Archive for the ‘கீழக்கரை’ category

காதர் பாட்சா எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? திருமணம் செய்து கொண்ட பெண்கள் முட்டாள்களா?

ஓகஸ்ட் 26, 2016

காதர் பாட்சா எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? திருமணம் செய்து கொண்ட பெண்கள் முட்டாள்களா?

காதர்பாட்சா மீது 8வது மனைவி புகார். தினகரன்

பலதார திருமணங்களில் பெண்கள் சிக்குவது விசித்திரமான நிகழ்வாக இருக்கிறது: பலதாரத் திருமணம் நடந்து கொண்டே இருப்பது, பெண்களின் பலவீனத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறாது, ஏனெனில், இப்படி, ஒரு ஆண், பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. “வேலைக்குப் போகிகிறானா, இல்லையா?” என்று கூட தெரியாமல், ஒரு பெண் திருமணம் செய்து கொள்கிறாள் என்றால் வியப்பாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், அவாற்றையும் மீறி, இத்தகைய திருமணங்கள் நடக்கின்றன எனும்போது, வியப்பாக இருக்கிறது. ஒரு பெண் ஒரு ஆணிடம் அவ்வளவு எளிதாக ஏமாந்து விடுவாளா என்று நினைக்கும் போது திகைப்பாக உள்ளது. அடிப்படையிலேயே ஏதோ தவறு-தப்பு இருப்பது தெரிகிறது. எந்த பெண்ணும் தனது கற்பை, தாம்பத்தியத்தை அவ்வளவு எளிதாகக் கொடுத்து விடமாட்டாள். அந்நிலையில், ஒரு பெண் தெரிந்து செய்கிறாள் என்றால், கற்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றாகிறது. பிறகு, அது மிக்க தீவிரமான சமூகப் பிரச்சினையாகி விடுகிறது.

8 பேரை மணந்தவர் கைது - 23_08_2016_015_023

பலதார திருமணம் மற்றும் பணமோசடி என்ற குற்றங்களில் ஈடுபட்ட காதர் பாட்சா: திண்டுக்கல் பெண் உட்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்தவர், ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காதர் பாட்சாவின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[1] என்று இப்பொழுது – ஆகஸ்டில் தினமலர் செய்தி வெளியிட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், ஜூலை 25ம் தேதியே, இம்மோசடியில் சம்பந்தப்பட்ட காதர் பாட்சா கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் 24-07-2026 அன்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[2]. தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்[3] என்று தினகரன் செய்தி வெளியிட்டது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- எட்டாவது மனைவி புகார்

சலாமியா பானு மதுரையில் கொடுத்த புகார்: பிறகு எட்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். மதுரை புதுார் இ.பி., காலனியை சேர்ந்தவர் சலாமியா பானு (28). இவர் மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவை சந்தித்து அளித்த புகார் மனு[4]: “எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டோம்[5]. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தாயாருடன் ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவி தஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது[6].  கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[7].

 காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- 8வது மனைவி புகார்

ஜூன் 26.2016ல் காதர் பாட்சாவுடன் திருமணம்: சலாமியா பானு தொடர்கிறார், “இந்த நிலையில் தஸ்லிமா தனது உறவினர் பையன் ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைக்கிறேன் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த மே மாதம் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு அவரை பிடிக்கவில்லை என்று கூறினேன். ஆனால் அவர் எனது தாய், தந்தையரின் அனுமதி பெற்று தன்னை காதர்பாட்சா என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தான் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு வங்கியில் வேலை செய்வதாக கூறினார். அப்போது அவர், என்னுடைய உறவினர் காதர் பாட்சா என்பவர் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறினார்[8]. மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் காதர்பாட்சா (32). தொடர்ந்து தஸ்லிமா எனது பெற்றோருடன் பேசி, சம்மதம் பெற்று எனக்கும், காதர் பாட்சாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு ஜூன் 26.2016ல் திருமணம் நடந்தது”.  ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, தஸ்லிமா தன்னை வற்புருத்தி கல்யாணம் செய்து வைத்தாள் என்கிறார்[9].

 8 பேரை மணந்தவர் கைது - Webdunia 22-07-2016

காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லைஎன்ற தோழி: சலாமியா பானு தொடர்கிறார், “அப்போது மணமகனின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி நான் தஸ்லிமாவிடம் கேட்டேன். அதற்கு காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லை என்றார். இவர் அருப்புக்கோட்டை வங்கியில் பணியாற்றுவதாக கூறி என்னை திருமணம் செய்தார். 2 பேரும் எனது தாய் வீட்டில் / புதூரில் உள்ள எங்களது வீட்டில் தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தோம். அப்போது கணவர் காதர்பாட்சா திருமணத்திற்காக வங்கியில் 40 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளேன் என்றார். இதைதொடர்ந்து ரம்ஜான் நோன்பு தொடங்கியது. அப்போது அவர் வேலை விஷயமாக ஒரு வாரம் வெளியே செல்வதும், வருவதுமாக இருந்தார்.

 8 பேரை மணந்தவர் கைது -தினகரன் - 22-07-2016

பணம், நகையோடு மாயமான காதர் பாட்சா:  சலாமியா பானு தொடர்கிறார்,திருமணமாகி பல நாட்கள் ஆகியும் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதுகுறித்து நான் கேட்ட போது, சரிவர பதில் கூறாமல் ஏமாற்றி வந்தார்[10]. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட். 2ஆம் தேதி காதர் பாட்சா வேலை வி‌ஷயமாக வெளியூர் செல்வதாக கூறி சென்றார்[11]. பின்பு என்னிடம் இருந்த 3 லட்சம் ரூபாய், 8 பவுன் நகை, .டி.எம்., கார்டுகளை எடுத்துச் சென்றார். .டி.எம்., கார்டை பயன்படுத்தி 35 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, ஊரில் இருந்து திரும்பி வந்தவுடன் கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். அதன்பின்னர் ரம்ஜானுக்கு முதல்நாள் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது செல்போன்சுவிட்ச் ஆப்செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் வைத்திருந்த 5 செல்போன் எண்களுக்கும் மாறி, மாறி போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவருக்கு ஏதேனும் ஆகி இருக்குமோ என்று எனக்கு பயம் வந்து, தஸ்லிமாவிடம் கேட்டேன். அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] தினமலர், 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் திண்டுக்கல்லில் மோசடி : தனிப்படை போலீசார் தேடல், ஆகஸ்ட்.22 2015: 23.56

[2] தினகரன், 7 பெண்களை மணமுடித்தகல்யாண மன்னன்கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை, Date: 2016-07-25@ 02:00:17.

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=233498

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1590948

[5] வெதுனியா, 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த வாலிபர், வெள்ளி, 22 ஜூலை 2016 (02:05 IST).

[6] தினத்தந்தி, நகை, பணத்துடன் மாயமாகி விட்டார்: 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 12:29 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 5:00 AM IST.

[7] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/woman-petition-on-her-husband-he-who-married-many-women-116072200004_1.html

[9] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[10] தமிழ்முரசு, 8 பெண்களை மணம்புரிந்த கல்யாணராமன் மீது புகார், 23 Jul 2016

[11] http://www.tamilmurasu.com.sg/2016/07/23/216412367-3931.html

கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது – பின்னணி என்ன?

ஜனவரி 31, 2016

கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது பின்னணி என்ன?

 தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டுகளுடன்

காரில் சென்று கொண்டே கள்ளநோட்டைக் கொடுத்து தின்பண்டங்கள் வாங்கிய கூட்டம்: தமிழக ஊடகங்கள் வழக்கம் போல, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் மதுரை ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு 29-01-2016 அன்று நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் வந்தது, கடையில் இருந்த சிறுவனிடம் ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து ரூ.60க்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு மீதி பணத்தை வாங்கி சென்றது, தொடர்ந்து அடுத்துள்ள உள்ள மாடசாமி என்பவரது  மிக்சர் கடையிலும் ஆயிரம் ரூபாயை கொடுத்து  ரூ.80-க்குப் திண்பண்டம் வாங்கி மாற்றி சென்றது[1], இதேபோல் அண்ணாசிலை அருகில் உள்ள பழக்கடை ஓன்றிலும் இவ்வாறு செய்தது, இதனால் சந்தேகமடைந்த பிஸ்ட் கடை உரிமையாளர் கண்ணனுக்கு ரூபாய் நோட்டு மீது சந்தேகம் ஏற்பட்டது, அருகிலுள்ள தனியார் வங்கிக்கு / எதிரே உள்ள ஐ.சி.ஐ.சி. வங்கியில் சென்றது, அந்த ஆயிரம்  ரூபாய் நோட்டை காட்டியது, சோதனையில் அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது, என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர். பிறகு, இதுபற்றி கண்ணன் போலீசில் புகார் செய்தார்[2] என்று தொடர்ந்தன.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு. பறிமுதல், 4 பேர் கைது

போலீஸார் சோதனையில் கார் பிடிபட்டது: திருப்புத்தூர் டவுன் போலீசார் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் கள்ளநோட்டு கும்பல் குறித்து மைக்கில் தெரிவித்து உஷார்படுத்தினர். எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால், இந்த குறிப்பிட்ட காரும் அவ்வழியாகச் சென்றது. அப்பொழுது, அந்த வழியாக காரில் வந்த கள்ளநோட்டு  கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து கள்ளரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி 30 ஆயிரம் ரூபாய், மற்றும் அவர்கள் வந்த கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[3]. காரில் இருந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்து  எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு. பறிமுதல்

விசாரணையின் போது வெளிவந்த விவரங்கள்: போலீஸ் விசாரணையில், அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன.

  1. தஞ்சாவூரைச் சேர்ந்த அன்சாரி மகன் முகமது ஸாகிப் (27) என்று தினமணியும்/ தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாநகர் முகமதுஹனீப் (34) என்று தினகரனும் கூறுகின்றன[4],
  2. புதுத்தெரு அகமது மகன்அப்துல்லா (35),
  3. ராஜா முகமது மகன்அஜ்மல் (20),
  4. பகுர்தீன் மகன்மீரான்முகைதீன் (32)

என தெரியவந்தது[5].  அவர்களிடமிருந்து கள்ளரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரான அமீர் அப்பாஸ் என்பவரது கார் என்பதும், மருத்துவமனைக்கு செல்வதாக கூறி அவரிடம் காரை வாங்கி, கள்ள நோட்டுகளை கடத்தி வந்து அபிராமபட்டினத்திலிருந்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது[6]. அவர்களிடம் திருப்பத்தூர் ஆய்வாளர் செங்குட்டுவன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்[7].

தவ்ஹீத் ஜமா-அத் சின்னம்

தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது: இவ்வாறு தலைப்பிட்டு, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் வந்த கார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ அணிச் செயலருக்கு சொந்தமானது என்பதும், அவரிடம் இரவல் வாங்கிக் கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது[8]. இவர்களுக்கு கள்ளநோட்டைக் கொடுத்த முக்கிய நபர் மன்னார்குடியில் வசிப்பது தெரியவந்துள்ளது. எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, அவரைத் தேடி போலீசார் மன்னார்குடிக்கு சென்றுள்ளனர்[9]. காரை எந்த காரணத்திற்கு, யாரிடமிருந்து வாங்கி வந்தாலும், கள்ளநோட்டு விநியோகத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டதும், அதே காரில் கள்ளநோட்டுகள் பிடிபட்டதும் மறுக்கமுடியாது. இது முஸ்லிம்கள் பிரச்சினையல்ல, பொது பிரச்சினை என்று சொல்லமுடியாத அளவிற்கு, முஸ்லிம்கள் தான் ஈடுபட்டுள்ளனர்.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு

முஸ்லிம்களின் எச்சரிக்கை: அதிரை எக்ஸ்பிரஸ் என்ற முஸ்லிம் இணைதளம், “அதிரையில் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் கள்ள நோட்டு கும்பல் வியாபாரிகளிடம் கள்ள நோட்டுகளை கொடுத்து அவர்களிடம் பொருள்களை வாங்கி செல்லும் அவலம் தொடர்ந்து அதிரையில் ஒரு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று கொண்டு இருப்பதாக கூறபடுகிறது[10]. 500ரூ மற்றும் 1000 ரூபாய்கள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது. குறிப்பாக பெண்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.  இதில் அதிரை பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்,” என்று அதே நாளில் வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது[11].  அதிராமபட்டினம் என்பதனை முஸ்லிம்கள் அதிரை என்று சொல்லிவருகின்றனர். இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாநகர் முகமதுஹனீப் (34). இங்கு, “குறிப்பாக பெண்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது” என்றுள்ளது. இங்கு சிறுவனிடம் கள்ளநோட்டு கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றுள்ளது.

காலைமலர், தவ்ஹித் கார் கள்ளநோட்டு

தவ்ஹீத் ஜமாஅத் கார் பறிமுதலாநடந்தது என்ன?[12]: காலைமலர் என்ர இணைதளத்தில், இத்தகைய மறுப்பு காணப்படுகிறது, “புதுக்கோட்டை மாவட்ட TNTJ நிர்வாகியின் காரை மதுரையிலுள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்வதாக கூறி காரை இரவலாக வாங்கியுள்ளனர். ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் பரபரப்பான சூழலிலும் மனிதநேய அடிப்படையில் காரை நோயாளிக்காக கொடுத்தார் TNTJ மாவட்ட நிர்வாகி, இதுதான் நடந்த சம்பவம், இந்த சம்பவத்திற்கும் TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை[13]. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் கும்பகோணத்தில் TNTJ நடத்திய முதல் மாநில மாநாட்டின் போதும் அன்றைய தினம் ரயில் நிலையத்தை தகர்க்க TNTJ சதி என்று அன்றைய மாநில துணைப்பொதுச்செயலாளர் A.S. அலாவுதீன் கடிதம் எழுதியதாக சன் டீவி பொய் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ? அந்த சம்பவத்தை வைத்து அவதூறு பரப்பினார்கள் நினைவிருக்கிறதா? அதேப்போன்று இந்த சம்பவத்தையும் வைத்து மாநாட்டை சீர்குலைக்க அயோக்கியர்கள் முகநூலில் அவதூறு பரப்புகிறார்கள்.அயோக்கியர்களின் அவதூறை அடுத்த சில மணிநேரத்தில் அது பொய் என நிரூபனம் ஆனது”. அதாவது, “இந்த சம்பவத்திற்கும் TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை”, என்கிறதே தவிர, முஸ்லிம்களுக்கும் கள்ளநோட்டு பட்டுவாடா, விநியோகம் முதலியவற்றிற்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அப்படியென்றால், இது அவர்களுக்குள் உள்ள பிரச்சினை போன்று காட்டிக் கொள்ளப்பார்க்கிறார்களா?

 

© வேதபிரகாஷ்

31-01-2016


 

[1] தினமணி, திருப்பத்தூரில் கள்ள நோட்டு கும்பல் கைது, By திருப்பத்தூர், First Published : 29 January 2016 01:38 AM IST.

[2] தமிழ் முரசு, கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது, 1/29/2016 4:42:49 PM

[3] தினகரன், கள்ளநோட்டு கும்பல் கைது, பதிவு செய்த நேரம்:2016-01-29 10:06:08

[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=531507&cat=504

[5] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=87309

[6] – See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=87309#sthash.AlvR6D0J.dpuf

[7]http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2016/01/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/article3249987.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1444690

[9] தினமலர், கள்ளநோட்டு கும்பலை பிடிக்க மன்னார்குடிக்கு போலீஸ் விரைந்தது, ஜனவரி.29.2016:23.51.

[10] அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை மக்களே உஷார், Posted by அதிரை எக்ஸ்பிரஸ் on 1/29/2016 07:54:00 PM.

[11] http://www.adiraixpress.in/2016/01/blog-post_470.html

[12]  காலைமலர், தவ்ஹீத் ஜமாஅத் கார் பறிமுதலாநடந்தது என்ன?, By Mathiyalagau, Jan 30, 2016.

[13] http://kaalaimalar.net/tntj-car-cheesed/

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

ஜூலை 17, 2011

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

 

குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.

 

வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].

 

உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது.  ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].

 

சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.

 

செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

 

தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.

 

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

 

தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.

 

26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.


[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (2)?

நவம்பர் 22, 2010

ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (2)?

ஷாகுல் சினிமா நடிகர்[1]: பிடிபட்ட கார் ஸ்கார்பியோ (டிஎன்65 கே 2223) ஷாகுல் என்பவனுக்கு சொந்தமானது. அவன் இந்தி படத்தில் வில்லனாக நடித்துள்ளானாம். சினிமாவில் நடித்தபோது எடுத்துக் கொண்ட படம் காரில் வைத்திருந்தானாம். காரைக் கைப்பற்றியபோது, இவ்விவரங்கள் தெரியவந்தன, மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளான  ராமநாதபுரம் அருகே சாத்தான்குளத்தைச் சேர்ந்த சாகுல், வாணி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷத், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன். மணிகண்டன் ஆகிய 3 பேரும் மலேசியாவுக்குத் தப்பி விட்டதாகவும், மற்றொரு குற்றவாளியான வாலாந்தரவை முனியசாமி தலைமறைவாக இருப்பதாகவும் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தெரிவித்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்: ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த ஆதிலாபானு, அவரது மகன் முகமது அஸ்லாம் (7), மகள் ஹாஜிராபானு (5) ஆகியோர் கடந்த 8ம் தேதியன்று கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை தொடர்பாக முதலில் ஆதிலாபானுவின் குடும்ப நண்பர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பிறகு வாடிப்பட்டி போலீசார் –

1.   வாலாந்தரவையை சேர்ந்த துரைராஜ் மகன் முனியசாமி (28),

2.   ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது உல்லா மகன் சேக்கஜத் என்ற சூடானி (19), (கீழக்கரை கல்லூரி பிகாம் 2ம் ஆண்டு மாணவர்),

3.   நயினா முகமது மகன் தமிமுல் அன்சாரி (21),

4.   பட்டினம்காத்தானை சேர்ந்த கலீம் மகன் சாநவாஸ் (20) (மதுரை தனியார் கல்லூரி பிகாம் 3ம் ஆண்டு மாணவர்),

5.   சாத்தான்குளம் அக்பர் அலி மகன் நாகூர் உசேன் (19)

உள்ளிட்ட 5 பேர் கைது செய்ய்பட்டனர். இப்படி கல்லூரியில் படிக்கும் / படித்த இளைஞர்கள் கொலையில் பங்கு கொண்டுள்ளது வியப்பக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோரும் கூலிப்படையினர் போலவோ அல்லது மணத்திற்காகவோ கொலை செய்பவர்களைப் போலத் தெரியவில்லை. குழந்தைகளையும் கொல்ல மனம் வந்துள்ளது என்றால், அந்த அளவிற்கு தூண்டுதலாக இருந்தது எதுவென்று தெரியவில்லை.

சாத்தான்குளம் கொலையும் அகமது-அமீத் பகையும்: அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன[2]. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சாகுல் அமீத் / ஷாகுல் ஹமீத், மண்டபம் யூனியன் முன்னாள் தலைவர் சீனிக்கட்டியின் உறவினர். ஆதிலாபானுவின் கணவர் முத்துசாமி இவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு சீனிக்கட்டியின் தங்கை மறுமகன் கொலை செய்யப்பட்டார். இவர் மலேசியாவில் வசிக்கும் ஷாகுல் அமீதுக்கு உறவினர் ஆவார். இக்கொலை வழக்கில் முத்துசாமி / அகமது முக்கிய சாட்சியாக இருந்தார். அரசு தரப்பு சாட்சியாக முத்துசாமி சேர்க்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முத்துசாமி பிறழ்சாட்சியம் அளித்தார். கொலையாளிகள் விடுதலையானார்கள். இதனால், முத்துசாமி மீது சாகுலுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதனால், அதாவது சாதகமாக சாட்சி சொல்ல மறுத்தவிட்டதால், ஷாகுல் அமீதுக்கும் முத்துசாமி-அகமதுக்கும் விரோதம் ஏற்பட்டது.

மலேசியாவிலும் தகராறு: மலேசியாவில் சீனிக்கட்டி உறவினர் சாகுலும், முத்துச்சாமியும் தனித்தனியாக ஆனால் எதிரிதிரே ஓட்டல் நடத்தி வந்துள்ளனர். சாகுல் மாமிசக்கறிக்கடையும், உணவகவும் வைத்துள்ளான்[3]. கோலாலம்பூரில் முத்துசாமியும், சாகுலும் இப்படி எதிரெதிரே ஓட்டல் நடத்தியதால், முன்விரோதம் இவர்களுக்குள் தொழில் போட்டியாகவும் மாறியது. இதனால், கடந்த சில மாதங்கள் முன்பு தகராறு ஏற்பட்டதில், சாகுல் தாக்கியதில் முத்துச்சாமி காயமடைந்தார். இது தெரிந்த ஆதிலாபானு கோபமடைந்து, ஆகஸ்ட் 31ம் தேதியன்று குழந்தைகளுடன் ராமநாதபுரம் திரும்பினார். இந்நிலையில் ஆதிலாபானு, ராமநாதபுரம் வந்த ஆதிலா, கணவரின் நண்பர் ஜெயக்குமாரிடம் மலேசியாவில் நடந்த தகராறு குறித்து கூறியுள்ளார். மேலும், கணவரை தாக்கிய சாகுலின் கையை, ஆள் வைத்து வெட்டாமல் விடமாட்டேன் என கூறியுள்ளார்[4]. [வேறொரு இடத்தில், ‘எனது கணவரை சாகுல் அடித்துள்ளார். அவரை கொலை செய்யாமல் விடமாட்டேன்‘ என்றுள்ளது]. ஆகையால், “கொலை செய்ய வேண்டும்” என குடும்ப நண்பர் ஜெயக்குமாரிடம் தெரிவித்தார். இத்தகவலை ஜெயக்குமார் அத்தை மகன் முனியசாமியிடம் தெரிவித்துள்ளார். முனியசாமி இதை மலேசியாவில் உள்ள சாகுலுக்கு தெரிவித்தார்.

சாகுல் அமீது நேராக தமிழகத்திற்கு வந்து திட்டமிட்டு ஆதிலா-குழந்ர்கைகளைக் கொன்றது[5]: அதனால் சாகுல் அமீது, ஆதிலாபானுவை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக மலேசியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்து, ஜெயக்குமாரை அணுகி ஆதிலாபானுவை கடத்தி பணம் பறிக்கலாம் என மூளைச்சலவை செய்தார். அதனால் ஜெயக்குமார் கடந்த 8ம் தேதியன்று மாருதி காரில் ஆதிலாபானுவை 2 குழந்தைகளுடன் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளைக்கு அழைத்து வந்தார். ஜெயக்குமார் வந்ததும் அவரை, சாகுல் தாக்கினார். ஜெயக்குமார் கீழே விழுந்தார்[6]. அங்கு ஸ்கார்பியோ காரில் தயாராக காத்திருந்த சாகுல், 3 பேரையும் காரில் வலுக்கட்டாயமாக ஸ்கார்பியோ (டிஎன்65 கே 2223) காரில் ஏற்றினர்[7].

பாட்டி பக்கீரம்மாள் தோட்டத்திற்கு சென்றது, கொன்றது, புதைத்தது: அந்த கார் சாகுலின் பாட்டி பக்கீரம்மாள் தோட்டத்துக்கு சென்றது. அங்கு காரில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை சத்தமாக வைத்தனர். சாகுல், நண்பர்கள் மணிவண்ணன், ஹர்சத், முனியசாமி ஆகியோருடன் சேர்ந்து ஆதிலாபானு மற்றும் 2 குழந்தைகளை தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தனர்[8]. அந்த தோட்டத்தில் 2 இடங்களில் குழி தோண்டினர். ஒரு குழியில் ஆதிலாபானுவையும், மற்றொரு குழியில் 2 குழந்தைகளையும் போட்டு புதைத்தனர். மறுநாள் காலையில் சாகுல் உள்பட 4 பேரும் சென்னை சென்றனர். அங்கிருந்து மலேசியா செல்ல முயன்றனர். அப்போது முனியசாமிக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை.

விஷயம் தெரிந்த பக்கிரியம்மாள் செய்த தகராறு: பாட்டி என்ற நிலையில், பேரனுக்கு இப்படியா உதவுவார் என்பதும் புதிராக உள்ளது. முதலில் கொலைசெய்ததே மாபெரும் குற்றம், அதிலும், இளம்பெண் மற்றும் இரு குழந்தைகளைக் கொன்றதுகூட மறந்து விட்டு, பிணங்களைப் பற்றிக் கவலைப்படும் பாட்டி வினோதம்தான். இந்நிலையில் தோட்டத்தில் உள்ள உடல்களை அகற்றுமாறு பக்கிரியம்மாள் போனில் சாகுலிடம் சண்டையிட்டுள்ளார். கடந்த 10-11-1010 தேதியன்று காலை சாகுல் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஒரு காரில் பரமக்குடி வந்தார். அங்கு தயாராக இருந்த –

1.   முனியசாமி (28),

2.   சேக்கஜத் என்ற சூடானி (19),

3.   தமிமுல் அன்சாரி (21),

4.   சாநவாஸ் (20)

5.   நாகூர் உசேன் (19)

ஆதிலா, குழந்தைகளை கொலை செய்ய வேதாரண்யம் சென்றனர். செல்லும் வழியில் மாருதி ஆம்னியை வாடகைக்கு பிடித்தனர். அதில், ஆதிலா, குழந்தைகளை ஏற்றினர். அவர்களுக்கு துணையாக முனியசாமியை ஏற்றினர். ஆம்னியை பின் தொடர்ந்து சென்றனர். வேதாரண்யத்தில் கொலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

தாய், மகன், மகள் கொலை செய்தது: ஆம்னியில் இருந்த ஆதிலா, குழந்தைகளை ஸ்கார்பியோவிற்கு மாற்றினர். முனியசாமியை, ஆம்னியில் ஏறி ஊருக்கு செல்லும்படி கூறினர். பின், ஸ்கார்பியோவில் இரவு எட்டு மணிக்கு சாத்தான்குளம் புறப்பட்டனர். வரும் வழியிலேயே ஆதிலா, குழந்தைகளின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி சாகுல், மூவரையும் கொலை செய்தார்[9]. சாகுலின் பாட்டி பக்கீரம்மாளுக்கு சொந்தமான சவுக்கு தோப்புக்கு வந்தனர். அங்கு மூவரையும் குழி தோண்டி புதைத்தனர். கொலை சம்பவம் பக்கீரம்மாளுக்கு தெரிந்தது. அவர், பிணத்தை அப்புறப்படுத்தும்படி எச்சரிக்கை விடுத்தார். இதனால் உடல்கள் தோண்டியெடுப்பு: கடந்த நவ., 10 அன்று இரவு மீண்டும் சவுக்கு தோப்புக்கு வந்து மூவர் உடலையும் தோண்டி எடுத்தனர்[10]. உடல்களை சுமோ காரில் (டிஎன்65 எப் 3999) ஏற்றி, கொடைக்கானல் டம்டம் பாறைக்கு புறப்பட்டனர். இதையெல்லாம் தெரிந்திருந்த அந்த பாட்டி எப்படி சும்மா இருந்தார்? மதுரை நகருக்குள் வராமல் அலங்காநல்லூர் வழியாக வாடிப்பட்டிக்கு வந்தபோது விடியத் தொடங்கி விட்டது. காரில் இருந்த பிணங்களில் துர்நாற்றம் வீசத்கொடங்கியது. எனவே போலீஸ் சோதனைச் சாவடிகளில் மாட்டிக் கொள்வோம் என பயந்து பிணங்களை துணியில் சுற்றி ஆண்டிபட்டி மற்றும் விராலிப்பட்டியில் வீசிச்சென்றுள்ளனர். அதன்பிறகு சாகுல், மணிகண்டன், ஹர்சத் 3 பேரும் மலேசியா தப்பியுள்ளனர் (12-11-2010)[11].

வேதபிரகாஷ்

© 22-11-2010

See first posting, here:

https://islamindia.wordpress.com/2010/11/21/1238-adhila-murder-gang-war-or-religious-persecution/


[3] He owned a mutton shop and operated a food stall in Kula Lumpur, http://www.bernama.com/bernama/v5/newsgeneral.php?id=544350

[5] Their interrogation revealed that Shakul, the prime accused, also running a hotel in Malaysia, had flown to India and plotted to eliminate Adhila due to a running feud with Ahamed. Adhila was angry with Shakul because he had attacked her husband Ahamed a few months ago, an investigating officer said.

[6] ஜெயக்குமார் கூறியுள்ளதில் வேறுபாடு காணப்படுகிறது. கொலை நடந்ததே தஎரியாது என்றும் கூறியிருப்பது நோக்கத்தக்கது.

[8] கீழேயுள்ள மற்றொரு வர்ணனை மாறுபட்டிருப்பதை காணலாம். அதாவது கொலைசெய்யப்பட்ட இடத்தை மாற்றிக் காட்டப்படுகிறது.

[9] மேலேயுள்ள மற்றொரு வர்ணனை மாறுபட்டிருப்பதை காணலாம். அதாவது கொலைசெய்யப்பட்ட இடத்தை மாற்றிக் காட்டப்படுகிறது.

[10] மேலே குறிப்பிட்டபடியுள்ள, “கடந்த 10-11-1010 தேதியன்று காலை சாகுல் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஒரு காரில் பரமக்குடி வந்தார்”, என்பது முரணாக இருக்கிறது. இல்லை அதிகாலை வந்து மாலையில் கொலைசெய்து, இரவுக்கு வந்திருக்க வேண்டும்.

[11]தினகரன்,  கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது, 21-11-2010, http://www.dinakaran.com/highdetail.aspx?id=20857&id1=13