Archive for the ‘உள்துறை சூழ்ச்சிகள்’ category
மே 31, 2019
ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு – ஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம் – ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2]

எச்சரித்தும் இலங்கை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை: இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதனை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் விட்டதே குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கையை போன்று இந்தியாவிலும் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்ட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் குண்டு வைப்பதற்கு சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையையும் உளவுப்பிரிவு அதிகாரிகள் இலங்கையிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பின்னர் தமிழகத்திலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு தற்கொலைபடை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாத தலைவன் ஜக்ரன் ஹசீம் என்பவனின் உறவினர்கள், நண்பர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டனர்.


ஐ.எஸ், கேரள தொடர்புகள்: அப்போது பயங்கரவாதி ஜக்ரன் ஹசீமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க கடந்த 10 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய ஆதரவாளரான ரியாஸ் என்பவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் பேச்சால் கவரப்பட்ட ரியாஸ் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையிலும் ஜக்ரன் ஹசீமின் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது அம்பலமானது. இது தொடர்பாக நேற்று இரவு 30-04-2019 சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். மண்ணடியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த சிலர் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.


பூந்தமல்லியில் பதுங்கியிருந்தவர்கள்- என்.ஐ.ஏ சோதனை: இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. படையினர் முகாமிட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் போலீசாரால் அங்கு தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கையை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர். இதன்பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அங்கு தங்கியிருந்த தாலுகா ரோசன் என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது கூட்டாளிகளான முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரும் பிடிபட்டனர். நேற்று மாலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் நள்ளிரவிலேயே மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்[1]. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்[2]. இவர்களில் தாலுகா ரோசன் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இவர் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இலங்கையில் இருந்த போது ஜக்ரன் ஹசீமின் செயல்பாடுகளால் ரோசன் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.


ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த ரோஷன் கைது: தாலுகா ரோசன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பூந்தமல்லி முகவரியில் போலியான சில அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தாலுகா ரோசனை கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து அனுமதியின்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று போலீசார் தாலுகா ரோசனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இலங்கை வாலிபர் தாலுகா ரோசன் சென்னையில் தங்கியிருந்து இலங்கை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினாரா? குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.


இலங்கையிலிருந்து வந்து பூந்தமல்லியில் ஏன் தங்க வேண்டும்?: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தாலுகா ரோசன் பிடிபட்டதும் ‘கியூ’ பிரிவு போலீசாரும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இருவரையும் முறைப்படி அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரக அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை சென்றதும் அந்நாட்டு போலீசார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இலங்கையை சேர்ந்த வேறு யாரும் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


31-05-2019 அன்றைய செய்தி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்[3]. ஆலோக் மிதாலின் தலைமையிலான இந்த குழுவினர், இலங்கையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்து விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது[4]. தமிழக, கேரள, இலங்கை தீவிரவாத குழுக்கள், வேண்டுமென்றே, இந்திவாவின் மீது கெட்ட பெயர் களங்கத்தை ஏற்படுத்த, இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீர கூட்டங்களும் இதற்கு பாகிஸ்தான் மூலம் உதவி வருகின்றன. கேரள-பெங்களூர் தொடர்புகள் ஐ.எஸ்.க்கு ஆட்களை அனுப்பி வைப்பதில் தீவிரமாக உள்ளன. இப்பொழுது எல்.டி.டி.ஈ இல்லாததால், முஸ்லிம் தீவிரவத கும்பல் அவர்களின் இடத்தைப் பிடித்து செயல்பட ஆரம்பித்துள்ளது. இதனால், மாலத்தீவு, மொரிஸியஸ் தொடர்புகளும் சேர்கின்றன. இவ்வளவையும் எதிர்த்து, இந்தியா லாவகமாக ச்யல்பட வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
31-05-2019

[1] மாலைமலர், இலங்கை குண்டுவெடிப்பு– சென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது, பதிவு: மே 01, 2019 13:26
[2] https://www.maalaimalar.com/News/District/2019/05/01132614/1239547/Srilankan-youth-arrest-at-chennai.vpf
[3] தினத்தந்தி, தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், பதிவு : மே 31, 2019, 07:26 AM
[4] https://www.thanthitv.com/News/World/2019/05/31072621/1037269/Srilanka-Easter-Bombing-Indian-NIA-Visit-Srilanka.vpf
பிரிவுகள்: அழுக்கு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஈழ குண்டுவெடிப்பு, ஈழம், உளவாளி, உளவு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், கிருத்துவர், கிருஸ்துவர், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சிறுபான்மையினர், சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள்
Tags: இலங்கை குண்டுவெடிப்பு, இஸ்லாம் ஜிஹாதி, ஈழ குண்டுவெடிப்பு, ஈழ ஜிஹாதி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், காஷ்மீர், கேரள ஜிஹாதி, கேரளா, சர்ச், சிரியா, சூபி-ஜிஹாத், தற்கொலை குண்டு வெடிப்பு, தவ்ஹீத் ஜமாத், நாசவேலை, பெங்களூரு, ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு, ஶ்ரீலங்க ஜிஹாதி, ஶ்ரீலங்கை ஜிஹாதி
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 5, 2013
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: முக்கிய எதிரி “போலீஸ்‘ பக்ருதீன் துப்பாக்கி முனையில் கைது!

Fakruddin alias Police Fakruddin – The Hindu photo
போலீசாரால் மும்முரமாகத் தேடப்பட்டவர்களில் ஒருவன் பிடிபட்டான்: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான “போலீஸ்’ பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீன் வெள்ளிக்கிழமை (04-10-2013) பிடிபட்டார்[1]. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு அவரது அலுவலகத்தின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து சேலம் மாநகர போலீஸார் விசாரணை செய்தனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் தனிப்படை போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகவும், பெங்களுரில் பாஜக அலுவலகம் அருகே வெடிகுண்டு வைத்த வழக்கு, மதுரையில் அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பாகவும் –
- மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன் (35),
- பிலால் மாலிக் (25),
- திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (38),
- நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (45)
ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்[2]. மேலும் தேடப்படும் 4 பேரையும் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. அலுவலகம் அறிவித்தது. போலீஸார் இவ்விசயத்தில் அதிக அளவில் தேடுதல் முயற்சிகள், யுக்திகளைக் கையாண்டுள்ளது. ஒரு லட்சம் போஸ்டர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடித்து “பிடித்துக் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு” என்று அறிவித்தது. தொலைக்காட்சிகளிலும் அறிவிக்கப்பட்டது[3].

போலீஸ் பக்ருதீன், – அல்-உம்மா,
ஏற்கெனவே கைதானவர்கள்: பலவித வன்முறை, தீவிரவாத குரூரக் காரியங்களுக்காகவும், குற்றங்களுக்காகவும் ஏற்கெனவே கைதானவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- கே. பீர் மொஹித்தீன் [K Peer Mohideen (39)],
- ஜே. பஷீர் அஹமது [ J Basheer Ahmed (30)]
- சையது மொஹம்மது புஹாரி என்கின்ற கிச்சான் புஹாரி [Syed Mohammed Buhari alias Kitchan Buhari (38) ]
முதலியோர் ஏற்கெனவே பெங்களூரு பொலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[4]. அத்வானி கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வரும் நாகூர் அனீபா என்கின்ற மொஹம்மது அனீபாவை ஜூலை 9, 2013 அன்று திண்டுகல்லில், வத்தலகுண்டு என்ற இடத்தில் மறைந்திருந்தபோது, போலீஸார் கைது செய்துள்ளனர்[5].

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் – அல்-உம்மா,
தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதியில் துப்பாக்கி முனையில் பிடிப்பட்டார்: இந்நிலையில் சென்னை பெரியமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்துக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கு கொள்வதால், அவர்களை இலக்காக வைத்து தாக்குதல் நடக்கக் கூடும் என்றதால், முக்கியமான பகுதிகளில் மாநில உளவுப்பிரிவு போலீஸார், மதவாத தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், க்யூ பிரிவு போலீஸார், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸார் ஆகியோர் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சூளையில் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப்பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நிற்பதை பார்த்தனராம். உடனே அந்த நபரை அப்பிரிவின் இன்ஸ்பெக்டர் பிடிக்க முயன்றதாகத் தெரிகிறது. ஆனால் அந்த நபர், இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு ஓட முயன்றாராம். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த இன்னொரு இன்ஸ்பெக்டர் துப்பாக்கி முனையில், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தார். அவனிடத்தில் மூன்று மொபைல் போன்கள், சில சிம் கார்டுகள், தமிழ்நாட்டின் வரைப்படங்கள், ஆவணங்கள் முதலியவை கண்டெடுக்கப்பட்டன[6]. அவரிடம் விசாரணை செய்ததில், அவர் போலீஸாரால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தேடப்படும் போலீஸ் பக்ருதீன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பக்ருதீனின் கூட்டாளிகள் யாரேனும் சென்னையில் இருக்கின்றனரா என போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
தீவிரவாதியின் புராணம் – போலீஸ் பக்ருதீன் வளர்ந்தது எப்படி?[7]: மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவன் பக்ருதீன். இவனது தந்தை சிக்கந்தர் அலி போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இதனால் போலீஸ்காரர் மகன் பக்ருதீன் என அழைக்கப்பட்ட பக்ருதீனுக்கு நாளடைவில் ‘போலீஸ்‘ பக்ருதீன் ஆனான். தமிழகத்தில் எப்படி அவனவன் தனக்காகப் பட்டத்தை வைத்துக் கொள்கிறானோ, அதுபோல, தீவிரவாதிகளும் வைத்துக் கொள்வதில் ஒன்றும் வியப்பில்லைதான். தாயார் சையது மீரா. சகோதரர்கள் 2 பேர். முகம்மது மைதீன் பீடி,சிகரெட் வியாபாரம் செய்துவருகிறார். மற்றொரு சகோதரர் தர்வீஸ் மைதீன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்வானியை குண்டுவைத்து கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டான் பக்ருதீன். நெல்பேட்டையை சேர்ந்த பெண்ணை பக்ருதீன் திருமணம் செய்த நிலையில், சில மாதங்களிலேயே மனைவியைவிட்டு பிரிந்துவிட்டான். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகி இமாம் அலிக்கு நெருக்கமானவன் பக்ருதீன். 1995ல் விளக்குத்தூண் ஸ்டேஷனில் அடிதடியில் ஈடுபட்டதாகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் திடீர்நகரில் கொலை முயற்சி வழக்கு, 1996ல் அனுப்பானடியில் அழகர் என்பரை கொலை செய்ததாகவும், மீனாட்சி கோயிலில் வெடிகுண்டு வைத்ததாகவும், மதிச்சியத்தில் கொலை வழக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவன் ஜாலியாக சுற்றிவந்துள்ளான், தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து வந்துள்ளான்.
7.3.2002ல் துப்பாக்கியால் சுட்டு இமாம் அலியை தப்பவைத்ததாக திருமங்கலம் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2010ல் விளக்குத்தூணில் கொலை முயற்சி மற்றும் உதவி கமிஷனர் வெள்ளத்துரையை மிரட்டியது உள்ளிட்ட 2 வழக்குகள், 2011ல் பாஜ மூத்த தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயன்றதாக திருமங்கலம் தாலுகா போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 30 வழக்குகளுக் கும் மேல் பக்ருதீன் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டு தயாரிப்பதில் கில்லாடி: இமாம் அலி தப்பிய வழக்கில் 37 பேருக்கு தண்டனை வழங்கப்பட் டது. 7 பேருக்கு 7 ஆண்டும், 32 பேருக்கு 5 ஆண்டுகளும் தண்டனை விதிக் கப்பட்டது. இவர்களில் இமாம் அலி, சீனியப்பா, மாங்காய் பஷீ, முகம்மது இப்ராகீம் ஆகியோர் பெங்களூரில் 2002 செப்.29ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். 7 ஆண்டு தண்டனை பெற்ற போலீஸ் பக்ருதீன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தான். அங்கும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான். இதன் பேரில் 2010ல் ஜாமீனில் வெளியே வந்தவன் பின்னர் போலீசில் சிக்கவில்லை, அதாவது தப்பிச்சென்றான் என்று சொல்லாமல் ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பக்ருதீன் தனது கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய ரிமோட் குண்டை தயாரித்து 2011 அக்.28ல் பாஜ மூத்த தலைவர் அத்வானி வரும் பாதையில் வைத்தான். அதிர்ஷ்டவசமாக இதை முன்கூட்டியே போலீ சார் பார்த்து அகற்றியதால் அத்வானி தப்பினார். அப்போது கைப்பற்றப்பட்ட குண்டு, தயாரித்த தொழில்நுட்பத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னரே போலீஸ் பக்ருதீன் எவ்வளவு ஆபத்தானவன் என்பதை போலீ சார் உணர்ந்து தீவிரமாக தேட துவங்கினர். பாவம், இத்தனை கொலைகள் செய்தும் அவனது, குரூர மனப்பாங்கை போலீசாரால் கண்டுப் பிடிக்க முடிவில்லை என்றல், அதனை என்றென்பது?
குரூரக் கொலைகள் செய்யும் மது அருந்தாத ஒழுக்கமான ஜிஹாதி: இந்த வழக்கில் 8 பேர் சிக்கியும் பக்ருதீன் சிக்கவில்லை. அடுத்தடுத்து கொலைகள்: ஊர் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் பக்ருதீன் ஆர்வம் கொண்டவன். அதாவது சுற்றிக் கொண்டே தீவிரவாத கொலைகளை செய்வான் போலும்! அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. ஏதோ ஒழுக்கமான ஜிஹாதி போன்ற சித்தரிப்பு, திகரன் செய்துள்ளது. 2013 ஏப்.3ல் பெங்களூரில் பாஜ அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித் தது, ஜூலை முதல் தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், 19ம் தேதி சேலத்தில் தமிழக பாஜ பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டு வரும் பக்ருதீன் மீது இந்த கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கிச்சான் புகாரியுடன் சேர்ந்து பெங்களூர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டான் பக்ருதீன் என தகவல் வெளியானது. இதற்கிடையே மதுரை மேலமாசி வீதியில் பால்கடைக்காரர் சுரேஷ் கொலையிலும் போலீஸ் பக்ருதீன் தலைமையிலான கும்பல் செய்தது தெரிந்தது. அப்போது போலீசார் விசாரித்தபோதுதான் அவன் மதுரைக்கு அடிக்கடி வந்து சென்றதும், நண்பர்கள் பலரது வீடுகளில் தங்கியிருந்ததும் தெரிந்தது. பக்ருதீனுடன் கூட்டாளிகள் பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகியோர் மிக நெருக்கமாக செயல்பட்டுள்ளனர். பிலால் மாலிக் இந்து மக்கள் கட்சி தலைவர் காளிதாஸ் 2005 ஜூன் 22ல் மதுரையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவன். அப்போது அவருக்கு 17 வயது என்பதால், மைனர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான்[8]. பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அங்கு மோதலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது.
நெல்லை சைவத்தின் இருப்பிடமா, ஜிஹாதிகளிம் குகையா என்ற நிலையில் நெல்லை கும்பலுடன் நெருக்கம்: முகம்மது அனிபா நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவன். தென்காசி நகர் இந்து முன்னணி தலைவர் குமாரபாண்டியன் 2006ல் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக நெல்லை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் மைதீன் ஷேக்கான் கொல்லப்பட்டார். குமார பாண்டியன் கொலை வழக்கில் முகம்மது அனிபா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த 2 கொலை வழக்கு குற்றவாளிகளும் 2007 ஆகஸ்ட்டில் மோதிக்கொண்டதில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கிலும் முகம்மது அனிபா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கவும், விசாரணை, ஜாமீன் பெற்றபோதும் மதுரையில் பதுங்கியிருக்க பக்ருதீன் உதவினான். இந்த பழக்கம் நெல்லையை சேர்ந்த பலருடன் நெருக்கமாக பழக பக்ருதீனுக்கு முகம்மது அனிபா மூலம் வாய்ப்பு கிடைத்தது. இப்படித்தான் கிச்சான் புகாரியுடன் பக்ருதீனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
தமிழக ஜிஹாதிகளுக்கு உதவுவது யார்?: ஊடகங்கள் இப்படி ஜிஹாதிகளின் புராணம் பாடினாலும், தமிழகத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல், அவர்கள் இவ்வாறு தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து கொண்டிருக்க முடியாது. அதிகார, அரசியல் மற்றும் மதவாத சக்திகளின் உதவியில்லாமல் நிச்சயமாக, இத்தகைய கூட்டுக் குற்றங்கள், சதி திட்டங்கள், திட்டமிட்ட கொலைகள் முதலியன நடத்தப்பட முடியாது[9]. எல்லா காரியங்களுக்கும் பணம் தேவைப் படுகிறது. பணம் இல்லாமல், தீவிரவாதச் செயல்களைச் செய்யமுடியாது. அதற்கும் மேலாக, இன்று “லாஜிஸ்டிக்ஸ்” என்று பேசப்படுகின்ற உதவிகள் அவர்களுக்குக் கிடைக்காமல், அத்தகைய காரியங்களை செய்யவே முடியாது. அதற்கு லட்சக் கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் செலவாகிறது. ஆகவே, யார், எப்படி அத்தகைய பெரிய பண பரிவர்த்தனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கவனித்தாலே, இந்த ஜிஹாதிகளை, முஜாஹித்தின்களை, மதவெறியர்களைக் கண்டு பிடித்து விடலாம்.
எவ்விதத்திலும் உதவும் சித்தாந்திகள் தங்களது போக்கை மாற்ரிக் கொள்ள வேண்டும்: இந்திய செக்யூலரிஸவாதிகள் சாவிலும் அந்த பாரபட்சத்தைக் கடைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது திராவிட, நாத்திக, கம்யூனிஸ சித்தாந்திவாதிகளின் செயல்முறைகளுடன் ஒத்துப் போவதைப் பார்க்கமுடிகிறது[10]. மேலப்பாளையத்தில், போலீசார் சோதனை செய்யச் சென்றபோது, முஸ்லீம்கள் அதனால் தான், தாங்கள் ஏதோ சட்டங்களுக்கு உட்படாத மனிதர்கள் போலக் காட்டிக் கொண்டார்கள், போலீசாரை மிரட்டினார்கள்[11]. சென்னையில் ஆர்பாட்டம், ஊர்வலம் என்று கூட்டங்களைக் கூட்டினார்கள்[12]. இதற்கெல்லாம், லட்சக் கணக்கில் பணத்தைக் கொடுத்து உதவுவது யார் என்று ஆராய்ந்தாலே உண்மையை அறிந்து கொள்ளலாம். பெங்களூரு குண்டுவெடிப்பு இவர்களின் கூட்டுசதிமுறைகளை அம்பலமாக்கியுள்ளது[13]. நிகழ்சிகளை கோர்வையாக படிக்கும் சாதாரண மனிதனுக்குக் கூட, தமிழக ஜிஹாதிகளின் மனப்பாங்குப் புரிந்து விடும்[14], இருப்பினும் தமிழக அறிவுஜீவிகள் அதனை கண்டுகொள்ள மறுக்கிறது.
® வேதபிரகாஷ்
05-10-2013
[2] Mr. Nicholson said three persons – Fakruddin alias ‘Police’ Fakruddin, Bilal Malik and Hanifa – were the main conspirators in the plan to blow up the convoy of Mr. Advani. They were present at the scene of crime and escaped on seeing the police.
[3] This is perhaps for the first time in the crime history of Tamil Nadu that as many as one lakh posters have been printed by police announcing a cash prize of Rs five lakh (totalling Rs 20 lakh) on heads of each of the four suspects — ‘Police’ Fakruddin (35), Bilal Malik (25), Panna Ismail (38), and Abu Backer Siddique (45). The posters in Tamil and English are being displayed at vantage points across Tamil Nadu to get inputs from the public on the accused.
13.060416
80.249634
பிரிவுகள்: அடிப்படைவாதம், அடையாளம், அமைதி, அல் - உம்மா, ஆந்திரா, ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இமாம் அலி, இஸ்லாம், உக்கடம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏர்வாடி, ஏர்வாடி காசிம், ஓட்டுவங்கி, கவுனி, காபிர், குடை, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கொடை, சங்கம், சித்தூர், சிமி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, திருப்பதி, முஸ்லிம்
Tags: அத்வானி, அல் - உம்மா, ஆந்திரா, சித்தூர், ஜிஹாதி, திருநெல்வேலி, பக்ருதீன், பெங்களூரு, பைப் குண்டு, போலீஸ்
Comments: Be the first to comment
ஜூலை 29, 2013
தீவிரவாதிகளின் தொடர்பு பெங்களூரு குண்டுவெடிப்புடன் தொடர்பு இருப்பது முன்னமே ஏடுத்துக் காட்டப்பட்டது.
Indian Secularism
பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

பாஸ்டன்முதல்பெங்களூருவரை–தீவிரவாதத்தைஅமெரிக்காவும்இந்தியாவும்அணுகும்முறைகள்:
- 17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
- இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
- இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
- 15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
- 22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
- அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும்…
View original post 1,070 more words
பிரிவுகள்: அத்தாட்சி, அத்வானி, அன்சார், அப்துல் நாஸர் மதானி, அல் - உம்மா, இந்தி ஜிஹாதி, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஏர்வாடி காசிம், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், கசாப்புக்காரத்தனம், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, கொலை, கொலை மிரட்டல், கொலை வழக்கு, கொலைவெறி, சஹாபுத்தீன், ஜமாஅத், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, தேச விரோதம், தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பிரிவினைவாதம், பைப், பைப் வெடிகுண்டு
Tags: அவமதிக்கும் இஸ்லாம், ஆடிட்டர், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கிச்சான் புகாரி, குண்டு வெடிப்பு, ஜிஹாத், பரவும் தீவிரவாதம், புனிதப்போர், போலீஸ் பக்ருதீன், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், மேலப்பாளையம், ரமேஷ், லவ் ஜிஹாத்
Comments: Be the first to comment
ஜூலை 29, 2013
Indian Secularism
தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.
கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன. கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்து இயக்கங்களில் ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும்…
View original post 300 more words
பிரிவுகள்: அன்சார், அப்துல் நாஸர் மதானி, அரசியல் விபச்சாரம், அல் - உம்மா, இமாம் அலி, உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், எஸ்டிபிஐ, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், சஹாபுத்தீன், சாகுல் அமீத், சித்திக் அலி, ஜமாஅத், ஜமாத், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமீமுன் அன்சாரி, தமுமுக, தேச விரோதம், தேசவிரோதம்
Tags: கிச்சான், கிச்சான் புகாரி, ஜிஹாதி, ஜிஹாத், தீவிரவாதம், பக்ருதீன், பஷீர், பீர் முகமது, புகாரி, பெஙளூரு, மேலப்பாளையம்
Comments: 4 பின்னூட்டங்கள்
மார்ச் 1, 2013
இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

பங்களாதேசத்தில்இஸ்லாமியத்தலைவருக்குத்தூக்குத்தண்டனை: பங்களாதேசத்தில் 1971ல் யுத்தம் நடந்தபோது, இந்தியப் படை, முக்தி வாஹினி என்ற பாகிஸ்தானிற்கு எதிராகப் போராடிய படைக்கு ஆதரவாக இருந்து, சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. இருப்பினும், பாகிஸ்தானை ஆதரித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பொழுது, போர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, பற்பல அட்டூழியங்களைச் செய்துள்ளனர். பங்களாதேசம், இஸ்லாமிய நாடாக இருந்தாலும், இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றானர். குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவாளர்களை தேசவிரோதிகளாகவே கருதுகின்றனர். இதனால், அத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்க, ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப் பட்டது. அதன்படி, டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[1] விதிக்கப்பட்டுள்ளது!

ஜமாத்–இ–இஸ்லாமிதலைவர்செய்தகுற்றங்கள்: இவர் கீழ்கண்ட குற்றங்களுக்காக விசாரணைச் செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[2].
- மனிதகுலத்திற்கு எதிராக பல குற்றங்களைப் புரிந்தது
- பல கிராமங்களை கொள்ளையடித்தது
- பலகிராமங்களை தீயிட்டுக் கொளுத்தியது
- அப்பவி மக்களைக் கொன்றது
- பெண்களைக் கற்பழித்தது
- இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தது
- அவர்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டது.
போர் மற்றும் போர்க்குற்றங்களில் 30,00,000 மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்[3]. அதாவது,ளாப்பொழுது கிழக்கு வங்காளம் அல்லது கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சுதந்திரம் நாடி போராடியபோது, பாகிஸ்தான் படையினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் விடுதலைப் படைக்கு எதிராக போராடினர், மக்களைக் கொன்றனர்.

கடந்த அநீதிக்குத் தீர்வு வேண்டும் என்றால், நீதி காக்கப்படவேண்டும்: நீதிபதி ஏ.டி.எம். பஸலே கபீர் தமது எழுத்து மூலம் அளித்தத் திப்பில் அறிவித்ததாவது[4], “நீதிபதிகளாகிய நாங்கள் இந்த தண்டனை அளிக்காவிட்டால், கடந்தகால அநீதி நேர்ததற்கான பிராயச்சித்ததை நீதியாக அடையமுடியாது என்ற தத்துவத்தில் மிகவும் ஆழமான நம்பிக்கைக் கொள்கிறோம் மற்றும் கொண்டிருக்கிறோம்”. நீதி எனும்போது, நீதிபதிகள் நீதியில் நம்பிக்கைக் கொண்டுள்ளது தெரிகிறது. இருப்பினும், குற்றாவாளியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

தீவிவாத அமைப்புகளுடன் தொடர்பு: இந்த இஸ்லாமிய இயக்கம், பாகிஸ்தானிய மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு வேலை செடய்து வந்துள்ளது. இந்த இச்ளம்ய ஜமாத் கட்சி, முந்தைய பிரதம மந்திரியின் கட்சியான தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாட்சியிலும் பங்குக் கொண்டுள்ளது. இருப்பினும், தீவிரவாத இயக்கத் தொடர்புகளினால், பொது மக்கள் அதனை வெறுத்தொதிக்கினர்[5]. அதுமட்டுமல்லாது, அக்கட்சியின் எல்லா தலைவர்களுமே, பற்பல குற்றங்களுக்காக சிறையில் உள்ளார்கள்[6].

தொடர்ந்து நடந்த கலவரங்களில் 35 பேர் சாவு: இத்தீர்ப்பை ஆதரித்து, எதிர்த்தும் பங்களாதேசத்தில் வெளிப்படையாக பேசப்பட்டது. பலர் ஆதரித்து பொதுநிகழ்ச்சியில் பேசவும் செய்தனர். தலைநகர் டாக்காவில், சபாக் சதுக்கத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள் என்று பலர் கூடி தீர்ப்பை ஆதரித்து முழக்கமிட்டனர். “தேசவிரோத பாகிஸ்தானிய ஆதரவாளர்கள், பாகிஸ்தானிற்கு போங்கள்ளென்று ஆர்பரித்தனர்[7]. இதனால், எதிர்க்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டத்தனர் ஆர்பாட்டத்தில், ரகளையில் ஈடுபட்டனர்[8]. இதனால் அரசு பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 35 பேர் இறந்துள்ளனர்[9]. இறந்தவர்களில் 4 போலீஸாரும் அடங்குவர், அதில் இருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்[10]. 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்திய முஸ்லீம்கள் இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வார்களா?: இங்கு, இந்தியாவில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு, சென்னையிலேயே எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். காஷ்மீர முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம், அவனது உடலைப் பெறுவது, அடக்கம் செய்வது என்ற விஷயங்களில் இரு கட்சிகளும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், ஆளும் கட்சியினர், ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமாக செயல் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நாடு எனும்போது, தமது நாட்டை ஆதரிக்க முஸ்லீம்கள் ஏன் மாறுபட்டு நடக்க வேண்டும்?
© வேதபிரகாஷ்
28-02-2013
[5] One of the largest Islamist parties in South Asia, Jamaat was the leading coalition partner of former Premier Khaleda Zia’s Bangaldesh Nationalist Party. It bred many terror groups but is now becoming an outcast in Bangladesh, with almost its entire top leadership behind bars on war crimes charges.
[9] Violent clashes between protesters and security forces erupted across Bangladesh on Thursday, leaving at least 35 people dead.
பிரிவுகள்: 786, அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அப்சல் குரு, அவமதிக்கும் இஸ்லாம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமியர்களை கொல்லும் முறை, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயிர் பலி, உருது மொழி, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, கள்ள நோட்டுகள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரூரம், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தர்மம், கைது, கையெறி குண்டுகள், கொடி, கொலை, கொலை வழக்கு, சித்திரவதை, சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தேச கொடி, தேச விரோதம், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், மதரஸா, மதரஸாக்கள், மதவாதம், மதவெறி, முஸ்லீம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, மூளை சலவை, மூளை சலவை செய்வது, மூளைசலவை, வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை
Tags: 1971, 1971 யுத்தம், ஃபத்வா, அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், கிழக்கு பாகிஸ்தான், கிழக்கு வங்காளம், குண்டு வெடிப்பு, கொலை, சிறுபான்மையினர், சூடு, ஜமாத், ஜமாத்-இ-இஸ்லாம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், டாக்கா, தீவிரவாதம், பங்களாதேசம், பங்காபந்து, பயங்கரவாதம், முஜாஹித்தீன், முஜிபுர் ரஹ்மான், முஸ்லீம்கள், மேற்கு பாகிஸ்தான், மேற்கு வங்காளம், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, வங்காளம், வங்காளம் இரண்டாகப் பிரிக்கப் பட்டது, ஷேக் முஜிபுர் ரஹ்மான்
Comments: 4 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 28, 2013
இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!
தொழிலதிபருக்கு மிரட்டல் கடிதம் ஏன்?: முன்னர், இந்திய முஜாஹித்தீன் இ-மெயில்கள் மூலம் டிவி-செனல்களுக்கு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்று அனுப்பி வைத்துள்ளது. இம்முறை கடிதம் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது. அப்படியென்றால், ரதன் டாடாவிற்கும் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இல்லை, மற்ற எல்லா தொழிலதிபர்களுக்கும் மிரட்டல்கள் வந்திருக்க வேண்டும். இப்பொழுதுதான், ஐரோப்பிய குழுமம், மோடி மீதான தடையை நீக்கிக் கொண்டு, வியாபார ரீதியாக பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஆகவே, இந்திய பொருளாதார முன்னேற்றத்தை அல்லது குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்க இம்மாதிரியான மிரட்டல் வந்திருக்க வேண்டும்.
இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்[1]. ஒரு அடையாளம் தெரியாத மர்ம நபர் குரியர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அதாவது, செக்யூரிடியிடம் 24-02-2014 அன்று கொடுக்கப்பட்டது[2]. 26-02-2013 அன்று எஸ்.பி. நந்தா, ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துணைத் தலைவர், போலிஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து புகார் அளித்துள்ளார்[3]. அதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது[4]. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.
கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?: வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட அதில் –
- குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது முஸ்லீம்களை அவமதிப்பது போன்றது
- குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும்,
- அவரது 27 மாடி ஆன்டில்லா – வீட்டையும் தாக்குவோம் என்றும்,
- ஏனெனில் அது வக்ப் சொத்தை அபகரிக்கப் பட்டுக் கட்டப்பது என்பதால் (Accusing him of grabbing the Waqf Board property at Altamount Road to build his house)
- தங்களது கூட்டாளியான முஹம்மது டேனிஷ் அன்சாரி (Mohammed Danish Ansari) என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
டேனிஷ் என்பவன் யார்?: டேனிஷ் என்பவன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏனெனில், அதே பெயரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- டேனிஷ் முஹம்மது அன்சாரி[5] தர்பங்கா, பீகாரைச் சேர்ந்தவன். பகல் பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், அவனிடத்தில் தங்கியிருந்தான்[6]. தீவிரவாதி யாஸின் பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜனவரியில் கைது செய்யப்பட்டான்.
- மற்றும் 2008 அகமதாபாத் வெடிகுண்டு[7] குற்றங்களுக்காக இன்னொரு டேனிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
- இன்னொருவன் டேனிஷ் ரியாஸ் அல்லது சையது அஃபாக் இக்பால் என்பதாகும்.
இக்கடிதம் போலியா, உண்மையா?: இக்கடிதம் போலியாக இருக்கும் என்றாலும்[8], மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இக்கடிதம் உண்மையென்றால், தனிப்பட்ட நபருக்கு, அனுப்பிய முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும், ஏனனில் இந்தியன் முஜாஹித்தீன் அவ்வாறு முன்னர் யாருக்கும் கடிதம் அனுப்பியது கிடையாது. இருப்பினும், தேசிய புலனாவுக் கழகமும் இதைப் பற்றி விசாரித்து வருகிறது[9]. தீவிரவாத எதிர்ப்புப் படையும் இதனை ஆய்ந்து வருகிறது, ஏனெனில் கடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் பொறுப்பேற்று ஐந்து முறை டிவி-செனல்களுக்கு இ-மெயில்கள் அனுப்பியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது[10].
© வேதபிரகாஷ்
28-02-2013
[3] On Tuesday, Reliance vice-president SP Nanda filed a police complaint after meeting with police commissioner Satyapal Singh.
[5] The letter also did not mention the full name of the IM operative in custody. Three people of the same name were arrested in various cases, but police believe the demand is for the release of Mohammed Danish Ansari who was arrested in January for giving shelter to the Bhatkal brothers.
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்-இமாம் அலி அல்-அரிதி, அல்-பர்மவியாஹ், அல்-மம் அலி பின் அல்-தாலிப், அல்ஜமீன், அல்லா, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், ஓட்டு, ஓட்டுவங்கி, கசாப், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரூரம், கைது, கையெறி குண்டுகள், சிமி, சிறுபான்மையினர், சிறையில் அடைப்பு, ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, பட்கல், பட்டகல், பட்டக்கல், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், புனிதப் போர், பேட்டரி, பேட்டரி கட்டைகள், பைப் வெடிகுண்டு
Tags: ஃபத்வா, அன்சாரி, அன்ஸாரி, அம்பானி, அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐதராபாத், கடிதம், குஜராத், குண்டு, குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், டேனிஷ், தடை, பட்கல், புனிதப்போர், பொருளாதாரம், மிரட்டல், மிரட்டல் கடிதம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகேஷ், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், மோடி, யாஸின், யாஸின் பட்கல், ரசாயனம், வியாபாரம்
Comments: 5 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 23, 2013
தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

ஷிண்டே ஏன் இப்படி இருக்கிறார்?: உள்துறை அமைச்சகம் கூறுவதிலிருந்து, உள்துறை அமைச்சர் பலமுறை முன்னுக்கு முரணாக பேசுவது, அவர் ஒன்று தமது துறையினைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அல்லது அவரை யாரோ சுயமாக இயங்குவதற்கு தடையாக உள்ளனர் அல்லது பொம்மை மாதிரி ஆட்டிவைக்கின்றனர். கற்பழிப்பு சட்ட மசோதா விஷயத்தில் முழுக்க-முழுக்க சிதம்பரமே செயல்பட்டு இவர் ஓரங்கட்டப்பட்டது, அந்த நீதிபதி சொன்னதிலிருந்தும், சோனியவே அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டதிலிருந்தும் தெள்ளத்தெளிவானது. ஆகவே, தனது அமைச்சகம் இந்திய முஜாஹித்தீனின் கைவேலைத் தெரிகிறது என்றாலும், இவர் ஏதோ பொதுவாகத்தான் பேசி வருகிறார். லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் அவர் வாசித்த அறிக்கை ஒரு சடங்கு போன்று இருந்தது. சம்பந்தப்பட்டத் துறைகள், பாதுகாப்பு நிறுவன கள் முதலியவற்றின் பெயர்களைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். வெடி குண்டு வெடித்ததும் ஏன் ஐதராபாத் செல்லவில்லை என்று கேட்டதிற்கு டிக்கெட் கிடைத்தல் செல்வேன், பாதுபகாப்பு விஷயமாக செல்லவில்லை என்றேல்லாம் உளறிக்கொட்டினார்[1]. வெளிப்படையாகத் தெரியும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கண்டிக்க, தடுக்க, அடைலளம் காட்டக் கூட்டத் தயங்குவது நன்றாகவே தெரிகின்றது.

குண்டு வெடித்த இடங்கள், நேரங்கள்
தடயங்கள் குறிப்பாகக் காட்டினாலும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்?: தடயத்துறை வல்லுனர்கள் பரிசோதித்து விட்டு, அம்மோனியம் நைட்ரேட், யூரியா, பெட்ரோல் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்[2]. அதுமட்டுமல்லாது, மூன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உத்திரபிரதேசம், பீஹார், ஜார்கெண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் போலீசார், தேசிய புலனாய்வுத்துறைக்கு உதவ தயாராகினர். ஐதராபாதிலேயே, ஒரு லாட்ஜில் தங்கி திட்டம் வகுத்ததையும் தெரிந்து கொண்டனர்[3].

ஐ.ஈ.டி. விவரங்கள்
கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டவன் எப்படி உலா வருகிறான்?: ரியாஸ் பட்டகல் என்பவன் பாகிஸ்தானிலிருந்து ஜிஹாதிகளை இந்தியாவில் இயக்கி வருகிறான் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன மற்றும் அதே அங்கத்தினர்கள் அவற்றில் உள்ளனர் என்றும் தெரிந்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. கள்ளநோட்டு விவகாரத்தில் வங்காளத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்ட யாஸின் பட்டகல் தான் இப்பொழுது இந்தியாவில் செயல்படுகிறான், அவனது உறவினன் ரியாஸ் பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறான். கல்காத்தாவில் கைது செய்யப்பட்டு, ஆலிப்பூர் ஜெயிலில் இருந்த இவன் வெளியே வந்து இப்பொழுது குண்டுகள் வைத்துக் கொலை செய்கிறான்[4]. ஆனால், இந்தியா ஒன்றும் செய்வதில்லை. அதாவது இப்பொழுதைய சோனியா ஆட்சியாளர்கள் “சட்டப்படி செய்கிறோம்” என்று பாட்டிப்பாடி காலந்தள்ளி வருகின்றனர்.

சைக்கிளில் வந்தவர்கள் – குண்டு வைத்தவர்களா?
கள்ளநோட்டு கும்பலும், ஜிஹாதிகளும், போலீசாரும்: ஜிஹாதி கள்ள நோட்டு கும்பல், இந்தியா முழுவதும் தாராளமாக செயல் பட்டு வருகிறது. பலமுறை இவர்கள் எல்லா மாநிலங்களிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அவர்களது பின்னணி, அவர்களது விவரங்கள் புகைப்படங்கள் முதலியன இந்தியா முழுவதுமாக காவல்துறை, பாதுபாப்புத் துறை முதலியோருக்குக் கிடைக்கும் வகையில் விநியோகப்படுவதில்லை. இதனால், ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு, மற்ர மாநிலங்க:உக்குச் சென்ரு விடுகின்றனர். அல்லது அண்டை நாடுகளான, நேபாளம், பங்களாதேசம், பாகிஸ்தான் என்று சுற்றி வருகின்றனர். துபாயில் ஜாலியாக அனுபவித்து விட்டு, இந்தியாவில் குரூரக் குற்றங்களை, கொலைகளை செய்து வருகின்றனர். இந்த கோணத்தில் தான் காஷ்மீர் விஷயமும் வருகின்றது. காஷ்மீரத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்த தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள் ஊடுறுவி வருகின்றன. அங்கு அவர்கள் “சுதந்திரப் போராளிகள்” என்று உலா வருகின்றனர்.

இஃதிய முஜாஹித்தீனின் ஈ-மெயில்
மாலைநேரத்தில், கோவிலுக்குப் பக்கத்தில் குண்டுகள் வெடிப்பது ஏன்?: பெர்ம்பாலான ஜிஹாதி வெடிகுண்டுகள் மாலை நேரத்தில் தான் கூட்டமுள்ல பொது இடங்களில் மற்றும் கோவிலுகுப் பக்கத்தில் வெடித்துள்ளன. குறிப்பாக தீபாவளி நேரத்தில். புமின இடமான வாரணாசி போன்ற இடத்டிலும் வெடித்துள்ளன. ஆகவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்திய முஜாஹித்தீனும் இதனை முன்னர் ஈ-மெயில்களில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளனர். ஹாவிஸ் சையதும் வெளிப்படையாகவே பேசிவருகிறான். பிறகு, ஏன் சோனியா அரசு மெத்தனம் காட்டுகிறது?

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், இந்தியா என்ன செடய்யும்?: நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்தாகி விட்டது[5]. இதை இந்தியா எதிர்த்தாலும், அமெரிக்கா கேட்பதாக இல்லை[6]. நேட்டோப் படை வெளியேற-வெளியேற[7] தாலிபான் மற்ற ஜிஹாதிகள் முழுவதுமாக சுதந்திரமாகி விடுவார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்[8]. குறிப்பாக இந்தியாவைத் தாக்குவோம் என்று அலையும் ஜிஹாதிகள் துணிச்சல் பெறுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலியவற்றை ஆட்டிப் படைப்பார்கள். பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவிற்குள் நுழையக் கூடும்[9]. ஆக வரும் ஆண்டுகளில் இத்தகைய குண்டு வெடிப்புகள் இன்னும் அதிகமாகும் என்று ராணுவ வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[10]. காஷ்மீரத்தில் இன்னும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் அதிகமாகும். அதனை ஊக்குவித்து, அந்த ஜிஹாதிகள் இந்தியாவிற்குள் வருவார்கள், குண்டுகளை வெடிப்பார்கள் அப்பொழுது அவர்களை எப்படி இந்தியா எதிர்கொள்ளும்? அவர்களை சமாளிக்க என்ன யுக்தியை, பலத்தை வைத்துக் கொண்டுள்ளது என்றெல்லாம் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இவர்களை பிடிக்க முடியாதா?
வேதபிரகாஷ்
23-02-2013
[1] Explaining why he didn’t reach Hyderabad soon after the blasts took place, Shinde said in the Rajya Sabha that it was for the security reasons that he decided not to leave immediately. “If VIPs go there (blast sites) then police have to concentrate on securing the VIPs which is not right. VIPs should not be visiting the spot of such incidents, police should be given freedom to carry out investigation and gather evidences,” he said.
[2] Initial forensic samples from blast sites indicate use of ammonium nitrate, urea and petrol. The investigators are probing three specific names as suspected by Hyderabad police. One suspect belongs to Uttar Pradesh, second from Bihar and third from Jharkhand. The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.
[3] The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.
[5] NATO’s plan is to shift full responsibility to Afghan forces for security across the country by the middle of next year and then withdraw most of the alliance’s 130,000 combat troops by the end of 2014, Rasmussen said.
[9] The security agencies fear that such forces may resurface and India may become one of their targets. Most of the forces operating from Nepal can go back to Afghanistan and unless the situation is kept under check with proper international and regional cooperation, the problem could become immense for India.
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அசாதுதீன், அசாதுதீன் ஒவைஸி, அபு சலீம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அமெரிக்க ஜிஹாத், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், ஆப்கானிஸ்தான், ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், ஆராய்ச்சி செய்யும் போலீஸார், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐதராபாத், ஒவைஸி, ஒஸாமா பின் லேடன், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கேரள ஜிஹாதிகள், கோவை, சிறுபான்மையினர், சிறையில் அடைப்பு, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டிடோனேடர், டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவுத் இப்ராஹிம், தாவூதின் காதலி, தாவூத் இப்ராஹிம், தில்ஷுக் நகர், தீவிரவாதிகளுக்கு பணம், துபாய், துப்பாக்கி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, தேசிய மனித உரிமைகள் ஆணையம், பட்கல், பட்டகல், பட்டக்கல், பலுச்சிஸ்தானம், பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, முஸ்லீம், மூளை சலவை, வங்காள தேசம், வயர் துண்டுகள், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஹர்கத்-உல்-முஜாஹித்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன், IED
Tags: அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோனியா, ஜிஹாதி, ஜிஹாத், தாலிபான், நேட்டோ, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
Comments: 8 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 13, 2013
மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை
ஒமர் அப்துல்லாவின் அரசியல்: மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா எப்பொழுதும் அரசியல் செய்து, இந்தியாவை ஏமாற்றி பதவிக்கு வந்து, வாழ்க்கையை அனுபவித்து வரும் மறைமுக ஜிஹாதிகள். பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்[1]. உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு ஆகியவற்றின் உத்தரவின்படி நிறைவேற்றுப்பட்டுள்ள தண்டனைக்கு மாநில முதல்வர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதிலிருந்து, எப்படி இங்குள்ளவர்களும் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது. அதற்கேற்றாற்போல சென்னையிலேயே, தூக்கிலிட்டதை எதிர்த்து சுவரொட்டிகளும் காணப்படுகின்றன.

(இந்திய) விரோத மனப்பான்மை உருவாகும்: இது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: “நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், (இந்திய) விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களால் கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் சென்று விடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே நாம்தான் பாதிக்கப்படும் மக்கள் என்ற எண்ணமும், தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் காஷ்மீர் மக்களிடம் உருவாக அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இப்போது சில கருத்துகளைக் கூறுகிறேன்”, என்றார். இவர்கள் ஏதோ இந்தியாவிற்காக வேலை செய்வது போலவும், நல்லவர்கள் போலவும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

சாவிலும் பிழைப்பைத்தேடும் ஜிஹாதி மனப்பாங்குள்ளவர்கள்: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், “அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது’ என்றார். தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று உறுதிபடப் பேசிய ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். ஆனால், அரசாங்கத்தின் தரப்பில் உரிய முறைகளைப் பின்பற்றித்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற விஷயங்கள் தமிழக நாளிதழ்கள் வெளியிடவில்லை. ஜிஹாதிகளைப் பொறுத்த வரைக்கும் சாவு “ஷஹீதுத்துவம்” என்றுதான் ஏற்றுக் கொண்டு சாகின்றனர். மனிதகுண்டுகளே அவ்வாறுதான் உருவாகி வெடித்துக் கொண்டிருக்கின்றன.
“எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார் ஒமர்: ஜிஹாத் என்ற மதவெறியில் குண்டுகளை வெடித்து அப்பாவி மக்களை வயது கூட பார்க்காமல் குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று அனைவரையும் கை-கால்கள் சிதற, தலைகள் சிதற, ரத்தம் பீரீட்டு கொட்ட, சதைகள் சிதற குரூரக் கொலைப்பலிகள் செய்து வருவதை நினைந்து, உள்ளம் உருத்தத்தான் இப்படி கூறுகிறார் போலும் ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். அப்படியென்றால், யாருக்கு ரத்தவெறி இருக்கிறது?
காஷ்மீர் மக்களின் (முஸ்லீம்களின்) கருத்து: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலரில் அப்சல் குருவை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்து. இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது[2].
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்? இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் தனது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்து அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை விளக்குவது மிகவும் கடினம். ஒருமித்த அளவில் மக்களின் மனவோட்டத்தில் திருப்தி அடைவதன் மூலம் ஒருவரைத் தூக்கிலிட்டு விட முடியாது. சட்டப்படியும், நீதிப்படியும் அத்தண்டனை வழங்குவதற்கான காரணங்கள் அனைத்தும் வலுவாக இருக்க வேண்டும்.
நிறைவேற்றி இருக்கக் கூடாது: மரண தண்டனைக்காக காத்திருப்பவர்கள் குறித்தும், இதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் குறித்தும் வேறுவிதமான கேள்விகளை எழுப்ப நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் இருந்து மத்திய அரசு தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இது சட்டப்படியே எல்லாம் நடந்துள்ள என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் இருத்திருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கட்சியின் கருத்து என்றார். இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் விலகினால் அப்சல் குருவை மீண்டும் கொண்டு வர முடியும் என்றால் அரசில் இருந்து வெளியேறுவோம்’ என்று ஒமர் அப்துல்லா பதிலளித்தார். இவரும் இவரது உறவினரான மெஹ்பூபா முப்தியும் இப்படி மாறி-மாறி பேசியதும், எதிர்பார்த்தபடி, கலவரங்கள் ஆரம்பித்துள்ளன.
காஷ்மீரில் 2ஆவது நாளாக ஊரடங்கு: ஸ்ரீநகர், பிப். 10:÷நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு சனிக்கிழமை (09-02-2013) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீரில்[3] பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி காஷ்மீரில் பல இடங்களில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்தே அவர்களுக்கு முன்னமே விஷயம் தெரிந்துள்ளது என்றாகிறது. அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 36 போராட்டக்காரர்களுக்கும், 23 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புவதை கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து விட்டனர்.
மோதலில் ஒருவர் சாவு: 6 பேர் படுகாயம்: ஸ்ரீநகர், பிப். 10: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அதிகாரவட்டாரங்கள் தெரிவித்ததாவது: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் விரட்டியபோது தாரிக் அகமது பட் மற்றும் மேலும் 2 பேர் ஆற்றில் குதித்தனர். இதில் பட் உயிரிழந்தார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் இந்த தகவலை மறுத்தனர். படகில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் நீந்தி கரைசேர்ந்தார். மற்றொருவரை சிலர் காப்பாற்றினர். தாரிக் அகமது பட்டை காப்பாற்ற இயலவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அவரது சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை கலைந்துபோகச் செய்த பாதுகாப்புப் படையினருடன் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
வீட்டுக் காவலில் கிலானி?: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜாகீர் ஹுசேன் கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ்.ஏ.ஆர். கிலானியை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கிலானியை அதே ஆண்டு டிசம்பரில் தில்லி போலீஸார் கைது செய்தனர். எனினும், கிலானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்று 2003-ல் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் விசாரணைக்காக நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கிலானியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தில்லியில் வசித்து வரும் ஹுரியத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், பத்திரிகையாளர் இஃப்திகர் கிலானி ஆகியோரின் வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு[4]: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஒரு சில இடங்களில், நேற்று முன்தினம், வன்முறை ஏற்பட்டது. இதில், 23 போலீசார் உட்பட, 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில், நேற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது. பதற்றமான இடங்களில், போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். செய்தி சேனல்கள், மொபைல் போன், இணையதள சேவைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன; பத்திரிகைகளும், வெளிவரவில்லை. அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்[5].

இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி கைகோர்த்துக் கொண்டு போராட்டம்: இஸ்லாமாபாதில் இந்தியவிரோதி யாஸின் மாலிக் மற்றும் பயங்கரவாதி ஹாபிஸ் சையீது தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். மொஹம்மது அப்சலின் உடலை ஒப்புவிக்கும் படி ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி இருவரும் மேடையில் அருகருகில் உட்கார்ந்து கொண்டது, பேசிக்கொண்டது பற்றி செய்திகள் வந்துள்ளன[6]. இறுதிமரியாதை சடங்கும் நடத்தப் பட்டது. ஹாவித் சையதே செய்து வைப்பான் என்று அறிவிக்கப்பட்டாலும், ஜமத்-இ-இஸ்லாமி தலைவர் செய்து வைத்தார்[7].

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான். கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[8]. இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.
மனைவியுடன் இருக்க வருடா-வருடம் பாஸ்போர்ட் கொடுக்கும் சோனியா அரசு[9]: யாஸின் மாலிக்கின் மனைவி பாகிஸ்தானில் இருக்கிறாள். இவளுடன் சேர்ந்து இருக்க வருடா-வருடம் சோனியா அரசு பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுத்து வருகிறது. இவனோ மனைவியுடனும் இருந்து, ஜிஹாதிகளுடனும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அம்மா சொன்னால் அப்படியே தலையாட்டி வருகிறார்கள், காலில் விழவும் தயாராக இருக்கிறர்கள். அம்மையார் தலைவி என்றால்தான், அவர்களுக்கு பதவி, பட்டம், சொத்து, பணம் எல்லாம். ஆகவே, இத்தகைய அடிமை வாழ்வு தொடர்ந்தே வருகிறது. இடைக்காலத்தில் இதைப் போன்ற இந்திடயர்கள் முஸ்லீகம்களுடன் துணைபோனதால் தான் முஹம்மது கோரி, முஹம்மது கஜினி, மாலிக்காபூர், பாபர், ஹுமாயூன் முதலியோர் இந்துக்களைக் கொன்று, சூறையாடினார்கள். இப்பொழுது இப்படி கூட்டணியில் குண்டு போட்டு கொன்று வருகிறார்கள், ஊழலில் கோடிகளை கொள்ளையடித்து வருகிறார்கள் இதுதான் வித்தியாசம்!

ஊடகங்களின் விஷமத்தனம்: இந்திய அரசு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதைப் பொறுத்த வரைக்கும் உள்ள முறையை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டினாலும், ஏதோ அரசு அவசரப்பட்டுவிட்டது, குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப் படவில்லை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் கதைகளை அவிஅத்துவிட ஆரம்பித்துள்ளனர். ஜிஹாதி-பயங்கரவாதிகளால், ஜிஹாதி-தீவிரவாதிகளால் மக்கள் கொள்ளப்பட்டபோது, இவர்கள் இவ்வாறு பேசவில்லையே, ஏன்? அப்படியென்றால் அவர்களுக்கு குடும்பங்கள், உரிமைகள் இல்லையா? இல்லை, அவர்கள் இவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் அல்லது வேற்றுமையானவர்கள்? இப்படி கேள்விகள் கேட்டால், விடை என்னவென்று மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அகவே, ஊடகங்களின் விஷமத்தனம் நன்றாகவே தெரிகிறது. அதனால்தான், ஒரு ஊடகம் இப்படி – இந்தியர்களில் சிலர் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், சிலர் கொண்டாடுகிறார்கள் என்று போலித்தனமான-விஷமத்தனமான படத்தை வெளியிட்டுள்ளார்கள்[10]. சிறுவனை உயிர்தியாகியாக்கிய இந்திய ராணுவம் என்று பாகிஸ்தான் நாளிதழ்[11] கூறுகிறது!
பாகிஸ்தானின் விரோதத்தனம்: நட்பு என்று சொல்லிக் கொண்டு, தலைகளைத் துண்டாடி, துரோகச் செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய பாகிஸ்தான், கேடு கெட்ட செக்யூலார் இந்தியாவை இந்த சமயத்திலும் நன்றாகவே சாடியுள்ளது[12]. இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கிறது[13]. அதை வெட்கம்-மானம்-சூடு-சொரணை இல்லாத உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
வேதபிரகாஷ்
11-02-2013
[2] இதற்கேற்றார்போல, அருந்ததிராய் போன்ற கூட்டத்தார் பேசி வருகிறார்கள்.
Sujato Bhadra, a Kolkata-based member of the Association for Protection of Democratic Rights, said that the higher courts had not addressed Guru’s claims that his trial had been faulty. “The government carried out the execution without allowing him to exhaust a judicial recourse after the president rejected his mercy petition,” Bhadra said.”This is a blatant miscarriage of justice.”
[7] Though JuD activists had claimed that Mr. Saeed would lead the ‘ghayabana namaz-e-janaza’ (funeral prayers in absentia) for Afzal at the protest site, the prayers were led by a Jamat-e-Islami leader.
பிரிவுகள்: 786, ஃபத்வா, ஃபிதாயீன், அசிங்கப்படுத்திய முகமதியர், அபு சலீம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அப்துல் கனில் லோன், அப்துல் கய்யூம் சேய்க், அல்லா, அல்லா பெயர், அழுக்கு, அவமதிக்கும் இஸ்லாம், அஸ்ஸாம், ஆண்டவனின் எச்சரிக்கை, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இமாம்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊடக வித்தைகள், ஊரடங்கு உத்தரவு, எரிப்பு, எல்லை, ஔரங்கசீப், கட்டுக்கதை, கர்பலா, கற்களை வீசி தாக்குவது, கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வத், கல்வீச்சு, கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காந்தஹார், காந்தாரம், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கூட்டணி, சஜ்ஜத் லோன், சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமிலாபாத், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதிகளுக்கு பணம், துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தொழுகை, பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், மனித வெடிகுண்டு, முகமது அலி ஜின்னா, முகமது நபி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் லீக், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், முஹம்மது, மெஹ்பூபா முஃதி, மெஹ்பூபா முஃப்தி, லஸ்கர்-இ-தொய்பா, லாஹூர், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஹர்கத்-உல்-முஜாஹித்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன்
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்தியா, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், காஷ்மீர், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சையது, ஜிலானி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தியாகி, தீவிரவாதம், துரோகம், துரோகம் ஜின்னா, பயங்கரவாதம், பயங்கரவாதிகள், பாகிஸ்தான், மாலிக், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், லவ் ஜிஹாத், வஞ்சம், ஹாவிஸ், ஹாவிஸ் சையீத்
Comments: 9 பின்னூட்டங்கள்
ஜூன் 9, 2012
வெள்ளிக் கிழமையன்று ஜெயிலில் இருந்த இந்திய முஜாஹத்தீன் குற்றவாளி, சககுற்றவாளிகளின் மூலம் கழுத்து நெறித்துக் கொள்ளப்பட்டான்!
இஸ்லாத்தில் வெள்ளிக் கிழமை புனித நாளாகக் கருதப் படுகிறது. ஜிஹாதிகள் அன்றுதான் தொழுகைக்குப் பிறகு முக்கியமான வேலைகளை செய்ய தீர்மானம் எடுப்பர், அதன்படியே செயல்படுவர். முஹம்மது கதீல் சித்திக் (27 வயது) என்ற இந்திய முஜாஹத்தீன் மற்றும் பல வழக்குகளில் சிக்கியுள்ள முக்கியக் குற்றவாளி / குற்ரஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நபர், புனேயில் உள்ள மத்திய எரவாடா சிறையில் அவனது கூட்டாளிகளால் 08-06-2012 வெள்ளிக்கிழமை அன்று காலை கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தான்[1]. இது வெறும் “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது” மாதிரியா அல்லது வேறுவகையா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஜெயில் பாதுகாப்பில் தோய்வா, இந்திய முஜாஹத்தீனின் ஊடுருவலா-ஆதிக்கமா? பாதுகாப்பு மிக்க அச்சிறையில் அவன் கொல்லப்பட்டது, ஜெயில் பாதுகாப்பு முறையின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நிச்சயமாக அவன் மூலம் வரும் உண்மைகளை மறைக்கவே அவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளான் என்று தெரிகிறது. தினமும் பாத்திமா என்ற கர்ப்பவதியான அவனது மனைவி தினமும் போன் செய்து பிரார்த்தனை செய்யச் சொல்வாளாம். ஆனால், இன்று போன் எதுவும் வரவில்லை. ஏனெனில், அவள் தொலைக்காட்சி மூலம் தன்னுடைய கணவன் கொலை செய்யப் பட்ட செய்தியை அறிந்தாளாம்[2]. அவனது பெற்றோர்களும் அவ்வாறே அறிந்துள்ளனர். இதனால், இதன் பின்னணியில் சதியுள்ளதாக சந்தேகிக்கப் படுகிறது[3]. அதிகமாக ஜாக்கிரதையாக தனியாக வைக்கப்பட வேண்டிய இவன் எப்படி மற்ற இரு குற்றவாளிகளுடன் சேர்த்து வைக்கப் பட்டான் என்று தெரியவில்லை[4]. அக்பர் முனிர் செயுக் மற்றும் பலு வெகைர், மஹோல் மற்றும் பலேராவ் என்ற உள்ளூர் / மாமூல் கொலையாளிகளால் அவன் கொல்லப்பட்டுள்ளதாக ஜெயில் அதிகாரிகள் கூறுகின்றனர் (Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui).
பல வழக்குகளில் சிக்கியுள்ளவன் கொல்லப்பட்டதால், வழக்குகள் பலவீனமாகின்றன: கோவிலில் குண்டு வைத்த வழக்கு விசாரணை இப்பொழுதுதான் முடிந்துள்ளது[5]. பட்கல் எப்படி சித்திக்கிற்கு பணம் கொடுத்து அத்தகைய குற்றங்களை செய்ய வைத்தான் என்ற விவரங்களை போலீஸார் விசாரணையில் அறிந்துள்ளனர்[6].
- The IM had allegedly promised Siddiqui Rs 50,000 for planting the bomb at Halwai.
- According to ATS officers, Bhatkal gained Siddiqui’s loyalty by offering him money during times of need. In the later part of 2009, when Siddiqui’s daughter was suffering from a rare illness, Bhatkal first offered Rs 1 lakh. The daughter eventually died, but Bhatkal had succeeded in gaining a loyal supporter.
- An amount of Rs 25,000 was allegedly exchanged between him and Siddiqui before the Chinnaswamy Stadium blasts of 2010.
இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வைத்த வழக்கில், கர்நாடக போலீஸாருக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிகிறது[7]. யாசின் பட்கல் (தென்னிந்திய இந்திய முஜாஹத்தீனின் தளபதி) மற்றும் ரியாஸ் பட்கல் (Yasin Bhatkal and Riyaz Bhatkal) முதலியோர்க்குண்டான தொடர்பு பற்றிய ஆதாரங்கள் உள்ள நிலையில், இவ்வாறு அவன் கொலை செய்யப்பட்டது பல கேள்விகளை எழுப்புகிறது[8]. சித்திகின் பங்கு பல கொடிய வழக்குகளில் தெரிகிறது[9]. என்ன காரணத்திற்கோ, இவன் தில்லியில் கைது செய்யப் பட்டு, கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, நேராக கடற்கரை ஊரான பட்கல்லிற்கு அழௌஇத்துச் செல்லப் பட்டான், ஆனால், பெங்களூருக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்படவில்லை. காங்கிரஸ் ஒருவேளை மறைமுகமாக இவர்களுக்கு, இவ்வாறு சட்டரீதில்யில் உதவுகிறதா என்ற சந்தேகமும் நீதிமன்ற வளாகங்களில் எழுந்துள்ளது. அதற்கேற்றபடியே, சித்திக்கின் வழக்கறிஞர்கள் – ரெஹ்மான் மற்றும் கைனத் செயிக் இக்கொலையில் துப்புத்துலக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டுயுள்ளனர்[10]. எதிர்பார்த்தப் படியே, பலிக்கடாவாக எஸ்.வி.கடவகா[11] என்ற ஜெயில் சூப்பிரென்டென்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்!
[4] Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui.
[9] Siddiqui allegedly visited Bhatkal with Yasin to organize logistics for their terror missions. “He was working with his uncle in his native Darbhanga, Bihar and was involved in gun running. He also supplied explosives to Indian Mujahiddeen and helped them in making bombs. Though he was not involved directly in the stadium twin blasts, he had always been a pillar of support for Yasin who allegedly planted the bombs in this instance,” said a source. Siddiqui was arrested from Delhi in November last year, but was never brought to Bangalore. But earlier this year, he was brought to Bhatkal to track down an explosives dump hidden in the coastal town.
[10] Meanwhile, Siddiqui’s lawyers A Rehman and Kainat Shaikh have demanded a CBI probe into the murder.
[11] The Maharashtra government on Friday ordered a CID probe into the case as home minister R R Patil has ordered the suspension of Yerawada jail superintendent S V Khatavka.
பிரிவுகள்: அடையாளம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள் ஒதுக்கீடு, உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, கலவரங்கள், கழுத்து, காஃபிர், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கொலை, சிமி, சிறுபான்மையினர், சிறையில் அடைப்பு, சுன்னி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜெயில், தாலிபான், தியாகப் பலி, தொழுகை, பாத்திமா, புனிதப் போர், மசூதி தொழுகை, முஜாஹித்தீன், முஸ்லீம், முஸ்லீம்கள், மூளை சலவை, மூளை சலவை செய்வது, மூளைசலவை, வெள்ளிக்கிழமை
Tags: ஃபத்வா, இந்திய முஜாஹத்தீன், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கழுத்து, கொலை, கோவில் சிலை உடைப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜெயில், புனிதநாள், புனிதப்போர், முஸ்லீம்கள், வெள்ளிக்கிழமை
Comments: Be the first to comment
ஏப்ரல் 7, 2012
இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!
முஸ்லீம் என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம்: இப்படி சொன்னது ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி முஹம்மது கர்ஸாய்[1]. இந்தியாவின் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மை கூட காயவில்லை. ஆனால், “…..போர் / ஜிஹாத் அது அமெரிக்கா அல்லது இந்தியா என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தான் பக்கம் தான்[2]. ஏனெனில் அவர்கள் எங்களது சகோதரர்கள்”. இருப்பினும், இந்திய மரமண்டைகளுக்கு இது புரியவில்லை[3]. இதுபோலத்தான், இப்பொழுது மாண்புமிகு பிரதம மந்திரி, “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” என்கிறார். அதாவது அமெரிக்கா எத்தனை கோடி கொடுடுத்தாலும் கவலையில்லை, “முஸ்லீம்-முஸ்லீம் தான் பாய்-பாய், மற்றவர்கள் காபிர்-காபிர்” தான்!
முந்தைய சயீது கைது-விடுதலை நாடகம்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீதுவின் தலைக்கு ரூ. 50 கோடி (ஒரு கோடி / 10 மில்லியன் டாலர்கள்) பரிசுத்தொகையை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா நிறுவனரும், ஜமாத் உத் தவா தலைவருமான ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து, பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது. அப்பொழுது உலகரீதியில் ஏற்பட்ட கருத்து மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முதலியவற்றைக் கருத்திற்கொண்டு, நாடகம் போல கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீது பின்னர் விடுதலை செய்யப்பட்டான். அப்பொழுதுகூட, ஷா முஹமது குரேஷி என்ற பாகிஸ்தானிய வெளி உறவு அமைச்சர் மூல்தானில் நிருபர்களிடையே பேசும் போது, இந்தியா பிப்ரவரி 25, 2010 அன்று வெளியுறவு அதிகாரிகளிடம் நடந்த பேச்சுகளில் நிருபமா ராவ், சல்மான் பஷீரிடம் தீவிரவதி ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இல்லை[4]. அவன் இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறான்.
பெயர் மாற்றம் செய்தால் ஜிஹாதி தீவிரவாதம் மறைந்து விடாது: இதையும் இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஓபராய் ஓட்டலில் தங்கியிருந்த ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியாயினர். அதிரடிப் படை வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதில் உயிர் பிழைத்த அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் தற்போது சிறையில் உள்ளான். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த அமைப்பு தற்போது ஜமாத் உத் தாவா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முழுவடும் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இஸ்லாம் பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.
இஸ்லாமிய சாச்சா-பதீஜா உறவுமுறையில் காபிர் இந்தியா என்ன செய்யும்? பாய்-பாய் என்றாலும், சாச்சா-பதீஜா என்றாலும், காபிர் இந்தியா ஒன்றும் செய்யமுடியாது. பாகிஸ்தானில் இந்த அமைப்பு தங்குத் தடையின்றி செயல்பட்டு வருகிறது. இவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பல முறை கோரப்பட்டும், அவன் மீதான உறுதியான குற்றச்சாட்டு இல்லை எனக் கூறி, அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதற்கிடையே, மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் சயீது (61) தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க அரசு தெரிவித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சயீதின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கி பற்றிய தகவலை தெரிவிப்பவர்களுக்கும் இரண்டு மில்லியன் டாலர் அளவுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வென்டி ஷெர்மான், டில்லியில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை பலியிடும் சோனியா அரசு: ஆகமொத்தம், இந்தியர்களைக் கொல்லத்தான் அனைவரும் துடிக்கின்றனர். இதனை அறியாத இந்தியர்கள் சோனியா-காங்கிரஸை நம்பி வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்தியதாக்குதல்களுக்கு (இந்திய தூதரகத் தாக்குதல் உட்பட[5]) மக்கித்தான் பொறுப்பாளி, அவன் உமர் மற்றும் அல்-ஜவஹிரி கூடுதல்களில் பங்குக் கொண்டுள்ளான்[6]. தலிபானுக்கும், லஷ்கருக்கும் இடையில் தொடர்பாக இருந்து வேலைசெய்து வந்தான். 2005 மற்ரும் 2007ல் சதிக்கூட்டங்களில் பங்குகொண்டு லஷ்கர் பயிற்சி முகாம்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். 2007ல் மக்கி, திடீரென்று ஆப்கானிஸ்தானில் தலிபானின் குகையான அல்-ஜவஹரிக்கு சென்றுள்ளதில், ஒசாமா பின் லேடனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று அமெரிக்காவிற்கு இந்தியா தெரிவித்திருந்தது. அதற்கேற்றாற்போல, புரூஸ் ரெய்டல் என்ற அமெரிக்கப் பாதுகாப்பு வல்லுனரும் இந்த தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. மும்பை தாக்குதலில் சமீர் அலி என்பவனுடன் 2008ல் தொடர்பு கொண்டிருந்தான். இந்த அலி இந்தியாவின் “மிகவும் முக்கியமான தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளின்” பட்டியலில் உள்ளான். 2010லும், இந்தியாவிற்கு எதிரான காஷ்மீர் போராட்டங்கள், ஜெர்மன் பேக்கரி வழக்கு முதலியவற்றிலும் தொடர்புள்ளது.
ஹாவிஸ் சயீத் சொல்வதை கர்ஸாய் சொல்வது ஏன் காபிர்களுக்குப் புரியவில்லை? ஹாவிச் சயீதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அவன் பேசுவதே இப்படித்தான் இருக்கும்: “இன்ஸா அல்லா! இந்தியா காபிர்கள் நாடு, அமெரிக்கா, இஸ்ரேல் அடுத்து நமது இலக்கு இந்தியாதான்……………… ஜிஹாத் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே, அங்கு ஜிஹாத் தொடங்கிவிட்டது……………………….. நான்கு பக்கங்களிலிருந்தும் காபிர்கள் தாக்கப்படுகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அவர்கள் ஒழிந்து விடுவார்கள்…………………………… அல்லாவின் படைகளின் முன்பு அவர்கள் துச்சம். இந்தியா இஸ்லாம் ஒளியில் வந்துவிடும், இருள் மறைந்து விடும். நமக்கு அல்லா வழிகாட்டுவாராக”. கர்ஸாயும் இதே பாஷையைத் தான் பேசியுள்ளார்.
அமெரிக்கா அறிவித்தால், இந்தியா தாக்கப்படுவது குறைந்து விடுமா? அமெரிக்கா பில்லியன்களில் பாகிஸ்தானுக்குக் கொடுத்து, இப்பொழுது மில்லியன்களைக் கொடுத்து தீவிரவாதத்தைத் தடுக்கப் போகின்றதாம்! அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு சென்றால் கூட, பத்தாண்டுகளுக்கு நான்கு பில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று கர்ஸாய் கூறுகிறார்[8]. பிறகு, இந்தியாவிற்கு ஏன் பில்லியன்களில் கொடுக்கக் கூடாது? அமெரிக்க அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வரவேற்புக்கு உரியது என்றார். விவரமான கோப்பில், சயீதின் தீவிரவாதத்தில் உள்ள பங்கு, ஆதாரங்கள் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேல் உண்மையை மறுத்தால், சயீதை யாரும் மன்னிக்க முடியாது. அப்பாவத்தில் இருந்து தப்பவும் முடியாது[9]. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு லஷ்கர் இ தொய்பாவுக்கு ஒரு பலமான அபாய எச்சரிக்கை என்றும் அவர் கூறினார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சயீது இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். இதற்கு கிடுக்கிப்பிட போடும் வகையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
தேடப்பட்டு வரும் சயீது கொடுத்த பேட்டி: இதுகுறித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள ஓட்டலில் சயீது நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில், “ஒசாமா பின்லேடனை போல என்னையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. நான் மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளிய மாட்டேன். நான் தங்கியுள்ள இடத்தை அமெரிக்காவுக்கு நானே தெரிவிப்பேன். என்னை கொன்றால் ஒரு கோடி டொலர் கிடைக்கும் என்றால், அந்த தொகையை பலுசிஸ்தானின் மேம்பாட்டுக்கு செலவிடட்டும். இந்தியாவின் கருத்தை ஏற்று, தொலைக்காட்சிகளில் செய்யப்படும் பிரசாரத்தை கொண்டு அமெரிக்கா என்னுடைய தலைக்கு வெகுமதி அறிவித்துள்ளது”, என்று தெரிவித்தார். இந்நிலையில் அல்ஜெஸீரா டி.வி.க்கு ஹபீஸ்சையத் அளித்த பேட்டி வருமாறு: “எதையும் முடிவு எடுப்பதில் அமெரிக்காவிற்கு அறிவும், ஆர்வமும் சற்று குறைவு, அல்லது எங்கள் இயக்கத்தைப்பற்றி அமெரிக்காவிற்கு இந்தியா தவறான தகவலினை அளித்திருக்கலாம். பாகிஸ்தானில் நேட்டோப்படை, வான் தாக்குதல் மீண்டும் துவக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது..இதற்கு எங்களின் எதிர்ப்பினை முறியடிக்க திரணியில்லை. இதன் காரணமாகத்தான் என் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.ஆனாலும் நாங்கள் குகைக்குள் ஓடிச்சென்று ஒளிந்து கொள்ளமாட்டோம். நேட்டோ படைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்”, என்றார்.
தீவிரவாதியை ஆதரிக்கும் யூசுப் ராஷா ஜிலானி, மற்றும் மறுக்கும் உள்துறை ரஹ்மான் மாலிக்: பிரதம மந்திரி யூசும் ராஷா ஜிலானி, அது முழுக்கவும் அவர்களது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தவறான சமிஞையை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்[10]. அவர் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசும் போது “ஹாவிஸ் சயீது சாஹப்” என்று மிகவும் மரியாதையாக அழைக்கிறார். உலகத்திலேயே, இப்படி ஒரு தீவிரவாதியை, ஆதரிக்கும் பிரதம மந்திரி இவராகத்தான் இருக்க வேண்டும். இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக் கூறுகையில், “அமெரிக்க அறிவித்துள்ள பரிசுத்தொகை குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. எனினும் அவர் வீட்டுக்காவலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமினில் உள்ளார். இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. சயீதைக் காக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அவரைக் கைது செய்ய மாட்டோம்[11]. அவர் மீது எந்த ஆதாரங்களும் இல்லை”, என்றார்[12]. சர்தாரியிடம் மன்மோகன் ஆலோசிக்க வாய்ப்பு: வரும் 8-ம் தேதி இந்தியா வர உள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரி,பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. அப்போது ஹபீஸ் சையத் குறித்து இருவரும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்களை ஒன்றும் ஆட்டமுடியாது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆர்பாட்டம்: முசபராபாதில், இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூடி அமெரிக்கக் கொடியை எரித்துள்ளனர்[13]. “அல்-ஜிஹாத், அல்-ஜிஹாத்” என்று கத்திக்கொண்டே ஆர்பாட்டம் நடத்தினர்[14]. முசபராபாத், பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள காஷ்மீரின் தலைநகர் ஆகும். இங்கு, அமெரிக்காவை எதிர்த்து ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது மூலம், இந்தியாவால் ஒன்றும் செய்யமுடியாது என்று தீவிரவாதிகள் மெய்ப்பித்துள்ளார்கள். அதனை பாகிஸ்தான் ஆதரிப்பது தெரிந்த விஷயமே. இதே நேரத்தில் ஜிலானியை பேச்சுவார்த்தைகளுக்கு கர்ஸாய் அழைத்துள்ளதை கவனிக்கவேண்டும்[15].
வேதபிரகாஷ்
07-04-2012
[2] “If Pakistan is attacked, and if the people of Pakistan need help, Afghanistan will be there with you,” Mr. Karzai said. “Afghanistan is a brother.”
[3] Afghan Presdident Karzai’s remarks in an interview that his country would stand by Pakistan in case of a conflict with the United States or India have created a lot of stir though he had predicated them with the proviso: ‘if attacked’. Karzai was apparently trying to calm Pakistan’s concerns over the strategic agreement he signed with India that included provision for military training to Afghan troops much to Pakistan’s discomfort. He had also obliquely accused Pakistan of using Taleban as instrument of policy to attack Kabul from sanctuaries in the tribal areas. The statement of support to Pakistan in case of US or Indian aggression was taken lightly in Islamabad and did not evoke any comment. But the explanation coming from Presidency in Kabul is odd. It said the president only meant to provide shelter to refugees who may flee from tribal areas in case of attack thus reciprocating similar gesture by Pakistan after Soviet invasion.
[7] Indian agencies had warned their US counterparts about a surprise and sudden visit by al-Zawahiri to Islamabad in mid-2007, even suggesting that it could be linked to Osama bin Laden’s whereabouts, and it is Makki who is said to have facilitated this visit at the behest of Hafiz Saeed. US security expert Bruce Riedel, who is known to be close to the Obama administration, has said that Saeed was in touch with Osama himself through a courier right until his death last year.
[10] “This is purely an internal issue of Pakistan and the US has been asked to provide evidence [against Saeed], if they have any, to the Pakistani government… This was also conveyed to the US deputy secretary of state that when new rules of engagements are being defined, they should send a positive signal to Pakistan,” Gilani told the joint sitting of parliament.
http://paktribune.com/news/US-bounty-on-Saeed-a-wrong-signal-PM-Gilani-248887.html
[14] n Muzaffarabad, the capital of Pakistan-administered Kashmir, around 500 activists shouted “Al-Jihad, Al-Jihad (holy war)” as they marched on the city and set fire to a US flag in a main square
[15] Rezaul H Laskar, Karzai invites Gilani for talks on reconciliation process, Thu, 05 Apr 2012 05:15:21 GMT
p>Islamabad, Apr 4 (PTI) Afghan President Hamid Karzai today invited Pakistan Prime Minister Yousuf Raza Gilani to visit Kabul for talks on the reconciliation process in Afghanistan. Karzai extended the invitation when he telephoned Gilani to express his concern over the emergency landing made by the premier”s aircraft shortly after taking off from a military airbase in Rawalpindi yesterday. The Afghan President “extended an invitation to the Prime Minister to visit Kabul as the weather has become considerably pleasant”, said a statement from Gilani”s office. Gilani accepted the invitation and said he would soon visit Kabul. “We would also review the progress made toward political reconciliation in the context of the last bilateral meeting held in Islamabad,” the premier said. Pakistan is keen on playing a larger role in the endgame in Afghanistan. Acting on a request from Karzai, Gilani recently appealed to all militant factions in Afghanistan to join the peace process in the neighbouring country.http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=5992738
பிரிவுகள்: ஃபத்வா, அடி உதை, அடிப்படைவாதம், அடையாளம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்லா, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊடக வித்தைகள், எரிப்பு, எல்லை, ஔரங்கசீப், கராச்சி திட்டம், கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காந்தஹார், காந்தாரம், காயிதே மில்லத், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, கைது, கையெறி குண்டுகள், கொடி, கொடி எரிப்பு, கொடியேற்றம், கொலை, சமரசப்பேச்சு, சரீயத், சரீயத் சட்டம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜஹல்லியா, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தடை, தமுமுக, தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தீவிரவாதிகளுக்கு பணம், துபாய், துப்பாக்கி, தேசியக் கொடி, நிகாப், நிக்கா, பர்கா, பர்கா போராட்டம், பர்தா, பர்தா அணிவது, பலுச்சிஸ்தானம், பலுச்சிஸ்தான், பின்லேடனின் குடும்பம், பின்லேடனின் மனைவி, புத்தகம், புனிதப் போர், பைப் வெடிகுண்டு, போதை, போதை மருந்து, முஜாஹித்தீன், முஸ்லீம் சட்டம், வந்தே மாதரம், வன்முறை
Tags: அமெரிக்கா, ஆப்கன், இந்தியா, கசாப், கர்சாய், கர்ஷாய், கர்ஸாய், கஸப், காபிர், குரேஷி, கொலை, கொலைவெறி, சயீது, சயீத், சாச்சா, சைத், சையது, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தலிபான், தாலிபான், தாவூத் ஜிலானி, பதீஜா, பாய், மச்சான், மாமன், மாமா, முகமது குரேஷி, முஜாஹித்தீன், மும்பை, முஹமது குரேஷி, மைத்துனன், ஷா முஹமது குரேஷி, ஹாவிஸ், ஹாவிJ
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்