Archive for the ‘கேரள முஸ்லீம் சேவை சங்கம்’ category

கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!

ஜூலை 16, 2016

கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!

Kerala Isis nexus- confirmed

முதலமைச்சர் ஒப்புக் கொண்டார்: சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்[1], “காசர்கோடில் இருந்து 17 பேரும், பாலக்காட்டில் இருந்து 4 பேரும் மாயமாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமானவர்களில் காசர்கோட்டில் இருந்து 4 பெண்கள், 3 குழந்தைகளும், பாலக்காட்டில் இருந்து 2 பெண்களும் அடங்குவர். பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்தார். ஊடகங்களில் வெளியான தகவலின்படி இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த காசர்கோடு பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவர் அண்மையில் கைதாகியுள்ளார். 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[2].

Kerala Isis nexus- confirmed- youth after conversionஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது: கேரள இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பான விவகாரத்தை அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது[3]. மத்திய அரசின் ஆதரவுடன் இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு தீவிரவாத நடவடிக்கையையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தை பெரிது படுத்தவும் அனுமதிக்க மாட்டோம். இப்பிரச்சினையால் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். கேரளாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எந்தவொரு தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்க மாட்டார்கள். வெறும் அரசால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றாக கைகோர்த்தால் மட்டுமே தீய சக்திகளை தனிமைப்படுத்தி களையெடுக்க முடியும்”, என்று சட்டசபையில் பேசியுள்ளார்[4]. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரையில், இது அவர்களே வளர்த்து விட்ட விவகாரம் ஆகும். அரசியல் மற்றும் இதர சம்பந்தங்களை தாராளமாக வைத்துக் கொண்டு அனுபவித்து வருகின்றனர்.

Kerala jouranalist joins ISISஜிஹாதிகள் பெற்றோர்களையும், ஏன் குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க முயற்சிப்பது: கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்களில் 4 பெண்களும் 2 குழந்தைகளும் உண்டு. இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இதன்பிறகு கடந்த ஒரு மாதமாகியும் இவர்களை பற்றிய எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் காணாமல் போன ஹபீசுதீன் என்பவரின் மனைவி செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அந்த செய்தியில், “நாங்கள் சொர்க்க ராஜ்ஜியத்திற்கு வந்து விட்டோம். இனி எங்களை தேட வேண்டாம். நாங்கள் இஸ்லாமிய நாட்டிற்கு வந்து விட்டோம். இங்கு நிரபராதிகளை அமெரிக்கா கொன்று குவிக்கிறது. எனவே அவர்களை பழிவாங்குவதற்காக ஐஎஸ் அமைப்புக்காக நாங்கள் எங்களை அர்ப்பணித்து விட்டோம். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி புரிய வைக்க வேண்டும். அவர்களையும் ஐஎஸ் அமைப்பிற்கு அழைத்து கொண்டு வரவேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டிருந்தது[5].  அதாவது, குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க திட்டம் இருப்பது வெளிப்படுகிறது. மேலும், இது கேரளாவிலிருந்து தீவிரவாதிகளாக்க ஏற்றுமதி நடக்கிறது எனலாம். முன்பு கன்னியாஸ்த்ரிக்கள், நர்ஸுகள் மாதிரி, இப்பொழுது இவர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்.

Kerala Isis nexusதீவிரவாதியின் தகவல் படித்து திகைத்துப் போன மனைவி: இதை பார்த்து ஹபீசுதீனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காசர்கோடு எம்பி கருணாகரன், எம்எல்ஏ ராஜகோபாலன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக விசாரணை நடத்த கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூரை சேர்ந்த டாக்டர் இஜாஸ் என்பவர் தலைமையில் 16 பேரும் சிரியாவுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது[6]. காசர்கோடில் உள்ள அப்துல் ரஸீத் (29) அப்துல்லா [Abdul Rasheed]  என்பவன் அப்துல்லாவின் மகன் [Abdulla] இவர்களை இவ்வழிக்கு இழுத்துள்ளான் என்று தெரிகிறது[7]. இவன் பெங்களுரில் இஞ்சினியரிங் படித்து மும்பைக்கு வியாபாரம் நிமித்தம் சென்று வருகிறான்[8]. ஈஸா மற்றும் யாஹியாவின் தந்தை வின்சென்ட், தன்னுடைய மகள்கள் ஜாகிர் நாயக்கின் பிரச்சாரத்தால் கவரப்பட்டார்கள் என்கிறார்[9].

Kerala, Kashmir becoming hub of ISISதமிழகத்தின் மீதான தாக்கம்: கேரளாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள், தமிழக எல்லையில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தமிழகத்தில் இருந்து யாரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படுபவர்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியைச் சேர்ந்த பிடிஎஸ் மாணவி நிமிஷா என்ற பாத்திமாவும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. இவரது தாய் பிந்து. தனது மகளும் ஐஎஸ்சில் சேர்ந்ததாக நேற்று பத்திரிகைகளில் தகவல் வந்த பிறகுதான் அவருக்கு இது தெரியவந்துள்ளது. இதுபோல் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணும் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமாணவிகளை குறிவைத்து காதலித்து திருமணம் செய்வதோடு அவர்களை ஐ.எஸ் அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.

Missing Keralites links with ISIS confirmed - Kaumudi onlineமத்திய அரசின் விசாரணை: இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறையான ரா அதிகாரிகள் கேரளா வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர்கள் காசர்கோட்டிலும் மங்களூரிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினரால் “ஐஎஸ்சில் சேர்ந்தவர்கள்”, அவர்களது உறவினர்கள் முதலியோரது தொலைபேசி-அலைபேசி விவரங்கள் ஆராயப்படுகின்றன[10]. இதன் மூலம், இறுதியாக அவர்கள் எங்கிருந்து யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்று தெரிய வரும்[11].

© வேதபிரகாஷ்

16-07-2016

[1] http://tamil.oneindia.com/news/india/21-missing-from-kerala-may-be-is-camps-cm-257874.html

[2] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.

[3] தி.இந்து, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த விவகாரம்: கேரள மாநிலத்தில் இருந்து 6 பெண்கள் உட்பட 21 பேர் மாயம் – சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தகவல், Published: July 12, 2016 09:49 ISTUpdated: July 12, 2016 10:02 IST.

[4] http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%86

[5] தினகரன், ஐஎஸ் தீவிரவாதிகளான கேரள வாலிபர்கள்: தமிழகத்தில் உளவுத்துறை உஷார், Date: 2016-07-10@ 00:16:56

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=230018

[7] Reports said that a person called Abdul Rasheed Abdulla is suspected to have led the youths on to the terror path.

http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/kerala-jihadi-threat-missing-youths-story-in-points.html

[8] http://www.kaumudi.com/innerpage1.php?newsid=80207

[9] Father of Eesa and Yahiya, Vincent, alleged that his sons were influenced by Islamic preacher Zakir Naik

http://english.manoramaonline.com/news/just-in/people-missing-kasaragod-kerala-police-isis-islamic-state.html

[10] english.manoramaonline, ISIS links: Kerala police analyzing phone records, Thursday 14 July 2016 10:58 AM IST, byOur Correspondent

[11] http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/isis-links-kerala-missing-youth-police-tracking-phone-records.html

கேரள ஐஎஸ் தொடர்புகள், 1970ல் மேற்கொண்ட கம்யூனிஸ்டுகளின் மலபுரம் பரிசோதனை 2016ல் இவ்வாறான நிலையில் உள்ளது!

ஜூலை 16, 2016

கேரள ஐஎஸ் தொடர்புகள், 1970ல் மேற்கொண்ட கம்யூனிஸ்டுகளின் மலபுரம் பரிசோதனை 2016ல் இவ்வாறான நிலையில் உள்ளது!

Sanheetha Nataka Academy kerala oppose hanging of afsal guru

ஜிஹாதி இஸ்லாத்தை நோக்கி, கேரள முஸ்லிம்கள் செல்வது: மலையாள முஸ்லிம்கள் இந்தியாவுக்கு எதிராக போராடுவது ஒன்றும் புதியதல்ல. 2008ல், காஷ்மீரில் ராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டையில் இறந்தவர்களைப் பற்றி ஆராய்ந்ததில், அவர்கள் கேரளாவிலிருந்து வந்தது தெரிய வந்தது.  9/11 மற்றும் 26/11 ஜிஹாதி-தீவிரவாதி டேவிட் கோல்மென் ஹெட்மேன் மூணாறில் உள்ள டாடாவின் விருந்தினர் மாளிகையில் வந்து தங்கியிருந்து, நோட்டம் விட்டிருக்கிறான். 1990களிலிருந்தே கேரளாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதத்துடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்து விட்டது[1]. அதாவது, உள்ளூர் முஸ்லிம்கள் ஆதரவு இல்லாமல், இக்காரியங்கள் எல்லாம் நடக்காது என்பதனை இவ்விவகாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஷரீயத் சட்டம் அமூல் படுத்தப் படவேண்டும், இஸ்லாமிய அரசு ஏற்படுத்தப் படவேண்டும் என்பதெல்லாம் அதன் திட்டமாகும்[2]. அப்பொழுது தான் தூய்மையான, உண்மையான இஸ்லாத்தை அடைய முடியும், அதற்கு முகமது நபி இருந்து, வழிநடத்திய பூமிக்குச் சென்றால் தான் தமக்கு அவரது அருள் கிடைக்கும், தானும் சிறந்த ஜிஹாதியாக மாற முடியும், பொராட முடியும் என்றேல்லாம் இளைஞர்கள் மூளை சலவை செய்யப்படுகிறார்கள். இதனால், அவர்கள், எளிதில் நம்பி அங்கு செல்ல தயாராகி விடுகிறார்கள்.  இஸ்லாமிய வங்கிகளும் திறந்து வைக்கப் பட்டுள்ளன.

Communist IUML nexus Keralaகம்யூனிஸத்தில் இஸ்லாம் பரிசோதனை, அவர்களையே தாக்குகிறது!: கம்யூனிஸ்டின் “மலப்புரம்” பரிசோதனை 1970ல் ஆரம்பித்தது, 2016ல், மறுபடியும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இப்பிரச்சினை, அனைத்துலக விசயமாகி விட்டது. சென்ற வருடம் 2015 – மலபுரத்தில், ஐஎஸ் தொடர்பு கொண்ட 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்[3]. துபாயில் இன்டெர்போல் மூலம் கண்காணிக்கப்பட்ட அவன் 29-08-2015 அன்று கைதானான்[4]. அரபு நாடுகளிலிருந்து வரும் பணத்திலிருந்து மதரஸாக்களை அமைத்து, அவற்றின் மூலம், சலாபி / வஹாபி போன்ற தீவிர இஸ்லாமிஸம் போதிக்கப்படுவதால், அவர்கள் எளிதில் ஜிஹாதிகளாக மாற துணிந்து விடுகிறார்கள். திருமணம் என்பதை மதமாற்றத்திற்கு பயன்படுத்தப் படுகிறது என்பதை கேரள அரசு மறுத்து-மறைத்து வருகிறது. இப்பொழுது அதில் கிருத்துவர்களும் சிக்கியுள்ளார்கள் என்பது தெரிந்த நிலையில், விசயத்தை அமுக்கி வாசிக்கப் பார்க்கிறது[5]. “மெரின்”லிருந்து “மரியம்” என்று மலையாள மனோரமா விவரங்களை வெளியிட்டது[6]. ஏற்கெனவே லவ்-ஜிஹாத் என்று குற்றஞ்சாட்டப்படுவதால், அதனை பூசிமெழுகப்பார்க்கிறது. ஆனால், சமீபத்தைய, ஐஎஸ் ஆள்-சேர்ப்பு நடவடிக்கைகள் அவற்றை வெளிப்படுத்தி விட்டன. 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[7].

ISIS recruit on Facebookதிடீரென்று பெற்றோர்கள் கவலைப்படுவது: தமிழகத்தில் திருப்பூர் நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 15 இளைஞர்கள் மாயமாகி உள்ளனர். இவர்கள் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இது தொடர்பாக இளைஞர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்க கூடும் என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது[8]. இதனால் மாயமான இளைஞர்கள் குறித்து உடனடியாக விசாரிக்க போலீசாருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்[9]. அம்மாநிலத்தில் இருந்து இதுவரை 21 பேர் மாநிலத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் அறிவித்துள்ளார். அவர்களில் 6 பேர் பெண்கள் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சியாகும்.

iuml - back with Islamic flagதிருப்பூரில் பிடிபட்ட இரு முஸ்லிம் இளைஞர்கள் (14-07-2016): மாயமான அனைவரும் கேரளாவின் தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன முஹமது (மலபுழம்) மற்றும் ஷப்பீர் (பாலக்காடு) திருப்பூரில், ஒரு பின்னாலடை தொழிற்சாலையில் வேலைசெய்வது தெரிய வந்துள்ளது[10]. முன்பு மேற்கு வங்காளத்திலிருந்து வந்த ஐஎஸ் தீவிரவாதி திருப்பூரில் தங்கியிருந்தபோது தான் கைது செய்யப்பட்டான். 14-07-2016 அன்று அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கேரளாவுக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர்[11]. ஆனால், கோயம்புத்தூர் வழியாக கேரள முஸ்லிம்கள் இப்படி தாராளமாக வந்து செல்வதும், அவர்கள் குற்றங்கள் மற்றும் தீவிரவாத தொடர்புகள் உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது திருப்பூரில் அவர்களுக்கு ஆதரவாக ஒரு குழுவுள்ளது தெரிய வருகிறது.

PFI army to fight against India11-07-2016 அன்று கேரள சட்டசபை விவாதத்தில் ஐஎஸ் விவகாரம் வெளிவந்தது: கேரளாவில் 11-07-2016 அன்று சட்டசபை கூடியதும் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பினார். ‘‘கேரள இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் பெரும் பீதியை ஏற்படுத்துகின்றன. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான பதிலோ, விளக்கமோ அளிக்கப்படவில்லை. நிலைமையை சமாளிக்க பொது மக்களின் உதவியை முதல்வர் நாட வேண்டும். கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்[12]. பாஜக எம்எல்ஏ ஒ.ராஜகோபால், முதல்வரின் சொந்த தொகுதியில் வசித்து வந்த பல் மருத்துவ படிப்பு மாணவியும் மாயமாகியுள்ளார். அவர் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு பாலக்காட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், அம்மாவட்டத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்களில் அவரும் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

© வேதபிரகாஷ்

16-07-2016

[1] In 2008, five Malayali Muslim youth went all the way to Kashmir to fight alongside the separatists and four of them were shot dead by Indian forces. If it’s Kashmir in 2008, it’s only natural that it’s IS in 2016 because Islamism has been growing in the state since the 1990s. The common ideal is international Islam, as against the state’s age-old local Islam, and the allegiance is to what’s purported to be the purest form and practice — something that the Islamists believe belong to the Prophet’s land and the Prophetic era. It’s part of their blind trust in global kinship, an exclusive transnational state of radical Islam and the rein of Sharia law.

http://www.firstpost.com/india/kerala-should-be-worried-about-its-missing-youths-and-possible-islamic-state-links-2884596.html

[2] The First Post, Kerala should be worried about its missing youths and possible Islamic State links, G Pramod Kumar,  July 10, 2016 14:49 IST

[3] http://www.marunadanmalayali.com/news/exclusive/isis-recruitment-from-malappuram-21553

[4] MALAPPURAM:  Intelligence sleuths have taken into custody a 23 –year-old youth hailing from Pattarnakkavu, over his alleged ISIS links. The person was arrested jointly by IB and Karipur Emigration department as soon as he deplaned at Karipur airport. He, who was living in Dubai, had been under the observation of Abu Dhabi Interpol. And, his arrest was carried out as he arrived at the airport on August 29, 2015. The person had gone abroad five years ago and did his studies there, according to sources. He is also known to have travelled to several foreign countries.

http://kaumudiglobal.com/innerpage1.php?newsid=68525

[5] http://www.firstpost.com/india/kerala-should-be-worried-about-its-missing-youths-and-possible-islamic-state-links-2884596.html

[6] FROM MERIN TO MARIAM, FROM COCHIN TO SYRIA-Merin, who hails from a Christian family in Cochin, went to Mumbai after finishing her studies in Cochin. Her mother Mini told Manorama that she was influenced by her long-time classmate Yahiya, his brother Eeza and his wife Fathima, and converted to Islam. Merin who christened herself Mariam, later married Yahiya. Mini also said that the couple informed her about travelling to Sri Lanka for some prayers and that she had tried to stop her daughter.

India Today, ISIS recruits from Kerala: 11 out of 22 missing Keralites suspected to be in Syria, Posted by Vivek Surendran, New Delhi, July 11, 2016 | UPDATED 18:02 IST.

[7] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.

http://indiatoday.intoday.in/story/isis-kerala-recruitment-syria-kasargod-pinarayi-vijayan/1/712168.html

[8] தினமலர், ஐஎஸ்.,ல் சேர்ந்தார்களா கேரள இளைஞர்கள்?, பதிவு செய்த நாள். ஜூலை9, 2016: 11.59.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1560666

[10] Onmanorama Staff, 2 missing Kerala youths traced in Tamil Nadu. No, they didn’t leave to join ISIS, Friday 15 July 2016 02:17 AM IST.

[11] http://english.manoramaonline.com/news/just-in/kerala-palakkad-youths-isis-suspect-traced-tamil-nadu.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, கேரளாவில் இருந்து 21 பேர் மாயம்உறுதிப்படுத்தினார் பினராயி.. ஐஎஸ்ஸில் சேர்ந்திருக்கலாம் என சந்தேகம், By: Mayura Akilan, Published: Tuesday, July 12, 2016, 11:23 [IST]

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் !

ஓகஸ்ட் 23, 2010

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிட்டு மதானையைப் பிடித்துக் கொண்டன தமுமுக: தமுமுகவினர் முன்பு காஷ்மீர் பிரச்சினைக்கு, சென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர். இப்பொழுதுகூட, தீவிரவாதி-ஜிஹாதிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு அப்பாவி பெண்மணிகளை – தாய்-மகள் என்றுகூட பார்க்காமல் (ஜரினா மற்றும் ஷகிலா) சுட்டுக் கொன்றுள்ளனர்[1]. முன்பு கல்லெடித்து கலாட்டா செய்தனர் அந்த தீவிரவாதிகள், இப்பொழுது கடைக்காரர்களே கல்லடித்து அவர்களை விரட்டுகின்றனர்[2]. எனெனில், அவர்களுக்கு அந்த அளவிற்கு வெறுப்பு வந்து விட்டது[3] போலும்! ஆக அந்த பிரச்சினை சரி வராது என்று நினைத்து, கோயம்புத்தூருக்குச் சென்று, தமுமுக ஆர்பாட்டம் செய்துள்ளனர் போலும்.

கேரள போலீஸார் எப்பொழுதும் தீவிரவாதிகளுக்கே உதவிக் கொண்டிருக்கவேண்டுமா? கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானியை பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடகப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகத்தினர் இன்று கோவையில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்[4]. தமுமுகவின் கோவை மாவட்டத் தலைவர் பர்கத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். கர்நாடக போலீஸாருக்குத் துணைபோன கேரள போலீஸாரை அவர்கள் கடுமையாக விமர்சித்தினர்[5]. மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர். ஏற்கெனெவே, கேரள போலீஸார், அவ்வாறு உதவி செய்துததன், ரொம்ப நல்லபேரை வாங்கிக்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் சாதிக்[6], மாநில துணைச் செயலர் செய்யது பேசியதாவது[7]: “கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா? மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்?கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும்”.

முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டால்தான் முஸ்லீம்களுக்கு உரிமைகள் கிடைக்கும்: “தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது[8]. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்”, இவ்வாறு செய்யது பேசினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்

கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[9]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா உளவுப் படைகளைவிட தமுமுகவிற்கு உண்மை தெரியும் போல இருக்கிறது: பெங்களூர் குண்டுவெடிப்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நசீர் என்பவர் அளித்த தகவலின் பேரில் மதானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அத்தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை என்றும், வேறு பலமான ஆதாரங்கள் இல்லாததாலும் மதானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதாவது, போலீஸார் ஒன்றுமே இல்லாமல் கைது செய்துள்ளனராம்! அப்பொழுது, நஸீரையும் விட்டு விடாலாமே? மற்ற கைது செய்யப்பட்டுள்ள, எல்லா தீவிரவாதிகளையும் விட்டுவிடலாமே?

தாவூத் ஜிலானி சொல்வர்டு பொய்யா, நஸீர் சொல்வர்து பொய்யா? தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[10].  நஸீர் சொல்லியுள்ள இடங்களுக்குத்தான், இப்பொழுது மௌலானா மைதானியை அழைத்துச் சென்றுள்ளனர்[11]. இதையும் மறுக்க முடியுமா?


[1] http://www.ndtv.com/article/india/zareena-19-and-mother-killed-by-militants-in-kashmir-46663

[2] http://timesofindia.indiatimes.com/india/Protestors-in-Kashmir-face-stones-their-own-bitter-pill/articleshow/6420878.cms

[3] http://www.dnaindia.com/india/report_kashmir-stone-pelters-get-a-taste-of-their-own-medicine_1427515

[4] தினமணி, மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்; First Published : 23 Aug 2010 04:26:06 PM IST; Last Updated : 23 Aug 2010 04:28:31 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=…………….SectionName=Latest

[5] Demonstration in Tamil Nadu condemning Kerala and Karnataka govts on Madani’s arrest; Published: Monday, Aug 23, 2010, 15:30 IST; Agency: PTI
http://www.dnaindia.com/india/report_demonstration-in-tamil-nadu-condemning-kerala-and-karnataka-govts-on-madani-s-arrest_1427524

[6] http://www.indiatalkies.com/2010/08/activists-muslim-voluntary-forum-protest-madanis-arrest-karnataka-police.html

[7] தினமலர், இந்தியாவை நாம் ஆளும் போது தான் நமக்குரிய உரிமைகள் கிடைக்கும்: .மு.மு.., மாநில துணை செயலர், ஆகஸ்ட் 23, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68650

[8] ஜிஹாதி மொழி பேசப்படிகிறது இங்கு, அதாவது, காஃபிர்கள் ஆளும் நாட்டில் மோமின்களுக்கு உரிமைகள் கிடைக்காது, அதனால், இந்தியாவை முஸ்லீம்கள் ஆளவேண்டும், என்ற கருத்து வைக்கப்படுகிறது. முஸ்லீம்கள் எப்படி, எவ்வாறு மறுபடியும் ஆளமுடியும், ஆள்வார்கள் என்று மற்றவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.

[9] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,

http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html

[10] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html

[11] Dajjiworld, Madani in Madikeri, IB team Coming,  Sunday, August 22, 2010 11:16:15 AM (IST) ,

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=83862&n_tit=Madani+in+Madikeri%2C+IB+team+Coming+

யார் இந்த தடியன்டவிடே நசீர்?

ஓகஸ்ட் 23, 2010

யார் இந்த தடியன்டவிடே நசீர்?

தடியன்டவிடே நசீர் நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பிடிபட்ட லஸ்கர் தீவிரவாதியாவான். தென்னிந்தியாவின் லஸ்கர்-இ-தொய்பா தலைவன் என்று கருதப்படுகிறான். இவனுடைய விவரங்கள் இதோ[1]:

பெயர் தடியன்டவிடே நசீர்  / ஹாஜி / உம்மர் ஹாஜி / காலித் முதலியன[2].
பிறந்த தேதி ஏப்ரல் 23, 1977.
பிறந்த நாடு இந்தியா
படிப்பு ஒன்பதாவது பாஸ், ஏ.ஸி. மெகானிகல் சான்றிதழ் பெற்றுள்ளான்[3].
பெற்றோர் அப்துல் மஜீத் கம்படவிடா, கதீஜா
மொழிகள் தெரிந்தது மலையாளம், அரேபிக், ஹிந்தி, உருது.
அரசியல் சார்பு மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் (PDP), மற்றும் PDPயின் ரகசிய அமைப்பான, மஜ்லிச்துல் முஸ்லிமீன் என்பதன் தீவிரமான அங்கத்தினன்[4].
நாடுகள் சென்றுள்ளது சௌதி அரேபியா, பங்களாதேசம்
உடல் அமைப்பு உயரம் – 5’10”, ஒல்லியான உடம்பு, மாநிறம், நீண்ட முகம், கூர்மையான மூக்கு, இடது கால் முட்டிக்கு கீழ் ஒரு பெரிய மச்சம், இடது நெற்றியில் ஒரு தழும்பு அடையாளம்
அவன் ஒப்புக் கொண்டுள்ளது விவரங்களை, கீழே காணவும்:
thadiyantavide-nazeer

thadiyantavide-nazeer
T-Naseer-LeT

T-Naseer-LeT

“தீவிரவாதம், வட இந்தியாவை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, தென்னிந்தியாவில் குறைவாகவே உள்ளது. வட இந்தியாவில் “தங்கி “வேலைசெய்ய” 26 இடங்கள் உள்ளன[5], அவை பாகிஸ்தானின் ஆணைகளை எதிர்பார்த்து வேலை செய்கின்றன. ஒரேயொரு ஆணை போதும், உடனே அவர் செயல்பட்டு தாக்குதலில் ஈடுபட தயாராக உள்ளார்கள். இப்பொழுது, தென்னிந்தியாவில் மூன்று குழுக்கள் உள்ளன.

“பங்களூரு குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, உடனடியாக, நான் பங்களாதேசத்திற்குத் தப்பிச் சென்று விட்டேன். சிட்டகாங்கில் உள்ள என்னுடைய சகளையுடன் மறைவாகத் தங்கிவிட்டேன். 2008ல், என்னுடைய லஸ்கர் தலைவர்களின் ஆணையின்படியே, அவ்வாறு செய்தேன்.

“அப்பொழுது, பாகிஸ்தானின் குடிமகன் மற்றும் லஸ்கர் வேலையாள், சம்சுதீனிடமிருந்துதான் லஸ்கரின், இந்தியாவில் தங்கி வேலைசெய்ய 26 இடங்கள் உள்ளன கேள்விப்பட்டேன். பெங்களூரு வெடிகுண்டு வேல்கையின் போது, நாங்கள் எப்பொழுதும் லஸ்கர் ஆட்களுடன் நேரிடையாக பேசியது கிடையாது. எங்களுடைய எஜமானன்களுடன் / பாஸ்களுடன், சர்ஃபாஸ் நவாஜ் என்பவன் மூலம் தான் பேசிவந்தோம். அவன் அந்நேரத்தில் மஸ்கட்டில் இருந்தான்.

“காஷ்மீரத்தில் லஸ்கர் கேம்பின் மீது தாக்குதல் நடந்த பிறகு, நவாஜ் என்னுடன் தொடர்பு கொண்டான். அதில் கேரளாவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உடனடியாக, நாங்கள் மும்பைக்குப் போனோம். அங்கிருந்து, நவாஜின் உதவியோடு, இந்தியாவை விட்டு வெளியேர உதவி கோரினோம்.

“ஜைல்தீன் என்பவனுடன் தொடர்பு கொள்ளுமாறு அவன் பணித்தான். அந்த ஏஜென்ட் நாங்கள் எல்லைகளைத்தாண்டி, பங்களாதேசத்திற்குள் நுழைய உதவிவான், என்றான். அதற்காக ரூ.3000/- நாங்கள் அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் சொன்னான்.

“ஹவுராவிற்குச் சென்றதும் ஜைல்தீனைத் தொடர்பு கொண்டோம். அவன் எங்களை, இந்திய-பங்களாதேச எல்லையில் உள்ள பங்கப்புர என்ற இடத்திற்கு வருமாறு பணித்தான். அந்த இடதிற்கு பேருந்தில் சென்றோம். அங்கிருந்து, படகில் பங்களாதேசத்தில் நுழைந்தோம். அங்கிருந்த இருவரிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டோம்.

“நாங்கள் அவர்களுடன் செல்வதற்கு முன்பு, சிறிது குழப்பம் ஏற்பட்டது. அவர்கள், எங்களிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். பிறகு ஜைல்தீன் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று சொல்லப்பட்டது. இரண்டு நாட்களுக்கு, ஒரு குடிசையில் வைக்கப்பட்டு, பிறகு, பேரூந்து மூலம் டாக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டோம்.

“டாக்கா பேருந்து நிலையத்தில் சலீம் என்ற மற்றொரு லஸ்கர் ஆளை சந்தித்தோம். அங்கிருந்து கடற்கரையிலுள்ள காக்ஸ் பஜார் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இந்த காலக்கட்டத்தில், குறைந்த பட்சம் 11 முறை, நாங்கள் எங்களது ஓட்டல்களை மாற்ற வேண்டியிருந்தது.

“அதே நேரத்தில், மறுபடியும் குழப்பம் ஏற்பட்டது, ஏனெனில், அந்நேரத்தில் மும்பையில் வெடிகுண்டு மற்றும் 26/11 தாக்குதல் ஏற்பட்டிருந்தது. பங்களாதேச போலீஸ் சலீமைத்தேட ஆரம்பித்தது. அவ்வாறே, போலீஸ் அவனைப் பிடித்து, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டான். நாங்கள் பாகிஸ்தானிற்கு அனுப்பப்படமாட்டோம் என்று சொல்லப்பட்டது. பாகிஸ்தானில் இருந்த லஸ்கர், நாங்கள் வளைகுடா நாடுகளுக்கு நிரந்தரமாக சென்றுவிட்டு, அங்கிருந்து, எங்கள் வேலையைச் செய்ய வேண்டும் என்றது. அப்பொழுது நான் நவாஜை தொடர்பு கொண்ட்டேன், அவனும் எனக்கு பணத்தை அனுப்பிவைத்தான்.

“பிறகு ஆஸிஃப் என்ற கூட்டாளியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவன் எங்களுக்கு ஒரு ஈ-மெயில் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்தான். அதன்மூலம், வேண்டியபோது, நவாஜை தொடர்பு கொண்டால், அவன் பணத்தை ஏற்பாடு செய்து அனுப்பிவைப்பான் என்றான்.

“அவ்வாறே, நாங்கள் தொடர்பு கொண்டோம், பணம் வந்தது. ரூ.70,000/- ஹவாலா[6] மூலம் கிடைத்தப் பணம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, அதை வைத்துக் கொண்டு, வளைகுடாவில் எங்களது, அடித்தளத்தை அமைத்தோம்.

“பிறகு, ஒரு ஏஜென்டை அணுகி, துபாய்க்குச் செல்ல விசா ஏற்பாடு செய்துத் தருமாறு கோரினோம். அப்பொழுதுதான், எங்களை பங்களாதேச துப்பறிவாளிகள் கண்டுபிடுத்து, இந்தியாவினுடன் ஒப்படைத்தனர்”, என்று கூறி முடித்ததாக உள்ளது.

maulana_madani_aggrressive

maulana_madani_aggrressive
T-Naseer-LeT

T-Naseer-LeT
soofiya_madani_14.12.09

soofiya_madani_14.12.09

கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[7]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கேரள போலீஸாரை சந்தேகிக்கும் மத்திய புலனாய்வுத்துறை: “மதானிக்கு எதிராக தான் எந்த குற்றச்சாட்டையும் சொல்லவிலை என்று ஊடகக்காரர்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில் தடியன்டவிடே நசீர் சொல்லியிருப்பது பொய். அவன் மதானியுடனான தனது தொடர்பை தேசிய புலனாய்வுதுறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளான். ஆகவே, அந்நிலையில் எல்லாம் நஸீருடைய முகம் தெரியாதபோது, கொச்சியில் தெரியும்போது, கேரள போலீஸாரின் மீது சந்தேகம் ஏற்படுகிறது”, என்று மத்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளது. ஈ.கே.நாயனார் கொலைமுயற்சி, பேங்களூரு தொடர்குண்டு, கோழிக்கோடு இரட்டைக்குண்டு வெடிப்பு, மற்றும் தமிழக பஸ் எரிப்பு என்று பல வழக்குகளில் இவன் சம்பந்தப்பட்டுள்ளான் என்று கேரள போலீஸார் கூறியுள்ளனர்[8].

தாவூத் ஜிலானியுடன் சம்பந்தப்பட்டுள்ள தடியன்டவிடே நசீர்: தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[9].  அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும், வழக்குகள் நடக்கும்போது, குற்றவாளிகளைப் பற்றிய விவரங்கள் வெளிவர விரும்புவதில்லை, ஏனெனில், அங்குள்ள நிலைப்படி, குற்றவாளிகள், அப்படி வெளிவரும் விவரங்களை வைத்துக் கொண்டு, வழக்குகளை தமக்குச் சாதகமாக்கி விடுவர்; சாட்சிகளை கலைத்து / மாற்றி விடுவர், அல்லது பாதகமான ஆட்கள் வெளியேற்றப்படுவர் அல்லது நீக்கப்படுவர்.


[1] பெங்களுரு போலீஸார் தயாரித்துள்ள “டோசியர்” மீது ஆதாரமான விவரங்கள், தமிழில் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளன.

[2] பாஸ்போர்ட்டுகளில், இப்படி பல பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான, அதாவது, அப்படி பல பெயர்களில் பாஸ்போர்ட்டுகள் எடுத்துள்ளான். இதற்காக ஆவன செய்வதெல்லாம், முஸ்லீம்கள் வைத்துள்ள சுற்றுப்பயண உதவி மையங்கள் (டிராவல் ஏஜென்டுகள்) தாம்.

[3] தீவிரவதிகளுக்கு படிப்பைத் தவிர, இப்படி பல தொழிற்துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது, ஏனெனில், நுணுக்கமான ஆயுதங்கள், கருவிகள் முதலியவற்றை அவர்கள், தங்களது தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு உபயோகப்படுத்த வேண்டியுள்ளது, அவற்றை கையாள வேண்டியுள்ளது. ஒன்று, இதற்காகவே, பொறியியல் படுப்புக் கூட படிக்கிறார்கள் அல்லது பொறியியல் படித்தவர்கள், இந்த வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

[4] வங்கி கணக்குகள், இதர ஆவணங்கள், இந்த தொடர்பைக் காட்டியுள்ளன.

[5] அவை “powerful sleeper cells” என்று குறிப்பிடப்படுகின்றன. அங்கு அவர்களுக்கு மற்றும் தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு வேண்டியவை அனைத்தும் இருக்கும்.

[6] ஹவாலா பணம் எப்படி தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு பயன்படுத்தப் படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். முஸ்லீம்கள், இதனை மிகவும் சாமர்த்தியமாக உபயோகித்து, ஒன்று தங்களை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்திக் கொள்கின்றனர், இரண்டு மணத்தைப் பற்றிய போக்குவரத்து, எந்த கணக்கிலும் வராமல் இருப்பதால், எந்த வரியையும் அவர்கள் செல்லுத்துவதில்லை.

[7] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,

http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html

[8] http://www.asianetindia.com/news/kerala-seeks-custody-thadiyantavide-naseer_106730.html

[9] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html

யார் இந்த சூபியா மதானி?

ஓகஸ்ட் 21, 2010

யார் இந்த சூபியா மதானி?

சூபியா மதானி / சூஃபியா மௌதனி, அப்துல் நாசர் மதானியின் மனைவி. சலாவுத்தீன் மற்றும் உமர் என்ற இரண்டு பையன்களின் தாய். அழகான முகத்தில் தீவிரவாதத்தின் நிறம் தெரிவதில்லை, ஆனால், காஷ்மீரத்தில் அத்தகைய அழகிய ரோஜாக்களே வெடிகுண்டுகளாக  செயல்பட்டது, ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் எப்படி இஸ்லாத்தில் தீவிரவாதிகளாக மாற்றப்படுகின்றனர் என்று தெரியவருகிறது. மூளைச்சலவை செய்ய-செய்ய யாராக இருந்தாலும், திவிரவாதியாக மாற்றலாம், என்று இஸ்லாத்தில் கண்டுபிடித்துள்ளனர். “குரான்” என்று சொல்லி, ஜிஹாத் போர் ஒரு முஸ்லீமின் கடமை, சொர்க்க வாசல் தயாராகத் திறந்திருக்கிறது…………….என்றெல்லாம் சொன்னால், ஜிஹாத்கிகள் கிளம்பி விடுகிறார்கள்.

Soofiya-maudhany

Soofiya-maudhany

soofiya_madani_14.12.09

soofiya_madani_14.12.09

கணவனது தாக்கம்: ஆரம்பகாலத்தில், சூபியா தனது வாழ்க்கையை சந்தோஷமாகத்தான் கழித்திருப்பாள். ஆனால், பிறகு, அவனது கொள்கையை அறிந்திருப்பாள். நிச்சயமாக, தனது கணவினின் தாக்கம் இவளிடத்தில் இருந்திருக்க / ஏற்பட்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் மறுத்தாலும், பிறகு, கணவனுடன் ஒத்துப்போனாள் என்பது நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. குழந்தைகள் பிறந்தபிறகு, மனம் மாறியிருக்கலாம், ஆனால், மறுபடியும் தாக்கம் ஏற்பட்டுள்ளது, அவளுடைய வார்த்தைகள், நடத்தைகள் காட்டுகின்றன எனலாம்.

madani-and-soofiya

madani-and-soofiya

பஸ் எரிப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பது: கலமசேர் பஸ் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அந்த நிலையில் சூபியா மதானி போலீசில் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- “கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அப்துல் நசர் மதானியை போலீசார் கடுமமையாக சித்ரவதை செய்தனர். அங்கு அவர் பட்ட கஷ்டமே என்னை குற்றவாளி ஆக்கியது”. அதாவது, உண்மையில் கஷ்டப்படுத்தப்பட்டானா அல்லது சர்க்கரை முதலிய வியாதிகளினால், சிகிச்சைப் பெற்றுவந்ததால், ஒன்பது ஆண்டுகளில் உடல் இளைத்தான என்றுதான் பார்க்கவேண்டும். ஆனால், சிறைவாசம், போலீஸ் கைது, என தனக்கும் வரும்போது, தன்னைகத் தற்காத்துக் கொள்ளவே வேண்டியுள்ளது.

Soofiya Maudhany

Soofiya Maudhany

மதானியைப் பற்றிய சிடியில் சூபியா சொன்னது: மதானியின் மனைவி சூபியா அளித்துள்ள பேட்டியில், “ஒன்பது ஆண்டுகளுக்கு முன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கணவர், கோவை சிறையில் உள்ளார். அவரை சந்திக்கும் போதெல்லாம், எனக்கு தைரியமூட்டுவார்; அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. சிறைக்கு சென்றபோது அவரது எடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாக குறைந்துவிட்டது. முறையான சிகிச்சை இல்லாததே இதற்கு காரணம்,” என, குற்றம் சாட்டியுள்ளார்.  இறுதியில், “சட்டம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், மதானியின் சிறைவாசத்தை நிச்சயம் கண்டிப்பார்கள்‘” என்ற வர்ணனையுடன் படம் முடிகிறது.

soofia-12-2009

soofia-12-2009
soofiya-madani-dec.2009

soofiya-madani-dec.2009

21-06-2002 அன்று கோவை சிறையில் நடந்த நிகழ்ச்சி: சூபீயா தனது உதவியாளன் நௌஸத் மற்றும் இன்னொருவனுடன் தனது கணவனைப் பார்க்க வருகிறாள். பெண்போலீஸார்கள் சோதனையிட்டபோது, சூபியா செல்போன் மற்றும் சிம்கார்டுகளை உள்ளே எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்படுகிறது. உடனே, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூபியா, பெண்காவலர்களையும் மற்ற காவலர்களையும் மிரட்டுகிறாள். தான் நினைத்தால், அவர்களையெல்லாம் தொலைத்து விடுவேன் என்று மிரட்டுகிறாள். நௌஸத் பெண்காவலர்களை அவர்களுடைய சட்டைகளைப் பிடித்து இழுக்கிறான். இதனால், ஆண்-போலீஸார் வந்து அவர்களை, வலுக்கட்டாயமாக, சிறை வளாகத்திலிருந்து வெளியேற்றுகின்றனர். ஆனால், வெளியே வந்தபிறகும், போலீஸாரைத் திட்டி, மிரட்டிவிட்டுச் செல்கின்றனர்

soofiya madhani with children in kairali tv

soofiya madhani with children in kairali tv

ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்தல்: போலீஸார், இவ்வாறு அவமதிக்கப்பட்டதால், அவர்கள், சூபியா மற்றும் நௌஸத் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்கின்றனர். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, பெண்-போலீஸாரை பலாத்காரம் செய்தது, போலீஸாரை மிரட்டியது முதலியவற்றிற்காக இபிகோ ரசத்துகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அரசியல் செல்வாக்கினால், அவ்வழக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

மதானி மனைவி மீதான வழக்கு : துவங்கியது இருதரப்பு வாதம்

மே 06,2008; http://dhinamalar.info/court_detail.asp?news_id=504&ncat=TN&archive=1&showfrom=5/6/2008

கோவை பணி செய்ய விடாமல் தடுத்து, சிறைவார்டன்களை மிரட்டிய மதானி மனைவி மீதான வழக்கில் இருதரப்பு வாதம் துவங்கியது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2002ல் மதானியை பார்க்க வந்த அவரது மனைவி சூபியாவுக்கும், சிறைக்காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிறைக்காவலர்களை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக சூபியா மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு ஜே.எம்.எண்: 3 கோர்ட்டில் நடக்கிறது.சாட்சி விசாரணை முடிந்த நிலையில், நேற்று இருதரப்பு வாதம் துவங்கியது. சூபியா சார்பில் வக்கீல் மோகன் ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து, அரசு தரப்பு வாதத்துக்காக வழக்கை மே 9ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் புளோரா ஒத்திவைத்தார்.

மதானி தம்பதியரின் அரசியல் செல்வாக்கு, பலம்: குற்றாஞ்சட்டப்பட்ட தீவிரவாதி-பயங்கரவாதி மதானி 1998-ஆம் அண்டு நடந்த கோவைத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அல்லது சிலர் சொல்லும்படியாக, விசாரணைக் கைதியாகக் கருதப்பட்டு சிறையில்  தண்டனையை சகல வசதிகளுடன்  அனுபவித்துக்  கொண்டிருந்தான்.  எனவே, சூபியா குற்றஞ்சாட்டியபடி எப்படி எடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாக குறைந்துவிட்டது. என ஆச்சரியமாக உள்ளது. உடம்பு சரியாகவில்லை என்பதனால், சிகிச்சையளித்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உணவைக் குறைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை.

சூபியாவை பார்க்கும் முதலமைச்சர்: ஜூன் 2, 2005 அன்று அப்போதைய காங்கிரஸ் முதல் மந்திரி உம்மன் சாண்டி மதானியின் வீட்டிற்கே சென்று அவரது மனைவியையும் தந்தையையும் சந்தித்த போது, சூபியா சிறையில் நடந்த பிரச்சினைகளைப் பற்றி சொல்லி, ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டாள். அதன்படியே,  “மனிதாபிமான” அடிப்படையில் அவள் கணவனுக்கு விடுதலை கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார். அதுமட்டுமல்லாது, மார்ச்சு 14, 2006 அன்று, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ கட்சியினரைக் கொண்ட கேரள சட்டசபை, மனிதாபிமான அடிப்படையில் மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானத்தையும் நிறைவேற்றியது வினோதமாக இருந்தது.

சிறைக்கு ஆட்களை அனுப்பி விசாரித்தது, கருணாநிதியிடம் பரிந்துரைத்தது: அதன் பிறகு கேரள முதல்வர் அச்சுதானந்தன் தன்னுடைய அமைச்சர்கள் சிலரை கோவை சிறையில் மதானியை சந்தித்து வேண்டியது செய்யப்படும் என்று சொல்லி அனுப்பினார். பிறகு, ஜூன் 10, 2006 அன்று கேரள முதல்வர் அச்சுதானந்தனே நேரிடையாகச் சென்னைக்கு வந்து, தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து, மதானியை “உடல்நல” காரணங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக முதல்வர் விடுதலை செய்ய மறுத்தாலும், சிறைச்சாலையிலேயே மதானியின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்.

தச்சாங்கரி மனைவி –சூபியா மதானி -நஸீர் தொடர்பு – வென்னலா வீடு[1]: புலானாய்வு குழுவினர் டோமின் ஜெ. தச்சங்கரி மற்றும் அப்துல் நாசர் மதானி இவர்களுக்குள்ள தொடர்பை கண்டறிந்துள்ளனர். வென்னலா என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டைப் பற்றி விசாரித்ததில் அந்த தொடர்பு வெளிப்படுகிறது. தச்சாங்கரியின் மனைவி மற்றும் மதானியின் மனைவி 2006 மற்றும் 2007 முறையே அந்த வீட்டை “ரியான் ஸ்டூடியோ” என்ற பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளனர் கருகபிள்ளி என்ற கொச்சியிலுள்ள வீட்டிற்கு இடம்பெயரும் முன்னர், இருவருமே இந்த விட்டில் நான்கு மாதங்கள் தங்கியுள்ளதாகத் தெரிகிறது. இன்னொரு சோதனையில் இதே வீடுதான் திருட்டு விசிடி தொழிற்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. அது மட்டுமல்லாது இந்த வோட்டில்தான், மதானி நஸீரை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. அக்டோபர் 15, 2007ல் மதனி இந்த வீட்டிற்கு குடிபெயந்தார். இந்தவீடு ஒரு NRI. பெண்மணிக்குச் சொந்தமானது என்றும் அவருடைய சகோதரர் வீட்டை நிர்வாகித்து வருகிறார் என்றும் தெரிகிறது.

மனைவிகள் பங்குதாரர்களாக இருக்கும் போது, ஒரு கணவன் அடுததவர் மனைவி மீது நடவடிக்கை எடுப்பாரா? தச்சாங்கரியின் மனைவி மற்றும் மதானியின் மனைவி 2006 மற்றும் 2007 முறையே அந்த வீட்டை “ரியான் ஸ்டூடியோ” என்ற பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த நிறுவனத்திற்கு பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். இத்தகைய உறவு இருக்கும்போது, எப்படி ஒரு கணவன் அடுததவர் மனைவி மீது நடவடிக்கை எடுப்பார்? கலமசேரி பஸ் வழக்கை விசாரிப்பதில், இந்த டோமின் ஜெ. தச்சங்கரி உள்ளார்[2], பிறகு, எப்படி அவரால் பாரபட்சமின்றி, அவ்வழக்கை விசாரிக்கமுடியும்? பி. எம். வர்கீஸை தனது ஆதிக்கத்தால் / தாக்கத்தால் பணியவைக்கமாட்டார் என்று என்ன நம்பிக்கையுள்ளது?

கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்தாரா?: மதானி மனைவியிடம் தீவிர விசாரணை[3]

கேரளாவில் தமிழக பஸ் எரிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் மதானியின் மனைவி சூபியா மதானியிடம், கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்தது தொடர்பாக, தமிழக போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த 2005ம் ஆண்டில் தமிழக பஸ் ஒன்று, கேரளாவில் உள்ள கலமசேரியில் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் மதானியின் மனைவி, சூபியா மதானிக்கு தொடர்பு இருப்பது, சமீபத்தில் கைதான லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி நசீரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து, பஸ் எரிப்பு வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சூபியா மதானி, கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் அலுவாலியா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான இரண்டு நபர் குழு, திரிக்கராவில் உள்ள போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில், சூபியா மதானியிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், “பஸ் எரிப்பு வழக்கை தவிர, கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்த வழக்கில், நசீர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். எனவே, இது தொடர்பாக ஏதேனும் முக்கிய தகவல்கள் கிடைக்குமா என்பதற்காகவே போலீசார், சூபியா மதானியிடம் விசாரணை நடத்தினர்’ என்றனர்.

மதானிக்கு ஆதரவாககைதியின் கதைஆவணப்படம்சிடியாக வெளியீடு: கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் மதானி, முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஆதரவாக, கைதியின் கதை’ என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு நெருங்கும் வேளையில், “சிடி’ வெளியிடப்பட்ட பின்னணி என்ன என்பது குறித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், கேரள மக்கள் ஜனநாயக கட்சியினர் நிறுவனர் அப்துல்நாசர் மதானி (41) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் 167 குற்றவாளிகள் மீதான விசாரணை தனி நீதிமன்றத்தில் முடிந்தது; தீர்ப்புக்காக வழக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், “கைதியின் கதை’ (மதானி மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த ஆவணப்படம்) என்ற தலைப்புடன், 45 நிமிட படம் “சிடி’யாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை, “மீடியா ஸ்டெப்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது; “ஆலூர் ஷானவாஸ்’ என்பவர் இதை தயாரித்துள்ளார். இப்படத்தில், மதானியின் பள்ளி பருவம், ஆவேசமான அரசியல் மேடைப்பேச்சு, மத ரீதியான போதனைகள் இடம்பெற்றுள்ளன. “சங்க் பரிவார்’ அமைப்புக்கு எதிராக 1991ல், “இஸ்லாமிக் சேவா சங்’ அமைப்பை துவக்கியது; வெடிகுண்டு தாக்குதலில் மதானியின் கால் ஊனமடைந்தது தொடர்பான, விளக்கங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


[1] Ajay Kanth, Kerala: Nexus between Thachankary, Madani?, First Published : 07 Jul 2010 01:58:28 AM IST; Last Updated : 07 Jul 2010 09:17:01 AM IST

http://expressbuzz.com/states/kerala/kerala-nexus-between-thachankary-madani/187654.html

[2] It is said that the Karnataka Police had already handed over such information to the police team hat had visited Bangalore earlier, which included Inspector General Tomin J Thachankery and Assistant Commissioner of Police PM Varghese, who was heading the probe the Kalamssery bus-burning case. http://www.dailypioneer.com/222931/Nazeer-planned-communal-riots.html

[3] தினமலர், கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்தாரா?: மதானி மனைவியிடம் தீவிர விசாரணை, டிசம்பர் 20,2009; http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14828

ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எதிராக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போராட்டம்!

ஓகஸ்ட் 2, 2010

ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எதிராக  இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போராட்டம்!

ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா யூனியன் எதிராக  முஸ்லீம் லீக் போராட்டம்!: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து போராடுவோம் என்று அறிவித்திருக்கிறார்களாம் [அதுசரி, அவர்களை காஃபிர்கள் என்று அறிவிப்பார்களா?]. மக்களிடம் தாங்கள் இழைத்தக் கொடுமைகளை மறைக்க இந்த இயக்கங்கள் முயற்சி செய்கின்றன என்றும் எடுத்துக் காட்டினார்கள் [எந்த மக்களை என்று சொல்லவில்லையே/]. மக்களிடையே அவர்கள் தீவிரவாத சித்தாந்ததைப் பரப்பி வருகிறர்கள், மக்களை தவறான திசைக்கு வழிகாட்டுகிறார்கள் என்றும் குற்றாஞ்சாட்டினர். இனி இந்த தீவிரவாத இயக்கங்களின் கொடுமைகளைப் பற்றிப் பிரச்சாரம் செய்யப்போவதாகவும், அவைகளுடன் எந்த கூட்டும் வைத்துக் கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்கள்.

கோட்டக்கல்லில் நடந்த முஸ்லீம் அமைப்புகளின் கூட்டம்: சனிக்கிழமை (31-07-2010) கோட்டக்கல்லில் (மல்லப்புரம் மாவட்டம்) நடந்த கூட்டத்தில் இவ்வாறு முடிவு எடுத்து இருக்கிறார்களாம். முஸ்லீம் லீக்கைத்தவிர, சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள் உட்பட (EK and AP sections of Sunni), முஜாஹித் இயக்கங்கள், சமஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா, கேரள முஸ்லீம் சேவை சங்கம் (Muslim Service Society -MSS), முஸ்லீம் கல்வி சங்கம் (Muslim Educational Society -MES).

முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள்: குன்ஹாலங்குட்டி, “தீவிரவாதத்தை எந்த வகையிலும் அனுமதிக்கமுடியாது. முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள். நாங்கள் இந்த கொள்கையை கடைப்பிடிப்போம், தீவிரவாதத்திலிருந்து மீண்டு வெற்றிகரமாக வருமோம் என்று நம்புகிறோம்”, என்று பேசினார்[1]. அச்சுதானந்தன் கேரள மக்களை முஸ்லிம்களாக மதம் மற்றுகிறார்கள் என்று சொன்னதிற்காக எதிர்ப்பும் தெரிவித்தனர். கேரளா மற்றும் மேற்கு வங்காளம் முஸ்லீம்களுக்கு எந்த சமூக வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர்[2].

கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் முஸ்லீம்களும், கம்யூனிஸ்ட்டுகளும் சேர்ந்து இருப்பது: 60 வருடங்களுக்கு மேலாக, இந்த இரண்டு மாநிலங்களில் முஸ்லீம்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றாகத்தான் அரசியல்-சித்தாந்த ரீதியில் வேலைசெய்து வருகிறர்கள். கடவுள் இல்லை என்கின்ற கூட்டாத்தர்களுடன், குறிப்பாக காஃபிர்களுடன், இந்த மோமின்கள் எப்படி காலந்தள்ளியுள்ளனர் என்பது அவரவர் கடவுளர்களைத்தான் கேட்கவேண்டும். செக்யூலரிஸம் பேசி கத்திக் கொண்டிருக்கும் இந்த கூட்டங்களுக்கு வெட்கமில்லாமல், அவ்வாறு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதில், நடு-நடுவே காங்கிரஸும் சேர்ந்து கொள்ளும். இந்தக் கூட்டத்தார்களுக்கு, என்ன நாம் இவ்வாறு நடந்து கொள்கிறோமே, மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட்டதில்லை. ஆனால், இப்பொழுது அவர்களுக்கு வாழ்க்கை கசந்துவிட்டது போலும்!

ஏன் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் அதிகமாக தீவிரவாதம் வளர்ந்திருக்கக்கூடும்? கம்யூனிஸ்ட்டுகளே பயப்படும் அளவிற்கு எப்படி இஸ்லாமியத் தீவிரவாதம் இந்த மாநிலங்களில் வளர்ந்திருக்கமுடியும்? இதை அலசும்போது கூட இம்மாநிலங்களில் தான், ஒருவருடைய கை வெட்டப்பட்டுள்ளது, இன்னொரு முஸ்லீம் பெண்ணே பாடம் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. எந்த சமூக-பொருளாதார குற்றமாகியிலும், அதன் பின்னணியை ஆய்ந்து பார்த்தால், இம்மாநிலங்களில் ஜிஹாதிகளின் பங்குதான் வெளிப்பருகிறது. ஆகையால்தான், இன்று!: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போன்ற முஸ்லீம் அடிப்படைவாதக் கட்சிகளே, ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து போராடுவோம் என்று அறிவித்திருக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. நாங்கள், “சிறுபான்மையினர், சிறுபான்மையினர்”, என்று சொல்லிக்கொண்டு, பெரும்பான்மையினரை சிறுபான்மையினரைவிட தாழ்த்தி, அவர்களுக்கு உரிமைகள் இல்லாமால் ஆக்கிவிட்டு, இன்று, “முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள்”, என்று சொல்லவேண்டிய நிலையில் வந்துவிட்டது வேடிக்கையகத்தான் உள்ளது. இதுவும் கருணாநிதி-ஜெயலலிதா போன்ற அரசியலா, வாய்ஜால-விளையாட்டுகளா, அறிக்கை-வேடிக்கைகளா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


[1] http://www.hindu.com/2010/08/01/stories/2010080157670100.htm

[2] http://ibnlive.in.com/generalnewsfeed/news/iuml-slams-left-govts-in-kerala-wb-for-neglecting-muslims/192444.html