Archive for the ‘கசாப்புக்காரத்தனம்’ category

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

ஜூலை 29, 2013

தீவிரவாதிகளின் தொடர்பு பெங்களூரு குண்டுவெடிப்புடன் தொடர்பு இருப்பது முன்னமே ஏடுத்துக் காட்டப்பட்டது.

Indian Secularism

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

Boston-marathon-bombing-headline

பாஸ்டன்முதல்பெங்களூருவரைதீவிரவாதத்தைஅமெரிக்காவும்இந்தியாவும்அணுகும்முறைகள்:

  • 17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
  • இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
  • இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
  • 15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
  • 22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
  • அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

Boston bomber - alert notice

பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.  இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும்…

View original post 1,070 more words

லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?

மார்ச் 16, 2013

லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?

Fidayeen attack 4

13-03-2013 புதன்கிழமைகாலை 11.00 மணி[1]: காஷ்மீரில் பெமினா என்ற இடத்தில் உள்ள பொது பள்ளிக் கூடத்திற்கு அருகில் CRPFயின் 73ம் முகாம் (CRPF’s 73rd battalion) உள்ளது. இந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், அப்பொழுது, மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பள்ளி மைதானத்தில் சிகப்பு டி-சர்ட், கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை டி-சர்ட், கருப்பு பேன்ட் அணிந்த இருவர் கிரிக்கெட் கிட்டுடன் மைதானத்தில் நுழைந்தனர். அருகில் பாதுகாப்பு வீரர்களும் நின்றிருந்தனர். சிறிது நேரம் விளையாடுபவர்களிடத்தில் பேச்சு கொடுத்தனர்.

Fidayeen attack 1

13-03-2013 புதன்கிழமைகாலை 11.05 மணி[2]: பேசிக் கொண்டேயிருந்தவர்கள், திடீரென்று, கிரிக்கெட் கிட்டைத் திறந்து, ஏ.கே-47 மற்றும் கையெறிக் கொண்டுகளை எடுத்து, CRPF வீரர்கள் மீது வீசி, சுட ஆரம்பித்தனர். இதில் ஐந்து வீரர்கள் உடனடியாக இறந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஓட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட வீரர்கள் தீவிரவாதிகளின் மீது சுட ஆரம்பித்தனர். பதினைந்து நிமிடம் துப்பாக்கி சூடு நடந்தது, இறுதியில் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் ஃபிதாயீன் என்ற ஜிஹாதித் தற்கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3].

Fidayeen attack 2

கொல்லப்பட்டவீரர்கள்பலமாநிலங்களைச்சேர்ந்தவர்கள்: ஜிஹாதி தீவிரவாதம் காஷ்மீரத்தில் குரூரக்கொலையில் ஈடுபட்டாலும், கொலை செய்யப்பட்ட வீரர்கள் இந்தியாவின் பல மாரநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

  1. ஏ. பி. சிங் – assistant sub-inspector A.B Singh of Ujjan, Madhya Pradesh,
  2. ஓம் பிரகாஷ் – constable Om Prakash (Sehore, MP),
  3. எல். பெருமாள் – constable L. Perumal (Madurai, Tamil Nadu),
  4. சுபாஷ் – constable Subhash (Ranchi, Jaharkand) and
  5. சதீஷ் ஷா – constable Satish Shah (Mandya, Karnataka).

Fidayeen attack 3

கைப்பற்றப்பட்டஆயுதங்கள்: கிரிக்கெட் கிட் என்று எடுத்து வந்ததில், உள்ளேயிருந்த ஆயுதங்கள்:

  • இரண்டு ஏ.கே-47 துப்பாக்கிகள் – Two Ak-47 rifles,
  • அதற்கான வெடிப்பொருட்கள் – five Ak magazines,
  • ஆறுமுறை உபயோகிக்கக்கூடிய குண்டுகள் – six AK rounds,
  • இரண்டு சீன கைத்துப்பாக்கிகள் – two Chinese pistols,
  • இரண்டு முறை சுட குண்டுகள் – two pistol rounds,
  • கைக்குண்டு தூக்கியெறியும் கருவி – one UBGL –  Under Barrel Grenade Launcher,
  • அதற்கான மூன்று குண்டுகள் – three UBGL grenades and
  • நான்கு கையெறி குண்டுகள் – four hand grenades

Fidayeen attack 5

கடந்த ஜனவரி 6-7, 2010 தேதிகளில் இதே மாதிரி, இந்த தீவிரவாதிகள், லால் சௌக்கில் ஒரு பஞ்சாப் ஓட்டலில் மறைந்து கொண்டு பாதுகாப்பு வீரர்களுடன் சண்டை போட்டனர். அப்பொழுது தங்களை லஸ்கர்-இ-தொய்பா என்று சொல்லிக் கொண்டனர். அதாவது “பிதாயீன்” என்பது பொதுப்பெயர், ஜிஹாதி போல!

தாக்குதலைநடத்தியவர்கள்யார்?: ஜிஹாதி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று எல்லாவிதமான இஸ்லாமிய கொலைவெறிக் கும்பல்களுடன் மக்களில் பெரும்பாலோர் தொடர்பு வைத்திருப்பதனால், தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி, பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்னம் இருந்தன[4]. ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் தாக்கினர் என்று தொலைபேசி மூலம் யாரோ அறிவித்தாக மகூறி, பிறகு அவர்கள் மறுத்துள்ளதாக அறிவித்தனர். பிறகு லஸ்கர்-இ-தொய்பா தாக்குதல் மாதிரி இருக்கிறது என்று அபதுல் முஜாதபா என்ற போலீஸ் அதிகாரி கூறியதாக கூறினர். ஆனால் மாட்டிக் கொண்ட[5] “அபு தல்ஹா” என்ற ஜிஹாதியிடமிருந்து, இது “பிதாயீன்” வேலைதான் என்று தெரியவந்துள்ளது[6]. “பிதாயீன்” என்ற ஜிஹாதிகள் தம் உயிரையும் கொடுத்து காபிர்களைக் கொல்லும் ஜிஹாதிகள். குரான் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, இத்தகைய வேலைகளை செய்கிறார்கள். ஏனெனில் அல்லா அவர்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ளதாக நம்புகிறார்கள். முன்னர் ஷிண்டே ராஜ்ய சபாவில் பாகிஸ்தானிய தொடர்பு உள்ளதாக கூறியிருக்கிறார்[7]. பிறகு அந்த தலைவெட்டியானிடமே குர்ஷித்தை விட்டுக் கேட்டிருக்கலாமே?

Kashmir terror

ஜிஹாதி தாக்குதலில் தமிழக வீரர் இறப்பு: பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் பலியான மதுரை வீரர் எல். பெருமாள் உடல் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. செல்லூர் ராஜா – தமிழக அமைச்சர், அன்சுல் மிஸ்ரா – மாவட்ட கலெக்டர், ஓம் பிரகாஷ் -CRPF கமாண்டெர், பாலகிருஷ்ணன் – மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்[8]. அமைச்சர் ரூ. ஐந்து லட்சம் தொகைக்கான செக்கை குடும்பத்தாருக்கு அளித்தார். சேடபட்டி முத்தையா –திமுக, இல. கணேசன் – பிஜேபி, ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் முதலிய இயக்கத்தோடும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செல்லுத்தினர்[9].

al-jihad-al-jihad-al-jihad

ஜிஹாதி முஸ்லீம்கள் தாக்கிக் கொன்றுள்ளதால் பகுத்தறிவு தமிழர்கள் கண்டனம் செல்லுத்தவில்லையா?: ஜம்மு காஷ்மீரில் கடந்த (13 ம் தேதி) புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பெருமாள் என்பவரும் ஒருவர். இவரது உடல் நேற்று இரவு சென்னைக்கு வந்தது. இடையப்பாடியில் இருக்கும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுமார் 11 மணி அளவில் தும்மநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்தது. தெருக்கள் எல்லாம் கருப்புக் கொடிகளினால் துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்: “இது போன்ற பயங்கரவாத சம்பவத்தை தடுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை”, என்றார்.  ஏன் மற்றவர்கள் எதுவும் சொல்லக்கூடாதா?

11 முறை தோற்று வெண்ர பெருமாள், 17-முறை தாக்கிய கஜினி முஹம்மது ஜிஹாதிக்கு பலியாகி விட்டாரா?: பலியானவர் பெருமாள் (வயது 29) மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை லிங்கம் ஆட்டோ டிரைவர் ஆவார். மொத்தம் 5 குழந்தைகள் பெற்ற இவருக்கு பெருமாள் என்பவர் மிக பாசமாக இருப்பாராம். பெருமாள் 10 ம் வகுப்பு வரை படித்து எப்படியாவது ராணுவ படையில் சேர வேண்டும் என்று பெரும் ஆவலோடும், லட்சிய கனவோடும் இருந்து வந்தாராம். இந்த படையில் சேருவதற்கான தேர்வில் பல முறை தோற்று போனாராம். குறிப்பாக 10 முறை இவர் தேர்வாகவில்லை இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து 11 வது முறை படைக்கு பிட் ஆனாராம். தேர்வு செய்யப்பட்ட தகவலை அவர் தனது கிராமம் முழுவதும், உற்றார் உறவினர்களிடம் பெரும் செய்தியாக தெரிவித்து மகிழ்ந்தாராம் பெருமாள்.

Indian flag burned

திருமணத்திற்கு ஜிஹாதிகள் பிணத்தை அனுப்பியுள்ளார்களே?: கடந்த 2010 ல் பணியில் சேர்ந்த பெருமாள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு பணியாற்றிய 3 ஆண்டில் தனது இன்னுயிரை இழந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முறை விடுப்புக்கு வந்த பெருமாள் திருமணம் செய்வது தொடர்பாக தனது உறவுக்கார பெண்ணை பார்த்து உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். வரும் ஜூன் மாதம் ஊருக்கு வருவேன் அப்போது திருமணம் செய்து கொள்வோம் என்று வாக்கு கொடுத்து சென்றவர் இன்று பிணமாக திரும்பியதை கண்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.  இவரது உடல் இன்று சொந்த கிராமத்திற்குகொண்டு வரப்பட்டது.அமைச்சர் , மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக போலீசார் சார்பில் 21 குண்டுகளும், சி.ஆர்.பி.எப்., போலீசார் சார்பில் 21 குண்டுகளும் வானத்தை நோக்கி சுடப்பட்டன. வருவதையொட்டி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் காத்து நிற்கின்றனர். மதுரையில் மாவட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவ்வளவுதான், மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், ஏன் இப்படி இந்தியா வீரர்களை ஜிஹாதிகளுக்கு பலியாக்க வேண்டும்?

Karunanidhi-with-kulla

Karunanidhi-with-kulla

என்ன நடந்தாலும், குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கும் பட்டாளம் நஎப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் குர்ஷித் போன்ற பேனாக்களில் ரத்தத்தை நிரப்பும் முஸ்லீம்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், எதிரிகளுடன் உணவருந்துவார்கள்!

வேதபிரகாஷ்

16-03-2013


[4] Police say two pocket diaries; a SIM card of an Indian telecommunication company issued in Uri, an ointment tube made in Pakistan; an under-surveillance guerilla activity controlled by a Kashmiri militant for several weeks at Palhalan village of Baramulla; the Hizbul Mujahideen’s first-ever claim of owning up a suicide attack; the Lashkar-e-Taiba spokesman’s “meaningful quiet”; no local claim on the two bodies (of the militants); besides some telephonic intercepts and call detail records pieced together by the investigators make the fidayeen attack “a clear case of foreign terror.” “We have noticed the signature of the Lashkar-e-Taiba in this operation,” a senior official associated with the investigation told The Hindu. He refused to disclose details but was confident that a breakthrough was not far away. “An operation jointly planned and executed by the Kashmiri and Pakistani cadres of the LeT in coordination with the United Jihad Council,” he said when pressed to identify the actors.

[6]However, another police source told The Hindu that on specific information, the militant in his late 20s, codenamed Abu Talha, was arrested with a loaded pistol during a dramatic raid. The Army and the CRPF provided cover to the SOG unit.

http://www.thehindu.com/news/national/other-states/pakistani-militant-linked-to-fidayeen-attack-arrested/article4509622.ece

இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளானாம்!

மார்ச் 15, 2013

இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளானாம்!

இஸ்லாமிய அடிப்படைவாதி கைது: இஸ்லாமிய வெறியர்களின் குரூரக்கொலைகளைக் கண்டும் இனி காணாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதும், இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, பங்களாதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. வியாழக்கிழமை 14-03-2013 அன்று ஜமாத்-இ-இஸ்லாமி [Jamaat-e-Islami (JI)] என்ற அந்த அடிப்படைவாத இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவனான, சிட்டகாங்கில் இந்துக்கள் மற்றும் கோவில்களைத் தாக்கியதற்குத் தூண்டுதலாக இருந்த ஆலம்கீர் கபீர் சௌத்ரி என்பவன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

தொடரும் குற்றங்கள்: ஜமாத்தின் இளைஞர் இயக்கமான இஸ்லாமி சத்ரா ஷிபிர் முன்னரே குறிப்பிட்டபடி பல இடங்களில் இந்துக்களைத் தாக்கி, அவர்களது, உடமைகள், வீடுகள், கோவில்கள் என்று அனைத்தையும் சூரையாடினர்[1]. போலீஸ் மற்றும் குற்றத்தடுப்பு விரைவு நடவடிக்கை படையினர் சேர்ந்து அவனை கைது செய்தனராம்[2]ளதாவது அந்த அளவிற்கு முஸ்லீம் அடிப்படைவாதிகள் உள்ளனர் என்று தெரிகிறது. பங்சாலி என்ற இடத்தில் நடந்த தாக்குதல்களில் 70ற்கும் மேற்பட்ட கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்துக்கள் ஆவர்[3]. 1971 குற்றங்களுக்கு ஒரு வெறியன் தண்டிக்கப்படுகிறான் என்றால், அதை வைத்துக் கொண்டு, அதே மாதிரியான குற்றங்களை முஸ்லீம்கள் செய்துள்ளனர்[4]. இந்துக்களால் அழத்தான் முடியும் போலிருக்கிறது[5]. விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்[6].

இன்னும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: காஜல் தேவ்நாத், பங்களா பூஜா உட்ஜாபன் பரிஷத்தின் தலைவர், “அப்பகுதியில் இருக்கும் இந்துக்கள் இன்னும் பீதியில் தான் வாழ்ந்து வருகின்றனர். உள்ளூர் எம்.பி மற்றும் இதர முஸ்லீம்கள் அத்தகைய குரூரத் தாக்குதல்கள் நடத்த ஆதரவாக இருந்தனர். அவாமி லீக் மற்றும் முக்கிய எதிர் கட்சியான பி.என்.பி Bangladesh Nationalist Party (BNP) கட்சியினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கின்றனர்”, என்று கூறியுள்ளார்[7].

இந்துக்களைப் பற்றிப் பேச யாரும் இல்லை: இந்தியாவில் ராஜ்யசபாவில் பி.ஜே.பி மட்டும் தான் இந்துக்களைக் காக்கும் படி, கோரிக்கையை வைத்தது, தாக்குதல்கள் பற்றியும் பேசியுள்ளது[8]. கோவில்கள் தாக்கப்படுவது, இன்னும் தொடர்ந்து வரவதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன[9]. இவ்வளவு நடந்தும், நடந்து கொண்டிருந்தாலும், போர்க்குற்றங்கள் நடந்ததற்கான சாட்சிகள் நம்பகமாக இல்லை என்று குற்றவாளிகள் சார்பில் வாதம் புரிகின்றனர்[10].

வேதபிரகாஷ்

15-03-2013


[1] Chowdhury’s arrest came two weeks after suspected activists of Jamaat and its student affiliate Islami Chatra Shibir went on rampage at their southeastern stronghold attacking and vandalizing several houses and temples of Hindu community alongside the local government establishments.

http://timesofindia.indiatimes.com/world/south-asia/Jamaat-leader-held-for-inciting-anti-Hindus-attacks-in-Bangladesh/articleshow/18975225.cms

[2] “Police and (elite anti-crime Rapid Action Battalion) RAB teams jointly arrested Banshkhali upazila chairman Alamgir Kabir Chowdhury on charges of inciting violence against Hindu community and attack on their temples and property,” a police official in the port city of Chittagong told PTI by phone.

[3] Banskhali was one of the areas where the followers of the Hindu faith came under attacks during the recent violence which saw deaths of over 70 people, including six policemen, while several dozen Hindu temples were vandalized.

[7] “A sense of fear is still there among the Hindu community although no fresh violence was reported in the past two days … we are disappointed that the lawmakers of the (ruling) Awami League and main opposition BNP and peoples representatives at local levels are not taking initiatives for social and political resistance,” Bangladesh Puja Udjapon Parishad vice-president Kazal Debnath told PTI.

பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!

நவம்பர் 4, 2011

பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!

பாகிஸ்தானில் பக்ரீத் மிருகவதை எதிர்த்துப் பிரச்சாரம்: பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் சிலர் மிருக வதையை எதிர்த்து தங்கள் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்[1]. பக்ரீத் பண்டிகையின் போது, ஒட்டகம், ஆடு, மாடு போன்ற மிருகங்களை அறுக்கும், “குர்பானி’ என்ற சடங்கு நிறைவேற்றப்படுவது வழக்கம். பாகிஸ்தானில் இது அதிக எண்ணிக்கையில் நடக்கும். கடந்தாண்டு, மிருக வதை தடுப்பு அமைப்பு ஒன்று, பாகிஸ்தானில் மிருக வதையைத் தடுக்க ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது.

மிதவாதி முஸ்லீம்களின் கோரிக்கை: முஸ்லீம்களில் தாராள மனப்பாங்குடன், திறந்த மனத்துடன், மிதவாதிகளாக் இருக்கும் முஸ்லீம்கள்  அத்தகைய கோரிக்கையை வைத்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர், மிருகங்களை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பிரசாரம் செய்து வருகின்றனர். பினா அகமது மற்றும் பரா கான்[2] இருவரும் இதுகுறித்து தங்கள் வலைப்பூவில்[3] எழுதியிருப்பதாவது: குர்பானியின் தத்துவம் நாம் அறிந்தது தான். நமது மதச் சடங்குகளை பண்பாடு, மத ரீதியில் அறிவியலோடு சேர்த்து நடத்த வேண்டும்.

கடவுளின் படைப்புகளான மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருக்கிறது, சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது: கடவுளின் படைப்புகளான இந்த மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருப்பதையும், சுற்றுச்சூழலுக்கு இதனால் எவ்வளவு கேடு ஏற்படுகிறது என்பதையும், மனித உடலுக்கு அசைவ உணவு எவ்வளவு கேடுகளைத் தருகிறது என்பதையும், அசைவ உணவு குறித்து இஸ்லாம் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்; பரிசீலிக்க வேண்டும்[4].

வெள்ளம் போது செய்யப்பட்ட பிரச்சாரம் (2010): இந்தாண்டு 2010 ஒரு ஆடு வாங்குங்கள். அதை, “குர்பானி’ கொடுப்பதற்குப் பதிலாக, வெள்ளத்தில் தங்கள் கால்நடைகளை இழந்த கிராமத்தவருக்கு அதை தானமாகக் கொடுங்கள்.இவ்வாறு அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்[5].

மாமிச உணவு கிடைக்கும் விதம், அதனால் வரும் உபாதைகள்: மாமிசத்தைத் தின்பதமனால் யயிற்றுகப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டு, ஈத் நாட்களில், மருத்துவ மனைகளில் முஸ்லீம்கள் அனுமதிக்கப் படுவதும் அதிகமாகிறது[6] அதுமட்டுமல்லாமல், பொதுவாக “ஹலால்” மாமிசம் முறையாக மிருக்லங்களைக் கொன்று எடுத்தாலும், பலமுறை, அம்மிருகங்கள் எப்படி கிடைக்கின்றன, எவ்வாறு உள்ளன என்று முஸ்லீம்களுக்குத் தெரிவதில்லை[7]. அதிகமாக மாமிசம் சாப்பிடுவதும் ஆரோக்யத்திற்கு நல்லதில்லை. அதனால் இருதயநோய்கள் வருவதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளன[8].

இந்திய முஸ்லீம்கள் மௌனம் சாதிப்பது ஏன்? பாகிஸ்தான் முஸ்லீம்கள் இப்படி பிரச்சாரம் முன்றாண்டுகளாக செய்து வருகின்ற நிலையில், இந்திய முஸ்லீம்கள் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வலைப்பூக்களில் / இணைத்தளங்களில் தமது சக்தியைத் திரட்டி, இரவு-பகலாக மற்ற விஷயங்களுக்கு பிரச்சாரம் செய்து வரும் முஸ்லீம்கள் இதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை!

வேதபிரகாஷ்

04-11-2011


[1]தினமலர், மிருகவதையைஎதிர்த்துபாகிஸ்தானில்பிரசாரம்,  அக்டோபர் 31,2011,02:59 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=340779

[2] அவர்களது முழு கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்: http://goatmilkblog.com/2010/11/15/muslims-please-spare-the-animals-this-eid/

[3] www.goatmilkblog.com;  அதுமட்டுமல்லாது ஆதரித்து-எதிர்த்து கொடுக்கப்படுள்ள கருத்துகளையும் படித்தறியலாம்.

[4] “Muslims have a duty both religiously and culturally to evolve with scientific and moral progress. The meaning behind Eid-ul-Azha will always stand, but in today’s world, we must look at things practically,” wrote Bina Ahmed and Farah Khan on goatmilkblog.com, a virtual hangout for Asian Muslims settled in the West.

http://zeenews.india.com/news/south-asia/pak-liberals-oppose-sacrifice-of-animals-on-eid_738929.html

[5] Last year, an animal activist organisation, which is now almost defunct, had run a campaign asking people to “save” an animal instead of “sacrificing it” after the devastating floods that left over a million animals dead in Pakistan. “Buy a goat – and this year, instead of sacrificing it, send it back to a village to replace what was lost and help people back onto their feet. Goats can provide an ongoing income for families through the sale of milk, ghee, meat and kids, as well as supplement their own diet and agriculture,” was the appeal from the Karachi-based organisation.  www.pakistaniat.com

[6] In many parts of the world, the festivities of Eid-ul-Azha bring along with it an increase in illness.  For example, according to the Daily Star newspaper in Bangladesh, the number of individuals being admitted to hospitals increases by about 10 percent during this time of year brought on by a gluttonous consumption of meat.  http://newshopper.sulekha.com/meat-intake-during-eid-makes-dhaka-medicos-see-red_news_1127916.htm

[7] While it is true that some halal slaughterhouses try their best to ensure that the animals they slaughter are raised according to Islamic teachings, many are unaware of the origins of the animals that they sell to consumers, focusing instead only on the manner in which the animal is killed.  

(http://www.islamonline.net/servlet/Satellite?c=Article_C&pagename=Zone-English-News/NWELayout&cid=1178724246679)

[8] Eating too much eat is not good for your health either.  Studies upon studies have revealed to us that eating red meat in excess increases our risks of developing cardiovascular diseases and developing cancer. We are only about five percent of the world’s population yet we grow and kill an astonishing 10 billion animals a year – more than 15 percent of the world’s total. http://www.nytimes.com/2008/01/27/weekinreview/27bittman.html.

ஜிஹாதி குருரக் குணமா, கசாப்பின் கசாப்புக்காரத்தனமா?

செப்ரெம்பர் 29, 2010

ஜிஹாதி குருரக் குணமா, கசாப்பின் கசாப்புக்காரத்தனமா?

கசாப்பின் கசாப்புக்காரத்தனம் – சிறை அதிகாரிகள் மீது கசாப் தாக்குதல்[1]: மும்பை தாக்குதல் வழக்கில் 166க்கும் மேலான உயிர்களை குடித்து பலிவாங்கிய[2], தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாக்-பயங்கரவாதி அஜ்மல் கசாப், சிறையில் அதிகாரிகளைத் தாக்கியது குறித்த வீடியோ காட்சிகள் அடங்கிய “சிடி’யை, மும்பை ஐகோர்ட்டில் மகாராஷ்டிரா அரசு நேற்று தாக்கல் செய்தது. மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் கசாப்புக்கு, கீழ் கோர்ட் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு, மும்பை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், அரசு தரப்பு வக்கீல் உஜ்வல் நிகாம், மும்பை ஐகோர்ட்டில் நேற்று, வீடியோ காட்சிகள் அடங்கிய ஒரு “சிடி’யை தாக்கல் செய்தார்[3].

“கசாப், கமாண்டோ பயிற்சி பெற்ற பயங்கரவாதி” – இதுகுறித்து வக்கீல் உஜ்வல் நிகாம், நீதிபதி ரஞ்சனா தேசாயிடம் கூறியதாவது: “மும்பை, ஆர்தர் ரோடு சிறையில் அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டுள் ளான். கடந்த 1ம் தேதி, சட்ட விரோதமான தவறான நடவடிக்கைகளில் அவன் ஈடுபட்டிருந்தான். அப்போது சிறை அதிகாரிகள் அவனை கண்டித்தனர். ஆத்திரம் அடைந்த கசாப், சிறை அதிகாரிகளை தாக்கினான். இந்த காட்சிகள், சிறை வளாகத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த “சிடி’யைத் தான், தற்போது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளேன். கசாப், கமாண்டோ பயிற்சி பெற்ற பயங்கரவாதி. அவனின் நடவடிக்கைகளால் சிறை அதிகாரிகளுக்கும், ஏன், அவன் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. கசாப் சார்பில், தனது வக்கீலை தனியாக சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது சிறை அதிகாரிகள் யாரும் இருக்கக் கூடாது எனக் கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கோர்ட் அனுமதி தரக் கூடாது.இவ்வாறு உஜ்வல் நிகாம் கூறினார்.

கசாபுக்கு கொலை மிரட்டல் என்பது உண்மையை மறைக்கத்தான்: பொதுவாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு ஒரு பாதுகாவலர் நியமிக்கப்படுவது வழக்கம். கசாப் பயங்கரவாதி என்பதால் சிறை அதிகாரிகள் நாள் முழுவதும் காவல் காக்கின்றனர். அத்துடன் ரகசிய கண்காணிப்புக் கேமரா மூலம் 24 மணி நேரமும் கசாபின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. மகாராஷ்டிர சிறைத்துறை விதிகள் 1962-ன்படி, தூக்குதண்டனை பெற்ற குற்றவாளி, சிறை அதிகாரிகள் முன்னிலையில்தான் எவருடனும் பேச வேண்டும் என்ற விதி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்[4]. கசாபுக்கு கொலை மிரட்டல் உள்ளதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை அக்டோபர் 18-ம் தேதி முதல் மேற்கொள்ள நீதிபதிகள் திட்டமிட்டுள்ளனர்.

கசாப்பின் வக்கீல் வக்காலத்து: இதுகுறித்து கசாபின் வக்கீல் அமின் சோல்கர் கூறுகையில், “ஆலோசனை நடத்தும்போது வக்கீலை தவிர, வேறு நபர்கள் உடன் இருந்தால், சில பிரச்னைகள் ஏற்படும் என, கசாப் கருதுகிறான். எனவே, தனியாக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்’என்றார். வக்கீலுடன் கசாப், தனியாக ஆலோசனை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை, மும்பை ஐகோர்ட்டில் இன்று நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழகில், மரண தண்டனையை எதிர்த்து அப்பீல் வேறு செய்துள்ளான்[5].


[1] தினமலர், சிறை அதிகாரிகள் மீது கசாப் தாக்குதல், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95094

[2] http://www.dailythanthi.com/article.asp?NewsID=597173&disdate=9/29/2010

[3] http://www.indianexpress.com/news/Kasab-assault-video-in-court–ruling-today/689746/

[4] http://www.indianexpress.com/news/Kasab-assault-video-in-court–ruling-today/689746/ http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=310328&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

[5] http://news.oneindia.in/2010/09/29/26-11-kasab-files-appeal-against-death-penalty.html