Archive for the ‘தண்ணீர் குடித்தால் அடி’ category

மெஹ்பூபா முஃதி என்ற பெண்ணும், காஷ்மீர் கலவரமும், தீவிரவாதமும், பயங்கரவாதமும்!

ஜூலை 12, 2010

மெஹ்பூபா முஃதி என்ற பெண்ணும், காஷ்மீர் கலவரமும், தீவிரவாதமும், பயங்கரவாதமும்!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=37577

புதுடில்லி ஜூலை,12, 2010: காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்படும் அமைதி கூட்டத்தில் பங்கேற்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த கோரிக்கையை, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஏற்க மறுத்து விட்டார். இதனால், கலவரத்துக்கு தீர்வு காணும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெரும் கலவரம் நடந்து வருகிறது. மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலியாயினர். இதனால், கலவரம் பெரிய அளவில் வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் அமைதி கூட்டம்: இந்நிலையில், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் அமைதி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் இன்று நடக்கவுள்ளது.

கலாட்டா செய்ய்ம் பெண் மெகபூபா மறுப்பு: முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி, இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என அறிவித்தது. உடனடியாக அந்த கட்சித் தலைவர் மெகபூபா முப்தியை தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்,”காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும்’என, வேண்டுகோள் விடுத்தார். இருந்தாலும், கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என்ற தனது முடிவில் மெகபூபா உறுதியாக உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“அமைதி கூட்டத்தில் பங்கேற்கும்படி பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். இதற்காக அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கூட்டத்தில் பங்கேற்பதற்கு சாதகமான சூழ்நிலை இங்கு ஏற்படவில்லை என்பதை அவர்களிடம் தெரிவித்து விட்டேன். இப்படி கூறுவதற்காக பிரதமரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டேன். காஷ்மீர் பிரச்னையில் தலையிட்டு, உடனடியாக தீர்வு காணும்படி பிரதமரிடம் வலியுறுத்தினேன். குறிப்பாக, கலவரத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அவரிடம் விளக்கினேன்.அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அளவுக்கு காஷ்மீர் மாநில அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. காஷ்மீரில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வேண்டும். அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வேண்டும்.இவ்வாறு மெகபூபா முப்தி கூறினார். மெகபூபாவின் இந்த அதிரடியான அரசியலால், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஹூரியத்தால் தொடரும் பதட்டம்: இதற்கிடையே, அனந்தநாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட பல இடங்களில்  ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தது. இருந்தாலும், ஹூரியத் மாநாட்டு அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற இயக்கம் சார்பில், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக ஸ்ரீநகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், சாலைகள், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.

பதட்டம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.இந்நிலையில், சில தனியார் செய்தி சேனல்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, இந்திய எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு சார்பில் காஷ்மீர் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மசூதிக்கு வெளியே தண்ணீர் குடித்த இந்து சிறுவன் அடித்து நொறுக்கப்பட்டான், மற்ற இந்துக்களும் அடித்து விரட்டப்பட்டனர்

ஜூலை 11, 2010

மசூதிக்கு வெளியே தண்ணீர் குடித்த இந்து சிறுவன் அடித்து நொறுக்கப்பட்டான், மற்ற இந்துக்களும் அடித்து விரட்டப்பட்டனர்

இந்துக்களைக் கொல்லும் அமைதியான இஸ்லாம்: இஸ்லாம் என்றால் அமைதி என்றேல்லாம் எப்பொழுதும் தம்பட்டம் அடித்துக் கொள்வது முஸ்லீம்களின் வழக்கம். ஆனால், இஸ்லாத்திலேயே ஏன் அந்த அமையில்லை என்ற மர்மத்தை அவர்கள் என்றும் விளக்கியதில்லை. இந்தியாவில் முஸ்லீம்கள் செய்யும் கலாட்டாக்களை சொல்லமாளாது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் நிலைமையை யாரும் நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. பல கோடிகளில் இருந்த இந்துக்களின் மக்கட்தொகை 1947லிருந்து, இப்பொழுது, அப்படியே குறந்து விட்டது.

அமைதியாக இருக்கும் இந்திய செக்யூலார் ஊடகங்கள்: ‘Hounded’ Hindus take shelter in Karachi cattle pen after drinking water from mosque என்று கூகுள் தேடலில் ஏகப்பட்ட விஷயங்கள் வெளிவருவது, வியப்பாக இருக்கிறது. அமைதியாக இருக்கும் இந்திய செக்யூலார் ஊடகங்கள், ஆமாம் “இஸ்லாமாக” இருக்கும் அவற்றிடம் எதையும் எதிர்பார்க்கமுடியாதுதான். அதனால்தான், அப்ஸல்குரு உன்னுடைய மாப்பிள்ளையா என்று கேட்டால் இந்தியாவில் கோபம் வருகிறது போலும்!

கராச்சியில் இந்துக்கள் தாக்கப்பட்டது: 09-07-2010 வெள்ளிக்கிழமையன்று கராசியில் நடந்த சம்பவம், முஸ்லீம்கள் இந்துக்களின்மீது எவ்வளவு துவேஷத்தைக் கொண்டுள்ளனர் என்று மெய்ப்பிக்கிறது. கராச்சியில் மெமோன் கோத் என்ற இடத்தில் வசிக்கும் 60 இந்துக்கள் தங்களது பெண்கள், குழந்தைகளுடன் அங்கியிருந்து வெளியேற்றப்பட்டனர். காரணம், மசூதிக்கு வெளியே இருந்த குளிர்ந்த தண்ணீரரை ஒரு இந்து சிறுவன் குடித்துவிட்டானாம், அதனால் அவன் அடித்து நொறுக்கப்பட்டான். பிறகு, அங்கிருந்த முஸ்லீம்களின் வெறி மற்ற இந்துக்களின்மீது பாய்ந்தது. உடனே முஸ்லீம்கள் பல இந்துக்களை அடித்து விரட்டினர். எல்லோரும் பயந்து ஓடி அருகிலிருந்த மாட்டுக்கொட்டையில் அலைக்கலம் புகுந்தனர்.

இந்துக்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்படும் லட்சணம்: மீருமல் என்ற அந்தப் பகுதியைசேர்ந்த இந்து கூறுவதாவது, “ஒரு பண்ணையில் கோழிக்குஞ்சுகளை பாதுகாக்கும் வேலையில் உள்ள என்னுடைய மகன் தினேஷ் மசூதிக்கு வெளியே இருந்த குளிர்ந்த தண்ணீரரை குடித்துவிட்டானாம். உடனே நரகமே இங்கு வந்துவிட்டது போலயிருந்தது. அவனை அங்கிருந்தவர்கள் அடித்து உதைத்தனர்”.

“பிறகு 150 ஆட்கள் வந்து எங்களை அடித்ததில், ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அனர்கள் ஜின்னா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்”, என்று விளக்கினார்.

அடிபட்டா ஹீரா சொல்வதாவது, அங்கிருக்கும் 400 குடும்பங்களையும், முஸ்லீம்கள், அவரவர் இருப்பிடங்களை விட்டுவிட்டு, அங்கிருந்து சென்று வேறு இடத்திற்கு சென்றுவிடுமாறு மிரட்டுகிறார்கள். நாங்கள் எங்களது வீடுகளுக்குக் கூடச் செல்ல பயந்து, இந்த மாட்டுக் கொட்டகையில் பயந்து வாழ்கிறோம். ஏனெனில் அவர்கள் எங்களைக் கொன்றுவிடுவதாகக் கூட மிரட்டியிருக்கிறார்கள்”.

கண்டுகொள்ளாத போலீஸ்காரர்கள்: போலீஸ்காரர்களுக்கு இவ்விஷயங்கள் எல்லாமே தெரியும், ஆனால், இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீமைகளை, குற்றங்களை தடுக்க எந்தவிட நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆமாம், அங்கிருக்கும் போலீஸார் எல்லாமே முஸ்லிம்கள், பிறகு அவர்கள், எப்படி நியாயமாக நடந்து கொள்வார்கள்?

பாகிஸ்தானில் அதிகரித்துவரும் கொடுமைகள், சித்திரவதைகள், கொலைகள்: இந்துக்கள் தாங்கமுடியாத அளவிற்கு, பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

பாகிஸ்தானிய-இந்துக்கள்-இந்திய-பிரஜைகளாக-விருப்பம்

பாகிஸ்தானிய-இந்துக்கள்-இந்திய-பிரஜைகளாக-விருப்பம்

இதனால், அவர்கள், இந்திய பிரஜ உரிமையைப் பெறத் துடிக்கின்றனர்.