மே 10, 2015
அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை–புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான–செக்ஸியான திட்டம் (2)

30 More Women, Children Escape Boko Haram Sambisa
“நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” – இனவெறி முதல் ஜிஹாத் வரை: ஜிஹாதி பாதையில் தீவிரவாதத்தை வளர்க்க பொருளாரத்தைப் பாதிக்கும் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் வேலையில், பொகோ ஹராமின் பெண்களின் மீதான தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” என்ற [eugenics] முறையும் இக்காலத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் வெள்ளை-கறுப்பு நிற மக்களிடையே உள்ள வேறுபாடுகளை களைய அவர்க்களுக்கிடையே திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. விருப்பப்படி குழந்தைகளைப் பெற்ருக் கொள்ள நவீன முறைகளும் உருவாக்கப் பட்டு விட்டன[1]. இப்பொழுதைய பால்டிமோர் கலவரங்களுக்குக் கூட அத்தகைய விளக்கம் கொடுக்கப்பட்டது. உலகப்போர்களுக்கு முக்கியமான காரணம் இனவெறி மற்றும் அது சம்பந்தமான விஞ்ஞானத்திற்குப் புறம்பான இனவெறி நம்பிக்கைகள். அதில் ஒன்று இனத்தூய்னை என்பது. இதன் மூலம் வெள்ளைநிற மக்களிடையே, யார் உயர்ந்தவர், சிறந்தவர் மற்றும் அறிவாளி அத்தகைய நிலை எந்த மக்களிடம் காணப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ச்சி நடந்து, அதிலும் மதம் புகுத்தப்பட்டது. இப்பொழுது, ஜிஹாதிகளின் அறிவுஜீவிக்குழுக்கள் அவற்றைப் பின்பற்றுகின்றன போலும்.

Boko-Haram-rescued women from sex harassment
பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: இஸ்லாமிய நாடுகளில் அல்லது முஸ்லிம்களினால் இது – “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” வேறுமுறையில் செயல்படுத்தப் படுகின்றன. அதாவது, பெண்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள செய்தல், நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்ளுதல், நூற்றுக்கணக்கில் பெண்களை கற்பழித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் செய்தல் என்ற முறைகள் பின்பற்றப் படுகின்றன. முஸ்லிம்களின் நான்கு-மனைவி திட்டம் விமர்சிக்கப் பட்டாலும், பொகோ ஹராம் என்ற ஜிஹாதி இயக்கத்தின் வலுக்கட்டாய உடலுறவு, செக்ஸ், கற்பழிப்பு முதலியவை இந்திய ஊடகங்களில் குறைவாகவே விவாதிக்கப்படுகின்றன. போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் என்பவர் இந்தப் பெண்களை நாங்கள் விரும்பும் நபர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம். அல்லது அடிமைகளாக விற்று விடுவோம். அல்லது அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார். ஏற்கெனவே பத்து வயதுச் சிறுமிகளை எல்லாம் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்தான் போகோ ஹராம் இயக்கத்தினர்[2]. ஆகவே பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல் என்ற இம்முறை, அவர்களது குரானில் உள்ள “இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்ட பெண்கள்” பிறகு அனைவருக்கும் பொதுவானர்கள் என்ற இறையியல் சித்தாந்தத்திற்கு ஏற்றமுறையில் செயல்படுத்துவாதாகத் தோன்றுகிறது[3].

Escaped women tell their horrowful stories
பள்ளி சிறுமிகள் கடத்தல் – செக்ஸ், குழந்தை பெற்றெடுப்பு 2014-15 நிகழ்வுகள்: நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி 2014 பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற நைஜீரிய ஆயுதக்குழுவான போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர்[4]. இவர்களை விடுவிக்க மக்கள் தெருக்களில் வந்து ஆர்பாட்டம் செய்தனர். போர்னா பகுதியின் ஆளுநர், பெண்கள் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்க்ளுக்கு சன்மானம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவிகளில் 107 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சில மாணவிகளை விடுவித்துவிட்டதாக தீவிரவாதிகள் தகவல் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் தீவிரவாதிகள் கடத்தி செல்லும் வழியிலேயே சில மாணவிகள் ஜீப்பில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுவிட்டதாக நைஜீரிய ராணுவ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்குப் பின்னணியாக, போகோ ஹராம் இயக்கத்துக்கு அல் காய்தா உதவியிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது[5]. காரணம் இதே போன்ற மாணவிகள் கடத்தல் சம்பவங்களை அல்ஜீரியாவில் 1990-க்களிலும், 2000களிலும் அல் காய்தா நிகழ்த்தி இருக்கிறது[6].

Escape more than 60 women and girls abducted by Boko Haram
ராணுவம் மற்றும் ஆட்சியாளர்களுன் முரண்பட்ட அறிக்கைகள்– பாதிக்கப்பட்டது பெண்கள் தாம்: ஆனால், இன்று இது குறித்து போர்னா நைஜீரிய பள்ளியின் முதல்வர் கூறுகையில், “கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படவில்லை. மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக ராணுவம் சார்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நாங்கள் அனைவரும் மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிராத்தித்து வருகிறோம்”, என்று அவர் தெரிவித்தார். நைஜீரியாவில் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் மாணவிகளை தேடும் பணியை அதன் அரசு முடக்கி விட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை பெரும் பாவம் என்று கூறி அதனை தீவிரமாக எதிர்த்து வரும் பொகோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது[7]. அதாவது, தலிபன்கள் ஆப்கானிஸ்தானில் செய்து வருவதை, பொகோ ஹராம் இங்கு செய்கின்றனர். மேற்கத்தைய கல்வியை எதிர்க்கிறோம் என்பதில், இஸ்லாமியக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது.

Ridiculing Boko Haram Where It Hurts
கடத்தப்பட்ட மாணவிகள் விற்கப்படுதல் முதலியன: அந்த மாணவிகளில் ஒரு சிலரை விற்பனை செய்யவும், வேறு சிலரை அடிமைகளாக வைத்திருக்கவும், மற்றவரைக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போவதாகவும் அந்த இயக்கத்தின் தலைவர் அறிவித்தார். கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் காமரூனிலும், சட் முதலிய நாடுகளில் கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் கூட்டத்தினருக்கு 12 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்தது. 53 மாணவிகள் தப்பியுள்ளதாகவும், மற்றவர் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளதாகவும் காவல் படையினரின் தகவல் தெரிவித்தன. பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை பயனளிக்காது போனமையும், கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வீதிகளில் ஆர்பாட்டங்கள் நடத்தின. பொகோ ஹரம் இயக்கத்தினர், வட நைஜீரியாவில் முஸ்லீம் மத அரசை அமைக்கப் போராடி வருகின்றமை நினைவு கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மேலும், நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோநாதன் மேலும், பாதிக்கப்பட்டோர்களும், ஊர்மக்களும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. வீதி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெண்களில் இருவர் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, ஜனாதிபதியின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பெண்கள் கூறும் விசயங்கள் எந்த மனிதனையும் திகைக்க வைக்கின்றன[8]. இடைக்காலத்தில் முகமதியர்கள் எப்படி பெண்களைக் கடத்தியது, அடிமைகளாக விற்றது, ஹேரம் என்ற அந்தப்புரங்களில் சுல்தான்கள், படைத்தலைவர்கள், என்று முறையே அனுபவிக்கப் பட்டு, பிறகு வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஏனெனில், இந்த நவீன காலத்திலும் அதே முறைகளை, வேறு மாதிரி செய்து வருவது வெளிப்படுகிறது[9]. அவற்றையெல்லாம் மீறிய முறைதான் ஜிஹாதி-குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வளர்த்தல் முதலியனவாகும்[10].
© வேதபிரகாஷ்
09-05-2015
[1] http://www.theguardian.com/commentisfree/2014/oct/03/sperm-donot-lawsuit-racism-eugenics-lesbian-couple-black-donor
[2] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6/article7052396.ece
[3] பைபிளில் இத்தகைய ஆதாரங்கள், அவற்றைப் பின்பற்றிய போக்கு சரித்திரத்தில், பல உதாரணங்களில் காணலாம்.
[4] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/05/CTCSentinel-Vol8Issue42.pdf
[5] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/03/CTCSentinel-Vol8Issue316.pdf
[6] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1/article7002695.ece
[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-129-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/article5922474.ece
[8] Wall Street Journal, Boko Haram and the Lost Girls of Nigeria- After a military rescue, captives tell their story to The Wall Street Journal, By Patrick McGrothy, Updated May 8, 2015 3:38 p.m. ET.
[9] http://www.wsj.com/articles/boko-haram-and-the-lost-girls-of-nigeria-1431113437
[10] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022
பிரிவுகள்: கரு, கரு தரித்தல், கர்ப்பம், கினியா, சட், சொர்க்கம், தியாகி, நைஜர், நைஜீரியா, பொகோ ஹராம், போகோ ஹராம், போராளி, வீரியம், ஷஹீத்
Tags: கடத்தல், கர்ப்பம், கற்பழிப்பு, கினியா, சட், சிறுமிகள், தந்தம், தியாகி, நைஜர், நைஜீரியா, புத்தகம், பெண்கள், பொகோ ஹராம், போகோ ஹராம், போராளி, போலி, யானை, வீரியம், ஷஹீத்
Comments: Be the first to comment
மார்ச் 16, 2013
லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?

13-03-2013 புதன்கிழமைகாலை 11.00 மணி[1]: காஷ்மீரில் பெமினா என்ற இடத்தில் உள்ள பொது பள்ளிக் கூடத்திற்கு அருகில் CRPFயின் 73ம் முகாம் (CRPF’s 73rd battalion) உள்ளது. இந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், அப்பொழுது, மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பள்ளி மைதானத்தில் சிகப்பு டி-சர்ட், கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை டி-சர்ட், கருப்பு பேன்ட் அணிந்த இருவர் கிரிக்கெட் கிட்டுடன் மைதானத்தில் நுழைந்தனர். அருகில் பாதுகாப்பு வீரர்களும் நின்றிருந்தனர். சிறிது நேரம் விளையாடுபவர்களிடத்தில் பேச்சு கொடுத்தனர்.

13-03-2013 புதன்கிழமைகாலை 11.05 மணி[2]: பேசிக் கொண்டேயிருந்தவர்கள், திடீரென்று, கிரிக்கெட் கிட்டைத் திறந்து, ஏ.கே-47 மற்றும் கையெறிக் கொண்டுகளை எடுத்து, CRPF வீரர்கள் மீது வீசி, சுட ஆரம்பித்தனர். இதில் ஐந்து வீரர்கள் உடனடியாக இறந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஓட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட வீரர்கள் தீவிரவாதிகளின் மீது சுட ஆரம்பித்தனர். பதினைந்து நிமிடம் துப்பாக்கி சூடு நடந்தது, இறுதியில் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் ஃபிதாயீன் என்ற ஜிஹாதித் தற்கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3].

கொல்லப்பட்டவீரர்கள்பலமாநிலங்களைச்சேர்ந்தவர்கள்: ஜிஹாதி தீவிரவாதம் காஷ்மீரத்தில் குரூரக்கொலையில் ஈடுபட்டாலும், கொலை செய்யப்பட்ட வீரர்கள் இந்தியாவின் பல மாரநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- ஏ. பி. சிங் – assistant sub-inspector A.B Singh of Ujjan, Madhya Pradesh,
- ஓம் பிரகாஷ் – constable Om Prakash (Sehore, MP),
- எல். பெருமாள் – constable L. Perumal (Madurai, Tamil Nadu),
- சுபாஷ் – constable Subhash (Ranchi, Jaharkand) and
- சதீஷ் ஷா – constable Satish Shah (Mandya, Karnataka).

கைப்பற்றப்பட்டஆயுதங்கள்: கிரிக்கெட் கிட் என்று எடுத்து வந்ததில், உள்ளேயிருந்த ஆயுதங்கள்:
- இரண்டு ஏ.கே-47 துப்பாக்கிகள் – Two Ak-47 rifles,
- அதற்கான வெடிப்பொருட்கள் – five Ak magazines,
- ஆறுமுறை உபயோகிக்கக்கூடிய குண்டுகள் – six AK rounds,
- இரண்டு சீன கைத்துப்பாக்கிகள் – two Chinese pistols,
- இரண்டு முறை சுட குண்டுகள் – two pistol rounds,
- கைக்குண்டு தூக்கியெறியும் கருவி – one UBGL – Under Barrel Grenade Launcher,
- அதற்கான மூன்று குண்டுகள் – three UBGL grenades and
- நான்கு கையெறி குண்டுகள் – four hand grenades

கடந்த ஜனவரி 6-7, 2010 தேதிகளில் இதே மாதிரி, இந்த தீவிரவாதிகள், லால் சௌக்கில் ஒரு பஞ்சாப் ஓட்டலில் மறைந்து கொண்டு பாதுகாப்பு வீரர்களுடன் சண்டை போட்டனர். அப்பொழுது தங்களை லஸ்கர்-இ-தொய்பா என்று சொல்லிக் கொண்டனர். அதாவது “பிதாயீன்” என்பது பொதுப்பெயர், ஜிஹாதி போல!
தாக்குதலைநடத்தியவர்கள்யார்?: ஜிஹாதி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று எல்லாவிதமான இஸ்லாமிய கொலைவெறிக் கும்பல்களுடன் மக்களில் பெரும்பாலோர் தொடர்பு வைத்திருப்பதனால், தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி, பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்னம் இருந்தன[4]. ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் தாக்கினர் என்று தொலைபேசி மூலம் யாரோ அறிவித்தாக மகூறி, பிறகு அவர்கள் மறுத்துள்ளதாக அறிவித்தனர். பிறகு லஸ்கர்-இ-தொய்பா தாக்குதல் மாதிரி இருக்கிறது என்று அபதுல் முஜாதபா என்ற போலீஸ் அதிகாரி கூறியதாக கூறினர். ஆனால் மாட்டிக் கொண்ட[5] “அபு தல்ஹா” என்ற ஜிஹாதியிடமிருந்து, இது “பிதாயீன்” வேலைதான் என்று தெரியவந்துள்ளது[6]. “பிதாயீன்” என்ற ஜிஹாதிகள் தம் உயிரையும் கொடுத்து காபிர்களைக் கொல்லும் ஜிஹாதிகள். குரான் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, இத்தகைய வேலைகளை செய்கிறார்கள். ஏனெனில் அல்லா அவர்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ளதாக நம்புகிறார்கள். முன்னர் ஷிண்டே ராஜ்ய சபாவில் பாகிஸ்தானிய தொடர்பு உள்ளதாக கூறியிருக்கிறார்[7]. பிறகு அந்த தலைவெட்டியானிடமே குர்ஷித்தை விட்டுக் கேட்டிருக்கலாமே?

ஜிஹாதி தாக்குதலில் தமிழக வீரர் இறப்பு: பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் பலியான மதுரை வீரர் எல். பெருமாள் உடல் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. செல்லூர் ராஜா – தமிழக அமைச்சர், அன்சுல் மிஸ்ரா – மாவட்ட கலெக்டர், ஓம் பிரகாஷ் -CRPF கமாண்டெர், பாலகிருஷ்ணன் – மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்[8]. அமைச்சர் ரூ. ஐந்து லட்சம் தொகைக்கான செக்கை குடும்பத்தாருக்கு அளித்தார். சேடபட்டி முத்தையா –திமுக, இல. கணேசன் – பிஜேபி, ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் முதலிய இயக்கத்தோடும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செல்லுத்தினர்[9].

ஜிஹாதி முஸ்லீம்கள் தாக்கிக் கொன்றுள்ளதால் பகுத்தறிவு தமிழர்கள் கண்டனம் செல்லுத்தவில்லையா?: ஜம்மு காஷ்மீரில் கடந்த (13 ம் தேதி) புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பெருமாள் என்பவரும் ஒருவர். இவரது உடல் நேற்று இரவு சென்னைக்கு வந்தது. இடையப்பாடியில் இருக்கும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுமார் 11 மணி அளவில் தும்மநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்தது. தெருக்கள் எல்லாம் கருப்புக் கொடிகளினால் துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்: “இது போன்ற பயங்கரவாத சம்பவத்தை தடுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை”, என்றார். ஏன் மற்றவர்கள் எதுவும் சொல்லக்கூடாதா?
11 முறை தோற்று வெண்ர பெருமாள், 17-முறை தாக்கிய கஜினி முஹம்மது ஜிஹாதிக்கு பலியாகி விட்டாரா?: பலியானவர் பெருமாள் (வயது 29) மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை லிங்கம் ஆட்டோ டிரைவர் ஆவார். மொத்தம் 5 குழந்தைகள் பெற்ற இவருக்கு பெருமாள் என்பவர் மிக பாசமாக இருப்பாராம். பெருமாள் 10 ம் வகுப்பு வரை படித்து எப்படியாவது ராணுவ படையில் சேர வேண்டும் என்று பெரும் ஆவலோடும், லட்சிய கனவோடும் இருந்து வந்தாராம். இந்த படையில் சேருவதற்கான தேர்வில் பல முறை தோற்று போனாராம். குறிப்பாக 10 முறை இவர் தேர்வாகவில்லை இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து 11 வது முறை படைக்கு பிட் ஆனாராம். தேர்வு செய்யப்பட்ட தகவலை அவர் தனது கிராமம் முழுவதும், உற்றார் உறவினர்களிடம் பெரும் செய்தியாக தெரிவித்து மகிழ்ந்தாராம் பெருமாள்.

திருமணத்திற்கு ஜிஹாதிகள் பிணத்தை அனுப்பியுள்ளார்களே?: கடந்த 2010 ல் பணியில் சேர்ந்த பெருமாள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு பணியாற்றிய 3 ஆண்டில் தனது இன்னுயிரை இழந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முறை விடுப்புக்கு வந்த பெருமாள் திருமணம் செய்வது தொடர்பாக தனது உறவுக்கார பெண்ணை பார்த்து உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். வரும் ஜூன் மாதம் ஊருக்கு வருவேன் அப்போது திருமணம் செய்து கொள்வோம் என்று வாக்கு கொடுத்து சென்றவர் இன்று பிணமாக திரும்பியதை கண்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. இவரது உடல் இன்று சொந்த கிராமத்திற்குகொண்டு வரப்பட்டது.அமைச்சர் , மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக போலீசார் சார்பில் 21 குண்டுகளும், சி.ஆர்.பி.எப்., போலீசார் சார்பில் 21 குண்டுகளும் வானத்தை நோக்கி சுடப்பட்டன. வருவதையொட்டி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் காத்து நிற்கின்றனர். மதுரையில் மாவட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவ்வளவுதான், மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், ஏன் இப்படி இந்தியா வீரர்களை ஜிஹாதிகளுக்கு பலியாக்க வேண்டும்?

Karunanidhi-with-kulla
என்ன நடந்தாலும், குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கும் பட்டாளம் நஎப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் குர்ஷித் போன்ற பேனாக்களில் ரத்தத்தை நிரப்பும் முஸ்லீம்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், எதிரிகளுடன் உணவருந்துவார்கள்!
வேதபிரகாஷ்
16-03-2013
[4] Police say two pocket diaries; a SIM card of an Indian telecommunication company issued in Uri, an ointment tube made in Pakistan; an under-surveillance guerilla activity controlled by a Kashmiri militant for several weeks at Palhalan village of Baramulla; the Hizbul Mujahideen’s first-ever claim of owning up a suicide attack; the Lashkar-e-Taiba spokesman’s “meaningful quiet”; no local claim on the two bodies (of the militants); besides some telephonic intercepts and call detail records pieced together by the investigators make the fidayeen attack “a clear case of foreign terror.” “We have noticed the signature of the Lashkar-e-Taiba in this operation,” a senior official associated with the investigation told The Hindu. He refused to disclose details but was confident that a breakthrough was not far away. “An operation jointly planned and executed by the Kashmiri and Pakistani cadres of the LeT in coordination with the United Jihad Council,” he said when pressed to identify the actors.
பிரிவுகள்: ஃபிதாயீன், அடி, அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அடையாளம், அப்சல், அப்சல் குரு, அப்ஸல், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா சொன்னதால் சுட்டேன், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், ஈட்டிக்காரன், உதை, உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஓட்டு, ஓட்டுவங்கி, கசாப், கசாப்புக்காரத்தனம், கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காந்தஹார், குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குதாமுல் இஸ்லாம், கைது, கையெறி குண்டுகள், கொல், சித்திரவதை, சொர்க்கம், ஜவாஹிருல்லா, ஜிஹாதி நேயம், தாலிபான், திறப்பு, தும்மநாயக்கன்பட்டி, துருக்கர், துலுக்கன், நரகம், பத்தான், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பிதாயீன், பிள்ளை, புனிதப் போர், பெருமாள், மதரஸாக்கள், மனித நேய மக்கள் கட்சி, மனித நேயம், மனித வெடிகுண்டு, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம், முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், லிங்கம், வன்முறை, வாசல், வெடிகுண்டு பொருட்கள், வெடிபொருள் வழக்கு
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், அஹ்மதியா, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம் கொலை, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், குண்டு வெடிப்பு, கொலைவெறி, கோவில் சிலை உடைப்பு, சியா, சிறுபான்மையினர், சுன்னி, செக்யூலரிஸம், ஜவாஹிருல்லா, தும்மநாயக்கன்பட்டி, பரவும் தீவிரவாதம், பாகிஸ்தான், பெமினா, பெருமாள், போரா, மதுரை, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம் கொலை, முஸ்லீம்கள், லப்பை, லிங்கம், ஹிஹாதி கொலை
Comments: 3 பின்னூட்டங்கள்
நவம்பர் 12, 2011
தாவூதை துபாயிலேயோ, டொமினிகாவிலேயே, பாகிஸ்தானிலேயோ, ஆப்கானிஸ்தானிலேயோ, ஏன் அரபு நாடுகளிலேயோ ஏன் புதைக்கக் கூடாது?
தாவூத் சுன்னியா, ஷியாவா? ஷியா தனிமதச் சட்டவாரியத்தின் காரியதரிசி மற்றும் மதத்தலைவரான மௌலானா ஜஹீர் அப்பாஸ் ரிஸ்வி, “நாங்கள் அவனை இந்தியன் என்றே கருதவில்லை”, என்றாராம்[1]. ஆனால் “முஸ்லீம் / ஷியா” இல்லை என்று சொல்லாததைக் கவனிக்க வேண்டும். அப்படியென்றால், முஸ்லீமாக அவன் இங்கு புதைக்கப் பட ஒப்புக்கொள்கிறாரா? பொதுவாக ஷியாக்காரர்கள் கொஞ்சம் மனிதாபிமாக இருப்பார்கள் என்பார்கள். பிறகு எப்படி இவன் சுன்னித்தீவிர-பயங்கரவாதிகளையும் மிஞ்சிவிட்டான் என்று தெரியவில்லை.
தீவிரவாதத்தில்-பயங்கரவாதத்தில் சுன்னி-ஷியா ஒன்றாக வேலை செய்கின்றனரா? பொதுவாக இந்தியர்களுக்கு, குறிப்பாக பெரும்பாலான இந்துக்களுக்கு சுன்னி[2], ஷியா[3], என்றாலோ கூட போரா, அஹ்மதியா[4] என்றெல்லாம் சொன்னால் ஏதாவது புரியுமா என்று தெரியவில்லை. இருப்பினும், தீவிரவாதத்தில்-பயங்கரவாதத்தில் சுன்னி-ஷியா ஒன்றாக வேலை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது. அல்லது “காஃபிர்களுக்கு” எதிரானது “ஜிஹாத்” என்பதினால் ஒன்றுபட்டு, பிறகு தமக்குள் சண்டை போட்டுக் கொள்வார்கள்[5] போலும்!
துபாயிலேயோ, டொமினிகாவிலேயே, பாகிஸ்தானிலேயோ, ஆப்கானிஸ்தானிலேயோ, ஏன் அரபு நாடுகளிலேயோ ஏன் புதைக்கக் கூடாது? பலநாடுகளின் பாஸ்போர்ட்டுகளை தாவூத் இப்ராஹிம் உபயோகப்படுத்திவருகிறான். டொமினிகா என்ற நாட்டின் பாஸ்போர்ட்டை உபயோகப் படுத்தப்பட்டதால், அந்நாட்டின் குடிமகன் அந்தஸ்து கொடுக்கப்பட்டது என்று தெரியவந்தது[6]. ஆனால், திடீரென்று அந்நாடு அதனை மறுத்தது[7]. இருப்பினும் ஏன் அவனது மகள்கள், மறுமகன்கள் முதலியோர்களுக்கு குடிமகன் / குடிமகள் அந்தஸ்து கொடுக்கப்பட்டது என்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் பதில் சொல்லவில்லையாம்[8].
காஃபிர் நாட்டில், காஃபிரிஸ்தானில் புதைத்தால் உயித்தெழ முடியுமா? பாவம், தாவூத் இப்ராஹிம், தனது ஆட்களை விட்டு தனது சமாதிக்கு இடம் தேட சொல்லியுள்ளான். ஆனால், இந்தியா / பாரதம் ஒரு “காஃபிர்கள்”[9] வாழும் நாடு, அதாவது “நம்பிக்கையில்லாதவர்கள்” வாழும் நாடு[10]. அங்கு “மோமின்கள்” புதைக்கப் பட்டால், சொர்க்கம் கிடைக்குமா, உயித்தெழ முடியுமா அல்லது நரகத்திற்குச் செல்வார்களா? முஸ்லீம் அன்பர்கள் / நண்பர்கள் / பண்பாளர்கள் / பேராளர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்!
“இஸ்லாம்” பெயரில் இந்தியாவிற்குக் கிடைக்கப் போவது என்ன? “இஸ்லாம்” என்றால் “அமைதி” என்று உறுதியாக விளக்கம் அளிக்கும் முஸ்லீம் அன்பர்கள் / நண்பர்கள் / பண்பாளர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவை “சுடுகாடாக” இல்லை[11] “இடுகாடாக” மாற்ற விரும்புகிறார்களா அல்லது “அமைதிப் பூங்கா”வாக இருக்க விரும்புகிறார்களா?
வேதபிரகாஷ்
11-11-2011
[2] இப்பொழுது “சன்னி” என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
[3] சுன்னி-ஷியா என்பது இஸ்லாமில் உள்ள இரண்டு முக்கியமான பிரிவுகள். அலியை இமாமாக ஏற்றுக் கொள்பவர்கள் (அலியைப் பின்பற்றுபவர்கள்), அவரது பிள்ளைகளின் தியாகத்தை மதிப்பவர்கள் ஷியாக்கள்.
[4] இவையெல்லாம், இஸ்லாமில் உள்ள “சாதி/ஜாதி அமைப்பு” அல்லது அதற்கும் மேலான பிடுப்புள்ள பிரிவுகள் ஆகும். இதில் சமுக-இறையியல் பிரச்சினைகள் சேர்ந்துள்ளன.
[5] ரஃபிக் ஜக்கரியா “இஸ்லாமில் உள்ள சண்டைகள் / போராட்டங்கள்” என்ற புத்தகத்தைப் பார்க்கவும்.
[6] Weekly Blitz wanted to know from the government of Dominica about the accusations of granting citizenship to notorious mafia don Dawood Ibrahim and his daughters and son-in-laws. In response to a question in a radio show, Anthony Astaphan bluntly denied that no such citizenship or passport has ever been granted in favor of Dawood Ibrahim. Subsequently he said if any such citizenship or passport has ever been found, it would have been fake. He also told the radio show that issuance of passport to Dawood Ibrahim will put him into “shock”.
http://www.weeklyblitz.net/1918/dawood-ibrahim-using-dominica-passports
[8] Meanwhile, the government of Dominica in a press announcement has refused the allegation of granting any citizenship of passport to Dawood Ibrahim, while it did not comment on the allegation of issuing passport and granting citizenship to daughters and son-in-laws of the notorious mafia don. Similarly Anthony Astaphan has failed to reply to the questions from Weekly Blitz related to granting of citizenship to Dawood Ibrahim’s daughters and son-in-laws.
[9] “காஃபிர்கள்” என்றால் “நம்பிக்கையில்லாதவர்கள்” அதாவது முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பொருள். அதுமட்டுமல்லாது அவர்கள் “குஃப்ரு” கொண்டவர்கள் அழுக்கு, அசுத்தம், கொண்டவர்கல், தூய்மையில்லாதவர்கள் என்றும் பொருள்படும். அதாவது முஸ்லீம்கள் மிகவும் தூய்மையானவர்கள், சுத்தமானவர்கள் என்று பொருள். அதனால் தான் அலி சகோதர்கள் காந்தியைப் பற்றி குறிப்பிடும் போது அவ்வாறு சொன்னார்.
[10] காஃபிர்–மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்” என்றஎண்ணம்இருக்கும்வரையில்முஸ்லீம்முஸ்லீமாகத்தான்இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்.
https://islamindia.wordpress.com/2011/10/26/afganisthan-support-pakistan-in-a-war-against-india/
Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.
Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.
[11] இந்துக்கள் இறப்பவர்களை எரிக்கவும், புதைக்கவும் செய்வார்கள், ஆனால் முஸ்லீம்கள் எரிக்கமாட்டார்கள், புதைப்பார்கள். இந்துக்களில் புதைப்பவர்களுக்கு, முஸ்லீம்களைப் பொலவோ, கிருத்துவர்களைப் போலவோ, அப்படியே உயித்தெழுவர் என்ற நம்பிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவுகள்: அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, உயித்தெழுதல், சொர்க்கம், டொமினிகா, தாவூத் இப்ராஹிம், துபாய், நரகம், நெருப்பு, புதைத்தல்
Tags: அரபு நாடு, ஆப்கானிஸ்தான், டொமினிகா, தாவூத், துபாய், பாகிஸ்தான், புதை
Comments: 1 பின்னூட்டம்
அண்மைய பின்னூட்டங்கள்