Archive for the ‘தனியாக ஆணுடன் இருப்பது’ category

திருமணத்துக்கு முன்பாகவே சேர்ந்து பழகி வருவதற்கு இஸ்லாமில் இடமுண்டா?

ஏப்ரல் 11, 2010
திருமணத்திற்கு முன்பே பழகி வருவதா? சோயப் – சானியாவுக்கு கண்டனம்
ஏப்ரல் 12,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7190

Front page news and headlines today

சமீபத்தில், ஒரு ஆராய்ச்சியாளார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

……………….the  Holy  Prophet  said: “A  man  shall  never  be  alone  with  a woman  except  that  the  third  party  between  them  is  Satan”. (Tirmidhi).

This  Hadith  warns  against  the  risky  behavior  and  satanic  inclinations  if and when  one  visits  the  opposite  sex  in  seclusion,  whether  it  is  on phone,  in chat  rooms,  or  in  person  for  any  purpose, in other words, young boys and girls should not be allowed to mix together.

Addressing  the  pious wives  of the Holy  Prophet  (peace  and  blessings  of  Allah  be  on him), Allah says:    “You are  not  like  any  other  women  if  you  are  righteous.   So,  be  not  soft in speech,  lest  he  in  whose  heart  is  a  disease should  feel  tempted;  and speak  a  decent  speech(Al-­‐ Qur’an, 33:33).

This applicable to all women and therefore, they  should  not  behave  like other  women  in  the  use  of  cell phones, chat  rooms,  web-­cams,  Facebook, Twitter, Orkut, etc

ஐதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் திருமணத்துக்கு முன்பாகவே சேர்ந்து பழகி வருவதற்கு, முஸ்லிம் மத அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

டென்னிஸ் வீராங்கனை சானியாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும் வரும் 15ம் தேதி, ஐதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆயிஷா சித்திக் என்ற பெண், சோயப் மாலிக் தன்னை ஏற்கனவே 2002ல் திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், அவர் மூலம் தான் கர்ப்பமடைந்து கருச்சிதைவு செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.சோயப் மாலிக்குடன் திருமணம் நடந்ததற்கான சான்றிதழையும் ஆயிஷா வெளியிட்டார்.இதையடுத்து, சோயப் மீது வரதட்சணை கொடுமை, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சோயப்பிடம் விசாரணை நடத்தி, அவரது பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.பிரச்னை பூதாகரமாவதை உணர்ந்த ஆந்திர அரசியல் பிரமுகர்களும், முஸ்லிம் தலைவர்களும் இந்த விஷயத்தை சுமுகமாக முடிக்க ஆலோசனை நடத்தி, இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் செய்தனர்; ஆயிஷாவை விவாகரத்தும் செய்தனர்.இதையடுத்து, வரும் 15ம் தேதி சோயப் – சானியா திருமணம் நடைபெற உள்ளது.

ஆனால், திருமணத்துக்கு முன், ஆண், பெண் சேர்ந்து பழகுவது முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது என, சன்னி உலேமா வாரியம் இவர்களுக்கு ‘பத்வா’ என்ற மதத் தடை உத்தரவை அளித்துள்ளது.’திருமணத்துக்கு முன் மணமகனும், மணமகளும் ஒரு முறை பார்த்துக் கொள்ளலாம்; மற்ற விஷயங்கள் திருமணத்துக்கு பிறகு தான் நடக்க வேண்டும். ஆனால், சோயப் மாலிக், சானியா வீட்டிலேயே 10 நாட்களாக தங்கியிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுகின்றனர். இவர்களது செயல், முஸ்லிம் மதத்துக்கு அவமானத்தை தேடித் தரக்கூடியது. எனவே, இவர்கள் திருமணத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களது இந்த செயல், திருமணத்துக்கு முந்தைய உடலுறவை ஊக்குவிப்பதாக அமையும்’ என, உலேமா வாரியத்தின் நிர்வாகி மவுலானா ஹாசிப் உல் ஹசன் தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சா தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக விளையாடுவதற்கு, இந்த அமைப்பு ஏற்கனவே 2005ம் ஆண்டு, ‘பத்வா’ விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தவிரவும், சோயப்பின் பாஸ்போர்ட் திரும்ப கிடைக்க இன்னமும் ஒரு வாரம் ஆகும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!

ஒக்ரோபர் 24, 2009

“லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!

கேரளத்திலிருந்து இத்தகைய பிரச்சினைப் பற்றி இன்று விவாதம் கிளம்பியுள்ளது. “லவ்-ஜிஹாத் / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்” என்றெல்லாம் பேசப் படுவது என்னவென்றால், ஒரு முகமதியன், முகமதியன் அல்லாத குறிப்பாக இந்து பெண்னை காதல் வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வது எனத் தெரிகிறது. ஆனால், அவ்வாறு, முகமதியன் அல்லாத பெண் மதம் மாறவேண்டியுள்ளது. அங்கு தான் காதல் என்பது போலியாகி விடுகிறது.

லவ்ஜிஹாத்_1

காதலுக்கு கண் இல்லை என்றெல்லாம் பேசும் போது, மதம் மாறுதல் என்றது ஏன் வருகிறது? மேலும் ஏன் இந்துதான் மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் / வற்புறுத்தல்? முகமதியன் ஏன் மதம் மாறக் கூடாது? இதேன்ன ஒருவழிபாதையா? அந்நிலை இருக்கும் போது, நிச்சயமாக பெண்கள் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஏனெனில் காதல் உண்மையாக இருந்தால் அது இருவழி பாதையாகத் தான் இருக்கமுடியும்? அப்படி இல்லையென்றால், எந்த முகமதியனுக்கும்  முகமதியன் அல்லாத பெண்ணைப் பார்க்கக் கூட அருகதை இல்லை. ஏனெனில் அவன் காதலிக்கவில்லை, காதல் என்ற மாயவலை விரித்து இந்து பெண்களை ஏமாற்றுகிறான் என்பதுதான் உண்மை.

லவ்ஜிஹாத்_2

சரித்திரம் படிக்கும் மாணவர்களுக்கேத் தோன்றிருக்கும், எப்படி முகலாய சுல்தான்கள் தயாராக எப்பொழுதும் ராஜபுதின பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால், பதிலுக்கு ஒரு முகமதிய சுல்தான் கூட தனது சகோதரியையோ, மகளையோ எந்த ராஜபுதின ஆணுக்கும் கொடுத்து திருமணம் செய்யவில்லை என்று! எனவே அங்கும், திருமணம் சமரசம் இன்றி, ஒருவழி பாதையாகவே உள்ளது. ஆகவே அத்தகைய திருமணங்களும் உண்மையான திருமணங்கள் அல்ல, வலுக்கட்டாய மணமே!

லவ்ஜிஹாத்_3

ஆகவே காதலைத் தவிர, கணவன் – மனைவி உறவு முறைகள் தவிர வேறொன்று இருப்பது நன்றாகவேத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது, ஒரு முகமதியன் அல்லாத பெண், முகமதியனை நம்பி திருமணம் செய்து கொள்ளும் போது உண்மையினை அறிய வேண்டாமா? அத்தகைய உண்மையான மனித உறவுகளையும் மீறி இருப்பது மதம் என்றால், அத்தகைய மென்மையான உறவுமுறைகளில் குறுக்கீடாக உள்ள அந்த மத-நிலைப் பற்றி அப்பெண் உண்மை அறியவேண்டும் அல்லது அறிவிக்கப் பட வேண்டும்.

இன்றெல்லாம், பெண்கள் உரிமைகள் என்று அதிகமாகவே பேசப் படுகின்றது! பிறகு எப்படி, மாற்று மதப் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு முகமதியர்களால் திருமணம் செய்துகொள்ளப் படலாம்? அப்பெண் தான் மனமுவந்து ஒப்புக்கொண்டு அத்தகைய முகமதியனைத் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறலாம் அல்லது மற்புறுத்திக் கூறவைக்கலாம், கூறவைக்கப் படலாம். பிறகு பிரச்சினை வரும்போது தான் அப்பெண் அறிவாள், தான் ஏமாற்றப் பட்டு விட்டாள் அல்லது மோசம் செய்யப்பட்டு விட்டோம் என்று. ஆனால், ஒரு பெண்ணிற்கு அது விளையாட்டல்ல அல்லது சொல்லப்படுகின்ற மாதிரி “லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போரோ அல்ல. அத்தகைய காதல் மோசடியில் அவள் உண்மையிலேயே “ஜிஹாதிற்கு”த் தள்ளப் படுகிறாள், ஏனெனில் தனது வாழ்வே போராட்டமாகி விடுகிறது.

ஏற்கெனவே கேரள மற்றும் கர்நாடக உயர்நீதி மன்றங்கள் போலீசை இவ்விஷயத்தை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளது.

“செக்யூலார் இந்தியாவில்” நிச்சயமாக விவாதிக்க வேண்டிய பிரச்சினை தான் இது.