Archive for the ‘சாப்பாடு’ category

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது!

TN POLICE announcement

அல்உம்மா கும்பல் தாக்கியது[1]: என்று தலைப்பிட்டு தி இந்து செய்தி வெளியிட்டது. அதற்குள் சிறை காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை மடக்கிப் பிடித்து அறையில் அடைத்து பூட்டினர். பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[2]. அந்த கைதிகளை அறைக் குள் அடைத்த போது, அவர்கள் துணை ஜெயிலர் குமார், சிறை காப்பாளர் மாரி ஆகிய இருவரையும் தங்கள் வசம் பிடித்து வைத்துக் கொண்டனர்[3].  காவலர்கள் அவர்களை விடுவிக்கும்படி கூறிய போது அவர்கள் மறுத்துவிட்டனர்.   இது தொடர்பாக   அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். புழல் சிறைக்குள் கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிறைத்துறை தலைவர் திரிபாதி புழல் சிறைக்கு விரைந்து வந்தார்[4]. அவர் அதிகாரிகளிடம்   நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். மேலும் கைதிகள் பிடித்து வைத்துள்ள 2 காவலர்களை விடுவிக்க அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இரவு அந்த காவலர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்[5].  பிறகு சிறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது[6].

Dinamalar-TN-Jihadis-arrest-Graphicsபுழல்  சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லை:  டி.ஐ.ஜி.  ராஜேந்திரன், வடக்கு மண்டல இணை கமிஷனர் தினகர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன் ஆகியோர் புழல் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புழல்  சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாததால் தற்போது கூடுதலாக போலீசார் வரவழைக்கப் பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகளை கண்காணிக்க  1 டி.ஐ.ஜி, 3 சூப்பிரண்டுகள், 2 ஜெயிலர்கள், 11 துணை ஜெயிலர்கள், 112 வார்டன், 81 துணை  வார்டன்கள் உள்ளனர்.இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் தற்போது நடவடிக்கை   எடுக்கப் பட்டுள்ளது. கைதிகள் தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் சிறை வார்டன் முத்துமணி, நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   ஸ்டான்லி ஆஸ்பத்திரி ஐ.சி.யு. வார்டில் அவருக்கு   டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[7]. கொலை முயற்சி, அரசு அதிகாரியை தாக்குதல் உட்பட 12 பிரிவுகளின் கீழ் 20 கைதிகள் மீது புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[8].  ;போலீஸாரின் மனைவி, மக்கள், உறவினர் சிறைச்சாலை முன்பு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டி ஆர்பாட்டம் செய்தனர்[9].

Mohammed Haneefa arrested - Advani murder plotஅல்உம்மா தீவிரவாதிகள் கலவரத்தில் இறங்கியது ஏன்?: ஹிந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் வேலூரிலும், ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும், வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். 25-09-2015 அன்று, புழல் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த உளவுப்பிரிவு போலீஸ்காரர் முத்து மணி, சிறை வார்டன்கள் செல்வன், இளவரசன், மோகன் உள்பட, 5 பேரை கைதிகள் தாக்கி, பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் சிறையில் பதட்டம் ஏற்பட்டது.

Bomb plnters to kill Advaniஅல்உம்மா தீவிரவாதிகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்[10]: குறிப்பிட்ட அல்-உம்மா தீவிரவாதிகள் சேர்ந்திருந்தால், மேலும் பிரச்சினை பெரிதாகும் என்பதனால், அவர்கள் வெவேறு சிறைகளுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. கலவரத்திற்கு காரணமான –

  1. போலீஸ் பக்ருதீன் [Fakruddin alias ‘Police’ Fakruddin], வேலூர் சிறைக்கும்,
  2. பன்னா இஸ்மாயில் [Mohammed Ismail alias Panna Ismail], மதுரை சிறைக்கும்,
  3. பிலால் மாலிக் [Bilal Malik], கடலூர் சிறைக்கும்,
  4. காஜா மொய்தீன் [Khaja Moideen], சேலம் சிறைக்கும்,
  5. முன்னா [Munna alias Mohammed Rafiq] கோவை சிறைக்கும்,
  6. கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை [Abdulla alias Abdulla Muthalip], திருச்சி சிறைக்கும் மாற்றி,

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார்[11]. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் பக்ருதீன் 26-09-2015 அன்று, காலை புழல் சிறையில் இருந்து, காலை, 11 மணிக்கு வேலூர் சிறைக்கு கொண்டு சென்று, தனி செல்லில் அடைத்தனர். அவருக்கு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. 26-09-2015 அன்று மதியம், 12 மணிக்கு, போலீஸ் பக்ருதீனுக்கு மதிய உணவவாக, அரிசி சாதம், கீரை பொரியல் கொண்டு சென்றனர். உணவு தட்டை தூக்கி எரிந்த போலீஸ் பக்ருதீன், தனக்கு சிக்கன் பிரியாணி வேண்டும் என, கலாட்டா செய்தார்[12]. அதாவது அவனுக்கு எந்த அளவுக்கு கொழுப்பு, ஆணவம் இருக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். அரை மணி நேரம் கெஞ்சிக் கூத்தாடிய சிறை காவலர்கள், நாளை சிக்கன் பிரியாணி கொடுப்பதாக கூறி, சமாதானம் செய்தனர். பிறகு வேறு உணவை கொடுத்து, சாப்பிட வைத்தனர்[13]. ஏற்கெனவே போலீஸாரைத் தாக்கி, கலவரம் செய்ததலினால், சிறை மாற்றம் செய்யப்பட்டுள்ள கைதிக்கு, ஏன் இவர்கள் இவ்வாறு தாஜா செய்ய வேண்டும்? சமீபத்தில் ஆம்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வைத்திருந்தபோது, போலீஸார் பிரியாணி விருந்து போட்டது ஞாபகம் இருக்கலாம். அப்படியென்றால், முஸ்லிம்கள் என்பதனால் அவர்களுக்கு இத்தகைய சீராட்டு கிடைக்கிறதா? இந்நிலையில் பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகமது ஒரு குண்டைப் போட்டுள்ளார்.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1]  S. Vijayakumar, Al Umma cadre attack jail officials in Puzhal prison, The Hindu, September.26, 2015, Updated: September 26, 2015 13:59 IST.

[2]  தினகரன், புழல் சிறையில் கைதிகள் தாக்கியதில் சிறை காவலர்கள் 4 பேர் காயம், பதிவு செய்த நேரம்: 2015-09-25 21:08:54.

[3]  தினமலர், புழல் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் கைதிகள், பயங்கரவாதிகள் ஆவேசம், செப்டம்பர்.26, 2015. 03.11.

[4] http://www.thehindu.com/news/cities/chennai/al-umma-cadre-attack-jail-officials-in-puzhal-prison/article7690955.ece

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350503

[6] https://www.youtube.com/watch?v=rczOrMOMIBU

[7] http://www.dailythanthi.com/News/State/2015/09/26110857/6-prisoners-were-transferred-to-another-prison.vpf

[8]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7694509.ece

[9] Policemen’s wives protest– Furious over the attack on the warders, the family members of prison staff staged a protest near Puzhal prison demanding that security for the personnel be stepped up. The police pacified them and they dispersed only after officers assured them that the necessary measures will be taken to ensure their safety. http://www.thehindu.com/news/cities/chennai/shortage-of-personnel-hits-security-at-puzhal-prison/article7693585.ece?ref=relatedNews

[10]  Viveka Narayanan, 6 Al-Umma cadre sent to different jails, The Hindu, September.27, 2015; Updated: September 27, 2015 08:06 IST

[11] http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews

[12]  தினமலர், சிக்கன் பிரியாணி கேட்டு போலீஸ் பக்ருதீன் கலாட்டா, செப்டம்பர்.27, 2015.08.33.

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=1351396

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்!

Puzhal jail

Puzhal jail

புழல் சிறையில் பயங்கரமான குற்றவாளிகள் இருப்பது, போலீஸார் குறைவாக இருப்பது[1]: சென்னை புழல் சிறையில் தண்டனை கைதிகள் 230 பேரும், விசாரணை கைதிகள் 2003 பேரும், பெண் கைதிகள் 150 பேர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். 3 விதமான கைதிகளுக்கும் தனித்தனி ஜெயில்கள் விசாலமாக உள்ளது. போதை  பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் முக்கிய   பிரமுகர்களை தீர்த்து கட்டிய பயங்கரமான கைதிகளும் இங்கு அடைக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 2014ல் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது[2].  அப்போது என் கவுண்டரும் நடந்தது. இதில் பிடிபட்ட பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதேபோல் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழங்கில் கைதான காஜா மொய்தீன், அப்துல் வகாப், ராஜா முகமது, தமீம் அன்சாரி, முன்னா என்ற முகமது ரபீக், மண்ணடி அப்துல்லா உள்பட 16 பேரும் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இத்தனை முக்கியமான சிறைக்கு பாதுகாப்பாக போலீஸார் இல்லை என்று எடுத்துக் காட்டப்படுகிறது.

Puzhal attacked -Puthiya thalaimurai - 25-09-2015

Puzhal attacked -Puthiya thalaimurai – 25-09-2015

கொலைக்குற்றவாளிகள், தீவிரவாதிகள் எப்படி வசதிகளை சிறைகளில் அனுபவிக்கின்றனர்?: திரைப்படங்களில் தாம், சிறைக்குற்றவாளிகள் எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் போல காட்டுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மையாகவே அத்தகைய வசதிகள் குற்றவாளிகளுக்கு, கொலைகாரர்களுக்கு, தீவிரவாதிகளுக்குக் கிடைக்கிறது என்று அஜ்மல் கசாப், அபு சலீம் போன்றோரின் விவரங்களிலிருந்து அறியப்படுகிறது. அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்து திருப்தி படுத்தினர். அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதால், கோடிக்கணக்கில் செலவான பணம் நின்றது. ஆனால், அபு சலீம் போன்றோர் இன்னும் வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அபு சலீமை தாவூத் இப்ராஹிமின் ஆள் முஹமது தோஸா என்பவன் ஆர்தர் சாலை ஜெயிலிலேயே 24-07-2010 அன்று காலை (சனிக்கிழமை) ஒரு கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டான்[3]. அதாவது, இந்திய சிறைச்சாலைகள் அந்த அளவுக்கு ஓட்டையாக உள்ளனவா அல்லது தீவிரவாதிகள் தங்களது ஆடிக்கத்தைச் செல்லுத்தி வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வில் ஹியூம் என்ற குழந்தை கற்பழிப்பாளி புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டான் என்ற செய்திகள் வந்தன. இப்பொழுது, அச்சிறையில் கலவரம், அல்-உம்மா தீவிரவாதிகள் ஜெயில் வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கினர், செல்போன் வைத்திருந்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன.

Puzhal police attacked - chennai patrika- 25-09-2015

Puzhal police attacked – chennai patrika- 25-09-2015

முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்[4]: கடந்த வாரம் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதை ஜெயிலர்   இளவரசன் கண்காணித்து செல்போனை பறிமுதல் செய்தார்[5]. அப்படியென்றால், செல்போனை யார் கொடுத்தது, எப்படி ஜெயிலின் உள்ளே சென்றாது போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும் சில கைதிகளிடம் இருந்து போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் ஜெயிலர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர்.  இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[6]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜெயிலர் இளவரசன் கைதிகளை தீவிரமாக கண்காணித்தார். இந்நிலையில் புழல் சிறை ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி (28), எலக்ட்ரீசியன் மாரி என்ற மாரியப்பன் மற்றும் சில காவலர்கள் சிறையின் கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனராம்[7].  அவர்கள் மாலை 5.15 மணியளவில், சிறையின் உயர் பாதுகாப்பு பகுதி-2 இல் இருக்கும் முஸ்லிம் கைதிகள் இருக்கும் பகுதியில், சோதனையிடச் சென்றனர். இதற்கு கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது[8].

Puzhal attacked police admitted in Hospital - 25-09-2015

Puzhal attacked police admitted in Hospital – 25-09-2015

ஜாகிர் உசேனை சிறையிலேயே அல்உம்மா ஆட்கள் அடித்தது ஏன்?: ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர்.  இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[9]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜாகிர் உசேன் சொன்னான், அதனால், அல்-உம்மா கும்பல் அவனை அடித்தது என்றால், சிறைக்குள்ளேயே அவர்கள் தங்களது ராஜ்யத்தை நடத்துகின்றனர் என்றாகிறது. மும்பை சிறைகளில் தான் அத்தகைய வசதிகளை பெறுகிறார்கள் என்றால், இங்கும் அதே நிலைதான் என்று தெரிகிறது. ஜெயிலில் கைதிகள் அடித்துக் கொள்வது, கலவரம் செய்வது, ஜெயிலரை அடிப்பது, தாக்குவது முதலியன போலீஸார் கட்டுப்பாட்டில் சிறை உள்ளதா அல்லது இந்த தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதா, ஆட்டி வைக்கிறார்களா, இதன் பின்னணி என்ன என்ற சந்தேகங்கள் எழுகின்றான.

Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu

Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu

அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து ஜெயிலர் இளவரசனை தாக்குதல்: இந்த நிலையில் 25-09-2015 அன்று மாலை வழக்கம் போல் ஜெயிலர்  இளவரசன், சிறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் உயர் பாதுகாப்பு அறைக்கு சென்ற போது, அங்கு அடைக்கப்பட்டு இருந்த அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து திடீரென ஜெயிலர் இளவரசனை தாக்கினார்கள்[10]. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலில் நிலை குலைந்த  ஜெயிலர் இளவரசன், அலறி அடித்துக் கொண்டு கதவை திறந்து வெளியே ஓடி வந்தார்.  அவரை பின் தொடர்ந்து விரட்டி வந்த கைதிகள், அங்கே கிடந்த செங்கல் மற்றும் உருட்டுக் கட்டைகளால் அவரை தாக்கினார்கள். இதைப் பார்த்த சிறை காவலர்கள் முத்துமணி, செல்வின் தேவராஜன், சிறை காப்பாளர் ரவிமோகன் ஆகியோர் கைதிகளை தடுக்க முயன்றனர்.  ஆத்திரம் அடைந்த கைதிகள் அவர்களையும் கற்கள், கட்டைகளால் தாக்கினார்கள். கேரம் போர்டை உடைத்து அந்த கட்டையாலும் தாக்கினர். அப்போது கைதிகள் காவலர் முத்துமணியை  இரும்பு கம்பியாலும் குத்தினர். இதில் ஜெயிலர் இளவரசன் மற்றும் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகிய 4 பேரும் படுகாயம்  அடைந்தனர்.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1]  Vivek Narayanan, Shortage of personnel hits secuirity at Puzhal prison, The Hindu, September.27, 2015.

[2] https://islamindia.wordpress.com/2013/10/05/tn-police-clash-with-jihadis-in-ap-one-policeman-killed/

[3]https://islamindia.wordpress.com/2010/07/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A/

[4] தினத்தந்தி, புழல் சிறையில் வார்டன் மீது தாக்குதல்:கைதிகள் 6 பேர் வேறு சிறைக்கு மாற்றம், மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST

பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST.

[5] The clashes in which two jail personnel were taken hostage and four others injured, was a fallout of an altercation over use of mobile phones in the prison and visitors bringing in prohibited food items. The Al Umma cadres attacked prison staff with carrom board and stones, the sources added.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews

[6] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.

தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.

[7]  தினமணி, புழல் சிறையில் கைதிகள்காவலர்கள் மோதல்: ஜெயிலர் உள்பட 4 பேர் காயம்; பணயக் கைதிகளாக இருவரை சிறைப் பிடித்தனர், By  சென்னை, First Published : 26 September 2015 01:49 AM IST.

[8]http://www.dinamani.com/tamilnadu/2015/09/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D—%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2/article3047911.ece

[9] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.

தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.

[10] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=169216

குல்லா போட்டால்தான் செக்யூலரிஸவாதி – முஸ்லிம்கள் கொடுக்கும் புதிய விளக்கம்!

ஓகஸ்ட் 10, 2013

குல்லா போட்டால்தான் செக்யூலரிஸவாதி – முஸ்லிம்கள் கொடுக்கும் புதிய விளக்கம்!

Chauhan with Muslim cap 09-08-2013

2013-2014  ஆண்டுகளில் இம்மாதிரியான தமாஷாக்கள் அதிகமாகவே இருக்கும்[1]: தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்தார் பார்ட்டிகள் நடத்துகின்றன[2]. அடுத்த வருடம் தேர்தல் என்றால், இப்பார்டிகள் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது, என்று குறிப்பிட்டு இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை.  காபிர்-மோமின் கூட்டணிகள் ஜோராகத்தான் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. Dravidian Iftar or Iftar with Atheits.2இதில் திராவிடப் போராளிகளான கருணாநிதி, அன்பழகன் போன்றோர் குல்லாபோட்டும், கழற்றி வைத்தும் கஞ்சி குடிப்பர். “உள்ளம் கவர் திருடர்கள்” தாமே, குல்லாப் போட்டவர்கள், போடுகிறவர்கள் பொறுத்துத்தான் போவார்கள். “திராவிடர்களே” இப்படியென்றால், “ஆரியர்களுக்கு” சொல்லித்தரவா வேண்டும். இதோ போட்டி ஆரம்பித்துவிட்டது. சொல்லிவைத்தால் மாதிரி, குல்லா விவகாரம் தலையெடுத்து விட்டது.

Ramzan TV shows.1

பாகிஸ்தானில் ரம்ஜானை வைத்துக் கொண்டு தமாஷா – வியாபாரம்: குல்லா போடுவதில், “தி ஹிந்து” போன்ற செக்யூலரிஸ ஊடகங்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றன. ரம்ஜான் மாலையில் “ஈத்-கா-சாந்த்”ன் ஒளி பரவ ஆரம்பித்து விட்டதாம், வர்ணித்திருக்கிறது[3]. இந்த “தி ஹிந்து”, என்டி-டிவியுடன் கூட்டு வைத்து செக்யூலரிஸத்தைப் பிழிந்து, ஊறவைத்து, ஊற்றிக் கொடுத்து போதையை ஏற்றி வருகிறது. இதற்கு பாகிஸ்தானில் வேறு கூட்டு – ஆமாம் என்டி-டிவி-பாகிஸ்தான். TV shows for Ramzan weekendஅமீர் லிகாயத் ஹுஸைன் தமாஷா பாகிஸ்தான் டிவி சரித்திரத்திலேயே மிகப்பெரிய வெற்றி நிகழ்சியாகும் என்ற செய்திகளை அள்ளி வீசியுள்ளது[4]. போதா குறைக்கு குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைகளைக் கூட தானமாகக் கொடுத்திருக்கிறார்கள்[5]. இதெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறாதஆ இல்ல்லஈயா என்று நமது தமிழ்நாட்டு முஸ்லிம் பண்டிதர்கள் தாம் விவாதித்து அவர்களுக்குச் சொல்ல வேண்டும். சரி, இந்தியாவில் குல்லா போடாமல் இருப்பார்களா? இந்திய டிவிகளும் இந்த வியாபாரத்தைச் செய்துள்ளது, செய்து வருக்கிறது[6].

Ramzan TV shows.2

இந்ந்தியாவிலும் ரம்ஜானை வைத்துக் கொண்டு தமாஷா — அரசியல் – வியாபாரம்: 09-08-2013 அன்று ராஸா மூரத் என்ற நடிகர், மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சௌகானுடன் குல்லா போட்டுக் கொண்டு காட்சியளித்தார். போபாலில் ஈத்கா நிகழ்சியில் சௌகானும் குல்லா போட்டுக் கொண்டிருந்தார்[7]. அப்பொழுது ராஸா மூரத் இவரைப் பார்த்து மற்ற முதல்வர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்”, என்று பேசினார்[8]. குறிப்பாக நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசினார்[9]. அதாவது குல்லா போட்டால்தான் செக்யூலரிஸவாதி என்பது போல முஸ்லிம்கள் கொடுக்கும் புதிய விளக்கம் விசித்திரமாக இருக்கிறது. Raza Muradமுஸ்லிம்கள் குல்லா போட்டு ஏன் பிஜேபிக்காரகளை குறிவைத்துத் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.Rahul Gandhi with Muslim cap. beard காங்கிரஸ்காரர்கள் தாம் குல்லா போட்டுக் கொள்ளவும், போடவும் தயாராக்க இருக்கிறார்களே? குல்லா போட்ட பிறகு கஞ்சி குடிக்க வேண்டாமா? என்ன, கஞ்சியா, இங்கு ஜெயலலிதா பைவ்—ஸ்டார் ஹோடல் தமாஷாவையும் மிஞ்சும் வகையில்  உணவு வகைகள் இருக்கின்றன.

Rahul Sam with Muslim kullas

ரம்ஜான் – ஈத் செக்யூலரிஸ உணவு வகைகள்: வழக்கம் போல ஈத் தமாஷாக்கள் இல்லைகளை மீறிவிட்டன எனலாம். டிவி-செனல்கள் எல்லாம் இப்படி விதவிதமான சமையல்கள் செய்யப்படுகின்றன, உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன என்றெல்லாம் விவரித்தனர். ஹலீம், ஷீர்-குர்மா, சேவை என்று வர்ணனைகள்[10]. ஆனால், அவ்வுணவு எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்று விவரமாகக் காண்பிக்கப் படவில்லை. Eid celebrationகுறிப்பாக ஆடு-மாடு-கோழி வகையற்றாக்கள் எப்படி கொல்லப்பட்டு, அறுத்து, உரித்து, பிரித்து, வெட்டி சமைக்கிறார்கள் என்பதனை காண்பிக்கவில்லை. Indonesian Muslims Celebrate Eid Al Adhaஇப்படி அறுக்காமல், எப்படி கிடைக்கும். Indonesian-muslims-slaughter-animals-to-celebrate-eid-aladhaஐந்து உடல்கள் அனுப்பப்பட்டன, என்று புலம்பிக் கொண்டிருந்த ஊடகங்கள், ஒரே நாளில் மாறிவிட்டதும் செக்யூலரிஸம் போலும். இதுவும் செக்யூலரிஸம் வகையில் நாளைக்கு விவாதிக்கப்படலாம். குல்லா போட்டால்தான் செக்யூலார்வாதி, என்றாகி விட்டப் பிறகு, நாளைக்கு கஞ்சி குடித்தால் தான் அந்த சான்றிதழை நாங்கள் கொடுப்போம், லுங்கி கட்டினால் தான் ஒப்புக் கொள்வோம், மாட்டிறைச்சி தின்றல் தான் உண்மையான செக்யூலார்வாதி, சுன்னத் செய்து கொண்டால் 100% செக்யூலர்வாதி,……………என்றெல்லாம் விளக்கம் கொடுப்பார்களோ?

Skull cap secular politics

செப்டம்பர்  2011ல் மோடி குல்லா அணிய மறுத்த விவகாரம்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை வலியுறுத்தி, செப்டம்பர் 2011ல், மூன்று நாள் உண்ணாவிரதம் (சத்பாவனா) மேற்கொண்டார். குஜராத் மாநில இஸ்லாமிய இமாம்களும் மோடியை சந்தித்து உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்தினார்கள். பிரானா என்ற கிராமத்தை சேர்ந்த சையது இமாம் சகி சயீது என்ற மதக்குருவும் மோடியை வாழ்த்த சென்றார். அப்போது அவர் மோடியிடம் ஒரு குல்லாவை கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் மோடி குல்லாவை அணிய மறுத்து விட்டார். சால்வை மட்டும் போடுங்கள் என்றார். இதனால் அந்த மதகுரு சால்வையை மட்டும் போட்டு விட்டு திரும்பினார்[11]. Nitish-Modi Muslim politicsஇதைப் பாராட்டி, சிவசேனா கட்சிப் பத்திரிகை, “சாம்னா’வில் வெளியிடப்பட்ட கட்டுரையில்[12], “முஸ்லிம் மத குரு அளித்த குல்லாவை அணிய மறுத்த, மோடிக்கு பாராட்டுக்கள். சிறுபான்மையின மக்களை, “தாஜாசெய்வதால் மட்டுமே, மதசார்பின்மையை நிரூபிக்க முடியும் என்றில்லை. இதை, காங்., கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். மோடி தற்போதைய பாதையில் தொடர்ந்தால், டில்லியில் அவர் பிரதமராகி, ராஜ்பாத்தில் வலம் வரும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை”, என, தெரிவிக்கப்பட்டுள்ளது[13]. இந்த குல்லா விவகாரம் பற்றி தமிழ் ஊடகங்களும் அள்ளிக் கொட்டின.

 

வேதபிரகாஷ்

© 09-08-2013


 


[3] The wait is finally over. After the fast, it is time for the feast. For one month the faithful followed a strict regime of fasting and prayers, but with the sighting of ‘Id-ka-Chand’, the festival, to which they look forward, has finally arrived. While ‘haleem’ was the flavour of the Ramzan month, it is time for ‘sheer-kurma’ and ‘sewiyan’.

http://www.thehindu.com/news/cities/Hyderabad/idkachand-lights-up-festive-mood-on-ramzan-eve/article5004243.ece

[4] Aamir Liaquat Hussain’s show is the biggest success in the history of Pakistani TV –

http://www.ndtv.com/article/world/pakistan-tv-preachers-battle-for-ramzan-ratings-401242

[6] Television is all set to celebrate Eid with spectacular programs ranging from three-hour-long-episodes to celebrities roped in to celebrate and special movies through out the weekend.
http://entertainment.oneindia.in/television/news/2013/tv-channels-maha-programs-for-eid-weekend-116759.html

[8] Murad standing alongside Chouhan, who had sported a skull cap while greeting the Muslims on the occasion of Eid al-Fitr, said the other chief ministers need to learn from the Madhya Pradesh chief minister that wearing a cap does not affect one’s religion. “I do not think much importance should be given to sporting a skull cap as wearing it does not mean anything much. It was time that Gujarat Chief Minister Narendra Modi learns some things from Chouhan and does not show his aversion to skull caps,” said Murad.

http://www.dnaindia.com/india/1872350/report-raza-murad-hits-back-at-uma-bharti-calls-her-c-grade-politician

[10] The wait is finally over. After the fast, it is time for the feast. For one month the faithful followed a strict regime of fasting and prayers, but with the sighting of ‘Id-ka-Chand’, the festival, to which they look forward, has finally arrived. While ‘haleem’ was the flavour of the Ramzan month, it is time for ‘sheer-kurma’ and ‘sewiyan’.

http://www.thehindu.com/news/cities/Hyderabad/idkachand-lights-up-festive-mood-on-ramzan-eve/article5004243.ece

[11] மாலைமலர், நரேந்திரமோடிகுல்லாஅணியமறுத்ததால்சர்ச்சை, http://www.maalaimalar.com/2011/09/20112547/controversy-for-narendira-modi.html

[12]நக்கீரன், குல்லா விவகாரம் : மோடிக்கு சிவசேனை பாராட்டுhttp://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=61872