Archive for the ‘கட்டை அவிழ்த்தல்’ category

மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!

மே 2, 2010

மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!

மொஹம்மது மௌதூத் கான் (Mohammed Maodood Ahmed Khan) தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டான், “நான் கிருத்துவர்களுக்கு ஏசு கிருஸ்து; இந்துக்களுக்கு சிவா; முஸ்லீம்களுக்கு மஸிஹா. நான் உலகத்தைக் காப்பாற்றி இருப்பேன்“, என்றெல்லாம் சொன்னனாம், அவன் மார்ச் 8ம் தேதி 2010 கைது செய்யப் பட்டபோது!

முஹம்மது கான் / அஹமது கான் தனது மனைகள் – தேவதைகள் – காயத்ரி, சதி, பார்வதி, கங்கா, துர்கா மற்றும் மஹாகாளி என்றானாம். அனால், உண்மையில்

1. இவனது முதல் மனைவி நஜ்மா ஃபாதிமா ஆவாள், அவளுடன் ரியாதில் வாழ்ந்து வந்தானாம்.

2, இரண்டாவது மனைவி காயத்ரி தேவி, பத்தே நாட்களில் ஓடிவிட்டாளாம்.

3. சஜிதா என்ற மூன்றாவது மனைவி பதினான்கு நாட்கள் இருந்தாளாம். அந்த  குருகிய காலத்திலேயே முகல் ரெஸிடன்ஸி என்ற இடத்தில் இருந்த அடுக்கு மாடி வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டானாம்.

4. நான்காவது மனைவி சும்ரனா. அவள் இவன் கொடுமை தாங்காமலேயே இறந்து விட்டாளாம்.

5. ஐந்தாவது மனைவு தஸீன் மட்டும் இவனுடனே இருக்கிறாளாம்.

6. ஆறாவது மனைவி ஸபானா, இவன் அவளை கொலை செய்ய முயற்சித்தபோது தப்பித்து ஓடிவிட்டாளாம்.

இவ்வாறு, இவன் பணக்காரப் பெண்களாகத் தேர்ந்தெடுத்து, பல லட்சங்களை சுருட்டிக் கொண்டு மறைந்து விடுவானாம்.

போலீஸ் சொல்வது என்னவென்றால், “ஏமாற்றுவேலைகளுக்காக இந்த கான் பல தடவை கைது செய்யப் ப்ட்டிருக்கிறான். பஞ்சாபில் கடியனா போலீஸாரால், மத ஒற்றுமை குளைக்கும் விதத்தில் பேசியதற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். அவன் ஆறு பெண்களை மணந்து கொண்டு ஒன்பது கொழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறான். ஆனால், எல்லா மனைவிகளும் இவனை விட்டு ஓடிபோய் விட்டனராம்“. அவனுடைய டார்ச்சர் / கொடுமை தாங்க முடியவில்லை என்று ஓடினராம்.

வெஸ்லி என்பவரின் கூற்றுப்படி, “ஜெயிலிலிருந்துவெளியே வந்த பிறகும் அதே மாதிரியான வேலைகளை மறுபடியும் செய்து வந்தானாம்“.

சில மாதங்களுக்கு முன்பாக, எம். ஜே. மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த  யாஸ்மீன் என்ற டாக்டரிடமிருந்து, ஒரு கிலோ எடையுள்ள தங்கநகைகளைத் திருட்டுத்தனமாக கவர்ந்துள்ளானாம். அது தவிர தனக்காக ஒரு மனையை ரரூ.25 லட்சங்களுக்குப் பதிவு செய்துத் தரச் சொல்லியுள்ளான்.

இதே மாதிரி பஸீர்பாக்கைச் சேர்ந்த லதா என்ற பெண்மணியிடமிருந்து ரூ. ஆறு லட்சம் அபகரித்துள்ளான். பிறகு புகார் பேரில் அவன்  மார்ச் 8ம் தேதி சிறப்புப் போலீஸ் பிரிவால் பிடிபட்டான்.

ஆகமொத்தம், இவன் நிச்சயமாக செக்ஸ் மற்றும் பணத்திற்காகத் தான் இவ்வாறு சாமியார் வேடம் போட்டு திரிந்துள்ளான் எனத் தெரிகின்றது. ஆனால், ஊடகங்கள் ஏன் மௌனமாக இருந்தன, இப்பொழுது லேசாக வெளிவிடுகின்றன என்று புரியவில்லை.

நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்தவனுக்கு மரண தண்டனை!

மார்ச் 30, 2010

நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்தவனுக்கு மரண தண்டனை!

ஒரு சவுதி மந்திரவாதி!

பெண்களை மந்திரத்தாலே வசியப் படுத்துவதில் வல்லவனாம்!

அவ்வாறே அவன் வசியப் படுத்தி நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்து விட்டானம்!

ஒரு பத்திரிக்கை சொல்வதென்னவென்றால், “காதிஃப் மந்திரவாதி” (the “Qatif sorcerer”) முதலில் பத்தாண்டு சிறைவாசம் மற்றும் 1000 கசையடி என்று தண்டனை அளிக்கப் பட்டதாம். பிறகு அது மரண தண்டனையாக மாற்றப் பட்டதாம்!

அல்-ரியாத் நாளிதழ் சொல்வதவது, அந்த அடையாளம் தெரியாத மனிதன் காதிஃப் என்ற கிழக்கு நகரத்தில் இருந்து பெண்களை பல ஆண்டுகளாக மிரட்டி பயமுறுத்தி வந்தானாம்.

முதலில் எந்த பெண்ணவது “காதல் மந்திரத்தால் கட்டுப் பட்டிருந்தால்”, அக்கட்டை பிரித்துவிடுவேன் என்று ஆசைக்காட்டுவானாம். அப்படி அவர்கள் – காதல் கட்டுண்ட பெண்கள், தங்களது “காதல்-மந்திர-கட்டை” அவிழ்க்க வரும்போது, இவன் அவிழ்த்து லீலைகள் புரிவானாம். அதுமட்டும் அல்லாது நமது லெனின் குருப் / குருப் லெனின் மாதிரி திருட்டுத் தனமாக வீடியோவையும் எடுத்து விடுவானாம்!

பிறகு அதை தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்னிடம் காட்டி மிரட்டி தனக்கு தன்னுடைய “மந்திரத் தொழிலில்” உதவுமாறு வற்புறுத்துவானாம். அதாவது அப்படியே மற்ற பெண்களை அங்கு அழைத்து வருவது, இவன் கற்பழிப்பது என்று உதவி செய்யத் தூண்டி மிரட்டுவானாம், அவர்களும் பயந்து கொண்டு அவ்வாறே செய்து வந்தார்களாம், அதாவது பெண்களை அழைத்து வந்து, இந்த காமுகனிடம் மாட்டி வைத்து கற்பழிக்க தோதுவாக இருந்தார்களாம்.

அரபு நியூஸ் சொல்வதென்னவென்றால், அவன் பல கேமராக்களை அவ்வாறு மறைத்து வைத்துள்ளதாகவும், 200ற்கும் மேலாக அத்தகைய கலவி-சரச வீடியோ டேப்புகள், 180 கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்களின் விவரங்கள் முதலியவற்றை தன்னுடையா வீட்டில் வைத்திருந்தானாம். [நல்ல வேளை நம்மூர் ஆட்களாக இருந்தால் அதை ரூ. 500/- என்று போட்டு விற்றிருப்பார்கள், பாவம், நக்கீரன் ஜொல்லுவிடுவதும், சன் –  டிவி மூச்சு விடுவதும் தெரிகிறது / கேட்கிறது].

அல்-ரியாத் சொல்வதாவது, அவன் அவ்வாறு 350 மேலாக பல பெண்களை மயக்கியிருப்பான்

கடைசியாக அவன் ஒருவனிடத்தில் மாட்டிக் கொண்டானாம். அதாவது ஒரு பெண் அவனிடத்தில் அகப்பட்டு தப்பி வந்தபோது, அவள் சொன்ன விஷயம் வைத்துக் கொண்டு அவன் பிடிக்கப்பட்டானாம். இவ்வழக்கு சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷனிடத்தில் அனுப்பப் பட்டுள்ளதாம்.

சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் என்பது சவுதி மத-போலீஸார் ஆவார்கள்! அதாவது மததைக் காக்கு  போலீஸார்!

இந்தியாவிற்கும் இத்தகைய போலீஸார் இன்று தேவைப் படுகின்றனர்!