Archive for the ‘கலிமா’ category

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

மார்ச் 10, 2013

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

Ajmer-Sharif-shrine-chief-boycotted-but-deputed-others

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.

உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

Ajmer Sharif Mannat

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.

தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Qawwali  dance ajmeeri dargah

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.

தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

Sufi dance dailyfresher.com

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Sufi dance at Ajmir dargah Urs festival 2012

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

Pakistan urs festival - Kalandar

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!

பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

760th Urs celebrations of Hazarat Lal Shahbaz Qalander RA in Sehwan Sharif Pakistan

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!

இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

Khushi dance at Ajmir Sharif Urs

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

Khushi dance at Ajmir Sharif Urs festival

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

Ajmer-dargah-map

வேதபிரகாஷ்

10-03-2013


பாகிஸ்தானில் கிருத்துவர்கள் மீது, தொடர்ந்து தூஷண வழக்குகள் போடப்படுவது ஏன்?

மார்ச் 9, 2013

பாகிஸ்தானில் கிருத்துவர்கள் மீது, தொடர்ந்து தூஷண வழக்குகள் போடப்படுவது ஏன்?

பாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாதவர்களின் நிலை: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. மதத்தின் அடிப்படையில் தான் அது உருவாக்கpபட்டுள்ளது. ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டம் தான் அங்கு அமூலில் உள்ளது. இதன்படி, முஸ்லீம்கள் அல்லாதவர்கள் காஃபிர்கள் எனப்படுவர். இஸ்லாமிய சட்டத்தில் அவர்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. முஸ்லீம் யாராவது புகார் கொடுத்துவிட்டால், அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லீம் முஸ்லீமுக்குத்தான் சாட்சி சொல்ல முடியும், ஆனால், காபிருக்கு சாதகமாகச் சொல்ல முடியாது. ஆனால், பாதகமாக வேண்டுமானல் சொல்லலாம், அது இஸ்லாமியச் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும், அதன்படியே தண்டனையும் கொடுக்கப்படும்[1].

Christians attacked in Pakistan 2013

கடந்த வருடங்களில் நடந்த வழக்குகள்: கடந்த மே மாதத்தில் அப்படி பொய் வழக்குப் போட்டதாக, இரு கிருத்துவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கர்மா பத்ராஸ் என்ற பாஸ்டரும் கைது (அக்டோபர் 2012) செய்யப்பட்டு, பைளில் / ஜாமீனில் (பிப்ரவரி 2013) விடுவிக்கப்பட்டுள்ளார்[2]. ரிம்ஸா மஷிஹ் (Rimsha Masih) என்ற 14 வயது பெண்ணும், இதே போல கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டாள்[3]. அவள் குரானின் சில பக்கங்களை எரித்ததாக குறாஞ்சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டாள். ஆனால், யாருமே அவள் அவ்வாறு செய்ததை கண்ணால் பார்க்கவில்லை அதாவது பார்த்ததாக சாட்சி சொல்லவில்லை என்பதனால் விடுதலை செய்யப்பட்டாள்[4]. 1990லிருந்து இதுவரை 250ற்கும் மேற்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர், 52 பேர் கொல்லப்பட்டூள்ளனர் / தூக்கிலிடப்பட்டுள்ளனர்[5].

Christian-activists-shout-slogans-in-support-of-Rimsha-Masih-via-AFP

3000 கிருத்துவர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன: லாஹூரில் மொஹம்மது நபியை(pbuh)ப் பற்றி சவன் அல்லது பப்பி (Savan, alias Bubby) என்ற கிருத்துவன் விமர்சித்துள்ளதாக தெரிகிறது. இதைக் கேள்வி பட்ட  சபிக் அஹமது (Shafiq Ahmed) கத்தியுடன் சவன் வீட்டிற்குச் சென்றுள்ளான். ஆனால், அவன் அங்குக் காணப்படவில்லை. இதனால் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சபிக் அஹமது வெள்ளிக்ழமை அன்று (08-03-2013) சுமார் 3000 பேர்களுடன் நூர் சாலையில் இருக்கும் ஜோஸப் காலனியில் உள்ள கிருத்துவர்கள் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்[6]. சவனுடைய அப்பா சனமன் மஸ்ஹி (Chaman Masih, 65) இருந்துள்ளார், அவரை நன்றாக அடித்து உதைத்துள்ளனர்[7]. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமாயின[8], கிருத்துவர்கள் உயிருக்குப் பயந்து கொண்டு ஓடிவிட்டனர்[9]. சவன் கைது செய்யப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளான்[10].

Rimsha - christian girl arrested for blasphemy

பாஸ்டர் மீது அவதூறு வழக்கு: இதேபோல, கடந்த மாதமும் அஸ்கர் நிஜாம் ராஞ்சா என்ற பாஸ்டர்  உயிருக்கு பயந்து ஓடியிருக்கிறார். அவரும் இஸ்லாமிற்கு விரோதமாக ஏதோ பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தான் அவ்வாறு பேசவில்லை என்றும், தனக்கு வேண்டாதவர்கள் அவ்வாறு திரித்துக் கூறியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் ஏற்கெனவே மன்னிப்புக் கேட்டிருந்தாலும், அவர் மீது தூஷணத்திற்கான பிரிவு 295-Aவில் வழக்குப் போடப் பட்டதால், தான் தாக்கப்படலாம் என்று ஓடிவிட்டார்[11].

கிருத்துவ பெண் மீது வழக்கு: இதே போல, மார்த்தா என்ற கிருத்துவப் பெண்மணியும் அவதூறு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாள். அவள் ஷெர்-இ-ரப்பானி என்ற மசூதி அருகில் மொஹம்மது நபியை(pbuh)ப் பற்றி அவதூறாகப் பேசியதாக புகார் கொடுக்கப்பட்டது[12]. தூஷணத்திற்கான பிரிவு 295-Aவில் வழக்குப் போடப் பட்டதால், மரணதண்டனை அளிக்கப்படும்.

கிருத்துவர்கள் பேசுவது எப்படி தூஷணமாகின்றன?: கிருத்துவர்கள் அப்படி என்ன பேசியிருக்கிறார்கள், அவை ஏன் இஸ்லாமிற்கு எதிராக உள்ளன. பைபிளில் உள்ளவற்றை பேசினால், இஸ்லாமிற்கு தூஷணமாகுமா? ஏசுகிருஸ்துவைப் பற்றி பேசினால், குரானில் சொல்லப்பட்டதற்கு விரோதமாக போகுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், செய்திகளில் விவரங்கள் சொல்லப்படவில்லை.

 

வேதபிரகாஷ்

09-03-2013


[1] முகலாயர்கள் / முகமதியர்கள் இந்தியாவை ஆண்டபோது, அப்படித்தான் இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் இந்தியர்களை நடத்தினர், ஆட்சி செய்தனர். அதனால் தான் கோவில் உடைக்கப்பட்டன, ஜெசியா வர் விதிக்கப்பட்டது என்றெல்லாம் சரித்திரத்தில் உள்ளது.

[2] Karma Patras, a 55-year-old pastor of Bado Malhi, Sangla Hill, had been languishing in Sheikhupura District Jail since October after preaching on Christ’s sacrifice at a funeral attended mainly by Christians. Some Muslims present thought he was speaking against the Islamic animal slaughter ritual observed at the time, and Patras was confused when police showed up at his home later that day (Oct. 13, 2012) and arrested him on charges of defaming Islam .

http://morningstarnews.org/2013/02/pastor-in-pakistan-released-on-bail-after-mistaken-blasphemy-accusation/

[4] Rimsha Masih, believed to be no older than 14, was charged with burning pages of the Koran in August but was granted bail in September after a cleric was detained on suspicion of planting evidence to stir up resentment against Christians. Masih’s lawyer, Tahir Naveed, said the Islamabad High Court’s decision to throw out the case was based on the fact that no one had seen her burning pages of the Koran.The case provoked international concern and she could, in theory, have faced execution under Pakistan’s blasphemy law despite her age and reported mental problems.

http://www.reuters.com/article/2012/11/20/us-pakistan-blasphemy-idUSBRE8AJ0B420121120

[5] The number of blasphemy cases brought under the law is rising. Since 1987, there have been almost 250 cases, according to the Center for Research and Security Studies think-tank.Convictions are common, although the death sentence has never been carried out. Most convictions are thrown out on appeal but mobs often take the law into their own hands.The think-tank said 52 people had been killed after being accused of blasphemy since 1990. http://www.reuters.com/article/2012/11/20/us-pakistan-blasphemy-idUSBRE8AJ0B420121120

ஹஜ் யாத்திரையில் 19 முஸ்லீம்கள் இறப்பு, 31 பேர் காயம்,ஒரு குழந்தை பிறப்பு முதலியன!

ஒக்ரோபர் 16, 2011

ஹஜ் யாத்திரையில் 19 முஸ்லீம்கள் இறப்பு, 31 பேர் காயம்,  ஒரு குழந்தை பிறப்பு முதலியன

சவுதி அரேபியா ஹஜ் பிரயாணிகளுக்கு பலவித ஏற்பாடுகளை செய்திருந்தது. எந்த விதத்திலும்,  எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்ற திட்டத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன[1]. பிரயாணத்தைப் பற்றிய விழிப்புணர்வு,  மெக்கா-மெதினாவில் என்ன செய்யலாம்-செய்யக் கூட்டாது என்றெல்லாம் அறிவுருத்தப்பட்டன[2]. தங்கும் இடங்கள், ஆரோக்ய-மருத்துவ வசதிகள், போக்குவரத்து என பிரமாண்டமாக இருந்தன. அதே நேரத்தில் வசதிகள் இல்லை என்றும்  சில ஊடகங்கள் கூறுகின்றன[3]. 10% தங்குமிடங்கள் கூட, சட்டமுறைகள்  படி அமைக்கப்படவில்லை, வசதிகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

பல காரணங்களுக்காக 19 இந்தியர்கள் மரணம்: ஹஜ் யாத்திரைக்குச் சென்ற  19 இந்தியர்கள் அங்கு மரணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது[4] குறித்து ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை  சிறந்தது. பரஸ்பர கடவுள் நம்பிக்கை அதைவிட சாலச்சிறந்தது. நல்லவேளை, இங்காவது “இந்தியர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.  இல்லயென்றால், “தமிழர்கள்” என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவிலிருந்து 61,847 பேர் சென்றுள்ளனர்.
இவர்களில் 27,487 பேர் மதீனாவிலும், 34,345 பேர் மதீனாவிலும் உள்ளனர்[5].  இவர்களில் 19 பேர் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 223 விமானங்கள் மூலம் இந்திய யாத்ரீகர்கள் ஹஜ்  புனிதப் பயணமாக சவூதி வந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இறந்த  19 பேரில் 15 பேர் இந்திய ஹஜ் குழு மூலம் வந்தவர்கள், 4 பேர் தனியார் மூலம்
வந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்[6].

காரணம் சொல்லப்படவில்லை என்று ஒரு இணைத்தளம்  கூறுகிறது:  இவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. தற்போது டெல்லியில் இருந்து  20, 268 பேரும், லக்னோவில் இருந்து 10,128 பேரும், ஐதராபாத்தில் இருந்து 6,977 பேரும்,  கோழிக்கோட்டில் இருந்து 8,400 பேரும் ஹஜ் புனித பயணித்துள்ளதாக சவுதி அரேபியா சென்றுள்ளனர்[7].

மரணங்களுக்கிடையில், ஒரு ஜனனம்: இம்முறை, உத்தரப்பிரதேசத்திலிருந்து  வந்திருக்கும் ஒருபெண், புனித மதீனா நகரில் அழகியதொரு பெண்குழந்தையை வெள்ளியன்று பிரசவித்ததாகவும்,  இந்திய ஹஜ் பயணிகளின் வரலாற்றில் புனித நகரொன்றில் ஒரு குழந்தையை ஈன்றெடுப்பது இதுவே  முதல்முறை என்றும் சவூதி அரேபிய அரசின் செய்திக் குறிப்பு மேலும் தெரிவித்துள்ளது[8]. ஶ்ரீலங்காவைச் சேர்ந்த தம்பதியர் சாலை விபத்தில்
உயிரிழந்ததாகத் தெரிக்கப்பட்டுள்ளது[9].  முன்னர் சியால்கோட்டைச் சேர்ந்த பிரயாணிகளை பேருந்தில் ஏற்றிச் சென்றதில், மக்கா-மெதினா  சாலை விபத்து ஏற்பட்டத்தில் 61 பேர் காயமடைந்தனர்[10].  இப்படி “இந்திய துணைகண்டத்தில்” (இப்படி எந்த ஊடகமும் குறிப்பிடாதது ஏன் என்று  தெரியவில்லை) விஷயங்கள் நடந்துள்ளன.

வேதபிரகாஷ்

16-10-2011


[2] Makkah Gov. Prince Khaled Al-Faisal will launch on  Saturday the media awareness campaign titled: “Haj … Worship & Civilized  Conduct.” The campaign is aimed at enlightening pilgrims and residents to  be committed to the rules and regulations concerning the pilgrimage. Al-Khodairi  recalled the decision banning entry of vehicles with capacity of less than 25
passengers to Makkah and asked pilgrims to preserve the cleanliness of the holy  sites. “The campaign will focus on enlightening people to keep away from all  negative behavior that might impede the government’s efforts aimed at ensuring  the safety and comfort of the guests of God,” he said.

http://arabnews.com/saudiarabia/article518220.ece

[3] Ten percent  of buildings used for pilgrims’ housing in Makkah fail to meet the criteria and  conditions of hotel licenses approved by the Saudi Commission for Tourism and  Antiquities (SCTA).

http://gulfnews.com/news/gulf/saudi-arabia/10-per-cent-of-pilgrim-buildings-in-makkah-fail-to-meet-standards-1.891725

[9] Two Sri  Lankan pilgrims died in a road accident when their speeding vehicle overturned  on the Makkah–Jeddah highway on Wednesday night, the Sri Lankan Consulate  General in Jeddah said on Thursday. Abdul Wahid Abdul Jawad, 47,  and wife Abdul Haleem Shamsunissa, 42, died instantly after they flew out of  the vehicle four kilometers outside Jeddah.

ஒசாமா பின் லேடன் கொலைக்கு பழிவாங்க பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 80 பேர் சாவு, 30 படுகாயம்!

மே 13, 2011

ஒசாமா பின் லேடன் கொலைக்கு பழிவாங்க பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 80 பேர் சாவு, 30 படுகாயம்!

மறுபடியும் மனிதகுண்டு வெடிப்பு: ஒசாமா பின் லேடச்னின் டைரியில் மறுபடியும் அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்ற திட்டத்தை வைத்திருந்தான் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், பெஷாவரில் நடந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த மனித குண்டு வெடிப்பில் 80ற்கும் மேலானவர் இறந்தனர். எல்லை ராணுவவீரர் பயிற்சி நிலையம் ( Frontier Corps training centre ) / துணை ராணுவப்படை பயிற்சி நிலையத்திற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு  நடந்துள்ளது. ஒசாமா பின் லேடன் கொலைக்கு பழிவாங்கவே இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்று அல்-கைதா அறிவித்துள்ளது[1]. இறந்தவர்கள் எல்லோருமே பயிற்சிபெற வந்த இளைஞர்கள். 30ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்[2].

எந்த அளவிற்கு பாகிஸ்தான் அமெரிக்க உதவியை பெறாமல் இருக்க முடியும்? இப்பயிற்சி நிறுவனம் அமெரிக்கர்களின் நிதியுதவி பெறுகிறது என்று குறிப்பிடத்தக்கது. இப்படி அமெரிக்க உதவி பெறும் எல்லா நிறுவனங்களும் தாக்கப்படுமா அல்லது அமெரிக்க தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு விடுமா? தீவிரவாதத்துடன் போராடத்தான், இரு நாடுகளும் கூட்டு சேர்ந்துள்ளன என்ற நிலையில், இத்தகைய முரண்பாடு ஏன் என்று நோக்கவேண்டியுள்ளது.

தாலிபானின் தொடர்-தாக்குதல் அமெரிக்காவிற்கு எதிரானதா? தாலிபான் / அல்-கைதா அமைப்பின் தொடர்பாளர் தொலைபேசியில், தாம் தான் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளோம் என்று தெரிவித்தானாம். ஒசாமா பின் லேடன் கொலைக்கு பழிவாங்கவே இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது மற்றும் இது தொடரும் என்றும் கூறியுள்ளாதாகத் தெரிகிறது[3]. அசனுல்லா அஸான் (Ahsanullah Ahsan) என்ற அந்த தொடர்பாளர் குறிப்பாகவே இதைப் பற்றி சொல்லியுள்ளான்[4]. ஒசாமா பின் லேடன் கொலைசெய்யப்பட்டப் பிறகு இதுதான் முதல் தடவை, தீவிரவாத அமைப்புகள் இத்தகைய குண்டுவெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. 13-05-2011 அன்று காலை ஆறு மணியளவில் முதல் தற்கொலை மனித குண்டு நடந்து அந்த பயிற்சி நிறுவனத்திற்குள் சென்றதாகத் தெரிகிறது. அதன் பின்னர், இரண்டாவது மனித குண்டு மோட்டர் பைக்கின் மூலம் உள்ளே சென்றுள்ளான்[5]. குண்டுகள் பால்பேரிங்குகள் மற்றும் ஆணிகளைக் கொண்டிருந்தன. இத்தகைய குண்டுகளை இந்தியாவிலும் தீவிரவவதிகள் உபயோகப்படுத்தியுள்ளதை நினைவு கூறலாம்.

முஸ்லீம்களே முஸ்லீம்களை கொல்வதேன்? இஸ்லாத்தில் யார் வேண்டுமாலும், மற்றவர்களை “காஃபிர்” என்று முத்திரைக் குத்தி, ஜிஹாதை துவக்கிவிடலாம். அதாவது ஒரு முஸ்லீம் குழு அடுத்த முஸ்லீம் குழுவை “காஃபிர்” என்று பிரகடனப் படுத்தலாம், கொல்லுதலை ஆரம்பித்துவிடலாம். ஏனெனில், சுவர்க்கத்தின் கதவுகள் அவர்களுக்காகத் திறந்தே கிடக்கின்றன.

2007லிருந்து 2011 வரை நடந்துள்ள குண்டுவெடிப்புகள்[6]:

April 1, 2011: At least 41 people were killed in twin suicide bomb attacks at the Sufi shrine in Dera Ghazi Khan district, inPakistan’s centralprovince ofPunjab, as worshippers gathered for a festival. The Taliban claimed responsibility.

 

March 31, 2011: At least 13 people were killed in a suicide bomb attack on the leader of one ofPakistan’s most influential Islamic parties and a long–standing ally of the Afghan Taliban movement. It was the second suicide bomb attack on the leader of Jamiat Ulema–i–Islam in two days. Twelve people were killed when a suicide bomber on a motorbike attacked a crowd in Swabi waiting for Mr Rehman to address them.

 

November 5, 2010: A suicide bomber killed 68 people at a mosque in the northwest area of Darra Adam Khel. Hours later, grenades thrown into a second mosque, near Peshawar, killed at least two people.

 

October 2010: 25 people were killed in a blast at a shrine inPunjab province. Another attack at aKarachi shrine two weeks earlier killed nine and was claimed by the Taliban.

 

July 10, 2010: Double suicide bombing kills 102 people invillage ofKakaghund in northwesternPakistan.

 

April 5, 2010: Taliban fighters using rocket-propelled grenades, car bombs and suicide vests tried to storm the United States consulate in Pakistan’s North West Frontier Province. Five security guards were among seven people killed during the raid inPeshawar. Several explosions in the area caused buildings to collapse.

 

February 3, 2010: A bomb blast near a girls’ school in northwestern Pakistan killed three American soldiers apparently involved in a US-British programme to train the country’s paramilitary Frontier Corps. TwoUS military personnel were wounded in the roadside bomb attack on a convoy inLower Dir, which also killed a Pakistani paramilitary and at least three children.

 

January 1, 2010: At least 88 people were killed when a suicide car bomber blew up himself and his vehicle as people gathered to watch a volleyball game in thevillage ofShah Hasan Khan, in Bannu district of north-westPakistan.

 

December 28,2009: A suicide bomber kills 43 people at a Shia procession inKarachi. The Taliban have claimed the attack and threatened more violence.

 

October 24, 2009: The Pakistani Taliban targeted an airbase believed to be one of the country’s secret nuclear weapons facilities among a wave of suicide bombings that killed at least 25 people.

 

October 15, 2009: The Taliban launched pre-emptive strikes against targets across Pakistan, killing 39 people in five separate attacks as it sought to deter a planned assault on its stronghold near the Afghan frontier.

 

October 12,2009: A suicide bomber thought to be about 12 years old blew himself up in a busy market in north-west Pakistan, killing at least 41people and injuring dozens more.

 

October 9, 2009: A car bomb destroyed a market in the northwestern city of Peshawar, killing at least 125 people. The attack was thought to be part of a Taliban campaign.

 

September 18, 2009: At least 33 people were killed when a suicide car bomber rammed into a Shia-owned hotel in north-westPakistan. A further 70 were injured by the bomb, which flattened the market place surrounding the hotel in the town ofKohat, inNorth WestFrontierProvince, on the edge ofPakistan’s Taliban-controlled tribal area.

 

June 9, 2009: At least 11 people were killed and 70 injured when suspected Islamic militants attacked a five-star hotel inPeshawar. The militants drove through the main gate of the Pearl Continental Hotel in a pickup truck, spraying security guards with bullets before ramming their vehicle into the building and detonating it.

 

June 5, 2009: A suicide bomber killed 40 people attended Friday prayers at a mosque in north-westPakistan. The attack took place in theUpper Dir district, close to Swat valley, where the army has been conducting a major offensive against the Taliban.

 

March 27, 2009: A suicide attack on a mosque on the Peshawar-Torkham highway kills 83 people and leaves more than 100 injured.

 

October 10, 2008: At least 85 people are killed and about 200 wounded in an attack at an anti-Taliban meeting in a tribal area.

 

September 20, 2008: A suicide attack at the Marriott Hotel in Islamabad kills at least 60 people. CCTV footage showed the truck carrying the biggest ever bomb used by terrorists inPakistan being driven into the gates of the Marriott hotel inIslamabad

 

February 16, 2008: A suicide bomber rams his car into the election office of an independent candidate in the city of Parachinar, killing at least 47.

 

January 10, 2008: A suicide bomber walks up to policemen stationed outside the High Court in Lahore and sets off his explosives, killing 22people, most of them police.

 

January 7, 2008: Al-Qaeda-linked militants in northwestPakistan attack two offices of a government-sponsored peace movement and kill eight people.

 

December 21, 2007: A suicide bomber kills at least 41 people in a mosque in northwestPakistan during Eid festival prayers.

 

December 17, 2007: A suicide bomber kills 10 military recruits in the northwestern town ofKohat.

 

November 24, 2007: Twin suicide car bomb attacks kill 15 people inRawalpindi, on the eve of the return of former Prime Minister Nawaz Sharif from exile inSaudi Arabia.

 

October 25, 2007: Suspected suicide bomber kills 21 people, including 17 soldiers, in an attack on an army convoy in the northwestern Swat valley.

 

October 19, 2007: At least 139 people killed in suicide bomb attack on Benazir Bhutto’s motorcade as she is driven throughKarachi after arriving home from eight years in self-exile. The attack is one of the deadliest inPakistan’s history.

 

Sept 13, 2007: At least 15 soldiers killed in suicide bombing in an army canteen nearIslamabad.

 

September 11, 2007: Suicide bomber kills 16 people in northwest Dera Ismail Khan.

 

September 4, 2007: Two suicide bombers kill 25 inRawalpindi.

July 27, 2007: Suicide bomb attack in restaurant near Islamabad’s Red Mosque kills 13 people, most of them policemen.

 

July 19, 2007: Three suicide attacks in a single day in three towns kill at least 52 people.

 

July 17, 2007: Suicide bomber kills 16 people outside court inIslamabad, where country’s suspended Chief Justice Iftikhar Chaudhry was due to speak.

 

July 15, 2007: 16 people, most of them paramilitary soldiers, are killed in ambush on patrol in Swat valley in North West Frontier Province (NWFP). Separately, suicide bomber targets police recruiting centre in Dera Ismail Khan in NWFP, killing 29.

 

July 14, 2007: Suicide car-bomber kills 24 paramilitary soldiers and wounds 29 inNorth Waziristan.


கலிமா சொல்ல மறுத்த சீக்கிய இளைஞனின் சிகை அறுக்கப்பட்டது!

ஜூலை 30, 2010

கலிமா சொல்ல மறுத்த சீக்கிய இளைஞனின் சிகை அறுக்கப்பட்டது!

முதுன்பால் சிங் என்ற இளைஞர் (திரல் என்ற இடத்தில் வசிப்பவர்) அடையாளம் காணமுடியாத நபர்களால் பிடித்து அடிக்கப்பட்டு, அவரது சிகைமுடி அப்படியே கொத்தாக அறுக்கப் பட்டது. இந்நிகழ்ச்சி, ஸ்ரீநகரிலிருந்து 160 கி.மீ தொலைவிலுள்ள புல்வாமா மாவட்டத்தில் நடந்துள்ளது.

அவர்கள் அந்த சீகிய இளைஞனைப் பிடித்துக் கொண்டு, “காஷ்மீர விடுதலை” முழக்கமிட ஆணையிட்டனர். பயந்த அவன் அவ்வாறே செய்தான். அடுத்ததாக, கலிமா சொல்லச் சொன்னதற்கு மறுத்துள்ளான். ஆகையால் நன்றக அடித்து, அவனுடைய மத அடையாளமான வளர்ந்துள்ள சிகையை அறுத்துள்ளனர்.

விஷயம் அறிந்த சீக்கிய இளைஞர்கள் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையை மறித்து ப்;ஓராட்டம் நடத்தினர்.  ஆனால், போலீஸார் லத்தி-சார்ஜ் செய்து கூட்டத்தைக் களைத்து விட்டனர்.

அகில இந்திய சிசோமணி அகாலி தள தலைவர், “யாரோ சீக்கியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பிரிவு உண்டாக்கவே இவ்வாறு செய்துள்ளனர்”, என்றார்.

மஸ்ரத் ஆலம்-பாகிஸ்தான்

மஸ்ரத் ஆலம்-பாகிஸ்தான்

ஹுரியத் மாநாடு என்ற பிரிவினைவாத இயக்கம், சீக்கியர்களை அமைதியாக இருக்கக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், இதே ஹுரித்தின் மற்ற அவதார தீவிரவாத இயக்கங்கள் தாம், காஷ்மீரத்தில் கலாட்டா, கல்லடி கலவரம் முதல் மற்ற பயங்கரவாதச் செயல்களைச் செய்து வருகின்றன.

பாகிஸ்தான் ஆதரவாளனான, மஸ்ரத் ஆலம் என்பவன் இப்பொழுது பொறுப்பேற்றுள்ளானாம்.

முஹமது யாஸின் மாலிக் [Jammu Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik], மீர்வாயிஜ் உமர் ஃபரூக் [chairman of Hurriyat’s moderate faction Mirwaiz Umar Farooq] and சையது ஐ ஷா ஜிலானி  [its hard-line chairman Syed Ali Shah Geelani] முதலியோரை மௌனமாக இருக்கச் சொல்லி, இவனுடை குரல்தான் ஒலிக்கிறதாம். இதனால், காஷ்மீரத்தில், இன்னும் கலவரங்கள் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரத்தில் உள்ள பிரிவினை சக்திகளை ஒட்டுமொத்தமாக அடக்கப்படும் வரை, மக்களுக்கு அமைதி திரும்பும் என்பது கனவுதான்.