Archive for the ‘கார்டூன்’ category

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

PAK-election women - 42 percentபலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?

PAK-election women canvass2பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

PAK-election women canvassing

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

PAK-election women voters

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].

PPP celebrate 2008 elections danceபாகிஸ்தானில்தேர்தல்திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

PPP celebrate 2008 elections

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

Ghous Ali Sha - cartoon Pak-ele-2013

© வேதபிரகாஷ்

11-05-2013


[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்திய சுதந்திரப் போரில் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்தை சூரையாடிய வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

ஓகஸ்ட் 15, 2012

இந்திய  சுதந்திரப்  போரில்  தியாகம்  புரிந்தவர்களின்  நினைவிடத்தை  சூரையாடிய 

வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

முஸ்லீம் இளைஞர்கள் வெறியுடன் அமர்ஜோதி ஜவான் நினைவகத்தை சேதப்படுத்தியது: மும்பையில் நடந்த கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்கள் சிறிதும் உண்மையினை உணராமல், இந்நாட்டின் தியாகிகளின் மகத்துவத்தை நினையாமல், வெறியுடன், வெறுப்புடன், காழ்ப்புடன் அமர் ஜோதி ஜவான் நினைவகத்தை கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்து சேதப்படுத்தினர்[1]. உடையாத “பைபர் கிளாஸ்” கண்ணடி பெட்டியையும் உடைத்து சூரையாடியுள்ளனர்[2]. அது மட்டுமல்லாது, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைகவசம் மற்றும் துப்பாக்கி முதலியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்[3]. மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இன்றைக்குள் அதனை சீர் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள், ஆனால் முடியவில்லை[4].

அத்தகைய வெறிக்குக் காரணம் என்ன – யார் அப்படி அவர்களை வெறி கொள்ள செய்தனர்?: அடுல் காம்ப்ளே என்ற “மிட்-டே” என்ற நாளிதழைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் எடுத்த புகைப்படங்களில், அந்த வெறிகொண்ட முஸ்லீம் இளைஞர்கள் பதிவாகியுள்ளார்கள். அவர்கள் செயல்படும் விதத்திலிருந்தே, அவர்கள் எந்த அளவிற்கு வெறிகொண்டுள்ளார்கள் என்பதனையறியலாம். அஜ்மல் கசாப் போன்று ஆக்ரோஷமாக உள்ளான் என்று பார்த்தவர்களே கூறுகிறார்கள்[5]. அந்த அளவிற்கு முஸ்லீம் இளைஞர்களை வெறிகொள்ளச் செய்வது யார்?  நாட்டின் மேன்மையை, வீரர்கள் சுதந்திரத்திற்காகத் தியாகம் புரிந்தத்தையும் அறியாமல் அப்படி கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்துள்ளார்கள் என்றால் அந்நிலை மாறவேண்டும். அவர்கள் திருந்த வேண்டும், தம்முடைய நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும்.

அமர்ஜோதி ஜவான் நினைவகம் உருவாகிய வரலாறு: அமர் ஜோதி ஜவான் மெமோரியல் – அமர் ஜோதி ஜவான் நினைவகம் ட்ரில் ஹவல்தார் சய்யது ஹுஸைன் (Drill Havaldar Sayyed Hussein) மற்றும் சிப்பாய் மங்கள் சாதியா (Sepoy Mangal Cadiya) என்ற இரு இந்திய வீரர்களின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்டதாகும். இவ்விரு வீரர்களும் ஆங்லிலேயரை எதிர்த்து போராடி, 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டவர்கள். 150 ஆண்டு நினைவு விழாவின் போது, 2009ல் ஆஜாத் மைதானத்தில் நிறுவப்பட்டது. அக்டோபர் 15, 1857 – தீபாவளி நாளன்று சார்லஸ் போர்ஜெட் (Charles Forjett, the then Superintendent of Police, Bombay Region) எனேஅ அப்பொழுதய கிழக்கிந்திய கம்பெனியின் போலீஸ் சூப்பிரென்டென்டின் உத்தரவு படி, கிரெக்கெட் கிளப் அருகில் உள்ள மைதானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனால்தான், அந்த இடம் “ஆஜாத் மைதான்” சுதந்திர மைதானம் என்று அழைக்கப்பட்டது. ரவீந்தர வைகர் (Ravindra Waikar) என்பவர்தாம், அந்த நினைவிடம் அமைக்கக் காரணமாக இருந்தவர். அப்பொழுதைய கமிட்டியின் தலைவராக இருந்து, நினைவகத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அந்நினைவிடம் சேதப்படுத்தப் பட்டதைக் குறித்து, அவர் மிகவும் வருத்தமடைந்தார். “அச்செயல் மிகவும் அசிங்கமானது, வெட்கப்படவேண்டியது, கண்டிக்க வேண்டியது”, என்று தனது கருத்தை வெளியிட்டார்.

சேதப் படுத்தியவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரம்:

Mumbai Crime Branch and local police are racing against each other to nab these hoodlums, knowing whoever makes these crucial arrests will reap rich professional rewards.“Of all the miscreants, these men are the most wanted. They have hurt the sentiments of the entire nation. They must be arrested on priority,” said a senior Crime Branch official, on condition of anonymity.

An officer from Azad Maidan police station said, “In such a scenario, it is better if these men surrender before the police reach them. By giving themselves up, they would be able to avoid the wrath of the police as well as the public.”

“These photographs have been circulated among our informers. We are in constant touch with them for leads. Every policeman is on the lookout for them at present. If we manage to arrest them before Independence Day, it will be our tribute to the freedom fighters,” he added.

The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.

Confirming the report, joint commissioner of police (crime) Himanshu Roy said, “This man (top-right) has insulted the national monument of India, and arresting him is our priority. Several Muslim leaders have also condemned the act.”

மும்பை கலவரக்காரர்களிலேயே, இவ்விருவரும் தான் இந்த நாட்டின் மதிப்பையே அவமதித்துள்ளார்கள்.அவர்களை கைது செய்ய வேண்டியதுதான் எங்களது தலையாயக் கடமையாக உள்ளது, என்று மும்பை போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

ஒவ்வொரு போலீஸாரிடமும் இப்படங்கள் உள்ளதால், அவர்கள் பிடிபட்டு விடுவார்கள் என்று நம்புகிறோம்.

மேலும் அவர்களாகவே வந்து சரண்டர் ஆகிவிட்டாலும் நல்லதுதான்.

சுதந்திரத்தினத்கிற்கு முன்பாகவாது, அவனைப் பிடித்துவிட வேண்டும். அப்படி செய்தால், அது அந்த தியாக-வீரர்களுக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாக இருக்கும்.

இப்படங்களைப் பார்த்தவர்களும் கொதித்துப் போயுள்ளார்கள். அக்மல் கசாப்புடன் ஒப்பிட்டி, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

 

 

இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே போரிட்டது: இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே சத்தியாகிரகம், அஹிம்சை முறைகளில் போரிட்டார்கள். ஜின்னா போன்றவர்கள், பாகிஸ்தான் கேட்கும் வரை அவர்கள் ஒற்றுமையாகத்தான் செயல்பட்டார்கள். அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக நினைவு சின்னங்களை, இப்படி வன்முறை, வெறி, காழ்ப்பு போன்ற உணர்வுகளுடன் சூரையாடுவதே அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக – முறைகளை நிந்திப்பதாகும், அவமதிப்பதாகும், தேசவிரோதமாகும். ஆகவே, இக்கால இந்திய முஸ்லீம்கள் தங்களது பிள்ளைகளுக்கு உண்மையான சுதந்திர உணர்வுகளை ஊட்டி வளர்க்க வேண்டும். அதைவிடுத்து, “நாங்கள் முஸ்லீம்கள், நாங்கள் இந்தியர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், நாங்கள் பாகிஸ்தானிற்காகத்தான் ………………………………….., பாகிஸ்தான் கொடிகளை ஏந்திக் கொண்டு இந்தியாவிலேயே போராடுவோம்……………………………………………..”, என்று வளர்த்து வந்தால், இத்தகைய வெறிதான் வரும், வளரும், பாதிக்கும்.

வேதபிரகாஷ்

15-08-2012


[5] The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.

http://www.mid-day.com/news/2012/aug/140812-Mumbais-most-wanted.htm

சையது தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – II

ஒக்ரோபர் 17, 2010

சையது தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்கஜிஹாத் கூட்டு – II

அமெரிக்கஇஸ்லாம் மற்றும் தாலிபனுடையத் தொடர்பு[1]: Syed Dawood Jilani / Syed daood Gilani / Daood Armani / Daood Gilani / David Jilani / David Jilani  என்பவன் தான், டேவிட் கோல்மென் ஹெட்லி என்றே குறிப்பிடப்பட்டு இந்தியர்களை ஊடகங்கள் ஏமாற்றி வருகின்றன. ஜாஹிர் நாயக் போன்றவர்களும் இத்தகைய நவீனப் பூச்சு பூசப்பட்ட படித்த, நாகரிகமான, ஆங்கிலம் பேசும் இஸ்லாம் அடிப்படைவாத, தீவிரவாத, தாலிபன்களுடைய சித்தாந்த ஆதாரவாளர்கள் எனலாம். ஆனால் அத்தகைய அமெரிக்கர்களை அமெரிக்கப் பெயர்கள் அல்லது இந்தியப் பெயர்களில் குறிப்பிடப் பட்டு ஜிஹாதி அடையாளத்தை ஊடகங்கள் மறைக்கின்றன. தாவூத் ஜிகானி அமெரிக்கன், தஹவ்வூர் ஹுஸை ரானா கனடியன், ஜிஹாதி ரோஸ் அமெரிக்க நாட்டவள், அந்தக் காதலி அல்லது மனைவி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவள் / ஃபைஜா அவுத்லாஹ் என்ற மொரொக்கா நாட்டு அழகியுடன் (A woman of Moroccan origin – Faiza Outalha), …………………என்றெல்லாம் குறிப்பிட்டு இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதி-குண்டு குரூரங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். இவ்வாறாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் (Liberalization, Globalization and Privatization) தாலிபனைஸேஷன் (Talibanization), (American seculaization), இஸ்லாமைஸேஷன் (Islamization), ஒபாமைஸேஷன் (Obamization), ஒஸாமைஸேஷன் (Osamization) முதலிய வழிகளில் செயல்படுகின்றன.

அமெரிக்கா கூறுவது உண்மையா, பொய்யா? மும்பையில் தாக்குதல் நடத்த தீவிரவாதி ஹெட்லி திட்டமிட்டது பற்றி அவனது மூன்று மனைவிகளில் இரண்டு பேர் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளிடம் முன் கூட்டியே தகவல் தெரிவித்துள்ளனர்[2]. இதை இந்தியாவிடம்  அமெரிக்கா தெரிவிக்கவில்லை என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை  அமெரிக்கா மறுத்துள்ளது. அவனிடம் அமெரிக்க அதிகாரிகளின் அனுமதியின் பேரில் இந்திய விசாரணை அதிகாரிகளும் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையின் போது ஹெட்லி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளான். குறிப்பாக மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக இருந்த திட்டம் வகுத்துக் கொடுத்ததை ஒப்புக் கொண்டு உள்ளான். விசாரணைக்கு ஒத்துழைக்க அவன் சம்மதித்து இருப்பதால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்களை அமெரிக்க எப்பிஐ  புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வெளியிடவில்லை. எனினும் மும்பைத் தாக்குதலுக்கு முன்பு வெளியான சில முக்கிய தகவல்களை “நியூயார்க் டைம்ஸ்” பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.

ஃபைஜா அவுத்லாஹ் என்பவள் இந்தியாவிற்கே வந்துள்ளபோது ஏன் இந்திய உளவுதுறையினர் அறியவில்லை? டேவிட் ஹெட்லிக்கு மூன்று மனைவிகள். இவர்களில் ஒருவர் மொராக்காவைச் சேர்ந்தவர் – ஃபைஜா அவுத்லாஹ். இளம் வயதினரான இவர் ஹெட்லியின் தாக்குதல் திட்டம் பற்றி அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார். இந்த தகவல்களை  ஹெட்லியின் மனைவி அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. ஏனெனில் இந்த தகவல்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மறுத்து உள்ளது.தங்களது கூட்டாளி நாடான பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் கிடைத்து விடும் என்பதால் அமெரிக்க அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் விட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது பற்றிய தகவல்களையும் இந்தியாவுக்குத் தெரிவிக்கவில்லை  என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் மைக் ஹாமர் வெளியிட்ட அறிக்கையில், ” தீவிரவாத தாக்குதல் பற்றிய தகவல்களை 2008ல் இந்தியாவுக்கு அவ்வப்போது தெரிவித்துக் கொண்டு தான் இருந்தோம். ஆனால் மும்பைத் தாக்குதல் பற்றிய நேரம் மற்றும் தாக்குதல் நடத்தப்போகும் இடம் பற்றிய தகவல் கிடைத்து இருந்தால் அதை முன்கூட்டியே இந்தியாவுக்கு தெரிவித்துத் தான் இருப்போம் என்றார். இதற்கிடையில் ஹெட்லியின்  அமெரிக்க மனைவியும்  அவனைப் பற்றிய திடுக்கிடும் தகவல்களை பொது நலன் கருதி அமெரிக்காவின் எப்பிஐ யிடம் தெரிவித்ததாக  நியூயார்க்கில் புலனாய்வுப் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஹெட்லியின் மனைவிகள் கூறிய புகார்கள் தொடர்பாக ஹெட்லி 2005ல் கைது செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகை செய்தி மேலும் கூறுகிறது.

அமெரிக்க உளவுத்துறையும், ஊடகத்துறையும்[3]: இது தவிர பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களுடன் ஹெட்லிக்கு இருந்த தொடர்பு பற்றி அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் இந்த தகவல் இந்தியாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் “வாஷிங்டன்’ போஸ்ட் பத்திரிகையும் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி  ரோமர் கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் நம்பகமான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டோம். டேவிட் ஹெட்லி பற்றி தற்போது வெளியாகி இருக்கும் தகவல் பற்றி உறுதியாக தெரிந்து கொண்ட பிறகே கருத்து தெரிவிக்க முடியும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுடனான அமெரிக்காவின் ஒத்துழைப்பு ஆக்கப்பூர்வமானது என்றார்.

அரைத்த மாவை அரைக்கின்றனவா அல்லது அமெரிக்க ஜிஹாதித்தனத்தை மறைக்க சதியா? தாவூத் ஜிலானி என்கின்ற டேவிட் ஹெட்லி கோல்மென் பற்றி இப்படி அவ்வப்போது அரைத்த மாவையே அரைக்கும் ஊடகங்களின் வேலை மர்மமாக இருக்கிறது. இப்பொழுது வெளிவரும் விஷயங்கள் எல்லாமே ஏற்கெனெவே தரிந்தது தான்[4]. மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் கோல்மேன் ஹெட்லி குறித்து அவரது மனைவி பலமுறை தகவல் அளித்தும் அவரை எப்.பி.ஐ., நழுவ விட்டுவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது, என்று ஊடகங்கள் இன்று கூறுகின்ரன (16-10-2010). ஆனால், வாகா வழியாக அவள் நடந்தே வந்தபோது[5] எப்படி யாரும் அறியாமல் இருந்தனர்?  ஹெட்லி குறித்த தகவல்களை சேகரித்து வந்த “பிரோ பப்ளிக்கா” எனும் பத்திரிகை இத்தகவலை தெரிவித்துள்ளது. எப்.பி.ஐ., அதிகாரிகளிடம் ஹெட்லியின் மனைவி ஹெட்லி பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறித்து எப்.பி.ஐ., இதுவரை எந்த ஒரு கருத்தும், விளக்கமும் அளிக்கவில்லை.

தாவூத் ஜிலானியும், டேவிட் ஹெட்லியும்! அப்பப்பா, இந்த செக்யூலார் ஊடகவாதிகள் இருக்கிறார்களே சரியான பூடகவாதிகள், பாஷாண்டிகள்! தாவூத் ஜிலானி என்ற இஸ்லாமிய / ஜிஹாதி தீவிரவாதியை ஒரேயடியாக David Coleman Headley என்று குறிப்பிட்டு ஜாலங்கள் செய்கின்றனரே? மதத்தின் பெயரால் அப்பாவி, மக்களைத் திட்டம் போட்டுக் கொன்று குவித்த நெஞ்சில் ஈரமில்லா கயவர்களை ஏன் மற்றொரு பெயரில் மறைக்கவேண்டும்? டேவிட் ஹெட்லி என்றால் கிருத்துவர், தாவூத் ஜிலானி என்றால் முகமதியன் என்று செக்யூலார் மட-இந்தியர்களுக்குக் கற்றுத் தருகிறார்களா! இவர்கள் உண்மையிலேயே ஊடகத் தீவிரவாதிகள்! பத்திரிக்கைத் தீவிரவாதிகள்!! நாளிதழ்த் தீவிரவாதிகள்!!! தாவூத் ஜிலானி என்ற இஸ்லாமிய / ஜிஹாதி தீவிரவாதியை ஒரேயடியாக David Coleman Headley என்று குறிப்பிட்டு இந்தியர்களை ஏமாற்றி வருவது செல்யூலரிஸ மாயைத்தான்[6].

இருவரும் இந்தியாவிற்கு புதியவர்கள் அல்லர்: பாக்., பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, மும்பை தாக்குதலில் தொடர்பு கொண்டிருந்தானா என்று தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.,) விசாரிக்கத் துவங்கியுள்ளது[7]. ஹெட்லியும், தாகாவுர் ராணாவும் இந்தியாவில் பல இடங்களுக்கு குறிப்பாக மும்பை, டில்லி, புனே, லக்னோ, ஆக்ரா, கொச்சி, சூரத் மற்றும் ஆமதாபாத் நகரங்களுக்கு அடிக்கடி வந்திருக்கின்றனர். மேலும், புனேயிலுள்ள ஓஷா ஆசிரமத்துக்கு 2008ம் ஆண்டிலும், இந்த ஆண்டு மார்ச்சிலும் ஹெட்லி சென்றிருக்கிறான். மும்பை தாக்குதல் நடப்பதற்கு பல மாதங் கள் முன், 2007ல் தாஜ், டிரிடென்ட் ஓட்டல் களில் ஹெட்லியும், ஒரு விருந்தினர் மாளிகையில் ராணாவும் தங்கியிருந் துள்ளனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகிலுள்ள பிரீச் கேண்டி பகுதியில் ஒரு பிளாட்டில் வாடகை கொடுத்து தங்கியுள் ளான் ஹெட்லி. அங்கு தங்கியிருந்தபடியே, பின்னர் தாக்குதல் நடந்த நான்கு இடங் களான தாஜ் ஓட்டல், டிரிடென்ட் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சுற்றியிருக்கிறான். கசாப் ஒன்பது பயங் கரவாதிகளுடன் மும் பைக்கு வருவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகத்தான் ராணா மும்பையிலிருந்து கிளம்பியிருக் கிறான்.மும்பை தாக்குதல் நடந்த போது இருவரும் பாகிஸ்தானில் இருந்துள் ளனர்.இந்தத் தகவல்களை சேகரித்த தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ), கசாப் புக்கு இருவரையும் தெரியுமா என்று அவனிடம் விசாரித்து வருகிறது. கசாப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட மும் பைப் பகுதி போட் டோக்கள், வீடியோக் கள் ஹெட்லி கொடுத்தவைதானா என்றும் விசாரணை நடக்கிறது.மும்பைத் தாக்குதல் நடந்த போது இருவரும் பாகிஸ்தானில் இருந்தனர் என்ற தகவலுக்கு, பாகிஸ்தானிடமிருந்து இதுவரை எவ்வித மறுப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி மூணாறில் தங்கியது குறித்து விசாரணை[8]: மூணாறு : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, இரண்டு மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மூணாறில் தங்கியிருந்த தகவலையடுத்து, புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய அமெரிக்காவைச் சேர்ந்த பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, அவனது நண்பர் ராணா, அவரது மனைவி சாம்ராய் ராணாவுடன் கொச்சியில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.டேவிட் ஹெட்லி குறித்து மும்பையில் மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியபோது, இதே பெயரில் ஒருவர் மூணாறில் தங்கியிருந்தது தெரிந்தது.

டாடா கம்பெனிக்கு சொந்தமானஹைரேஞ் கிளப்விடுதியில் கடந்த செப்., 18, 19 2009ல் டேவிட் ஹெட்லி ஒரு பெண்ணுடன் தங்கியிருந்த மர்மம் என்ன?: இதையடுத்து புலனாய்வுத் துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தினர். மூணாறில் டாடா கம்பெனிக்கு சொந்தமான “ஹைரேஞ் கிளப்’ விடுதியில் கடந்த செப்., 18, 19 ல் டேவிட் ஹெட்லி என்பவர் ஒரு பெண்ணுடன் தங்கியுள்ளார். 2006ல் அமெரிக்காவில் பெறப்பட்ட பாஸ்போர்ட்டில் ஹெட்லியுடன் மனைவி என்று கூறப்படும் பெண்ணும் உடன் வந்துள்ளார். அவர்களது பாஸ்போர்ட் நகல்களையும், அவர்கள் பயன்படுத்திய இந்திய, அமெரிக்க தனியார் நிறுவன மொபைல் போன் எண்களையும் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். பாஸ்போர்ட்டில் உள்ள ஹெட்லியின் போட்டோவிற்கும் தேசிய புலனாய்வுத்துறை கைவசமுள்ள போட்டோவிற்கும் சிறிய வித்தியாசங்கள் உள்ளதால், இரு போட்டோக்களையும் ஒப்பிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் உதவியர்கள் யார்-யார்? சுற்றுலாவிற்காக மூணாறு வந்ததாகவும் மும்பையில் தொழில் செய்து வருவதாகவும் ஹெட்லி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் மூன்று பேருக்கு மூன்று அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன[9]. இறுதியில் ஹெட்லியும் ஒரு பெண்ணும் மட்டுமே வந்துள்ளனர். இங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்த இவர்கள் நெடும்பாசேரி சென்று அங்கிருந்து விமானம் மூலம் டில்லி சென்றுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் தங்கினால் அவர்கள் ஓட்டலில் பூர்த்தி செய்து கொடுக்கும் “சி’ படிவத்தையும் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.” மூணாறில் தங்கியிருந்த ஹெட்லியும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹெட்லியும் ஒருவர்தானா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இது குறித்து வேறு தகவல்கள் வெளியிட இயலாது’ என்றும் அதிகாரிகள் கூறினர்.

மும்பை தாக்குதல் சதி: அன்சாரி பாஸ்போர்ட் பெற்றது எப்படி[10]? மும்பை : “மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிம் அன்சாரி, போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுள்ளான்’ என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த ஆண்டு நவம்பரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் தொடர்பாக அஜ்மல் கசாப், பாகிம் அன்சாரி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் வழக்கின் விசாரணை மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அமைக்கப்பட்டுள்ள தனி கோர்ட்டில் நடந்து வருகிறது.நேற்று நடந்த விசாரணையின் போது, நீதிபதி தகிலியானி முன் ஆஜரான வெளியுறவு அமைச்சக இணைச் செயலர் மான்பிரீத் ஓரா கூறியதாவது: இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நான், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் ஹை-கமிஷனராக இருந்தேன்.

பாகிஸ்தானின் நேரிடை தொடர்பு: அப்போது பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் என்னை அழைத்தார். அவரைச் சந்தித்த போது, மும்பை தாக்குதல் விசாரணை தொடர்பான சில விவரங்களைத் தெரிவித்தார். அப்போது, “மும்பை தாக்குதல் சதி தொடர்பாக, கைது செய் யப்பட்டுள்ள பாகிம் அன்சாரி, பாகிஸ்தானில், போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுள்ளான் என்றும், அந் நாட்டின் பதிவு ஆணைய ஆவணங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன’ என்றும் கூறினார். அதேநாளில், பாகிஸ்தானில் தெற்கு ஆசிய விவகாரங்களை கவனிக்கும் டைரக்டர் ஜெனரல் என்னை சந்தித்தார். அந்த நேரத்தில், பாகிம் அன்சாரி பாஸ்போர்ட் பெற்றது தொடர்பான விபரங்களைக் கூறினார். போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து, அந்த பாஸ்போர்ட் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு ஓரா கூறினார்.

I don’t know Rahul Bhatt: Kangna[11]: கங்கணா சொல்கிறார்எனக்கு ராஹுல் பட்டைத் தெரியாது”! கோல்மென் ஹெட்லி மற்றும் தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புகளை புலன் விசாரிப்பவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ராஹுல் பட்டைத் தொடர்ந்து பட்டியில் நீளுகிறது: கங்கனா, ஆர்த்தி சாப்ரா,எம்ரான் ஹாஸ்மி………………ஹாஸ்மி ஒரு பப்பில் 2008ல் சந்தித்ததாகவும், கங்கனா “வோஹ் லம்ஹே” ஷுட்டிங் போது அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது! இருப்பினும், இவர்கள் எல்லோரும் அத்தகைய ஊடகசெய்திகளை மறுக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் மும்பை திறைப்பட உலகத்திற்கு உள்ள சம்பந்தம், மிகவும் நெருக்கமானது எனலாம்[12].

வேதபிரகாஷ்

© 17-10-2010


[1] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்கஜிஹாத் கூட்டு – I , https://islamindia.wordpress.com/2010/03/20/தாவூத்-ஜிலானி-தஹவ்வூர்-ராணா-ஹ/

[2] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானி என்ற ஹெட்லியின் இந்தியாவின் மீதான தாக்குதல்!, https://islamindia.wordpress.com/2009/12/14/தாவூத்-ஜிலானி-என்ற-ஹெட்ல/

[4] வேதபிரகாஷ், இந்தியாவின் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்களின் தீவிரவாத வலை பெரிதாகிறது!, https://islamindia.wordpress.com/2009/11/18/இந்த்ய-தாக்குதலில்-ஈடுபட்ட/

[6] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானியும், டேவிட் ஹெட்லியும்!, https://islamindia.wordpress.com/2009/12/10/தாவூத்-ஜிலானியும்-டேவி-ஹ/

[8] தினமலர், அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி மூணாறில் தங்கியது குறித்து விசாரணை, நவம்பர் 18,2009,00:00  IST; http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14131

[9] கேரளாவில் ஜிஹாதி தீவிரவாதம் பெருகுவது பற்றி முன்னமே விளக்கமாக என்னால் எழுதப் பட்டுள்ளது.

[10] தினமலர், மும்பை தாக்குதல் சதி: அன்சாரி பாஸ்போர்ட் பெற்றது எப்படி?

நவம்பர் 18,2009,00:00  IST;  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18951

[11] Neha Sharma, I don’t know Rahul Bhatt: Kangna, Hindustan Times; New Delhi, November 18, 2009; First Published: 20:50 IST(18/11/2009);  Last Updated: 00:00 IST(19/11/2009)

[12] வேதபிரகாஷ், இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் மும்பை திறைப்பட உலகத்திற்கு உள்ள சம்பந்தம், https://islamindia.wordpress.com/2009/11/19/இஸ்லாமிய-தீவிரவாதிகள்-மற/

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

மார்ச் 29, 2010

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

இவற்றிற்குள்ள தொடர்பு என்ன?

ஆமாம்,

தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அத்தகைய ஒன்றை

பார்த்தோ அல்லது பார்க்காமலோ, அத்தகைய ஒன்றை

யாரோ வரைந்து விட்டாராம்!

சித்தரித்து விட்டாராம்!

மற்றொருவருக்கும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை, அவர் – அந்நிலையிலேயே அச்சிட கொடுத்து விட்டாராம்!

ஒன்றுமேத் தெரியாத அச்சடிக்கும் தொழிலாளியும் [இப்பொழுது மிஷின்-தான்] தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை அச்சடித்து விட்டாராம் [தொழிலாளிக்கும் மரியாதை].

பிறகெப்படி,தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை மற்றவர்கள் அடையாளம் காணுகிறார்கள், கண்டுகொள்கிறார்கள்?

முஹம்மது கார்ட்டூன் கோயம்புத்தூரில் ரகளை, கைது!

மார்ச் 28, 2010

“தினகரன்” பிரதிகளை எரித்தற்காக கைது!

முத்தாரம் வார இதழில் (29.03.2010) நபிகள் நாயகம் போல ஒருவரை கார்டூன் வரைந்து கட்டுரை வெளியிட்டது. இதனால், அரசம்பட்டி, கோயம்புத்தூர்-பொள்ளாச்சி ரோடில் கோயம்புத்தூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் “தினகரன்” நாளிதழ் பண்டல் ஒரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தாரால் 24-03-2010 அன்று எரிக்கப்பட்டது.  ஒரு இடத்தில் 1500 மற்றும் இன்னொரு இடத்தில் 1000 பிரதிகள் எரிக்கப்பட்டன.

http://www.hindu.com/2010/03/25/stories/2010032556290400.htm

புகாரின் பேரில் கிணத்துக்கதவு போலீஸார் section 147 (Unlawful Assembly), 341 (Wrongful Restraint),435 (mischief causing fire) of Indian Penal Code and section 3 (1) of the Tamil Nadu Public Properties Damages and Loss Prevention Act முதலிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பின் தலைவர் வி. எஸ். பழனியப்பன் முதலமைச்சருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் ஜனநாயக நாட்டில் எந்த கருத்திற்கும் எதிராக கருத்துதான் இருக்கவேண்டும். ஆகவே ஏற்புடைய வழியில் தமது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கலாம் அல்லது சட்டரீதியில் நடவடிக்கை மெஏற்கொண்டிருக்கலாம். ஆனால் இம்மாதிரி தாமே சட்டத்தை கையில் எடுத்துக் கொந்து இத்தகைய செயல்களில் ஈடுப்பட்டுள்ளவர்களை தகுந்த முறையில் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேற்கண்ட சம்பவத்தையொட்டி தமுமுக சார்பில் தென் சென்னை மாவட்ட தலைவர் சீனிமுகம்மது, ம.ம.க செயலாளர் அப்துல் சலாம் ஆகியோர் போலீஸ் கமிஷனரை சந்தித்து நபி (ஸல்) அவர்களின் கார்டூன் வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் மனு கொடுக்கப்பட்டது.  மேலும் மார்ச் 22 அன்று மதியம் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலி ஆசிரியரை தொடர்பு கொண்டு சமுதாயத்தின் கண்டனத்தை தெரிவித்தார். ஒரு மணி நேரத்தில் தங்களது தவறை ஏற்று வருத்தம் தெரிவித்து முத்தாரம் த.மு.மு.கவுக்கு ஃபேக்ஸ் அனுப்பியது.