Archive for the ‘ஒசாமா பின்லேடன்’ category

முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

ஜூலை 17, 2016

முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

Pro-zakir ralley in patna raising pro-paki slogans 16-07-2016

ஜாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Zakir Naik inspired terrorists 01-07-2016

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்”. இப்பொழுதும் அந்த கருத்தை மறுக்கவில்லை. ஆனால், திடீரென்று முஸ்லிம்கள் எப்படி நாரக்கிற்கு ஆதரவு தெர்விக்கிறார்கள் என்று பார்த்தால், அது முஸ்லிம் ஆதரவு, ஷியா எதிர்ப்பு, முதலியவற்றை விட, மோடி-எதிர்ப்பு என்ற வகையில் வந்து முடிந்துள்ளது. ஜாகிர் நாயக்கை முடக்கத்தான் பாஜக அரசு முயல்கிறது என்பது போன்ற சித்தரிப்பு மற்றும் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இது கிட்டத்தட்ட “சகிப்புத் தன்மை” பிரச்சாரம் போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திக்விஜய சிங், எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டதால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஏகப்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.

அதிரை - எஸ்.டி.பி.ஐ போராட்டம்

வெள்ளிக்கிழமை 15-07-2016 பாட்னாவில் நடந்த ஆர்பாட்டம்: ஜாகிர் நாயக் மற்றும் அசாஸுத்தீன் ஒவைசி இவர்களை ஆதரித்து, பாட்னா விஞ்ஞான கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டு ஆர்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்[1]. அது மட்டுமல்லாது, அதன் பின்னணியுள்ளவர்களைப் பற்றி விசாரிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது[2]. அமெரிக்காவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்ல பாகிஸ்தான் அமுக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கும் போது, இந்தியாவில், பீஹாரில் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எப்படி போட முடியும்? அத்தகைய மனோபாங்குதான் என்ன?  ஆக, காஷ்மீர பிரச்சினையையும், இந்த ஜாகிர் நாயக்-ஒவைசி பிரச்சினையுடன் முடிச்சுப் போட பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

 zakir naik protest chennai 2

தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதத்தை முதலில் எதிர்க்க வேண்டும்: தமிழக முஸ்லிம்கள் முதலில் இஸ்லாம் தீவிரவாததத்திற்கு உபயோகப்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஐசிஸ்-ஐசில் முதலிய இயக்கங்கள் உலகளவில் அப்பாவி மக்களைக் கொன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் காஷ்மீ, உத்திரபிரதேசம், கேரளா, ஹைதரபாத் முதலிய இடங்களில் காகிர் நாயக்கை வைத்து நடைபெற்று வரும் விவகாரக்களைக் கவனிக்க வேண்டும். இந்தி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடம் சேர்வதை அவர்கள் தடுக்கவில்லை. கேரள முஸ்லிம் பெற்றோர்களே கலங்கியுள்ள நிலையில், அதைத் தடுக்க என்ன செய்வது என்று விடை கொடுப்பதில்லை. சவுதி அரேபிய இஸ்லாம், இந்திய இஸ்லாத்திடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாமிய தீவிரவாத்த்தைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ல முடியும். சவுதி வகாபிசத்துவ தீவிரவாதத்தை ஆதரித்ததால் தான், ஜாகிர்நாயக்கின் வகாபிச சேவையைப் பாராட்டி இஸ்லாத்திற்கு சேவை செய்தவராக அறிவித்து 2015 ஆம் ஆண்டுக்கான மன்னர் பைசல் சர்வதேச விருதாக சவுதி வகாபிச அரசு 24 காரட் 200 கிராம் தங்கப் பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் 1,35,00,000/- (2 லட்சம் யுஎஸ் டாலர்கள்) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியது. மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும், வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

 zakir naik protest chennai 3

முஸ்லிம்கள் ஏன் இந்திய குடிமகன்கள் என்பதை மறக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்?: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகள் முதலியவற்றில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதை கவனிக்க வேண்டும். அவர்களை ஏன் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். வெறும் வார்த்தைகள் ஒன்றும் செய்து விடமுடியாது. ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, அதனை நான் கண்டிக்கிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? ஒசாமா பின் லேடனை ஆதரிக்கிறேன் என்ற ஜாகிர் நாயக்கை ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துவதால் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன இது, தீவிரவாதிகளை எதிர்த்து தானே கூட்டம் போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். முஸ்லிம்கள் இந்திய குடிமகன்கள் என்பதை மறந்து, அடிக்கடி எல்லைகளைக் கடந்த ஆதரவுகளை தெரிவித்த்துக் கொள்வது, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முதலியோருக்கு சாதகமாக பேசுவது, அறிக்கைக்கள் விடுவது, ஆர்பாட்டங்கள் செய்வது முதலியனன, அவர்களை மேலும் இந்திய சமூகத்திலிருந்து பிரிக்கத்தான் செய்யும்.

ZAkir on sex

இசுலாமியத் தீவிரவாதம்  என்றால் என்ன?: இசுலாமியத் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட-அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது. இப்படி விகிபீடியா கூறுவதை[3] முஸ்லிம்கள் மறுக்கவில்லையே?

 

© வேதபிரகாஷ்

17-07-2016

Zakir girls need not study

[1] India Today, Pro-Pakistan slogans raised in Patna, one arrested after police orders probe, Rohit Kumar Singh, Posted by Bijaya Kumar Das, Patna, July 16, 2016 | UPDATED 15:11 IST

[2] http://indiatoday.intoday.in/story/pro-pakistan-slogans-raised-in-patna-one-arrested-after-police-orders-probe/1/716225.html

[3] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

ஜூலை 17, 2016

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில்  தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

நாயக் ஆதரவு - அனைத்து இஸ்லாமிய கட்சிகள் கூட்டமைப்பு - மோடி விரோதம்

23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர்.  23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].

  1. மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
  2. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
  3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
  4. மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
  5. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
  6. ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
  7. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
  8. இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
  9. ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
  10. வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
  11. ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
  12. முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
  13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி

இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

img_2005-1

அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழுள்ள உரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது,  பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.

ஜாகிர் ஆதரவு போராட்டம் - 16-07-2016 - த.த.ஜா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் ஆர்பாட்டத்தை அறிவித்து, பிறகு நிறுத்துக் கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.

muslims-against-zakirnaik

2009ல் ஜாகிர் நாயக்கை எதிர்த்தவர்கள் இப்பொழுது – 2016ல் ஆதரிப்பதேன்? (ப்ழைய கட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்

ஜனவரி 10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!

ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?

© வேதபிரகாஷ்

17-07-2016

IRF - Islamic research Centre, Mumbai - The Hindu

[1] http://ns7.tv/ta/muslims-protest-against-central-government-chennai.html

[2] http://www.thenewsminute.com/article/islamic-groups-protest-chennai-demand-govt-cease-portraying-zakir-naik-terrorist-46610

[3] The Business Standard, Muslim outfits rally behind Zakir Naik, hold protest, Press Trust of India, Chennai July 16, 2016 Last Updated at 16:32 IST

[4] http://www.business-standard.com/article/current-affairs/muslim-outfits-rally-behind-zakir-naik-hold-protest-116071600502_1.html

[5] http://adiraipirai.in/?p=26723

[6] http://adiraipirai.in/?p=26767

[7]https://markaspost.wordpress.com/2009/01/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/

2003ல் ஜாகிர் நாயக்குடன் ஏற்பட்ட அனுபவம் – கைதேர்ந்த, மிக்க பயிற்சி பெற்ற, மிக-சரளமாக பேசும் வல்லமையுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதி என்பது தெரிந்தது!

ஜூலை 9, 2016

2003ல் ஜாகிர் நாயக்குடன் ஏற்பட்ட அனுபவம் – கைதேர்ந்த, மிக்க பயிற்சி பெற்ற, மிக-சரளமாக பேசும் வல்லமையுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதி என்பது தெரிந்தது!

ZAkir on sex

ஜாகிர் நாயக்குடன் என்னுடைய அனுபவம் (2003): “அமைதி விழா” என்ற போர்வையில், இவரது “பேசும் விழாக்கள்ளேற்பாடு செய்யப்பட்டன. 2003ல் சென்னையில், கிருஷ்ணா கார்டன் என்ற இடத்தில் (திருமங்கலம் செல்லும் சாலையில், பாலத்தைத் தாண்டியவுடன் இடது பக்கத்தில் இருந்த மைதானம்) நடந்த ஜாகிர் நாயக்கின் கூட்டத்தில் சில முஸ்லிம் நண்பர்கள் அழைப்பிற்கு இணங்க கலந்து கொண்டேன். அது ஒரு “ஏற்பாடு” செய்யப்பட்டக் கூட்டம் என்று அறிந்து கொண்டேன். தெரிந்தவர்கள் மூலம், அறிமுகப்படுத்தினால் மட்டுமே கலந்து கொள்ள முடியும். “யாஹோ குழு”வில் இதைப் பற்றி பதிவு செய்திருந்தேன்[1].

Zakir girls need not study

Thie following is appearing in Posting No. 15391.

But I could not get the 2003 postings in IC /HC[2].

But, I remember of giving details from History journals.

VEDAPRAKASH.

Dear friends,

After attending Chennai meeting,as per the request of
some Muslim friends, I sent e-mail to Zakir Naik
asking clarification for some crucial questions, but
he did not answer.

Immediately (in 2003), I posted in IC/HC warning about
his tactics. In fact, I urged, some Hindus should be
trained like Zakir to recie Qurarn so that he could be
effectively countered.

Cominmg to Mohammed’s references in Hindu scriptures
and all, it was a great forgery-graud committed during
Akbar’s period, in whic some Sanskrit Pundits were
also involved.

Thus, the group started interpolated some Hindu
scriptures like Bhavisya Purana etc. In deed, they
created one “Allah-Upanishad” also, which was proven
forgery by the scholars.

In fact, they also manufactured books depicting
Mohammedan prophets and leaders on the basis of
“Dasavatara” concept startiing with Mohammed. There
had been frged works of astrological and astronomical
works showing that Hindus copied everything from the
Greks and Arabs. Recently, in February 2007, a UP
schpolar brought such work to “Cosmology conference”
conducted at Tirupati.

Therefore, Hindus have to analyse carefully and remove
chaff from the grains, as otherwise, all the chaff may
apear as rice.

VEDAPRAKASH>

Zakir opposing Darwin

பெரிய கூடாரம், விளக்குகள், உள்ளேயே பார்க்க வசதியாக டிவிக்கள், ஆண்கள்-பெண்கள் தனித்தனியாக உட்கார்ந்து கொள்ள இருக்கைகள் என்று சகல வசதிகளோடு இருந்தது. பத்து-பதினைந்து கன்டைனர்களில் அவை அடங்கி விடும். எல்லா நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இத்தகைய கூட்டங்கள் ஏற்பாடு செய்யப் பட்டன. ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் தான் பேசினார். வேதங்கள், உபநிஷத்துகள் முதலியவற்றில் குறிப்பிட்ட சுலோகங்களை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பித்தார், அதற்கு விளக்கமும் அளித்தார். அவர் பேசும் விதத்திலேயே அது தெரிந்தது. பல ஆண்டுகளாக பயிற்சி செய்து, நன்றாக உழைத்து அத்தகைய திறமையைப் பெற்றிருந்தார். ஆங்கிலத்தில் மிகவும் சரளாமாக, எப்படி வேண்டுமானாலும், மாற்றி-மாற்றி பேசும் வல்லமை பெற்றிருந்தார். இந்துக்களில் இவ்வாறு திறமையாக பேசுபர் என்றால், அருண்ஷோரியை சொல்லலாம். இப்பொழுது அவர் கூட்டங்களில் பேசுவதை நிறுத்துவிட்டார் போலும்.

Zakir says he cannot take responsibility- angry

சங்கடமான கேள்விகள் கேட்டால் அழைப்பிதழ் / அனுமதி கிடைக்காது: கேள்வி-பதில் என்றபோது, நான் கேள்வி கேட்க யத்தனித்தபோது, அருகில் உட்காரவைத்தார்கள். ஆனால், ஒரு பேப்பரில் கேள்வியை எழுதி கொடுக்க சொன்னார்கள். கொடுத்தேன், ஆனால், அதற்கு பதில் சொல்லவில்லை. கேட்டதற்கு நேரம் இல்லை என்றார்கள். ஜாகிர் நாயக் அருகில் சென்று கேட்டபோது, இ-மெயிலில், கேள்வியை அனுப்புங்கள், பதிலைக் கொடுக்கிறேன் என்றார், ஆனால், பதில் வரவில்லை. பல “ரெமைன்டர்கள்” அனுப்பினேன், ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஆகவே, அதுதான், அவரது பதில் சொல்லும் லட்சணம் என்று தீர்மானித்துக் கொண்டேன். அதறகுப் பிறகும், காமராஜர் அரங்கம், ஓ.எம்.ஆர் சாலை என்று கூட்டங்கள் நடந்தன. ஆனால், அழைப்பில்லை. அதற்குள் எவ்வளாவோ நடந்து விட்டன.

Zakir says he cannot take responsibility

ஜாகிர் நாயக்கின் மற்ற கருத்துகள், மனோபாவம் முதலியன[3]: மற்ற கருத்துகளைக் கவனிக்கும் போது, இவர் ஒரு கடைந்தெடுத்த இஸ்லாமியவாதி என்பதனை அறிந்து கொள்ளல்லாம். பேசும் திறனை வளர்த்துக் கொண்டு, ஆங்கிலத்தில் உரையாடி வருவதால், அமெரிக்கா-ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள இளைஞர்களை ஈர்த்து வந்துள்ளது தெரிகிறது. ஆனால், இந்தியாவில் எடுபடவில்லை எனலாம்.

  • இந்தியா ஷரியா சட்டத்தின் படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிறது ஜாகிர் நாயக்கின் கருத்தையும் மேலும் மதக் கொள்கைகளை மீறுவதால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற ஜாகிர் நாயக்கின் கருத்தைவால் ஸ்டிரீட் ஜர்ணல் பத்திரிகையில் எழுத்தாளர் சதானந்த் துமே (Sadanand Dhume) விமர்சிக்கிறார்.
  • மேலும் முஸ்லீம் அல்லாதவர்கள் வழிபாட்டுத் தலங்கள் கட்டக் கூடாது என்றும்ஆப்கானிஸ்தானில்பாமியன் புத்தர் சிலைகள் வெடிவைத்துத் தாக்கப்பட்டதையும் சாகீர் நாயக் நியாயப்படுத்துகிறார்.
  • சாகீர் நாயக்கைஇங்கிலாந்து மற்றும்கனடா நாடுகள் தடை செய்துள்ளன. இவரது பேச்சுகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அமைந்துள்ளதால் இங்கிலாந்து அரசு இவரைத் தடை செய்தது.
  • தாருல் உலூம்எனும் இஸ்லாமிய அமைப்பு சாகிர் நாயக்கிற்கு ஃபத்வா விதித்துள்ளது.
  • ஜாகிர் நாயக் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சாளர் என பேராசிரியர்டோர்கெல் ப்ரெக்கெல் (Torkel Brekke) குறிப்பிடுகிறார். மேலும் இந்திய உலமாக்களில் பலர் இவரை வெறுக்கின்றனர் எனக் குறிப்பிடுகிறார்.
  • ஜாகிர் நாயக் முஸ்லீம்களை தவறாக வழிநடத்துகிறார், மேலும் உண்மையை இஸ்லாமிய ஞானிகளிடமிருந்து உணரவிடாமல் செய்கிறார் எனஇந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் சுன்னி  பிரிவைச் சேர்ந்த முல்லாக்கள் கூறுகின்றனர்.
  • அல் காயிதாஅமைப்பை ஜாகிர் நாயக் ஆதரிக்கிறார் என பாகிஸ்தானிய அரசியல் விமர்சகர் காலித் அஹமது (Khaled Ahmed) குற்றஞ்சாட்டுகிறார்.
  • 2008 ஆம் ஆண்டுலக்னோவைச் சேர்ந்த இஸ்லாமியக் கல்வியாளர் ஷாகர் க்வாஸி அப்துல் இர்ஃபான் ஃபிராங்கி மகாலி  (shahar qazi Mufti Abul Irfan Mian Firangi Mahali) ஜாகிர் நாயக் ஒசாமா பின் லாடனை ஆதரிக்கிறார் என்றும் மேலும் இவருடைய பேச்சுகள் இஸ்லாம் அல்ல என்றும் இவர் மீது ஃபத்வா விதித்தார்.
  • லஷ்கர்-ஏ-தொய்பாஅமைப்பிடமிருந்து ஜாகிர் நாயக் பண உதவி பெற்றிருக்கிறார் என பத்திரிகையாளர் ‘ப்ரவீண் சாமி கூறுகிறார். மேலும் இவரது செய்திகள் இஸ்லாமியர்களை மூளைச்சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக்குகிறது என்றும் இந்திய ஜிகாதிகளை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் சொல்கிறார்.

© வேதபிரகாஷ்

09-07-2016

Indian Muslims against Wahabism

[1] https://groups.yahoo.com/neo/groups/hinducivilization/conversations/messages/19690

[2] “இந்தியன் சிவிலைசேஷன்” என்று நடத்தப்பட்ட குழு, ஸ்டீப் ஃபார்மர் போன்றவர்களால், இரண்டாக பிரிந்து, “ஹிந்து சிவிலைசேஷன்” மற்றும் “இன்டோ-யூரேஷியா” என்று செயல்பட்டு வருகிறது.

[3] விகிபீடியா கொடுக்கும் விவரங்கள் – எடுத்தாளப்பட்டுள்ளன.

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

ஜூலை 9, 2016

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

bangladesh-attack-map-data01-07-2016 கடைசி வெள்ளிக்கிழமை அன்று வந்த ஜிஹாதிதீவிரவாதிகள்: வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் ஜூலை.1, 2016 அன்று, “புனித” ரம்ஜான் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஹோலே ஆரிசன் பேக்கரி சிக்கியது. தூதரங்கள் இருக்கும் அப்பகுதியை ஜிஹாதிகள் தேர்ந்தெடுத்தனர் என்று தெரிகிறது. இரவு, சுமார் 8.45 மணி அளவில் துப்பாக்கிகளோடு உள்ளே “அல்லாஹு அக்பர்” என்று கத்திக் கொண்டே நுழைந்தவர்கள், எல்லோரையும் பிணைகைதிகளாகக் கொண்டனர்[1]. இந்தியர் ஒருவர் உட்பட  22 பேர் பலியானார்கள் – இவர்களில் பெரும்பாலானவர் வெளிநாட்டவர்கள். அவர்களில் –

இத்தாலியர்  .      – 9

ஜப்பானியர்   ..     – 7

வங்காளதேசத்தவர் .– 2

அமெரிக்கர்    ..    – 1

இந்தியர்     .      – 1

போலீஸ்காரர் ….    – 2

தீவிரவாதிகள் முதலில் குரான் வசனங்களை கூறச்சொன்னார்கள். அதாவது, முஸ்லிம்களா இல்லையா என்று அவ்வாறு தீர்மானித்தார்கள் போலும்! சொன்னவர்களை வெளியே விட்டார்கள். மறுத்தவர்களை ஒருவர்-ஒருவராகக் குத்திக் கொலை செய்ய ஆரம்பித்தனர்[2].

The faces of dhaka-assilantsகொல்லப்பட்ட தீவிரவாதிகள்: துப்பாக்கிகளுடன் வந்த ஏழு தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்:

  1. மீர் சமேஷ் மோபேஷ்வர்.
  2. ரோஹன் இம்தியாஸ்.
  3. நிப்ரஸ் இஸ்லாம்.
  4. கைரூல் இஸ்லாம்.
  5. ரிபான்.
  6. சைஃபுல் இஸ்லாம்.

இரண்டு பேர்  பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். ஐசில் / ஐசிஸ் இத்தாக்குதலுக்கு ஒப்புக்கொண்டது. இரவு முழுவதும், அரசு விரைவு நடவடிக்கை வீஎஅர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடந்தது. அடுக்த்த நாள் காலை, சுமார் 7 மணியளவில், உள்ளே நுழைந்து, தீவிரவாத்கள் ஆறுபேரை சுட்டுக் கொன்றது. 13 பேர் விடுவிக்கப்பட்டனர், 20 பிணங்கள் கண்டெடுக்கப்ப்ட்டன. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறினர். தீவிரவாதிகளில் ஒருவனான ரோகன் இம்தியாஸை, மும்பையை சேர்ந்த, பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தாக்குதலுக்கு தூண்டியதாக செய்தி வெளியாகியது. பேஸ்புக்கில் ரோகன் இம்தியாஸ், ஜாகீர் நாயக் போதனைகளை பரப்பி வவந்தது அம்பலமானது.

One of the victims killed at Holey Artisan Bakery, Dacca06-07-2016 ரம்ஜான் முடியும் நாளன்று மறுபடியும் தாக்குதல்: 06-07-2016 அன்று வங்கதேசத்தில் மீண்டும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கும் நபர்கள் தொழுகை நடைபெற்ற இடத்தில் தாக்குதல் நடத்திய நிலையில், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஆய்வுசெய்யுமாறு இந்தியாவிற்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது[3]. வங்காளதேச தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஹசானுல் ஹக், கூறுகையில் “ஜாகிர் நாயக், போதனைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இல்லை. நாயக்கின் போதனைகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பாக விசாரிக்கப்படும். நாங்கள் முழு விவகாரத்தையும் விசாரணை செய்து வருகிறோம்,” என்று கூறியுள்ளார். ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசு மற்றும் தகவல்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்றும் ஹக் கூறியுள்ளார்[4]. இது தொடர்பாக அவரது போதனைகளை ஆய்வு செய்ய இந்தியாவிடம் வங்காளதேசம் கேட்டுக் கொண்டு உள்ளது. மத்திய மற்றும் மராட்டிய அரசு இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய போலீசை கேட்டுக் கொண்டு உள்ளது. அவருடைய பேச்சு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 2012-ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கலந்துக் கொண்டதும், மேடையில் இருவரும் ஒன்றாக தோன்றும் விவகாரமும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

Zakir inspired terrorist in action in Bangladeshஜாகிர் நாயக்கின் தூண்டுதல், ஊக்குவிப்பு, பிரச்சாரம்: இதனையடுத்து, ஜாகிர் நாயக் குறித்த விவாதம் எழுந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், “ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றார். மேலும், வங்கதேச தாக்குதல் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. எந்த பகுதியும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர வேண்டும்”, என்றார்[5]. இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்[6]. இதற்குள், தில்லி டிவி-செனல்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றிய செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டது.

Zakir Digvijaya embracing, ...etc September 2012 videoதிக்விஜய சிங்கும், ஜாகிர் நாயக்கும் கட்டிப் பிடித்து மகிழும் நிகழ்ச்சி[7]: ஜாகிர் நாயக்குடன் செப்டம்பர் 2012 வருடத்தைய நிகழ்ச்சியில் ஒன்றாக தோன்றி அமைதிக்கான தூதர் என்று பாராட்டை வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங். ஜாகீரை மிக்க மரியாதையும் “ஹுஜூர்” என்று விளிப்பதும், அவர் தான் அமைதியை கொண்டுவருகிறார் என்று பாராட்டுவதும், முஸ்லிம் போல சலாம் அடிப்பதும், கட்டிப்பிடிப்பதும் காட்சிகள் கொண்ட வீடியோ 07-07-2015 வியாழக்கிழமை இணைதளங்களில் உலாவ ஆரம்பித்தது[8]. முதலில் இதற்கு பதில் சொல்ல தப்பிய திக், பிறகு தன்னைக் காத்துக் கொள்ள வழக்கம் போல உளற ஆரம்பித்தார்.  சாத்வி பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

digvijaya-with-zakir-naik.transfer.transferசமாதான தூதுவர்என்று ஜாகிரை பாராட்டியது: நிகழ்ச்சியில் திக்விஜய் சிங் பேசுகையில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை “சமாதான தூதர் என்றும் அவரால் இந்தியா ஒன்றாக சமூகங்கள் கொண்டு உதவ முடியும்,” என்றும் கூறியுள்ளார். பயங்கரவாதிகளை ஊக்குவித்ததாக ஜாகிர் நாயக் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் திக்விஜய் சிங் பேச்சு விபரங்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனையடுத்து பயங்கரவாதத்துடன் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிய திக்விஜய் சிங், விசாரணையை சந்திக்கவும் தயார் என்று கூறினார்[9].  இதனையடுத்து தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விவகாரத்தை இழுத்து உள்ளார்[10]. இதுதொடர்பாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ள திக்விஜய் சிங், “ஜாகிர் நாயக்குடன் மேடையை பகிர்ந்துக் கொண்ட காரணத்திற்காக நான் விமர்சனத்திற்கு உள்ளாகிஉள்ளேன், ஆனால் ராஜ்நாத் சிங் ஜி குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா தாகுரை சந்தித்து பேசியது பற்றிய கருத்து என்ன? பிரக்யா தாகுர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆனால் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக எந்த ஒரு வழக்கும் உள்ளதா? ஜாகிர் நாயக்குடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி மேடையை பகிர்ந்துக் கொண்டது தொடர்பான கருத்து என்ன?,” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

© வேதபிரகாஷ்

09-07-2016

[1] ISIS terrorists shouted ‘Allahu Akbar’ as they hacked to death 20 foreign tourists in restaurant in Bangladesh – but spared those who could recite the Koran – before armoured troops moved in.By MIA DE GRAAF FOR DAILYMAIL.COM  and IMOGEN CALDERWOOD FOR MAILONLINE and AGENCIES

PUBLISHED: 17:01 GMT, 1 July 2016 | UPDATED: 15:40 GMT, 2 July 2016

[2] http://www.dailymail.co.uk/news/article-3670353/Gunmen-attack-restaurant-Dhakas-diplomatic-quarter-police-witness.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகளை உருவாக்குகிறதா ஜாகிர் நாயக் போதனை..? இந்தியாவை ஆய்வு செய்ய சொல்கிறது வங்கதேசம், By: Veera Kumar, Published: Thursday, July 7, 2016, 15:30 [IST].

[4] http://tamil.oneindia.com/news/international/bangladesh-asks-india-examine-zakir-naik-s-sermons-257595.html

[5] தினமலர், ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை: வெங்கையா சூசகம், பதிவுசெய்த நாள். ஜூலை.7, 2016.18.01

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559285

[7] Published on Jul 7, 2016, A video has emerged of the Congress veteran, Digvijay Singh sharing the stage with Zakir Naik who inspired terrorists with his vitriolic speeches. In the video from Semptember 2012, Digvijay Singh ; https://www.youtube.com/watch?v=lMLgC0fkZbI

[8] As Naik came under the scanner, Congress leader Digivjaya Singh was in the BJP’s line of fire after a 2012 video, showing him share a dais with the televangelist at an event to promote communal harmony, surfaced on Thursday 07-07-2016.

http://www.thehindu.com/news/national/mumbai-police-to-probe-preacher-zakir-naiks-speeches-devendra-fadnavis/article8819992.ece

[9] தினத்தந்தி, ஜாகிர் நாயக் விவகாரம்: பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக திக்விஜய் சிங் கேள்வி,பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST

[10] http://www.dailythanthi.com/News/India/2016/07/08143637/Zakir-Naik-row-What-about-Rajnath-Singh-meeting-Pragya.vpf

முஸ்லீம்கள் பின் தங்கியிருக்கிறார்களா – காங்கிரஸா, சமஜ்வாதி கட்சியா, யார் காரணம், பிறகு எதற்கு முஸ்லீம் ஓட்டு வங்கி?

ஜனவரி 29, 2012

முஸ்லீம்கள் பின் தங்கியிருக்கிறார்களா – காங்கிரஸா, சமஜ்வாதி கட்சியா, யார் காரணம், பிறகு எதற்கு முஸ்லீம் ஓட்டு வங்கி?

தேர்தல்களில் முஸ்லீம்களின் நிலை என்ன? தேர்தல் என்று வந்து விட்டால், முஸ்லீம்களுக்கு ஜால்ரா அடிக்க, தாஜா செய்ய எல்லா கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு வந்துவிடும். யாரிடம் அதிகமாக சலுகைகள் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டு, அவர்களுக்கு ஓட்டுப் போடுவது, முஸ்லீம்களுக்கு வழக்கமாக இருந்து வருகிறது. எந்த பிரச்சினை கிடைத்தாலும், அதனை முஸ்லீம்களுக்கு பாதகமானது என்ற நிலையை உர்ய்வாக்கி, அதில் பலனை அடைவதில், காங்கிரஸ் திறமையாக உள்ளது. சமீபத்தில் சல்மான் ருஷ்டி விஷயம், அப்படித்தான் பெரிதாக்கப் பட்டு, கேவலப்படுத்தப் பட்டது[1]. தேர்தலுக்கு முன்னரே, உபியில் முஸ்லீம்கள் ஜனத்தொகை எவ்வளவு என்று சர்வே செய்துவிட்டப் பிறகு தான், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு என்று காங்கிரஸ்காரர்கள் பேச ஆரம்பித்தனர். விவரங்களைக் கீழே காணலாம்.

Assembly constituencies in Saharanpur region with more than 30% Muslim voters[2]:1. Behat

2. Nakud

3. Saharanpur city

4. Saharanpur

5. Deoband

6. Gangoh.

7. Kairana

8. Than Bhawan

9. Shamli

  1. Budhana
  2. Charthwal
  3. Purkazi
  4. Muzaffarnagar
  5. Khatauli
  6. Meerapur
A study on the post-delimitation voter populations in UP by another research group on the simple premise of Muslim names on voter lists, threw up some startling statistics. In 173 of the 405 constituencies of UP, Muslims make up the largest single community of voters and may hold the key to the fortunes of parties not only there but all over the state.The statistics came up when the study segregated each caste and evaluated it against the community of Muslims. The study found credence because of the subdivision of other voters into their natural caste and sub-castes ignoring the unique situation of all castes voting together. In seven constituencies of UP, Muslims are the majority with over 50 per cent of the total voter population.

In 10 constituencies they are between 40 and 50 per cent of the voter population. In 43 constituencies they are 30 to 40 per cent of the voter population. In 27 constituencies they make up 25-30 per cent of the voter population.

In 34 they make up 20 to 25 per cent of the population. In 52 constituencies they constitute 15-20 per cent of the voters.

It is the aggregate of these constituencies that gives us the figure of 173 constituencies where Muslims would end up determining winners. Anyone conversant with election maths would accept that most often winners are decided with a 30 to 35 per cent vote share. But in all these constituencies, the common factor is that Muslims are the single largest voter bloc, with all other caste sub-castes split between contenders of various factions. A corresponding check of other caste/communities shows there is no other caste bloc in comparison, effectively making it a cake walk for candidates who secure Muslim support[3].

ஒவ்வொரு தடவை, தொகுதிகள் மாற்றியமைக்கும் போது, முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் தெருக்கள் குறிப்பிட்ட தொகுதியில் வருமாறு செய்து, மாற்றியமைக்கிறார்கள். அதனால் முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகமாகி, அவர்கள் சேர்ந்து ஓட்டு போட்டால், குறிப்பிட்ட வேட்பாளர் ஜெயிப்பார் அல்லது தோற்பார் என்று தீர்மானமாகிறது. அதுமட்டுமல்லாது, குறிப்பிட்ட வேட்பாளர் ஜெயிக்காவிட்டாலும், இன்னொரு வேட்பாளர் தோற்கவேண்டும் என்றாலும், அதற்கேற்றபடி, அவர்கள் ஓட்டு போட ஆரம்பித்துள்ளனர். இதற்கு, குறிப்பிட்ட அரசியல் கட்சிகள், ஊடகக்காரர்கள் முதலியோர் உதவி வருகிறார்கள்.

முஸ்லீம்கள் ஏன் பின் தங்கியிருக்கிறார்கள்?: முல்லாயமும், இமாமும் சண்டை போட்டுக் கொண்டு சேர்ந்து விட்டனராம். முன்பு, இமாம் முலாயமை கடுமையாகத் தாக்கி, விவர்சனம் செய்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், தேர்தலில் கலந்து கொண்டதால், இமாம் புகாரியை முல்லாயமும் விமர்சனம் செய்துள்ளார்[4]. “காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் செய்து முஸ்லீம்களை ஏமாற்றி வருகிறது. இதனால் 1970-80களில் முஸ்லீம்களின் பிற்போக்குத் தன்மைக்குக் காரணாமாக இருந்தது. முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று கட்டளையிடுவது[5] தில்லி சாஹி இமாம்”, என்று ஆணையிட்டுள்ளார்! சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள்? ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும்? பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டியே, இவ்வாறு பேசியுள்ளார்[6]. தேர்தல் ஆணையர் இதனை கண்டுகொள்வாரா, விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.

யார் இந்த சாஹி இமாம் புகாரி? இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[7]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[8]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும்! அயல்நாட்டில் அப்படி பேசியதால், ஒன்றும் செய்யமுடியாது என்று விட்டார்களாம். பிறகு, அவர் இறந்ததைக் கூட, செய்தித்தாள்களில் சிறியதாகப் போட்டு, மக்கள் மறந்து விடவேண்டும் அல்லது இவையெல்லாம் தெரியாமலேயே போக வேண்டும் என்று வேலை செய்துள்ளன. அந்த இமாமின் மகன் தான், இப்பொழுது, “முல்லா”யம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று முழங்கியிருக்கிறார்.

குடும்பம் சகிதமாக இமாம் முல்லாயத்திற்கு ஆதரவு: மௌலானா அஹமது புகாரி என்பவர், தில்லியில் உள்ள ஜமா மஸ்ஜிதின் இமாம் ஆவர், சாஹி பிரிவைச் சேர்ந்தவர் ( Shahi Imam of Delhi’sJama Masjid Maulana Ahmad Bukhari ). இவருக்கு குடும்பம் எல்லாம் இருக்கிறது என்று இப்பொழுது தான் தெரிய வருகிறது. ஆமாம், இவரது மறுமகன் முஹம்மது உமர் கான், சமஜ்வாடி கட்சி வேட்பாளராக பேஹத் இன்ற இடத்தில் போட்டியிடுகிறார். அவரும், தனது மாமனார் பேசும் போது கூட இருந்தார். மாமனார்-மறுமகன் மேடையில் இருந்தது, மக்களுக்கு குசியாக இருந்ததாம். முல்லாயம் 18% ஒதுக்கீடு தருகிறேன் என்று வாக்களித்து விட்டாராம், பதிலுக்கு இதோ எங்களது முஸ்லீம் ஓட்டு என்று இமாம் சொல்லிவிட்டாராம்[9].

இமாம், மற்ற முஸ்லீம் மதத்தலைவர்கள் குழுமியிருந்தது: “தியோபந்த்” என்ற முஸ்லீம் அமைப்பிலிருந்து வந்திருந்த மதகுருமார்கள் சிலரும் – மௌலானா நூருல் ஹூடா (Maulana Noorul Huda) மற்றும் மௌலானா முப்டி அர்ஸத் பரூக்கி (Maulana Mufti Arshad Farooqui) முதலியோரும் இருந்தனர்[10]. முஸ்லீம்களின் விருப்பங்களை காக்கும் ஒரே கட்சி சமஜ்வாடி கட்சி தான் என்று அடித்து பேசினார். இமாமின் இத்தகைய மதவாத ரீதியில், ஒரு குறிப்பிட்ட கட்சிற்கு ஓட்டு போடுங்கள் என்று ஆணையிடுவதால், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது, என்று மற்ற அரசியல் கட்சிக்காரர்கள் கூறுகின்றனர். அதாவது, தத்தம் பங்கிற்கு, ஒவ்வொரு கட்சிக்கும், முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்கும் என்பது, அவர்கள் எண்ணம். இருப்பினும், முஸ்லீம்கள் இணைந்து ஓட்டு போட்டால், நிச்சயமாக, குறிப்பிட்ட கட்சி ஆட்சிற்கு வராமல் போய் விடும். இதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளும் உதவி வருகிண்ரன, என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, முஸ்லீம்கள் முதலில் தாங்கள் செய்வது சரியா, தப்பா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். இப்படி, பழமைவாதம் பேசிக் கொண்டு, மதரஸாக்களில் அடைப்பட்டுக் கொண்டிருந்தால், மற்றவர்கள் எப்படி, அவர்களை முன்னேற்ற முடியும்?

இந்தியாவில் இது “செக்யூலரிஸம்” ஆகுமா? பஞ்சாபில் கூட சீகிய மதத்தலைவர்கள் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று விவாதித்து வருகின்றனர்[11]. ஆனால், இவ்வாறு மதத்தலைவர்கள் தொடர்ந்து, அரசியலில் மீடுபடுவதும், ஒருசில கட்சிகளுக்கு ஆதரவாக பேசி வருவதும், “செக்யூலரிஸம்” வேறு பேசிக் கொண்டு இருக்கும் அக்கட்சிக:ளின் சுயரூபத்தைக் காட்டுகிறது. காங்கிரச்காரர்கள் தாம், இப்படி மதவாதத்தை கடைபிடித்து, பிஜேபியை மதவாதக் கட்சி என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதே போலத்தான் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகள் காலத்தை ஓட்டி வருகின்றன. இருப்பினும், சாதாரண மக்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வரும்போது, அரசியல்வாதிகள் சரியான பாடத்தைக் கற்றுக் கொள்வார்கள்.

“கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள்: பாரதிய ஜனதா கட்சியுடன், முலாயம் 2009ல் கூட்டு வைத்ததற்கு, என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆகையால், இனி “கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள் என்று பத்திரிக்கைக்காரர்கள் முன்பாகவே பேசியுள்ளார்[12]. அதாவது, தேவையென்றால், பிஜேபி செக்யூலர் கட்சியாக இருக்கும், மற்ற கட்சிகள் கூடு வைத்துக் கொள்ளும் அல்லது கூட்டணியில் இருக்கும், தேவையில்லை என்றால், மதவாத கட்சியாகிவிடுகிறது.

Bukhari calls stir anti-Islam, tells Muslims to stay away, August 22, 2011NEW DELHI: Syed Ahmed Bukhari, Shahi Imam of Delhi’s Jama Masjid, has called upon Muslims to stay away from the Anna movement saying his war cry – Vande Mataram and Bharat Mata Ki Jai – are against Islam.

“Islam does not condone the worship of the nation or land. It does not even condone worship of the mother who nurtures a child in her womb. How can Muslims then join his stir with a war cry that is against the basic tenets of Islam. I have advised them to stay away,” Bukhari told TOI.

Bukhari, who is not perceived to be close to the Congress, may have inadvertently voiced the very concerns that Congress leaders have been expressing off the record about how Anna’s stir has isolated Muslims though none of them had ventured to make a public statement on this. The call has also reignited the centuries old debate of Vande Mataram being anti-Muslim.

Even though Team Anna includes lawyers like Prashant and Shanti Bhushan who have taken up cudgels against Narendra Modi for his alleged role in the Gujarat riots, the Shahi Imam, one of the tallest Muslim religious leader, is critical of the movement because he feels that communalism and not corruption is the bane of the country. “If Anna had included communalism in his agenda, I would have been more convinced of his intentions,” he said.

While questioning where Anna is getting funds to organize such a massive rally, Bukhari has accused Anna of indulging in politics at the behest of the RSS and the BJP.

ஒசாமா பின் லாடனை ஆதரித்த தில்லி இமாம்!: “தில்லி இமாம் ஒரு மதவாதி, அவர் ஒசாமா பின் லாடனை ஆதரித்தவர், அதுமட்டுமல்லாது 2004ல், பிஜேபிக்கு எதிராக பத்வாவையும் போட்டவர்”, என்று கமெண்ட் அடித்தவர்[13], காங்கிரஸ் ஜோகர் – திக்விஜய சிங்[14]. “அவரை எதிர்த்தவர் தான், அவர் பகுதியிலிருந்து தேர்தலில் வென்றுள்ளார். இதிலிருந்தே, அவரது செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது, என்று தெரிந்து கொள்ளாலாம். ஆகவே, அத்தகைய மதவாதியான இமாம் புகாரி சொல்வதைக் கேட்டு முஸ்லீம் உபியில் ஏமாந்துவிட மாட்டார்கள்”, என்று கூறி முடித்தார்[15]. ஆனால், காங்கிரஸே அத்தகைய முஸ்லீம்களை தாஜா செய்யும் வேலையை செய்து வருகிறது. முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு என்று ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். பிறகு, பிரச்சினை வரும் என்றறிந்ததும், ஜகா வாங்கியுள்ளது. ஏன் முன்பு, முஸ்லீம்கள் கடாபி, சதாம் ஹுஸைனைக் கூட ஆதரிக்கத்தான் செய்தார்கள். அதே மாதிரி, காங்கிரஸும், ஒன்று செக்யூலர் கட்சி அல்ல. பிஜேபியைக் குறை கூறியே, மற்ற கட்சிகள், மதவாத போக்குடன் தான் நடந்து கொள்கின்றன.

காந்தியை எதிர்த்த பாணியில், அன்னா ஹஜாரே இயக்கத்தை எதிர்த்த இமாம் புகாரி: சமீபத்தில் பெருமளவில், ஊழலுக்கு எதிராக நடந்ட, நடந்து கொண்டிருக்கும் இயக்கத்தில் முஸ்லீம் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேறு ஆணையிட்டுள்ளார்[16]. சரி, அப்படி என்ன, அன்னா செய்து விட்டார்? “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ? “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார்! அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது? பிறகு, நாங்கள் “இந்துக்கள்” கூட வேலை செய்ய மாட்டோம், அவர்கள் “காபிர்கள்” என்று வெளிப்ப்டையாகச் சொல்லி, ஜின்னா பாதையில் சென்றாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மகாத்மா காந்தியையே எதிர்த்தவர்கள், அன்னா ஹஜாரேவை மதிப்பார்களா என்ன?

வேதபிரகாஷ்

29-01-2012


[4] Twenty years after he admonished the then Shahi Imam of Delhi’s Jama Masjid, Syed Abdullah Bukhari, for dabbling in Uttar Pradesh politics — the Maulana had campaigned for the Janata Dal in the 1991 Assembly elections — Samajwadi Party chief Mulayam Singh has joined forces with the late cleric’s son and the present Shahi Imam, Syed Ahmed Bukhari, to win over Muslims in the poll-bound State. http://www.thehindu.com/news/states/other-states/article2840357.ece

[7] A Muzaffarnagar court on Saturday (October 18, 2008) issued a non-bailable warrant against the Shahi Imam of Delhi Jama Masjid Syed Ahmad Bukhari for not appearing before it in a 2007 case related to violation of election code of conducthttp://www.expressindia.com/latest-news/Nonbailable-warrant-issued-against-Shahi-Imam/375080/

[8] Non-bailable arrest warrants against Bukhari

A court in Gorakhpur has ordered issuance of non-bailable arrest warrants and initiation of proceedings for attachment of property against the Shahi Imam of Delhi Jama Masjid, Syed Abdullah Bukhari, for securing his attendance in a defamation case.

Bukhari has been evading appearance before the court of the judicial magistrate despite non-bailable warrants of arrest and proceedings under section 83 of the CrPC ordered against him on several occasions since 1993.

The magistrate has again ordered the Delhi police to arrest Bukhari and produce him before his court on October 21.

An advocate had filed a defamation suit against Bukhari for allegedly making anti-Indian statements, as published in a newspaper on December 9, 1992.

[12] Bhukhari called upon the community to close the “Kalyan Singh chapter”. Since Yadav had publically apologised for his poll pact with former BJP CM Kalyan Singh in 2009, it was no longer a factor, Bukhari told journalists.

http://www.hindustantimes.com/Specials/Coverage/Assembly-Elections-2012/Chunk-HT-UI-AssemblyElections2012-UP-TopStories/Close-Kalyan-chapter-vote-for-SP-Bukhari/SP-Article10-803528.aspx

[14] Congress general secretary Digvijay Singh said, “Bukhari is a communal person, who at one time supported Osama Bin Laden.”

http://www.hindustantimes.com/Specials/Coverage/Assembly-Elections-2012/Chunk-HT-UI-AssemblyElections2012-UP-TopStories/Close-Kalyan-chapter-vote-for-SP-Bukhari/SP-Article10-803528.aspx

[15] “Bukhari’s worth can be estimated from the fact that his opponent has won from the area he lives in. Muslims of UP will not get misled by his appeal,” Digvijaya said while talking to the reporters.

http://timesofindia.indiatimes.com/india/UP-Muslims-will-not-be-misled-by-communal-Bukhari-Digvijaya/articleshow/11665792.cms

தாவூத் இப்ராஹிமின் உறவினர்கள் இந்தியாவில் சுகமாக வாழ்வது எப்படி?

மே 18, 2011

தாவூத் இப்ராஹிமின் உறவினர்கள் இந்தியாவில் சுகமாக வாழ்வது எப்படி?

மும்பையில் தாவூத்தின் குடும்பத்தினர்: இந்தியாவின் எதிரி, மும்பை வெடிப்புக்கு மற்றும் 26/11 குற்றத்தின் காரணகர்த்தா, தேடப்படும் குற்றாவாளி என்றெல்லாம் சொல்லப்படும் தாவூத் இப்ராஹிமின் குடும்பம் இந்தியாவில் சந்தோஷமாக இருப்பது விசித்திரமான செய்திதான். ஹசீனா பார்கர் (Haseena Parkar) என்ற தாவூத்தின் சகோதரியும் மும்பையில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இங்குதான் வசிக்கிறார். பாகிஸ்தான் எப்படி ஒசாமா பின் லேடனுக்கு இடம் கொடுத்ததோ, அதுபோல, இவர்களுக்கு இடம் கொடுத்துள்ளது. தாவூத் இப்ராஹிம் இவர்களை சந்திக்க இந்தியாவிற்கு வரவில்லை அல்லது அவர்கள் அவனைப் பார்க செல்லவில்லை என்று சொல்லமுடியுமா? மும்பைத் திரைப் பட நட்சத்திரங்கள் தாவூத் இப்ராஹிமுடன் சேர்ந்தே செயல்பட்டு வருகின்றனர். ஏனெனில், அவன் தயவு இல்லாமல், இந்தி படங்கள் வெளிவரமுடியாது என்ற நிலைய்ள்ளது. குல்ஷன்குமார் கொல்லப்பட்டது, ஒவ்வொருவரின் மனத்திலும் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறது எனலாம்.

Name: Dawood Sheikh Ibrahim KaskarFather’s name: Late Sheikh Ibrahim Ali KaskarMother’s name: Late Amina

Wife’s name: Mehjabeen, alias Zubina Zareen

Children: Mahrukh, 25 years, married to Pakistan’s former cricket captain Javed Miandad’s son, Junaid[22]; Mehreen, 23 years; Moeen, 20 years; Atif Aslam 25 years; Maria, 14 years.

Siblings: Brothers – Late Noor-ul-Haq alias Noora (allegedly shot dead by gangsters in Karachi);[23] Anees Ibrahim Kaskar;[24] Iqbal Kaskar; a sister known as Aapi (reportedly 11 siblings, names of others not known)

பெயர் – தாவூத் இப்ராஹிம் கஸ்கர்தந்தை – செயிக் இப்ராஹிம் அலி கஸ்கர்(இறந்துவிட்டார்)தாயார் – அமீனா (இறந்துவிட்டார்)

மனைவி – மெஹ்ஜபீன் / ஜுபினா ஜரீன்

மகன் / மகள்கள் – மகள் மஹ்ருக் (25), பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்டட்டின் மகனை (ஜுனைத்) கல்யாணம் செய்து கொண்டுள்ளாள்; மெஹ்ரீன் (23); மோயீன் (20); அதிஃப் அஸ்லம் (25); மரியா (14).

சகோத-சகோதரிகள் – நூர் உல்-ஹக் / நூரா (இறந்துவிட்டார்); அனீஸ் இப்ராஹிம் கஸ்கர், ஆபி (சகோதரி), மொத்தம் 11 பேர்; மற்றவர்களின் பெயர்கள் தெரியவில்லை

இக்பால் கஸ்கரின் மீது தாக்குதல்: மும்பையில் பைகுல்லா என்ற இடத்தில் பக்மோடியா தெருவில் (Pakhmodia Street in Byculla) வசிக்கும்[1] இக்பால் கஸ்கர் (55), செவ்வாய்க்கிழமை தெற்கு மும்பை பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தார். நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் மீது மும்பையில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது[2]. இதில் அதிர்ஷ்டவசமாக தாவூத் சகோதரர் இக்பால் கஸ்கர் காயம் இன்றி தப்பித்தார். ஆனால் அவரது கார் டிரைவர் ஆரிப் சையது (Asif Zaveri) சம்பவ இடத்திலேயே இறந்தார்.  அன்வர் ஹிப்பி மற்றும் அன்வர் கரதே (Anwar Hippi and Anwar Karate) என்ற இரு பாதுகாவலர்களும் தப்பித்தனர்[3]. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. மேலும் 2 பேர் தப்பி ஒடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்[5]. இக்பால் மீது நிலமோசடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரௌடி கும்பல்களுக்கு இடையேயான போட்டியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று மும்பை போலீஸார் தெரிவித்தனர்[6].

   

கார் டிரைவர் சாவு: இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பேந்தி பஜார், போரி மொஹல்லா என்ற இடத்தில்[7] நேற்று இரவு சுமார் 9 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.  இரவு உணவை முடித்துக் கொண்டு, இக்பால் தன்னுடைய பாதுகாவலருடன் நடந்து சென்றதாகவும் அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இக்பால் மீதும், ஆரிப் மீதும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும், சுதாரித்துக் கொண்ட இக்பால் அருகில் இருந்த காருக்குப் பின்னர் ஒளிந்து தப்பியதாகவும், எனினும் ஆரிப் குண்டு காயம் அடைந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் ஆரிப், இதயப் பகுதியிலும், வயிற்றிலும், நெற்றிப்பொட்டிலும் காயம் அடைந்தாகவும், அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் கூறப்படுகிறது[8].


குற்றம் நிரூபிக்கப் படாதலால் முன்னர் விடுவிக்கப்பட்டான்: அரபு நாடு ஒன்றில் வாழ்ந்து வந்த இக்பால், ஒரு கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய அரசால் தேடப்பட்டு வந்தார். பின்னர் இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். எனினும், இவர் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் கோர்ட் இவரை விடுவித்தது. அதன் பிறகு இவர் மும்பையில் வசித்து வந்தார். இக்பால் மீதான தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த போலீசார், இது கோஷ்டிகளுக்கு இடையிலான முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என்றும், இந்த தாக்குதலுக்கு பின்னால் தாவூத் இப்ராஹிமின் எதிரியான சந்தோஷ் ஷெட்டி இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தனர்.


சோட்டா ராஜன் சதி? : இதற்கிடையில் தாவூத் சகோதரரை கொலை தங்களை ஏவியது சோட்டா ராஜன் என கைது செய்யப்பட்ட சையத் பிலால் முஸ்தபா அலி, இந்தர்லால் பஹதூர் காத்ரி (Syed Bilal Mustafa Ali and Inderlal Bahadur Khatri) ஆகிய 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்[9]. அவர்கள் இருவர் மீதும் இ.பி.கே., 302 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் இன்று மாச‌கான் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகின்றனர்[10].


கொலை-கொள்ளைக்காரர்களின் மோதல்கள்-சண்டைகள்: மும்பை வெடிகுண்டு குற்றத்திற்குப் பிறகு, தாவூத் மற்றும் அவனது கூட்டளிகள் சோட்டா ஷகீல் தங்களுடைய வேலைகளை தஹ்ரான், சவுதி அரேபியாவிற்கு மாற்றிக் கொண்டனர்[11]. கஸ்கர் சுடப்பட்ட சில நொடிகளில் இருவரது போன்களும் ஒலித்துக் கொண்டே இருந்ததாக, செய்திகள் வெளிவந்துள்ளன. ரவி பூஜாரி, விஜய் ஷேட்டி முதலியோர்களின் தொடர்புகளும் சந்தேகிக்கப்படுன்றன.

அனில் கபூருடன் தாவூத் 
மந்தாகினியுடன்
சல்மான் கானுடன் தாவூத்!

தாவூத்தைப் பற்றிய புத்தகம்


ஒபாமாவை ஆடவைத்த முதல் “ஜிஹாத்” கேள்வியும், “அமெரிக்கா ஏன் இன்னும் பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்று அறிவிக்கவில்லை?”, என்ற கடைசி கேள்வியும்!

நவம்பர் 8, 2010

ஒபாமாவை ஆடவைத்த முதல் “ஜிஹாத்” கேள்வியும், “அமெரிக்கா ஏன் இன்னும் பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்று அறிவிக்கவில்லை?”, என்ற கடைசி கேள்வியும்!

“ஜிஹாதைப் பற்றி தங்களது கருத்து என்ன?” என்று அந்த மாணவி கேட்டதும் ஆடியே போய் விட்டார் ஒபாமா!

ஜிஹாத்தைப் பற்றிய ஒபாமா விளக்கம்[1]: “ஜிஹாத் என்ற வார்த்தை இஸ்லாத்தில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது மற்றும் அதற்கு பதரப்பட்ட விள்ளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. நான் என்ன நினைக்கிறேன் என்றால், நாம் எல்லோரும் அந்த பெரிய மதமானது சில தீவிரவாதிகளின் கைகளில் சிக்குண்டு வன்முறையை அப்பாவி மக்களுக்கு எதிராக நியாயப்படுத்தி வருகின்றது என்பதை அறிகிறோம், ஆனால், அதை அப்படி நியாயப்படுத்த முடியாது. புனிதப் போர் என்ற திரிபு விளக்கங்களை அளிப்பவரை நாம் தனிமைப் படுத்த வேண்டிய சவாலைத்தான் நாம் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்று நான் நினைக்கிறேன்”[2].

“உங்களது மதம் என்னவாகயிருந்தாலும், உலகத்திற்கேற்ப பொது சித்தாந்தம் மூலம் ஒருவரையொருவர் மதித்து நடக்கலாம். உங்களைப் போன்ற இளைஞர்கள் மற்றவர்களை கீழே தள்ளாமல், உங்களது மதநம்பிக்கைக்களை தாராளமாகவே பின்பற்றலாம். நான் சொல்வதைவிட நீங்கள் எப்படி ஒருவரையுஒருவர் பரஸ்பரமாக நடந்து கொள்வர் என்பதுதான் முக்கியம். இன்றைய உலகில் மக்கள் பலதரப்பட்ட பிண்ணனியில், பல இனங்கள், மனிதகுழுமங்கள் ஒன்றக சேர்ந்து பேசி, உரையாடி வேலை செய்ய வேண்டியுள்ளதால், உலகம் சுருங்கியுள்ளது”[3]

ஒபாமாவின் “ஜிஹாத்” விளக்கத்தை விமர்சனிக்கும் அமெரிக்கர்[4]: ஒபாமாவின் இந்த விளக்கம் “நிர்வாக” ரீஇதியிலானது என்றும், ஏனெனில் ஷாஃபி இறையியல் விளக்கத்தின்படி, ஜிஹாத் என்றால் காஃபிர்களுக்கு எதிரான மதரீதியிலான தொடுக்கப் படும் போர்தான். அந்த விஷயத்தில் ஷாஃபி இறையியலிலேயோ அதனை சட்டப்புத்தகமாகக் கொண்டுள்ள சுன்னி ஆசாரப் பிரிவினருக்கோ எந்த கருத்து வேறுபாடும் இல்லை.  ஜிஹாதை தீவிரவாதத்துடன் பிரித்துப் பார்த்து விளக்கம் கொடுப்பதை உண்மையில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு அமெரிக்கர்கள் ஒப்புக்க் கொள்வதில்லை. இருப்பினும், பொருளாதார ரீதியில் அமெரிக்க நெரிக்கடியில் உள்ளதால், இத்தகைய மென்மையான போக்கைக் கடைபிடித்து இரண்டு நாடுகளையும் தாஜா பிடித்து காரியங்களை சாதித்துக் கொள்ளவே ஒபாமா விரும்புகிறார் என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 08-11-2010


[1] The New York Times, Obama Pointedly Questioned by Students in India, http://www.nytimes.com/2010/11/08/world/asia/08prexy.html?src=me

[4] His critics have been charging the president with using national security issues for scoring political points. It may be recalled that one of the President’s counter terrorism advisers, John Brennan , had went to the extent of describing jihad as a “legitimate tenet of Islam”. While speaking in a seminar at the Center for Strategic and International Studies , Brennan had described those who practice jihad as “victims of political, economic and social forces”.  But the Obama administration’s critics say that such “outreach” is “dangerous”. According to them there has been no ambigity in the interpretation of the term by the Shafi’i school —which prepares the manual of law for the Sunni orthodoxy or the Hanafi school as both emphasise that jihad is a religious war against non-believers. The energised Tea Party activists have been attacking the president for holding national security issues a hostage to his “political correctness”.

http://economictimes.indiatimes.com/news/politics/nation/Obama-replies-in-line-with-administrations-view-on-jihad/articleshow/6886028.cms

தீவிரவாதத்திற்கான கேன்ஸரே பாகிஸ்தானில்தான் உள்ளது: சொல்வது ஒபாமா!

செப்ரெம்பர் 22, 2010

தீவிரவாதத்திற்கான கேன்ஸரே பாகிஸ்தானில்தான் உள்ளது: சொல்வது ஒபாமா!

பாகிஸ்தான் ஒரு நம்பகத்தன்மையற்ற மற்றும் நேர்மையில்லாத பார்ட்னர்: பாப் வுட்வார்ட் என்ற பத்திரிக்கையாளரால் எழுதபட்ட “ஒபாமாவின் யுத்தம்” என்ற புத்தகம் வெளியிடப்படவுள்ளது. தேசிய புலனாய்வு இயக்குனர், நவம்பர் 2008 வெற்றிற்குப் பிறகு, தீவிவாதத்திற்கான எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள யுத்தத்தைப் பொறுத்த மட்டிலும், பாகிஸ்தான் ஒரு நம்பகத்தன்மையற்ற மற்றும் நேர்மையில்லாத பார்ட்னர் என்று சொன்னாராம். ஒபாமா ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு நாட்களுக்கு பிறகு அவரிடம் மெக்-கோனெல் என்ற தேசிய புலனாய்வு இயக்குனர், பாகிஸ்தானை நம்பமுடியாது என்றாராம்.

cover-Obamas-Wars-பாப் வுட்வார்ட்

cover-Obamas-Wars-பாப் வுட்வார்ட்

தீவிரவாதத்திற்கான கேன்ஸர் புரையோடிருக்கிறது: அல்-குவைதா மற்றும் தாலிபானிற்கு, பாகிஸ்தானிலிருந்து கிடைக்கும் ஆதரவு இருக்கும் வரை, அங்கு தீவிரவாதத்திற்கான கேன்ஸர் புரையோடிருக்கிறது, அதனால், அது தீமையைத்தான் விளைவிக்கும். ஆகையால் அங்குள்ள மக்களுக்கு நாம் இதை தெளிவாக சொல்லவேண்டியுள்ளது என்றாராம்[1]. ஆக ஆப்கானிஸ்தானைப் பற்றிய கொள்கையில், வாஷிங்டனில் கருத்து வேறுபாடு அதிகமாகவே இருந்தது என்கிறார்[2]. இந்தியாவில், இத்தகைய கருத்தைச் சொல்ல, எந்த அதிகாரிக்கும் துணிவில்லை. 26/11 அன்று அமைதியாக இருங்கள் என்று சொல்லுவார்கள் அவ்வளவுதான்!

சர்வதேச பயங்கரவாதியும், அல்காய்தா தலைவருமான ஒசாமா பின்லேடனை பிடிக்கும் அல்லது கொல்லும்வரை ஓயமாட்டோம்: வாஷிங்டன், செப்.11, 2010: சர்வதேச பயங்கரவாதியும், அல்-காய்தா தலைவருமான ஒசாமா பின்லேடனை பிடிக்கும் அல்லது கொல்லும்வரை ஓயமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூளுரைத்து பத்து நாட்களில் மேலே குறிப்பிட்ட செய்தி வருகிறது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகளும், படை வீரர்களும் மனம் தளர்ந்துவிடவில்லை. பின்லேடனை தீர்த்துக்கட்டியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். நியூயார்க்கில் அல்-காய்தா தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி (செப்டம்பர் 11) அதிபர் ஒபாமா வாஷிங்டனின் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள அல்-காய்தா தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்களுடன் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

இது இஸ்லாமியர்களுக்கு எதிரான போரல்ல, பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்[3]: அவர் மேலும் கூறியது: நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை நடத்தவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே போர் நடத்துகிறோம். இஸ்லாம் என்ற போர்வையில் யாரெல்லாம் மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு எதிராகவே நாங்கள் போர் புரிகிறோம்.கடந்த இரு ஆண்டுகளாக அல்-காய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்தி வருகிறோம். இந்த போரில் நல்ல பலன்கிட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தில் புகலிடம் அடைந்துள்ள அல்-காய்தா பயங்கரவாதிகளால் நமது தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அந்த அமைப்பின் தலைவர் பின்லேடன் தாக்குதலுக்குப் பயந்து பூமிக்கடியில் பதுங்கியுள்ளார். எதற்கெடுத்தாலும் அறிக்கைவிட்டு மிரட்டல் விடுத்து வந்த ஜவாஹிரியின் செயல்பாடும் முடங்கிவிட்டது. இதெல்லாம் அமெரிக்கப் படைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

ஈவிரக்கமின்றி பலரைக் கொல்லுவதற்கு ஒரு தனி நபரோ அல்லது ஒரு குழுவினரோ துணிந்து உயிரைத் துறக்கத் தயாராகவுள்ள போக்கு மோசமானது: பின்லேடனையும், ஜவாஹிரியையும் உயிருடன் பிடித்துவிட்டாலோ, கொன்றுவிட்டாலோ அமெரிக்காவின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடப்போவதில்லை. எனினும் இருவரையும் தீர்த்துக்கட்டுவதற்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளிக்கிறது.  கடந்த 8 ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை மேற்கொண்டபோதிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நமது நாட்டை முழுமையாக காத்துள்ளோமா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். இதனால் மனம் துவண்டுவிடத் தேவையில்லை. பயங்கரவாதிகளின் எத்தகைய சவாலையும் சமாளிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். இப்போதைய காலக்கட்டத்தில் ஈவிரக்கமின்றி பலரைக் கொல்லுவதற்கு ஒரு தனி நபரோ அல்லது ஒரு குழுவினரோ துணிந்து உயிரைத் துறக்கத் தயாராகவுள்ளனர் என்றே நினைக்கிறேன். இதுபோன்ற போக்கு மோசமானது. மனித சமுதாயத்துக்கே ஆபத்தானது என்றார்[4].

ஒசாமாவைப் பற்றிய முரணான செய்திகள்: அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குலின் முக்கிய குற்றவாளியும், அல் கொய்தா மற்றும் பல்வேறு பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்பின் தலைவைனுமான ஒசாமா பின்லேடன் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டோம் என்று ஐரோப்பிய உளவுத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இத்தகவல்கள் வெளியாயின. முன்னாள் உளவுத்துறை அதிகாரியான இவரின் பெயர் பாதுகாப்பு கருதி குறிப்பிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பேட்டியில் அவர் கூறியதாவது : இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் தஞ்சம் புகுந்த பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான சிலர் தந்த தகவல்களின் அடிப்படையில் ஐரோப்பிய உளவுத்துறை பின்லேடனை மிக அருகில் நெருங்கியதாகவும், ஆனால் கைது செய்யப்படுவதற்கு முன்னரே பின்லேடன் தப்பிச் சென்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதுவரையில் மர்மமாகவே உள்ள பின்லேடன் தற்போது, அன்றாட செயலாக்கப் பணிகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, ஆலோசனைகள் வழங்குவதிலேயே, அதிக ஈடுபாடு காட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வதிர்ச்சித் தகவல்கள் சர்வதேச பயங்கரவாதச் சதிச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புக்களிடையே அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


[1] Indian Express, Obama believes ‘cancer of terrorism’ is in Pak: Book, Wed Sep 22 2010, 15:28 hrs

http://www.indianexpress.com/news/Obama-believes—cancer-of-terrorism—is-in-Pak–Book/686098

[2] http://blogs.abcnews.com/politicalpunch/2010/09/white-house-reacts-to-nyt-report-about-woodward-book.html#tp

Obama Aides Divided on Afghan Strategy, According to New Book

http://www.voanews.com/english/news/asia/Obama-Aides-Divided-on-Afghan-Strategy-According-to-New-Book-103520379.html

[3] இந்தியாவும், காஷ்மீர் விஷயத்தில், இவ்வாறு சொல்லி அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து, பேசி அவட்களிடத்தில் எந்த பலனையும் காண / அடைய முடியாது, ஏனெனில் அவர்கள் தங்களுடைய பிரிவினைவாத்கத்தில் குறியாக உள்ளார்கள்.

[4] அதாவது மனித வெடிகுண்டுகள், தற்கொலத் தாக்குதல்கள், ஜிஹாதி பயங்கரவாதத்தைக் குறிப்பிட்டு சாடுகிறார். சிதம்பரம் இதை கவனமாகப் படித்து, தைரியத்தை வளர்த்துக் கொண்டால் சரி!

இந்தியர்களை குறிவைத்து தாக்குதல் காபூல் படுகொலை குறித்து தகவல்!

மார்ச் 4, 2010

ஆப்கானிஸ்தானில் தலிபானின் இந்தியர்களை குறிவைத்து தாக்குதல், படுகொலைகள், முதலியன

இந்தியர்கள் குறிவைத்துத் தாக்கப்படுதல்[1]: பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதியே திறனற்று இருக்கும் நிலையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை குறிவைத்து தாக்கினார் என்ற விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும், “இந்தியர்கள் யார் என்று தெரிந்து கொண்டுதான் வந்தனர்”, என்று குறிவைத்துத்தான் வந்துள்ளனர், என்றெல்லாம் உள்ளன. ஆகவே, இனி ஆப்கானிஸ்தானில்ற்குச் சென்று வேலை செய்வோம் என்று இந்தியர்கள் செல்லவேண்டியதில்லை, சாகத்தேவையில்லை. கோடிக்கணக்கில் கொட்டி முஸ்லீம்களின் ஆதரவு பெறுகிறோம் என்று இந்த கேடுகெட்ட சோனியா அரசு நாடகமும் தேவையில்லை.

இந்திய முஸ்லீம்கள் தலிபானை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை: புனரைப்பு வேலை என்று சரான்ஜு டெல்ராம் நெடுஞ்சாலை, பல அணைக் கட்டுகள், மின் திட்டங்கள் போன்ற பணிகளுக்காக இந்தியப் படையினரும், இந்திய இன்ஜினியர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களை தாலிபான் பயங்கரவாதிகள் அடிக்கடி கடத்துவதும், கொடூரமாகக் கொலை செய்து உடலை “காபிர்களுக்கு இதுதான் கதி” என்ற எச்சரிக்கை வாசகத்துடன் அனுப்புவது தெரிந்தவிஷயமே.

தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமுமுக ஆர்பாட்டம் / சாலைமறியல் நடத்தவில்லை: இந்தியர்களுக்கும் ஆசைவிடவில்லை. அயல்நாடு சென்றால் சம்பாதிக்கலாம் என்று செல்கின்றனர், ஆனால், பலிக்கடா போல சாகின்றனர். கேரளாவைச் சேர்ந்த டிரைவர் மணியப்பன், ஆந்திராவைச் சேர்ந்த இன்ஜினியர் சூரியநாராயணா ஏப்ரல் 29, 2006ல் தலையறுத்து கொலைசெய்ததை இந்திய முஸ்லீம்கள் தடுக்கவில்லை[2]. ஆப்கனில் இத்தாலி பேக்கரி நிறுவனத்தில் வேலை செய்த கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த சைமனை தாலிபான்கள் கடத்திச் சென்றபோது, விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்ளவில்லை. கை வெட்டப்பட்டப்பிணமாக கண்டெடுக்கப் பட்டபோதும் முஸ்லீம்கள் கண்டுகொள்ளவில்லை.  ஆப்கனின் நிம்ப்ரோஸ் மாகாணத்தில் இந்திய எல்லை சாலை நிர்மாணப் படையின் இன்ஜினியரான கிருஷ்ணகிரி, கே.திப்பனப்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தசாமி, இன்னொரு இன்ஜினியரான காசியைச் சேர்ந்த மகேந்திர பிரதாப் சிங் ஆகியோர் தாலிபான்களின் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டபோதும் மூச்சுபேச்சு இல்லை. தமுமுக எந்த போராட்டமும் நடத்தவில்லை. இருப்பினும், விடாப்பிடியாக, ஆப்கானிஸ்தானின் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் முஸ்லீம்களின் நன்மதிப்பைப் பெறலாம் என்று இந்தியா நினைப்பது மடத்தனமானது. கர்ஸாய் மிகவும் தெளிவாக சொல்லியுள்ளார், முஸ்லீம் எனும்போது, நாங்கள் பாகிஸ்தானிற்குத்தான் ஆதரவு தருவோம் என்று.

நித்யானந்தா, ரஞ்சிதா விஷயங்களில் உள்ள ஆர்வம் இதில் இல்லை: காபூலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், இந்தியர்களைக் குறிவைத்துத்தான் வந்துள்ளனர் என்றும், அந்த இந்தியர்கள் யார் என்று தெரிந்து கொண்டுதான் வந்தனர் என்றும், வாஷிங்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை தெரிவித்துள்ளது. காபூலில் உள்ள இரண்டு ஓட்டல்களில் சமீபத்தில் பயங்கரவாதிகள் புகுந்து குண்டு வீசித்துப்பாக்கியால் சுட்டு பலரைக் கொன்றனர். இவர்களில் ஆறு பேர் இந்தியர்கள்; ஒருவர் இத்தாலியர்; ஒருவர் பிரான்ஸ் நாட்டின் சினிமா தயாரிப்பாளர்; மூன்று ஆப்கன் போலீஸ் அதிகாரிகள்; பொதுமக்கள் நால்வர், ஒரு அடையாளம் தெரியாத நபர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து ஆப்கன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக, “தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கூறியிருப்பதாவது: காபூலில் தாக்குதல் நடத்த வந்தவர்களில், நான்கு பேர், பெண்களைப் போல பர்தா அணிந்தபடி அதற்குள் ஆயுதங்களை மறைத்துக் கொண்டு வந்துள்ளனர். அவர்களில் ஒருவன், வெடிபொருட்கள் நிறைந்த வேனுக்குள் மறைந்து கொண்டான். மற்ற மூவரும் இரண்டு ஓட்டல்களில் புகுந்துள்ளனர்.ஆப்கன் புலனாய்வுப் பிரிவு செய்தித் தொடர்பாளர் சயீது அன்சாரி கூறுகையில், “சம்பவம் நடக்கத் தொடங்கிய பின், ஆப்கன் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அசோசியேட்டட் பிரஸ்சுக்கு போன் செய்து சம்பவத்துக்கு தலிபான்கள் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், வந்தவர்கள் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,யோடு தொடர்புடைய லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அவர்கள் ஓட்டலுக்குள் புகுந்தவுடன், “எங்கே அந்த இந்திய இயக்குனர்?’ என்று கத்தியபடி வந்தனர். மற்ற இருவரும் இந்தியர்களைத்தான் தேடினர். அவர்கள் தலிபான்களாக இருந்தால் அவர்களுக்கு இந்தியர்களைத் தெரிய வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், காபூலிலுள்ள அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், ஆப்கன் தலிபான்களின் ஒரு பிரிவான ஹக்கானி பிரிவுதான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஏற்கனவே, காபூலிலுள்ள இந்தியத் தூதகரத்தை 2008ல் தாக்கியது அவன் குரூப்தான் என்று இந்தியாவும் ஆப்கனும் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியுள்ளன.ஹக்கானி தலிபான்கள், பாகிஸ்தானின் வடக்கு வாசிரிஸ்தானில் செயல்பட்டு வருகின்றனர். லஷ்கருக்கும், தலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதை, பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிகேடியர் முகமது சாத் உறுதிப்படுத்தியுள்ளார். ஹக்கானி பிரிவில் லஷ்கர் பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்திருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

2003லிருந்து 2011 வரை ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் முதலியன[3]

2011

May 10, 2011: Afghanistan National Intelligence Agency spokesperson Lutfullah Mashal said that Inter-Services ISI hired two persons, identified as Sher Zamin and Khan Zamin, to kill the Indian Consul General of Jalalabad province.

2010

December 16, 2010: Indian embassy in Kabul and four consulates in Afghanistan have been put on high alert following intelligence inputs that the Taliban militants may be preparing for a strike at Indian establishments.

October 11, 2010: Two Indian nationals were killed in a missile attack launched by the Taliban militants on an Indian NGO’s office in Kunar province of Afghanistan. Qari Omar Haqqani, a spokesperson for the Afghan Taliban, told reporters from an undisclosed location that the militants had attacked the office of the Indian NGO with missiles in which three people, including two Indian workers, were killed. The nationality of the third person who died in the attack is yet to be ascertained.

February 26, 2010: The Taliban militants on carried out coordinated suicide attacks at two hotels in Kabul, the capital city of Afghanistan, killing at least nine Indians, including two Major-rank Army officers. At least 10 others, including five Indian Army officers, were injured in the strike that killed eight others, including locals and nationals from other countries. The bombers, believed to be three in number, struck at the guest houses, particularly at Park Residence, rented out by the Indian Embassy for its staffers and those linked to India’s developmental work in Afghanistan.

2009

October 8, 2009: Targeting the Indian embassy in Kabul for the second time, a Taliban suicide bomber blew up an explosives-laden car outside the mission, killing 17 persons and injuring over 80, including three Indo-Tibetan Border Police (ITBP) soldiers. The embassy staff, however, was unhurt. The Taliban claimed responsibility for the attack and identified the bomber as Khalid, Al Jazeera TV channel said.

February 9, 2009: Simon Paramanathan, an Indian from Villupuram in Tamil Nadu held captive by militants in Afghanistan for nearly four months is dead, his family and the Ministry of External Affairs (MEA) said in New Delhi. Simon, employed in the Italian food chain Ciano International, was abducted in October 2008. The company had been negotiating with the captors belonging to an unnamed militant outfit, which had sought a ransom of USD 200000. However, the negotiations “to work out a reasonable ransom” reportedly failed to break the deadlock. An MEA official said in New Delhi that Afghanistan authorities informed that Simon died while in the custody of his abductors.

2008

December 24, 2008: A 38-year-old man from Tamil Nadu working with a food store attached to Italian soldiers deployed in Afghanistan, has been kidnapped by Afghan militants in Herath province, police said, according to Rediff. Simon, who hails from Kalakurichi Village in Villupuram District, was kidnapped by a group calling itself Mujahideen on October 13, 2008, police said. Simon was working with an Italian food store supplying food to its soldiers in Afghanistan. He was kidnapped along with two other company employees while they were delivering food at the International Security Assistance Force camp in Bagram air base, the sources said.

July 7, 2008: A suicide attack on the Indian Embassy in Kabul killed 41 persons and injured over 140. The killed included two senior diplomats, Political Counsellor V. Venkateswara Rao and Defence Adviser Brigadier Ravi Datt Mehta, and Indo-Tibetan Border Police (ITBP) staffers Ajai Pathaniya and Roop Singh.

June 5, 2008: An ITBP trooper was killed and four others injured in an attack by the Taliban in the south-west Province of Nimroz.

April 12, 2008: Two Indian nationals, M.P. Singh and C. Govindaswamy, personnel of the Indian Army’s Border Roads Organisation (BRO), were killed and seven persons, including five BRO personnel, sustained injuries in a suicide-bomb attack in the Nimroz Province.

January 3, 2008: In the first-ever suicide attack on Indians in the country, two ITBP soldiers were killed and five others injured in the Razai village of Nimroz Province.

December 15, 2007: Two bombs were lobbed into the Indian consulate in Jalalabad, capital of the Nangarhar province in Afghanistan. There was however, no casualty or damage.

2006

May 7, 2006: An explosion occurred near the Indian Consulate in the fourth police district of the western Herat Province. There were no casualties.

April 28, 2006: An Indian telecommunications engineer working for a Bahrain based firm in the Zabul Province, K Suryanarayana was abducted and subsequently beheaded after two days.

February 7, 2006: Bharat Kumar, an engineer working with a Turkish company, was killed in a bomb attack by the Taliban in the western province of Farah.

2005

November 19, 2005: Maniappan Kutty, a driver working with the BRO’s project of building the Zaranj-Delaram highway, was abducted and his decapitated body was found on a road between Zaranj, capital of Nimroz, and an area called Ghor Ghori, four days later.

2003

December 9, 2003: Two Indian engineers – P Murali and G Vardharai working on a road project in Zabul province were abducted. They were released on December 24 after intense negotiations by Afghan tribal leaders with the Taliban militia, which was demanding the release of 50 imprisoned militants in return for the Indian engineers.

November 8, 2003: An Indian telecommunications engineer working for the Afghan Wireless Company was shot dead.


[1] தினமலர், ,இந்தியர்களை குறிவைத்து தாக்குதல் காபூல் படுகொலை குறித்து தகவல்; மார்ச் 04,2010,00:00  IST; http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4971

[2] அடுத்த நாளில் மே 1, 2006 – காஷ்மீரில் 22 இந்துக்கள் கொலைசெய்யப்படுகின்றனர். இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.