Archive for the ‘கத்தி’ category

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (5)

நவம்பர் 12, 2015
The Sword of tipu sultan - praises Allah for killing kafirs

The Sword of tipu sultan – praises Allah for killing kafirs

மைசூர் மஹாராஜாவும், திப்பு சுல்தானும்: திப்பு சுல்தான் உடையாரிடமிருந்து அரசை அபகரித்துக் கொண்டான். தானாக எந்த அரசையும் உருவாக்கிவிடவில்லை. அப்பொழுது, கர்நாடகம் “மைசூர்” கலாச்சாரத்தை மையமாகக் கொண்டிருந்தது. “மைசூர் மஹாராஜா” என்று ஒரு மதிப்பு இருந்தது. “நீ என்ன பெரிய மைசூர் மஹாராஜாவா?” என்று சாதாரண மக்கள் கேட்கும் அளவுக்கு அவர் இருந்தார். கலை, விஞ்ஞானம், இசை போன்றவை ஆதரிக்கப்பட்டன. இதனால், “மைசூர்” என்ற அடைமொழியுடன் பல வார்த்தைகள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இசை, கலை என்று பல உருவாகின. சமையலைப் பொறுத்த வரையில் மைசூர் பாகு, மைசூர் ரசம், மைசூர் போண்டா, மைசூர் பகோடா, என்று அன்றும், மைசூர் சந்தன சோப், மைசூர்பா என்று இன்றும் பல தோன்றின. கர்நாடக சங்கீதம், இசை என்ற வழக்கும் உருவாகின. கலைஞர்கள், வித்வான்கள், பண்டிதர்கள், என்று பலரும் மைசூர் அரசால் ஆதரிக்கப்பட்டனர். ஆனால், திப்புவின் ஆட்சியில் பாரசீகத் திணிப்பு இவற்றை தடுத்தது. ஜிஹாதி மதவெறியில் அனைத்தும் பாதிக்கப்பட்டன. ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பது மட்டில், அவன் இந்திய தேசியவாதியாகி விட முடியாது. தன்னுடைய வாழ்விற்காக அவன் பலவழிகளைக் கையாண்டான். பிரான்ஸ், இரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பு கொண்டதும் அதற்காகத்தான். ஜிஹாத் மூலம் இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று தனது கடிதங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

Studio fire during shooting of tele-serial 'The Sword of Tipu Sultan kills more than 40- 1989

Studio fire during shooting of tele-serial ‘The Sword of Tipu Sultan kills more than 40- 1989

கத்தி அல்லது குல்லாமற்றும்திப்புவின் கத்தி: “கத்தி அல்லது குல்லா” என்ற கொள்கையைத்தான் கடைபிடித்தான்[1]. ஆனால், முஸ்லிம் ஆசிரியர்கள் அவற்றை வேறுவிதமாக திரித்து விளக்கம் கொடுத்து, அவனை “ஆங்கிலேருக்கு எதிரான போராளி” போன்று சித்தரிக்கின்றனர்[2]. “கத்தி” என்றால் கத்தி முனையில் மதமாற்றம், அதாவது, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள் அல்லது செத்து மடி”, என்ற குரூரமான கொள்கையைக் கடைபிடித்தான். அதனால் “கத்தி” என்றால், “இந்துக்களுக்கு சாவு” என்ற பொருளாகியது. அதனால் தான் “திப்புவின் கத்தி” (The sword of Tipu Sultan) என்றபோது, அவர்கள் அதனை எதிர்த்தனர். ஏனெனில், அது அவர்களின் மதம், கலாச்சாரம் மற்றும் தேசிய கௌரவத்தை இழிவுபடுத்துவதாக இருந்தது. ஆனால், மல்லையா போன்றவர்கள் அதனை ஆதரிக்க முயன்றனர். கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், அப்பொழுதைய கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[3].

Tipu letters - cap or sword policy followed

Tipu letters – cap or sword policy followed

திப்புமற்றும்திப்புவின் கத்தி” – தீயசக்திகளின் சின்னங்கள்: கர்நாடகா மற்றும் கேரள கடற்கரையில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றும், மதமாற்றம் செய்தும், குரூரங்களை செய்ததால், திப்பு ஒரு தீயசக்தி, துர்தேவதை (evil force), விலக்கப்பட வேண்டியது ஒன்று, “சபிக்கப்பட்ட பெயர்” (cursed name) என்ற விதத்தில் கருதப்படுகிறது. அதனால், அப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் கூட அப்பெயரை தங்களது குழந்தைகளுக்கு வைப்பதில்லை. அவர்களது பாஷையில் சொல்வதானால், இரண்டுமே “சைத்தானின் சின்னங்கள்” ஆகும்[4]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வருகின்றன. ஆனால், இப்பொழுது கர்நாடகாவில் காங்கிரஸ் போன்ற  கட்சிகள் அத்தகைய தீய சக்தி, தீய சின்னங்களை வைத்து ஆதாயம் தேட பார்க்கின்றன. ஆனால், இவற்றைப் பின்பற்றியவர்கள் அழிவைத்தான் தேடினர்.

Tipu satanic force killing many Hindus- Hindukush

Tipu satanic force killing many Hindus- Hindukush

தியசக்தி திப்பு அழிவை ஏற்படுத்தும் என்பது நிரூபனமானது: திப்பு சுல்தான் கத்தி [“Sword of Tipu Sultan”] என்ற தொலைக்காட்சி தொடரை தூர்தர்ஷனில் 1990ல் காண்பித்தனர், பிப்ரவரி 8. 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர்[5]. இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[6]. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது. கத்தியை வாங்கிய மல்லையாவும் திவாலா நிலையை அடைந்து, பல குடும்பங்களின் வாழ்க்கையினைக் கெடுத்தான். இப்பொழுதும், சித்தராமைய்யாவின் “திப்பு ஜெயந்தி” இரண்டு உயிர்பலிகளைக் கொண்டது. இன்னும் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கவேண்டும்.

Tipu satanic force killing many kafirs- Hindukush

Tipu satanic force killing many kafirs- Hindukush

திப்புவின் ஜோதிட நம்பிக்கை: திப்புவுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை இருந்தது. இதனால், தனது அரசவையில் பிரத்யேகமாக ஜோதிடர்களை வைத்திருந்தான். அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்தான். இவ்விதத்தில் தான் அவன் சில கோவில்களுக்கு மானியம் கொடுத்தது, பூஜை செய்தது போன்றவையெல்லாம் நிகழ்ந்துள்ளன. இந்துமதத்தின் மீதான மதிப்பு அல்லது உண்மையிலேயே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. மேலும் 1790ற்குப் பிறகு அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கணித்துச் சொன்னதால், அவனது அத்தகைய ஈடுபாடு அதிகமாகியது. சிருங்கேரி சங்கராச்சாரியுடனான தொடர்பும் இவ்வகையில் ஏற்பட்டது தான். அவருடைய காலில் விழுந்தான் என்றும் குறிப்புகள் உள்ளன[7]. இதையெல்லாம், ஆசாரமான முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?

The real Tipu sultan, tyrant- believing horoscope

The real Tipu sultan, tyrant- believing horoscope

ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி: ஔரங்கசீப் கூட கோவில்களுக்கு மானிய வழங்கினான் என்று சில சரித்திராசிரியர்கள் எழுதுகிறார்கள். இதெல்லாம், இக்கால கருணாநிதி போன்றது. அவரும் தங்களால் தான் திருவாரூர் ஆழித்தேர் ஓடியது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். ஆனால், உண்மையில் அந்த ஆளின் இந்து-விரோதத்தை எல்லோரும் அறிவர். அவர் காலத்திலும் சில கோவில்களுக்கு கும்பாபிசேகம் நடந்தது. அதாவது முதலமைச்சர் என்ற ரீதியில், இந்து அறநிலைத் துறையின் கீழ் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதால், அழைப்பு இதழ்களில் முதல் பக்கத்திலேயே, கருணாநிதியின் புகைப்படம் தான் போடப்பட்டது. இதெல்லாம் சாதாரண விசயம். இவர்கள் இல்லாமல் இருந்திருந்தாலும், அவை தானாக நடந்திருக்கும். அதாவது பெரும்பான்மையினர் இந்துக்களாக இருப்பதினால், அரசு ஆதரவு இருந்தாலும், இல்லாமலிருந்தாலும், காலக்கிரமப்படி நடக்கவேண்டிய கிரியைகள், சடங்குகள், விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.  கருணாநிதிக்கும் ஜோதிட நம்பிக்கை உள்ளது. ஆகவே, இவர்கள் (ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி) கோவில்களுக்கு மானியம் கொடுத்தது அந்த ரீதியில் தான்! இனி திப்பு விவகாரத்தை விவரரமாகப் பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

13-11-2015


[1] Tipu Sultan’s notorious jihâd – Islamic war-slogan – was SWORD (death) or CAP (Islamic honour, i.e. forcible conversion), a cruel option for a hapless Hindu population.

[2]  Prof. B. Shaik Ali, International Relations of Tipu Sultan, Islamic Voice, Monthly,   Vol 13-02 No:146    *   FEBRUARY 1999/ RAMADAN 1419H ;email: editor@islamicvoice.com

http://islamicvoice.com/february.99/tippu.htm=

[3] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.

http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm

[4] If Tipu Sultan was a much-loved and respected Muslim ruler, as claimed by his present-day admirers, why is it that even Muslim do not name their children as Tipu, either in Mysore or in Malabar? Obviously, the name itself is a cursed name. Anyway, that is the belief in the entire West Coast and Mysore

[5] http://indiatoday.intoday.in/story/studio-fire-during-shooting-of-tele-serial-the-sword-of-tipu-sultan-kills-more-than-40/1/323127.html

[6] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html

[7] When the astrologers predicted an approaching malefic period from 1790 onwards and the combined forces of the British, the Nizam and the Marathas started surrounding Srirangapatanam, Tipu Sultan panicked and therefore did some good deeds – offering land-grants and even pujas and feeding Brahmin – mainly to ward off the evil effects and to get assistance from his Hindu subjects in his war efforts. He was reported to have even fallen prostrate before His Holiness Sringeri Shankaracharya and sought the latter’s pardon and blessings (Sakthan Thampuran by P. Raman Menon, and History of Mysore by Lewis Rice).

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (4)

நவம்பர் 12, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (4)

Playwright and Jnanapith awardee Girish Karnad talks to the media at his house in Bengaluru on Wednesday-10-11-2015-. Photo- Bhagya Prakash. K

Playwright and Jnanapith awardee Girish Karnad talks to the media at his house in Bengaluru on Wednesday-10-11-2015-. Photo- Bhagya Prakash. K

ஜெயந்தி கூட்டத்தில் பேசிய விவரங்கள்: சித்தராமைய்யா, கிரிஸ் கார்னாட், பரகூரு ராமசந்திரப்பா, கோ சன்னபசப்பா, பேராசியர் சியிக் அலி, என்.வி. நரசிம்மைய்யா, விரப்ப மொய்லி, முதலியோர் திப்புவைப் புகழ்ந்து பேசினர். கிரிஸ் கார்னாட், திப்பு ஒரு இந்துவாக இருந்திருப்பின், சிவாஜி போன்று இடத்தைப் பெற்றிருப்பான், போற்றப்பட்டிருப்பான் என்று ரீதியில் பேசினார்[1]. அதுமட்டுமல்லாது, “தீபாவளி நாங்கள் திப்பு ஜெயந்தியை கொண்டாடுகிறோம், இதை நாங்கள் பிஹார் நாள் என்று கூட கொண்டாடுகிறோம்”, என்றெல்லாம் தொடர்ந்து பேசினார். “பெங்களூரில் தேவனஹல்லி விமானநிலையம், கெம்பகௌடாவுக்குப் பதிலாக திப்பு சுல்தான் பெயர் வைத்திருக்கலாம்”, என்றெல்லாம் கூட பேசினார்[2]. சித்தராமைய்யாவும் அவர் பேசியதை ஆமோதித்துப் பேசினார். மற்றவர்களும் திப்பு சுல்தான் செயூலரிஸ ஆட்சியாளர், கோவில்களுக்கு மானியம் வழங்கினான் போன்ற வழக்கமான விசயங்களை அள்ளி வீசினர். அவர்கள் பேசியதெல்லாம் திப்பு ஜெயந்தியை நடத்தினர் என்பதை விட, இந்த சாக்கை வைத்துக் கொண்டு, பிஜேபியைத் தாக்குவதும், இந்துக்களைக் கிண்டல் செய்வதுமாக இருந்தது. இவற்றையெல்லாம் மற்றவர்கள் எப்படி பொறுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

BJP workers protest against Girish Karnads statement in Bengaluru on Wednasday- 10-11-2015 Photo- Sudhakara Jain

BJP workers protest against Girish Karnads statement in Bengaluru on Wednasday- 10-11-2015 Photo- Sudhakara Jain

தேவனஹல்லி விமானநிலையம், கெம்பகௌடாவுக்குப் பதிலாக திப்பு சுல்தான் பெயர் வைத்திருக்கலாம்: கிரிஸ் கார்னாட் இவ்வாறு சொன்னது, எல்லோரையும் உசுப்பி விட்டுள்ளது.  முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கிரிஷ் கர்னாட் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அவரது உளறல்களுக்கு எதிராக நிறைய பேர் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தனர்[3]. குறிப்பாக கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தபோது தான்[4], தான் பேசியதனால் ஏற்பட்டுள்ளா பாதிப்பை உணர்ந்தார் போலும். இதனால், அரண்டு போன கிரிஸ் கார்னாட் புதன் கிழமை 11-11-2015 அன்று[5], “என்னுடைய விமர்சனத்தினால், யாராவது புண்பட்டிருந்தால், நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்……..நான் என்ன பலனைப் பெறப்போகிறேன் (அவ்வாறு விமர்சனம் செய்ததனால்)”, என்று சொன்னதிலிருந்தே, அவரது குற்ற உணர்வும், அதிகப்பிரசங்கித் தனமாக உளறியதும் மற்றும் விரக்தியும் வெளிப்பட்டது. மேலும், சித்தராமையா, “கிரிஸ் கார்னாட் அவ்வாறு பேசியது தப்புதான். …..அவர் ஏன் அத்தகைய விமர்சனம் செய்தார் என்று எனக்குத் தெரியாது. அவர் அவ்வாறு பேசியபோது அங்கிருந்தேன். அவர் சொன்னதை மறுத்துப் பேச நினைத்தேன். ஆனால், நான் செய்யவில்லை”, என்று சொன்னதிலிருந்துதான்[6], பிரச்சினையை எந்த அளவுக்கு வகுப்புவாத, ஜாதீய முறையில் மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பியது வெளிப்படுகிறது. அங்கு விழாவின் போது, இவர் ஆதரித்துப் பேசியைதைக் கவனிக்க வேண்டும். ஆனால், இப்பொழுது, “அந்தர்-பல்டி” அடிக்கிறார்! அடித்தது, தங்களையே திரும்ப அடிக்கும் நிலை வந்ததை உணர்ந்து ஜகா வாங்கியிருப்பதும் தெரிகிறது.

Tipu jayanti celebrated in dhakshina karnataka.2

Tipu jayanti celebrated in dhakshina karnataka.2

தக்ஷிண கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது: கர்நாடகாவில் இவ்வாறு பல இடங்களில் எதிர்ப்பு, போராட்டங்கள் என்று நடந்த வேளையில், தக்ஷிண கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது[7]. தக்ஷிண கர்நாடகாவில் முஸ்லிம்கள் அதிகம். மேலும், இதற்கு சோசியல் டெமாக்ரெடிக் பார்ட்டி [SDPI] என்ற முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் ஆதரவு தெரிவித்து, பிரச்சாரம் செய்தது. அவ்விழாவில் பேசியவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்றிருந்தாலும், சொல்லி வைத்தால் போல, திப்புப் புராணம் பாடியுள்ளது, தமாஷாக இருந்தது எனலாம். அதற்குள், மரடிகேரியில் முஸ்லிம்கள் அனுமததீல்லாமல் ஊர்வலம் நடத்தியுள்ளதாக பிஜேபி குற்றஞ்சாட்டியுள்ளது[8]. ஒரு நபரைப் பற்றி சர்ச்சைகள் உள்ளான என்றபோது, அறிந்தே, அந்நபரது ஜெயந்தி என்று அரசே தீர்மானித்து நடத்தியிருப்பது, மக்களை தூண்டிவிடும் போக்குதான் காணப்படுகிறது. மேலும் பொறுப்புள்ளவர்கள், பொறுப்பற்ற நிலையில் பேசியும் தெளிவாகியுள்ளது. மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றால், ஞானபீடம் விருது வாங்கியவருக்குஙென்ன பேசுகிறோம் என்று தெரியாமலா பேசினார். இவ்வளவு நடந்தும், ஒரு முஸ்லிம் சார்புடைய தளம், “திப்பு ஜெயந்தியை” ஆதரித்து பதிவு செய்துள்ளதை கவனிக்கவும்[9]. ஆற்றோரம்.காம் என்ற தளம் சொல்லியிருப்பதை அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Tipu jayanti celebrated in dhakshina karnataka.1

Tipu jayanti celebrated in dhakshina karnataka.1

திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்த சித்த ராமையாகாவி கயவர்களின் சதியை முறியடித்த கர்நாடக அரசு! சங்பரிவாருக்கு அஞ்சாமல்  “திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்தது![10]: “இந்தியாவில் சுதந்திர போராட்டத்தை முதன்முதலில் நடத்தியவரும்,ஆங்கிலேயரை முதன்முதலாக துணிச்சலுடன் எதிர்கொண்ட மாவீரரான திப்பு சுல்தானை மக்கள் மறந்தாலும்,கர்நாடக அரசும் அதன் குடிமக்களும் மறப்பதில்லை.காரணம் திப்பு சுல்தான் பிறந்த வீரமண்தான் கர்நாடக மாநிலம் மைசூர் அவருடைய தியாகத்தை போற்றுவதற்காக வருடாவருடம் நவம்பர் மாதம் 10ஆம் தேதிதிப்பு ஜெயந்திவிழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடுவது வழக்கம். இதை கண்டு பொறாமைப்பட்ட சங்பரிவாரக் கும்பல்கள் அவ்விழாவினை கொண்டாடும் மக்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட செய்திகளை செய்தி சேனல்களில் பார்த்திருப்பீர்கள். 10-11-2015 ன்று தலைநகர் பெங்களூரில் விதான்னா சௌதா பகுதியில் அமைந்திருக்கும் பேண்குவைட் மஹாலில்திப்பு ஜெயந்திவிழாவினை ஊர்மக்கள் ஒன்றுகூடி நடத்தவிருந்தனர். இவ்விழாவிற்கு சங்பரிவார கயவர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் கர்நாடக அரசாங்கமே முழு களமிறங்கி அம்மஹாலில் அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் இணைந்து விழாவினை சிறப்போடு நடத்தி முடித்தனர். அவ்விழாவில் திப்பு சுல்தானின் வீரமும், தியாகமும், இந்தியாவிற்காக அவர் பாடுபட்ட பொதுநலனையும் அதிகாரிகள் பேசினர்! மேலும்,அடுத்த வருடம் முதல் பெருவாரியான மண்டபங்களில் திப்பு ஜெயந்தி விழாவினை அரசே ஏற்று நடத்தும் எனவும், அதற்கு மிரட்டல் விடும் சமூக விரோதிகளுக்கு கடுங்காவல் தண்டனக அளிக்கப்படும் எனவும் அவ்விழாவில் ஆட்சியாளர்கள் உறுதி கூறினர்!” ஆக, நாங்கள் ஷிர்கை ஆதரிக்கிறோம் என்கிறார்களா முஸ்லிம்கள்?

The real Tipu sultan, tyrant- changing faces of Tipu

The real Tipu sultan, tyrant- changing faces of Tipu

வருடாவருடம் நவம்பர் மாதம் 10ஆம் தேதிதிப்பு ஜெயந்திவிழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடுவது வழக்கம்: ஆற்றோரம்.காமலிந்த அளவுக்கு பொய் சொல்வது, செக்யூலரிஸம் கொடுத்த லைசென்ஸ் போலிருக்கிறது. முன்பு 2012ல் கேரளாவில் மாத்ரு பூமி இதழில் சரித்திர உண்மைகளை எடுத்துக் காட்டியபோது “டுசர்கிள்ஸ்நெட்” என்ற முஸ்லிம் இணைதளம் அதனைக் கடுமையாக சாடியது[11]. ஆக, முஸ்லிம்கள் தங்களுக்குள்ள முரண்பாடுகளை வேண்டுமென்றே காபிர்களை வைத்து கலவரங்களை உருவாக்கி, இந்துக்களை இத்தகைய “புதிய ஜிஹாத்” அல்லது “செக்யூலரிஸ ஜிஹாத்” மூலம் கொன்று வருகிறார்கள். இங்கும் அந்த “ஷிர்க்” முரண்பாடு வருகிறது. திப்புவை “ஹஜரத்” ஆக்கி. “பிறந்த நாள்” கொண்டாடுவோம் என்பது, எந்த விதத்தில் ஆசார இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை. திப்புவின் முகமே முரன்பாடாக உள்ளது. அதாவது கருப்பு நிறம் மற்றும் குரூர தோற்றத்தில் உள்ள அவனது முகம், உருமாறி, நிறமாறி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவ்வாறு மாற்றுவதை எப்படி சரித்திர ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியென்றால், அதுவும் ஒரு பெரிய மோசடியாகும். சரித்திரவரவியலில் இந்த அளவுக்கு மோசடிகளை செய்து, ஒரு குரூரக் கொடுங்கோலனிடமிருந்து, ஒரு புலியை உருவாக்கியுள்ளது மிகப்பெரிய சரித்திர மோசடி எனலாம்.

SDPI suppoting Tipu Jayanti 10-11-2015.2

SDPI suppoting Tipu Jayanti 10-11-2015.2

திப்புவை ஏன் பர்காவும், என்டிடிவியும் ஆதரிக்கின்றன?: சரதிந்து முகர்ஜி (இந்தியன் கவுன்சில் ஆப் ஹிஸ்டாரிகல் ரிசெர்ச்), “காங்கிரஸ் டிப்பு ஜெயந்தியைக் கொண்டாடுவதின் மூலம் ஜிஹாதை ஊக்குவிப்பது போலிருக்கிறது”, என்று என்டி-டிவி விவாதத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். அப்பொழுது, பர்கா தத் என்ற பெண்மணி, நக்கலாக, என்ன இதை அரசியல்படுத்தும் முறையில் பேசுகிறீர்களே என்று தனது கருத்தை வைத்தார்[12]. மேலும் “In a controversial statement, NDA government-appointed member of Indian Council of Historical Research Saradindu Mukherji says, “Congress is trying to promote jihad” by celebrating birth anniversary of Tipu Sultan”, என்று அந்த இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் 60 ஆண்டுகளாக அரசுசார்ந்த நிறுவனங்களில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் சார்புடையவர்கள் தான் அப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். ஆனால், இப்பொழுது மட்டும், ஏதோ புதியதாகக் கண்டு பிடித்த விதத்தில் இவ்வாறு குறிப்பிடுவதும், பர்கா நக்கலாக பேசுவதும் கவனிக்கத்தக்கது[13]. NDTV-Hindu சேர்ந்து டிவி செனல் நடத்துவதும், அவை தொடர்ந்து இத்தகைய பிரச்சாரத்தை செய்து வருவதும், உள்ள பிரச்சினையை ஊக்குவிப்பது போலத்தான் உள்ளது. எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றும் செயலை ஏன் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

12-11-2015

[1] தைஜி.வார்ல்ட், Bengaluru: Tipu would have enjoyed status of Shivaji if he was a Hindu: Karnad, நவம்பர்.10.2015.

[2] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367915

[3] http://www.thehindu.com/news/cities/bangalore/protests-over-tipu-jayanti-continues-bjp-targets-karnad/article7866212.ece?ref=relatedNews

[4] http://www.thehindu.com/news/cities/bangalore/girish-karnads-remarks-on-tipu-create-a-stir/article7866381.ece?ref=relatedNews

[5] ….the noted playwright and actor sought to end the controversy, saying, “If anybody has been hurt by my remarks, I apologise… what will I gain by doing it (by making such comments).”

http://www.thehindu.com/news/national/karnataka/girish-karnad-offers-apology-over-remarks-on-kempegowda/article7866724.ece?ref=relatedNews

[6] Mr. Siddaramaiah also said it was a mistake on the part of the Jnanapith award winner to have made such remarks. “It is a mistake. I have told you,” he said. “I do not know why Girish Karnad made such a remark. I was also there (when he made the remark), I wanted to counter but I did not do,” he said.

http://www.thehindu.com/news/national/karnataka/girish-karnad-offers-apology-over-remarks-on-kempegowda/article7866724.ece?ref=relatedNews

[7] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367842

[8] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367973

[9] http://www.aatroram.com/?p=35379

[10] ஆற்றோரம்.காம், திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்த சித்த ராமையா, BY ஹாரிஸ் அஹ்மது ON NOVEMBER 11, 2015

[11] http://twocircles.net/2012nov16/attempts_distorting_history_tipu_sultan.html#.VkPokNIrJdg

[12] NDTV, It’s Jihad by Congress to Celebrate Tipu: Government-appointed Historian,  PUBLISHED ON: NOVEMBER 10, 2015 | DURATION: 2 MIN, 01 SEC 66

[13] http://www.ndtv.com/video/player/the-buck-stops-here/it-s-congress-jihad-to-celebrate-tipu-sultan-govt-appointed-historian/390428

ஒன்பது நாட்களாக நடைப் பெற்று வந்த மொஹ்ஹரம் பத்தாவது நாளில் முடிவடைந்தது!

ஒக்ரோபர் 26, 2015

ஒன்பது நாட்களாக நடைப் பெற்று வந்த மொஹ்ஹரம் பத்தாவது நாளில் முடிவடைந்தது!

Zuljana-of-imam-hussain

Zuljana-of-imam-hussain

மொஹர்ரம் துக்க விழாவின் ஆரம்பம், சடங்குகள், சின்னங்கள்: மொஹ்ஹரம், என்றாலே தடுக்கப்பட்டது என்று பொருள். எதிர்மறையில் பிரயோகிக்கப்பட்டு வரும், இச்சொல் இஸ்லாத்தில் முக்கியமான பொருளுடன் விளங்கி வருகிறது. அஜதாரி [Azadari (Persian: عزاداری)] என்றால், அழுகை, ஒப்பாரி, துக்கம் என்று பாரசீக மொழியில் பொருள். மஜ்லிஸ் –இ ஆஜா [Majalis-e Aza] இமாம் ஹுஸைன் தியாகத்துடன் சேர்ந்த சடங்குகளை இணைத்து கூறினர். இவையெல்லாம் யஜீத் என்பவனுடைய கொடுமைகளுக்கு எதிராக செய்யப்படுகின்றன. துக்கத்துடன் மார்பை அடித்துக் கொள்வது, லட்ம்யா, லட்மயா, லட்மியா (மாரடித்தல்) எனப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மடம், மடம்-தாரி, சினா ஜன்னே (மாரடித்தல்) என்று வழங்கப்படுகிறது. மொஹம்மது நபியின் குடும்பத்தினர், இமாம் அலி மறைவுக்குப் பிறகு, 680லிருந்து, இதனைக் கடைபிடித்து வருகின்றனர். கர்பலா போரில் மொஹம்மதுவின் பேத்தி ஜேனாப் பின்ட் அலி [Zaynab bint Ali] மற்றும் இமாம் ஹுஸைனின் சகோதரி இவர்களின் இபின் ஜியாத் மற்றும் யதீத் முதலியோர்களுக்கு எதிராக ஒப்பாரிவைத்ததை மற்றவர்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். இமாம் ஜைநுல் ஆபிதீன் [Imam Zain-ul-Abideen] என்பவர் இமாம் ஹுஸைனின் சோக முடிவை எல்லோருக்கும் அறிவித்து பரப்பி, துக்கநாளாக அனுசரிக்க செய்தார். இவரதளத்தகைய போதனைகள் இராக், சிரியா, ஹேஜாஸ் போன்ற இடங்களுக்குப் பரவின.

ecorated-Zuljanah-on-Muharram-ul-Haram

ecorated-Zuljanah-on-Muharram-ul-Haram

மொஹர்ரம் அனுசரிப்பில் உள்ள சின்னங்கள், உருவங்கள், பழக்க-வழக்கங்கள், கிரியைகள், சடங்குகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள்:

  1. சினி-ஜனி – மாரடித்தல்[sine-zani (beating the chest)], ஜன்கிர்-ஜனி [zangir-zani (beating oneself with chains)], தகே-ஜனி [tage-zani] முதலியவை துக்கத்தை அனுசரிக்கும் விதங்கள்.
  2. காமா-ஜனி / தட்பீர் – கத்தி, வாட்களால் காயப்படுத்திக் கொள்ளுதல் [Qama Zani/ Tatbeer (hitting oneself with swords or knives)]. பாடிக் கொண்டே அடித்துக் கொள்வதையும் பார்க்கலாம்[1]. இப்பாடலைக் கேட்டால், நிச்சயமாக எவரும் அசையத்தான் செய்வார்கள்[2].
  3. தஸ்தா-கர்தானி – துக்க அனுசரிப்பு ஊர்வலங்கள் [mourning-processions (dasta-gardani)].
  4. நகில் – பெரிய மரத்தால் ஆன உருவங்களைத் தூக்கிச் செல்லுதல் [இமாம் ஹுஸைனின் இறுதி ஊர்வலத்தைக் குறிக்கும்]
  5. தாஜியா / ராவ்ஜா கானி என்கிற உருவங்களை எடுத்துச் செல்லுதல் – கூடாரம், கோபுரம் போன்றவை. கூடாரத்தில் இமாம் ஹுஸைனின் குடும்பத்தார் எரித்துக் கொலை செய்யப்பட்டதால், கூடாரம் போன்றவை விழா முடிவில் எரிக்கப்படுகின்றன.
  6. ஆலம் ஊர்வலம் – கொடிகள், அல்லது வண்ணச்சிலைகளை கொம்புகளில் எடுத்துச் செல்வது. விளக்குகளும் சேர்ந்தவை உள்ளன.
  7. மடம், ஜஞ்சீர் மடம் – கூரிய ஆயுதங்களால் தம்மை துன்புருத்திக் கொள்ளுதல்.
  8. ஜுல்ஜன்னா [Zuljanna] என்கின்ற குதிரை உருவம் – அல்லது குதிரை [இமாம் ஹுஸைனை கர்பலா போருக்கு அழைத்துச் சென்ற குதிரை]. இதனைக் கொல்வதும் உண்டு, எரிப்பதும் உண்டு. ஊர்வலத்தில் செல்லும் போது, அக்குதிரைத் தொட்டு வணங்கவும், ஆசிர்வாதம் பெறவும் செய்கின்றனர்[3].
  9. மண்குழி, தீக்குழி முதலியன – இஸ்லாத்தில் இறந்தவர்களை புதைப்பது, என்ற பழக்கம் உள்ளது. ஆனால், கூடாரத்துடன் முஸ்லிம்கள் எரிக்கப்பட்டதால், அவர்களுக்கு மறுபடியுமஉடல் கொடுத்து, தீயில் காட்டி அடக்கம் செய்யும் வழக்கு உருவகப்படுத்தப் படுகிறது.
  10. தகியா ஊர்வலங்களில் உள்ள உருவங்களும், சில இடங்களில் எரிக்கப்படுகின்றன, சில இடங்களில் கடல், நதிகளில் போட்டு விடுகிறார்கள்.
Karbala, Imam Hussain horse

Karbala, Imam Hussain horse

பத்துநாட்கள் அனுசரிக்கப்படும் மொஹர்ரம்: ஹிஜ்ரி 1437 வருடத்தில் மொஹரா மாதம் பத்தாவது நாளன்று அசுரா, அஷுரா [பத்தாவது நாள்] என்ற துக்கநாள் ஷியா முஸ்லிம்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது[4]. பத்து நாட்களுக்கு இப்பண்டிகை உருவகமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த பத்து நாட்களில் கர்பலாவில் என்ன நடந்ததோ, அவற்றை ஷியா முஸ்லிம்கள் அப்படியே செய்து காட்டுவர். போர்க்களக்காட்சி, குதிரை, இமாம் ஹுஸைன் கூடாரங்கள் முதலியவை உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். இதற்கான பிரத்யேகமான துக்கக்கரமான ஆடைகள் அணிவதும் உண்டு. இரானின் தெற்குப்பகுதியில் உள்ள கொர்ரம்பாதில் மண்தேய்க்கும் வருடாந்திர விழா கொண்டாடப்படும்.

Mourners-in-Khorramabad

Mourners-in-Khorramabad

நடுத்தெருக்களில் தீ வளர்க்கப்பட்டிருக்கும். ஆண்கள்-பெண்கள் பெரிய குழிக்களில் இருக்கும் ஈரமான சேற்றில் குதித்து, உடலை சேராக்கிக் கொண்டு, பிறகு அந்த தீயில் பாய்ந்து உலர்ந்து, எழுந்து வருவர்[5]. அதாவது, இமாம் ஹுஸைன், 72 கூட்டாளிகள் முதலியோர் எவ்வாறு கொலைசெய்யப்பட்டனரோ, அதேபோல, நடத்திக் காட்டுகின்றனர்[6]. அதற்கான ஏற்பாடுகள் முன்னமே தொடங்கிவிடும். கொர்ரம்பாத், கொர்ர ராம்பாத், குர்ரம்பாத், என பலவாறு அழைக்கப்படுகின்ற, இவ்விடத்தில், லோரிஸ்தான் என்ற ஊரில் நடக்கும் பாரம்பரிய துக்கவிழாவில் அனைத்தும் அடங்கியிருக்கும்[7].

A girl covered with mud stands close to a fire to dry herself Khorramabad, Iran

A girl covered with mud stands close to a fire to dry herself Khorramabad, Iran

இமாம் ஹுஸைனின் தியாகம் ஷியாப்சுன்னி பிரிவுகளை உண்டாக்கியது: 1300 வருடங்களுக்கு முன்னர் மொஹம்மது நபியின் பேரர் / பெயரர் இமாம் அலி [Imam Husayn ibn Ali] மற்றும் அவரது மகன்கள் ஹுஸைன் மற்றும் ஹஸன் போரில் [Battle of Karbala] உயிர்தியாகம் அடைந்த நாளை அவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள். இமாம் அலியின் உடல் எதிரிகளால் சின்னா-பின்னமாக்கப் பட்டது. இரண்டாவது உமையாத் காலிப்பான யஜித் – I [the second Umayad caliph Yazid I] படைகளால் அவ்வாறு உயிர்தியாகம் அடைய நேர்ந்தது. குறிப்பாக ஹுஸைன் 680 அன்று இப்பொழுதைய இராக்கில், பாக்தாத்திற்கு அருகில் உள்ள கர்பலாவில் உயிர்தியாகம் செய்ததை, அதே போல தாமும் அந்த துன்பத்தை அனுபவிக்கும் வகையில், உடலை வருத்திக் கொண்டு, தமது சிரத்தையை வெளிப்படுத்திக் காட்டுவர். அக்டோபர் 24, 2015 அன்றும் உலகில் பல நாடுகளில் அத்தகைய நோன்பு கடைபிடிக்கப்பட்டது. இதுதான், அதாவது ஹுஸைனின் பலிதானம் தான், இஸ்லாம் ஷியா மற்றும் சுன்னி / சுன்னி என்று இரண்டாவதாக பிரிந்ததற்கான காரணம் என்று எடுத்துக் காட்டுகின்றனர். பத்து நாட்களாக வழிபட்டு வந்து, அஷுரா தினத்தன்று ஊர்வலமாக முஸ்லிம்கள் கைகளில் ஆயுதங்களுடன் செல்வர். ஒவ்வொருவரும், தமது உடலை அதனால், சேதித்துக் கொள்வர். யஜீத் ராணுவம் இமாம் ஹுஸைன் மற்றும் அவரது 72 நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தாக்கிக் கொன்றதுடன், அவர்களுடைய கூடாரங்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தினர். அந்த நிகழ்சியையும் அப்படியே தத்ரூபமாக நடத்திக் காட்டுவர்[8].

KARBALA, IRAQ - NOVEMBER 13:Shia Muslims turn around a burning tent according to a ritual ceremony of the Ashura Day on November 13, 2013 in Karbala, Iraq. Muslims to celebrate the day of Ashura which is the tenth day of Muharram (the first month of the Islamic calendar), mourning the seven-century martyrdom of Prophet Mohammad's grandson Prophet Hussein (Husayn ibn Ali) who was killed in Battle of Karbala in Iraq 680 AD. (Photo By Stringer/Anadolu Agency/Getty Images)

KARBALA, IRAQ – NOVEMBER 13:Shia Muslims turn around a burning tent according to a ritual ceremony of the Ashura Day on November 13, 2013 in Karbala, Iraq. Muslims to celebrate the day of Ashura which is the tenth day of Muharram (the first month of the Islamic calendar), mourning the seven-century martyrdom of Prophet Mohammad’s grandson Prophet Hussein (Husayn ibn Ali) who was killed in Battle of Karbala in Iraq 680 AD. (Photo By Stringer/Anadolu Agency/Getty Images)

அஷுரா – பத்தாவது நாளன்று, கூடாரத்தை தீயிட்டு அழிப்பது. யஜீத் ராணுவத்தினர், எவ்வாறு கூடாரத்தை டீயிட்டுக் கொளுத்தினரோ அதேபோல செய்து காட்டுகின்ற சடங்கு.

A Shiite Muslim walks on fire at a ceremony during the Ashura festival at a mosque in central Yangon, Myanmar.

A Shiite Muslim walks on fire at a ceremony during the Ashura festival at a mosque in central Yangon, Myanmar.

கூடாரம், குதிரை, மண்குழி, தீக்குழி முதலியன: கொர்ரம்மாபாதில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும், பத்துநாட்கள் துக்கவிழாவில் கூடாரம், குதிரை, கைகள், மண்குழி, தீக்குழி முதலியன இருக்கும். கூடாரங்கள் நாட்டுக்கு நாடு உருவத்தில் வேறுபட்டாலும், அதன் பின்னால் இருக்கும் இறையில் தத்துவம் ஒன்றகத்தான் இருக்கிறது. சில புகைப்படங்கள், இந்த தளத்திலிருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[9]. சிலர் இவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல, இஸ்லாத்திற்கு முன்பாக இருந்த பழக்க-வழக்கங்கள் அவை, ஆதலால் அவற்றை ஊக்குவிக்கக் கூடாது என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்[10]. சரித்திரரீதியில் அவையெல்லாம் உண்மை எனும்போது, ஒருவேளை, இக்காலத்தைய முஸ்லிம்கள் அவற்றை மறைத்தாலும், மறுத்தாலும், மறக்க நினைத்தாலும், பற்பல இடங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், சடங்குகளில், கிரியைகளில் அவை வெளிப்பட்டுவிடுகின்றன. இஸ்லாத்திற்கு முன்பிருந்தவை எல்லாமே “ஜஹல்லியா” இருண்டகாலத்தைச் சேர்ந்தது என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்க முடியாது. இந்த அண்டம், பேரண்டம் எல்லாமே இருந்து வந்துதான் உள்ளன. அவற்றில் உள்ளவை, இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் இருக்கும் போது, அவர்களுடன், அந்தந்த சின்னங்கள், உருவங்கள், பழக்க-வழக்கங்கள், கிரியைகள், சடங்குகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று இருந்து கொண்டுதான் இருக்கும்.

In this photo taken on Monday, Nov. 11, 2013, Myanmar Shia Muslim walks across burning embers during the Ashura festival in Yangon, Myanmar. Shia Muslims mark the Day of Ashura as a day of mourning for the death of the grandson of Prophet Muhammad. Devotees recite prayers, flagellate themselves and walk on fire to mark the day of mourning. (AP Photo/Khin Maung Win)

In this photo taken on Monday, Nov. 11, 2013, Myanmar Shia Muslim walks across burning embers during the Ashura festival in Yangon, Myanmar. Shia Muslims mark the Day of Ashura as a day of mourning for the death of the grandson of Prophet Muhammad. Devotees recite prayers, flagellate themselves and walk on fire to mark the day of mourning. (AP Photo/Khin Maung Win)

நாவாஸ் ஷெரிப்பின் மொஹர்ரம் சந்தேசம்அறிவிப்பு, இந்திய விரோதமாகத்தான் இருக்கிறது: ஆனால், பாகிஸ்தானின் பிரதம மந்திரி அதனையும் அரசியலாக்கி, “பாகிஸ்தானின் இஸ்லாமிய குடியரசை எவை பாதிக்கின்றன, அதன் ஒற்றுமையை குலைக்கின்றன என்பதனை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தீர்த்து வைக்கப்படாத காஷ்மீர் பிரச்சினை, இப்பகுதியில் அமைதியைக் குலைப்பதாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன”, என்றெல்லாம் கூறியிருக்கிறார்[11]. பாகிஸ்தானில் அடிக்கடி ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர்; அவர்களது மசூதிகளில் குண்டுவெடிப்பு நடத்தி தரைமட்டம் ஆக்கப்படுகின்றன; அந்நிலையில் குரான் புத்தகங்களும் எரிக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டுள்ளன. அப்பொழுது, அவர்களது உரிமைகளைப் பற்றி இவர் கவலைப்பட்டாரா, இதே மாதிரியான கருத்தை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. பிரதம மந்திரியாக இருப்பதால், வருந்துகிறேன், கண்டிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம், ஆனால், குண்டுகள் வெடிப்பது, மசூதிகள் இடிக்கப்படுவது, ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

26-10-2015

[1] http://www.dailymotion.com/video/x17k38t_bloodshed-at-panja-sharif-karbala-muharram_travel

[2] http://www.dailymotion.com/video/x295sgh_bas-ya-hussain-bas-ya-hussain-by-nadeem-sarwar-must-watch-online-dailymotion_music

[3] http://www.dailymotion.com/video/x17i464_everyone-taking-the-blessings-of-holy-horse-muharram_travel

[4] https://www.rt.com/news/319654-ashura-blood-muslim-cut/

[5] Karbala and other cities hosted reenactments of what Shi’ites refer to as Hussein’s martyrdom, complete with horseback warriors and the annual ‘mud rubbing’ ceremony took place in Khorramabad, southern Iran. Hundreds of men and women jumped into vats of wet mud before standing by huge bonfires lit in the middle of the streets to dry it on their skin and clothes. ‘Mud Rubbing’ is a traditional ceremony that is held in the city of Khorramabad every year to commemorate the Ashura day. Read more: http://www.dailymail.co.uk/news/article-3287819/Spilling-blood-religion-Tiny-Shi-ite-Muslim-boys-whip-sharp-blades-mourn-death-Prophet-Muhammad-s-grandson.html#ixzz3pd0lrpVo
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[6] http://www.dailymail.co.uk/news/article-3287819/Spilling-blood-religion-Tiny-Shi-ite-Muslim-boys-whip-sharp-blades-mourn-death-Prophet-Muhammad-s-grandson.html

[7] http://www.payvand.com/news/09/jan/1090.html

[8] http://en.abna24.com/service/pictorial/archive/2015/10/25/716789/story.html

[9] http://www.huffingtonpost.com/2013/11/14/photos-ashura_n_4274307.html?ir=India&adsSiteOverride=in

[10] The Messenger of Allah,Muhammad S strictly forbade such display of sorrow and grief, as these were traditions from the days of pre-Islamic Jahiliyah (Ignorance). Many Bid’at (Innovations) have been associated with the day of ‘Ashurah (Tenth day of Muharram) by another group of ignorantMuslims who celebrate the day like ‘Id.  Some of the Bid’at (Innovations) are applying Kohl and Henna, shaking hands with each other and cooking grains(Hubub) or other special dishes. There is absolutely no evidence to this effect in any SahihHadith (Authentic Tradition ofMuhammad S) or Da’if (Weak)tradition, nor is any evidence of this being done by any of his Sahabah (Companions). None of the Khulafa (Caliphs) of theMuslims or anyone from the Tabi’in encouraged or recommended such things. http://www.islam4theworld.net/islamic_calendar/muharram.htm

[11] Meanwhile, in his message on the Ashuraday, the Prime Minister said on this day, “we must recognize the elements who are harming the Islamic Republic of Pakistan and want to shatter the unity of nation in pursuance of their selfish interests”. He said, “the unresolved Kashmir had become a problem for regional peace and also for the people of Jammu Kashmir, who were being subjected to grave human rights violations”.

http://financialspots.com/2015/10/25/shiite-muslims-around-the-world-mark-ashura/

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (2)

ஜூலை 2, 2015

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (2)

Ambur riot - police  attacked.

Ambur riot – police attacked.

அஸ்லம் பாஷா என்ற உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு ஜவாஹிருல்லா மறுப்பு: கலவரத்தைத் தூண்டிவிட்டதில் அஸ்லம் பாஷா என்ற உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு தொடர்புள்ளதாக, போலீஸ் விசாரிக்க ஆரம்பித்துள்ளது[1]. அஸ்லம் பாஷா ஒரு முஸ்லிம் இளைஞனைத் தூண்டிவிட்டதாக சொல்லப்பட்டுகிறது[2]. ஆனால், ஜவாஹிருல்லா உள்ளூர்வாசிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்கின்றனர். கலவரத்தின் போது, ஆம்பூர் எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, அமைதி ஏற்படுத்த முயற்சி செய்தார். அவரை கலவர வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீது அவதுாறு வழக்கு தொடுப்போம். கலவரத்திற்கு முன், போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தி இருக்க வேண்டும். கலவரத்தில், பெண் போலீசார் உட்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார். எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, மாவட்ட செயலர் சுகூர் உட்பட பலர் உடனிருந்தனர்[3].

Ambur riot - police  attacked.2

Ambur riot – police attacked.2

உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன் – பெண் பொலீஸ் கதறல்! ஆம்பூரில் கலவரத்தின்போது, கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பெண் போலீஸ் ஒருவர், 2 கி.மீ., துாரம் ஓடி, உயிர் பிழைத்துள்ள தகவல், வெளியாகி உள்ளது[4]. வேலுார் மாவட்டம், ஆம்பூரில், வாலிபர் ஒருவர், மர்ம மரணம் அடைந்ததையொட்டி, கடந்த மாதம், 27ம் தேதி இரவு, பெரிய அளவிற்கு கலவரம் வெடித்தது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். ஆம்பூர் ஆயுதப்படை போலீஸ் விஜயகுமார், 34, கால், தொடை, வயிறு, கழுத்து, தொண்டை, கை மற்றும் தோள்பட்டையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். கலவரம் குறித்து, விஜயகுமார் கூறியதாவது[5]: “சம்பவம் நடந்த, 27ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, ஆம்பூர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, 300க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள், என்னை சூழ்ந்து, கத்தியால்சரமாரியாக குத்தினர்சரமாரியாக தாக்கினர் – அப்போது, அங்கு வந்த, இரண்டு பெண் போலீசாரையும் அடித்து உதைத்தனர். அவர்கள், உயிர் பிழைக்க தப்பி ஓடிய போதும், கலவர கும்பல் அவர்களை துரத்திச் சென்று தாக்கியது. இதை பார்த்த நான், படுகாயத்துடன் இருந்தாலும், அந்த பெண் போலீசாரை காப்பாற்ற போராடினேன். இதனால், கலவர கும்பல், என்னை கற்களாலும், தடியாலும் தாக்கினர். அப்போது, ஒரு கும்பல் வந்து, ‘இது எங்கள் கோட்டை; நீங்கள் எப்படி, இங்கு வரலாம்எனக்கூறி தாக்கினர். அதன்பின், பாதுகாப்புக்கு வந்த, போலீசார் எங்களை மீட்டனர்”, இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் காயம்

போலீசார் காயம்

காரை மடக்கிகாஞ்சிபுரம் ஆயுதப்படையைச் சேர்ந்த மல்லிகா கூறியதாவது[6]: ஆம்பூரில் கலவரம் நடக்கும் போது, கற்களால் தாக்கியவர்களை, சக போலீசாருடன் சேர்ந்து விரட்டினேன். இதை பார்த்த ஒரு கும்பல், என்னை தடியால் தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிக்க, 2 கி.மீ., துாரம் ஓடி, வழியில் வந்த காரை மடக்கி, அதில் ஏறி உயிர் தப்பினேன். கண்ணில் பட்ட போலீசாரை எல்லாம், கலவர கும்பல் சரமாரியாக தாக்கினர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். திருவண்ணாமலை ஆயுதப்படையைச் சேர்ந்த ரமேஷ் கூறியதாவது: என் சர்வீசில், நிறைய கலவரங்களை பார்த்திருக்கிறேன். கலவரம் செய்பவர்களை தடியால் அடித்தால், பயந்து ஓடுவர். அதைப் போலத்தான், இந்த கலவரத்தை நினைத்தேன். ஆனால், கலவரம் செய்தவர்கள், பயங்கர ஆயுதங்களுடன் எங்களை விரட்டினர். போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஓட ஓட விரட்டி… இதனால், கலவர கும்பல், எங்களை ஓட ஓட விரட்டி தாக்கினர்; நாங்களும் அடி வாங்கிக் கொண்டு, திரும்ப ஓடி வந்து விட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கலவரத்தை அடக்குவதற்காக, வேலுார், தி.மலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், ஆம்பூர் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படி, ஆம்பூர் சென்றவர்களில், கடுமையான தாக்குதலுக்கு உள்ளான, 50க்கும் மேற்பட்ட போலீசாரில், இவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_012

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_012

பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல், என் சட்டையை கழற்ற வந்தனர்; சிலரை மானபங்கம் செய்ய முயற்சித்தனர்: ஆம்பூரில் கலவரம் நடந்த பகுதிகளை, மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, ஜவாஹிருல்லா, நேற்று பார்வையிட்டார். கலவர கும்பல் தாக்கியதில், படுகாயம் அடைந்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, சிகிச்சை பெற்று வரும் பெண் போலீசார், கோபமாக, ஜவாஹிருல்லாவைப் பார்த்து, பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல், என் சட்டையை கழற்ற வந்தனர்; சிலரை மானபங்கம் செய்ய முயற்சித்தனர். கத்தியால் வெட்டினர்; தடியால் அடித்தனர்; கற்களால் தாக்கினர். ஒரு பெண் போலீசின் சட்டையை கிழித்துள்ளனர்; இதெல்லாம் நியாயமா என, ஆவேசமாக கேட்டனர். இத்தகைய செய்தி வந்த பிறகுக்கூட பெண்ணிய வீராங்கனைகள் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சாதாரணமான விசயங்களுக்கு பிருந்தா காரத் இத்யாதிகள் தங்களது கருத்துகளை அள்ளி வீசுவர், ஆனால் இப்பொழுது……………..அதே மாதிரி அந்த குஷ்புவையும் காணவில்லை.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_015

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_015

ஆம்பூர் கலவரத்தில் தவறு நடந்து விட்டது‘ – ஜவாஹிருல்லா மன்னிப்பு: ஆம்பூர் கலவரத்தில் படுகாயம் அடைந்து, சிகிச்சை பெறும் போலீசாரிடம், மனித நேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா மன்னிப்பு கேட்டார். தவறு நடந்துவிட்டது இதை கேட்ட, ஜவாஹிருல்லா, ‘தவறு நடந்து விட்டது; நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என, சிகிச்சை பெறும் ஒவ்வொரு போலீசாரிடமும் சென்று, மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின், அவர், நிருபர்களிடம்கூறியதாவது: ஜமில் அகமது மரணத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் பிரேம்ராஜ், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். இதில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆம்பூரில் நடந்த கலவரத்தை, சில விஷமிகள் முன்னின்று நடத்தியுள்ளனர். கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர். அவப்பெயரை ஏற்படுத்த சதி…. தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை, மக்களிடம் நல்லிணக்கம் ஏற்படுவதையே விரும்புகிறது. அரசிடம், எங்கள் கட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்தி தர, சிலர் முயற்சிக்கின்றனர். கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளவர்களில் அப்பாவிகளும் உள்ளனர்; அவர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும்.

போலீசார் தாக்கப்படல் - விகடன் போட்டோ

போலீசார் தாக்கப்படல் – விகடன் போட்டோ

முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை? முஸ்லிம்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்த எந்த முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியதுதானே? இல்லை, இவ்வாறு சொல்லி தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றனரா? கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்றால், கொலைவெறி பிடித்தவர்கள் இருந்தார்களே, அவர்களை பைத்தியங்கள் என்று சொல்லி தப்பிக்க தூபம் போடுகிறாரா? கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளவர்களில் அப்பாவிகளும் உள்ளனர் என்று சேர்த்து சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும். இத்தனை நாசத்தை உண்டாக்கி விட்டு, போலீஸ் நிலைய, ஜீப்புகள் மற்றும் போலீஸ்காரர்களையும் தாக்கி விட்டு, கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்றால் என்ன அர்த்தம்? முஸ்லிம்களுக்கு அத்தகைய நிலைமை எதனால், ஏன் ஏற்படும் என்பதனையும் ஒன்று அவர்களே விளக்கவேண்டும் அல்லது மற்றவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

ஆம்பூர் கலவரம் - 30_06_2015_011_003

ஆம்பூர் கலவரம் – 30_06_2015_011_003

போலீஸ் ஜீப் எரித்தவர்கள் கைது: ஆம்பூரில் நடந்தது கலவரம் என்பதை விட, போர்க்களம் என்றே சொல்ல வேண்டும். கலவரக்காரர்கள், கத்தி, கற்கள், தடியால் தாக்கினர். அவர்களிடம் துப்பாக்கி இருந்திருந்தால், ஒரு போலீஸ்காரர் கூட, உயிருடன் வீடு திரும்பி இருக்க முடியாது. இருதயராஜ், போலீஸ்காரர், காஞ்சிபுரம். 113 பேர் கைது ஆம்பூர் கலவரம் தொடர்பாக, இதுவரை, 113 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். கலவரம் நடந்தபோது, ஆம்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகுந்து, அங்கிருந்த ஜீப், ஆம்பூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப் ஆகியவற்றை, கலவர கும்பல், தீ வைத்து கொளுத்தியது. இது தொடர்பாக, ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்பூர் கே.எம்.நகரைச் சேர்ந்த கயம், 20, அக்பர், 23, சபீர், 26, சலீம், 22, ஆகிய, நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.

பவித்ராவை தேடுகிறது தனிப்படை! வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த,குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் பவித்ரா, 23, காணாமல் போனது தொடர்பாக, அவரது கணவர் பழனி கொடுத்த புகாரின்படி, பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் சம்பந்தப்பட்ட பவித்ரா, எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. இவரை தேடும் பணியில், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், கோவிந்த சாமி தலைமையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், பவித்ராவின் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் பஸ் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில், பவித்ரா புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை ஒட்டவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தனிப்படை போலீசார் தெரிவித்தனர். ஒரு பெண் காணவில்லை என்பதைப்பற்றியும் பெண்ணிய வீராங்கனைகள் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. நீதியை கலவரத்தால், வன்முறையால் அடைய முடியும் என்பது விசித்திரமான தத்துவம் தான். முசபர்நகர் கலவரமும் இதே பாணியில் ஆரம்பித்தது என்பதனை நினைவு கொள்ள வேண்டும். இங்கு வேண்டுமானால், இன்னொரு கோயம்புத்தூர் போல ஆகக்கூடாது என்று அறிவுஜீவிகள் சொல்லலாம், ஆனால், இருக்கும் முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைக்கும் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் முதலிய தோல் தொழிற்சலைகளில் இந்து பெண்கள் மதம் மாற்றப்படுவது நடந்து வருகின்றது. எனவே பிரச்சினை பெரிதாகாமல் இருக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

01-07-2015

[1] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Police-Probe-Role-of-MLA-in-Ambur-Riot/2015/06/29/article2891992.ece

[2] New Indian express, Police Probe Role of MLA in Ambur Riot, By J Shanmugha Sundaram, Published: 29th June 2015 06:10 AM;  Last Updated: 29th June 2015 06:10 AM.

[3] தினமலர், உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன்!, நமது நிருபர் குழு 01-07-2015.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1286934

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Recall-Horror-During-Ambur-Clash/2015/07/02/article2897905.ece

[6] தினமலர், உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன்!, நமது நிருபர் குழு 01-07-2015.

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!

மார்ச் 10, 2013

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக்: தில்லி இமாம் பாணியில், இந்திய விரோதிகள் குற்றங்களைச் செய்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, சோனியா அரசு அதற்கு ஆதரவு அளித்து வருகிறது[1]. முன்னர், தில்லி இமாம், பாகிஸ்தானிற்குச் சென்று, இதே மாதிரி, ஒரு இந்திய விரோத கூட்டத்தில் கலந்து கொண்டு, “பாரத மாதா ஒரு தெவிடியா” என்று பேசிவிட்டு வந்தார். ஆனால், அயல்நாட்டில் அந்த குற்றம் நடந்தது என்று ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டனர். இதில் வேடிக்கையென்னவென்றால், நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்று பேசி அவரை கைது செய்ய மூன்று உயர்நீதி மன்றங்களிலினின்று கைது வாரண்ட் பிறப்பித்திருந்தாலும், கைதுச் செய்யப்படாமல், காங்கிரஸ்காரர்கள் காத்து வந்தார்கள். இப்பொழுதும் அதே கதைதான். பாஸ்போர்ட்டை ஏன் பிடுங்காமல் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை[2]. அச்சட்டத்திலோ அல்லது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் விந்தைதான்! ஜிஹாத்தின் யுத்த முறைகள் மாறினாலும், காங்கிரஸ் ஆதரவு அளிப்பது தேசவிரோதம் தான்[3].

புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? ஹாபிஸ் சையது, ஜிலானி, யாசின் மாலிக் முதலியோர் ஒரே மேடையில், கூட்டத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? அப்சல்குரு வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜிலானியும் கூட இருந்தான். “நான் ஹாபிஸ் சையதை அழைக்கவில்லை, அவரும் என்னை அழைக்கவில்லை. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் அவ்வளவு தான். நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை”, என்று வாதிட்டான்[4].  குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்[5] காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொண்டான்!

ஒரு தலைவெட்டி பாகிஸ்தானிற்குச் செல்லும் போது,  இன்னொன்று உள்ளே வருகிறது: நேற்று (சனிக்கிழமை) அந்த தலைவெட்டி பாகிஸ்தானிற்குத் திரும்பச் செல்லும் போது, இந்த தேசவிரோதி, பாகிஸ்தானிலிருந்து தில்லியில் வந்து இறங்குகிறான். கேட்டால், நான் ஒன்றும் செய்யவில்லை. அப்சல் குருவிற்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தான் கலந்து கொண்டேன். இந்திய அரசு என்னை கைது செய்தால் தாராளமாக செய்து கொள்ளட்டும். சிறை எனக்கு இன்னொரு வீடாகும் அதனால் எனக்கு ஒன்றும் கவலையில்லை என்று அசால்டாக பதிலளித்து, திமிராக விமான நிலையத்திலிருந்து வெலியில் சென்றன். அப்பொழுது, போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது வேடிக்கையாகத்தான் இருந்தது. அவருக்கு சிவசேனா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தில்லியில் கைது செய்யாமல், ஶ்ரீநகரில் கை ஏன்?: இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம்! உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம்! கைதான யாசின் மாலிக் மீது 38-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தடா, பொடா சட்டத்தின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2005-06-ம் ஆண்டுகளில் லெஹஷ்கரே தொய்பா அமைப்பினர் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் சென்று கலந்து கொண்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது. முன்னர் ஒமர் அப்துல்லா முதலியோரும் அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்[6].

சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும்: ஜம்மு-காஷ்மீரில் , ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அதனால்தான் நக்கலாக, சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும், என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறான். காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பைச்சேர்ந்த யாசின்மாலிக், இவர் பார்லிமென்ட் தாக்குதல் பயங்கரவாதி அப்சலகுரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்தார். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத அமைப்பான லெஷ்கரே தொய்பா அமைப்பின் ஹபீஸ் சையத்தினை சந்தித்துவிட்டு நேற்று டில்லி வந்தான்.

காந்திநேரு போன் று நாங்கள் அஹிம்சா வழி பின்பற்றுகிறோம்[7]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[8]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[9]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

வேதபிரகாஷ்

10-03-2013


[2] Malik was seen sharing the dais with Jamaat-e-Dawa chief Hafiz Saeed, wanted for his involvement in the 2008 Mumbai terror attacks. The duo was photographed at a sit-in protest in Islamabad following the hanging of Afzal Guru. This created a flutter in the country and led to demands for cancellation of his Indian passport. No case has been registered against Malik so far either under the Passport Act or the Indian Penal Code.

http://timesofindia.indiatimes.com/india/Yasin-Malik-detained-at-Srinagar-airport-put-under-house-arrest/articleshow/1889

[4] The separatist leader said he had not invited Saeed, the 26/11 mastermind, at the rally called in Islamabad to protest hanging of Parliament attack convict Afzal Guru last month.”What’s the crime I have committed. I neither invited him nor was I organising the protest rally. I was an invitee myself,” said Malik, who was accompanied by S A R Gilani. Gilani was acquitted in the Parliament attack case. Read more at: http://indiatoday.intoday.in/story/yasin-malik-srinagar-airport-hafiz-saeed-kashmir-house-arrest-reports/1/257282.html2106.cms

[7]Irks me when Yasin Malik compares himself with Gandhi & Nehru. They never picked up guns & killed innocents. Didn’t hobnob with terrorists.

http://inagist.com/all/301357321534177281/

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

மார்ச் 10, 2013

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

Ajmer-Sharif-shrine-chief-boycotted-but-deputed-others

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.

உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

Ajmer Sharif Mannat

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.

தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Qawwali  dance ajmeeri dargah

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.

தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

Sufi dance dailyfresher.com

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Sufi dance at Ajmir dargah Urs festival 2012

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

Pakistan urs festival - Kalandar

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!

பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

760th Urs celebrations of Hazarat Lal Shahbaz Qalander RA in Sehwan Sharif Pakistan

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!

இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

Khushi dance at Ajmir Sharif Urs

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

Khushi dance at Ajmir Sharif Urs festival

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

Ajmer-dargah-map

வேதபிரகாஷ்

10-03-2013


பாகிஸ்தானில் கிருத்துவர்கள் மீது, தொடர்ந்து தூஷண வழக்குகள் போடப்படுவது ஏன்?

மார்ச் 9, 2013

பாகிஸ்தானில் கிருத்துவர்கள் மீது, தொடர்ந்து தூஷண வழக்குகள் போடப்படுவது ஏன்?

பாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாதவர்களின் நிலை: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. மதத்தின் அடிப்படையில் தான் அது உருவாக்கpபட்டுள்ளது. ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டம் தான் அங்கு அமூலில் உள்ளது. இதன்படி, முஸ்லீம்கள் அல்லாதவர்கள் காஃபிர்கள் எனப்படுவர். இஸ்லாமிய சட்டத்தில் அவர்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. முஸ்லீம் யாராவது புகார் கொடுத்துவிட்டால், அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லீம் முஸ்லீமுக்குத்தான் சாட்சி சொல்ல முடியும், ஆனால், காபிருக்கு சாதகமாகச் சொல்ல முடியாது. ஆனால், பாதகமாக வேண்டுமானல் சொல்லலாம், அது இஸ்லாமியச் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும், அதன்படியே தண்டனையும் கொடுக்கப்படும்[1].

Christians attacked in Pakistan 2013

கடந்த வருடங்களில் நடந்த வழக்குகள்: கடந்த மே மாதத்தில் அப்படி பொய் வழக்குப் போட்டதாக, இரு கிருத்துவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கர்மா பத்ராஸ் என்ற பாஸ்டரும் கைது (அக்டோபர் 2012) செய்யப்பட்டு, பைளில் / ஜாமீனில் (பிப்ரவரி 2013) விடுவிக்கப்பட்டுள்ளார்[2]. ரிம்ஸா மஷிஹ் (Rimsha Masih) என்ற 14 வயது பெண்ணும், இதே போல கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டாள்[3]. அவள் குரானின் சில பக்கங்களை எரித்ததாக குறாஞ்சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டாள். ஆனால், யாருமே அவள் அவ்வாறு செய்ததை கண்ணால் பார்க்கவில்லை அதாவது பார்த்ததாக சாட்சி சொல்லவில்லை என்பதனால் விடுதலை செய்யப்பட்டாள்[4]. 1990லிருந்து இதுவரை 250ற்கும் மேற்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர், 52 பேர் கொல்லப்பட்டூள்ளனர் / தூக்கிலிடப்பட்டுள்ளனர்[5].

Christian-activists-shout-slogans-in-support-of-Rimsha-Masih-via-AFP

3000 கிருத்துவர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன: லாஹூரில் மொஹம்மது நபியை(pbuh)ப் பற்றி சவன் அல்லது பப்பி (Savan, alias Bubby) என்ற கிருத்துவன் விமர்சித்துள்ளதாக தெரிகிறது. இதைக் கேள்வி பட்ட  சபிக் அஹமது (Shafiq Ahmed) கத்தியுடன் சவன் வீட்டிற்குச் சென்றுள்ளான். ஆனால், அவன் அங்குக் காணப்படவில்லை. இதனால் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சபிக் அஹமது வெள்ளிக்ழமை அன்று (08-03-2013) சுமார் 3000 பேர்களுடன் நூர் சாலையில் இருக்கும் ஜோஸப் காலனியில் உள்ள கிருத்துவர்கள் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்[6]. சவனுடைய அப்பா சனமன் மஸ்ஹி (Chaman Masih, 65) இருந்துள்ளார், அவரை நன்றாக அடித்து உதைத்துள்ளனர்[7]. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமாயின[8], கிருத்துவர்கள் உயிருக்குப் பயந்து கொண்டு ஓடிவிட்டனர்[9]. சவன் கைது செய்யப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளான்[10].

Rimsha - christian girl arrested for blasphemy

பாஸ்டர் மீது அவதூறு வழக்கு: இதேபோல, கடந்த மாதமும் அஸ்கர் நிஜாம் ராஞ்சா என்ற பாஸ்டர்  உயிருக்கு பயந்து ஓடியிருக்கிறார். அவரும் இஸ்லாமிற்கு விரோதமாக ஏதோ பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தான் அவ்வாறு பேசவில்லை என்றும், தனக்கு வேண்டாதவர்கள் அவ்வாறு திரித்துக் கூறியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் ஏற்கெனவே மன்னிப்புக் கேட்டிருந்தாலும், அவர் மீது தூஷணத்திற்கான பிரிவு 295-Aவில் வழக்குப் போடப் பட்டதால், தான் தாக்கப்படலாம் என்று ஓடிவிட்டார்[11].

கிருத்துவ பெண் மீது வழக்கு: இதே போல, மார்த்தா என்ற கிருத்துவப் பெண்மணியும் அவதூறு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாள். அவள் ஷெர்-இ-ரப்பானி என்ற மசூதி அருகில் மொஹம்மது நபியை(pbuh)ப் பற்றி அவதூறாகப் பேசியதாக புகார் கொடுக்கப்பட்டது[12]. தூஷணத்திற்கான பிரிவு 295-Aவில் வழக்குப் போடப் பட்டதால், மரணதண்டனை அளிக்கப்படும்.

கிருத்துவர்கள் பேசுவது எப்படி தூஷணமாகின்றன?: கிருத்துவர்கள் அப்படி என்ன பேசியிருக்கிறார்கள், அவை ஏன் இஸ்லாமிற்கு எதிராக உள்ளன. பைபிளில் உள்ளவற்றை பேசினால், இஸ்லாமிற்கு தூஷணமாகுமா? ஏசுகிருஸ்துவைப் பற்றி பேசினால், குரானில் சொல்லப்பட்டதற்கு விரோதமாக போகுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், செய்திகளில் விவரங்கள் சொல்லப்படவில்லை.

 

வேதபிரகாஷ்

09-03-2013


[1] முகலாயர்கள் / முகமதியர்கள் இந்தியாவை ஆண்டபோது, அப்படித்தான் இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் இந்தியர்களை நடத்தினர், ஆட்சி செய்தனர். அதனால் தான் கோவில் உடைக்கப்பட்டன, ஜெசியா வர் விதிக்கப்பட்டது என்றெல்லாம் சரித்திரத்தில் உள்ளது.

[2] Karma Patras, a 55-year-old pastor of Bado Malhi, Sangla Hill, had been languishing in Sheikhupura District Jail since October after preaching on Christ’s sacrifice at a funeral attended mainly by Christians. Some Muslims present thought he was speaking against the Islamic animal slaughter ritual observed at the time, and Patras was confused when police showed up at his home later that day (Oct. 13, 2012) and arrested him on charges of defaming Islam .

http://morningstarnews.org/2013/02/pastor-in-pakistan-released-on-bail-after-mistaken-blasphemy-accusation/

[4] Rimsha Masih, believed to be no older than 14, was charged with burning pages of the Koran in August but was granted bail in September after a cleric was detained on suspicion of planting evidence to stir up resentment against Christians. Masih’s lawyer, Tahir Naveed, said the Islamabad High Court’s decision to throw out the case was based on the fact that no one had seen her burning pages of the Koran.The case provoked international concern and she could, in theory, have faced execution under Pakistan’s blasphemy law despite her age and reported mental problems.

http://www.reuters.com/article/2012/11/20/us-pakistan-blasphemy-idUSBRE8AJ0B420121120

[5] The number of blasphemy cases brought under the law is rising. Since 1987, there have been almost 250 cases, according to the Center for Research and Security Studies think-tank.Convictions are common, although the death sentence has never been carried out. Most convictions are thrown out on appeal but mobs often take the law into their own hands.The think-tank said 52 people had been killed after being accused of blasphemy since 1990. http://www.reuters.com/article/2012/11/20/us-pakistan-blasphemy-idUSBRE8AJ0B420121120

ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!

பிப்ரவரி 22, 2013

ஐயோவெடிக்கும், அதிரும், அலறும்பாத்ஐதராபாத்!

நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை  காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன.  இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.

உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.

இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார்.  அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.

ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!

மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே  விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளதுகுண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.

ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.

இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

[2] Sources claim that Indian Mujahideen founder Riyaz Bhatkal, who is holed up in Pakistan, masterminded the Hyderabad twin blasts and carried it out with the help of IM operative Yasin Bhatkal.

http://timesofindia.indiatimes.com/india/Hyderabad-bomb-blasts-Initial-probe-suggests-hand-of-Indian-Mujahideen/articleshow/18625615.cms

[3] Initial reports speculate use of ‘delayed timer’ for detonating the bombs used in the blasts. The ‘delayed timer’ provides ample time for the bomb-planter to escape after placing the bomb.

http://zeenews.india.com/news/andhra-pradesh/live-hyderabad-blasts-delayed-timer-used-to-detonate-bombs_830723.html

[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.

http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092

[6] In Dilsukhnagar, police officers say the wires of a security camera near the site of yesterday’s blasts had been cut four days ago. Nobody tried to re-connect the camera, though traffic policemen were aware of the lapse.

http://www.ndtv.com/article/india/hyderabad-bomb-blasts-danger-signs-since-october-a-disconnected-cctv-this-week-334057