Archive for the ‘ஒமர் மாடீன்’ category

புனித ரம்ஜான் காலத்தில் ஜிஹாதிகள் இப்படி ஏன் குரூரகொலைகள், ரத்தம் சிந்தும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை செய்ய வேண்டும்?

ஜூலை 6, 2016

புனித ரம்ஜான் காலத்தில் ஜிஹாதிகள் இப்படி ஏன் குரூரகொலைகள், ரத்தம் சிந்தும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை செய்ய வேண்டும்?

Ramadan jihad terror ISIS

புனிதமாதத்தில் இத்தகைய குரூரக் கொலைகள் ஏன்?: புனித மாதம் ரம்ஜான் வரும்போதே, அம்மாதத்தில் காபிர்களைக் கொன்றால் நல்லது என்ற பிரச்சாரம் ஜிஹாதிகளால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது[1]. ஐசிஸ் பிரச்சாரகன், “அல்லாவின் ஆணையால், இம்மாதம் காபிர்களுக்கு மிக்கவும் வலியுள்ள மாதமாக்குங்கள்”, என்றான். அதுதான் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு குரூரமாக அறுத்துக் கொலைசெய்கிறார்களே? இவர்களுக்கு மனிதத்தன்மையே இல்லை என்ற அளவுக்குத்தானே மற்றவர்கள் இன்று புரிந்து கொண்டு விட்டனர். இன்னொரு தீவிரவாதி அதை விளக்கி, விஷத்தைச் சேர்த்து, ஒரு குறும்புத்தகத்தைத் தயாரித்து விநியோகித்தான், “ரமதான் முடியப்போகிறது, மறந்து விடாதீர்கள், இது வெற்றி-மாதமாகும்”, என்று போதையோடு கூறினான்[2]. இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் போன்றவற்றின் ஊடகங்களளே, அந்த உண்மையினை மறைக்கவில்லை[3]. அல்லாவின் பெயரால் தான் இக்கொலைகள், குண்டுவெடிப்புகள் நடக்கின்றன[4]. இதுவரை ரம்ஜான் மாதத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[5]. இராக் மற்றும் சிரியாவில் 400க்கும் மேற்பட்டவர்களை சிரமறுத்து, சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது[6].

Ramadan jihad terror ISIS.illustrationநடந்துள்ள கொலைகளும், ஒப்புக்கொண்டுள்ள நிலையும்: ஐசிஸ், ஐசில் எது ஒப்புக்கொண்டாலும், உண்மையில் இவை நடந்துள்ளன. அதுபோலவே,

  1. ஓர்லான்டோ – 49 பேர் கொல்லப்பட்டனர்.
  2. ஒரு தற்கொலை குண்டுவெடிப்பில் ஜோர்டனில் ஏழு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
  3. அதே நாளில், அல் முகல்லா, யேமன், லெபனாலில் உள்ள ஒர்யு கிருத்துவ கிராமம் முதலிய இடங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
  4. இஸ்தான்புல் – அடுத்தநாளில், இஸ்தான்புல், அதத்ருக் விமானநிலையம் தாக்கப்பட்டது – குறைந்தபட்சம் 41 பேர் கொல்லப்பட்டனர்.
  5. ஆப்கானிஸ்தான்
  6. டாக்கா 01-07-2016 வெள்ளியன்று தூதரகங்கள் இருக்கும் பகுதியில், ஒரு ரெஸ்டாரென்ட் தாக்கப்பட்டு, 22 அயல்நாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
  7. பாக்தாத் – 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பாக்தாத் குண்டுவெடிப்பில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்தாத் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம்கள் இருந்தாலும், அங்கிருந்த ஒரு கடைக்காரன், “ரம்ஜான் முடிந்து, எங்களுடைய நோன்பு முடித்துக் கொள்ளப் போகின்ற நிலையில் சந்தோஷப்படுகிறோம், இருப்பினும், அது ரத்தத்துடன் பூசப்பட்டுள்ளது”, என்று தனது எண்ணங்களை வெளிப்படுத்தினான்[7]. ஆனால், அவனும் உடைந்த கண்ணாடி துகள்கள் பறந்து வந்து விழும்போது, பாதிக்கப்பட்டான்[8].

the Battle of Badr- 313 vs 1000

ரம்ஜான் மாதத்தில் ஜிஹாதி குரூரங்கள் அதிகமாக இருப்பதேன்?: ஜிஹாதி பிரச்சாரகர்கள் பத்ர் யுத்தத்தை [the Battle of Badr] ரம்தான் மாத வெற்றிப் போரை, மற்ற இக்கால ஜிஹாத் போராட்டங்களுடன் ஒப்பிட்டு, தீவிரவாதிகளை ஊக்குவித்து வருகின்றனர்[9]. முகமது நபி மெக்காவில் எப்படி தனது எதிரிகளை ரமதான் மாதத்தில் வெற்றிக் கொண்டாரோ, அதேபோல, இம்மாதத்தில் ஜிஹாதில் இறங்கினால் வெற்றி கிடைக்கும் என்று மதவெறியை ஏற்றி வருகின்றனர்[10]. குறிப்பாக 313 சேனையை வைத்டுக் கொண்டு 1000 பேர் சேனையை வென்றது, இன்று குண்டுவெடிப்புகள், தற்கொலை குண்டுவெடிப்புகள், அதிநவீன துகபாக்கிகள் மூலம் பலரை சுட்டுக் கொல்வது என்று நிறைவேற்றப்பட்டு வருகிறது[11]. தீவிரவாத-பயங்கரவாத கூட்டத்தின் பெயர் மாறினாலும், இந்த ஜிஹாதி கொள்கை ஒன்றாகவே-இதுவாகவே இருக்கிறது. இந்த மோமின்-காபிர், தாருல் இஸ்லாம், தாருல் ஹராப், முதலிய சித்தாந்தங்களே, இந்த ஜிஹாதிக்கு ஊக்குவிப்பதாக இருக்கிறது[12]. ஐசிஸ், ஐ.எஸ், ஐசில், அல்-குவைதா, தலிபான் போன்ற தீவிரவாத-பயங்கரவாத இயக்கங்கள் இவ்வாறூ தான் வெறியோடு செயல்பட்டு வருகின்றன. இதனால், ஜிஹாத்-போதையில், தீவிரவாதிகள் எப்படியாவது காபிர்களைக் கொல்லவேண்டும் என்றா வெறியில் அலைய ஆரம்பித்து விடுகிறார்கள். ஓர்லான்டோ கொலைகாரன் இவ்வீரர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டான்[13]. இந்த ரமதான் காலத்தில் நடந்துள்ள தீவிரவாத-பயங்கரவாத கொலைகளை “நியூயார்க் டைம்ஸ்” பட்டியல் இட்டுள்ளது[14].

தேதி, இடம் குண்டுவெடிப்பில் கொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை முதலியன
ஜூலை.4, 2016 சவுதி அரேபியாவில் அமெரிக்க தூதுவரள் மற்ரு ஷியாக்களை குறிவைத்து நடத்தியகுண்டுவெடிப்புகளில் ஐந்து பேர் சாவு.
JULY 1, 2016
Bangladesh
Gunmen detonated explosives and took a number of people hostage at a restaurant in Dhaka. MORE »
JUNE 30, 2016
Egypt
A gunman fatally shot a Christian minister in El Arish, the main town in northern Sinai. MORE »
JUNE 29, 2016
Turkey
At least 44 people were killed and 238 people wounded in suicide bombings at Istanbul’s main international aiport. Turkey blamed the Islamic State for the attack. MORE »
JUNE 13, 2016
France
A police captain was fatally stabbed and his companion was also killed at their home in a small town northwest of Paris. MORE »
JUNE 12, 2016
Florida
A man who called 911 to proclaim allegiance to the Islamic State terrorist group, and who had been investigated in the past for possible terrorist ties, stormed a gay nightclub wielding an assault rifle and a pistol and carried outthe worst mass shooting in United States historyMORE »
JUNE 7, 2016
Bangladesh
A Hindu priest was attacked while riding a bicycle in a rural area not far from his home and hacked to deathMORE »
JUNE 5, 2016
Bangladesh
A Christian man was hacked to death in his grocery store. MORE »
PAKISTAN-RELIGION-ISLAM-RAMADAN

A Pakistani policeman stands guard as Muslims as faithfull perform a special evening prayer “Taraweeh” on the first day of the Muslim fasting month of Ramadan on a street of Karachi on July 10, 2013. Islam’s holy month of Ramadan is celebrated by Muslims worldwide marked by fasting, abstaining from foods, sex and smoking from dawn to dusk for soul cleansing and strengthening the spiritual bond between them and the Almighty. AFP PHOTO / ASIF HASSAN

முஸ்லிம்கள் வாதிடும் முறை: உலக நாடுகளில், ஜிஹாதிகளால் ஏகப்ப்ப்பட்ட பாதிப்புகளை அடைவதால், அவர்கள் இஸ்லாத்துக்கும் தீவிரவாதம்-பயங்கரவாத செயல்களுக்கும் உள்ள சம்பந்தத்தை, இணைப்புகளை, ஊக்குவிப்புகளை தெள்லத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்கள். இருப்பினும், முஸ்லிம்கள் இவ்வாறெல்லாம் வாதிட்டு வருகின்றனர்:

  1. இஸ்லாம் என்றால் அமைதி, இவர்கள் அமைதியைக் குலைக்கிறார்கள்;
  2. இந்த தீவிரவாதிகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை,
  3. தீவிரவாதத்திற்கும், இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை.
  4. அவர்கள் இஸ்லாத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்,
  5. அவர்கள் பெயரளவில் தான் முஸ்லிம்கள், முஸ்லிம்கள் போன்ற பெயர்களை வைத்திருக்கிறார்கள்,
  6. இன்னும் ஒருபடி போய் அவர்கள் முஸ்லிம்களே இல்லை.

ஷேக் அஸினா, “என்ன முஸ்லிம்கள் நீங்கள்? ரம்ஜான் மாதத்தில் இப்படி கொலை செய்கின்றீர்களே?”, என்று வெளிப்படையாகக் கேட்டுள்ளார்[15]. அதாவது அவருக்கும் அந்த உண்மை தெரிந்துள்ளது. இனி முஸ்லிம்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை!

© வேதபிரகாஷ்

06-07-2016

saudi_bomb blast in Medina 04-07-2016

[1] The New York Times, ISIS Uses Ramadan as Calling for New Terrorist Attacks, By Ben Hubbard, JULY 3, 2016.

[2] http://www.nytimes.com/2016/07/04/world/middleeast/ramadan-isis-baghdad-attacks.html?_r=0

[3] The Nation, ISIS using Ramzan to call for new terror attacks, July 04, 2016, 1:31 am

[4] http://nation.com.pk/international/04-Jul-2016/isis-using-ramzan-to-call-for-new-terror-attacks

[5] The News-18, Over 800 Killed by ISIS During the Holy Month of Ramzan, D. P. Dash, First published: July 5, 2016, 2:10 PM IST | Updated: 18 hours ago.

[6] http://www.news18.com/news/world/over-800-killed-by-isis-during-the-holy-month-of-ramzan-1265979.html?utm_source=fp_top_internal

[7] http://www.firstpost.com/world/ramzan-a-time-for-terror-jihadists-interpret-religion-in-a-way-most-muslims-deplore-2874146.html

[8] Firstpost, Is Ramzan a time for terror? Most deplorably to Muslims, that’s what jihadis think, FP Staff  Jul 5, 2016 14:56 IST

[9] A large share of the victims have been Muslims, belying the Islamic State’s claim to be the defender of their faith. “We were happy and preparing to break the last day of the fasting month very soon and to celebrate Eid, but our feelings have been stained with blood,” said Hadi al-Jumaili, a shopkeeper who was hit with flying glass in the attack in Baghdad.

[10] http://www.frontpagemag.com/fpm/263111/ramadan-month-jihad-robert-spencer

[11] Frontpage.magazine, Ramadan: month of jihad – As Muslims struggle to increase their devotion to Allah, expect more mass murder, Robert Spencer June 7, 2016

[12] http://www.frontpagemag.com/fpm/263111/ramadan-month-jihad-robert-spencer

[13] http://www.nytimes.com/2016/06/19/us/omar-mateen-gunman-orlando-shooting.html

[14] http://www.nytimes.com/interactive/2016/03/25/world/map-isis-attacks-around-the-world.html

[15] http://indiatoday.intoday.in/story/dhaka-attack-restaurant-isis-sheikh-hasina/1/706051.html

அமெரிக்க ஓரினச்சேர்க்கை விடுதியில் துப்பாக்கி சூடு, 53 பேர் கொலை, சுமார் 60ற்கும் மேலானவர் காயம்: சுட்ட உமர் மீர் சித்திக் மாடீன் கொலையுண்டான்!

ஜூன் 13, 2016

அமெரிக்க ஓரினச்சேர்க்கை விடுதியில் துப்பாக்கி சூடு, 53 பேர் கொலை, சுமார் 60ற்கும் மேலானவர் காயம்: சுட்ட உமர் மீர் சித்திக் மாடீன் கொலையுண்டான்!

Omar maateen, the killer 12-06-2016

ஆர்லான்டோ நகர் துப்பாக்கிசூடு: அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது[1]. விடுதியில் 12-06-2016  இரவு அன்று விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவ்விடுதியில், துப்பாக்கியுடன் புகுந்த நபர், கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பலியாயினர்; 53க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்; தகவலறிந்து மூன்று மணி நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த மர்ம நபரை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரின் பெயர் ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஓமர் எஸ் மடீன் [Omar Mir Seddique Mateen] எனவும் அவன் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவனாக இருப்பான் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது, பயங்கரவாத தாக்குதலா என, போலீசார் விசாரிக்கின்றனர்[2].

Omar Mateen photos

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் – ஓரினச்சேர்க்கையாளர்களின் மீது நடந்துள்ள பெரிய தாக்குதல்:: அமெரிக்காவில், பொது இடங்களில், எந்த காரணமும் இன்றி, துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று எல்லா இடங்களிலும் நடப்பதால், இது ஏதோ சாதாரண விசயம் போலாகி விட்டது. அமெரிக்க வரலாற்றில் துப்பாக்கிச்சூட்டின் மூலம் அதிக நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும், ஓரினச்சேர்க்கையாளர்களின் மீது நடந்துள்ள பெரிய தாக்குதலாகும். இதற்கு முன்னர் 2007-ஆம் ஆண்டு விர்ஜினியா பல்கலைகழகத்தில் 32 பேர் படுகொலை செய்யப்பட்டதே இது வரை அதிகபட்சமாக இருந்தது. அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கி தாக்குதல்கள் பெருகி வருவது மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது[3].

Christina [o singer - killer - 12-06-2016

பாப் பாடகி, கிறிஸ்டினா கிரிம்மி சுடப்பட்டு கொலை (12-06-2016): ஒரலாண்டோ பகுதியில், வெள்ளிக்கிழமை 12-06-2016 அன்று இரவு, இசை நிகழ்ச்சி ஒன்றில், பிரபல பாப் பாடகி, கிறிஸ்டினா கிரிம்மி, 22, சுட்டுக் கொல்லப்பட்டார்[4]. கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த ‘தி வாய்ஸ்’ இசைப் போட்டி நிகழ்ச்சியில் கிறிஸ்டினா ஜிரிமி 3-ம் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இளம் பாப் பாடகிகளில் ஒருவராக உருவெடுத்த அவர் 1106-2016 அன்று இரவு புளோரிடா நகரில் இசைக் கச்சேரி நடத்தினார். அதன்பிறகு ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்மநபர் கிறிஸ்டினாவை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் மயங்கி சரிந்தார். அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்[5].

pulse club shooting - location map -scene-2

அக்கொலை யை அடுத்து 24 மணி நேரத்தில் இந்த சம்பவம்: இந்த சம்பவம் நடந்து, 24 மணி நேரத்திற்குள், அதே பகுதியில், மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. ஒரலாண்டோவில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்படுகிறது. அங்கு, நேற்று அதிகாலை, வழக்கமான கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, இரவு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர், 2.02 அதிகாலையில் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்தவர்களை நோக்கி, சரமாரியாக சுட்டான். அப்போது, அந்த விடுதியில், 300க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைக்க, அவன் முயற்சித்தான்[6]. துப்பாக்கி சத்தம் கேட்டதும் உள்ளே இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். ஆரஞ்சு கௌன்டியின் செரிப் உடனே வந்து சமாதானம் பேச ஆரம்பித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவனுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவன், துப்பாக்கியை கீழே போடாமல், மீண்டும் மீண்டும் சுட்டான். இதையடுத்து, அந்த இடம், போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டது.

Pulse club - 12-06-2016

அதிரடி போலீஸாரின் நடவடிக்கை: காலை 5 மணிக்கு “ஸ்வாட்”, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை வரவழைப்பப்பட்டு, அவசரகால ஏற்பாடுகள் விரைவாகச் செய்யப்பட்டன. கட்டடத்தை தகர்த்து உள்ளே சென்ற போலீசார், அவன் மீது தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், அந்த நபர், சுட்டுக் கொல்லப்பட்டான். மர்ம நபர் நபர் நடத்திய தாக்குதலில், 50 பேர் வரை உயிரிழந்ததாக, போலீசார் தெரிவித்தனர். 53க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், ‘இரவு விடுதியில் இருந்தவர்கள், அந்த மர்ம நபர் சுட்டதால் இறந்தனரா அல்லது போலீசாருக்கும், அவனுக்கும் நடந்த மோதலில் இறந்தனரா என்ற தகவல், உறுதியாக தெரியவில்லை’ என்றனர்[7].

orlando-shooting-pulse-gay

ஒமர் மாட்டின் பயங்கரவாதியா?: சம்பவம் நடந்தபோது, துப்பாக்கி மட்டுமின்றி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாக, அந்த மர்ம நபர் கூறினான். இதனால், அவன் பயங்கரவாதியாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது[8]. இதுகுறித்து, அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: துப்பாக்கியால் சுட்டவனின் பெயர், ஒமர் மேட்டின், 29, ஒரு அமெரிக்க முஸ்லிம் என தெரிய வந்துள்ளது[9]. புளோரிடா மாகாணத்தில், போர்ட் செயின்ட் லுாயிஸ் பகுதியில் வசித்து வந்துள்ளான். 2009ல் திருமணம் செய்து கொண்டு 2011ல் விவாகரத்து செய்தான். பிறகு மறுபடியும் திருமணம் செய்து கொண்டுள்ளான். அவனுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. முதல் மனைவி ஒமர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன், தன்னை அடிக்கடி அடித்துத் துன்புருத்துவான் என்றெல்லாம் கூறியுள்ளாள். ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அவனுக்கு, ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என, கருதப்படுகிறது. எனினும், இது பயங்கரவாத தாக்குதலா என விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அதிபர் ஒபாமா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும், ஹிலாரியும், டொனால்டு டிரம்பும் வருத்தம் தெரிவித்துள்ளனர்[10]. 2013 மற்றும் 2014 ஆண்டுகளில், இவனது விசித்திரமான பேசுகளால், எப்.பி.ஐ மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளது.

pulse club shooting - scene-1

துப்பாக்கிக்கு கட்டுப்பாடு- வன்முறை வளர்க்கும் சரித்திரம்-சித்தாந்தம்: அமெரிக்காவில் 2015ம் ஆண்டில் மட்டும் பொது இடங்களில் 372 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 475 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,870 பேர் காயமடைந்துள்ளனர். இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள, கட்டுப்பாடு விதிக்க வகை செய்யும் சட்டத்தை, அதிபர் ஒபாமா கொண்டு வர முயன்றார். ஆனால் துப்பாக்கி தயாரிப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்நாட்டு பார்லிமென்ட் இந்த சட்டத்தை முடக்கி வைத்துள்ளது[11]. ஆக வன்முறை வளர்க்க, எதிர்க்க, முடக்க, சித்தாந்தமாகி, கொலைகள் செய்ய என்று பல இயக்கங்கள், நிறுவனங்கள் என்றுள்ளன என்று தெரிகிறது. பிறகு, அப்பாவி மக்களை யார்தான் காப்பது? இப்படியே கொலையாகும் மக்களின் ஆத்மா எப்படி சாந்தியடையும்?

pulse club shooting - scene- Orlando police

© வேதபிரகாஷ்

13-06-2016

[1] http://www.pulseorlandoclub.com/

[2] தினத்தந்தி, அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 12,2016, 9:29 PM IST; மாற்றம் செய்த நாள்:

ஞாயிறு, ஜூன் 12,2016, 9:29 PM IST.

[3] http://www.dailythanthi.com/News/World/2016/06/12212900/Florida-nightclub-shooting-50-killed-53-injured-in.vpf

[4] தமிழ்.இந்து, அமெரிக்க பாப் பாடகி சுட்டுக் கொலை, Published: June 12, 2016 11:08 ISTUpdated: June 12, 2016 11:09 IST.

[5]http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article8720771.ece

[6] தினகரன், அமெரிக்காவில் இரவு விடுதியில் பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி, Date: 2016-06-13@ 00:36:37

[7] மாலைமலர், அமெரிக்க இரவு விடுதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழப்பு, பதிவு: ஜூன் 12, 2016 18:00.

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/12180012/1018351/Pulse-Night-Club-mass-shootings-Approximately-20-dead.vpf

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=223548

[10] தினமலர், அமெரிக்க விடுதியில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி, ஜூன்.13, 2016.

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1541113