Archive for the ‘செக்யூலரிஸ கம்பனி’ category

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)

ஒக்ரோபர் 17, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)

 

பர்த்வான் குண்டு வெடிப்பு படம்

பர்த்வான் குண்டு வெடிப்பு படம்

மாநில சிபிசிஐடி போலீஸா, என்ஐஏவா என்ற வாதம்: பர்த்வான் குண்டுவெடிப்பு அந்த மாவட்டம் மட்டுமே தொடர்புடைய சம்பவமல்ல, அது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். அதில் அன்னிய சக்திகளுக்கும் தொடர்புள்ளது. முன்னதாக, பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மாநில சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநில அரசின் அதிகாரத்தில் தேவையில்லாத குறுக்கீடு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியிருந்தார். மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, கடந்த 2008-ஆம் ஆண்டில் என்ஐஏ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும் இவ்வாறு, ஒரு மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக உத்தரவிட்டது இதுதான் முதன் முறையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், மற்ற விவகாரங்களையும் தெரிந்து கொண்ட நிலையில் (சாரதா-போன்ஸி பணம் முதலியவற்றை) அவர் அவ்வாறு எதிர்த்திருப்பாரா என்று தெரியவில்லை.

பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன

பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன

பர்த்வான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்ட சென்னைவாசிகள்: இவர்களுக்கு உதவியர்கள் கேரளா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் உள்ளார்கள் என்பதால், விசாரணை அங்கும் ஆரம்பித்துள்ளன[1]. முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[2]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி

ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி

கைதாகி சென்னையில் இருப்பவர்களுக்கும், இதற்கும் உள்ள தொடர்புகள்: இதேபோல், பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் வழக்கில் கியூ பிராஞ்ச் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அருண் செல்வராசனுக்கும், ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஜாகீர் உசேனுக்கும் உள்ள தொடர்பு பற்றி கியூ பிரிவு போலீசார் ஏராளமான ஆவணங்களை அளித்துள்ளனர். அதில் ஜாகீர் உசேன் மூலம் அருண் செல்வராசன் கள்ளநோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான தகவல் அளிக்கப்பட்டிருந்தது.கடந்த 2012ம் ஆண்டு அருண் செல்வராசன் மாநகராட்சியில் போலி பிறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் எடுத்த தகவலும் தெரியவந்துள்ளது. கியூ பிரிவு போலீசார் அளித்த தகவல்கள் அடிப்படையில் 200 கேள்விகளை தயார் செய்து அருண் செல்வராசனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதிலும் பல திடுக் கிடும் தகவல்களை அவர் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களுடன் தேசிய புலானாய்வு அமைப்பின் எஸ்பி பிராபகர் ராவ் டெல்லி சென்றுள்ளார். சென்னை வரும் ராமசாஸ்திரி அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்தும் ஆலோசிக்க உள்ளதால் டெல்லியிலிருந்து பிரபாகர் ராவ் இன்று சென்னை திரும்புகிறார். சென்னையில் தங்கியுள்ள ராமசாஸ்திரி சென்னை தேசிய புலனாய்வு செயல்பாடுகள் மற்றும் அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை வழங்குவார்[3].

பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்

பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்

கொல்கத்தாவில் ரகசியமாக சிகிச்சைப் பெற்ற மூன்று நபர்கள்: சென்னையில் ரகசியமான மூன்று பேர்கள் இருந்தது போல, பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடைந்த மூவரை ரகசியமாக, ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க வைத்து,. சிகிச்சைக் கொடுத்ததை என்.ஐ.ஏ கண்டு பிடித்துள்ளனர். மேலும் அந்த வசதியை திரிணமூல் காங்கிரஸ்காரர் செய்து கொடுத்துள்ளார்[4]. பார்க் சர்கஸ் நர்சிங் ஹோம் என்ற மருத்துவ மனையில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவர்கள் முன்னுக்கு முரணாக பேசியுள்ளனர். அவர்கள் தாங்கள் பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடவில்லை, ஆனால், அக்டோபர்.5 அன்று மால்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்ததாகக் கூறிக் கொண்டனர். போலீஸார் நரேந்திர பூரில், இங்கிலீஸ் பஜாரில் குண்டு வெடுப்பு நடந்தத்யாக அறிவித்துள்ளனர். ஆனால், போலீஸார் இந்த மூவரை கொல்கொத்தாவிற்கு அனுப்பினாலும், மருத்துவமனை பெயரைக் குறிப்பிடவில்லை. இவ்வாறு, தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப் படுவது, சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

பர்த்வான் சோதனை -nia

பர்த்வான் சோதனை -nia

சென்னை சென்ட்ரல் – பர்த்வான் குண்டுவெடிப்புகளுக்குள்ள தொடர்பு: மே.1, 2014வ் அன்று சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில், கௌஹாதி எக்ஸ்பிரஸில், குண்டுகள் இரண்டு வெடித்ததில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டாள் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்[5]. இப்பொழுது பர்தவான் குண்டுவெடிப்பை விசாரிக்கும் போது, இரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் உள்ள சம்பந்தம் வெளிப்படுகிறது, குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. இதுதவிர வெடிகுண்டுகளின் தயாரிப்பு முறை, உபயோகப் படுத்தப் பட்டுள்ள ரசாயனப் பொருட்கள் (அம்மோனியம் நைட்ரேட், காரீய ஆக்ஸைடு முதலியன), அவற்றின் கலவை விகிதம் ஒரே மாதியாக உள்ளன. குண்டுவெடிப்பின் தன்மையில் வேறுபாடுள்ளதே தவிர, மற்ற விசயங்களில், இரண்டும் ஒன்றே என்று எடுத்துக் காட்டுகின்றன. குண்டுகளைத் தயாரித்தவர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே இடத்தில் கற்றுக்கொண்ட முறையின் மூலம் கற்றுக் கொண்ட முறை என்று தெரிகிறது. மேலும் பர்த்வானில் குண்டு வெடித்தவுடன் ரஜிரா பீபி இந்த மூவருடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். இதன் மூலம் “ஸ்லீப்பர் செல்” முறையும் வெளிப்படுகிறது.

பர்த்வான் கைது என்.ஐ.ஏ

பர்த்வான் கைது என்.ஐ.ஏ

அருண் செல்வன் தொடர்பு, விசாரணை: மேலும் செப்டம்பரில் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் அருண் செல்வன் கைது செய்யப் பட்டதும் முக்கியமாகிறது. என்.ஐ.ஏ இந்த விசயத்தில் அவனிடம் விசாரணை மேற்கொண்டது.  ஏனெனில், பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தப் பட்ட இடங்களில், தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களின் புகைப்படங்கள் சிக்கின. அவை அருண் செல்வராஜ் எடுத்து அனுப்பியிருக்கலாம் என்று கருதப் படுகிறது. மேலும் கௌஹாத்தி எக்ஸ்பிரசில் குண்டு வைக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் இருக்கக் கூடும், உண்மையில், தமிழகத்திலிருந்து வெடிப்பொருட்கள், ரசாயன கலவைகள் முதலியன அசாமிற்கு எடுத்தச் செல்ல முயன்றிருக்கலாம். அம்முயற்சியில், சரியாக கையாளப் படாதலால், தவறி வெடித்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. எது எப்படியாகிலும், தமிழகத்திற்கும் ஜிஹாதிகளுக்கும் உள்ள தொடர்பு மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு

பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு

சாரதா-போன்ஸி ஊழலுக்கும், வங்காளதேச தீவிரவாத குழுக்கும் உள்ள சம்பந்தம்[6]: சாரதா-போன்ஸி ஊழலில், பணம் வங்காள தேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய வங்கிற்குச் சென்றதை அமுலாக்கப் பிரிவு கண்டுபிடித்தது. இது ஊழல் பணத்தை நல்ல பணமாக்கும் அல்லது கணக்கில் உள்ள பணம் போல காட்டும் முயற்சி என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சுமார் ரூ.60 கோடிகள் இவ்வாறு வங்காளதேச இஸ்லாமிய வங்கிக்கு, மேற்கு வங்காள அரசியல்வாதிகள் மூலம் சென்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு விசாரணை மூலம், இவ்விவரங்களை ஆராய நேர்தால், திரிணமூல் முகமூடி கிழிந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள் போலும். ஒரு பக்கம் சாதாரண மக்களிடமிருந்து பணம் பெற்று, அவர்களை ஏமாற்றி, ஆனால், அதே பணத்தை தீவிரவாத செயல்களுக்கு திருப்பிவிடும், திரிணமூல் காங்கிரஸ்காரர்களைரேன் மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும். இந்த இஸ்லாமிய வங்கிற்கும், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கும் தொடர்புள்ளது. இதன் மூலம் ஜே.எம்.பிக்கு பணம் சென்று, அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் வந்திருக்கும்[7]. இப்பணத்தினால், இவர்கள் பர்த்வானில் இடத்தை வாங்கி, அங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

17-10-2014

[1] http://timesofindia.indiatimes.com/india/Bardhaman-blast-NIA-probe-leads-to-JK-Tamil-Nadu-Kerala/articleshow/44787458.cms

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=113757

[3] தினகரன், பர்த்வான் குண்டுவெடிப்பு: சென்னையை சேர்ந்த 3 பேருக்கு தொடர்பு, 17-10-2014

[4] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms

[5] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms

[6] Abhishek Bhalla, Bangladesh terror group thought to be behind Burdwan blast were ‘funded by Saradha ponzi scam‘,  Published: 23:36 GMT, 13 October 2014 | Updated: 23:36 GMT, 13 October 2014, Daily Mail, UK.

[7] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2791507/bangladesh-terror-group-thought-burdwan-blast-funded-saradha-ponzi-scam.html

தேசிய வக்ப் மேம்பாட்டு கார்ப்புரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி உருவாக்கப் பட்டது – தேர்தலுக்கு முன்னர் சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி!

ஜனவரி 29, 2014

தேசிய வக்ப் மேம்பாட்டு கார்ப்புரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி உருவாக்கப் பட்டது – தேர்தலுக்கு முன்னர் சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி!

பகீம் பெய்க் கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

பகீம் பெய்க் கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

தேசிய வக்ப் மேம்பாட்டு கார்ப்புரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி உருவாக்கப் பட்டது: இந்தியாவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் சொத்துக்களை மாநிலங்கள் தோறும் ‘வக்ஃப் வாரியம்’ நிர்வகித்து வருகிறது. இதற்கான மத்திய வக்ஃப் கமிட்டி அலுவலகம் புது டெல்லியில் உள்ளது. இதனை மேம்படுத்தி ‘தேசிய வக்ஃப் மேம்பாட்டு வாரியம்’ [ the National Waqf Development Corporation Limited (NAWADCO)] ஒன்றை ஏற்படுத்தி நாடு முழுவதிலும் உள்ள 4.9 லட்சம் வக்ப் சொத்துகளை பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து நலிவடைந்த நிலையில் உள்ள ஏழை முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ள வாரியங்களை சேர்த்து இப்படி ஒரு கம்பனி உருவாக்குவதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை.

பகீம் பெய்க் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

பகீம் பெய்க் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

வக்ப் என்றால் என்ன?: வக்ப் என்றால் ஒரு முஸ்லிம் எந்த அசையும் அல்லது அசையாத சொத்தை முஸ்லிம் சட்டப்படி ஒரு புனிதமான, மதம் மற்றும் தரும காரியங்களுக்கு உபயோகப்படுத்தப் படக்கூடிய சொத்தாகும். ஒருமுறை அவ்வாறு சொத்தை அளித்து விட்டால், அளித்தவருக்கும் அச்சொத்துக்கும் உள்ள எல்லா உரிமைகளும் இல்லாமல் போய்விடுகின்றன. அதாவது அதற்குப் பிறகு, வக்ப் வாரியத்தின் அனுமதி இல்லாமல் அச்சொத்தை மாற்றியமைக்கவோ, மாற்றவோ எம்முறையிலும் விற்கவோ முடியாது. இந்த சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து நலிவடைந்த நிலையில் உள்ள ஏழை முஸ்லிம்களுக்கு உதவ உபயோகப்படுத்தப் படுகிறது. ஆனால், முஸ்லிம்களே – அதாவது வாரியத்தில் உள்ள மற்ற பணக்கார முஸ்லிம்கள் – அவற்றை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

அதாவது, முஸ்லிம்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை ஏன் இப்படி பெரிது படுத்தி, அதற்கு ஒரு கம்பனியை உண்டாக்க வேண்டும்? முஸ்லிம்களில் உள்ள எல்லா பிரிவினரும் (சுன்னி, ஷியா, போஹ்ரா, அஹம்மதியா, லெப்பை, சையது) இதனை ஏற்றுக் கொள்வார்களா அல்லது மறுப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப் படுமா?

Manmohan Singh with Sonia Gandhi and K. Rahman Khan inauguration of National Waqf Development Corporation in New Delhi on 29-01-2014. Photo-S. Subramanium

Manmohan Singh with Sonia Gandhi and K. Rahman Khan inauguration of National Waqf Development Corporation in New Delhi on 29-01-2014. Photo-S. Subramanium

தேசிய  வக்ஃப்  மேம்பாட்டு  வாரியத்தின்  துவக்க  விழா: இந்த தேசிய வக்ஃப் மேம்பாட்டு வாரியத்தின் துவக்கவிழா 29-01-2014 அன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இது சிறுமான்மையினர் நலம் அமைச்சகத்தின் கீழ் வருகின்ற மத்திய அரசு நிறுவனமாக ஏற்படுத்தப் பட்டுள்ளது. வல்க் (திருத்தம்) சட்டம் 2013 [Waqf (Amendment) Act, 2013] உருவாக்கப் பட்டு, வக்ப் சொத்துக்களை வெலிப்படையாக நிருவகிக்கும் முறையில் சட்டம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக ரூ.500 கோடி நிதியுதவியுடன் இந்நிறுவனம் அமைக்கப் பட்டுள்ளது. மத்திய / மாநிலங்களில் உள்ள வக்ப் வாரியங்கள் மற்றும் மூத்தாவலி [state/Union Territory waqf boards and mutawallis (managers)] முதலியோர்களுக்கு நிதியுதவி அளித்து குஸ்லிம்களுக்கான சொத்துகளை மேம்பாடு செய்யும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது[1]. இதுவரை 4,90,00 வக்ப் சொத்துக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன, அவற்றி மூலம் ரூ.163 கோடி வருவாய் வந்துகொண்டிருக்கிறது[2]. சச்சார் கமிட்டியின் அறிக்கையின் படி, இவற்றை தகுந்தபடி மேம்பாடு செய்தால் குறைந்த படசம் ரூ.12,000 கோடிகள் வரும் உயரும் என்று பரிந்துரைத்துள்ளது[3]. பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பகீம் பெய் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

பகீம் பெய் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

எப். ஃபஹிம்பெய்க்என்பவரின் எதிர்ப்பு: பிரதமர் பேசி முடித்ததும் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து எழுந்து நின்ற ஒருவர், மேடையை நோக்கி கையை நீட்டி கூச்சலிட்டார்[4]. பிரதமரை நோக்கி விரலை நீட்டிய அவர், ‘ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள் எதையுமே அரசு ஒழுங்காக செயல்படுத்துவதில்லை[5]. எந்த திட்டத்தின் பலனும் நலிந்த நிலையில் இருக்கும் சிறுபான்மையின மக்களை சென்றடைந்ததே இல்லை[6]. இந்த நிலையில் இதைப் போன்ற புதிய திட்டங்களுக்கான அவசியமே இல்லை’ என்று குற்றம் சாட்டினார்[7]. ‘இதுவரை உங்களுக்கு 150-க்கும் மேற்பட்ட கடிதங்களை நான் அனுப்பியுள்ளேன். ஆனால், அவற்றுக்கான எந்த பதிலும் எனக்கு கிடைக்கவில்லை’ எனவும் பிரதமரை பார்த்து நேருக்குநேராக அவர் கேள்வி எழுப்பினார். பிரதமரும், சோனியா காந்தியும் அந்நபரை உற்றுபார்த்தபடி அமர்ந்திருந்தனர். இதனால் அந்த அரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்துவந்த போலீசார் அவரை அரங்கத்தில் இருந்து வெளியேற்றி அழைத்து சென்றனர்[8]. பிரதமருக்கு எதிராக குரல் எழுப்பிய அவரது பெயர் எப். ஃபஹிம் பெய்க் [ M Faheem Baig] என்றும் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாபராபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், மேடையில் அமர்ந்திருந்த சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான  மத்திய  மந்திரி ரஹ்மான் கானை அழைத்த பிரதமர், ஃபஹிம் பெய்க்கை சந்தித்து அவரது குறை என்னவென்று கேட்டறிந்து, அவர் ஏற்கனவே அனுப்பியதாக கூறும் கடிதங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்[9].

தேர்தலுக்கு முன்னர் சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி: ஏற்கெனவே வக்ப் வாரியங்கள் எல்லா மாநிலங்களிலும் உள்ளபோது, அவற்றிற்கெல்லாம் சேர்த்து ஒரு கம்பெனி உருவாக்கப் பட வேண்டிய அவசியம் என்ன என்று முஸ்லிம்களே கேட்கிறார்கள். ஏனெனில், இதன் மூலம், மேலும் அதிகார வர்க்க முஸ்லிம்கள் தான் பயனடைவார்களே தவிர சாதாரண முஸ்லிம்களுக்கு எந்த நலனும் ஏற்படாது.மேலும், இந்த கம்பெனி அரசின் கட்டுப்பாடில் வரும் என்ற நிலையிருக்கும் போது, அரசியல் பலம் வாய்ந்த முஸ்லீம்கள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்வர். இதனால் தான், கூட்டத்தில் ‘ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள் எதையுமே அரசு ஒழுங்காக செயல்படுத்துவதில்லை[10]. எந்த திட்டத்தின் பலனும் நலிந்த நிலையில் இருக்கும் சிறுபான்மையின மக்களை சென்றடைந்ததே இல்லை[11]. இந்த நிலையில் இதைப் போன்ற புதிய திட்டங்களுக்கான அவசியமே இல்லை’, என்று எப். ஃபஹிம் பெய்க் குற்றஞ்சாட்டினார்[12]. மேலும், செக்யூலரிஸ அரசு இம்மாதிரியான கம்பெனிகளை உருவாக்கினால், மதசார்பு நிலை என்னாகும் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்குல் மேலாக, தேர்தலுக்கு முன்னர் இது ஆரம்பிக்கப் பட்டுள்ளதால் இது சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி என்றே தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 30-01-2014


[3] NAWADCO has been set up on a recommendation of the Sachar committee. India has the largest number of waqf properties in the world. There are 490,000 registered waqf properties and the current annual income from these is about Rs 163 crore. The Sachar committee has estimated such properties, if properly developed, with a minimum return of 10 per cent, would be able to generate at least Rs 12,000 crore per annum.

[4] மாலைமலர், பார்வையாளரின் எதிர்கேள்வியால் பிரதமர், சோனியா பங்கேற்ற ‘வக்ஃப்’ நிகழ்ச்சியில் பரபரப்பு, பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 29, 2:18 PM IST