Archive for the ‘எஸ்சி’ category

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர்நீதி மன்றம் உத்தரவு (2)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (2)

மதம் மாறியவர் வெறும் முஸ்லிமா, லெப்பை முஸ்லிமா?:  நீதிமன்றமும் மற்றொரு கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகியது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர் அல்லது முஸ்லிம் சமூகமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்படவில்லை[1]. முஸ்லீம் சமூகத்தில் உள்ள 7 குழுக்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளன, அவர்களில் லெப்பைகளும் அடங்கும். மனுதாரரின் மதமாற்றம் குறித்து காஜி வழங்கிய சான்றிதழில், அவர் முஸ்லிம்களின் லெப்பை குழுவாக மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை[2]. மனுதாரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று தான் கூறுகிறது. அதனால், மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்[3]. இனி தீர்ப்பில் உள்ள கடைசி முக்கியமான பத்திகளை கவனிப்போம்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கை: 12. பிரச்சினையை இன்னொரு கோணத்தில் அணுகலாம். தமிழகத்தில் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கையின் படி, பின்வருவனவற்றின் பின்தங்கிய வகுப்பினரின் (முஸ்லிம்கள்) பட்டியலை மட்டும் பட்டியல்படுத்துகிறது:

“1. Ansar – அன்சார்,

2. Dekkani Muslims  – தெக்கானி முஸ்லிம்கள் [தக்காண முஸ்லிம்கள்],

3. Dudekula – துதேகுல,

4. Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)- ரவுத்தர் உட்பட லப்பைகள் மற்றும் மரக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது),

5. Mappilla – மாப்பிள்ள [குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள்],

6. Sheikh – ஷேக்,

7. Syed – சையத்.”

இவர்களை முஸ்லிம்கள் பிரிவுகள், சமூக அடுக்குகள், கட்டமைப்புகள் அல்லது ஜாதிகள் என்று எப்படி கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஜாதியில்லை என்றால், இந்த ஏழு குழுக்களும் மாறி, அல்லது மாற்றம் பெற முடியுமா என்றும் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜி.மைக்கேல் தீர்ப்பு [Kailash Sonkar v. Maya Devi (1984) 2 SCC 91 and G.Michael v. S.Venkateswaran [1952 (1) MLJ 239]: எப்பொழுது ஒரு இந்து இஸ்லாத்திற்கு மாறும்போது, அவன் ஒரு முசல்மான் ஆகிறான், அவனுடைய இடம்முஸ்லீம் சமூகம் அவருக்கு முன் எந்த சாதியை சார்ந்தது என்பதை வைத்து தீர்மானிக்கப்படவில்லை, படுவதில்லை. காஜியே அதமாற்றம் அடைந்தவர். மாற்றியவர் ப்படி இருக்க வேண்டும் என்று அறிவிக்காதபோது, மதச்சார்பற்ற அரசாங்கத்தின் வருவாய் அதிகாரி எப்படி, அவரை “லெப்பை” என்று அடையாளம் கண்டு, தீர்மானித்து, இஸ்ல்லாம் என்ற கூண்டுக்குள் அடைக்கிறார் என்று தெரியவில்லை. இது எனக்கும் புரியவில்லை.

எஸ்.ருஹய்யா பேகம் வழக்கு [S.Ruhaiyah Begum vs The Government Of Tamil Nadu (WPNo.2972 of 2013 dated 19.02.2013)]: .எஸ்.ருஹய்யா பேகத்தைப் போல ஒரு இந்து “மற்ற வகையை” சேர்ந்தவர்கள் என்ற பக்குப்பிலிருந்து, இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு தம்முடைய நிலையை சாமர்த்தியமாக நிர்வகிக்கிறார்கள் அவர் அல்லது அவள் மேற்கூறிய அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரைச் சேர்ந்தவர் என்பது போன்ற சான்றிதழைப் பெறவும் இத்தகைய புத்திசாலித்தனத்தால் செய்கிறார் என்றால், சமூக நீதியின் நோக்கமே அதனால் தோற்கடிக்கப்படும் உத்திகள். நன்கு கற்றறிந்த மூத்த வழக்குரைஞர், மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே மதமாற்றத்திற்கு முன்பே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகிறார். பின்னர் தனியாக அவர் பிசி (முஸ்லிம்) என்று கருதலாம். எஸ்.ருஹய்யாவில் நடைபெற்றது என்று வாதித்தால், அந்த முயற்சியை அரசு மட்டுமே மேற்கொள்ள வேண்டும், தீர்மானிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலையில் உள்ள வழக்கு: “13. எஸ்.யாஸ்மின் வழக்கில் கவனிக்கப்பட்டபடி, மதமாற்றத்திற்குப் பிறகும் பிறந்த சமூகம் [ஜாதி போன்றவற்றை] ஒரு நபர் தனது சுமந்து செல்ல முடியாது. மதமாற்றத்திற்குப் பிறகும் அப்படிப்பட்ட நிலை இருக்க வேண்டுமா, இடஒதுக்கீட்டின் பலன் கொடுக்கப்பட வேண்டுமா என எழுப்பிய  கேள்வி, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் உன்பு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. மாண்புமிகு சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை கைப்பற்றியுள்ளபோது, இந்த நீதிமன்றத்தை எந்த கருத்தையும் சொல்ல முடியாது. இந்த காரணத்திற்காக, மனுதாரரின் கோரிக்கை. நான் வற்புறுத்தினாலும் ஏற்ல முடியாது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய முன்மாதிரிகளும் அவ்வாறே, வரும் திர்ப்புக்குக் கட்டுப்பட்டது. ஆகவே, இரண்டாவது பிரதிவாதி ஆணைக்குழுவின் நிலைப்பாடு சரியானது, அதில்எந்த குறுக்கீடும் எய்ய முடியாது, அது  தேவையற்றதும் ஆகும்”.

இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்இடவொதிக்கீடுமுதலிய அரசியல்வாதிகளின் சலுகைகள்: மதம் மாறிவர்களுக்கு இடவொதிக்கீடு கொடுக்க அரசியல்வாதிகள் பலமுறைகளை கையாண்டு வருகிறார்கள். அவை தான், சட்டங்கள், தீர்ப்புகள், நீதிகள், வரையறைகள் என்று எல்லாவற்றையும் மீறி செயல்பட முயற்சித்து பிரச்சினைகளை உண்டாக்குகின்றனர். “இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்-இடவொதிக்கீடு” என்ற போர்வைகளில் மாநில அரசுகள் முஸ்லிம்களைக் குறிப்பாக தாஜா செய்து, “ஓட்டு வங்கி,” மற்றும் எல்லைகள் கடந்த பொருளாதார ஆதாயங்களைப் பெற “ரிசர்வேஷன்” சலுகைகளைக் கொடுத்து வருகிறார்கள். உண்மையில் அம்மதங்கள், அவர்கள் மதங்கள் அத்தகைய பாகுபாடுகள் கொண்டிருக்கவில்லை, 100% சமத்துவம், சகோதரத்துவம், சமவுரிமைகள் என்றெல்லாம் கொண்டிருக்கின்றன என்றால், மண்டல் கமிஷன் தீர்ப்பு, சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகள்  எல்லாம் பொய், தவறு, தங்களது பைபிள் / குரான் –க்ளுக்கு எதிரானவை, ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்திருக்க வேண்டும். ஆர்பாட்டம்-போராட்டம் செய்து, மாற்றியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஜாதிகள் உண்டு என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள், புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறர்கள்.

முரண்பாட்டுடன் இறையியல் சித்தாந்தம் இருக்க முடியாது: கிருத்துவர்கள் லாப-நஷ்ட கணக்குப் போட்டு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் தீர்ப்பு-ஆதரவு, ஆசை-பேராசை போன்றவற்றால் தவிக்கிறார்கள். கிருத்துவர்களைப் போலவே, நீதிமன்றங்களில் சோதனை செய்து பார்க்கிறார்கள். ஆனால், இறையியல் விவகாரங்கள் வெளிவரும் போது, மறைக்கப் பார்க்கிறார்கள். வழக்கம் போல, இந்து மதம், சனாதனம் என்றெல்லாம் பேசி, திசைத் திருப்பப் பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை, பிற மதங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் ‘மற்றவர்கள்’ என்ற பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவதால், அவர்கள் இடஒதுக்கீட்டை இழக்கின்றனர்[4]. கிறிஸ்தவ மதத்திற்கு மாறுபவர்கள் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக’ (மதமாற்றத்திற்கு முன் அவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) கருதப்பட்டாலும், மதம் மாறிய முஸ்லீம்களின் விஷயத்தில், ஒரு நபர் முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவை ‘மற்றவை’ என மட்டுமே வகைப்படுத்தப்படுகின்றன, போன்ற கருத்துகள் ஏற்கெனவே வைக்கப் பட்டுள்ளன[5].

சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர்: இந்திய அரசியலமைப்பில், OBC கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினராக (SEBC) விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய அரசாங்கம் அவர்களின் சமூக மற்றும் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது – எடுத்துக்காட்டாக, OBC கள் மேல் கல்வி மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு அதற்கு கொடுக்கப் படுகிறது.  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது கல்வி அல்லது சமூகத்தில் பின்தங்கிய சாதிகளை வகைப்படுத்த இந்திய அரசால் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டுச் சொல்லாகும். பொது சாதிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி மற்றும் எஸ்டி) ஆகியவற்றுடன் இந்தியாவின் மக்கள்தொகையின் பல அதிகாரப்பூர்வ வகைப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன் அறிக்கையின்படி OBC கள் நாட்டின் மக்கள்தொகையில் 52% என்று கண்டறியப்பட்டது, மேலும் 2006 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடைபெற்ற போது 41% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் OBC களின் சரியான எண்ணிக்கையில் கணிசமான விவாதம் உள்ளது; இது பொதுவாக கணிசமானதாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் மண்டல் கமிஷன் அல்லது தேசிய மாதிரி கணக்கெடுப்பு மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களை விட இது அதிகம் என்று பலர் நம்புகிறார்கள்.

பொருளாதார ரீயில் பின்தங்கிய வகுப்பினர்: ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடிமக்கள் மற்றும் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBCs). இப்பொழுது, இந்தியாவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) என்பது குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கும் (US$10,000) குறைவாக உள்ளவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள SC/ST/OBC போன்ற எந்த வகையிலும் சேராதவர்கள் அல்லது தமிழில் MBC அல்லாதவர்களின் துணைப்பிரிவாகும்.  இப்பொழுது, இப்படியெல்லாம் பிரிக்கப் படும் நிலையில், மதம் போன்ற காரணிகளும் நுழையுமா, நுழைக்கப் படுமா, அல்லது செக்யூலரிஸ கொள்கை பின்பற்ரப் படுமா என்று கவனித்துப் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-12-2022 


[1] Live Law, One Can’t Carry His Caste After Conversion’: Madras High Court Rejects Backward Quota Claim Of Man Who Converted To Islam From Hinduism, Upasana Sajeev, ‘3 Dec 2022 9:31 AM.

[2] https://www.livelaw.in/news-updates/madras-high-court-a-person-cannot-carry-his-community-of-birth-even-after-conversion-rejects-backward-class-reservation-of-man-215673

[3] Case Title: U Akbar Ali v The State of Tamil Nadu and another Citation: 2022 LiveLaw (Mad) 492 Case No: WP (MD)No.1019 of 2022.

[4] The Hindu,‘Converted Muslims losing out on reservation in TNPSC jobs’- The same rule does not apply to converted Christians, says a former judge, T.K. ROHIT, – CHENNAI, March 27, 2022 10:50 pm | Updated March 28, 2022 07:48 am IST

[5] Muslims who have converted from other religions are losing out on the reservation for the Backward Class Muslims in Tamil Nadu Public Service Commission (TNPSC) jobs as they are treated as belonging to the category of ‘Others’. While those converting to Christianity are treated as belonging to the ‘Backward Classes’ (even if they belonged to the Scheduled Caste before conversion), in the case of converted Muslims, even if a person originally belonged to the Backward Class or Most Backward Class, they are only classified as ‘Others’.

https://www.thehindu.com/incoming/converted-muslims-losing-out-on-reservation-in-tnpsc-jobs/article65265386.ece

“தலித்-முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம், தலித் பெண்கள் எதிர்ப்பு ஏன்? (4)

மே 13, 2018

தலித்முஸ்லிம்மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம், தலித் பெண்கள் எதிர்ப்பு ஏன்? (4)

Thiruma VALmeets Muslims-at Bomminaicketpatti- 12-05-2018

பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டியில்….மதநல்லிணக்கம் சீர்குலைகிறது: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டி…….” என்று ஆரம்பித்தது, அவரது போலித்தனத்தை காட்டியது. கலவரம் நடந்தவுடன் என்னால் உடனே வரமுடியவில்லை. ஆனால் எனது கட்சியினர் ஏராளமான உதவிகளை செய்துள்ளனர். நடந்து முடிந்த கலவரம் குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். கலவரத்தில் கைதானவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உள்ளோம். மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் நோக்கிலே சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன”, இவ்வாறு திருமாவளவன் கூறினார்[1]. “குடிசைகள் எரிந்த காலத்தில் வராத சில அமைப்புகள் தற்போது இங்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். மத நல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் நோக்கிலே செயல்படுகின்றனர்,” என இந்து அமைப்புகளைச் சாடினார் திருமாவளவன்[2]. 12-05-2018 அன்று மாலை ஹெச்.ராஜா பொம்மி நாயக்கன்பட்டிக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரு தரப்பினரும் சமாதானம் பேசி பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்[3].

Thiruma-at Bomminaicketpatti- 12-05-2018-1

திருமாவளவனை பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்விகள் கேட்டது: முன்னதாக, இஸ்லாமியர் மற்றும் தலித் சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து திருமாவளவன் இதுவரை நேரில் சென்று பார்வையிடவில்லை என பல்வேறு பிரிவினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்[4]. இதனால், வேறு வழியில்லாமல், அங்கு செல்ல தீர்மானித்தார்[5]. தினசரி, “திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. “தேவதானப்பட்டி அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் கூறினார். அப்போது, பெண்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.” என்று தினத்தந்தியும் குறிப்பிட்டுள்ளது[7]. திருமா கொடுத்த விளக்கம், “கலவரம் நடந்த இடத்துக்கு நான் தாமதமாக வந்ததாக கூறுகிறார்கள். நான் வராவிட்டாலும், என்னுடைய கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இங்கு வந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்[8]. பல ஊர்களில் தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளானார்கள். அங்கெல்லாம் ஆர்வம் காட்டாத சிலர், இந்த ஊர் பிரச்சினையில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக உள்ளது…..எங்கள் கட்சி பொறுப்பாளர்கள் இருதரப்பிடமும் ஒற்றுமையாக இருக்க கூறினர். ஆனால் காழ்ப்புணர்ச்சியில் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்கள். மக்கள் அதற்கு இடம் தரமாட்டார்கள்…….” என்றார்[9].

Tiruma meets affected-at Bomminaicketpatti -ABR Mahal -12-05-2018

திருமாவளவனின் போக்கு, மனப்பாங்கு முதலியன: திருமா நிச்சயமாக, துலுக்கரிடம் “தாசன்” போன்றுதான் நடந்து கொள்கிறார். அதன் பின்னணி என்ன என்பதனை காரரியங்களுடன் தெரியப் படுத்தப் பட வேண்டும், அறியப் பட வேண்டும். இங்கு தனது இனத்தவரிடமும், துலுக்கருடனும் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது மேலே எடுத்துக் காட்டப்பட்டது:

மசூதிக்குச் சென்று குல்லா போட்டுக் கொண்டு பேசுகிறார். ஏ.பி.ஆர். மஹாலில் “தலித்துகளுடன்” பேசுகிறார். அதாவது, கோவிலில் உட்கார்ந்து பேசவில்லை, எந்தவித இந்துமத சின்னங்களையும் திக்கவில்லை.
துலுக்கர் முன்பு நின்று கொண்டு பேசுகிறார். தலித்துகள் தரையில் உட்கார, இவர் சேரில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்[10].
முஸ்லிம் சொல்வதை பவ்யமாக, தரையில் உட்கார்ந்து கொண்டு கேட்கிறார். கையை நீட்டி பேசுகிறார், ஒரு பெண் எழுந்து நின்று பேசும் போது, முகத்தை இருக்கமாக வைத்துக் கொள்கிறார்.
துலுக்கரைக் கட்டிப்பிடித்தும், பணிவோடும் பேசுகிறார். ஒரு இந்து பெண்ணிடம் பேசும் போது, இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு முறைத்துப் பார்க்கிறார்.
40 நிமிடம் உட்கார்ந்ததால், இடது பக்கம் என்றெல்லாம் சாய்ந்து உட்காருகிறார், தண்ணீர் குடிக்கிறார். இங்கோ, பேசிவிட்டு முஸ்லிம்களிடம் சென்று விடுகிறார்.
முஸ்லிம் பெண்கள் – அங்கு அப்படி கேட்டதாகத் தெரியவில்லை. பெண்கள் கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர்.

இப்படி துலுக்கர்-தலித்துகளிடம் வித்தியாசமாக நடந்து கொண்டதையும் செக்யூலரிஸ, நடுநிலைவாதிகள் கவனமாக கவனிக்க வேண்டும் அரசியல், அரசியல் கூட்டு, நாளைக்கு பாராளுமன்ற எம்.பி பதவி என்ற ஆசையில், தில்லிக்குச் சென்றதால், தேனி பிரச்சினை அவௌக்கு தேனாகவில்லை போலும். அவரது “துலுக்க சார்பு, ஆதாவு” முதலியவை, எஸ்சிக்களை தனிமைப் படுத்துகிறது என்று தெரிகிறது. இவரது முந்தைய இந்து-விரோத பேச்சுகள் முதலியவற்றையும் இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Thiruma-at Bomminaicketpatti- with Muslims sitting on the floor-12-05-2018-1

பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,” எச்.ராஜா 12—05-2018: தேனி, ”பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,”என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார். தேனியில், பொம்மிநாயக்கன்பட்டி இருபிரிவினர் மோதல் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது[11]: “கம்பத்தில் போலீஸ் செக்போஸ்ட், ஒட்டி இருந்த கோயிலை ஒருவர் இடித்து தரைமட்டாக்கி உள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் பொம்மிநாயக்கன்பட்டியில் நடந்த பிரச்னையில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் மீதே வழக்குப்போட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட 58 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பிரச்னை குறித்து ஸ்டாலின், வைகோ, சீமான் பேசாதது, வராதது ஏன். இந்துக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அத்தனையும் ரத்து செய்யவேண்டும்”, என்றார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜ், நகரத் தலைவர் கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[12]. எச்.ராஜா, பாதிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களை நேரில் சென்று, கண்டு, நலம் விசாரித்தார். இவ்வாறு “இந்துக்களை” ஒன்று சேர்க்கும்முயற்சியில், பிஜேபி ஈடுபடும் நேரத்தில், “தி இந்து” போன்ற நாளிதழ்கள், “இந்து தலித்துகள்” என்று குறிப்பிட ஆரம்பித்து விட்டன. முன்னெரே குறிப்பிட்டப் படி, எஸ்சி என்றாலே இந்துதான் எனும்போது, “இந்து தலித்” பிரயோகம் தேவையில்லை.

© வேதபிரகாஷ்

13-05-2018

Thiruma-with Muslims sitting on the floor obediently-12-05-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி பொம்மிநாயக்கன்பட்டி மோதல்இரு சமூகத்தினரையும் சந்தித்து திருமாவளவன் சமாதான பேச்சு!, Posted By: Hemavandhana Published: Saturday, May 12, 2018, 18:10 [IST] .

https://tamil.oneindia.com/news/tamilnadu/thirumavalavan-is-the-comfort-the-periyakulam-incident/articlecontent-pf307398-319537.html

[2] விகடன், `மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்!’ − பொம்மிநாயக்கன்பட்டியில் திருமாவளவன்,வீ.சக்தி அருணகிரி, Posted Date : 16:30 (12/05/2018) Last updated : 16:30 (12/05/2018)

[3] https://www.vikatan.com/news/tamilnadu/124849-thirumavalavan-visited-bomminayakanpatti.html

[4] ஈநாடு.இந்தியா, இஸ்லாமியர்-தலித் மோதல் எதிரொலி: திருமாவளவன் ஆறுதல்!, Published 12-May-2018 17:59 IST

[5] http://tamil.eenaduindia.com/State/South/Theni/TheniDistrict/2018/05/12175910/IslamDalit-conflict-Thirumavalavan-comfort.vpf

[6] தினசரி, திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள், பொதிகைச்செல்வன், மே.12, 2018. 6.37 மாலை.

http://dhinasari.com/local-news/madurai-news/38487-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81.html

[7] தினத்தந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமாவளவன் ஆறுதல் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு, மே 13, 2018, 03:45 AM

[8] https://www.dailythanthi.com/News/State/2018/05/13013352/Thirumavalavan-comfort-for-the-victims-of-the-riots.vpf

[9] தினமலர், காழ்ப்புணர்ச்சியால் விமர்சனம் திருமாவளவன் குற்றச்சாட்டு, Added : மே 13, 2018 05:31

http://www.dinamalar.com/news_detail.asp?id=2020083

[10] சங்கராச்சிரியார் முன்பு, பொன்.ராதாகிருஷ்ணன் கீழே உட்கார்ந்தார், சுப்ரமணியம் சுவாமி, இணையாக நாற்காலியில் உட்கார்ந்தார் என்றெல்லாம் படம் போட்டு விவாதிக்கும் ஆட்கள் இதையெல்லாமும் கவனிக்க வேண்டும்.

[11] தினமலர், இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், Added : மே 13, 2018 04:25.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=2020009

“தலித்-முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018, 05-05-2018], மற்றும் 07-08-2018 விசாரணை – செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன? (2)

மே 8, 2018

தலித்முஸ்லிம்மோதல்களிலிருந்து [24-04-2018, 05-05-2018], மற்றும் 07-08-2018 விசாரணை – செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன? (2)

L. Murugan visited and enquired 07-05-2018-1

கலவரத்திற்குப் பிறகு அமைதி நிலவும் நிலை: கலவரத்தை அடுத்து அசாதாரணமான அமைதி நிலவுகிறது, என்று தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது[1]. வேறென்ன நிலவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. 05-05-2018, சனிக்கிழமை இரவு 11 முஸ்லிம்கள் மற்றும் ஒரு எஸ்சி கைது செய்யப்பட்டனர். 500 போலீஸ்காரர்கள் பாதுகாப்பாக நிறுத்தப் பட்டது. போடி, கம்பம், ஆண்டிபட்டி, சின்னமன்னூர் மற்றும் பெரியபாளையம் முதலிய இடங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஜயமங்கலம் போலீஸ் ஷ்டேசனில் முன்னர் வேலை பார்த்த போலீஸார் இங்கு குவிக்கப்பட்ட்டுள்ளனர். ஒவ்வொரு நுழைவு பாதையிலும் கண்காணிக்க, ஒரு இன்ஸ்பெக்டர் உள்ளார்[2]. வெளியாட்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை. சித்தாந்த மோதலும் நடந்து வருவதால், செய்திகளும் பாரபட்சமாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஒரு இந்துத்துவ பத்திரிக்கை வன்னியம்மாள் “தலித்” ஆக இருக்கலாம் என்று “மார்க்சீய ஆதரவு இந்து” சொல்வதாக செய்தி வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது[3]. “இந்து, தலித், முஸ்லிம்” போன்ற வார்த்தைகளையும் குழப்பத்துடன் உபயோகப் படுத்தியுள்ளது[4]. இதை எடுத்துக் காட்டி, அதற்கு, என்னுடைய பதிலை அனுப்பியுள்ளேன்[5]. இன்னொரு இந்துத்துவ பத்திரிக்கையும் புதியதாக எதையும் எடுத்துக் காட்டவில்லை[6]. மற்ற ஆங்கில நாளிதழ்கள் வெளியிட்டதை தொகுத்து வெளியிட்டுள்ளது[7].

L. Murugan visited and enquired 07-05-2018-5 DD.jpg

07-05-2018 அன்று தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் விசாரணை நடத்தியது: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் 07-05-2018, திங்கள்கிழமை விசாரணை நடத்தினார். பொம்மிநாயக்கன்பட்டியில் கடந்த ஏப்ரல் 24 -ஆம் உயிரிழந்த மூதாட்டி சடலத்தை பள்ளிவாசல் தெருவில் எடுத்துச்செல்லும்போது இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மே 5-ஆம் தேதி காலை இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கு மேற்பட்ட வீடுகள், கடைகள், கார் மற்றும் இரு சக்கர வாகனம் எரிக்கப்பட்டன[8]. இதில் இரு தரப்பினரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இருதரப்பையும் சேர்ந்த 30- க்கு மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்[9]. இந்தநிலையில் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களிடம் விசாரணை நடத்தினார்.

L. Murugan visited and enquired 07-05-2018-3

இந்திரா காலனி மக்கள் கூறியது: பின்னர் இந்திரா காலனியை சேர்ந்த மக்களிடம் கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்கள், போலீசார் மீது சரமாரியாக குற்றம் சாட்டினர். வன்னியம்மாள் உடலை எடுத்து சென்றபோது ஏற்பட்ட மோதலில் போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், போலீசாரின் அலட்சியம் தான் கலவரம் ஏற்பட்டதற்கு காரணம் என்றும், அவர்கள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்[10]. தங்களது பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்[11]. இது திகைப்படைய செய்கிறது. மின்சாரம், குடிநீர் ஏன் துண்டிக்கப்பட வேண்டும் என்று தெரியவில்லை. இதே போல முஸ்லிம்களும் பரஸ்பர கோரிக்கைக்களை வைக்கலாம்.

L. Murugan visited and enquired 07-05-2018-2

எல். முருகன், பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “கடந்த மே 5-ஆம் தேதி வன்னியம்மாள் என்ற (70 வயதான) பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் தாழ்த்தப்பட்டோர் வீடுகள், ஸ்டூடியோ ஆகியவை பாதிக்கப் பட்டுள்ளன. மேலும் கலைச்செல்வன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் , வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கலவரத்தில் வெளியூரில் இருந்து ஆள்கள் வந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலரை போலீஸார் கைது செய்தனர். மீதமுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பகுதியில் சுமூகநிலை ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

L. Murugan visited and enquired 07-05-2018-4

விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் எம்.பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் மற்றும் மாவட்ட வன்கொடுமை விழிப்புணர்வு தடுப்புக்குழு உறுப்பினர் ப.பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணி, பொம்மிநாயக்கன்பட்டி காந்திநகர் காலனி மக்களை தேவதானப்பட்டியில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதி பா.ஜ. அமைப்பாளர் ராஜபாண்டி உடனிருந்தார்[12].  விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பெரியகுளம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தங்கபாண்டி,செயலாளர் ஆண்டவர் ஆகியோர் பொம்மிநாயக்கன்பட்டிக்கு செல்ல முயன்ற போது சிந்துவம்பட்டி முனியாண்டி கோயில் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர்[13].

Bomminayakanpet-woman-crying as she lost- 05-05-2018-3

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?: தமிழக முஸ்லிம்கள் 99.99% மதம் மாறிய இந்துக்கள் தாம், ஆகவே, அவர்கள் தங்களது மூலங்களை மாற்றி விட முடியாது. “செக்யூலரிஸ” நாட்டில், “முஸ்லிம் தெரு” என்று பெயர் வைத்துக் கொண்டு, “எங்கள் தெரு வழியாக செல்லக் கூடாது” போன்றதெல்லாம், சட்டத்திற்கு புறம்பானதாகும். அத்தகைய அடவடித்தனமான போக்கினால் தான் 24-04-2018 கலவரம் ஏற்பட்டது என்பது முன்னெரே சுட்டிக் காட்டப் பட்டது. அவர்களது நம்பிக்கைக்களை தெருக்களில் கொண்டு வரக்கூடாது, ஏனெனில், அது பொது சொத்து, எல்லோருக்கும் உரிமை உண்டு. பொருளாதார ரீதியில், இந்துக்களை நம்பித் தான் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதையும் நினைத்துக் கொள்ள வேண்டும். எனவே முஸ்லிம்கள் முதலில், அந்த அடிப்படை உண்மையினை அறிந்து கொண்டு, பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். குரானில் சொல்லியபடி, “உன் வழி உனக்கு, என் வழி எனக்கு,” என்றுதான் இருக்க வேண்டும், குறிக்கிட வேண்டிய தேவையில்லை.

© வேதபிரகாஷ்

08-05-2018

Bomminayakanpet-riot photos- 05-05-2018-1

[1] The Hindu, Uneasy calm prevails at Theni village, STAFF REPORTER MAY 06, 2018 19:32 IST; UPDATED: MAY 06, 2018 19:32 IST.

[2] http://www.thehindu.com/news/national/tamil-nadu/uneasy-calm-prevails-at-theni-village/article23794345.ece

[3] Organizer, Jihadi Attack on Funeral Procession of Hindu Woman: Riots Break out in Tamil Nadu, Date: 07-May-2018.

[4] As many as 30 people were injured in riots erupted in Theni district of Tamil Nadu, between Hindus and Muslims following a funeral procession of a Dalit woman was attacked in a Muslim-majority area. Fifty houses, two shops and several vehicles were reportedly damaged in the riots. Quoting the police the pro-CPM daily, The Hindu, reported that when Vanniammal, an aged Dalit woman, died on April 24, her relatives and friends decided to take out the funeral procession through Muslim Street in Bomminaickanpatti village near Periyakulam. The procession was attacked by the procession as soon as it entered the Muslim Street. After the Dalits were ostracised by Muslims, the Hindus allegedly intercepted an outsider, a Muslim man, in their village on Saturday. This led to a scuffle between the two communities. Following the incident, the security has been beefed up and more than 200 police personnel were deployed in the area. Jayamangalam police have registered a case.

http://www.organiser.org/Encyc/2018/5/7/Jihadi-Attack-on-Funeral-Procession-of-Hindu-Woman.html

[5] Really, it is intriguing to note that “Organizer” is reporting the event in that fashion using the expression “dalit” instead of “SCs,” as it is banned by the National SC commission. You say, “Quoting the police the pro-CPM daily, The Hindu, reported that when Vanniammal, an aged Dalit woman,” she is SC only, there is no doubt about it. You reported, “After the Dalits were ostracised by Muslims, the Hindus allegedly intercepted an outsider, a Muslim man……”, thus, you are confused with such used expressions “Dalits,” “Hindus,” “Muslim”……..Your reporter should  have some basics about the issue, people etc., before putting out the “news” publicly.

[6] Swarajya, In Tamil Nadu, Muslims And Dalits Clash Following Row Over Route For Funeral Procession , by Swarajya Staff, May 07 2018, 11:09 am,

[7] https://swarajyamag.com/insta/in-tamil-nadu-muslims-and-dalits-clash-following-row-over-route-for-funeral-procession

[8] தினமணி, பொம்மிநாயக்கன்பட்டி கலவரம்: ஆதி திராவிட ஆணைய துணைத் தலைவர் விசாரணை, By DIN | Published on : 08th May 2018 02:20 AM

[9] http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/may/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2915424.html

[10] தினத்தந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு: போலீசார் மீது சரமாரி புகார், மே 08, 2018, 04:15 AM

[11] https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/08033255/The-Vice-President-of-the-Commission-for-National.vpf

[12] தினமலர், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு, Added : மே 08, 2018 00:59.

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=2016103

ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா?

ஏப்ரல் 13, 2010

ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா?

முஸ்லீம்கள் என்றாலே சமத்துவம் தான்.

அல்லா எந்த பேதமிம் பார்ப்பதில்லை.

ஜாதி என்று இஸ்லாத்தில் இல்லை, சகோரத்துவம் தான்.

இப்படியேல்லாம் தலைசிறந்த பண்புகள் கொண்ட, உயர்ந்த கொள்கைகளுடன் முஸ்லீம்கள் பேசுவர்.

ஆனால், ஜாதிகள் மீதான ஒதுக்கிடு கேட்பது எப்படி என்று தெரியவில்லை.

அதிலும் தலித் போர்வையில் எஸ்.சி போன்ற ஒதுக்கீடு வேண்டும் என்று முஸ்லீம்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

Muslims-demanding-reservation

Muslims-demanding-reservation

மிஸ்ரா கமிஷன் அத்தகைய பரிந்துரை செய்துள்ளதாம். அதன் படி முஸ்லீம்களும் கேட்கிறார்களாம்!

மண்டல் கமிஷன் தீர்ப்பில் இஸ்லாத்தில் உள்ள ஜாதி கட்டமைப்பு, ஜாதியம் முதலியவை எடுத்துக்  காட்டப் பட்டுள்ளன.

அரேபியத்துவம், பழங்குடிகள் அமைப்பு, அவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள சமூக அடுக்கு முறைகள், மதம் மாறிய பின்னரும், நாட்டுக்கு நாடு அவை எவ்வாறு செயல் படுகின்றன என்பனவற்றை, முஸ்லிம் ஆராய்ச்சியாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

இருப்பினும் ஆசார இஸ்லாம் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்று முஸ்லிம்கள் உறுதியாக அடித்துச் சொல்கின்றனர். அதாவது, அத்தகைய, ஜாதியம், ஜாதி அமைப்பு, ஜாதிய வேறுபாடுகள் இல்லை என்கிறார்கள்……..

தலித்-முஸ்லீம்கள்

தலித்-முஸ்லீம்கள்

இதையும் ஜிஹாத் என்கிறார்கள்!