100387_1.html

[4] The JD(U) has held back on celebrating the arrest of terror “prize catch” Yasin Bhatkal because of growing concerns that too much of drum-beating could adversely affect its electoral prospects in north Bihar where it is banking on the Muslim votes to see it through.

http://www.telegraphindia.com/1130901/jsp/bihar/story_17295670.jsp

[6] JD(U) strategists had worked out that the split with the BJP would help them get the Muslim votes in north Bihar. But the arrest of Bhatkal and his accomplice Asadullah Akhtar alias Haddi has forced them to rework their calculations for the Muslim-dominated seats in north Bihar — Darbhanga, Madhubani, Katihar, Motihari, Bettiah, Purnea and Kishanganj — ahead of the Lok Sabha election next year.

[7] Other clerics, reacting to slugfest between different political parties over the arrest of Yasin from Bihar-Nepal borders, said political parties should desist from thinking that the terror issue may make or mar their political fortune.

http://timesofindia.indiatimes.com/city/patna/Muslims-hate-terrorism-Indian-Mujahideen-Clerics/articleshow/22195020.cms

[8] The clerics also want that the Centre should come out with a whitepaper on Indian Mujahideen(IM) to enlighten people about this banned organization.

http://timesofindia.indiatimes.com/city/patna/Muslims-hate-terrorism-Indian-Mujahideen-Clerics/articleshow/22195020.cms

[9] Dr A A Hai, who also organizes religious events at Masjid Abdul Hai, said the philosophy of Mujahideen is absolutely misleading and anti-Islamic. Terrorism should be taken as a law and order problem and should not be politicized, he added.

http://timesofindia.indiatimes.com/city/patna/Muslims-hate-terrorism-Indian-Mujahideen-Clerics/articleshow/22195020.cms