Archive for the ‘சிறுமி’ category

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

மார்ச் 8, 2022

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

14-02-2022 அன்று காணாமல் போன சிறுமி சாவு: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார்[1]. 16 வயது என்கிறது தமிழ்.இந்து. அதன் பிறகு அவர் மாயமானார்[2]. 14-02-2022 அன்று காணாமல் போனாள் என்று மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீசில் 15-02-2022 அன்று அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காணாமல் போன சிறுமியும், தும்பைப்பட்டியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் (வயது 29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நாகூர் ஹனிபாவும் மாயமாகி இருந்தார். இதனால் சிறுமி அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். 16/17 வயது சிறுமி 12 வயது வித்தியாசம் கொண்ட ஒரு வாலிபனுடன் சென்றாளா அல்லது அவன் ஏமாற்றி, வலுக்கட்டாயமாக அல்லது வெறேதாவது காரணத்திற்காகக் கடத்திச் சென்றானா என்று புரிந்து கொள்ள முடியாதா? அதாவது, ஒரு முஸ்லிம், இந்து சிறுமியை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளாமல், உடலுறவு கொண்டுள்ளான், கற்பழித்துள்ளான். ஆகையால், இது “லவ் ஜிஹாத்” வகையில் கூட வரும், என்றாகிறது.

14-02-202 அன்று காணாமல் போன சிறுமியை 03-03-2022 அன்று ஹனிபாவின் தாய் ஒப்படைத்தது, 06-03-2022 அன்று மரணமடைந்தது: இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3-ந்தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அவரது தாயாரிடம் 03-03-2022 அன்று ஒப்படைத்தார். தனது மகளின் நிலையை கண்டு பதறிப்போன, சிறுமியின் பெற்றோர் அவரை உடனே மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் ஆலோசனையின் பேரில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் 06-03-2022 அன்று மதியம் அந்த சிறுமி பரிதாபமாக இறந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று நாட்களில் போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. மருத்துவ மனையிலும், மருத்துவர்கள் சிறுமி விசம் குடித்ததைக் கண்டு பிடித்து, போலீஸாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவில்லை.

05-03-2022 அன்று கைதான நாகூர் ஹனீபா சொன்னதுஎலி மருந்து சாப்பிட வைத்தேன்: இதற்கிடையே நேற்று முன்தினம் 05-03-2022 அன்று நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன[3]. இதுதொடர்பாக போலீசில் நாகூர் ஹனிபா தெரிவித்தது வருமாறு[4]: “நானும், அந்த சிறுமியும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று காதலியை பிப்., 14ல் திருப்பரங்குன்றத்தில் நண்பர் பெருமாள் கிருஷ்ணன், 25, வீட்டிற்கு நண்பர்களுடன் அழைத்துச் சென்றேன்[5]. பின்னர் அங்கிருந்து 15-02-2022 அன்று ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள எனது சித்தப்பா இப்ராகிம் வீட்டிற்கு கூட்டிச்சென்றேன்[6]. இதற்கு என்னுடைய நண்பர்கள் உதவினர். அங்கு சிறுமியை தங்க வைத்திருந்தேன். இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர். இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன்[7]. பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன். இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன்[8]. ஆனால் நான் அதை சாப்பிடவில்லை[9]. அதன் பின்னர் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மதுரைக்கு அழைத்து வந்து எனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டேன். பின்னர் எனது தாயார் அவரை அவரது வீட்டில் ஒப்படைத்தார்,” இவ்வாறு நாகூர் ஹனிபா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற காதலன் காதலியை ஏன் ஏமாற்ற வேண்டும்?: நாகூர் ஹனிபா சிறுமிக்கு மட்டும் எலிமருந்து கொடுத்து சாப்பிட வைத்து, இவன் துப்பி விட்டான் என்றால், நாடகம் ஆடியிருக்கிறான் என்று தெரிகிறது. மேலும் அந்த அப்பாவி சிறுமியை கொலைசெய்ய தீர்மானித்திருக்கிறான். அப்படியென்றால் அவளை கொலைசெய்ய வேண்டிய அவ்சியம் என்ன? அவளை ஒரே அடியாக ஒழித்துவிட வேண்டிய கட்டாயம் என்ன? அதாவது, அவள் ஏதோ ஒரு உண்மையினை சொல்லலாம், அவ்வாறு சொன்னால், இவன் மாட்டிக் கொள்வான் என்ற நிலை இருந்திருக்கிறது. அத்தகைய நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஊடகங்களில், “கூட்டு பலாத்காரம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவனே திருமணம் செய்து கொள்ளாமல் 14-02-2022 முதல் 02-03-2022 வரை கற்பழித்திருக்கிறான். மற்ற விவகாரங்கள் தெரியவில்லை.

8 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி: இதற்கிடையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபா, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். சிறுமி இறப்பு சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது: “மேலூர் சிறுமியை காதலன் நாகூர் ஹனிபா கடத்தி ஈரோடு சென்று அங்கு அவரது சித்தப்பா வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளார்[10]. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டம், சிறுமியை கடத்தியது உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[11]. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி இறந்து விட்டதால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் கூறினார்.

©வேதபிரகாஷ்

07-03-2022


[1] தினத்தந்தி, மதுரை: 17 வயது சிறுமி கடத்தி விஷம் கொடுத்து கொலைகாதலன் உள்பட 8 பேர் கைது, மார்ச் 07, 04:52 AM.

[2] https://www.dailythanthi.com/amp/News/TopNews/2022/03/07045239/8-arrested-for-kidnapping-and-poisoning-girl.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, எலி மருந்து கொடுத்து 17 வயது மேலூர் சிறுமி கொலை? 8 பேர் கைது.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம், By Vishnupriya R, Updated: Mon, Mar 7, 2022, 14:08 [IST]

[4] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/police-arrested-8-members-those-who-are-involved-in-17-years-old-melur-girl-death-450910.html

[5] தினமலர், கடத்தப்பட்ட சிறுமி மரணம்: சிறுமியின் காதலன் உட்பட 8 பேர் கைது,  Added : மார் 07, 2022  10:48.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2977283

[7] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.

[8] தினகரன், போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது, 2022-03-07@ 01:13:12.

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=747689

[10] தமிழ்.இந்து, கடத்தப்பட்ட சிறுமி பாலியல் துன்புறுத்தலால் உயிரிழப்பு? – காதலன் உட்பட 8 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 07 Mar 2022 08:17 AM; Last Updated : 07 Mar 2022 08:17 AM.

[11] https://www.hindutamil.in/news/crime/774781-sexual-harassment.html

மொஹம்மது அக்ரம் கான், என்ற பிடோபைல் ஐதராபாதில் கைது செய்யப்பட்டான்!

திசெம்பர் 18, 2015

மொஹம்மது அக்ரம் கான், என்ற பிடோபைல் ஐதராபாதில் கைது செய்யப்பட்டான்!

Akram Khan pedophile arested in Hyderabadநிர்பயா வழக்கில் குற்றவாளியின் பெயரை மறைப்பது ஏன்?: நிர்பயா வழக்கில், கொடூர கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளவன், சிறுவன், 18 வயதுக்கு கீழானவன் என்று அவன் விடுவிக்கப்படலாம் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. சட்டப்படி அவன் குற்றம் புரிந்திருந்தாலும், சிறுவன் என்ற முறையில் தப்பித்து விடுவான் என்ற நிலையுள்ளது. மேலும் குறிப்பாக அவன் முஸ்லிம் என்பது ஊடகங்களிலிருந்து அறவே மறைக்கப்படுகின்றன. சில ஊடகங்கள் மறைமுகமாக, அவன் மதத்திற்குத் திரும்பியுள்ளான், தினமும் நான்கு முறை தொழுகை செய்கிறான், தாடி வளர்த்துள்ளான், ரம்ஜான் மாதத்தில் உபவாசம் இருக்கிறான் என்று விளக்குகின்றன[1]. அதாவது, அவன் ஒரு முஸ்லிம் என்பதை வெளியே சொல்வதை தவிர்த்து வருகின்றன. தி இன்டிபென்டென்ட் போன்ற இங்கிலாந்து நாளிதழ் கூட அவன் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுகிறது வேடிக்கையாக இருக்கிறது[2]. செக்யூலரிஸத்தில் ஊறியுள்ள மற்றவர்களும் இதைப் பற்றி வாய் திறக்கக் காணோம். ஆனால், இப்பொழுது பிடோபைல் விவகாரத்தில், பெயரைக் குறிப்பிட்டு அதிரடியாக செய்திகளை வெளியிட்டாலும், முரண்பாடுகளுடன் உள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

Mohammed Akram Khan pedophile arrested in Hyderabad - arguing.மொஹம்மது அக்ரம் கான் மனைவியுடன் சண்டை போட்டு வந்தான்: இந்ந்திலையில், ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய ஒருவனைப் பற்றிய செய்தி அது கொண்டிருக்கிறது. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், மொஹம்மது அக்ரம் கான் (46) தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்ததால் கணிசமாக சம்பாதித்து வந்தான். மேலும், தனது வீட்டிலேயே, நான்கு குடும்பங்களுக்கு வாடைகைக்கும் விட்டிருந்தான். இது வரை, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இவனுக்கும், இவனது மனைவிக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால், அவன் தன்னை அடிப்பதாக அவன் மீது புகார் கொடுத்து வழக்கும் [registered 498 a (domestic violence) IPC case against him] பதிவாகியுள்ளது. இதனால், அபவனுடன் சேர்ந்து வாழாமல், அருகிலேயே வேறு வீட்டில் வசிந்து வந்தாள்[3].

Mohammed Akram Khan pedophile arrested in Hyderabadசிசிடிவி வைத்து கண்காணித்த மனைவி: மேலும், அவனுக்கு பெண்களிடம் தொடர்பு இருந்ததாக கணவனின் நடத்தையில் சந்தேகம் பட்டு, அவனுக்குத் தெரியாமல், மனைவி வீட்டில் சிசிடிவி வைத்திருந்தாள்[4]. ஒரு நான்கு வயது பெண்ணை பாலியல் ரீதியில் தாக்கும் போது, அது அவனையும் அறியாமல் பதிவாகியது. ஆறு வயது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன[5]. அதனைப் பார்க்க முயன்ற போது, தன்னால் முடியாதலால், ஒரு நாள் டெக்னிஸியனைக் கூப்பிட்டு, பதிவாகியுள்ளவற்றைக் காண்பிக்கச் சொன்னபோது, அந்த விவகாரம் தெரிய வந்தது. அச்சிறுமியை கூப்பிடுவது, பேசுவது, சாக்கிலெட் கொடுப்பது, பிறகு தகாத முறையில் செக்ஸில் ஈடுபடுவது என்று எல்லாம் தெரிந்தது[6]. இதையெல்லாம் பார்த்துத் திகைத்து விட்டாள். இருப்பினும், முதலில் இதை மற்றவர்களிடம் சொல்ல தயங்கினாள்[7]. இதனால், வெளியே சொல்ல மறுத்தாள் என்றும் மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப் பட்டதற்கு கொதித்த அப்பெண், எப்படி ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதைப் பார்த்த பிறகும், மறைக்கத் துணிந்தாள் என்பதும் திகைப்பாக இருக்கிறது.

வீடியோ பற்றி வெளியே அறிவித்தது மனைவியா, நண்பனா, விடியோ டெக்னிஸியனா?: போலீஸாரிடம் வீடியோ பற்றி தெரிவிப்பது பற்றி இருவிதமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை அவனது நண்பர் நகல் எடுத்ததாகத் தெரிகிறது. இதை அவர் போலீஸீடம் ஒப்படைத்ததால் கைது செய்யப்பட்டதாக, முதலில் செய்தி வந்தது. இறகு, அந்த வீடியோ பதியைப் பார்த்த மனைவியால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டான் என்றும் செய்தி உள்ளது[8]. ஹைதராபாதில் போலீஸாரார் குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்காக பல இடங்களில் சிசிடிவிகளைப் பொறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, சிசிடிவி டெக்னிஸியன்களுக்கும், குற்றங்கள் எப்படி நடக்கின்றன, அவ்வாறு நடந்தால், எப்படி அறிவது போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியபோது, ஒமர் என்ற   சிசிடிவி டெக்னிஸியன் இதைப் பற்றி கூறினான். குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவும் போது, கண்ட காட்சியை விவரித்தான்[9].

வாதம் புரிந்து கைதான மொஹம்மது அக்ரம் கான்: மேலும் கடந்த ஒரு மாத காலமாக வீட்டுக்கு வராமல், வேறெங்கேயோ தங்கியிருந்தான். போலீஸார் அவனை பிடித்து விசாரித்தபோது, தான் ஒரு பிடோபைல் என்பதனை ஒப்புக்கொண்டான். ஆனால், முதலில் தன் மீது எந்த குற்றமும் இல்லை, அந்த சிறுமிதான், மிகவும் அருகில் வந்தாள்[10], அதை கேட்டாள் என்றெல்லாம் வாதம் புரிந்தான். விடியோவில் இவன் வாதிப்பது வேடிக்கையாக இருந்தது. ஒருவேளை, நிர்பயா குற்றவாளியான அவனைப் போலவே தான் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் இவன் அவ்வாறு வாதித்தானா என்ற எண்ணம் அதனால் எழுகின்றது. ஆனால், வீடியோ பதிவில் அவனது செயல் அப்பட்டமாகத் தெரிந்ததால், போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்[11]. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், இவன் அவ்வாறு ஈடுபட்டபோது, சிசிடிவி மூலமாக பார்த்தபோது பிடிபட்டான். இதனால், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 377 (unnatural offence), 363  (punishment for kidnapping), 366, 419, [Section 377, Section 363, Section 366, Section 419 of IPC] மற்றும்நிர்பயா சட்டம் பிரிவு 534 (A) (1) (i)  [534 (A) (1) (i) of Nirbhaya Act], மற்றும் பிரிவு 6 பொகோசோ சட்டம் [Section 6 of POCSO (Protection of Children from Sexual Offenses) Act] முதலிவற்றின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டான்[12].

© வேதபிரகாஷ்

18-12-2015

[1] According to the report, counselors and officers at the facility say that the man has reformed and is a model inmate. He has turned to religion, offering namaz 5 times a day, growing a beard as well as keeping the fast during the period of Ramzan.

http://www.dnaindia.com/india/report-nirbhaya-case-religious-juvenile-unwilling-to-leave-reform-home-2103589

[2] The juvenile, who belongs to a Muslim family that lives near the town of Islam Nagar,…………….

http://www.independent.co.uk/news/world/asia/juvenile-in-delhi-gang-rape-and-murder-case-pleads-not-guilty-to-charges-8515369.html

[3]  Times of India, Businessman subjects minor girl to unnatural sexual abuse, Srinath Vudali,TNN | Dec 17, 2015, 11.18 PM IST.

[4] http://www.ndtv.com/hyderabad-news/man-caught-on-cctv-abusing-minor-girl-in-hyderabad-1256320

[5] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760

[6] To the shock of the technician, Akram has been abusing the four year old through unnatural sex just beyond anyone’s imagination. He has been luring the victim by giving her chocolate. Surprisingly, the wife also kept quite by not alert the police,” Deputy Commissioner of police (South Zone) V Satyanarayana told TOI. The victim is a neighbour to the accused and he is also accused of being in touch with other woman.

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Businessman-subjects-minor-girl-to-unnatural-sexual-abuse/articleshow/50224559.cms

[7] http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature

[8] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760

[9] Later, the two watched the footage and a shocked wife chose to not report about it. However, the incident came into light when the police in the southern zone as part of community policing, set up CCTV at various places and conducted an an awareness programme for CCTV technicians. During the awareness program, Omar narrated about Akram’s incident

http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature

[10] http://www.newkerala.com/news/2015/fullnews-163740.html

[11] http://www.ibnlive.com/news/india/hyderabad-man-accused-of-sexually-assaulting-four-year-old-girl-blames-the-child-for-the-crime-1178612.html?utm_source=IBNLive_Article_From_This_Section_Widget&utm_medium=clicks&utm_campaign=ibnlive_article_page

[12] http://www.thehansindia.com/posts/index/2015-12-18/Wife-catches-hubby-raping-minor-193868

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (1)

ஒக்ரோபர் 11, 2015

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (1)

வில் ஹியூம் சூளைமேட்டில் பிடிபட்ட பிடோபைல்

வில் ஹியூம் சூளைமேட்டில் பிடிபட்ட பிடோபைல்

சூளைமேடும், பிடோபைல்களும்: வில் ஹியூம் என்ற அதிபிரபல பிடோபைல் சூளைமேட்டில் பிடிபட்டது, சென்னைவாசிகள் மறந்திருப்பர். சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிடோபைல் என்கின்ற குழந்தை கற்பழிப்பாளிகளின் நடமாட்டம், நிரந்ததரமாகத் தங்கியிருந்தத் தன்மை முதலியன கடந்த 25 ஆண்டுகளில் அதிகமாக உணரப்பட்டன. அவர்களில் பலர் அந்நியநாட்டவர்களாக இருந்துள்ளனர்[1]. பெரும்பாலும், அவர்கள் தங்களது பணபலத்தினால், அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளிவராமல் மறைத்துள்ளனர். ஆனால், அவர்கள் அவ்வாறு பல்லாண்டுகளாக வாழ்வதற்கு உள்ளூர்காரர்கள் தாம் உதவி செய்துள்ளனர். அவர்களில் சிலர், அவரளைப் பார்த்து தாங்களும் அத்தகைய பாலியல் வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம். ஒருவேளை அவர்கள் அத்தகைய அந்நியநாட்டவர்களின் நடவடிக்கைகளை அறிந்து, புகார் செய்திருக்கலாம், ஆனால், அவ்வாறு செய்யாததால், 25 ஆண்டுகள் என்று வாழ்ந்துள்ளனர். குறிப்பாக வில் ஹியூம் என்ற உலகமகா பிடோபைல் கடைசியாக சூளைமேட்டில் தான் பிடிபட்டான்[2]. இதைத்தவிர பாட்ரிக் மாத்யூஸ் என்ற பாதிரி 20ற்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கற்பழித்தான்[3]. அவ்விடமும் அருகில் தான் இருந்தது.

பிடோபைல்கள் சென்னையில் கைது

பிடோபைல்கள் சென்னையில் கைது

இங்கிலாந்தைச் சேர்ந்த பிடோபைல்கள் கைது[4]: சூளைமேட்டிற்கு அருகில், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ளது செயின்ட் ஜார்ஜ் அனாதை ஆசிரமம் ஆகும். ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராக வேலை செய்து வந்தார்[5]. பேடிமான் டிரஸ்ட்[6] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது. இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[7]. சென்னை போலீஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விசயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்றதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. அவனை கைது செய்து கொண்டு, இங்கிலாந்தில் விசாரிக்கிறோம் என்று கூட்டிச் சென்று விட்டனர்.  அலெக்ஸ் தாம்ப்ஸன் என்ற அந்த டிரஸ்டின் தலைவியைக் கேட்டபோது, பேசுவதற்கு மறுத்துவிட்டார். பிறகு, அவர் சொன்னதாவது, “நாங்கள் இந்த வழக்கை மிகவும் சிறப்பாக கையாண்டு வருகிறோம். அதனால், ஊடகங்களுடன் பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.” உடனே ஊடகக்கரார்களும் பவ்யமாக இருந்து விட்டனர் போலும்!

Mathews abused 9 students TOI June.17, 2009

Mathews abused 9 students TOI June.17, 2009

2010-15 ஆண்டுகளில் தொடர்ந்து பல அனைத்துலக, அனைத்து இந்திய ரீதியில் செயல்பட்ட பிடோபைல்கள் சென்னையில் பிடிப்பட்டது: கிருத்துவம் மட்டுமல்லாது, மற்ற மதங்களில் பிடோபைல்கள் இல்லையோ என்று நினைக்க முடியாது என்ற நிலையில், இஸ்லாத்தைச் சேர்ந்த பிடோபைல்களும் இருந்துள்ளனர். நஷீரின் உதாரணம் அதில் வருகிறது எனலாம். இங்கு கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் என்று ஆராய்ச்சி செய்வது தொடர்ந்து அதிகமாக அத்தகைய மதத்தினர் அத்தகைய பாலியல் குற்றங்களில் அதிகமாக ஈடுபட்டு வருவதால் தான் கவனத்திற்கு வருகிறது. ஆனால், அவர்களைப் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டன. பொதுவாக, இஸ்லாத்தில் இடைக்காலத்தைய பழக்க-வழக்கங்கள் இப்பொழுதும் தொடர்ந்து வருவதை சரித்திராசிரியர்கள், சமூகவியல் வல்லுனர்கள், மனிதவியல் விற்பன்னர்கள், முதலியோர் அறிந்திருந்தாலும், இந்தியாவில் அவற்றை எடுத்துக் காட்டாமல் மறைத்து வந்துள்ளனர். நவம்பர் மாதம் வந்தாலே சென்னையில் கலக்கலான விஷயங்கள் தாம். சென்ற நவம்பரில் 2009 இன்டர்போல் சொன்ன சூளைமேட்டில் இருந்த வில் ஜியூமை பிறகு பாய்ந்து பிடித்தனர். வில் ஹியூம்ஸ்[8], ரப்பி ஆலன் ஜே, பாட்ரிக் மாத்யூஸ்[9], பிறகு எரிக் மார்டின் (53) என்ற இன்னுமொரு ஃபிடிடோஃபைல் சென்னையில் 16-11-2010 அன்று மாதவரத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

Alex Thompson of Bateman defending Patrick Matthews 2009

Alex Thompson of Bateman defending Patrick Matthews 2009

நஷீர் பெண்குழந்தையை திட்டமிட்டு பாலியல் வக்கிரகத்திற்கு உட்படுத்தியது: “சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவரது 4 வயது மகள் சுபத்ரா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அதே பகுதியில் உள்ள ஒரு மெத்தைக் கடையில் வேலை பார்ப்பவர் நஷீர் (31). கடந்த 2014 ஏப்ரல் 24ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சுபத்ராவை நஷீர் தனது  கடைக்குள் கூட்டிச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்”, என்கிறது தினகரன்[10]. சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தவர் நஷீர் (வயது 32). இந்த கடைக்கு அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி அவ்வப்போது விளையாட வருவார். கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் 26–ந் தேதி அந்த சிறுமி விளையாட வந்தபோது, நஷீர் அந்த குழந்தையை கடைக்குள் தூக்கிச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார்[11]. தினமலர், “சூளைமேட்டை சேர்ந்தவர், நஷீர், 32; மெத்தை கடை ஊழியர். 2014ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுமியை, கடையில் வைத்து, பாலியல் தொந்தரவு செய்தார் என, சிறுமியின் தந்தை சூளைமேடு போலீசில் புகார் செய்தார்” என்கிறது[12].  சிறுமி விளையாடிக் கொண்டே தானாகவே உள்ளே வந்தாளா அல்லது நஷீர் தூக்கிக் கொண்டு வந்தானா என்ற விசயத்தை ஊடகங்கள் தெளிவாகக் குறிப்பிடா விட்டாலும், அவனது குற்றத்தை நிரூபித்து தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக நஷீர் திட்டமிட்டே அப்பெண் குழந்தையை பாலியல் வக்கிரகத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கிறான் என்றது நிரூபிக்கப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

10-10-2015


 

[1] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/

[2]https://lawisanass.wordpress.com/2010/04/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

[3] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/

[4] இங்கிலாந்தைச் சேர்ந்த கிருத்துவ பாதிரிகள், குழந்தை பாலியல் குற்றங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  1. Derek Slade — Headmaster, Anglo-Kutchi Medium School, Gujarat.
  2. Jonathan Robinson — Funder, Grail Trust Child Care home, Tirunelveli.
  3. Patrick Matthews — volunteer and sports tutor, St. George’s Anglo-Indian School, Chennai.
  4. Allan Waters and Duncan Grant – former British Navy officers who ran Anchorage Orphanage in Mumbai.
  5. Robert Dando — Baptist Minister who was arrested in the U.S. on child sex charges. He worked with a children’s charity in Goa.
  6. Paul Meekin —– Principal, Trios International School, Bangalore.

http://www.thehindu.com/todays-paper/tp-national/known-cases-of-uk-nationals/article4020740.ece

[5]  Patrick Matthews, a 62-year-old UK national who was accused of sexually abusing several boys of St George Anglo-Indian Higher Secondary School in the city between 2003 and 2006, has been arrested by the UK police. Sources told TOI that the police arrested Matthews from the UK on Thursday night (Aug 1, 2009, 12.21AM IST) based on evidences collected from Chennai. A four-member team of Gloucestershire Constabulary was in Chennai for two weeks in June interviewing children and staff of the school, besides collecting evidence from a beachside retreat in Kovalam, near Chennai, where Matthews allegedly took the boys to. “We have strong evidence against Matthews,” detective inspector Mark Little who led the team of investigators had told TOI before returning to the UK on June 24. After interviewing 14 children and 16 adults, the team concluded that Matthews, who worked as a volunteer in the school, had sexually abused at least nine students. The UK-based Batemans Trust, through which Mathews had come to the school as a volunteer, had filed a complaint alleging that he sexually abused students at the school.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Abuser-of-city-school-kids-held-in-UK/articleshow/4843819.cms

[6]  http://www.batemans.org.uk/

[7]http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Mathews+sexually+abused+9+students&artid=NMIqdTdvmew=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SEO=St+George%E2%80%99s+Anglo+Indian+Higher+Secondary+School&SectionName=rSY|6QYp3kQ=

[8] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ்  ஊடகங்கள்– II , https://socialterrorism.wordpress.com/2009/12/06/will-heum-buwaneswari-devanathan-and-media-2/

[9] வேதபிரகாஷ், வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?,

https://socialterrorism.wordpress.com/2010/02/20/will-heum-horowitz-alan-chennai-haven-for-pedophiles/

[10] தினகரன், சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை; மகளிர் மன்றன் தீர்ப்பு, அக்டோபர்.07, 2015: 01:06:54, புதன்கிழமை.

[11] தமிழ்.வெப்.துனியா, 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை, Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (07:37 IST)

[12] தினமலர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ஊழியருக்கு 5 ஆண்டு சிறை, அக்டோபர்.07, 2025: 03:36.