Archive for the ‘கம்யூனிசம்’ category

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (1)

மே 8, 2017

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி .எஸ். தொடர்புகளும், ஒற்றர்களும்பணபரிமாற்றமும் (1)

Shabir sha meeting Abdul Basit - August .2014

அப்துல் பசித், பாகிஸ்தான் தூதர் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தாரா?: ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4].  “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5]. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது.

SYurriat meeting Abdul Basit - August .2014

1997ம் ஆண்டு முதல் நடந்த விவகாரங்களை 2017ல் கிளறுவது ஏன்?: 1997ல் அலி ஷா கிலானி சவுதி அரேபியாவிலிருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப் பட்டது, அதனால் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதில் உள்ள சட்டமீறல்கள் முதலிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 29, 2010 அன்றும் இவர்மீது, தேசத்துரோக வழக்குப் போடப்பட்டது[7]. 2001ல் நேரிடையாக பண விநியோகம் நடந்த 173 ஹவாலா பரிவர்த்தனைகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன[8]. இந்த விவரங்களை முதலமைச்சர் மெஹ்பூபா முப்டியே கொடுத்துள்ளார்[9].  பாகிஸ்தான் மட்டுமல்லாது, சவுதி அரேபியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும் பணம் வந்துள்ளது. சவுதியிலிருந்து தான் அதிகமாக பணம் வந்துள்ளது. அதாவது, ஹக்கானி ஆவணங்கள் முதலியன சவுதி அரேபியா உலகம் முழுவதும், வஹாபி அடிப்படைவாதத்தை பரப்பும் மூலமாக, தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று எடுத்துக் காட்டியுள்ளதால், அதில் எந்தவித ரகசியமும் இல்லை எனலாம்.

How hawala money is routed from Rawalpindi to Srinagar-three arrested

ஹவாலா பணம் ஹீவிரவாதிகளுக்கு செல்வது: 2011ல் அமுலாக்கப்பிரிவினர் கட்டுப்பாட்டு 1997ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றபோதே, அதிலிருந்தே விவரங்களைத் தெரிந்து கொள்லலாமே. எப்படி இருப்பினும், “டைம்ஸ்-நௌ” வெளியிட்ட விவரங்களை மற்ற ஊடகங்களையும், தங்களது சரக்கைச் சேர்ந்து, செய்திகளை வெளியிட்டுள்ளன என்று தெரிகிறது. 20 வருடங்களாக “புலனாய்வு ஜார்னலிஸம்” என்று தம்பட்டம் அதித்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. எல்லையில் நான்கு வியாபாரிகளை பிடித்தபோது, லஸ்கர்-இ-தொய்பா மூலம் அனுப்பப்படும் பணத்தை தீவிரவாதிகளுக்குக் கொடுக்க ஹவாலா மூலம் செயல்பட்டது தெரிய வந்தது. வங்கி மூலம் பணமாற்றத்தை செய்வதை விட, இம்மாதிரி ஹவாலா மூலம் பணபரிமாற்றம் செய்வது, அவர்களுக்கு நல்லது மற்றும் கொடுத்தவர்-வாங்கியவர்கள் விவரங்கள் தெரியாது, கண்டுபிடிக்க முடியாது என்ற கோணத்தில் தீவிரவாதிகள் கையாண்டு வருகிறார்கள். இதனால், அந்த ஹவாலாகாரர்களும் கணிசமான தொகை கமிஷனாகக் கிடைக்கிறது.

How hawala money is routed from Rawalpindi to Srinagar

நிலைமை தொடர்கிறது: 2014ம் ஆண்டில், 48 ஏஜென்டுகள், பொருள் பரிமாற்றம் மூலம் பணத்தை தீவிரவாதிகளுக்கு அனுப்பியுள்ளனர். என்.ஐ.ஏ மற்றும் அமுலாக்கத்துறை, 20 வழக்குகளில் ரூ. 75,00,000/- பரிமாற்றம் செய்ததை கண்டுபிடித்துள்ளனர். 2009 மற்றும் 2011 கள்ளப்பணம் மூலம் ரூ.1,20,00,000/- பரிவர்த்தனை நடந்துள்ளது. 2011ல் 74,000 சவுதி ரியால் பணம் வந்துள்ளது. அதாவது, இம்முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது என்று தெரிகிறது. இவற்றில் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டுள்ள போது, அவர்கள் ஆட்டிக் கொடுக்காமல், இருந்து வருகின்றனர். ஹுரியத் கான்பரென்ஸ், ஜம்மு-காஷ்மீர் லிபரேஷன் பிரென்ட், இஸ்லாமிய மாணவர்கள் முன்னணி, ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஜைஸ்—இ-மொஹம்மது, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு அப்பணம் சென்றுள்ளது[10]. 1997ல் சவுதி முதலிய அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெற்றதற்கு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே போல, ஷாஜியா என்ற பெண் மூலம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பெற்றதும் தெரிய வந்தது[11]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இந்திய ஊடகங்கள் சில இவையெல்லாம் ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றன என்று தெரிவிக்கின்றன[12].

© வேதபிரகாஷ்

08-05-2017

Two ISI agents arrested in April 2017- Abdul Basit nexus

[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms

[3] Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36

[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html

[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.

[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.

http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563

[7] On November 29, 2010 Geelani, along with writer  Arundhati Roy, Maoist Varavara Rao and three others, was charged under “sections 124A (sedition), 153A (promoting enmity between classes), 153B (imputations, assertions prejudicial to national integration), 504 (insult intended to provoke breach of peace) and 505 (false statement, rumour circulated with intent to cause mutiny or offence against public peace… to be read with Section 13 of the Unlawful Activities Prevention Act of 1967″. The charges, which carried a maximum sentence of life imprisonment, were the result of a self-titled seminar they gave in New Delhi, Azadi-the Only Way” on October 21, at which Geelani was heckled

[8] One.India, How Pakistan funded the Kashmir unrest 173 times, Written by: Vicky Nanjappa, Updated: Sunday, May 7, 2017, 8:14 [IST]

[9] http://www.oneindia.com/india/how-pakistan-funded-the-kashmir-unrest-173-times-2428208.html

[10] Investigations reveal that between the years 2009 and 2011 an amount of Rs 12 million had been recovered. Fake and foreign currency was recovered from agents who were funding terrorists. In 2011, some agents had also brought in 74,000 Saudi Arabian Riyals into the valley. NIA sources say that the funding has gone both to terrorist groups and separatists. Money has been pumped into the Hurriyat Conference, Jammu-Kashmir Liberation Front, Islamic Students Front, Hizbul Mujahideen, Jaish-e-Mohammad and Jamiat ul-Mujahideen.

[11] An 1997 FIR against separatist Syed Ali Shah Geelani an FIR alleges that he had got funding to the tune of Rs 190 million from Saudi Arabia and also another donation of Rs 100 million from the Kashmir American Council. Investigations had revealed that all these funds were routed through a Delhi-based Hawala operative. It was also found that Yasin Malik, another separatist, had received funding of USD 1 lakh and the money was being carried by a woman called Shazia. We are looking at each case since 1995, and this will help us get a better picture of the entire racket,” an NIA officer adds. Intelligence Bureau officials tell OneIndia that the money is being used for various purposes.

[12] Outlook, Secret Intel Docs Show Pakistan’s ISI Funds Hurriyat To Create Trouble In Kashmir, Says Channel Report, May 7, 2017. 6.48 pm

http://www.outlookindia.com/website/story/secret-intel-docs-show-pakistans-isi-funds-hurriyat-to-create-trouble-in-kashmir/298784

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக-பகுத்தறிவு-கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (3)!

மார்ச் 19, 2017

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திகபகுத்தறிவுகம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாதுஇருந்து விமர்சித்தால் கொலை தான் (3)!

Farooq murder - malaimalar - Vellore connection-1

பகுத்தறிவுமுஸ்லிம்கள், பெரியார் நாத்திகம்இஸ்லாம் போன்ற கூட்டுகள் போலித்தனமானது: பெரியாரை அவரது வாழ்நாள் காலத்திலேயே அடக்கி வைத்து, பிறகு அடிமை போல ஆக்கிக் கொண்டனர் முஸ்லிம்கள். பெரியார் முஸ்லிம்கள் பின்னால் அலைந்து-அலைந்து திரிந்தாரே தவிர, எந்த முஸ்லிமும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. ஜின்னா கழட்டி விட்டது பற்றி மேலே குறிப்பிடப் பட்டது. அண்ணா-கருணாநிதிகளும் அதே மாதிரி அடிவருடிகளாக முஸ்லிம்களை பாராட்டி பேசி தான் ஆதரவு பெற்றார்கள், பதிலுக்கு எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளை அள்ளிக் கொடுத்தார்கள். சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸரீன் முதலியோர்களின் நிலையை கவனித்துப் பார்க்கலாம். மதுரை ஆதீனம் முன்னர் கருத்து சொன்னதற்கு முஸ்லிம்கள் அவரை மிரட்டி பின் வாங்க வைத்தனர். இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், மோமினாக இருப்பவன், காபிருடன் எந்த பேச்சையும், சம்பந்தத்தையும், உறவையும், வைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அது குரானுக்கு எதிரானது. மொஹம்மது நபி “அல்-காபிரும்” என்ற அயத்தில் சொன்னதிற்கும் விரோதமானது. ஆகவே, இக்கூட்டு “ஷிர்க்” தான். தாங்கள் ஆண்டால், காபிர்களை, “திம்மிகளாக” அடிமைகளாக, ஜெஸியா வரி கட்ட வைத்து ஆளாலாமே தவிர, காபிர்கள் கூட சேர்ந்து ஆளமுடியாது, சல்லாபிக்க முடியாது. அதெல்லாமே, இஸ்லாத்திற்கு எதிரானது தான்.

Farooq murder vellore connection - Malaimalar-32316400_2

பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர்சமூகவளைதளங்களில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் கண்டபடி விமர்சிப்பது: சமூகவளைத்தளங்களில் முஸ்லிம், கிருத்துவர்கள் தங்களது உண்மை பெயர், புனைப்பெயர் ஏன் இந்து பெயர்களை வைத்துக் கொண்டு, கேவலமாக, மோசமாக, ஆபாசமாக, அருவருப்பாக, கொச்சையாக…..பலவிதங்களில் இந்துமதம், கடவுள், சித்தாந்தம் முதலியவற்றை தாக்கி வருகின்றனர். பகுத்தறிவு, நுண்ணறிவு, நாத்திகம், செக்யூலரிஸம், கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்ற பலபோர்வைகளில் அத்தகைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அவற்றைத் தட்டிக் கேட்பது ஒரு சிலரே. மேலும், அந்த ஒருசிலருக்கும், மற்ற இந்துக்கள் உதவுவது இல்லை. அதாவது, முட்டாள் இந்துக்களுக்கு ஒற்றுமை இல்லை. இதைத்தான், இவர்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். “இந்துத்துவம்” என்று ஆர்பாட்டம் செய்து கொண்டு, குறுகிய வட்டத்திற்குள் கிடக்கின்றனர். இந்துமதத்திற்கு எதிராக, எத்தனை ஆட்கள், கூட்டங்கள், இயக்கங்கள் எப்படி வேலை செய்து வருகின்றன என்பது கூட அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள். தங்களுக்குள் பாராட்டிக் கொண்டு காலம் கழிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பரந்த அளவில் சிந்திப்பது, சமூக விளைவுகளைக் கவனிப்பது, செயல்பாடுகளின் நோக்கத்தை கண்டறிவது, அந்நோக்கம் ஆபத்தாக இருந்தால் தடுப்பது-குறைப்பது-ஒழிப்பது போன்ற முறைகளைப் பற்றியும் சிந்திப்பதில்லை.

Fake SIM obtained for Farooq murder -

சட்டமீறல்களுடன் குறங்களை செய்து, சட்டரீதியில் குழப்பங்களை உண்டாக்குவது: இதற்குள் அன்சர்ந்த் பயத்தினால் சரண் அடைந்துள்ளார் என்றும், இக்கொலைக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் அறிவிப்பது நோக்கத் தக்கது. யாரோ, அவரது சிம்மை உபயோகித்து, பேசியதால் தான், அவர் மீது சந்தேகம் கொண்டது போலீஸ், அதனால் தேடி வந்தது அறிந்து தான் சரணடைந்தார் என்கிறார் அவர். அப்படியென்றால், அவர் தன்னுடைய சிம்மை அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக வைத்திருக்கிறார் என்று தெரிகிறது[1]. போலீஸார் விசாரிக்கும் போது உண்மை தெரிய வரும். தேசிய முஸ்லிம் லீக் சார்பில்[2], “இதை மதரீதியில் சமூக வளைதளங்களில் விமர்சிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். வியாபாரரீதியில் கூட விரோதம் இருந்திருக்கலாம்”, என்று வெளியிட்டுள்ளதும் கவனிக்கத் தக்கது. விசயத்தை திசைத் திருப்ப அல்லது விளம்பரம் அடையாமல் இவ்வாறு செய்கிறார்கள் போன்றுள்ளது.

muslim rationalist killed in Kovai - 17-03-2017 DC

ஆங்கில ஊடகங்கள் நிலைமையை ஓரளவிற்கு எடுத்துக் காட்டியுள்ளது: “இந்தியா டுடே” இதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டியுள்ளது வியப்பாகவே உள்ளது[3]. “நாத்திகன் கொலை செய்யப்பட்டான்” என்று தலைப்பிட்டு, என்ன நடந்தது என்று வரிசையாக தெரிவித்துள்ளது[4].

HERE’S WHAT YOU NEED TO KNOW

  1. Farooq was murdered after he had left his Bilal Estate house in South Ukkadam at around 11 pm after receiving a phone call.
  2. He was on his scooter and was nearing Ukkadam Bypass Road when four people on motorcycles intercepted him. He tried to flee but couldn’t escape.
  3. Hearing the commotion, residents of the area rushed out of their homes after which the assailants fled.
  4. Locals found Farooq’s body lying on the road. His body bore multiple stabs and cuts inflicted by the assailants.
  5. Coimbatore Deputy Commissioner of Police S Sravanan reached the spot with police and began investigations.
  6. According to DCP Saravanan, Farooq was the admin of a WhatsApp group of people with rationalistic views who regularly debunk religion and religious claims.
  7. That vocal opposition to religion might be a possible motive for murder, DCP was quoted as saying.
  8. Atheist Farooq had posted rationalistic messages on his Facebook page which attracted criticism by members of the Muslim community, who called him an apostate.
  9. Police collected grabs from CCTV cameras installed at various commercial outlets on the stretch to identify Farooq’s killers.
  10. The last call on his mobile was traced to a SIM that was obtained on fake Vellore address.
  11. A large number of DVK cadre gathered at the hospital and demanded a high-level inquiry.
  12. Ansath’s surrender has been linked to the pressure put on the police by DVK.
  13. A police official told a newspaper that the religious offence could be just one motive. “We are looking into multiple angles and it is yet to be known if he was executed by communal groups, business rivalry or for personal reasons. One of his controversial religious posts shared in FB attracted criticisms.”

இதைவிட, சுருக்கமாக ஆனால் அதே நேர்த்தில் முழுமையாக மற்றவர்கள் வெளியிடவில்லை என்றே தெரிகிறது.

Farooq released from jail and received by Kolattur Mani.

கோவையில் தி.வி. பிரமுகர் படுகொலை: சிபிஎம் கண்டனம் (19-03-2017)[5]: கோயம்புத்தூர், மார்ச் 18, 2017- திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட நிர்வாகியான பாரூக், மத அடிப்படைவாதிகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “கோவை உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியைச்  சேர்ந்தவர் பாரூக். திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பில் செயல்பட்டு வந்த பாரூக், பகுத்தறிவு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதன் காரணமாக மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பது சிறுபான்மை மதவெறியின் கோரமுகத்தை காட்டுகிறது. சமீபகாலமாக பகுத்தறிவுக் கருத்துகளை முழங்கிய நரேந்திர தபோல்கர், கல்புர்க்கி, கோவிந்த பன்சாரே போன்றோரை படுகொலை செய்த பெரும்பான்மை மதவெறிசக்திகளின் செயலையும், கோவை பாரூக் படுகொலையில் ஈடுபட்டுள்ள சிறுபான்மை மதவெறி சக்திகளின் செயலையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது, இது, கருத்தை கருத்தால் விவாதிக்க முடியதாவர்களின்ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின்மதவெறியர்களின் கோழைத்தனமான செயலாகும்.இந்திய நாட்டில் தன் கருத்துக்களை பேசுவதற்கும், எழுதுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான தாக்குதலாக இச்சம்பவத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.  பாரூக் படு கொலையை அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும், மதநல்லிணக்கத்தை விரும்பு கிறவர்களும், சமூக நல்லிணக்கத்தில் அக்கறை உள்ளவர்களும் கண்டிக்க முன்வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் கோவை மாநகர காவல்துறை மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட்டுஇந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்கவும், இச்சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள சக்திகளை கண்ட றிந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

19-03-2017

Farooq released and received by Kolattur Mani

[1] செல்போன், உதிரிகள் முதலிய வியாபாரங்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டிருப்பதால், இவற்றை மாற்ற, குளறுபடி செய்ய அவர்களால் முடியும் என்று தெரிகிறது.

[2] https://www.youtube.com/watch?v=9wUyZ35k2X4

[3] IndiaToday.in , Coimbatore: Vocal atheist hacked to death, realtor surrenders, Posted by Sonalee Borgohain; New Delhi, March 18, 2017 | UPDATED 12:17 IST

[4] http://indiatoday.intoday.in/story/coimbatore-vocal-atheist-hacked-to-death-realtor-surrenders/1/906973.html

[5] தீக்கதிர், கோவை பதிப்பு, பக்கம். 6, 19-03-2017; http://epaper.theekkathir.org/

கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!

ஜூலை 16, 2016

கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!

Kerala Isis nexus- confirmed

முதலமைச்சர் ஒப்புக் கொண்டார்: சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்[1], “காசர்கோடில் இருந்து 17 பேரும், பாலக்காட்டில் இருந்து 4 பேரும் மாயமாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமானவர்களில் காசர்கோட்டில் இருந்து 4 பெண்கள், 3 குழந்தைகளும், பாலக்காட்டில் இருந்து 2 பெண்களும் அடங்குவர். பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்தார். ஊடகங்களில் வெளியான தகவலின்படி இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த காசர்கோடு பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவர் அண்மையில் கைதாகியுள்ளார். 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[2].

Kerala Isis nexus- confirmed- youth after conversionஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது: கேரள இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பான விவகாரத்தை அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது[3]. மத்திய அரசின் ஆதரவுடன் இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு தீவிரவாத நடவடிக்கையையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தை பெரிது படுத்தவும் அனுமதிக்க மாட்டோம். இப்பிரச்சினையால் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். கேரளாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எந்தவொரு தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்க மாட்டார்கள். வெறும் அரசால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றாக கைகோர்த்தால் மட்டுமே தீய சக்திகளை தனிமைப்படுத்தி களையெடுக்க முடியும்”, என்று சட்டசபையில் பேசியுள்ளார்[4]. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரையில், இது அவர்களே வளர்த்து விட்ட விவகாரம் ஆகும். அரசியல் மற்றும் இதர சம்பந்தங்களை தாராளமாக வைத்துக் கொண்டு அனுபவித்து வருகின்றனர்.

Kerala jouranalist joins ISISஜிஹாதிகள் பெற்றோர்களையும், ஏன் குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க முயற்சிப்பது: கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்களில் 4 பெண்களும் 2 குழந்தைகளும் உண்டு. இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இதன்பிறகு கடந்த ஒரு மாதமாகியும் இவர்களை பற்றிய எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் காணாமல் போன ஹபீசுதீன் என்பவரின் மனைவி செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அந்த செய்தியில், “நாங்கள் சொர்க்க ராஜ்ஜியத்திற்கு வந்து விட்டோம். இனி எங்களை தேட வேண்டாம். நாங்கள் இஸ்லாமிய நாட்டிற்கு வந்து விட்டோம். இங்கு நிரபராதிகளை அமெரிக்கா கொன்று குவிக்கிறது. எனவே அவர்களை பழிவாங்குவதற்காக ஐஎஸ் அமைப்புக்காக நாங்கள் எங்களை அர்ப்பணித்து விட்டோம். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி புரிய வைக்க வேண்டும். அவர்களையும் ஐஎஸ் அமைப்பிற்கு அழைத்து கொண்டு வரவேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டிருந்தது[5].  அதாவது, குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க திட்டம் இருப்பது வெளிப்படுகிறது. மேலும், இது கேரளாவிலிருந்து தீவிரவாதிகளாக்க ஏற்றுமதி நடக்கிறது எனலாம். முன்பு கன்னியாஸ்த்ரிக்கள், நர்ஸுகள் மாதிரி, இப்பொழுது இவர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்.

Kerala Isis nexusதீவிரவாதியின் தகவல் படித்து திகைத்துப் போன மனைவி: இதை பார்த்து ஹபீசுதீனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காசர்கோடு எம்பி கருணாகரன், எம்எல்ஏ ராஜகோபாலன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக விசாரணை நடத்த கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூரை சேர்ந்த டாக்டர் இஜாஸ் என்பவர் தலைமையில் 16 பேரும் சிரியாவுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது[6]. காசர்கோடில் உள்ள அப்துல் ரஸீத் (29) அப்துல்லா [Abdul Rasheed]  என்பவன் அப்துல்லாவின் மகன் [Abdulla] இவர்களை இவ்வழிக்கு இழுத்துள்ளான் என்று தெரிகிறது[7]. இவன் பெங்களுரில் இஞ்சினியரிங் படித்து மும்பைக்கு வியாபாரம் நிமித்தம் சென்று வருகிறான்[8]. ஈஸா மற்றும் யாஹியாவின் தந்தை வின்சென்ட், தன்னுடைய மகள்கள் ஜாகிர் நாயக்கின் பிரச்சாரத்தால் கவரப்பட்டார்கள் என்கிறார்[9].

Kerala, Kashmir becoming hub of ISISதமிழகத்தின் மீதான தாக்கம்: கேரளாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள், தமிழக எல்லையில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தமிழகத்தில் இருந்து யாரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படுபவர்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியைச் சேர்ந்த பிடிஎஸ் மாணவி நிமிஷா என்ற பாத்திமாவும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. இவரது தாய் பிந்து. தனது மகளும் ஐஎஸ்சில் சேர்ந்ததாக நேற்று பத்திரிகைகளில் தகவல் வந்த பிறகுதான் அவருக்கு இது தெரியவந்துள்ளது. இதுபோல் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணும் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமாணவிகளை குறிவைத்து காதலித்து திருமணம் செய்வதோடு அவர்களை ஐ.எஸ் அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.

Missing Keralites links with ISIS confirmed - Kaumudi onlineமத்திய அரசின் விசாரணை: இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறையான ரா அதிகாரிகள் கேரளா வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர்கள் காசர்கோட்டிலும் மங்களூரிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினரால் “ஐஎஸ்சில் சேர்ந்தவர்கள்”, அவர்களது உறவினர்கள் முதலியோரது தொலைபேசி-அலைபேசி விவரங்கள் ஆராயப்படுகின்றன[10]. இதன் மூலம், இறுதியாக அவர்கள் எங்கிருந்து யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்று தெரிய வரும்[11].

© வேதபிரகாஷ்

16-07-2016

[1] http://tamil.oneindia.com/news/india/21-missing-from-kerala-may-be-is-camps-cm-257874.html

[2] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.

[3] தி.இந்து, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த விவகாரம்: கேரள மாநிலத்தில் இருந்து 6 பெண்கள் உட்பட 21 பேர் மாயம் – சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தகவல், Published: July 12, 2016 09:49 ISTUpdated: July 12, 2016 10:02 IST.

[4] http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%86

[5] தினகரன், ஐஎஸ் தீவிரவாதிகளான கேரள வாலிபர்கள்: தமிழகத்தில் உளவுத்துறை உஷார், Date: 2016-07-10@ 00:16:56

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=230018

[7] Reports said that a person called Abdul Rasheed Abdulla is suspected to have led the youths on to the terror path.

http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/kerala-jihadi-threat-missing-youths-story-in-points.html

[8] http://www.kaumudi.com/innerpage1.php?newsid=80207

[9] Father of Eesa and Yahiya, Vincent, alleged that his sons were influenced by Islamic preacher Zakir Naik

http://english.manoramaonline.com/news/just-in/people-missing-kasaragod-kerala-police-isis-islamic-state.html

[10] english.manoramaonline, ISIS links: Kerala police analyzing phone records, Thursday 14 July 2016 10:58 AM IST, byOur Correspondent

[11] http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/isis-links-kerala-missing-youth-police-tracking-phone-records.html

கேரள ஐஎஸ் தொடர்புகள், 1970ல் மேற்கொண்ட கம்யூனிஸ்டுகளின் மலபுரம் பரிசோதனை 2016ல் இவ்வாறான நிலையில் உள்ளது!

ஜூலை 16, 2016

கேரள ஐஎஸ் தொடர்புகள், 1970ல் மேற்கொண்ட கம்யூனிஸ்டுகளின் மலபுரம் பரிசோதனை 2016ல் இவ்வாறான நிலையில் உள்ளது!

Sanheetha Nataka Academy kerala oppose hanging of afsal guru

ஜிஹாதி இஸ்லாத்தை நோக்கி, கேரள முஸ்லிம்கள் செல்வது: மலையாள முஸ்லிம்கள் இந்தியாவுக்கு எதிராக போராடுவது ஒன்றும் புதியதல்ல. 2008ல், காஷ்மீரில் ராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டையில் இறந்தவர்களைப் பற்றி ஆராய்ந்ததில், அவர்கள் கேரளாவிலிருந்து வந்தது தெரிய வந்தது.  9/11 மற்றும் 26/11 ஜிஹாதி-தீவிரவாதி டேவிட் கோல்மென் ஹெட்மேன் மூணாறில் உள்ள டாடாவின் விருந்தினர் மாளிகையில் வந்து தங்கியிருந்து, நோட்டம் விட்டிருக்கிறான். 1990களிலிருந்தே கேரளாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதத்துடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்து விட்டது[1]. அதாவது, உள்ளூர் முஸ்லிம்கள் ஆதரவு இல்லாமல், இக்காரியங்கள் எல்லாம் நடக்காது என்பதனை இவ்விவகாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஷரீயத் சட்டம் அமூல் படுத்தப் படவேண்டும், இஸ்லாமிய அரசு ஏற்படுத்தப் படவேண்டும் என்பதெல்லாம் அதன் திட்டமாகும்[2]. அப்பொழுது தான் தூய்மையான, உண்மையான இஸ்லாத்தை அடைய முடியும், அதற்கு முகமது நபி இருந்து, வழிநடத்திய பூமிக்குச் சென்றால் தான் தமக்கு அவரது அருள் கிடைக்கும், தானும் சிறந்த ஜிஹாதியாக மாற முடியும், பொராட முடியும் என்றேல்லாம் இளைஞர்கள் மூளை சலவை செய்யப்படுகிறார்கள். இதனால், அவர்கள், எளிதில் நம்பி அங்கு செல்ல தயாராகி விடுகிறார்கள்.  இஸ்லாமிய வங்கிகளும் திறந்து வைக்கப் பட்டுள்ளன.

Communist IUML nexus Keralaகம்யூனிஸத்தில் இஸ்லாம் பரிசோதனை, அவர்களையே தாக்குகிறது!: கம்யூனிஸ்டின் “மலப்புரம்” பரிசோதனை 1970ல் ஆரம்பித்தது, 2016ல், மறுபடியும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இப்பிரச்சினை, அனைத்துலக விசயமாகி விட்டது. சென்ற வருடம் 2015 – மலபுரத்தில், ஐஎஸ் தொடர்பு கொண்ட 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்[3]. துபாயில் இன்டெர்போல் மூலம் கண்காணிக்கப்பட்ட அவன் 29-08-2015 அன்று கைதானான்[4]. அரபு நாடுகளிலிருந்து வரும் பணத்திலிருந்து மதரஸாக்களை அமைத்து, அவற்றின் மூலம், சலாபி / வஹாபி போன்ற தீவிர இஸ்லாமிஸம் போதிக்கப்படுவதால், அவர்கள் எளிதில் ஜிஹாதிகளாக மாற துணிந்து விடுகிறார்கள். திருமணம் என்பதை மதமாற்றத்திற்கு பயன்படுத்தப் படுகிறது என்பதை கேரள அரசு மறுத்து-மறைத்து வருகிறது. இப்பொழுது அதில் கிருத்துவர்களும் சிக்கியுள்ளார்கள் என்பது தெரிந்த நிலையில், விசயத்தை அமுக்கி வாசிக்கப் பார்க்கிறது[5]. “மெரின்”லிருந்து “மரியம்” என்று மலையாள மனோரமா விவரங்களை வெளியிட்டது[6]. ஏற்கெனவே லவ்-ஜிஹாத் என்று குற்றஞ்சாட்டப்படுவதால், அதனை பூசிமெழுகப்பார்க்கிறது. ஆனால், சமீபத்தைய, ஐஎஸ் ஆள்-சேர்ப்பு நடவடிக்கைகள் அவற்றை வெளிப்படுத்தி விட்டன. 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[7].

ISIS recruit on Facebookதிடீரென்று பெற்றோர்கள் கவலைப்படுவது: தமிழகத்தில் திருப்பூர் நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 15 இளைஞர்கள் மாயமாகி உள்ளனர். இவர்கள் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இது தொடர்பாக இளைஞர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்க கூடும் என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது[8]. இதனால் மாயமான இளைஞர்கள் குறித்து உடனடியாக விசாரிக்க போலீசாருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்[9]. அம்மாநிலத்தில் இருந்து இதுவரை 21 பேர் மாநிலத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் அறிவித்துள்ளார். அவர்களில் 6 பேர் பெண்கள் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சியாகும்.

iuml - back with Islamic flagதிருப்பூரில் பிடிபட்ட இரு முஸ்லிம் இளைஞர்கள் (14-07-2016): மாயமான அனைவரும் கேரளாவின் தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன முஹமது (மலபுழம்) மற்றும் ஷப்பீர் (பாலக்காடு) திருப்பூரில், ஒரு பின்னாலடை தொழிற்சாலையில் வேலைசெய்வது தெரிய வந்துள்ளது[10]. முன்பு மேற்கு வங்காளத்திலிருந்து வந்த ஐஎஸ் தீவிரவாதி திருப்பூரில் தங்கியிருந்தபோது தான் கைது செய்யப்பட்டான். 14-07-2016 அன்று அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கேரளாவுக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர்[11]. ஆனால், கோயம்புத்தூர் வழியாக கேரள முஸ்லிம்கள் இப்படி தாராளமாக வந்து செல்வதும், அவர்கள் குற்றங்கள் மற்றும் தீவிரவாத தொடர்புகள் உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது திருப்பூரில் அவர்களுக்கு ஆதரவாக ஒரு குழுவுள்ளது தெரிய வருகிறது.

PFI army to fight against India11-07-2016 அன்று கேரள சட்டசபை விவாதத்தில் ஐஎஸ் விவகாரம் வெளிவந்தது: கேரளாவில் 11-07-2016 அன்று சட்டசபை கூடியதும் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பினார். ‘‘கேரள இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் பெரும் பீதியை ஏற்படுத்துகின்றன. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான பதிலோ, விளக்கமோ அளிக்கப்படவில்லை. நிலைமையை சமாளிக்க பொது மக்களின் உதவியை முதல்வர் நாட வேண்டும். கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்[12]. பாஜக எம்எல்ஏ ஒ.ராஜகோபால், முதல்வரின் சொந்த தொகுதியில் வசித்து வந்த பல் மருத்துவ படிப்பு மாணவியும் மாயமாகியுள்ளார். அவர் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு பாலக்காட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், அம்மாவட்டத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்களில் அவரும் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

© வேதபிரகாஷ்

16-07-2016

[1] In 2008, five Malayali Muslim youth went all the way to Kashmir to fight alongside the separatists and four of them were shot dead by Indian forces. If it’s Kashmir in 2008, it’s only natural that it’s IS in 2016 because Islamism has been growing in the state since the 1990s. The common ideal is international Islam, as against the state’s age-old local Islam, and the allegiance is to what’s purported to be the purest form and practice — something that the Islamists believe belong to the Prophet’s land and the Prophetic era. It’s part of their blind trust in global kinship, an exclusive transnational state of radical Islam and the rein of Sharia law.

http://www.firstpost.com/india/kerala-should-be-worried-about-its-missing-youths-and-possible-islamic-state-links-2884596.html

[2] The First Post, Kerala should be worried about its missing youths and possible Islamic State links, G Pramod Kumar,  July 10, 2016 14:49 IST

[3] http://www.marunadanmalayali.com/news/exclusive/isis-recruitment-from-malappuram-21553

[4] MALAPPURAM:  Intelligence sleuths have taken into custody a 23 –year-old youth hailing from Pattarnakkavu, over his alleged ISIS links. The person was arrested jointly by IB and Karipur Emigration department as soon as he deplaned at Karipur airport. He, who was living in Dubai, had been under the observation of Abu Dhabi Interpol. And, his arrest was carried out as he arrived at the airport on August 29, 2015. The person had gone abroad five years ago and did his studies there, according to sources. He is also known to have travelled to several foreign countries.

http://kaumudiglobal.com/innerpage1.php?newsid=68525

[5] http://www.firstpost.com/india/kerala-should-be-worried-about-its-missing-youths-and-possible-islamic-state-links-2884596.html

[6] FROM MERIN TO MARIAM, FROM COCHIN TO SYRIA-Merin, who hails from a Christian family in Cochin, went to Mumbai after finishing her studies in Cochin. Her mother Mini told Manorama that she was influenced by her long-time classmate Yahiya, his brother Eeza and his wife Fathima, and converted to Islam. Merin who christened herself Mariam, later married Yahiya. Mini also said that the couple informed her about travelling to Sri Lanka for some prayers and that she had tried to stop her daughter.

India Today, ISIS recruits from Kerala: 11 out of 22 missing Keralites suspected to be in Syria, Posted by Vivek Surendran, New Delhi, July 11, 2016 | UPDATED 18:02 IST.

[7] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.

http://indiatoday.intoday.in/story/isis-kerala-recruitment-syria-kasargod-pinarayi-vijayan/1/712168.html

[8] தினமலர், ஐஎஸ்.,ல் சேர்ந்தார்களா கேரள இளைஞர்கள்?, பதிவு செய்த நாள். ஜூலை9, 2016: 11.59.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1560666

[10] Onmanorama Staff, 2 missing Kerala youths traced in Tamil Nadu. No, they didn’t leave to join ISIS, Friday 15 July 2016 02:17 AM IST.

[11] http://english.manoramaonline.com/news/just-in/kerala-palakkad-youths-isis-suspect-traced-tamil-nadu.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, கேரளாவில் இருந்து 21 பேர் மாயம்உறுதிப்படுத்தினார் பினராயி.. ஐஎஸ்ஸில் சேர்ந்திருக்கலாம் என சந்தேகம், By: Mayura Akilan, Published: Tuesday, July 12, 2016, 11:23 [IST]