Archive for the ‘கிச்சான்’ category

பெங்களூரு குண்டுவெடிப்பு – 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

ஒக்ரோபர் 20, 2013

பெங்களூரு குண்டுவெடிப்பு – 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

Malleswaram blast 04-2013

ஏப்ரல் 17, 2013 அன்று பிஜேபி அலுவலகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பில் 18 பேர் காயமடைந்தனர்; 23 வாகனங்கள் நாசமடைந்தன; 56 கட்டிடங்கள் சேதமடைந்தன. அதில் கீழ்கண்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது[1].

poi valakku copy

எண் பெயர் பெயர் / வயது இடம் / ஊர்
1 ஜே. பாஷிர் என்ற பஷீர் J Baasir alias Basheer, 30; (from Tirunelveli);
2 எம். கிச்சன் புஹாரி என்கின்ற புகாரி M Kichan Buhari alias Bugari, 38; (from Tirunelveli);
3 எம். முஹம்மது சலீம் M Mohammed Salin, 30; (from Tirunelveli);
4 பன்னா இஸ்மாயில் என்ற முஹம்மது இஸ்மாயில் Panna Ismail alias Mohammed Ismail, 30;  (from Tirunelveli);
5 பறவை பாஷா Paravai Basha, 32, (from Tirunelveli);
6 ஆலி கான் குட்டி Ali Khan Kutti (from Tirunelveli);
7 செயிட் அஸ்கர் அலி என்ற செயிட் Sait Asgar Ali alias Sait, 29;  (from Coimbatore)
8 எஸ். ரஹமத்துல்லா S Rahmatulla, 32; (from Coimbatore)
9 வலயில் ஹக்கீம் என்ற ஹக்கீம் Valayil Hakeem alias Hakeem, 32;  (from Coimbatore)
10 சையது சுலைமான் என்ற தென்காசி சுலைமான் Syed Suleiman alias Tenkasi Suleiman, 24;  (from Coimbatore)
11 மன் பாய் என்ற சுலைமான் என்ற ஓலங்கோ Man Bhai alias Suleiman alias Olango, 31;  (from Coimbatore)
12 ஜுல்பிகர் அலி Zulfikar Ali, 24 (from Coimbatore)
13 பிலால் மாலிக் Bilal Malik alias Bilal, 28 (from Madurai)
14 பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன் Fakruddin alias Police Fakruddin, 30 (from Madurai).

Tamil Jihadis used woman-children as shield

7,445 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிக்கையில், 200 ஆவணங்கள் மற்றும் 260 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சிலர் அல்-உம்மா போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்வியக்கம் 1998ம் ஆண்டில் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நடத்தியது. அதுவும் அத்வானியைக் குறிவைத்ததாகும். அக்டோபர் 2, 2013 அன்று ஆந்திரபிரதேசத்திலிருந்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் பக்ருத்தீன் பிடிபட்டனர். பறவை பாஷா மற்றும் அலி கான் குட்டி இருவரும் இதுவரை பிடிபடவில்லை[2].

Malleswaram blast 04-2013.2

இந்தியகுற்றவியல்சட்டம், வெடிப்பொருட்கள்சட்டம், 1908, பொதுஇடங்களுக்குசேதம்ஏற்படுத்துதல்தடுப்புசட்டம் 1984 மற்றும்சட்டவிரோதமானகூடுதல்தடுப்புசட்டம் 1967 இவற்றின் கீழ் வழக்கு போட்டுள்ளது போதுமா?: 20-10-2013 சனிக்கிழமை நகர முதன்மை கூடுதல் மாஜிஸ்ட்ரேட் முன்னர், ஓம்காரைய்யா, ஜே.சி.நகர் ACP மற்றும் புலன் விசாரிக்கும் அதிகாரி மூலம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது. வையாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப் பட்ட இந்த வழக்கில், இந்திய குற்றவியல் சட்டம், வெடிப்பொருட்கள் சட்டம், 1908, பொது இடங்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் தடுப்பு சட்டம் 1984 மற்றும் சட்டவிரோதமான கூடுதல் தடுப்பு சட்டம் 1967 [IPC sections 120 (B), 121, 121 (A), 123, 332, 307, 435 and 201 and under Section 3, 4, 5 and 6 of The Explosive Substances Act, 1908 and under Section 4 of Prevention of Damage to Public Property Act 1984 and under Section 10, 13, 15, 16, 17, 18, 19 and 20 of Unlawful Activities (Prevention) Act, 1967] முதலியவற்றின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது[3]. குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்றெல்லாம் இருக்கும் போது, இப்படி வழக்கு போட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில், ஏற்கெனவே, ஆதாரங்கள் இல்லை, என்று இத்தகைய ஜிஹாதிகள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் அல்லது ஐந்தாண்டுகள் சிறை தண்டனை பெற்று, பிறகு வெளியே வந்தவுடன், மறுபடியும் அதே குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்று ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு?

Malleswaram blast 04-2013.3

கைது செய்யப் பட்ட நிலையிலேயே “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்ட முறை: இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்யப் பட்டபோதே, குற்றஞ்சாட்டப் பட்டவர்கள், “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் என்று பலவித முறைகளை, அவர்களின் மனைவிகள் மூலம் செய்விக்கப் பட்டன. ஏதோ தங்கள் கணவன்மார்களை அநியாயமாக கைது செய்யப் பட்டுள்ளனர், அவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என்றெல்லாம் வாதிடப் பட்டன. “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் தாராளமாக இவர்களுக்கு விளம்பரத்துடன் புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டது. ஆனால், படுகாயம் அடைந்தவர்கள் பற்றி கவலைப் படவில்லை. ஷகீல் அஹமது, திவிஜய் சிங் போன்ற காங்கிரஸ்காரர்கள் மற்றும் இதர உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்தது, இதனால் பிஜேபிக்கு தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் என்றெல்லாம் வாய்கூசாமல், மனசாட்சி இல்லாமல் பேசினர், எழுதினர். பிரச்சாரம் செய்ய வந்த சோனியாவும் இதைப் பற்றிக் கண்டிக்கவில்லை. மாறாக, ஊழலைப் பற்றி பேசி, வெற்றியும் பெற்றனர். அதர்கு உள்ளூர் அறிவு-ஜீவிகள் தீவிரவாதத்தையும் மறந்து காங்கிரஸுக்குத் துணை போயினர். மோசமாக விமர்சனம் செயத காங்கிரஸ் தலைவர்களைக் கண்டிக்கவில்லை. அதாவது, சாமர்த்தியமாக குண்டுவெடிப்பை ஆதரித்தனர் என்றேயாகியது. அதனால் தான், குண்டு வைத்தவர்கள், இத்தகைய முரண்பாட்டை, சித்தாந்த குழப்பங்களை, இந்துக்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

Auditor Ramesh murder - moaned by wife etc

தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களின் நிலையை மறப்பது, மறைப்பது, மறுப்பது: சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்கக் கூடாது, செய்யப் படக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், குண்டுவெடிப்பில் அநியாயமாகக் கொல்லப் பட்டவர்கள், படுகாயம் அடைந்தவர்கள், அவர்களின் மனைவி-மக்கள் முதலோரின் கதி என்ன என்பதை, இவர்கள் யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. அப்படி மனிதநேயம், ஈரம், உணர்வு, மனசாட்சி முதலியவை உள்ளன, இருந்திருந்தன என்றால், அவர்கள் தங்களது கணவன்மார்களுக்கு, இத்தகைய குரூரக் குற்றங்களை செய்யாதே, குண்டுகளை வைக்காதே, அப்பாவி மக்களைக் கொல்லாதே என்றெல்லாம் அறிவுரை கூறியிருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும். அப்பொழுதெ இவையெல்லாமே தவிர்க்கப் பாட்டிருக்கக் கூடும். தொடர்ந்து, இவ்வாறு ஜிஹாத் என்ற மதவெறியோடு இந்துக்களைக் கொல்வோம் என்று வெளிப்படையாக குரூரக்குற்றங்கள், கொலைகள் முதலியவற்றை செய்து கொண்டிருந்தால், மக்களுக்கு அவர்கள் எதை உணர்த்த செய்கிறார்கள் என்பதை அவர்கள் தாம் புரிந்து கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

20-10-2013


தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு!

ஒக்ரோபர் 5, 2013

தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு!

Dinamalar-TN-Jihadis-arrest-Graphicsதிருப்பதி அருகே முஜாஹித்தீன் தீவிரவாதிகள்: ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் தமிழக போலீ­சார் 2 பேர் ­கா­ய­முற்­ற­னர். முன்­ன­தா­க ­போ­லீ­சார் உயிரிழந்ததா­க ­கூ­றப்­பட்­ட­து. தொடர்ந்து 10 மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. தமிழகத்தில் பிஜேபி பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என டில்லியில் உள்ள அனைத்து பிஜேபி நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

TN POLICE announcementபிரம்மோஸ்தவம் நடக்கும் வேலையில் புத்தூரில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மறைவிடம்: இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் நேற்று வெள்ளிக்கிழமை பதுங்கியிருந்த போலீஸ் பக்ரூதின் என்பவனை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின்படி இன்று காலையில் சென்னை அருகே ஆந்திர எல்லையான புத்தூரில் (சித்தூர் மாவட்டம்) பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிகளுடன் மேதரா வீதியில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். இங்கு போலீசார் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் போலீசார் நோக்கி சுட்டனர். க­த­வை ­ தட்டிய­போ­து இரண்டு  ­ ­போ­லீ­சா­ரை ­அ­ரி­வா­ளால் ­வெட்­டி­னர், இ­தில் ­இ­ரு­வ­ரும் படுகாயமுற்­ற­­னர். இதனையடுத்து போலீசாருக்கும், பயங்கரவாதிகள் இடையேயும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

Abubakkar Siddique - TN police noticeதில்லியிலிருந்து எஸ்-ஐ.டி படை வந்தது: இன்று காலையில் தில்லியிலிருந்து எஸ்.ஐ.டி படை வந்தது. மத்திய அரசின் ஆக்டோபஸ் என்ற படையும், தமிழக, ஆந்திர போலீஸ் படையும் இணைந்து இந்த ஆப்ரேஷனை நடத்தின[2]. இந்த துப்பாக்கிச்சண்டையில் தமிழக ­போ­லீஸ்கா­ரர் ­ 2 பேர் காயமுற்றனர். முன்­ன­தா­க போலீசார் ­இ­றந்­த­தா­க கூறப்பட்ட­து[3]. போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து போனில் பேசிவந்தது தெரிந்தது. ஜிஹாதிகள் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒடரு வீட்டில் பதுங்கியுள்ளனர். உள்ளே ஒருவேளை குண்டுக்லள் வைத்திருக்கக் கூடும் என்பதால், போலீசாரார் அதிரடியாக உள்ளே நுழைய பயப்படுகின்றன்சர் என்று தெலுங்கு ஊடகங்கள் எடுத்துக் காட்டின.

CBCID_NOTICEதமிழகத்தின் அல்முஜாகிதீன் படை[4]: மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், “போலீஸ்’ பக்ருதீனும், “அல்முஜாகிதீன் படை” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது அல்-உம்மா, அல்-முஜீஹித்தீனாக மாறியது போலும். இதன் உறுப்பினர்கள், “தியாகப்படை” என்றும் அழைக்கப்படுகின்றனர். அதாவது ஜிஹாத் தமிழகத்தில் “தியாகத்தோடு” செயல்படுவது மெய்ப்பிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திற்கு இவ்விதமாகத்தான் இஸ்லாமிய தீவிரவாதம் இறக்குமதி செய்யப்பட வேண்டும் போலிருக்கிறது. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவன் மாலிக். இவனை கண்டு பிடித்து தருபவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

Dinamalar-TN-Jihadis-arrest.6பீடிசுற்றும் தொழிலாளிகள் போர்வையில் ஜிஹாதி குடும்பங்கள்: போலீஸ் விசாரணை அல்-உம்மா பயங்கரவாதி பிலால்மாலிக், இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் தற்போது குடியிருக்கும் வீட்டை, அங்குள்ள நண்பர் உதவியுடன் பீடிசுற்றும் தொழிலாளிகள் என்ற போர்வையில் அவ்வீட்டை வாடகைக்கு பிடித்துள்ளான்[5]. பீடி உற்பத்தி செய்யும் முஸ்லிம் தொழிற்சாலை அதிபர்கள் இந்துவிரோத பிரசுரங்களுக்கு உதவுகிறார்கள் என்பதை முந்த்யைய ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த இடம்  “முஸ்லிம் காலனி” என்றே அழைக்கப்படுகிறது. குடியேறியபோது அவனுடன் நான்கு குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதாவது “தியாகம்” செய்யவேண்டிய நிலை வரும் போது, “குடும்பங்கள்” சென்று விடும் போலிருக்கிறது. பிலால்மாலிக்கின் குடும்பத்துனருடன் மேலும் சிலர் மட்டும் தற்போது அங்கு தங்கி உள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து, பிலால்மாலிக்குடன் தங்கியிருந்தவர்கள் குறித்த விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர். ஜிஹாதிகளுக்கு இப்படித்தான் “லாஜிஸ்டிக்ஸ்” கிடைக்கிறது போலும்!

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.7தமிழக ஜிஹாதிகள்-போலீசார் துப்பாக்கி சண்டை: தமிழக-ஆந்திர எல்லை கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று துப்பாக்கி முனையில் பக்ருதீன் பிடிபட்டான். இதற்குள் மற்ற தீவிரவாதிகள் சித்தூரில், ஒரு வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், தமிழக போலீசார், அவ்வீட்டை வளைத்தனர். விசயம் தெரிந்த தமிழக ஜிஹாதிகள், போலீசார் மீது தாக்க ஆரம்பித்தனர். துப்பாக்கிகளால்  சுட்டதாகவும் தெரிகிறது[6]. ஒரு போலீஸ்காரரை – சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லட்சுமண மூர்த்தி – தமிழக ஜிஹாதி குத்தித் தப்பிச் சென்றுவிட்டதாக ஆங்கில செனல்களில் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றது. போலீஸ் உடனே இறந்துவிட்டதாகத் தெரிகிறது, இன்னொரு போலீசார் காயமடைந்துள்ளார். சுமார் 30 போலீசார், இந்த வேட்டையில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தமிழக-ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். என்.டி.டிவி இதனை என்கவுன்டர் என்று வர்ணித்துள்ளது[7]. அதாவது, சட்டரீதில் ஜிஹாதிகளுக்கு உதவ ஆலோசனையை சூசகமாகத் தெரிவிக்கிறது. உடனே, ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிடுவார் என்பது தெரிய வரும்.

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.2பிலால்மாலிக்குடன் போலீசார் பேச்சு-வார்த்தை[8]: ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருக்கும் பைப் வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அல் உம்மா பயங்கரவாதியுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையா, பேரமா, உடன் படிக்கையா என்பது பிறகு தான் தெரிய வரும். அவனை உயிருடன் பிடிக்க வேண்டும் என முடிவெடுத்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பிலால்மாலிக்கை சரண் அடையும்படி போலீசார் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவன் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. பிறகு,வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பிலால்மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்தனர்[9]. இதன்மூலம், 12 மணி நேர அதிரடி நடவடிக்கை நிறைவடைந்தது. முன்னதாக, வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண், மூன்று குழந்தைகளை வெளியில் அனுப்பிய பிலால்மாலிக், பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பன்னா இஸ்மாயிலுடன் சரண் அடைந்தான். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. எப்படியிருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப் படுவர். உபசரிக்கப் படுவர். அதற்குள் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்படும்!

® வேதபிரகாஷ்

05-10-2013


[5] According to the local people, four people, who claimed to be working in the beedi manufacturing industry, had taken the house on rent a few months ago. Locals said that they had no information about these people as they only came back home late in the night.

http://www.rediff.com/news/report/andhra-pradesh-police-raid-terrorist-hideout-constable-killed/20131005.htm

[7] Firing between suspected militants and police in Andhra Pradesh; one cop killed: report

HyderabadA policeman has been killed and another injured in an on-going encounter with suspected militants in the Chittoor district of Andhra Pradesh, according to reports. A team of 30 policemen have reportedly surrounded the men, who are believed to be heavily armed.  Police sources say the men are suspected to be behind the killing of Bharatiya Janata Party’s Tamil Nadu unit general secretary V Ramesh, who was attacked fatally with sharp-edged weapons near his house in July.

http://www.ndtv.com/article/south/firing-between-suspected-militants-and-police-in-andhra-pradesh-one-cop-killed-report-428105

மேலப்பாளையத்தில் மறுபடியும் முஸ்லிம்களின் வீடுகள்-அலுவகங்கங்களில் சோதனை, வெடிப்பொருட்கள் பறிமுதல், கைது, இத்யாதி (1)

ஓகஸ்ட் 1, 2013

மேலப்பாளையத்தில் மறுபடியும் முஸ்லிம்களின் வீடுகள்-அலுவகங்கங்களில் சோதனை, வெடிப்பொருட்கள் பறிமுதல், கைது, இத்யாதி (1)

CBCID raid at Kichan Buhari office

மேலப்பாளையத்தில் சிலர், வெடிகுண்டு பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது: இந்து அமைப்பு தலைவர்கள் மற்றும் பா.ஜ., பிரமுகர் கொலைகளில், பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, “பறவை’ பாதுஷா, கிச்சான் புகாரி ஆகியோர், மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இருவரிடமும் விசாரிக்க, பெங்களூருவில், தமிழக எஸ்.ஐ.டி., போலீசார் முகாமிட்டுள்ளனர். சேலம் பா.ஜ., பிரமுகர், ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவத்துக்கு பின், தமிழக உளவு அமைப்புக்கள் தீவிர விசாரணையில் இறங்கியதால், திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் சிலர், வெடிகுண்டு பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகள் உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை (30-07-2013) சோதனை நடத்தினர்.

Five arrested in Melappalayam for hoarding explosives

மேலப்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த வெடிபொருள்கள் மற்றும்  142 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல்: மேலப்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 17.5 கிலோ வெடிபொருள்கள் மற்றும் 142 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கடந்த சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்[1]. அங்கு சோதனை நடத்திய போது, பெங்களூரு வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய, “பறவை’ பாதுஷா மற்றும் கிச்சான் புகாரியின் கூட்டாளிகள்,

  1. முகம்மது தாசிம், 33,
  2. கட்ட சாகுல், 38,
  3. நூரூல் ஹமீது, 22,
  4. அன்வர் பிஸ்மி, 20,
  5. சம்சுதீன், 20,

ஆகியோர், கைது செய்யப்பட்டனர்[2]. அவர்களிடம் இருந்து, வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர்களில் முகமது தாசிம் மற்றும் கட்ட சாகுல் ஆகிய இருவருக்கும் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றங்கள் செய்பவர்கள் தொடர்ந்து அதே குற்றங்களை செய்து வருகிறார்கள் என்பதை முன்னமே பலமுறை எடுத்துக் காட்டப்பட்டது. சேலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ், வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலைகளில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Meappaayam arrest Juy 2013

கொலை திட்டத்தை,  அரங்கேற்றுவதில் கிச்சான் புகாரி, “பறவை‘  பாதுஷா ஆகியோர்,  மூளையாக செயல்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளோம்  –  போலீஸ்: இவர்களிடம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில், எஸ்.ஐ.டி., அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிச்சான் புகாரி, “பறவை’ பாதுஷா ஆகியோரை, விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன் படி இன்று, “பறவை’ பாதுஷாவை, கஸ்டடியில் எடுக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக, அதிகாரிகள், பெங்களூருவில் முகாமிட்டு உள்ளனர். இது குறித்து, எஸ்.ஐ.டி., போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: “பெங்களூரு, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள கிச்சான் புகாரி, 2012ல், சேலம் மத்திய சிறையில், ஆறு மாதம் அடைக்கப்பட்டு இருந்தான். அப்போது, சேலம் உள்ளூர் ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பின், பெங்களூரு சிறைக்கு மாற்றப்பட்டான். சேலம் தொடர்பை, சாதகமாக பயன்படுத்திய கிச்சான் புகாரி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, கூட்டாளி, “பறவைபாதுஷாவுடன் சேர்ந்து, தமிழகத்தில், இந்து ஆதரவு அமைப்பு தலைவர்களை, கொல்ல திட்டத்தை வகுத்து, ஆதரவாளர்கள் மூலம், கொலை செய்து வந்துள்ளான். கொலை திட்டத்தை, அரங்கேற்றுவதில் கிச்சான் புகாரி, “பறவைபாதுஷா ஆகியோர், மூளையாக செயல்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளோம்[3]. இதில், இன்று, “பறவைபாதுஷாவையும், அதைத் தொடர்ந்து, கிச்சான் புகாரியையும் விசாரிக்க உள்ளோம். அதன் பின், மேலப்பாளையத்தில், வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, ஐந்து பேரை, தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளோம். இந்த விசாரணைக்கு பின்னரே, கொலையாளிகள் குறித்த முழு விவரங்களும் தெரிய வரும். இவர்களுக்கு உதவிய உள்ளூர் பிரமுகர்களைக் கண்டுபிடித்து, அவர்களிடம் விசாரணையும் முடிக்கப்பட்டு விட்டது[4]. இதில் சிலரை, குற்றவாளிகளாக உறுதி செய்துள்ளோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர்”, இவ்வாறு, அதிகாரி கூறினார்.

Five arrested in Melappalayam - Musims protest, argue

வீடுகளில் சோதனை  –  முஸ்லிம்களின் ஏதிர்ப்பு[5]: இந்நிலையில், மேலப்பாளையத்தில் 8 இடங்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் பிறைச்சந்திரன், சிறப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நாகராஜன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையை நடத்தினர்[6]. இந்த 8 இடங்களிலும் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், அங்கிருந்தவர்கள் வைத்திருந்த அனைத்து செல்போன்களையும் பரிசோதித்து, விவரங்களைப் பதிவு செய்து கொண்டனர். அப்போது பங்களாப்பா தெருவில் உள்ள வீட்டிலிருந்து 17.5 கிலோ வெடிபொருள்கள் (ஜெலட்டின் குச்சிகள்), 142 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெடிபொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது வீட்டின் உரிமையாளரான பெண்ணுக்குத் தெரியாது எனக் கூறப்படுகிறது[7]. அவரது உறவினரான அதே தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பிஸ்மி (20) என்பவர் அந்த பார்சலை கொண்டுவந்து, வெளிநாட்டில் உள்ள நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றும், சில நாள்கள் இங்கேயே இருக்கட்டும் என்றும் கூறி பார்சலை அந்த வீட்டில் வைத்தாராம்[8]. முகமது தாசிம், சாகுல் ஹமீது ஆகிய இருவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கிச்சான் புகாரியின் அலுவகமான CTS (சிறுபான்மை உதவி அறக்கட்டளை) மற்றும் SDPI கட்சியின் சாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் மனித நேயக்கட்சியின் மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் முதலியோரின் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டபோது, போலீசாருடன் வாதத்தில் ஈடுபட்டனர்[9]. TCM - Melappalayam search by CBCIDஅதனை அதிரடி சோதனை, மேலப்பாளையத்தில் பரபரப்பு, கைது வேட்டை என்றெல்லாம் செய்திகள் வெளியிட்டன. இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம்கள் முதலில் தீவிரவாத நிகழ்சிகள் நடப்பதை ஏன் தடுக்காமல் இருக்கிறார்கள்?

Bomb plnters to kill Advani

ஜனவரி  2009ல் கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரியின் கையாட்கள்ஷேக்பாதுஷா, அபுதாகிர்: நெல்லை மாவட்டம் புளியரை சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் கடந்த 26ம் தேதி பண்பொழி தைக்கா முக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மேலப்பாளையத்தை சேர்ந்த சேட் பாதுஷா, பெரிய குப்தா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அபுதாகீர் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அவர்கள் வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் ரசாயான பொருட்கள் வைத்திருந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்து அமைப்பை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்தவற்காக மேலப்பாளையத்தை சேர்ந்த கி்ச்சான்புகாரி கேட்டு கொண்டதற்கு இணங்க மேக்கரையை சேர்ந்த கோபால் என்பவரிடம் இருந்து வெடிகுண்டு தாயரிக்க உதவும் ரசாயான பொருட்களை வாங்கி வந்ததாக அவர்கள் கூறினர்[10]. இதையடுத்து மேலப்பாளையத்தை சேர்ந்த அபுதாகீர், சேட் பாதுஷா, கீச்சான் புகாரி, முல்லன், செய்யதலி, மேக்கரையை சேர்ந்த சாதிக் அலி, ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் பரிந்துரையின் பேரில் இவர்கள் 5 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்தார்[11]. 2009யே, “இந்து அமைப்பை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்தவற்காக மேலப்பாளையத்தை சேர்ந்த கி்ச்சான்புகாரி கேட்டு கொண்டதற்கு இணங்க மேக்கரையை சேர்ந்த கோபால் என்பவரிடம் இருந்து வெடிகுண்டு தாயரிக்க உதவும் ரசாயான பொருட்களை வாங்கி வந்ததாக” முஸிம்கள் சொன்னபோதே, ஏன் விசாரணை, சோதனை முதலியவை முடுக்கி விடப்படவில்லை? திமுக ஆட்சியில் இருந்ததால், ஓட்டுகள் போய்விட்டும் என்று கடமை செய்யாமல் போலீஸார் தடுக்கப்பட்டனரா? இப்பொழுது, ஜெயலலிதா வந்தவுடன் போலீஸார் வேலை செய்கின்றனரா? 2009-2013 ஆண்டுகளில் எவ்வளவோ செய்திருக்கலாமே? ஒருவேளை இக்கொலகளே தடுக்கப் பட்டிருக்கலாமே? ஆகவே, இந்திய அரசியவாதிகள் தீவிரவாதம் என்று வரும்போது, “ஓட்டுவங்கி” பேரங்களை விடுத்து கடமைகளை செய்யவேண்டும். இப்தர் பார்ட்டிகள், நடத்தி கஞ்சி குடித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.

TMMK notice - not to attack non-muslim places of worship

2002  ஹாமித் கைது  –  தமுமுகவின் அறிக்கை: “ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும்” என்ற தலைப்பில், கீழ்கண்ட நோட்டீஸ் கணப்படுகிறது[12]. முன்னாள் மாநிலத் தலைவருமான மவ்லவி ஹாமித் பக்ரி 2002 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதம் பிறை 27 ல் (2/12/2002) கைது செய்யப்பட்டார்[13]. முக்கியமாக அதில், “அப்பாவிகளைக் கொல்வதையும், பிற மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவதையும் யாரேனும் நியாயப்படுத்தினால் அவர்கள் இறைவன் முன்லையிலும் குற்றவாளிகள் என்பதால் எள் முனையளவும் இத்தகையோருக்காக தமுமுக எந்த விதமான உதவியும் செய்யாது என்பதை திட்டவட்டமாக அறிவிக்கின்றோம்”, என்பது கவனிக்கத் தக்கது. “அப்பாவிகளைக் கொல்வதையும், பிற மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவதையும்…….”, என்றால் அவை எப்படி இஸ்லாத்தில் வந்துள்ளன என்று முதலில் ஆராய வேண்டும். ஆனால், சரித்திரம் ஏற்கெனவே முஸ்லிம்கள் ஏன் அப்படி செய்துள்ளனர் என்று எடுத்துக் காட்டியுள்ளது. “முஸ்லிம்களின் அரசவை நிகழ்சிகள்” என்பவற்றில் அவர்களே விளக்கமாக விவரித்துள்ளனர். ஆகவே, முஸ்லிம்கள் முதலில் அத்தகைய கொலைவெறியை தணிக்க வேண்டும், அது உள்ளவர்களைக் கண்டிக்க வேண்டும், ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். “இத்தகையோருக்காக தமுமுக எந்த விதமான உதவியும் செய்யாது” என்றுதான் சொல்கிறார்களே தவிர, அவ்வாறு செய்யாதே என்று உறுதியாக சொவதில்லை. வருடாவருடம், இத்தகைய கொலைகள், குண்டு வெடிப்புகள், வெடிப்பொருட்கள் பறிமுதல், கைது,…………..என்று நடந்து கொண்டிருப்பதால், முஸ்லீம் பெரியவர்கள் குறிப்பாக, இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் கூட்டாத்தாருடன் சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அத்தகைய, “தீவிரவாதிகளாக்கும் கூட்டாத்தார்” பற்றி தெரிய வரும்போது, முஸிம்கள் என்று அமைதி காப்பதை விடுத்து, போலீஸாருக்கு அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் தீவிரவாதம் அடங்கும், குறையும்.

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot

முஸ்லிம்கள்  இவ்வாறு  நடப்பதை  ஏன்  தடுக்காமல்  இருக்கிறார்கள்?: சிறையிருந்தே அரசியவாதிகள், குறிப்பாக –

  • இந்து தலைவர்கள் கொல்லப்படவேண்டும் என்பது,
  • வெடிப்பொருட்கள் சேகரிப்பது,
  • குண்டுகள் தயாரிப்பது,
  • பலிக்கடாக்களின் வீடுகள், இடங்கள் முதலியவற்றை நோட்டம் இடுவது,
  • விவரங்களை சேகரிப்பது,
  • பிறகு சமயம் பார்த்து குண்டுகள் வைப்பது
  • அல்லது தாக்கிக் கொலை செய்வது, ……………………..
  • அதற்காக பொருள் உதவி செய்வது.
  • முஸ்லிம்கள் என்பதால் அமைதியாக இருப்பது.

இதற்கு பெயர் தான் “ஸ்லீப்பர் செல்” என்பது. சிறையிலிருந்தே தீவிரவாத குரூரங்கள் நடத்தப் படுகின்றன என்றால், எப்படி முடியும்? அப்பாவி மக்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? முதலில் தாக்கப்படுபவர்கள் தாங்கள் தாக்கப்படப் போகிறோம் என்பதை எப்படி அறிவது? எப்பொழுதுமே தீவிரவாதிகளின் உரிமைகள் தாம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது, பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது,…………..ஆனால், தீவிரவாத குரூரங்களினால் பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பது கிடையாது.

வேதபிரகாஷ்

© 01-08-2013


[4] சிறப்பு நிருபர், தினமலர், கிச்சான்புகாரி, “பறவைபாதுஷாவிடம்விசாரணை: தமிழக  எஸ்..டி., போலீசார்பெங்களூருவில்முகாம், பதிவு செய்த நாள் : ஜூலை 30, 2013, 23:14 IST

[7] இது சஞ்சய் தத் வழக்கு போல உள்ளது. அதிலும், ஒரு இஸ்லாமிய பெண் இவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார். உச்சநீதி மன்றம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது.

[10] இந்து பிரமுகர்களை கொல்ல சதி-நெல்லையில் ஐவர் கைது Published: Monday, January 5, 2009, 11:21 [IST], Read more at: http://tamil.oneindia.in/news/2009/01/05/tn-five-arrested-for-conspiracy-to-kill-hindu-lead.html