Archive for the ‘கர்ப்பம்’ category

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (3)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (3)

Nigerian refugees sit at a Chadian camp in the village of Klissoum near NDjamena March 28, 2015- Philippe Desmazes-Getty Images

Nigerian refugees sit at a Chadian camp in the village of Klissoum near NDjamena March 28, 2015- Philippe Desmazes-Getty Images

பெண்கள் ஜிஹாதிகளாக மாறும் முறை: மேற்கத்தைய படிப்பு முறை தேவையில்லை, அதை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளை குண்டு வைத்து தகர்ப்போம், சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்க வேண்டிய அவசியல் இல்லை. அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்றால் தடுக்கப்படுவர், மீறீனால் சுட்டுத்தள்ளப்படுவர் என்றுதான் இன்றளவும் ஜிஹாதிக்குழுக்கள் நடந்து கொண்ட் வருகின்றனர். மலாலாவை வைத்து, மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தாலும், பெர்ம்பான்மையான முஸ்லிம் பெண்கள் படிப்பறிவு இல்லாமல் தான் இருக்கின்றனர். மாறாக, இந்த ஜிஹாதிக் குழுக்கள் மற்ற ஜிஹாதிகளுக்கு எல்லாவிதங்களிலும் உதவச் சொல்கின்றனர். அத்தகைய முறையில் போதனை அளிக்கப்படுகிறது. அவர்களையும், ஜிஹாதில் பங்கு கொள்ளச் செய்கின்றனர். அவ்வாறு அல்லாவிற்கு முழுமையாக சரணாகதி அடைந்த பெண்கள், எல்லாவற்றையும் செய்ய அறிவுருத்தப் படுகிறாள். அந்நிலையில் தான், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, குழந்தைகளை ஜிஹாதிகளாக வளர்த்துப் பெரியவர்களாக்க ஒப்புக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

Nigerian soldiers rescued these women and children from Boko Haram extremists.

Nigerian soldiers rescued these women and children from Boko Haram extremists.

ஜிஹாதிகளின்நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: பொகோ ஹரம் என்ற இஸ்லாமிய ஜிஹாதி இயக்கம் பிடித்து வைக்கப்பட்டுள்ள வயதுக்கு வந்துள்ள சிறுமிகள், இளம் பெண்கள் முதலியோரை உடலுறவு கொண்டு, கர்ப்பமாக்கி, குழந்தைகளை பெற்றெடுக்க செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்[1]. இதன் மூலம் புதிய வீரியமுள்ள ஹிஹாதி வீரர்களை பிறப்பெடுத்து, உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகப் பெருமையாகக் கூறிக் கொண்டனர். அதாவது குழந்தைகள் பிறந்ததும், அவை ஜிஹாதித்துவ பெண்மணிகளால் ஜிஹாத்-பாலூட்டி, அடிப்படைவாத-தாலாட்டி, இஸ்லாம்-சீராட்டி வளர்க்கப்படுவர். இதனால், அல்லா பெயரால் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் கூடிய ரோபோக்களாகத் தயாராவர். அதனால், புதிய போராளிகள் கொண்ட பரம்பரை உருவாகும்[2]. அவர்கள் போர்ச்சுகீசியரும் இத்தகைய முறைகளை கோவாவில் பயன்படுத்தினர் என்பதனைக் கவனிக்கவேண்டும்[3]. கிருத்துவர்கள் மற்றும் முகமதியர்கள் மற்ற நாடுகளில் 100-200 ஆண்டுகளில் பலன் பெற அல்லது விளைவு ஏற்பட திட்டமிட்டு செய்யும் இத்தகைய செயல்களினால் ஏற்படும் தீங்குகள் அந்த்கந்த நாடுகளில் பிறகு தான் தெரியவரும்.

she says her husband was killed before she was abducted by Islamist extremists.

she says her husband was killed before she was abducted by Islamist extremists.

ஜிஹாதிகளை உருவாக்கும் எந்திரங்களாக பெண்கள் உபயோகப்படுத்தப் படல்: வடகிழக்கு நைஜீரியா, போர்னோ மாநிலத்தின் ஆளுனர் அல்-ஹாஜி காசிம் ஷேட்டிமா [Alhaji Kashim Shettima], சமீபத்தில் காமரூன் நாட்டு எல்லைகளில் உள்ள சம்பசி காடுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 214 சிறுமிகள், இளம் பெண்கள், பெண்கள் முதலியோரை வேண்டுமென்றே, வலுக்கட்டாயமாக கற்பழித்து அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார்[4]. புரொபசர் பாபாதுன்டே ஓஸ்டோமேயின் [Professor Babatunde Osotimehin] என்ற ஐக்கிய நாடுகள் சங்க இயக்குனரும் இவ்விவரத்தை வெளியிட்டார். கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றெடுக்க தயாராக 214 பெண்கள் இருக்கிறார்களாம்[5]. இவர்களில் சிலருக்கு இரட்டை, மூன்று, நான்கு குழந்தைகளும் பிறக்க வாய்ப்புள்ளது. மதவெறி மற்றும் காழ்ப்புடன் இத்தகைய பேச்சுகளை பேசுகிறார்கள் என்பதனையும் கவனிக்கலாம். இதுவரை காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியுள்ளது. இப்பொழுது 1,000ஐ எட்டுகிறது[6]. இவர்கள் கடந்த ஆண்டில் கடத்திச் செல்லப்பட்ட 234 பெண்களில் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. 2014லிலிருந்து இத்தீவிரவாதிகள் 2,000ற்கும் மேற்பட்டவர்களைக் கடத்திச் சென்றுள்ளார்கள்.  மதரீதியில், இவ்வாறு பொம்மைகளைப் போல, அடிமைகளை விட மோசமான நிலையில் சொல்வதை செய்யும் மக்களை உருவாக்கும் எண்ணம் உலகத்திலேயே மோசமானது. இதனால், ஈவு-இரக்கம் இல்லாமல், மிகக்கொடுமையான, குரூரமான தீவிரவாத-பயங்கரவாத செயல்களை அவர்கள் மூலம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று தெரிகிறது.

Women demonstrating for the freedom of the girls abducted by Boko Haram

Women demonstrating for the freedom of the girls abducted by Boko Haram

மதவுரிமைகளில் மனிதவுரிமைகள் மறைந்து விடுகின்றன: பெண்களின் உரிமைகள் என்ற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் மூலம் இவற்றை வெளியிட்டாலும், அவ்வூடகங்களின் நிருபர்கள், நிபுணர்கள் முதலியோர் கிறிஸ்தவர்களாக இருப்பதினால், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம்-விரோத ரீதியில் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று குற்றாஞ்சாட்டுகின்றன. அதே வேளையில், அல்-ஹஜிரா, கல்ப் செய்திகள் போன்ற இஸ்லாமிய ஊடகங்களிலேயே, பொகோ ஹராம், ஐசிஸ் போன்ற இயக்கங்களின் கொலைகள், கடத்தல்கள் முதலியவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அதனால், அவை பொய் என்றாகி விடாது. இதற்கும் மதரீதியில் விளக்கம் கொடுத்து, ஜிஹாதிகளை உயர்வாகப் பேசி, தற்கொலையாளிகளை “ஷஹீத்” என்று பாராட்டி, அத்தகைய செயல்களை அல்லாவுக்காக செய்யப் படபடுகின்றன என்றும் விவாதிக்கலாம். ஆனால், இருவகையான விளக்கங்கள், செய்தி வெளியீடுகள், பாதிக்கப் பட்ட மக்களின் துயரங்களை மாற்றிவிடப் போவதில்லை. ஹிஹாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்கள் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. கற்பழிக்கப் பட்ட பெண்களின் தூய்மை, தாய்மை, மேன்மை முதலியவை அப்பெண்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அல்லாவுக்கு அவர்கள் செய்த காரியங்கள் மகிழ்வூட்டலாம், ஷ்ஹீதுகள் நேரிடையாக சொர்க்கத்துக்குப் போகலாம், ஆனால், பாதிக்கப் பட்ட பெண்கள், இவ்வுலகத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். பிறகு அவர்களது சாபங்களுக்கு யார் பதில் சொல்லப்போவது? அப்பெண்களின் துயத்தை எடுத்துக் காட்டும் வீடியோ ஒன்று[7].

Women kidnapped by suspected Boko Haram militants

Women kidnapped by suspected Boko Haram militants

நைஜீரிய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை: கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களினால் உலக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் பழைய நாகரிகங்களின் ஆதாரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சரித்திரம் ஆதாரங்கள், ஆராய்ச்சிகள் என்றெல்லாம் பேசும் மேற்கத்தைய நிபுணர்கள் இவ்விசயங்களில் அமுக்கமாகவே இருந்து வருகிறார்கள். இப்பொழுது, ஐசிஸ் மற்றும் பொகோ ஹராம் சமுதாயத்தைப் பலவழிகளில் பாதித்து வருகின்றன. பொருளாதார ரீதியில் சிறந்து விளங்க வேண்டிய நைஜீரியா, இப்பொழுது, பொகோ ஹராம் தீவிரவாதத்தால் சீரழிந்துள்ளது. உள்ளூர் ஆட்சியாளர்கள், முதலில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீரமக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

09-05-2015

[1] Ludovica Iaccino, Nigeria: Boko Haram impregnated girls ‘to guarantee new generation of fighters’, IBTimes, May 6, 2015 17:58 BST

[2] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022

[3]  கோவாவில் ஆரம்பித்த அவர்களது கலப்பின மக்கள் உற்பத்தி முயற்சி, பல ஜாதிகளை உண்டாக்கின. காஸ்டா / ஜாதி என்ற பெயரே அவர்களால் தான் உருவாக்கப்பட்டு, இன்று இந்தியர்களை ஆடிப்படைத்து வருகின்றது.

[4] The governor of Borno state, north-eastern Nigeria, has said that terror group Boko Haram (now Iswap) deliberately impregnated the 214 girls recently rescued by the army in the Sambisa forest on the border with Cameroon. The girls were part of some 234 women and children freed after being kidnapped by the terrorists, who are believed to have abducted some 2,000 civilians since the beginning of 2014.

[5]http://www.theroot.com/articles/news/2015/05/_214_out_of_the_234_women_girls_rescued_from_boko_haram_are_reportedly_pregnant.html

[6] The news was broken early this week by our former Minister of Health, Professor Babatunde Osotimehin, now Executive Director of United Nations Population Fund. He said most of the girls rescued from Boko Haram camps were visibly pregnant. Another source put the actual figures of expectant mothers at 214. That was when the figure of those rescued stood at about 600.  Now, the number has hit at least 1,000.  So, it means more babies could be expected.  Of the identified 214 pregnant, some could be carrying twins, triplets, and possibly quadruplets.  It’s really an invasion! http://sunnewsonline.com/new/?p=118371

[7] http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/nigeria/11593573/They-told-us-if-we-didnt-come-with-them-they-would-beat-us.html

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (2)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (2)

30 More Women, Children Escape Boko Haram Sambisa

30 More Women, Children Escape Boko Haram Sambisa

நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” – இனவெறி முதல் ஜிஹாத் வரை: ஜிஹாதி பாதையில் தீவிரவாதத்தை வளர்க்க பொருளாரத்தைப் பாதிக்கும் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் வேலையில், பொகோ ஹராமின் பெண்களின் மீதான தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” என்ற [eugenics] முறையும் இக்காலத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் வெள்ளை-கறுப்பு நிற மக்களிடையே உள்ள வேறுபாடுகளை களைய அவர்க்களுக்கிடையே திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. விருப்பப்படி குழந்தைகளைப் பெற்ருக் கொள்ள நவீன முறைகளும் உருவாக்கப் பட்டு விட்டன[1]. இப்பொழுதைய பால்டிமோர் கலவரங்களுக்குக் கூட அத்தகைய விளக்கம் கொடுக்கப்பட்டது. உலகப்போர்களுக்கு முக்கியமான காரணம் இனவெறி மற்றும் அது சம்பந்தமான விஞ்ஞானத்திற்குப் புறம்பான இனவெறி நம்பிக்கைகள். அதில் ஒன்று இனத்தூய்னை என்பது. இதன் மூலம் வெள்ளைநிற மக்களிடையே, யார் உயர்ந்தவர், சிறந்தவர் மற்றும் அறிவாளி அத்தகைய நிலை எந்த மக்களிடம் காணப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ச்சி நடந்து, அதிலும் மதம் புகுத்தப்பட்டது. இப்பொழுது, ஜிஹாதிகளின் அறிவுஜீவிக்குழுக்கள் அவற்றைப் பின்பற்றுகின்றன போலும்.

Boko-Haram-rescued women from sex harassment

Boko-Haram-rescued women from sex harassment

பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: இஸ்லாமிய நாடுகளில் அல்லது முஸ்லிம்களினால் இது – “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” வேறுமுறையில் செயல்படுத்தப் படுகின்றன. அதாவது, பெண்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள செய்தல், நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்ளுதல், நூற்றுக்கணக்கில் பெண்களை கற்பழித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் செய்தல் என்ற முறைகள் பின்பற்றப் படுகின்றன. முஸ்லிம்களின் நான்கு-மனைவி திட்டம் விமர்சிக்கப் பட்டாலும், பொகோ ஹராம் என்ற ஜிஹாதி இயக்கத்தின் வலுக்கட்டாய உடலுறவு, செக்ஸ், கற்பழிப்பு முதலியவை இந்திய ஊடகங்களில் குறைவாகவே விவாதிக்கப்படுகின்றன. போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் என்பவர் இந்தப் பெண்களை நாங்கள் விரும்பும் நபர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம். அல்லது அடிமைகளாக விற்று விடுவோம். அல்லது அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார். ஏற்கெனவே பத்து வயதுச் சிறுமிகளை எல்லாம் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்தான் போகோ ஹராம் இயக்கத்தினர்[2]. ஆகவே பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல் என்ற இம்முறை, அவர்களது குரானில் உள்ள “இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்ட பெண்கள்” பிறகு அனைவருக்கும் பொதுவானர்கள் என்ற இறையியல் சித்தாந்தத்திற்கு ஏற்றமுறையில் செயல்படுத்துவாதாகத் தோன்றுகிறது[3].

Escaped women tell their horrowful stories

Escaped women tell their horrowful stories

பள்ளி சிறுமிகள் கடத்தல்செக்ஸ், குழந்தை பெற்றெடுப்பு 2014-15 நிகழ்வுகள்: நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி 2014 பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற நைஜீரிய ஆயுதக்குழுவான போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர்[4]. இவர்களை விடுவிக்க மக்கள் தெருக்களில் வந்து ஆர்பாட்டம் செய்தனர். போர்னா பகுதியின் ஆளுநர், பெண்கள் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்க்ளுக்கு சன்மானம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவிகளில் 107 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சில மாணவிகளை விடுவித்துவிட்டதாக தீவிரவாதிகள் தகவல் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் தீவிரவாதிகள் கடத்தி செல்லும் வழியிலேயே சில மாணவிகள் ஜீப்பில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுவிட்டதாக நைஜீரிய ராணுவ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்குப் பின்னணியாக, போகோ ஹராம் இயக்கத்துக்கு அல் காய்தா உதவியிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது[5]. காரணம் இதே போன்ற மாணவிகள் கடத்தல் சம்பவங்களை அல்ஜீரியாவில் 1990-க்களிலும், 2000களிலும் அல் காய்தா நிகழ்த்தி இருக்கிறது[6].

Escape more than 60 women and girls abducted by Boko Haram

Escape more than 60 women and girls abducted by Boko Haram

ராணுவம் மற்றும் ஆட்சியாளர்களுன் முரண்பட்ட அறிக்கைகள்பாதிக்கப்பட்டது பெண்கள் தாம்: ஆனால், இன்று இது குறித்து போர்னா நைஜீரிய பள்ளியின் முதல்வர் கூறுகையில், “கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படவில்லை. மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக ராணுவம் சார்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நாங்கள் அனைவரும் மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிராத்தித்து வருகிறோம்”, என்று அவர் தெரிவித்தார். நைஜீரியாவில் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் மாணவிகளை தேடும் பணியை அதன் அரசு முடக்கி விட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை பெரும் பாவம் என்று கூறி அதனை தீவிரமாக எதிர்த்து வரும் பொகோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது[7]. அதாவது, தலிபன்கள் ஆப்கானிஸ்தானில் செய்து வருவதை, பொகோ ஹராம் இங்கு செய்கின்றனர். மேற்கத்தைய கல்வியை எதிர்க்கிறோம் என்பதில், இஸ்லாமியக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது.

Ridiculing Boko Haram Where It Hurts

Ridiculing Boko Haram Where It Hurts

கடத்தப்பட்ட மாணவிகள் விற்கப்படுதல் முதலியன: அந்த மாணவிகளில் ஒரு சிலரை விற்பனை செய்யவும், வேறு சிலரை அடிமைகளாக வைத்திருக்கவும், மற்றவரைக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போவதாகவும் அந்த இயக்கத்தின் தலைவர் அறிவித்தார். கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் காமரூனிலும், சட் முதலிய நாடுகளில் கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் கூட்டத்தினருக்கு 12 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்தது. 53 மாணவிகள் தப்பியுள்ளதாகவும், மற்றவர் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளதாகவும் காவல் படையினரின் தகவல் தெரிவித்தன. பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை பயனளிக்காது போனமையும், கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வீதிகளில் ஆர்பாட்டங்கள் நடத்தின. பொகோ ஹரம் இயக்கத்தினர், வட நைஜீரியாவில் முஸ்லீம் மத அரசை அமைக்கப் போராடி வருகின்றமை நினைவு கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மேலும், நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோநாதன் மேலும், பாதிக்கப்பட்டோர்களும், ஊர்மக்களும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. வீதி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெண்களில் இருவர் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, ஜனாதிபதியின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பெண்கள் கூறும் விசயங்கள் எந்த மனிதனையும் திகைக்க வைக்கின்றன[8]. இடைக்காலத்தில் முகமதியர்கள் எப்படி பெண்களைக் கடத்தியது, அடிமைகளாக விற்றது, ஹேரம் என்ற அந்தப்புரங்களில் சுல்தான்கள், படைத்தலைவர்கள், என்று முறையே அனுபவிக்கப் பட்டு, பிறகு வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஏனெனில், இந்த நவீன காலத்திலும் அதே முறைகளை, வேறு மாதிரி செய்து வருவது வெளிப்படுகிறது[9]. அவற்றையெல்லாம் மீறிய முறைதான் ஜிஹாதி-குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வளர்த்தல் முதலியனவாகும்[10].

© வேதபிரகாஷ்

09-05-2015

[1] http://www.theguardian.com/commentisfree/2014/oct/03/sperm-donot-lawsuit-racism-eugenics-lesbian-couple-black-donor

[2] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6/article7052396.ece

[3]  பைபிளில் இத்தகைய ஆதாரங்கள், அவற்றைப் பின்பற்றிய போக்கு சரித்திரத்தில், பல உதாரணங்களில் காணலாம்.

[4] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/05/CTCSentinel-Vol8Issue42.pdf

[5] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/03/CTCSentinel-Vol8Issue316.pdf

[6] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1/article7002695.ece

[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-129-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/article5922474.ece

[8] Wall Street Journal, Boko Haram and the Lost Girls of Nigeria- After a military rescue, captives tell their story to The Wall Street Journal, By Patrick McGrothy, Updated May 8, 2015 3:38 p.m. ET.

[9] http://www.wsj.com/articles/boko-haram-and-the-lost-girls-of-nigeria-1431113437

[10] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022

செக்ஸ்-ஜிஹாத், முஸ்லிம் இளம்பெண்கள் ஒரே நாளில், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது மதரீதியில் ஆதரிக்கப்படுவதேன்?

ஏப்ரல் 25, 2014

செக்ஸ்-ஜிஹாத், முஸ்லிம் இளம்பெண்கள் ஒரே நாளில்,  பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது மதரீதியில் ஆதரிக்கப்படுவதேன்?

 

சிரியாவில் செக்ஸ்-ஜிஹாதில் ஈடுபட்ட இளம்பெண்கள்

சிரியாவில் செக்ஸ்-ஜிஹாதில் ஈடுபட்ட இளம்பெண்கள்

ஜிஹாத்  அல்நிக்காஹ்  ( ஜிஹாதிற்காக  கல்யாணம்  செய்து  கொள்வது): இஸ்லாத்தில் உள்ள  “நிக்காஹ்”க்கள் போதாது என்று,  இப்பொழுது புதியதாக,  இன்னொரு நிக்காஹ் செயல் படுகிறது.  அது ஜிஹாத் அல்-நிக்காஹ்  [‘jihad al-nikah’ – (sexual holy war, in Arabic)]  என்று அரேபியத்தில் அழைக்கப் படுகிறது.  இதன்படி,  துனிஸிய நாட்டுப் பெண்கள் சிரியாவுக்குச் சென்று,  அங்கு போராடிவரும்,  முஸ்லிம் தீவிரவாதிகளுடன் படுத்து,  உடலுறவுகொண்டு,  மகிழ்வித்துத் திரும்பி வந்துள்ளார்களாம்[1].  ஆனால்,  ஒருபெண் ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளவில்லை,  ஒரே நாளில் பல ஆண்களுடன் உடலுறவு கொண்டு வந்துள்ளார்கள்.  அது மட்டுமல்லாது,  அப்பெண்களின் முகங்கள் மறைக்கப் பட்டிருக்குமாம். இருப்பினும், செக்ஸில் உச்ச நிலையை அடையும் போது,  துணியை அகற்றி முகங்களைப் பார்த்திருக்கலாம்,  ஏனெனில், செக்ஸில் அத்தகைய நிலை ஏற்படும் என்று சொல்லவேண்டிய அவசியல் இல்லை.

 

உள்துறை அமைச்சர் லோட்பி பென் ஜெட்டௌ

உள்துறை அமைச்சர் லோட்பி பென் ஜெட்டௌ

விவகாரம் ஆரம்பித்த இடம்: சாம்பி மலைகளில் ஜெபல் எக் சாம்பி என்ற இடத்தில் []Jebel ech Chaambi (Chaambi  mountains) தான் இவ்விவகாரம் வெளி வந்துள்ளது.  இங்குதான் டுனிசிய ராணுவம் அல்-குவைதாவைச் சேர்ந்த தீவிரவாதிகளுடன் டிசம்பர்  2012லிருந்து போராடி  வருகிறது. அரசு தரப்பின்படி,  இங்குதான், களைத்துப் போன போராளிகளுக்கு உற்சாகம் சொடுக்க, செக்ஸ்-ஜிஹாத் செய்த 19 பெண்களை கைது செய்யப்பட்டனர் என்று அறிவித்துள்ளது[2].  அக்குடும்பத்தினர் துக்கத்தினால் உறைந்து போயிருக்கின்றனர்.  ஒரு குறிப்பிட்ட பெண் அல்-தௌபா மசூதியிலிருந்து கைது செய்யப் பட்டிருக்கிறாள்[3].

 

சாம்பி மலைகளில் ஜெபல் எக் சாம்பி என்ற இடத்தில் []Jebel ech Chaambi (Chaambi mountains) தான் இவ்விவகாரம் வெளிவந்துள்ளது.

சாம்பி மலைகளில் ஜெபல் எக் சாம்பி என்ற இடத்தில் []Jebel ech Chaambi (Chaambi mountains) தான் இவ்விவகாரம் வெளிவந்துள்ளது.

டுனிசிய உள்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்ட விசயம்: இது ஏதோ,  ஜனரஞ்சகமான செய்தி அல்லது இஸ்லாத்தை விமர்சிக்கும் செய்தி என்றெல்லாம் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. “பெண்கள்  20,  30,  100  தீவிரவாதிகளுடன் உடலுறவுக் கொண்டு வந்துள்ளார்கள்,  இப்பொழுது கர்ப்பமாக உள்ளார்கள்”,  என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் லோட்பி பென் ஜெட்டௌ [ Lotfi ben Jeddou]  அந்நாட்டு பாராளுமன்றத்தில் எம்பிக்களிடம் கூறியுள்ளார்[4]. கர்ப்பமாக இளம்பெண்கள் திரும்புவது பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[5].  ஆனால்,  அவர் எத்தனை பெண்கள் அவ்வாறு கர்ப்பமுற்று தீவிரவாதிகளின் ஜிஹாதிகளின் குழந்தைகளைத்  திரும்பியுள்ளன என்று எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை[6].  இருப்பினும் இதை எதிர்த்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.  நிச்சயமாக அரசாட்சியில் உள்ளவர்கள் அத்தகைய அறிக்கைகளை விட பயிற்சிப் பெற்றிருப்பார்கள் அல்லது அவருடைய தலைவர்  / பயிற்சியாளர், அவ்வாறே சொல்லச் சொல்லியிருப்பார்.

 

ரஹ்மா செக்ஸ் ஜிஹாதி

ரஹ்மா செக்ஸ் ஜிஹாதி

செக்ஸ்ஜிஹாத் விபச்சாரம் தான் என்று சொன்ன முப்தியும், பதவி இழப்பும்: மதரீதியில், மதஅடிப்படைவாதத்தில், இறையியல் ரீதியில் செக்ஸ்-ஜிஹாத் குறிப்பிட்ட முஸ்லிம் குழுக்கள் ஊக்குவித்தாலும்,  முஸ்லிம் மதத்தலைவர்களும் இதனை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். ஷேக் ஓத்மான் பட்டிக் [Sheikh Othman Battikh]  என்ற முந்தைய துனிசியாவின் முப்டி கூறுவதாவது[7], “இந்த  13  பெண்களும் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள்.  உண்மையில் அவர்கள் சிரியாவிற்குச் சென்று அங்குள்ள ஜிஹாதிகளுக்கு செக்ஸ்-சேவை செய்துவிட்டு வந்திருக்கிறார்கள்.  இத்தகைய செக்ஸ்-ஜிஹாத் எல்லாம் விபச்சாரத்திற்கு சமமாகும்.  அங்கு ஜிஹாத் நடக்கவேண்டும் என்று இங்கிருந்து பெண்களை அனுப்புகிறார்கள்.  13 பெண்கள் அத்தகைய செக்ஸ்-ஜிகாதிற்கு அனுப்பப் பட்டிருக்கிறார்கள்.  இது விபச்சாரம்தான்.  நீதிமுறைப் பாடம்த வறாகச் சொல்லப்பட்டிருக்கிறது”! இவர் இப்படி வெளிப்படையாக பேசியதால்,  அந்நாட்டு ஜனாதிபதி முன்சிப் மர்ஸுக் [Muncif Marzouk] அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்[8].  இருப்பினும்,  இன்னொரு முஸ்லிம் மதத்தலைவர்,  ஷேக் பரீத் எல்பாஜி [Sheikh Fareed Elbaji]  அவ்வாறு சென்ற பெண்களின் குடும்பங்களை தனக்குத் தெரியும் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்[9].  “நீதிமுறைப்பாடம் தவறாகச் சொல்லப் பட்டிருக்கிறது”, என்று இவர் சொல்வதிலிருந்து, இஸ்லாம் மதப்புத்தகங்கள் எப்படிவேண்டுமானாலும், திரித்துக் கூறப்படும், விளக்கம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

 

டுனிசிய செக்ஸ் ஜிஹாத் கர்ப்பம்

டுனிசிய செக்ஸ் ஜிஹாத் கர்ப்பம்

சலாபிஸ இஸ்லாம் இறையியல் செக்ஸ்ஜிஹாத்தத்துவத்தை ஆதரிக்கிறதாம்: இஸ்லாம் ஒன்று,  ஒன்றே ஒன்றுதான் என்றாலும்,  இறையியல் ரீதியில் பல உள்ளன என்று தெரிகிறது. ஒரு முப்தி இதனை விபச்சாரம்,  அபச்சாரம் என்றாலும், இன்னொரு மதப்பிரிவு இல்லை இது ஆசாரம்தான்,  ஏற்றுக் கொள்ளப்படும் என்கிறது.  அதனால், “சலாபிஸம்” என்ற இறையியலை பின்பற்றும் சுன்னி முஸ்லிம்கள்,  இது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித யுத்தமுறைகளில் ஒன்று என்று கொண்டுள்ளார்கள்[10]. அதற்காக வேண்டிய செக்ஸ்-ஜிஹாத் பத்வா சில மாதங்களுக்கு முன்னர் விடப்பட்டது.  சென்ற ஆகஸ்ட் மாதத்தில் பர்ஸ் நியூஸ் [Fars News]  என்ற நாளிதழ் ஜிஹாதிகள் குறிப்பிட்ட காலத்திற்கு, மணிகளுக்கு பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று அத்தகைய  பத்வா   (மதரீதியிலான ஆணை)  போடப்பட்டது என்று அறிவித்தது.  இதை ஏற்றுக்கொண்டு பெண்கள் சென்று வந்துள்ளார்கள் என்பதனால்,  இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று மற்ற அமைப்புகள் கூறுகின்றன.

 

unisian women protest against sex-jihad

unisian women protest against sex-jihad

செக்ஸ்ஜிஹாதிற்காக பத்வா போட்டது யார்?:  ஷேக் எம். ஏ என்பவர் அத்தகைய பத்வா ஆணையைப் பிறப்பித்தார் என்று டுனிசிய இணைதளங்கள் எடுத்துக் காட்டுகின்றன[11].  சலாபிஸம் என்ற இறையியல் சித்தாந்தமும் இதனை ஆதரிக்கிறது.  இது டுனிசிய எல்லைகளுக்கு வெளியேயிருந்து ஊக்குவிக்கிறது என்று தெரிகிறது.  மேலும்,  சில பெண்களின் இயக்கங்களே அத்தகைய செக்ஸ்-ஜிஹாதை ஊக்குவிக்கின்றன.  அதாவது,  இளம்பெண்களை அவ்வாறு மயக்கி, இழுக்க பெண்களே அவ்வாறு ஏஜென்டுகளாக செயல்படுகிறார்கள் என்றாகிறது.  உதாரணத்திற்கு,  ரஹ்மா என்ற பெண்ணின் விவகாரம் சொல்லப்படுகிறது.  ரஹ்மா என்ற  18க்கும் கீழான வயதுடைய பெண் திடீரென்று காணாமல் போய் விட்டாளாம். பிறகு திரும்பி வந்துள்ளாள். அவர்கள் பெற்றோர் கூறுவதாவது,  தங்கள் பெண் ஒன்றும் தீவிரவாத, மதவாத எண்ணங்களைக் கொண்டவள் அல்ல.  ஆனால்,  அவளது சகதோழிகள் அவளை மூளைசலவை செய்து அவ்வாறு முஜாஹித்தீன்களை ஆதரிக்கும்படி சொல்லியிருக்கலாம்.  அதனால்,  இவ்வாறு வழிமாறி சென்றிருக்கிறாள் என்கின்றனர்.  எந்த பேற்றோர்களுக்கும்,  திருமணம் ஆவதற்கு முன்னரே பல ஆண்களுடன் உடலுறவு கொண்டு , கர்ப்பத்துடன் வந்துள்ளாள் என்றால்,  அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.

 

heikh Fareed Elbaji says he knows families whose daughters were involved in sexual jihad

heikh Fareed Elbaji says he knows families whose daughters were involved in sexual jihad

செக்ஸ்ஜிஹாத் பெண்கள் உருவாகும் நிலை,  மனப்பாங்கு , இஸ்லாமிய இறையியல்:  இளம்பெண்கள் அவ்வாறு செக்ஸ் அளித்தால் ஜிஹாதிகள் நன்றாக,  உற்சாகமாக போராடுவார்கள் என்று பெண்களின் மனங்களில் அத்தகைய எண்ணங்களை ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்[12].  சரி,  பிறகு இளம்பெண்கள் எப்படி திடீரென்று போர் நடக்கும் இடங்களுக்குச் சென்று கூடாரங்களில் படுத்து செக்ஸ் கொடுக்க முடியும்?  அது என்ன அவ்வளவு சதாரணமான விசயமா?  இல்லை, இதற்கு பயிற்சி அளிக்கிறார்களா? உடல் ரீதியாக செக்ஸ் கொடுக்க வேண்டும் என்றால்,  மன ரீதியாக தயார் செய்யப் படவேண்டும். மதத்திற்காக செய்யும் காரியமாதலால், அது புண்ணியமாகும் என்றும்,  அல்லா ஆசிர்வதிப்பார் என்றும் மூளைசலவை செய்யப் பட்டுள்ளது[13].  அதனால்,  முதலில் அவர்கள் யாருடனோ செக்ஸ் அனுபவம் பெற்று தயாராகி இருக்கிறார்கள் என்றாகிறது. ஒரே பெண் இல்லையென்றால்,  அவ்வாறு ஒரே தினத்தில் பல புதிய ஆண்களுடன் படுக்க முடியாது,  ஈடு கொடுக்க முடியாது.  எனவே,  இதில் போதை மருந்து போன்றவை உபயோகிக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.  மனநிலை, உடல்நிலை முதலியவற்றை சரிபடுத்தி,  இறையியல் ரீதியில் அனுப்படுகிறார்கள் என்றாகிறது.

 

This family told Ahmed Maher (pictured) their daughter had been brainwashed

This family told Ahmed Maher (pictured) their daughter had been brainwashed

தற்காலிக ஒப்பந்தத்தில் கொடுக்கும் செக்ஸ்: முன்னர் ஒரு பதிவில்  “மூதா”  முறை நிக்காஹ் பற்றி விளக்கியிருந்தேன். அதன்படி, குறுகிய காலத்திற்கு, பத்து நிமிடம்,  அரைமணி,  ஒரு மணி என்ற ரீதியில் ஒரு பெண்ணை நிக்காஹ் செய்து கொண்டு, அனுபவித்து அனுப்பி விடலாம். அதுவும் இஸ்லாத்தில் செல்லுபடியாகிறது.  எனவே, இதுவும்,  அதே போல செயல்படுகிறது என்றாகிறது.  அதன்படி, தற்காலிக ஒப்பந்தத்தின்படி,  ஒரு பெண் பல ஆண்களுடன் ஒரே நாளில் செக்ஸ் / உடலுறவு வைத்துக் கொள்ளலாம்[14]. முஸ்தபா பின் ஒமர் [Mostafa Bin Omar]  என்கின்ற அரசு பாதுகாப்புத்துறை இயக்குனர்,  சென்ற ஆகஸ்ட் மாதத்தில்,  டுனிசியாவின் மேற்கு பகுதிகளில்,  அல்-குவைதா  அதிகமாகஇருக்கும் இடங்களில் இருந்த ஒருசெக்ஸ்-ஜிஹாத் கும்பலை உடைத்தார் என்று அறிவித்துள்ளார்.  அல்-அரேபியா செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கும் போது, அல்-குவைதாவின் அன்ஸார் ஷரீயா  [ Ansar Shariah]  என்ற குழு,  இளம்பெண்களின் முகங்களை மறைத்தபடி,  அவர்களை செக்ஸ்-ஜிஹாதிகளுக்கு அர்ப்பணித்தார்,  என்று அல்-அரேபியா செய்தி கூறுகிறது.

 

sex-jihad-virgin-girls-offered-to-jihadis-for-sex-Tunisia

sex-jihad-virgin-girls-offered-to-jihadis-for-sex-Tunisia

குரான் படி நடக்கிறோம் என்கின்ற அல்குவைதா பெண்களை இவ்வாறு நடத்துவதேன்?: ஜிஹாதிகள்,  அல்-குவைதா,  தலிபான் முதலியவை குரானின் படித்தான் நடக்கிறோம் என்கிறார்கள். அதே நேரத்தில்,  மற்ற முஸ்லிம்கள்,  முஸ்லிம் பெண்களுக்கு ஏகப்பட்ட  உரிமைகள் உள்ளன,  அவையல்லாம் உலகத்தில் வேறேந்த மதபெண்களுக்கும் கிடையாது என்று மார்தட்டிக் கொண்டு பேசுகின்றனர்.  ஆனால்,  இங்கு நடப்பதென்ன?  இளம் பெண்களை மூளைசலவை செய்து,  இவ்வாறு செக்ஸ் / உடலுறவு கொள்வதற்கு அனுப்பப் படுகிறார்கள்.  இதனை பெண்களின் பேற்றோர், முப்தி மற்றும் அரசே எதிர்க்கின்றனர், இருப்பினும், ஆதரிக்கும் மதக்குழுக்கள் இவற்றில் ஈடுபட்டுள்ளன.  பிறகு அவை எப்படி இளம்பெண்களை, குடும்பத்திலிருந்து பிரிக்கின்றனர், கற்பு பறிபோக மூளைசலவை செய்கின்றனர்,  ஒரே நாளில் ஒரே பெண் பலருடன் செக்ஸ்-ஜிஹாத் என்ற பெயரில் உடலுறவு கொள்ள செய்கின்றனர் என்பதெல்லாம் புதிர்களாக இருக்கின்றனவே.

 

Mutah prohibited in Islam - book

Mutah prohibited in Islam – book

சிரியாவில் நடக்கும் கிஹாதிகளின் போராட்டத்தின் பின்னணி: சிரியாவின் ஜனாதிபதியான பஷர் அல்-அஸாதி  [Bashar al-Assad]  என்பவரின் கீழ் நடக்கும் ஆட்சியை தூக்க,  துனிசியாவிலிருந்து நூற்றுக்கணக்கான துனிசிய நாட்டு ஜிஹாதிகள் சிரியாவிற்குச் சென்றுள்ளனர்.  இங்கும் உள்துறை அமைச்சர் லோட்பி பென் ஜெட்டௌ,  சிரியாவுக்குச் சென்ற ஜிஹாதிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் தான் மார்ச்சில் பதவி ஏற்றுக்கொண்ட போது சுமார்  6,000  இளைஞர்கள் அங்கு செல்வது தடுக்கப்பட்டது என்றார். ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான சிரிய ஜிஹாதி இளைஞர்கள் துருக்கி மற்றும் லிபியா வழியாக பிரயாணித்து,  ஆப்கானிஸ்தான், இராக், சிரியா முதலிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாக தெரிகிறது. அபு இயாத் என்ற அக்ஸார் அல்-ஷாரியா என்ற இயக்கத்தை நடத்துபவர்,  கடந்த ஆண்டில் டூனிஸில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினார் என்று சந்தேகிக்கப் படுகிறது.  ஒரு ஆப்கானிஸ்தானிய தலைவரைக் கொன்றதிலும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.  செப்டம்பர் 9, 2001  அன்று அஹ்மது ஷா மசூத்  [Ahmad Shah Massoud]  என்ற தலிபன் எதிப்புப் படை தலைவரை தற்கொலைப் படைமூலம் கொலை செய்ததற்கும் காரணமாகிறா ன்செப்டம்பர் 7, 2001  அன்று அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது[15].

 

© வேதபிரகாஷ்

24-04-2014

 

[1] http://www.huffingtonpost.com/2013/09/20/sexual-jihad-syria-tunisian-women_n_3961904.html

[2] http://www.bbc.com/news/world-africa-24448933

[3]The mother says that her daughter used to go to al-Tawba mosque where she was arrested. http://www.bbc.com/news/world-africa-24448933

[4] http://www.hurriyetdailynews.com/tunisian-women-waging-sex-jihad-in-syria-minister.aspx?pageID=238&nID=54822&NewsCatID=352

[5] http://www.businessinsider.in/Tunisian-Girls-Are-Coming-Home-Pregnant-After-Performing-Sexual-Jihad-In-Syria/articleshow/22875739.cms

[6] http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/10322578/Sex-Jihad-raging-in-Syria-claims-minister.html

[7] http://english.alarabiya.net/en/variety/2013/09/20/Tunisia-says-sexual-jihadist-girls-returned-home-from-Syria-pregnant.html

[8]Former Mufti of Tunisia Sheikh Othman Battikh in April said that 13 Tunisian girls “were fooled” into traveling to Syria to offer their sexual services to rebels fighters. The mufti, who was subsequently dismissed from his post, described the so-called “sexual Jihad” as a form of “prostitution.” “For jihad in Syria, they are now pushing girls to go there. Thirteen young girls have been sent for sexual jihad. What is this? This is called prostitution. It is moral educational corruption,” Al Arabiya cites the mufti as saying. http://rt.com/news/sexual-jihad-tunisia-syria-133/

[9]Another prominent Muslim scholar in Tunisia, Sheikh Fareed Elbaji, told the BBC he personally knew families who had discovered that their daughters had gone to Chaambi and Syria to offer sex in support of the militants, apparently in obedience to fatwas or religious edicts issued on the battlefields of Syria. http://www.bbc.com/news/world-africa-24448933

[10]Some Sunni Muslim Salafists, however, consider sexual jihad as a legitimate form of holy war. http://rt.com/news/sexual-jihad-tunisia-syria-133/

[11]News websites and social networks in Tunisia circulated a fatwa attributed to Sheikh M. A., in which he calls upon “Muslim women” to perform jihad through sex. However, sources close to the sheikh denied that he had issued the fatwa, stressing that anyone who circulates or believes it is insane.

http://www.al-monitor.com/pulse/culture/2013/03/tunisia-girls-syria-sexual-jihad.html#

[12] “Muslim women prostituting themselves in this case is being considered a legitimate jihad because such women are making sacrifices—their chastity, their dignity—in order to help apparently sexually-frustrated jihadis better focus on the war to empower Islam in Syria,” writes author and Islam expert Raymond Ibrahim for The Investigative Project On Terrorism, a nonprofit research organization that studies jihad.

[13] http://www.investigativeproject.org/4048/guest-column-the-sex-jihad

[14]The sexual Jihad Fatwa made its first appearance in Syria several months back. It allows for fighters to enter sexual relations with a woman after agreeing upon a temporary contract that loses effect after a few hours, Fars News reported in August.  The temporary nature of the contract allows the woman to have sex with multiple partners a day.

[15] Abu Iyadh, who leads the country’s main Salafist movement Ansar al-Sharia, is the suspected organiser of a deadly attack last year on the US embassy in Tunis and an Afghanistan veteran.He was joint leader of a group responsible for the September 9, 2001 assassination in Afghanistan of anti-Taliban Northern Alliance leader Ahmad Shah Massoud by suicide bombers. That attack came just two days before the deadly Al-Qaeda attacks on the World Trade Centre in New York and Pentagon in Washington.