Archive for the ‘சான்றிதழ்’ category

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில் இட-ஒதுக்கீடு கேட்பதுஏன்?

திசெம்பர் 20, 2022

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில்  இட-ஒதுக்கீடு கேட்பது ஏன்?

சமத்துவம், சகோதரத்துவம், பேசும் மதங்களில் திடீரென்று எப்படி ஜாதி வந்தது?: சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம், இப்பொழுது சதவீதத்தில் இட-ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளன. எங்களிடமும் ஜாதி, ஜாதித்துவம், பிரிவுகள் உள்ள என்று ஒப்புக் கொள்ளும் வரைக்கு வந்து விட்டன. இதுவரையில் ஏன் இன்னும், இந்துமதம் தான் ஜாதிய கட்டமைப்பிற்கு காரணனம் என்று சொல்லிக் கொண்டு வரும் நிலையில், இந்த பிரகடனங்கள் செய்யப் பட்டு வருகின்றன. கிருத்துவ டினாமினேஷன்கள் இனி ஜாதிப் பிரிவுகள் ஆகலாம். சுன்னி, ஷியா, அஹமதியா, போரா, போன்றவை இச்லாமிய ஜாதிகள் ஆகலாம். சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்டுள்ள வகுப்பினர்களுக்கு (Socially and educationally backward classes) இட-ஒதுக்கீடு என்பதை, ஜாதி ரீதியில் திரித்து பேசி, விளக்கம் கொடுக்கப் பட்டு வருகிறது. OBC (Other Backward Classes) என்றதிலும், மதரீதியில் இட-ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது. அதில், முஸ்லிம்கள் சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் பெற்று வருகின்றனர்.

50% / 69% கணக்கை சுற்றி வளைக்க உள்-இட-ஒதுக்கீடு கொடுத்தது: அ.தி.மு.க, 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்தது[1]. மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, 2007 செப்டம்பர் 15 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடாக 3.5%-ஐ முஸ்லிம்களுக்கும், 3.5%-ஐக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கியது[2]. இது இந்திய அரசியல்நிர்ணயச்சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்றாலும், மற்ற மாநிலங்களில் இத்தகைய இட-ஒதுக்கீடு கொடுக்கப் பட்டு, எதிர்க்கப் பட்டு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கு நிலுவையிலுள்ளது. ஆகையால், கொடுத்து வைப்போம், அவர்களும் இட-ஒதுக்கீடு பெற்று அனுபவிக்கட்டும். பிறகு, கொடுத்து விட்டதால், அவர்கள் அனுபவித்து வருவதால், அதனை திரும்பப் பெறக்கூடாது என்றும் மேல்முறையீடு செய்யலாம், அரசியல் ரீதியில், எதிர்ப்பு மனு இருக்காது. ஆக, அப்படியே அமைதியாக விவகாரத்தை மூடி விடலாம் என்றும் திட்டம் போட்டிருக்கலாம்.

முஸ்லிம்களின் மக்கள் தொகையும், இடஒதுக்கீடும்: முஸ்லிம்களின் மக்கள் தொகை முஸ்லிம்களின் மக்கள் தொகை நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை, கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 24 சதவீதம் அதிகரித்துள்ளது[3]. 2022ல் மேலும் உயர்ந்துள்ளது. போதாகுறைக்கு, பன்களாதேசத்திலிருந்து வேறு உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். அஸாமில் இதுவே 5 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சினையாகி, இப்பொழுது அமுக்கப் பட்டு விட்டது. இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 13.4-ல் இருந்து 14.2 ஆக உயர்ந்துள்ளது[4]. பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இசுலாமியர்களின் மேம்பாட்டிற்காக, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு அரசு அரசாணை எண். 85. பிற்படுத்தப்பட்டவகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 29.7.2008 இன் படி பிற்படுத்தோர் வகுப்பினர்க்கான 30% இட ஒதுக்கீட்டில் இசுலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 3.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1992ல் இது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், மத்திய அரசின் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக, 1980ல்இருந்து தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது.

முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு;  இது குறித்து ஏப்ரல் 2022ல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் பைசல் அகம்மது கூறியதாவது: “இந்தியாவில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13.4 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்[5]. ..எஸ் பணியில் 3 சதவீதம், பட்டப் படிப்பு படித்தவர்கள் 3 சதவீதம், ரயில்வேயில் 4.5 சதவீதம் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்[6]. இந்நிலையில் 2007ம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்திய சமூகங்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகளை நீதிபதி சச்சார் கமிஷன் கண்டறிந்தது. இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீட்டை திமுக அமல்படுத்தியது. தமிழகத்தில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வரும் 22ம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது”.

17-07-2022 அன்று கோரிக்கை 20-12-2022 அன்றும் வைத்தது: ராமநாதபுரத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் உமா் பாரூக் தலைமை வகித்தார். மாவட்டப் பேச்சாளா் பரகத் அலி வரவேற்றார். மாநில துணைத்தலைவா் ஆல்பா நசீா், மாநிலச் செயலாளா் முஹமது ஃபரூஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்[7]. முஸ்லிம்களுக்கு தமிழக அரசு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது[8]. இப்பொழுது மறுபடியும், 20-12-2022 அன்று இதே கோரிக்கையை, தவ்ஹீத் ஜமாத் வைத்துள்ளது. 7% எப்படி எங்கிருந்து வந்தது, எப்படி அமூல் படுத்தப் படும் என்று கவனிக்க வேண்டும்.

இஸ்லாம், ஜாதி, ஒதுக்கீடு: இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது குரான்படி அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு எதிராக எந்த உண்மையான முஸ்லீமும் இஸ்லாத்தில் ஜாதி உண்டு, ஆகையால் அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஏமாற்றுவேலையல் முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள். இப்பொழுது, வெளிப்படையாக கோரிக்கைகளும் வைக்கப் படுகின்றன. அதாவது குரானை மதிக்காமல், முஸ்லீம்கள் மாறாக செயல்பட்டு வருகிறர்கள். இங்கு அவர்களின் அல்லாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது. முஸ்லீகளிடையே உள்ள முரண்பாடுகளை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர். இறையியல் வல்லுனர்களும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். 50% மற்ரும் 69% என்னாகும் என்று தான் கவனிக்க வேண்டும்.

இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா? இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர்? இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா, இல்லையா என்று அவர்கள் வெளிப்படையாக தமது சித்தாந்தத்தை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களது இறையியல் வல்லுனர்களே விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், இரண்டு விதமாக பேசிவருவது மக்களுக்கு விசித்திரமாக உள்ளது. இருப்பினும் ஏதோ காரணங்களுக்காக இட-ஒதுக்கீடு கோரிக்கையை மட்டும் ஆதரிப்பது போலத் தெரிகிறது.

இந்தியர்களை ஏமாற்றும் வேலை: அம்பேத்காரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லை, நேருவே ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மதரீதியில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் என்ன விஷயம் என்று இந்தியர்களுக்கு விளங்கவில்லை. சட்டரீதியாக முடியாது என்பதனை, ஒரு அரசியல் கட்சி முடியும் என்று வாக்குறுதி கொடுப்பது, இப்படி அழுத்தத்தை ஏற்படுத்துவது, மக்களை ஏமாற்றுவது என்ற முறையில் செல்லும் இந்த விவகாரத்தை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இப்பொழுது தலித் போர்வையில் எஸ்சி முஸ்லிம்களுக்கும் இட-ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் கேட்கப் பட்டுள்ளது. மத்திய அரசு பரிசீலினையிலும் உள்ளது.

© வேதபிரகாஷ்

20-12-2022


[1] தமிழ்.இந்து, முஸ்லிம் உள் இடஒதுக்கீடு: சட்ட மறுசீரமைப்பு நடக்குமா?, புதுமடம் ஜாபர் அலி, Published : 13 Sep 2022 07:10 AM, Last Updated : 13 Sep 2022 07:10 AM

[2] https://www.hindutamil.in/news/opinion/columns/865866-muslim-internal-reservation-1.html

[3] தமிழ்.இந்து, 2001-2011-ம் ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரிப்பு, பிடிஐ, Published : 23 Jan 2015 10:35 AM, Last Updated : 23 Jan 2015 10:35 AM.

[4] https://www.hindutamil.in/news/india/27909-2001-2011-24.html

[5] தினமலர், முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பாளை.,யில் 22ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம், Added : ஏப் 19, 2012  01:59

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=450943

[7] தினமணி, முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், By DIN  |   Published On : 17th July 2022 11:13 PM  |   Last Updated : 17th July 2022 11:13

[8] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2022/jul/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3881897.html

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

madras-high-court-bans-sharia-court-woman-position

2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய தலாக் சான்றிதழ்கள் முறையற்றவை: அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது என்றும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார். இந்த முஸ்லிம் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்றும், ஹாஜிக்கள் வழங்கும் சான்றிதழ் வெறும் பரிந்துரையே தவிர அது இறுதி முடிவல்ல என்றும் பதர் சயீத் தெரிவித்திருந்தார்[1]. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய பரிந்துரை சான்றிதழ்களில் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்த பதர் சயீத் தரப்பு, ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரைத்து சான்றிதழ் வழங்கியது, சம்பந்தப்பட்ட பல பெண்களுக்கு தெரியாது என்றும், இந்த நடைமுறையின் போது பெண்கள் ஆஜராகவில்லை என்றாலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது[2].

muslim-women-divorce-act-1986பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது: வழக்கம்போல, பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு எல்லாம் போராட்டம் என்றெல்லாம் புறப்படும் வீராங்கனைகள் எங்கோ பதுங்கி விட்டது போலத் தெரிகிறது. ரத்தம் சொரிவோம், ஐயப்பன் கோவிலில் நுழைவோம் என்றெல்லாம் புறப்பட்ட பெண்ணுருமை போராளிகளையும் காணோம். முஸ்லிம்கள் விவகாரம் என்றாலே, அவ்வாறு ஒளிந்து கொள்வார்கள் போலும். ஷாபானு விசயத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கால்களை உடைப்போம் என்ற தில்லி இமாம், சட்டத்தை மாற்றி, புதிய சட்டத்தை எடுத்து வந்த விதம், வயதான ஷாபானு இறந்த பிறகும், கண்டுகொள்ளாமல் இருந்தது முதலியன மறந்து விட்டார்கள் போலும், இல்லை நமக்கேன் வம்பு பயந்து செக்யூலரிஸத் தனமாக ஒதுங்கி விட்டார்களோ என்று தெரியவில்லை. அது அவர்களது உள்-விவகாரம் என்றும் நாஜுக்காக சொல்லி அமைதியாக இருந்து விடலாம்.

muslim-women-protection-divorce-act-1986சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்: தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய காஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை மூன்று முறை, ‛தலாக்’ கூறி, விவகாரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார்[3]. இந்த மனு இன்று, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்கள் பிப்., 21 2017 வரை, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதித்தனர்[4]. மேலும், இந்த சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்[5]. இந்த வழக்கு விசாரணை பிப்.,21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது[6].

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ்ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும்: 1980ம் ஆண்டு ஹாஜிகளுக்கான சட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுந்தரேஷ் தெரிவித்தனர்[7]. அந்த விதிகளின்படி தலாக் கூறி விவாகரத்து வழங்க ஹாஜிகளுக்கு உரிமை இல்லை என அவர்கள் கூறினர்[8]. முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ், ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும் என்றும், உத்தரவிடமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்[9]. இதையடுத்து இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜிகளுக்காக உரிமைகள் குறித்து புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்[10].

badar-syedநீதிபதியின் உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது[11]: “ஹாஜிகளுக்கு எந்த அளவு சட்டஉரிமை இருக்கிறது என்பது முஸ்லீம் ஹாஜி சட்டம் 1880 பிரிவு 4 இல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவருக்கு மதச் சடங்கு செய்யும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹாஜிகளுக்கு எந்த விதசட்டரீதியான உத்தரவும் பிறப் பிக்க உரிமையில்லை. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தலாக்சான்றிதழில் மாற்றம் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்துள் ளது. எனவே இது தொடர்பான அடுத்த உத்தரவு வரும் வரை ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதிக்கிறோம். மேலும், ஹாஜிக்கள் வழங்கும் தலாக் சான்றிதழ்களுக்கு எந்த விதமான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான உரிமையில்லை என்றும், அது ஹாஜிக்களின் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும் என்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறும்”, இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. இதைப்பற்றி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், “மணிச்சுடர்” கூறுவது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

badar-syed-with-jayaகாஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்![13]: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறது.

  1. முதலாவதாக, தமிழ்நாடு தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜிகள்) யாருக்கும் தலாக் பற்றி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமில்லை.
  2. இரண்டாவதாக, 1997 முதல் 2015 வரை தமிழ்நாடு தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களில் தலாக் என்னும் விவாகரத்து ஏற்பட்டதற்குரிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டிருக்கிறது.
  3. மூன்றாவதாக, வரும் பிப்ரவரி 21-ந்தேதி வரை தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களை தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களோ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோ சான்றிதழ்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை என்று உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தீர்ப்பின் வாசகங்களை பார்க்கும் போது தலைமை காஜி மற்றும் துணை காஜிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன. உண்மை நிலை அதுவல்ல. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதே சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றும் காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை காஜி, தங்களிடம் கொண்டு வரப்படும் ‘தலாக்’ போன்ற மார்க்க விவகாரங்களுக்கு பத்வா என்றும், தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

© வேதபிரகாஷ்

18-01-2017

badar-syed-talaq-case

 

[1] பிபிசி, தமிழகம் : ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை, ஜனவரி.11, 2017.

[2] http://www.bbc.com/tamil/india-38593266

[3] தினமலர், தலாக்சான்றிதழ் வழங்க தடை, பதிவு செய்த நாள். ஜனவரி.11, 2017.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1688593

[5] தினகரன், தமிழகம் முழுவதும் தலாக் சான்று வழங்க ஹாஜிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை, 2017-01-11@ 17:30:14

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=271858

[7] புதியதலைமுறை, தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம், பதிவு செய்த நாள் : January 11, 2017 – 07:57 PM; மாற்றம் செய்த நாள் : January 11, 2017 – 09:46 PM.

[8] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/75692/madras-high-court-says-haji-has-no-right-to-provide-grounds-for-divorce

[9] நியூஸ்.7.செனல், இஸ்லாமிய ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை!, January 11, 2017

[10] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/11/1/2017/high-court-ordered-not-issue-talaq-certificate-muslim-haji

[11] தீக்கதிர், தலாக் முறைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, January 11, 2017.

[12]https://theekkathir.in/2017/01/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

[13] மணிச்சுடர், காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, Friday, January 12, 2007.

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்

நவம்பர் 7, 2009

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்தது என்ற வதந்தியைப் பரப்ப ஆரம்பித்தது இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் (Indian History Congress) என்ற மார்க்ஸிஸ்ட்-முஸ்லீம் கூட்டத்தின் திட்டமிட்ட செயல்[1] ஆகும். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் (Aligarh Muslim University) ஒரு முஸ்லீமை வைத்து அத்தகைய “ஆய்வு கட்டுரை” படிக்கப் பட்டது. ஆனால், எல்லோராலும் அக்கட்டுரை நிராகரிக்கப் பட்டதில்லாமல், கேலிக்குண்டானது.

முன்பு கல்கத்தாவில் நடந்த 51வது மாநாட்டில் 1990 சமரேந்திர நாராயண் ஆர்யா என்பவர் “அயோத்யாவின் சரித்திரத் தன்மை” என்ற கட்டுரை அயோத்யாவை உத்திரபிரதேசத்தில்தான் வைத்து ஆதாரங்களை எடுத்துக் கட்டினார்[2]. அப்பொது அமைதியாக அக்கட்டுரை ஏற்றுக் கொள்லப் பட்டது அல்லாமல், பதிப்பிக்கவும் பட்டது. ஆனால், எந்த ஊடகமும் அதைப் பற்றி சொல்லவில்லை!

“சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு: இதனால், 1997ல் ஸ்யாம் நாராயண் பாண்டே என்பவரை வைத்து 58வது கூட்டத்தில் “சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு (“Historical Rama distinguished from God Rama”) என்று எடுத்துக் காட்டி கட்டுரை வாசிக்க வைக்கப்பட்டது. சரித்திர ராமர் என்று பார்த்தால், இப்பொழுதுள்ள அயோத்தி 800 B.C. காலத்திற்கு முன்பு செல்லாது. ஆனால் சரித்திர ராமரின் அயோத்யா, ஆப்கானிஸ்தானிலுள்ள ஹீரத் என்ற நகரத்திற்கு அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில் இருந்தது. “ஹரி ருத்” என்பதுதான் ஹரயு > சரயு என்றாகியது. ராமர் இறந்தபிறகு அந்நகரம் அழிக்கப்பட்டது. பிறகு காஸி அல்லது குஸிலவஸ் இன மக்களால் குஸக் என்ற பெயரில் ஒரு நகரம் கட்டப்பட்டது. அதுதான் பிறகு குஸ என்று ராமரின் மகனின் பெயரில் விளங்கியது. அந்த காலங்களில் காஸி மற்றும் அயோத்யா என்பது ஒரே இடத்தைக் குறிக்கும்.

ஆகவே பாணினி மற்றும் ரிக்வேதம், மற்ற ஆசிரியர்களின் கருத்தின் [பி. சி. லா, ஏ. எஸ். அட்லேகர், ஏ. எல். பாஷம், கே. எஸ். குலிஸ் முதலியவர்கள்] படி சரித்திர ரீதியில் ராமர் என்பவர் ஆப்கானிஸ்தானத்தில் இருந்தார். ஆகவே சரித்திர ராமரைத் தேடவேண்டுமானால் இந்தியாவின் வடகிழக்கே அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவருடைய கருத்தை ஆமோதித்த ஆர். எஸ். சர்மா என்ற பிரபல சரித்திர ஆசிரியர், “ராமர் அயோத்யாவில் பிறக்கவில்லை என்று சொல்லமுடியாது”., என்றும் நக்கலாகச் சொன்னார்!

பாண்டே பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் நிருபரிடத்தில் பேசுகையில்[3], “மனத்தளவில் நினைக்கின்ற ராமர் காலத்தால் மிகவும் முந்தையவர். எப்படி புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்களோ, நாமும் அந்த உன்மைகளை கவனிக்கும்போது, ராமர் உத்திரபிரதேசத்தில் அயோத்யாவில்தான் பிறந்தார் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது”, என்றார்!

1999ல் ராஜேஸ் கொச்சார்[4] என்ற நட்சத்திர-பௌதிகவியல் விஞ்ஞானி (Astro-physicist), ஆனால் மார்க்ஸீய சித்தாந்தவாதியும், பாப்ரி முஸ்லீம்களை ஆதரிக்கும் கூட்டத்தில் இருப்பதால், மறைமுகமாக ரிக்வேதம் ஆப்கானிஸ்தானில்தான் இயற்றப்பட்டது. வேதகாலத்திற்கு முற்பட்ட மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, அது ஏன் அவ்வளவு தொலைவில் இருந்தது என்றும் கேட்கவில்லை? அதாவது அயோத்யா ஆப்கானிஸ்தானத்திலேயே இருந்திருந்தால், அவன் ஏன் அங்கிருந்தே அங்கு செல்லவேண்டும்?  ஆனால் கொச்சார் கேட்பது, வேறுவழியில் அதாவது வடமேற்கில் இருந்ததால், கங்கைக்கரையின்மீது தேடவேண்டியதில்லை[5]. மேலும் லாஹூர் என்ற லவ்-பூர், ராமனுடைய மகனைக் குறிக்கிறது[6]. அதுவும் வடமேற்கில்தான் உள்ளது!

இதிலிருந்து அறியப்படும் / பெறப்படும் விஷயங்கள்:

1. அயோத்யா ஆப்கானிஸ்தானத்தில் தான் இருந்தது என்றால் பிரச்சினையே இல்லையே. பிறகு எதற்கு “சர்ச்சையில் இருந்த கட்டிடம்” / “பாப்ரி மஸ்ஜித்” இடிக்கப்பட்டது என்றெல்லாம் கலாட்டா செய்யவேண்டும்.

2. இது கூடவா பாபருக்குத் தெரியவில்லை. தனது ஊருக்குப் பக்கத்தில் உள்ளதை விட்டு விட்டு பிறகு எதற்கு அவ்வளவு தூரம் வந்து உத்திரபிரதேசத்தில் உள்ள “அயோத்யாவிலுள்ள” ராமர் கோவிலை இடிக்கவேண்டும்? அதாவது மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, எப்படி அவன் அதிக தூரம் செல்லவேண்டியடில்லையோ, அதுபோல! ஆனால், பாபர் வந்தது இந்தியாவிற்குதான். கோவிலை இடித்தது உபியில் – அயோத்யாவில் இருந்த கோவிலைத்தான்!

3. மொஹ்ஹம்மது கஜ்னிவிற்கு அல்-லத் சோமநாதபுரத்தில்தான் உள்ளது என்றறிந்து, அங்கு வந்து அதை இடித்து, தானும் முந்தைய முஹ்ஹம்மதுவை (PBCH) போன்றவனே[7] என்று நிரூபித்தான்! அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா என்பவை (Al-Lat Al-Manat, and Al-Uzzaa) “அல்லாவின் மகள்கள்” என்று குரான் குறிப்பிடுகின்றது[8].

4. ஆகவே பாபரைவிட சிறந்த சாட்சி உலகத்தில் இருக்கமுடியாது! பாபர்நாமாவே அதனை ஒப்புக் கொள்கின்றது. அதனால்தான் முஸ்லீம்கள் குறிப்பாக அந்த பக்கங்கள் காணவில்லை என்கின்றனர் போலும்! ஆகவே கருணாநிதியோ, கமலஹாஸனோ பாபரை மிஞ்சமுடியாது!

5. பாப்ரி மஸ்ஜித் கமிட்டி உச்சநீதி மன்றத்திற்கு முன்பு கொடுத்த அத்தாட்சிகளிலோ, ஆவணங்களிலேயோ இந்த விவரத்தைச் சொல்லவில்லை. அதாவது, அவர்களுக்கு அப்படி அந்த உண்மை தெரிந்திருந்தால் சொல்லியிருப்பார்கள்.

6. ஆர். எஸ். சர்மா இங்கு 1997ல் அமோதிக்கிறார். ஆனால், மற்றொரு இடத்தில்[9] 2001ல் எழுதும்போது, “அகழ்வாய்வு ரீதியில் 500 BCE வரை அயோத்யாவில் எந்த அத்தாட்சியும் கிடைக்காததால், அதனை ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான் மற்றும் பலியா, முங்கர் முதலிய மாவட்டங்களில் இருக்கும் என்று தேடுகின்றனர்” ஆகவே, இவர்கள் எப்படியெல்லாம் மாற்றி-மாற்றி பேசுகிறார்கள் என்பதை பார்க்கவேண்டும், கவனிக்கவேண்டும்.

7. அதாவது சித்தாந்தரீதியில் இந்துக்களுக்கு எதிராக பேசினால் தங்களுக்கு “செக்யூலரிஸ”ப் பட்டம் கிடைக்கும் என்று இங்கு இப்படி பேசுவது, மேலைநாட்டு புத்தகத்தில் தமது கட்டுரை வரவேண்டும் என்றால், அகழ்வாய்வைப் பிடித்துக் கொள்வது. இதில் என்னவேடிக்கை என்றால், அதே புத்தகத்தில் பி.பி.லால் தனது கட்டுரையில் அயோத்யாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பற்றிக் குறிப்பிடுகிறார்[10]. ஆனால் அவரது கட்டுரை, இவர்களுக்கு சாதகமாக இல்லாததனால், அதைப் பற்றி சொல்வதில்லை. ASIயின் 2003 அறிக்கையின்படி அகழ்வாய்வு அத்தாட்சிகள் 1000 BCE வரை செல்கின்றன.

8. ஆகவே, முன்பு ஸ்யாம் நாராயண் பாண்டே, கொச்சார், முதலியோர் அயோத்யா அத்தாட்சிகள் 800 B.C. முன்பாகச் செல்லாது என்ற கருத்த மாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களும் தமது தவறை உணர்ந்து மௌனிகளாக இருக்கின்றனர். ஆனால், ஊடகங்கள் கிளப்பிய பொய் பிரச்சாரம், அரசியல்வாதிகள் உளறியது அப்படியே உள்ளன. ஆகையால்தான், கமலஹாஸன் இன்றும் உளறுகிறார், பிதற்றுகிறார் முகமதியர் முன்பு!

9. பிரபலமான கமலஹாஸன் அவ்வாறு உளருவதாலும், முதல்வர் கருணாநிதி பிதற்றுவதாலும் ஊதகங்கள் தாராளமாக அசற்றை பரப்புகின்றன. ஆனால், அவை தவறு என்று எடுத்துக் காட்டும்போது, அவ்வாறான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, மறுபடியும் கமலஹாஸன் சொன்னார், கருணாநிதி சொன்னார் என்று கிளம்பிவிடுவர்!

10.  “புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்கள்”, என்கிறாரே, இதை சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

11.  கௌசல்யாவைப் போல அவர்களது அம்மாக்களையும் அவ்வாறே அனுப்பிவைத்தார்களா, என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா?

சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்: முன்பு எம்ஜியாரை கூத்தாடி, கூத்தாடிக்காரன் என்றே கருணாநிது செல்லமாக சொல்லுவார். அதாவது சினிமாகாரர்களை அப்போது அவ்வாறு சொல்வது வழக்கம். ஆகையால், இப்போதும் அவ்வாறு சொல்வது பொருந்தும் போல இருக்கிறது. சினிமா / அரசியல் என்றால் அதோடு இருக்கவேண்டும், ஆனால், அதிகபிரசங்கித் தனமாக எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு, குறிப்பாக இந்துக்களை தாக்குவது, தூஷிப்பது என்றால் முன்னே வந்து செய்வது, அதுவும், முகமதியர் முன்பு செய்வது என்றெல்லாம் ஏதோ தமக்கே உரிய லட்சணங்கள் என்பது போல இவர்கள் செய்து வருகிறார்கள். ஆகவே, இந்த கூத்தாடிகள், இனிமேல், முழுவதுமாக படித்து விட்டு உளரவேண்டும் அல்லது யாராவது முழுவதும் தெரிந்தவர்களிடம் உரு வார்த்தைக் கேட்டுக் கொண்டு உளரவேண்டும். இல்லையென்றால், நிச்சயம், ஒரு நாள் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். பொய்-மேல்-பொய் சொல்லி ஆடுகின்ற ஆட்டமில்லை கோசலையைப் பற்றி அவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தால், எந்த ராஜலட்சுமியும், அஞ்சுகமும் பொறுக்கமாட்டார்கள்.


[1] 1987லிருந்து தொடர்ச்சியாக மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசிக்கும் ஆயுட்கால அங்கத்தினர்களிடமிருந்து சேகரித்த தகவல்கள் மற்றும் Proceedings of the Indian History Congress புத்தகங்களை பார்த்து தொகுத்த விவரங்கள்.2 Samarendra Narain Arya, Historicity of Ayodhya, Proceedings of the Indian History Congress, 51st session, Calcutta, 1990, pp. 44-49.

[3] http://www.indianexpress.com/ie/daily/19971120/32450403.html

[4] Rajesh Kochhar, The Vedic People, Their History and Geography, Orient Longman, Delhi 1999.

[5] Ibid, p.209.

[6] Ibid, p.210.

[7] அதாவது முஹ்ஹம்மத் காபாவைத் தவிர, சுற்றியிருந்த 360 விக்கிரங்களை இடித்து போட்டார். பிறகு அரேபியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காபா விக்கிரத்தை விட்டுவைத்தார்!

[8] Koran, Surah:53.19

[9] Robert Layton, Julian Thomas, Peter G. Stone (Eds.), Destruction and conservation of cultural property, Routleg Taylor & Francis group, 2001, USA, p.127.

இதில் மற்ற கட்டுரைகளும் இந்த பிரச்சினை பற்றி விவாதிக்கின்றன. எல்லோருமே அயோத்யாவை உபியில்தான் வைக்கின்றனர்.

[10] B. B. Lal, A note on the excavations at Ayodhya with reference to the Mandir-masjid issue, in Destruction and conservation of cultural property, as mentioned above, pp.117-120.