Archive for the ‘சிறுவர் கற்பழிப்பு’ category

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

மார்ச் 8, 2022

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

14-02-2022 அன்று காணாமல் போன சிறுமி சாவு: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார்[1]. 16 வயது என்கிறது தமிழ்.இந்து. அதன் பிறகு அவர் மாயமானார்[2]. 14-02-2022 அன்று காணாமல் போனாள் என்று மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீசில் 15-02-2022 அன்று அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காணாமல் போன சிறுமியும், தும்பைப்பட்டியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் (வயது 29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நாகூர் ஹனிபாவும் மாயமாகி இருந்தார். இதனால் சிறுமி அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். 16/17 வயது சிறுமி 12 வயது வித்தியாசம் கொண்ட ஒரு வாலிபனுடன் சென்றாளா அல்லது அவன் ஏமாற்றி, வலுக்கட்டாயமாக அல்லது வெறேதாவது காரணத்திற்காகக் கடத்திச் சென்றானா என்று புரிந்து கொள்ள முடியாதா? அதாவது, ஒரு முஸ்லிம், இந்து சிறுமியை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளாமல், உடலுறவு கொண்டுள்ளான், கற்பழித்துள்ளான். ஆகையால், இது “லவ் ஜிஹாத்” வகையில் கூட வரும், என்றாகிறது.

14-02-202 அன்று காணாமல் போன சிறுமியை 03-03-2022 அன்று ஹனிபாவின் தாய் ஒப்படைத்தது, 06-03-2022 அன்று மரணமடைந்தது: இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3-ந்தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அவரது தாயாரிடம் 03-03-2022 அன்று ஒப்படைத்தார். தனது மகளின் நிலையை கண்டு பதறிப்போன, சிறுமியின் பெற்றோர் அவரை உடனே மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் ஆலோசனையின் பேரில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் 06-03-2022 அன்று மதியம் அந்த சிறுமி பரிதாபமாக இறந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று நாட்களில் போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. மருத்துவ மனையிலும், மருத்துவர்கள் சிறுமி விசம் குடித்ததைக் கண்டு பிடித்து, போலீஸாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவில்லை.

05-03-2022 அன்று கைதான நாகூர் ஹனீபா சொன்னதுஎலி மருந்து சாப்பிட வைத்தேன்: இதற்கிடையே நேற்று முன்தினம் 05-03-2022 அன்று நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன[3]. இதுதொடர்பாக போலீசில் நாகூர் ஹனிபா தெரிவித்தது வருமாறு[4]: “நானும், அந்த சிறுமியும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று காதலியை பிப்., 14ல் திருப்பரங்குன்றத்தில் நண்பர் பெருமாள் கிருஷ்ணன், 25, வீட்டிற்கு நண்பர்களுடன் அழைத்துச் சென்றேன்[5]. பின்னர் அங்கிருந்து 15-02-2022 அன்று ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள எனது சித்தப்பா இப்ராகிம் வீட்டிற்கு கூட்டிச்சென்றேன்[6]. இதற்கு என்னுடைய நண்பர்கள் உதவினர். அங்கு சிறுமியை தங்க வைத்திருந்தேன். இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர். இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன்[7]. பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன். இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன்[8]. ஆனால் நான் அதை சாப்பிடவில்லை[9]. அதன் பின்னர் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மதுரைக்கு அழைத்து வந்து எனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டேன். பின்னர் எனது தாயார் அவரை அவரது வீட்டில் ஒப்படைத்தார்,” இவ்வாறு நாகூர் ஹனிபா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற காதலன் காதலியை ஏன் ஏமாற்ற வேண்டும்?: நாகூர் ஹனிபா சிறுமிக்கு மட்டும் எலிமருந்து கொடுத்து சாப்பிட வைத்து, இவன் துப்பி விட்டான் என்றால், நாடகம் ஆடியிருக்கிறான் என்று தெரிகிறது. மேலும் அந்த அப்பாவி சிறுமியை கொலைசெய்ய தீர்மானித்திருக்கிறான். அப்படியென்றால் அவளை கொலைசெய்ய வேண்டிய அவ்சியம் என்ன? அவளை ஒரே அடியாக ஒழித்துவிட வேண்டிய கட்டாயம் என்ன? அதாவது, அவள் ஏதோ ஒரு உண்மையினை சொல்லலாம், அவ்வாறு சொன்னால், இவன் மாட்டிக் கொள்வான் என்ற நிலை இருந்திருக்கிறது. அத்தகைய நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஊடகங்களில், “கூட்டு பலாத்காரம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவனே திருமணம் செய்து கொள்ளாமல் 14-02-2022 முதல் 02-03-2022 வரை கற்பழித்திருக்கிறான். மற்ற விவகாரங்கள் தெரியவில்லை.

8 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி: இதற்கிடையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபா, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். சிறுமி இறப்பு சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது: “மேலூர் சிறுமியை காதலன் நாகூர் ஹனிபா கடத்தி ஈரோடு சென்று அங்கு அவரது சித்தப்பா வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளார்[10]. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டம், சிறுமியை கடத்தியது உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[11]. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி இறந்து விட்டதால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் கூறினார்.

©வேதபிரகாஷ்

07-03-2022


[1] தினத்தந்தி, மதுரை: 17 வயது சிறுமி கடத்தி விஷம் கொடுத்து கொலைகாதலன் உள்பட 8 பேர் கைது, மார்ச் 07, 04:52 AM.

[2] https://www.dailythanthi.com/amp/News/TopNews/2022/03/07045239/8-arrested-for-kidnapping-and-poisoning-girl.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, எலி மருந்து கொடுத்து 17 வயது மேலூர் சிறுமி கொலை? 8 பேர் கைது.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம், By Vishnupriya R, Updated: Mon, Mar 7, 2022, 14:08 [IST]

[4] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/police-arrested-8-members-those-who-are-involved-in-17-years-old-melur-girl-death-450910.html

[5] தினமலர், கடத்தப்பட்ட சிறுமி மரணம்: சிறுமியின் காதலன் உட்பட 8 பேர் கைது,  Added : மார் 07, 2022  10:48.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2977283

[7] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.

[8] தினகரன், போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது, 2022-03-07@ 01:13:12.

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=747689

[10] தமிழ்.இந்து, கடத்தப்பட்ட சிறுமி பாலியல் துன்புறுத்தலால் உயிரிழப்பு? – காதலன் உட்பட 8 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 07 Mar 2022 08:17 AM; Last Updated : 07 Mar 2022 08:17 AM.

[11] https://www.hindutamil.in/news/crime/774781-sexual-harassment.html

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

மார்ச் 16, 2017

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

girls-raped-at-muslim-orphanage-07-03-2017

அனைத்துலக பெண்கள் தினத்திற்கு முன்னர் கற்பழிப்பு விவகாரம் வெளிவருவது:  மார்ச்.8 அனைத்துலக பெண்கள் தினம் என்ற நிலையில் 07-03-2017 அன்று வயநாடு, யதீம் கானாவில் உள்ள முஸ்லிம் அனாதை இல்லத்து டீன் – ஏஜ் பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்தி வந்துள்ளது. பெரிய இடத்து புள்ளிகள், அதிலும் முஸ்லிம்கள் சமந்தப்பட்டிருப்பதால், உடனடியாக பெண்கள் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து, முடிவுகள் பெறப்பட்டுள்ளன[1]. வெளியாட்கள் எப்படி அந்த அனாதை இல்லத்து 15-17 வயது பெண்களை சாக்லெட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது[2]. பாலியல் வன்முறையில் இருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து வன்முறை தாக்குதல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரள மாநிலத்தில் ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

wayanad-muslim-orphanage-muttil-google-map

வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் – யதீம் கானா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கால்பேட்டாவின் முட்டில் பகுதியில் உள்ள முஸ்லிம் அமைப்பு நடத்தும்ஆதரவற்றோர் விடுதியில் 14-15 வயதுகள் கொண்ட 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் [Wayanad Muslim Orphanage Muttil, WMO[3]] 1967ல் தொடங்கப்பட்டது. முன்னரே பல்வேறு நிதிமோசடிகளில் சம்பந்தப் பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து நிதி பெறும் இது, பலவிதமான வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளது. கடவுளின் சொந்தமான தேசம் என்று பீழ்த்திக் கொள்ளும், இந்த கேரள மாநிலம், இவ்வாறு அடிக்கடி பாலியல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள் முதலியன தொடர்ந்து நடந்து வருவது திகிலடையச் செய்வதாக இருக்கிறது[4]. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர்.

 medical-report-confirms-rape-of-students-of-yateen-khana

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவர் விடுதிக்கு அருகே உள்ள கடையில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளியே வந்து உள்ளார். அப்போது விடுதியை சேர்ந்த பாதுகாவலர் அவரிடம் விசாரித்து உள்ளார். விசாரணையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமிகள் ஆசைவார்த்தை கூறப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரியவந்து உள்ளது[5]. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 6, 7 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வரும் போலீசார் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை[6]. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக எந்த ஒரு முழு தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாதிரியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

rape-in-kerala

சாக்லேட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியுமா?: விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் சிறுமிகள் பள்ளிக்கு சென்றபோது அவர்களை வழிமறித்து இனிப்புகளை வழங்கி உள்ளனர் மற்றும் அவர்களுக்கு செல்போனில் ஆபாச பாடங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனை வெளியே கூறினால் கடும் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என மிரட்டிஉள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அந்த பகுதி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெட்டிக் கடைக்காரரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மொத்தம் 7  சிறுமிகளுக்கு மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கும் சாக்லேட் கொடுத்து, மயக்கமடைந்த பின்பு அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதோடு, அந்த 7 சிறுமிகளையும் தனது நண்பர்கள் சிலருக்கும் அவர் விருந்தாக்கியது தெரிய வந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்[7].

yateen-khana-rape-persons-close-to-management-among-the-accused

வழக்கு பதிவு செய்யப் பட்டது: இதெல்லாம் ஜனவரி 2017லிருந்து நடந்து வருகின்றது. இதையடுத்து அவரின் நண்பர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.  சில சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியும், சில சிறுமிகளை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டியும் பல மாதங்களாக அவர் அந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது[8]. சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தை கொண்டு  குற்றத்தில் ஈடுப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்[9]. குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் தடுப்பு சட்டம் [the Protection of Children from Sexual Offences Act (POCSO) act] உட்பட 11 பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை[11]. இந்த சம்பவம் தொடர்பாக வயநாடு எஸ்.பி. ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].

 rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours

மெத்தப்படித்த மாநிலத்தில், இவ்வாறு நடப்பது எப்படி?: யதீம் கானா கற்பழிப்பில், அந்த அனாதை இல்லத்து நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களே சம்பந்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது[13]. அனாதை இல்லங்கள், பள்ளிகள்-கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள் என்பதோடு, அரசியல் தொடர்புகளும் இருப்பதால், முதலில் போலீசார் தயங்கினர். பெயர்களைக் கூட வெளியிடவில்லை. ஹாஸ்டலில் இருப்பவர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதும் தெரிகிறது. இப்பொழுது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் உள்ளதால், பத்து நாட்கள் இடைவெளியில் இவ்வாறு கிருத்துவ மற்றும் முஸ்லிம் மதத்து மடாலயங்கள், சாமியார்கள் என்று பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது, எல்லோரையும் கலங்க வைத்துள்ளது. முழுக்க அரசியல்வாதிகள் இப்பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது, வெளிவந்துள்ள விவகாரங்களை விட மறைக்கப் பட்டவை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கொலைகள், இன்னொரு பக்கம் இப்படி கற்பழிப்புகள் என்று அசிங்கப்படுகிறது. கேரளாவில் ஆறு மணி நேரத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்று புள்ளி விவரங்கள் கொடுக்கப் படுவது, அதைவிட கேவலமாக இருக்கிறது. மேலும் கேரளா எழுத-படிக்கும் கல்வியறிவில் இந்தியாவில் முதன்மையாக இருக்கிறது. பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள், எவ்வாறு இத்தகைய ஆபாசமான, பாலியல், கொக்கோகங்களில் ஈடுபட முடியும்? உலக நாடுகளுக்கு நர்சுகளையும், கன்னியாஸ்திரிக்களையும் ஏற்றுமதி செய்கிறது என்ற பெருமையும் கொண்டுள்ளது கேரளா.

© வேதபிரகாஷ்

16-03-2017.

rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours-gods-own

[1] Mathrubhumi, Girls in Wayanad orphanage sexually abused: report, Published: Mar 7, 2017, 08:43 AM IST

[2] http://english.mathrubhumi.com/news/kerala/girls-in-wayanad-orphanage-sexually-abused-report-kerala-crime-news-1.1780392

[3] http://www.wmomuttil.org/contact/

[4]  Though, the media mentions it as “Yatheem Khana at Muttil in Kalpetta”, it has been pointed out specifically as the one that has been there started in 1967 and involved in financial irregularities earlier. As the WMO has many orphanages, educational institutions, commercial ventures, and other interests with political patronage and gulf-connerction, probably, the identity has been suppressed. Kerala has been ‘the God own country” and any God can do anything and ordinary men, particularly, secular Indians cannot ask anything. Now, ironically, the Communists have been ruling such “God owned country” and none knows what would happen there in coming days.

[5] தினத்தந்தி, ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம், மார்ச் 07, 11:07 AM.

[6] http://www.dailythanthi.com/News/India/2017/03/07110737/7-minor-girls-in-Kerala-orphanage-raped-for-2-months.vpf

[7] வெப்துனியா, ஏழு சிறுமிகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காம கொடூரன்அதிர்ச்சி செய்தி, Last Modified: புதன், 8 மார்ச் 2017 (15:48 IST)

[8] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/seven-girls-molested-in-kerala-man-arrested-117030800028_1.html

[9] தினமலர், கேரளாவில் ஆதரவற்றோர் இல்ல சிறுமிகள் பாலியல் பலாத்காரம் – 7 பேர் கைது, 07 மார்ச் 2017, 06:33 PM.

[10] http://www.dinamalarnellai.com/cinema/news/23902

[11] தினகரன், கேரள காப்பகத்தில் 7 சிறுமிகள் பலாத்காரம்: 6 வாலிபர்கள் சிக்கினர், 2017-03-08@ 00:39:27.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=285339

[13] Kamudi.com, Yateem Khana rape: Persons close to management among accused, Posted on :15:06:31 Mar 7, 2017,  Last edited on:15:06:31 Mar 7, 2017

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (2)

ஒக்ரோபர் 11, 2015

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (2)

நஷீர் பாலியல்- தினகரன்

நஷீர் பாலியல்- தினகரன்

குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், நஷீருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: பெண் குழந்தை பாலியல் வன்மத்திற்குட்பட்டதனால், அந்த சிறுமியின் உடலில் காயம் ஏற்பட்டது[1]. இதையடுத்து அந்த சிறுமியிடம், அவரது பெற்றோர் அதைப்பற்றி விசாரித்தனர்[2]. அப்போது, நடந்த சம்பவத்தை அந்த சிறுமி அழுது கொண்டே கூறியுள்ளார். அவள் கூறியதிலிருந்து, நஷீர் அவளை பாலியல் ரீதியில் சதாய்த்துள்ளான் என்று தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்[3]. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நஷீரை கைது செய்தனர்[4]. பிறகு முறைப்படி, வழக்கை மகளிர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனா சதீஷ் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ‘குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், நஷீருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். இதுதவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்[5]. இத்துடன் செய்தி முடிந்து விட்டது. ஆனால், நஷீர் அவ்வாறு ஏன் ஈடுபட்டான், அதன் பின்னணி என்ன என்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. தனது பெண் போன்றிருக்கும், ஒரு சிறுமியை எப்படி நஷீரால் அவ்வாறு வன்புணர்ச்சியில் ஈடுபட முடிந்தது என்பது ஆராயப்படவில்லை. அவன் முஸ்லிம் என்பதனால், பிடோபைல் கோணத்தில் செல்லாமல், சாதாரண குற்றம் போல செய்தியாக, அதிலும் சுருக்கமாக வெளியிட்டு அமைதியாகி விட்டனர் போலும். அவனது புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போன்ற அளவில், அதே செய்தியை திரும்ப-திரும்ப சுருக்கமாகத்தான் வெளியிட்டுள்ளன[6].  வில் ஹியூமைப் போன்று அதிரடி செய்திகளும் இல்லை, தேவநாதன் போன்று விடோயோக்களும் இல்லை, நித்யானந்தா போன்று பரபஎரப்பும் இல்லை. இதுதான் ஊடக செக்யூலரிஸம் போன்றிருக்கிறது. ஆனால், நஷீர் மேல்முறையீடு செய்வான், என்று நாளைக்கு செய்திகள் வரலாம்.

நஷீர் 5 ஆண்டு சிறை - தினமலர்

நஷீர் 5 ஆண்டு சிறை – தினமலர்

கேரள முஸ்லிம் ஆஸ்ரமங்கள் செயல்பட்ட விதம்: கேரளாவில் முஸ்லிம்கள் கிருத்துவர்களைப் போலவே அனாதை இல்லங்கள் வைத்து, பெண்குழந்தைகள், பருவத்திற்கு வந்த சிறுமிகள், இளம்-பெண்களை பாலியல் வேலைகளுக்கு உபயோகப்படுத்தியது சமீபத்தில் வெளிவந்தது[7]. தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigation Agency) ஜூலை 26, 2014 அன்று தனது விசாரணையை மேற்கொண்டது. 58 முஸ்லிம் குழந்தைகள் மால்டா என்ற இடத்திலிருந்து வேட்டத்தூர், மல்லப்புரத்தில் உள்ள அன்வர் ஹூடா அனதை இல்லத்திற்கு [Anwarul Huda Orphanage at Vettathur in Malappuram] கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. முக்கம் முஸ்லிம் அனாதை இல்லம் [ Mukkam Muslim Orphanage] என்ற இன்னொன்றும் இதில் உள்ளது. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்லி மௌல்விகள் ஏமாற்றி அனுப்பி வைத்ததாக தெரிகிறது. மால்டாவிலிருந்து இதை ஆயும் குழு வேட்டத்தூருக்கு பார்வையிட வந்தபோது, சிறுவர்கள் மட்டுமல்லாது, சிறுமியர்களும் இருந்தது கண்டு திகைத்தது. முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆயிரக்கணக்கில் நடத்தப் பட்டு வருகின்றன. இவற்றை நடத்துவதற்கு வளைகுடா நாடுகளிலிருந்து தானம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப் படுகிறது.  சுமார் 1,400 அனாதை இல்லங்களுக்கு கோடி கணக்கில் பணம் வசூலிக்கப் படுகிறது. இப்பணத்தை வசூலிக்கு ஏஜென்டுகள் 40% எடுத்துக் கொண்டு மீதம் 60%-த்தை கொடுத்து விடுகின்றனர்[8]. கேரளாவில் கடந்த 25 வருடங்களாக செக்ஸ் குற்றங்கள், விபச்சாரங்கள், சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்பது, பிடோபைல் (pedophile)/ குழந்தை செக்ஸ் விவகாரங்கள், கற்பழிப்புகள் என்று பாலியல் வன்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன[9].

சவுதி அரேபிய மதபோதகர்

இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினரின் தாக்கம் என்ன[10]: இங்கு இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினர் அதிகமாக மற்றும் எல்லாவிதங்களில் ஆதிக்கத்தில் இருப்பதால், அவர்களின் தாக்கம் என்ன என்பதும் அறிய வேண்டியுள்ளது. பொதுவாக இந்துமதம் தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களது முடிவுகளைப் பெறும் போக்கு, இங்குத் திணறத்தான் செய்கிறது. ஏனெனில், இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்கள் இவற்றிலுள்ள பங்கு என்ன என்பதை அவர்கள் எடுத்துக் காட்டுவதில்லை. செக்யூலரிஸ, கம்யூனிஸ மற்றும் அதிகாரத்துவ சித்தாந்தங்களில் உள்ள எழுத்தாளர்கள், அராய்ச்சியாளர்கள் மற்றும் சமூகவியல் அறிவுஜீவுகளும், அவற்றின் இறையியல் தாக்கத்தை அறிந்தும், அறியாதவர்கள் போன்று நடித்துக் கொண்டிருக்கின்றனர். “இறைவனுடைய தேசத்திலேயே” பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று செய்திகள் வெளியிடும் போது, அவர்கள் உண்மைகளை வெளியிட்டு, அக்குற்றங்களை எப்படி குறைப்பது என்று தீர்வுகளைக் காண்பதற்கும் தயங்குகின்றனர். மாறாக குற்றங்களில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள், தங்களது அரசியல், பணம் மற்றும் அதிகாரக் காரணிகளைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

Muslim pedophiles all over thye world BBC

Muslim pedophiles all over thye world BBC

தமிழகத்து கோணத்தில் ஆராய்தல்: தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் பிடோபைல் குற்றங்கள் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடைப்பெற்று வருவதாலும், அவற்றில் அந்நியநாட்டவர்களின் பங்கு, குழந்தைகள்-சிறுமிகள் கடத்தல், அனாதை ஆஸ்ரமங்களுக்கு அனுப்புதல், அங்கிருந்து அவை பிடோபைல்களுக்கு அனுப்பப்படுதல், செக்ஸ்-டூரிஸத்தில் ஈடுபடுத்துவது, அரேபிய ஷேக்குகளுக்கு விற்பது மற்றும் உல்லாசங்களுக்கு விநியோகித்தல் முதலியவை நடந்து வருவதால், அவை சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறிப்பிட்ட மதப்பிரச்சினை மட்டுமல்லாது, சமூகப்பிரச்சினையாகவும் கையாளப்பட வேண்டியுள்ளது. அந்நியநாட்டவர்கள், இந்தியாவுடன் உள்ள நாடுகடத்தல், நாட்டிற்கு ஒப்படைத்தல், சொந்த நாட்டில் நீதிமுறைகளுக்கு உபடுத்தப்படுதல், அவ்வாறான ரீதியில், குற்றங்கள் இந்தியாவில் நடந்தாலும், குற்றாவாளிகள் அந்நியர்கள் என்பதனால், அவர்கள் அவரவர் நாடுகளுக்கு கைது செய்யப் பட்டு எடுத்துச் செல்லப்படுதல், அங்கு வழக்கை விசாரித்தல், தண்டனை கொடுத்தல் முதலியனவும் நடந்து வருகின்றன. ஆனால், முடிவுகள் செய்திகளில் வருவதில்லை.

Old Muslims marrying young girls.2

Old Muslims marrying young girls.2

பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு, ஒருவேளை இழப்பீடு கொடுத்து, வழக்குகளை முடித்து விட்டிருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், தங்களது மனப்பாராட்டங்கள், மனப்பிராந்தி, மனக்குமுறல், மனச்சிக்கல்கள் முதலியவற்றிலிருந்து விடுபட முடியுமா, அவர்கள் உண்மையிலேயே அவ்வாறே விடுபட்டார்களா என்பவற்றையும் வெளிப்படுத்துவதில்லை. இடைக்காலத்திலிருந்து, 19-20வது நூற்றாண்டுகள் வரையில் ஹேரம், அடிமைகள் போன்ற முறைகளில், இத்தகைய பாலியல் குற்றங்கள் அங்கீகரிகப்பட்டு நடத்தப்பட்டன. பிறகு, அவையெல்லாம் மனிதத்தன்மைக்கு எதிரானது, மனித உரிமைகளை மீறுவது என்று அறியப்பட்டு தடை செய்யப் பட்டன. ஆனால், இத்தகைய ஆள்-கடத்தல், விற்றல், பாலியல் தொல்லைகளுக்கு, தொந்தரவுகளுக்கு சட்டவிரோதமாக உபயோகப்படுத்துதல், விபச்சாரத்திற்கு உட்படுத்துவது போன்றவை, பலவழிகளில் நாகரிகமாக, அமுக்கமாக செயல் பட்டு வருகின்றன. இவற்றிற்கு, மதசாயம் பூசுவது, இறையியல் விமர்சனம், விளக்கம் கொடுப்பது, நியாயப்படுத்துதல் முதலியனவும் நடந்து வருவதால், பெற்றோர், உறவினர், மற்றோர் இழப்பீடு, உதவித்தொகை, வேலை போன்றவற்றால் சமசரத்திற்கு வற்புறுத்தப்பட்டு, சமாதானம் செய்யப்படுகின்றனர்.

 

Old Muslims marrying young girls

Old Muslims marrying young girls

© வேதபிரகாஷ்

10-10-2015

[1] http://www.dinamalar.com/district_detail.asp?id=1358646

[2] தினத்தந்தி, சிறுமியிடம் சில்மிஷம் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு, மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 07,2015, 3:00 AM IST; பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 07,2015, 3:00 AM IST.

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/little-girl-sexual-harassment-youth-5-years-prison-115100700015_1.html

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=171428

[5] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/10/07030035/Young-men5-years-in-prisonSentencedWomen-CourtJudgment.vpf

[6] http://bharathnewsonline.com/24/

பாரத் நியூஸ் ஆன்லைன், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை, 07 October, 2015.

[7] https://womanissues.wordpress.com/2014/08/03/child-trafficking-in-kerala-organized-carried-on-as-trade-with-motive/

[8] https://womanissues.wordpress.com/2014/08/03/kerala-orphanage-trafficking-sexual-abuse-and-other-issues/

[9] https://womanissues.wordpress.com/2014/08/03/human-or-child-trafficking-a-sexual-crime-carried-on-in-kerala/

[10] https://womanissues.wordpress.com/2014/08/03/sexual-crime-rate-religious-nexus-going-together-in-kerala/