Archive for the ‘ஜெயக்குமார்’ category

ஆதிலா பானு கொலையை விசாரிக்க சென்னைக்கு வந்த மலேசிய போலீஸ்!

நவம்பர் 20, 2010

ஆதிலா பானு கொலையை விசாரிக்க சென்னைக்கு வந்த மலேசிய போலீஸ்!

பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம்[1]: ராமநாதபுரத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான தனிப்படை விசாரணையில், ஆதிலாபானுவை கொலை செய்ததற்கான நோக்கம் குறித்து உறுதிபடுத்த முடியாத நிலையில், வழக்கில் “சந்தேகமான முக்கிய நபர்கள்” மலேசியாவிற்கு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. [அப்படி அவர்கள் சென்றிருந்தால், நிச்சயமாக அவர்கள் யார் என்பதனை அறியலாமே]. மேலும் ஆதிலாபானுவின் தாயாரிடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவல்களை உறுதி செய்வதற்கான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாததால், குற்றவாளிகளின் கொலை நோக்கத்தை உறுதிபடுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இந்நிலையில், மலேசியாவிற்கு தப்பி சென்ற நபர்களை வரவழைப்பதற்கான முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். “கொலை குற்றவாளிகளை ஓரிரு தினங்களில் பிடித்து, உண்மையான காரணங்களை கண்டுபிடித்துவிடுவோம்’ என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை, கைது முதலியன[2]; சம்பவ தினத்தன்று (08-10-2010) மத்தியான பொழுதில் பக்கத்து வீட்டுக்காரரான சுந்தரி என்பவருடன் சமையல் சாமான்களும் சமையல் எரிவாயு உருளையும் வாங்குவதற்கு கடைக்கு போயிருக்கிறார்கள்[3]. ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. யார் அந்த சுந்தரி, சுந்தரி திரும்பி வந்ததளா, போன்ற விஷயங்களைப் பற்றியும் “கப்சிப்” தான். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு நான்கு பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது. இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. ஆனால், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இப்படி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. “செல்போனில் ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன” எனும்போது, அவர்களை ஏன் விசாரிக்கவில்லை என்று தெரியவில்லை[5].

இந்த கேள்விகளுக்கு என்ன பதில்? எனது இரண்டாவது கட்டுரையில், சில கேள்விகளை எழுப்பியிந்தேன்[6].

 

*         மலேசியாவிற்கு தப்பி ஓடிய “சந்தேகமான முக்கிய நபர்கள்” யார்?

*         அடிக்கடி போனில் பேசியுள்ள திருச்சி, மதுரையிலிருந்து இரண்டு நபர்கள் யார்?

*         போலீசார் தயாரித்துள்ள மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலில் உல்லவர்கள் யார்?

*         ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்கள், என்ரால், யார் அவர்கள்?

*         அவருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய பலர் யார்?

*         சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பிய  குறிப்பிட்ட நபர் யார்?

*         வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் யார் பெயரில் உள்ளன?

*         அவற்றை யார் வாடகைக்கு எடுத்துள்ளனர்?

*         அவள் வட்டிக்காக கடன் கொடுத்திருக்கிறாள் என்றால், யார்-யார் கடன் வாங்கியுள்ளனர்?

*         விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார் – அந்த “தொடர்புள்ள சிலர்” யார்?

*          எதிர்ப்பு தெரிவித்தனர் சாத்தான்குளத்தினர் யார்?

*         இப்பொழுது ஏன் அவர்கள் மௌனமாக இருக்கிறார்ள்?

*         மேற்குறிப்பிடப்பட்ட – ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்கள்”, “சிலர்” “பலர்”,…………………………..அவர்களில் இவர்களும் இருக்கிறார்களா?

ஆதிலா கொலையில் மலேசியா போலீஸ் : சென்னையில் தனிப்படை முகாம்[7]: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த ராமநாதபுரம் பெண் ஆதிலாபானு கொலை வழக்கில், அவர் மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதாலும், குற்றாவாளிகள் – சாகுல், முகமது ஹர்ஷத், மணிகண்டன் முதலியோர் போலி பெயர்களில் மலேசியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாலும், இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய மற்றும் மேற்கொண்டு விவரங்களை அறிய அந்நாட்டு போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்[8]. ராமநாதபுரம் மாவட்டம் குப்பன்வலசையை சேர்ந்த முத்துச்சாமியை, சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானு (24) காதலித்து திருமணம் செய்தார். மதம் மாறிய முத்துச்சாமி தனது பெயரை அகமது என மாற்றிக்கொண்டார். முத்துசாமி ஆதிலா பானுவை காதலித்ததற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அகமது ஆனவுடன் முகமது மலர்ந்து அமையாகினர்[9]. வேலைக்காக மலேசியா சென்ற முத்துச்சாமி, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அழைத்து சென்றார். தாய் ஹம்சத் நிஷாவை பார்ப்பதற்காக ஆதிலாபானு அடிக்கடி இந்தியா வந்து சென்றார். ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள வீட்டிலிருந்த இவர், கடந்த நவ., 8ல் குழந்தைகளுடன் மாயமான நிலையில், மதுரை வாடிப்பட்டி அருகே கால்வாயில் உடல்கள் கிடந்தது.

மலேசியப் பத்திரிக்கைகள் கொடுக்கும் விவரங்கள்[10]: இங்கு தமிழகத்தில் நாளிதழ்கள் ஒரளவிற்கே செய்திகளைக்கொடுக்கும் நிலையில், மலேசிய நாளிதழ்கள் சிறிது அதிகமாகவே விவரங்களை அளிக்கின்றன. மொத்தம் 20க்கும் மேலானவர்கள், இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். அதில் மூவர் மலேசியாவிற்கே தப்பித்து வந்துவிட்டனர். நவம்பர் 12ம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர்கள் சென்றுள்ளனர். அம்மூவரில் ஒருவன், ஏற்கெனெவே மலேசிய பிரஜையாக இருக்கிறான்[11], ஏனெனில் அவனிடம் மலேசிய நாட்டு அடையாள அட்டை இருந்தது. சாத்தான்குளத்து பஞ்சாயத்தினர், இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் மிரட்டிவந்ததாக தெரிகிறது[12]. இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள ரூ.2.5 லட்சம் பணம் கேட்டதாக போலீஸாருக்குத் தெரிகிறது[13]. ஆனால், அக்குடும்பம் அப்பணத்தைக் கொடுக்க மறுத்துள்ளது[14]. மேலும் போலீஸ் விசாரணையில் தெரிந்ததாவது, முத்துசாமி என்கின்ற அகமது தன்னுடைய மனைவி-மக்களுடன் அங்கு வாழ வேண்டுமானால், அப்பணத்தைக் கொடுத்தே ஆகவேண்டும் என்று மிரட்டியதாகத் தெரிகிறது[15]. செவ்வாய்கிழமை (16-11-2010) அன்று பி.ஆர், லட்சுமணன், வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் பெர்ணாமாவிற்குச் சொன்னதாவது[16], “பணத்திற்காக கொலைசெய்யும் கொலையாளிகள் மூலம் தான் இக்கொலை நடத்தப்பட்டுள்ளாத நாங்கள் சந்தேகிக்கிறோம். அவர்கள் உபயோகப்படுத்திய ஸ்கார்பியோ வண்டி ஒன்றையும் கைப்பற்றியுள்ளோம்”. வெளிநாட்டுப் பத்திரிக்கைகளுக்கு, நம்மாட்கள் அதிகமாகவே விவரங்களைக் கொடுப்பார்கள் போலும்!

ஆதிலாவை கொலைசெய்ய ஏன் தீர்மானிக்க வேண்டும்? இது தொடர்பாக இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அவர் மூலம் கொலையாளிகள் குறித்து தகவல் கிடைத்தது. சாத்தான்குளத்தை சேர்ந்தவர்கள் தாம் இதில் சமந்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஆரம்பத்திலேயே ஆதிலா முத்துசாமியை காதலித்தது பிடிக்கவில்லை. கண்டித்ததுடன் எச்சரிக்கையும் விடுத்தனர். அதனால்தான், முஸ்லீமாக மாறி, முத்துசாமி ஆதிலாவைத் திருமணம் செய்து கொண்டான். மலேசியாவிலேயே வேலை கிடைத்ததும், அங்கேயே தங்கிவிடலாம் என்றும் நினைத்தான். ஆனால், ஆதிலா அடிக்கடி தாயாரைப்பார்க்கிறேன் என்று ராமநாதபுரத்திற்கு சென்றுவந்தாள். அப்பொழுதுதான் சாத்தான்குளத்தினருடன் எதோ தொடர்பு அல்லது அவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட நபர்கள் இவளை குழந்தைகளுடன் தீர்த்துக் கட்ட தீர்மானித்துள்ளாதாகத் தெரிகிறது.

சாத்தன்குளத்து சாகுல் யார்?குறிப்பாக சாகுல் என்பவர் இந்த சம்பவத்தில் தலைமையேற்றதும், இவருக்கு உதவியாக ஜெயக்குமாரின் உறவினர் முனியசாமி, முகமது ஹர்ஷத், மணிகண்டன் முதலியோர் சேர்ந்து கொண்டனர்[17]. அவர்களது எவ்வாறு ஈடுபட்டனர் என்று தெரியவந்தது.  ஆனால், இவர்கள் யார், எப்படி ஆதிலாவுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று செய்தித்தாள் விளக்கவில்லை. குற்றவாளிகள் போலி பெயரில் மலேசியா தப்பிச்சென்றதும் உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கையில் வாடிப்பட்டி, ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் களமிறங்கினர். கொலை செய்யப்பட்ட மூவரும் மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதால், மலேசிய போலீசார் சாகுலை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக போலீசார் தெரிவித்தனர். முனியசாமி சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

வேதபிரகாஷ்

© 20-11-2010

 


[1] தினமலர், பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம், நவம்பர் 15, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=126450

[2] வேதபிரகாஷ், அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2), https://islamindia.wordpress.com/2010/11/15/1231-converted-hindu-deepening-mystery/

[4] Police in India have detained two farmers in connection with the death of a Malaysian woman and her two children who had earlier gone missing in South India last Monday (08-11-2010). http://thestar.com.my/news/story.asp?file=/2010/11/14/nation/7427381&sec=nation

[5] ராமநாதபுரத்தின்  “பல முக்கிய நபர்கள்” என்பதனால் அவர்களை கண்ட்கொள்ளாமல் இருக்கபோகிறாற்களா? இது முந்தைய கற்பழிப்பு, நிர்வாண வீடியோ வழக்குப் போலத்தான் உள்ளது.

[6] வேதபிரகாஷ், அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2), https://islamindia.wordpress.com/2010/11/15/1231-converted-hindu-deepening-mystery/

[7] தினமலர், ஆதிலா கொலையில் மலேசியா போலீஸ் : சென்னையில் தனிப்படை முகாம், நவம்பர் 19, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=129702

[8] சென்ற மாதம் கூட, மலேசிய போலீஸ் மைக்கேல் சூசை என்பவனது கைரேககள் பதிவு செய்ய வந்தனர்.

http://www.thestar.com.my/news/story.asp?sec=nation&file=/2010/9/1/nation/20100901182614

[9] வேதபிரகாஷ், அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?, https://islamindia.wordpress.com/2010/11/12/1227-illicit-relation-murder-converted-hindu-betrayed/

[10] Three Indian nationals, who were part of 20 people quizzed in connection with the murder of a Malaysian woman and her two children last week, are believed to have slipped into Malaysia. Tamil Nadu police believe the trio, in their 30s, and from here, had left for Kuala Lumpur on Nov 12, via a Jet Airways flight. One of them is believed to be in possession of a Malaysian identity card and had stayed in Malaysia previously.

[12] According to police investigations, a gang had earlier demanded 250,000 Indian rupees (about RM17,000) from the victim’s family which refused to pay the money. Now, the police are piecing sketchy clues which had given a new twist to the murders. According to investigators, Adhila was ostracised by the village ‘panchayat’ (committee) for several years after she had married a man of a different religion. Thus, the money (250,000 Indian rupees) was ostensibly to settle the dispute so that she could return to her native village with her children.

[16] “We suspect these (killings) are the work of hired killers and have seized a Scorpio (four-wheel drive vehicle) which we suspect was used in the events leading to the murders,” Vadipatti police inspector P. R. Lakshmanan told Bernama on Tuesday.

http://www.dailymail.com.my/v2/index.php?option=com_content&view=article&id=424:trio-in-murder-probe-flee-to-malaysia&catid=45:crimes&Itemid=129

[17] தினமலர், ஆதிலா கொலையில் மலேசியா போலீஸ் : சென்னையில் தனிப்படை முகாம், நவம்பர் 19, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=129702

அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2)

நவம்பர் 15, 2010

அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2)

பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம்[1]: ராமநாதபுரத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான தனிப்படை விசாரணையில், ஆதிலாபானுவை கொலை செய்ததற்கான நோக்கம் குறித்து உறுதிபடுத்த முடியாத நிலையில், வழக்கில் “சந்தேகமான முக்கிய நபர்கள்” மலேசியாவிற்கு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. [அப்படி அவர்கள் சென்றிருந்தால், நிச்சயமாக அவர்கள் யார் என்பதனை அறியலாமே]. மேலும் ஆதிலாபானுவின் தாயாரிடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவல்களை உறுதி செய்வதற்கான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாததால், குற்றவாளிகளின் கொலை நோக்கத்தை உறுதிபடுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இந்நிலையில், மலேசியாவிற்கு தப்பி சென்ற நபர்களை வரவழைப்பதற்கான முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். “கொலை குற்றவாளிகளை ஓரிரு தினங்களில் பிடித்து, உண்மையான காரணங்களை கண்டுபிடித்துவிடுவோம்’ என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார்[2]? விசாரணையில், “ஆதிலா பானு, டூரிஸ்ட் விசாவில் அடிக்கடி மலேசியா சென்று வந்ததும், அவருக்கு பலரிடம் இருந்து மொபைல் போனில் அதிக அழைப்புகள் வந்துள்ளதும், அதை தொடர்ந்து மதுரை போன்ற வெளியூர்களுக்கும் செல்வதுமாக இருந்துள்ளார். ஆக இது ஹம்சத்நிஷாவிற்கு தெரிந்துதான் உள்ளது. இதுபோல் திருச்சி, மதுரையிலிருந்து இரண்டு நபர்கள் அடிக்கடி போனில் பேசியுள்ளதும்’ தெரிய வந்துள்ளது. மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலை, போலீசார் தயாரித்துள்ளனர். அதில், ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன. ஆதிலா பானுவுக்கு, வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் இருப்பதால், சொத்துக்காக கொலை நடந்ததா, கள்ளத் தொடர்பால் நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர். அடையாளங்கள் இல்லாத வகையில் கொலை நடந்துள்ளதால், கூலிப் படையினர் மூலம் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் எனவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை, கைது; சம்பவ தினத்தன்று (08-10-2010) மத்தியான பொழுதில் பக்கத்து வீட்டுக்காரரான சுந்தரி என்பவருடன் சமையல் சாமான்களும் சமையல் எரிவாயு உருளையும் வாங்குவதற்கு கடைக்கு போயிருக்கிறார்கள்[3]. ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. யார் அந்த சுந்தரி, சுந்தரி திரும்பி வந்ததளா, போன்ற விஷயங்களைப் பற்றியும் “கப்சிப்” தான். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு நான்கு பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது. இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. ஆனால், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இப்படி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. “செல்போனில் ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன” எனும்போது, அவர்களை ஏன் விசாரிக்கவில்லை என்று தெரியவில்லை[5].

இறந்த பெண்ணின் மொபைலில் நிரம்பி வழிந்த எஸ்.எம்.எஸ்.,கள் : “க்ளூகிடைப்பதில் பின்னடைவு[6]: இதற்கிடையில், இறந்த பெண்ணின் மொபைல் போனை சோதனை செய்தபோது, அவருக்கு பலர் எஸ்.எம்.எஸ்., அனுப்பியது தெரியவந்தது. குறிப்பிட்ட நபர் ஒருவர் மட்டும் சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பி உள்ளார். இதனால், அந்த மொபைலின் “இன் பாக்ஸ்’ நிரம்பிவழிந்தது. போலீசார் பெரிதும் எதிர்பார்த்த மொபைல் போனில், உரிய “க்ளூ’ கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதும், ஆதிலாபானுவுக்கு வந்த மொபைல் அழைப்புகள் குறித்த விசாரணையில் நம்பிக்கை கிடைத்திருப்பதாக தெரிகிறது. “செல்போனில் ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன” என்றுவேறு உள்ளது. இவர்களுக்குள் உள்ள தொடர்பு என்ன?

ஆதிலா பானு பணக்காரி, நாகரிக பெண்மணி என்று தெரிகிறது; “மலேசிய நாட்டில் வேலை பார்த்து வந்த முத்துச்சாமி திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் மலேசியாவுக்கு அழைத்து சென்றார்”, அப்படியென்றால், முத்துசாமி சாதாரண இந்தியன் போல, தனது குடும்பத்தை, மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளான்[7]. ஆனால், ஆதிலா பானு மலேசிய பெண்ணாக இருப்பதினால், அவள்தான், முத்துசாமியை அங்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். “அங்கு காஜிரா பானு மலேசிய நாட்டின் குடியுரிமையும் பெற்றார்”, அதாவது 5 வயது மகளுக்கு மட்டுமா குடியுரிமை வாங்கினார்கள்? மலேசிய பெண்மணிக்கு வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் உள்ளன, அவள் வட்டிக்காக கடன் கொடுத்திருக்கிறாள் போன்ற செய்திகளும் வித்தியாசமாக இருக்கின்றன. இஸ்லாத்தில் வட்டிக்காக கடன் கொடுக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள்.

மலேசியாவிற்கு சென்ற பிறகு கருத்து வேறுபாடு ஏன் ஏற்படவேண்டும்? “இந்த நிலையில் திடீரென கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது”, இது புரியவில்லை – அதாவது என்ன காரணம் என்பது தெரியவில்லை.  முத்துசாமிக்கு அங்கு வேலை கிடைத்திருப்பதனல், அவன் தன் மனைவியுடன், வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம், மற்ற வேலைகள் – குறிப்பாக வட்டிக்கு பணம் கொடுப்பது[8] போன்ற காரியங்கள் – எல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பான். “இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆதிலாபானு தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு மலேசியாவில் இருந்து சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு வந்தார்”, அதாவது கணவனைவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதே நேரத்தில் “ஆதிலா பானு, டூரிஸ்ட் விசாவில் அடிக்கடி மலேசியா சென்று வந்ததும், அவருக்கு பலரிடம் இருந்து மொபைல் போனில் அதிக அழைப்புகள் வந்துள்ளதும், அதை தொடர்ந்து மதுரை போன்ற வெளியூர்களுக்கும் செல்வதுமாக இருந்துள்ளார்”, என்று வந்துள்ள செய்திகளும் முரண்படாக உள்ளன.

மலேசியன் தூதரகத்திற்கே ஒத்துழைக்காத ஆதிலா பானுவின் குடும்பம்[9]: சென்னையிலுள்ள மலேசியன் தூதரகத்து அன்வர் கஸ்மன், கவுன்சிலர்-ஜெனரல் (Consul-General Anuar Kasman) என்பவர், தான் மலேசிய அதிகாரிகளை மதுரைக்கு அனுப்பி இந்த கொலைகளைப் பற்றி மேலும் விவரங்களை சேகரித்து வரும்படி அனுப்புயுள்ளாராம். அவர்கள் ஆதிலா பானுவின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடி விவரங்களைக் கேட்டபோது, அவர்கள் ஒத்துழைப்புதருவதாக இல்லை என்று குறிப்பிட்டனர். “இது வழக்கு மிகவும் சிக்கலான வழக்காக இருப்பதினாலும், நமது வரம்புகளுக்கு வெளியே செல்வதினாலும், அதை போலீஸாருக்கே விட்டு விடுகிறோம்”, என்றார்கள்.

இந்த கேள்விகளுக்கு என்ன பதில்?

*         மலேசியாவிற்கு தப்பி ஓடிய “சந்தேகமான முக்கிய நபர்கள்” யார்?

*         அடிக்கடி போனில் பேசியுள்ள திருச்சி, மதுரையிலிருந்து இரண்டு நபர்கள் யார்?

*         போலீசார் தயாரித்துள்ள மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலில் உல்லவர்கள் யார்?

*         ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்கள், என்ரால், யார் அவர்கள்?

*         அவருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய பலர் யார்?

*         சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பிய  குறிப்பிட்ட நபர் யார்?

*         வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் யார் பெயரில் உள்ளன?

*         அவற்றை யார் வாடகைக்கு எடுத்துள்ளனர்?

*         அவள் வட்டிக்காக கடன் கொடுத்திருக்கிறாள் என்றால், யார்-யார் கடன் வாங்கியுள்ளனர்?

*         விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார் – அந்த “தொடர்புள்ள சிலர்” யார்?

*          எதிர்ப்பு தெரிவித்தனர் சாத்தான்குளத்தினர் யார்?

*         இப்பொழுது ஏன் அவர்கள் மௌனமாக இருக்கிறார்ள்?

*         மேற்குறிப்பிடப்பட்ட – ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்கள்”, “சிலர்” “பலர்”,…………………………..அவர்களில் இவர்களும் இருக்கிறார்களா?

 

வேதபிரகாஷ்

© 15-11-2010


[1] தினமலர், பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம், நவம்பர் 15, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=126450

[2] தினமலர், கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார்?, நவம்பர் 13,2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=125685

[4] Police in India have detained two farmers in connection with the death of a Malaysian woman and her two children who had earlier gone missing in South India last Monday (08-11-2010). http://thestar.com.my/news/story.asp?file=/2010/11/14/nation/7427381&sec=nation

[5] ராமநாதபுரத்தின்  “பல முக்கிய நபர்கள்” என்பதனால் அவர்களை கண்ட்கொள்ளாமல் இருக்கபோகிறாற்களா? இது முந்தைய கற்பழிப்பு, நிர்வாண வீடியோ வழக்குப் போலத்தான் உள்ளது.

[6] தினமலர், இறந்த பெண்ணின் மொபைலில் நிரம்பி வழிந்த எஸ்.எம்.எஸ்.,கள் : “க்ளூகிடைப்பதில் பின்னடைவு, பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010,23:17 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=125110

 

[7] மாலைமலர், மலேசியாவில் இருந்து திரும்பிய தாய்மகன்மகள் கடத்தல்; கேணிக்கரை போலீசில் புகார், Ramanathapuram புதன்கிழமை, நவம்பர் 10, 5:21 PM IST http://www.maalaimalar.com/2010/11/10172123/malaysia-return-mother-daughte.html

[9] Meanwhile, Chennai-based Malaysian Consul-General Anuar Kasman told Bernama that he had sent Malaysian officers to Madurai to obtain more details on the killings. “Our officers visited the woman’s family today but they were not cooperative. It is a complicated case, it is beyond our jurisdiction, we leave it to the police,” said Anuar.

http://www.freemalaysiatoday.com/fmt-english/news/general/12850-two-detained-in-malaysian-triple-murder-mastermind-still-free