Archive for the ‘சிவன் கோவில் தாக்கப்பட்டது’ category

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

கோவை ஆர் காஸ் சிலிண்டர் வெடிகுண்டு சோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர்.  ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.

ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த  எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்

  1. பொட்டாசியம் நைட்ரேட் [Potassium Nitrate],
  2. நைட்ரோ கிளசரின் [Nitro Glycerin],
  3. சிவப்பு பாஸ்பரஸ் [Red Phosphrous],
  4. அலுமினியம் பவுடர் [Aluminium powder],
  5. பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட், Penta Erythrital tri-nitrate), 
  6. சல்பர் பவுடர் [Suplphur powder],
  7. ஆணிகள் [Balrus, nails],
  8. கருப்பு பவுடர் [Black powder],
  9. 2 மீட்டர் நீளமுள்ள திரி [Gelatin wires],
  10. இண்டன் கியாஸ் [Indane gas cylinder]
  11. பொட்டாசியம் நைட்ரேட் சிலிண்டர் [Potassium Nitrate cylinder],
  12. ஆக்சிஜன் சிலிண்டர் [Oxygen cylinder]
  13. கையுறை [hand glouses],
  14. ஓஎக்ஸ்ஒய் 99 [YXY99],
  15. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
  16. கண்ணாடிகள் [Glass pieces],
  17. 9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
  18. 9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
  19. வயர் [wires],
  20. சுவிட்ச் [switches],
  21. சிலிண்டர் [cylinders],
  22. ரெகுலெட்டர் [regulators],
  23. டேப் [tapes]
  24. இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–

உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.

ஜமேஷ் முபீனின் குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.

கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து குடி பெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.

20-10-2022 அன்று மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

22-10-2022 அன்று மனைவியுடன் பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.

வேதபிரகாஷ்

05-11-2022


[1]  ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

மார்ச் 3, 2013

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

Attacks on Hindus is similar to 1971

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றது. தலைநகர் டாக்காவில் கலவரம் செய்தால் அது எதிர்ப்பாக இருக்கலாம் ஆனால், நவகாளி, சிட்டாகாங் பகுதிகளில் வாழும் இந்துக்களைத் தாக்கினால், அதற்கு என்ன அர்த்தம்? “இஸ்லாம்” என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான் போலும்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளணர். இப்பொழுதுதான் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1].

Hindus attacked - temples torched - houses looted - 2013

இந்தியாவில் இதைப் பற்றி மூச்சு-பேச்சு இல்லை: ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார். முலாயம் மறுபடியும் “முல்லவாகி” முஸ்லீம்களுடன் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்[5]. ராஹுல் காந்தி பொது காரியதரிசிகளைக் கூட்டி கூட்டம் போடுகிறார்[6].

Hindu woman wails after her house looted and torched

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்:  டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[7] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Nipu Sheel wails -Jamaat-Shibir men at Banshkhali in Chittagong - Photo - Anup Kanti Das

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[8]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[9]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

Bangladesh protesters against Capital punishment

அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் போன்றோர் இப்பொழுது ஏன் வாயைத் திறக்கவில்லை?: முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கி வரும் இந்த அறிவு ஜீவிகள் இப்பொழுது ஏன் இருக்கின்ற இடம் கூட தெரியாமல் இருக்கிறார்கள்? பீஜேபி கூட மகிழ்ச்சியாக கூட்டம் கூடுகிறதே தவிர, இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையே? ஆனால், இலங்களை தமிழர்களுக்கு ஆதரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அப்படியென்றால், பீஜேபியும் அதே வழியில் செல்கிறாதா? சல்மான் குர்ஷித் முன்பு முஸ்லீம் போல கத்தினார், ஆனால், இப்பொழுதோ, அது அவர்களது “தொட்டுவிடும்” உள்நாட்டு விஷயம் என்கிறார்[10]. அப்படி என்னத்தைத் தொடுகிறது என்று சொல்லவில்லை[11]. கம்யூனிஸ்ட் யசூரி கலவரத்தைக் கண்டித்தோது சரி[12]. பிரனாப் முகர்ஜி இத்தனை கலவரங்கள், கொலைகள், எரியூட்டுகள் நடந்து கொண்டிருந்தாலும், தமது மாமா-மச்சான்களைப் பார்க்க, தனது அங்கிருக்கும் சொந்த ஊருக்கு வருகிறாராம்!

Mulayam again poses as Mulla - hobnobbing with Muslims 2013

1971 மற்றும் 2013 – இந்துக்கள் தாக்கப்படுவது: பங்களாதேசம் உருவாக இந்திய உதவியது. அதாவது, முக்திவாஹ்னியுடன் போரிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்த இந்திய ராணுவத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஆனால், இந்தியர்கள் அப்பொழுது அவ்வாறு நினைத்ததில்லை. ஆனால், 1071லேயே, பாகிஸ்தானி ஆதரவாளர்கள், ஜமத்-இ-இஸ்லாமி, போன்ற வெறிபிடித்த முஸ்லீம்களை இந்துக்களைத் தாக்கினர், பெண்களைக் கற்பழித்தனர், வீடுகளை சூரையாடினர், கோவில்களை தரை மட்டமாக்கினர். அதேதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

Taliban wanting Jihadi Bangla Muslims

‘Amra Sobai Hobo Taliban Bangla Hobe Afghanistan’ – பங்களாதேசம் ஆப்கானிஸ்தான் ஆனால் தான், எங்களுக்கு சோபை வரும் என்று வெளிப்படையாக தீவிரவாதத்தை வளர்க்கும் வங்காள ஜிஹாதிகள்! இப்படி இந்தியாவைச் சுற்றி ஜிஹாதிகள் இருந்தால், இந்தியா என்னவாகும்?

© வேதபிரகாஷ்

03-03-2013


 


[1] Police also reported attacks on several Hindu homes and temples in the southern Noakhali and Chittagong districts.

http://thepeninsulaqatar.com/qatar/227373-bangla-death-verdict-sparks-riots-34-die-.html

[6] Party vice-president Rahul Gandhi has convened a meeting of all general secretaries and central leaders in charge of states on March 6, leading to wide anticipation in the party quarters that some of them may get new assignments.http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Rahul-Gandhi-calls-general-secys-meeting/Article1-1020202.aspx

[10] Terming the riots in Bangladesh over a war crimes verdict as an internal matter of that country, External Affairs Minister Salman Khurshid on Friday said the government sitting in Dhaka is fully capable of handling this situation and that the law will take its own course. Khurshid said it is a very touchy political issue for some sections of the Bangladesh polity. http://www.indianexpress.com/videos/international/21/bangladesh-capable-of-handling-riots-over-war-crimes-verdict-khurshid—/15760

மெஹ்பூபா முஃதி என்ற பெண்ணும், காஷ்மீர் கலவரமும், தீவிரவாதமும், பயங்கரவாதமும்!

ஜூலை 12, 2010

மெஹ்பூபா முஃதி என்ற பெண்ணும், காஷ்மீர் கலவரமும், தீவிரவாதமும், பயங்கரவாதமும்!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=37577

புதுடில்லி ஜூலை,12, 2010: காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்படும் அமைதி கூட்டத்தில் பங்கேற்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த கோரிக்கையை, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஏற்க மறுத்து விட்டார். இதனால், கலவரத்துக்கு தீர்வு காணும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெரும் கலவரம் நடந்து வருகிறது. மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலியாயினர். இதனால், கலவரம் பெரிய அளவில் வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் அமைதி கூட்டம்: இந்நிலையில், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் அமைதி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் இன்று நடக்கவுள்ளது.

கலாட்டா செய்ய்ம் பெண் மெகபூபா மறுப்பு: முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி, இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என அறிவித்தது. உடனடியாக அந்த கட்சித் தலைவர் மெகபூபா முப்தியை தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்,”காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும்’என, வேண்டுகோள் விடுத்தார். இருந்தாலும், கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என்ற தனது முடிவில் மெகபூபா உறுதியாக உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“அமைதி கூட்டத்தில் பங்கேற்கும்படி பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். இதற்காக அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கூட்டத்தில் பங்கேற்பதற்கு சாதகமான சூழ்நிலை இங்கு ஏற்படவில்லை என்பதை அவர்களிடம் தெரிவித்து விட்டேன். இப்படி கூறுவதற்காக பிரதமரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டேன். காஷ்மீர் பிரச்னையில் தலையிட்டு, உடனடியாக தீர்வு காணும்படி பிரதமரிடம் வலியுறுத்தினேன். குறிப்பாக, கலவரத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அவரிடம் விளக்கினேன்.அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அளவுக்கு காஷ்மீர் மாநில அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. காஷ்மீரில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வேண்டும். அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வேண்டும்.இவ்வாறு மெகபூபா முப்தி கூறினார். மெகபூபாவின் இந்த அதிரடியான அரசியலால், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஹூரியத்தால் தொடரும் பதட்டம்: இதற்கிடையே, அனந்தநாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட பல இடங்களில்  ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தது. இருந்தாலும், ஹூரியத் மாநாட்டு அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற இயக்கம் சார்பில், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக ஸ்ரீநகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், சாலைகள், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.

பதட்டம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.இந்நிலையில், சில தனியார் செய்தி சேனல்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, இந்திய எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு சார்பில் காஷ்மீர் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரிக்கைக்கு ஜிஹாதிகளின் அச்சுருத்தல்!

ஜூலை 10, 2010

அமர்நாத் யாத்திரிக்கைக்கு ஜிஹாதிகளின் அச்சுருத்தல்!

அமர்நாத் யாத்திரைத் தொடங்கியது: ஸ்ரீநகர், ஜூலை.1, 2010: இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை ஜம்மு-காஷ்மீரில் இன்று தொடங்கியது. 7000த்துக்கும் மேற்பட்டோர் பல்தால் பகுதியிலிருந்து தங்களின் யாத்திரையைத் தொடங்கியதாகவும், 1,100 பேர் பல்தால் செல்வதற்காக மணிகாம் முகாமிலிருந்து புறப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்து யாத்ரீகர்களும் பத்திரமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பல்தால், மணிகாம் மற்றும் யாத்திரைப் பாதையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

உரடங்கு மற்றும் தெரு கலாட்டா-கலவரம் சாக்கு வைத்துக் கொண்டு தாக்க திட்டம்: ஜூலை 10, 2010: தீவிரவாதிகள் அமர்நாத் யாத்திரிகர்களைத் தாக்க திட்டமிட்டிருப்பதாக, அவர்களின் ரகசிய உரையாடல்களினின்று அறியப்படுகிறது[1]. காஷ்மீரத்தில் மற்ற இடங்களில் கலாட்டா செய்து, திசைத் திருப்பி, அமர்நாத் யாத்திரிகர்களைத் தாக்கவிருப்பதாக, அதே மாதிரியான, தீவிரவாதிகளின் பேச்சுகளை இடைமறித்து, ரகசியமாகக் கேட்டபோது தெரியவந்துள்ளது[2]. இதனால், யாத்திரிகர்களுக்கு பாதுபாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது[3].

தீவிரவாதிகள் தாக்குவது, பக்தர்களைக் கொல்வது என்பது அவர்களைப் பொறுத்த வரைக்கும் வாடிக்கையான விஷயம்: ஜிஹாதி, இஸ்லாமிய, பயங்கரவாத, தீவிரவாத கும்பல்களுக்கு இந்துக்களைக் கொல்வது என்பது புண்ணிய காரியமாகக் கருதுகின்றனர். ஏனெனில், அவஎகளைப் பொறுத்த வரைக்கும் காஃபிர்களைக் கொல்வது, குரானின் படி அவ்வாறு கருதப்படுகிறது என்பர். உதாரணத்திற்கு, 2002ல் நடந்த நிகழ்சி கீழே கொடுக்கப் படுகிறது.

kashmir-siva-temple-2010

kashmir-siva-temple-2010

ஒரு சிவன் கோவில் தாக்கப்பட்டது: ஒரு சிவன் கோவில் தாக்கப்பட்டது என்ற செய்தி வந்ததும், பக்தர்கள் கவலைப்பட்டனர். அமர்நாத் சங்கர்ஸ சமிதி பந்திற்காக 03-07-2010 அன்று அழைப்பு விடுத்தது[4]. பிரச்சினை வேண்டாம் என்று போலீஸார் அந்த பக்தர்கள் மற்றும் பிஜேபி.காரர்களை கைது செய்தது. முழுவிவரங்கள் வெளியிடாமல், சென்ஸார்ஷிப் அமூலில் உள்ளதை இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்[5]. காஷ்மீரத்தில் கோவில்கள் தாக்கப் படுவது, இடிக்கப்படுவது, இஸ்லாமிய தீவிரவாதிகள்-ஜிஹாதிகளுக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது[6].

Siva-temple-NO-ADMISSION-2010

Siva-temple-NO-ADMISSION-2010

கோவிலின் மீது “அனுமதி இல்லை” என்று எழுதி மிரட்டுவது தான் காஷ்மீர் முஸ்லிம்கள், இந்துக்களின் உரிமைகளைக் காக்கும் லட்சணம்! மற்ற மாநிலங்களில் உள்ள முஸ்லீம்கள், தங்களது அருமை-பெருமைகளை மட்டும் இணைதளங்களில் போட்டு, பாராட்டிக் கொள்கிறார்களே, இத்தகைய கொடுமைகளுக்கு ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள்? குறிப்பாக தமிழ்-முஸ்லீம்கள் கூட கண்டு கொள்ளாமல் இருப்பது, அவர்களது ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கைத்தான் காட்டுகிறது

இதே போக்குதான், அமர்நாத் யாத்திரை விஷயத்திலும் உள்ளது. அமர்நாத் யாத்திரையினால், கோடிகளில் பலனடைவது முஸ்லீம்கள்தான். கடைகள் வைத்திருப்பது, யாத்திரிகர்களை குதிரை மீது ஏற்றி அழைத்துச் செல்வது, தங்க இடம் கொடுப்பது………………….என்று எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.


[1] http://www.hindustantimes.com/Terror-attack-feared-during-Amarnath-Yatra/Article1-563611.aspx

[2] http://www.indiablooms.com/NewsDetailsPage/newsDetails100710k.php

[3] The Hindu, Government sounds alert for Amarnath Yatra, dated 10-07-2010, http://www.thehindu.com/news/national/article509523.ece

[4] http://www.telegraphindia.com/1100704/jsp/nation/story_12644189.jsp

[5] http://www.groundreport.com/Business/Hindu-organisations-condemned-the-action-of-the-go_2/2925456

[6] http://www.kashmir-information.com/Atrocities/Temples/temples3.html