Archive for the ‘கொண்டாட்டம்’ category

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]

Police warns about spreading false details - 16-02-2020

உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதற்கு அதுதான் உகந்த வழியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த அளவுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்கியுள்ளது, எஸ்.சிக்களுக்கு அவர் தொடர்ந்து செய்து வரும் துரோகம் எனலாம். அவர் முஸ்லீமாக மாறி, அவர்களுக்கே உழைக்கலாம், எஸ்.சிக்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

News cutting, police dissatisfied 16-02-2020

தமுமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்தது [18-02-2020]: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், பல்வேறு அரசியல் அமைப்புகளும் போராடிவரும் நிலையில் மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது[1]. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கத்திலிருந்து பேரணியாக சென்ற தமுமுக-வினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[2].  இதற்கெல்லாம் எப்படி அனுமதி கொடுக்கப் பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை.

Sweden support washermenpet demo- nakkeeran-16-02-2020

14-02-2020 லிருந்து போராட்டம் நடைபெறுகிறது என்றால், எப்படி?: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் கடந்த 14-ம் தேதி முதல் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்[3]. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் அங்கு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். வண்ணாரப்பேட்டையில் இன்று 7-வது நாளாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் ஸ்டைலில், தமிழில் கோஷங்கள் இட்டு, ராப் பாடினர்[4]. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். 7-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நீடித்து வருவதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Washermenpet Muslim poster Feb 2020-2

சிறுவர்கள், பெண்களை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்வது: முஸ்லிம்கள் பொதுவாக பெண்களை பர்கா உடுத்த வைத்து, வீட்டிற்குள் அடைத்து தான் வைத்திருக்கிறார்கள். சில பெண்கள் தாம், வெளியே வந்து மால்களுக்கு, கடைகளுக்கு வந்து செல்கிறார்கள். அந்நிலையில். பெண்களை வெளியே அழைத்து ஆர்பாட்டம் செய்ய வைத்தது, அவர்களுக்கு உத்வேகமாக இருந்தது போலும். உணர்ச்சிப்பூர்வமாக, ஆவேசமாகக் கத்துகிறார்கள். தண்ணீர், உணவு எல்லாம் சரியாகக் கிடைக்கப் பெறுவதால், ஜாலியாக வந்து உட்கார்ந்து கொண்டு, பொழுது போக்குகிறார்கள். போராட்டம் செய்ன்றனர். ஆனால், இதெல்லாம் பாலஸ்தீனம்-காஷ்மீரம் திட்டம், வழிமுறை, அரசை எதிர்ப்பது, போலீஸாரை மதிக்காமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிப்பது தெரிகிறது. தொடர்ந்து, ஊடக-செய்திகளை கவனித்து வருவர்கள், இதையெல்லாம், சுலபமாகக் கண்டு கொள்கிறார்கள். அப்பொழுடு தான், அவர்களுக்கு, முஸ்லிம்கள் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள் என்று தெரிந்து விட்டது. முதல் அமைச்சர் சட்டசபையில் பேசியதற்கு, “வண்ணாரப்பேட்டையிலிருந்து ஒரு சாமானியன்” என்று, விகடன் வக்காலத்து வாங்கி இருப்பது, அப்பட்டமான, முஸ்லிம்-ஆதரவு என்பது தெரிந்தது[5]. ஏனெனில், இந்த அளவுக்கு, யாரும் அத்தகைய அரசு-எதிர்ப்பு, பொய்மை கலந்த விசயங்களின் தொகுப்பை யாரும் வெளியிட முடியாது. முஸ்லிம்களின் மௌத் பீஸ் என்பார்களே, அப்படி செயல்பட்டுள்ளது[6].

Muslims against AIADMK govt.6

முஸ்லிம் அரசியல் கட்சியினரும் சேர்ந்து கொண்டு ஆர்பாட்டத்தை நடத்துவது.

Muslims against AIADMK govt.4

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

Muslims against AIADMK govt.1

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன. உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை செருப்பால் அடிப்பது.

Muslims against AIADMK govt.3

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

 

Muslims - Modi, Amit Shah effigy burnt-2

உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை எரிப்பது

Washermenpet Muslim poster Feb 2020-3

எல்லாமே நகல் போன்று தான் காணப்படுகின்றது: இப்போராட்டம், ஏதோ ஏற்கெனவே தெரிந்த பாடலை வேறு விதமாக பாடும் போது, இதை எங்கேயோ கெட்டது போல உள்ளதே, ஏற்கெனவே கேட்டு விட்டோமே, என்ற உணர்வு ஏற்படுகின்றது. ஆமாம், ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் பல்கலை, கன்னூர் IHC, ஹைதராபாத், பெங்களூரு என்று பார்த்தவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, இதில் உள்ள உற்றுமையை காண முடியும். அது தான் முஸ்லிம்களின் ஏற்பாடு, ஆதாவு, ஆசியல் முதலியன. இங்கு, தமிழகத்தில் முஸ்லிம்கள் தான் செய்கின்றனர் என்று வெளிப்படையாக உள்ளதால், அப்பிரச்சினையே இல்லை. பிறகு, தமிழக முஸ்லிம்களுக்கு, இதில் என்ன அத்தகைய அக்கரை என்ற கேள்வி எழுகின்றது. விகடன் மற்றும் அதன் நிருபர்கள், ஏதோ ஒடு மொத்தமாக, இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல, செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது அந்த அளவிற்கு, முஸ்லிம்களின் ஊடக பலம் உள்ளது என்று தெரிகிறது. பிபி.தமிழ், ஐ.இ.தமிழ், தி.இந்து என்று எல்லாமே இவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், சென்னையில் வழக்கம் போல எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் மற்றும் ஊடகக்காரர்கள் எண்ணுகின்றது போல அல்ல திட்டம் போடுவது போல, எந்த கலவரமும் நடக்கவில்லை. ஆனால், முஸ்லிம்களும், எதிர்கட்சியினரும், தூண்டிவிட்டி, மோடி, அமித் ஷா, பழனிச்சாமி, பன்னீர்செல்வம் முதலியோர்களின் படங்களை எரித்து, மத்திய மாநில அரசுகளை வன்மையாக விமரித்து, ஆர்பாட்டம்-போராட்டம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். எல்லாமே சட்டமீறல்கள் என்று தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், முஸ்லிம்களுக்கும் அலுத்து போன நிலை ஏற்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-02-2020

Vikatan undue support to Muslis Feb 2020

[1] நக்கீரன், முதல்வர் வீட்டை முற்றுகையிட தமுமுக நடத்திய பேரணி.! (படங்கள்),  Published on 19/12/2019 (15:23) | Edited on 19/12/2019 (15:35)., குமரேஷ்

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tmmk-protest

[3] ஐ.இ.தமிழ், ராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள்சென்னை சிஏ.. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ், WebDeskFebruary 20, 2020 03:43:52 pm

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-caa-protest-7th-day-highlights-vannarapettai-170786/

[5] விகடன், சட்டமன்றத்தில் கொந்தளித்த எடப்பாடிக்கு வண்ணாரப்பேட்டையில் இருந்து ஒரு சாமானியனின் கடிதம்!, ர.முகமது இல்யாஸ் Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.

[6] https://www.vikatan.com/news/politics/a-letter-to-edappadi-palanisamy-from-a-common-man-on-caa-protests

அமெரிக்க ஓரினச்சேர்க்கை விடுதியில் துப்பாக்கி சூடு, 53 பேர் கொலை, சுமார் 60ற்கும் மேலானவர் காயம்: சுட்ட உமர் மீர் சித்திக் மாடீன் கொலையுண்டான்!

ஜூன் 13, 2016

அமெரிக்க ஓரினச்சேர்க்கை விடுதியில் துப்பாக்கி சூடு, 53 பேர் கொலை, சுமார் 60ற்கும் மேலானவர் காயம்: சுட்ட உமர் மீர் சித்திக் மாடீன் கொலையுண்டான்!

Omar maateen, the killer 12-06-2016

ஆர்லான்டோ நகர் துப்பாக்கிசூடு: அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது[1]. விடுதியில் 12-06-2016  இரவு அன்று விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவ்விடுதியில், துப்பாக்கியுடன் புகுந்த நபர், கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பலியாயினர்; 53க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்; தகவலறிந்து மூன்று மணி நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த மர்ம நபரை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரின் பெயர் ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஓமர் எஸ் மடீன் [Omar Mir Seddique Mateen] எனவும் அவன் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவனாக இருப்பான் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது, பயங்கரவாத தாக்குதலா என, போலீசார் விசாரிக்கின்றனர்[2].

Omar Mateen photos

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் – ஓரினச்சேர்க்கையாளர்களின் மீது நடந்துள்ள பெரிய தாக்குதல்:: அமெரிக்காவில், பொது இடங்களில், எந்த காரணமும் இன்றி, துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று எல்லா இடங்களிலும் நடப்பதால், இது ஏதோ சாதாரண விசயம் போலாகி விட்டது. அமெரிக்க வரலாற்றில் துப்பாக்கிச்சூட்டின் மூலம் அதிக நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும், ஓரினச்சேர்க்கையாளர்களின் மீது நடந்துள்ள பெரிய தாக்குதலாகும். இதற்கு முன்னர் 2007-ஆம் ஆண்டு விர்ஜினியா பல்கலைகழகத்தில் 32 பேர் படுகொலை செய்யப்பட்டதே இது வரை அதிகபட்சமாக இருந்தது. அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கி தாக்குதல்கள் பெருகி வருவது மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது[3].

Christina [o singer - killer - 12-06-2016

பாப் பாடகி, கிறிஸ்டினா கிரிம்மி சுடப்பட்டு கொலை (12-06-2016): ஒரலாண்டோ பகுதியில், வெள்ளிக்கிழமை 12-06-2016 அன்று இரவு, இசை நிகழ்ச்சி ஒன்றில், பிரபல பாப் பாடகி, கிறிஸ்டினா கிரிம்மி, 22, சுட்டுக் கொல்லப்பட்டார்[4]. கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த ‘தி வாய்ஸ்’ இசைப் போட்டி நிகழ்ச்சியில் கிறிஸ்டினா ஜிரிமி 3-ம் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இளம் பாப் பாடகிகளில் ஒருவராக உருவெடுத்த அவர் 1106-2016 அன்று இரவு புளோரிடா நகரில் இசைக் கச்சேரி நடத்தினார். அதன்பிறகு ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்மநபர் கிறிஸ்டினாவை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் மயங்கி சரிந்தார். அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்[5].

pulse club shooting - location map -scene-2

அக்கொலை யை அடுத்து 24 மணி நேரத்தில் இந்த சம்பவம்: இந்த சம்பவம் நடந்து, 24 மணி நேரத்திற்குள், அதே பகுதியில், மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. ஒரலாண்டோவில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்படுகிறது. அங்கு, நேற்று அதிகாலை, வழக்கமான கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, இரவு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர், 2.02 அதிகாலையில் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்தவர்களை நோக்கி, சரமாரியாக சுட்டான். அப்போது, அந்த விடுதியில், 300க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைக்க, அவன் முயற்சித்தான்[6]. துப்பாக்கி சத்தம் கேட்டதும் உள்ளே இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். ஆரஞ்சு கௌன்டியின் செரிப் உடனே வந்து சமாதானம் பேச ஆரம்பித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவனுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவன், துப்பாக்கியை கீழே போடாமல், மீண்டும் மீண்டும் சுட்டான். இதையடுத்து, அந்த இடம், போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டது.

Pulse club - 12-06-2016

அதிரடி போலீஸாரின் நடவடிக்கை: காலை 5 மணிக்கு “ஸ்வாட்”, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை வரவழைப்பப்பட்டு, அவசரகால ஏற்பாடுகள் விரைவாகச் செய்யப்பட்டன. கட்டடத்தை தகர்த்து உள்ளே சென்ற போலீசார், அவன் மீது தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், அந்த நபர், சுட்டுக் கொல்லப்பட்டான். மர்ம நபர் நபர் நடத்திய தாக்குதலில், 50 பேர் வரை உயிரிழந்ததாக, போலீசார் தெரிவித்தனர். 53க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், ‘இரவு விடுதியில் இருந்தவர்கள், அந்த மர்ம நபர் சுட்டதால் இறந்தனரா அல்லது போலீசாருக்கும், அவனுக்கும் நடந்த மோதலில் இறந்தனரா என்ற தகவல், உறுதியாக தெரியவில்லை’ என்றனர்[7].

orlando-shooting-pulse-gay

ஒமர் மாட்டின் பயங்கரவாதியா?: சம்பவம் நடந்தபோது, துப்பாக்கி மட்டுமின்றி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாக, அந்த மர்ம நபர் கூறினான். இதனால், அவன் பயங்கரவாதியாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது[8]. இதுகுறித்து, அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: துப்பாக்கியால் சுட்டவனின் பெயர், ஒமர் மேட்டின், 29, ஒரு அமெரிக்க முஸ்லிம் என தெரிய வந்துள்ளது[9]. புளோரிடா மாகாணத்தில், போர்ட் செயின்ட் லுாயிஸ் பகுதியில் வசித்து வந்துள்ளான். 2009ல் திருமணம் செய்து கொண்டு 2011ல் விவாகரத்து செய்தான். பிறகு மறுபடியும் திருமணம் செய்து கொண்டுள்ளான். அவனுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. முதல் மனைவி ஒமர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன், தன்னை அடிக்கடி அடித்துத் துன்புருத்துவான் என்றெல்லாம் கூறியுள்ளாள். ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அவனுக்கு, ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என, கருதப்படுகிறது. எனினும், இது பயங்கரவாத தாக்குதலா என விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அதிபர் ஒபாமா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும், ஹிலாரியும், டொனால்டு டிரம்பும் வருத்தம் தெரிவித்துள்ளனர்[10]. 2013 மற்றும் 2014 ஆண்டுகளில், இவனது விசித்திரமான பேசுகளால், எப்.பி.ஐ மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளது.

pulse club shooting - scene-1

துப்பாக்கிக்கு கட்டுப்பாடு- வன்முறை வளர்க்கும் சரித்திரம்-சித்தாந்தம்: அமெரிக்காவில் 2015ம் ஆண்டில் மட்டும் பொது இடங்களில் 372 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 475 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,870 பேர் காயமடைந்துள்ளனர். இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள, கட்டுப்பாடு விதிக்க வகை செய்யும் சட்டத்தை, அதிபர் ஒபாமா கொண்டு வர முயன்றார். ஆனால் துப்பாக்கி தயாரிப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்நாட்டு பார்லிமென்ட் இந்த சட்டத்தை முடக்கி வைத்துள்ளது[11]. ஆக வன்முறை வளர்க்க, எதிர்க்க, முடக்க, சித்தாந்தமாகி, கொலைகள் செய்ய என்று பல இயக்கங்கள், நிறுவனங்கள் என்றுள்ளன என்று தெரிகிறது. பிறகு, அப்பாவி மக்களை யார்தான் காப்பது? இப்படியே கொலையாகும் மக்களின் ஆத்மா எப்படி சாந்தியடையும்?

pulse club shooting - scene- Orlando police

© வேதபிரகாஷ்

13-06-2016

[1] http://www.pulseorlandoclub.com/

[2] தினத்தந்தி, அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 12,2016, 9:29 PM IST; மாற்றம் செய்த நாள்:

ஞாயிறு, ஜூன் 12,2016, 9:29 PM IST.

[3] http://www.dailythanthi.com/News/World/2016/06/12212900/Florida-nightclub-shooting-50-killed-53-injured-in.vpf

[4] தமிழ்.இந்து, அமெரிக்க பாப் பாடகி சுட்டுக் கொலை, Published: June 12, 2016 11:08 ISTUpdated: June 12, 2016 11:09 IST.

[5]http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article8720771.ece

[6] தினகரன், அமெரிக்காவில் இரவு விடுதியில் பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி, Date: 2016-06-13@ 00:36:37

[7] மாலைமலர், அமெரிக்க இரவு விடுதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழப்பு, பதிவு: ஜூன் 12, 2016 18:00.

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/12180012/1018351/Pulse-Night-Club-mass-shootings-Approximately-20-dead.vpf

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=223548

[10] தினமலர், அமெரிக்க விடுதியில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி, ஜூன்.13, 2016.

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1541113

 

முத்துப்பேட்டை அம்மா தர்கா தாக்குதல், கலவரம், திராவிடத் தலைவர்கள் இந்துத்வவாதிகளின் மீது கண்டனம்– என்று செக்யூலரிஸ செய்திகள் வெளியீடு!

ஜனவரி 4, 2015

முத்துப்பேட்டை அம்மா தர்கா தாக்குதல், கலவரம், திராவிடத் தலைவர்கள் இந்துத்வவாதிகளின் மீது கண்டனம்– என்று செக்யூலரிஸ செய்திகள் வெளியீடு!

உடைக்கப்பட்ட அம்மா தர்கா மதில்சுவர்.

உடைக்கப்பட்ட அம்மா தர்கா மதில்சுவர்.

புத்தாண்டு கொண்டாடிய கும்பல், தாக்கிய கும்பல், திரும்பிவந்த கும்பல்இவையெல்லாம் ஒரே கும்பலா, வெவ்வேறானவையா?: புத்தாண்டு கொண்டாடிய கும்பல் நடத்திய வன்முறையால் முத்துப் பேட்டை ஜாம்புவானோடை அம்மா தர்கா 31-12-2014 / 01-01-2915 அன்று சூறையாடப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டையில் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 50-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் [தா்காவில் ஏறிய மர்ம நபர்கள் தர்கா சுவர்களையும், சுற்றுசுவர்,அருகில் இருந்த 3 வீடுகளையும் உடைத்து சூறையாடிவிட்டனர்[1]] மோட்டார் சைக்கிள்களில் கூச்சலிட்டபடி வீதிவீதியாக வலம் வந்தது. அப்போது, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஜாம்புவானோடை தர்கா வாசலில் நின்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கும்பலில் வந்த வர்கள் தர்கா முன்பு நின்றவர்கள் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பள்ளிவாசல் இமாம் முகமது (45), கலீலுர் ரகுமான் (26) மற்றும் பாதுகாப்புப் பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் பலத்த காய மடைந்தனர். அங்கிருந்து சென்ற கும்பல், மீண்டும் சுமார் 200-க்கும் மேற்பட்டோருடன் திரும்பிவந்து, அங்குள்ள அம்மா தர்காவுக்குள் புகுந்து விளக்குகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, தர்காவின் சுற் றுச்சுவரை சுமார் 100 அடி நீளத் துக்கு கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு இடித்து தரை மட்டமாக்கியது. பின்னர், அருகிலிருந்த வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியதுடன், கூரை களையும் பிரித்து வீசியது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது[2].

kalavaram-நக்கீரன்.1

kalavaram-நக்கீரன்.1

மற்றொரு கும்பல்என்று குறிப்பிடப்பட்டது எந்த கும்பல், புகார்கள் ஏன் இரண்டு, மூன்று என்றுள்ளது?: இந்நிலையில், முத்துப் பேட்டையை அடுத்த செம்படவன் காட்டில் மற்றொரு கும்பல் தாக்கிய தில் பாலமுருகன் என்பவரின் பட்டறையில் நின்ற 3 கார்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலவரம் நடந்தபோது, “அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் குறைந்த அளவிலான போலீஸாரே பணியில் இருந்ததாகவும்” தர்கா நிர்வாகி கள் குற்றம் சாட்டுகின்றனர். காயமடைந்த கலீலுர் ரகுமான் மற்றும் தர்கா முதன்மை அறங் காவலர் பாக்கர் அலி சாகிப் ஆகியோர், “அம்மா தர்காவை இடிக்கும் நோக்கத்துடன் வந்த கும்பல் மதில் சுவரை இடித்து, அருகில் இருந்த வீடுகளை சூறை யாடியது. தர்காவில் தங்கியிருந்த ஊழியர்கள், பக்தர்கள் மீது அரிவாள், கடப்பாரை போன்ற ஆயுதங் களுடன் வந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் அளித்தனர். அதன்படி, முத்துப்பேட்டை போலீஸார் 65-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மற்றொரு புகாரின் பேரில், 3 கார்களை உடைத்த கும்பலைச் சேர்ந்தவர்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

kalavaram-நக்கீரன்.4

kalavaram-நக்கீரன்.4

வைகோ கண்ட அறிக்கையை பலவாறு வெளியியட்டது ஏன்?: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தர்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை (03-01-2015) அவர் வெளியிட்ட அறிக்கை[3]: “மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் முத்துப்பேட்டை அம்மாபள்ளி தர்கா மீது புத்தாண்டு நள்ளிரவில் [“சங் பரிவார்[4] அமைப்பைச் சேர்ந்த 150 பேர் உருட்டைக்கட்டைகளோடும், கற்களோடும் சென்று தாக்கியுள்ளனர்” என்று தி ஹிந்து குறிப்பிடுகின்றது[5]]  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தர்காவுக்கு தினமும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வருகின்றனர். பலர் இரவு வேளைகளில் அந்த தர்காவின் தாழ்வாரங்களில் படுத்து உறங்குகின்றனர்[6]. இதைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். [இதைச் சகிக்காத பாரதிய ஜனதா கட்சியினரும், மத வெறியர்களும் 150க்கு மேற்பட்டவர்கள் புத்தாண்டு அன்று நடுநிசியில் தர்கா வளாகத்துக்குள் நுழைந்து தாக்க ஆரம்பித்தவுடன், பயந்துபோன யாத்திரிகர்கள் தர்காவுக்குள் ஓடிச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டனர். இல்லையேல், பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்[7]] தர்காவின் உள்ளே நுழைய முடியாதவர்கள் சுற்றுச் சுவரை உடைத்துள்ளனர். இதை அறிந்து பொதுமக்கள் – மத வித்தியாசம் இன்றி, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட ஊர் மக்கள் அனைவரும் தர்காவை பாதுகாக்க விரைந்து வந்தவுடன்,  தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஒருவரின் ஆதரவாளர்கள்தான் இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்[8]. இந்த விவகாரத்தில் முத்துப்பேட்டை காவல் துறை கண்காணிப்பளரின் செயல் இந்த வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் இருந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தர்கா மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

kalavaram-நக்கீரன்.6

kalavaram-நக்கீரன்.6

சமதர்மத்தைக் கடைப்பிடிக்காமல், செக்யூலரிஸ ரீதியில் வைகோ அறிக்கை விட்டது ஏன்?: வைகோவின் அறிக்கையை தமிழக ஊடகங்கள், பலவாறு கீழ்கண்டவிதத்தில் வெளியிட்டுள்ளன:

  1. மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் முத்துப்பேட்டை அம்மாபள்ளி தர்கா
  2. [“சங் பரிவார்[9] அமைப்பைச் சேர்ந்த 150 பேர் உருட்டைக்கட்டைகளோடும், கற்களோடும் சென்று தாக்கியுள்ளனர்”
  3. இந்தத் தர்காவுக்கு தினமும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வருகின்றனர்.
  4. இதைச் சகிக்காத பாரதிய ஜனதா கட்சியினரும், மத வெறியர்களும் 150க்கு மேற்பட்டவர்கள் புத்தாண்டு அன்று நடுநிசியில்……………………………..
  5. மத வித்தியாசம் இன்றி, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட ஊர் மக்கள் அனைவரும் தர்காவை பாதுகாக்க விரைந்து வந்தவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
  6. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஒருவரின் ஆதரவாளர்கள்தான் இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்[10].
  7. இந்த விவகாரத்தில் முத்துப்பேட்டை காவல் துறை கண்காணிப்பளரின் செயல் இந்த வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் இருந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

இவற்றைப் படிக்கும் போது, சாதாரண வாசகர் கூட, எத்தனை பாரபட்சமாக உள்ளது என்பதனை அறிந்து கொள்வார். குறிப்பாக இந்து இயக்கங்களை விமர்சிப்பதாக உள்ள நோக்கம் என்ன? வைகோ ஏன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இவ்வாறு அறிக்கையினை விட வேண்டும்?

முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம்-முத்துப்பேட்டை

முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம்-முத்துப்பேட்டை

சமதர்மசெக்யூலரிஸ ஊடக செய்திகள் ஏன் இப்படி இருக்கவேண்டும்?: இந்த செய்திகளை உன்னிப்பாக படிக்கும் போது, பல கேள்விகள் எழுகின்றன:

  1. முத்துப்பேட்டையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?
  2. “தி ஹிந்து” என்று பெயரை வைத்துக் கொண்டு, முரண்பாடுகளுடன் ஏன் செய்திகளை வெளியிட வேண்டும்.
  3. “கும்பல்” எனும்போது, அதன் அடையாளத்தைக் குறிப்பிட்டுக் காட்டுவது தானே? “புத்தாண்டு கொண்டாடிய கும்பல்” என்றால் எது?
  4. “மர்ம நபர்கள்” என்று “நக்கீரனால்” குறிப்பிடப்பட்டவர்கள் யார்?
  5. புகார் கொடுக்கப்பட்ட, 65 பேர்களின் பெயர்களை, அடையாளங்களை வெளியிடுவது தானா?
  6. “புத்தாண்டை” எதிப்பது இந்துக்களா, முஸ்லிம்களா?
  7. தர்கா வழிப்பாட்டை எதிப்பது இந்துக்களா, முஸ்லிம்களா?
  8. உருவவழிபாட்டை குறைகூறுபவர்கள் யார்?
  9. உருவவழிபாட்டை அவதூறு பேசி, தர்கா வழிபாட்டை அதரிப்பது ஏன்?
  10. இதில் கிருத்துவர்கள் எப்படி வந்தனர்?
  11. இப்படி அடையாளங்களை மறைத்து செய்திகளை வெளியிடும் அவசியம் என்ன?

இவற்றிற்கு பதில் சொல்வதற்கு தயாரா?

© வேதபிரகாஷ்

03-01-2015

[1] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=135342

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-65%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6747824.ece

[3] தினமணி, முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல்: வைகோ கண்டனம், By dn, சென்னை, First Published : 04 January 2015 05:01 AM IST.

[4] “இந்துத்வ கும்பல்” என்று நக்கீரனில் உள்ளது – http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=135424

[5]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6751141.ece

[6] தி ஹிந்து, முத்துப்பேட்டை தர்கா தாக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம், Published: January 3, 2015 10:58 IST; Updated: January 3, 2015 10:58 IST

[7] தி ஹிந்து, முத்துப்பேட்டை தர்கா தாக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம், Published: January 3, 2015 10:58 IST; Updated: January 3, 2015 10:58 IST

[8]http://www.dinamani.com/tamilnadu/2015/01/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/article2602955.ece

[9] “இந்துத்வ கும்பல்” என்று நக்கீரனில் உள்ளது – http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=135424

[10]http://www.dinamani.com/tamilnadu/2015/01/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/article2602955.ece

457வது ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா கந்தூரி விழாவில் சந்தனகூடு தீப்பற்றி எரிந்து – அபசகனம் என்று முஸ்லிம்கள் தவிப்பு!

ஏப்ரல் 6, 2014

457வது ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா கந்தூரி விழாவில் சந்தனகூடு தீப்பற்றி எரிந்து – அபசகனம் என்று முஸ்லிம்கள் தவிப்பு!

 

சந்தனகூடு தீவிபத்து 2014

சந்தனகூடு தீவிபத்து 2014

சந்தனகூடு  தீப்பற்றி  எரிந்தது[1]: நாகைமாவட்டம்  நாகூர்  ஆண்டவர்  தர்கா  உலகபிரசித்தி  பெற்றது,   ஏனெனில்,  இங்கு   ஆண்டுதோறும்  சந்னக்கூடு  விழா  நடைபெறும்[2].   அதாவது  தேரோட்டம்  போன்று  முகமதியர்   “சந்தனக்கூடு”  என்ற  வடிவத்தைத்  தயாரித்து  அதனை  ரதம்  போன்று  விளக்கு  சகிதம்  அலங்காரங்களுடன்  தெருக்களில்  எடுத்துச்  சென்று,   தர்காவிற்குள்  கொண்டு  வைப்பார்கள்.   அமாவாசைக்கு  அடுத்தநாளிலிருந்து  பௌர்ணமி  வரை  14-நாட்கள்  விழாவில்  முஸ்லிம்கள் பலர்  கலந்து  கொள்வார்கள்.  உண்மையில்  அக்காலத்தில்  புத்தாண்டு  வருவதையொட்டி  கொண்டாடப்பட்டு  வந்தவிழாவை  அப்பகுதியில்  முஸ்லிம்கள்  தமதாக்கிக்  கொண்டார்கள்  போலும்.  முன்னும்,  பின்னும்  தெலுங்கு  மற்றும்  தமிழ்  புத்தாண்டுகள்  வருவதையும்  காணலாம்.   வேண்டிக்  கொண்டு,  திருப்பதி-திருமலை-பழனிப்  போன்று  இங்கு  வந்து  மொட்டையும்  அடித்துக்கொள்கிறார்கள்.  இதில்  பெரிய-பெரிய  அதிகாரிகள்,   மந்திரிகள்  முதலியோர்  அடங்குவர்.  இந்நிலையில்   04-04-2014 அன்று  சந்தனக்கூடு  கட்டும்போது,   எரிந்ததாக  தகவல்கள்  வெளியாகியுள்ளன. 

 

இது கோவில்-குளம் அமைப்பு கொண்ட நாகூர் தர்கா

இது கோவில்-குளம் அமைப்பு கொண்ட நாகூர் தர்கா

முஸ்லிம்  சமாதியின்  கதை: ஹஜரத்  சையது  ஷாஹுல்  ஹமீது  காதிர்  வாலி  [Hazrath Syed Shahul Hameed Quadir Wali] என்பருடைய  சமாதி  நாகூரில்  உள்ளது[3]. இவர்  முகமது  நபியின்  வழி   23வது  சந்ததியர்  என்று  கூறப்படுகிறது. அந்த  வாலி  இறந்த  தினத்தை  முஸ்லிம்கள்  இங்கு 14-நாள்   விழாவாகக்  கொண்டாடுகின்றனர்[4]. “ஷாஹூல்  ஹமீது  பாதுஷா  நாயகம்” தர்கா  453ம்  ஆண்டு  கந்தூரி  விழா, 01-04-2014 இரவு கொடியேற்றத்துடன்துவங்கும்.நாகை  மீராபள்ளிவாசலில், தர்காவின்  ஐந்துமினவராக்களிலும்  ஏற்றப்படும்  கொடிகள்  வைக்கப்பட்டு   ‘துவா’ ஓதப்படும். பின்னர்  அலங்கரிக்கப்பட்ட  பெரியரதம், சின்ன  ரதம்  மற்றும்  செட்டிப்  பல்லக்கு, கப்பல்கள்  போன்று  வடிவமைக்கப்பட்ட  இரண்டு  வாகனங்களில்,   மங்கள  வாத்தியங்கள்  முழங்க  கொடிகள்  ஏற்றிவைக்கப்பட்டு,   ஊர்வலமாக  நாகை, நாகூரின்  முக்கிய  வீதிகளில்  வலம்  வந்து  இரவு  நாகூர்  தர்கா  வந்தடையும்.   இவ்விதமாக   14 நாட்கள்  அமர்க்களமாக  விழா  கொண்டாடப்படும்[5]. ஆட்டம்,  பாட்டம்,  கொண்டாட்டம்  என்று  விழா  கொண்டாடுவது  சகஜமாகிவிட்டது. ஆஜ்மீர்  போன்ற  தர்காக்களிலும்  இவையெல்லாம்  நடக்கின்றன[6].

 

Inside Nagore Dargha pillars like Hindu temple

Inside Nagore Dargha pillars like Hindu temple

கோவிலா,  தர்காவா,  கப்பல் விழாவா?: இந்த  தர்காவின்  உட்புறம்  ஒரு  இந்துகோவிலைப்  போன்றே  உள்ளது.  உட்பகுதியும்,  உள்ள  தூண்களும், தெப்பக்குளமும்  கோவில்  என்று  காட்டுகிறது.   உயர்வாக  உள்ள  கட்டிடங்கள் / மினராக்கள்  கலங்கரை  விளக்கங்களாக  உபயோகப்படுத்தப்பட்டன.   இதைப்  போன்ற  அமைப்பு  சனீஸ்வரன்  கோவிலின்  வாசலிலும்  இருப்பதை  காணலாம். தர்காவில்  உள்ள   5 மினராக்களில்  பாய்மரம்  ஏற்றி  இப்பொழுது  கந்தூரிவிழா  கொண்டாடப்படுகிறது.   இப்பொழுது “பாத்திமா”   என்ற  யானையையும்  வைத்திருக்கிறார்கள்[7].   அமாவாசைக்கு  அடுத்தநாளில்  கொடியேற்றம்  நிகழ்ச்சிலிருந்து  பௌர்ணமி  வரை 14-நாட்கள்விழாவில்கொண்டாடப்படுகிறது. இதன்படி, இம்மாதத்தில், வருகிற 9–ந்தேதி (புதன்கிழமை) பீர்  வைக்குதல்  நிகழ்ச்சி  நடைபெறுகிறது. பின்னர்  விழாவின்  முக்கிய  நிகழ்ச்சியான  சந்தனக்கூடு  ஊர்வலம்  வருகிற   10–ந்தேதி  (வியாழக்கிழமை)  மாலை  தொடங்கி 11–ந்தேதி  காலை  சந்தனம்  பூசும்  நிகழ்ச்சி  நடைபெறும். இதை  தொடர்ந்து   12–ந்தேதி  (சனிக்கிழமை) பீர்  ஏகுதல்  நிகழ்ச்சி  நடைபெறுகிறது.   14–ந்தேதி  கொடியிறக்கம்  நடக்கிறது[8].

 

Hindu temple like dargha Nagore

Hindu temple like dargha Nagore

தர்கா-மசூதி  ஏற்படும்  விதம்  மற்றும்  அமையும்  தன்மை: இஸ்லாத்தைப்  பொறுத்தவரைக்கும்  ஆண்டவன்  இறுதிதீர்ப்புநாளில்  பிறந்த  அதே  உடலில்  உயிர்த்தெழச்  செய்வான்.   அதாவது,   தான்  செய்த  காரியங்களுக்கேற்ப  தண்டனை  அல்லது  பரிசு  பெற  தயாராக  இருப்பான்.   அதனால்  தான்  உடல்  எரிக்கப்படாமல்,   புதைக்கப்  படுகிறது. புதைத்தாலும், மக்கிவிடுமே, என்றாலும், உயிர்த்தெழும்  போது,   வேறொரு  உடலைத்  தருவதாக  நம்புகிறார்கள். இவ்வகையில்  அவுலியாக்கள்  மேம்பட்டவர்கள்  என்பதனால்,   அவர்கள்  புதைக்கப்பட்டாலும்,   ஜீவசமாதியில்  இருப்பது  போல, உயிரோடு   இருந்து  கொண்டு,   மக்களின்  குறைகளை  தீர்த்து  வைப்பதாக  முஸ்லீம்கள்  நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை  எழுந்து  ஆசீர்வாதித்தது, குரல்  எழும்பி  பதில்  சொன்னது, மூச்சு  சுவாசம்  பட்டு  வியாதி  மகுணமாகியது,   ஒளிவட்டம்  தோன்றியது  என்றெல்லாம்  சொல்லி  வருகின்றனர். இறந்த  பிறகும்  மறுபிறப்பு  உண்டு  என்பது,   ஒரு  காலத்தில்  உலகம்  முழுவதும்  பரவியிருந்த  வேதமதத்தின்  நம்பிக்கையாகும்.   இது  எல்லா  மதஞானிகளும்  ஏற்றுக்  கொண்டுள்ளார்கள். அதன்  படியே,   அவரவர்  புனிதநூல்களில்  அங்கங்கே  அத்தகைய  விவரங்கள்  உள்ளன  என்று  அறிஞர்கள்  எடுத்துக்  காட்டுகிறார்கள்.

 

Inside dargah Hindu temple like structure

Inside dargah Hindu temple like structure

தர்கா  வேறு, மசூதி  வேறு: உருவ  வழிபாடு  கூடாது  என்ற  நோக்கத்தினால், ஆசாரமான  முஸ்லீம்கள்,   இந்த  தர்கா  வழிபாட்டை  தடுக்க, மாற்ற,  அறவே  ஒழிக்க  முனைந்துள்ளார்கள். தர்காவை  இணைத்து  மசூதிகள்,  மதரஸாக்கள்,  மற்றவை  கட்டப்பட்டன.  பிறகு, தர்கா  வேறு, மசூதி  வேறு  என்றுகாட்ட,   இடையில்  சுவர்களும்  எழுப்பப்பட்டன. இப்படி  ஆசாரமான  முஸ்லீம்கள்  பலவித  முயற்ச்சிகள்  மேற்கொண்டாலும், தர்கா  வழிபாட்டை  ஒழிக்க  முடியவில்லை. இன்னும்  அதிகமாகித்தான்  வருகின்றது.   இந்தியாவில்,   இடைக்காலத்தில்,  பிணங்களைப்  புதைத்து இடங்களை  ஆக்கிரமித்தது  தான்  முகலாயர்களின் /  முகமதியர்களின்  வேலையாக  இருந்தது. கோவில்கள்,  மடங்கள்,  நதிக்கரை  புனிதஇடங்கள்  (கட் / காட்) முதலியவை  அவ்வாறு  ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு  இந்துக்களின்  கோவில்கள்  இடிக்கப்பட்டு, மசூதிகள்  கட்டப்பட்டன. தர்கா  வழிபாடே  ஹராம் /  இஸ்லாமிற்குப்  புரம்பானது  என்று  அத்தகைய  ஆசாரமான  முஸ்லீம்கள்  வாதிடுவது  உண்டு. பிறகு  எப்படி  இத்தகைய  நாடகங்கள்  அரங்கேற்றப்  படுகின்றன? மற்ற  விஷயங்களுக்கு  ஆர்பாட்டம்  செய்யும்  தமிழக  முஸ்லீம்கள்  மௌனிகளாக  இருக்கின்றார்கள். உண்மையில்  அவர்கள்  நாகூர், ஆஜ்மீர்  போன்ற  இடங்களுக்குச்  சென்று  போராட்டம்  நடத்தியிருக்க  வேண்டுமே,   ஆனால்  செய்ய  வில்லையே?

 

Sufi dance dailyfresher.com

Sufi dance dailyfresher.com

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில்  நடந்த  விழாவின்  போது  எடுக்கப்பட்டப்  புகைப்படங்களைப்  பார்க்கும்  போது, பெண்கள்  ஆடுவது, மேளதாளங்கள்  ஒலிப்பது, அவர்களை  சூழ்ந்துகொண்டு  முஸ்லீம்கள்  இருப்பது  முதலியகாட்சிகள்  தெரிகின்றன. வெளிப்புறம்  என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி,  நடனம்  என்ற  நிகழ்சிகள்  நடப்பது  புகைப்படங்கள்  ஊர்ஜிதம்  செய்கின்றன. இவற்றை  முஸ்லீம்கள்  எதிர்ப்பதாகத்  தெரியவில்லை.   இல்லையென்றால்,   அமைதியாக  அவை  காலங்காலமாக  நடந்து  கொண்டிருக்க  முடியாது. மேலும்,   பாகிஸ்தானிய  அரசியல்வாதிகள்,   பெரிய  செல்வந்தர்கள், புள்ளிகள்,   சினிமாக்காரர்கள், நடிகைகள்  என  அனைவரும்  இங்கு  வந்து  போகின்றனர். அதனை, அந்த  தர்கா   இணைத்தளமே  பெருமையாக  புகைப்படங்களை  வெளியிட்டு  வருகின்றன. நாகூரிலும் “நாச்” என்ற  பெண்களை   வைத்துக்கொண்டு  நடனம்  முதலியவை  நடந்து  வருகின்றன.

 

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

Jawahirullah getting blessing from Aadheenam, Mayildauthurai

தர்கா  வேறு  மசூதி  வேறு  என்றால், தர்காவில்  தொழுகை  ஏன்?: இறைவனைத்  தவிர  வேறு  ஒருவனையும்  வணங்கக்கூடாது  என்றால், இஸ்லாத்தில்  தர்கா  வழிபாடு  இருக்கக்கூடாது. எப்படி  உருவவழிபாடு  கூடாது  என்றாலும், அது  நிஜவாழ்க்கையில்  முடியாதோ,   அதாவது,   வெளிப்புறத்தில்  உருவத்தினால்  தான்எல்லாமே  அடையாளம்  காணப்படுகிறது. உருவம்,  சின்னம்,  அடையாளம்,  குறியீடு,  என  எதுவும்  இல்லை  என்றால், இவ்வுலகத்தில்  எதுவுமே  நடக்காது. அதனால்தான்  குரான்  புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை  நிறம்  முதலியன  இஸ்லாத்தில்  சின்னங்களாக  உபயோகப்  படுத்தப்பட்டு  வருகின்றன. அதனால்தான், முஸ்லீம்அரசியல்வாதிகள்இந்துகடவுளர்கள்இல்லைஎன்றுவாதிட்டாலும், தேர்தல்  மற்றும்  மற்ற  நேரங்களில்  கோவில்களை, மடாதிபதிகளைச்  சுற்றி  வருவார்கள்.

 

Ajmer Sharif Mannat

Ajmer Sharif Mannat

 

தர்கா  வழிபாடும், ஆசார  இஸ்லாமும், திராவிடமும்: அடிப்படைவாத  முஸ்லிம்கள்  இது  இஸ்லாத்திற்கு  விரோதமானது  என்று  பிரச்சாரம்  செய்து  வருகின்றனர்.   தர்கா வேறு,   மசூதி  வேறு  என்பதனை  எடுத்துக்  காட்டும்  விதமாக,   மேலே  எடுத்துக்  காட்டியுள்ளபடி  சில  இடங்களில்  குறுக்கே  சுவர்களை  எழுப்பி  பிரித்துக்  காட்டுகின்றனர். தர்கா  இருக்கும்  இடங்களில்  மசூதிகளைக்  கட்டிப்  பிரித்தும்  காட்டுகின்றனர்.   திராவிட  அரசியல்வாதிகள்  கடவுள்  இல்லை  என்றெல்லாம்  கூப்பாடு  போட்டு  வந்தாலும்,  காயதே  மில்லத்  இறந்தநாளை  தவறாமல்  ஞாபகத்தில்  வைத்துக்  கொண்டு  சமாதிக்கு  மலர்வளையம்   / பச்சை  துணி  வைத்து  மரியாதை  செய்து  கும்பிட்டுவிட்டு  செல்கின்றனர். இதில்  கருணாநிதி,   ஜெயலலிதா  போன்றொருக்கும்  போட்டித்  தான்.   முஸ்லிம்களும்  ஒரு  பக்கம்  இதெல்லாம்  இஸ்லாத்திற்கு  விரோதமானது  என்றெல்லாம்  சொல்லிக்  கொண்டாலும், அத்தகைய  கூத்துகள்  நடந்து  கொண்டிருக்கின்றன[9].

 

Qawwali  dance ajmeeri dargah

Qawwali dance ajmeeri dargah

2014ல் சந்தன கூடு எரிவது: நாகூர்  தர்காவில்  நடைபெறும்  கந்தூரி  விழாவுக்காக  தயார்  செய்யப்பட்ட  சந்தனக்கூடு  வெள்ளிக்கிழமை  அதிகாலை  தீப்பற்றி  எரிந்தது  பக்தர்களிடையே  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது[10]. இதனால்  இஸ்லாமியர்கள்  மத்தியில்  சோகமும், பதட்டமும்  ஏற்பட்டது[11].   நாகூர்  ஆண்டவர்  தர்கா  கந்தூரி  விழாவை  ஒட்டி  நாகப்பட்டினம்  நகரில்  இருந்து  அலங்கரிக்கப்பட்ட  கூட்டில்  வைத்து  சந்தனம்  ஊர்வலமாக  எடுத்துச்  செல்லப்  படுவது  வழக்கம்.  சந்தனம்  எடுத்துச்  செல்லும்  கூடு  நாகப்பட்டினம்  ஜமாத்தினரால்  செய்யப்படும். மூங்கில்களால்  கூடு  செய்து  அதற்கு  வண்ணம்  தீட்டி,   அதனை  வண்ணகாகிதங்கள், பூக்களைக்  கொண்டு  அலங்கரித்து  அதில்  சந்தனத்தை  வைத்து  எடுத்துச்  செல்வார்கள்[12].   கூடு  செய்யும்  வேலை  கடந்த  சில நாட்களாக  நாகப்பட்டினம்  அபிராமி  அம்மன் கோயில் திடல்  அருகே   ஒரு  கட்டிடத்தில்  நடைபெற்று  வந்தது.  ஐம்பது  சதவீத  பணிகள்  முடிவடைந்திருந்த  நிலையில்  வெள்ளிக்கிழமை (04-04-2014) அதிகாலையில்  அக்கூட்டின்  ஒருபகுதியில்  திடீரென  தீப்பற்றி  எரிந்தது.   அதனைக்  கண்ட  கூடுதயாரிக்கும்  பணியில்  ஈடுபட்டிருந்த  பாபுஜி (எ)   காதர்  நாகப்பட்டினம்  தீயணைப்புத்  துறைஅலுவலகத்துக்கும்  நாகப்பட்டினம்  ஜமாத்  தலைவரான  லாசா  மரைக்காயருக்கும்  தகவல்  தெரிவித்தார்[13].   தீயணைப்பு  அலுவலர்கள்  வந்து  தீயை  அணைத்தனர்.   ஆனாலும்  கூட்டின்  ஒருபக்கம்  பெருமளவு  எரிந்துவிட்டது.

 

Khushi dance at Ajmir Sharif Urs

Khushi dance at Ajmir Sharif Urs

“இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்”தின்  மீது  பொய்  வழக்கு  போடப்  பட்டுள்ளது[14]:   பொய்  வழக்கு  போட்ட  காவல்துறையைக்  கண்டித்து  இந்திய  தவ்ஹீத்  ஜமாத்  கண்டன  ஆர்ப்பாட்டம்  அறிவித்துள்ளது.   இது  குறித்து  அக்கட்சியின்  மாநில   செயலாளர்  முஹம்மது  ஷிப்லி  வெளியிட்டுள்ள  அறிக்கையில்:   “நாகூருக்கு  எடுத்துச்  செல்வதற்காக  நாகப்பட்டினத்தில்  வைக்கப்  பட்டிருந்த  சந்தனக்கூடு  கடந்த   4.4.2014   தேதி  இரவு  சமூகவிரோதிகள்  சிலரால்  தீவைத்து  கொளுத்தப்  பட்டிருக்கிறது.   இதனையடுத்து  சந்தனக்கூடு  வைத்த  தரப்பினரால்  காவல்துறையில்  புகார்  அளிக்கப்பட்டுள்ளது.   அந்தப்  புகாரில்  எவருடைய,   எந்த  இயக்கத்தின்  பெயரையும்  குறிப்பிடப்படாமல்  இருந்த  நிலையிலும்,   இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  மாவட்ட  மற்றும்  நகர  நிர்வாகிகள்  மீது  எந்த  அடிப்படையும்  இல்லாமல்  பொய்வழக்கு  போட்டுள்ளது  காவல்துறை.   சமூகவிரோதசெயலில்  யார்  ஈடுபட்டாலும்  அது  கண்டிக்கத்  தக்கது  என்பதில்  எவருக்கும்  மாற்று  கருத்து  இருக்க  முடியாது.   ஆனால்  எந்தவித  முகாந்திரமும்  இல்லாமல்,   புகார்  அளித்தவர்கள்  சந்தேகப்படும்  நபர்களின்  பெயரையோ  எந்த  அடையாளத்தையோ  புகாரில்  குறிப்பிடாத  நிலையில்  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  நிர்வாகிகள்  மீது  காவல்  துறை  பொய்வழக்கு  போட்டிருப்பது  வன்மையாக  கண்டிக்கத்  தக்கது.

 

 

“நாகை  பகுதிகளில்  சமூக  சீர்திருத்தப்  பணிகளையும்,  மனிதநேயப்  பணிகளையும்  முன்னெடுத்து  வருவதோடு  முஸ்லிம்களுக்கு  மத்தியில்  புரையோடிப்போயிருக்கும்  இஸ்லாத்திற்கு  முரணான  செயல்களையும்  கண்டித்து  விழிப்புணர்வு  பிரசாரங்களை  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  நிர்வாகிகள்  செய்து  வருகின்றனர்.   இந்தப்பணிகளை  முடக்க  நினைக்கும்  சக்திகளின்  தூண்டுதல்  காரணமாகவே  இந்த  பொய்வழக்கை  போட்டிருக்கிறது  காவல்துறை.

 

“இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்  ஜனநாயகதின்  மீதும்  அறவழி  போராட்டங்களின்  மீதும்  நம்பிக்கை  கொண்ட  அமைப்பு.  இந்த  அமைப்பின்  தொண்டர்கள்  பொது  அமைதிக்கு  பங்கம்  நேரும்  எந்த  செயலிலும்  ஈடுபடமாட்டார்கள்  என்பது  தமிழக  அரசுக்கும்  காவல்  துறைக்கும்  நன்கு  தெரியும்.   அப்படியிருந்தும்  நாகை  காவல்துறை  உள்நோக்கம்  கொண்டயாரோ  சிலரின்  தூண்டுதலின்  பேரில்  இந்த  பொய்  வழக்கை  போட்டிருக்கிறது.

 

“எனவே, உண்மை  குற்றவாளிகளை  காவல்துறை  அடையாளம்  காணவேண்டும்.   அதோடு,  சம்பவத்திற்கு  சற்றும்  தொடர்பில்லாத  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  நிர்வாகிகள்  மீது  போடப்பட்ட  பொய்வழக்குகளை  உடனடியாக  திரும்ப  பெறவேண்டும்  நாகை  மாவட்ட  காவல்  துறையின்  நியாயமற்ற  இந்தசெயலை  கண்டித்து   (இறைவன்  நாடினால்) எதிர்வரும் 10.4.14 அன்றுமாலை 4 மணியளவில்  நாகூரில்  மாபெரும்  கண்டன  ஆர்ப்பாட்டத்தை   நடத்த  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்  தீர்மானித்திருக்கிறது.”  இவ்வாறு  அந்த அறிக்கையில்  கூறப்  பட்டுள்ளது[15].

 

பாய்மரம் கட்டுவது முதலிய பழைய விழாவைக் காட்டுகிறது

பாய்மரம் கட்டுவது முதலிய பழைய விழாவைக் காட்டுகிறது

சந்தனக்கூடு  வைத்த  தரப்பினரால்  காவல்  துறையில்  புகார்  அளிக்கப்  பட்டுள்ளது: நாகை  ஜமாஅத்  தலைவர்  லாசா  மரைக்காயர்  கொடுத்த  புகாரின்  பேரில்  நாகப்பட்டினம்  நகரகாவல்  நிலைய  போலீஸார்  வழக்குப்பதிந்து  நாசவேலையா, மின்கசிவா விசாரணை  நடத்தி  வருகின்றனர்.   இந்நிலையில்   தீவிபத்து  நடந்த  இடத்தை  நாகூர்  தர்கா  டிரஸ்ட்  ஷேக்  ஹசன்  சாஹிப்,   நாகூர்  டவுன்  ஆலோசனை குழுதலைவர்  சையது  முகமது  கலிபா  சாஹிப் மற்றும்  நிர்வாகிகள்  நேரில்  பார்வையிட்டனர்.   பின்னர்  சையது  முகமது  கலிபா  சஹிப்,   “நாகூர்  ஆண்டவர்  தர்கா  பெரிய  கந்தூரி  விழாவிற்கு  கடந்த  ஆண்டைவிட  அதிக  அளவில்  இஸ்லாமியர்களும், சுற்றுலா  பயணிகளும்  வரவிருப்பதால்,   அனைத்து  வசதிகளும்  சிறப்பாக  செய்யப்  பட்டுள்ளன. இதைப்  பொறுக்காத  சில  மர்ம  நபர்கள்  இந்த  நாசவேலையைச்  செய்துள்ளனர்[16].   இதை  நாங்கள்  வன்மையானக்  கண்டிக்கிறோம். தன்  கைகளால்  தனது  கண்ணை  மறைக்க  முடியுமே  தவிர,   சூரியனை  மறைக்க  முடியாது.   அது  போல  யார்  என்ன  முயற்சி  செய்தாலும்  நாகூர்  ஆண்டவரின்  தொடர்ந்த  படிதான்  இருக்கும்”, என்று  உறுதியாகக்  கூறினார்[17].

 

Inside Nagore Dargha pillars, lamps etc

Inside Nagore Dargha pillars, lamps etc

புகார்  கொடுத்ததும்,   சந்தேகங்களும்: சந்தனக்கூடு  திடீரென்று  எரிந்ததால்,   இது  குறித்து  லாசா  மரைக்காயர்  கொடுத்த  புகாரின்  பேரில்  நாகப்பட்டினம்  நகரகாவல்  நிலைய  போலீஸார்  வழக்குப்  பதிந்து  நாசவேலையா,   மின்கசிவா என்று அறிய விசாரணை  நடத்தி  வருகின்றனர்[18]. “நாகூர்  தர்கா  விழாவில்  மர்மமான  தீ” என்று  ஒரு  ஆங்கில  இணைதளம்  விவரிக்கின்றது[19]. இதனால், அப்பகுதியில்  பதட்டம்  நிலவுகிறது[20].   அதாவது  முஸ்லிம்களே  முஸ்லிம்களின்  மீது  புகார்  கொடுத்துள்ளனர்.   இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்  என்ற  இயக்கம்  வேண்டுமென்றே  தமது  நிர்வாகிகள்  மீது  காவல்துறை  பொய்வழக்கு  போட்டிருக்கிறது  என்று  மேற்கூறியப்படி  கண்டனம்  தெரிவித்துள்ளனர்.   பெண்களோ  இதனை கெட்டசகுனமாக  கருதி  கவலையுடன்  இருக்கின்றார்கள்.   இதற்கு  பரிகாரம்  எதாவது  செய்ய  வேண்டும்  என்றும்  தீவிரவாதமாக  யோசித்து  வருகின்றனர்.

 

© வேதபிரகாஷ்

06-04-2014

 

[1]திஇந்து, சந்தனகூடுதீப்பற்றிஎரிந்தது, சென்னை, 06-04-2014

[2]தினகரன், நாகூரில்கந்தூரிவிழாசந்தனக்கூடுதீபிடித்துநாசம், சென்னை, 06-04-2014

[3] http://www.business-standard.com/article/pti-stories/holy-car-partially-burnt-in-mysterious-fire-114040400583_1.html

[4]Tension prevailed for almost whole day today at the famous Dargah at Nagore near here, after a mystery fire accident which partially burnt the Sandanakoodu (holy car decorated with sandal paste).According to official sources the Sandanakoodu made out of bamboo sticks with sandal paste on it and is taken out in a procession is as part of the 14-day annual Kandoori festival, incidentally which is under way currently. The Dargah of Saint Hazrath Syed Shahul Hameed Quadir Wali at Nagore is more than 500 years old. It has a golden dome, flanked by five minarets. Saint Hazrath Syed Shahul Hameed is known to be the 23rd descendant of Prophet Muhammad (Sal).The death anniversary of this Saint is celebrated as ‘Kandoori Festival’ every year for 14 days. The 457th annual festival commenced with hoisting of the holy flag on Tuesday last 01-04-2014.

[5]https://islamindia.wordpress.com/2010/05/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/

[6] https://islamindia.wordpress.com/2013/03/10/how-music-dance-entertained-inside-before-mosques-dargahs/

[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nagore-dargah-elephant-joins-camp/article5485906.ece

[8] http://www.dailythanthi.com/2014-03-30-khanduri-festival-minarakkal-mounted-on-the-mast-nagai-news

[9] https://islamindia.wordpress.com/2010/06/06/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

[10] http://timesofindia.indiatimes.com/city/trichy/Fire-damages-festival-chariot-under-construction/articleshow/33252952.cms

[11] http://muthupetnews.com/irrespective-b-c-khanduri-ready-to-function-cantanakkutu-burnt-sensation/

[12] http://www.maalaimalar.com/2014/04/04121947/Nagore-Dargah-fire-accident.html

[13]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article5875440.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication

[14] http://www.inneram.com/news/tamilnadu/5735-intj-protest-announcement.html

[15] http://www.inneram.com/news/tamilnadu/5735-intj-protest-announcement.html

[16]  இந்நிலையில்நேற்றுஇரவுமர்மநபர்கள்சந்தனக்கூட்டிற்குதீவைத்தனர். இதனால்சந்தனக்கூடுசேதமடைந்துள்ளது. இச்சம்பவம்நாகையில்பதற்றத்தைஏற்படுத்திஉள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=119324

[17] http://muthupetnews.com/irrespective-b-c-khanduri-ready-to-function-cantanakkutu-burnt-sensation/

[18] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=86352

[19] webindia123, Mysterious fire at dargah during ‘Kandoori festival’ at Nagore, 04-04-2014.

[20] http://news.webindia123.com/news/Articles/India/20140405/2370117.html

 

கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்?

ஓகஸ்ட் 4, 2013

கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்? AIADMK Iftar காபிர்கள் அதிலும் நாத்திகர்கள் அதிலும் இந்துவிரோதிகள் நடத்தும் இப்தார் பார்ட்டிகள்: அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது[1]:– “இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கி வரும் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதல்அமைச்சர் ஜெயலலிதா, இஸ்லாமியப் பெருமக்களை கெளரவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்[2]. அதே போல் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், முதல்அமைச்சர் ஜெயலலிதா, வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) மாலை சென்னை, லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள் [அறிஞர்கள்[3]], தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், .தி.மு.. மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[4]. இது ஜூலை 27ம் தேதி நடப்பதாக இருந்து ஏற்காடு எம்.எல்.ஏ பெருமாள் இறந்ததால் தள்ளிவைக்கப்பட்டது[5]. Dravidian Iftar or Iftar with Atheits முஸ்லிம்களே மாறி-மாறி போட்டிப் போட்டுக் கொண்டு நடத்தும் பார்ட்டிகள்: ஓட்டல் இம்பீரியல் (எழும்பூர்) ஹாலில் திமுகவிற்கு மற்றும் அதிமுகவிற்கு என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தனித்தனியாக பார்டி நடத்தியது. போதாகுறைக்கு பிரிந்த கோஷ்டிகள் ஓன்றுக்கொன்று வசைமாறி பொழிந்து கொண்டன. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [the Indian Union Muslim League] சென்ற வாரம் திமுகவினருக்கு பார்ட்டி நடத்தியது. இப்பொழுது (ஆகஸ்ட் 2), பாத்திமா முஸாபர் அதிமுகவினருக்கு நடத்தியுள்ளார். வளர்மதி, எஸ். அப்துல் ரஹீம் முதலியோர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் தான் இரண்டு பார்ட்டிகளும் நடந்துள்ளன. “அவர்கள் வந்தார்கள், உட்கார்ந்தார்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசினார்கள். ஆனால், அவர்கள் தாம் கட்சி உடைய காரணமாக இருந்தார்கள்”, என்று பாத்திமா முஸாபர் திமுகவை விமர்சித்தார்[6]. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பாரதத்தை இரண்டாகப் பிரித்த மதவாத கட்சி, ஆனால், திராவிட கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. ரம்ஜான் வரும் போது, குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கின்றன. இருநிலைகளிலும், முஸ்லிம்கள் நாத்திக திராவிட கட்சிகள் இந்துக்களை ஏமாற்றி வருகின்றன. Dravidian Iftar or Iftar with Atheits.2 மூன்றுபேரிச்சம்பழங்களும், முன்னூறுதின்பண்டங்களும்: “இப்தார்” என்றால் ரமதான் / ரம்ஜான் மாதத்தில் உபவாசத்தை, உண்ணாநோன்பை முடித்துக் கொள்வது, அதாவது சூரியன் உதிக்கும் முதல் மாலை வரை உண்ணாமல் இருக்கும் முஸ்லிம்கள் பிறகு உண்பார்கள்.  பொதுவாக “மக்ரிப்” நேரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள் மொத்தமாக அல்லது குழுக்களாக சேர்ந்துண்டு அவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொள்வார்கள். முஹம்மது நபி மூன்று பேரிச்சம் பழங்களை உண்டு தனதுஅவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொண்டார். ஆனால், இன்று பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் பலவிதமாக உண்டு விழா நடத்துகிறார்கள். போதாகுறைக்கு இந்தியாவில், கட்சிக்கு ஒரு பார்ட்டி நடத்துகிறார்கள். “நன்றாக / விதவிதமாக சாப்பிடலாம்” என்று இதற்காக ஒரு கூட்டமே வருகிறது. Hosni Mubarak, Benjamin Netanyahu, Barrack Obama and others checking their watches for sunsetதீவிரவாதத்திற்கு எதிராக போரை நடத்தி வரும் ஒபாமாவே இத்தகைய பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார். BJP Shahnawaz Hussain, Ravi Shankar Prasad, Sushil Kumar Modi at an Iftar party in Patnaமுஸ்லிம்களின் விரோதி என்று சொல்லப்படும் பிஜேபியே இப்தார் பார்டி நடத்தி வருகிறது, அதில் முஸ்லிம்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். Iftar menu இப்தார் பார்ட்டிகள் பெரிய வியாபாரமாகி விட்டது: ரோஸா இப்தார், ரமதான் இப்தார், இப்தார் கரீம், இப்தார் பார்டி என்று குறிப்பிடும் இதற்கு அழைப்பிதழ்களும் கொடுக்கப்படுகின்றன. பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன.Iftaar_party_invitation_card_by_Raza786 இந்தியா முழுவதிலும், அரசு சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கு கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன. தவிர கட்சிகள் சார்பில், முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கும் கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன. sponsor-an-iftar-E-Flyerஇதற்காக “ஸ்பான்சர்சிப்” அதாவது ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியும் அழைப்பிதழ்கள் அனுப்பப் படுகின்றன. இவ்வாறு, இது ஒரு பெரிய வியாபாரமாகி விட்டது. ஓட்டல்களில் “இப்தார் மெனு” என்று போட்டு வியாபாரம் செய்கின்றனர். ?????????????????????? 2013-2014 ஆண்டுகளில்இம்மாதிரியானதமாஷாக்கள்அதிகமாகவேஇருக்கும்: தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்தார் பார்ட்டிகள் நடத்துகின்றன[7]. அடுத்த வருடம் தேர்தல் என்றால், இப்பார்டிகள் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.  காபிர்-மோமின் கூட்டணிகள் ஜோராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கும். இதில் திராவிடப் போராளிகளான கருணாநிதி, அன்பழகன் போன்றோர் குல்லாபோட்டும், கழற்றி வைத்தும் கஞ்சி குடிப்பர். “உள்ளம் கவர் திருடர்கள்” தாமே, குல்லாப் போட்டவர்கள், போடுகிறவர்கள் பொறுத்துத்தான் போவார்கள். வேதபிரகாஷ் © 04-08-2013


[3] தினமணியில் “அறிஞர்கள்” என்றும், மாலைமலரில் “பெருமக்கள்” என்றும் உள்ளது.
[5] Iftar party Chief minister and AIADMK supremo J Jayalalithaa has called off her Iftar party on July 27, following the sudden demise of Yercaud  MLA Perumal. http://timesofindia.indiatimes.com/Iftar-party/speednewsbytopic/keyid-50082.cms
[6] “They came and sat here, and their leader gave a speech appealing for unity among Muslims. That was ironic, for they were the very people who caused the split in our party,” said Fathima, lashing out at the DMK. She had to start a splinter group of the IUML after being sidelined for addressing a press conference ahead of the 2011 Assembly polls, where she had hit out at both her party organisation for making compromises and the DMK for taking the IUML for granted. http://newindianexpress.com/cities/chennai/IUML-group-hosts-Iftar-for-AIADMK-ministers/2013/08/03/article1715558.ece