Archive for the ‘ஜீவானாம்சம்’ category

சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்!

மார்ச் 30, 2014

சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்!

இந்தோனேசிய பெண் தண்டனை 2014

இந்தோனேசிய பெண் தண்டனை 2014

இஸ்லாமில்  பெண்களின்  உரிமைகள்  பற்றி  பேசுவதும்,   நடப்பதும்: பெண்களின்  உரிமைகள்  பற்றி  முஸ்லிம்கள்  பிரமாதமாகப்  பேசுவார்கள். ஆஹா  பாருங்கள்  இஸ்லாதில்  போல உரிமைகள் மற்ற வேறு எந்த மதத்திலும் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.  ஆனால், தொடர்ந்து பெண்கள் ஏன் சவுதி அரேபியாவில் பாலியில் வன்மங்களுக்கு பெண்கள் ஈடுபடுத்தப் படவேண்டும்,  மாறாக அவர்கள் செக்ஸ் கொடுமையை தாங்கமுடியாமல், ஒருவேளை கொதித்து எழுந்தால்,  அவர்களை அடித்து,  நொறுக்கி வழக்குகள் போட்டு,  சரீயத் சட்டம் மூலம் மரணதண்டனைக் கொடுத்து ஏன் கொல்லப் படவேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார்கள் அல்லது அவ்வாறெல்லாம் இப்பொழுது நடக்கிறதா என்பது போல மௌனமாக இருக்கிறார்கள்.  இந்நிலையில் வழக்கம் போல இப்படியொரு செய்தி வந்துள்ளது.  வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரைக்கும்,  இந்த பெண்களை வேலைக்கு வரவழைப்பது என்பது,  நவீனகால அடிமைத்தனம்,  அடிமை வியாபாரம் என்றுதான் மெய்பிக்கப்படுகிறது[1].

 

இந்தோனேசிய பெண் சவுதி தண்டனை 2014

இந்தோனேசிய பெண் சவுதி தண்டனை 2014

இரு வாரங்களில் ரூ.10 கோடி தராவிட்டால் பணிப்பெண்ணின் தலைதுண்டிப்பு: இந்தோனேஷிய பணிப்பெண்ணின் மரணதண்டனையை நிறுத்துவதற்கு,  சவுதி அரேபியஅரசு,  10 கோடி ரூபாய் கேட்டுள்ளது[2]. சவுதி அரேபியாவில்,  நுராஅல்-கரீப் என்ற முதலாளியிடம், இந்தோனேசியாவைச் சேர்ந்த,  சேத்தினா ஹ்பின்தி ஜூமாதி, 41, வேலை செய்து வந்தார்.முதலாளி, பாலியல் தொந்தரவு செய்ததாகவும்,  கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஜூமாதி வாக்குமூலம் அளித்துள்ளார். முதலாளியை கொலை செய்துவிட்டு, ஆறு லட்சம் ரூபாயைத் திருடி, தப்பிச்சென்றது தொடர்பாக, கடந்த 2007ம்ஆண்டு,  ஜூமாதிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்தமாதம், 14ம்தேதி, மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.  இந்நிலையில், இந்தோனேஷிய அரசு, இறந்த அல்-கரீப்பின் குடும்பத்திற்கு, நஷ்டஈடாக, 11 கோடி ரூபாய் அளித்து  (ரத்தப்பணம்), மரணதண்டனையை நிறுத்த, மத்தியஸ்தம் செய்தது. இதை ஏற்ற, சவுதிநீதி மன்றம், “இருவாரங்களுக்குள், இந்தத்தொகையை கொடுத்தால், பெண்ணின்  மரணதண்டனை  நிறுத்தப்படும்[3];  இல்லை  எனில், மரணதண்டனை  நிறைவேற்றப்படும்’  என,  கூறியுள்ளது[4]. ஆனால்,  11 கோடிரூபாய்  இல்லாததால், ஜூமாதியின்  குடும்பத்தினர்,  நிதிதிரட்டும்  பணியில்  ஈடுபட்டுள்ளனர்[5].  அவர்களுக்கு  ஆதரவாக, பொதுமக்கள்  நிதியுதவி  அளிக்கத்  துவங்கியுள்ளனர்[6]. இந்தோனேசியாவும்  ஒரு  இஸ்லாமியநாடு  தான், இருப்பினும்  இவ்விசயத்தில்  அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு முயன்று வருகிறது.  ஊடகங்களிலும் தண்டனைக்கு  எதிராக  கருத்துருவாக்கம் ஏற்படுகிறது[7].

 

satinah-binti-jumadi-ahmad

satinah-binti-jumadi-ahmad

தெற்காசிய  நாடுகளினின்று  ஏற்றுமதி  செய்யப்படும்  பெண்கள்:  வீட்டுவேலைக்கு  என்று  பல  தெற்காசிய  நாடுகளிலிருந்து ஆயிரக்ககணக்கான  பெண்கள்  வருடந்தோறும்  ஏஜென்டுகள்  மூலம்  அழைத்துச்  செல்லப்பட்டு, ஷேக்குகள்  வீடுகளில்  விடப்  படுகிறார்கள். அதற்குப் பிறகு,  பெரும்பாலான  பெண்களின்  கதி என்ன என்று தெரிவதில்லை. ஷேக்குகள்  அப்பெண்களை  தங்களது  காமத்திற்கு  உபயோகப்படுத்திக்  கொண்டு, வீட்டுவேலைகளைக்கும்  உட்படுத்திக் கசக்கிப்பிழிந்து  விடுகின்றனர். சரியாக  வேலை  செய்யாவிட்டால், மறுத்தால்  அடித்து  உதைக்கப்படுகிறார்கள். அத்தகைய சித்திரவதைகளுக்கு அளவேயில்லை.

செக்ஸ் அடிமைகள்

செக்ஸ் அடிமைகள்

கொடுமைப்  படுத்தப்பட்ட  பெண்க்ளின்  படங்கள்  சிலநேரங்களில்  வெளியில்  வருவதும்  உண்டு[8]. சவுதி  அரேபியா  இவ்விசயத்தில்  மிகவும்  குரூரமாகவே  செய்து  வருகின்றது[9].   பொதுவாக  குரூரமாக  சித்திரவதை  செய்யப்படும்  இப்பெண்கள், ஒருநிலையில்  தடுக்கப்  பார்க்கிறார்கள்,   எதிர்க்க  முயல்கிறார்கள். அந்நிலையில்  பொய்வழக்குப்  போட்டு  தண்டனைக்குட்படுத்தப்  படுகிறர்கள்.  பல  நேரங்களில்  பாதிக்கப்பட்ட  பெண்களே  பழிவாங்க  தாங்களே  சந்தர்ப்பம்  பார்த்து  எஜமானர்களைத்  தாக்குவது, ஏன்கொலை  செய்வதும்உண்டு. ஆனால், இஸ்லாமிய  சட்டத்தில்  பெண்களுக்கு  எதிராகத்தான்   சரத்துகள்  இருப்பதால்,  அவர்களால்  ஒன்றும்  செய்ய  முடியாது. ஒன்று  குரூரமாக  அடிபட்டு  சாகவேண்டும்  அல்லது  இவ்வாறு  மரணதண்டனைக்குட்பட வேண்டும்.  இதுதான்  கதி[10]. ஜனவரி 2013ல்  ஒரு  இலங்கைப்பெண்  கொல்லப்பட்டபோதும்  இத்தகைய  விவரங்கள்  வெளிவந்தன[11].  அப்பொழுது  45 பெண்கள்  தண்டனைக்காகக்  காத்துக்  கிடக்கின்றனர்  என்று  செய்தி  வெளியாகின[12].  குவைத்திலிருந்து  ஒரு  பெண்  எழுதிய  கடிதத்திலும்  அத்தகைய  விவரங்கள்  வெளியாகின[13].

 

Saudi Arabian women slavery

Saudi Arabian women slavery

ஷரீயத்  என்கின்ற  இஸ்லாம்  சட்டப்படி கடுமையான, குரூரமான  தண்டனைகள்  கொடுக்கப்  படல்: சவுதி  அரேபியாவில்  கொலைகுற்றத்துக்காக  2  பேருக்கு  தலைதுண்டித்து  மரணதண்டனை  நிறைவேற்றப்பட்டது [14]. இந்தாண்டில்  இதுவரை 7 பேரின்  தலை  துண்டித்து  மரணதண்டனை  நிறைவேற்றப்  பட்டுள்ளது.  இஸ்லாமிய  நாடான  சவுதி  அரேபியாவில்  பலாத்காரம், கொலை, மதத்தை  அவமதித்தல்,  ஆயுதங்களுடன்  கொள்ளையடித்தல்,  போதைமருந்து  கடத்துதல்  ஆகிய  குற்றங்களுக்கு  மரணதண்டனை  அளிக்கப்படுகிறது. தலையை  துண்டித்து  மரணதண்டனையை  நிறைவேற்றுகின்றனர். தெயிப்  நகரில்  பழங்குடியினத்தை  சேர்ந்த  அப்துல்லா  என்பவர்,  அதே  இனத்தை  சேர்ந்த  ஒருவரை  கொலை  செய்ததாக  குற்றம்  சாட்டப்பட்டது.  அதுபோல  தென்மேற்கு  அசிர்  பகுதியில்  நாசர் அல்  கதானி  என்பவர்  அயத்  இல்கதானி  என்பவரை  கொலை  செய்ததாக  குற்றம்  சாட்டப்பட்டார்.  இருவர்  மீதும்  குற்றம்  நிரூபிக்கப்பட்டதை  தொடர்ந்து  அவர்களுக்கு  மரணதண்டனை  விதிக்கப்பட்டது.   பிறகு இருவரின்  தலையைத் துண்டித்து  தண்டனை  நிறைவேற்றப்பட்டதாக  உள்துறை  அமைச்சகம்  தெரிவித்துள்ளது.  இந்தாண்டு  தொடங்கி 35  நாட்களே  ஆகியுள்ள  நிலையில்,   இதுவரை 7 பேருக்கு  மரணதண்டனை  நிறைவேற்றப்  பட்டுள்ளது.  கடந்த  ஆண்டு  தலை  துண்டிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை  78.  இதில்  வெளிநாட்டினரும்  அடக்கம்.   2012ல்   79 பேருக்கும், 2011ல் 82 பேருக்கும்  மரணதண்டனை  நிறைவேற்றப்பட்டது  குறிப்பிடத்தக்கது[15]. சவூதியில் 5  வயது  மகளை  கொடுமைப்படுத்தி, கற்பழித்துக்  கொன்ற  இஸ்லாமிய  போதகருக்கு 8 ஆண்டு  சிறை, 800 சவுக்கடி –  சாட்சி  சொன்ன  மனைவிக்கும்  தண்டனை!  என்ற  செய்திகள்  எல்லாம்  சகஜமாக  வந்துள்ளன[16].

 

Saudi treatment of migrant workers

Saudi treatment of migrant workers

முலைப்பால்  ஊட்டுங்கள்,   ஆனால்  காரை  ஓட்ட  பெண்களுக்கு  அனுமதியில்லை!: சவுதி  அரேபியாவில்  பெண்களுக்கு  பற்பல  கட்டுப்பாடுகள்  உள்ளன.   எல்லோரும்  உடலை  மறைப்புத்துணியால்  மூடிக்கொண்டு  இருக்க  வேண்டும். வெளியேபோனால், ஒரு  ஆணுடன்தான்  போகவேண்டும். வேலைக்குப்  போகக்  கூடாது…………….இப்படி  ஏராளமான  விதிகள். இந்நிலையில்  பெண்கள்  காரோட்ட  வேண்டி  கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம்  மறுப்புத்  தெரிவித்துள்ளது. செய்க்  அப்துல்  மோஷின்  பின்நாசர்  அலி ஒபைகன்  என்ற  இஸ்லாமிய  வல்லுனர்  சமீபத்தில்  ஒரு  பத்வா  கொடுத்துள்ளார்.  இதன்படி,  சௌதி  பெண்கள்  வெளிநாட்டு  காரோட்டிகளுக்கு  முலைப்பால்  கொடுக்கலாம்,   அவ்வாறு  செய்வதால்,   இஸ்லாமிய  முறைப்படி,  அவர்கள்  மகன்கள்  ஆவார், தமது  மகள்களுக்கு  சகோதரர்கள்  ஆவர்.   இதன்படி,   புதியவர்கள்  கூட  இந்த  பத்வா  மூலம்,   குடும்ப  பெண்களுடன்  கலந்து  இருக்கலாம்.   இதனால்,   முலைப்பால்  உண்ட  அந்த  அந்நிய  ஆண்மகன்  பெண்களிடம்  செக்ஸ் ரீதியிலாக  தொந்தரவு  கொடுக்கமாட்டான்.   இஸ்லாம்  இதை  அனுமதிக்கிறது.

 

saudi slavery cartoon

saudi slavery cartoon

“ஒன்று  எங்களை  காரோட்ட  அனுமதியுங்கள்  அல்லது  எங்களது  காரோட்டிகளுக்கு  முலைப்பால்  ஊட்ட  அனுமதியுங்கள்”: சவுதியில்  என்ன  பிரச்சினை  என்னவென்றால்,  கடைக்குச்  சென்றுவிட்டு  வரும்  பெண்கள்  திரும்ப  வீட்டுக்கு  போக, காரோட்டி  வருவதற்காகக்  காத்துக்  கிடக்க   வேண்டியுள்ளது.  அதனால், தாங்களே  காரோட்ட  வேண்டும்  என்று  விரும்புகிறார்கள்.  இதனால்  தேவையில்லாமல் நேரத்தை  வீணடிக்க  வேண்டாம்  என்கிறார்கள்.  இதையே,   சவுதி  பெண்கள்  தமக்கு  சாதகமாக  எடுத்துக்கொண்டு,  பிரச்சாரம்  செய்ய  ஆரம்பித்துள்ளதாகத்  தெரிகிறது.சவுதி  குடும்பத்திற்கு  ஒரு  காரோட்டித்  தேவைப்படுகிறது.  அதற்கு  பெண்களே  காரோட்ட  அனுமதிக்கப்  படவேண்டும்  என்று  அந்நாட்டுப்  பெண்கள்  போராடி  வருகின்றனர்.  இந்நிலையில்,   அப்பெண்கள்  கூறுவதாவது,    “ஒன்று  எங்களை  காரோட்ட   அனுமதியுங்கள்  அல்லதுஎங்களதுகாரோட்டிகளுக்கு   முலைப்பால்  ஊட்ட  அனுமதியுங்கள்”   என்று  அதிரடியாகக்  கேட்டுள்ளார்கள்[17]!  வளைகுடாநாடுகளில்  பெண்கள்  வேலைக்குப்  போவதும்  அதிகரித்துள்ளது.  சுமார்  மூன்று  வருடங்களுக்குப்  பிறகு,   இப்பொழுது  அல்  வலீது  பின்  தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற  பில்லியனர்  இளவரசர்  பெண்கள்  காரோட்டுவது  பற்றி  தனது  இணக்கமாகக்  கருத்தை  வெளியிட்டுள்ளாராம்.

 

© வேதபிரகாஷ்

30-03-2014

 

[1] http://www.algeria.com/forums/world-dans-le-monde/23714-saudi-slave-treatment-migrant-workers-condemned.html

[2]தினமலர், இருவாரங்களில்ரூ.10 கோடிதராவிட்டால்பணிப்பெண்ணின்தலைதுண்டிப்பு, சென்னை, 30-03-2014.

[3] http://www.ibtimes.co.uk/savesatinah-abused-indonesian-maid-be-beheaded-saudi-arabia-unless-family-pays-1m-1441598

[4] http://www.thejakartaglobe.com/news/indonesia-to-pay-1-87m-to-save-maid-from-death-row-in-saudi-arabia-bnp2tki/

[5] http://www.thejakartaglobe.com/news/indonesia-raising-blood-money-domestic-worker-death-row-saudi-arabia/

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=944177

[7] http://www.thejakartapost.com/news/2014/03/27/editorial-the-tale-satinah.html

[8]In 2010, shocking photographs emerged of maid Sumiati Binti Salan Mustapa, 23, who suffered severe injuries from being stabbed, burned and beaten. Her employer was sentenced to just three years in jail but was later acquitted altogether, in a case that outraged human rights groups.

Speaking at the time, Wahyu Susilo of the Indonesian advocacy group, Migrant Care, said: ‘Again and again we hear about slavery-like conditions, torture, sexual abuse and even death. ‘But our government has chosen to ignore it. Why? Because migrant workers generate £4.7billion in foreign exchange every

[9]Saudi Arabia is notorious for its treatment of domestic staff, the majority of who migrate from poverty-stricken countries.

[10] http://www.dailymail.co.uk/news/article-2261655/Scores-maids-facing-death-penalty-Saudi-Arabia-crimes-child-murder-killing-employers.html

[11] http://www.theguardian.com/world/2013/jan/13/saudi-arabia-treatment-foreign-workers

[12]More than 45 foreign maids are facing execution on death row in Saudi Arabia, the Observer has learned, amid growing international outrage at the treatment of migrant workers.

The startling figure emerged after Saudi Arabia beheaded a 24-year-old Sri Lankan domestic worker, Rizana Nafeek, in the face of appeals for clemency from around the world.

[13]https://islamindia.wordpress.com/2010/07/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/

[14] http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=78346

[15]See more at: http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=78346#sthash.I7cDgE99.dpuf

[16] https://islamindia.wordpress.com/2013/10/10/islamic-clergy-raped-her-daughter-tortured-and-killed-also-but-only-jailed/

[17] https://islamindia.wordpress.com/2010/06/24/saudi-women-threaten-to-breastfeed-their-drivers-if-not-allowed-to-drive/

அப்துல் ரஹீம் மூன்று, முஹமது இலியாஸ் நான்கு பெண்களை திருமணம் செய்ததால் கைது!

ஜூலை 13, 2010

நான்கு பெண்களுடன் திருமணம் : “ஜாலி’ கல்யாண மன்னன் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51030

தினமலர், ஜூலை 30,2010, கோவை : நான்கு பெண்களை திருமணம் செய்து, வரதட்சணை பணத்தில் ஜாலியாக உல்லாச வாழ்க்கை அனுபவித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ்(36); டிரைவர்.

  1. சாம்லா: இவர் சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த சாம்லா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
  2. ரம்லத் நிஷா: இந்த தகவலை மறைத்து இரண்டாவதாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரம்லத் நிஷா(27) என்பவரை 2005ல் திருமணம் செய்து கொண்டார்.
  3. சோபியா: தெரிந்து ஒருவருடனும், தெரியாமல் மற்றொருவருடனும் குடும்பம் நடத்தி வந்த இலியாஸ்,  மூன்றாவதாக சோபியா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.
  4. மற்றொரு ரம்லத் நிஷா: நான்காவதாக கேரளாவைச் சேர்ந்த மற்றொரு ரம்லத் நிஷாவையும் திருமணம் செய்துள்ளார்.

சமீபத்தில் இவரது நிஜ முகம் பற்றி அறிந்த இரண்டாவது மனைவி ரம்லத் நிஷா, முகமது இலியாசிடம் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, வரதட்சணை கேட்டு முகமது இலியாஸ் துன்புறுத்தினார். செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ரம்லத் நிஷா புகார் அளித்ததையடுத்து, முகமது இலியாஸ் கைது செய்யப்பட்டார்.

அப்துல் ரஹீம் மூன்று பெண்களை திருமணம் செய்ததால் கைது!

முதல் மனைவி – ரஹமத் (13-07-2010): கோவை, ஜூலை 12: கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார்[1]. விருதுநகர், வீரசீலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (32). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், கோவை வந்த இவர், பப்ஸ் வியாபாரம் செய்து வந்தார்.  ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகமத் (22) என்பவரை முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சம்சுன் நபியாவை இரண்டாவதாக நிக்காஹ் செய்து கொண்டார்: இந் நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், சம்சுன் நபியா (27) என்பவரை திருமணம் செய்தார்.

மூன்றவதாக பசீலா: மகப்பேறுக்காக அவர் தாயார் வீட்டு சென்றபோது, ரத்தினபுரியை சேர்ந்த பசீலா (24) என்பவருடன் அப்துல் ரஹீம் குடும்பம் நடத்தினாராம்.

முதல் மனைவி புகார்: நீண்ட நாள்களாக அவர் வீட்டுக்கு திரும்பாததால், சம்சுன் நபியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இந் நிலையில், தனது கணவர் இரு திருமணங்களைச் செய்து ஏமாற்றியது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நபியா புகார் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்துல் ரஹீமை கைது செய்தனர்[2].

இது மாதிரி ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன: இஸ்லாத்தில், சட்டரீதியாக (அதாவது அவர்களது ஹதீஸ் / ஷரீயத்படி) ஒரு ஆண்மகன் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்றுள்ளபோது, இங்கு என்ன பிரச்சினை வருகிறது என்று தெரியவில்லை. இதுமாதிரி, ஏற்கெனவே பல வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், அவை என்னவாயின என்று ஊடகங்கள் வெளியிடுவதில்லை.


[1]தினமணி, மூன்று திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது,  First Published : 13 Jul 2010 08:35:35 AM IST; http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=271233&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=3………….81

[2] http://www.dailythanthi.com/article.asp?NewsID=579784&disdate=7/13/2010&advt=2

சானியா திருமணம் – படங்கள்!

ஏப்ரல் 13, 2010

சானியா திருமணம் – படங்கள்!

மணமகள் அழைத்துச் செல்லப் படுகிறாள்

மணமகள் அழைத்துச் செல்லப் படுகிறாள்

திருமணத்திற்காக மணமகள் அலங்கரிக்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுகிறாள்.

மாப்பிள்ளை சடங்கு

மாப்பிள்ளை சடங்கு

மாமனார் ஒப்புதல் அளிக்கிறார்.

மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!

மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!

சோயப் சானியாவிற்கு மோதிரம் அணிவித்தார். ஆமாம், அந்த கருமணி மாலையும் அவர்தான் அணிவித்தாரா?

பெண்ணை வாழ்த்துதல்

பெண்ணை வாழ்த்துதல்

மணமகள் ஆசிர்வதிக்கப் படுகிறாள்.

மணமகன் வாழ்த்தப்படுதல்

மணமகன் வாழ்த்தப்படுதல்

மணமகனும் வாழ்த்தப்படுகிறான்.

மகிழ்ச்சியான நேரம்

மகிழ்ச்சியான நேரம்

தோழி கிண்டல் செய்கிறாரா?

ஜோடியாக நிற்கிறார்கள்

ஜோடியாக நிற்கிறார்கள்

மணமகன், மணமகள் ஜோடியாக நிற்கிறார்கள்

குடும்பதுடன் ஃபோட்டோ

குடும்பதுடன் ஃபோட்டோ

குடும்பத்துடன் புகைப்படம்!

ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்

ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்

சானியா திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்து விட்டது!

பாவம் இந்தியர்கள்

பாவம் இந்தியர்கள்

பாவம் இந்தியர்கள் – எட்டித்தான் பார்க்கமுடியும் போல இருக்கிறது! பார்த்தாலும் என்னத் தெரியும்?

சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?

சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?

அதாவது, இங்கு சானியா என்ற தனிப்பட்ட நபரைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், அப்பெண்ணை வைதுக் கொண்டு பலவிதமாக ஊடகங்கள், மற்றவர்கள், ஏன் அந்நிய சக்திகளும் விளையோடும் போதுதான் இந்தியர்களுக்கும் கவையாக இருக்கிறது.

இதற்கு, பால் தாக்கரேயும், பிரமோத் முத்தாலிக்கும்…………………..யாரும் தேவையில்லை.

ஆமாம் நம் சன் – டிவிக்காரகள் ஏன் அமைதியாக இருந்துவிட்டார்கள்?

அவர்களது “நிஜம்”, “பூதக் கண்ணாடி” கூட்டங்கள் எல்லாம் தூங்கி விட்டனனா அல்லது சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டனவா? இல்லை, அவர்களுக்கும் ஃபத்வா கொடுத்துவிட்டார்களா?

நிக்காஹ் 15ம் தேதி வைத்திருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக முன் கூட்டியே நடத்தி விடுவது என்று ஞாயிற்றுக்கிழமை திர்மானிக்கப் பட்டது. அன்றுதான் சுன்னி உலேமா வாரியமும் ஃபத்வா கொடுத்தது. ஆகவே முன்னதாக நடத்தி விட்டால் எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது.

ஆகவே மெஹந்தி 14ம் தேதி, வரவேற்பு 15ம் தேதி என்று குறிப்பிட்டபடி நடக்கும். ஆகவே மற்ற சடங்குகளிக்கு முன்பாகவே நிக்காஹ் நடந்ததே பாரம்பரியத்திலிருந்து மிகவும் விலகியே நடந்ததுள்ளது கண்டு பெரியவர்கள் குறை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாது மெஹந்தி செய்வது இஸ்லாமிய வழக்கம் இல்லையென்றலும், முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படியே மெஹந்தி வைத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு முந்தைய நாளில் தான் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்லப் பட்டது.

ஃபத்வா கொடுத்தே விட்டார்களாம் – திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்ந்ததற்கு!

ஏப்ரல் 12, 2010

ஃபத்வா கொடுத்தே விட்டார்களாம் – திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்ந்ததற்கு!ட்ட்

தியோபந்தின் ஃபத்வா பிரிவைச் சேர்ந்த, முஃதி அஸ்ரஃப் ஃபரூக்கி (Mufti Ashraf Farooqui) வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், “அவர்களின் அந்த நடத்தை  ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.

திருமணத்திற்கு முன்பாக அப்படி ஒரே கூறையின் கீழ் சேர்ந்திருப்பது ஹராம் ஆகும். நிக்காஹ் கே பஹ்லே தன்ஹை மே மில்னா, பாதே கர்னா, கூம்னா-ஃபிர்னா, இஸ்லாம் மே ஹர்ரம் ஹை”.

சுன்னி உலேமா வாரியம் கல்யாணத்திற்கு முன்பாகவே ஒரே கூறையின் கீழ் வாழ்ந்ததால் இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித் தந்துள்ளதாகவும், அதனால் முஸ்ளிம்களுக்கே பெரிய களங்கத்தை வரவழைத்துள்ளதாகவும் குற்றாஞ்சாட்டப் பட்டு, அந்த ஃபத்வா கொடுக்கப் பட்டுள்ளது.

அந்த வாரியம் அவர்களது நடவடிக்கை ஹராம் / விலக்கப்பட்டது / மறுக்கப் பட்டது / செய்யக் கூடாதது என்று அறிவித்து, முஸ்லீம்கள் யாரும் அவர்களது திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் கூறியுள்ளது.

“இந்த இருவரும் இப்படி சேர்ந்து இருப்பது, நடந்து கொள்வது, ஊடகங்களின் முன்பு நின்று கொண்டு பேட்டி கொடுப்பது…………இவையெல்லாமே ஹராம் தான்”, என்று மௌலானா ஹஸிபூல் ஹஸன் சித்திகி என்ற இஸ்லாமிய அறிஞர் கூறியுள்ளார்.

சோயப் சானியாவின் வீட்டில் ஒரு வாரம் மேலாக இருந்து தங்கிக் கொண்டு, அவர் சானியாவுடன் சேர்ந்து ஆடுவது மாதிரியும், உடற்பயிற்சி செய்வது மாதிரியெல்லாம் டிவிக்கள் காட்டுகின்றன. “இஸ்லாம் இம்மாதிரி கல்யாணத்திற்கு முன்பாக ஒரு ஆண்- ஒரு பெண் சேர்ந்திருப்பது அனுமதிபதில்லை. ஆகையால் இவ்வாறு சேர்ந்து வாழ்வது முதலியவையெல்லாம் திருமணத்திற்கு முன்பாக அனுமதிக்கப்படமாட்டாது”, என்றும் அவர் சொன்னார்.

இதே இஸ்லாமிய அறிஞர் மூன்று வருடங்களுக்கு முன்பு சானியா திருமணத்திற்கு முந்தைய செக்ஸை ஆதரித்து பேசியபோது, ஒரு ஃபத்வா கொடுத்துள்ளாராம். “இவர் தொடர்ந்து இப்படி செய்வது ஒரு பெரிய பாவத்தை செய்வது மாதிரியாகும். அது ஜீனா[ ‘zina’ (fornication)]வை ஊக்குவிப்பதாகும் இருப்பினும் சானியா இவையெல்லாவற்றையும் மறுத்துள்ளார்.

சோயப் இதற்கு முன்பே இஸ்லாமிய அறிஞர்களால் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார். ஏனெனில் அவர் ஆயிஷா சித்திக்கை Sமணந்து கொந்து, இல்லை சென்று சொன்னது…………..முதலிவற்றிற்காக சாடப்பட்டார்.

ரூ.15,000/- கொடுக்கும் மாலிக்கும், 5000 கொடுக்கும் குஞ்சும்!

ஏப்ரல் 8, 2010

ரூ.15,000/- கொடுக்கும் மாலிக்கும், 5000 கொடுக்கும் குஞ்சும்!

விவேக் ஜோக்கில் அடிக்கடி சன் – டிவி மற்ற எல்லா டிவிக்களும் ஓலிபரப்பி பரவசத்தில் ஆழ்த்தி, பிள்ளைகள் வேறு அதை ஒப்பிவித்து, மிகவும் பிரபலமான, “மனைர் குஞ்சு” ஒன்று உள்ளது.

அதில் ஏதோ ரூ.5000/- கொடுத்துவிட்டு கற்பழிப்பு செய்து, அதாவது கற்பழித்து விட்டு ரூ.5000 அபராதம் கொடுத்துத் தப்பித்துக் கொள்வது மாதிரியும், விவேக் குஞ்சை சுட்டு தண்டிப்பது மாதிரியும் இருக்கும்.

இப்பொழுது, பத்து நாட்களாக பொய்-மேல்-பொய் சொல்லி, இந்தியர்களுக்கு ஏதோ இதுதான் முக்கியமானப் பிரச்சினை போல, இந்த அசிங்கமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, ஒளிபரப்பி அவந் அவளுடன் இருந்தான், இவள்-இவனுடன் படுத்தான், கர்ப்பம் ஏற்பட்டது, கரு-கலைந்தது……………………………என்றெல்லாம் விவரமாக போட்டுவிட்டு, இப்பொழுது, தலாக் செய்து விட்டார், ரூ. 15,000/- கொடுப்பார் என்று கதையை முடித்துரிப்பது, நடந்த நிகழ்ச்சிகளை விட மிகவ்ய்ம் கேவலமாக இருக்கிறது.

இதெல்லாம், தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சினை என்றால், ஊடகங்களில் வரச் செய்திருக்கக் கூடாது.

அவ்வாறு விளக்கம் எல்லாம் கொடுத்திருக்கக் கூடாது.

மேல்தட்டு, பணக்கார, நவீன-நாகரிக மாந்தர்களின் உலகம், அவர்கலது எண்ணப்படி ஆண்-பெண்கள் கூடுவார்கள், உறவு வைத்துக் கொல்வார்கள், பிரிந்து விடுவார்கள்……………………..என்றெல்லாம் இருந்தால், ஏன் அத்தகைய “படுக்கையரை” அசிங்கங்களை ஊடகங்களில் எடுத்து வந்து, இம்மாதிரி தேவையற்ற முறையில் ஆபாச-விளம்பரம் பெறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல , மத கலவரம் என்று ஊரே அடங்கிக் கிடக்கும் போது, எதற்கிந்த அடங்காத காம-கல்யாண-கிரக்க-குறுகிய-கலாட்டா செய்திகல், படங்கள்……எல்லாம்…………….எந்த உண்மையை மறைக்க?

“லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!

ஒக்ரோபர் 24, 2009

“லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!

கேரளத்திலிருந்து இத்தகைய பிரச்சினைப் பற்றி இன்று விவாதம் கிளம்பியுள்ளது. “லவ்-ஜிஹாத் / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்” என்றெல்லாம் பேசப் படுவது என்னவென்றால், ஒரு முகமதியன், முகமதியன் அல்லாத குறிப்பாக இந்து பெண்னை காதல் வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வது எனத் தெரிகிறது. ஆனால், அவ்வாறு, முகமதியன் அல்லாத பெண் மதம் மாறவேண்டியுள்ளது. அங்கு தான் காதல் என்பது போலியாகி விடுகிறது.

லவ்ஜிஹாத்_1

காதலுக்கு கண் இல்லை என்றெல்லாம் பேசும் போது, மதம் மாறுதல் என்றது ஏன் வருகிறது? மேலும் ஏன் இந்துதான் மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் / வற்புறுத்தல்? முகமதியன் ஏன் மதம் மாறக் கூடாது? இதேன்ன ஒருவழிபாதையா? அந்நிலை இருக்கும் போது, நிச்சயமாக பெண்கள் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஏனெனில் காதல் உண்மையாக இருந்தால் அது இருவழி பாதையாகத் தான் இருக்கமுடியும்? அப்படி இல்லையென்றால், எந்த முகமதியனுக்கும்  முகமதியன் அல்லாத பெண்ணைப் பார்க்கக் கூட அருகதை இல்லை. ஏனெனில் அவன் காதலிக்கவில்லை, காதல் என்ற மாயவலை விரித்து இந்து பெண்களை ஏமாற்றுகிறான் என்பதுதான் உண்மை.

லவ்ஜிஹாத்_2

சரித்திரம் படிக்கும் மாணவர்களுக்கேத் தோன்றிருக்கும், எப்படி முகலாய சுல்தான்கள் தயாராக எப்பொழுதும் ராஜபுதின பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால், பதிலுக்கு ஒரு முகமதிய சுல்தான் கூட தனது சகோதரியையோ, மகளையோ எந்த ராஜபுதின ஆணுக்கும் கொடுத்து திருமணம் செய்யவில்லை என்று! எனவே அங்கும், திருமணம் சமரசம் இன்றி, ஒருவழி பாதையாகவே உள்ளது. ஆகவே அத்தகைய திருமணங்களும் உண்மையான திருமணங்கள் அல்ல, வலுக்கட்டாய மணமே!

லவ்ஜிஹாத்_3

ஆகவே காதலைத் தவிர, கணவன் – மனைவி உறவு முறைகள் தவிர வேறொன்று இருப்பது நன்றாகவேத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது, ஒரு முகமதியன் அல்லாத பெண், முகமதியனை நம்பி திருமணம் செய்து கொள்ளும் போது உண்மையினை அறிய வேண்டாமா? அத்தகைய உண்மையான மனித உறவுகளையும் மீறி இருப்பது மதம் என்றால், அத்தகைய மென்மையான உறவுமுறைகளில் குறுக்கீடாக உள்ள அந்த மத-நிலைப் பற்றி அப்பெண் உண்மை அறியவேண்டும் அல்லது அறிவிக்கப் பட வேண்டும்.

இன்றெல்லாம், பெண்கள் உரிமைகள் என்று அதிகமாகவே பேசப் படுகின்றது! பிறகு எப்படி, மாற்று மதப் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு முகமதியர்களால் திருமணம் செய்துகொள்ளப் படலாம்? அப்பெண் தான் மனமுவந்து ஒப்புக்கொண்டு அத்தகைய முகமதியனைத் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறலாம் அல்லது மற்புறுத்திக் கூறவைக்கலாம், கூறவைக்கப் படலாம். பிறகு பிரச்சினை வரும்போது தான் அப்பெண் அறிவாள், தான் ஏமாற்றப் பட்டு விட்டாள் அல்லது மோசம் செய்யப்பட்டு விட்டோம் என்று. ஆனால், ஒரு பெண்ணிற்கு அது விளையாட்டல்ல அல்லது சொல்லப்படுகின்ற மாதிரி “லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போரோ அல்ல. அத்தகைய காதல் மோசடியில் அவள் உண்மையிலேயே “ஜிஹாதிற்கு”த் தள்ளப் படுகிறாள், ஏனெனில் தனது வாழ்வே போராட்டமாகி விடுகிறது.

ஏற்கெனவே கேரள மற்றும் கர்நாடக உயர்நீதி மன்றங்கள் போலீசை இவ்விஷயத்தை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளது.

“செக்யூலார் இந்தியாவில்” நிச்சயமாக விவாதிக்க வேண்டிய பிரச்சினை தான் இது.