Archive for the ‘சிறையில் அடைப்பு’ category

“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

நவம்பர் 7, 2016

மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறைஎனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

iso-certified-bhopal-jailபோபால் மத்திய சிறை உள்-கண்காணிப்பு கேமராக்கள் ஸ்விட்ஸ் ஆப்செய்யப்பட்டது: போபால் மத்தியசிறை “பிளாக்.பி” [Block B] பகுதியில், சிமி தீவிரவாதிகளைக் கண்காணிக்க பொருத்தப்பட்ட உள்ளே நடக்கும் காட்சிகளை படமெடுக்கும் காமராக்கள் [CCTV cameras] அணைக்கப்பட்டிருந்தது பல கேள்விகளை எழுப்புகின்றன[1]. 50 காமராக்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட மூன்று காமராக்கள் பட்டு “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது மற்றும் கடந்த ஒருவாரமாக அந்நிலையிலேயே இருந்தது உள்-ஆட்களின் உதவியோடுதான் செய்யப் பட்டது உறுதியாகின்றது[2]. அந்த மூன்று கேமராக்களில் ஒன்று புதியதாக சமீபத்தில் தான் பொருத்தப்பட்டது. சாவிகளின் மாதிரிகளும் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. ஆனால், சிறையிலிருந்து தப்பித்துள்ளது, ஒரு போலீஸ் கொலையுண்டது எல்லாம் கட்ட்டுக்கதையா என்ன? தீபாவளி நேரத்தில் நிறைய போலீஸார் விடுப்பில் சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், சிமி தீவிரவாதிகள் கான்ஸ்டெபிள் ரமாசங்கர் யாதவைக் கொன்று, இன்னொருவரைக் கட்டிப் போட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

midnight-to-3-a-m-when-jail-official-rama-shankar-goes-to-check-the-barracks-the-eight-simi-members-overpower-him-and-slit-his-throat-with-a-steel-plateகண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே இடம் மாற்றம்: கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே வேலையிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்[3]. புதியதாக சுதிர் சாஹி என்றா அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். நந்தன் தூபே என்ற முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், இந்த கேமரா விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்[4]. இதில் அம்ஜத், ஜாகிர் ஹுஸைன் மற்றும் செயிக் மொஹம்மது என்ற குட்டு, ஏற்கெனவே தந்தியா பீல், கான்ட்வா மாவட்ட ஜெயிலிலிருந்து அக்டோபர்.1, 2013ல் தப்பித்தவர்கள் தாம்[5]. அதாவது அத்தகையவர் மறுபடியும் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் போது, ஜெயில் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கக் கூடாத அளவுக்குக் கண்காணிக்கப் பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு மெத்தனமாக இருந்ததால், அவர்கள் மறுபடியும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், வெற்றியும் கண்டுள்ளனர்.

 they-take-the-keys-from-his-pocket-and-open-the-cell-they-carry-along-bed-sheets-which-they-tie-together-to-slide-down-the-prison-walls

அக்டோபர்.1, 2013 மற்றும் நவம்பர் 2016 சிறையுடைத்து வெளியேறிய முறை ஒரே மாதிரியாக உள்ளது[6]: ஸ்டீல் ஸ்பூன்கள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பல் துலக்கிகள், ஸ்டீலினால் செய்யப் பட்ட நாக்கு சுத்தப்படுத்தும் தகடுகள் முதலியவற்றை, ஆயுதங்களாக மாற்றி பயன்படுத்தி, சிறை காவலாளியின் கழுத்தை அறுத்துக் கொன்று, கொடுக்கப்பட்ட, போர்வைகளை கயிறாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பிச் சென்றுள்ள முறை ஒரே மாதியாக உள்ளது[7]. சாவிக்கான அச்சுகள் தயாரித்துக் கொடுத்தது, போலி சாவுகள் தயாரிக்கப்பட்டது போன்றவையும் அதேபோல இருக்கின்றன. கைதிகள் முன் அனுபவத்தில் அதேபோல செயல்படுவார்கள் என்பதை எப்படி ஜெயில் அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கின்றன. இக்காலத்தில் ஜெயில் நிர்வாகம், சிறை கைதிகளை கண்காணிப்பது, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றிற்கு, ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அவையெல்லாம் தெரியாது என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால், சிறை அதிகாரிகள், கண்காணிப்பு போலீஸார், கேமரா பிரிவு ஆட்கள், மின்சார சப்ளை பொறுப்பாளர்கள் முதலியோர் மெத்தனமாக இருந்ததால் தான், அந்த சிமி பயங்கரவாதிகள், அதே முறையைப் பயன்படுத்தி, தப்பிச் சென்றுள்ளார்கள்.

they-run-towards-the-periphery-wall-where-they-find-another-jail-official-they-tie-his-hands-and-legs-and-make-good-their-escapeவெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரைகவனித்துக் கொண்டதுயார்?: இதனால், இவர்கள் கடந்த மாதங்களில் திட்டமிட்டே வேலை செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. ஆக உள்ளேயிக்கும் போலீஸார், ஜெயில் வார்டன், வேலையாட்கள் இவர்களில் யார் அவர்களுக்கு உதவியிருப்பார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங், “உள்ளேயிருந்த ஆட்களின் உதவி இல்லாமல் அவர்கள் தப்பியிருக்க முடியாது…….இந்த ஜெயில் உடைப்பு மற்றும் கைதிகள் தப்பித்து சென்றவை எல்லாம் வெளியிருந்து பணவுதவியோடுதான் செய்யப்பட்டுள்ளது[8]. அவர்கள் மற்ற கைதிகளை விட அதிகமான சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இத்திட்டம் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக தீட்டப்பட்டு வந்துள்ளது. அத்தகைய செயல் தேசத்துரோகமாகும்,” என்று கூற்றஞ்சாட்டுகிறார்[9].  அப்படியென்றால், எல்லா விளைவுகளையும் அறிந்து, துணிச்சலாக வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார் என்ற கேள்வி எழுகின்றது. மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், இத்தகைய சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

near-the-periphery-wall-they-find-some-wooden-logs-put-together-a-ladder-with-the-logs-and-the-bed-sheets-scale-the-wall-and-escapeஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடு ஏன்?: உள்-கண்காணிப்பு கேமரா வேலைசெய்ததோ இல்லையோ, “தி இந்து” கார்ட்டூனிஸ்ட் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்[10]. நான்கைந்து படங்களில், சிமி-பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் நடந்துள்ளனர் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார்[11]. ஆனால், “என்கவுன்டர்” விசயத்தில் சிமி-பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, கிராமவாசிகளைப் பேட்டிக் கண்டு, அவர்கள் முரண்பாடாக நடந்ததை விவரிப்பதை, பெரிய கதையாக – செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த சிமி-பயங்கரவாதிகள் எப்படி அவ்வாறு ஆனார்கள் என்றும் வெளியிடலாமே? அதை செய்யாமலிருப்பதால் தான், அத்தகைய செக்யூலரிஸ ஊடகங்கள் நம்பிக்கைக்கு ஏற்றதா-இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. மனித உரிமைகள் ஆணையம், மதிய பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனும்போது, ஒரு கான்ஸ்டெபிள் கொலையுண்டது மற்றும் இன்னொரு போலீஸ் கட்டிப்போட்டது முதலியோரின் உரிமைகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை? தேசத்திற்கு எதிராக செயல்படும், தடை செய்யப் பட்ட இயக்கத்தினரின் கொலை செய்த விதம், குற்றங்களைத் தொடர்ந்து செய்து வரும் போக்கு, முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், அவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிடும் போக்கு என்னவென்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

07-11-2016

the-locations-of-jailbreak-encounter-etc-illustrated

[1] Indian Express, Clues to Bhopal SIMI activist jailbreak ‘inside job’: Moulds, CCTV off, Written by Dipankar Ghose | Bhopal | Published:November 7, 2016 3:20 am

[2] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-jailbreak-encounter-insider-job-3740874/

[3] The Hindustan Times, CCTV cameras weren’t working in Bhopal jail when SIMI prisoners escaped, Anirban Roy, Hindustan Times, Bhopal, Updated: Nov 01, 2016 16:04 IST

[4] http://www.hindustantimes.com/india-news/non-functinal-cctv-cameras-may-have-helped-simi-prisoners-escape-sources/story-gxnkltkV0kH5T8ow6zkC7K.html

[5] Amjad, Zaqir Hussain, and Sheikh Mehboob alias Guddu — were among the six who escaped from the district jail three years ago. escaped from the Tantya Bheel central jail in Khandwa district on October 1, 2013.

[6] The Hindustan Times, Bhopal jailbreak exposes security gaps in MP’s best-secured prison, Kalyan Das, Hindustan Times, Bhopal, Updated: Oct 31, 2016 21:49 IST

[7] The tactics used in both jailbreaks were almost identical. On both occasions, the SIMI men used steel spoons, utensils, toothbrushes and metallic tongue cleaners to make crude daggers to attack jail guards. One such weapon was used to slit the throat of head warder Ramashankar Yadav inside the B block of the Bhopal jail between 2am and 3am. Then again, they made a rope ladder with bed sheets — stringing pieces of wood in between for steps. The technique was used by a self-styled SIMI commander at Khandwa jail.

http://www.hindustantimes.com/india-news/bhopal-jailbreak-exposes-security-gaps-in-mp-s-best-secured-prison/story-k5gFUlt9PnTEI2wfhdbRVK.html

[8] Indian Express,  Bhopal encounter: Jailbreak not possible without insider help, says MP Home Minister, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 2, 2016 12:26 pm.

[9] When contacted, Madhya Pradesh Home Minister Bhupendra Singh said it was “impossible to escape without inside collusion” and alleged that the jailbreak was facilitated by “funding from outside”. “It must have taken elaborate planning over two to three months because it is not possible to make duplicate keys so early and without help from an insider,” said Singh – Indian Express.

http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-encounter-simi-activists-jailbreak-not-possible-without-insider-help-says-mp-home-minister-bhupendra-singh-3733047/

[10] The Hindu, Death wish on a Bhopal night: Daring escape to nowhere, November 1, 2016.

[11] http://www.thehindu.com/todays-paper/tp-national/death-wish-on-a-bhopal-night-daring-escape-to-nowhere/article9289399.ece

ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

மார்ச் 26, 2013

ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

Sanjaya with long beard - a sufi looking

சூபி ஞானிகளை, மெய்ஞானிகளையே வென்றுவிடும் தோற்றம் – கைதாகிய நிலையில்.

மார்க்கண்டேய கட்ஜு யாதாவது ஒரு பெரிய பதவியை எதிர்பார்க்கிறாரா?: ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி என்ற பெண்ணும் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அபு சலீம் போன்ற தீவிர-பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[1]. ஆனால், மார்க்கண்டேய கட்ஜு, குறிப்பாக சஞ்சய்தத்திற்காக மட்டும் பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர்[2]. மறைமுகமாக, இதனை கேள்வி கேட்பது போல, ஊடகங்கள், அவனைத் தவிர இன்னுமொரு குற்றவாளியும் அதே குற்றத்திற்காக, ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அவளுக்காகவும் பரிந்துரைக்க வேண்டியதுதானே என்று கேட்க, ஆஹா, பேஷ், பேஷ், அதற்கென்ன செய்து விடலாமே என்று பாட்டுப் பால ஆரம்பித்து விட்டார்[3].

Sanjaya with long beard sufi look

கைதாகி, வீர நடை போட்டு வரும், மெய்ஞான முனிவர் தோற்றத்தில்.

முஸ்லீம்இந்து வேடங்களை வாழ்க்கையில் சஞ்சய் தத் போடுவது ஏன்?: சஞ்சய்தத் நடிகன் என்பதால், வேடம் போட அவனுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. திடீரென்று இந்து போல பெரிதாக நாமம், காவி துண்டு சகிதம் காட்சியளிப்பதும், பிறகு தாடி, பச்சைநிற துண்டு அல்லது உடை அணிந்து வருவதும், நீதிமன்றத்திலேயே பார்த்திருக்கலாம். நீதிமண்ரத்திற்கு வரும்போதே, ஒருமுறை ஏதோ முஸ்லீம் போல பெரிதாக தாடி வைத்துக் கொண்டு வருவது, மறுமுறை, பெரிய நாமம் போட்டுக் கொண்டு வருவது என்ற வேடங்களை பல புகைப்படங்களில் பார்க்கலாம்.

Sanja with different look prompting Yasar Arafat

யாசர் அராபத்தை நினைவூற்றும் அந்த பாம்புத்தோல் டிஸைன் துண்டோடு.

முஸ்லீம்களான இந்தி நடிகர்கள் இந்துக்களைப் போல ஏன் நிஜ வாழ்க்கையில் நடித்து ஏமாற்ற வேண்டும்?: சுனில் தத், நர்கீஸ் என்ற முஸ்லீம் நடிகையை மணந்து கொண்டதும் முஸ்லஈம் ஆகிவிட்டார். அதாவது, ஒரு முஸ்லீமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், ஆணோ-பெண்ணோ முஸ்லீமாக வேண்டும். அப்பொழுது தான், நிக்காவே செய்து வைப்பார்கள். ஆனால், இந்தி நடிகர்கள் பெரும்பாலோனோர் முஸ்லீம்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்துக்கள் போல பெயர்களை வைத்துக் கொண்டு, உடைகள் அணிந்து கொண்டு, மீசை-தாடி இல்லாமல் நடித்து வந்தார்கள். சஞ்சய் தத் குடும்பமும் அவ்வாறே செய்து வந்துள்ளது. சஞ்சய் தத்,, அன்று தனது தந்தையிடம் சொன்னது, “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”, என்றதாகும். அதாவது, மொரிஸியசிலிருந்து திரும்பி வந்து போலீஸ் நிலையத்தில் இவ்வாறு சொல்கிறான்.

Sanjay with beard and all

இது புதுவித தாடி-மீசை தோற்றத்தில்.

பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டியது ஏன்?: முதன் முதலில் இந்த தந்திரத்தைக் கையாண்டவர், முஹம்மது அஸாரத்தூனனென்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் தான். பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டிய ரஅசியத்தின் பிண்ணனி இதுதான். அதாவது, இந்திய சட்டங்கள் என்களுக்குப் பொருந்தாது, ஷரீயத் சட்டம் தான் எங்களுக்கு பொருந்தும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்!

Sanja coming to court

அஹா, நெற்றியில் நெடிய நாமம் – ஆமாம் “சாப்ரென் டெரர்” என்று சொல்கிறார்களே, அந்த நிறத்துடன்.

Rakesh Maria told Sanjay to tell his father the truth, and Sanjay conceded that he had been in possession of an assault rifle and some ammunition that he had got from Anees Ibrahim. Sunil Dutt wanted to know the reason why. He was not prepared for the answer[4]: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.” A crestfallen Sunil Dutt left the police headquarters. It was a moment almost worse than the shock of the previous day. ராகேஷ் மரியா என்ற போலீஸ் அதிகாரி, உண்மையைச் சொலும்படி கூற, சஞ்சய் தனது தந்தையிடம் அனீஸ் இப்ராஹிமிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றதை ஒப்புக்கொண்டான். சுனில் தத் காரணத்தைக் கேட்டபோது, அவனுடைய பதிலைக் கேட்க தயாரக இல்லை. அப்பொழுது சொன்னது தான், “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”!

Sanjay Dutt worshipping in a Karnataka temple

பக்தகோடிகளை முழிங்கிவிடும் அபாரமான தோற்றம் – பூஜாரி கெட்டார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, “தெஹல்கா”விலிருந்து எடுத்தாளபட்டுள்ள விவரங்கள் ஆகும், அதற்கு “தஹல்கா”விற்கு நன்றி:

Sanjay-Dutt with Tilak

ஆளை விடுங்கய்யா, இதெல்லாம் சகஜம்.

Quite in contrast to what he felt in 1993, Sanjay’s forehead was smeared with a long red tilak on judgement day — November 28, 2006. The air inside the TADA courtroom was heavy with tension and fear. An ashen-faced Sanjay sat head down next to his friend and co-accused Yusuf Nullwala, whom he had called from Mauritius and asked to destroy one of the AK-56s in his possession. A few rows behind them was 64-year-old Zaibunissa Kazi, another co-accused[5]. ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி சஞ்சய்தத்திற்கு பின்னால் உட்கார்த்திருந்தாள். இவனோ நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான்.
ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி, சஞ்சய் கொடுத்த ஆயுதங்களை தனது வீட்டில் வைத்திருந்தாள். அதனால், அய்யுதங்கள் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டாள். The judge P. D. Kode then called out Zaibunissa Kazi’s name. Two of the three AK-56 rifles, some ammunition and 20 hand grenades returned by Sanjay had been kept at her house for a few days. The judgement was as severe as the previous one. She was held guilty under Section 3(3) of TADA. The sub-section defines a convict as one who “conspires or attempts to commit, or advocates, abets, advises or incites or knowingly facilitates the commission of a terrorist act or any act preparatory to a terrorist act.”
Tension was visible on the face of Satish Maneshinde, one of Sanjay Dutt’s key lawyers. He was later to say this to a Tehelka spycam: “The moment she was convicted, I thought Sanjay too would be convicted under TADA.” (See box on Page 12) He had reasons for admitting this. Unlike his client Sanjay, who had asked for the weapons, stored them, asked for them to be destroyed and even admitted to his association with Anees Ibrahim, Zaibunissa Kazi had only stored them for a few days. Her role was in no way comparable to Sanjay’s and nobody knew it better than Sanjay’s lawyer. மும்பை வெடிகுண்டு கொலைகள் நடந்தேரியப் பிறகு, சஞய் வீட்டில், இந்த ஆயுதங்களில் சில கண்டெடுக்கப்பட்டன, மற்றவை ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைக்கப் பட்டன. வேறுவழியில்லாமல், சுனில் தத், போலீஸாருக்க்கு விஷயத்தை தெரிவித்தார். ஏப்ரல் 19, 1993 மொரிஸியஸிலிருந்து வந்த சஞ்சய் போலீஸரிடம் அரண்டர் ஆனான்.
குற்றத்தை மறைப்பதற்காக, மன்சூர் அஹ்மத் சஞ்சய் வீட்டிகுச் சென்று ஆயுதங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைத்தனர். A day earlier, another co-accused Manzoor Ahmed had similarly been held guilty under Section 3(3) of TADA. Manzoor’s role too was clear in Maneshinde’s head: he had been called by gangster Abu Salem — like Manzoor, also from Azamgarh in UP — and the two had driven to Sanjay’s house to pick up the bag that was then kept at Zaibunissa Kazi’s house. Both she and Manzoor face the prospect of spending a minimum five years in jail, if not a life term.
 As for Zaibunissa Kazi, she had allowed her house to be used as a transit point. The weapons were meant neither for her nor for Manzoor. The evidence on record shows that their offence was minor when compared to that of Sanjay who kept three AK-56s and hand grenades for close to a week and continued to retain one assault rifle for almost a month after serial blasts rocked Bombay. Apprehending his arrest, Sanjay had the weapons destroyed and, quite unlike Manzoor, he made seven calls to Anees. விஷயத்தை அறிந்து கொண்டுதான், சஞ்சய் அந்த ஆயுதங்களை அழிக்க முடிவெடுத்துள்ளான். அதற்கு அனீஸ் இப்ராஹிம் உதவியுள்ளான்.
மூன்று கண்சாட்சிகளும் சஞ்சய் ஆயுதங்களை வைத்திருந்ததை உறுதி செய்துள்ளனர். ஆகையால், தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்தான் என்ற ஜோடிப்பு வாதம் பொய்யானது. At least three witnesses testified that Sanjay Dutt kept assault rifles and hand grenades. How does this justify his ‘self-protection’ theory. இருப்பினும் அவனுடைய வக்கீல் வாதாடி வந்துள்ளது நோக்கத்தக்கது[6].

Sanjay with saffron shawl

நாமம் தான் காவியில் போட முடியுமா, இதோ துண்டும் போட முடியும்.

போலீஸார் இன்று கூட சொல்வதென்னவென்றால், சஞ்சய் ஆயுதங்களை மட்டு வைத்திருக்கவில்லை, இதற்கு மேலேயும் செய்துள்ளான் என்பதுதான்[7]. விசாரணையில் பல விஷயங்கள் வெளிவந்துள்ளபோதிலும், சுனில் தத், தன்னுடைய அரசியல் செல்வாக்கு வைத்துக் கொண்டு மறைக்க பாடுபட்டுள்ளார். தான் ஒரு முஸ்லீம் என்றும் சொல்லிக் கொண்டு மதரீதியில் பேசியுள்ளார்[8]மானால், மேலே குறிப்பிட்டுள்ளது போல், இவனோ சொன்னதற்கு மாறாக[9], நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான். மன்சூர் அஹமத்இன் மனைவி சொன்னதாவது[10], “சஞ்சய் பெரிய ஆள், நிறைய பேர்களை தெரியும், பணம் இருக்கிறது. நான் என்ன செய்வது, எனக்கும் பணம் இருந்தால் பெரிய வக்கீலை அமர்த்தியிருப்பேன்

Sanjay-Dutt-after-paying-obeisance-at-Golden-Temple-in-Amritsar

அட, நாமம் என்ன, என்னவேண்டுமானாலும் செய்வேன் – அமிர்தசர்சில் இந்த கோலம்!

sanjay-dutt-at Ajmir dargah posing as Muslim

அட போய்யா, நான் முஸ்லீம், இப்படித்தான் இருப்பேன் – ஆஜ்மீரிலோ இச்சுமைதான் – என்னே லட்சியம்!

© வேதபிரகாஷ்

24-03-2013


[1] Zaibunnisa Kadri, who acted as a conduit for the arms without express realisation of the contents of the package, were charged under the more rigorous provision.

Read more at:http://indiatoday.intoday.in/video/zaibunnisa-kadri-sanjay-dutt-1993-mumbai-blasts-anees-ibrahim-abu-salem/1/259373.html

[8] In his first confessional statement, made to his father and Congress MP Sunil Dutt who wanted to know why he had been stashing deadly arms, Sanjay Dutt said: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.”

[10] Sanjay Dutt is a big man. He has sources. What do we have? I don’t even have money to pay the lawyer any more. Sanjay Dutt can hire the best lawyers. If I had money, I could also have hired a good lawyer.

http://archive.tehelka.com/story_main28.asp?filename=Ne240307Sanjay_dutt_CS.asp

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

பிப்ரவரி 28, 2013

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

தொழிலதிபருக்கு மிரட்டல் கடிதம் ஏன்?: முன்னர், இந்திய முஜாஹித்தீன் இ-மெயில்கள் மூலம் டிவி-செனல்களுக்கு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்று அனுப்பி வைத்துள்ளது. இம்முறை கடிதம் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது. அப்படியென்றால், ரதன் டாடாவிற்கும் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இல்லை, மற்ற எல்லா தொழிலதிபர்களுக்கும் மிரட்டல்கள் வந்திருக்க வேண்டும். இப்பொழுதுதான், ஐரோப்பிய குழுமம், மோடி மீதான தடையை நீக்கிக் கொண்டு, வியாபார ரீதியாக பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஆகவே, இந்திய பொருளாதார முன்னேற்றத்தை அல்லது குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்க இம்மாதிரியான மிரட்டல் வந்திருக்க வேண்டும்.

 

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்[1].  ஒரு அடையாளம் தெரியாத மர்ம நபர் குரியர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அதாவது, செக்யூரிடியிடம் 24-02-2014 அன்று கொடுக்கப்பட்டது[2]. 26-02-2013 அன்று எஸ்.பி. நந்தா, ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துணைத் தலைவர், போலிஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து புகார் அளித்துள்ளார்[3]. அதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது[4]. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.

 

கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?: வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட அதில் –

  1. குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது முஸ்லீம்களை அவமதிப்பது போன்றது
  2. குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும்,
  3. அவரது 27 மாடி ஆன்டில்லா – வீட்டையும் தாக்குவோம் என்றும்,
  4. ஏனெனில் அது வக்ப் சொத்தை அபகரிக்கப் பட்டுக் கட்டப்பது என்பதால் (Accusing him of grabbing the Waqf Board property at Altamount Road to build his house)
  5. தங்களது கூட்டாளியான முஹம்மது டேனிஷ் அன்சாரி (Mohammed Danish Ansari) என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

டேனிஷ் என்பவன் யார்?: டேனிஷ் என்பவன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏனெனில், அதே பெயரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

  1. டேனிஷ் முஹம்மது அன்சாரி[5] தர்பங்கா, பீகாரைச் சேர்ந்தவன். பகல் பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், அவனிடத்தில் தங்கியிருந்தான்[6]. தீவிரவாதி யாஸின் பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜனவரியில் கைது செய்யப்பட்டான்.
  2. மற்றும் 2008 அகமதாபாத் வெடிகுண்டு[7] குற்றங்களுக்காக இன்னொரு டேனிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
  3. இன்னொருவன் டேனிஷ் ரியாஸ் அல்லது சையது அஃபாக் இக்பால் என்பதாகும்.

 

இக்கடிதம் போலியா, உண்மையா?: இக்கடிதம் போலியாக இருக்கும் என்றாலும்[8], மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இக்கடிதம் உண்மையென்றால், தனிப்பட்ட நபருக்கு, அனுப்பிய முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும், ஏனனில் இந்தியன் முஜாஹித்தீன் அவ்வாறு முன்னர் யாருக்கும் கடிதம் அனுப்பியது கிடையாது. இருப்பினும், தேசிய புலனாவுக் கழகமும் இதைப் பற்றி விசாரித்து வருகிறது[9]. தீவிரவாத எதிர்ப்புப் படையும் இதனை ஆய்ந்து வருகிறது, ஏனெனில் கடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் பொறுப்பேற்று ஐந்து முறை டிவி-செனல்களுக்கு இ-மெயில்கள் அனுப்பியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது[10].

 

© வேதபிரகாஷ்

28-02-2013


[3] On Tuesday, Reliance vice-president SP Nanda filed a police complaint after meeting with police commissioner Satyapal Singh.

[5] The letter also did not mention the full name of the IM operative in custody. Three people of the same name were arrested in various cases, but police believe the demand is for the release of Mohammed Danish Ansari who was arrested in January for giving shelter to the Bhatkal brothers.

[7] The police said the Danish, whose release is demanded in the letter, is Danish Riyaz alias Syed Afaque Iqbal, who was arrested for his role in the 2008 Ahmedabad blasts.

Read more at:http://indiatoday.intoday.in/story/indian-mujahideen-narendra-modi-mukesh-ambani/1/251980.html

[10] Anti-terrorism squad (ATS) sources said the IM has in the past sent at least five emails to news channels claiming responsibility for blasts.

http://timesofindia.indiatimes.com/india/Cops-tighten-Mukesh-Ambanis-security-after-threat/articleshow/18720646.cms

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

பிப்ரவரி 23, 2013

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

Afzal-Hyderabad-Kasab-nexus

ஷிண்டே ஏன் இப்படி இருக்கிறார்?: உள்துறை அமைச்சகம் கூறுவதிலிருந்து, உள்துறை அமைச்சர் பலமுறை முன்னுக்கு முரணாக பேசுவது, அவர் ஒன்று தமது துறையினைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அல்லது அவரை யாரோ சுயமாக இயங்குவதற்கு தடையாக உள்ளனர் அல்லது பொம்மை மாதிரி ஆட்டிவைக்கின்றனர். கற்பழிப்பு சட்ட மசோதா விஷயத்தில் முழுக்க-முழுக்க சிதம்பரமே செயல்பட்டு இவர் ஓரங்கட்டப்பட்டது, அந்த நீதிபதி சொன்னதிலிருந்தும், சோனியவே அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டதிலிருந்தும் தெள்ளத்தெளிவானது. ஆகவே, தனது அமைச்சகம் இந்திய முஜாஹித்தீனின் கைவேலைத் தெரிகிறது என்றாலும், இவர் ஏதோ பொதுவாகத்தான் பேசி வருகிறார். லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் அவர் வாசித்த அறிக்கை ஒரு சடங்கு போன்று இருந்தது. சம்பந்தப்பட்டத் துறைகள், பாதுகாப்பு நிறுவன கள் முதலியவற்றின் பெயர்களைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். வெடி குண்டு வெடித்ததும் ஏன் ஐதராபாத் செல்லவில்லை என்று கேட்டதிற்கு டிக்கெட் கிடைத்தல் செல்வேன், பாதுபகாப்பு விஷயமாக செல்லவில்லை என்றேல்லாம் உளறிக்கொட்டினார்[1]. வெளிப்படையாகத் தெரியும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கண்டிக்க, தடுக்க, அடைலளம் காட்டக் கூட்டத் தயங்குவது நன்றாகவே தெரிகின்றது.

Hyderabad blasts - locations with time

குண்டு வெடித்த இடங்கள், நேரங்கள்

தடயங்கள் குறிப்பாகக் காட்டினாலும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்?: தடயத்துறை வல்லுனர்கள் பரிசோதித்து விட்டு, அம்மோனியம் நைட்ரேட், யூரியா, பெட்ரோல் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்[2]. அதுமட்டுமல்லாது, மூன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உத்திரபிரதேசம், பீஹார், ஜார்கெண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் போலீசார், தேசிய புலனாய்வுத்துறைக்கு உதவ தயாராகினர். ஐதராபாதிலேயே, ஒரு லாட்ஜில் தங்கி திட்டம் வகுத்ததையும் தெரிந்து கொண்டனர்[3].

IED - cycle bombs placed - locations

ஐ.ஈ.டி. விவரங்கள்

கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டவன் எப்படி உலா வருகிறான்?: ரியாஸ் பட்டகல் என்பவன் பாகிஸ்தானிலிருந்து ஜிஹாதிகளை இந்தியாவில் இயக்கி வருகிறான் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன மற்றும் அதே அங்கத்தினர்கள் அவற்றில் உள்ளனர் என்றும் தெரிந்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. கள்ளநோட்டு விவகாரத்தில் வங்காளத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்ட யாஸின் பட்டகல் தான் இப்பொழுது இந்தியாவில் செயல்படுகிறான், அவனது  உறவினன் ரியாஸ் பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறான். கல்காத்தாவில் கைது செய்யப்பட்டு, ஆலிப்பூர் ஜெயிலில் இருந்த இவன் வெளியே வந்து இப்பொழுது குண்டுகள் வைத்துக் கொலை செய்கிறான்[4]. ஆனால், இந்தியா ஒன்றும் செய்வதில்லை. அதாவது இப்பொழுதைய சோனியா ஆட்சியாளர்கள் “சட்டப்படி செய்கிறோம்” என்று பாட்டிப்பாடி காலந்தள்ளி வருகின்றனர்.

CCTV images pointing to the suspects

சைக்கிளில் வந்தவர்கள் – குண்டு வைத்தவர்களா?

கள்ளநோட்டு கும்பலும், ஜிஹாதிகளும், போலீசாரும்: ஜிஹாதி கள்ள நோட்டு கும்பல், இந்தியா முழுவதும் தாராளமாக செயல் பட்டு வருகிறது. பலமுறை இவர்கள் எல்லா மாநிலங்களிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அவர்களது பின்னணி, அவர்களது விவரங்கள் புகைப்படங்கள் முதலியன இந்தியா முழுவதுமாக காவல்துறை, பாதுபாப்புத் துறை முதலியோருக்குக் கிடைக்கும் வகையில் விநியோகப்படுவதில்லை. இதனால், ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு, மற்ர மாநிலங்க:உக்குச் சென்ரு விடுகின்றனர். அல்லது அண்டை நாடுகளான, நேபாளம், பங்களாதேசம், பாகிஸ்தான் என்று சுற்றி வருகின்றனர். துபாயில் ஜாலியாக அனுபவித்து விட்டு, இந்தியாவில் குரூரக் குற்றங்களை, கொலைகளை செய்து வருகின்றனர். இந்த கோணத்தில் தான் காஷ்மீர் விஷயமும் வருகின்றது. காஷ்மீரத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்த தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள் ஊடுறுவி வருகின்றன. அங்கு அவர்கள் “சுதந்திரப் போராளிகள்” என்று உலா வருகின்றனர்.

IM-email-2010-1

இஃதிய முஜாஹித்தீனின் ஈ-மெயில்

மாலைநேரத்தில், கோவிலுக்குப் பக்கத்தில் குண்டுகள் வெடிப்பது ஏன்?: பெர்ம்பாலான ஜிஹாதி வெடிகுண்டுகள் மாலை நேரத்தில் தான் கூட்டமுள்ல பொது இடங்களில் மற்றும் கோவிலுகுப் பக்கத்தில் வெடித்துள்ளன. குறிப்பாக தீபாவளி நேரத்தில். புமின இடமான வாரணாசி போன்ற இடத்டிலும் வெடித்துள்ளன. ஆகவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்திய முஜாஹித்தீனும் இதனை முன்னர் ஈ-மெயில்களில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளனர். ஹாவிஸ் சையதும் வெளிப்படையாகவே பேசிவருகிறான். பிறகு, ஏன் சோனியா அரசு மெத்தனம் காட்டுகிறது?

Blasts taken place 2006-2013

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், இந்தியா என்ன செடய்யும்?: நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்தாகி விட்டது[5]. இதை இந்தியா எதிர்த்தாலும், அமெரிக்கா கேட்பதாக இல்லை[6]. நேட்டோப் படை வெளியேற-வெளியேற[7] தாலிபான் மற்ற ஜிஹாதிகள் முழுவதுமாக சுதந்திரமாகி விடுவார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்[8]. குறிப்பாக இந்தியாவைத் தாக்குவோம் என்று அலையும் ஜிஹாதிகள் துணிச்சல் பெறுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலியவற்றை ஆட்டிப் படைப்பார்கள். பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவிற்குள் நுழையக் கூடும்[9]. ஆக வரும் ஆண்டுகளில் இத்தகைய குண்டு வெடிப்புகள் இன்னும் அதிகமாகும் என்று ராணுவ வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[10]. காஷ்மீரத்தில் இன்னும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் அதிகமாகும். அதனை ஊக்குவித்து, அந்த ஜிஹாதிகள் இந்தியாவிற்குள் வருவார்கள், குண்டுகளை வெடிப்பார்கள் அப்பொழுது அவர்களை எப்படி இந்தியா எதிர்கொள்ளும்? அவர்களை சமாளிக்க என்ன யுக்தியை, பலத்தை வைத்துக் கொண்டுள்ளது என்றெல்லாம் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Key players in the blasts

இவர்களை பிடிக்க முடியாதா?

வேதபிரகாஷ்

23-02-2013


[1] Explaining why he didn’t reach Hyderabad soon after the blasts took place, Shinde said in the Rajya Sabha that it was for the security reasons that he decided not to leave immediately. “If VIPs go there (blast sites) then police have to concentrate on securing the VIPs which is not right. VIPs should not be visiting the spot of such incidents, police should be given freedom to carry out investigation and gather evidences,” he said.

[2]  Initial forensic samples from blast sites indicate use of ammonium nitrate, urea and petrol. The investigators are probing three specific names as suspected by Hyderabad police. One suspect belongs to Uttar Pradesh, second from Bihar and third from Jharkhand. The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[3] The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[4] Mohammed Ahmed Siddibapa Mohammed Zarrar alias Yasin Bhatkal, who is said to be heading the operations of Indian Mujahideen in India, has dodged the bumbling intelligence agencies on at least three occasions. He was first arrested and jailed in Kolkata’s Alipore jail between December 2009 and February 2010 in a case of fake currency seizure.

Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2283048/Indian-Mujahideen-head-jailed-2009-got-bail-cops-did-know-terror-links.html#ixzz2LjIERYiR

[5] NATO’s plan is to shift full responsibility to Afghan forces for security across the country by the middle of next year and then withdraw most of the alliance’s 130,000 combat troops by the end of 2014, Rasmussen said.

[6] India is one of the most vocal supporters of continued engagement and has given Afghanistan more than $2 billion since the US-led invasion in 2001 overthrew the Taliban regime, which sheltered virulently anti-Indian militants.

http://www.infowars.com/india-fears-for-afghanistan-after-nato-withdrawal/

[9] The security agencies fear that such forces may resurface and India may become one of their targets. Most of the forces operating from Nepal can go back to Afghanistan and unless the situation is kept under check with proper international and regional cooperation, the problem could become immense for India.

[10] Once NATO forces pull out, several splinter groups will try to take over control of the troubled nation and this could lead to immense instability in the region, which could be fatal to India.

http://www.rediff.com/news/report/natos-afghan-pull-out-may-prove-costly-for-india/20121015.htm

வெள்ளிக் கிழமையன்று ஜெயிலில் இருந்த இந்திய முஜாஹத்தீன் குற்றவாளி, சககுற்றவாளிகளின் மூலம் கழுத்து நெறித்துக் கொள்ளப்பட்டான்!

ஜூன் 9, 2012

வெள்ளிக் கிழமையன்று ஜெயிலில் இருந்த இந்திய முஜாஹத்தீன் குற்றவாளி, சககுற்றவாளிகளின் மூலம் கழுத்து நெறித்துக் கொள்ளப்பட்டான்!

இஸ்லாத்தில் வெள்ளிக் கிழமை புனித நாளாகக் கருதப் படுகிறது. ஜிஹாதிகள் அன்றுதான் தொழுகைக்குப் பிறகு முக்கியமான வேலைகளை செய்ய தீர்மானம் எடுப்பர், அதன்படியே செயல்படுவர். முஹம்மது கதீல் சித்திக் (27 வயது) என்ற இந்திய முஜாஹத்தீன் மற்றும் பல வழக்குகளில் சிக்கியுள்ள முக்கியக் குற்றவாளி / குற்ரஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நபர், புனேயில் உள்ள மத்திய எரவாடா சிறையில் அவனது கூட்டாளிகளால் 08-06-2012 வெள்ளிக்கிழமை அன்று காலை கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தான்[1]. இது வெறும் “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது” மாதிரியா அல்லது வேறுவகையா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜெயில் பாதுகாப்பில் தோய்வா, இந்திய முஜாஹத்தீனின் ஊடுருவலா-ஆதிக்கமா? பாதுகாப்பு மிக்க அச்சிறையில் அவன் கொல்லப்பட்டது, ஜெயில் பாதுகாப்பு முறையின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நிச்சயமாக அவன் மூலம் வரும் உண்மைகளை மறைக்கவே அவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளான் என்று தெரிகிறது. தினமும் பாத்திமா என்ற கர்ப்பவதியான அவனது மனைவி தினமும் போன் செய்து பிரார்த்தனை செய்யச் சொல்வாளாம். ஆனால், இன்று போன் எதுவும் வரவில்லை. ஏனெனில், அவள் தொலைக்காட்சி மூலம் தன்னுடைய கணவன் கொலை செய்யப் பட்ட செய்தியை அறிந்தாளாம்[2]. அவனது பெற்றோர்களும் அவ்வாறே அறிந்துள்ளனர். இதனால், இதன் பின்னணியில் சதியுள்ளதாக சந்தேகிக்கப் படுகிறது[3]. அதிகமாக ஜாக்கிரதையாக தனியாக வைக்கப்பட வேண்டிய இவன் எப்படி மற்ற இரு குற்றவாளிகளுடன் சேர்த்து வைக்கப் பட்டான் என்று தெரியவில்லை[4]. அக்பர் முனிர் செயுக் மற்றும் பலு வெகைர், மஹோல் மற்றும் பலேராவ் என்ற உள்ளூர் / மாமூல் கொலையாளிகளால் அவன் கொல்லப்பட்டுள்ளதாக ஜெயில் அதிகாரிகள் கூறுகின்றனர் (Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui).

பல வழக்குகளில் சிக்கியுள்ளவன் கொல்லப்பட்டதால், வழக்குகள் பலவீனமாகின்றன: கோவிலில் குண்டு வைத்த வழக்கு விசாரணை இப்பொழுதுதான் முடிந்துள்ளது[5]. பட்கல் எப்படி சித்திக்கிற்கு பணம் கொடுத்து அத்தகைய குற்றங்களை செய்ய வைத்தான் என்ற விவரங்களை போலீஸார் விசாரணையில் அறிந்துள்ளனர்[6].

  • The IM had allegedly promised Siddiqui Rs 50,000 for planting the bomb at Halwai.
  • According to ATS officers, Bhatkal gained Siddiqui’s loyalty by offering him money during times of need. In the later part of 2009, when Siddiqui’s daughter was suffering from a rare illness, Bhatkal first offered Rs 1 lakh. The daughter eventually died, but Bhatkal had succeeded in gaining a loyal supporter.
  • An amount of Rs 25,000 was allegedly exchanged between him and Siddiqui before the Chinnaswamy Stadium blasts of 2010.

இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வைத்த வழக்கில், கர்நாடக போலீஸாருக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிகிறது[7]. யாசின் பட்கல் (தென்னிந்திய இந்திய முஜாஹத்தீனின் தளபதி) மற்றும் ரியாஸ் பட்கல் (Yasin Bhatkal and Riyaz Bhatkal) முதலியோர்க்குண்டான தொடர்பு பற்றிய ஆதாரங்கள் உள்ள நிலையில், இவ்வாறு அவன் கொலை செய்யப்பட்டது பல கேள்விகளை எழுப்புகிறது[8]. சித்திகின் பங்கு பல கொடிய வழக்குகளில் தெரிகிறது[9]. என்ன காரணத்திற்கோ, இவன் தில்லியில் கைது செய்யப் பட்டு, கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, நேராக கடற்கரை ஊரான பட்கல்லிற்கு அழௌஇத்துச் செல்லப் பட்டான், ஆனால், பெங்களூருக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்படவில்லை. காங்கிரஸ் ஒருவேளை மறைமுகமாக இவர்களுக்கு, இவ்வாறு சட்டரீதில்யில் உதவுகிறதா என்ற சந்தேகமும் நீதிமன்ற வளாகங்களில் எழுந்துள்ளது. அதற்கேற்றபடியே, சித்திக்கின் வழக்கறிஞர்கள் – ரெஹ்மான் மற்றும் கைனத் செயிக் இக்கொலையில் துப்புத்துலக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டுயுள்ளனர்[10]. எதிர்பார்த்தப் படியே, பலிக்கடாவாக எஸ்.வி.கடவகா[11] என்ற ஜெயில் சூப்பிரென்டென்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்!


[1]  Indian Mujahideen operative Mohammad Qateel Siddiqui, accused of executing terror attacks in Bangalore and Delhi and involvement in the attempt to blow up Pune’s famed Dagadusheth Ganapati temple, was strangled to death by two other prisoners in a high-security cell of Pune’s Yerawada central jail on Friday morning.

http://timesofindia.indiatimes.com/india/Top-terror-suspect-killed-in-high-security-Pune-jail/articleshow/13942693.cms

[4] Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui.

[9]  Siddiqui allegedly visited Bhatkal with Yasin to organize logistics for their terror missions.  “He was working with his uncle in his native Darbhanga, Bihar and was involved in gun running. He also supplied explosives to Indian Mujahiddeen and helped them in making bombs. Though he was not involved directly in the stadium twin blasts, he had always been a pillar of support for Yasin who allegedly planted the bombs in this instance,” said a source. Siddiqui was arrested from Delhi in November last year, but was never brought to Bangalore. But earlier this year, he was brought to Bhatkal to track down an explosives dump hidden in the coastal town.

[10] Meanwhile, Siddiqui’s lawyers A Rehman and Kainat Shaikh have demanded a CBI probe into the murder.

[11] The Maharashtra government on Friday ordered a CID probe into the case as home minister R R Patil has ordered the suspension of Yerawada jail superintendent S V Khatavka.

மதானியின் கூட்டாளி – அப்துல் அஜீஸ் வங்கி மோசடி வழக்கு, ஜாமீன் மறுப்பு, சிறையில் அடைப்பு!

செப்ரெம்பர் 18, 2010

மதானியின் கூட்டாளி – அப்துல் அஜீஸ் வங்கி மோசடி வழக்கு, ஜாமீன் மறுப்பு, சிறையில் அடைப்பு!

மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி[1]: கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸின் ஜாமீன் மனுவை, மதுரை சி.பி.ஐ., கோர்ட் தள்ளுபடி செய்தது. கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்மதானி. பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளார். இக்கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸ். இவர், மும்பையில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து பெறப்பட்டதாக போலி “டிடி’ தயாரித்து, மதுரை வடக்குமாசிவீதியில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.,யினர் 1994ல் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல்அஜீஸை, பெங்களூருவில் கடந்த செப்.,3ம் தேதி சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து, மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஜெகநாதன் உத்தரவுப்படி, அப்துல்அஜீஸ் ரிமாண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். சி.பி.ஐ., வக்கீல் ரோசாரியா சுந்தர்ராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணை நடத்திய நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

ரூ. 95 லட்சம் வங்கி மோசடியில் மதானி உறவினர்: மதுரையில் உள்ள மகாராஷ்ட்டிரா பாங்கியில் கடந்த 1994-ம் ஆண்டு ரூ. 94 லட்சத்து 85 ஆயிரம் செக் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக மதானி யின் உறவினரான அப்துல்அஜீஸ், மதுரை விளக்குத்தூண் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மேலும் சச்சின்சிராஜ்கிலானி, பாலசுப்பிரமணி முத்து கிருஷ்ணன், ரானாமகாதேவ் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அப்துல் அஜிஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடப் பட்டனர். இந்த மோசடி சம்பந்தமான வழக்கு மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஜாமீனில் சென்றவர்கள் அப்துல்அஜீசை தவிர மற்றவர்கள் கோர்ட்டில் ஆஜராகி வந்தனர். கடந்த 1998-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக அப்துல்அஜீஸ் இருப்பதால் அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப் பட்டது. இதையொட்டி அவரை சி.பி.ஐ. போலீசார் தேடி வந்தனர்.

மதுரை சிறையில் அடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு[2]: இந்த நிலையில் கர்நாடக போலீசார் மதானியை கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்தபோது அவருக்கு ஜாமீன் வாங்க அப்துல்அஜீஸ் பெங்களூர் சென்றிருந்தார். அவர் தேடப்படும் குற்றவாளி என தெரிந்த கர்நாடக போலீசார் அவரை கைது செய்து தமிழ்நாடு சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரை கொண்டு வரப்பட்ட அப்துல்அஜீசை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஜெகநாதன் வீட்டிற்கு நேற்று இரவு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். அவரை 16-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மதானியின் உறவினர் அப்துல்அஜீஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை 2 மணி அளவில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.


[1] தினமலர், மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி, செப்டம்பர் 18, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=87124

[2] மாலைச்சுடர், மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

ரூ. 95 லட்சம் மோசடியில் கைதான மதானி உறவினர், மதுரை சிறையில் அடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு , http://www.maalaimalar.com/2010/09/05173505/95-lakhs-cheating-madhani-caus.html