Archive for the ‘கள்ள நோட்டுகள்’ category

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (2)

மே 8, 2017

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி .எஸ். தொடர்புகளும், ஒற்றர்களும்பணபரிமாற்றமும் (2)

Kashmir separatist leaders aiding and abeting terror-Burhan Wani supetr jihadi

புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, கல்லெறி ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம்: ஜூலை 2016ல் தீவிரவாதி புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, காஷ்மீரில் தீவிரவாதம், கல்லெறி ஜிஹாதி மற்ற வன்முறைகள் அதிகமாகி விட்டன. தீவிரவாதிகளை கண்டுபிடித்து, மடக்கிப் பிடிக்கும் போது, அவர்கள் தாக்கும் போது, வீரர்கள் பதிலுக்கு தாக்கி ஒழுங்கிற்கு எடுத்து வர முயலும் போதும், இந்த கல்லெறி ஜிஹாதிகள் வெளிப்படையாகவே, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, மனித கேடயம் போல முன்னின்று கல்லேறிவது, அதன் மூலம், தீவிரவாதிகள் தப்பித்துச் செல்வது என்ற காரியங்கள் சகஜமாகி விட்டன. இதெல்லாம் சாதாரணமாக, இயல்பாக செய்யும் செயல்களாக இல்லாமல், திட்டமிட்டு, ராணுவத்தினரைத் தூண்டிவிடும் செயலாகவே தெரிந்தது. மேலும், பெற்றோர், உற்றோர், மற்றோர் இவற்றை எதிர்க்காமல் ஆதரித்து வருகின்றனர். பாலஸ்தீனம் போல, இவர்களை செயல்பட வைத்து, ஒருபக்கம் பலிகடாக்களாக்கி, இன்னொர்யு பக்கம், ராணுவம் மனித உரிமைகளை மீறியது என்று பிரச்சாரம் செய்யவே, இவ்வாறு செய்கிறது என்று புலப்படுகிறது. இப்பொழுது அத்தகைய பேச்சுகள் பரூக் அப்துல்லா போன்றோர் மூலம் வெளி வந்ததை கவனிக்கலாம். மேலும் அவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. அப்படியென்றால், இந்த கல்லெறி ஜிஹாதி, அவர்களால் வேலை மாதிரி செய்து வருகிறார்கள், பணம் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.

Kashmir separatist leaders aiding and abeting terror-Burhan Wani supari jihadi

கல்லெறி ஜிஹாதித்துவமும், கல்லூரி விடுமுறையும், வேலையில்லாத நிலையும் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படுவது[1]: தி.இந்து ஏப்ரலில் வெளியிட்ட செய்தியே, சித்தாந்த ரீதியில், ஊடகங்கள் எவ்வாறு பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உள்ளன என்பதனை தெரிந்து கொள்ளலாம். செய்தி இவ்வாறுள்ளது – “காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில் மாணவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறித் தாக்குதல் நடத்துவதை விடுத்து கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் திரும்பி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, காஷ்மீ தெருக்களில் பெல்லட் பிரயோகமும் கல்லெறித் தாக்குதலும் நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறும்போது, கல்விதான் அங்கு நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தெருக்களில் பொங்கும் கோபத்திற்கு தீர்வளிக்க முடியும் என்றார்.  ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிர்வாதம் செய்த போது, பாதுகாப்புப் படையினர் பள்ளிகளிலும் கல்லூரி வளாகங்களிலும் புகுந்து மாணவர்களை அடிக்கின்றனர் என்றனர், “மாணவர்களை அடித்தால் அவர்கள் தெருவில் இறங்கி போராடவே செய்வார்கள். கல்லெறி தாக்குதல் என்பது ஒரு எதிர்வினை. காஷ்மீர் மக்களிடம் மத்திய அரசு பேசத் தவறிவிட்டது. தடையற்ற, நிபந்தனையற்ற உரையாடலை காஷ்மீர் மக்கள் எதிர்நோக்குகின்றனர்” என்றது. இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் மனுதாரர் பார் அசோசியேஷன் முதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையக் கைவிடுவதாக கோர்ட்டில் உறுதியளிக்க வேண்டும் என்றது. மே 9-ம் தேதி வாக்கில் இந்த உறுதி மொழிகள் பதிவு செய்யப்பட்டால், பாதுகாப்புப் படையினரை 15 நாட்களுக்காவது விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த முடியும், இருதரப்பினருமே முக்கிய பிரச்சினைகளை பேச வேண்டும்[2].

Kashmir separatist leaders aiding and abeting terror

அரசியலுக்காக, விளம்பரத்திற்காக தொடுத்த வழக்கு போன்றுள்ளது: “இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை, என்று நீதிபதி கவுல் தெரிவித்தார்.  “தொடர்ந்து கல்லெறி தாக்குதல் செய்வது, பள்ளிகளை மூடுவது என்றால் பேச்சு வார்த்தை எப்படி சாத்தியம்? முதலில் பேசுங்கள். பேச்சுவார்த்தைகள் அரசியல் சாசன சட்டக்கத்திற்குள் இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி கேஹர் தெரிவித்தார். அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும் போது, “பிரிவினைவாதத் தலைவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று கூறி மனுதாரர்கள் சமர்ப்பித்த வாக்குமூலத்தை வாசித்தார், அதில் காஷ்மீர் பிரச்சினையை இந்தியாபாகிஸ்தான் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, “எங்கள் இதயம் காஷ்மீர் மக்களுக்காகவே துடிக்கிறது. ஒட்டு மொத்த மாநிலமும் அரச பயங்கரவாதத்தில் சிக்கியுள்ளது என்று அவர்கள் கூறுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடானது என்று அவர்களால் கூற முடியுமா? பிரதமரையும், முதல்வரையும் சந்திப்பதிலிருந்து இவர்களை யார் தடை செய்தது? பேச்சுவார்த்தைகளை அரசியல் தலைவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். இந்த நீதிமன்றத்தில் அல்ல” என்றார் ரோத்கி. வாதப்பிரதிவாதங்களின் ஒரு கட்டத்தில் மனுதாரர்களான பார் அசோசியேஷன், தங்களுக்கு பிரிவினைவாத தலைவர்களிடம் செல்வாக்கில்லை, எனவே கோர்ட்டின் பார்வைகளை தங்களால் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது என்று கூறிய போது, நீதிபதி சந்திராசூட், பார் அசோசியேஷன் உரையாடலில் பங்கு கொள்பவராக இங்கு வந்த பிறகு இதிலிருந்து பின் வாங்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.”

Two ISI agents arrested in April 2017

பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது: இங்கு எங்குமே, கல்லெறி கலாட்டா மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள், தீவிரவாதிகள் நுழைவு, தினமும் நடக்கும் துப்பாக்கிகி சண்டைகள், இறப்புகள், அதனால், இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மோசமடைதல் முதலியவை விவாதிக்கப்படவில்லை. ஏதோ சாதாரணமாக, மாண்வர்கள் கல்லெறிவதில் ஈடுபட்டுள்ளது போன்று விவாதம் நடந்துள்ளதாக செய்தி விளக்குகிறது. இவ்வாறு ஒருதலைப்பட்சமாக செய்தி வெளியிடுவதே மிகவும் தவறானது என்று எல்லாம் அறிந்த, தி.இந்து-காரர்களுக்கு தெரியாதா என்ன? மனித உரிமைகள் என்று வந்தால், அவை பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது என்றுள்ளது போலும். அத்தகைய சித்தாந்தம் என்னவோ?

Sharad Yadav in front of Hurriat - Sep.2016

ராவல்பிண்டி, ஶ்ரீநகர் தொடர்புகள்: பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சில கிடைத்தபோது, அவற்றை சோதித்ததில், இரண்டு முறை பணம் கொடுத்தது-வாங்கியது என்பது ராவல்பிண்டி மற்றும் ஶ்ரீநகர் என்று காட்டுகிறது. அதாவது, ராவல்பிண்டியில் ஐ.எஸ்.ஐ தலைமையகம் உள்ளது, ஶ்ரீநகரில் ஹுரியத் உள்ளது. இங்கிருந்து பணம் அனந்ட்தநாக், புல்வாமா, குப்வாரா போன்ற இடங்களுக்கு செல்கிறது. ராவல்பிண்டியில், ஐ.எஸ்.ஐ ஆள், அஹமது / மெஹ்பூப் சாகர் ஹுரியத் தலைவர்களுடன் தொடர்ந்த உறவுகளை வைத்துக் கொண்டிருக்கிறான். இவன் பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசிந்திற்கு நெருக்கமானவன். இப்பணியை செய்ய இவனுக்கு மாத சம்பளம் கொடுக்கப்பட்டது. இதுதவிர, “இன்டெல்”, மூலம் பெற்ற ஆவணங்களில் உள்ள தகவல்களின் படி, யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டன போன்ற விவரங்களும் பட்டியல்களில் காணப்படுகின்றன[3]. இதன்மூலம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தூதரகம், பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்கள் முதலியவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகள் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[4]. ஆகவே, நிச்சயமாக, இந்தியாவின் பெருந்தன்மையினை, மனிதாபிமான நடவடிக்கைகளை, கோடிகள் கொட்டி, அம்மக்களின் பாதுகாப்பை காப்பாற்றியும் ஏமாற்றி, துரோகம் செய்து வருவதை நன்றாக தெரிந்து கொள்ளலாம். ஆகவே, இனி வரிப்பணத்தை இந்த பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து விரயம் செய்வதை விட்டுவிட வேண்டும்.

Yachuri, H Raja - in front of Hurriat - Sep.2016

பிடிபட்ட பாகிஸ்தான் ஒற்றர்கள் மூலம் தெரிய வந்துள்ள விவரங்கள் ஊர்ஜிதப் படுத்துகின்றன: சென்ற மாதம் ஏப்ரலில் மும்ப்ராவில், நஜீம் அஹமது [Nazim Ahmed] என்பவன் தீவிரவாத கும்பலின் தலைவன் என்று கைது செய்யப்ப்பட்டான்[5]. அவனுடைய கூட்டாளிகளும் உத்திரபிரதேசத்தில் பல இடங்களில் பிடிபட்டனர்[6]. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்தவருக்கு நிதியுதவி வழங்கியதாக மும்பையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தீவிரவாத ஒழிப்பு படையினர் மும்பையின் தெற்கு பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் அல்தாஃப் குரேஷி [Altaf Bhai Qureshi] என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்[7]. லக்னோவில் தங்கியிருந்த அஃப்தாப் அலி [Aftaab Ali ] என்பவரின் வங்கி கணக்கில் குரேஷி பணம் செலுத்தியுள்ளார். குரேஷியிடம் இருந்து தீவிரவாத ஒழிப்பு படையினர் ரூ.71.57 லட்சம் ரூபாய் மற்றும் செல்போனினை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்[8]. இருவருமே ஐ.எஸ்.ஐக்கு உளவு பார்த்துள்ளனர்[9]. அலி பாகிஸ்தானுக்கு சென்று வந்ததோடல்லாமல், தில்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும் போனில் பேசியுள்ளான்.  விசாரணையின் போது, இவ்விவரங்கள் வெளிவந்தன[10].

 © வேதபிரகாஷ்

08-05-2017

Yachuri waving hand as if .... - in front of Hurriat - Sep.2016

[1] ”தி.இந்து, அமைதி திரும்ப வேண்டுமெனில் காஷ்மீர் மாணவர்கள் கல்லெறிவதை நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம், கிருஷ்ணதாஸ் ராஜகோபால், Published: April 28, 2017 16:04 ISTUpdated: April 28, 2017 16:11 IST

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9670246.ece

[3] TIMES NOW,  TIMES NOW EXCLUSIVE: Secret intel papers show how ISI funds Hurriyat, by Srinjoy Chowdhury, May 07, 2017 | 10:55 IST.

[4] One of the annexures of top secret intel document has proof that cash was chan nelled to multiple individuals in the Hurriyat office in Srinagar. This is direct proof of a link between funds sent by Pakistan’s ISI and Hurriyat. “Register of treachery”,  lists out names of Hurriyat men and money they took under various heads (see table). The payments made are only for one month, essentially meaning that there is a fixed salary paid to many and that there is a monthly contribution made for Hurriyat’s day-to-day expenses.

http://www.timesnow.tv/india/article/times-now-exclusive-secret-intel-papers-show-how-isi-funds-hurriyat/60605

[5] The Hindu, UP ATS arrests suspect from Pydhonie in espionage case, 04 MAY 2017 00:59 IST, Updated: 04 MAY 2017 00:59 IST

[6] http://www.thehindu.com/news/cities/mumbai/up-ats-arrests-suspect-from-pydhonie-in-espionage-case/article18380025.ece/amp/

[7] மாலைமலர், பாகிஸ்தான் உளவு அதிகாரிக்கு உதவியதாக ஹவாலா ஆப்பரேட்டர் மும்பையில் கைது, பதிவு: மே 05, 2017 00:31.

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/05003134/1083576/Hawala-operator-held-in-Mumbai-for-funding-suspected.vpf

[9] Hindustan Times, Suspected ISI agent held in UP, another picked up from Mumbai, Rohit K Singh,   Lucknow, Updated: May 03, 2017 22:52 IST

[10] http://www.hindustantimes.com/india-news/suspected-isi-agent-held-in-up-another-picked-up-from-mumbai/story-yTvIhUUyegnLevgpZLHwLM.html

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

பிப்ரவரி 12, 2017

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

three-trio-arrested-by-nia-in-mdurai-out-of-six

குண்டுவெடிப்புகளில் காணப்பட்ட தமிழக தொடர்புகள், இணைப்புகள், சம்பந்தங்கள்: தென்மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் உள்ள 6 நீதிமன்ற வளாகங்களில் தொடர்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் ஒரே விதமாக நிகழ்த்தப்பட்டதால் இந்த சம்பவத்தில் ஒரே குழுக்கள்தான் ஈடுபட்டு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பிர‌ஷர் குக்கர், டிபன் பாக்ஸ் மற்றும் வெடிபொருட்களையும் ஆய்வு செய்தபோது இந்த வகையான வெடிகுண்டுகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பிர‌ஷர் குக்கர் மற்றும் டிபன் பாக்ஸ்கள் மதுரையில் உள்ள பிரபல கடையில் வாங்கப்பட்டதையும் உறுதி செய்த அதிகாரிகள் தீவிரவாத குழுக்கள் மதுரையை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல்களையும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் தான் தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டான்.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting
தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் கைது மதுரையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டனவா? : இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு சந்தேகப்படும் நபர்களை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் துப்புதுலக்கப்பட்டது. மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த முகம்மது அயூப் (வயது23), புதூர் மண்மலைமேட்டை சேர்ந்த கரீம்ராஜா (26), இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி (24) ஆகிய 3 பேர் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டார். இதனிடையே தடை செய்யப்பட்ட அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த சுட்டு கொல்லப்பட்ட இமாம் அலியின் நெருங்கிய கூட்டாளி மதுரை நெல் பேட்டையை சேர்ந்த சம்சுதீன் (24) என்பவரையும் நேற்று கைது செய்தனர். இவரும் பல்வேறு சதி வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து சதி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
subahani-kadayanallur-arrested-and-questioned-08-10-2016

திருவான்மியூரில் கைதான சுலைமான் தான் தலைவன்: பலத்த பாதுகாப்புடன் மதுரை அருகே உள்ள இடையப்பட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக பல மணி நேரம் விசாரித்தனர். தென்மாநிலங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கான காரணங்கள் குறித்தும் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரித்தனர். கைதான தீவிரவாதிகள் பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், அந்த இயக்கத்தில் உள்ள சர்வதேச குழுக்களுடன் அடிக்கடி போனில் பேசிய தும் தெரியவந்துள்ளது. மதுரையில் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து சதி திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், அதன் பேரிலேயே குண்டு வெடிப்புகளை நடத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர்கள் வெடிபொருட்களை வைத்துக் கொள்வதில்லை. சதி திட்டத்தை நிறைவேற்ற அவ்வப்போது வெடிபொருட்களை வாங்குதை வழக்கப்படுத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது, மிகவும் கவனமாக எல்லா ஆதாரங்களையும் மறைப்பதில்-அழிப்பதில் திறமையாக செயல்படுகின்றனர்.

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

சுலைமான் செயல்பட்ட விதம்:  “தி பேஸ் மூமெண்ட்” என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கிய இவர்கள் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் அடிப்படை அமைப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். இதன் தலைவராக சுலைமான் செயல்பட்டுள்ளார். இவர்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற பெற்றோரிடம் சுற்றுலா செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறுவர். சில வாரங்கள் மறைந்திருந்து குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு டிப்-டாப்பாக வீட்டுக்கு வருவதால் பெற்றோர்களுக்குகூட இவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. அடுத்த கட்டமாக இஸ்லாமியர்களுக்கு விரோதிகளாக செயல்படும் முக்கிய தலைவர்களை கொலை செய்யவும் இவர்கள் தீவிரமாக ஆலோசித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள இளைஞர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆக, இவ்வாறு தமிழகத்தின் பல நகரங்களில் செயல்படும் தீவிரவாதிகள், கேரளாவுக்கு சகஜமாக சென்று வரும் போக்கு, பெங்களூரில் உள்ள தொடர்புகள், ஹைதராபாத் (தெலிங்கானா) இணைப்புகள், இவை எல்லாமே சென்னையை தீவிரவாத-பயங்கரவாத பகுதியில் கொண்டு வந்துள்ளது.

moideen-is-operative-ie-cutting-25-10-2016

சிரியாவுக்கு சென்று .எஸ்சில் சேர திட்டம் போட்ட சதி சென்னையில் தான் நடந்தது[1]: என்.ஐ.ஏவின் ஆவணங்களிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்சில் சேருவது என்ற திட்டம் / சதி “அபுதாபி திட்டம்” சென்னையில் தான் உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது[2]. முன்னர் ஜனவரி 2016ல் தமிழகம், தெலிங்கானாவில் கைதான எட்டு பேர்களிடம் நடத்திய விசாரணை, பின்னர் சரிபார்த்த விவரங்கள் மூலம் இது உறுதியாகிறது[3]. இதற்காகாக வேண்டிய பணம் பலவழிகளில் திரட்டப் படுகின்றன. முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து நிதி வசூலிக்கப் படுகிறது. ஐ.எஸ்சிற்கு இப்பணம் உதவுகிறது என்று தெரிந்தும் கொடுப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் தான், யாராவது கைதானாலும், அதைப் பற்றிய செய்திகள் வந்தாலும், ஒன்றுமே நடக்காதது முஸ்லிம்கள், முஸ்லிம் அமைப்புகள், போராட்ட குழுக்கள் இருக்கின்றன. சிரியா மீது அமெரிக்கா, ரஷ்யா குண்டு வீசினால் போராட்டம் நடத்தும் இவர்கள், இச்செய்திகள் வரும் போது காணாமல் போகிறார்கள்.

Name in English பெயர் ஊர் / மாநிலம்
Adnan Hussain from Karnataka[4] அட்னன் ஹுஸைன் பட்கல், கர்நாடகா
Mohammed Farhan from Maharashtra மொஹம்மது பர்ஹன் மஹாராஷ்ட்ரா
Sheikh Azhar Al Islam from Kashmir. ஷேக் அஸ்ர் அலி காஷ்மீர்
Abdul Basith, a youth from Hyderabad அப்துல் பஸித் ஹைதரபாத், தெலிங்கானா
Sultan Armar சுல்தான் அர்மர்
Shafi Armar. சஃபி அர்மர்
Subahani Haja Mohiddheen சுபஹனி ஹாஜா மொஹிதீன் கடையநல்லூர், தமிழகம்
Suwalik Mohammed சுவாலிக் முகமது (26) கொட்டிவாக்கம், சென்னை
Suliman  சுலைமான் திருவான்மியூர்

இப்படி சென்னையிலேயே கைது செய்யப்பட்டதும், இதனை மெய்ப்பிக்கிறது. அப்படியென்றால், சென்னையில் உள்ளவர்களின் சம்பந்தமும் இதில் வெளியாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-2017

sulaiman-house-searched-in-chennai-where-incriminating-documents-seized

[1] One.India.com, REVEALED: Conspiracy to recruit into the IS hatched in Chennai, Written by: Vicky Nanjappa, Published: Saturday, February 11, 2017, 11:33 [IST]

[2] http://www.oneindia.com/india/revealed-conspiracy-to-recruit-into-the-is-hatched-in-chennai-2344903.html

[3] According to NIA case records, a criminal conspiracy was hatched “in Chennai and other parts of the country by forming a terrorist gang which raised and received funds, organised camps, recruited and trained some persons, and facilitated their travel to Syria, to join ISIS”.

Indian Express, Abu Dhabi module recruited nine Indians for Islamic State, sent some to Syria: NIA probe, Written by Johnson T A | Bengaluru | Published:February 11, 2017 3:59 am.

http://indianexpress.com/article/india/abu-dhabi-module-recruited-nine-indians-for-islamic-state-sent-some-to-syria-nia-probe-4518611/

[4] Adnan Hussain, 34, an accountant from Bhatkal town who had been working in the UAE since 2012, had emerged on the radar of police after he was found to have transferred funds to the account of Abdul Basith, a youth from Hyderabad who had been recruited to join the IS by Indian recruiters Sultan Armar and Shafi Armar. Adnan Hussain, alias Adnan Damudi, transferred funds to an account linked to Basith to enable him to travel to Syria along with four others recruited from Hyderabad but the trip came to an abrupt end after the families of the youths got wind of their plan and sought help to bring them back.

 

எங்களுக்கும், கள்ளநோட்டு விநியோகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த முஸ்லிம் அமைப்பு சொன்னாலும், முஸ்லிம்கள் அதில் ஈடுபட்டுள்ளதை கவனிக்க வேண்டும்!

ஜனவரி 31, 2016

எங்களுக்கும், கள்ளநோட்டு விநியோகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த முஸ்லிம் அமைப்பு சொன்னாலும், முஸ்லிம்கள் அதில் ஈடுபட்டுள்ளதை கவனிக்க வேண்டும்!

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டுகளுடன்.முரசு

அதிரையில் அதிகரிக்கும் கள்ள நோட்டுக்கள்! பரிதவிக்கும் மக்கள்! கண்டறிவது எப்படி!: இதே போல இன்னொரு முஸ்லிம் இணைதளம், “அதிரை தற்போது சில வருடங்களாக கள்ள நோட்டுக்களில் புழக்கம் அதிகரித்துள்ளது என்று மார்ச்.2015ல் கூட விவரங்களை வெளியிட்டுள்ளது[1]. சமுக விரோதிகள் தங்களின் ஆதாயத்திற்க்காக கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகின்றனர். இவ்வாறு வரும் கள்ள ரூபாய் நோட்டுக்கள் வைரல் போல் ஊரெங்கும் பரவுயுள்ளது. அதிகளவில் பணம் பரிவர்த்தனை நடக்கும் இடங்களில் தான் இவ்வாறான நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இவ்வாறு கள்ள நோட்டுக்கள் அதிகம் 500, 1000 ரூபாய்களில் தான் அச்சடிக்கப்படுகின்றன. இதனால் அதிகளவில் துயரப்படுவது அப்பாவி மக்களே! கள்ள நோட்டை கண்டுபிடிக்கத் தெரியாத அப்பாவி மக்கள் அந்த பணத்தை வங்கியில் செமிக்க முனையும் போது பரிதாபமாக சிக்கிக் கொள்கின்றனர். இன்று அதிரையில் உள்ள ஒரு பிரதான வங்கியில் இதுபோல் தான் ஒருவர் தன் கணக்கில் பணம் செலுத்துவதற்க்காக வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என கண்டுபிடிக்கப்பட்டது கண்டு அதிர்ந்தார். உடனே வங்கி மேலாளர் அந்த பணத்தை கிழித்து அந்த நபரை எச்சரித்து அனுப்பினார். இது குறித்து அந்த அப்பாவி நபர் கூறுகையில் யாரிடம் பணம் வாங்கினேன் என்று எனக்கு தெரியவில்லை. உழைத்து சம்பாதித்த பணம் போய்விட்டது என மனக்குமுறலுடன் சொன்னார். எனவே இது போல் நாமும் ஏமாற்றப்படாமல் இருக்க ஒவ்வொருவரும் கள்ள நோடுக்களை அறிவது எப்படி என அறிந்து வைத்துக்கொள்வது அவசியம்”, என்று அறிவித்தது. பணம் என்ற விசயம் வரும்போது உஷாராகத்தான் இருக்கிறார்கள்.

Fake INR circulation in TN. how distributedதமிழகத்தில் மால்டா கள்ளநோட்டு கும்பல்: கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருப்பூர் தெற்கு போலீசாருக்கு, கருவம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக, தகவல் கிடைத்தது. 2010, அக்., 31ல், அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் கள்ளநோட்டு வைத்திருந்த, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரபு ஷேக் 34, முகமது சதாவுல், அப்துல் ரகீப் ஆகியோர் பிடிபட்டனர்[2]. அவர்களிடம் இருந்த, 2.46 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு (கள்ளநோட்டு தடுப்பு பிரிவு) மாற்றப்பட்டது. திருப்பூர் சப்-கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நவமூர்த்தி விசாரித்து, முகமது அஸ்ரபு ஷேக்குக்கு நான்கு ஆண்டு, எட்டு மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஜூலை 2015ல் தீர்ப்பளித்தார்[3]. மற்ற குற்றவாளிகளான முகமது சதாவுல், அப்துல் ரகீப் இருவரும், ஜாமினில் வெளிவந்த போது தலைமறைவாகினர். அவர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். அதாவது பாகிஸ்ஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகள் மால்டா மூலம் தமிழகத்தில் விநியோகிப்பது வியப்பாக இருக்கிறது[4]. இந்தியாவில் ஆண்டொன்றிற்கு ரூ.1500 கோடி கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுகின்றன. இது மால்டாவில் சிலரை கைது செய்து விசாரித்ததில் தெரிய வந்தது[5]. இதுதவிர, குண்டுகள், துப்பாக்கிகள், ரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கைதுகள் ஏராளம். 2015ம் ஆண்டு கண்டுபிடித்த சில உதாரணங்கள், கைதுகள்.

Fake INR circulation in Tamilnaduபாகிஸ்தான், பங்களதேசம், தமிழகம் தொடர்பு எப்படி?: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கள்ளநோட்டு புழக்கம் மற்றும் வழக்குகளும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக கள்ளநோட்டு வழக்குகள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தானில் அச்சடிப்பு இந்தியாவிற்கு பாகிஸ்தான் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல்வேறு தொல்லை கொடுத்து வருகிறது[6]. ஒரு பக்கம் தீவிரவாதிகளை ஏவிவிட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி நாசவேலைகள் அரங்கேற்றப்படுகின்றன. இன்னொரு பக்கம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் சதித்திட்டங்களையும் பாகிஸ்தான் நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் அண்டை நாடான வங்காளதேசத்திற்கு கொண்டு போகப்பட்டு, அங்கிருந்து இந்தியாவிற்குள் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் புழக்கத்திற்கு விடப்படுகிறது. மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புவது போல அனுப்பி, அவர்கள் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகிறது[7].

Fake INR circulation in TNதமிழகத்தில் ஊடுருவல்: தமிழகத்திற்குள்ளும் கட்டிட வேலை செய்பவர்கள் போலவும், ஓட்டலில் வேலை பார்ப்பவர்கள் போலவும், பிளாட்பாரங்களில் கடைபோட்டு துணி விற்பவர்கள் போலவும் கள்ளநோட்டு கும்பல் ஊடுருவி வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு விடுகின்றனர். ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை பெரும்பாலும் புழக்கத்தில் விடுகிறார்கள். தமிழகத்தில் கள்ள நோட்டு கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது வேட்டை நடத்துகிறார்கள். சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை நகர போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆதரவு உளவாளிகள் ஜாகீர் உசேன் உள்பட 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் முச்லிம்கள் என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.

Fake INR circulation in Tamilnadu- tirupur two arrested2011ல் 1400 வழக்குகள் என்றிருந்து 2015ல் 1313 என்று குறைந்தது: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவது குறைந்துள்ளது. வழக்குகள் எண்ணிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக போலீசார் வெளியிட்ட புள்ளி விவரக் கணக்கில் தெரியவந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் 1400 கள்ளநோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 1313 கள்ளநோட்டு வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்கள் மீது தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு வழக்குகளில் கைதானவர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், என்பது குறிப்பிடத்தக்கது, மற்றும் இவர்கள் எல்லோருமே முஸ்லிம்கள்.

Fake-Currency- two arrested in tirupurகள்ள நோட்டுகள் விழிப்புணர்வுநோட்டீஸ்[8]: இந்நிலையில், கனரா வங்கி உட்பட பல்வேறு தேசிய வங்கிகளின் சார்பில், அதன் கிளைகளில், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், ரிசர்வ் வங்கி தகவலின்படி, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., வரிசையிலான, 1,000 ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகள் என கண்டறியப்பட்டுள்ளதால், அந்த நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 500 ரூபாய் நோட்டுகளில், 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., 100 ரூபாய் நோட்டுகளில், 4 ஏ.க்யூ., ஏ.ஏ.சி., ஆகியன கள்ள நோட்டுகளாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது[9]. என்னத்தான் எச்சரிக்கைகள், முதலியன இருந்தாலும், கள்ளநோட்டுகளை தடுக்க முடியவில்லை என்பது நிதர்சனமாக உள்ளது.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டுகளுடன்முஸ்லிம்களின் தொடர்பு ஏன்?: பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட கள்ளநோட்டுகள், பங்களாதேசத்திற்கு வருகின்றன எனும் போது, அத்தனை தூரம் தாண்டி எப்படி வருகிறது என்பது வியப்பாக இருக்கிறது. பிறகு, அவை பங்களாதேச ஊடுருவல்காரர்கள் மூலம், விநியோகிக்கப் படுகிறது, தமிழகத்திலும் வருகிறது எனும் போது, இவையல்லாம் திட்டமிட்டு, ஒரு ஒருங்கினைப்போடு செயல்படுகிறது என்றாகிறது. பிறகு சம்பந்தப்பட்டுள்ளவர்கள் முஸ்லிம்கள் எனும் போது, அவர்கள் எப்படி, ஏன், எவ்வாறு அத்தகைய தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது, அதைவிட வியப்பாக இருக்கிறது. அதிரை எக்ஸ்பிரஸ் கவலைப்படுவது போல, எல்லா முஸ்லிம் அமைப்புகளும் கவலைப்படலாமே. சகோதரர்களுக்குச் சொல்லி தடுக்கலாமே? பீஹார், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் நடப்பவை, ஏன் தமிழகத்தில் நடக்க வேண்டும்?

 

© வேதபிரகாஷ்

31-01-2016

[1] http://adiraipirai.in/?p=920

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1293570&Print=1

[3] தினமலர், கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை,ஜூலை.11, 2015, 01.14.

[4] http://www.oneindia.com/india/why-does-fake-currency-come-from-west-bengal-1788096.html

[5] http://www.oneindia.com/india/fake-currency-rs-1500-crore-pumped-into-india-in-one-year-1756998.html

[6] தினத்தந்தி, பாகிஸ்தானில் அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள் தமிழகத்தில் கள்ளநோட்டு வழக்குகள் வெகுவாக குறைந்தன, மாற்றம் செய்த நாள்: திங்கள், ஜனவரி 25,2016, 1:20 AM IST; பதிவு செய்த நாள்: திங்கள், ஜனவரி 25,2016, 1:20 AM IST.

[7] http://www.dailythanthi.com/News/State/2016/01/25012002/Fake-notes-being-pushed-into-tamilnadu-via-pakistan.vpf

[8] தினமலர், தமிழகத்தில் ரூ.200 கோடி கள்ளநோட்டு புழக்கம், ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வியாபாரிகள் பீதி , பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016,23:16 IST

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1439396

கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது – பின்னணி என்ன?

ஜனவரி 31, 2016

கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது பின்னணி என்ன?

 தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டுகளுடன்

காரில் சென்று கொண்டே கள்ளநோட்டைக் கொடுத்து தின்பண்டங்கள் வாங்கிய கூட்டம்: தமிழக ஊடகங்கள் வழக்கம் போல, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் மதுரை ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு 29-01-2016 அன்று நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் வந்தது, கடையில் இருந்த சிறுவனிடம் ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து ரூ.60க்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு மீதி பணத்தை வாங்கி சென்றது, தொடர்ந்து அடுத்துள்ள உள்ள மாடசாமி என்பவரது  மிக்சர் கடையிலும் ஆயிரம் ரூபாயை கொடுத்து  ரூ.80-க்குப் திண்பண்டம் வாங்கி மாற்றி சென்றது[1], இதேபோல் அண்ணாசிலை அருகில் உள்ள பழக்கடை ஓன்றிலும் இவ்வாறு செய்தது, இதனால் சந்தேகமடைந்த பிஸ்ட் கடை உரிமையாளர் கண்ணனுக்கு ரூபாய் நோட்டு மீது சந்தேகம் ஏற்பட்டது, அருகிலுள்ள தனியார் வங்கிக்கு / எதிரே உள்ள ஐ.சி.ஐ.சி. வங்கியில் சென்றது, அந்த ஆயிரம்  ரூபாய் நோட்டை காட்டியது, சோதனையில் அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது, என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர். பிறகு, இதுபற்றி கண்ணன் போலீசில் புகார் செய்தார்[2] என்று தொடர்ந்தன.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு. பறிமுதல், 4 பேர் கைது

போலீஸார் சோதனையில் கார் பிடிபட்டது: திருப்புத்தூர் டவுன் போலீசார் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் கள்ளநோட்டு கும்பல் குறித்து மைக்கில் தெரிவித்து உஷார்படுத்தினர். எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால், இந்த குறிப்பிட்ட காரும் அவ்வழியாகச் சென்றது. அப்பொழுது, அந்த வழியாக காரில் வந்த கள்ளநோட்டு  கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து கள்ளரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி 30 ஆயிரம் ரூபாய், மற்றும் அவர்கள் வந்த கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[3]. காரில் இருந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்து  எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு. பறிமுதல்

விசாரணையின் போது வெளிவந்த விவரங்கள்: போலீஸ் விசாரணையில், அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன.

  1. தஞ்சாவூரைச் சேர்ந்த அன்சாரி மகன் முகமது ஸாகிப் (27) என்று தினமணியும்/ தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாநகர் முகமதுஹனீப் (34) என்று தினகரனும் கூறுகின்றன[4],
  2. புதுத்தெரு அகமது மகன்அப்துல்லா (35),
  3. ராஜா முகமது மகன்அஜ்மல் (20),
  4. பகுர்தீன் மகன்மீரான்முகைதீன் (32)

என தெரியவந்தது[5].  அவர்களிடமிருந்து கள்ளரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரான அமீர் அப்பாஸ் என்பவரது கார் என்பதும், மருத்துவமனைக்கு செல்வதாக கூறி அவரிடம் காரை வாங்கி, கள்ள நோட்டுகளை கடத்தி வந்து அபிராமபட்டினத்திலிருந்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது[6]. அவர்களிடம் திருப்பத்தூர் ஆய்வாளர் செங்குட்டுவன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்[7].

தவ்ஹீத் ஜமா-அத் சின்னம்

தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது: இவ்வாறு தலைப்பிட்டு, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் வந்த கார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ அணிச் செயலருக்கு சொந்தமானது என்பதும், அவரிடம் இரவல் வாங்கிக் கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது[8]. இவர்களுக்கு கள்ளநோட்டைக் கொடுத்த முக்கிய நபர் மன்னார்குடியில் வசிப்பது தெரியவந்துள்ளது. எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, அவரைத் தேடி போலீசார் மன்னார்குடிக்கு சென்றுள்ளனர்[9]. காரை எந்த காரணத்திற்கு, யாரிடமிருந்து வாங்கி வந்தாலும், கள்ளநோட்டு விநியோகத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டதும், அதே காரில் கள்ளநோட்டுகள் பிடிபட்டதும் மறுக்கமுடியாது. இது முஸ்லிம்கள் பிரச்சினையல்ல, பொது பிரச்சினை என்று சொல்லமுடியாத அளவிற்கு, முஸ்லிம்கள் தான் ஈடுபட்டுள்ளனர்.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு

முஸ்லிம்களின் எச்சரிக்கை: அதிரை எக்ஸ்பிரஸ் என்ற முஸ்லிம் இணைதளம், “அதிரையில் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் கள்ள நோட்டு கும்பல் வியாபாரிகளிடம் கள்ள நோட்டுகளை கொடுத்து அவர்களிடம் பொருள்களை வாங்கி செல்லும் அவலம் தொடர்ந்து அதிரையில் ஒரு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று கொண்டு இருப்பதாக கூறபடுகிறது[10]. 500ரூ மற்றும் 1000 ரூபாய்கள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது. குறிப்பாக பெண்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.  இதில் அதிரை பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்,” என்று அதே நாளில் வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது[11].  அதிராமபட்டினம் என்பதனை முஸ்லிம்கள் அதிரை என்று சொல்லிவருகின்றனர். இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாநகர் முகமதுஹனீப் (34). இங்கு, “குறிப்பாக பெண்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது” என்றுள்ளது. இங்கு சிறுவனிடம் கள்ளநோட்டு கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றுள்ளது.

காலைமலர், தவ்ஹித் கார் கள்ளநோட்டு

தவ்ஹீத் ஜமாஅத் கார் பறிமுதலாநடந்தது என்ன?[12]: காலைமலர் என்ர இணைதளத்தில், இத்தகைய மறுப்பு காணப்படுகிறது, “புதுக்கோட்டை மாவட்ட TNTJ நிர்வாகியின் காரை மதுரையிலுள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்வதாக கூறி காரை இரவலாக வாங்கியுள்ளனர். ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் பரபரப்பான சூழலிலும் மனிதநேய அடிப்படையில் காரை நோயாளிக்காக கொடுத்தார் TNTJ மாவட்ட நிர்வாகி, இதுதான் நடந்த சம்பவம், இந்த சம்பவத்திற்கும் TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை[13]. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் கும்பகோணத்தில் TNTJ நடத்திய முதல் மாநில மாநாட்டின் போதும் அன்றைய தினம் ரயில் நிலையத்தை தகர்க்க TNTJ சதி என்று அன்றைய மாநில துணைப்பொதுச்செயலாளர் A.S. அலாவுதீன் கடிதம் எழுதியதாக சன் டீவி பொய் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ? அந்த சம்பவத்தை வைத்து அவதூறு பரப்பினார்கள் நினைவிருக்கிறதா? அதேப்போன்று இந்த சம்பவத்தையும் வைத்து மாநாட்டை சீர்குலைக்க அயோக்கியர்கள் முகநூலில் அவதூறு பரப்புகிறார்கள்.அயோக்கியர்களின் அவதூறை அடுத்த சில மணிநேரத்தில் அது பொய் என நிரூபனம் ஆனது”. அதாவது, “இந்த சம்பவத்திற்கும் TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை”, என்கிறதே தவிர, முஸ்லிம்களுக்கும் கள்ளநோட்டு பட்டுவாடா, விநியோகம் முதலியவற்றிற்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அப்படியென்றால், இது அவர்களுக்குள் உள்ள பிரச்சினை போன்று காட்டிக் கொள்ளப்பார்க்கிறார்களா?

 

© வேதபிரகாஷ்

31-01-2016


 

[1] தினமணி, திருப்பத்தூரில் கள்ள நோட்டு கும்பல் கைது, By திருப்பத்தூர், First Published : 29 January 2016 01:38 AM IST.

[2] தமிழ் முரசு, கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது, 1/29/2016 4:42:49 PM

[3] தினகரன், கள்ளநோட்டு கும்பல் கைது, பதிவு செய்த நேரம்:2016-01-29 10:06:08

[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=531507&cat=504

[5] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=87309

[6] – See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=87309#sthash.AlvR6D0J.dpuf

[7]http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2016/01/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/article3249987.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1444690

[9] தினமலர், கள்ளநோட்டு கும்பலை பிடிக்க மன்னார்குடிக்கு போலீஸ் விரைந்தது, ஜனவரி.29.2016:23.51.

[10] அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை மக்களே உஷார், Posted by அதிரை எக்ஸ்பிரஸ் on 1/29/2016 07:54:00 PM.

[11] http://www.adiraixpress.in/2016/01/blog-post_470.html

[12]  காலைமலர், தவ்ஹீத் ஜமாஅத் கார் பறிமுதலாநடந்தது என்ன?, By Mathiyalagau, Jan 30, 2016.

[13] http://kaalaimalar.net/tntj-car-cheesed/

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

greater-islamic-bangladesh

greater-islamic-bangladesh

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்ய சாதகமாக இருக்கும் பங்களாதேசத்தின் இருப்பிடம்: பங்களாதேசம், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா, மயன்மார், வங்காள விரிகுடா என்று சூழ்ந்துள்ளது. வடக்கில் நேபாளம், பூடான் போன்ற நாடுகள் இருப்பதால், பங்களாதேச தீவிரவாதிகள், இந்தியாவில் நுழைந்து, இம்மாநிலங்கள் வழியாக நேபாளம், பூடான் சென்றுவிட்டால், அங்கிருந்து தப்பித்து விடலாம். அதேபோல, உள்ளே நுழையவும் செய்யலாம். இத்தலைய பாதுகாப்பற்ற எல்லைகளின் தன்மையினைத்தான், பங்களாதேச தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பிறகு இம்மாநிலங்களை ஒட்டியுள்ள ஜார்கெண்ட், பிஹார், சிக்கிம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் போன்ற மாநிலங்களில் தொடர்புகளை வைத்துக் கொண்டால், இவர்களது வலை பெரிதாகி, தப்பித்துக் கொள்ள சுலபமாகிறது. மேலும், வடகிழக்கில் கடந்த 60 வருடங்களாக இந்தியாவிற்கு எதிராக வேலை செய்து வரும் இயக்கங்களும், சில நேரங்களில் – பணம், போதை மருந்து, ஆயுதங்கள் – என்று வரும்போது, கைக்கோர்த்துக் கொள்கின்றன. இதனால் தான், இஸ்லாமிய ஜிஹாதிகள், பாகிஸ்தானையும், பங்களாதேசத்தையும் இணைக்கலாம் என்று பலவழிகளில் முயன்று வருகிறார்கள்.

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

ஜிஹாதிகளின் ஜார்கெண்ட் தொடர்பு (13-11-2014)[1]: கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், 13-11-2014 (புதன்கிழமை) சங்கிராம்பூர் என்ற, ககூர் மாவட்டம், ஜார்கெண்டில் உள்ள ஊரில் என்.ஐ.ஏ. இரண்டு பேர்களிடம் விசாரணை மேற்கொண்டது. இவ்வூர், மேற்கு வங்களாத்தின் பீர்பூம் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. பீர்புமில் ஆயிரக்கணக்கான குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன, போலீஸ் அதிகாரியின் மீது குண்டெரியப் பட்டது, கலவரம் ஏற்பட்டது, மூன்று பேர் கொல்லப் பட்டனர் போன்ற விவரங்கள் முன்னமே கொடுக்கப் பட்டன. ஆகவே, மாநில எல்லைகளைக் கடந்து ஈடுபட்டு வரும் இவர்களைக் கண்காணிப்பதில், இம்மாநில பாதுகாப்பு, போலீஸார் முதலியோரும் மெத்தனமாகவே இருந்து வருகின்றனர் என்றாகிறது. இல்லை, தீவிரவாதிகளால் அவர்கள் நன்றாக கவனிக்கப் பட்டு வருவதால், அவ்வாறு இருந்திருக்கிறார்கள் போலும். ஜார்கெண்டில் உள்ள இந்திய முஜாஹித்தீன் நடவடிக்கைகளைக் கவனிக்க வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது[2].

how money reached khagragarh from sylhet

how money reached khagragarh from sylhet

கள்ளநோட்டுகள் தொடர்பு: என்.ஐ.ஏ 09-11-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று போலி / கள்ளா இந்திய ரூபாய் நோட்டுகள் [FICN – Fake Indian Currency Notes] விசயமாக ஆழ்ந்த சோதனையை மேற்கொண்டது. இந்திய பொருளாஹாரத்தை சீரழிக்கும் இந்த விசயத்தில், என்.ஐ.ஏ தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது[3]. நான்கு நாட்கள் பங்களாதேசத்தில் பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது, ஜே.எம்.பி மற்றும் இதர ஜிஹாதிக்குழுக்கள் இந்த கள்ள நோட்டுகள் கடத்தல் மற்றும் விநியோகங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது[4]. இந்திய-பங்களாதேச எல்லைகள், பல இடங்களில் வேலையில்லாமல் இருப்பதாலும், பாதுகாப்பு-சோதனை போதிய அளவு இன்மை, ஆளும் கட்சிகள் கொடுக்கும் ஊக்குவிப்பு ஆதரவு முதலிய காரணங்களினால், எல்லைகளைத் தாண்டி இவ்வேலைகள் நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மற்ற இந்திய-விரோத இயக்கங்களும் இதில் ஈடுப்பட்டுள்ளன, கைகோர்த்துக் கொண்டு வேலை செய்து வருகின்றன. ஊடுருவல்காரகளுக்கு கொடுக்கப் படும் முக்கியமான வேலையே, இந்த நோட்டுகளை விநியோகிக்கும் வேலைதான். கடந்த 2011-2014 ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமாக கள்ளாநோட்டுகள் பிடிபட்டுள்ளன. குறிப்பாக அசாம் மாநில எல்லைப் பிரதேசங்களிலிருந்து, இக்கள்ளப்பணம் அதிகமாக நுழைந்து, மற்ற இடங்களுக்குப் பட்டுவாடா செய்யப் படுகின்றன. குறிப்பாக உபியில் அதிகமாக செல்கிறது. இப்பணம் தான், அங்குள்ள தீவிரவாத-பயங்கரவாத-வன்முறை செயல்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.

burdwan masterminds plotting

burdwan masterminds plotting

ஜியா உல் ஹக் தொடர்புகள் – 07-11-2014 அன்று கைது செய்யப் பட்டான்[5]: என்.ஐ.ஏ. அதிகாரிகள் 07-11-2014 அன்று ஜியா உல் ஹக் (மொஹம்மது பரித்தூனின் மகன்) என்பவனை கைது செய்தனர். இவன் மறைந்து வாழும் ரிஜாவுல் கரீம் மற்றும் யூசுப் ஷேக் அல்லது மௌலானா யூசுப்பின் கூட்டாளி ஆவான். மஸ்ஜித் தல்ஹாவில் (காக்ராகர், பர்த்வான்) தங்கியிருந்தபோது பிடிபட்டான். இவன் ஜிஹாதித்துவத்துவை புதியவர்களுக்கு பயிற்சி கொடுப்பதில் ஈடுபட்டுள்ளவன் என்று தெரிய வந்தது. ஜிஹாதி சம்பந்தப்பட்ட வீடியோக்களை சேகரித்துத் தொகுப்பது இவனது முக்கியமான வேலை. குஜராத் கலவரங்கள், அஸாம் கலவரங்கள், ரோஹிங்கிகள் கொல்லப் படுதல் முதலியவற்றின் வீடியோக்களை வெட்டி-ஒட்டி ஜிஹாதி நோக்கில் தயாரிக்கப் பட்ட வீடியோக்களை சிமுலியா மற்றும் முகிம்நகர் மதரஸாக்களில் போட்டுக் காண்பிப்பது வழக்கம். இவற்றை மற்ற “ஹை-டெக்” ஜிஹாதிகள் இணைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இவன் இப்பொழுது தப்பி மறைந்து வாழும் ஜே.எம்.பியின் தளபதி, சஜித் மற்றும் சகிப் என்கின்ற சுமன் முதலிவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். மால்டாவின் அவனது வீட்டில் சோதனையிட்டபோது, கிடைத்த லேப்டாப்பில், இவ்விசயங்கள் இருந்தன. பர்த்வான் குண்டுவெடிப்புப் பிறகு, ரிஜாவுல் கரீம் லேப்டாப்பை ஜியா உல் ஹக்கிற்குக் கொடுத்தான். ஆக இந்த இளைஞர்கள் எல்லாவற்றிலும் பயிற்சியளிக்கப் பட்டு தயார் செய்யப் படுகிறார்கள் என்று தெரிகிறது.

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

08-11-2014 அன்று எஸ்.கே. ரஹமத்துல்லா கைது[6]: எஸ்.கே. ரஹமத்துல்லா என்கின்ற எஸ்.கே. புர்ஹான் (லெப்னினென்ட். சித்திக் மியா அலியின் மகன்) பொலீஸாரால் கைது செய்யப் பட்டான். ஜெசோர் ரோடில் கைது செய்யப் பட்டு என்.ஐஏவிடம் ஒப்படைக்கப் பட்டான். ஜே.எம்.பியின் பர்த்வான்-திட்டத்தை அமைத்த முக்கிய நபர்களில் ஒருவன். இவனிடமிருந்து பல போலியான சிம் கார்டுகள், பான் கார்டுகள், EPIC, DL, முதலியன கண்டெடுக்கப்பட்டன[7]. இன்னொரு அறிக்கை, அவன் பெயர் ஷேயிக் ரஹமத்துல்லா / சஜித் / புர்ஹான் ஷேக் / சுரோத் அலி (ஆலம் ஷேயிக் / ஜானு எஸ்.கே / மறைந்த சித்திகி மியா-வின் மகன்) என்று குறிப்பிடுகிறது[8]. பங்காளதேசத்தவன், இப்பொழுது ஜார்கெண்டில் வாழ்ந்து வந்தான்[9]. பல இடங்களில் நகர்ந்து கொண்டு வேலை செய்யும் இவர்கள், தங்களது அடையாளங்களை மாற்றிக் கொண்டு, அதற்கெற்றப் படி ஆவணங்களிலும் தங்களது விவரங்களை பலவிதமாகக் கொடுத்து வருகிறார்கள்.

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

அம்ஜத் ஷேக் / காஜல் 10-11-2014 அன்று கைது[10]: 10-11-2014 அன்று 30 வயதான அம்ஜத் ஷேக் / காஜல் (சுகுர் ஷேக்கின் மகன்) பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டான். இவனும் ஜே.எம்.பியின் உறுப்பினன், பர்த்வான் குண்டு தொழிற்சாலை திட்டத்தில் பங்குக் கொண்டவர்களில் முக்கியமாக செயல்பட்டவன். குண்டு தயாரிக்க வேண்டிய முக்கியமான ரசாயனப் பொருட்களைப் பெற்று, மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தான். குண்டுவெடிப்பிற்குப் பிறகு, கொல்கொத்தாவில் உள்ள இவனது வீட்டை சோதனை செய்தபோது, ரசாயனப் பொருட்கள் வாங்கியதற்கான சிட்டுகள், ரசீதுகள் முதலிய கண்டெடுக்கப் பட்டன. 08-11-2014 அன்று இவன் தில்லிக்குச் சென்றுள்ளான். பிறகு உப்யில் உள்ள பஸ்தி என்ற இடத்திற்கு வந்துள்ளான். அங்கு ஒரு போலீஸ்காரன், இவன்மறந்திருக்க இடம் கொடுத்துள்ளான். பிறகு, மறுபடியும் மேற்கு வங்காளத்திற்கு சென்றபோது, அங்கு கைது செய்யப்பட்டான். ஜே.எம்.பியின் திட்டப்படி, மேற்கு வங்காளத்திலுள்ள மதரஸாக்களில் ஜிஹாதி பயிற்சிமுறைகளை அளிக்க பாடுப்பட்டவர்களில் முக்கியமானவனாக இருந்தவன்[11]. இவனைப் பற்றி துப்புத் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்படிருந்தது.

24 பர்கானாஸ் மாவட்டத்தில் விமான நிலையப் பகுதியில் ஷேக் ரகமதுல்லா (40) என்பவரை ஞாயிற்றுக்கிழமை (08-11-2014) போலீஸார் கைது செய்தனர்[12]. விசாரணையில் அவர்தான் பர்த்வான் குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டிய சஜித் என்பது தெரியவந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த அவர் ஜமாத்-உல்-ஹக் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராவார். மேலும் அவர் மஜ்லிஸ்-இ-சுரா என்ற அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். வங்கதேசத்தில் சில ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் பின்னர் மேற்கு வங்க மாநிலம், முர்ஷீதாபாத் மாவட்டத்தில் உள்ள முகிம்நகரில் ஒரு மதரஸா அருகே வசித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

15-11-2014

[1] http://zeenews.india.com/news/jharkhand/burdwan-blast-probe-two-picked-up-from-jharkhand_1498285.html

[2] As per GOI, MHA Oder No. 11011/67/2013-IS.IV dated 27/12/2013, NIA has taken over the investigation of the FIR No. 985/2013 dated 04/11/2013 of Kotwali (Hindpiri) Police Station, Ranchi, Jharkahnd and re- registered the case on 31/12/2013 at PS NIA, New Delhi as Case No. RC-12/2013/NIA/ under section 121, 121A, 120B, 34 of IPC, Section 16,18,20,23 of UA (P) Act, Section 3,4 of Explosive Substances Act and section 17 of Criminal Law. The accused persons are involved in commission of subversive and anti-national activities by entering into a criminal conspiracy with others and in pursuance to that they had collected explosives and other prohibited articles in concealed manner for the purpose of waging war against the Governement of India.

[3] Damage to the monetary stability of India was caused by way of transporting, smuggling and circulating of high quality counterfeit Indian Currency Notes of Rs.1000/- denomination in India. As per GOI, MHA order F. No. 11011/35/2014/IS.IV dated 16 June 2014, NIA registered a case on 25.06.2014 at PS, NIA, Delhi as Case RC-02/2014/NIA/DLI U/s -120B, 489B & 489C of IPC and Section 16 & 19 of UA (P) Act .

[4] http://bdnews24.com/neighbours/2014/11/09/nia-probing-jmbs-fake-currency-business

[5] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.

[6] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி, Arrest of SK Rahmatlla @ Sajid in RC-3/2014/NIA-DLI. – SK Rahmatlla @ Sajid @ Burhan SK, S/O Lt. Siddique Miyan Vill Farajikanda, P.O. Madangunj, P.S.Bandar, District Narayangunj, Bangladesh arrested by Police from Jessore Rode, PS Airport, around 1430 Hrs. and handed over to National Investigation Agency. He is one of the main leaders of West Bengal Module of Jamaat-ul-Mujahideen-Bangladesh. Several fake identity documents like EPIC, DL, PANCARD and other items have been recovered from his possession.

[7] http://www.nia.gov.in/writereaddata/PressRelease08112014.pdf

[8] http://www.nia.gov.in/writereaddata/PressRelease09112014.pdf

[9] STATUS REPORT AS ON 09.11.2014 IN BURDWAN BLAST CASE (NIA CASE NO. RC-03/2014/NIA-DLI)

[10] http://www.nia.gov.in/writereaddata/PressRelease10112014.pdf

[11] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.  NIA today achieved a major breakthrough with the arrest of one Amjad Sheikh@ Kajal, son of Sukur Sheikh, age 30 years, resident of Kazi market, Kirnahar, District- Birbhum (West Bengal) for his role in Burdwan blast case. Amjad Sheikh was a key member of Jamaat-ul-Mujahideen, Bangladesh (JMB) and also one of the main conspirators of the Burdwan blast case.

[12]http://www.dinamani.com/india/2014/11/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/article2514313.ece

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

மம்தா- ஹஸினா - அரசியல்-ஜிஹாத்

மம்தா- ஹஸினா – அரசியல்-ஜிஹாத்

வடபழனிக்கும், பர்த்வானுக்கும் என்ன தொடர்பு?: இப்படி கேட்டால், ஏன்னது, “அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்”, போல கேள்விக் கேட்கப் படுகிறதே என்று நினைக்க வேண்டாம். பர்த்வான் வெடிகுண்டு தொழிற்சாலை சொந்தக்காரர்கள், வடபழனியில் உள்ள மூன்று “பாய்கள் / முஸ்லிம் சகோதரர்களுடன்”, அவர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் தீவிரவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்க அல்லது தெரியாமல் இருந்திருக்க வேண்டும். தெரிந்திருக்கக் கூடும் என்றால், அவர்களுக்கு ஏன் துணை போகவேண்டும், அப்பா-அம்மா, இப்படி குண்டு தயாரிப்பது, தொழிற்சாலை வைப்பது, மற்றவர்களுக்கு விநியோகிப்பது எல்லாம் தப்பு என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அந்த இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்கள், இரண்டு பெண்களும் விதவையாகி இருக்கமாட்டார்கள். முஸ்லிம்களாக இருந்து கொண்டே ஜிஹாதி தொடர்புகள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் என்றால், “ஸ்லீப்பர் செல்” முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும் நன்மையாகவோ, மென்மையாகவோ, வன்மையாகவோ கண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை.

Vadapalani -burdwan link

Vadapalani -burdwan link

ஜிஹாத் என்றால் உண்மையினை அறிய வேண்டும்: “ஜிஹாத்” என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அடிக்கடி சில முஸ்லிம் இயக்கங்கங்கள் பறைச்சாற்றிக் கொண்டாலும், குண்டுகள் வெடிக்கும் போது அமைதியாகி விடுகிறார்கள்.  தினத்தந்திக்கு[1] (05-10-2014) எச்சரிக்கைக் கொடுத்து (08-10-2014), ஜிஹாதி-மறுத்த நாட்களில் தான் வடபழனி முஸ்லிம்கள், பர்த்வான் முஸ்லிம்களான ஷகீல் மற்றும் ரஜிரா பீபீ என்ற வெடிகுண்டு தொழிற்சாலைக்காரர்களுடன் (02-10-2014 தேதிக்கு முன்னர்) பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஏற்கெனவே, இவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். சென்னயில் உள்ள முஸ்லிம்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கிறதா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். அவர்கள் ஏன் அப்படி தொடர்பு கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எந்த முஸ்லிம் அமைப்பும் கேட்டதாகத் தெரியவில்லை. அதைப் பற்றியும் ஊடகங்கள் தாராளமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் இவர்கள் எதிர்க்கவில்லை!

பர்த்வான் வடபழனி - தொடர்பு

பர்த்வான் வடபழனி – தொடர்பு

வடபழனி முஸ்லிம்களுடன் பேசிய ரூமி பீபி மற்றும் அமீனா பீபி வெளியிடும் திடுக்கிடும் ரகசியங்கள்: JMB தலைவர்களான சொஹைல் மெஹ்பூஸ் [Sohail Mehfooz] மற்றும் மொஹப்பது பிலால் [Mohammed Bilal] அடிக்கடி இந்தியாவில் உள்ள மதரஸாக்களுக்கு வந்து சென்றுள்ளனர். பிறகு, வங்காளதேசத்தில் நவாப் கஞ் என்ற இடத்தில் உள்ள தாருல்-உலும்-மஜ்ஹருல் [the Darul-Ulum-Majharul madrasa in Nawabganj, Bangladesh] என்ற மதரஸாவில், ஆகஸ்ட் 2014ல் கூடிய கூட்டத்தில் தான், இந்தியாவில் எப்படி நிதிதிரட்டுவது, ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விவரங்கள் பேசப்பட்டு தீர்மானம் செய்யப் பட்டன. இவர்களுடன் இன்னொரு JMB தலைவர் மொஹம்மது ஹபிபுர் ரஹ்மான் [Mohammed Habibur Rehman] என்பவரும் நிதிதிரட்டும் சேவைக்கு சேர்ந்து வந்துள்ளார். மூர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் அவர்களது ஆட்கள் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு உள்ளூர் நிதிவசூல் மட்டுமல்லாது, பங்களாதேசத்தில் சைலெட் என்ற இடத்தில் (Syhlet, Bangladesh) உள்ள JMB ஆட்கள் கொரியர் மூலம் ரூபாய் நோட்டுகளை அசாமில் உள்ள ஒரு டாக்டருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த டாக்டர் கௌஸருக்கு அறிவிக்க, பணத்தை எடுத்துவர மூன்றுய் ஆட்கள் அசாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். கொரியர்கள் / பணத்தை எடுத்துச் செல்லும் நம்பிக்கையானவர்கள் மூலம் பல வழிகளில் சென்று, கடைசியில் முர்ஷிதாபாதில் பேராம்பூர் நகருக்கு சுமார் ரூ.10 லட்சம் என்ற விதத்தில் வந்து சேரும். பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள அந்த வீட்டைப் பிடித்தனர். ஒரு பக்கம் பர்கா பேகடரி மற்பக்கம் பாம்ப் பேக்டரி என்று வேலைகளை ஆரம்பித்தனர். நூற்றுக் கணக்கான ஆட்கள் இவ்வேலையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஆனால், மிகவும் விசுவாசமான சுமார் 40 பேர் தாம் குண்டு தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தப் பட்டனர். ரூமி பீபி மற்றும் அமீனா பீபி சாதாரணமாக கொல்கொத்தாவில் உள்ள புர்ரா அஜாருக்குச் சென்று (Burrabazar in Kolkata), குண்டுகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த குண்டு தொழிற்சாலை மூன்று மாதங்களாக, அதாவது, ஆகஸ்ட் 2014லிருந்து, வேலை செய்து வருகின்றது. அக்டோபர் 2 குண்டுவெடிப்பிற்கு முன்னர் சுமார் 50 குண்டுகள் டாக்கா, அசாம் போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  என்.டி.ஏ அரசாங்கம் பதவி ஏற்றவுடன், இது ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தோ-பங்காளதேச உறவுகளை சீர்குலைக்க இக்காரியங்கள் நடக்கின்றன, எனும்போது, இதன் பின்னணியில் மற்ற விவகாரங்களும் இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்தி

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்தி

ஜிஹாதிகளாக பெண்கள் உபயோகப் படுத்தப் படுவது ஏன்?: பர்த்வான் குண்டு தொழிற்சாலை உருவானதில் இரண்டு பெண்களின் பங்கு அதிகமாக அறியப்படுகிறது. கைக்குழந்தைகளுடன் இப்பெண்கள் எவ்வாறு அத்தகைய வேலைகளில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஜிஹதித்துவத்தில் நன்றாக ஊறவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறான காரியங்கள் புண்ணியமானவை, அல்லாவுக்குப் பிடித்தனமானவை, அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று அறிவுருத்தப் பட்டுள்ளனர். பிறகு அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப்பட்டது. இதனால், மிகவும் விசுவாசமாக அவர்கள் வேலை செய்து வந்தனர். நிதி வசூல், விநியோகம் போன்ற விசயங்களிலிருந்து, குண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்குவது, குண்டுகளை விநியோகிப்பது என்ரும் ஈடுபட்டிருக்கிறார்கள். பணம் விசயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள். அதாவது பணம் இப்படித்தான் பட்டுவாடா செய்யப் படுகிறது என்ற அறியப்படாமல் போகும் என்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார்கள். மேலும் பங்களாதேசத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ளநோட்டுகள், இந்தியாவில் புழக்கத்தில் விடும் கோஷொடியினரும், தமிழகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இப்பெண்கள் கைக்குழந்தைகள் சகிதமாக சென்றுவரும் போது, யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பது நிதர்சனமே, ஆனால், அதவே திட்டமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு பெண்களை ஜிஹாதிக்கு உபயோகப் படுத்தும் முறையும் நோக்கத்தக்கது.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

பர்த்வான் மதரஸாக்களில் நடப்பவை என்ன?: மதரஸாக்கள் அதிகமாக முளைத்து வருவதும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. முஸ்லிம்கள் தாங்கள் மதக்கல்விதான் அளிக்கிறோம் என்றாலும், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது. ஏனெனில், பர்த்வான் மாவட்டத்தில் மட்டும் உள்ள 700க்கும் மேலான மதரஸாக்காளில் 37 மட்டும் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதாவது, பதிவு செய்யப் படாத மதரஸாக்களில் நடப்பதை யாரும் அறிந்து கொள்ல முடியாது. குறிப்பாக, ஒரு மதரஸாவில் 30-40 இளம்பெண்கள் படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளியே இருந்து கொண்டு வரப்பட்டுள்ளவர்கள். மேலும் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவது கிடையாது. அவர்கள் தங்களது கணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து அங்கே வசித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், திருமணம் ஆகாத பெண்கள் பாதிக்கப் படுகிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எங்குள்ளனவா, பாலியல் ரீதியில் தொல்லைகள் எதுவும் கொடுக்கப் படுகின்றனவா என்ற விசயங்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதரஸாக்களில் உள்ள மற்ற முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது உறவுகளை மறந்து ஜிஹாதி வேலைகளை செய்ய தயாராக வந்துள்ளனர்[2].

மதரஸாக்களின் கீழே சுரங்க பாதைகள், உள்ளே வெடிகுண்டுகள், வெளியே நிற்கவைக்கப் பட்ட காரில் ஜிஹாதி புத்தகங்கள்: சில மதரஸ்ஸாக்களின் கீழே சரங்கப் பாதைகளை தோண்டி வைத்துள்ளனர். அவை அருகிலுள்ள குளக்கரைகளில் சென்று முடிகின்றன[3]. பர்த்வானில் ஒரு மதரஸாவுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மஞ்சள் நிற காரில் சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் 12 டிரங்க் பெட்டிகள் இருந்துள்ளன[4]. அக்காரின் மீது “இந்திய ராணுவம்” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால், எண்ணோ, ஒரு பைக்கினுடையாத இருந்தது. புத்தகங்கள் மற்றவை ஜிஹாதி இலக்கியங்களாக இருந்தன. அவை அரேபிக், உருது மற்றும் வங்காள மொழிகளில் இருந்தன. இவ்வாறு மதரஸாக்கள் ஜிஹாதி காரியங்களுக்கு உபயோகப் படுத்த எப்படி முஸ்லிம்கள் ஒப்புக் கொள்கிறார்கள், அனுமதிக்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

பர்கா பேக்டரி - கடை

பர்கா பேக்டரி – கடை

[1] தினத்தந்தி, தீவிவாதிகளாக மாறும் பெண்கள், 05-10-2014

[2] The team has also recovered a phone book, believed to belong to Yousuf Sheikh, the terror module’s mentor. It has the contact numbers of women who took training in the Simulia madrassa, say sources. As per reports, the module was busy recruiting women through systematic brain wash. These women were trained in such a way that they were trained in such a way that they were ready to sacrifice their families when it came to jihad.

http://news.oneindia.in/india/burdwan-blast-nia-secret-tunnel-madrassa-tmc-jamaat-link-1541340.html

[3] In yet another shocking revelation, NIA discovered secret tunnels under mud huts which were previously Madarsas (Islamic Schools) in Burdwan. To everyone’s surprise, the secret passages ended up in nearby ponds.

[4]http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA2ODc0Mg%3D%3D

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

ஏப்ரல் 7, 2013

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:

  1. அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
  2. அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
  3. அந்நிய கலாச்சாரத்தை அறவே தடை செய்ய வேண்டும்[4].
  4. ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
  5. எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
  6. பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
  7. ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.

இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].

அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7].  “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர்.  இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].

அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.

இஸ்லாமிஸ்டுகள்மற்றும்செக்யூலரிஸ்டுகள்: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.

இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:

  • 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
  • ·         முஸ்லீம்களின் வெறியாட்டம்பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[10].
  • “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].

வேதபிரகாஷ்

07-04-2013


[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.

[2] The demands included declaration of the Ahmadiyya Muslim sect as non-Muslim, a ban on free mixing of men and women, making Islamic education mandatory at all levels and no installation of any sculpture in any public place.

http://edition.cnn.com/2013/04/06/world/asia/bangladesh-blasphemy-protest/

[3] The group listed 13 demands, including reinstating “absolute trust and faith in the Almighty Allah” in the nation’s constitution, which is largely secular, and passing a law providing for capital punishment for maligning Allah, Islam and its Prophet Muhammad.

http://abcnews.go.com/International/wireStory/hardline-muslims-rally-bangladesh-amid-shutdown-18895209#.UWEgOqJTCz4

[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”

இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

மார்ச் 1, 2013

இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

Bangladesh - India

பங்களாதேசத்தில்இஸ்லாமியத்தலைவருக்குத்தூக்குத்தண்டனை: பங்களாதேசத்தில் 1971ல் யுத்தம் நடந்தபோது, இந்தியப் படை, முக்தி வாஹினி என்ற பாகிஸ்தானிற்கு எதிராகப் போராடிய படைக்கு ஆதரவாக இருந்து, சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. இருப்பினும், பாகிஸ்தானை ஆதரித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பொழுது, போர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, பற்பல அட்டூழியங்களைச் செய்துள்ளனர். பங்களாதேசம், இஸ்லாமிய நாடாக இருந்தாலும், இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றானர். குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவாளர்களை தேசவிரோதிகளாகவே கருதுகின்றனர். இதனால், அத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்க, ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப் பட்டது. அதன்படி, டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[1] விதிக்கப்பட்டுள்ளது!

Bangladesh protesters against Capital punishment

ஜமாத்இஸ்லாமிதலைவர்செய்தகுற்றங்கள்: இவர் கீழ்கண்ட குற்றங்களுக்காக விசாரணைச் செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[2].

  • மனிதகுலத்திற்கு எதிராக பல குற்றங்களைப் புரிந்தது
  • பல கிராமங்களை கொள்ளையடித்தது
  • பலகிராமங்களை தீயிட்டுக் கொளுத்தியது
  • அப்பவி மக்களைக் கொன்றது
  • பெண்களைக் கற்பழித்தது
  • இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தது
  • அவர்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டது.

போர் மற்றும் போர்க்குற்றங்களில் 30,00,000 மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்[3]. அதாவது,ளாப்பொழுது கிழக்கு வங்காளம் அல்லது கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சுதந்திரம் நாடி போராடியபோது, பாகிஸ்தான் படையினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் விடுதலைப் படைக்கு எதிராக போராடினர், மக்களைக் கொன்றனர்.

The peoples verdict -Giant hoardings demand the hanging of war criminals

கடந்த அநீதிக்குத் தீர்வு வேண்டும் என்றால், நீதி காக்கப்படவேண்டும்: நீதிபதி ஏ.டி.எம். பஸலே கபீர் தமது எழுத்து மூலம் அளித்தத் திப்பில் அறிவித்ததாவது[4], “நீதிபதிகளாகிய நாங்கள் இந்த தண்டனை அளிக்காவிட்டால், கடந்தகால அநீதி நேர்ததற்கான பிராயச்சித்ததை நீதியாக அடையமுடியாது என்ற தத்துவத்தில் மிகவும் ஆழமான நம்பிக்கைக் கொள்கிறோம் மற்றும் கொண்டிருக்கிறோம்”. நீதி எனும்போது, நீதிபதிகள் நீதியில் நம்பிக்கைக் கொண்டுள்ளது தெரிகிறது. இருப்பினும், குற்றாவாளியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

Supporters at Shabag square Bangladesh 2013

தீவிவாத அமைப்புகளுடன் தொடர்பு: இந்த இஸ்லாமிய இயக்கம், பாகிஸ்தானிய மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு வேலை செடய்து வந்துள்ளது. இந்த இச்ளம்ய ஜமாத் கட்சி, முந்தைய பிரதம மந்திரியின் கட்சியான தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாட்சியிலும் பங்குக் கொண்டுள்ளது. இருப்பினும், தீவிரவாத இயக்கத் தொடர்புகளினால், பொது மக்கள் அதனை வெறுத்தொதிக்கினர்[5]. அதுமட்டுமல்லாது, அக்கட்சியின் எல்லா தலைவர்களுமே, பற்பல குற்றங்களுக்காக சிறையில் உள்ளார்கள்[6].

Bangladeshi- absconding Terrorists

தொடர்ந்து நடந்த கலவரங்களில் 35 பேர் சாவு: இத்தீர்ப்பை ஆதரித்து, எதிர்த்தும் பங்களாதேசத்தில் வெளிப்படையாக பேசப்பட்டது. பலர் ஆதரித்து பொதுநிகழ்ச்சியில் பேசவும் செய்தனர். தலைநகர் டாக்காவில், சபாக் சதுக்கத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள் என்று பலர் கூடி தீர்ப்பை ஆதரித்து முழக்கமிட்டனர். “தேசவிரோத பாகிஸ்தானிய ஆதரவாளர்கள், பாகிஸ்தானிற்கு போங்கள்ளென்று ஆர்பரித்தனர்[7]. இதனால், எதிர்க்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டத்தனர் ஆர்பாட்டத்தில், ரகளையில் ஈடுபட்டனர்[8]. இதனால் அரசு பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 35 பேர் இறந்துள்ளனர்[9]. இறந்தவர்களில் 4 போலீஸாரும் அடங்குவர், அதில் இருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்[10]. 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

My jihad is bomb your country

இந்திய முஸ்லீம்கள் இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வார்களா?: இங்கு, இந்தியாவில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு, சென்னையிலேயே எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். காஷ்மீர முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம், அவனது உடலைப் பெறுவது, அடக்கம் செய்வது என்ற விஷயங்களில் இரு கட்சிகளும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், ஆளும் கட்சியினர், ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமாக செயல் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நாடு எனும்போது, தமது நாட்டை ஆதரிக்க முஸ்லீம்கள் ஏன் மாறுபட்டு நடக்க வேண்டும்?

© வேதபிரகாஷ்

28-02-2013


[2] Prosecutors accused him of involvement in looting and burning villages, raping women and forcing members of religious minorities to convert to Islam during the war.

http://www.nytimes.com/2013/03/01/world/asia/islamic-leader-sentenced-to-death-in-bangladesh.html?_r=0

[4] “As judges of this tribunal, we firmly hold and believe in the doctrine that ‘justice in the future cannot be achieved unless injustice of the past is addressed,’ ” Justice A. T. M. Fazle Kabir commented in a written summary of the judgment.

http://www.nytimes.com/2013/03/01/world/asia/islamic-leader-sentenced-to-death-in-bangladesh.html?_r=0

[5] One of the largest Islamist parties in South Asia, Jamaat was the leading coalition partner of former Premier Khaleda Zia’s Bangaldesh Nationalist Party. It bred many terror groups but is now becoming an outcast in Bangladesh, with almost its entire top leadership behind bars on war crimes charges.

[7] Just adjacent to the Bangbandhu medical college, and not far away from the Prime Minister’s residence, it has become home to thousands of students, doctors, artists, government officials and landless workers who have made it their abode amid chants of “phaansi” to traitors and “traitors go to Pakistan”.
http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2286185/Shahbag-Square-cheers-change-Dhakas-young-protesters-demand-ban-extremism-death-war-criminals.html?ito=feeds-newsxml

[9] Violent clashes between protesters and security forces erupted across Bangladesh on Thursday, leaving at least 35 people dead.

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

பிப்ரவரி 23, 2013

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

Afzal-Hyderabad-Kasab-nexus

ஷிண்டே ஏன் இப்படி இருக்கிறார்?: உள்துறை அமைச்சகம் கூறுவதிலிருந்து, உள்துறை அமைச்சர் பலமுறை முன்னுக்கு முரணாக பேசுவது, அவர் ஒன்று தமது துறையினைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அல்லது அவரை யாரோ சுயமாக இயங்குவதற்கு தடையாக உள்ளனர் அல்லது பொம்மை மாதிரி ஆட்டிவைக்கின்றனர். கற்பழிப்பு சட்ட மசோதா விஷயத்தில் முழுக்க-முழுக்க சிதம்பரமே செயல்பட்டு இவர் ஓரங்கட்டப்பட்டது, அந்த நீதிபதி சொன்னதிலிருந்தும், சோனியவே அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டதிலிருந்தும் தெள்ளத்தெளிவானது. ஆகவே, தனது அமைச்சகம் இந்திய முஜாஹித்தீனின் கைவேலைத் தெரிகிறது என்றாலும், இவர் ஏதோ பொதுவாகத்தான் பேசி வருகிறார். லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் அவர் வாசித்த அறிக்கை ஒரு சடங்கு போன்று இருந்தது. சம்பந்தப்பட்டத் துறைகள், பாதுகாப்பு நிறுவன கள் முதலியவற்றின் பெயர்களைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். வெடி குண்டு வெடித்ததும் ஏன் ஐதராபாத் செல்லவில்லை என்று கேட்டதிற்கு டிக்கெட் கிடைத்தல் செல்வேன், பாதுபகாப்பு விஷயமாக செல்லவில்லை என்றேல்லாம் உளறிக்கொட்டினார்[1]. வெளிப்படையாகத் தெரியும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கண்டிக்க, தடுக்க, அடைலளம் காட்டக் கூட்டத் தயங்குவது நன்றாகவே தெரிகின்றது.

Hyderabad blasts - locations with time

குண்டு வெடித்த இடங்கள், நேரங்கள்

தடயங்கள் குறிப்பாகக் காட்டினாலும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்?: தடயத்துறை வல்லுனர்கள் பரிசோதித்து விட்டு, அம்மோனியம் நைட்ரேட், யூரியா, பெட்ரோல் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்[2]. அதுமட்டுமல்லாது, மூன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உத்திரபிரதேசம், பீஹார், ஜார்கெண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் போலீசார், தேசிய புலனாய்வுத்துறைக்கு உதவ தயாராகினர். ஐதராபாதிலேயே, ஒரு லாட்ஜில் தங்கி திட்டம் வகுத்ததையும் தெரிந்து கொண்டனர்[3].

IED - cycle bombs placed - locations

ஐ.ஈ.டி. விவரங்கள்

கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டவன் எப்படி உலா வருகிறான்?: ரியாஸ் பட்டகல் என்பவன் பாகிஸ்தானிலிருந்து ஜிஹாதிகளை இந்தியாவில் இயக்கி வருகிறான் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன மற்றும் அதே அங்கத்தினர்கள் அவற்றில் உள்ளனர் என்றும் தெரிந்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. கள்ளநோட்டு விவகாரத்தில் வங்காளத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்ட யாஸின் பட்டகல் தான் இப்பொழுது இந்தியாவில் செயல்படுகிறான், அவனது  உறவினன் ரியாஸ் பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறான். கல்காத்தாவில் கைது செய்யப்பட்டு, ஆலிப்பூர் ஜெயிலில் இருந்த இவன் வெளியே வந்து இப்பொழுது குண்டுகள் வைத்துக் கொலை செய்கிறான்[4]. ஆனால், இந்தியா ஒன்றும் செய்வதில்லை. அதாவது இப்பொழுதைய சோனியா ஆட்சியாளர்கள் “சட்டப்படி செய்கிறோம்” என்று பாட்டிப்பாடி காலந்தள்ளி வருகின்றனர்.

CCTV images pointing to the suspects

சைக்கிளில் வந்தவர்கள் – குண்டு வைத்தவர்களா?

கள்ளநோட்டு கும்பலும், ஜிஹாதிகளும், போலீசாரும்: ஜிஹாதி கள்ள நோட்டு கும்பல், இந்தியா முழுவதும் தாராளமாக செயல் பட்டு வருகிறது. பலமுறை இவர்கள் எல்லா மாநிலங்களிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அவர்களது பின்னணி, அவர்களது விவரங்கள் புகைப்படங்கள் முதலியன இந்தியா முழுவதுமாக காவல்துறை, பாதுபாப்புத் துறை முதலியோருக்குக் கிடைக்கும் வகையில் விநியோகப்படுவதில்லை. இதனால், ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு, மற்ர மாநிலங்க:உக்குச் சென்ரு விடுகின்றனர். அல்லது அண்டை நாடுகளான, நேபாளம், பங்களாதேசம், பாகிஸ்தான் என்று சுற்றி வருகின்றனர். துபாயில் ஜாலியாக அனுபவித்து விட்டு, இந்தியாவில் குரூரக் குற்றங்களை, கொலைகளை செய்து வருகின்றனர். இந்த கோணத்தில் தான் காஷ்மீர் விஷயமும் வருகின்றது. காஷ்மீரத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்த தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள் ஊடுறுவி வருகின்றன. அங்கு அவர்கள் “சுதந்திரப் போராளிகள்” என்று உலா வருகின்றனர்.

IM-email-2010-1

இஃதிய முஜாஹித்தீனின் ஈ-மெயில்

மாலைநேரத்தில், கோவிலுக்குப் பக்கத்தில் குண்டுகள் வெடிப்பது ஏன்?: பெர்ம்பாலான ஜிஹாதி வெடிகுண்டுகள் மாலை நேரத்தில் தான் கூட்டமுள்ல பொது இடங்களில் மற்றும் கோவிலுகுப் பக்கத்தில் வெடித்துள்ளன. குறிப்பாக தீபாவளி நேரத்தில். புமின இடமான வாரணாசி போன்ற இடத்டிலும் வெடித்துள்ளன. ஆகவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்திய முஜாஹித்தீனும் இதனை முன்னர் ஈ-மெயில்களில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளனர். ஹாவிஸ் சையதும் வெளிப்படையாகவே பேசிவருகிறான். பிறகு, ஏன் சோனியா அரசு மெத்தனம் காட்டுகிறது?

Blasts taken place 2006-2013

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், இந்தியா என்ன செடய்யும்?: நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்தாகி விட்டது[5]. இதை இந்தியா எதிர்த்தாலும், அமெரிக்கா கேட்பதாக இல்லை[6]. நேட்டோப் படை வெளியேற-வெளியேற[7] தாலிபான் மற்ற ஜிஹாதிகள் முழுவதுமாக சுதந்திரமாகி விடுவார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்[8]. குறிப்பாக இந்தியாவைத் தாக்குவோம் என்று அலையும் ஜிஹாதிகள் துணிச்சல் பெறுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலியவற்றை ஆட்டிப் படைப்பார்கள். பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவிற்குள் நுழையக் கூடும்[9]. ஆக வரும் ஆண்டுகளில் இத்தகைய குண்டு வெடிப்புகள் இன்னும் அதிகமாகும் என்று ராணுவ வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[10]. காஷ்மீரத்தில் இன்னும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் அதிகமாகும். அதனை ஊக்குவித்து, அந்த ஜிஹாதிகள் இந்தியாவிற்குள் வருவார்கள், குண்டுகளை வெடிப்பார்கள் அப்பொழுது அவர்களை எப்படி இந்தியா எதிர்கொள்ளும்? அவர்களை சமாளிக்க என்ன யுக்தியை, பலத்தை வைத்துக் கொண்டுள்ளது என்றெல்லாம் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Key players in the blasts

இவர்களை பிடிக்க முடியாதா?

வேதபிரகாஷ்

23-02-2013


[1] Explaining why he didn’t reach Hyderabad soon after the blasts took place, Shinde said in the Rajya Sabha that it was for the security reasons that he decided not to leave immediately. “If VIPs go there (blast sites) then police have to concentrate on securing the VIPs which is not right. VIPs should not be visiting the spot of such incidents, police should be given freedom to carry out investigation and gather evidences,” he said.

[2]  Initial forensic samples from blast sites indicate use of ammonium nitrate, urea and petrol. The investigators are probing three specific names as suspected by Hyderabad police. One suspect belongs to Uttar Pradesh, second from Bihar and third from Jharkhand. The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[3] The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[4] Mohammed Ahmed Siddibapa Mohammed Zarrar alias Yasin Bhatkal, who is said to be heading the operations of Indian Mujahideen in India, has dodged the bumbling intelligence agencies on at least three occasions. He was first arrested and jailed in Kolkata’s Alipore jail between December 2009 and February 2010 in a case of fake currency seizure.

Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2283048/Indian-Mujahideen-head-jailed-2009-got-bail-cops-did-know-terror-links.html#ixzz2LjIERYiR

[5] NATO’s plan is to shift full responsibility to Afghan forces for security across the country by the middle of next year and then withdraw most of the alliance’s 130,000 combat troops by the end of 2014, Rasmussen said.

[6] India is one of the most vocal supporters of continued engagement and has given Afghanistan more than $2 billion since the US-led invasion in 2001 overthrew the Taliban regime, which sheltered virulently anti-Indian militants.

http://www.infowars.com/india-fears-for-afghanistan-after-nato-withdrawal/

[9] The security agencies fear that such forces may resurface and India may become one of their targets. Most of the forces operating from Nepal can go back to Afghanistan and unless the situation is kept under check with proper international and regional cooperation, the problem could become immense for India.

[10] Once NATO forces pull out, several splinter groups will try to take over control of the troubled nation and this could lead to immense instability in the region, which could be fatal to India.

http://www.rediff.com/news/report/natos-afghan-pull-out-may-prove-costly-for-india/20121015.htm

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

பிப்ரவரி 13, 2013

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

ஒமர் அப்துல்லாவின் அரசியல்: மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா எப்பொழுதும் அரசியல் செய்து, இந்தியாவை ஏமாற்றி பதவிக்கு வந்து, வாழ்க்கையை அனுபவித்து வரும் மறைமுக ஜிஹாதிகள். பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்[1]. உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு ஆகியவற்றின் உத்தரவின்படி நிறைவேற்றுப்பட்டுள்ள தண்டனைக்கு மாநில முதல்வர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதிலிருந்து, எப்படி இங்குள்ளவர்களும் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது. அதற்கேற்றாற்போல சென்னையிலேயே, தூக்கிலிட்டதை எதிர்த்து சுவரொட்டிகளும் காணப்படுகின்றன.

Photo0647

(இந்திய) விரோத மனப்பான்மை உருவாகும்: இது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: “நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், (இந்திய) விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களால் கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் சென்று விடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே நாம்தான் பாதிக்கப்படும் மக்கள் என்ற எண்ணமும், தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் காஷ்மீர் மக்களிடம் உருவாக அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இப்போது சில கருத்துகளைக் கூறுகிறேன்”, என்றார். இவர்கள் ஏதோ இந்தியாவிற்காக வேலை செய்வது போலவும், நல்லவர்கள் போலவும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

Kashmir Door to Teach India a Lesson - Hafiz Saeed

சாவிலும் பிழைப்பைத்தேடும் ஜிஹாதி மனப்பாங்குள்ளவர்கள்: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், “அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது’ என்றார். தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று உறுதிபடப் பேசிய ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். ஆனால், அரசாங்கத்தின் தரப்பில் உரிய முறைகளைப் பின்பற்றித்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற விஷயங்கள் தமிழக நாளிதழ்கள் வெளியிடவில்லை. ஜிஹாதிகளைப் பொறுத்த வரைக்கும் சாவு “ஷஹீதுத்துவம்” என்றுதான் ஏற்றுக் கொண்டு சாகின்றனர். மனிதகுண்டுகளே அவ்வாறுதான் உருவாகி வெடித்துக் கொண்டிருக்கின்றன.

“எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார் ஒமர்: ஜிஹாத் என்ற மதவெறியில் குண்டுகளை வெடித்து அப்பாவி மக்களை வயது கூட பார்க்காமல் குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று அனைவரையும் கை-கால்கள் சிதற, தலைகள் சிதற, ரத்தம் பீரீட்டு கொட்ட, சதைகள் சிதற குரூரக் கொலைப்பலிகள் செய்து வருவதை நினைந்து, உள்ளம் உருத்தத்தான் இப்படி கூறுகிறார் போலும் ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். அப்படியென்றால், யாருக்கு ரத்தவெறி இருக்கிறது?

காஷ்மீர் மக்களின் (முஸ்லீம்களின்) கருத்து: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலரில் அப்சல் குருவை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்து. இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது[2].

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்? இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் தனது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்து அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை விளக்குவது மிகவும் கடினம். ஒருமித்த அளவில் மக்களின் மனவோட்டத்தில் திருப்தி அடைவதன் மூலம் ஒருவரைத் தூக்கிலிட்டு விட முடியாது. சட்டப்படியும், நீதிப்படியும் அத்தண்டனை வழங்குவதற்கான காரணங்கள் அனைத்தும் வலுவாக இருக்க வேண்டும்.

நிறைவேற்றி இருக்கக் கூடாது: மரண தண்டனைக்காக காத்திருப்பவர்கள் குறித்தும், இதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் குறித்தும் வேறுவிதமான கேள்விகளை எழுப்ப நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் இருந்து மத்திய அரசு தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இது சட்டப்படியே எல்லாம் நடந்துள்ள என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் இருத்திருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கட்சியின் கருத்து என்றார். இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் விலகினால் அப்சல் குருவை மீண்டும் கொண்டு வர முடியும் என்றால் அரசில் இருந்து வெளியேறுவோம்’ என்று ஒமர் அப்துல்லா பதிலளித்தார். இவரும் இவரது உறவினரான மெஹ்பூபா முப்தியும் இப்படி மாறி-மாறி பேசியதும், எதிர்பார்த்தபடி, கலவரங்கள் ஆரம்பித்துள்ளன.

 காஷ்மீரில் 2ஆவது நாளாக ஊரடங்கு: ஸ்ரீநகர், பிப். 10:÷நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு சனிக்கிழமை (09-02-2013) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீரில்[3] பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி காஷ்மீரில் பல இடங்களில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்தே அவர்களுக்கு முன்னமே விஷயம் தெரிந்துள்ளது என்றாகிறது. அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 36 போராட்டக்காரர்களுக்கும், 23 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புவதை கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து விட்டனர்.

 மோதலில் ஒருவர் சாவு: 6 பேர் படுகாயம்: ஸ்ரீநகர், பிப். 10: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அதிகாரவட்டாரங்கள் தெரிவித்ததாவது: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் விரட்டியபோது தாரிக் அகமது பட் மற்றும் மேலும் 2 பேர் ஆற்றில் குதித்தனர். இதில் பட் உயிரிழந்தார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் இந்த தகவலை மறுத்தனர். படகில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் நீந்தி கரைசேர்ந்தார். மற்றொருவரை சிலர் காப்பாற்றினர். தாரிக் அகமது பட்டை காப்பாற்ற இயலவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அவரது சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை கலைந்துபோகச் செய்த பாதுகாப்புப் படையினருடன் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

வீட்டுக் காவலில் கிலானி?: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜாகீர் ஹுசேன் கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ்.ஏ.ஆர். கிலானியை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கிலானியை அதே ஆண்டு டிசம்பரில் தில்லி போலீஸார் கைது செய்தனர். எனினும், கிலானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்று 2003-ல் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் விசாரணைக்காக நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கிலானியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தில்லியில் வசித்து வரும் ஹுரியத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், பத்திரிகையாளர் இஃப்திகர் கிலானி ஆகியோரின் வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு[4]: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஒரு சில இடங்களில், நேற்று முன்தினம், வன்முறை ஏற்பட்டது. இதில், 23 போலீசார் உட்பட, 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில், நேற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது. பதற்றமான இடங்களில், போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். செய்தி சேனல்கள், மொபைல் போன், இணையதள சேவைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன; பத்திரிகைகளும், வெளிவரவில்லை.  அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்[5].

 JKLF meeting at Islamabad

இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி கைகோர்த்துக் கொண்டு போராட்டம்: இஸ்லாமாபாதில் இந்தியவிரோதி யாஸின் மாலிக் மற்றும் பயங்கரவாதி ஹாபிஸ் சையீது தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். மொஹம்மது அப்சலின் உடலை ஒப்புவிக்கும் படி ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி இருவரும் மேடையில் அருகருகில் உட்கார்ந்து கொண்டது, பேசிக்கொண்டது பற்றி செய்திகள் வந்துள்ளன[6]. இறுதிமரியாதை சடங்கும் நடத்தப் பட்டது. ஹாவித் சையதே செய்து வைப்பான் என்று அறிவிக்கப்பட்டாலும், ஜமத்-இ-இஸ்லாமி தலைவர் செய்து வைத்தார்[7].

Yasin Malik  sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guru

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான். கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[8]. இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

மனைவியுடன் இருக்க வருடா-வருடம் பாஸ்போர்ட் கொடுக்கும் சோனியா அரசு[9]: யாஸின் மாலிக்கின் மனைவி பாகிஸ்தானில் இருக்கிறாள். இவளுடன் சேர்ந்து இருக்க வருடா-வருடம் சோனியா அரசு பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுத்து வருகிறது. இவனோ மனைவியுடனும் இருந்து, ஜிஹாதிகளுடனும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அம்மா சொன்னால் அப்படியே தலையாட்டி வருகிறார்கள், காலில் விழவும் தயாராக இருக்கிறர்கள். அம்மையார் தலைவி என்றால்தான், அவர்களுக்கு பதவி, பட்டம், சொத்து, பணம் எல்லாம். ஆகவே, இத்தகைய அடிமை வாழ்வு தொடர்ந்தே வருகிறது. இடைக்காலத்தில் இதைப் போன்ற இந்திடயர்கள் முஸ்லீகம்களுடன் துணைபோனதால் தான் முஹம்மது கோரி, முஹம்மது கஜினி, மாலிக்காபூர், பாபர், ஹுமாயூன் முதலியோர் இந்துக்களைக் கொன்று, சூறையாடினார்கள். இப்பொழுது இப்படி கூட்டணியில் குண்டு போட்டு கொன்று வருகிறார்கள், ஊழலில் கோடிகளை கொள்ளையடித்து வருகிறார்கள் இதுதான் வித்தியாசம்!

Mixed reactions- while people protested in Kashmir, others elsewhere in India celebrated

ஊடகங்களின் விஷமத்தனம்: இந்திய அரசு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதைப் பொறுத்த வரைக்கும் உள்ள முறையை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டினாலும், ஏதோ அரசு அவசரப்பட்டுவிட்டது, குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப் படவில்லை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் கதைகளை அவிஅத்துவிட ஆரம்பித்துள்ளனர். ஜிஹாதி-பயங்கரவாதிகளால், ஜிஹாதி-தீவிரவாதிகளால் மக்கள் கொள்ளப்பட்டபோது, இவர்கள் இவ்வாறு பேசவில்லையே, ஏன்? அப்படியென்றால் அவர்களுக்கு குடும்பங்கள், உரிமைகள் இல்லையா? இல்லை, அவர்கள் இவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் அல்லது வேற்றுமையானவர்கள்? இப்படி கேள்விகள் கேட்டால், விடை என்னவென்று மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அகவே, ஊடகங்களின் விஷமத்தனம் நன்றாகவே தெரிகிறது. அதனால்தான், ஒரு ஊடகம் இப்படி – இந்தியர்களில் சிலர் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், சிலர் கொண்டாடுகிறார்கள் என்று போலித்தனமான-விஷமத்தனமான படத்தை வெளியிட்டுள்ளார்கள்[10]. சிறுவனை உயிர்தியாகியாக்கிய இந்திய ராணுவம் என்று பாகிஸ்தான் நாளிதழ்[11] கூறுகிறது!

பாகிஸ்தானின் விரோதத்தனம்: நட்பு என்று சொல்லிக் கொண்டு, தலைகளைத் துண்டாடி, துரோகச் செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய பாகிஸ்தான், கேடு கெட்ட செக்யூலார் இந்தியாவை இந்த சமயத்திலும் நன்றாகவே சாடியுள்ளது[12]. இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கிறது[13]. அதை வெட்கம்-மானம்-சூடு-சொரணை இல்லாத உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

வேதபிரகாஷ்

11-02-2013


[2] இதற்கேற்றார்போல, அருந்ததிராய் போன்ற கூட்டத்தார் பேசி வருகிறார்கள்.

Sujato Bhadra, a Kolkata-based member of the Association for Protection of Democratic Rights, said that the higher courts had not addressed Guru’s claims that his trial had been faulty. “The government carried out the execution without allowing him to exhaust a judicial recourse after the president rejected his mercy petition,” Bhadra said.”This is a blatant miscarriage of justice.”

[3] “Indian administered Kashmir”, “India Occupied Kashmir”, Indian Held Kashmir (IHK) என்றுதான் பாகிஸ்தானிய மற்றும் காஷ்மீர முஸ்லீம்கள், ஊடகவாதிகள் கூறி-எழுதி வருகின்றனர்.

http://dawn.com/2013/02/11/at-least-two-dead-in-indian-administered-kashmir/

[6] On Sunday afternoon, Mr. Saeed reached the venue of Mr. Malik’s hunger strike and the two met briefly.

http://www.thehindu.com/news/national/centre-probing-yasin-maliks-alleged-passport-violations/article4407896.ece

[7] Though JuD activists had claimed that Mr. Saeed would lead the ‘ghayabana namaz-e-janaza’ (funeral prayers in absentia) for Afzal at the protest site, the prayers were led by a Jamat-e-Islami leader.

[12] Commenting on the execution of Kashmiri leader Afzal Guru by India, Pakistan on Monday reaffirmed its solidarity with the people of Jammu and Kashmir and expressed serious concern on high-handedness of the Indian government with Kashmiris.

http://paktribune.com/news/Pakistan-voices-concern-on-Indias-treatment-of-Kashmiris-257326.html