Archive for the ‘கௌரவம்’ category

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

அக்பர் கொலை 16-08-2016

மைத்துனர் சையது தானாகவே வந்தாரா, பாத்திமுத்து தகவல் கொடுத்து வந்தாரா?: 16-08-2016 காலை அதே பகுதியில் வசிக்கும் அக்பரின் மைத்துனர் சையது, அக்பரின் வீட்டுக்கு வந்தார். பாத்திமுத்து தகவல் சொல்ல வந்தார் என்றும் உல்ளது. அவர் கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாத்திமுத்து எழுந்து சென்று கதவை திறந்தார். அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே, அக்பர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சையது சென்றார். அங்கு வாயில் துணி திணிக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அக்பர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சையது சத்தம் போட்டார்[1]. பாத்திமுத்து மற்றும் பிள்ளைகளும் ஓடி வந்தனர். அக்பரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது[2].

அக்பர் கொலை 16-08-2016.நியூஸ்7டிவி

அக்பருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் தொடர்பு, கள்ளக்காதல், உல்லாசம்: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (35). கணவனை விட்டுப் பிரிந்தவர். இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கடையில் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காக அக்பர் வேலைக்கு வைத்துக் கொண்டார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது[3]. பிறகு மண்ணடியிலேயே வாடகை வீடு எடுத்து பாத்திமாவை அக்பர் தங்கவைத்துள்ளார். பிறகு இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்துள்ளனர். வெளி இடங்களிலும் சுற்றித் திரிந்துள்ளனர். நாளடைவில் இந்த கள்ளத்தொடர்பு பாத்திமுத்துவுக்கு தெரிய வர அக்பரை கண்டித்துள்ளார். ஆனால் அக்பரோ அப்படி ஏதும் இல்லையென்று மறைத்துள்ளார். ஆனாலும் சந்தேகம் தீராத பாத்திமுத்து தனது கணவரை பின் தொடர்ந்து வேவு பார்த்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

பாத்திமுத்து கையும் களவுமாக கணவன் கள்ளக்காதலியைப் பிடித்தது: தனது உறவினர்களுடன் அங்கே சென்று கையும் களவுமாகப் பிடித்த பாத்திமுத்து, பாத்திமாவை அடித்து உதைத்துள்ளார். பிறகு அங்கிருந்த பாட்டிலால் அக்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் அக்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாத்திமுத்துவுடன் கோபித்துக்கொண்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்பருக்கு பாத்திமாதான் உதவியாக இருந்துள்ளார். பிறகு உறவினர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து பாத்திமுத்துவுடன் வீட்டுக்கு வந்துள்ளார். பாத்திமாவையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் இருவரும் பழகத் தொடங்கியுள்ளனர். இதை பாத்திமுத்து கண்டிக்க, ‘நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்’ என்று கூறியுள்ளார். இதுதான், அவளை கொலைச் செய்யத் தூண்டியது.

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்ட பாத்திமுத்து: தகவலறிந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்[4]. இந்நிலையில் அக்பர் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இயங்கவில்லை என தெரிகிறது[5]. இந்த கொலை தொடர்பாக அக்பர் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. அக்பர் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாத்திமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமுத்து ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபரை அவருடைய மனைவியே கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து பாத்திமுத்து மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர் கைது செய்யப்பட்டார்[7]. கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்பரின் மகள் பூஜா(12) சற்றே மனநலம் பாதித்தவர். அவர் நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்பரை பார்த்துவிட்டு பாத்திமுத்துவிடம் கேட்டுள்ளார். ஒன்றுமில்லை. அப்பா தூங்குகிறார். காலையில் எழுந்துவிடுவார் என்று அவரை பாத்திமுத்து தூங்க வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Akbar murder, Mannady 16-08-2016, TOI

Akbar murder, Mannady 16-08-2016, TOI

எல்லோருக்கும் தெரிந்த கள்ளக்க்காதல்-தொடர்புகளை உறவினர்கள்-நண்பர்கள் ஏன் கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை?: பாத்திமுத்து உறவினருக்கு அக்பரின் கள்ளக்காதல் தொடர்புகள் தெரிந்திருக்கின்றன. அதேபோல, அவர்கள் அக்பரை கையும் களவுமாகப் பிடித்து அடித்த போதும், மற்றவர்களுக்கு, குறிப்பாக சுற்றிலும் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அக்பருன் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால், யாரும் அக்பரைக் கண்டிக்கவில்லை அல்லது அத்தகைய கள்ளக்காதல், உறவு தப்பு, தவறு, குற்றம் என்றெல்லாம் எடுத்துக் காட்டவில்லை என்பது வியப்பாக உள்ளது. மனைவி பாத்திமுத்து மட்டும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது. அதாவது, முஸ்லிம்கள் ஒன்றிற்கும் மேலான பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் மற்றும் திருமணம் செய்து கொண்டு மனைவியரை வைத்துக் கொள்ளலாம், இதெல்லாம் சகஜம் தான் என்று அமைதியாக இருந்தார்கள் போலும். இருப்பினும், மனைவி எதிர்த்திருக்கிறாள். ஆக, இதை பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்லது இஸ்லாமிய பெண்ணின் பிரச்சினை என்றே ஒதுக்கப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

கொலை செய்யத் தூண்டியது என்ன?: பாத்திமுத்து கண்டித்தபோது, “நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, என்று கூறியுள்ளது நோக்கத்தக்கது. இங்கு ஒருவேளை தனது இஸ்லாமிய உரிமையை எடுத்துக் காட்டியுள்ளது தெரிகிறது. “நான் உனக்காக நிறைய செலவு செய்தேன்”, என்பது, அந்த மனைவிக்கு செய்த கடமையை குறிப்பதாக உள்ளது. “ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, அதாவது, இன்னொரு திருமணத்தை செய்து கொள்ள ஆட்சேபிக்கிறாய் என்கிறார் போலும். “பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும்”, என்றது, விவாக ரத்து செய்துவிடுவேன் என்பதைக் குறிக்கிறது. பணம் நிறைய இருப்பதால், “மஹர்” கொடுத்து “தலாக்” செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பாத்திமுத்து தனது முழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வது எப்படி? “அக்பரின் மகள் பூஜா (12) சற்றே மனநலம் பாதித்தவர்”, என்றும் உள்ளது. அதாவது, அவளுக்கு மருத்துவ செலவு, வளர்த்து பெரியவள் ஆக்குவது, திருமணம் செய்து வைப்பது போன்ற கடமைகளிலிருந்தும் அக்பர் தப்பிப்பது தெரிகிறது. இதனால், ஒரு பெண் எல்லாவிதங்களிலும் நெருக்கித் தள்ளப்பட்டபோது, அத்தகைய கொடுமையான முடிவுக்கு வந்து, தனது கணவனையே கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறாள்.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

பெண்கள் பிரச்சினைகள் உணரப்பட வேண்டும்: பொதுவாக, இப்பிரச்சினையை பெண்கள் பிரச்சினை என்றெ எடுத்துக் கொள்ளலாம். கணவன் ஒரு மனைவியை / பெண்ணை விவாகரத்து செய்தால், மனைவி-மக்கள் / குழந்தைகள் வாழ, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும். ஆனால், ஆண் ஏதோ பணத்தைக் கொடுத்து கழட்டி விடுவது, மற்றும் பெற்ற குழந்தைகளைப் பற்றி கவலைப் படாமல் இருப்பது, கடமைகளைத் தட்டிக் கழிப்பது மற்றும் சட்டப்படி மனைவிக்கு தொல்லைக் கொடுப்பது போன்ற நிலைகளில் ஈடுபட்டால், மனைவி-குழந்தைகள் கதி அதோகதிதான். தனியாக ஒரு பெண் குழந்தைகளுடன் வாழ்வது என்பது பெரிய சோதனை ஆகும். ஆனால், இஸ்லாம் என்று பார்த்தால் பிரச்சினை வருகிறது. அதனால் தான் இதனை விமர்சிக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள் என்று தெரிகிறது. பொது சிவில் சட்டம் என்று பேசுபவர்களும், பேச பயப்படுபவர்களும், செக்யூலரிஸப் பழங்களும் கூட மௌனிகளாகி விடுகின்றனர். ஆனால், பெண்கள் படும்பாட்டை மற்றவர்கள் உணர, அறிய, புரிய வேண்டும். இப்பிச்சினை பொதுப்பிரச்சினையாக கருதப்படவேண்ட்ம். அப்பொழுதுதான், இந்திய சமூகம் சிறப்பாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=239296

[2] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

[3] http://news.lankasri.com/india/03/107579

[4] நியூஸ்.7.டிவி, இரும்பு வியாபாரி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!, August 16, 2016

[5] http://ns7.tv/ta/death-husband-and-police-arrested-wife.html

[6] http://ns7.tv/ta/while-iron-dealer-kaluttarukkappatta-mysterious-death.html

[7] http://www.dailythanthi.com/News/State/2016/08/17010831/Wife-killed-their-throats-cut.vpf

மோனிகாவுக்கு திடீர் திருமணம், சினிமாவில் இனி நடிக்க மாட்டார், வீட்டை விற்பனை செய்யப் போகிறார்- தமிழர்களுக்குத் தேவையான முக்கியமான செய்திகள்!

ஜனவரி 14, 2015

மோனிகாவுக்கு திடீர் திருமணம், சினிமாவில் இனி நடிக்க மாட்டார், வீட்டை விற்பனை செய்யப் போகிறார்- தமிழர்களுக்குத் தேவையான முக்கியமான செய்திகள்!

மோனிகா-மாலிக்-திருமணம்-நிக்காஹ்

மோனிகா-மாலிக்-திருமணம்-நிக்காஹ்

அம்மா ஹிந்து, அப்பா கிரிஸ்டியன், கணவன் முஸ்லிம் அதனால் நானும் முஸ்லிம்: மோனிகா பற்றிய முந்தைய பதிவில் அவரைப் பற்றிய விவரங்கள், ஊடகங்கள் எப்படி அவரை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றன மற்றும் இவரும் அதை வைத்துக் கொண்டு விளம்பரம் தேடுகிறார் போன்றவற்றைக் கொடுத்துள்ளேன்[1]. அப்பா மாருதிராஜ் கிருத்துவர், அம்மா கிரேஸ் இந்துவாம், இப்படி செக்யூலரிஸக் கலவையில் பிறந்து, இவர் முஸ்லீமாக மாறி முஸ்லிமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றிருக்கிறது போலும்அதுவும் 2010லேயே முஸ்லிமாக மாறிவிட்டபோது, அவை கண்டுகொள்லவில்லை, ஆனால், 2014ல் முழித்துக் கொண்டன போலும்! நிச்சயமாக இதனைசெக்யூலரிஸசித்தாந்திகளும் இனி எடுத்துக் கொண்டுதுலுக்க நாச்சியார்போன்று உதாரணம் காட்டிடாமாரம்அடிக்கலாம்! ஆனால், “அம்மா ஹிந்து, அப்பா கிரிஸ்டியன், கணவன் முஸ்லிம் அதனால் நானும் முஸ்லிம்”, என்ற பார்முலாவில் தான் ஏதோ இடிக்கிறது.

 

மோனிகா நிக்காநாமா கையெழுத்து

மோனிகா நிக்காநாமா கையெழுத்து

ரேகா, பர்வானா, மோனிகா, ரஹீமா: அவசர போலீஸ் 100 படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மோனிகா. தொடர்ந்து என் ஆசை மச்சான் படத்திலும் இந்திரா படத்திலும் ஒரு பாடலுக்கு வந்து போனார். பின்னர் அழகி படம் மூலம் அனைவரின் மனதிலும் பதிந்தார். பகவதி, சண்டக்கோழி, சிலந்தி, குறும்புக்கார பசங்க, நதிகள் நனைவதில்லை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், சில மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரையும் எம்.ஜி. ரஹிமா என்று மாற்றிக் கொண்டார். என்கிறது இப்பொழுதும் ஊடகங்கள். ஆனால் இவர் இப்பொழுது பெயர் மாற்றியுள்ளதற்கும் முன்பு பல பெயர்களை வைத்துக் கொண்டுள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது. முதலில் அவரது பெயர் ரேகா மாருதி ராஜ். மலையாளப் படங்களில் நடிக்கும் போது, அவரது பெயர் பர்வானா. தமிழ்-தெலுங்குப் படங்களில் நடித்தபோது, மோனிகா. இப்பொழுது ரஹேமா / ரஹீமா[2]. அதாவது எம்.ஜி. ரஹீமா = மாருதிராஜ் கிரேஸி ரஹீமா. இனி இன்னொரு “எம்”ஐ சேர்க்கவேண்டும் போலிருக்கிறது! சரி எப்படித்தான் அவர் பிறப்பு சான்றிதழ், பேன்-கார்டு, பாஸ்போர்ட் முதலியவற்றை வாங்கினார் என்று தெரியவில்லை.

மாலிக் நிக்காநாமா கையெழுத்து

மாலிக் நிக்காநாமா கையெழுத்து

சினிமாவில் நடிக்க மாட்டார், வீட்டை விற்க்கப் போகிறார்: மாலிக் சென்னயில் உள்ள ஒரு தொழிலதிபர். இவர் மோனிகாவின் தந்தையின் நெருங்கிய நண்பருடைய மகன்[3], என்கிறது ஒரு நாளிதழ். அதாவாது மாருதிராஜின் நண்பருடைய மகன். மேலும் இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றும் அறிவித்திருந்தார்[4], என்று இப்பொழுதும் செய்திகளாக வெளியிட்டுள்ளன, ஆனால், “மதம் மாறியதற்குப் பிறகு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.  இந்த முடிவு வருத்தத்தைத் தந்தாலும், அதில்எந்த மாற்றமும் இல்லை,” என்றார், என்று கடந்த மே.2014லேயே சொன்னதாக, இதே ஊடகங்கள் ஊளையிட்டிருந்தன. இந்நிலையில் மோனிகாவிற்கு அவரது குடும்ப நண்பரான மாலிக் என்பவருடன் நந்தம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (11-01-2015) காலை திருமணம்  கிண்டி-மசூதியில் மிக எளிமையாக நடைபெற்ற திருமண விழாவில் உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்[5]. மசூதியில் நிக்காஹ் நடந்தது என்ற விவரத்தைக் கூட ஒரு ஊடகம் தான் அறிவித்தது. நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை[6], என்கிறது இன்னொரு ஊடகம். அவர்கள் பங்கேற்க்கக் கூடாது என்று யாதாவது “கன்டிஷன்” இருக்கிறதா அல்லது மசூதிக்குள் அவர்கள் நுழையக் கூடாதா என்பதை குறிப்பிடவில்லை. குறைந்த பட்சம், இருக்கும் முஸ்லிம் நடிக-நடிகையர் கலந்து கொண்டிருக்கலாம், ஆனால், ஒருவேளை அவர்களுக்கெலாம் பத்திரிக்கைக் கொடுக்கப் படவில்லை போலும். மோனிகா திருமணம் முடிந்த கையோடு சென்னை போரூரை அடுத்துள்ள மதனந்தபுரத்தில் பல ஆண்டுகளாக தான் குடியிருந்து வந்த வீட்டை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்[7]. வீடு விற்பனை செய்வது குறித்து தனக்கு தெரிந்த நபர்களிடம் கூறியுள்ளாராம்[8].

மோனிகா திருமணம்.1

மோனிகா திருமணம்.1

திருமணம் செய்து கொள்ள மதமாற்றம், மதம் மாற வேண்டிய அவசியம் என்ன?: ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா தொடர்ந்து இவரும் முஸ்லீமாக மாறியுள்ளார் என்கின்றன ஊடகங்கள். ஒரு இந்து ஆனாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ஏன் மதம் மாறி இன்னொரு பெண்ணை அல்லது ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எந்த அறிவிஜீவியோ, செக்யூலரிஸப் பழமோ சிந்தித்தது உண்டா என்று தெரியவில்லை. ஏன் ஒரு முஸ்லீம் அல்லது கிருத்துவ ஆண் அல்லது பெண் மதம் மாறி ஒரு இந்து பெண் அல்லது ஆணைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது? இது ஏன் ஒருவழி பாதையாகவே இருந்து கொண்டிருக்கிறது? “கௌரவம்” திரைப்படத்தில் கூட, சிவாஜி, தனது மகளைக் காதலிக்கும் காதலனை, “என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், நீ கிருஸ்துவனாக மாற வேண்டும், மாறுவாயா?” என்று கேட்பார். அப்பொழுது, அதைப் பற்றி யாரும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், “கல்யாண அகதிகள்” என்ற திரைப்படத்தில், ஒரு இந்து காதலி, தான் மதம் மாறமுடியாது என்று கிருஸ்துவ காதலனுக்கு தெரிவிப்பதை, பிரபலப்படுத்தி வருகிறர்கள். இவ்விசயத்தில் தான் இது “செக்யூலரிஸ” திருமணமாக இல்லாமல், “கம்யூனல்” திருமணமாக இருப்பது தெரிய வருகிறது. பிறகு ஏன் அறிவிஜீவிகள், முற்போக்கு வகையறாக்கள் இதைப் பற்ரியும் ஆராயக் கூடாது, கதைகள் எழுதக் கூடாது?

 

மோனிகா-மாலிக்-திருமணம்

மோனிகா-மாலிக்-திருமணம்

சினிமா நடிகைகள் மதம் மாறுவது பெரிய செய்தியா?:  சினிமா நடிகைகள் மதம் மாறுவது பெரிய செய்தியே இல்லை! தொழில் ரீதியில், அவர்களுக்கு லாபம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பணம், புகழ் தான் அவர்களுக்குத் தேவை. மார்க்கெட் போனால் தான், குடும்பம் அல்லது பாதுகாப்பு என்று நினைப்பார்கள்.  பணம் இருந்தால், அந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருப்பார்கள்அவர்கள் மதத்தைக் கடந்தவர்கள் என்றே சொல்லலாம். அந்நிலையில், இந்த நடிகை கவர்ச்சியாக / ஆபாசமாக நடித்து வொட்டு, இனிமேல் நான் அப்படி நடிக்க மேட்டேன், நான் முஸ்லிமாக விட்டேன் என்றால், வேடிக்கையாகத்தான் உள்ளது. முன்னர் குறிப்பிட்டப்படி, இஸ்லாம் பல பெண்களை மணந்து கொள்ள, நடிகர்கள் உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது முதல் இந்து பெண்டாடியை ஏமாற்றி, இரண்டாவது பெண்டாடி வேண்டும் என்றால் முஸ்லீமாக வேண்டும் என்பது சினிமா உலகத்தில், அரசியலில் இருந்து கொண்டுதான் உள்ளது[9].

 

மோனிகா திருமணம்.2

மோனிகா திருமணம்.2

வாழ்க மணமக்கள், அவர்களது இல்லறம் சிறக்க: நடிகை இப்பொழுது ஒருவருக்கு மனைவியாகி விட்டாள், ஆக, இந்தியப் பாரம்பரியம் படி மணமக்களை வாழ்த்த வேண்டும். அவர்கள் பதினாறும் பெற்று சிறக்க வாழ்க என்று ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம். “பதினாறு” என்றால் குழந்தைகள் அல்ல வேறு விசயங்கள் என்று பெரியவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என்றிருப்பார்களா அல்லது முஸ்லிமாகவே இருப்பார்களா என்று இந்திய செக்யூலரிஸ பண்டிதர்கள் தாம் தீர்மானிக்க வேண்டும். ஊடகங்கள், பொங்கலன்று இதற்காக ஒரு பிரத்யேகமான பட்டி மன்றமும் நடத்தலாம். “நீயா-நானா?”விலும் இதைப் பற்றி அறிவிஜீவிகளை கூட்டி வைத்து விவாதிக்கலாம். ஏனென்றால், இவையெல்லாம் தமிழக மக்களுக்கு மிகவும் வேண்டிய விசயங்கள். நாளைக்கு ஒருவேளை, நுழைவு தேர்வுகளில் கூட, ஏதாவது கேள்விகள் கேட்டு வைத்தால், இக்கால இளைஞர்-இளைஞிகள் செய்திகளைப் படித்து, தங்களது பொது அறிவை வளர்த்துக் கொண்டு தயாராக இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

14-01-2015

[1] வேதபிரகாஷ், மோனிகா என்ற நடிகை முஸ்லிம் 2010ல் ஆகிவிட்டாளாம், ஆனால் 2014ல் அறிவிப்பாம், பிரகடனமாம், உசுப்பிவிடும் ஊடகங்கள்!, https://islamindia.wordpress.com/2014/05/31/monica-actress-converted-to-islam-in-2010-but-announced-in-2014/

[2] Monica had many name changes. She was born Rekha Maruthiraj. For Malayalam films, she is Parwana and she took the name Monica for Tamil and Telugu films. Now she is Raheema.

http://www.sakshipost.com/index.php/entertainment/news-gossip/51912-actress-monika-alias-raheema-married.html?psource=Feature

[3] Following the conversion, she had quit her 24 – year old acting career. The groom Malik is a Chennai-based entrepreneur, also happens to be the son of Rahima’s father’s close friend.

http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Actress-Monica-gets-married/articleshow/45850871.cms

[4]http://www.dinamani.com/latest_news/2015/01/11/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/article2614704.ece

[5]http://makkalkural.net/news/blog/2015/01/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87/

[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=135947

[7] தினமணி, வீட்டை விற்பனை செய்யும் முடிவில் மோனிகா!, By Sasikumar Balakrishnan

First Published : 13 January 2015 11:56 AM IST

[8]http://www.dinamani.com/cinema/2015/01/13/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/article2617898.ece

[9] Sarla Mudgal vs Union Of India – AIR 1995 S.C 1531