Archive for the ‘ஜெய்ப்பூர்’ category

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

ஆம்பூர் உமர் சாலையில் மதரஸாஎன்ற இடத்தில் கைதா அல்லது மதரஸாவில் கைதா? – தமிழ்.ஒன்.இந்தியாவின் உண்மை மறைப்பு செய்தி[1]: ஆம்பூரில் பதுங்கியிருந்த 2 வட மாநில தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 5 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர்கள்தான் என தெரிய வந்துள்ளது[2]என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றித்திரிந்து கொண்டு இருப்பதாக ஆம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது[3]. இதையடுத்து போலீசார் நேற்று மாலை ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் சரிவர பதிலளிக்காததால் போலீசார் அவரை ஆம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா” என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. மதராஸவில் தங்கியிருந்த பயங்கரவாதி கைது என்று உண்மையை வெளியிட ஏன் மறைப்பு என்று தெரியவில்லை. மதரஸாக்கள் பயங்கரவாதத்திற்கு / தீவிரவாதங்களுக்கு உதவுகின்றன என்ற உண்மையினை மறைக்க அவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கலாம். பி.டி.ஐ ஏற்கெனவே அவ்வுண்மையினை வெளியிட்டுள்ளது[4]. அச்செய்தி மற்ற ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன[5].

ஆம்பூர் சாலை - உதாரணம்

ஆம்பூர் சாலை – உதாரணம்

.பி.போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள்[6] / தீவிரவாதிகள்[7]: உத்தரபிரதேச ஆக்ரா தாலியான் காண்டி பகுதியை சேர்ந்தவர் சையது மாமூன் அலி. இவரது மகன் சையது முகம்மது அலி (வயது 37). இவர் மீது உத்தரபிரதேச மாநிலம் போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், தர்கா, மற்றும் நிறுவனம் முதலியவற்றிற்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்ததால் வழக்குகள் பதிவாகி உள்ளன[8]. ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு உள்ளது[9]. ஒரு இது தொடர்பாக சையது முகம்மது அலியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார். இதனால் தீவிரவாதிகளுடன் சையத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று அம்மாநில போலீசார் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அவரை அறிவித்தனர். மேலும் சையத்தின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவரை சுற்றியுள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவரை போலீசார் தினமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சையத் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக உள்துறைக்கு, உத்தரபிரதேச போலீசார் தகவல் கொடுத்தனர். உள்துறை அதிகாரிகள் உளவு துறை மூலம் வேலூர் மாவட்ட போலீசாரை உஷார்படுத்தினர்[10]. “புதிய தலைமுறை” டிவி பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றது.

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

ஆம்பூர் மதரஸாவில் தங்கியிருந்த தீவிரவாதி கைது: எஸ்.பி. செந்தில்குமாரி உத்தரவின்பேரில் ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் சையது முகம்மது அலியின் அடையாளங்களை சேகரித்து, அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உமர் ரோட்டில் சையத் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு மதரஸாவில் தங்கியிருந்தான் என்று பி.டி.ஐ கூறுகிறது[11]. இதையடுத்து டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை நேற்றிரவு தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சையத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்த அணைக்கட்டு காவல் போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நேற்று முன்தினம் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சையத் என்பது தெரியவந்தது. கடந்த 14–ந் தேதி அடுத்தடுத்து 2 முறை இந்தி, ஆங்கில மொழியில் மாறி, மாறி போனில் மிரட்டல்கள் வந்தன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் சென்னை உள்பட பல்வேறு இடங்களை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்[12].

புதியதலைமுறை - பயங்கரவாதிகள்

புதியதலைமுறை – பயங்கரவாதிகள்

ஆம்பூருக்கு அல்லது தமிழகத்திற்கு என்ன தொடர்பு?: எதற்காக சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சையத் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் சையத் தீவிரவாதிகளின் சிலிபர் செல் எனப்படும் உள்நாட்டு குழுக்களை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சையத்துடன் தொடர்புடைய நபர்கள் வேறு யாராவது? தமிழகத்தில் பதுங்கியுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சையத் கைது செய்யப்பட்டது குறித்து உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அம்மாநில போலீசார் வேலூருக்கு விரைந்துள்ளனர். பிடிபட்ட சையத் உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது. சையத் பிடிபட்டபோது அவரிடம் இருந்து 5 சிம்கார்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் எண் பட்டியலையும் சேகரித்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதியதலைமுறை - அணைக்கட்டு காவல் நிலையம்

புதியதலைமுறை – அணைக்கட்டு காவல் நிலையம்

விசாரணையில் வெளியாகும் குழப்பமான விவரங்கள்: காவல்நிலையத்தில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ‘திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மாமுன் அலி என்பவரின் மகன் சையது முகமது அலி என்றும் சிகிச்சை பெறுவதற்கு வேலூரில் தங்கியிருந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான எவ்வித ஆவணங்களும் அவனிடம் இல்லை. மேலும் அவனிடம் 5 சிம்கார்டுகள் இருந்தன. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிம் கார்டுகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்த ஒரு சிம்கார்டு மூலம் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு நேற்றிரவு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு விடிய விடிய விசாரணை நடத்தினர். எஸ்பி செந்தில்குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தியதில், சையது முகமது அலி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேசினான். இதனையடுத்து இந்தி தெரிந்தவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வேலூர் சிஎம்சி அருகே உள்ள லாட்ஜில் தனது நண்பருடன் தங்கியிருந்தது தெரியவந்தது.

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் - கைது - உதாரணம்

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் – கைது – உதாரணம்

வேலூர் லாட்ஜுகளில் சோதனை: இதனையடுத்து, நேற்றிரவு வேலூரில் உள்ள ஒரு சில லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை தீவிரமாக சேகரித்தனர். இதில் வட இந்திய நபருடன் தங்கியிருந்தவனை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ராஜஸ்தான், ஆக்ரா உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும், வேலூரில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வேலூரில் யார் அவர்களுக்கு உதவி செய்தது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவர்களுக்கு வேறு எந்த அமைப்புடன் தொடர்பு உள்ளது? மேலும் இவர்களின் சதித்திட்டம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிம் கார்டுகளில் உள்ள செல்போன் எண்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் வேலூரில் இருந்து அவர்களுக்கு உதவி செய்த பலர் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகள் போர்வையில் தங்கியிருந்து வேலூரில் குண்டுகள் வைக்க சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் 2 தீவிரவாதிகள் கைது, Posted by: Mayura Akilan, Published: Friday, October 16, 2015, 16:59 [IST].

[2] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[4] http://www.ptinews.com/news/6626972_Man-wanted-for-making-terror-threats-in-UP-held-in-TN.html

[5] Business Standard, Man wanted for making terror threats in UP held in TN, Press Trust of India , Vellore (TN) October 16, 2015 Last Updated at 22:22 IST.

[6] https://www.youtube.com/watch?v=PWxP66jhXx0

[7] மாலைமலர், சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் பிடிபட்ட வாலிபர் தீவிரவாதியா? – ரகசிய இடத்தில் விசாரணை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 12:06 PM IST

[8] Syed Ahmed Ali had allegedly made terror threats to Taj Mahal in Agra, a dargah besides an institution in Lucknow. He had arrived here two days ago and stayed in a Madrasa in Ambur. http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[9] தினகரன், ஆக்ரா, ஜெய்ப்பூரில் குண்டுவெடிப்பில் தொடர்பு: வேலூரில் கைதான தீவிரவாதியிடம் விசாரணை, அக்டோபர்.17, 20125. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173391

[10] http://www.maalaimalar.com/2015/10/16120645/CMC-hospital-bomb-threat-Ambur.html

[11] Intelligence Bureau officials alerted Tamil Nadu police about the presence of Ali in Ambur in a Madrasa. “We immediately began our probe and with the help of local people we identified Ali…Now Uttar Pradesh police are on their way to take this man into their custody through court,” the official added.

http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[12] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/10/17014634/CMC-Hospital-bomb-threat.vpf

சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் – இருப்பினும் புத்தகம் வெளியிடப்பட்டது!

பிப்ரவரி 1, 2012

சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் – இருப்பினும் புத்தகம் வெளியிடப்பட்டது!

 

தேர்தல் ஜுரத்தில் காங்கிரஸ் இவ்வாறு செய்கிறதா? காங்கிரஸ் முஸ்லீம்களை தாஜாவ் செய்ய வேண்டும் என்று பலவேலைகளை செய்து வருகிறது. ராஹுல் காந்தி குல்லா போட்டுக் கொண்டு, தாடி வைத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்தாகி விட்டது. சோனியாவும் பைஜாமா குர்தா போட்டுக் கொண்டு, பிரச்சாரம் செய்து சென்று விட்டார். முல்லாயம் சிங் யாதவோ, தில்லி இமாமை கொண்டு வந்து ஆதரவைக் காட்டி விட்டார். சும்மா இருக்குமா, காங்கிரஸ், சல்மான் ருஷ்டியை அடுத்து தஸ்லிமா நஸ்ரினைப் பிடித்துக் கொண்டு விட்டது. அவரது புத்தகத்திற்கு தடை என்று ஆரம்பித்து விட்டது. புரிந்து கொண்ட முஸ்லீம்கள், புத்தக கண்காட்சி திடலுக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். நல்ல வேளை, காங்கிரஸ் ஆட்சி நடக்காதத்தால், அவர்கள் உள்ளே அனுமதிக்கப் படவில்லை.

 

புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர்களையும், புத்தகங்களையும் தடை செய்வதேன்? ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ரஷ்டி கலந்துகொள்ள முடியாமல் போனதுபோன்றே, கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டு விழா, சில அடிப்படைவாத முஸ்லீம்கள் மிரட்டலால் ரத்து செய்யப்பட்டுள்ளது[1]. “தி சாட்டானிக் வெர்சஸ்” (சாத்தானின் கவிதைகள்) என்ற புத்தகத்தை எழுதி ஆண்டுகள் பல ஆகிவிட்டபோதிலும், அதில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாக கூறி, எழுத்தாளர் சல்மான் ரஷ்டியை இன்னமும் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய அமைப்பினர். அவர்களது எதிர்ப்பு காரணமாக அண்மையில் ஜெப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொள்ள முடியாமல் தனது நிகழ்ச்சியையே ரத்து செய்தார் சல்மான்.

புத்தக வெளியீட்டு விழாவிற்கு மறுப்பு / தடை: இந்நிலையில், அவரைப்போன்றே இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளானவர் பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். வங்கதேசத்திலிருந்து தப்பிவந்து இந்தியாவில் அடைக்கலமான தஸ்லிமா, இன்னமும் பகிரங்கமாக நடமாட முடியாமல் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். அவரது விசாவை புதுப்பிக்கக் கூட இந்திய அரசாங்கம் தயங்கியது. அதாவது, தேர்தல் ஜுரம் வந்து விட்டதால், கங்கிரஸுக்கு ஒனறும் புரியவில்லை. இந்நிலையில் அவர் எழுதிய “நிர்பஸான்” (தலைமறைவு வாழ்க்கை) என்ற அவரது 7 ஆவது அத்தியாய சுயசரிதை புத்தகத்தின் வெளியீட்டு விழா, கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 36வது புத்தக கண்காட்சியில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து வந்த மிரட்டல்கள் மற்றும் கோரிக்கைகள் காரணமாக புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.

பிறகு எதிர்ப்புகளை மீறி, புத்தகம் வெளியிடப்பட்டது: “முதலில் அரங்கத்தில் நாற்காலிகள் இல்லை என்றார்கள், பிறகு வசதி இல்லை என்றார்கள்; பிறகு அடிப்படைவாதிகள் வெளியே எதிர்ப்பைத் தெரிவித்து நிற்கிறார்கள் என்றார்கள், கடைசியாக புத்தகம் அங்கு வெளியிட அனுமதி இல்லை என்றார்கள்”, என்று சிபானி முகர்ஜி என்ற புத்தக வெளியீட்டார் கூறினார்[2].  இத்தகவலை தஸ்லிமா, தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இருந்தாலும், புத்தகம் வெளியீட்டாளர்களின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்[3]. அதாவது, விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மேடை / மண்டபத்திற்குவெளியே, அப்புத்தகம் வெளியிடப் பட்டது, அதனால், விற்பனைக்கும் வைக்கப் பட்டது[4]. நபரூன் பட்டாச்சார்யா என்ற எழுத்தாளர் மூலம், ஒரு புத்தக விற்பனைக் கூடத்தில் தஸ்லிமா நஸ்.ரீன் மற்றும் மனித உரிமைகள் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது[5].


[2] “We had booked the auditorium but the organisers told us that it will not be available. Initially they told us that there are no chairs in the auditorium. On probing further they told us that that minority groups were protesting and had approached the city police over the release of the book. To prevent any disturbance in law and order we were asked to cancel the programme” said Shibani Mukherji, publisher, People’s Book Society, the publishers of the book series.

http://www.thehindu.com/news/states/other-states/article2850625.ece?homepage=true

[3] தினமலர், தஸ்லீமாநஸ்ரின்புத்தகம்வெளியிடஎதிர்ப்பு,, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=397272

[4] Earlier, the Guild asked the publisher not to release the book after protests were reported from fundamentalists. Taslima’s publisher, People’s Book Society (PBS), thereafter released the autobiography outside the auditorium as a mark of protest.

http://timesofindia.indiatimes.com/india/Taslima-Nasreen-book-released-in-Kolkata-despite-protests/articleshow/11715067.cms

[5] The book was launched by author Nabarun Bhattacharya in the presence of Taslima’s supporters and human rights activists.

http://ibnlive.in.com/news/taslimas-book-launched-despite-protests/226224-40-100.html

இந்தியாவின் அரசியல் அவதூறு: முஸ்லீம் ஓட்டு வங்கி, சல்மான் ருஷ்டி தடை, காங்கிரஸின் வெட்கங்கெட்டச் செயல்

ஜனவரி 26, 2012

இந்தியாவின் அரசியல் அவதூறு: முஸ்லீம் ஓட்டு வங்கி, சல்மான் ருஷ்டி தடை, காங்கிரஸின் வெட்கங்கெட்டச் செயல்

முழுவதுமாக தடை செய்யப் பட்ட ருஷ்டி: ருஷ்டி இந்தியாவிற்கு வராதலால், வீடியோ கான்பரன்ஸ் மூலம், அவர் பேச ஏற்பாடு செய்தார்கள். பிறகு, அவர் பேசிய

புத்தகத்திற்கு, எழுத்திற்கு தடை விதித்த பிறகு, எழுத்தாளனுக்கும் தடை என்றால், முந்தைய ஆண்டுகளில், அதே எழுத்தாளன் எப்படி வந்து சென்றான்? அப்பொழுது, முஸ்லீம்களுக்கு ஏன் எதிர்ர்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை?

பேச்சையாவது போட்டுக் காண்பிக்கலாம் என்று தீர்மானித்தபோது, அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி பேசிய வீடியோ காட்சிகள், முஸ்லிம்களின் போராட்டத்தின் காரணமாக இலக்கிய விழாவில் நேற்று திரையிடப்படவில்லை[1]. இதனால், பெரும் சலசலப்பும், சர்ச்சையும் எழுந்தது. இந்தியாவில் பிறந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்றவர் சல்மான் ருஷ்டி. பல ஆங்கில நாவல்களை எழுதிய எழுத்தாளர். இதற்காக, இவர் புக்கர் விருதை பெற்றார். 1988ல், “சாத்தானின் கவிதைகள்’ என்ற புத்தகத்தை எழுதினார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இந்த நூல் அமைந்ததால், ஈரான் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு பத்வா மூலம் மரண தண்டனை அறிவித்தார். இதற்கு பிறகு, ருஷ்டி பல ஆண்டு காலம் பிரிட்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சர்ச்சைக்குரிய இந்த புத்தகம் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

புரளி கிளப்பி விட்டு, ருஷ்டியைத் தடுத்து, பிறகு முழுவதுமாக தடுத்த ராஜஸ்தான் காங்கிரஸ்காரர்கள்: “தாருல் உலூம் தியோபந்த்’ உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் மத தலைவர்களும் ருஷ்டியின் இந்திய வருகையை

ராஜஸ்தானில், பெண்களின் கற்பு காக்கப் படவில்லை. ஒரு காங்கிரஸ் மந்திரி, ஒரு மணமான நர்ஸை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டதுடன், அவளை கொலையும் செய்துள்ளார். கொலை செய்த கொலையாளி சஹாப்புதீன் என்பவன். இந்நிலையில், உண்மைகளை மூடி மறைத்து, வெள்ளையடிக்க, காங்கிரஸ், இதை எதுத்துக் கொண்டு விளையாடியுள்ளது.

எதிர்த்தனர். “ருஷ்டி இந்தியா வந்தால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளனர்’ என, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போலீசார்எச்சரித்தனர். இதையடுத்து, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதை ருஷ்டி தவிர்த்தார். “என்னை இந்த விழாவில் கலந்து கொள்வதை தடுக்கவே, ராஜஸ்தான் போலீசார் இதுபோன்ற கதையை புனைந்துள்ளனர்’ என, ருஷ்டி தன் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் ராஜஸ்தான் முதல்வர் கெலாட் சாமர்த்தியமாக செயல்பட்டிருப்பதாக இலக்கிய விழாவில் பங்கேற்ற பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே, ஜெய்ப்பூரில் இலக்கிய திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இந்த விழாவில், ருஷ்டியின் உரையை வீடியோவில் ஒளிபரப்ப விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.

வீடியோ கான்பரன்ஸ் / காட்சிக்கு தடை: நேற்று மதியம் 3.45 மணியளவில் “மிட் நைட்ஸ் சைல்ட்’ என்ற நாவலை பற்றி ருஷ்டியின் அனுபவ உரை ஒளிபரப்ப

காங்கிரஸ் அரசே நிறுத்தி வைத்த வீடியோ கான்பரன்ஸ். வீடியோ காபரன்ஸ் வசதியையே உபயோகப்படுத்த முடியாமல் துண்டித்து விட்டதாம். தீவிரவாதிகள், பலவழிகளில், உள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை குண்டு வைத்து கொன்று வரும்போது, அப்பொழுது காட்டாத, வேகம் இப்பொழுது காட்டுவது கேவலமாக உள்ளது.

ஏற்படாகியிருந்தது. இதை தெரிந்து கொண்ட முஸ்லிம் அமைப்பினர் இலக்கிய விழா நடக்கும் பகுதியில் நுழைந்து, “ருஷ்டியின் வீடியோ காட்சியை ஒளிபரப்பக் கூடாது’ என, போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால், ருஷ்டியின் வீடியோகாட்சியை ரத்து செய்யும்படி போலீசார் அறிவுறுத்தினர்[2]. வேறு வழியில்லாத நிலையில், விழா ஏற்பாட்டாளர்கள் இந்த வீடியோ காட்சியை ரத்து செய்தனர். அதுமட்டுமல்லாது ருஷ்டியின் வீடியோ காட்சி இணைப்பும் அரசால் துண்டிக்கப்பட்டது.

இலக்கிய விழாவை அரசியலாக்கி அசிங்கப்படுத்திய காங்கிரஸ்; இலக்கிய விழா நடக்கும் இடத்தை அளித்த ராம்பிரதாப் சிங் குறிப்பிடுகையில், “”என் இடத்தை சுற்றிலும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளனர். என்னுடைய சொத்து அமைந்த பகுதியில் வன்முறை ஏற்படுவதை விரும்பவில்லை; என்னுடைய குடும்பத்தினரும், குழந்தைகளும் இந்த இடத்தில் தான் உள்ளனர். எனவே, வீடியோ காட்சியை

காங்கிரஸ் இந்த அளவிற்கு அசிங்கப்படுத்தியுள்ளதால், இது ஒரு அரசியல் அவதூறு என்றே, நியூயார்க டைம்ஸ் விமர்சித்துள்ளது[3]. கருத்துரிமை, பேச்சுரிமை சுதந்திரம் என்று தீவிவாதிகள், இந்திய-விரோதிகள், துரோகிகள் முதலியோர்களுக்கு வசதி செய்து தரும் போது, ஏற்கெனவே வந்து போன ஆளைத் தடுக்க, இத்தனை ஆர்பாட்டம் நடத்துவது அசிங்கம் தான்.

அனுமதிக்க முடியாது,” என்றார். முன்னதாக திட்டமிட்டபடி வீடியோ காட்சி ஒளிபரப்பப்படும் என, விழா நிர்வாகி சஞ்சய் ராய் கூறியிருந்தார்.
வீடியோ காட்சி ரத்தானது குறித்து சஞ்சய் ராய் குறிப்பிடுகையில், “”சல்மான் ருஷ்டியின் முகத்தை திரையில் காட்டுவதை கூட நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம்” என, போராட்டக்காரர்கள் எங்களிடம் கூறினர். இது துரதிருஷ்டவசமானது முட்டாள் தனமான சூழலால் மீண்டும் நாங்கள் பேச்சுரிமை சுதந்திரத்துக்கு எதிரான போராட்டத்தில் பின் தங்கியுள்ளோம். விழா திடலில் கூடியுள்ளவர்களை பாதுகாக்க, நாங்கள் போராட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு பணிய வேண்டியதாக விட்டது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போராட்டக்காரர்கள், விழா நடக்கும் இடத்திலேயே தொழுகை நடத்தினர். ருஷ்டியின் வீடியோ ஒளிபரப்பினால் அதிகப்படியானபாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என, துணை கமிஷனர் வீரேந்திர ஜாலா கூறினார். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எங்கள் மனம் மிகவும் புண்பட்டுள்ளது’ என்றார்.

ஓட்டு வங்கி அரசியல் நடத்தி நாட்டைக் கெடுக்கும் காங்கிரஸ்: ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மைனாரிட்டி மக்கள் சிலர் உயிரிழந்தனர். இதையெல்லாம் மூடி மறைக்கவும், உத்தர பிரதேச தேர்தலில் முஸ்லிம்களின்

அரசே ஊக்குவித்து இப்படி முஸ்லீம்களை நடத்தி வரும் போது, முஸ்லீம்கள் மற்ற நேரங்களில், அளவிற்கு அதிகமாகவே, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காகவும், தேர்தல் என்பதற்காகவும், இவ்வாறு, கேவலப்படுத்துவதை எப்படி சரிகட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை..

ஓட்டுகளை பெறவும், இலக்கிய திருவிழாவில் ருஷ்டியின் வீடியோ காட்சியை அரசு துண்டித்துள்ளது. இதன் மூலம் இன்டர்நெட் தணிக்கை முறையை திணிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இலக்கிய விழாவுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக தெரிவித்த மாநில அரசு, போராட்டக்காரர்களை விழா பந்தலுக்குள் நுழைய விட்டது எப்படி? இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல். ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் அரசு, தரம் தாழ்ந்து செயல்படுகிறது. – பிரகாஷ் ஜவேத்கார், பா.ஜ., தகவல் தொடர்பாளர். இந்தியாவில் பேச்சு சுதந்திரம் பறிபோய்விட்டது என்றும் சகிப்புத் தன்மையும் அருகி வருகிறது என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றம் சாட்டியுள்ளார்[4].