Archive for the ‘கள்ளக் காதல்’ category

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

அக்பர் கொலை 16-08-2016

மைத்துனர் சையது தானாகவே வந்தாரா, பாத்திமுத்து தகவல் கொடுத்து வந்தாரா?: 16-08-2016 காலை அதே பகுதியில் வசிக்கும் அக்பரின் மைத்துனர் சையது, அக்பரின் வீட்டுக்கு வந்தார். பாத்திமுத்து தகவல் சொல்ல வந்தார் என்றும் உல்ளது. அவர் கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாத்திமுத்து எழுந்து சென்று கதவை திறந்தார். அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே, அக்பர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சையது சென்றார். அங்கு வாயில் துணி திணிக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அக்பர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சையது சத்தம் போட்டார்[1]. பாத்திமுத்து மற்றும் பிள்ளைகளும் ஓடி வந்தனர். அக்பரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது[2].

அக்பர் கொலை 16-08-2016.நியூஸ்7டிவி

அக்பருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் தொடர்பு, கள்ளக்காதல், உல்லாசம்: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (35). கணவனை விட்டுப் பிரிந்தவர். இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கடையில் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காக அக்பர் வேலைக்கு வைத்துக் கொண்டார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது[3]. பிறகு மண்ணடியிலேயே வாடகை வீடு எடுத்து பாத்திமாவை அக்பர் தங்கவைத்துள்ளார். பிறகு இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்துள்ளனர். வெளி இடங்களிலும் சுற்றித் திரிந்துள்ளனர். நாளடைவில் இந்த கள்ளத்தொடர்பு பாத்திமுத்துவுக்கு தெரிய வர அக்பரை கண்டித்துள்ளார். ஆனால் அக்பரோ அப்படி ஏதும் இல்லையென்று மறைத்துள்ளார். ஆனாலும் சந்தேகம் தீராத பாத்திமுத்து தனது கணவரை பின் தொடர்ந்து வேவு பார்த்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

பாத்திமுத்து கையும் களவுமாக கணவன் கள்ளக்காதலியைப் பிடித்தது: தனது உறவினர்களுடன் அங்கே சென்று கையும் களவுமாகப் பிடித்த பாத்திமுத்து, பாத்திமாவை அடித்து உதைத்துள்ளார். பிறகு அங்கிருந்த பாட்டிலால் அக்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் அக்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாத்திமுத்துவுடன் கோபித்துக்கொண்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்பருக்கு பாத்திமாதான் உதவியாக இருந்துள்ளார். பிறகு உறவினர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து பாத்திமுத்துவுடன் வீட்டுக்கு வந்துள்ளார். பாத்திமாவையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் இருவரும் பழகத் தொடங்கியுள்ளனர். இதை பாத்திமுத்து கண்டிக்க, ‘நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்’ என்று கூறியுள்ளார். இதுதான், அவளை கொலைச் செய்யத் தூண்டியது.

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்ட பாத்திமுத்து: தகவலறிந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்[4]. இந்நிலையில் அக்பர் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இயங்கவில்லை என தெரிகிறது[5]. இந்த கொலை தொடர்பாக அக்பர் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. அக்பர் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாத்திமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமுத்து ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபரை அவருடைய மனைவியே கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து பாத்திமுத்து மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர் கைது செய்யப்பட்டார்[7]. கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்பரின் மகள் பூஜா(12) சற்றே மனநலம் பாதித்தவர். அவர் நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்பரை பார்த்துவிட்டு பாத்திமுத்துவிடம் கேட்டுள்ளார். ஒன்றுமில்லை. அப்பா தூங்குகிறார். காலையில் எழுந்துவிடுவார் என்று அவரை பாத்திமுத்து தூங்க வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Akbar murder, Mannady 16-08-2016, TOI

Akbar murder, Mannady 16-08-2016, TOI

எல்லோருக்கும் தெரிந்த கள்ளக்க்காதல்-தொடர்புகளை உறவினர்கள்-நண்பர்கள் ஏன் கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை?: பாத்திமுத்து உறவினருக்கு அக்பரின் கள்ளக்காதல் தொடர்புகள் தெரிந்திருக்கின்றன. அதேபோல, அவர்கள் அக்பரை கையும் களவுமாகப் பிடித்து அடித்த போதும், மற்றவர்களுக்கு, குறிப்பாக சுற்றிலும் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அக்பருன் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால், யாரும் அக்பரைக் கண்டிக்கவில்லை அல்லது அத்தகைய கள்ளக்காதல், உறவு தப்பு, தவறு, குற்றம் என்றெல்லாம் எடுத்துக் காட்டவில்லை என்பது வியப்பாக உள்ளது. மனைவி பாத்திமுத்து மட்டும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது. அதாவது, முஸ்லிம்கள் ஒன்றிற்கும் மேலான பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் மற்றும் திருமணம் செய்து கொண்டு மனைவியரை வைத்துக் கொள்ளலாம், இதெல்லாம் சகஜம் தான் என்று அமைதியாக இருந்தார்கள் போலும். இருப்பினும், மனைவி எதிர்த்திருக்கிறாள். ஆக, இதை பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்லது இஸ்லாமிய பெண்ணின் பிரச்சினை என்றே ஒதுக்கப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

கொலை செய்யத் தூண்டியது என்ன?: பாத்திமுத்து கண்டித்தபோது, “நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, என்று கூறியுள்ளது நோக்கத்தக்கது. இங்கு ஒருவேளை தனது இஸ்லாமிய உரிமையை எடுத்துக் காட்டியுள்ளது தெரிகிறது. “நான் உனக்காக நிறைய செலவு செய்தேன்”, என்பது, அந்த மனைவிக்கு செய்த கடமையை குறிப்பதாக உள்ளது. “ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, அதாவது, இன்னொரு திருமணத்தை செய்து கொள்ள ஆட்சேபிக்கிறாய் என்கிறார் போலும். “பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும்”, என்றது, விவாக ரத்து செய்துவிடுவேன் என்பதைக் குறிக்கிறது. பணம் நிறைய இருப்பதால், “மஹர்” கொடுத்து “தலாக்” செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பாத்திமுத்து தனது முழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வது எப்படி? “அக்பரின் மகள் பூஜா (12) சற்றே மனநலம் பாதித்தவர்”, என்றும் உள்ளது. அதாவது, அவளுக்கு மருத்துவ செலவு, வளர்த்து பெரியவள் ஆக்குவது, திருமணம் செய்து வைப்பது போன்ற கடமைகளிலிருந்தும் அக்பர் தப்பிப்பது தெரிகிறது. இதனால், ஒரு பெண் எல்லாவிதங்களிலும் நெருக்கித் தள்ளப்பட்டபோது, அத்தகைய கொடுமையான முடிவுக்கு வந்து, தனது கணவனையே கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறாள்.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

பெண்கள் பிரச்சினைகள் உணரப்பட வேண்டும்: பொதுவாக, இப்பிரச்சினையை பெண்கள் பிரச்சினை என்றெ எடுத்துக் கொள்ளலாம். கணவன் ஒரு மனைவியை / பெண்ணை விவாகரத்து செய்தால், மனைவி-மக்கள் / குழந்தைகள் வாழ, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும். ஆனால், ஆண் ஏதோ பணத்தைக் கொடுத்து கழட்டி விடுவது, மற்றும் பெற்ற குழந்தைகளைப் பற்றி கவலைப் படாமல் இருப்பது, கடமைகளைத் தட்டிக் கழிப்பது மற்றும் சட்டப்படி மனைவிக்கு தொல்லைக் கொடுப்பது போன்ற நிலைகளில் ஈடுபட்டால், மனைவி-குழந்தைகள் கதி அதோகதிதான். தனியாக ஒரு பெண் குழந்தைகளுடன் வாழ்வது என்பது பெரிய சோதனை ஆகும். ஆனால், இஸ்லாம் என்று பார்த்தால் பிரச்சினை வருகிறது. அதனால் தான் இதனை விமர்சிக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள் என்று தெரிகிறது. பொது சிவில் சட்டம் என்று பேசுபவர்களும், பேச பயப்படுபவர்களும், செக்யூலரிஸப் பழங்களும் கூட மௌனிகளாகி விடுகின்றனர். ஆனால், பெண்கள் படும்பாட்டை மற்றவர்கள் உணர, அறிய, புரிய வேண்டும். இப்பிச்சினை பொதுப்பிரச்சினையாக கருதப்படவேண்ட்ம். அப்பொழுதுதான், இந்திய சமூகம் சிறப்பாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=239296

[2] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

[3] http://news.lankasri.com/india/03/107579

[4] நியூஸ்.7.டிவி, இரும்பு வியாபாரி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!, August 16, 2016

[5] http://ns7.tv/ta/death-husband-and-police-arrested-wife.html

[6] http://ns7.tv/ta/while-iron-dealer-kaluttarukkappatta-mysterious-death.html

[7] http://www.dailythanthi.com/News/State/2016/08/17010831/Wife-killed-their-throats-cut.vpf

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

அக்பர் கொலை 16-08-2016.பாத்தமுத்து

மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த மண்ணடி இரும்பு வியாபாரி அக்பர்: சென்னை மண்ணடி என்றாலே, இரும்புப் பொருட்கள், கழிவுகள் போன்றவைதான் ஞாபகம் வரும். வண்ண்டிகளால் அடைந்து கிடக்கும் தெரு, மக்கள் இப்படியும், அப்படியும் சென்று கொண்டிருக்கும் நிலை. இங்கு பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம்கள் தாம். சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 16-08-2016 அன்று காலை வீட்டின் படுக்கையறையில் தொழில் அதிபர் அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்[1]. உடனே, பாத்திமுத்து சத்தம் போட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் மைத்துனர் சையதிடம் விசயத்தைக் குறினார். சையது போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் பிணமாக இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இந்நிலையில், 3-வது மாடியில் வசித்து வந்த அக்பர் வீட்டிலேயே படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது[2].

industrialist-murder-Mannady-Chennai-police-investigation_அக்பரை கொலை செய்த மனிதன் வெளியே இருந்து வரவில்லை: இரவு மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என்று முதலில் சொல்லப்பட்டது. அக்பர் கொலையுண்ட படுக்கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதனையும் போலீசார் சேகரித்துள்ளனர்[3]. படுக்கையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்[4]. கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. அக்பரின் வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் யாரேனும் புகுந்து அவரை கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது[5]. ஆனால், பிறகு வீட்டில் எதுவும் திருடப்படவில்லை என்று தெரிந்தது. வியாபார போட்டியும் இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது[6]. பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[7]. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். வீட்டில் கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது அக்பருக்கு தெரிந்த நபர்கள் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[8]. வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தது என்றும் தெரிந்தது. மேலும், மோப்ப நாய் சோனா வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது[9]. இதனால், கொலையாளி வெளியே இருந்து வரவில்லை அல்லது உள்ளேயிருந்தவர் உதவியுடன் வெளியாள் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் தீர்மானித்தனர்.

அக்பர் கொலை 16-08-2016“சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை” என்று ஆரம்பித்து “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று முடிந்துள்ள செய்திகள்:  நேற்று, “சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை-பணம் கொள்ளை” என்று தான் செய்திகள் வந்தன. பிறகு, “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று செய்திகள் முடிந்துள்ளன. அதாவது, தாம்பத்திய உறசு முறைக்கு அப்பாற்பட்ட கள்ளக்காதல்-தொடர்பு தான் கொலைக்குக் காரணம் என்பது தெரிந்திருக்கிறது, இருப்பினும், “முஸ்லிம்கள் சமாச்சாரம்” என்று செய்தியாளர்கள் ஜாக்கிரதையாக இருந்து, “நகை-பணம் கொள்ளை” என்று கதையினை ஆரம்பித்து வைத்தார்கள். பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10] என்று முன்னரே கூறப்பட்டது. பிறகு, அதனை ஏன் இன்னும் விளக்கவில்லை என்று தெரியவில்லை. கள்ளக்காதலால், மனைவி கணவனை கொலை செய்தாள், கணவன் மனைவியைக் கொலை செய்தான், ஏன் ஆட்களை வைத்தே கொலை செய்தாள் / செய்தான் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன, வந்துக் கொண்டிருக்கின்றன. அந்நிலையிலும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனநல வல்லுனர்கள் என்று யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வழக்கம் போல ஊறுகாய் ;போடுவது எப்படி, எந்த கடையில் எந்த புடவை வாங்கலாம், லிங்கின்ஸைப் போடுவது எப்படி என்று தான் வாத-விவாதங்களை செய்து கொண்டிருந்தனர். பெண்ணிய அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.

அக்பர் கொலை 16-08-2016.தினத்தந்திபோலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: தூத்துக்குடி காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அக்பர் (50). இவர் சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள வீட்டின் 3வது மாடியில் வாடகைக்கு வசித்தார். தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியிலேயே இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமுத்து (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது[11]. கள்ளக்காதலை கைவிடக்கோரி பாத்திமுத்து பலமுறை கெஞ்சியும் அக்பர் மறுத்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். அடித்து உதைத்தனர் என்றும் இன்னொரு ஊடகம் குறிப்பிட்டது. 15-08-2016 இரவு அன்று 12.30 மணியளவில் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது[12].  ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னையும் குழந்தைகளையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்வது நியாயமா’’ என்று பாத்திமுத்து அழுது புலம்பினார். ஆனால் அவரோ பாத்திமுத்துவை எட்டி உதைத்தார். பிறகு போதையில் தனது அறையில் படுத்துள்ளார்.  அவரைப் பார்க்கக் பார்க்க ஆத்திரமுற்ற பாத்திமுத்து வீட்டிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் சராமாரியாக 3 முறை வெட்டியுள்ளார்[13]. மேலும் ரத்தம் கொட்டியதை பார்த்ததும் பாத்திமுத்துக்கு மயக்கம் வந்துவிட்டது. அரிவாளை துணியில் சுற்றி பீரோவுக்கு அடியில் தள்ளிவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] தினத்தந்தி, கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் தொழிலதிபர் கொலை.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்!, By: Ganesh Raj, Published: Tuesday, August 16, 2016, 17:48 [IST]

[3] தினத்தந்தி, சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST

[4] மாலைமலர், சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை: நகைபணம் கொள்ளை?, பதிவு: ஆகஸ்ட் 16, 2016 12:03.

[5] http://www.dailythanthi.com/News/State/2016/08/16151929/Kill-the-industry-leaders-in-Chennai-5-kg-jewel-robbery.vpf

[6] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=96671

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/businessman-murdered-chennai-260381.html

[9] தமிழ்முரசு, மண்ணடியில் பயங்கரம்கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை; மனைவி, கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை, 8/16/2016 . 3:33:44 PM

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[11] The Times of India, Woman kills sleeping hubby, tells children to wake him up, TNN, Chennai edition, Aug 17, 2016, 04.17 AM IST.

[12] http://timesofindia.indiatimes.com/city/chennai/Woman-kills-sleeping-hubby-tells-children-to-wake-him-up/articleshow/53731735.cms

[13] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2)

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

விவாகரத்து வேண்டும் என்று கேட்ட பவித்ரா[1]: தனது மனைவியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை பழனி தாக்கல் செய்தார். இதனால், தனிப் படை அமைத்து பவித்ராவை போலீஸார் தேடினர். அம்பத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பவித்ராவை மீட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு பவித்ரா நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் நடந்த விசாரணை வருமாறு[2]:

நீதிபதிகள்: நீ தான் பவித்ராவா?

பவித்ரா: ஆமாம், நான்தான் பவித்ரா.

நீதிபதிகள்: நீ யாருடன் செல்ல விரும்புகிறாய். பெற்றோருடனா அல்லது கணவருடனா?

பவித்ரா: பெற்றோருடன் செல்ல விரும்புகிறேன். ஆனால், எனக்கு விவாகரத்து வேண்டும். ‘என் கணவரிடம் இருந்து என் பெற்றோர் விவாகரத்து வாங்கித்தர வேண்டும்’ என்றும் நீதிபதியிடம் அவர் கூறினார்.

நீதிபதிகள், ‘உன்னுடைய பெற்றோருடன் செல்கிறாயா?’ என்று கேட்டார்கள். அப்போது கோர்ட்டு அறையில் இருந்த வக்கீல் சங்கத்தலைவர் பால்கனகராஜ், ‘இந்த பெண் காணவில்லை என்ற வழக்கு விசாரணையின் தொடர் நடவடிக்கையில் தான் ஆம்பூரில் கலவரம் ஏற்பட்டது’ என்று கூறினார். இதையடுத்து நடந்த விவாதம் பின்வருமாறு:-

நீதிபதிகள்:- பத்திரிகைகளில் வெளியான செய்திகளை படித்தோம். ஷமில் அகமதுவுக்கு திருமணமாகிவிட்டது. உனக்கும் திருமணமாகிவிட்டது. கணவர், குழந்தை உள்ளனர். அப்புறம் என்ன? இப்போது அந்த வாலிபரும் இறந்துவிட்டார். அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளினால் தான், மதக்கலவரம், சாதிக்கலவரம் நடக்கிறது. ஏற்கனவே திருமணம் நடக்காத ஆணும், பெண்ணும் வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருந்தாலும், சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம்[3]. ஆனால், இங்கு இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி இவர்களது திருமணத்தை ஏற்க முடியும்?  [இருவருக்கும் குழந்தைகள் உள்ளன என்ற விசயம் இங்கு வெளிப்படுகிறது. மேலும் இரு மதத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதால், இச்சட்டம் பற்றி குறிப்பிடுவது, அத்தகைய நிலை இருப்பதை அவர்கள் அறிந்துள்ளனர் என்று தெரிகிறது]

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

பிடிவாதமாக விவாகரத்து கேட்ட பவித்ரா[4]: நீதிபதிகள் எவ்வளவு அறிவுரை கூறியும், விவரங்களை எடுத்துக் கூறியும், பவித்ரா பிடிவாதமாக விவாக ரத்து வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது அனைவரையும் திகைக்க வைத்தது.

பவித்ரா:- என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

நீதிபதிகள்:- விவாகரத்து என்ன பெட்டிக்கடையில் கிடைக்கும் பொருளா? காசு கொடுத்து வாங்குவதற்கு? விவாகரத்து வேண்டும் என்றால் அதுதொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய வேறு நீதிமன்றம் உள்ளது. நினைத்தவுடன் விவாகரத்து கிடைத்துவிடுமா?

அரசு வக்கீல் தம்பித்துரை:- ஆம்பூரில் நடந்துள்ள கலவரத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துகள், வாகனங்கள் நாசமாகியுள்ளன.

பால்கனகராஜ்:- இந்த வழக்கை சாதாரண ஆட்கொணர்வு மனுவாக ஐகோர்ட்டு கருதக்கூடாது. ஏன் என்றால், ஏற்கனவே திருமணமான ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது தொடர்பான பிரச்சினைக்கு தெளிவான சட்டம் இல்லை. எனவே, இந்த வழக்கை அரிதான வழக்காக கருதி, சிறப்பு கவனம் செலுத்தி இதுபோன்ற பிரச்சினைகளில் போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என்று விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ராவுக்கு நீதிபதிகள் ஆலோசனை[5]: நீதிபதிகள்:- (பவித்ராவை பார்த்து) உனக்கு கணவர், குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுடன் சந்தோஷமாக வாழவேண்டும். தேவையில்லாத பிரச்சினை எதற்கு? உனக்கு ஷமில் அகமது தெரியுமா?

பவித்ரா:- ஒரே கம்பெனியில் வேலை செய்யும்போது அவரை தெரியும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் (குறுக் கிட்டு): இது முக்கியமான வழக்கு என்பதால் இங்கே நாங்கள் எல்லாம் கூடியிருக்கிறோம். ஆம்பூர் சம்பவத்துக்கு இந்தப் பெண்தான் மூல காரணம். அங்கு நடந்த வன்முறையில் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏராள மானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். திருமணமான ஒரு பெண், திருமணமான ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்றுவிட்டால், அந்த வழக்கை எப்படி கையாள வேண்டும்? என்று போலீஸாருக்கு இந்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை உருவாக்கித் தரவேண்டும். அது ஒரு முன்உதாரணமாக இருக்கும்[6].

நீதிபதிகள்: ஆம்பூரில் நடந்த சம்பவத்துக்கு நாங்களும் வருந்துகிறோம். பவித்ரா மேஜரான பெண். அவரை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. அவர் பெற்றோருடன் செல்ல விரும்புகிறார்.

ஆர்.சி.பால்கனகராஜ்: ஆம்பூரில் இப்போது சுமுகமான சூழல் இல்லை. இந்நிலையில், பவித்ராவை அங்கு அனுப்பினால் அவருக்கு பாதுகாப்பாக இருக்காது. இதை கருத்தில் கொண்டு தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்[7].

அரசு வக்கீல்:- அவரது கருத்தை இந்த வழக்கில் பதிவு செய்யக்கூடாது. ஏற்கனவே அவர் காணாமல்போனதாக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. அந்த விசாரணைக்கு பாதிப்பு வரக்கூடாது.

பால்கனகராஜ்:- தற்போது இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு இந்த பெண் காணாமல்போன சம்பவம் தான் காரணம். எனவே, இந்த பெண்ணை பெற்றோரிடம் தற்போது அனுப்பினால், தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நீதிபதிகள்:- தற்போது பவித்ரா எங்கே வசிக்கிறார்?

பவித்ரா:- சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் உள்ளேன்.

நீதிபதிகள்:- அதே விடுதியில் 2 வாரத்துக்கு தங்கி இருக்க வேண்டும். இவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

ஜூலை 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு[8]: இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அம்பத்தூரில் ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்து கடை ஒன்றில் வேலை செய்துவருவதாகவும், தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் பவித்ரா கூறினார். ஆம்பூர் கலவரம் பற்றியும் இங்கே கூறினார்கள். எனவே இந்த வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று பவித்ரா நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை தற்போது அவர் தங்கி இருக்கும் விடுதியிலேயே தங்கியிருக்க வேண்டும். அவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] தினத்தந்தி, ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பவித்ரா சென்னையில் தங்கி இருக்க உத்தரவு, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 5:15 AM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 4:36 AM IST

[2] தி இந்து, ஆம்பூர் பவித்ரா உயர் நீதிமன்றத்தில் ஆஜர்: 23-ம் தேதி வரை விடுதியில் தங்கியிருக்க உத்தரவு, Published: July 7, 2015 07:33 ISTUpdated: July 7, 2015 15:21 IST

[3] 4. Conditions relating to solemnization of special marriages

Notwithstanding anything contained in any other law for the time being in force relating to the solemnization of marriages, a marriage between any two persons may be solemnized under this Act, if at the time of the marriage the following conditions are fulfilled, namely:

(a) Neither party has a spouse living;

1[(b) Neither party-

(i) Is incapable of giving a valid consent to it in consequence of unsoundness mind; or

(ii) Though capable of giving a valid consent, has been suffering from mental disorder of such a kind or to such an extent as to be unfit for marriage and the procreation of children; or

(iii) has been subject to recurrent attacks of insanity 2[* * *]

(c) The male has completed the age of twenty-one years and the female the age of eighteen years;

3[(d) The parties are not within the degrees of prohibited relationship;

Provided that where a custom governing at least one of the parties permits of a marriage between them, such marriage may be solemnized, not withstanding that they are within the degrees of prohibited relationship; and ]

4[(e) Where the marriage is solemnized in the State of Jammu and Kashmir, both parties are citizens of India domiciled in the territories to which this Act extends.]

5[Explanation. -In this section, “customs”, in relation to a person belonging to any tribe, community, group or family, means any rule which the State Government may, by notification in the Official Gazette, specify in this behalf as applicable to members of that tribe, community, group or family;

http://www.vakilno1.com/bareacts/splmarriage1954/specialmarriageact.html

[4] http://www.dailythanthi.com/News/State/2015/07/07043612/Root-cause-of-the-Ambur-mishap-pavithra-ordered-to.vpf

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-23%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7394400.ece

[7] ஆம்பூருக்குச் சென்றால் அவருக்கு / பவித்ராவுக்கு பாதுகாப்பாக இருக்காது, என்பதும் நோக்கத்தக்கது. யாரால் அவருக்கு அத்தகைய பாதுகாப்பு பாதகம் ஏற்படும் நிலை ஏற்படும் என்றும் யோசிக்கத் தக்கது. முஸ்லிம் அமைப்புகள் கலவரத்திற்கு காரணம் பவித்ரா தான் என்ற பிரச்சாரத்தை, இணைதளம் மூலமும், டிவி-பேட்டிகள் (ராஜ்-டிவி) மூலமும் செய்துள்ளன.

[8] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (1)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (1)

ஆம்பூர் கலவரம் - குமுதம் ரிப்போர்டர் 10-11

ஆம்பூர் கலவரம் – குமுதம் ரிப்போர்டர் 10-11

குமுதம் ரிப்போர்டர் கொடுக்கும் விவரங்கள்[1]: ஷமீல் அகமது (26) ஈரோட்டைச் சேர்ந்த ஷாஜஹான் மற்றும் பரிதா பேகம் தம்பதியரின் மகன். ஷமீல் அகமதுக்கும், “இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின்”[2] ஆம்பூர் நகரத் தலைவர் கவுஸ் பாஷா மகள் முஸ்தரிக்கும் நவம்பர் 2014ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பே பவித்ராவுடன் (23) தொடர்பு இருந்திருக்கிறது, இதனால், ஷமீல் அதனை விடவில்லை. இவ்விசயம் தெரியவந்தவுடன் பிரச்சினையாகி இருக்கிறது. ஈரோட்டுக்கு இடம் பெயர்ந்தால், ஷமீல் மனம் மாறக்கூடும் என்று, அங்கு சென்றனர். அப்பொழுதுதான், பவித்ரா ஷமீலைத் தேடி 24-05-2015 அன்று ஈரோட்டுக்கு சென்றார். ஷமீல் தனியாக ஒரு வீடு பார்த்து, பவித்ராவை அங்கு தங்க வைத்திருக்கிறார். பழனிக்கு (29) ஷமீல் தான் பவித்ராவின் கள்ளக்காதலி என்பது தெரியாது. ஆனால், ஷமீல், பழனிக்கு போன் செய்து “பவித்ரா வீட்டுக்கு வந்துவிட்டாரா” என்று கேட்டபோது, “நீங்கள் யார்” என்று பழனி கேட்டார். அதற்கு ஷமீல், சென்னையில் பவித்ரா முகவரி தெரியாமல் நின்று கொண்டிருந்தபோது, தான் விசாரித்து ரெயிலில் ஏற்றிவிட்டதாகவும், பவித்ராதான், அவரது செல்போன் நெம்பரைக் கொடுத்ததாவும் கூறியுள்ளார். இந்த நெம்பர் மூலம் தான் போலீஸாற் ஷமீலைக் கண்டு பிடித்தனர். மேலும் போலீஸ் விசாரணையின் போது, ஷமீல் அருவருப்பான முறையில் பதில் கொடுத்ததாகத் தெரிகிறது. இவ்விவரங்களை “குமுதம் ரிப்போர்டர்” கொடுக்கிறது. “ஷமீல் அஹமதுவின் காதலி” என்றே இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைப்பிட்டு “காணவில்லை” என்று செய்தி வெளியிட்டது[3].  இம்முன்னுரையுடன் மற்ற செய்தி தொகுப்புகளைப் படிக்கும் போது, விசயங்கள் தெளிவாகின்றன.

ஆம்பூர் கலவரம் - குமுதம் ரிப்போர்டர் 12-13

ஆம்பூர் கலவரம் – குமுதம் ரிப்போர்டர் 12-13

தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸார்[4]: பவித்ரா செல்போனுக்கு செல்லும் எண்களை கண்காணித்த போலீஸார் சுரேஷின் நம்பரைக் கண்டு பிடித்தனர். அதிலிருந்து சரவணன் மற்றும் புகழேந்தியின் எண்களை கண்டு பிடித்தனர். சுரேஷை விசாரித்தபோது, அம்பத்தூரில் ஒரு பெண்கள் விடுதியில் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு, பவித்ராவை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், அவரின் மொபைல் போன் எண் தொடர்புகள் அடிப்படையில், விசாரணையில் இறங்கினர். அதில், சென்னையில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. 04-07-2015 இரவு, சென்னைக்கு வந்த போலீசார், அம்பத்துார் பகுதியில், தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த, பவித்ராவை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அம்பத்துாரில் உள்ள ஜவுளி கடை ஒன்றில், வேலை செய்து வருவதாகவும், இரு வாலிபர்கள் உதவி செய்ததாகவும் தெரிவித்தார். உடன், சென்னை கிண்டியில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த, இரு வாலிபர்களையும் பிடித்தனர். அவர்களில் ஒருவர், அரக்கோணம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன்; மற்றொருவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேந்திரன்.

ஆம்பூர் கலவரம் - பவித்ரா சென்னையில்.1

ஆம்பூர் கலவரம் – பவித்ரா சென்னையில்.1

மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர் படுத்தப்பட்ட பவித்ரா: இதையடுத்து, 05-07-2015 மதியம், 12:30 மணிக்கு, அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு, பவித்ராவை கொண்டு வந்த போலீசார், அங்கு பிற்பகல், 3:00 மணி வரை, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வேலுார் மாவட்ட எஸ்.பி., செந்தில்குமாரியும் உடனிருந்தார். பின், மாலை, 5:00 மணிக்கு வேலுார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி முன் ஆஜர்படுத்தினர். பவித்ராவை விசாரித்த மாஜிஸ்திரேட், அவரை மகளிர் காப்பத்தில் தங்கவைக்கும்படியும், இன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார். இதையடுத்து, வேலுார் அடுத்த அரியூர் கிராமத்திலுள்ள, தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில், பவித்ரா தங்க வைக்கப்பட்டார்.  இதற்கிடையில், பவித்ராவுக்கு உதவிய சரவணன் மற்றும் சுரேந்திரனை, அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் கலவரம் - பவித்ரா சென்னையில்.2

ஆம்பூர் கலவரம் – பவித்ரா சென்னையில்.2

பவித்ரா கடத்தப்பாட்டாள் என்றும் செய்தி[5]: பவித்ரா ஏற்கனவே வேலை பார்த்த நகை கடையில் விசாரணை நடத்தினர். அவர் பெங்களூரில் பதுங்கியுள்ளாரா என்று விசாரித்தனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் பவித்ராவின் செல்போன் எண் மூலம் விசாரணையில் இறங்கினர். அப்போது சென்னை கோயம்பேடு பகுதியில் பவித்ரா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று இரவு தனிப்படை போலீசார் சென்னை வந்தனர். கோயம்பேடு பஸ் நிலையம் அருகே பவித்ராவை தனிப்படை போலீசார் மீட்டனர். அவர் நேற்று இரவு வேலூர் கொண்டு வரப்பட்டார். ராணிப்பேட்டை அருகே உள்ள மேல்பாடி போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ராவை மீட்டபோது அவருடன் 2 வாலிபர்கள் இருந்தனர். 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று சென்னையில் மடக்கி பிடித்தனர். அவர்கள் அரக்கோணத்தை சேர்ந்த சரவணன், திண்டுக்கல்லை சேர்ந்த புகழேந்தி என்று தெரிந்தது. இவர்கள் இருவரும் கிண்டியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களை அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பவித்ரா கடத்தல் பின்னணியில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது[6]. அவர்களிடம் இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இன்று பவித்ராவை வேலூர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அப்போது பவித்ரா கடத்தல் சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளிவரும். பவித்ராவுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் அம்மா எங்கே எனக் கேட்டு அழுகிறாள். விரைவில் பவித்ராவை ஒப்படையுங்கள் என போலீசாரிடம் பழனி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெக்கான் குரோனிகள் - அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

டெக்கான் குரோனிகள் – அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

போலீஸ் தப்பாக சித்தரிக்கிறது என்று குற்றஞ்சாட்டிய பவித்ரா: அரியூர் பெண்கள் விடுதியில் உள்ள பவித்ரா, நிருபர்களிடம் கூறுகையில், “எனக்கு ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. அவரிடம், எந்த கள்ளத் தொடர்பும் இருந்ததில்லை. வேலை தேடி சென்னைக்கு சென்றபோது, மகளிர் விடுதியில் தங்கியிருந்தேன். போலீசார், என்னை தப்பான பெண்ணாக சித்தரிக்கின்றனர்,” என்றார். ஆனால், பிறகு, ஒப்புக்கொண்டாள்.தன்னைவிட வயதில் சிறிய ஷமீலுடன் கள்ள உறவை வைத்துக் கொண்டுள்ள இப்பெண்ணின் நிலை விசித்திரமாக உள்ளது. ஷமீலும், திருமணர்த்திற்குப் பிறாகும், அத்தகைய உறவைத் தொடர்ந்தது பல கேள்விகளை எழுப்புகிறது. ஷமிலைப் பொறுத்த வரையில், ஒருவேளை அவரது மதநம்பிக்கைகள் அத்தகைய பலதார உறவுகளை தடுக்காமல் இருக்கலாம், ஆனால், ஒரு பெண்-குழந்தைக்குத் தாயாக உள்ள பவித்ரா எப்படி, அத்தகைய உறவில் சிக்கினார் என்பது மர்மமாக இருக்கிறது. ஷமீல்-முஸ்தரிக்கும் குழந்தை இருக்கிறது என்று நீதிமன்ற விவாதம் மூலம் தெரிய வருகின்றது. ஆக இது தகாத உறவு தான், தெரிந்தே, இருவரும் வைத்துள்ளனர்.

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஜமீலுடன் கள்ளத்தொடர்பு உண்டு [7]: ஆம்பூர் டி.எஸ்.பி., கணேசன் கூறியதாவது: “இறந்து போன ஜமில் அகமது மற்றும் பவித்ரா இடையே ஏற்பட்ட கள்ளத் தொடர்பால், இருவரும் ஆம்பூரில் இருந்து ஈரோடு சென்று, அங்குள்ள நகை மற்றும் ஜவுளி கடையில் பணியாற்றியதோடு, தனிக்குடித்தனமும் நடத்தி உள்ளனர். அப்போது, பவித்ராவின் கணவர் பழனி, தன் மனைவியை ஜமில் அகமது கடத்திச் சென்று விட்டதாக, பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். இதை அறிந்த ஜமில் அகமது, ஈரோட்டில் உள்ள வாடகை வீட்டை காலி செய்து விட்டு, பவித்ராவிடம், 300 ரூபாய் கொடுத்து, அவரை ரயில் ஏற்றி அனுப்பி உள்ளார். பவித்ரா சொந்த ஊருக்கு வராமல், வேலை தேடி சென்னைக்கு சென்று விட்டார். இது தொடர்பான முழு விவரத்தையும், போலீசாரிடம், பவித்ரா வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இருந்தும், ‘ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. எந்த உறவும் இல்லைஎன, நிருபர்களிடம், அவர் பொய் சொல்கிறார். பவித்ரா கொடுத்த வாக்குமூலத்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று சமர்ப்பிப்போம்”, இவ்வாறு அவர் கூறினார்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா மதம் மாற்றப்பட்டதாகதிடுக்தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை[8]: வேலூர் ஆம்பூர் கலவர விவகாரத்தில் மாயமான பவித்ராவை போலீசார் மீட்டுள்ளநிலையில் அவர் குறிப்பிட்ட மதத்திற்கு மாற்றப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது………………பவித்ராவின் பழைய காதலர்கள் என கூறப்படும் அரக்கோணம் சரவணன் 26, சென்னை குன்றத்தூர் மனோகரன் 34, காட்பாடி சரவணபெருமாள் 40, ஈரோடு சசிதரன் 34, ஆரணி செங்கமலம் 35 உள்பட 11பேரிடம் விசாரணை செய்தனர். இதுகுறித்து, தனிப்படை போலீஸார் கூறியதாவது[9]: “ஆம்பூர் கலவரத்தின் முக்கிய காரணமான பவித்ரா குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மாற்றப்பட்டார்[10]. அந்த மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் பல கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் எதுவும் தெரியாது என பலரிடம் தெரிவித்து வருகின்றார். பவித்ராவின் பழைய காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றோம். அவரது அழகுக்கு மயங்கி அவர் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளனர். பழைய காதலர்களிடம் விசாரித்தால் ஷமில் அகமதுவின் தொடர்பு எவ்வளவு நாள் என்பது தெரிந்துவிடும்”. மேலும், பவித்ரா கணவர் பழனி கூறியதாவது: “என் அக்காள் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். அவரது சித்தி மகள் வேலைக்கு செல்வதை பார்த்து, பவித்ராவும் தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு, ஜமில் அகமதுவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும், என் வீட்டில் தனிமையில் இருந்தனர். இதையறிந்த நான், பவித்ராவை கண்டித்தேன். இதனால், ஜமில்அகமதுவுடன் சென்று விட்டார். பவித்ராவை பிரிந்து வாடும் எனக்கும், குழந்தைக்கும் நிம்மதி இல்லை”. இவ்வாறு, அவர் கூறினார்[11].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] குமுதம் ரிப்போர்டர், 109-07-2015, பக்கங்கள்.10-13.

[2] இதனால் தான், இவ்வமைப்பு முன்னின்று ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது, பிறகு அது கலவரமாகி விட்டது.

[3] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Shameel-Ahmeds-Lover-Untraceable/2015/06/29/article2892446.ece

[4] தினமலர், தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸார், பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015,23:42 IST

[5] மாலைமலர், ஆம்பூர் கலவர பின்னணி: கடத்தப்பட்ட பவித்ரா சென்னையில் மீட்பு, மாற்றம் செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 05, 2:42 PM IST; பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 05, 11:52 AM IST.

[6] http://www.maalaimalar.com/2015/07/05115212/Ambur-riot-Background-In-Chenn.html

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1289719

[8] தினமலர், பவித்ரா மதம் மாற்றப்பட்டதாகதிடுக்தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை, ஜூலை.7, 2015: 05:37.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1290846

[10] இப்பிரச்சினைப் பற்றி யாரும் அலசக் காணோம். விவாக ரத்து கேட்கிறார், ஒருவேலை கொடுத்து விட்டார் என்ன செய்வார் என்பது பற்றியும் ஒன்றும் தகவல் இல்லை. பொலீஸார் கூறினர் என்று தினமலர் பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தால், அது இப்பொழுதைய நிலையில் இன்னொரு பெரிய பிரச்சினையாக இருக்கும்.

[11] முஸ்லிம் இணைதளங்கள் இதை சாடியுள்ளன. ஆனால், அதை மறுக்கவோ, அல்லது கூடா தொடர்புகளைப் பற்றி கண்டிக்கவோ, வருத்தப்படவோ இல்லை.