இஸ்லாமில் இசையா – ஐயோ, ஹராம், ஹராம் என்று பத்வா போட்ட முப்தி, ஜாலியாக இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாராம்!
இசையை ரசித்துக் கொண்டிருந்த முப்தி (ஜூலை 2013): காஷ்மீர் மாநிலத்தில் ஒரு இளம்பெண் பெண்களே கொண்ட “பேண்ட்-குரூப்” வைத்துக் கொண்டு இசைக்குழு நடத்தி வந்தாளாம். இஸ்லாமில் இசையா – ஐயோ, ஹராம், ஹராம் என்று பத்வா போட்டாராம் முப்தி. ஆனால், அதே முப்தி, இசையை ரசித்துக் கொண்டிருந்தாராம்! ரம்யாமான தல் ஏரியில், ஒரு பெரிய படகில், அக்பர் ஜயபூரி [Urdu poet Akbar Jaipuri] என்ற உருது கவிஞர் நினைவாக, ஆல் இன்டியா ரேடியோ, ஒரு நிகழ்சி ஏற்பாடு செய்திருந்தது. காஷ்மீர் மாநிலத்தின் பிரபல கஜல் பாடகர் கைஸர் நிஜாமி [Qaiser Nizami ] தன்னுடைய உருது கஜல்களுடன் னைவரையும் மகிழ்வித்தார். அன்றைய மயக்கும் மாலைப் பொழுதில் “ரஞ்சிஸ் ஹி சஹி, தில் ஹி துகானே கேலியே” [Ranjish hi sahi, dil hi dukhaane ke liye aa], என்று மெஹ்தி ஹஸன் பிரபலமான கஜல் பாட்டுப் பாட, “சாப் திலக்” என்ற பஞ்சாபி கஜலோடு[Chaap Tilak (Punjabi ghazal)] நிகழ்சித் தொடங்கியது. மாநிலத்தின் பெரிய முப்தி, ஆஜம் பஷீர்-உத்-தீமன் அஹமது [the grand mufti of J&K, Mufti Azam Bashir-ud-din Ahmad], மற்றவர்களுடன் அழகான நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு, சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்[1].
முப்தி பத்வாக்கள் போட்டுக் கொண்டே இருந்தார் (2012): ஜனவரி 2012ல் தன் தலைமையில் இயங்கி வரும் ஷரீயா நீதிமன்றத்தில் மூன்று கிருத்துவ மிஷனரிகள் – எம். சி. கன்னா, ஜிம் போர்ஸ்ட் மற்றும் கயூர் மெஸ்ஸா என்பவர்கள் வெளியேற வேண்டும் என்று பதவா போட்டு விரட்டினார்[2].
கிருத்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளுக்கு அரசு உதவக்கூடாது என்றும்ம் பத்வா போட்டார். இதற்கு பிரிவினைவாத தலைவர் சையது அலி ஜிலானி ஆதரவு தெரிவித்தார்[3].
செப்ப்ட்டம்பர் 2012ல், இஸ்லாமுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. உடனே, அமெரிக்கர்கள் அனைவரும் காச்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். இதனால், தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கர்களை காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம் என்று பணித்தது[4].
பாண்ட் இசைக் குழு ஆரம்பித்த காஷ்மீர இளம் பெண்கள்: காஷ்மீரில் முதல் முறையாக 3 கல்லூரி மாணவிகள் – மாணவி பாராக தீபா [Farah Deeba] டிரம்மராகவும், மாணவி அனீகா காலித் [Aneeka Khalid] கிடாரிஸ்ட்டாகவும், மாணவி நோமா நசிர் [Noma Nazir] பாடகியாகவும் சேர்ந்து இசைக்குழு தொடங்கினார்கள்[5]. இவர்களின் முதலாவது இசை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 2012ல் ஸ்ரீநகரில் நடந்தது. இதற்கு இளைஞர்களிடையே வரவேற்பு ஏற்பட்டது. இசைக்குழுவுக்கு ”பிரகாஷ்” (முதல் ஒளி) என்று பெயரிடப்பட்டனர். கடந்த டிசம்பரில் அவர்கள் முதல் போட்டியில் கலந்து கொண்டு, அந்த போட்டியிலேயே முதல் பரிசும் பெற்றார்கள்[6]. இதனால், தேவையில்லாமல், அவர்களுக்கு விளம்பரத்தை / பிரபலத்தை ஏற்படுத்தினார்கள். இதனால் பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கும்பல்கள் உஷாரானாயினர். இது அவர்களது “இஸ்லாம்-மயமாக்கல்” என்ற கொள்கைக்கு விரோதமானது என்றறிந்தனர். அதனால், தங்களது வேலைகளை முடிக்கி விட்டனர்.
இசை இஸ்லாமிற்கு எதிரானது – எதிர்ப்பில் இணைதள தீவிவாதமும் இணைந்தது: முஸ்லிம் பெண்கள் இப்படி மேடையேறி பாடுவது இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் இந்த குழுவை விமர்சித்து கருத்துக்கள் பரவின. இ.மெயில்கள் மூலமும் 3 மாணவிகளுக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தன. அந்நிலையில், முஸ்லிம் மத குரு முப்தி பஷீருதீன் அகமது பிறப்பித்த பத்வா[7] உத்தரவில் இஸ்லாம் விரோத செயலில் ஈடுபட்டு வரும் மாணவிகள் தங்கள் இசைக்குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[8]. இதற்கிடையே காஷ்மீர் பெண்கள் இசை நிகழ்ச்சி நடத்த முப்தி சாகிப் என்ற அமைப்பு தடை விதித்து `பட்வா’ உத்தரவு பிறப்பித்தது. துகாடாரான்-இ-மில்லத் [Dukhataarn-e-Millat] என்ற அடிப்படைவாத மகளிர் அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால், பெண்களின் பெற்றோர் மற்ரும் குடும்பத்த்னர் பெருத்த தொல்லைகளுக்கு ஆளாயினர். தமது மகள்களை சமூகத்திலிருந்து மறைக்க வேண்டியதாயிற்று[9]. இதை தொடர்ந்து இசைக்குழுவை மாணவிகள் கலைத்துவிட்டனர்[10]. இதைத் தொடர்ந்து, இசைக்குழுவை கலைக்க 3 மாணவிகளும் நேற்று முடிவு செய்ததாக பெற்றோர்கள் அறிவித்தனர்.
பெண்கள் அமைப்பு என்ற பெயரில் பெண்களை வைத்து மிரட்டியது: துகாடாரான்-இ-மில்லத் [Dukhataarn-e-Millat] என்ற அடிப்படைவாத மகளிர் அமைப்பு 1982ல் சாரா அன்ட்ரபி என்ற பெண்ணால் ஆரம்பிக்கப்பட்டது. “அமைதியான முறையில்” இஸ்லாம் கொள்கைகளை பரப்புவோம் என்று ஆரம்பித்த இந்த குழு, சினிமா தியேட்டர்கள், வீடியோ லைப்ரரிகள், மதுக்கடைகள் முதலியவற்றை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தினர். ஜனவரி 1990ல் இதனால் கலவரங்கள் ஏற்பட்டன. ஆயுதங்களும் உபயோகப்படுத்தப் பட்டன. ஜீன்ஸ் அணிந்த பெண்கள் மீது அமிலத்தை ஊற்றி பீதியைக் கிளம்பி வந்தது. தடை செய்யப் பட்ட மற்ற பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கோஷ்டிகளுடன், இதுவும் சேர்ந்துள்ளது[11]. இவரது கணவர் அன்ட்ரபி, ஜைமத்துல் முஜாஹித்தீன் [Jamiatul Mujahideen] என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர். இவ்வமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தவுடன், பண்களின் பெற்றோர் பயந்து விட்டனர்.
ஒப்புக்கு பேட்டி கொடுத்து பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கும்பல்களுடன் ஒத்துப்போன இளைமையான முதலமைச்சர்: இது பற்றி காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில்,”மாணவிகளின் இசைக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவதா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அவர்கள்தான்” என்றார்[12]. இதற்கு முதல்-மந்திரி உமர் அப்துல் கண்டனம் தெரிவித்தார். அதாவது, ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்கிறார். இதுதானே, காஷ்மீரத்தில் நடந்து வருகின்றது. மேலும் இ.மெயிலில் மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யவும். போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இ.மெயிலில் மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்[13]. கைதான ஒருவர் பெயர் தாரிக்கான். இவர் தெற்கு காஷ்மீரில் உள்ள பிஜ் பெகரா என்ற நகரைச் சேரந்தவர். மற்றொருவரான ரமீஷ் ஷா மத்திய காஷ்மீரில் கந்தர்பால் நகரில் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவர் ஸ்ரீநகர் பத்மலோ என்ற இடத்தில் இருந்து இ.மெயில் அனுப்பியது தெரியவந்தது. நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் இர்ஷாத் அகமத் சாரா பாதமலோ எஸ்.டி. காலனியில் பிடிபட்டார். இதே போல் இன்டர்நெட் மூலம் 900 மிரட்டல்கள் 26 இடங்களில் இருந்து வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்கள் மீது மிரட்டல், கிரிமினல் குற்றம் மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[14].
முஸ்லிம்கள் இத்தகைய முரண்பாடான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்: காஷ்மீரம் இந்திய கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மேலே, இஸ்லாம் என்ற போர்வைப் போற்றப்பட்டிருந்தாலும், உள்ளே-அஸ்திவாரத்தில் இவைதான் இருக்கின்றன. இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிரிகிஸ்தான் போன்ற எல்லா “ஸ்தானங்களுக்கும்” பொறுந்தும். இங்கு இசை, நடனம், நாடகம், கவிதை முதலியவையும் பாரம்பரியமானவைதாம். மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளுக்குட் பட்டிருக்கும் இப்பிரதேசங்களில் மக்கள் இவையில்லாமல் வாழ்ந்ததில்லை. அந்நிலையில், இப்பொழுது பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கும்பல்கள் இவ்வாறு “இஸ்லாம்” பெயரில் முரண்பாடுகளை திணித்து வருகின்றது. நிச்சயமாக மேனாட்டு சீரழிவுகளை இந்தியா ஏற்கலாகாது. அதே நேரத்தில், நவீனமாக இருக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தையும் (உதாரணத்திற்கு – விமானம், மின்னணு சாதனங்கள், கட்டுமான வசதிகள், வாகனங்கள், ஊடகங்கள்) ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வேதபிரகாஷ்
[1] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2379539/Music-Islamic–unless-Grand-Mufti-course-J-K-Muslim-leader-enjoys-night-traditional-songs.html
[2] In January last year, the Sharia court headed by him ordered expulsion of three Christian missionaries from the Valley on charges of proselytism. He issued a fatwa directing the three priests – M. C. Khanna, Jim Borst and Gayoor Messah – to leave the Valley immediately.
[3] Mufti’s Sharia court also decreed that the state government must involve it in the management of missionary schools. The matter died down after separatist leader Syed Ali Shah Geelani supported the missionaries and their schools.
[4] In September 2012, a controversial anti- Islam film surfaced in America and Europe and Mufti got a chance to hit out at the US. He asked Americans to leave Kashmir and urged people to register their protest against the blasphemous film and ” attack US citizens if they are seen anywhere in the Valley”. This led an alarmed US Embassy in New Delhi to ask its citizens to stay away from Kashmir. Geelani again stepped in and rejected Mufti’s call.
[5] http://www.thehindu.com/news/national/other-states/rock-band-girls-go-into-hiding-after-social-boycott-threat/article4378341.ece
[7] http://tamil.oneindia.in/news/2013/02/04/india-fatwa-against-girls-band-restrictions-169162.html
[9] Left to fend for themselves, the families of Noma Nazir, Farah Deeba and Aneeka Khalid in the vulnerable neighbourhoods of Chhanpora, Bemina and Rajbagh have forced the teenagers to snap their contact with all, especially the media. “We have seized their cellphones and laptops,” two of their relatives revealed to The Hindu. “Their band has been shut.”
[11] The Dukhataarn-e-Millat does not have any history of using firearms. Founded in 1982 by Syeda Asiya Andrabi, the outfit claims to orchestrate ‘peaceful campaigns’ against anything it perceives to be contrary to the tenets, teachings and traditions of Islam. It played a key role in a campaign to close down cinema, video libraries and wine-shops, which culminated in the eruption of an armed insurgency in January 1990. Since then, it has been among the outlawed radical groups in the Valley. In 1992-93, it grabbed the headlines, enforcing the Islamic dress code allegedly by sprinkling acid on young girls wearing jeans and refusing to clad the ‘Abbaya’. Ms. Andrabi has repeatedly denied having used acid. The spray, she insisted, was “a harmless ink.” Nonetheless, the Dukhataarn-e-Millat carries the image of a dreaded outfit for many — particularly those associated with the media, art and culture — in Srinagar. Ms. Andrabi is the wife of the jailed founder of the Jamiatul Mujahideen, Ashiq Hussain Faktoo, who now heads a different political outfit called the Muslim League.
[12] http://articles.timesofindia.indiatimes.com/2013-02-04/india/36741792_1_noma-nazir-fatwa-talented-young-girls
[13] மாலை மலர், காஷ்மீரில்இசைக்குழுதொடங்கியமாணவிகளுக்குமிரட்டல்விடுத்த 3 பேர்கைது, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, பெப்ரவரி 07, 12:34 PM IST.
அண்மைய பின்னூட்டங்கள்